New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மையான "மகாபாரதம்"


Guru

Status: Offline
Posts: 24603
Date:
உண்மையான "மகாபாரதம்"
Permalink  
 


#உண்மையான "மகாபாரதம்"
பச்சையம்மாவை காக்க, பச்சை தமிழர்களால் நடத்தப்பட்ட போர்...

தென் தமிழகத்தில் நடந்த மாபெரும் வரலாற்று உண்மை.

இதை தொடர்வதற்கு முன்...
ஒரு மந்திரத்தை சொன்ன உடன் மாட மாளிகைகள், ஆயுதங்கள், குழந்தை என திடீரென தோன்றுவது...

ஒரு தாயிடம் தன் மகன்கள் ஒரு கன்னியை ( பாஞ்சாலி) அழைத்துவந்திருப்பதாக கூறும்போது, அந்த தாயின் காதில் கனி என்று தவறாக கேட்க... உடனே அவர்"கனியை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பார்காமலே சொன்ன காரணத்தினால்...
ஒரே பெண்னை ஐந்து மகன்கள் மணப்பது...நெருப்பில் இருந்து பெண் பிறப்பது...பிறக்கும் குழந்தை இடிமுழக்த்துடன் கத்துவது...பிறக்கும் குழந்தை வயிற்றில் இருந்து வரும்போதே கவச குண்டலத்துடண் பிறப்பது,
இன்னும் பல அறுவறுகத்தக்க வகையில்நடைமுறை எதார்தத்திற்க்கு சற்றும் பொருந்தாத மடையர்கள் கூட நம்ப மறுக்கும் சமஸ்கிருத புராண கதைகளை ஆழமாக நம்பும் மணநலம் பாதிக்கப்பட்ட நபராக யாரேனும் இருந்தால்இந்த பதிவு அவர்களுக்கு ஏற்ற பதிவு அல்ல, மாறாக எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, அறிவார்ந்த சிந்தனனயுடைய நபர்கள் மட்டும் இந்த பதிவை தொடரலாம் வாருங்கள்....

மகாபாரதத்தை என்றவுடன்
இரண்டு வகையான பார்வை இருக்கக்கூடும்.

ஒன்று கடவுளின் பேரில் அதை அப்படியே நம்புபவர்கள்..
இரண்டு இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று மறுப்பவர்கள்...

நானும் இந்த இரண்டில்,
இரண்டாம் நபராகத்தான் இத்தனை காலம் இருந்து வந்தேன்...
அதற்க்கு காரணம் சமஸ்கிருத மகாபாரத புராணங்களில் இருக்கும் வண்டிவண்டியான புலுகு கதைகளே.

எதார்த்த நிலைக்கு சற்றும் பொருந்தாத கதைகள்.
அது எப்படி சாத்தியம் என்று அதை நம்புபவர்களிடம் கேட்டாள்...

அவர்களிடம் வரும் வெற்று பதில்
"அது அந்த காலம்" அல்லது "அதுதான் கடவுளின் சக்தி" என்றெல்லாம் வியாக்கியானம்...

சரி, ஏன் இப்படி சமஸ்கிருத காவியங்கள் யதார்த்த நிலைக்கு பொருந்தாத பல கதைகளுடன் இருக்கிறது..???அதற்க்கான தேவை என்ன...??

இதற்க்கான காரணம், ஒரு உண்மை வரலாற்றை மடைமாற்ற , இடம்மாற்றம் செய்து தனதாக்கிக்கொள்ள அதில் பல திரிவுகதைகளை தினித்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது..

யார் அவர்கள்?
நம் மண்ணின் இன்றளவும் பல அட்டூழியங்கள் நடக்க காரணமாக இருக்கும் வந்தேறி யூத வணிக சமூகம்...

120 கோடி மக்கள் தொகையுடைய இந்தியாவில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உள்ள அந்த வந்தேறி சமூகம் "நீதித்துறை, வங்கிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உயர்பதவிகள் என அனைத்து முக்கிய துறைகளிலும் 80% இடங்களை ஆக்கிரமித்து இந்த பூர்வகுடி மக்களை தனது கட்டுப்பாட்டில் இன்றளவும் ஆண்டு வருகின்றனர் யூத பிராமண மற்றும் பனியா கூட்டமே என்ற எதார்த்த நிலையின் புரிதலோடு ..

