"ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.
என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி K.M. பாலசுப்பிரமணயம்மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். " - தோழர் பா.ஜீவானந்தம். ~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~ H ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,
"அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது. இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:
வெளியிட்டவர் என்பதற்காகஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.
அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி.தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை.சர்க்கார் அழிவ நடவடிக்கையைக்கண்டு ஈவேரா மிரண்டார்.
சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள்தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர்.ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.
என்னை மானங்கெட்டத்தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா, K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.
''பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.
தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.
பெரியார் சிறையிலிருந்த சமயத்தில் தோழர்.ஜீவா புரட்சி இதழில் எழுத ஆரம்பித்திருந்தார்.. பின், மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் புரட்சி ஏட்டில் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கும் (ஆசிரியர் என்ற முறையில்) , மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சொன்னபடி ஈ.வெ.கி-யும் ஜீவா அவர்களும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். முதலில் மறுத்த ஜீவா,.கட்சி சொன்னதன் காரணமாக ஜீவாவும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானார். இதுதான் “கடித” விசயத்தில் நடந்தது. இதில் பெரியார் கைதாகவே இல்லை.
பெரியார் தனது அண்ணனை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னது மட்டுமே உண்மை. ஈ.வெ.கி & ஜீவா கொடுத்த மன்னிப்புக் கடிதம் செய்தித் துணுக்காக குடி அரசில் இருக்கிறது.
“நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும்.” – குடி அரசு செய்தித் துணுக்கு 24.03.1935
ஜீவா சமதர்மம் என்ற இதழை ஆரம்பித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தற்கு விளக்கம் அளித்தார். இது தேவையில்லா மனக்கசப்பை ஏற்படுத்தும் எனக் கருதிய பெரியார், இந்தக் கடிதத்திற்கு தானே பொறுப்பு என்றார்.
31.03.1935 குடி அரசு தலையங்கத்தில் இது பற்றி “எனது அறிக்கையின் விளக்கம்” என்றத் தலைப்பில் விரிவாக எழுதினர்.
“உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீவா. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.” – குடி அரசு தலையங்கம் 31.03.1935
"ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.
என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி K.M. பாலசுப்பிரமணயம்மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். " - தோழர் பா.ஜீவானந்தம். ~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~ H ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,
"அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது. இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:
வெளியிட்டவர் என்பதற்காகஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.
அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி.தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை.சர்க்கார் அழிவ நடவடிக்கையைக்கண்டு ஈவேரா மிரண்டார்.
சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள்தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர்.ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.
என்னை மானங்கெட்டத்தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா, K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.
''பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.
தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.
1) ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் - பின்னர் சமதர்ம விரோதிகளான R K சண்முகம் செட்டியார், ஏ ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈவேரா. 2) ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று புகழ்ந்தார் ஈவேரா. 3) லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்கள் எல்லாம் ஒழிய வேண்டும் சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக் குலாவினார் ஈவேரா. 4) மதங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று விருது நகர் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார் ஈவேரா! 5) திருநெல்வேலி மாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி, அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தர பாரதியை ஆதரித்து 'குடியரசில்' தலையங்கம் எழுதினார் ஈவேரா! ("ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம் - சந்தியா பதிப்பகம் - பக்கம் 25 -29) -----'-----------'--------------'-----------'----- நான் மேலே காட்டியிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர் ப ஜீவானந்தம் அவர்கள், ஈவேரா வைப் புத்தகம் முழுக்கக் கிழித்துத் தொங்க விட்டிருப்பதில் சிறிய சாம்பிள்தான். என்னுடைய கவலையே கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு "பாலன் இல்லத்தின்" மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்! பாவம் வீதி வீதி யாக உண்டியல் குலுக்கி சேர்த்த மணத்தில் கட்டியதாகக் கூறிக் கொள்கிறார்கள்!! நன்றி.Abvp. chandran.
தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். - தந்தை பெரியார் விடுதலை(27.11.43)
ஒடுக்கப்பட்டவர்களை நாராயணகுரு போன்ற பெரியோர்கள் தோன்றி அவர்கள் வாழ்வில் மேம்படுத்தினார்கள்!
