New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Semmozhi Tamil- Ancient Archaeology findings


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Semmozhi Tamil
Permalink  
 


23_01_2011_125_002-destroy-ancient.jpg?w=640&h=735

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ganesha_symbolism.gif?w=564&h=473

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_014_088-world-sinking.jpg?w=640&h=543

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_01_2011_014_082-t-rex.jpg?w=545&h=329

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1600 ஆண்டுகளுக்கு முந்தைய மயன் மன்னர் கல்லறை கண்டுபிடிப்பு



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கவுதமாலா: கவுதமாலா நாட்டில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான மயன் மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயன் நாகரிகம், மத்திய மற்றும் வடக்கு அமெரிக்க பகுதிகளில் பரவியிருந்தது. மயன் அரசர்கள், மக்களால் கடவுள்போல கருதப்பட்டனர். கிபி 250 முதல் 900 வரை இவர்களது காலம் ஆகும். பிரவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் ஹூஸ்டன் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள், கவுதமாலா நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர்.

அப்போது 1600 ஆண்டு பழமையான, மயன் மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 6 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும், பீங்கான், துணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள், மயன் மன்னர் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

குழந்தைகள், மயன் அரசன் இறந்தபோது அவனுக்காக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது, கிபி 350 - 400க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மயன் மன்னரின் கல்லறையாக இருக்கலாம் என தெரிகிறது. கல்லறையில் குடைந்தும், செதுக்கியும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன் மூலம் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_01_2011_015_004-human-swim.jpg?w=522&h=637

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_12_2010_009_036_00<IMG SRC=ldest-human-teeth.jpg?w=355&h=228" border="0" />

29_12_2010_014_013-human-origin.jpg?w=640&h=384


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
First humans may have evolved in West Asia London,
Permalink  
 


29_12_2010_009_036_008.jpg
what could change the whole picture of human evolution, archaeologists claim that modern man may have evolved in the West Asia, rather than Africa, after they discovered remains said to be 400,000 years old.

A team, led by Prof Avi Gopher and Dr Ran Barkai of the Tel Aviv University, has found eight human-like teeth in the Qesem cave near Rosh Ha’Ayin, 10 miles from Israel’s Ben Gurion airport.

The teeth were 400,000 years old, from the Middle Pleistocene Age, which would make them the earliest remains of homo sapiens yet discovered, The Daily

Telegraph reported.

If true it overturns the belief that Homo sapiens, the direct descendant of modern man, evolved in Africa about 200,000 years ago, say the archaeologists.

The latest findings, published in the American Journal of Physical Anthropology, said the size and shape of the teeth were very similar to those of modern man.

— PTI




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Semmozhi Tamil
Permalink  
 


24_12_2010_102_004-nadukal.jpg?w=640&h=708

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_12_2010_006_006_010.jpg
The existence of an ancient relationship between the Roman empire and south India is a matter that has been for decades restricted to researchers and historians. Though many discoveries were made in south India and even recently at Pattinam, in Kerala, the public always had to be satisfied with limited access to these historical records, so much so that a veil of mystery surrounds this ancient connection. But all this is about to change due to a combined effort of the Tamil Nadu government and Indo-Italian Chamber of Commerce and Industry who are organising an exhibition on ‘Roman artifacts discovered in India’ for the public.

“Since the late 18th century, archaeologists have unearthed thousands of ancient Roman coins, Roman jewellery, Roman ceramics and Roman glass in Karur, Madurai, Pudukot

tai and Vellalur, in Tamil Nadu, and Eyyal and Kottayam, in Kerala, Akki Allur and Chandravalli, in Karnataka, and Akkanpalle and Nasthullapur, in Andhra Pradesh. Many of these artifacts will be displayed for the first time since their discovery and the exhibition will be held in the government museum, Chennai, during mid-January 2011.
The exhibition will showcase the story of RomeIndia contacts through artifacts, photographs and charts," said Mr S. Suresh, Tamil Nadu state convener of Indian National Trust for Art and Cultural Heritage (INTACH), who will be the curator at the exhibition.

According to Mr Suresh, the government museum, which has the largest collection of Roman coins found in India also has the largest Roman coin collection outside Europe.

“The exhibition will also have Roman artifacts that were found in India but are showcased in museums outside India. The exhibition, which will be the biggest in India, will also witness the release of one of the biggest catalogues ever released in India.

The catalogue includes a detailed, descriptive documentation of the 1,408 Roman coins found in the village of Vada Budinatham, near Pollachi, in Tamil Nadu,” Mr Suresh added.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dino die-off led to gigantic mammals
Washington,
Washington, Nov. 26: They just needed some leg room: New research shows the great dinosaur die-off made way for mammals to explode in size — some more massive than several elephants put together.

The largest land mammal ever: A rhinoceros-like creature, minus the horn, that stood 18 feet tall, weighed roughly 17 tons and grazed in forests in what is now Eurasia. It makes the better known woolly mammoth seem a bit puny. Tracking such prehistoric giants is more than a curiosity: It sheds new light on the evolution of mammals as they diversified to fill habitats left vacant by the dinosaurs.

Within 25 million years of the dinosaurs’ extinction — fast, in geologic terms — overall land mammals had reached a maximum size and then leveled off, an international team of scientists reports in the journal Science.

— AP




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

It's a boy, shows 17-yr-old Egyptian mummy scan
London,

27_11_2010_013_008_009.jpg
27_11_2010_013_008_008.jpg
: A 1,700 London, Nov. 26: A 1,700year-old Egyptian mummy has been revealed to be a boy dressed in girl’s clothing, thanks to high-tech hospital scans. The child, who lived around 350 AD, underwent scans as experts hoped to determine its sex and discover how it suffered a fatal brain haemorrhage.

The mummy, housed at Saffron Walden Museum in Essex, Britain, was shrouded in mystery after it was discovered in a private collection in 1878.

Studies last year discovered it was wrapped in clothing adorned in feminine symbols, wearing girl’s breast cones and a female bracelet, reports Daily Mail.

Groundbreaking CT scans carried out at Addenbrooke’s Hospital in Cambridge have finally solved the mystery, revealing the mummy is a boy dressed in girl’s clothing.

These stunning images also show that the boy, aged four to five, mysteriously suffered a fractured skull

and brain haemorrhage and a broken collarbone before dying.

Museum curator Carolyn l Wingfield said the mummy was also two or three years younger than first believed.

She said: “Clear pictures of internal organs, bones and wrappings were obtained which confirmed the sex as male, and from tooth and bone growth the child was aged to four to five years of age.” “His bones were sturdy, but a fracture was visible above the right temple, and the right collarbone was fractured, also before death.” Neuro-radiographer Halina Szutowicz, who conducted the scans, said the results ruled out a previous theory that the child had been murdered.