தென் தமிழகமான திருநெல்வேலி பகுதியில் தாமிரபரனி ஆற்றங்கரைக்கு "ஆதிச்சநல்லூர்" அருகாமையில் நடந்த உண்மையான மகாபாரத போரை பற்றி தெரிந்துகொள்வோம்...

அக்கால வரலாற்றின் கதாபாத்திர பெயர்கள் யாவும் அவர்களின் பட்டபெயரே அன்றி நிஜ பெயர்கள் அல்ல... அந்த பட்டபெயர்களையே வந்தேறி யூத பிராமணர்கள் தனது கதைக்கும் பயன்படுத்தி கொண்டனர் என்பதை அறிக...

யாருக்கும் யாருக்கும் போர்? :-
திருநெல்வேலி என்ற பெயரே முதன் முதலில் நெல்விவசாயம் தோன்றிய பகுதியில் , சுற்றியுள்ள காடுகளில் இருக்கும் கால்நடைகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க வேலி அமைத்து பாதுகாத்த வரலாற்றை குறிக்கிறது...

அக்காலத்தில் இலங்கையில் இருந்து குடியேரிய விவசாய குடிகளான பாண்டிய வம்சாவழி மன்னர்களான , 5 பாண்டியர்களும்...

மேற்கே இன்றய கேரள மேற்க்கு தொடர்ச்சியை மலைப்பகுதியில் அக்கால மலை மக்களான 100 குறவ மன்னர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரே மகாபாரதம்..
இங்கு இரண்டு தரப்பினரும் தமிழர்களே...

போருக்கான காரணம்:-
பொதுவாக விவசாய நிலங்கள் யாவும் காடுகளை கொளுத்தி அழித்து , அதை உழுது பண்படுத்திய பிறகே விவசாய நிலங்களாக மாற்ற முடியும்..

இதன் காரணமாகவே பாண்டியர்கள் விவசாயத்தை பெருக்க ஆற்றங்கரை டெல்டா பகுதிகளில் கனிசமான அளவு காடுகளை அழித்தனர்..

ஆனால் இயற்க்கையை இன்றளவும் பாழ்படுத்தாமல் வாழநினைக்கும் மலைமக்களான மேற்க்குதொடர்ச்சிமலை குறவர்கள்..

காடுகள் அழிக்கப்படுவதை விரும்பவில்லை.எனவே தமிழ் பகைவர் ஒருவனின் தூண்டுதலின் பெயரில் பான்டியர்களுடன் போர்புரிய நினைத்தனர் குறவர்கள்...

இருதரப்பும் தமிழர்கள், அப்படி இருக்கையில் யார் தூண்டினான்..?

சாட்சாத் வணிகம் சேய்ய கடல்மார்கமாக (கொல்லம் துறைமுகம்) வந்த யூத வந்தேறி "#சகுனியே" இந்த போர் உருவாக கலகம் செய்து கௌரவர்களை தூண்டிவிட்ட வில்லன்.

பாண்டியர்கள் மற்றும் குரவர்கள் இருதறப்பிற்க்கும் போருக்கான அவரவர் தறப்பு நியாயம் இருக்கிறது.. ஆனால், பொதுவாக வெற்றிபெற்றவர்களே அதன் வரலாற்றை எழுதுவதால் , தனது எதிர் தரப்பை கெட்டவர்களாக சித்தரிப்பதே வழமை..

அதனால் 100 கௌரவர்களை கெட்டவர்களாக சித்தரித்து மகாபாரதம் எழுதப்பட்டது..
அதை பிற்்காலத்தில் திரித்து , பல ஆபாச கதைகளை புகுத்தி குப்தர் காலத்தில் எழுதியவர்கள், வந்தேறி யூத பிராமணர்கள்.

முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது பெயர்கள்:-

#கௌரவர்கள் - 100 மலைநாட்டு குறவர்களே கௌரவர்கள் என்றழைக்கப்பட்டனர். மேற்க்கு தொடர்ச்சி மலையான இன்றய கேரள பகுதியில் வாழ்ந்தவர்கள்.
இங்கு கு ஒலி க ஒலியாக மாறும் என்பதற்குகுமரன் கௌமாரம் ஆனது போல,புத்தம் பௌத்தம் ஆனது போல,சுகம் சௌக்கியம் ஆனது போல,குறவர்கள் கௌரவர்கள் என்றானது.

#துரியோதனன் - (துர்+ஓதனன்) அதாவது தீய அல்லது அநீதியான சொர்களை பேசுபவன். ( இது பாண்டவர் தரப்பில் பொருள்கொள்ளப்பட்டது ஏனென்றால் சகுனியின் பேச்சை கேட்டு விவசாயத்தை அழிக்க போர் தொடுக்க நினைத்ததால் ).
நூறு மலைநாடுகளை சேர்ந்த மன்னர்கள் அனைவரையும் துரியோதனர்கள் என்றே அழைக்கப்பட்டனர். கேரளாவில் இன்றளவும் 100 மலை நாடுகளில் 100 துரியோதனன் கோவில்கள் காணப்படுகின்றன... இந்தியாவில் வேறெங்கும் இதுபோல் துரியோதனனுக்கு கோவில் இல்லை என்பதை அறிக.

#திருதிராட்ஷன் :- திரட்டன் என்ற சொல்லே மறுவி திராட்டன் , திராட்ஷன் என்றானது. இங்கு திரு என்பது மரியாதைக்குரிய சொல்...
எனவே திரு+திராட்ஷன் = திருதிராட்ஷன் என்பதாகும்..
அதாவது 100 மலைநாட்டு மன்னர்களை போருக்காக ஒன்றாக திரட்டியவன் என்று பொருள்.

#சகுனி :- சம்+குனி = சம்குனி, சகுனி என்றானது.
தனது சூழ்ச்சியால் அனைவரையும்(சம்) தலைகுனிய வைத்தவன் என்பது பொருள்.. கந்தகார் பகுதியில் இருந்து கேரள கொல்லம் துறைமுகம் வழியாக வணிகம் செய்ய வந்த யூதன்.

பொதுவாக யூதர்களின் செயல்களாவன, பொய் சொல்லுதல், கலகம் ஏற்ப்படுத்தி மக்களை பிரித்தாளுதல் , தான் நினைத்த காரியத்தை அடைய பெண்களை போதை பொருளாக பயன்படுத்துதல், தானே கடவுளுக்கு நெருக்கமான பிறவி மற்றவர்கள் ஆடுமாடுகள் போன்று கீழானவர்கள் ( கோயும்) என்று கருதுதல் போன்றவை...

தமிழ் உழவு குடிகளான அபார வளர்ச்சியை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத யூத சகுனி, திருதிராட்ஷனுக்கு தனது தங்கையை "காந்தாரி" யை மணமுடித்து.. கலகம் செய்து பாண்டியர்கள் மீதான பகைமையை வளர்த்து போர் புரிய காரணமானவன்.

காந்தாரி:- காந்த தன்மை கொண்ட ஆம்பர் எனும் அரக்கு கிடைக்கும் இடத்தில் இருந்து வந்தவள். வணிக நோக்கத்தில் வத்தேறிய சகுனியால் அழைத்துவரப்பட்டவள் யூதபெண்.தனது சதிசெயலுக்கு 100 மலைநாட்டு மன்னர்களில் ஒருவரான திருதிராட்ஷனுக்கு மணமுடித்து வைத்தான்.

#பாண்டவர்கள் : - ஐந்து மருதநிலப்பாண்டிய மன்னர்களே பாண்டவர்கள். இலங்கை விவசாய குடிகளான இராவணனின் வம்சாவழியினர். முதன் முதலில் வண்டி சக்கரத்தை கண்டறிந்து அதை விவசாயத்திற்க்கு பயன்படுத்தியதால் வண்டி என்ற சொல்லை வைத்தே வண்டியர் பிறகு பாண்டியர் என்றானது.
அதையே "பாண்டி" என்றால் விவசாயம் என்று பொருள்கொண்டனர்.
லகிமம் மகிமம் போன்ற அட்டமா சித்திகளில் சிலவற்றை கற்றிந்தவர்கள்.