தமிழகத்தின் ஈவெரா போன்று சண்டியர்த்தனம், வெறுப்பு என்று ஒரு சமூகத்தின் மனதில் வெறுப்பியலை நிலைநிறுத்தவில்லை.
தமிழ்பேசுவோர் எங்கு வசித்தாலும் உள்ளுக்குள்ளே ஈவெரா சொல்லித்தந்த வெறுப்பியல் முன்னெடுத்துச்செல்ல ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு எங்கிருந்தாலும் ஒற்றுமையின்றி ஒன்பது சங்கங்கள் வைத்துக்கொண்டு தமிழர் பாரம்பரியம் என்பதே ஒற்றுமையின்றி இருப்பதே என்பதை நிறுவப்பட்டு இருக்கும் உண்மை. கடந்த சில நூற்றாண்டுகளில் உலக வரலாற்றை உற்று நோக்கினால் எளியவனை வலியவன் சமூகத்தில் இன, தேச பேதமின்றி எல்லா பிரதேசங்களிலும் நடந்தேறி இருக்கிறது. உலகில் எல்லோரும் தத்தம் சமூக வரலாற்றில் நிகழ்ந்த புண்ணைச் சொறியாமல் ஆறவிட்டு ஒட்டுமொத்தமாக முன்னேறி வளர்ந்து ஆக்கமாக இருக்கிறார்கள். பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுப் புண்ணைச் சொறிந்து சொறிந்து இன்னமும் ஆறவிடாமல் சமூகத்தையே இன்னமும் இன்பெக்டட் சமூகமாகவே மனதளவில் வைத்திருக்கும் சித்தாந்தம் ஈவெரா சொன்னது. திருக்குறள் போன்ற பல்வேறு இலக்கியங்களை மலம் என்று பழித்திடமுனைந்தது காட்டுமிராண்டித்தனம். மொழிசார் உடனடிப் பொருளாதாரப் பயன்பாடு என்கிற அளவில் 100% தமிழ்மொழி மட்டுமே அறிந்திருந்தால் பொருளீட்டுவதில் உயரம் தொடமுடியாதுதான்! ஆனால் இன்றைக்கும் திருக்குறள் படிப்பதால் பயனடைகிறேன். தமிழிலக்கியமான திருக்குறளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனிதனாக என்னைச் செம்மையாக்குகிறது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை 100% படித்து புரிந்து பயனடைவதில் பெருமை மட்டுமே கொள்கிறேன். ஈவெரா தெளிவு ஏதும் இன்றிச் செய்த பிராமண எதிர்ப்பு, இந்துக்கடவுள் எதிர்ப்பு, இந்துமத இதிகாச இலக்கிய எதிர்ப்பு, தமிழ் மொழி, தமிழிலக்கிய குறைகூறல் என்பதில் எதனால் ஓரளவு மாற்றம் வந்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியாததால் ஈவெராவின் ஆதரவாளர்கள் அப்படியே கதம்பமாக ஈவெரா செய்தவற்றைச் செய்யத் தலைப்படுகிறார்கள். உண்மையாக 1940களுக்குப்பின் உலக, இந்திய, தமிழ்ச்சமூகத்தில் ஆளாதிக்கச் சிந்தனையில் சரிவு ஏற்படக் காரணம் உலகப் போர்களுக்குப் பின் ஆளாதிக்கம் செய்வதை உலகம் முழுவதும் பரப்பிய இங்கிலாந்து, ஐரோப்பியர்கள் ஜெர்மெனி, ஜப்பான் போன்ற நாடுகள் மிகக் கடுமையாக இரண்டாம் உலகபோரினால் பாதிப்புக்கு உட்பட்டு செயல் குறுக்கம் அடைந்ததே! ஈவெராவின் செயல்களால் ஒருசில பயன்பாடுகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிட்டியிருக்கின்றன என்ற அளவில் ஈவெராவுக்கு மரியாதை காட்டினால் உண்மையாகவும்,வெகுதியானோர்க்கு ஏற்புடையதாகவும் இருக்கும். அதைவிடுத்து ஈவெரா வாயில் இருந்து உதிர்த்தது எல்லாமே புனிதம் என்று தலைப்படுவதும் அப்படி அவுட் ரைட்டாக ஈவெராவின் கருத்துக்கள் அனைத்தையும் புனிதமாக ஏற்க யாரும் மறுத்தால் அவரது தமிழர் ஐடெண்டிடியில் குறைகாணும் போக்கு என்பது போங்குத்தனமான பகுத்தறிவு!
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்" "வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி" "தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம். "தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு?. தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்." "இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்." - பெரியார்
காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்தி கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல. விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டில் வந்து அதை செய்து கொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?" ஈவெராவாதிகள் நாக்கை புடுங்கி கொள்வதுபோல் கேட்கப்பட்ட, இந்த கேள்விக்கு என்ன பதில் உள்ளது ஈவெராவாதிகளிடம்.. "பணம் சம்பாதிப்பது தானய்யா உங்கள் நோக்கம்" என்றால், என்ன சொல்வார்கள் "இறை நம்பிக்கையாளர்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். அதனால் நாங்கள் எங்கள் இடத்தை அவர்களுக்கு அனுமதிக்கிறோம்" என்று நொண்டி சாக்கு சொல்வார்கள். "கடவுளை பரப்புபவன் அயோக்கியன், காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு, அதை பரப்ப உன் இடத்தையே அனுமதித்தால் "நீங்கள் தானே முதல் அயோக்கியன், முட்டாள்".
"மதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவர்!" என்கிற பி.ஜெய்னுலாபிதீன் பேச்சுக்கு ஈவெராவாதிகள் என்ன கதை சொல்கிறார்கள் என்றால், "ஈவெராமசாமி – அன்றைய தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர்" என்று. அது உண்மையா? அத்தகைய பணக்கார ஈவெராமசாமி ஏன் இப்படி பிச்சை எடுத்தார். ஈவெராமசாமி, 'எங்கள் பாடு' என்கிற தலைப்பில் – தாங்கள் நன்கொடை பெறபட்ட பாட்டை விவரிக்கிறார். "இந்தச் சிறு தொகைக்கு நானும், தோழர் பாண்டியன், நாயகம், ராமசாமி, வாலகுருவா ரெட்டியார் ஆகியவர்கள் இரண்டு தடவை இந்த ஊருக்கு வந்து விட்டோம். வந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம். எங்களால் தோழர் ஈஸ்வரப் பிள்ளைவாளுக்கும் எவ்வளவு கஷ்டம். முன் தடவை வந்திருந்தபோது நாங்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை. நாங்கள் வந்த நாள் பகலில் 3 மணிக்குச் சாப்பிட்டோம். பஸ்ஸில் பகல் பிரயாணத்தில் 3,4 மணி நேரம் வெயிலில் அவஸ்த்தைப்பட்டோம். இராத்திரி பட்டினி கிடந்தோம்."என்று நீண்ட கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார் – குடி அரசு 7.6.1936,
இப்படியெல்லாம் ஒருவனிடம் நன்கொடை பெறுகிறார்கள்.. அப்படி நன்கொடை கொடுத்தவன் – பின்னாளில் ஒரு அயோக்கியதனம் செய்தால் கண்டிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். அதையும் நாம் சொல்லவில்லை. "மனச்சான்றுக்கு மாறாகப் போகாமை" என்கிற தலைப்பில் அண்ணாவின் மகன் அண்ணா பரிமளம் எழுதிய கட்டுரை சொல்கிறது.. 1941-ஆம் ஆண்டில், இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்றவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.
அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது. யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான். அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான்.
நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள், எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள்.
அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள். மனச்சான்றுக்கு மாறாக போகக்கூடாது என்பதிலே அண்ணா அவர்கள் எவ்வளவு அழுத்தமாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு, இது சீரியதொரு எடுத்துக்காட்டாகும். (மன்றம்: 15.06.1956)
அண்ணா பரிமளம் பொய் சொல்கிறார் என சொல்வார்களா? அப்படியும் சொல்ல முடியாதே. பல நேரங்களில் அண்ணா பரிமளம் கூறியதை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக போட்டவர்கள் தானே திராவிடர் கழக பெருந்தலைகள். அதனால், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கும் திராவிடர் கழக பெருந்தலைகள் வாய் திறக்குமா..
எப்படி திறக்கும்.. அது தான் பி.ஜெய்னுலாபிதீன் விஷயத்தில் இறுக மூடி கொண்டுள்ளது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:”திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்.”அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்யச் சதிசெய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும் ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதிமன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.