— IANS



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_11_2010_005_028-urn.jpg?w=362&h=607

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_017_014-dinosours.jpg?w=516&h=424

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2010_017_023-crocodile-100-million-years-old.jpg?w=162&h=624

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_11_2010_115_015-pumpuhar.jpg?w=640&h=782

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_11_2010_016_030-samana-guhai.jpg?w=640&h=442

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Arabic Tamil almost extinct in Pulicat
Permalink  
 


09_11_2010_005_006_008.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Semmozhi Tamil
Permalink  
 


இந்தியாவில் உள்ள காடுகளில் மரத்தில் இருந்துவரும் பிசினால் பாதுகாக்கப்பட்ட நிலையில் சுமார் 50 வருடம் பழமை வாய்ந்த எறும்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் வகையான எறும்புகள் தற்போது பூமியில் வாழ்வதில்லை என்றும் அறியப்படுகிறது. சுமார் 150 கிலோ எடையுடைய பிசின் குழம்பு உறைந்துபோய், காடுகளில் இருந்ததாகவும், அவை நன்றாகப் பாதுகாக்கப்பட்டு இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றை தற்போது தோண்டி எடுத்து ஆராயும் போது சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த 700 அரியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு வகையான எறும்புகளே விஞ்ஞானிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் சுரங்கத்தை தோண்டும் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் விஞ்ஞானிகள் தலைமையில் தோண்டி எடுக்கப்பட்ட படிமங்கள் ஆராயப்பட்டன. இறந்து காணப்பட்ட பல உயிரினங்கள் (ஊர்வன) நவீன கால ஊர்வனவைப் போலக் காணப்பட்டாலும், சில அரியவகை உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகிலேயே உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட படிமங்களில் 2வது அதிசயமான படிமங்கள் இவையாக இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ancestors evolved in Asia,not Africa


The human family tree may not have taken root in Africa after all,claim scientists,after finding that its ancestors may have travelled from Asia.
While it is widely accepted that man evolved in Africa,in fact its immediate predecessors may have colonised the continent after developing elsewhere,the study says.
The claims are made after a team unearthed the fossils of anthropoids - the primate group that includes humans,apes and monkeys - in Libyas Dur At-Talah.Paleontologists found that amongst the 39 million-year-old fossils there were three distinct families of anthropoid primates,all of whom lived in the area at approximately the same time.Few or any anthropoids are known to have existed in Africa during this period,known as the Eocene epoch.
This could either suggest a huge gap in Africas fossil record - unlikely,say the scientists,given the amount of archaeological work undertaken in the area - or that the species colonised Africa from another continent at this time.
As the evolution into three species would have taken extreme lengths of time,combined with the lack of fossil records in Africa,the team concludes that Asia was the most likely origin.
Writing in the journal Nature,the experts said they believed migration from Asia to be the most plausible theory.
Christopher Beard,of the Carnegie Museum of Natural History in Pittsburgh,said: If our ideas are correct,this early colonisation of Africa by anthropoids was a truly pivotal event - one of the key points in our evolutionary history.
At the time,Africa was an island continent;when these anthropoids appeared,there was nothing on that island that could compete with them.It led to a period of flourishing evolutionary divergence amongst anthropoids,and one of those lineages resulted in humans.
If our early anthropoid ancestors had not succeeded in migrating from Asia to Africa,we simply wouldn't exist. He added: This extraordinary new fossil site in Libya shows us that in the middle Eocene,39 million years ago,there was a surprising diversity of anthropoids living in Africa,whereas few if any anthropoids are known from Africa before this time."AGENCIES





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_10_2010_014_011-asia-evolution.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ancient insects show India wasnt island 50m yrs ago

Washington: Discovery of perfectly preserved insects in amber from a lignite mine in Gujarat has challenged the assumption that India was an isolated island continent about 52 million years ago.
A team of German,Indian and US scientists have found a trove of insects in a newly-excavated amber deposit from the Vastan lignite mine,30km northeast of Surat,in a geological zone called the Cambay Shale.
The arthropods bees,termites,spiders,and flies found in the Cambay deposit are not unique as would be expected on an island but rather have close evolutionary relationships with fossils from other continents,said the scientists detailing their findings in the journal Proceedings of the National Academy of Sciences.
It has long been assumed that India broke away from Africa about 150 million years ago and didnt join up with another landmass Asia until about 50 million years ago.
Thus,the scientists were believing that the insects found in the amber would differ significantly from those found elsewhere in Asia.But,to their surprise,the organisms in the amber were found to be closely related to other species found in northern Europe,Australia,New Guinea and tropical America.The amber shows,similar to an old photo,what life looked like in India just before the collision with the Asian continent, said co-author Jes Rust,professor of Invertebrate Paleontology at the Bonn University in Germany reporting the findings in the journal.The new amber and amber from Colombia that is 10 million years older indicate that tropical forests are older than previously thought.In the research paper,Grimaldi,Rust,and colleagues described the Cambay amber as the oldest evidence of tropical forests in Asia.They probably go back to right after the K-T boundary, between the Cretaceous and Tertiary periods 65 million years ago.The team plans to return to Gujarat in January to collect more samples,and the work in the lab is only beginning,the researchers said.The insects trapped in the fossil resin cast a new light on the history of the sub-continent, Rust said.
The similarity in the insects means Asia and India collided a few million years earlier than geological evidence suggests,says David Grimaldi,curator in the Division of Invertebrate Zoology at the American Museum of Natural History.PTI

Pc0151200.jpg
SHEDDING NEW LIGHT: A Psocoptera specimen found in the Cambay amber deposit of Gujarat.Insects entombed in a newly excavated amber deposit are challenging the assumption that India was an isolated island-continent 50 million years ago



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_10_2010_007_003-srirangam.jpg?w=300&h=226

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ASI embarks on documenting rock-cut temples in Tamil Nadu

V Mayilvaganan | TNN

Tiruchi: The Archaeological Survey of India (ASI) has embarked on an exhaustive documentation of the rockcut temples in Tamil Nadu for the first time which has helped uncover a treasure trove of ancient inscriptions and frescos.
D Dayalan,superintending archaeologist,Temple Survey Project,ASI,said while the documentation of 80 of the 110 rock-cut temples has been completed,the remaining would be over by March-end next year and submitted to the ASI.The documentation of these temples,discovered during various periods,would help future researchers and heritage enthusiasts as well as the public to learn about the temples, he said.
The documentation involves GPS (global positioning system) mapping and drawings of all the structures in these temples with detailed measurements.Each structure,including the pillars,icons and drawings have been extensively studied for documentation.Five to six drawings capturing the minute details of the features in the structures have been made.Besides,we have also photographed these structures, Dayalan said.
Though there are various accounts about the rock-cut temples,this will be an authoritative one to be published by the ASI.Almost all the 110 rock-cut temples in the state belong to the period ranging from sixth to ninth century BC.Apart from the fact that excavating a rock-cut temple is a laborious task,there were other political reasons too for such temples not being built subsequently.After the ninth century,the Cholas gained supremacy in the region.Since they established their capital in Thanjavur,which was a flat terrain,there are more structural temples built here, he said.Pudukottai tops the list of regions in the state with most number of rock-cut temples with about 40 such structures,a fact easily attributed to the rocky terrain here,followed by the Madurai region.The ASI has also recorded historical,geographical,archaeological and environmental information of each of the temples.Inscriptional data of these temples have also been recorded.
During the course of the documentation work,the ASI team also stumbled upon new inscriptions,paintings and hero stones unrecorded so far.
As many as 25 new inscriptions were discovered during the course of the documentation exercise.Fresco paintings were found in a temple in Thiruvellarai near Tiruchi, he said.