#திரவ்பதி ;-
தரை+பதி = தரைப்பதி , தரை என்பதை ஆரியர்கள் உச்சரிப்பில் த்ரபதி என்றும் பிறகு அது மறுவி திரவ்பதி ( அதாவது விளைநிலம் என்று பொருள்) . இன்னொரு பெயரான ஐந்து+ஆலி அதாவது ஐந்தாலி என்பதை வடவரால் பாஞ்சாலி என்றழைக்கப்படும் திரவ்பதி ஐந்து பாண்டியர்களுக்கு சொந்தமான "விவசாய நிலத்தையே" குறிக்கும்.

இது ஒரு நிஜ மனித கதாப்பாத்திரம் அல்ல.பாண்டியர்கள் தனது விவசாய நிலத்தை பெண் குழந்தைகள் பெற்று காப்பதுபோல் , தன்னில் உணவை விளைவித்தது மக்களை காக்கும் விளைநிலத்தை " பச்சையம்மா" என்ற பெண் தெய்வமாக வழிபட்டனர். அதையே வந்தேறி யூதர்கள் அவர்களது மனைவியாக பாஞ்சாலி என சித்தரித்தனர்.

பாண்டியர்களின் பிற்க்கால தலைநகரமான மதுரையில் பச்சை கிளியுடன் காட்சியளிக்கும் மீனாட்சியும் விவசாய தெய்வமான பச்சையம்மாவின் மாற்று வடிவமே , பச்சை கிளி அவள் விவசாயத்தை குறிக்கும் தேய்வம் என்பதை குறிக்க வைக்கப்பட்ட அடையாளம் . (பாண்டியர்களின் மீன் கொடியால், பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியை வாழவைப்பவல் என்ற பொருளில் மீனாட்சி எனப்பட்டால் ).

அர்ஜுனன் :-
ஆரம்+அச்சு = ஆரச்சு ( ஆரம் என்றால் வட்டத்தின் ஒரு பகுதி , அதாவது வலைந்த வில்லினை குறிக்கும். அம்பை வில்லின் அச்சில் இருந்து எய்துபவன் ஆரச்சுனன் எனும் அர்ஜுனன்.
5 பாண்டிய மன்னர்களுள் ஒருவன்.
புராண கதாப்பாத்திரங்களில் யாருடைய வில் அம்பிற்க்கும் இல்லாத பெயர் அர்ஜுனனின் வில் அம்பிற்க்கு உண்டு.

அது "காண்டீபம்" என்பது
கான+தீபம் = கானதீபம் மறுவி காண்டீபம் எனப்பட்டது.
கானம் என்றால் காடு , தீபம் என்றால் தீ,அதாவது விவசாய நிலங்களை உருவாக்க காட்டின் நடுவே உள்ள உயரமான பகுதி அல்லது குன்றுகளின் மீது நின்று தனது அம்பில் தீயிட்டு, குன்றை சுற்றியுள்ள அனைத்து பக்கங்களிலும் எய்து, காட்டை கொளுத்தி விவசாய நிலங்களை உருவாக்கியதால் அர்ஜுனனின் வில்லிற்க்கு காண்டீபம் என்ற அடைமொழி பெயர் வந்தது.

காட்டை கொளுத்தி விவசாய நிலமான திரவ்வதியை உருவாக்கியதால்.
சம்ஸ்கிருத மகாபாரதத்திலும் அர்ஜுனன் வில்வித்தையின் மூலமாகவே திரவ்பதியை வெற்றி பரிசாக வென்றதாக கதைகட்டினர் யூத வந்தேறிகள்...

பாண்டியர்கள் டெல்டா பகுதியில் ( ஆற்றின் கழிமுகபகுதியில் ) வாழ்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் ஒரே நேரத்தில் மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் சிறந்து விளங்கினார்.. அதனாலெயே பாண்டியர்கள் தனது கொடியில் மீனை சின்மாக வைத்துள்ளனர் என்பதும் சம்ஸ்கிருத புராணத்தில் அர்ஜுனன் மீனை இலக்காக வைத்த போட்டியில் வென்றே திரவ்பதியை அடைந்ததாக காட்சி வருகிறது என்பதையும் அறிக.

மகாபாரதத்தின் அனைத்து கதாபாத்திரத்தையும் இங்கு விரவரித்தால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் இங்கு மற்றுமொரு முக்கிய காதாபத்திரத்துடன் மகாபாரத நிகழ்வை முடித்துக் கொள்கிறேன்..

#கருத்திணன்_எனும்_கிருட்டிணன் (கிருஷ்ணன்):-
தமிழகத்தின் தென்பகுதி கிழக்கே டெல்டா பகுதியாகவும். மேற்க்கே கிழக்கு தொடர்ச்சி மலைகளும் உள்ள நில அமைப்பு.. கிழக்கு டெல்டா பகுதியை விவசாய குடிகளான பாண்டியர்களும் மேற்க்கு தொடர்ச்சி மலைபகுதியை மலைக்குடிகளான குரவர்களும் ஆண்டு வந்தனர்.

இந்த இரண்டு நிலப்பரப்பிற்க்கும் இடையே அகன்ற காட்டுப்பகுதியில் மேய்ச்சல் சமூகமான மாடுகளை மேய்க்கும் ஆயர்குடிகளும்,
மற்றும் ஆடுகளை மேய்க்கும் கோனார் குடிகளும் வாழ்ந்துவந்தனர் ‌. அதில் ஆயர்குடிகளின் தலைவனே கருத்தினன் எனும் கிருஷ்ணன்..
கருத்தினன் என்ற சொல்லே கிருத்திணன் , கிருட்டிணன் பிறகு சமஸ்கிருத உச்சரிப்பில் கிருஷ்ணன் எனப்பட்டார்...
உயர்ந்த கருத்துக்களை சொல்பவர் ஆதலால் அவரை கருத்திணன் என்றனர்.. இதற்க்கு மற்றுமொரு உதாரணம் இதேபோன்று இஸ்ரேலில் தம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்கிய கருத்தர் பிறகு கிருத்தர் , கிருஸ்து என அழைக்கப்பட்டார்..

மேற்க்கு மலைவாழ் மக்களுக்கும், கிழக்கே விவசாய குடிகளுக்கும் இடையே உள்ள காட்டுப்பகுதியில் வாழ்ந்ததால் அவர்களை " இடையர் " என்றழைக்கப்பட்டனர்.ஆயர் மற்றும் கோனார்களின் இடையர் என்ற பட்டம் தென்னிந்திய நில அமைப்பிற்க்கு மட்டுமே பொருந்தும்.

இங்கு மாடு ஆடு மேய்க்கும் இடையர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தாலேயே ஆடு மாடுகளை அடைக்கும் "பட்டி" என்ற பெயர் தாங்கிய ஊர்கள் திண்டுக்கல் முதல் மதுரை, தென்காசி வரை உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஆயர்குடி கிருஷ்ணன் வாழ்ந்த பகுதியாக கருதப்படும் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி பால் மற்றும் பால் பொருட்களுக்கு இன்றளவும் இந்தியாவிலேயே பெயர்போன பகுதி என்பதும் அறிக
கிருஷ்ணன் முறைப்படி 18 ஆண்டுகள் குருகுலம் பயின்றதை கோகுலம் என்றும், "யா' என்றால் பசு மற்றும் கோதை என்றால் பிள்ளை என்பதை யா+கோதை = யாகோதை மறுவி யசோதை யின் மைந்தன் என்றும் வரலாற்றில் திரிந்தனர் யூத வந்தேறிகள்..
அதோடு 16000 பசுக்களுக்கு சொந்தகாரர் என்பதை 16 ஆயிரம் கோபியர்களுடன் சல்லாபித்தார் என்று கதைகட்டினர்.

(குறிப்பு;- வட இந்திய யாதவர்களுக்கும் தென்னிந்திய ஆயர்குடிகளான இடையர் கோனார்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வட இந்திய யாதவர்கள் "யாடு"செம்பரியாடு மெய்கும் நாடோடி குடிகள்.. பிற்காலத்தில் கைபர் போலன் கனவாய் வழியாக வந்த வந்தேறி ஆரியகூட்டத்துடன் கலப்பு ஏற்ப்பட்ட கலப்பினமாக அறியப்படுகிறது.

தமிழர்களையும் யாதவர் என்ற அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலமாக தமிழர்களின் அரசியல் அதிகாரம் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை பிடுங்கும் செயலாகும் ).

ஆயர்குடிகளின் வழக்கப்படி தனது பெண்னை மனம்முடிக்க , வீரம் செறிந்த ஆணை மணமகனாக தேர்ந்தெடுக்கும் வழமையாக ஏருதழுவுதல் அதாவது காளையை அடக்கும் போட்டியில் வெற்றி பெரும் ஆடவரில் விரும்பியவர்களுக்கு தனது மகளை மணமுடித்து வைத்தனர்.

பிற்காலத்தில் காளைகளின் கொம்புகளில் சலசலவெனும் நானயங்களை பரிசுபொருளாக கட்டிவிடும் வழக்கம் ஏற்ப்பட்டதால் அது ஜல்லிக்கட்டு எனப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான அலங்காநல்லூரும் கிருஷ்ணர் வாழ்ந்ததாக கருதப்படும் அக்கால காட்டுபகுதியான திண்டுக்கல் மதுரை இடைப்பட்ட பகுதியில் இருப்பது நிதர்சனமான உண்மை.

இந்த போரை பொருத்தவரை இடையரான கிருஷ்ணன் இரண்டு தரப்பினரிடையேயும் முதலில் நட்புனர்வு பாராட்ட நடுநிலை வகித்தாலும். பிறகு பாண்டியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். அதற்க்கு காரணம், மாடுகளை மேய்க்கும் ஆயர்களுக்கு விவசாய நிலங்களால் எந்த பாதிப்பும் இல்லாததோடு , விவசாய உபரி பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாகவும், விவசாயம் செய்ய மாடுகளின் பயன்பாடு என ஒன்றை ஒன்று சார்ந்து அமைந்தது.

இதற்க்கு மேலும் சான்றாக, போருக்கு பின்னர் கிருஷ்ணரின் சகோதரர் பலராமன் பாண்டியர்களிடம் இருந்து விவசாயம் கற்று உழவை மேற்கொண்டதால் அவர் ஏர் களப்பையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

ஆனால் இடையர்களின் மற்றொரு பிரிவான வல்லாடு மேய்க்கும் கோனார்கள். காடுகள் அழிவதை விரும்பவில்லை. ஏனென்றால் காடுகள் அழிந்தால் ஆடுகளுக்கான தீவனம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் போரில் கௌரவர்களை ஆதரித்து நின்றனர்.

இவர்கள் அடிக்கடி தனது ஆடுகளை விட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் ,அதாவது அடிக்கடி கோளாறு செய்ததால், கோனார் என்ற பெயரையே இடைஞ்சலுக்கான சொல்லாடலாக கோளாறு என்று பேச்சு வழக்தில் வந்தது.

இந்த கோனார் குடிகளை, அவர்கள் மேய்க்கும் வல்லாடுகளை அடையாளமாககொண்டு மகாபாரத "கர்ணன்" என்ற கார்பனை பாத்திரத்தை சித்தரித்னர் யூத பிராமணர்கள்.

இங்கு வல்லாடுகள் கழுத்தில் இருக்கும் குண்டலத்தையும் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான் என்பதையும் ஒப்புமை செய்துகொள்க.

அதோடு ஆடு தன் அனைத்து உறுப்புக்களையும் மனிதனுக்கு கொடையளிக்கிறது என்பதும் கர்ணன் கொடைக்கு பெயர்போனவன் என்பதுடன் ஒப்புமை செய்க.

யூத பிராமணர்கள் தனது வருங்கால சந்ததிகளுக்கு உண்மை வரலாற்றை ரகசியமாக கடத்த, இது போன்ற சமிக்ஞைகள் மூலமாக கதையை கட்டமைத்து கடத்துவர் என்பதை அறிக.

கரம்+அன் = கரணன் மறுவி கர்ணன் இங்கு கரம் என்றால் கரங்களால் வழங்கப்படும் கொடையை குறித்த சொல். கரம் என்றால் கொடை , அன் என்றால் ஆண் விகுதி, கர்ணன் என்றால் கொடையளிப்பவன் என்று பொருள்.

இவ்வாறு மேற்க்கு தெடர்ச்சி மலைகுடிகளான கௌரவர் எனும் 100 குறரவ மன்னர்களுக்கும்..
கிழக்கு விவசாய குடிகளான 5 பாண்டிய மன்னர்களுக்கும் விவசாயம் காக்க ஏற்ப்பட்ட போரே மகாபாரதம்.

இதில் படை என்னிக்கையளவில் பாண்டியர்கள் குறைவானர்களாக இருந்தாலும். அவர்கள் போரில் வெற்றிபெற காரணம். இராவண வம்சாவழிகளாகிய அவர்களிடம் வழிவழியாக இருந்த அமானுட சக்தியில் தேர்ச்சிபெற்ற சித்த மரபும்..

அதேபோன்று குருகுல கல்வி மூலம் அமானுட சக்திகளை பெற்ற தீர்கதரிசி கருத்திணன் எனப்படும் கிருஷ்ணன் இவர்களுக்கு உதவியமையால் பாண்டியர்கள் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது.

விவசாயம் காக்க நடந்த போரில் உழவுகுடிகலான பாண்டியர்கள் வெற்றிபெற்றதின் வெற்றி கொண்டாட்டமே உழவு பண்டிகையான "பொங்கல் பண்டிகை".

இதை திராவிட பொங்கல் என்று மடைமாற்றம் செய்ய நினைப்பர் திராவிட தெலுங்கு கூட்டங்கள்..

போர் நடந்ததாக கருதப்படும் இடம் திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதி என்றும்.

அங்கு இன்றும் 5 பாண்டியர்களின் சமாதி இருப்பதாக கருதப்படும் பாண்டியராஜன் கோவில் இருப்பதும். அங்குதான் இந்தியாவின் வேறெங்கும் இல்லாத மிகப்பெரிய ஆதிகால இடுகாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது..

இப்போது புறியும் இந்த ஆரிய திராவிட அய்யோக்கியர்களின் ஆட்சிகள் ஏன் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளின் அகழ்வாராய்ச்சியில் ஓரவஞ்சனை செய்கிறது என்று..

இறுதியாக..மகாபாரதம் தென் தமிழகத்தில்தான் நடந்து என்பதற்கு சான்றாக..
தமிழகத்தில் மட்டுமே திரவ்பதி அம்மன் கோவில்கள் பரவலாக காணப்படுகிறது என்பதும், இங்குமட்டுமே பதினெட்டு நாட்கள் கொண்ட திருவிழா திரவ்பதி அம்மன் கோவில்களில் நடத்தப்படுகிறது என்பதும். மேலும் 1 வாரம் பாரத தெருகூத்துக்கள் நடத்தப்படுகிறது என்பதையும் அறிக.

பாண்டியர்கள் காடுகளை கொளுத்திய பின்னர், தகதகவெனும் நெருப்பு கனலில் மக்கள் நடந்து சென்று கரிகட்டைகள் மற்றும் இதற பொருட்களை அப்புறப்படுத்தி , விவசாய நிலமான பச்சையம்மா எனப்படும் திரவ்பதியை உருவாக்கியதால். இன்றளவும் திரவ்பதி அம்மன் கோவில்களில் அதை நினைவுபடுத்தும் வகையில் "தீமிதி" திருவிழா நடத்தப்படுகிறது என்பதை உணருக.

தமிழர்கள் கடைபிடிக்கும் அனைத்து பழக்க வழக்கங்கள் மற்றும் பன்பாடு கலாச்சாரத்திர்க்கு பின்னால் ஒரு வழுவான வரலாற்று அறிவியல் காரணிகள் உள்ளது என்பதை உணர்ந்து..
ஆரிய ஆபாச புராணங்களையும்
திராவிட போலி பகுத்தறிவு பிரச்சாரங்களையும் தவிர்த்து...
தமிழரின் பெருமையையும் , நம் முன்னோர்களின் மெய்யியலை மீட்போம்

தமிழ்குடிகளாக ஒன்றிணைவோம்
"தமிழ் சிந்தனையாளர் சமூகதளம்" 💪



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard