மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டி திருப்பிணையன் மலையை எண்பெருங்குன்றங்களில் ஒன்று என தொல்லியல் அறிஞர் முனைவர். வெ.வேதாச்சலம் அவர்கள் தன் ‘எண்பெருங்குன்றங்கள்’ நூலில் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். அதைக்குறித்து கீழே காண்போம்.
மதுரைக்கு வடக்கே அமைந்துள்ள அரிட்டாபட்டிமலை சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் சமணத்தலமாக இருந்துள்ளது. இங்கு உள்ள சமணச்சிற்பத்தின் அடியில் காணப்படும் பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு பிறவியைக் கடக்கவுதவும் புணையாக (தெப்பமாக) இம்மலை விளங்கியது என்பதை உணர்த்துகிறது. கல்வெட்டில் இது பிணையன்மலை என்று குறிப்பிடப்படுகிறது. புணையன்மலை என்பதே பிணையன்மலை என வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில் பரங்குன்றம், சமணர்மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானைமலை, இருங்குன்றம்(அழகர்மலை) முதலிய ஐந்து மலைகளை எண்பெருங்குன்றங்களாக ஐயமின்றிக் கூறலாம். நாகமலை (கொங்கர்புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டிமலை (திருப்பிணையன் மலை), கீழவளவுக்குன்று முதலிய மூன்று மலைகளை எண்பெருங்குன்றங்களைச் சார்ந்தவையாகக் கருத வாய்ப்புள்ளது.’’
- எண்பெருங்குன்றம். வெ.வேதாச்சலம் பக்கம்.7
ஆனைமலைக்கு வடக்கே திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அரிட்டாபட்டி மலை உள்ளது. இது மதுரையிலிருந்து வடக்காக சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனைத் தற்போது கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். இதன் பழம்பெயர் ‘திருப்பிணையன் மலை’ ஆகும். இம்மலையின் கீழ்ப்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில் கி.மு முதல் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் பிராமிக்கல்வெட்டு காணப்படுகிறது. ‘நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்’ என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக இக்கல்வெட்டு கூறுகிறது. இங்குள்ள கற்படுக்கைகள் தற்போது மண்மூடிக்கிடக்கின்றன.
குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக்காட்சியளிக்கிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன்மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தீர்த்தங்கரர் உருவத்தின் மீது ஆனைமலையில் காணப்படுவது போன்று வண்ண ஓவியம் அழகுறத் தீட்டப்பட்டு அழியாது விளங்குகிறது’’.
அரிட்டாபட்டி மலை எண்பெருங்குன்றங்களில் ஒன்று என முனைவர்.வெ.வேதாச்சலம் சொல்கிறார். ஆனால், பெருங்குன்றத்தை சிறுகுன்றாக மாற்றப் பார்க்கிறார்கள். பக்தி இயக்க காலத்திலேயே அழிக்க முடியாத சமணத்தின் சுவடுகளை இன்று நவீன ராட்சசக் கருவிகள் கொண்டு அழிக்க பார்க்கிறார்கள். காலம்தான் கயவர்களை தண்டிக்க வேண்டும். இயற்கையன்னையின் மடியில் வளர்ந்த நம் முன்னோர்களை காட்டுமிராண்டிகள், மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறிவிட்டு இன்று நாம் இயற்கையன்னையின் மார்பைப் பிளந்து இரத்தத்தை உறிஞ்சுவதோடு கருவறுக்கவும் தொடங்கிவிட்டோம். நாம் நல்ல மனிதர்களாக, இயற்கையை வணங்கி வழிபடுவோம். நல்லது நடக்கும். நம்புவோம்.
(திரு. வேதாச்சலம் அவர்களின் படம் ஃபிரண்ட்லைன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி)
திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலில், அள்ள, அள்ளக் குறையாத பொக்கிஷம் குறித்து, உலகமே பிரமித்துப் போயிருக்கிறது. "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்பர். இந்த தெய்வம், கூடை கூடையாகக் கொட்டியது போதாதென்று, குளத்தின் மூலமாகவும் கொட்டும் போலத் தெரிகிறது.இந்த நேரத்தில், "அந்தப் புதையல் யாருக்கு சொந்தம்?' என, ஆளாளுக்கு கேள்வி எழுப்புகின்றனர். இறைவனுக்கு தான் சொந்தம் என்பதில், என்ன சந்தேகம் இவர்களுக்கு?இந்திய வரலாற்றைப் படித்தவர்கள், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. தைமூர் காலத்திலிருந்து, அயல் நாட்டவர் அடிக்கடி படையெடுத்து, நம் நாட்டுக் கோவில்களைக் கொள்ளையடித்ததால், இப்போது கிடைத்துள்ள பொக்கிஷம் போல, பல்லாயிரக்கணக்கான மடங்கு நகைகளும், தங்கம், வெள்ளி நாணயங்களும் நம்மிடமிருந்து பறிபோயுள்ளன.நல்ல காலம்... விந்திய மலை என்றொரு மலை, வடக்கே அரணாக இருந்ததால், தென்னாட்டுக் கோவில்கள் தப்பித்தன. அதற்கான உதாரணமே இந்தப் பொக்கிஷம்!ஆனால், அதைவிட பெரிய ஆபத்து இப்போது, கோவில்களை எதிர்பார்த்துள்ளது. போலி மதவாதம் பேசும் அரசியல்வாதிகள், அந்த செல்வத்தை சுருட்டிக் கொள்ளும் வகையில் பேச ஆரம்பித்து விட்டனர். அதைத் தடுத்து நிறுத்துவது, ஒவ்வொரு இந்தியனின் கடமை. திருவனந்தபுரத்தில் கிடைத்துள்ள ஒவ்வொரு காசையும் கணக்கெழுதி, பாதுகாப்பாக வைப்பது அரசின் கடமை.இறைவனின் தினசரி சேவைக்குத் தேவையான நகைகள் தவிர, மற்ற நகைகளை, ஒரு பாதுகாப்பான அருங்காட்சியகத்தில், கண்ணாடிப் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கலாம். அதற்கு கட்டணம் வசூலித்து, பொதுமக்களை அனுமதிக்கலாம்.இதனால், பொதுமக்கள் பார்வையிலும் நகைகள் இருக்கும்; பாதுகாப்புப் பணியிலும், அருங்காட்சியகப் பணியிலும் வேலை வாய்ப்புகள் பெருகும். அருங்காட்சியக வசூல் தொகையை, நாட்டு நலப்பணிகளுக்காக செலவிடலாம். முக்கியமாக, அன்னியச் செலாவணி பெருகும்.தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கோவில்களில், இதுபோன்ற புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது. அவற்றையும் பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.அந்நாளில், அயல்நாட்டவர் கொள்ளையடித்தனர்; இந்நாளில், நம் நாட்டவரே, போலி மதச்சார்பின்மை மூலம், கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கப் பார்க்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்தி, இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட வேண்டியது, இந்தியர்களின் கடமை.இந்துக்களே உஷார்!
சமணம் குறித்து மயிலை.சீனி.வே எழுதிய ‘சமணமும் தமிழும்’ நூலின் முன்னுரையை கீழே காண்போம்.
சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!.
பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்? என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள் காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். இப்படிக்கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக்குன்றத்தில் இருப்பது புத்தர்கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்கு சமண சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லையென்றால், பாமர மக்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லையே.
முற்காலத்திலே, ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டில் தலைசிறந்திருந்த சமண சமயம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது. சமண சமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின் மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதி முடிக்க வேண்டும் என்னவென்றால், தமிழ் நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமண சமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டு போல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டிருந்தது, தமிழ் மொழியை வளப்படுத்திய சமண சமய வரலாற்றை எழுத வேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந்நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு.ச.த.சற்குணர் அவர்கள் ஆவர். அப்பெரியாரின் ஆன்மா சாந்தியுறுவதாக.
வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் துருவித்துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுத வேண்டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காணவேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காண வேண்டும். இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும். வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டிய வரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ஊழ் இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூற விரும்பவில்லை. ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமரர்களைப் பற்றியும் படியாத பணக்காரர்களைப் பற்றியும் கூறவில்லை நான். கல்லாத பேர்களே நல்லவர்கள். கல்வித் துறையிலே மிகவுயர்ந்த நிலைபெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லையென்றால், இந்நூல்களை ஏன் எழுத வேண்டும், ஏன் வெளிப்படுத்த வேண்டும்?
பத்து ஆண்டுகள் கடந்தன. இந்நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப் பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம், வெளிவரும், வெளிவரும் என்று கூறினேனேயல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.
உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளியிடுமாறு வற்புறுத்தினார்கள். கிருஸ்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும் எழுதியது தமிழ்நாட்டின் சமய வரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அது போலவே, சமணமும் தமிழும் வெளிவர வேண்டும். அது மட்டுமன்று. இஸ்லாமும் தமிழும், இந்து மதமும் தமிழும் என்னும் நூல்களையும் எழுத வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைத்துவிட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப் போயிற்று. மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப்பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில் தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப்பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.
வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறு சிறு ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி இந்நூல் எழுதி முடிக்கப் பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங்களைந்து குணங்கொள்வராக.
இந்நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ்வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இந்நூலின் பின்னிணைப்பில் சேர்த்துள்ள ‘’சமண சமயப் புகழ்பாக்கள்’’ பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உரைகள் மேற்கோள் காட்டப்பட்டவை.
பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந்நூல் இப்போது முதன்முதலாக வெளிப்படுகின்றது. இந்நூல் வெளிவருவதற்குக் காரணராயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியதாகும்.
மலரகம், மயிலாப்பூர் மயிலை.சீனி.வேங்கடசாமி
சென்னை, 1-11-54
சமணமும் தமிழும் நூல் செண்பகா பதிப்பகம் வெளியீடாக தற்போது வந்துள்ளது. விலை.75 ரூபாய். இந்நூல் குறித்து மேலும் மதுரையில் சமணம் பகுதியில் இன்னொரு பதிவில் காண்போம். இருபதாம் நூற்றாண்டின் தமிழின் முக்கிய அறிஞர்களுள் மயிலை.சீனி.வேங்கடசாமியும் ஒருவர். இவரது படைப்புகளை வாங்கி வாசியுங்கள்.
“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”
-பாவேந்தர் பாரதிதாசன் (தமிழ் நிலம் – 14.10.1952)
இக்கவிதையிலிருந்து மயிலை.சீனி.வேங்கடத்தின் பெருமையை அறியலாம்.
மதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்
சமணமலையையும் அறுத்துக் கூறுபோடத் தொடங்கியதை 1952ல் தொடக்கத்திலேயே தடுத்த சமணச் சான்றோர் ஜீவபந்து T.S.ஸ்ரீபால் அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இங்கு சமணமலை இருந்ததாம் எனக் கேள்விதான்பட்டிருப்போம். ஜீவபந்து T.S.ஸ்ரீபால் அவர்களுக்கு நன்றி.
மதுரையில் நாகமலைக்கு இடதுபுறம் சமணமலை இருக்கிறது. சமணம் குறித்து அறிந்து முதலில் அதன் சுவடுகளை காணச்சென்றது இங்குதான். பின்னர் தான் யானை மலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, கொங்கர் புளியங்குளம் சென்றேன். மற்ற இடங்களுக்கும் விரைவில் செல்ல வேண்டும்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாகச் செல்லும் சாலையில் சென்றால் கீழ்குயில்குடி செல்லலாம். நாகமலை புதுக்கோட்டையிலிருந்து இரண்டு மைல் இருக்கும். கீழ்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் உள்ளது.
கீழ்குயில்குடி அழகான கிராமம். பெரிய பெரிய ஆலமரங்கள், மலைக்கு அடிவாரத்தில் அய்யனார் கோயில், அதற்கருகில் தாமரைக் குளம். நாங்கள் செல்லும்போது அந்தக் குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. முதன்முறை நானும் நண்பரும் செல்லும் போது எங்களோடு வெயில் வேறு துணைக்கு வந்தது. அய்யனாரை வணங்கி விட்டு மலையேறினோம். சமணர் சிற்பங்களைப் பார்த்துவிட்டு மலை மேல் ஏறிப்போய் வேடிக்கை பார்த்தோம். மலை மேல் அடிக்கிற காற்று, மேகத்திற்கு சற்று அருகிலிருப்பது போன்ற மிதப்பு என மலையேறிவிட்டாலே அது அலாதி சுகமான விசயம். பிறகு மீண்டும் ஒரு நாள் நண்பர்களாக வர வேண்டும் என நினைத்துக்கொண்டே வந்தோம். பின் செல்லும் வாய்ப்பே கிட்டவில்லை.
மறுமுறை (நவம்பர் 14, 2010) மதுரை பசுமை நடை நண்பர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்தான் இதை சிறப்பாக எடுத்து நடத்தினார்.
அதிகாலை ஆறுமணிப்போல கீழ்குயில்குடிக்கு நானும் சகோதரரும் சென்றோம். அதிகாலையில் மலையைப் பார்க்கும் போது மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. மிகப்பெரிய ஆலமரங்கள் சில சேர்ந்து தோப்பாகவே இருக்கிறது.
நிறைய நண்பர்கள் வர எல்லோரும் சேர்ந்து செட்டிப்புடவு எனும் இடம் நோக்கி சென்றோம். குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இருப்போம். மலையை ஒட்டி ஒரு பாதை உள்ளது. அங்கு இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணச்சிற்பங்களை செதுக்கி உள்ளனர். மொத்தம் ஐந்து சிற்பங்கள் உள்ளன. குகைக்கு வெளியே சமணத்தீர்த்தங்கரரின் பெரிய சிற்பம் உள்ளது. இதற்கு கீழே சில கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. அங்கு சமணம் குறித்த சில தகவல்களை அதைக்குறித்த அறிஞர்கள் கூறினர். அற்புதமான வகுப்பு போல இருந்தது. நாங்கள் எல்லோரும் பாறைகளிலும் அங்கிருந்த திண்டுகளிலும் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது இப்படி படிக்க நம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் யாரும் படிப்பை வெறுக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உதித்தது. அங்கு பேசிய அறிஞருடன் (மன்னிக்கவும் அவர் பெயரை மறந்துவிட்டேன்) சேர்ந்து சமணம் குறித்து பேசிக்கொண்டே சென்றோம். அவர் சமணம் குறித்த நிறைய விசயங்களை கூறினார். அவருடன் பேசிக்கொண்டே மலை மேல் ஏறினோம்.
மதுரையில் பெய்த பேய்மழையால் மலை மேலிருந்து பார்க்கும் போது ஊரே வெள்ளக்காடாக கிடந்தது. திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் கடல்போல் தண்ணி கிடந்தது. மலை மேல் பேச்சிப்பள்ளம் என்னும் இடத்தில் எட்டு சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் கீழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அதற்கு கீழே நீர்ச்சுனை ஒன்று உள்ளது. பேச்சிப்பள்ளத்திற்கு மேலே வெறும் தளம் மட்டும் இன்று உள்ளது. அங்கு முன்பு ஏதேனும் கட்டிடம் இருந்திருக்கலாம். அங்கிருந்த சிற்பங்கள் குறித்து அவர் பேச மீண்டும் மாதேவிப்பெரும்பள்ளிக்கு நிறைய மாணவர்கள் பலநூற்றாண்டுகள் கழித்து சேர்ந்துவிட்டதை போல இருந்தது. இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளை குரண்டி திருக்காட்டாம்பள்ளியிலிருந்து மாணவர்கள் வந்து செய்திருக்கிறார்கள். மலை மேலே ஏறிப்போய் பார்த்தால் அங்கு ஓர் தூண் உள்ளது. அதற்கடியில் ஐந்து பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. கன்னடத்தில் அக்கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கிருந்து காணும் போது மதுரை மிக அற்புதமாக தெரிந்தது. பிறகு எல்லோரும் இறங்கி வந்தோம்.
ஆலமரத்தடியில் மீண்டும் வகுப்பு கூடியது. சமணம் குறித்து நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. மதுரைக்காமராசர் பல்கலைகழகத்தில் நாட்டார்வழக்காற்றியல் துறையைச் சேர்ந்த முத்தையா அவர்கள் இவ்வூர் குறித்தும் அய்யனார் கோயில் குறித்துமான நாட்டுப்புற நம்பிக்கைகளை கூறினார். “முன்பு இக்கோயில் மலைமேலிருந்ததாம். வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் மதுரை கோட்டை மீதிருந்த காவலர்கள் மலை மீதிருந்த சாமியை பார்த்து பயந்து அச்சம் கொண்டனராம். எனவே, அவர்கள் இக்கோயிலை கீழே இறக்க நிறைய திட்டம் போட்டு கீழே கொண்டுவந்தனராம்’’. இப்படியொரு கதை இப்பகுதி மக்களிடம் வழங்கி வருவதாக முத்தையா அவர்கள் கூறினார்.
ஆலமரத்தடியில் படையல். முத்துகிருஷ்ணன் எல்லோருக்குமான உணவை ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் பெரியவட்டமாக அமர்ந்தோம். அன்று உண்ட இட்லி, வடை, சாம்பார்க்கு இணையேயில்லை எனத் தோன்றியது. கூடி உண்பது குறைந்து வரும் இந்நாளில் ஒத்த மனதுடையவர்கள் சேர்ந்து பயணித்து உண்ணும் போது கிடைக்கும் ருசியே தனி. இன்று நினைக்கும் போது அது போல ஒரு நாள் மீண்டும் அமையாதா என்று ஏக்கமாக இருக்கிறது. இப்பயணத்தை ஏற்பாடு செய்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.
வீட்டுக்கு கிளம்பும் முன் அங்கிருந்த அய்யனார் கோயிலுக்கு நானும் சகோதரரும் சென்றோம். இரண்டு பூதங்கள் நம்மை வரவேற்க, மூன்று குதிரைகளில் கருப்புச்சாமி நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். உள்ளே அமைதியாய் அய்யனார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் வாகனமாக யானை உள்ளது. யானை ஆசிவகத்தின் குறியீடு என நெடுஞ்செழியன் ‘தமிழரின் அடையாளங்கள்’ என்னும் நூலில் நிறுவுகிறார். மலை மேல் ஏறும் இடத்தில் சின்னதாக யானை உரு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது.
செட்டிப்புடவு குகைச்சிற்பங்களுள் ஒன்றில் சிங்கம் மேல் அமர்ந்த பெண் தெய்வம் யானை மேல் இருக்கும் ஆணுடன் போர் புரிவது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது. இது கொற்றக்கிரியா எனும் சமணப்பெண் தெய்வம் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் கூறுகிறார். ஆசிவகம் தான் தமிழரின் பண்டைய மதம் எனக் கூறுவோரும் உளர். ஆனால், மயிலை.சீனி.வே ஆசிவகமும் வடமாநிலத்திலிருந்து வந்தது தான் என்கிறார். ஆசிவகத்தை உருவாக்கிய மற்கலி வர்த்தமான மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் ஒருங்கிருந்தார். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு ஆசிவகம் எனும் புதிய மதத்தை உருவாக்கினார். மேலும், சீனி.வே. ‘’சமண,பௌத்த மதத்திலிருந்த சாஸ்தா எனும் தெய்வத்தை நாட்டார் தெய்வ அய்யனாராக வழிபடுகின்றனர். பௌத்த அய்யனாருக்கும், சமண அய்யனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில் பௌத்த அய்யனாருக்கு வாகனம் குதிரை, சமண அய்யனாருக்கு வாகனம் யானை’’ என்கிறார். எனவே, இங்கிருக்கும் அய்யனார் சமண அய்யனார் எனவும் எண்ணலாம். ‘தொன்மங்களை ஆராயும் போது பகுத்தறிவுக்கு வேலையில்லை’ என்ற தாந்தேயின் வரிகளுடன் முடிக்கிறேன்.
(பின்குறிப்பு;- எண்பெருங்குன்றம் எனும் நூலில் வே.வேதாசலம் திருவுருவகம் என்று அழைக்கப்பட்ட சமணமலை குறித்து தனியே ஒரு பெரும்பதிவே எழுதியுள்ளார். அதை எண்பெருங்குன்றம் குறித்த பதிவில் காண்போம். பேச்சிப்பள்ளத்தில் இருந்த சமணதீர்த்தங்கரர் படங்களுக்கு கீழே பெயர்களை இப்புத்தகத்தில் இருந்த குறிப்பிலிருந்து தான் குறித்துள்ளேன். முனைவர்.வே.வேதாச்சலம் அவர்களுக்கு நன்றி!
கீழ்குயில்குடிக்கு பெரியார்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. குடும்பத்தோடு செல்ல அருமையான இடம். இங்கு ஒரு சின்ன டீ கடை உண்டு, தாமரைகுளத்துக்கிட்ட அருமையான பணியாரம் கிடைக்கும்)
மதுரை சமணமலை குறித்து மயிலை.சீனி.வே & எஸ்.ராமகிருஷ்ணன்
சமணமலை பற்றி ‘சமணமும் தமிழும்’ நூலில் மயிலை.சீனி.வே மற்றும் ‘தேசாந்திரியில்’ எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதைக் காண்போம்.