Pc0071200.jpg
SAVING HERITAGE: A gate (in blue) put up by the ASI at the rock-cut temple in Narthamalai


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Quarrying threatens ninth century temple

Chola-Era Monuments In Pudukottai At Risk 

V Mayilvaganan | TNN

Pudukottai: Rampant stone quarrying is threatening to damage a 9th century temple atop a hillock in Pudukottai district.
With an imposing rock backdrop and lush green paddy fields at the foot of the hillock,Vijayalaya Choleeswaram,built during the reign of Vijayalaya Chola,the first of the later Cholas,is tucked half way up the hillock at Narthamalai.Two rock-cut temples,one belonging to the 9th century and the other to the 13th century,are on the face of the rock close to Vijayalaya Choleeswaram.
These structures that have withstood centuries of natures ravages are now facing a threat from quarrying activity in the vicinity of the hillock.The impact of the blasts can be felt in the temple.Incessant explosions of gelatine sticks in the quarry will potentially create cracks on the temple structure and lead to its damage, says S Jayakumar,member of Reach Foundation,a forum fighting for preservation and protection of heritage structures.
Pudukottai assistant director of mines,M Sitrarasan,said mining was prohibited within a radius of 300 metres around the ASI site.Licences for two quarries falling within a radius of 300 metres near Sithannavasal were cancelled recently.In the case of Narthamalai,the quarry falls beyond the radius.But we could issue orders to use lowpower explosives, he said.
Though the mining is done away from the 300-metre regulated zone around the temple,the explosions could be felt in the temple.Sometimes,pieces of stones from the quarry would fall close to the temple after an explosion, said a villager.Locals point out that it was only a few years ago that miners had started to quarry from the spot close to the hillock.When one goes around the temple,the noise of the constant drilling in the quarry disturbs the serenity of the otherwise peaceful area.
An official of the Archaeological Survey of India (ASI),which administers the temple,said quarrying is a threat to the structure.We frequently take up the issue of the risk posed by mining to structures like the temple in Narthamalai to the district administration.If there are repeated blasts,there is a high possibility that cracks may appear in the structure, said,D Dayalan,superintending archaeologist,Temple Survey Project,ASI.
He insisted that the best solution would be to stop issuing quarrying licences near such sites.
Last year,the state government had announced that it will take steps to curb quarrying in the hills near heritage sites.The government also stopped quarrying in Tiruvaduvur in Madurai,where brahmi inscriptions were found on a hillock near a quarry.
mayilvaganan.v@timesgroup.com

Pc0071000.jpg
HUMAN DANGER: The rock-cut temple on the Narthamalai hillock was built in the ninth century


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_10_2010_015_015-aryan-russia.jpg?w=162&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_10_2010_003_005-mettur.jpg?w=300&h=125

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_09_2010_016_017-tanjore-paint.jpg?w=300&h=184

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காஞ்சிபுரம் அருகே முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிப்பு

First Published : 26 Sep 2010 12:07:00 AM IST

heritage.jpg
மேலே கற்கள் அடுக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள பெருங்கற்கால புதைவிடங்கள்.
காஞ்சிபுரம், செப். 25:  காஞ்சிபுரம் அருகே மன்னர்கள் காலத்தில் இறந்தவர்களை உறையில் வைத்து புதைக்கப்படும் முதுமக்கள் தாழிகள் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

மன்னர்கள் காலத்தில், இறந்ததற்கு பின்னர், இறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்தது. இதனால் இறந்தவர்களை ஒரு உறையில் வைத்து, அந்த உறையுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், நகைகள், துணிகள் ஆகியவற்றையும் வைத்து இந்த உறையை 10 அடி ஆழத்தில் புதைத்து அதன் மீது கற்களை அடுக்கி வைத்துவிடுவர். இதுபோன்ற புதைவிடங்கள் முதுமக்கள் தாழிகள் என்றும் அக் காலத்தில் அழைக்கப்பட்டன.

 

இதுபோன்ற முதுமக்கள்தாழிகள் காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. கல்பாக்கம் - திருக்கழுகுன்றம் சாலையில் வெங்கப்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கீழக்கழனி என்னும் இடத்தில் அரை கிலோ மீட்டர் சுற்றளவில் இதுபோன்ற பல முதுமக்கள்தாழிகள் உள்ளன.

 

இதேபோல் காஞ்சிபுரம் பெருநகர் அருகே உள்ள சேத்துப்பட்டு என்னும் இடத்தில் முதுமக்கள்தாழி உள்ளது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு செல்லும் சாலையில் காத்திரம்பாக்கம் என்னும் இடத்தில் இதுபோன்ற தாழிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

 

இது குறித்து தமிழக வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து வரும் சினேகம் என்னும் அமைப்பின் நிறுவனர் ஸ்டாலின் கூறியது:

 

"கீழக்கழனி பகுதியில் உள்ள முதுமக்கள்தாழிகள் பலர் மண் அள்ளுவதால் அழிந்தன. செங்கல்பட்டு பகுதியில் உள்ள தாழிகள் வீடுகள் கட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் கீழக்கழனி குறித்து ஆவணப்படம் எடுத்தோம். தற்போது கீழக்கழனியில் தொல்லியல் துறையினர் கம்பிவேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் காத்திரம்பாக்கத்தில் இன்னும் தாழிகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன' என்றார்.

 

தொல்லியல் துறையின் பணிகள் மேற்பார்வையாளர் மணியிடம் கேட்டபோது, அவர் கூறியது: "பெருங்கற்கால புதைவிடங்கள் என்ற பெயரில் நாங்கள் இதை அழைக்கிறோம். சேத்துப்பட்டு பகுதி பழங்காலத்தில் ஒரு நகரமாக இருந்துள்ளது. இந்த புதைவிடங்களை கண்டுபிடித்து கம்பி வேலி அமைத்து நாங்கள் முறைபடி பாதுகாத்துள்ளோம் என்றார்.

 

புதைவிடங்களில் புதையலா

 

இந்த புதைவிடங்கள் குறித்து சேத்துப்பட்டு மக்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: "இங்கு ஏற்கெனவே சுடுகாடு இருந்ததாகவும், தற்போது புதையல்கள் இருப்பதாகவும்' கூறுகின்றனர்.

 

இதுகுறித்து அப் பகுதி இளைஞர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: "மன்னர்கள், பெரும் பணம் படைத்தவர்கள் ஆகியோரை புதைக்கும்போது அவர்கள் பயன்படுத்திய நகை மற்றும் பொருள்களையும் அக் காலத்தில் உடன் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.இந்த புதைவிடங்களில் யாரேனும் முக்கிய நபர்கள் புதைக்கப்பட்டிருந்தால், புதையல் போன்று அங்கு ஏதேனும் பொருள்கள் இருக்கலாம். கண்டிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதைதான் மக்கள் புதையல் உள்ளது என்று கூறுகின்றனர்' என்றனர்.

