ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.”
என்று விஜயின் இந்த தேர்தல் வெற்றியை மையமாக வைத்து ஒரு பச்சை பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார் நீலம் பண்பாட்டு மையம் தலைவர் திரு ரஞ்சித்…..
அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல ஊடகங்களில் தலித்துக்கள் 74 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் 25 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் அனைவருமே பொதுத்தொகுதியில் நின்று TVKவில் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று அடிப்படை ஆதாரமே இல்லாமல் ஒரு அவதூறு பரப்பரையை மேற்கொள்கிறார்கள்… தாவெக்காவில் வெற்றி பெற்ற தலித்துக்களில் 23 பேர் தனித் தொகுதி தான் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஒரே ஒருவர் மட்டும் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார்.. அந்த ஒருவரும் அடிப்படையில் அவருடைய அப்பா தலித் சமூகத்தைச் சார்ந்தவர் அம்மா முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் அவருடைய மனைவி நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்…
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.
தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.
கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும்,
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார்.
அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.. (குறிப்பாக ஆதரிச்சனா வில்லிவாக்கத்தில் நின்றதற்கு காரணம் அங்கு நாயுடு ரெட்டி ஓட்டு அதிகம்)
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலக தவமாக செயல்படுகிறவர் ரஞ்சித்…கரூரில் கொல்லப்பட்ட 41 பேரில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய மரணம் குறித்து வாயே திறக்காத இந்த ரஞ்சித் ஏன் கள்ள மவுனம் காத்தார்… விஜய்யின் உடைய மெத்தனப்போக்கு மீட்டுமித்தன்மை அநியாயமாக பல தலித்துகளை கரூரில் கொலை செய்திருக்கிறது அது குறித்து வாய் திறக்காத நீங்கள் இப்போது வந்து இது தலித்துகள் ஆட்சி என்று வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது.. அண்ணன் திருமாவை காலி செய்வதற்காக இந்த பகுஜன் பௌத்த கும்பலின் சதி வேலையை நிறுத்துங்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் சரி இப்போது விஜய் காலகட்டத்திலும் சரி தலித் மக்களின் வாக்குகளை இதுபோன்று போலி பிம்பத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த விதமான மேம்பாடும் அடைய விடாமல் பாதுகாக்கும் ஒரு குழு தலித் மக்களுக்குள்ளேயே இருந்து வருகிறது.. இது ஒரு வேதனையான உண்மை..
திமுகவை வீழ்த்தி வெற்றியடைவதற்காக இதே பொய் பரப்புரையை கரூர் சம்பவத்திலிருந்து தொடங்கி பல விடயங்களில் இந்த குழு பரப்பியது இப்போது வெற்றி பெற்றதற்கு பிறகும் இந்த புகை பரப்புரையை மேற்கொள்கிறது நாளை இந்த சமூகத்தில் ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு உரிய பொறுப்பை எடுக்காமல் அதற்கும் ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டி அமைப்பார்கள்…