சமணமும் தமிழும் நூலிலிருந்து:
சமணமலை. மதுரைக்கு மேற்கே சுமார் 5 மைலில் உள்ளது. இந்தக் குன்றுகள் கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. தென்மேற்குக் கோடியில் இம்மலைக்கு அருகில் கீழ்குயில்குடி என்னும் ஊரும், வடமேற்குக் கோடியில் முத்துப்பட்டி அல்லது ஆலம்பட்டி என்று வழங்கப்படுகிற ஊரும் இருக்கின்றன. இந்தக் கிராமம் மதுரைத் தாலுகா வடபழஞ்சியைச் சேர்ந்தது. இந்தச் சமணமலையில் அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த மலைக்கு இந்தப்பெயர் உண்டாயிற்று. இதற்கு அமணமலை என்றும் பெயர் உண்டு. அமணர் என்னும் பெயர் சமணரைக் குறிக்கும்.
ஆலம்பட்டி என்றும் முத்துப்பட்டி என்றும் பெயருள்ள ஊருக்கு அருகில் இந்தக் குன்றின் மேற்குக் கோடியில் பஞ்சவர் படுக்கை என்னும் இடம் இருக்கிறது. இங்குப் பாறையில் கல் படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர் படுப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே பாறைக்கல் கூரைபோல் அமைந்திருக்கிறது. ஆகவே, இவ்விடம் ஒரு குகை போலத் தோன்றுகிறது. கூரை போன்று உள்ள பாறையில் பிராமி எழுத்தில் தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டவை. இந்தக் குகையில் படுக்கைகளுக்கு அருகே ஒரு பீடத்தின் மேல் அருகக் கடவுளின் உருவம் அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு அருகில் பாறையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் மிகவும் அழிக்கப்பட்டுவிட்டது. குகையின் மேற்புறப் பாறையில் இரண்டு இடங்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் அவைகளின் கீழே வட்டெழுத்துச் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் கி.பி.10ஆம் நூற்றாண்டு எழுத்துப் போல காணப்படுகின்றன.
சமணமலையின் தென்மேற்குப் பக்கத்தில் கீழ்குயில்குடியின் அருகில் செட்டிப்பொடவு என்னும் குகை இருக்கிறது. இந்தக் குகையின் இடதுபுறத்தில் ஒரு தீர்த்தங்கரரின் உருவம் பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவத்தின் கீழ் வட்டெழுத்து சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. குகையின் உள்ளே அரைவட்டமாகக் கூரைமேல் அமைந்துள்ள பாறையில் தனித்தனியாக அமைந்த ஐந்து உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் உருவம் நான்கு கைகளையுடைய யட்சி உருவம், சிங்கத்தின் மேல் அமர்ந்து ஒரு கையில் வில்லையும் மற்றொரு கையில் அம்பையும் ஏனைய கைகளில் வேறு ஆயுதங்களையும் பிடித்திருக்கிறது. இந்த யட்சிக்கு எதிரில் யானையின் மேல் அமர்ந்துள்ள ஆண் உருவம் கையில் வாளையும் கேடயத்தையும் பிடித்திருக்கிறது. இதையடுத்துக் தனித்தனியே மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இருந்த திருமேனிகள். கடைசியாகப் பத்மாவதி என்னும் இயக்கியின் உருவம் வலது காலைத் தொங்கவிட்டு இடதுகாலை மடக்கிச் சுகாசனத்தில் அமர்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிற்பங்களில் நடுவில் உள்ள மூன்று தீர்த்தங்கரரின் உருவங்களுக்கு கீழே மூன்று வட்டெழுத்துச் சாசனங்கள் (கி.பி.10ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டுள்ளன.
செட்டிப்பொடவுக்குக் கிழக்கே சமணமலையில் பேச்சிப்பள்ளம் என்னும் இடம் இருக்கிறது. இது குன்றின் மேல் இருக்கிறது. இங்கு வரிசையாகப் பாறையில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்களின் கீழே வட்டெழுத்துச் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை கி.பி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
பேச்சிப்பள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்து போன ஒரு கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் தரையமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளன. இங்கு 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப்பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு.
இந்த இடத்துக்கு மேலே குன்றின் மேல் பாறையில் விளக்கு ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்குப் பாறைக்கு அருகில் கன்னட எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதன் கடைசிவரி மட்டும் தமிழாக உள்ளது. இந்தச் சாசனம் கி.பி.11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
தமிழறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமிக்கு நம் நன்றி உரித்தாகுக.
எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் ‘திசையே ஆடைகளாய்’ என்னும் கட்டுரையில் மதுரையில் உள்ள சமணமலைகளுக்கு சென்றதைக்குறித்தும் சமணம் குறித்தும் எழுதிய பதிவிலிருந்து கீழ்குயில்குடி பற்றி மட்டும் கீழே காண்போம்.
பேச்சிப்பள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்து போன ஒரு கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் தரையமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளன. இங்கு 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப்பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு.
கீழக்குயில்குடி, மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள சிறிய கிராமம். அங்கே ஊரை ஒட்டிய பெரிய தாமரைக் குளமும், அய்யனார் கோயிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளது. அதை ஒட்டியதாக உள்ள பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அந்தப் புடவில் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று உள்ளது. சமண தெய்வம் என்று தெரியாமல், காது வளர்ந்த அந்தச் சிலையைச் செட்டியார் சிலை என்று அழைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.
நீள் செவி, அனல் நாக்கு, சூழ்ந்த ஒளிவட்டம், சாமரம் ஏந்திய இயக்கியர்கள்… அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர் சிற்பங்களிலேயே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண் சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்து, யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு வகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களக் காட்சியை நினைவுபடுத்துகிறது. கொற்றாகிரியா என்ற அந்த சமணப் பெண் தெய்வத்தின் உரு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
மலையின் மீது இது போன்ற சமண உருவங்கள் உள்ளன. மலையேறுவதற்குப் பாதி தூரம் வரை படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். பிறகு, பாறைகளைப் பிடித்துதான் மேலே ஏறிப்போகவேண்டும். மலையேறிப் போனால் அங்கே ஒவ்வொரு உயரத்திலும், ஒரு தளம் உள்ளது. மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோயில் உள்ளது. அது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் மாதேவி பெரும் பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் அதில் தண்ணீர் சுரந்தபடியே இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள பாறையில் வரிசையாக எட்டு சமணத் தீர்ந்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
-எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி (விகடன் பிரசுரம்)
சமணம் குறித்த ஆர்வத்தையூட்டிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் விகடன் பிரசுரத்திற்கும் நன்றி.
(செட்டிப்புடவு படம் தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளத்திலிருந்தும், பேச்சிப்பள்ளம் படம் எழுத்தாளர் நாகார்ஜூனன் வலைத்தளத்திலிருந்தும் எடுக்கப்பட்டது. இரண்டு தளங்களுக்கும் நன்றிகள் பல)
சமணம் குறித்த ஆர்வத்தையூட்டிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் விகடன் பிரசுரத்திற்கும் நன்றி.
(செட்டிப்புடவு படம் தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளத்திலிருந்தும், பேச்சிப்பள்ளம் படம் எழுத்தாளர் நாகார்ஜூனன் வலைத்தளத்திலிருந்தும் எடுக்கப்பட்டது. இரண்டு தளங்களுக்கும் நன்றிகள் பல)
-- Edited by devapriyaji on Saturday 16th of July 2011 07:43:05 AM
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ...ஆ ...ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர். சுமார் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இப்பாரிய நிலப்பரப்பில் நதிகளும் - முன்பு மலைகளாக இருந்தவற்றின் மிச்சங்களாய் - நில உச்சங்களும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றனவாம். அவை ஒரு கடற்கரை நாட்டின் வரைபடம் போன்று காட்சியளிப்பதாகவும், இந்தப் படிவுகள் கடற்படுக்கையின் கீ...ழே இரண்டு கி.மீ தொலைவில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் நில ஆய்வியல் மூத்த அறிஞர் நிக்கி வைய்ட் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட எதிரொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வின் மூலம் சுமார் 10,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இப்பாரிய நிலப்பரப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
http://ta.wikipedia.org/ பதிற்றுப்பத்து -(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது. இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
பதிற்றுப்பத்து- 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது.
இந்த செய்யுளில்- ஒரு கோயிலையும் அங்கு செய்யப்படும் விஷ்ணு வழிபாட்டையும் கூறுகின்றது. கோயில் கடற்கரையை அடுத்து இருந்தது. பல திசையிலுமிருந்து வந்த மக்கள் கையைத் தலைமேல் கூப்பித் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி வழிபடுவர். கோயில் மணி ஒலிக்கும் போது விரதமிருக்கும் உண்ணா நோன்பிகள் துறையில் நீராடிப் பின் கோவிலில் வழிபாடு செயவார். கண் பொரு திகிரியும் கமழ்குரல் துழாயும் உடைய திருமாலை இவ்வாறு வழிபடுவர்.நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.
இவ்வாறு கூறப்படும் வழிபாடு நிகழ்ந்த்தாக உள்ள கோயில் பெயர் செய்யுளில் இல்லவிடிலும் இது திருவனந்தபுரம் பத்மநாபரையே குறிக்கும். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டது போலெ சயனக் கோலத்தில் அனந்தமாகக் காட்சி அளிப்பதினாலே தான் ஊர் திரு அனந்தபுரம் என்க் கோயிலின் பெயராலெ விளங்குகின்றது.
பயன் பட்ட நூல்கள் 1. பதிற்றுப்பத்து
2. குறள் கூறும் சமையம்- காமாட்சி சீனிவாசன் விளியீடு-மடுரைக் காமராசர் பல்கலைக் கழகம்
Chennai: An eighth century Pallava temple was hidden in the heart of their village for years,but the people were unaware of it until three years ago.The ruined structure fully covered by shrubs at Parameshwari Mangalam in Vepencheri village was noticed by a group of heritage enthusiasts in 2008 while they were returning from the nearby Kailasanathar temple in Kancheepuram district.Since the temple doesnt belong to the list of protected monuments under the Archeaological Survey of India or the Hindu Religious and Charitable Endowments department in TN,neither the central nor the state governments took any initiative for its renovation.Finally,three heritage lovers stepped in.The place was always covered in shrub,and we never thought it was a temple built during the Pallava era.Since I learnt the importance of it,I wanted to renovate it and preserve it for posterity, says V S Ravikumar,a mechanical engineer and a native of Vepencheri,who is involved in funding the temple renovation work. A detailed excavation by J Chandrasekhar of REACH Foundation,an NGO based in Chennai,two years ago,revealed that the whole structure of the Vasudevapthi Soumyanarayana Perumal temple consisted of a garbha graha,ardha mandapa and maha mandapa.Only the maha mandapa exists now,but that is in ruin.But the important thing is that even though 85% of the temple is lost,the rock pillars are still scattered over there.Now our challenge is to locate the right pillars and fix them the way they existed during the Pallava era, says Chandrasekhar,who supervises the renovation work in the temple. As part of the renovation programme,a land ceremony (bhoomi pooja) was held in the temple premises on Sunday in which villagers and heritage lovers from nearby areas participated.Many devotees who turned up for the ceremony were upset because the idols are still kept inside a make-shift shed. The idols of Vasudevapthi Soumyanarayana Perumal,Bhudevi and Sridevi are kept inside a shed built by someone recently.Its not an ideal place to keep them.A garbha graha must be built immediately for the idols, says Selvarajan,a native of Kalpakkam. Even though the temple was built during the Pallava era,there are evidences that show it was renovated later in the Nayak period.Some of the rock-cut reliefs in the maha mandapa are similar to the Nayak-era art work.So chances are the temple must have been renovated by some Nayak king, says Chandrasekhar,who believes the renovation work can be finished in five months. If everything goes on well,the renovation work will be completed in four or five months.At the same time,we dont want to compromise on quality, he says.
SIGNS OF THE PAST: The temple lies in ruins owing to lack of attention.At left is a carving on one of its pillars.Many devotees are also upset about the fact that the idols are being placed in makeshift structures
Udupi, Jun 14: S A Krishnaiah, folklore scholar, and Prof T Murugeshi, professor of MSRS College Shirva in the department of history and archaeology, said that a very rare unicorn sculpture of ‘Hayagajanandi (combination of horse, elephant, bull), has been found from Nagabrahmasthana at Kalya near Nitte in Karkala taluk. They were addressing a press conference here on Monday June 13. This stone sculpture is claimed to be one of the rarest of the unicorn icons found in India.
The hind and front left legs of the sculpture have been damaged. The right front leg clearly resembles that of an elephant. The hind leg is like those of the bulls, with hoof at the tip. The tail of the icon is like that of the bull instead of horse. The sculpture has the face of a horse, and a part of the face has been broken. A single horn standing at the centre of the sculpture's head, is in broken condition. An artistic chain with tiny jingle bells joined together adorns the body of the sculpture, and a saddle is carved atop its back, while another attractive chain has been looped around the neck and face of the sculpture.
This unicorn sculpture happens to be the vehicle of Bermeru Daiva (demigod) of the Nagabrahmasthana. In Tulu folklore, the demigods riding horse or such other animals are identified as ‘Bermeru’ or ‘Jaina Bermeru’. The sculpture now found, which is an imaginary animal created by creative artistes, is said to be the first of its kind in the country. The sculpture is estimated to be belonging to the 12th or 13th century AD. The sculptures with features of different animals represent fertility, Prof Murugeshi said.
He noted that some precious artefacts are often found during the reconstruction and renovation of various temples and Daivasthanas in the coast. Some of them get buried under the debris, while there is also a practice of throwing them into water bodies. He requested the concerned to preserve these treasures in archaeological museums instead. Prof Murugeshi also added that the unicorn sculpture now found will be preserved at the National Archaeological Museum at New Delhi.
பல்லவர்கள் குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் வட்டக் கல் கிடைத்துள்ளதாம்!
பல்லாவரத்தில்கிடைத்துள்ளஅதிசயவட்டக்கல்பழமையானதா?: பல்லாவரம் தர்கா சாலை சுரங்கப்பால திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய போது, ஏழு அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திலான, வட்ட வடிவிலான ஒரு ராட்சத கல் கிடைத்தது[1]. இந்த கல் வரலாற்றுப் பெருமை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுவதால், தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், “பழைய பல்லாவரத்தில் சில பகுதிகளை புராதன சின்னங்கள் கொண்ட பகுதியாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், சுரங்கப் பாலத்திற்காக பள்ளம் தோண்டிய போது, பழங்கால கல் கிடைத்திருப்பதால், மேலும் பள்ளம் தோண்டும் பட்சத்தில் இப்பகுதியில் மேலும் சில அரிய புராதன சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தொல்லியல் துறையினர் இங்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, கிடைத்துள்ள வட்டக்கல் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததா என்பதை அறிய வேண்டும்’ என்றனர்.
Pallavaram-circular stone-recovered
பல்லவபுரத்தின் தொன்மை: சென்னை பல்கலைக் கழக தொல்லியல் வரலாற்றுத் துறையினர் மேற்கொண்ட ஒரு கள ஆய்வில், அக்காலத்தில் பல்லாவரம் மிகச் சிறந்த வணிக நகரமாக பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. பல்லாவரம் நகரின் குறிப்பிட்ட சில இடங்களில் தொன்மையை பறைசாற்றும் சான்றுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளதால், அந்த இடங்களில் கட்டுமானங்கள் கட்ட தொல்லியல் துறை தடை செய்துள்ளது. இந்நிலையில், பாலம் கட்டுவதற்காக பல்லாவரத்தில் தோண்டும் போது கிடைத்த ஒரு வட்ட வடிவிலான கல் கிடைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[2].
Pallavaram-Cave temple -occupied by the Muslims
சுரங்கப்பாலம் கட்டுவதற்காக தோண்டுதல் பணி: பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையையும், கீழ்கட்டளையையும் இணைக்கும் வகையில் தர்கா சாலையில் 17.92 கோடி ரூபாய் மதிப்பில் இலகு ரக வாகன சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கு பகுதியில் சுரங்கப்பால பணிகளுக்கு தேவையான 2,800 சதுர மீட்டர் அளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த கட்டடங்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கேட்டில் இருந்து மேற்கு பகுதியில் சுரங்கப்பால பணிகளை துவங்கும் வகையில், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் எட்டு அடி ஆழத்தில் பாறைகள் தென்பட்டன. சுற்றிலும் உள்ள மண் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஏழு அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திற்கு பிரமாண்டமான முழு நீள கருங்கல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. கல்லில் எந்த இடத்திலும் இணைப்பு இல்லை. பழங்கால எழுத்துக்கள், குறியீடுகளும் இல்லை. இது குறித்து ஆலந்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cave-temple-at-Pallavaram-used as Darga by the Muslims
மஹேந்திரவர்மன் கட்டிய குகைக் கோவில்: பல்லாவரம் என்கின்ற பல்லவபுரம் பல்லவர்களால் ஆளப்பட்டதால், அப்பெயர் பெற்றது. “பஞ்சப் பாண்டவர் மலை” என்று அழைக்கப்படுகின்ற, இம்மலைக்குன்றின் மீது, ஐந்து பிரகாரகங்கள் கொண்ட குகைக் கோவில், முதலாம் மஹேந்திரவர்மனால் கட்டப்பட்டது. நடுவில் பிரம்மா, இரு பக்கமும், சிவன், விஷ்ணு மற்ற இரண்டு பிரகாரகங்களில் இரண்டு கடவுளர்கள் இருப்பது போல இக்கோவில் கட்டப்பட்டது. இப்பொழுது, இடிபாடுகளுடன் இருக்கும் இந்த குகைக் கோவில், முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, தர்காவாக உபயோகிக்கப் பட்டு வருகிறது[3]. இதை புகைப்படம் எடுக்கவும் தடுக்கிறார்கள். போதாகுறைக்கு முகமதுவின் உடற்கூறு அங்கு இருக்கிறது என்று வேறு கதைவிடுகிறார்கள். தொல்துறைத் துறையினர் இங்கு எப்படி மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[4].
Pallavaram-Cave temple -occupied -by the Muslims
இந்திய தொல்துறைப் பிரிவினரால் குறிக்கப்பட்ட கல்வெட்டுகள்: கோவில் தூண்களில் சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப் பட்ட கல்வெட்டுகள் உள்ளன[5]. ஆனால், இப்பொழுது முஸ்லீம்கள் சுவர் எழுப்பி, வெள்ளை அடித்து அவற்றை மறைத்து விட்டனர். இந்த தூண் கல்வெட்டுகள் திருச்சியில் உள்ளது ;போலவே உள்ளது என்றும் ஜொவ்வே டுப்ரெயில் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்[6]. ஒருவேளை, மலைக்கோவிலுக்கு போகும் வழியில் உள்ள “சண்மதங்களைக்” குறிப்பது போல இக்கோவிலும் கட்டியிருக்கலாம். அருகில் இடிந்த கட்டுமானங்கள் உள்ளன.
Pallavaram-Cave temple occupied by the Muslims
சென்னையிலுள்ள சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தூங்குகிறார்கள் போலும்: சென்னையில், பலமுறை, இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை, போன்றவை மாநாடுகள் நடத்தியுள்ளன, ஆனால், இதைப்பற்றிக் கவலைப்ப்ட்டதாகத் தெரியவில்லை. பல்லவர்களைப் பற்றி சென்னையிலேயே இருந்து கொண்டு, வாய் கிழிய பேசும் “வாய் சொல் வீரர்கள்”, முதலியோரும் கண்டுகொள்வதில்லை. கோடிகளைக் கொட்டி தமாஷா கொண்டாடும் செந்தமிழ் சூராதி சூரர்களும் குருடர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.
Pallava_cave_temple-Trichy
இது உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு போகும் வழியில் உள்ளது. ஒப்புமைக்காகக் காட்டப் படுகிறது.
On the beam and pillars in the upper cave on ‘the rock.’
Of the two monolithic caves, one at the foot and the other half-way up, of ‘the rock’ t Trichinopoly, the latter alone contains inscriptions, two of which, published in South Indian Inscriptions, Vol. I, pages 29 and 30, state that the cave (upper) was constructed by Gunabhara (i.e.) Mahendravarman I. A verse inscription (No. 9 below) engraved on the beam over the inner row of pillars here, calls the cave Lalitankura-Pallavesvara-griham’ after the title ‘Lalitankura’ of this king, which also occurs in his record at Pallavaram. His birudas are engraved in bold Pallava-Grantha and Tamil characters on all the pillars in the upper cave at Trichnipoly. The outer wall of the sanctuary in this cave seems to have contained an inscription, but only a few letters of its first line are now visible, the rest being completely damaged. The name ‘Mahendravikrama’ is found mentioned in the inscription on the extreme left outer pillar and most of the birudas occurring here are also found in the records of this king at Pallavaram and other rock-cut excavations of his time. Some of these titles are unintelligible and appear to be Telugu in origin. The bottom of each of the four pillars contains a biruda in the Pallava-Tamil characters, of which only two are now clear, viz. Pinapinakku and Chitti[rakara]ppuli.
It is of interest to note that the birudas are alphabetically arranged and so engraved on the front face of the pillars. The same arrangement, though followed in the Pallavaram inscription, is not so conspicuous there as in the present record (plates I and II).
The characters employd in the present inscriptions are of an ornate nature and provide an interesting contrast with the simpler variety of letters found in the Pallavaram record of the same king, where almost all these birudas are repeated.
A description of the cave is found in the Memoir of the Archaeological Survey of India, No. 17, pages 13 – 15.
No. 13.
(A. R. No. 369 of 1908).
Pallavaram, Saidapet Taluk, Chingleput District.
On the beams in the rock-cut cave now used as a ‘Darga’.
This inscription is engraved in Pallava-Grantha characters in a single line on the beams of the upper and lower verandahs of the rock-cut cave[7] (plates II and IV.) It gives a long list of birudas, some of them obscure in their import, of the Pallava king Mahendravikrama (I) with whose name the inscription commences. These titles are in Sanskrit, Tamil and Telugu and indicate the character, erudition and personal tastes of the king. Some of these birudas are also found in the upper cave at Trichinopoly (No. 8 above).
The rock-cut temple is described in the Memoir of the Archaeological Survey of India, No. 17, page 16.
[1] தினமலர், பல்லாவரத்தில்கிடைத்துள்ளஅதிசயவட்டக்கல்பழமையானதா? பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2010,02:14 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 18,2010,06:58 IST
[2] பல புராதன இடங்களில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த பழங்கால சிற்பங்கள், கட்டுமானப் பொருட்கள், சிலைகள், கட்டிடங்கள் முதலியவை கண்டதாக செய்தி வரவில்லை. ஒருவேளை, அப்படி கண்டாலும் தமது வேளை நின்றுவிடுமேயன்று, காண்டிரக்டர்கள் மறைத்து விட்டிருக்கலாம். இதனை மக்கள் பார்த்து விட்டதால், செய்தியாக வந்துள்ளது போலும்!
[4] இரண்டு தினங்களுக்கு முன்பு, ஒரு கோவிலில் அம்மன் சிலை வைத்ததற்கே, ஓடி வந்து அதனை அகற்றியுள்ளனர். ஆனால், பல மசூதிகளில் முஸ்லீம்கள் தமக்கு இஷ்டம் போல உபயோகித்து வருகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்துவதில்லை.
[5] V. Venkatatasubba Ayyar, South Indian Inscriptions, Vol.XII – The Pallavas, Government Press, Madras, 1942, Plates – II and IV, pp.8-9.
[6] G. Jouveau-Dubreuil, Pallava Antiquities, Asian Educational Serives, New Delhi, p.25.
Trove of 4,000-year-old remains being unearthed in Uttar Pradesh
Published: Sunday, Apr 24, 2011, 17:30 IST
A team of archaeologists is trying to unravel the pages of history in a small village in Ballia district of Uttar Pradesh as remains from the New Stone Age are being regularly excavated.
"During excavation work being carried out in Puccakot village, rare remains of Neolithic age upto Gupta period have been recovered," professor RS Dubey, heading the excavation work being carried out by archaeological department of the Banaras Hindu University, told PTI over phone.
"These artefacts and remains could prove very important for detailed study of the civilisation and culture during this period," he said.
Professor Dubey said the artefacts recovered during the excavation which began in February could be as much as 4,000-years-old and point towards highly developed culture in the area between the Neolithic age and Gupta period.
The remains recovered indicate that the area was developed from commercial and trade points of view, he said, adding that they present a chain of civilisations during different periods.
"This is not a common phenomenon and it seems that once people with an advanced lifestyle used to inhabit this area," Prof Dubey said.
The excavated artefacts include earthen utensils, weapons made from bones, terocotta toys, figures of parrots and coins of different periods ranging from King Ashoka's rein to the Gupta period.
Nearly two dozen sealings from Ahoska's period to the Gupta period with inscriptions bearing names of different people in Brahmi language have also been recovered from the excavation site.
"A fort made of bricks has been found at the excavation site. This could be the reason this area was named Puccakot," professor Dubey said.
He said from carvings on the objects excavated and other indications, it appears that the place was originally called Shrenipur.
The inscriptions found at the excavation sites are being studied and scientific analysis of other remains, including metallic examination of coins, will be carried out, he said, adding that scientific analysis, which include carbon dating and expert study of flora and fauna, would help in getting more details of the site.
"It will tell what were the major crops, what the lifestyle actually was and other intricate details. This could also lead to revelation of new facts relating to the then civilisation," he said.
"The excavation, which started on February 28, is likely to be wrapped up by mid May, but after examination of the remains, if required, it may be resumed," professor Dubey said.
London: Archaeologists have unearthed what they believe are the remains of the first known Stone Age gay man who was buried like a woman some 5,000 years ago. The skeleton,discovered during an excavation near Prague in Czech Republic and believed to date back to between 2900 and 2500 BC,was pointing eastwards and surrounded by domestic jugs rituals only previously seen in female graves.According to the archaeologists,the way he was buried,it suggests that he was of a different sexual persuasion,the Daily Mail reported. During that period,men were traditionally buried lying on their right side with the head pointing towards the west;women on their left side with the head facing east.In this case,the researchers said,the man was on his left side with his head facing west. And the gay caveman was found buried with household jugs,and no weapons.The archaeologists said they don't think it was a mistake or coincidence given the importance attached to funerals during the period,known as the Corded Ware era because of the pottery it produced. According to the researchers,an oval,egg-shaped container usually associated with female burials was also found at the feet of the skeleton.PTI
Layers Of Soil Showing Continuous Settlement Since Prehistoric Age Discovered
D Madhavan | TNN
Balnallur (Sriperumbudur ): Long,long ago, or 24,000 - 1.2 lakh years ago,to be precise,people lived in the Chennai region.A team of archaeologists has discovered layers of sediments that show continuous human settlements in Chennai suburbs since the middle-Palaeolithic age.The discovery was made at an abandoned quarry in Poonchur village of Sriperumbudur panchayat,some 45 km from the city,off the Chennai Bangalore Highway.Braving hot weather since March,the team led by Professor S Rama Krishna Pisipaty,head of the department of Sanskrit and culture at Sri Chandrasekaharendra Saraswathi Viswa Mahavidyalaya in Enathur,Kancheepuram,has been camping in the villages in Sriperumbudur taluk.It is a rare finding because in no other place in the state we have got evidence of continuous human settlements since the middle-Palaeolithic era in one spot, professor Pisipaty,who is also a geo-archaeologist,told TOI.The sediments deposits are in the form of stone and other tools and pottery objects buried according to their age,layer by layer.While objects like stone tools that indicate middle-Palaeolithic era are located on the bottom,microliths (small stone implements) and pointed tools are located on on the top,below the top soil.A few yards away from the site,the team also found a large quantity of unused iron scraps atop a mound in the village.This indicated the knowledge of using iron ore,mainly for weapons,by local people.More importantly,it highlighted human settlement during the Iron Age. Giving credibility to their findings,the team,which included Pisipatys student and a research scholar S Shanmugavelu,also unearthed a complete iron smelting unit in Balnallur village less than a kilometre from the site in another abandoned quarry.With a separate area earmarked for storing blocks of iron ore,the iron smelting unit has surface evidence of shelters for iron smelters.Besides,the team also found a large number of unused iron scraps,which would have been made from the unit but remained unused.The iron scraps found here are wooze or dumuscus steel,which was earlier found only in Deccan plateau, Pisipaty noted.
At Echur,a neighbouring village,the team discovered urn burials and broken black-and-red pottery ware.At Poonchur,the members unearthed late Pallava era stone statues of Vishnu and Lakshmi.A green granite Hanuman statue,which belong to the Vijayanagara reign,was also unearthed. The team had visited more than 20 villages in Sriperumbudur.
Thiruvananthapuram: A team of archaeologists has stumbled upon ancient pottery in Vizhinjam on the outskirts of the state capital,which they feel reinforces suggestions that it was an important port during the 1-3 rd century AD. Two trenches have been laid and several interesting pottery types have been recovered.A distinctive amphora base and a section of an amphora with bitumen coating have been found along with two smaller amphora shards.They can be tentatively dated between 1st and 3rd century AD.There are also shards of a very fine grey ware which belongs to the same period, a statement issued by the researchers Ajit Kumar,head of the department of archaeology,University of Kerala and Robert Harding of the Civilisations in Contact Project,University of Cambridge said. According to Kumar who is also director of the project,the amphora evidence pushes back the antiquity of Vizhinjam to the 2nd-3 rd century and supports earlier suggestions that this port may be Balita,mentioned in the Periplus of the Erythraean Sea (1 AD),or Blinca mentioned in the Peutinger Tables (4 AD). Their find incl u d e s porcel a i n from South China kilns,T h a i l a n d,Netherlands and Britain besides two unidentified coins,beads,terracotta tiles and pieces of coloured glass from various periods and evidence of iron-work including a crucible and pieces of iron slag.Many examples of turquoise glazed pottery found at the site have been dated to the first millennium AD.On pieces of large storage jars with bitumen coating on the inner side recovered from the trenches,Harding said this was done to reduce the jars porosity,so it could be used to transport liquids such as oils or wine. Both types of pottery have their origins in Mesopotamia and the Arabian Gulf,he said.The team also found pieces of charcoal from a pot and expressed the hope their Carbon 14 dating would help fix a time-line for the region.
Glazed turquoiseware from the Persian Gulf and Mesopotamia
Archaeology Students Excavate Rare Artefacts Of The Pallava Era Near Chennai
D Madhavan | TNN
Arpakkam (Kancheepuram): That Chennais outskirts are an archaeological goldmine has been demonstrated once again after a team of young archaeologists recently unearthed rare objects dating between the early Christian era and the later Pallava period.The site is located at Arpakkam village,some 85 kms south of Chennai,in Kancheepuram. A 13-member that included ten final year post graduate students from the Department of Ancient History and Archaeology of the University of Madras unearthed these finds in a month-long dig.The team chose Arpakkam as it is mentioned in ancient literature,team members said.Inscriptions on the walls of three ancient temples indicated the historicity of the site.Besides,Arpakkam lies on the fringe of a mound where we had found remains of megalith burials, said assistant technical officer of the department,N Ranganathan,who is also a draughtsman. The finds include a rare granite statue of the jyeshta (elder in Sanskrit) sister of the goddess of wealth accompanied by two children,one on each side.The statue featuring a buffalo head band is typical of the early Pallava period,said Professor M Seran,technical officer of the department.The statue was found abandoned near a thorn bush.Seran hypothesised that the elder sister of a goddess was probably considered inauspicious and,therefore,the jyeshta statue merited less attention.Seran,accompanied by two faculty members,led the team. The excavation is an annual programme conducted by the department to expose students to practical knowledge and challenges encountered on the field.So far,the department has conducted 17 such exercises since the programme was initiated in 1963.While the programme was funded by a 70,000 university grant,Arpakkam villagers did their bit by arranging accommodation and food for the team. After identifying the site,a trench was laid and instructions given on how to do the excavation.The students were able to identify more than 50 rare objects,both small and big,including beads,bangles,seals,and ornaments made up of semi-precious stones including quartz.The stones were used by the affluent classes of the Pallava kingdom and the early Christian era. Other interesting finds include a floor polishing stone and black and red ware sherds.The pottery sherds feature a unique design of shoulders with engravings of loops and leaves.The hind limb of a terracota elephant,a broken vessel stand,a hopscotch markerused by children to play gamesalso stood out among the finds. But,perhaps,the most striking find for the archaeologists was the foundation layer for a small room.The room was divided in two.The layer was made of river sand.This style can be found in the Tanjore big temple,Seran said.But the building techniques used in Tanjore were far advanced,he noted. madhavan.d@timesgroup.com
A hopscotch marker,made of red-slipped ware,used as a toy by children during the Pallava era
A portion of a terracota lamp with one projection
A pot stand used to hold vessels and also,prevent ants from climbing up into the pot
A seal used for administrative purposes by the early Pallavas
Black-and-red ware sherds with engraving,loops and leaf patterns,like a festoon
Portion of a terracota bust of a male that was used for occult practices in the past
BRUSHING UP ON HISTORY: A rare stone carving of elder sister of the goddess of wealth accompanied by her children,one on each side,excavated at the Arpakkam village site in Kancheepuram on Thursday
Ancient Shiva temple discovered In a rare archaeo Feb. 27: In a rare archaeological find, an ancient Shiva temple has been discovered on the banks of the Shanmuganathi.
Inscriptions of a Kongu chieftain and a Chola king have also been discovered along the banks of the river near Palani.
Led by Madurai Kamaraj University emeritus professor B.S. Chandrababu, a team of archaeologists and enthusiasts comprising V.
Narayanamoorthy, Thilagavathi, Manivannan and Gnanasekaran found the ruins during an extensive study in the region last week. The site, replete with remains, is 3 km on the way to Tarapuram from Palani.
The team has collected broken pillars, an adhishtanam (a portion of a temple structure just above the ground), a statue of saptha kannigal (seven virgins) in a damaged condition and stone inscriptions belonging to the regime of Rajaraja Cholan among others.
மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து-அச்சுதானந்தன் கோரிக்கை
சனிக்கிழமை, பிப்ரவரி 12, 2011, 11:03[IST]
திருவனந்தபுரம்: இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
திருவனந்தபுரத்தில் 2007ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசிய பிரதமர்,
இந்திய மொழிக இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாரம் உள்ளது. இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. அதேபோல இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிப்பது அவசியம்.
இந்திய மொழிப் படைப்புகளின் தனிச் சிறப்பையும், மேன்மையையும் உலக மக்கள் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம். இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும் என்றார் மன்மோகன் சிங்.
விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும். தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கால்களுடன் வாழ்ந்த பாம்பு; லெபனானில் எலும்பு கூடு கண்டுபிடிப்பு
Washingtonபுதன்கிழமை, பெப்ரவரி 09, 11:07 AM IST
வாஷிங்டன், பிப். 9-
கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.
பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். சுமார் 19 “இஞ்ச்” நீளமுள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.அந்த எலும்புகள் “ 1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.
இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்