 

"தொல்பொருள் துறையினர் இதுபோன்ற புதைவிடங்களை பாதுகாக்க கம்பி வேலிகள் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. புதையல் இருப்பதாக அந்த புதைவிடங்களை சேதப்படுத்தாமல் கண்காணிக்க பகல், இரவு காவல்களை தீவிரப்படுத்த வேண்டும்' என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி

First Published : 26 Sep 2010 12:00:00 AM IST

26kon5.jpg
ஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

 

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

 

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

 

 

பெரிய கோயில் அளவுகோல்...

 

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

 

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

 

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

 

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

 

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

 

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்

 

13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

 

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

 

சாரங்களின் அமைப்பு

 

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன.  சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

 

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.  இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

 

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள

 

உதவின.

 

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

 

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு.  இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சோழர் நகரம்!

 

 

26kon6.jpg

தெருக்கள்

 

(தஞ்சாவூர்ப் புறம்படி)

 

காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு,  வில்லிகள் தெரு,  ஆணைகடுவார் தெரு,  ஆனை ஆட்கள் தெரு,  பன்மையார் தெரு, சாலியத் தெரு.

 

பெருந்தெருக்கள்

 

மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.

 

சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்

 

முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு,  சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு,  வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரி

 

காலச் சோழப் பேராறு (கொள்ளிடம்),  வீரசோழனாறு.

 

பேரங்காடி

 

(தற்போதைய சூப்பர் மார்க்கெட் முறை) திரிபுவன மாதேவி பேரங்காடி.

 

 

 

சோழர்கால நாணயங்கள்

26kon7.jpg

 

கி.பி. 985}1014 காலகட்டத்தில் இலங்கையில்

 

ராஜராஜ சோழனால்

 

புழக்கத்துக்கு விடப்பட்ட

 

தங்க நாணயங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோழனின் பெரியகோயிலும்.. சேரனின் நுழைவாயிலும்!

First Published : 26 Sep 2010 12:00:00 AM IST

26kon1.jpg
பெரிய கோயில் அணுக்கன் திருவாயில்
தஞ்சைப் பெரிய கோயிலை சோழ மன்னனான ராஜராஜன் உருவாக்கியிருந்தாலும், அக் கோயிலில் சேர நாட்டின் கலைப்பாணியையும் உள்ளடக்கியிருந்த கட்டுமானங்கள் உள்ளது தற்போதைய ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னன் ராஜராஜனின் கல்வெட்டுகளில்  கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்களைக் குறிப்பிடுகின்றன. அதைப் போலவே அப்பேரரசின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலில் உள்ள அணுக்கன் திருவாயில் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது திருமதிலின் வடமேற்குப் பகுதியில் வடபுறத் திருவாயிலாகும்.  இவ்வாயில் பற்றியும், திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் தெற்கு  மதில்களில் உள்ள மற்ற மூன்று வாயில்கள் பற்றியும் இதுவரைக் கட்டடக் கலை  வல்லுநர்களால் ஆராயப்பட்ட எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை.

 

அணுக்கன் திருவாயிலும் மற்ற மூன்று வாயில்களும் ராஜராஜன் திருவாயில் போன்று தமிழக பாணி கோபுரங்களாக அமையாமல், சேர நாட்டுக் கோபுர கலைப் பாணியில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுமான அமைப்பின் மூலம் உணரமுடிகிறது.

 

இந்த நான்கு வாயில்களில் அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அங்கு காணப்படும் எச்சங்களிலிருந்து உணர முடிகிறது. மரத்தால் செய்யப்பட்டது போன்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ் வாயில் நிலைக் கல்லால் அமைந்துள்ளது. அருகே சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

 

நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசையாகச் சாரத்துவாரங்களும்  அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும்,  செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்புக் கோபுரங்கள் ராஜராஜன் காலத்தில் இருந்தன என்பது அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரஸ்கோ ஓவியங்கள் மூலம் தெரியவருகிறது. தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத்தான் இருந்தன என்பதை ராஜராஜன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.

 

ராஜராஜ சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது.  இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் மட்டுமே அட்ட  மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின்போது  சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன்  ராஜராஜன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது. அணுக்கன் திருவாயில் போன்றே மற்ற மூன்று வாயில்களும் சேரநாட்டு கோபுர பாணியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் மரச்சட்டம் சொருகுவதற்கேற்ற சாரத்துவாரங்களும் தண்டியங்களும் அவ்வாயில்களின் மேற்புறம் உள்ளன.

 

சேரர் கலைப்பாணியில் கொடுங்கைகள்: தஞ்சைப் பெரியகோயிலைப் பின்னாளில் புதுப்பித்த விஜயநகர அரசர்களும், தஞ்சை நாயக்கர்களும் சேரநாட்டுக் கலைப் பாணியில் திகழும் கூரை அமைப்பை கல்மண்டபங்களின் கொடுங்கைகளில் கட்ட ஒரு புதிய கட்டட மரபைத் தோற்றுவித்தனர். ஸ்ரீராஜராஜேச்சரத்தின் (பெரிய கோயில்) முகமண்டபத்திலும் சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா மண்டபத்திலும் இத்தகைய கொடுங்கைகளைக் காண முடிகிறது. உத்தரத்திலிருந்து ஏறத்தாழ 7 அடி நீளத்துக்கு வளைவுக் கூரையுடன் இக்கொடுங்கைகள் காணப்படுகின்றன.

 

கீழே மரச்சட்டங்கள், குமிழ் அணிகள், குறுக்குச் சட்டங்கள் என அனைத்தும் கருங்கல்  கொண்டே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். ஆனால் இவற்றையும் விஞ்சும் வகையில் தஞ்சைப் பெரியகோயில் கொடுங்கைகள் விளங்குகின்றன.  சேரநாட்டில் இன்றும் பொலிவுடன் திகழும் அக்கலை மரபை சோழ நாட்டிலும் போற்றி புதிய படைப்புக்களை உருவாக்கினர் என்பதற்கு தஞ்சைப் பெரியகோயிலே சிறந்த எடுத்துக்காட்டு.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Stone age settlement found on city fringes

ARCHAEOLOGIST DIGS UP STONES FROM PALEOLITHIC PERIOD 

D Madhavan | TNN

Singadivakkam (Kancheepuram): In what could be a major find,a large number of stone tools and weapons said dating back to more than 80,000 years ago were unearthed from a dry lake bed in Singadivakkam,a remote hamlet some 65 km south of Chennai,a couple of days ago.
The discovery,by Professor S Rama Krishna Pisipaty and his student S Shanmugavelu of the department of Sanskrit and culture at Sri Chandrasekaharendra Saraswathi Viswa Mahavidyalaya in Enathur,Kancheepuram,was part of an ongoing excavation work partly funded by the Archaeological Survey of India.
They have so far found hand-axes,choppers,scrappers and borers as well as microlithic tools (small stone implements ) and pointed tools of different sizes and shapes.Most could have been used for hunting and fishing,they said.
The huge number of tools found,said to be over 200,at the one-hectare-site indicates that it could have hosted a large human settlement,Prof Pisipaty said.Most of the settlers may have migrated from the northern parts of the country,he added.The settlement,as can be guaged from the tools found,shows transition from early to middle Paleolithic age,also known as the Stone Age, Prof Pisipaty noted.
This period,the geo-archeologist added,encompassed the first widespread use of technology as humans progressed from simple to complex development stages.It is generally said to have begun approximately 500,000 years ago and ended about 6,000 BCE with the development of agriculture,the domestication of certain animals,he said.It is termed pre-historic since writing hadnt begun.In the early Paleolithic period,each clan or family group regarded itself as the people and excluded others,Prof Pisipaty said.Strangers were not even thought of as human.In this settlement,the community identity started becoming more important than individual identity,he said.
Unlike other similar finds,including the first Paleolithic tool (a hand axe) discovered at Pallavaram in 1863 by British geo-archeologist Robert Bruce Foote,the one at Singadivakkam is,Prof Pisipaty said,unique at least for one reason: The site has evidence in the form of tools and weapons showing the transition from the Stone Age to the modern age.In the rest of the Paleolithic sites discovered so far,he added,there had been a break in the sequence.This makes it the largest Paleolithic settlment near Chennai,he said.
The professor and his student also discovered fossil of animals and trees at the site.There are a few research institutes,including IIT Madras,where they cane be tested for age and we plan to send them there, Prof Pisipaty said.
Professor Pisipaty and Shanmugavelu,who had been conducting excavations at the site since February 2009,began with basic research,including field visits.A large number of pebbles in different forms and the nature of soil convinced them of the importance of the area.Before starting the exercise,Pisipaty made a presentation to the authorities and got permission through the state archeological department.Kancheepuram was ideal for early settlers with its large number of safe water bodies a lifeline for any human settlement, Pisipaty told TOI.

Pc0040700.jpg
PAST SURFACES: Professor S Rama Krishna Pisipaty and his student S Shanmugavelu at the excavation site off Kancheepuram


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_016_004-rajaraja.jpg?w=300&h=257

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_016_008-soz.jpg?w=300&h=162

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_014_003-kanchipuram-ancinet.jpg?w=300&h=19624_09_2010_006_032-kanchi-fosils.jpg?w=261&h=300

-- Edited by devapriyaji on Friday 24th of September 2010 07:07:59 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_016_005-bragadeeswrm.jpg?w=193&h=300

__________________


Member

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

20_09_2010_005_048-palani.jpg?w=300&h=68

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_014_007-ajun.jpg?w=300&h=145

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_016_008-sozar.jpg?w=300&h=184

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_016_003-thanjai.jpg?w=300&h=278

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_005_006-pre-historic.jpg?w=300&h=216

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"Many Lives, Many Masters" by Dr. Brian Weiss

A Book that will Change Your Life!

Many Lives, Many Masters is the true story of a prominent psychiatrist, his young patient, and the past-life therapy that changed both their lives.

As a traditional psychotherapist, Dr. Brian Weiss, M.D., graduating Phi Beta Kappa, magna cum laude, from Columbia University and Yale Medical School, spent years in the disciplined study of the human psychology, training his mind to think as a scientist and a physician.

He held steadfastly to conservatism in his profession, distrusting anything that could not be proved by traditional scientific method. But when he met his 27-year old patient, Catherine, in 1980, who came to his office seeking help for her anxiety, panic attacks, and phobias, he was taken aback at what unfolded in the therapy sessions that followed, which jolted him out of his conventional ways of thought and psychiatry. For the first time, he came face-to-face with the concept of reincarnation and the many tenets of Hinduism, which, as he says in the last chapter of the book, “I thought only Hindus… practiced.”

For 18 months, Dr. Weiss used conventional methods of treatment to help Catherine overcome her traumas. When nothing seemed to work, he tried hypnosis, which, he explains, “is an excellent tool to help a patient remember long-forgotten incidents. There is nothing mysterious about it. It is just a state of focused concentration. Under the instruction of a trained hypnotist, the patient’s body relaxes, causing the memory to sharpen… eliciting memories of long-forgotten traumas that were disrupting their lives.”

During the initial sessions, the doctor regressed her back to her early childhood and she strained and stretched her mind bringing out isolated, deeply-repressed memory fragments. She remembered from age five when she swallowed water and felt gagged when pushed from a diving board into a pool; and at age three when her father reeking of alcohol molested her one night. But what came next, catapulted skeptics like Dr. Weiss into believing in parapsychology, and in what Shakespeare had said in Hamlet (Act I scene 5), “There are more things in heaven and earth… than are dreamt of in your philosophy.”

In a series of trance-like states, Catherine recalled “past life” memories that proved to be the causative factors of her recurring nightmares and anxiety attack symptoms. She remembers “living 86 times in physical state” in different places on this earth both as male and female. She recalled vividly the details of each birth – her name, her family, physical appearance, the landscape, and how she was killed by stabbing, by drowning, or illness. And in each lifetime she experiences myriad events “making progress… to fulfill all of the agreements and all of the Karmic (from Hindu concept of Karma) debts that are owed.”

Dr. Weiss’s skepticism was eroded, however, when she began to channel messages from “the space between lives”, messages from the many Masters (highly evolved souls not presently in body) that also contained remarkable revelations about his family and his dead son. Often he had heard his patients talk about near-death experiences when they float out of their mortal bodies guided towards a bright white light before reentering their discarded body once again.

But Catherine revealed much more. As she floats out of her body after each death, she says, “I am aware of a bright light. It’s wonderful; you get energy from this light.” Then, while waiting to be reborn in the in-between-lives state, she learns from the Masters great wisdom and becomes a conduit for transcendental knowledge.

Next Page: Voices of the Masters and the Concept of Reincarnation...



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்


விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம்பூர்புவ: ஸுவ:
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்யதீமஹி
தியோயோன: ப்ரசோதயாத்

indexe.jpg

என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.

இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக்கூறப்படும் (ரிக் வேதத்தின்மூன்றாவது மண்டலத்தில் (3.62.10உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும்என்று அழைக்கிறார்கள்.

இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.

தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.

மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம்பூர்புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத்ஸவிதுர்வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோதேவஸ்யதீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்

இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோயோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.
நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.

இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.

செம்மலர் என்ற வலைத்தளத்தில் தியாகு என்பவர் இம் மந்திரம் பார்ப்பன்களின் ஏமாற்று என்கிறார். என்னவோ தெரியல அவர் நாத்திகராக இருக்கலாம் ஆனால் உடலுக்கு உப்பு கூடாதென்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எந்த சுகதேகியாவது கேட்கிறோமா. கண்ணதாசன் போல் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது?

First Published : 08 Aug 2010 12:00:00 AM IST

tm2.jpg
தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.

 

இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு,  சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது.

 

இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபுவழி அறிஞர்களும் இன்று கிறித்தவ ஊழிக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர்.

 

இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறித்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டுவிடத்தக்கதாகிறது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

 

க.வெள்ளை வாரணர் கி.மு. 5320

 

மறைமலையடிகள் கி.மு. 3500

 

கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000

 

ச.சோ.பாரதியார் கி.மு. 1000

 

க.நெடுஞ்செழியன் கி.மு. 1400

 

மா.கந்தசாமி கி.மு.1400

 

கே.கே.பிள்ளை கி.மு. 400

 

மு.வரதராசனார் கி.மு. 500

 

ஞா.தேவநேயப் பாவாணர் கி.மு.700

 

சி.இலக்குவனார் கி.மு.700

 

இரா.இளங்குமரன் கி.மு.700

 

தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும்.

 

தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று "உரைநடைத் தொல்காப்பிய' நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார். சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகள் எளிதில் மறுக்கக்கூடியதே.

 

பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன.

 

தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது.

 

இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4-ஆம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.

 

தொல்காப்பியர் காலம்:

 

சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச் சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது.

 

இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டுக்கும்  8-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனல் பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம்.

 

தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை-தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.

 

தொல்காப்பியர் நாள்:

 

தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல்காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதிலிருந்து, அரச அவையத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கிலிருந்தமை அறியப்படுகிறது. பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைக் கலித்தொகையால் அறிகிறோம்.

 

கலித்தொகையில், பாலைக்கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார்.

 

தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும். ஆனால், தலைவன் இளவேனிற் பருவம் வந்தும், கூறியபடி வந்திலன்; சிறிது காலம் தாழ்த்தது. "அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார் பார் வருந்தாதே' எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உளது.

 

தரவு என்ற முதற்பகுதியில் இளவேனில் வருணனை, பிறகு மூன்று தாழிசைகளில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது; அவரும் மறவாது வந்தனர் எனக் கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது. இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன.

 

முதல் தாழிசை, வையையாறு பூத்துக்குலுங்கும் காலம்; இரண்டாம் தாழிசை, காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம்; மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம். இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது.

 

""நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்

 

புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?

 

பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்

 

கடரிழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை

 

(கலி:35)

 

நிலன் நாவில் திரிதரூஉம் - உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும், நீண்ட மாட மாளிகைகளையுடைய இக் கூடல் மாநகரிலுள்ளார் புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை - நூல்களைக் கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேனிற் காலமல்லவா?

 

புலன் நாவில் பிறந்த புதிய சொல் - புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக் கூறி அரங்கேற்றுதல், புதிதுண்ணல் - அரசனும் மக்களும் அப்புதிய பனுவல்களைக் கேட்டு, நுகர்ந்து இன்புறுதல்,

 

இவ்வாறு அரங்கேற்றம் இளவேனிலில் நடந்ததென்றால், இது நீண்ட நாள் மரபாக இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர், பாண்டியன் அவையில் அரங்கேற்றிய நாளும் இதுவாகவே இருக்கும் எனக் கொள்ளலாம்.

 

எனவே, கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் (சித்ரா பெüர்ணமி) தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு, கொண்டாடுதல் பொருத்தமுடையதாகும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது?

 

தொல்காப்பியர் காலம் - தீர்வு!

 

தீர்வு - 1

 

தமிழ், தெய்வத்தமிழ் என்பதற்கேற்ப, கோவிலூர் மடாலயத்தைத் தோற்றுவித்த ஆண்டவர் முத்துராமலிங்கரின் ஜீவ சமாதியுள்ள பூமியில் எடுக்கப்பட்ட தொல்காப்பியர் காலத் தெய்வ முடிவைத் தமிழக அரசு, திருவள்ளுவர் காலத்தை ஏற்று அறிவித்ததைப்போல, தொல்காப்பியர் காலத்தையும் மாநாட்டுக் கருத்தரங்கில் ஏற்றபோது, அங்கிருந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

இங்ஙனம் வரையறுக்கப்பட்ட ஆண்டோடு தொல்காப்பியருக்கான விழாநாள் பற்றிய ஒருமித்த முடிவும் எடுக்கப்பட்டது. அதுதான் சித்திரைத் திங்கள் முழுநிலா நாளாகும். சித்திரை முழுநிலா நாளை (சித்ரா பெüர்ணமி) தொல்காப்பியர் நாளாக அறிவித்துப் பெருமைப்படுத்துவது பொருத்தம் உடையதாகும். தொல்காப்பியர் ஆண்டான கி.மு.711 யும், நாள் முடிவுகளையும் தமிழக அரசு அங்கீகரித்து அறிவிப்பதுதான் இதற்குத் தீர்வாக அமையும்.

 

-தமிழாகரர் தெ.முருகசாமி

 

 

தீர்வு -2

 

முனைவர் தமிழண்ணல், சங்க காலத்தை வரையறுத்த பிறகே தொல்காப்பியத்தை அறிய முடியும் எனவும், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் எனவும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்துரை வழங்கினர்.

 

காய்தல் உவத்தல் அகற்றி ஆராயும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஓராண்டு எல்லைக்குள், தொல்காப்பியர் காலத்தை வரையறுத்துச் சொன்னால் தொல்காப்பியர் கால ஆய்வுச் சிக்கல் தீரும்! செம்மொழி ஆய்வு நிறுவனம் வாயிலாகத் தொல்காப்பியர் காலத்தை தமிழக அரசு உறுதிசெய்து அறிவிக்க வேண்டும்.

 

-முனைவர் பா.வளன் அரசு

 

 

தீர்வு -3

 

தென்மொழிப் புலமையுடன், வடமொழிப் புலமையும் மிக்க "உச்சிமேற் புலவர் கொள்' நச்சினார்க்கினியர், பேராசிரியர் பெருமக்கள் ஆகிய பெரும் புலவர்கள் இயற்றிய தொல்காப்பிய உரைகள் அனைத்தையும் கூர்ந்து நோக்குமிடத்து, அவர்களும், சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் பாடல்களாகக் குறிப்பிட்டு, "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்ற வரையறையை ஏற்றுப் போற்றிய உண்மை புலப்படும்.

 

எனவே, "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்ற வரையறைப்படி ஆராயும்போது, சங்க இலக்கிய காலத்துக்குப் பின்னரே அதாவது, கி.பி. 3-ஆம் நூற்றாண்டுதான் தொல்காப்பியர் காலம் எனக் கூறுவதே சாலப் பொருத்தமாக அமையும்.

 

எனவே, தொல்காப்பியர் காலம் "கி.பி. 3-ஆம் நூற்றாண்டு' எனக் கூறி, இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சரியாகப்படுகிறது.

 

-புலவர் முத்துவேங்கடேசன்

 

 

தீர்வு - 4

 

பல்வேறு அறிஞர்களும் ஆய்வாளர்களும் தொல்காப்பியர் காலத்தை வரையறுக்க முயன்றாலும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை. இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தான் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக் கருத்தரங்குகளின் வாயிலாக தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறை செய்துள்ளது.

 

தொல்காப்பியர் காலம் கி.மு.711 ஆண்டு, சித்திரைத் திங்கள் முழுமதி நாள் (சித்ரா பெüர்ணமி) என்று கோவிலூர் திருமடமும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இவற்றைத் தமிழக அரசு ஏற்று அறிவித்தால், தொல்காப்பியர் காலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும்.

 

-ப.இரமேஷ்

 

 

இனி அடுத்த வாரம் முதல் தொல்காப்பியர் காலம் பற்றிய தங்களது கருத்தை முனைவர் தமிழண்ணல், பத்திரிகையாளர் கே.சி.லட்சுமி நாராயணன், பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆகிய மூவரும் முன்வைக்கிறார்கள். ஆரூடம் முடிந்தது, அலசல் தொடர்கிறது...


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொல்காப்பியம், வேதங்களுக்கு முந்தைய நூலல்ல!

First Published : 15 Aug 2010 01:03:00 AM IST

tamil2.jpg
கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய  ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

 

 

சிறப்புப் பாயிரம்:

 

தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:

 

 

நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து

 

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய

 

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

 

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

 

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

 

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

 

பல்புகழ் நிறுத்தப் படிமையோனே

 

 

""நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில், அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில், புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் "கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண  நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு, இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்'' என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.

 

 

நான்மறை:

 

சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்'' என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.

 

வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.

 

நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே, வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.

 

 

ஐந்திரம்:

 

ஐந்திரம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார். ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக, சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.

 

ஐந்திரம் என்ற சம்ஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

 

 

அந்தணர் மறைத்தே:

 

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20-ஆம் சூத்திரம் வருமாறு:

 

 

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

 

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

 

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

 

அகத்து எழுவளி இசை அரில்தப நாடி

 

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;

 

அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

 

மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே

 

 

(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துகளும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால், மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும், உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன், எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து, (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும். அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து, வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன''. தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார், இந்தச் சூத்திரத்திற்கு.

 

வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார்; அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.

 

 

ஆறு செயல்கள்:

 

தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் ""அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்'' என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது. ""ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்'' என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.

 

ஓதல் - நான்கு வேதங்களையும் ஓதிக் கற்றல்.

 

ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.

 

வேட்டல் - யாகங்களைச் செய்தல்.

 

வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல். (யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).

 

ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல்; ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.

 

வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.

 

 

ஓத்து:

 

தொல்காப்பியம்  பொருளதிகாரம் அகத்திணை இயல் 31-வது சூத்திரம் ""உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான'' என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169-வது சூத்திரம் வருமாறு:

 

 

நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு

 

ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது

 

ஓத்து என மொழிப உயர்மொழிப்புலவர்

 

 

""ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோத்தல் போல, ஓர் இயலைச் சார்ந்த பொருள்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்'' என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே, அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.

 

 

கீழ்க்கணக்கு நூல்கள்:

 

""அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே'' என்று "இனியவை நாற்பது' நூலின் 7-வது பாடல் தெரிவிக்கிறது.

 

பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். ""இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை'' என்று இன்னா நாற்பது நூலின் 21-வது பாடல் குறிப்பிடுகிறது. ""வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது'' என்பது பொருள்.

 

""கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின் இழுக்கும் இழவும் தரும்'' - இது "ஏலாதி' என்ற நூலில் 62-வது பாடல்.இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.

 

""மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'' என்பது திருக்குறள். ""பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்'' என்பது பொருள்.

 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக, ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு.

 

தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார்

First Published : 15 Aug 2010 01:01:00 AM IST

tamil1.jpg
தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல்.

 

நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.

 

சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.

 

 

சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள்.

 

"நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.

 

தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924-ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.

 

வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை' அன்றுதான் நிறுவப்பட்டது.

 

பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.

 

அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை'.

 

அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.

 

அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.

 

மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.

 

நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.

 

அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.

 

மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.

 

""என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.

 

மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்' வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.

 

""என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி' என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு' செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).

 

மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.

 

சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.

 

பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.

 

"நாடகத் தந்தை' என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்' என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்' விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).

 

தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91-வது வயதில், 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

 

நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்

First Published : 22 Aug 2010 04:44:15 AM IST

21tm2.jpg
தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது? தொல்காப்பியம்  ரிக் வேதத்துக்கு முந்தையது!

 

கருத்து - 3

 

 

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் என்பவர் "இந்திய எழுத்தியல் வரலாறு', "ஐந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' என்கிற இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை என்பதை உறுதி செய்திருந்தார்.  ஐந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள் (ஐய் பஏஉ அஐசஈதஅ நஇஏஞஞக ஞஊ நஅசநஇதஐப எதஅஙஙஅதஐஅசந) என்ற, நூலில், ஐந்திரம் என்பது ஒரு சிந்தனைப்பள்ளியே தவிர அது ஒரு தனி மனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று என்றார். மேலும், ஐந்திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதிசெய்திருந்தார். இந்திய அறிஞர்கள் ஏ.சி.பர்னலின் கூற்றை ஒருதலையாகப் புரிந்துகொண்டு ஐந்திரம் என்பதைப் பாணினிக்கும் காலத்தால் முற்பட்ட சம்ஸ்கிருத நூலாகவே கருதிவிட்டனர்.

 

காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய  "கதாசரித சாகரம்' எனும் நூலில், வரருசிகாத்தியாயனர் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி. சிவன் அருளைப் பெற்று  குருகுலத்துக்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும், ஏழு நாள்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும், ஆத்திரமுற்ற சிவன், குருகுலம் பின்பற்றிய ஐந்திர நூல்களை எல்லாம் அழித்தான் என்றும் குறிப்பிடுகிறது.

 

எனவே, பனம்பாரனார் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல்காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படையில் என்பதும், அம் மெய்யியல் தருக்க முறையை உள்ளடக்கியது என்பதும் தெளிவு.

 

ரிக் வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம்.சுந்தர்ராஜ், ஐந்திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது ரிக் வேதத்துக்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார். ஐந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவு மரப்புக்குரியது. ஒருவேளை அதை இலக்கண நூலாகக் கருதினாலும் கூட அது ரிக் வேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே உண்மை. ரிக்வேதம் எழுதாக் கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுவந்தது. சம்ஸ்கிருதத்துக்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே, எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக்கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

 

நான்மறை

 

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந் நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெüடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வுகளால் மாற்றம் பெற்றுள்ளன. ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். மாகறல் கார்த்திகேயனார், நான்மறை என்பதற்கு "மூல மறை' எனப் பொருள் கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி

 

பனம்பாரனாரின் பாயிரம், அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் "மயக்கம் தராத மரபினை உடைய தமிழ் எழுத்து முறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது கவனத்துடன் ஆராயத்தக்கதாகும். வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்து முறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி.கோசாம்பி தம் நூலில் "கி.மு. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, தென்னிந்தியாவில், ரிக் வேத பாசுரங்கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப்புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ரிக்வேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது... ஆனால், பொதுவாக இது எழுத்து வடிவத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படவில்லை' எனக் குறிக்கிறார்.

 

ரிக்வேதம் கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி.கோசாம்பியின் கூற்றைப் பனம்பாரனாரின் "மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி' என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியும்?

 

வேதத்தை உச்சரிக்கும் முறை

 

அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அந்த உச்சரிப்பு முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத்துள்ளார்.

 

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து...(நூ-102)

 

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் (நூ-103)

 

இந் நூற்பாக்கள் இரண்டும் சம்ஸ்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் அந்நூற்பாக்களுக்கு "வேதத்தின் ஒலிப்புமுறை பொருள் தெரியா நிலைமை ஆகலின் அவற்றுக்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம், எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்து முறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகிறது.

 

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும்

 

வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்:

 

வேதக் கடவுள்களின் எண்ணிக்கை 33 என்பதை ரிக்வேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற்றின் வழியாகத் தோன்றிய பிரமாணங்களும் உறுதி செய்கின்றன. அவை: அம் முப்பத்தி மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

 

"உயிரும் உடம்புமாம்' எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை சுந்தர்ராஜ், தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

 

"க' எனும் மெய்யெழுத்து

 

ரிக்வேதக் கடவுள்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது "க' என்பதாகும். இக் கடவுளைப் பற்றிய வரலாறு தெரியாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுலசாங்கி ருத்தியாயன், ரிக்வேதகால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப்படும் "க' என்பது தமிழ் உயிர்மெய் எழுத்தான "க'வேயாகும். சங்க காலத்தில் "க' என்பது இவ்வாறு எழுதப்பட்டது. இவ்வடிவத்தையே மனித உருவிலிருக்கும் "க' வே என ரிக்வேதம் போற்றுவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

 

இந்திரனும் வருணனும்

 

ரிக்வேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்திரனும் வருணனும் ஆவர். இருவருள்ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும் மழைக் கடவுளாகவும் போற்றப்படுகிறான். ஏறத்தாழ தலைமைத் தெய்வமாக வணங்கப்படும் இந்திரன், ரிக்வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுகமாகித் திடீரெனக் காணாமல் போய்விடுகிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் பெரும் புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுவார்.

 

தொல்காப்பியர், இந்திரனையும் வருணனையும், மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்றுவார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது, மழைத் தெய்வமாக இந்திரனும், கடல் தெய்வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே ரிக்வேதமும் அவர்களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட ரிக்வேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர்களாகவே (ரிக்வேதம் முதல் மண்டலம் 174-1:7036:2) குறித்துள்ளதும் எண்ணத்தகும்.

 

ஆறு பருவங்கள்

 

ரிக்வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்ட ஆண்டுமுறை ஒன்றும், பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிடமிருந்து ரிக்வேதம் கடன் கொண்டது என்பதை ரிக்வேத ஆராய்ச்சியாளரான கிரிஃபித் உறுதி செய்துள்ளார். ரிக்வேதத்தில் பொருள் தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினி கோத்திரம் தாத்தாச்சாரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ரிக்வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான "ரி' தமிழின் சிறப்பெழுத்துகளில் ஒன்றான (ற) "றி' எனும் எழுத்தின் திரிபே என்பார் எம்.சுந்தர்ராஜ். ரிக்வேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும். இக் கருத்தை,

 

தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள்தாம் மாறுவேடம் அணிந்தோ அல்லது முகமூடி போட்டுக்கொண்டோ ரிக்வேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படையான சான்றுகளைக் கொண்டுள்ளோம்...

 

சம்ஸ்கிருத மொழியும் அதன் இலக்கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சம்ஸ்கிருதம் என்று அழைக்கிறோம். இந்த மொழியில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களே' என வரையறை செய்வார் எம்.சுந்தர்ராஜ்.

 

ரிக்வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக்கான காரணம், அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல்காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ் எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும்.

 

தொல்காப்பியத்தின் பழமை

 

ரிக்வேதம் முதன் முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டு, குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு.14-ஆம் நூற்றாண்டு எனவும் டி.டி.கோசாம்பி கூறுவதாலும், ரிக்வேதம், தொல்காப்பியர் கூறும் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந்துள்ளதாலும், தொல்காப்பியம் ரிக்வேதத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.

 

கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்ம சாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப்புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடு முழுதும் கொண்டு சென்றது. அந்த அமைப்பின் மூலவர் எண்ணிய கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ்வெண்ணியம் கி.மு.6-ஆம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்போ தொல்காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால், எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

 

எனவே, மெய்யியல், பண்பாட்டியல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, ரிக் வேதத்துக்கு மட்டுமல்ல, உலகில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்துக்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

 

"யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை!' என்று திருவாசகம் - திருச்சதகம் - கைமாறு கொடுத்தல் 9-ஆம் பாடலில் மாணிக்கவாசக சுவாமி குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது பட்டிமன்றம் என்றே வழங்குகின்றனர். பட்டிமண்டபமா? அல்லது பட்டிமன்றமா? எது சரியானது?

 

மணிவாசகப்பிரியா, சென்னை


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: தமிழனின் பெருமை!

First Published : 12 Aug 2010 01:13:38 AM IST

Last Updated : 13 Aug 2010 01:22:38 AM IST
editorialimg.jpg
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைத் தஞ்சையில் செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் நடத்துவது என முடிவு செய்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் களி(ளை)ப்பில் தஞ்சைப் பெரிய கோயில் மறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருந்த நேரத்தில், தமிழக அரசு இந்த விழாவை அறிவித்திருக்கிறது. இதற்காகத் தமிழக முதல்வரை தினமணி பாராட்டுகிறது.

 

ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

 

தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)

 

தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்.

 

ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.

 

ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.

 

எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?

 

இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.

 

108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில்

 

சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.

 

தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

 

ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கி.மு., 1ம் நூற்றாண்டின் பொருட்கள் பழநி ஆற்றங்கரையில் கண்டுபிடிப்பு

large_63498.jpg

பழநி: மானூர் அருகே கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட, வாழ்வியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூர் சண்முகநதி ஆற்றங்கரையில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தொப்பம்பட்டி தமிழாசிரியர் திருமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சுட்ட செம்மண்ணாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இது தொடர்பாக நாராயணமூர்த்தி கூறியதாவது:முன்னதாக இப்பகுதி பழனித்துரை, சத்தரப்புக்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு சங்க காலத்திற்கு முந்தைய வாழ்வியல் பொருட்களான, முதுமக்கள் தாழி, சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. பானை, குடுவையில் சிறிய வாய் பகுதியும், அகன்ற கொள்ளளவு உள்ள நடுப்பகுதியுடன் காணப்படுகின்றன. இவற்றில் வரையப்பட்டுள்ள நெற்கதிர் உருவங்கள், தாழியின் அமைப்பு, துணைக் குடுவைகளின் அமைவு முறையின் மூலம் கி.மு., 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளன.


இவை அனைத்தும் சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை. மேலும் 36 செ.மீ., நீளமும், 24 செ.மீ., அகலமும், எட்டு செ.மீ., தடிமனும் கொண்ட செங்கல்கள் கிடைத்துள்ளன. சில செங்கல்களில், அப்போதைய மனிதனின் கை விரல்களால் வரையப்பட்ட வரி போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவற்றின் நீள, அகல அளவுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆண்டை உறுதி செய்யலாம். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.



__________________
«First  <  15 6 7 8 9  >  Last»  | Page of 9  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard