New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு வரலாறு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: இயேசு வரலாறு
Permalink Closed


 இயேசு வரலாறு 35 : லாசரின் உயிர்ப்பும், சக்கேயுவின் மனமாற்றமும்

இலாசரே… வெளியே வா

stdas0376

இயேசுவுக்கு அழைப்பு வந்தது. பெத்தானியாவிலிருந்த இலாசர் குடும்பத்திலிருந்து. இயேசு எருசலேமுக்குச் சற்றுத் தொலைவில் மக்களோடு அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார்

இலாசர் நோய்வாய்ப்பட்டான். இலாசர் நோய்வாய்ப்பட்டதும் சகோதரிகள் இருவரும் மிகவும் மனமுடைந்தனர். தன்னுடைய ஒரே சகோதரனை கடுமையான நோய் தாக்கியிருக்கிறதே என்று கவலையடைந்தார்கள். எப்படியாவது இயேசுவை அழைத்து அவர் மூலம் தன் சகோதரனின் நோயைக் குணமாக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் இயேசுவிடம் ஆளனுப்பி, ‘இலாசர் கடுமையான நோயினால் அவதிப்படுகிறான். நீர் வந்தால் மட்டுமே அவன் பிழைப்பான்’ என்னும் தகவலைச் சொன்னார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் இயேசு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து தங்களுக்கு உதவுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். சீடர்களும் அப்படித் தான் நினைத்தார்கள். காரணம் இயேசு அந்தக் குடும்பத்தினரை மிகவும் நேசித்தார்.

ஆனால் இயேசு அந்தச் செய்தியைக் கேட்டுப் பதட்டமடையவில்லை. அந்த இடத்தை விட்டு பெத்தானியாவுக்குப் புறப்படவும் இல்லை.

சீடர்கள் அவரிடம்,’போதகரே… உமது நண்பன் நோயுற்றிருக்கிறான் என்று தெரிந்தும் நீர் ஒன்றும் சொல்லைல்லையே’ என்று கேட்டார்கள்.

‘பயப்படாதீர்கள். சாவில் முடிவதற்கான நோயல்ல இது. இது கடவுளின் மாட்சி விளங்குவதற்கான நோய்’ என்று கூறிய இயேசு அங்கேயே அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களை அழைத்து,’ வாருங்கள் நாம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார்.

‘எங்கே செல்கிறோம் போதகரே’ அவர்கள் கேட்டார்கள்.

‘நாம் யூதேயாவுக்குச் செல்லவேண்டும்… பெத்தானியாவில் நம் நண்பன் இலாசரைச் சந்திக்க வேண்டும்’ இயேசு சொன்னார்.

‘ராபி… அங்கே சென்றால் யூதர்கள் நம்மீது தாக்குதல் நடத்துவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தானே அவர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள் ‘ சீடர்கள் எச்சரித்தார்கள்.

‘பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் பகல் ஒளியில் வாழ்கிறது. இரவில் நடப்பவன் தான் இடறிவிழுவான் ஏனென்றால் அங்கே ஒளி இல்லை’ இயேசு சொன்னார். இயேசு சொன்னது என்னவென்று சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘வாருங்கள். இலாசர் தூங்குகிறான். அவனை எழுப்பவேண்டும்’ இயேசு சொன்னார்.

‘தூங்குகிறானா ? அது நல்லது தானே போதகரே. தூங்கினால் அவன் நலமடைவான்’ சீடர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களை நோக்கிப் புன்னகைத்தார்.
‘எனதருமை சீடர்களே… இலாசர் இறந்து விட்டான். வாருங்கள் போவோம்…’ என்றார்.

சீடர்கள் அதிச்சியடைந்தார்கள். ‘இலாசர் இறந்து விட்டாரா ? ‘ அவகளுடைய குரலில் சோகம் வழிந்தது.

அவர்களுடைய சீடரில் ஒருவரான தோமா உடனே பதறி எழுந்து,’ வாருங்கள் நாமும் இயேசுவோடு செல்வோம். யூதர்கள் கல்லெறிந்தால் அதை தாங்கிக் கொள்வோம். ஒருவேளை கொன்று போட்டாலும் கவலையில்லை. வாருங்கள்..’ என்று சீடர்களைத் தயார்படுத்தினார்.

பெத்தானியா நீண்ட தொலைவில் இருந்தது. அவர்கள் அனைவரும் பெத்தானியாவை நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்கள்.

‘போதகரே… நாம் இங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்திருக்கக் கூடாது. உடனே போயிருந்தால் அவன் இறப்பதற்கு முன்பாகச் சென்று அவனைக் காப்பாற்றியிருக்கலாம்.. இல்லையா ?’ சீடர்கள் சொன்னார்கள்.

‘நாம் அப்போது செல்லாதது நல்லது தான். அது ஏன் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்’ இயேசு சொல்ல சீடர்கள் மெளனமானார்கள்.

இயேசுவும் சீடர்களும் நீண்டதூரம் நடந்து பெத்தானியாவை அடைந்தார்கள்.

இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது !

இலாசரின் வீடு அழுகுரல்களினாலும், ஆறுதல் சொல்ல வந்த உறவினர்களாலும் நிறைந்திருந்தது. இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியைக் கேட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு விரைந்தோடினாள்.

ஓடிச் சென்று இயேசுவின் முன்னால் பணிந்து,’ஆண்டவரே… நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்… எங்கள் ஒரே சகோதரனை இழந்து விட்டோமே ‘ என்று அழுதாள். நான்கு நாட்களாக அழுது அழுது அவளுடைய கண்கள் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தது.

‘ஆண்டவரே.. இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குத் தருவார் என்பது எனக்குத் தெரியும்..’ மார்த்தா புலம்பினாள்.

‘மார்த்தா… கவலைப்படாதே. இலாசர் உயிர்த்தெழுவான்’ இயேசு சொன்னார்.

‘ஆண்டவரே.. இறுதி நாளில் எல்லோரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்..’ அவள் அழுகை அடங்கவில்லை.

‘மார்த்தா.. உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னை நம்புகிறவன் இறந்தாலும் வாழ்வான். இதை நீ நம்புகிறாயா ?’ இயேசு கேட்டார்.

‘நம்புகிறேன் ஆண்டவரே. நீர் கடவுளின் மகன். நீர் சொன்னால் நடக்காதது என்று எதுவுமே இல்லை. அதை நான் முழுமையாக நம்புகிறேன்.’ மார்த்தா அழுதாள்.

‘அப்படியானால் நம்பு. உன் சகோதரன் வருவான்’ இயேசு சொன்னதும் மார்த்தா அழுதுகொண்டே வீட்டுக்கு விரைந்தோடிப் போய் தன் சகோதரி மரியாவிடம் இயேசு வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தாள். மரியா அதைக் கேட்டதும் தலைவிரி கோலமாக, அலங்கோல ஆடைகளைப் பற்றிக் கவலைப்படாதவளாக இயேசுவை நோக்கி ஓடினாள்.

ஆறுதல் சொல்வதற்காகக் கூடியிருந்த மக்கள் அவள் கல்லறைக்கு ஓடுவதாய் நினைத்தார்கள். நான்கு நாட்களாக அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. அழுவதும், கல்லறை வாசலில் சென்று கண்ணீர் வடிப்பதும் தானே இடைவிடாமல் நடக்கிறது. எனவே அவர்கள் அவளைத் தேற்ற பின்னாலேயே விரைந்தார்கள். அவளோ நேராக இயேசுவை நோக்கி ஓடினாள்.

‘இயேசுவே… கைவிட்டு விட்டீரே. நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் உயிரோடு இருந்திருப்பானே… ஏன் எங்களை அழவைத்தீர்… ‘ என்று புலம்பினாள்.

மரியாவின் புலம்பல் இயேசுவின் மனதைக் கரைத்தது. அவருடைய கண்களில் கண்ணீர் !

‘பார்… இவர் இலாசரை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறார். இவர் அழுவதை நாம் கண்டதில்லை இல்லையா ? ‘

‘இதெல்லாம் நடிப்பு. குருடனைக் குணமாக்கும் சக்தி இருக்கிறதாம், தன் நண்பனின் நோயை நீக்கும் சக்தி இல்லையாம்!’

‘அவனுடைய நோயைத் தீர்க்க முடியாது என்பதை அறிந்ததனால் தான் இவர் கொஞ்ச நாட்களாக இங்கே வரவில்லை…’ யூதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களுடைய பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கவோ, அவர்களுக்குப் பதில் சொல்லவோ இல்லை. அவர் மரியாவிடம்

‘இலாசரை எங்கே வைத்தீர்கள் ? அவனுடைய கல்லறை எங்கே இருக்கிறது ?’ என்று கேட்டார்.

‘வந்து பாரும் இயேசுவே’ என்று மரியா உடைந்த குரலில் சொல்ல இயேசுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

இயேசு கல்லறையின் முன்னால் வந்து நின்றார். அந்தக் காலத்தில் கல்லறை என்பது ஒரு குகை போன்று இருக்கும். இறந்துபோனவனை துணிகளால் சுற்றி நறுமணத் தைலம் பூசி உள்ளே வைத்து அதன் வாசலை எளிதில் நகர்த்த முடியாத மிகப் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு மூடி வைப்பார்கள். இலாசரும் அப்படி ஒரு குகையில் தான் அடக்கம் செய்யப்பட்டிருந்தான்.

‘கல்லை நீக்குங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன ? கல்லை நீக்குவதா ? இவனுக்கென்ன பைத்தியமா ? நான்கு நாட்களான பிணம்… அவனைக் காணவேண்டுமென்றால் உடனே வந்திருக்கலாமே. இப்போது நான்கு நாட்களான பிணத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறானா ?’ யூதர்கள் பலர் முணுமுணுத்தார்கள்.

இலாசரின் சகோதரி மார்த்தாவும் இயேசுவிடம்,’ஆண்டவரே.. நான்கு நாட்களாயிற்றே… நாற்றம் அடிக்குமே’ என்று தழுதழுக்கும் குரலில் சொன்னாள்.

‘நம்பினால் நீ கடவுளின் மாபெரும் செயல்களைக் காண்பாய் என்று நான் சொன்னேனே.’ இயேசு அவளைப் பார்த்துச் சொன்னார்.

மார்த்தா உறவினர்களிடம் கல்லறைக் கல்லைப் புரட்டிப் போடுமாறு சொல்ல, பலர் வந்து மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கல்லைப் புரட்டிப் போட்டார்கள்.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து. ‘தந்தையே… உமக்கு நன்றி. நீர் எப்போதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் தான் என்னை அனுப்பினீர் என்பதை சூழ்ந்திருக்கும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்’ என்றார்.

கூட்டத்தினருக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லைப் புரட்டுவதால் இவர் எப்படி கடவுளின் அருள் பெற்றவர் என்றாகும் ? என்று உள்ளுக்குள் நகைத்தார்கள்.

இயேசு கல் புரட்டப்பட்ட கல்லறையை நோக்கி உரத்த குரலில்
‘இலாசரே… வெளியே வா’ என்றார்.

இலாசர் வெளியே வந்தான் !

இறந்து போய் நான்கு நாட்களாகக் கல்லறையில் கிடந்த பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து வந்துகொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினார்கள். பலர் தலை தெறிக்க அவ்விடம் விட்டே ஓடி மறைந்தார்கள். இலாசரின் உடல் முழுவதும் துணியினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அவனுடைய முகம் கைகள், கால்கள் எல்லாம் துணிகளினால் சுற்றப்பட்டிருந்ததால் அவனால் நடக்க முடியவில்லை.

‘கட்டுகளை அவிழ்த்து அவனை நடக்கவிடுங்கள்’ இயேசு சொன்னார்.

மார்த்தாவும், மரியாவும் ஒரு வினாடி நேரம் அதிர்ச்சியில் உறைந்து, பின் நடந்ததை அறிந்து அளவிட முடியாத ஆனந்தத்தோடு ஓடிச் சென்று சகோதரனை கட்டியணைத்தார்கள். அவர்கள் தங்கள் சகோதரனை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை அவர்கள் அப்போது தான் அறிந்து கொண்டார்கள்.

இலாசரின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நல்ல உடல் நலத்துடன் அவன் இயேசுவின் முன்னால் வந்தான். நடந்தது என்னவென்பது அவனுக்குப் புரியவில்லை. இயேசு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அந்த நிகழ்வைக் கண்ட அனைவருமே இயேசுவை நம்பினார்கள். இயேசுவின் எதிர்ப்பாளர்களுக்கும், ஆலய குருக்கள், மறைநூல் அறிஞர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய தோல்வியாய் அமைந்தது.

இலாசர் உயிர்பெற்ற நிகழ்வு இயேசுவுக்கும் ஒரு சுமையாக முடிந்தது. இதற்கு முன்பும் இயேசு இறந்தோருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எருசலேமை ஒட்டிய நகரங்களில் நடக்கவில்லை. எனவே எருசலேமுக்கு அந்த தகவல்கள் எல்லாம் அரையும் குறையுமாக, நம்பகத் தன்மை குறைந்தே வந்து சேர்ந்தன. ஆனால் இலாசர் உயிர்பெற்ற நிகழ்வோ எருசலேமுக்கு அருகில் இருந்த பெத்தானியாவிலேயே நடந்ததால் விஷயம் எருசலேம் தேவாலய எல்லைகளில் படு வேகமாகவும் உயிர்ப்புடனும் உலவியது.

தலைமைக்குருக்கள் கயபா மற்றும் அன்னா இருவரின் கோபத்தையும் வெறியையும் அந்த நிகழ்வு கிளறிவிட்டது. எப்படியாவது இயேசுவை தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்னும் எண்ணம் அவர்களுக்குள் வலுப்பெற்றது. கடந்த மூன்று வருடங்களாக இயேசுவை வளரவிட்டது தவறாகிவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய சதி ஆலோசனை தீவிரமடைந்தது.

இயேசுவின் வளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமோ என்பது தான் அவர்களுடைய பிரதான அச்சமாக இருந்ததே தவிர இயேசு மெசியா என்னும் பேச்சுகள் அல்ல. இயேசுவின் போதனைகளை மக்கள் பின் பற்ற ஆரம்பித்தால் எருசலேம் தேவாலயத்தில் பலி செலுத்தும் மக்கள் குறைந்துவிடுவார்கள். அது ஒருவிதத்தில் மிகப்பெரிய வருமான இழப்பாக இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். தங்களுக்குரிய செல்வாக்கு பெருமளவில் சரிவதால் ரோம அரசு மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள இயேசுவை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தக் கூடும் என்றும் அரசு இருக்கைகள் அலறின.

கயபா உடனே ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தான். ‘ஒரு தேசத்தைக் காப்பாற்ற ஒரு மனிதன் சாவது பிழையில்லை’ என்னும் அறைகூவலை கூட்டத்தில் மையப்பொருளாக்கினான்.

இயேசு இன்னும் தன்னுடைய பணியை முடிக்கவில்லை. மரணத்தை வரவேற்கும் நிலையில் அவர் இல்லை. எனவே அவர் அங்கிருந்து எப்பிராயீம் என்னும் இடத்துக்குச் சென்றார். அது எருசலேமிற்கு வடக்கே சுமார் இருபது மைல் தொலைவில் இருந்தது.

இயேசு சீடர்களுக்கு தன்னுடைய மரணத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை விளக்கினார். தான் மதத் தலைவர்களால் பிடிக்கப்பட்டு, பின் ரோம அரசில் கையளிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி சிலுவையில் உயிர்விடுவேன் என்று சீடர்களுக்குச் சொல்ல சீடர்கள் கவலையடைந்தார்கள். இயேசு அவர்களிடம்,’ கவலைப்படாதீர்கள். இவையெல்லாம் நிகழவேண்டும். நான் மீண்டும் உயிர்பெற்று வருவேன்’ என்றார்.


 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

சக்கேயு உயரமானான்

zachius

பாஸ்கா விழாக் காலம். இஸ்ரேல் மக்களின் மிகப் பெரிய பண்டிகை பாஸ்கா. எருசலேம் தேவாலயத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். இயேசுவும் சீடர்களும் கூட பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள எருசலேமுக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார்கள்.

சீடர்கள் தங்களுக்குள் இயேசு முன்மொழிந்த தனது மரணத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டே வந்தார்கள். இயேசு எத்தனை சவாலான கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்லும் திறமை படைத்தவர் என்பதும், மரணித்துப் போனவர்களைக் கூட உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லமை உள்ளவர் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைக் கடவுளாகப் பார்த்த சீடர்களுக்கு அவர் மரித்துப் போவார் என்பதை நம்ப முடியவில்லை.

இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்குள் நுழைந்து அந்நகரின் தெரு ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அவர் செல்லும் வழிகளிலும் இரண்டு புறமும் மக்கள் பெரும்கூட்டமாக நின்று அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் சக்கேயு என்னும் மனிதர் இருந்தார். அவர் வரி வசூலிப்பவர்களின் தலைவர். வரி வசூலிக்கும் ஆயக்காரர்களை மக்கள் பாவிகளின் கூட்டம் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர்களும் அளவுக்கு அதிகமான வரியை வசூலித்தும், நேர்மைக்குப் புறம்பாகப் பணம் சம்பாதித்தும் தான் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

சக்கேயுவுக்கு இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தது. அவர் இயேசுவைப்பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறார். அவர் செய்திருக்கின்ற அதிசயச் செயல்களையும், பாவிகளையும், தன்னைப் போன்ற வரி வசூலிப்பவர்களையும் வெறுக்காத இயேசுவின் குணத்தையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார். இயேசுவின் முக்கியச் சீடர்களில் ஒருவரான மத்தேயு ஒரு வரி வசூலிப்பாளராக இருந்தவர் என்பதையும் சக்கேயு அறிந்திருந்தார்.

சக்கேயு ஒரு குள்ளன். அதனால் அவரால் இயேசுவைக் காண முடியவில்லை. எனவே அவர் முன்னே ஓடி ஒரு அத்திமரத்தில் ஏறினார். மரத்தின் உயரமான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு அவர் தெருவை கவனித்துக் கொண்டே இருந்தார்.

இயேசு அந்தத் தெருவழியே வந்தார். இயேசு தூரத்திலிருந்து வருவதைக் கண்ட சக்கேயு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தார். சக்கேயு தன்னைக் காண்பதற்காக மரத்தில் ஏறி நிற்கிறான் என்பதை இயேசு அறிந்தார். அவர் அத்திமரத்தின் அருகே வந்து சக்கேயுவை ஏறிட்டுப் பார்த்தார்.

‘சக்கேயுவே கீழே இறங்கி வா… இன்று நான் உன் வீட்டில் உணவருந்தவேண்டும்’ இயேசு சக்கேயுவின் பெயர் சொல்லி அழைக்க, சக்கேயு ஆச்சரியமடைந்தார். உடனே மரத்திலிருந்து கீழே குதித்தார்.

‘என்ன இவர் இந்தப் பாவியின் வீட்டில் உணவருந்தப் போகிறாரா ?’

‘இவன் ஊரறிந்த ஏமாற்றுக்காரனாயிற்றே.. அது இயேசுவுக்குத் தெரியாதா ?’

‘இவன் வீட்டிலெல்லாம் சென்றால் இவரை இறைவாக்கினர் என்று யாராவது மதிப்பார்களா ?’
மக்கள் கூட்டத்தினர் முணுமுணுத்தார்கள்.

இயேசு கூட்டத்தினரின் பேச்சுக்களுக்குச் செவிகொடுக்காமல் சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். சக்கேயு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இயேசுவைக் காண முடியுமா என்னும் ஆவலில் இருந்தவனுடைய வீட்டுக்கு இயேசுவே வந்திருக்கிறார்.

சக்கேயும் இயேசுவை நன்றாக உபசரித்தார். இயேசு அங்கே உணவருந்தினார். இயேசு உணவருந்தி முடித்ததும் சக்கேயு அவருக்கு முன்பாகப் பணிந்து,
‘இயேசுவே நீர் என்னுடைய இல்லத்தில் வந்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சொத்தில் பாதியை நான் இப்போதே ஏழைகளுக்கு வழங்குகிறேன், யாரையாவது ஏமாற்றி எதையாவது பறித்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிச் செலுத்துகிறேன்’ சக்கேயு சொல்ல இயேசு மகிழ்ந்தார்.

‘சக்கேயு, இப்போது தான் நான் உன் இதயம் என்னும் வீட்டில் வந்திருக்கிறேன். இப்போது தான் என்னுடைய விருப்பம் நிறைவேறியிருக்கிறது. இது தான் என்னுடைய பசியும், தாகமும், அதை நீ நிறைவேற்றியிருக்கிறாய்…. ‘ இயேசு சொல்ல சக்கேயு அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று !’ இயேசு சொல்ல சக்கேயு மகிழ்ந்தார்.

கூட்டத்தினர் இயேசுவைப் பார்த்தார்கள். இயேசு அவர்களிடம்
‘இவரும் ஆபிரகாமின் மகனே. ஒதுக்கப்பட வேண்டியவரல்ல. இழந்தவற்றைத் தேடி மீட்கவே மானிடமகன் பூமிக்கு வந்திருக்கிறார். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போது நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் தான் உங்களுக்கும் அளக்கப்படும். உன்னுடைய கண்ணில் மரக்கட்டை கிடப்பதை மறைத்துக் கொண்டு அடுத்தவன் கண்ணில் கிடக்கும் துரும்பை உன் கைகள் சுட்டிக் காட்ட வேண்டாம். முதலில் நீ சுத்தமாய் இரு. அப்போது தான் அடுத்தவன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்கும் பார்வையைப் பெற இயலும்.’ என்றார்.

அடுத்த இரவில் இயேசு பெத்தானியாவில் தங்கினார். ஆனால் இந்தமுறை இயேசு பெத்தானியாவிலிருந்த இலாசரின் இல்லத்துக்குச் செல்லவில்லை. அவர் சீமோன் என்னும் ஒருவருடைய வீட்டில் தங்கினார். அவர் முன்பு தொழுநோயாளியாக இருந்து இப்போது சுகம் பெற்றவர்.

இலாசர் தன்னுடைய இல்லத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். மார்த்தா அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவர்களுடைய சகோதரி மேரி மட்டும் அங்கே இல்லை. அவர் இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆவலில் சீமோனின் வீட்டுக்கு ஓடினாள்.

சீமோனின் வீட்டுக்குள் நுழைந்த மரியா இயேசுவின் பாதத்தருமே அமர்ந்தாள். தன்னுடைய கையில் வைத்திருந்த பரிமளத் தைலத்தை எடுத்து இயேசுவின் பாதத்தில் பூசத் துவங்கினாள். அது மிகவும் விலையுயர்ந்த ஒரு தைலம். மரித்தவர்களை அடக்கம் செய்யும்போது அந்தத் தைலத்தை பயன்படுத்துவது வழக்கம். மரியா இயேசுவின் பாதத்தில் தைலத்தை தேய்த்து தன்னுடைய கூந்தலினால் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். வீடு நறுமணத்தாலும், மௌனத்தாலும் நிரம்பியது.

யூதாஸ் – இயேசுவின் சீடர்களில் ஒருவர், மௌனத்தைக் கலைத்தார்.

‘என்ன இப்படி விலையுயர்ந்த நறுமணப் பொருளை வீணாக்கிவிட்டாயே ? இதை விற்றால் முன்னூறு பணமாவது கிடைத்திருக்குமே. அதை ஏழைகளுக்காவது கொடுத்திருக்கலாம்’ யூதாஸ் பொரிந்தான். யூதாஸ் முதன் முறையாக ஒரு செயலை பணத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறான்.

‘அவளை விட்டு விடுங்கள். தடுக்காதீர்கள். அவள் என் மரணத்தின் நினைவாக இவற்றைச் செய்கிறாள். ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள் ஆனால் நான் இருக்கப்போவதில்லை. உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இந்தப் பெண் செய்வதும் நினைவுகூரப்படும்’ இயேசு சொல்ல வீட்டில் மீண்டும் மௌனம்.

மறுநாள் இயேசுவும் சீடர்களும் பெத்தானியாவை விட்டு எருசலேம் நோக்கிப் பயணமானார்கள். பாஸ்காவுக்கு முந்திய ஞாயிற்றுக் கிழமை இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார். இயேசுவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பெரும் நிகழ்வாக அந்த நாள் அமைந்து விட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 36 : குருத்தோலை ஞாயிறு

Image result for Palm sunday Jesus

இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான நாள் இது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது இயேசுவுக்கு வயது முப்பத்து மூன்று.

இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி இயேசுவை வரவேற்க ஆயத்தமானார்கள். இயேசுவின் புகழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் எருசலேம் வாழ் ஏழை எளிய மக்களிடம் வெகுவாகப் பரவியிருந்தது. பாவிகள், ஏழைகள் என்று யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவரிடமும் அன்புடனும் நேசத்துடனும் பழகுவதிலும், நோயாளிகளை சுகப்படுத்துவதிலும், மக்களுக்குப் போதனைகள் வழங்குவதிலும் இயேசு தனித்தன்மையுடன் விளங்கியதால் இந்த முறை மக்கள் அவருடைய எருசலேம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

பெத்பகு என்னும் சிற்றூரை இயேசுவும் சீடர்களும் அடைந்தார்கள். அது ஒலிவமலைக்கு அருகே இருந்தது. எருசலேம் இன்னும் கொஞ்ச தூரம் தான். இயேசு தன்னுடைய சீடர்களில் இருவரை அழைத்து

‘நீங்கள் நேராக ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும் போதே ஒரு கழுதையையும், இதுவரை யாரும் அமர்ந்து சவாரி செய்திராத அதனுடைய குட்டியையும் கட்டி வைத்திருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாரேனும் கேட்டால், இது கடவுளுக்குத் தேவை என்று சொல்லுங்கள்’ என்று சொல்லியனுப்பினார்.

சீடர்கள் ஊருக்குள் நுழைந்தபோது இயேசு சொல்லியிருந்ததைப் போல ஒரு கழுதையையும், அதன் குட்டியையும் கண்டார்கள். அவற்றை அவிழ்த்தார்கள்.

கழுதையின் உரிமையாளன் ஓடி வந்தான்,’ ஏய்.. யார் நீங்கள் ? ஏன் என்னுடைய கழுதையை அவிழ்க்கிறீர்கள் ?’

‘இது ஆண்டவருக்கு வேண்டும்’ சீடர்கள் சொல்ல உரிமையாளன் பதில் ஏதும் பேசவில்லை.

இயேசுவின் காலத்துக்கும் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சகரியா என்னும் இறைவாக்கினர் இப்படியெல்லாம் நடக்கும் என்று தீர்க்கத் தரிசனம் சொல்லியிருந்தார் என்பதை சீடர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

‘மகள் சீயோனிடம் செல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; மறியாகிய கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார்’ என்று அவர் இறைவாக்கு உரைத்திருந்தார்.

சீடர்கள் கழுதைக் குட்டியையும், கழுதையையும் இயேசுவிடம் கூட்டி வந்தார்கள். உடனே அருகிலிருந்த மற்ற சீடர்கள் அழகிய ஆடைகளை கழுதைக் குட்டியின் மீது விரித்து இயேசுவை அதில் அமரவைத்து ஊருக்குள் அழைத்துச் சென்றார்கள். இந்தமுறை எருசலேமில் நுழைந்தபோதே பரபரப்பு நகரெங்கும் பற்றிக் கொண்டது.

இயேசு கழுதைக் குட்டியின் மீதமர்ந்து நகரில் வந்ததும், மக்கள் அனைவரும் ஒலிவ மரக் கிளைகளைக் கைகளில் ஏந்தியும், கழுதைக்கு முன்னால் இலைகளைப் பரப்பியும் வரவேற்றார்கள்.

வாழ்த்தொலிகள் முழங்கின.

‘தாவீதின்மகனுக்கு ஓசான்னா’

‘ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக’

‘உன்னதங்களிலே ஓசான்னா….’

வாழ்த்தொலிகள் முழங்கின.

எருசலேம் நகர் முழுவதும் இயேசுவுக்கு புகழ்பா வரவேற்பு வழங்கப்பட்டது. சிலர்,’ யார் இது ? இத்தனை பரபரப்புக்குச் சொந்தக்காரர் ?’ என்று வினவ
‘இவர் தான் இயேசு என்னும் இறைவாக்கினர்’ என்று மக்கள் பதில் சொன்னார்கள்.

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்து இயேசுவின் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

இயேசுவின் பவனி அதிகாரிகளைக் கலக்கமுறச் செய்தது. மக்கள் இயேசுவைத் தலைவராக்கி தைரியமாக பவனி செல்லுமளவுக்கு வந்தார்களே என திகைத்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து
‘இயேசுவே.. உமது சீடர்களின் புகழ்ப்பா அதிகமாகிக் கொண்டே போகிறது. அவர்களை அடக்கும்’ என்றனர்.

‘இவர்களை அடக்கினால் இதோ கீழே கிடக்கின்ற கற்கள் என்னைப் புகழுமே ! என்ன செய்வது ? இவையெல்லாம் நடந்தாக வேண்டும்’ இயேசு சொல்ல அவர்கள் கோபத்துடன் அகன்றனர்.

இயேசு எருசலேம் தேவாலயத்துக்கு வந்தார்.

தேவாலயத்தைக் கண்ட இயேசு கண் கலங்கினார்.
‘எருசலேமே… நீ இன்னும் திருந்தவில்லையே. ஒரு காலம் வரும் அப்போது நீ உண்மை அறிவாய். கல்லின் மீது கல் இராதபடி நீ தரைமட்டமாகப் போகிறாயே’ என்று இயேசு அழுதார்.

பவனி எருசலேம் தேவாலயத்தை அடைந்தது.

ஆலய முற்றம் முழுவதும் கூடியிருந்த மக்கள் இப்போது இயேசுவைச் சூழ்ந்து கொண்டார்கள். எருசலேம் தேவாலயத்தின் மிக முக்கிய நபராகி விட்டிருந்தார் இயேசு. கூட்டத்தினர் இயேசுவைக் குறித்துப் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். இலாசரின் நண்பர்களும் உறவினர்களும் எருசலேம் தேவாலயத்தருகே இருந்ததால் இலாசரைப் பற்றிய பேச்சும் அங்கே அதிக முக்கியத்துவம் பெற்றது.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து செபித்தார். அப்போது வானத்திலிருந்து
‘மகிமைப் படுத்தினேன் மீண்டும் மகிமைப்படுத்துவேன்’ என்னும் குரல் ஒலித்தது. ஆலய வாசலில் கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். சிலர் குரல் எதுவும் கேட்கவில்லை, இடி இடித்தது என்றார்கள்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கு எடுத்துக் கொண்டிருந்தபோது புறா வடிவில் கடவுளின் ஆவி இறங்கியதையும் வானிலிருந்து ‘இவரே என் அன்பார்ந்த மகன்’ என்னும் குரல் எழுந்ததையும் கூடியிருந்த மக்கள் பார்த்தார்கள். இரண்டாவது முறையாக இயேசு உருமாறியபோது வானிலிருந்து எழுந்த குரலை சீடர்கள் கேட்டார்கள். இப்போது மூன்றாவது முறையாக வானிலிருந்து எழும் குரலை எருசலேம் தேவாலய மக்கள் கேட்கிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,’ இந்தக் குரல் எனக்காக வரவில்லை. உங்களுக்காகத் தான் வந்திருக்கிறது. உலகின் தீர்ப்பு வரப் போகிறது. இதயங்களைக் கடினப்படுத்தாதீர்கள். இவ்வுலக அரசன் உங்களை விட்டு விடைபெறும் நாள் நெருங்கிவிட்டது. மனுமகன் விண்ணில் உயர்த்தப்படும் நாள் வருகிறது. விரைவில் மானிட மகன் மாட்சிமையுடன் வானிலிருந்து இறங்கி வருவதைக் காண்பீர்கள்’ என்றார்.

எருசலேம் தேவாலய குருக்களும், அறிஞர்களும் இயேசுவை நெருங்கினார்கள். அவர்களுடைய கோபம் ஒரு எல்லையைத் தாண்டியிருந்தது.

‘உம்மை பலமுறை எச்சரித்திருக்கிறோம்… இன்றும் வந்து உமது சொந்தக் கருத்துக்களை ஆலயத்தில் போதித்துக் கொண்டிருக்கிறீரே ! உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது ? நீர் குருவா ? நீர் மறைநூல் அறிஞரா ? நீர் மூப்பரா ? யாருமில்லை. பின் எந்த தைரியத்தில் ஆலயத்தில் வந்து அமர்ந்து உனக்குத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் ? எந்த அதிகாரத்தால் இதைச் செய்கிறாய் ?’ அவர்கள் இயேசுவிடம் தங்கள் கோபத்தைக் கொட்டினார்கள்.

‘சரி… நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதன் பதிலை நீங்கள் சொன்னால், நான் எந்த அதிகாரத்தில் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்’ இயேசு சொன்னார்.

‘கேளும். சொல்கிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘திருமுழுக்கு யோவான் இருந்தாரே. அவர் மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்தது எந்த அதிகாரத்தால் ? கடவுளிடமிருந்து வந்த அதிகாரமா ? மனிதரிடமிருந்து வந்த அதிகாரமா ? சொல்லுங்கள்’ இயேசு கேட்டார்.

மிகவும் எளிதாகத் தோன்றினாலும் இந்தக் கேள்வி மிகவும் ஆழமானது என்பது அவர்களுக்குப் புரிந்தது. யோவானின் திருமுழுக்கு அதிகாரம் கடவுளிடமிருந்து வந்தது என்று சொன்னால், பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை. கடவுளிடமிருந்து வந்த அதிகாரத்தைப் புறக்கணித்துவிட்டு கடவுளுக்கு உகந்தவர்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் என்று கேட்பார். மனிதரிடமிருந்து வந்தது என்றால் சுற்றியிருக்கும் அத்தனை மக்களும் நமக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே யோவானை கடவுளின் இறைவாக்கினர் என்று ஆழமாக நம்புகிறவர்கள். இப்படி எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலமை.

‘எங்களுக்குத் தெரியாது’ இதைத் தவிர ஒரு சிறந்த பதிலை அவர்களால் சொல்ல முடியவில்லை.

‘அப்படியானால் நானும் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன்’ இயேசு சொன்னார்.
மடக்க நினைத்தவர்கள். மடங்கினார்கள்.

ஆனாலும் அவர்கள் விடவில்லை. எப்படியும் ஒரு பிரச்சினையில் அவரைச் சிக்க வைக்க வேண்டும் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

‘நாம் சீசருக்கு வரி செலுத்துவது முறையா ?’ அவர்கள் கேட்டார்கள்.

ரோம அதிகாரத்தின் கீழ் இருக்கும் யூத மக்கள் சீசருக்கு வரி செலுத்தி வருகிறார்கள். இயேசு வரி செலுத்துவது முறையே என்று சொல்வாரானால் யூத மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் ஏனெனில் அவர்கள் விருப்பமில்லாமல் தான் வரி செலுத்திக் கொண்டிருந்தார்கள். வரி செலுத்துதல் முறையல்ல என்று சொல்வாரானால் ரோம அரசுக்கு எதிராகவே அவர் செயல்பட்டதாக அர்த்தமாகிவிடும். உடனடியாக கைது செய்யப்படுவார். சிக்கலான கேள்வி இயேசுவின் முன்னால் வைக்கப்பட்டது. இயேசு அவர்களைப் பார்த்தார்,

‘வெளிவேடக்காரர்களே ஏன் என்னை சோதிக்கிறீர்கள் ? ஒரு நாணயத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்’

அவர்கள் ஒரு நாணயத்தைக் கொண்டு வந்து இயேசுவிடம் கொடுத்தார்கள்.

‘இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் யாருடையது ?’ இயேசு கேட்டார்.

‘சீசருடையது ‘ அவர்கள் சொன்னார்கள்.

‘சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்’ இயேசு சொல்ல அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இயேசு நிறுத்தவில்லை,’ ஏன் இந்த வெளிவேடத்தனம். பொது இடங்களில் மரியாதை பெறவும், ஏழைகளை ஏய்த்துப் பிழைக்கவும், அவர்களிடமிருந்து வணக்கங்களைப் பெறவும் ஆர்வம் காட்டுவது ஏன் ? எதற்காக உங்கள் ஆடைகளை அகலப்படுத்தி, பட்டுக் குஞ்சங்களைப் பெரிதாக்கி வீண் ஆடம்பரமாய் உலவுகிறீர்கள் ? தேவையானதை விட்டுவிட்டு தேவையற்றவற்றைக் கட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் கடவுளின் அரசுக்குள் நுழையப்போவதில்லை. அன்பையும், இறைநம்பிக்கையையும், இரக்கத்தையும் மறந்து விட்ட பாம்புகள் நீங்கள். இறுதி நாளின் பொதுத் தீர்வைக்கு நீங்கள் தப்பவே முடியாது’ என்று எச்சரிக்கை விடுத்தார். சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து விடுத்த அந்த சவால் தலைமைக் குருவான கயபாவின் காதுகளுக்கும், அவரது மாமனாரான குரு அன்னாவின் காதுகளுக்கும் எட்டியது. அவர்கள் எருசலேம் வாசலிலேயே நின்று தங்களை ஒருவன் எதிர்க்கிறானே என்று தங்கள் சினத்தின் அளவை அதிகப்படுத்திக் கொண்டார்கள்.

68. ஒரு துளியே கடல்


இயேசு ஆலயத்தில் நுழைந்து பேசத் துவங்கினார்.

நானே திராட்சைக் கொடி. என் தந்தை திராட்சைத் தோட்ட உரிமையாளர். திராட்சைத் தோட்ட உரிமையாளருக்குக் கனி கொடுக்கும் கிளைகள் மீது தான் கவனிப்பு இருக்கும். கனி தர மறுக்கும் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு விறகுக்காய் கட்டப்படும். கனிதரும் கிளைகளையோ அவர் அதிகக் கனிதரும் படி கழித்து விடுவார்.

நானே திராட்சைக் கொடி.

என்னில் நிலைத்திருக்கும் கிளைகள் மட்டுமே கனிதர முடியும். என்னில் நிலைத்திருக்காத கிளைகளோ கனிதருவதில்லை. அவை வெட்டுண்டு தரையில் வீழ்ந்து பச்சையமிழந்து விறகாகும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருக்கட்டும். நான் என் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறேன். நீங்களும் என் வார்த்தைகளின் படி வாழ்ந்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்.உலகம் உங்களைப் பகைக்கிறதென்று கவலைப்படாதீர்கள் அது உங்களைப் பகைக்கும் முன்பே என்னைப் பகைத்துவிட்டது. என்னில் நிலைத்திருங்கள்.

அவருடைய பார்வை அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போட்டுக் கொண்டிருப்பவர்களைக் கவனித்தது.

Image result for widow's offering

ஒரு செல்வச் சீமான் வந்தார். தன்னுடைய பணப்பெட்டியைத் திறந்து தன்னிடமிருந்த பணத்தில் ஒரு பிடியை அள்ளி காணிக்கைப் பெட்டியில் கொட்டினார்.

இன்னொருவர் வந்தார். தன்னுடைய அங்கியிலிருந்து கட்டுக் கட்டாய் பணத்தை எடுத்தார். அதை சிறிது நேரம் கைகளில் வைத்திருந்து மக்கள் பார்க்கிறார்களா என்று அரைக் கண்ணால் நோட்டம் விட்டார். மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள் என்பதை அறிந்ததும் பணத்தை பெட்டியில் போட்டு விட்டுப் பெருமையுடன் வெளியேறினார்.

மீண்டும் ஒருவர் வந்தார். கொஞ்சம் பணத்தைக் கைகளில் அள்ளினார். அவருக்கு எவ்வளவு பணத்தைக் காணிக்கைப் பெட்டியில் போடுவது என்ற குழப்பம். எடுப்பதும் வைப்பதுமாக கொஞ்ச நேரம் இருந்தார். பின் கொஞ்சம் பணத்தை பெட்டியில் போட்டு விட்டு நடையைக் கட்டினார்.

கடைசியாக ஏழை விதவைப் பெண் ஒருத்தி வந்தாள். அவள் தன்னுடைய ஆடையின் நுனியில் முடிந்து வைத்திருந்த ஒரு கொதிராந்திற்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டாள். அவளுடைய முகம் மலர்ந்தது. திருப்தியான புன்னகை அவளிடம் உருவானது. அவள் யாரையும் பார்க்கவில்லை. அமைதியாய் அமர்ந்து செபிக்கத் துவங்கினாள்.

இயேசு மக்களைப் பார்த்தார்.

‘இங்கே மக்கள் காணிக்கைப் போடுவதை நீங்கள் யாரேனும் கவனித்தீர்களா ?’ இயேசு கேட்டார்.

‘கவனித்தேன்… ‘

‘கொஞ்ச நேரம் கவனித்தேன்…’

‘கவனிக்கவில்லை…’ மக்கள் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள்.

‘யார் அதிகம் போட்டது ?’ இயேசு கேட்டார்.

‘முதலில் வந்தவர்…’

‘இல்லை இரண்டாவதாக வந்தவர் தான்…’ மக்கள் அதற்கும் வேறுபட்டப் பதிலையே சொன்னார்கள்.

‘நீங்கள் சொல்வதெல்லாம் தவறு. கடைசியாக வந்த விதவைப் பெண் தான் அதிகம் போட்டாள் !’ இயேசு சொன்னார்.

அவர்கள் வியந்தார்கள். ‘அந்தப் பெண்ணா ? அவள் ஒன்றோ இரண்டோ தொராந்த் தானே போட்டாள். அது அற்பப் பணம். எல்லோருமே அவளை விட அதிகமாய்த் தான் போட்டார்கள்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

இயேசு புன்னகைத்தார்.

‘ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் இருந்த பணத்தின் ஒரு பகுதியைத் தான் போட்டார்கள். இவளோ தன்னிடமிருந்த மொத்தத்தையும் போட்டு விட்டாள்’ இயேசு சொன்னார்.

‘மற்றவர்களிடம் இன்னும் ஏராளமான பணம் மீதமிருக்கிறது. அது அவர்களுக்காக அவர்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இவளிடமோ இனிமேல் பணமில்லை. மொத்தத்தையும் போட்டு விட்டாள்… இப்போது சொல்லுங்கள் கொஞ்சமா, மொத்தமுமா ?எது சிறந்தது ?’ இயேசு கேட்டார்.

மக்கள் குழம்பிப் போய் பார்த்தார்கள்.

‘கடவுள் உங்கள் பணத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. உங்கள் மனத்தை எட்டிப் பார்க்கிறார். எனவே கொடுப்பதை நிறைந்த மனதோடு கொடுங்கள்’ என்றார்.

‘கடவுளின் அரசு நெருங்கிவிட்டது. எப்போது இரண்டாம் வருகை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் தயாராக இருக்கவேண்டும். விழிப்பாய் இருக்காதவன் அழிவான்’ சொன்ன இயேசு விழிப்பாய் இருக்கவேண்டியதன் தேவையை உணர்த்த ஒரு கதை சொன்னார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 37 : பத்து கன்னியர் உவமை

Image result for 10 virgins parableமாபெரும் திருமண விருந்து.

மணமகன் அழைத்தல் என்பது அந்நாட்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த ஒரு நிகழ்ச்சி. அதன்படி மணமகன் வரும்போது மணமகளின் தோழிகள் சிலர் கைகளில் எரியும் விளக்கை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். இந்தத் திருமண விருந்திற்கும் விளக்கை எடுத்துக் கொண்டு மணமகனை வரவேற்க பத்து தோழியர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

பத்துபேரும் மணமகளின் வீட்டுக்குக் குறித்த நேரத்தில் விளக்குகளோடு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஐந்துபேரிடம் விளக்கிற்குத் தேவையான எண்ணெய் இருக்கவில்லை. போகும் வழியில் எங்காவது வாங்கிக் கொள்ளலாம் என்றும், திருமண வீட்டில் கேட்டு வாங்கலாம் என்றும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மற்ற ஐந்துபேரும் விளக்குகளுடன் தேவையான எண்ணெயையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். எனவே அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

மணமகன் வெளியூரிலிருந்து வரவேண்டும். தாமதமாகிக் கொண்டே இருந்தது. இரவு நீண்ட நேரமாகிவிட்டதால் எல்லோரும் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கிவிட்டார்கள்.

நள்ளிரவு. அவர்களுடைய அமைதியான நித்திரையைக் கலைத்தது அந்த அழைப்பு.
‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’

தோழிகள் எல்லோரும் எழுந்து தங்கள் விளக்கின் திரிகளைத் தூண்டிவிட்டு விளக்குகளைக் கொளுத்தினார்கள். ஐந்து அறிவிலிகளின் விளக்குகளும் எண்ணையில்லாததால் அணைந்து அணைந்து போயின.

‘ஐயோ.. எங்களுடைய விளக்குகள் அணைகின்றன. எங்களுக்குக் கொஞ்சம் எண்ணை கொடுங்கள்’ அவர்கள் கேட்டார்கள்.

‘அடடா.. நீங்கள் எண்ணெய் எடுத்து வரவில்லையா ? எங்களிடம் இருப்பது எங்களுக்கு மட்டும் தான் சரியாக இருக்கும். மன்னியுங்கள்’ முன்மதியுடைய அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

‘அப்படிச் சொல்லாதீர்கள். இருப்பதில் பாதியைக் கொடுங்கள். பகிர்ந்து கொள்வோம்…’ அவர்கள் கெஞ்சினார்கள்

‘இல்லை… நாங்கள் இருப்பதில் பாதியைக் கொடுத்தால் எங்கள் விளக்குகளும் அணையும், உங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகும். எதற்கும் திருமண வீட்டில் கேட்டுப் பாருங்களேன்’

‘ஐயோ அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. மணமகன் வந்து கொண்டிருக்கிறார்…’ அறிவிலிகள் பதட்டமானார்கள்.

‘இதெல்லாம் நீங்கள் முன்னமே யோசித்திருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கி வந்திருக்கலாம் அல்லவா ? எங்களை மன்னியுங்கள். உங்களுக்கு எண்ணெய் தரும் பேச்சுக்கே இடமில்லை’ அவர்கள் உறுதியாய் சொல்ல அறிவிலிகள் எங்காவது எண்ணெய் கிடைக்குமா என்று தேடி ஓடினார்கள்.

இந்த ஐந்து கன்னியர்களும் சென்று மணமகனை வரவேற்றார்கள். மனமகன் மணமகளின் தோழியரோடு சென்று திருமண மண்டபத்தில் நுழைய, மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

எண்ணை தேடிப்போன தோழியர் தெருவெங்கும் ஓடினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்கு எங்கும் எண்ணெய் கிடைக்கவில்லை. நீண்ட நேர அலைச்சலுக்குப் பின் எப்படியோ கொஞ்சம் எண்ணெய் பெற்றுக் கொண்ட கன்னியர்கள் மணவீட்டை நோக்கி ஓடினார்கள்.

திருமண மண்டபம் அடைக்கப்பட்டிருந்தது. தோழியர் திகைத்தனர்.

‘ஐயா… யாராவது கதவைத் திறந்து விடுங்கள். நாங்கள் மணமகளின் தோழியர்.’ அவர்கள் கத்தினார்கள். அவர்களுக்குக் கதவு திறந்து விடுவார் யாருமில்லை.

அவர்களோ தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்கள். மணமகன் அவர்களிடம்
‘நீங்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. சும்மா நின்று கத்திக்கொண்டிருக்காமல் போய் விடுங்கள்’ என்றார்.

‘ஐயா.. நாங்கள் உம்மை எதிர்கொள்ள வேண்டிய கன்னியர்கள். விளக்கில் எண்ணை இல்லாததால் தாமதம் ஆகிவிட்டது. மன்னியுங்கள். கதவைத் திறந்து விடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்கள் அந்த அறிவில்லாத கன்னியர்கள்.

‘இல்லை. உங்களை எனக்குத் தெரியாது. விழிப்பாய் இருக்காதவர்கள் வெளியே நிற்கவேண்டியது தான்’ மணமகன் உறுதியாய் சொன்னார். மண மண்டபம் கோலாகலமாய் இருக்க, விழிப்பாய் இல்லாதவர்கள் வெளியே தனித்திருந்து தங்கள் தவறுக்காய் புலம்பி அழுதனர்.

இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.
‘இதன் பொருள் உணர்கிறீர்களா ?’

‘ஆம் ஆண்டவரே… இறையரசில் நுழைய வேண்டுமென்றால் நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும்’ அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘சரியாகச் சொன்னீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் தோல்வியில் முடியும். இப்போதே உங்கள் தவறான வழிகளை விட்டு விலகி, விவேகமாய் நடவுங்கள்.’

‘விழிப்பாய் இருங்கள். தலைவன் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜாமத்தில் வேண்டுமானாலும் வீட்டை வந்தடையலாம். எனவே விழிப்பாய் இருங்கள். தலைவன் வரும்போது விழிப்பாய் இருக்கும் ஊழியன் பேறுபெற்றவன். அவனுக்கே தலைவனின் சலுகைகள் கிடைக்கும்.’

‘திருடன் எந்த ஜாமத்தில் வருவான் என்பதை யாரும் அறிய முடியாது. அவன் வரும்போது விழிப்பாய் இருந்தால் வீட்டைக் காத்துக் கொள்ள முடியும். விழிப்பாய் இல்லையேல் இழப்பாய்.’ இயேசு சொன்னார் கூட்டத்தினர் தெளிவடைந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசு வரலாறு 38 : அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது

அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது

Image result for Jesus in temple fighting

ஆலயத்தின் ஒரு பக்கம் மிகவும் சத்தமாக இருப்பதைக் கவனித்த இயேசு அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொழுகைக்குரிய அந்த தேவாலயம் அன்று சந்தைக்கூடம் போலக் காட்சியளித்தது. பாஸ்கா விழாவில் பலி செலுத்துவது மக்களின் வழக்கம் அதற்கான பலிப்பொருட்கள் எல்லாம் ஆலயத்துக்குள்ளேயே விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு இடத்தில் புறாக்கூடுகள் வரிசையாய் வைக்கப்பட்டிருக்க, புறாவின் எச்சத்தால் அந்த இடம் துர்நாற்றம் வீசியது. அங்கு மக்கள் குழுமி நின்று புறாக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சில்லறை இல்லாதவர்களையும், வேற்று நாணயங்களை வைத்திருப்பவர்களையும் நாணயமாற்றும் கடை அழைத்துக் கொண்டிருந்தது. அங்கும் ஒரு மிகப்பெரிய கூட்டம்.

இன்னோர் இடத்தில் ஆலயத் தூண்களில் கட்டப்பட்டிருந்தன ஆடுகளும், மாடுகளும். அவைகளையும் பலியிடுவதற்காக மக்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு கூச்சலும், குழப்பமும் நிறைந்திருந்தது.

இவற்றைத் தவிர வெளியூர்ப்பயணிகளையும், பெண்களையும் கவர ஏராளமான விற்பனைப்பொருட்கள். அவையும் ஆலயத்துக்குள் நிரம்பி வழிந்தன.

ஆலயம் தன்னுடைய அமைதித் தன்மையை இழந்து சந்தை வீதிபோல கூச்சல், குழப்பமாக இருப்பதைக் கண்ட இயேசு அதிர்ச்சியடைந்தார். அமைதியாக தியானிக்க வேண்டிய இடம், கடவுளுடன் உரையாடவேண்டிய புனித இடம் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறதே என்று கடும் கோபம் கொண்டார். சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள் ஆனால் யாருக்கும் இது தவறென்று தெரியவில்லை.

இயேசு நேராக புறாவிற்பவனிடம் சென்றார்.
‘இதை எடுத்துக் கொண்டு வெளியே போ’ அவருடைய குரலில் அதிகாரம் மிளிர்ந்தது.

‘யார் நீ ? உன்னுடைய பேச்சை நான் ஏன் கேட்கவேண்டும் ? நீ என்ன தலைமைக் குருவா ? இங்கே கடை நடத்த எனக்கு அதிகாரம் உண்டு’ அவன் கத்தினான்.

‘என்னுடைய வீட்டில் கடை நடத்த நீ யார் ?’ இயேசுவும் கோபமடைந்தார்.

‘உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? இது உன்னுடைய வீடா ? இது எங்களுடைய எருசலேம் தேவாலயம். எரிச்சலைக் கிளப்பாமல் வெளியே போ’ அவன் பதிலுக்குக் கத்தினான். அதற்குள் மற்ற கடையிலுள்ளவர்கள் என்ன நடக்கிறதென்று பார்க்க விரைந்து வந்தார்கள்.

இயேசு கயிறுகளினால் ஒரு சாட்டையைப் பின்னினார். அதைக் கொண்டு கடை நடத்திக் கொண்டிருந்த அனைவரையும் தாறுமாறாக அடித்தார். சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுவரை சாந்தமாகப் பார்த்திருந்த இயேசுவை அவர்கள் அப்போது தான் முதல் முறையாக கொழுந்து விட்டெரியும் கோபத் தீயாகப் பார்க்கிறார்கள். இயேசு நிறுத்தவில்லை. புறாக்கூடுகளைத் திறந்து விட்டார். ஆடுமாடுகளை அவிழ்ந்து விட்டார். அவை ஆலய வாசல் வழியாக வெளியே விரைந்தன. நாணயம் மாற்றிக் கொண்டிருந்தவனுடைய மேஜையைக் கவிழ்த்து எறிந்தார். நாணயம் நாலா பக்கமும் சிதற மக்களும் சிதறி ஓடினார். விற்பனையாளர்கள் அனைவரையும் இயேசு சரமாரியாகத் தாக்கினார்.

‘ஏய்…. நிறுத்து நீ யார் ?’ குருக்கள் கோபத்துடன் ஓடி வந்தனர்.

‘இது என் தந்தையின் இல்லம். இது செபவீடு. கள்வர்களின் கூடு அல்ல.’ இயேசு குருக்களின் முன்னால் நிமிர்ந்து நின்று பதிலளித்தார். அவருடைய குரலில் அதிகாரத் தோரணை பளிச்சிட்டது.

‘உன் தந்தையின் இல்லமா ? இது எங்கள் தேவாலயம். நாங்கள் காலம் காலமாக குருக்களாகவும், குழுக்களாகவும் இருக்கும் ஆலயம். எங்கிருந்தோ வந்த நீ இது உன் வீடு என்கிறாய், உன் தந்தையின் இல்லம் என்கிறாய். உனக்கென்ன பைத்தியமா’

‘உங்கள் சமரசப் பேச்சுகள் எனக்குத் தேவையில்லை. உங்கள் மிரட்டலுக்குப் பயப்படவும் மாட்டேன், உங்கள் அதிகாரத்துக்குக் கட்டுப் படவும் மாட்டேன். இது என் தந்தையின் வீடு. இதை நீங்கள் வணிக வளாகமாக்குவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ இயேசு அழுத்தமாய்ச் சொன்னார்.

‘உன் அனுமதி எங்களுக்கு எதற்கு ? எங்களுக்கு அனுமதியளிக்க பல அதிகாரிகள் இருக்கிறார்கள்’

‘எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் இல்லத்தைப் பராமரிப்பது என் பணி’ இயேசு அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

‘பராமரிப்புப் பணியா ? அந்த பணிக்கான அனுமதி இருக்கிறதா ? என்ன அனுமதி ? நீ எந்த அதிகாரத்தில் இப்படியெல்லாம் உளறுகிறாய். உனக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் ஏதேனும் அடையாளம் காட்டு பார்க்கலாம் ?’ கூடியிருந்த யூதர்கள் கேட்டார்கள்.

‘இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள். மூன்றே நாளில் நான் கட்டி எழுப்புவேன்’ இயேசு சொன்னார்.

கூட்டத்தினர் சத்தமிட்டுச் சிரித்தனர். ‘ நீ உண்மையிலேயே பைத்தியக்காரன் தான். இந்த ஆலயத்தைக் கட்ட எங்களுக்கு நாற்பத்து ஆறு ஆண்டுகள் ஆயின. நீ என்னவென்றால் மூன்று நாளில் கட்டுவேன் என்கிறாய். இந்த ஆலயத்தின் ஒரு கல்லைப் புரட்டவே உனக்கு மூன்று நாட்கள் ஆகும்’ அவர்கள் மீண்டும் சத்தமாய்ச் சிரித்தார்கள்.

‘நான் சொல்வது உங்களுக்கு இப்போது விளங்காது. பின்னர் விளங்கிக் கொள்வீர்கள்’ இயேசு சொன்னார். தன்னுடைய மரணத்தையும், மூன்றாவது நாளில் உயிர்க்கப் போகிறேன் என்பதையுமே இயேசு சொன்னார் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவருடைய சீடர்கள் உட்பட.

அதன் பின் வணிகர்கள் எல்லோரும் வெளியேற ஆலயம் தன்னுடைய அமைதியைத் திரும்பப் பெற்றது. இயேசு ஆலயத்தில் அமர்ந்து கடவுளுடன் ஒன்றித்திருந்தார்.

அமைதிப்புறாவான இயேசு புரட்சிப் புயலாக வெடித்த அந்த சம்பவத்தைச் சீடர்கள் மனதுக்குள் குழப்பத்துடன் எழுதிக் கொண்டனர்.

அன்று இரவு இயேசு நகருக்கு வெளியே உள்ள பெத்தானியா என்னுமிடத்தில் சென்று அங்கே தங்கினார். காலையில் மீண்டும் ஆலயத்துக்குச் செல்வதற்காக சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இயேசுவுக்குப் பசியெடுத்தது. ஏதேனும் உண்ணக் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வந்தவருடைய பார்வையில் விழுந்தது ஒரு அத்தி மரம். ஒரு பெரிய செழிப்பான அடர்ந்த அத்திமரம். அந்த மரத்திலிருந்து பழங்களைப் பறித்து உண்பதென்று சீடர்களும் இயேசுவும் முடிவு செய்து அத்திமரத்தை நெருங்கினார்கள்.

ஏமாற்றம் !

அத்திமரத்தில் கனிகள் எதுவும் இல்லை. மரம் செழிப்பாக நிற்கிறது. ஆனால் பலன் இல்லை !.
‘இனிமேல் நீ கனிதரவே மாட்டாய் !’ இயேசு அத்திமரத்தைப் பார்த்துக் கூறினார். ! உடனே அந்த அத்திமரம் பட்டுப் போயிற்று.

சீடர்களுக்குப் பெரும் வியப்பு.

‘ஆண்டவரே… நீர் சொன்னதும் இந்த அத்திமரம் பட்டுப் போய்விட்டதே. இதன் ரகசியத்தை நீங்கள் எங்களுக்கும் சொல்லித் தரலாமே..’ சீடர்கள் ஆர்வமாய்க் கேட்டார்கள்.

‘நம்பிக்கை ! அது தான் ஒரே பதில். அசைக்க முடியாத நம்பிக்கை. இதைச் சொன்னால் கண்டிப்பாக நடக்கும் என்று இம்மியளவும் சந்தேகமின்றி நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும்’

‘உண்மையாகவா ?’ சீடர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

‘உண்மை தான். அதோ அந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் கூட அது நடக்கும். அது நடக்குமா என்றோ, நடக்காது என்றோ நீங்கள் நினைத்தால் அது நடக்காது.’ இயேசு சொன்னார்.

‘அத்தகைய நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம் தான்’ சீடர்கள் புன்னகையுடன் சொன்னார்கள்.

‘உண்மை ! நீங்கள் வானகத் தந்தையிடம் செபம் செய்யும்போது கூட, கேட்கும் விஷயத்தைப் பெற்றுக் கொண்டோம் என்று உங்களுக்குள் உறுதியாக நம்பினால் அது நிறைவேறும். அப்படி நம்புவதற்கு நீங்கள் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி நம்பிக்கை வைத்தவர்கள் தான் நம் இறைவாக்கினர்கள்’ இயேசு சொல்ல சீடர்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 39 : சதிக்கு அனுமதி

Image result for Annas Caiaphas discussion

நாளை புளியாத அப்பத் திருவிழா !

பாஸ்காவுக்கு முந்திய நாளை புளியாத அப்பத் திருவிழாவாகக் கொண்டாடுவது யூதர்களின் வழக்கம். இன்னும் சில நாட்களில் பாஸ்கா விழா. இஸ்ரயேலர்களின் மிகவும் முக்கியமான விழா. மோசேயின் காலத்தில் எகிப்தில் இஸ்ரயேலர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காக கடவுள் எகிப்தியரின் தலையீற்றுகளை எல்லாம் அழித்தார், ஆனால் இஸ்ரயேலர்களை அவர் அழிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைத் தான் இஸ்ரயேலர்கள் பாஸ்கா என்று பெயரிட்டு அழைத்து விழாவாகக் கொண்டாடி வந்தார்கள். பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் எருசலேம் தேவாலயத்தில் ஒன்று கூடுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் எருசலேம் தேவாலயத்துக்கு வருவார்கள் என்பது அவர்களின் கணிப்பு.

பதினான்காவது நாளில் மாலையில் பாஸ்காவுக்கான ஆட்டை வெட்ட வேண்டும் என்பதும், அதை ஒரு குறிப்பிட்ட முறையில் உண்ணவேண்டும் என்பதும் மோசே காலத்தில் அவரால் வகுக்கப்பட்டுள்ளது. யூதர்களைப் பொறுத்தவரை நாள் என்பது மாலை ஆறுமணி முதல், மறுநாள் மாலை ஆறுமணி வரை என்பதே வழக்கமாக இருந்தது. இந்தமுறை பாஸ்கா சனிக்கிழமையில் வருகிறது. மிக முக்கியமான பாஸ்கா விழா இது. சனிக்கிழமை என்பது ஓய்வு நாளானதனால், ஆடு வெட்டும் சடங்கை பெரும்பாலான யூதர்கள் வியாழக்கிழமைக்கு மாற்றி வைத்தார்கள். வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு மேல் புளியாத அப்பத் திருவிழா தினம் ஆரம்பமாவதால் அது யூத சட்டத்தைக் கடைபிடிப்பதாக அர்த்தம்.

அன்று கயபா வும், குருக்களும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். எப்படியும் இந்தமுறை இயேசுவை எருசலேம் விட்டு வெளியே செல்லவிடக் கூடாது. இந்த முறை அவனைத் தப்பவிட்டால் அடுத்தமுறை வரும்போது இன்னும் பல மடங்கு வளர்ச்சியடைந்திருப்பான். நம்மையே அவன் அழிக்கவும் செய்வான். எனவே இயேசுவை எந்தக் காரணம் கொண்டும் இந்தமுறை தப்ப விடக் கூடாது. கயபா சொன்னான்.

இயேசுவைப் பிடிக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் அதற்கு அன்னா வின் அனுமதி வேண்டுமே ! கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.

அன்னா ! தலைமைக் குருவாக இருந்தவர். இப்போதைய தலைமைக் குருவாக இருக்கும் கயபாவின் மாமனார். அன்னாவுக்கு இப்போது சுமார் எண்பது வயதாகிறது. நேரடியான அதிகாரம் ஏதும் இல்லையெனினும் அவர் தான் பின்புலமாக இருப்பவர். அவருடைய அனுமதியில்லாமல் இந்த திட்டம் நிறைவேறாது. அன்னாவுக்குப் பின் அவருடைய பிள்ளைகள் ஏழுபேரின் கைகளில் மாறிய அதிகாரம் மருமகனான கயபாவின் கைக்கு வந்திருக்கிறது. அன்னா திடீரென்று எதையும் ஒத்துக் கொள்பவர் அல்ல. இயேசுவைப் பிடிக்கவேண்டும் என்னும் திட்டத்தை அவர் எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

‘அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தமுறை நாம் சற்றும் பிசகிவிடக் கூடாது. நான் அன்னாவிடம் அனுமதி பெற்று வருகிறேன்.’ கயபா சொன்னான்.

அன்னா புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் சட்டென்று ஒத்துவிடாத மனம் அவருக்கு இருந்தது. யூதேயாவின் ஆளும் அதிகாரம் உள்ளவர்களிலேயே அன்னா தான் அதி புத்திசாலி என்று வியப்பவர்களும் உண்டு. அன்னா மிகப்பெரிய செல்வந்தர். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் இருந்தன. ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்னும் கொள்கையுடையவர்.

இஸ்ரேல் மக்கள் பதினான்காவது நிசான் என்று அழைக்கும் அந்த வியாழக்கிழமை அன்னா தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்தார். சன்னலுக்கு வெளியே விழாக்கால சத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். யூதேயா, சமாரியா, கலிலேயா உட்பட ஏராளமான நகர்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக விழாவுக்கு வந்து கொண்டே இருந்தார்கள்.

கயபா தன்னுடைய தனி அறையில் கர்வத்துக்குரிய அரியணை இருக்கையில் அமர்ந்து தனக்கு முன்னால் இருந்த தீநாக்குகள் அருகே விரல்களை நீட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கையில் கயபா வந்தான்.

கயபா அன்னாவிடம் சென்று பணிந்தான்.

‘சொல் கயபா.. என்ன விஷயம் ?’

‘நீங்கள் ஓய்வெடுக்கப் போகும் நேரமென்று தெரியும் தலைவரே. ஆனாலும் தாமதிக்க முடியாத செய்தி ஆனதால் தான் நான் உங்களை தொந்தரவு செய்யும் படி ஆயிற்று’ கயபா பீடிகை போட்டான்.

‘அப்படியென்ன தாமதிக்க முடியாத விஷயம் ? கயபா ? கயபா என்னும் வார்த்தைக்கே துக்கம் என்பது தான் பொருள். என்ன துக்கமான செய்தியுடன் வந்திருக்கிறாய் சொல் ‘ மெல்லிய புன்னகையுடன் அன்னா கேட்டார்.

‘இந்த தேசத்தின் தலைவிதி இன்று இரவு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது’ கயபா சொன்னான்.

‘தேசம் எத்தனையோ இரவுகளைச் சந்தித்திருக்கிறது. இன்னும் சந்திக்கத் தான் போகிறது. ஏன் இன்றைய இரவு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது ? பீடிகை போதும் கயபா .. விஷயத்தைச் சொல்’

‘சரி. சொல்கிறேன். நமக்கு நிம்மதி வேண்டுமென்றால் நான் இயேசுவை ஒழித்தாக வேண்டும். இல்லையேல் அவன் நம்முடைய வாழ்க்கையையே அழித்து விடுவான்’ கயபா சொன்னான்.

அன்னா சிரித்தான் ‘ எப்படி ? என்ன சொல்கிறாய் நீ ? நம்முடைய வாழ்க்கையை அந்த இயேசு எப்படி நிர்ணயிக்க முடியும் ? தெருஓரங்களில் சுற்றித் திரிபவனல்லவா அவன் ?’

‘அப்படியல்ல தலைவரே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யார் என்று தெரியாமல் இருந்த இயேசு இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த மனிதனாக வளர்ந்திருக்கிறார். இன்று அவர் பின்னால் சுற்றித்திரிய ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவன் சொல்வதைக் கேட்க மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.’

‘எல்லாம் கொஞ்ச நாள் சுற்றித் திரிவார்கள்.. பிறகு சென்று விடுவார்கள்’ அன்னா சொன்னார்

‘அப்படித் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவனுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குருடருக்குப் பார்வை கொடுக்கிறான், முடவரை நடக்கச் செய்கிறான். இறந்து போனவர்களுக்கு உயிர் கொடுக்கிறான்.. எனவே மக்கள் அவனிடம் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் ‘ கயபா சொன்னான்.

‘நீ என்ன முட்டாளா ? இவையெல்லாம் உண்மையிலேயே நடக்கிறது என்று நீயுமா நம்புகிறாய் ?’

‘நான் நம்புகிறேனா என்பது முக்கியமில்லை. மக்கள் நம்புகிறார்கள் என்பது தான் முக்கியம். பொதுமக்கள் மட்டுமல்ல தலைவரே, நம் கூட்டத்தில் உள்ளவர்கள் கூட நம்புகிறார்கள். நிக்கோதேமு கூட இப்போது அவன் பக்கம்’ கயபா சொன்னான்.

‘அதெல்லாம் இருக்கட்டும் இதற்காக என்னிடம் ஏன் வருகிறாய். இயேசு ஒரு போலித் தீர்க்கத் தரிசி. அதைப்பற்றிப் பேசத் தான் வந்தாயா ?’ அன்னாவின் குரலில் கோபத்தின் முதல் சுவடு தெரிந்தது.

‘கடந்த ஞாயிற்றுக் கிழமை என்ன நடந்ததென்று கேளுங்கள். இயேசு ஒரு கழுதையின் மீது அமர்ந்து வர, அவரைச் சுற்றிலும் மக்களும் சிறுவர்களும் சேர்ந்து ஓசான்னா என்று பாடி வாழ்த்துகிறார்கள். கேட்டால் பழைய தீர்க்கத் தரிசனம் நிறைவேறுகிறது என்கிறார்கள். ‘ கயபா முதல் காயை நகர்த்தினான். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்வது மன்னிக்க முடியாத சட்டம். இந்த சட்டமீறலை இயேசு செய்திருக்கிறார்.

அன்னாவின் முகத்தில் குழப்ப ரேகைகள். ‘ சரி அப்படியென்றால் அவனைக் கைது செய்ய வேண்டியது தானே ? ஏன் என்னிடம் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய் ? புரியவில்லை ?’

‘இது பண்டிகைக் காலமல்லவா ? சுமார் இரண்டு இலட்சம் மக்கள் எருசலேம் விழாவுக்காக வந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவனைக் கைது செய்ய முடியாது. மிகப்பெரிய கலகம் மக்களிடையே உருவாகும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உலகமே அவன் பின்னால் தான் இருக்கிறது இப்போது ‘ கயபா நாசூக்காகப் பேசினான்.

அன்னா சலிப்பைக் காட்டினார். ‘ கயபா… கயபா.. இப்போது என்னதான் செய்யவேண்டும் என்கிறாய் ?’

‘இயேசுவை ரகசியமாய்க் கைது செய்ய வேண்டும். செய்து தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்த வேண்டும்’ கயபா சொன்னான்.

‘என்ன ? கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன்னால் நிறுத்தவா ? உனக்கென்ன பைத்தியமா ? எதை வைத்து விவாதிப்பாய் ?’

‘அவன் தன்னை உலகை மீட்க வந்த மெசியா என்கிறான். மீட்பர் என்கிறான்.’ கயபா சொன்னான்.

‘மெசியா.. மெசியா.. இந்த வார்த்தையைக் கேட்டுக் கேட்டு போரடிக்கிறது. எரேமியாவும், இசையாசும் ஒருகாலத்தில் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். நமக்கு முன்னால் எப்போதும் ஏதாவது மெசியாக்கள் ஓடிக் கோண்டே தான் இருக்கிறார்கள். ரெவோல்ட், சீலோட், கமாலியாவில் ஒரு யூதா.. எத்தனையோ மெசியாக்களை நான் கண்டிருக்கிறேன். இப்போது இதோ ஒரு புதிய மெசியா ! கயபா… நீ ஏன் இதை பெரிதாக எடுத்துக் கொள்கிறாய் ?’ அன்னா குரலை உயர்த்தினான்.

‘இவன் சற்று வித்தியாசமான மெசியா தலைவரே. இவன் பணக்காரர்கள் உலகில் இருக்கக் கூடாது என்கிறான். எல்லோரும் சமம் என்கிறான். பணக்காரர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாதாம். அதைவிட ஊசியின் ஓட்டையில் ஒட்டகம் நுழையுமாம். நாம் விண்ணகத்தில் நுழைய வேண்டுமென்றால் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டுமாம். உலகில் எல்லோரும் சமம் என்றால் நமக்கு என்ன மரியாதை இருக்கிறது’ கயபா இன்னொரு காயை நகர்த்தினான். அன்னா மிகப்பெரிய பணக்காரர். ஏழைகள் ஏழைகளாக இருக்கவேண்டும் தன்னை வணக்க வேண்டும் என்னும் கொள்கையுடையவர். கயபாவின் இந்த குற்றச்சாட்டு அவரை எரிச்சலடையச் செய்தது.

‘சுத்த பைத்தியக்காரத் தனமான பேச்சு…’ அன்னா பொறுமினார்.

‘அது மட்டுமல்ல தலைவரே.. அதைவிட அதிகமாய்ப் பேசுகிறான். அவனுடைய பேச்சைக் கேட்போர் எல்லாம் அவனுடைய தாயும் சகோதரருமாம்’

‘அவன் பைத்தியக் காரன் தான். இல்லையென்றால் இப்படியெல்லாம் பேசுவானா ?’ அன்னா மெலிதாய் புன்னகைத்தார்.

‘அப்படி ஒதுக்க முடியாது தலைவரே. அவன் மக்களுக்காக உயிரைப் பலியாகக் கொடுப்பானாம் அதனால் மக்கள் பலி செலுத்தத் தேவையில்லையாம். இப்படி ஒரு அறிவிப்பை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தால் நமக்கு ஏற்படக்கூடிய இழப்பை நீங்கள் எண்ணிப்பாருங்கள். மக்கள் ஆலயத்தில் புறாக்களையோ, ஆடுகளையோ வாங்காமல் இருந்தால் நமக்கு நேரப்போகும் பொருளாதார இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல’ கயபா நிலமையை கொஞ்சம் கொஞ்சமாய் சூடேற்றினான்.

‘இதை ஏன் நீங்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லவில்லை ?’ அன்னாவின் குரலில் இப்போது கோபம் வெளிப்படையாகவே தெரிந்தது.

‘சுமார் ஆறு வாரத்துக்கு முன் பெத்தானியாவில் இலாசரஸ் என்னும் ஒருவனை அடக்கம் செய்த நான்கு நாட்களுக்குப் பின் உயிருடன் எழச் செய்திருக்கிறான் ‘ கயபா தொடர்ந்தான்.

‘நீ நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறாய் கயபா.’

‘இதுதான் வேளை. அவனை இன்று இரவு பார்த்துக் கொள்ளலாம். ‘ கயபா சொன்னான். அன்னாவின் கோபத்தைக் கிளறிவிட்ட திருப்தி அவனுக்கு.

‘என்ன குற்றம் சொல்லப் போகிறீர்கள் ?’

‘போலி தீர்க்கத் தரிசனம் !’ கயபா சொல்ல அன்னா நெற்றியைத் தேய்த்தான். சந்தர்ப்பத்தை எந்தவிதத்திலும் நழுவ விடக்கூடாது என்று முடிவெடுத்த் கயபா முக்கியமான அஸ்திரத்தை வீசினான்.

‘எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு செய்தி சொல்கிறேன். அவன் கோயிலில் என்ன செய்தான் தெரியுமா ? நம்முடைய விற்பனையாளர்களையெல்லாம் அடித்து விரட்டினான். கேட்டால் அது அவனுடைய தந்தையின் வீடாம். நாம் அதை கள்வர் குகையாக்கியிருக்கிறோமாம்.’ கயபா துருப்புச் சீட்டை வீசினான்.

அன்னா கோபத்தில் எழுந்தார். ‘ என்ன நம்முடைய வியாபாரிகளை விரட்டினானா ? நம்முடைய ஆலயம் அவனுடைய தந்தையின் இல்லமா ?’ அன்னா கொதித்தார்.

‘இந்த விழா மட்டும் முடியட்டும் அவனை முடிப்போம்’ அன்னா சொல்ல கயபா குறுக்கிட்டான்.

‘இல்லையில்லை… நான் அவ்வளவு நாள் காத்திருக்கவே கூடாது. ஏன் ஒரு நாள் கூட காத்திருக்கக் கூடாது. அவன் தப்பிவிடுவான். நம்முடைய பார்வையில் இங்கே எருசலேமில் இருக்கும்போதே காரியத்தை கட்சிதமாய் முடித்து விட வேண்டும்’

‘அதுவும் சரிதான். ஆனால்… இந்த மக்களும், ஆளுநன் போந்தியு பிலாத்துவும் தான்….. ‘ அன்னா இழுத்தார்.

‘மக்களை விட்டு விடுங்கள். பிலாத்துவை சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கான தகுதியும், அனுபவமும், திறமையும் உங்களுக்குத் தான் இருக்கிறது. ‘ கயபா சொல்ல அன்னா தலையாட்டினான்.

‘சாட்சிக்கு யாராவது வருவார்களா ?’ அன்னா கேட்டான்

‘யாரும் வரமாட்டார்கள். அதற்கும் திட்டம் வைத்திருக்கிறேன். பார்க்கலாம்…’ கயபா சொன்னான்.

‘எப்படிக் கைது செய்யப் போகிறீர்கள் ?’

‘இரவில் அவன் எங்கே தங்குவான் எங்கே போவான் என்பதெல்லாம் புரியாத புதிர் தான். எனவே அவனுடைய சீடர்களில் ஒருவனையே வலைவீசிப் பிடித்து ஆசை காட்டி வைத்திருக்கிறோம். அவன் நமக்கு உதவுவான். இரவில் இயேசு எங்கே தங்குவார் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும்’ கயபா சொன்னான்.

‘நமக்கு அவனுடைய ஆள் துணை வேண்டுமா என்று யோசித்துக் கொள்.’ அன்னாவின் குரலில் அனுமதி தெரிந்தது.

‘கைது செய்யும்போது படைவீரர்கள் மட்டும் தான் இருப்பார்கள். அவர்களில் பலர் இயேசுவைப் பார்த்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல இயேசு எங்கே இருப்பார் என்பது நமக்கு தெரியாது. எனவே அவனுடைய ஆள் ஒருவன் இருப்பது நமக்கு பலம் தான்.’ கயபா நியாயப் படுத்தினான்.

‘சரி.. யார் அது ? அவன் பெயர் என்ன ?’ அன்னா கேட்க, கயபா பதில் சொன்னான்.

‘யூதாஸ் இஸ்காரியோத். இன்னும் சற்று நேரத்தில் இங்கே வந்து விடுவான்.’



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 40 : பணி வாழ்வுக்குத் தேவை பணிவு

Image result for Jesus washing disciples feet

அதே நேரத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக சீயோன் மலை மீதிருந்த ஒரு வீட்டின் மேல் மாடியில் அமர்ந்தார். பெரிய அறை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அசைந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தை தேர்வு செய்ததே ஒரு வியப்பான நிகழ்ச்சி தான். இயேசு தன்னுடைய சீடர்களிடம், நீங்கள் ஊருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒருவர் உங்களுக்கு எதிரே வருவார். அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டில் நீங்களும் சென்று வீட்டு உரிமையாளரிடம், இயேசு தன்னுடைய சீடர்களுடன் அமர்ந்து பாஸ்கா உணவை உண்பதற்கான அறை ஏது என்று கேளுங்கள். அவர் உங்களுக்கு ஒரு அறையை காட்டுவார். அது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் அங்கே நம் உணவு உண்ண ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லியிருந்தார். அப்படியே எல்லாம் நிகழ்ந்தன.

பாஸ்கா உணவு உண்ணும் வேளை.

‘நாம் இணைந்து உண்ணும் கடைசி பாஸ்கா விருந்தல்லவா இது ! எனவே இதை மிகவும் சிறப்பானதாகக் கொண்டாடவேண்டும்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

‘கடைசி விருந்தா ? என்ன சொல்கிறீர்கள் ?’ சீடர்கள் திகைப்புடன் கேட்டார்கள்.

‘ஆம்… இன்னும் சிறிது காலமே என்னைக் காண்பீர்கள். பின்னர் சிறிது காலம் என்னைக் காண மாட்டீர்கள். பின்பு மீண்டும் என்னைக் காண்பீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சொல்கிறீர்கள் ? எங்களை விட்டு விட்டு வேறெங்கேனும் செல்கிறீரோ ?’

‘ஆம். என் தந்தையிடம் செல்கிறேன்.’ இயேசு சொல்ல சீடர்கள் இன்னும் அதிகமாய்க் குழம்பினார்கள். ஒருவேளை இயேசு போதனைகளைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்துவிட்டு தன்னுடைய தந்தையுடன் சில நாட்கள் செலவிடப் போகிறார் போலிருக்கிறது என்று சீடர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

‘இன்னும் ஏன் முணுமுணுப்பு. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதோ நான் என்னுடைய உயிரை பகைவர்களின் கையில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’

‘பகைவர் கையிலா ? உமது உயிரா ? அதெல்லாம் நடக்காது. நாங்கள் பன்னிரண்டு பேரும் உமக்குப் பக்க பலமாய் இருப்போம்’ சீடர்கள் சொன்னார்கள்.

பின்பு இயேசு யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து முழங்காலைத் தரையில் ஊன்றி சீடரின் பாதத்தருகே குனிந்தார். சீடர் திடுக்கிட்டார்.

‘க…கடவுளே என்ன இது ? எ..என் காலருகே ….’

‘நான் உங்கள் பாதங்களைக் கழுவப் போகிறேன்..’ இயேசு சொன்னார். விழாக்காலங்களில் அடிமைகள் தான் விருந்தினர்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அப்படியானால் இயேசு, தங்கள் தலைவர், அடிமைகளின் வேலையைச் செய்கிறாரா ? சீடர்கள் மீண்டும் அதிர்ந்தனர்

‘ஐயோ கடவுளே.. இதென்ன விளையாட்டு… வேண்டாம். நீர் என் பாதத்தைத் தொடக்கூடாது.’ சீடர் அதிர்ச்சியுடன் காலைப் பின்னால் இழுத்தார்.

‘இல்லை. நான் உன்னுடைய பாதங்களைக் கழுவ வேண்டும். இல்லையேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !’

சீடர்கள் ஸ்தம்பித்தார்கள். இயேசு ஒவ்வொருவராக அனைவருடைய பாதங்களையும் கழுவி, இடையில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்.
சீடர்கள் கூசினார்கள். தங்கள் கடவுள் தங்கள் கால்களைக் கழுவுவதா என்று அதிர்ந்தார்கள்.

யோவானின் காலருகே வந்தபோது,’ கடவுளே என் கால்களைக் கழுவ வேண்டாம். வேண்டுமானால் தலையில் தண்ணீர் ஊற்றும்.’ யோவான் உளறினார்.

‘குளித்து விட்டவன் கால்களைக் கழுவினாலே போதும்’ இயேசு சொல்லிக் கொண்டே அவருடைய காலையும் கழுவினார்.

எல்லா சீடர்களின் கால்களையும் கழுவி முடித்த இயேசு அவர்களைப் பார்த்து,’ நான் ஏன் உங்கள் பாதங்களைக் கழுவினேன் தெரியுமா ?’ என்று கேட்டார்

‘தெரியாது..’

‘பணி வாழ்வுக்கு முக்கியமானது பணிவு. உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்..’ இயேசு சொன்னார்.

‘அதைச் சொன்னால் போதுமே கடவுளே.. நீரே எங்கள் கால்களைக் கழுவ வேண்டுமா ?’

‘கடவுளாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் அந்தப் பணிவைக் கடைபிடியுங்கள். வெறும் பேச்சில் அல்ல செயல்களில் உங்கள் பணிவைக் காட்டுங்கள் ‘ இயேசு அமைதியாய்ச் சொன்னார். பின் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு உணவருந்த அமர்ந்தார்.

இயேசு அப்பத்தை எடுத்து விண்ணகத் தந்தையிடம் செபித்தார். பின்பு அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து
‘இது என்னுடைய உடல். இதை உண்பதன் மூலம் என்னுடன் நீங்கள் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்து கொள்கிறீர்கள்’ என்றார்.

பின் திராட்சை இரசம் இருந்த கிண்ணத்தை எடுத்து செபித்து சீடர்களுக்குக் கொடுத்து,’ இது என்னுடைய இரத்தம் ! இதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் உடன்படிக்கையை உறுதி செய்து கொள்கிறீர்கள்.’ என்றார்.

‘மனுமகன் பாடுகள் படவேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இயேசு சொல்ல சீடர்கள் அதிர்ந்தார்கள்.

‘எங்களில் ஒருவனா ? யார் அது ? சொல்லுங்கள் இயேசுவே யார் அது ?’ சீடர்களுக்குள் திடீர் சலசலப்பு. இயேசுவோடு உறுதியாய் இருந்த சீடர்கள் இயேசுவின் திடீர் அறிவிப்பைக் கேட்டு குழம்பினார்கள். அவர்களிடையே கோபம் உலவியது.
‘இயேசுவே என்ன சொல்கிறீர் ? யாரைச் சொல்கிறீர் ? நானா ? சொல்லும்’ சீடர்கள் இயேசுவை வேண்டினர்.

‘நானா ?’

‘நான் காட்டிக் கொடுக்கவே மாட்டேன்…’ யூதாசும் தன் பங்குக்குச் சொல்லி வைக்க, இயேசு யூதாஸைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘நான் யாருக்கு இந்த அப்பத்தை அளிக்கிறேனோ அவனே….’ என்று சொன்ன இயேசு அப்பத்தைப் பிட்டு, பாஸ்கா ஆட்டின் கறியில் தோய்த்து யூதாசுக்கு வழங்கினார்.

சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘அப்படியானால் யூதாஸ் தான் இயேசுவைக் காட்டிக் கொடுப்பவனா ?’ அவர்களுக்குள் குழப்பம். யூதாஸ் இயேசுவின் சீடர்களில் அதிகம் பேசப்படாமல் இருந்த ஒரு சீடர். கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பணியை அவன் செய்து வந்தான்.

இயேசு அப்பத்தை அனைவருக்கும் அளித்தார்.

அப்பமும் இரசமும் பகிர்ந்தளிக்கப் பட்டது. அனைவரும் உண்டார்கள்.

‘யூதாஸ்… உன்னைப் பார்த்தால் ஏதோ அவசர வேலை இருப்பது போல் இருக்கிறதே..’ இயேசு கேட்டார்.

‘ஆ..ஆம். கடவுளே… எ…எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது..’ யூதாஸ் தடுமாறினான்.

‘போ யூதாஸ். செய்யவேண்டியவற்றைத் தாமதப்படுத்தாமல் செய்’ இயேசு அவனை அனுப்பி வைக்க சீடர்களிடையே மீண்டும் சலசலப்பு. யூதாஸ் அப்பத்தை மட்டும் உண்டு விட்டு இரசத்தைக் குடிக்காமல் எழுந்து சென்றான்.

‘அமைதியாய் இருங்கள். நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தெரியும். இதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருந்தீர்கள். இனிமேல் வலிகளின் காலம். பணப்பையும், தேவையான பொருட்களும், ஆயுதங்களும் உங்களுடன் இருக்கட்டும். ஏனென்றால் இனிமேல் நீங்கள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ இயேசு சொன்னார்.

பேதுரு நடப்பவற்றையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இயேசுவே நீர் என்ன சொல்கிறீர் ? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர் ?’

‘பேதுரு ! எல்லோரும் என்னை விட்டு விட்டு ஓடி விடப் போகிறீர்கள். அதைத் தான் சொன்னேன்’

‘கடவுளே… எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஓடிப் போக மாட்டேன்’ பேதுரு உறுதியுடன் சொன்னார்.

‘பேதுரு… என்னருமை சீடனே. நாளை விடியற்காலையில் கோழி கூவும் முன் நீ என்னை மூன்று முறை மறுதலித்துப் பேசுவாய் !’ இயேசு சொல்ல பேதுரு மறுத்தார்.

‘கண்டிப்பாக அப்படி நடக்காது. உம்முடன் சேர்ந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர உம்மை மறுதலிக்கவே மாட்டேன்’

‘பேதுரு. வருந்தாதே. நீ மறுதலிப்பாய். ஆனால் அதன்பின்பு மனம் மாறி என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்’ இயேசு சொல்ல பேதுரு மீண்டும் மறுத்தார்
‘இல்லை கடவுளே… உம்மை மறுதலிக்கமாட்டேன். மரணமடைய நேர்ந்தாலும் மறுதலிக்கமாட்டேன்’. எல்லா சீடர்களும் அவ்வாறே சொன்னார்கள்

இயேசு புன்னகைத்தார்

இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார்.

‘உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்’. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது.

‘நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தந்தையை அறிந்தவர்களாயிருக்கிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே தந்தையை எங்களுக்குக் காட்டும். அது போதும் எங்களுக்கு’ கடவுளைப் பார்க்கும் ஆவலில் சீடர்கள் கேட்டார்கள்.

இயேசு சற்று நேரம் மௌனமாய் இருந்தார். பின் அவர்களிடம்
‘இத்தனை நான் உங்களோடு இருந்தான் இன்னும் நான் யார் என்பதை நீங்கள் அறியவில்லையா ? என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். நானே அவர். நான் உங்களிடம் பேசியவை எவையும் நான் பேசியவை அல்ல, என் தந்தை பேசியவையே. ‘ இயேசு சொல்ல சீடர்கள் புருவம் உயர்த்தினார்கள். விண்ணகத் தந்தையும் தானும் ஒன்று என்னும் ரகசியத்தை இயேசு மரிக்கப் போகும் நேரத்தில் வெளியிடும் காரணம் புரியாமல் தடுமாறினார்கள். முதலிலேயே சொல்லியிருந்தால் இயேசுவைக் கடவுளாகப் பார்த்தால் இணைந்து பணியாற்றியிருக்க முடியுமா என்னும் கேள்வியும் அவர்களைச் சுற்றியது.

‘நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் நான் அதை உங்களுக்குத் தருவேன். நீங்கள் என்னை அன்பு செய்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். நான் தந்தையிடம் கேட்பேன் அவர் தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவார். அவர் உங்களுக்கு தைரியமும் வழிகாட்டுதலும் தருவார்’ இயேசு தொடர்ந்து சொன்னார்.

‘உங்களிடையே அமைதியை விட்டுச் செல்கிறேன். இந்த அமைதியை நீங்கள் உலகுக்கு வழங்குங்கள். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகளிலும் நிலைத்திருங்கள்…’ இயேசு தொடர்ந்து சற்று நேரம் சீடர்களுக்கு ஆறுதலும், போதனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.

‘வாருங்கள் போவோம். நேரம் நெருங்கிவிட்டது’ இயேசு திடீரென்று எழுந்தார். சீடர்களும் எழுந்தார்கள்.

இயேசு கெத்சமெனி தோட்டத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சீடர்கள் பின் தொடர்ந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 41 : இயேசுவின் மரணமும், உயிர்ப்பும்

Jeus

இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார்.

‘உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்’. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது.

‘நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தந்தையை அறிந்தவர்களாயிருக்கிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே தந்தையை எங்களுக்குக் காட்டும். அது போதும் எங்களுக்கு’ கடவுளைப் பார்க்கும் ஆவலில் சீடர்கள் கேட்டார்கள்.

இயேசு சற்று நேரம் மௌனமாய் இருந்தார். பின் அவர்களிடம்
‘இத்தனை நான் உங்களோடு இருந்தான் இன்னும் நான் யார் என்பதை நீங்கள் அறியவில்லையா ? என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். நானே அவர். நான் உங்களிடம் பேசியவை எவையும் நான் பேசியவை அல்ல, என் தந்தை பேசியவையே. ‘ இயேசு சொல்ல சீடர்கள் புருவம் உயர்த்தினார்கள். விண்ணகத் தந்தையும் தானும் ஒன்று என்னும் ரகசியத்தை இயேசு மரிக்கப் போகும் நேரத்தில் வெளியிடும் காரணம் புரியாமல் தடுமாறினார்கள். முதலிலேயே சொல்லியிருந்தால் இயேசுவைக் கடவுளாகப் பார்த்தால் இணைந்து பணியாற்றியிருக்க முடியுமா என்னும் கேள்வியும் அவர்களைச் சுற்றியது.

‘நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் நான் அதை உங்களுக்குத் தருவேன். நீங்கள் என்னை அன்பு செய்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.  நான் தந்தையிடம் கேட்பேன் அவர் தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவார். அவர் உங்களுக்கு தைரியமும் வழிகாட்டுதலும் தருவார்’ இயேசு தொடர்ந்து சொன்னார்.

‘உங்களிடையே அமைதியை விட்டுச் செல்கிறேன். இந்த அமைதியை நீங்கள் உலகுக்கு வழங்குங்கள். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகளிலும் நிலைத்திருங்கள்…’ இயேசு தொடர்ந்து சற்று நேரம் சீடர்களுக்கு ஆறுதலும், போதனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.

‘வாருங்கள் போவோம். நேரம் நெருங்கிவிட்டது’ இயேசு திடீரென்று எழுந்தார். சீடர்களும் எழுந்தார்கள்.

இயேசு கெத்சமெனி தோட்டத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சீடர்கள் பின் தொடர்ந்தார்கள்.
யூதாசுடன் ஆலோசனை

Judas

அன்னாவின் முன்னிலையில் கயபா இயேசுவைப் பிடிக்க அனுமதிக்காய் உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில் யூதாஸ் உள்ளே வந்தான்.

அன்னாவையும் கயபாவையும் யூதாஸ் பணிந்து வணங்கினான்.

‘உன் பெயரென்னப்பா ?’ அன்னா கேட்டார்.

‘யூதாஸ் இஸ்காரியோத். சீமோனின் மகன்’

‘ஊர் ?’

‘கேரியாத்’

‘நீ எத்தனை காலமாக நீ இயேசுவின் நண்பனாக இருக்கிறாய் ?’

‘சுமார் மூன்று ஆண்டுகளாக ‘

‘கேரியாத்தில் பிறந்த ஒரு நல்ல மனிதன் நீ. நீ எப்படி ஒரு கலிலேயனான இயேசுவுடன் நட்பு வைத்தாய் ?’ அன்னா கேட்டார்.

‘நான் இயேசுவை நம்புகிறேன்’

‘எதை நம்புகிறாய் ?’

‘இயேசு சொல்லும், செய்யும் எல்லாவற்றையும் நம்புகிறேன்’ யூதாஸ் சொன்னான். அன்னாவின் கண்களில் கோபத்தின் மின்னலடித்தது.

‘அப்படியென்றால் எதற்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தாய் ?’

‘நான் இயேசுவைக் காட்டிக் கொடுப்பது ஒருவேளை அவருடைய நன்மைக்காகக் கூட இருக்கலாம். அவருக்கு பொது இடங்களில் எதிர்ப்புகளும் வருகின்றன. அவர் அதிலிருந்து தப்பவேண்டுமென்றால் அரச காவலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை நீங்கள் எதுவும் செய்யமாட்டீர்கள், காயப்படுத்த மாட்டீர்கள் என்றால் தான் அவரைக் காட்டித் தருவேன்.’ யூதாஸ் சொன்னான்.

‘யூதேய ஆளுநர்களின் நேர்மை இரக்கம் குறித்து சந்தேகப்படுகிறாயா ?’ அன்னா குரலுயர்த்தினார்.

‘இல்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இயேசு ஒரு நல்ல மனிதர். அதனால் தான்…’ யூதாஸ் இழுத்தான்.

‘நீ இயேசுவுடன் சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டாய் என்பதற்காக உன்னையும் கைது செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் ரோம அரசுக்கு எதிராக ஆட்களைக் கூட்டி கலகத்தில் ஈடுபட்டிருந்த பரபாஸைப் பிடித்து சிறையில் அடைத்திருக்கிறோம்.. தெரியுமா ?’ காய்கா அதிகாரத் தோரணையைக் காட்டினான்.

‘சரி.. நீ.. இயேசுவுடன் என்ன செய்து கொண்டிருந்தாய் ?’

‘நான் அந்த கூட்டத்தின் பொருளாளராக இருந்தேன். கணக்கு வழக்குகளைப் பார்ப்பது தான் என் பணி’

‘ஓ.. நல்ல பணப் புழக்கமா ?’

‘இல்லை வெகு கொஞ்சமாகத் தான். இயேசு உண்பதிலும் தங்குவதிலும் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. ஏதேனும் உண்பார். ஏதாவது மலைகளில் படுத்துறங்குவார். அவருக்கு பணம் தேவைப்பட்டதில்லை’

‘இயேசு கூட்டத்தினரிடையே வன்முறையைத் தூண்டி விடுகிறானாமே’ அன்னா மீண்டும் கேட்டார்

‘ஐயோ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கூட காட்டுமளவுக்கு அமைதியானவர். சில வேளைகளில் கோபமடைந்து விடுகிறார். ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி அப்படி நடந்த ஒரு அபூர்வ நிகழ்ச்சி’

‘அவர் எங்களைக் குறிவைத்து எதிர் பிரசாரங்கள் செய்வதும், கூட்டம் சேர்த்துக் கொண்டு ஓசான்னா பாடி பவனி வருவதுமெல்லாம் குற்றம் என்பதை நீங்கள் யாரும் அவருக்குச் சொல்வதில்லையா ?’ அன்னா கேட்டார்

‘அவர் சரியெனப் படுவதைச் செய்வார்.’ யூதாஸ் அமைதியானான்.

‘சரி.. ஏன் இப்போது இயேசுவுக்கு எதிராக செயல்படுகிறாய் ? இதில் ஏதும் சதி இல்லையே ? இயேசுவுடன் சேர்ந்துவிட்டு நீ ஏதும் தனியாக திட்டம் வைக்கவில்லையே ? அப்படி நடந்தால் அதன் தண்டனை என்னவென்று தெரியுமா ?’ அன்னா எச்சரித்தான்

‘இல்லை.. இல்லவே இல்லை. இதில் எந்த சதியும் இல்லை. என்னை நீங்கள் முழுதாய் நம்பலாம்’ யூதாஸ் படபடத்தான்

‘இரவாக இருக்கிறது. எனவே நீ அவரைத் தொட்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் காட்டவேண்டும். நாங்கள் அவரைப் பிடித்துக் கொள்வோம்’ அவர் சொல்ல யூதாஸ் உள்ளுக்குள் சிரித்தான். இயேசுவைப் பிடிக்கப் போகிறீர்களா ? மடையர்களே எத்தனை முறை நீங்கள் அவரைக் கொல்லப் பார்த்தீர்கள். அவர் உங்கள் கைகளுக்கு அகப்படாமல் மறைந்து போனது தெரியாதா ? நான் காட்டிக் கொடுத்தாலும் நீங்கள் அவரைப் பிடிக்கும் முன் அவர் உங்களிடமிருந்து தப்பி விடுவார்.

Image result for Judas receiving silver coins

‘இதோ… முப்பது வெள்ளிக்காசுகள். இது உனக்கான ஊதியம். நீ ஆள்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் தரப்படுகிற பரிசு’ அன்னா சொல்ல, யூதாஸ் ஆர்வத்துடன் அந்த சுருக்குப் பையை கைகளில் ஏந்தினான். உள்ளே முப்பது வெள்ளிக்காசுகள் அவனுடைய கனவுகளுக்கு சிறகுகள் செய்து கொண்டிருந்தன.

‘தொட்டு என்ன ? அவரை நான் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன். நீங்கள் அவர் தான் இயேசு என்று அறிந்து கொள்ளுங்கள்’ யூதாஸ் சொன்னான். சும்மா இவர் தான் இயேசு என்று சொல்வதற்கே எனக்கு முப்பது வெள்ளிக் காசுகளா ! அவனுடைய மனம் குதூகலித்தது.

‘சரி. இன்று இரவு எருசலேம் நகர் தூங்கியபின் நீ அவரை எங்கள் படைவீரருக்கு அடையாளம் காட்டு. அவர் இருக்குமிடத்துக்கு அவர்களைக் கூட்டிப் போ.’ சொல்லிக்கொண்டே அன்னா இருக்கையில் அமர்ந்தான்.

யூதாஸ் சிரித்தான். ‘வாருங்கள்…  போவோம்…’
இயேசு கைது செய்யப்படுகிறார்.

இயேசு அங்கிருந்து கெத்சமெனி என்னும் தோட்டத்துக்கு வந்தார். அது ஒலிவமலையில் இருந்தது.

கெத்சமெனி அழகான தோட்டம். தனிமையாய் செபம் செய்வதற்கு உகந்த இடம். இயேசு தன்னுடன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் சென்றார். மற்ற எட்டு சீடர்களும் தோட்டத்தில் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாறினார்கள். யூதாஸ் மட்டும் அங்கே இல்லை.

யூதாஸ் அந்த நேரத்தில் பகைவர்களின் பாசறையில் இருந்தான் !

இயேசு கெத்சமெனி தோட்டத்தில் செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செபித்தபின் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் ‘தூங்காதீர்கள். விழித்திருந்து செபியுங்கள். இந்த இரவு மிகவும் கடினமானது..’ இயேசு சொல்ல அவர்கள் கண்களைக் கசக்கினார்கள்.

இயேசு மீண்டும் தனிமையில் செபிக்கச் சென்றார். அவருடைய மனம் கடும் போராட்டத்திலும், வலியிலும் ஆழ்ந்தது
‘தந்தையே… நீர் என்னை அனுப்பிய பணியை நான் முடித்து வைக்கும் வலிமையைத் தாரும். நீர் விரும்பினால் இந்தத் துன்பத்தின் பாத்திரம் என்னை விட்டு அகன்று போகும். ஆனாலும் என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்’ இயேசு செபித்தார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுந்து தெறித்தது. வேதனையின் பாரம் கண்களில் தெரிந்தது.

அவர் திரும்பி வந்து சீடர்களைப் பார்க்க, அவர்கள் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை மீண்டும் எழுப்பினார்.
‘என்னுடன் ஒருமணிநேரம் கூட விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா ?’ இயேசுவின் குரலில் வருத்தம் தெரிந்தது. சொல்லிவிட்டு மீண்டும் அவர் செபிக்கச் சென்றார்.

செபித்துவிட்டு மூன்றாம் முறையாகத் திரும்பி வந்தார். இப்போது இயேசுவின் முகம் தெளிவடைந்திருந்தது. நடக்கப் போவதை எதிர்கொள்ளும் வலிமையை அவருடைய செபம் அவருக்கு வழங்கியிருந்தது. சீடர்களோ அப்போதும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். இயேசு அவர்களை எழுப்பினார்.

‘உங்கள் மனம் வலிமையானது தான். ஆனால் உடல் வலுவற்றது. சோதனைகளைக் கடக்க வேண்டுமானால் செபம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். சரி.. சரி… எழுந்திருங்கள். நாம் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மானிட மகனைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கிவிட்டான்.’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாத முகங்களுடனும், சோர்வுற்ற இமைகளுடனும் விழித்தார்கள்.

இயேசு செபிக்கத் துவங்கும் போதே சுமார் பத்து மணியளவிலேயே யூதாஸ் அன்னாவின் முன்னிலையிலிருந்து இயேசுவைக் காட்டிக் கொடுக்க புறப்பட்டான். அவனுடன் ஆறு ரோம வீரர்களும் ஒரு தலைமை வீரனும். தீப்பந்தங்களும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தன.

அவர்கள் அருகிலிருந்த தெரு வழியாக நடக்கத் துவங்கினார்கள். எங்கும் நிசப்தம். வீரர்களின் காலடி ஓசை தவிர எதுவும் தெருவில் நடமாடவில்லை. சிறு சிறு ஒற்றையடிப் பாதைகளில் புகுந்தும், வளைவான பாதைகளில் கவனமாய் நடந்தும் அவர்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. சீலோவாம் குளத்தருகே அவர்கள் வந்தார்கள். வாயில் காவலனிடம் விழிப்பாய் இருக்கும் படி தகவல் அளித்துவிட்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

நகர எல்லைக்கு வெளியே இருந்த தோட்டத்தை நோக்கி யூதாஸ் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனான். கூட வந்த வீரர்கள் குழம்பினார்கள். இந்த இரவு வேளையில் இயேசு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார். பேயோட்டுகிறாரா அல்லது ஏதேனும் மந்திரம் தந்திரம் பழகுகிறாரா ? பேய்களுடன் உரையாடுகிறாரா ? என்ன தான் செய்கிறார் என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டார்கள்.

பயணம் கேத்ரோனை வந்தடைந்தது. அங்கிருந்து ஒலிவமலை நோக்கி வீரர்களை வழி நடத்தினான் யூதாஸ். வீரர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய அதிசயச் செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் பயந்தார்கள். யூதாஸ் அவர்களுக்கு தைரியமூட்டினான். கவலைப்படாதீர்கள். இயேசு நமக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவரே சொல்லியிருக்கிறார் எதிரிகளிடம் கையளிக்கப் படுவேனென்று. எனவே எந்த பிரச்சினையும் இன்றைக்கு நடக்காது கவலையை விடுங்கள்.

அங்கிருந்து கெத்சமெனி தோட்டத்தை நோக்கி யூதாஸ் நடந்தான். அமானுஷ்ய நிசப்தத்தை அவனுடைய பையில் இருந்த வெள்ளிக்காசுகளின் முனகல் சற்று விலக்கியது. கெத்சமெனி தோட்டத்தை நெருங்குகையில் யாரோ பேசிக்கொண்டிருக்கும் சத்தம். அது இயேசு தான். இயேசு இந்த இரவில் செபித்துக் கொண்டிருக்கிறார் !

யூதாஸ் திரும்பினான். இன்னும் சற்று நேரத்தில் இயேசு இருக்கும் இடத்துக்குச் சென்று சேரலாம். அங்கே சீடர்களும் இருப்பார்கள். நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர் தான் இயேசு. நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். யூதாஸ் சொல்ல வீரர்கள் தலையாட்டினார்கள்.

யூதாசும், வீரர்களும் இயேசு இருந்த திசை நோக்கி நடந்தார்கள். அதற்குள் இயேசு செபத்தை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த சீடர்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.

யூதாஸ் ஒரு புன்னகையுடன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்றார். இயேசு அவனைப் பார்த்தார். இயேசுவின் பார்வை அந்த இரவிலும் பளீரடித்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 

Image result for Judas kissing Jesus

‘ராபி…. நீர் வாழ்க’ யூதாஸ் புன்னகையுடன் இயேசுவைக் கட்டிப் பிடித்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான்.

இயேசு அவனை இறுக அணைத்துக் கொண்டார்.
‘தோழா… முத்தமிட்டா மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறாய் ?’ இயேசு கேட்க யூதாஸ் திடுக்கிட்டான்.

‘நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்கள் ?’ இயேசு படைவீரர்களைப் பார்த்துக் கேட்டார்.

‘இ…இயேசுவை ‘ அவர்கள் சற்று உதறலுடன் பதில் சொன்னார்கள்.

‘நான் தான் அவர்’

இயேசு சொன்னதும் அவருடைய குரலில் இருந்த உறுதியைக் கண்ட படை வீரர்கள் பின் வாங்கினார்கள்.

‘என்னைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள். வாருங்கள். என்னைப் பிடிப்பதற்கு எதற்கு இத்தனை வாள்கள், தீப்பந்தங்கள், படை வீரர்கள். நான்தான் தினமும் கோயிலில் போதித்து வருகிறேன், மக்களோடு உரையாடுகிறேன். வாருங்கள் கைது செய்யுங்கள்’ இயேசு சொல்ல படைவீரர்கள் மீண்டும் தயங்கினார்கள். இயேசு ஏதேனும் செய்து தங்களைக் கொன்று விடுவாரோ என்று படைவீரர்களுக்குள் பயம்.

யூதாஸ் அந்தக் கூட்டத்தை விட்டு மெல்ல நழுவினான்.

படைவீரர்களோடு வந்திருந்த தலைமைக் குருக்கள். ‘ பிடியுங்கள் அவனை… ஏன் தயங்குகிறீர்கள்’ என்று சொல்லி படைவீரர்களைத் தூண்ட படைவீரர்கள் முன்னே சென்று இயேசுவைப் பிடித்தார்கள்.

அவ்வளவுதான் இயேசுவுடன் இருந்த ஒரு சீடர் தன்னுடைய வாளை உருவி ஒரு படைவீரனின் காதை வெட்டினான். வெட்டப்பட்டக் காது தரையில் தெறித்துப் போய் விழுந்தது. படைவீரன் வலியில் துடித்தான். இயேசுவின் சீடர்கள் அனைவரும் வினாடி நேரத்தில் ஒரு சண்டைக்கு ஆயத்தமானார்கள். படைவீரர்களும் தங்கள் வாள்களை உருவினார்கள்.

இயேசுவோ அந்தச் சீடரைக் கடிந்து கொண்டார். அவர் போருக்குத் தயாராக இல்லை.
‘உன் வாளை உறையிலே போடு. வாள் எடுப்பவன் வாளால் மடிவான். இவர்களைத் தாக்க வேண்டுமென்று தான் தந்தையிடம் சொன்னால் வினாடி நேரத்தில் இவர்களைத் தவிடு பொடியாக்கும் படையை அவர் எனக்குத் தருவார். நிகழ வேண்டியவை நிகழத்தான் வேண்டும்.’ என்று சொல்லிய இயேசு, அந்தக் காதை எடுத்து வெட்டுப் பட்ட இடத்தில் வைக்க அது ஒட்டிக் கொண்டது.

படைவீரன் அதிர்ந்தான். கொலைசெய்வதற்காக வந்தோம் என்று தெரிந்தும் கூட இயேசு தன்னைக் குணமாக்கினாரே என்பதை நினைக்க நினைக்க அவன் உள்ளுக்குள் கூனிக் குறுகினான்.

மற்ற படை வீரர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இயேசுவைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்தார்கள்.

இயேசு பிடிபட்டதைக் கண்ட சீடர்கள் சிதறி ஓடினார்கள். ஒரு படைவீரன் ஓடிக்கொண்டிருந்த சீடரின் ஆடையை எட்டிப் பிடிக்க அவர் ஆடையை அவிழ்த்து விட்டு நிர்வாணியாகவே இருட்டுக்குள் ஓடினார். படை வீரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். மரித்தாலும் உம்முடன் வருவேன் என்று சொன்ன பேதுருவையும் அங்கே காணவில்லை !

அவரும், யோவானும் தலையில் முக்காடிட்டுக் கொண்டு தூரத்தில் நின்று இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று பதட்டம் வடியும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 அன்னா முன்னிலையில்

Image result for jesus in front of Annas

அன்னா தன்னுடைய அறையில் பதட்டத்துடன் உலவிக்கொண்டிருந்தார். எத்தனை பேரைக் கொன்றாலும் மீண்டும் மீண்டும் யாராவது முளைத்து மெசியா என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்களே என்று அவருடைய மனம் கோபத்தில் இருந்தது. இயேசுவைக் கைது செய்திருப்பார்களா ? அல்லது அவன் ஏதேனும் மந்திரம் செய்து மறைந்திருப்பானா ? அவனுடைய மனதில் கேள்விகள் அணிவகுத்தபோது கதவு திறக்கும் ஓசை. படைத் தலைவன் நின்றிருந்தான்.

தலைவரே… நாசரேயனாகிய இயேசு கைது செய்யப்பட்டார். இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வரப்படுகிறார் என்று சொல்ல, அன்னா உற்சாகமானான். சற்று நேரத்தில் கைகள் பிணைத்துக் கட்டப்பட்ட இயேசு அன்னாவின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.

அன்னா இயேசுவைப் பார்த்தான். சாதாரண உடை, சாதாரண எளிமையான தோற்றம். ஆனால் வலிமையான பார்வை. பதட்டமில்லாத முகம். இயேசுவைப் பார்த்த அன்னாவின் மனதில் குழப்பங்கள் ஓடின. உண்மையிலேயே இந்த மனிதன் இத்தனை அதிசயங்கள் செய்தவனா ?

இந்த மனிதனைக் கொல்வதொன்றும் பெரிய செயலாக இருக்காது எளிமையாக முடிந்து விடும் என்று நினைத்தான் அன்னா. இயேசுவின் ஆதரவாளர்கள் யாருமே கூட இல்லை. எனவே அன்னாவின் தைரியம் இன்னும் அதிகரித்தது. ஆனால் தூரத்தில் பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல  வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இயேசுவைப் பிடிப்பதில் ஏதும் கஷ்டம் இருக்கவில்லையே, அன்னா கேட்டான்.

ஒரு சிறு கைகலப்பு நிகழ்ந்தது. இயேசுவின் சீடர் ஒருவர் நம்முடைய படைவீரன் ஒருவரின் காதை வெட்டி விட்டான். காது துண்டாகி விட்டது.

‘என்ன காது துண்டாகி விட்டதா ? யாருடைய காது’ அன்னா கலவரமானான்.

இதோ இந்த படை வீரனின் காது தான். சுட்டிக் காட்டிய இடத்தில் கண்கள் நிறைய கவலையுடன், குற்ற உணர்வுடன் நின்றிருந்தான் அந்த படை வீரன்.

‘என்ன விளையாடுகிறாயா ? அவனுடைய காது தான் சரியாக இருக்கிறதே ?’ அன்னா குழம்பினான்.

‘காது துண்டாகி விழுந்தது உண்மை தான் தலைவரே. அந்தக் காதை எடுத்து இயேசு மீண்டும் அதே இடத்தில் வைத்து சரி செய்து விட்டார்.’ படைவீரன் சொல்ல அன்னா இரண்டடி பின் வாங்கினான். ஆனாலும் பதட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இயேசுவைப் பார்த்துப் பேசினான்.

உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டு என்ன தெரியுமா ? நீ உன்னைக் கடவுளின் மகனாகக் காட்டிக் கொண்டாயாம். போலித் தீர்க்கத் தரிசனம் சொன்னாயாம். இதற்கு என்ன சொல்கிறாய் ?

இயேசு மெலிதாய் புன்னகைத்தார். ‘நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தான் பேசினேன். தொழுகைக் கூடங்களில் உரையாற்றினேன். ஆலயங்களில் போதித்தேன். யூதர்கள் கூடியிருந்த கூட்டங்களில் பேசினேன். எதையும் மறைமுகமாகப் பேசவில்லை. நான் பேசியதைக் கேட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ இயேசு சொன்னார்.

அன்னாவின் புருவங்கள் உயர்ந்தன. இயேசுவின் பதிலில் இருந்த உட்பொருள் அவரை வியக்க வைத்தது. ஆம், அல்லது இல்லை என்று ஒரு பதிலைச் சொல்லாமல் இயேசு சொன்ன பதிலில் ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளையும், மோசேயின் சட்டங்களுக்குட்பட்டு வாழும் ஒருவனுடைய மனித உரிமையுமே வெளிப்பட்டன. மக்களின் சாட்சிகளை வைத்தே இயேசு குற்றவாளியென்று தீர்ப்பிடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார் அன்னா.

‘ஓ.. அப்படியா…. நீ சொன்னதை நிரூபிக்க வேண்டும் என்கிறாயா ? நிரூபித்துக் காட்டுகிறேன்… ‘ தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே அன்னா கூற இயேசு மீண்டும் புன்னகைத்தார்.

அன்னாவிடமிருந்து இயேசு நேரடியாக தலைமைச் சங்கத்தின் முன்பாக கொண்டு செல்லப்பட்டார். அன்னாவின் மாளிகையிலிருந்து இருபது நிமிட நடை பயணம். இரவில் அனைவரும் அன்னாவின் மாளிகையிலிருந்து தலைமைச் சங்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.

நேற்றுவரை சுதந்திரப் பறவையாக போதித்துக் கொண்டிருந்த இயேசு இன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கயபாவின் முன்னிலையில் ஒரு மேடையில் நின்று கொண்டிருந்தார். அந்த இடம் கல்மண்டபம் அல்லது லிஸ்கத் ஹகாசித் என்ற்ய் அழைக்கப்பட்டது. தன்னுடைய உயிருக்கு ஆபத்தான சூழல் என்பதை அறிந்திருந்தும் ஆனாலும் அவருடைய கண்களில் இருந்த உறுதி கலையவில்லை.

பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல கயபாவின் மாளிகைக்குள் வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘சாட்சிகளைத் தயார் செய்து விட்டீர்களா ?’ சத்தமில்லாமல் அருகிலிருந்த தலைமைச் சங்கத்தான் ஒருவனின் காதில் கிசுகிசுத்தார் கயபா.

‘ஆட்களை அனுப்பியிருக்கிறோம். எத்தனை செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறோம். எப்படியும் சாட்சிக்கு ஆட்கள் கிடைத்து விடுவார்கள்’

‘காதும் காதும் வைத்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும். மக்களிடையே மத வெறி அடங்கி விடாமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.’

‘அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவனுடைய சீடனையே அவனுக்கு எதிராகத் திருப்பினோமே… சாட்சிகளைப் பிடிப்பதா பெரிய விஷயம் ?’

‘ம்… இரண்டு சாட்சிகள் வேண்டும். இரண்டு பேரும் ஒரே போல ஒரே குற்றச் சாட்டைச் சொல்லவேண்டும். அது தான் சட்டம். அதை நினைவில் கொள்ளுங்கள்’ கயபா கிசுகிசுத்தான்.

‘மக்களுக்காக ஒருத்தன் சாவது நல்லது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே. அது இன்று நடக்கவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதைத் தயாராக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்’ கயபாவும் தலைமைக்குருவும் கிசுகிசுப்பாய் பேசினார்கள்.

இயேசு அமைதியாக நின்றார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 மறுதலிப்பு

_______

Peter
பேதுரு முற்றத்தில் அமர்ந்து நடப்பவற்றை அனைத்தையும் நடுங்கும் உடலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஏய்… நீ அவனோடு இருந்தவன் தானே ‘ திடீரென தனக்குப் பின்னால் எழுந்த குரலினால் நிலைகுலைந்து போய் நிமிர்ந்தார் பேதுரு. அங்கே ஒரு பணிப்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் கயபாவின் நம்பிக்கைக்குரிய பணிப்பெண் ஹுல்தா.

‘என்ன சொன்னீர்கள் ?’

‘நீ.. இயேசுவோடு இருந்த மனிதர்களில் ஒருவன் தானே ?’

‘நானா… இயேசுவோடா ? ம்… அவர் யாரென்றே எனக்குத் தெரியாது’ பேதுரு பயத்துடன் மறுத்து தன்னுடைய தலையை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்.

பேதுரு திக் திக் மனதுடன் அங்கே அமர்ந்திருந்தார். இயேசு திடீரென சங்கிலிகளை உடைத்துக் கொண்டு சட்டென்று மறைந்துவிடுவார் என்றே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

‘ஏய்ய்… நீ…’ பேதுருவின் பின்னால் ஒரு முரட்டுக் குரல்.

பேதுரு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் திரும்பினார்.

‘நீ… அவருடன் இருந்த சீடர்களில் ஒருவன் தானே ? உன்னை நான் அவரோடு பார்த்திருக்கிறேனே ?’ ஒருவன் பேதுருவிடம் கேட்டான்.

‘நானில்லையப்பா அது. வேறு யாராவது இருக்கும். அவர்கள் எல்லாரும் தான் ஓடிவிட்டார்களே.’ பேதுரு சமாளித்தார்.

‘ஆனால் உன்னைப் போலவே ஒருவன் அவனோடு சுற்றிக் கொண்டிருந்தான்…’

‘இ..இருக்கலாம். ஆனால் அது நானில்லை. அவனோடு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வேலையற்றவர்கள். நான் அப்படியல்ல..’ பேதுரு சகஜமாய் சொல்ல முயன்று தோற்றுப் போய் செயற்கையாய்ப் புன்னகைத்தார்.

அவன் சந்தேகம் அகலாதவனாகச் சென்றான்.

மூன்றாம் முறையாக ஒரு நபர் பேதுருவின் அருகே வந்து தீப்பந்த வெளிச்சத்தில் அவரை உற்றுப் பார்த்தார்.

‘நீ கலிலேயன் தானே ? அந்த இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே ? உண்மையைச் சொல்’ அவனுடைய குரலில் மெலிதான கோபம் இருந்தது.

‘நானா ? அந்த மனிதனோடா ? இல்லவே இல்லை. ‘ பேதுரு அவசர அவசரமாக மறுத்தார்.

தொலைவில் நின்றிருந்த இயேசு பேதுரு இருந்த திசை நோக்கி மெல்ல தலையைத் திருப்பினார்.

அப்போது வெளியே சேவல் கூவும் சத்தம் கேட்டது.

சேவலில் குரலைக் கேட்டதும் பேதுருவின் உள்ளம் உடைந்தது.
‘இன்றிரவு சேவல் கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்.. ‘ என்று பேதுருவிடம் இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் பேதுருவின் உள்ளத்துக்குள் ஈட்டிகளாய்ப் பாய்ந்தன. அவருடைய கண்களும், மனமும் கலங்கியது. உடனே வெளியே சென்ற பேதுரு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

கயபா முன்னிலையில்
Jesus-before-Caiaphas
கல்மண்டபத்தில் தலைமைச் சங்க நிர்வாகிகளும், குருக்களும், நீதிபதிகளும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே சட்டத்தையும், நீதி நூல்களையும் கரைத்துக் குடித்தவர்கள். இங்கே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் எந்த அரசவையும் அதற்கு மறுப்புக் கூறுவதில்லை என்ற அளவுக்கு மிகவும் செல்வாக்கு வாய்ந்த இடம் அது.

அவர்கள் அனைவரும் ப வடிவத்தில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு பழக்கமான முகங்களும் அங்கே இருந்திருக்கக் கூடும். ஒருவர் நிக்கோதேமு இன்னொருவர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு. இவர்கள் இருவரும் தலைமைச் சங்க நிர்வாகிகளாக இருந்தாலும் இயேசுவின் மனித நேயப் போதனைகளால் கவரப்பட்டு மறைமுக சீடர்களாக உலவுபவர்கள்.

இயேசுவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கான தண்டனை என்னவென்று எல்லோருமே அறிந்திருந்தார்கள். குற்றங்களில் மிகப்பெரிய குற்றம் இயேசு செய்திருப்பது. அதற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படலாம். எரித்துக் கொல்லப்படலாம், சிலுவையில் அறையப்படலாம். எதுவானாலும் மரணம் நிச்சயம். அதுவும் கொடுமையான மரணம் சர்வ நிச்சயம்.

இயேசுவை கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மாட்டவைக்க எதிர்ப்பாளர்கள் செய்த எந்த செயல்களுமே பயன் தரவில்லை. இயேசுவின் சாதுர்யமான பதிலும் மிகவும் ஆழமான சட்டநூல், நீதிநூல் அறிவும் அவரைப் பிடிக்க நினைத்த எதிர்ப்பாளர்களை தொடர்ந்து தோற்றுப் போக வைத்துக் கொண்டே இருந்தது. எனவே இப்போது என்ன நடக்குமோ என்னும் எண்ணம் கூடியிருந்தவர்களிடையே நிலவியது. பலருக்கு இது ஒரு பரபரப்பான வேடிக்கை. கயபாவுக்கோ தன்மானப் பிரச்சினை.

திடீரென மண்டபத்தின் கதவு ஒன்று திறக்க அங்கே அன்னாவும், கயபாவும் நுழைந்தார்கள். கூட்டத்தில் திடீரென சலசலப்பு முளைத்தது.

அமைதி.. அமைதி… , கயபா சொன்னான். சபை அமைதியானது.

இதோ.. குற்றவாளியாய்.. நசரேயனாகிய இயேசு, அவன் சொல்ல இயேசு முன்னே வந்து நின்றார்.

அன்னாவின் முகம் வழக்கத்துக்கு மாறாக இறுகிப் போயிருந்தது. இயேசு பார்வைக்கு மிகச் சாதாரணமாக இருந்தாலும் அவருடைய பதட்டமில்லாத பார்வையும், எதையோ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் மலர்ச்சியான முகமும் அவனை ஏதோ செய்தன. இயேசுவின் ஆழமான சட்ட அறிவும், நீதி நூல்களின் மீதான அறிவும் தன்னுடைய வேலையைக் கடினமாக்கிவிடக் கூடுமென்று அவன் பயந்தான். எப்படி இயேசுவால் இப்படி பதட்டமில்லாமல் நிற்க முடிகிறது. ஒருவேளை இந்தக் குற்றத்துக்கான தண்டனை என்னவென்று தெரியாதா ? அல்லது ஏதேனும் வித்தை வைத்திருக்கிறானா ? கேள்விகள் அன்னாவின் மனதில் அலைமோதின.

ஆனால் இயேசு அறிந்திருந்தார். கூடியிருக்கும் சட்ட வல்லுநர்களும், நீதி உரைப்பவர்களும், பரிசேயர்களும், குருக்களும் தன்னை எதற்காக இங்கே கூட்டி வந்திருக்கிறார்கள். என்ன நேரப்போகிறது என்பதை எல்லாம் இயேசு தெளிவாக அறிந்திருந்தார். அதைத் தாங்கும் வல்லமைக்காகத் தான் அவர் நீண்ட நேரம் கெத்சமெனி தோட்டத்தில் செபத்தில் தந்தையோடு ஒன்றித்திருந்தார்.

கயபா முன்னால் வந்து செபிக்கத் துவங்கினான். யகோவா வை நோக்கி கயபா செபித்தான். செபம் நீண்ட நேரம் நடந்தது. செபத்தை முடித்துவிட்டு வந்த கயபா சபையின் முன்னால் வந்து நின்றான்.

‘இயேசு இங்கே எதற்காக கைது செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். இந்த மனிதன் தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டான். போலி தீர்க்கத் தரிசனம் உரைத்தான். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை மோசேயின் நீதியின் படி வாழும் நாம் நன்கு அறிவோம். எனவே இப்போது இயேசுவின் குற்றத்தை நிரூபிப்பதற்காக சாட்சிகளை அழைக்கிறேன்’ கயபா சொல்ல சபை அமைதியானது.

‘முதல் சாட்சி முன்னால் வரட்டும்’. அழைப்பைத் தொடர்ந்து முன்னால் வந்து நின்றான் ஒருவன்.

‘நீ உண்மையைத் தான் சொல்கிறாய் என்று சத்தியம் செய்’

வந்தவன் தன்னுடைய கையை வலது தொடைக்கு அடியில் வைத்து சத்தியம் செய்தான். ‘ பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்னும் மோசேயின் கட்டளையை நான் அறிவேன். நான் சொல்லப்போவது உண்மையே’

‘நீ சாட்சி சொல்லப்போவது பண சம்பந்தமான விஷயமல்ல. உயிர் சம்பந்தமானது. பண விஷயத்தில் பொய்சாட்சி சொன்னால் பணத்தைக் கொடுத்து சரிபண்ணமுடியும். ஆனால் உயிர் விஷயத்தில் பொய்சொன்னால் அது உன் மீதும் உன் சந்ததி மீதும் இரத்தப் பழியாக விழும். எனவே சாட்சி சொல்லும்போது உண்மையை மட்டுமே கூறு’ ஒரு குரு சொல்ல சாட்சியாளன் தயாரானான்.

‘நீ இயேசு பேசியதை நேரில் கேட்டாயா ?’ கயபா கேட்டான்.

‘ஆம்’

‘அவர் பேசியது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீ அவருக்குச் சொன்னாயா ?’

‘சொன்னேன்’

‘இயேசு பேசியது குற்றமென்றும், அதற்குத் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறிந்திருந்தாரா ?’

‘நிச்சயமாக’

‘சரி… இப்போது சொல்.. இயேசு என்ன சொன்னார் ?’

‘கைகளால் கட்டிய இந்த ஆலயத்தை நான் மூன்றே நாளில் இடித்துவிட்டு, கைகளால் கட்டாத வேறு ஒரு ஆலயத்தை மூன்று நாளில் எழுப்புவேன் என்றார்’ சாட்சிக்காரன் சொன்னான்.

கயபா இயேசுவின் பக்கமாகத் திரும்பினான்.

‘சொல்லுங்கள் நசரேயனாகிய இயேசுவே.. உங்கள் பதில் என்ன ? நீங்கள் இதைச் சொன்னீர்கள் தானே’

இயேசு அவன் கண்களைப் பார்த்தார். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘கேட்ட சாட்சியம் தவறென்று மறுக்கிறாயா ?’ கயபா கேட்டான்

இயேசுவிடமிருந்து பதிலில்லை.

‘நீ அப்படிச் சொன்னது உண்மை தானா ?’

இயேசு தொடர்ந்து மௌனம் சாதித்தார்.

கயபா சங்கத்தினரைப் பார்த்தான். ‘பாருங்கள். எதையும் மறுத்தும் பேசாமல், ஒத்துக்கொள்ளவும் செய்யாமல் நம்மிடம் வந்திருக்கும் இந்த மனிதரைப் பாருங்கள். நாம் இவனுடைய பதிலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. அடுத்த சாட்சியை அழையுங்கள்.’ கயபா சொன்னான்

இரண்டாவது சாட்சி கூறுபவர் முன்னே வந்தார். சத்தியப் பிரமாணம் செய்தபின் பேசத் துவங்கினார்.

‘இந்தக் கோயிலை இடித்துவிடுங்கள், மூன்று நாளில் கட்டி எழுப்புவேன். என்றார் இயேசு’ சாட்சிக்காரன் சொன்னான்.

‘சரி நீங்கள் போகலாம்’ கயபா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். இரண்டு சாட்சிகளைப் பேச வைத்தாயிற்று இப்போது இயேசுவுக்கு தண்டனை நிச்சயம். அவன் மனம் ஆனந்தமடைந்தது.

‘கேட்டீர்களா… சட்ட வல்லுநர்களே. நமக்கு இரண்டு சாட்சிகள் கிடைத்து விட்டன. போதுமா ?’ கயபா கேட்டான். அவையில் சில வினாடிகள் மௌனம் நிலவியது.

அவையில் இருந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு எழுந்தார்.

‘இந்த சாட்சிகள் செல்லாது !’  யோசேப்பு சொல்ல கயபா திகைத்தான். யோசேப்பு தொடர்ந்தார்.

‘முதல் சாட்சி சொல்வதை வைத்துப் பார்த்தால், இயேசுவே ஆலயத்தை இடித்துவிடப் போவதாகச் சொல்கிறார். இரண்டாவது சாட்சியோ, ஆலயத்தை யாராவது இடியுங்கள் நான் கட்டுகிறேன் என்று சொல்வதாகச் சொல்கிறார். இது மட்டுமல்ல இரண்டாவது சாட்சி கையால் கட்டாத ஆலயத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே இந்த சாட்சிகள் இரண்டும் ஒத்த சாட்சிகள் அல்ல. இரண்டு ஒத்த சாட்சிகள் இருந்தால் மட்டுமே ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடமுடியும் என்பது மோசேயின் சட்டம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே வேறு சாட்சிகளை அழையுங்கள்’ யோசேப்பு சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கயபா திரும்பி அன்னாவைப் பார்த்தான். அவருடைய முகத்தில் இறுக்கம் இன்னும் கூடியிருந்தது. வேறு வழியில்லை அடுத்த சாட்சியை அழைக்க வேண்டியது தான். கயபா தான் தயாராக்கி வைத்திருந்த அடுத்த சாட்சியை அழைத்தான்.

மூன்றாவது சாட்சிக்காரர் முன்வந்தார்.

‘இந்த ஆலயத்தை இடிக்க என்னால் முடியும், பின் மூன்று நாட்களில் கட்டவும் என்னால் முடியும். இது தான் இயேசு சொன்னது’ மூன்றாவது நபர் சொல்ல யோசேப்பு தலையை வேகமாக அசைத்தார்.

‘இது முந்தைய இரண்டு சாட்சிகளையும் விட வித்தியாசமாக இருக்கிறது. இது செல்லாது. என்னால் முடியும்.. என்று இயேசு சொல்லியிருக்கிறாராம்.’ யோசேப்பு ஒத்துக்கொள்ளாத குரலில் பேசினார்.

‘ஒத்துப் போகாத சாட்சியம் என்று எப்படிச் சொல்லலாம். மூன்று பேருமே மூன்று நாளில் என்பதில் ஒத்துப் போகிறார்கள் அதுவே தவறு தானே ? ‘ கயபா சொன்னான்.

‘யூத சட்டங்களைப் பொறுத்தவரை முழுமையாக ஒத்துப் போகவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அப்படியே இவன் சொன்னது உண்மையென்றால் கூட எப்படி நிரூபிப்பது ? கோயிலை இடிக்கச் சொல்லியா ?’ யோசேப்பு விவாதித்தார்.

‘நீர் நல்ல யூதன் என்பதை உங்கள் வாதத்தில் காட்டுகிறீர்கள்’ காய்கா கண்களில் கோபம் கொப்பளிக்க அழுத்தமாய்ச் சொன்னார்.

‘எனது பணி இது தலைவரே. இது உயிர் சார்ந்த விசாரணை, இதில் நீதியுடன் நடப்பதே நமக்குப் பெருமை. சாட்சிகளால் நிரூபிக்கப்படவில்லையெனில் இயேசுவை தண்டிக்க முடியாது’ யோசேப்பும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

‘சாட்சிகள் ஒத்துவரவில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது. நிரூபித்துக் காட்டுகிறேன்’ கயபா உறுமினான்.

நிலமை வேறு விதமாகப் போவதை அறிந்த அன்னா பேசினார். அன்னா பேசத் துவங்கியதும் அவை மீண்டும் அமைதியானது.
‘நமது பாரம்பரியம் மிக்க தலைமைச் சங்கத்துக்குக் களங்கள் விளைவிக்கும் எந்த தீர்ப்பையும் நாம் எடுக்க வேண்டாம். சாட்சிகள் ஒத்து வரவில்லையென்றால் வேறு சாட்சிகளை அழைக்க வேண்டியது தான்.’ அன்னா சொன்னார்.

ஒரு சாட்சி முன்னால் வந்தது.

‘இவன் தன்னை கடவுளின் மகன் என்றார்’

இன்னொருவர் வந்தார்

‘இயேசு தன்னை மானிட மகன் என்றார்’

மீண்டுமொருவர் முன்னால் வந்தார்

‘இவர் நானே கடவுள் என்றார்’

மீண்டும் சாட்சிகள் ஒத்துவரவில்லை.

இயேசு அனைத்தையும் மெளனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார். நேரம் நள்ளிரவு தாண்டி ஒருமணி நேரமாகியிருந்தது. இன்னும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நேரமாகிக் கொண்டே இருந்தது. இயேசுவுக்கு எதிரான வழக்கு நிரூபிக்கப்படாமல் இயேசு விடுவிக்கப்படுவார் என்னும் நிலமை. அன்னாவும், கயபாவும் செய்வதறியாமல் திகைத்தார்கள். இயேசுவைப் பிடித்தாயிற்று, இந்தமுறை நழுவவிட்டால் இனிமேல் இவரைப் பிடிப்பதுகூட நடக்காமல் போகலாம் எனவே எப்படியாவது இயேசுவுக்குத் தண்டனை வாங்கித் தந்தேயாகவேண்டும்

கயபா மனதுக்குள் திட்டமிட்டான். ஏன் சாட்சிகளை அழைக்கவேண்டும். இயேசுவையே விசாரிக்கலாமே. அவர் மூலமாகவே அவருடைய குற்றத்தை நிரூபிக்கலாமே. இறைவாக்கினர் என்றால், பெரிய வல்லமையுடையவர் என்றால் அவர் பொய் சொல்லப் போவதில்லையே. கயபா எண்ணினான். மெல்ல மெல்ல இயேசுவிடம் வந்தான்.

‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா ?’ கயபா துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.

இயேசு மீண்டும் அவன் கண்களைப் பார்த்தார்.

‘நீர் தான் சொல்லுகிறீர்’ இயேசுவின் பதில் தெளிவாக வந்தது. தலைமைச் சங்கத்தினர் ஆச்சரியக் குரல்களை மெலிதாக எழுப்பினர்.

கயபா இயேசுவின் பதிலில் திருப்தியடையவில்லை.

‘தெளிவாகச் சொல்லுங்கள். நீர் மெசியாவா ?’

‘ஆம். நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின்  வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

கயபா தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ… நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு ? இவனை என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள்’ தலைமைக்குரு கொக்கரித்தான். அவனுடைய உள்ளம் இயேசுவை மாட்ட வைத்த களிப்பில் துள்ளியது.

சாட்சிகளால் நிரூபிக்கப் படாமல் போன குற்றத்தை இயேசுவே ஒப்புக் கொண்டதில் கூட்டத்தினர் அதிர்ந்தனர். வழக்கத்துக்கு மாறான காட்சி !.

‘இப்போது என்ன சொல்கிறீர்கள்.’ கயபா அவையைப் பார்த்துக் கேட்டான்.

‘இயேசு குற்றவாளி தான்’ அவை ஒத்துக் கொண்டது.

வாக்கெடுப்பு நடந்தது. அதிலும் கயபா தன்னுடைய வஞ்சக மூளையைப் பயன்படுத்தினான். முதியவர்கள் துவங்கி இளையவர் வரை வாக்கெடுப்பு நடத்துவது தான் முறை. ஆனால் ஒருவேளை முதியவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களித்தால், பின்பு வருபவர்களும் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று பயந்தான். எனவே இளையவர்களிடமிருந்து வாக்கு ஆரம்பமானது. இளையவர்கள் எல்லாம் கயபாவின் ஆட்கள் !



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 

இயேசு குற்றவாளிதான். தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்குள் கூட்டத்தினர் பலர் இயேசுவை நோக்கி  முண்டியடித்து ஓடினர்.

Image result for Jesus beaten by soldier

‘பளார்…’ எங்கிருந்தோ ஒரு முரட்டுக் கரம் இயேசுவின் முகத்தைத் தாக்கியது.

‘இறைவாக்கினராகிய மெசியாவே… உம்மை அடித்தவனுடைய பெயரை தீர்க்கத் தரிசனமாய்ப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்’ ஏளனக் குரல்கள் எழுந்தன.

பின்புறமிருந்து இயேசுவின் முதுகில் வலிமையான கரங்கள் தாறுமாறாய் இறங்கின. அவருடைய முகத்தின் மீது எச்சில் உமிழப்பட்டது. கால்கள் அவருடைய உடம்பின் மீது நீண்ட நாளைய வைராக்கிய வெறியுடன் உதைத்தன. இயேசு நிலை தடுமாறி விழுந்தார்.

‘இறைமகனே… விழுவது உமக்கு அழகா ?’

‘என்ன இது ? கடவுளின் மகனுக்கு தன்னுடைய கைக்கட்டை அவிழ்க்கக் கூட முடியவில்லையா ?’

‘கடவுளின் மகனுக்கு வலிக்காதே… நன்றாக அடியுங்கள்’ ஏளனக் குரல்கள் அறை முழுவதும் ஒலித்தன. கயபாவின் முன்னிலையிலேயே இயேசு தாறுமாறாய் அடிக்கப்பட்டார். அவருடைய உதடுகள் கிழிந்து இரத்தம் வழிந்தது. உடலெங்கும் வலிமையான அடிகளை வாங்கிய வலி.

தங்கள் ஆத்திரத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை விரோதக் கைகளும் இயேசுவை அடித்தன. தங்கள் தலைமைக்கு எதிராக எச்சரிக்கைக் குரல்களை எழுப்பிய இயேசுவை அத்தனை தலைவர்களும் நையப் புடைத்தனர். இயேசு அமைதிகாத்தார்.

‘இவனை ஆளுநர் பிலாத்துவிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டும். அதன்பின்பு இவனுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இப்போது தான் நமக்கு வாய்ப்பு. நன்றாக அடியுங்கள். இவன் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் கூட நாளை இவன் நமக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.’ தகவல் பரிமாறப்பட்டது. இயேசுவின் உடலெங்கும் இரத்தக்காயங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

வருந்திய யூதாஸ்
1213

‘ஏய்… விஷயம் தெரியுமா ? இயேசு நன்றாக மாட்டிக் கொண்டார். அவரை தலைமைக்குருக்களும், மற்றவர்களும் சேர்ந்து கயபாவின் முன்னிலையில் வைத்து அடித்து உதைக்கிறார்கள்’ ஒருவன் சொல்ல திடுக்கிட்டுத் திரும்பினான் அவன்.

யூதாஸ் இஸ்காரியோத்து. இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த இயேசுவின் சீடன்.

‘என்ன சொல்கிறாய் ? இ..இ…இயேசுவை அடிக்கிறார்களா ?’ யூதாசின் குரல் பிசிறடித்தது.

‘அடியா ? மரண அடி. இப்படி ஒரு அடியை அவன் வாழ்நாளில் வாங்கியிருக்கவே முடியாது. அப்படி ஒரு அடி ! ‘

‘அவருடைய சீடர்களெல்லாம் கூட இல்லையா ? மக்கள் யாரும் அவருக்கு ஆதரவாய் பேசவில்லையா ?’ யூதாஸ் பதட்டமானான்.

‘ஆதரவா ? ஆதரவு அளித்தவர்களெல்லாம் பயந்து ஓடிவிட்டார்களே. நான் கொஞ்ச நேரம் தான் நின்றேன். அதற்குமேல் நிற்கமுடியவில்லை.  இயேசுவை அடிப்பதைப்போல இன்னொருவரை இதுவரை யாரும் அடித்ததேயில்லை.’

‘உண்மையாகவா சொல்கிறாய் ? இயேசு தப்பிக்கவில்லையா ? அதெப்படி ? அவர்… அவர்…’ யூதாஸ் தடுமாறினான்.

‘நாளை அவர் கொல்லப்படுவது நிச்சயம் என்று பேசிக்கொள்கிறார்கள்.’

‘ஐயோ… தப்பு செய்து விட்டேனே…’ யூதாஸ் எழுந்தான்.

‘ஏய்… என்ன ஆச்சு ?’

‘இல்லை… இயேசுவை நான் தான் அடையாளம் காட்டினேன். அவர் கண்டிப்பாகத் தப்பித்து விடுவார் என்றல்லவா நினைத்தேன். ஐயோ…. பெரும் தப்பு செய்துவிட்டேன். எப்படியாவது அவரை விடுவிக்க வேண்டும்…’ யூதாஸ் லஞ்சமாய் வாங்கியிருந்த பணமுடிப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு தலைமைக்குருவைப் பார்க்க ஓடினான்.

யூதாஸின் மனம் பதட்டத்தில் துடித்தது. தவறிழைத்துவிட்டோமே என்று அவருடைய உள்ளம் கதறி அழுதது. இத்தனை நாள் கூடவே இருந்துவிட்டு இப்படிக் கடைசியில் நானே துரோகியாகிவிட்டேனே. அரற்றியபடியே ஓடிய யூதாஸ் ஆலயத்தில் அமர்ந்திருந்த தலைமைக்குருவின் முன்னால் வந்து விழுந்தான்.

‘ஐயா…. இயேசு ஒரு பாவமும் அறியாதவர். அவரைக் காட்டிக் கொடுத்து நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்….’ யூதாஸ் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவசர அவசரமாய்ச் சொன்னான்.

‘அதனால் எங்களுக்கென்ன ?’

‘ஐயா… அது என்னுடைய தவறு. இதோ நீங்கள் தந்த பணம் அப்படியே இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் கெஞ்சினான்.

‘விட்டு விடுவதா ? உன்னுடைய வேலை முடிந்துவிட்டது. இனிமேல் உன்னுடன் எனக்கென்ன பேச்சு. போய்விடு..’ தலைமைக்குரு தலையைத் திருப்பினார்.

‘ஐயா… அப்படிச் சொல்லாதீர்கள். அவரை அடிக்கிறார்களாம், கொல்லப்போகிறார்களாம். எல்லாம் என்னால் தானே… இந்தப் பணம் எனக்கு வேண்டாம். இது பாவப்பட்ட பணம். இதை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன். பெற்றுக் கொண்டு தயவு செய்து இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் விடாமல் கெஞ்சினான்.

‘யோவ்… வெளியே போகிறாயா இல்லையா ? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போய்விடு’ குரு கத்தினார்.

‘இதோ… வெள்ளிக் காசுகள். எனக்கு இவை வேண்டாம். கேவலம் பணத்துக்காக ஒரு மாமனிதனைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்…’ அழுது கொண்டே யூதாஸ் தன்னிடமிருந்த பணப்பையை ஆலயத்தினுள் வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் ஆலயம் முழுவதும் சிதறின.

யூதாஸ் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. குற்ற உணர்வு அவனைத் துரத்தியது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்வுடன் இனிமேல் வாழமுடியாது என்று முடிவெடுத்த யூதாஸ் கண்ணீர் விட்டழுதான்.

‘இயேசுவே…. அவனுடைய உதடுகள் விடாமல் முணுமுணுக்க யூதாஸ் தூக்கில் தொங்கினான் ! உயிர் விட்டான். தனது தவறுக்கான மன்னிப்பை நேரடியாக இயேசுவிடம் வாங்காமல் அவன் குற்ற உணர்வில் இறந்து போனான். இதனால், இயேசுவின் மன்னிப்பையும் மீட்பையும் இழந்தான்.

நன்றாக வாழவேண்டுமென்று லஞ்சமாய் வாங்கிய பணம் ஆலயத்துக்குள் சிதறிக் கிடந்தது. தலைமைக்குரு அவற்றைப் பொறுக்கினார்.

‘இதைக் காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள். ஏனென்றால் இது இரத்ததுக்கான விலை. எனவே வேறு ஏதாவது செய்யுங்கள்’ ஆலய நிர்வாகிகளிடம் தலைமைக்குரு சொன்னார்.

‘இதை வைத்து ஒரு குயவன் நிலத்தை வாங்குவோம். அன்னியரை அடக்கம் செய்வதற்குரிய ஆலய நிலமாக அது இருக்கட்டும்.’ நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு நிலத்தை வாங்கினார்கள். அதை இரத்த நிலம் என்று அழைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

பிலாத்து முன்னிலையில்

jesus-trial-pilate
வெள்ளிக்கிழமை.

குளிர் உயிரை உறைய வைக்க உலவிக்கொண்டிருந்த அதிகாலை. ஏப்ரல் ஏழாம் தியதி என்கிறது வரலாறு.

பிலாத்து காத்துக் கொண்டிருந்தான். அன்னா ஏற்கனவே சொல்லியிருந்ததன் படி பிலாத்து இயேசுவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
இயேசுவுக்கு என்ன தண்டனை வழங்குவது. இயேசு எல்லோரையும் தன்னுடைய பேச்சினாலும், செயலினாலும் வசீகரித்து வைத்திருக்கிறார். இப்போது மதவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படாவிடில் தன்னுடைய பதவி போய்விடும் அபாயமும் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாம் ஒட்டுமொத்த மக்களிடமும் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. பிலாத்து இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய சிந்தனையைக் கலைத்தாள் அரசி பிரோகுலா, பிலாத்துவின் நேசத்துக்குரிய மனைவி.

‘என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?’

‘இல்லை… எருசலேமில் இயேசு என்னும் ஒரு நபர் அன்னாவுக்கும், கயபாவுக்கும் எதிராக புரட்சி செய்கிறானாம். அவனை அங்கே தலைமைச் செயலகத்தில் வைத்து விசாரித்து விட்டு தீர்ப்புக்காக இங்கே கொண்டு வருவதாக அன்னா சொன்னார். அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியாக வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறார்…’ பிலாத்து சொல்லி முடிக்கும் முன் படபடத்தாள் அரசி.

‘யார்… இயேசுவையா ? வேண்டாம்.. அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் வழங்கி விடாதீர்கள்.’

பிலாத்து வியந்தான். இயேசு ஊரிலுள்ள மக்களை மட்டும் தான் வசீகரித்திருக்கிறார் என்று பார்த்தால் அரச பரம்பரையையே அசைத்திருக்கிறாரே !!
‘நீயும் இயேசுவின் மறைமுக சீடர்களில் ஒருத்தியா ? உனக்கெப்படி அவரைத் தெரியும் ?’ பிலாத்துவின் கேள்வி சற்று எள்ளலுடன் துள்ளியது.

‘எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் நேற்றிரவு அவரைக் குறித்து ஒரு கனவு கண்டேன்…’

‘கனவா ?’

‘ஆம். அவர் நல்லவர். நாம் அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் வழங்கி விடக் கூடாது. அது நமக்கு மிகப்பெரிய இரத்த பாவத்தைக் கொண்டு வரும்’ அவள் தொடர, பிலாத்து குழம்பினான்.

எது எப்படியெனினும், ஏற்கனவே பிலாத்து இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இயேசு பெரிய குற்றவாளியல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். குருக்களும், மறைநூல் வல்லுனர்களும், பரிசேயர்களும் இயேசுவிடம் வெறுப்படைந்திருப்பதையும், பொறாமை கொண்டிருப்பதையும் கூட பிலாத்து அறிந்திருந்தான். இப்போது தன் மையல் மனைவியும் இயேசுவுக்கு ஆதரவுக் கொடி காட்டியிருப்பதால், எப்படியாவது இயேசுவுக்குக் குறைந்த பட்ச தண்டனையை வழங்கி இயேசுவை விடுவித்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

அப்போது அரண்மனை மணி அடிக்கப்பட்டது !

அன்னாவும், கயபாவும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு கூட்டத்தினருடன் விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் பிலாத்துவின் மாளிகை வாசலை வந்தடைந்திருந்தார்கள்.

பிலாத்து வெளியே வந்தான்.

அவனுக்கு முன்னால் வந்தவர்கள் நின்றார்கள். அன்னா பிலாத்துவின் முகத்தைப் பார்த்தான், அந்தப் பார்வையில் பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்ட பிலாத்து வேறு பக்கமாக தன்னுடைய பார்வையைத் திருப்பினான். தனக்கு முன்னால் நிற்பவர்கள் அனைவரும் ஆலயத்தின் அந்தஸ்துள்ள மனிதர்கள். சட்ட வல்லுநர்கள், தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பரிசேயர்கள், குருக்கள், மற்றும் அன்னா வின் ஆதரவாளர்கள் சிலர். இயேசுவின் சீடர்களோ, அவருடைய ஆதரவாளர்களோ அங்கே இல்லை.

மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் இயேசுவின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடிவிடுவார்கள் என்பதால் நள்ளிரவில் கைது செய்து விடிவதற்குள் தண்டனை வாங்கிக் கொடுத்துவிட துடித்துக் கொண்டிருந்த அன்னாவின் விஷமம் பிலாத்துவுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் வெளிப்படையாக தைரியமாய்ச் சொல்லி நிமிர்ந்து நின்றால் தன்னுடைய இருக்கைக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்திருந்ததால் அமைதியாக நின்றான்.

இயேசு பிலாத்துவைப் பார்த்தார். பிலாத்துவின் கண்களும் இயேசுவின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன. பிலாத்து ஒரு வினாடி வெலவெலத்தான். காயங்களுடன் நின்றிருந்த இயேசுவின் பார்வையில் இருந்த தீர்க்கம் அவனை புரட்டிப் போட்டது. திரும்பி கூட்டத்தினரைப் பார்த்தான்.

‘இவன் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன ?’ பிலாத்து கேட்டான்.

‘குற்றமில்லாத மனிதன் என்றால் இவனை நாங்கள் உமது முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கவே மாட்டோம்’ என்ற அன்னா தொடர்ந்தான்.

‘இந்த மனிதன் சீசருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை தடுக்கிறான். தானே அரசர், மீட்பர் என்கிறான்’ அன்னா பிலாத்துவிடம் பேசவேண்டிய விதத்தில் பேசினான். சீசருக்கு எதிராக பிலாத்துவால் எதையும் பேச முடியாது. சீசருடைய மகள் தான் பிலாத்துவின் மனைவி பிரோகுலா.

பிலாத்து அன்னாவின் சூழ்ச்சி மிகுந்த பதிலைக் கேட்டு உள்ளுக்குள் எரிச்சலடைந்தான்.

‘அப்படியானால் இவனை நீங்களே கொண்டு போய் உங்களுக்குப் பிடித்த தீர்ப்பை வழங்குங்கள்’ பிலாத்து சொன்னான்.

இப்போது பிலாத்துவிடமிருந்த எரிச்சல் அன்னாவிடம் வந்திருந்தது.

‘யாரையும் கொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்பது உமக்குத் தெரியுமே. நாங்கள் இவனுக்கு மரண தண்டனை வழங்க முடியாது. அதனால் தான் இங்கே கொண்டு வந்திருக்கிறோம்’ அன்னா சொன்னான்.

பிலாத்து சில வினாடிகள் மெளனம் சாதித்தான். பின் இயேசுவின் பக்கமாகத் திரும்பினான்.

‘நீ யூதர்களின் அரசனா ?’ பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான்.

‘நீரே சொல்லுகிறீர்’ இயேசு தெளிவாகச் சொல்ல கயபா குறுக்கிட்டான்.

‘இவனை எங்களுக்குத் தெரியும். தச்சு வேலை செய்யும் யோசேப்புக்கும், மரியாவுக்கும் பிறந்த மகன் இவன். ஆனால் இவனோ தான் கடவுளின் மகன் என்று புலம்பித் திரிகிறார்.’ கயபா சொல்ல, பிலாத்து இயேசுவை உள்ளே அழைத்துச் சென்றான்.

கைதிகளிடம் தனிப்பட்ட விசாரணை செய்ய விரும்பும்போது மக்கள் முன்னிலையிலிருந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தனியே விசாரிக்கும் வழக்கம் இருந்தது. அன்னாவும் கயபாவும் குழம்பினார்கள். ஏன் இயேசுவை உள்ளே அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள் ? உள்ளே இயேசு என்ன சொல்லப் போகிறார் ? தங்களுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருக்கிறாரோ ? வெளியே கூடியிருந்த அனைவர் மனதிலும் கேள்விகள் முளைத்தன.

பிலாத்து இயேசுவை தனியே விசாரிக்கத் துவங்கினான்.

‘நீ யூதர்களின் அரசனா ?

‘அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசுவின் குரலில் பயமோ நடுக்கமோ இருக்கவில்லை.

‘உன்மீது இத்தனைக் குற்றச் சாட்டுகள் கூறுகிறார்களே. அதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் ?’

இயேசு பதிலேதும் சொல்லவில்லை.

பிலாத்து வியப்புற்றான். அவனுக்கு முன்னால் இதுவரை வந்திருந்த கைதிகள் எல்லாம் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மண்டியிடுபவர்களாகவே இருந்தார்கள். இயேசு தான் மரணத்தைத் துச்சமென மதித்து அமைதி காக்கிறார். அல்லது அதிகாரமாய் பேசுகிறார்.

நிலமையின் வீரியம் ஒருவேளை இவனுக்குத் தெரியாதோ ? சிலுவையில் அறைந்து கொல்லப்படுவது தான் அன்னா இயேசுவுக்குத் தர விரும்பும் மரணம். அது எத்தனை கொடுமையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருக்குமா ? இயேசு இவர்களுடைய சித்திரவதைகளையும் தாங்கி, தன்னை அறையப்போகும் சிலுவையை தானே சுமந்து கொண்டு மலைக்குச் செல்லவேண்டும் என்பதெல்லாம் தெரியுமா ? தெரிந்திருந்தும் இத்துணை தைரியமாய் இருக்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் கடவுளின் மகன் தானோ ? பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே பிலாத்துவின் மனைவி பிலாத்துவிற்குத் தனியே ஒரு சீட்டெழுதி அனுப்பினாள்.

‘இந்த மனிதனை ஒன்றும் செய்யாதீர்கள். இவனைக் குறித்து நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன். இவர் பெரிய இறைவாக்கினர் தான். இவர் கடவுளின் மகன் தான். இவரை விட்டு விடுங்கள்’ குறிப்பைப் படித்த பிலாத்து உள்ளுக்குள் குழம்பினான்.

மீண்டும் இயேசுவை நோக்கினான்.

‘நீ.. நீ.. உண்மையிலேயே யூதர்களின் அரசனா ?’ பிலாத்து கேட்டான்

‘இதை நீராகச் சொல்கிறீரா ? இல்லை மற்றவர்கள் சொல்வதனால் சொல்கிறீரா ?’ இயேசு கேட்டார். அவரிடம் குழப்பம் இருக்கவில்லை. தான் அரசராகி விடுவோம் என்னும் பயத்தினால் ஏரோது மன்னன் இந்தக் கேள்வியைக் கேட்கிறானா அல்லது தான் யூதர்களின் அரசன் என்று மக்கள் சொல்வது உண்மையா என்று அறிந்து கொள்ளக் கேட்கிறானா என்பதே அவருடைய கேள்வியின் உட்கருத்தாக இருந்தது.

‘நானா ! நானா நீ சாகவேண்டுமென்று விரும்பினேன். நான் உன் ஊர்க்காரனா ? இல்லையே உன்னுடைய மக்கள் தான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னை நான் தனியே விசாரிக்கிறேன்’ ஏரோது கோபத்தில் கத்தினான்

‘எனது அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல’ இயேசு சொன்னார்.

இயேசுவின் பதிலில் ஏரோது மீண்டும் குழம்பினான். எனது அரசு என்று இயேசு சொல்வதிலிருந்து தனக்கு ஒரு அரசு இருக்கிறது என்பதை இயேசு ஒத்துக் கொள்கிறார், ஆனாலும் இவ்வுலகைக் சார்ந்ததில்லை என்னும் போது அதை எப்படி கைக்கொள்வது ? இவ்வுலகைச் சாராத ஒரு அரசு இருக்க முடியுமா ? இருந்தால் அப்படி அங்கே அரசராய் இருப்பதாகச் சொல்லும் ஒருவரை இங்கே தண்டிக்க முடியுமா ? பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கையில் இயேசு மீண்டும் பேசினார்.

‘என்னுடைய அரசு இவ்வுலகைச் சார்ந்ததாய் இருந்திருந்தால், என்னை என்னுடைய படைவீரர்களும், பணியாளர்களும் காப்பாற்றியிருப்பார்கள். நான் யாரிடமும் கையளிக்கப்பட்டிருக்க மாட்டேன்’

பிலாத்து தலையைக் குலுக்கினான்

‘அப்படியானால் நீர் அரசர் தானா ?’

‘அரசர் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசு சொல்ல

‘உண்மையா ? அது என்ன ?’ பிலாத்து கேட்டான்.

இயேசு அமைதியாக நின்றார்.

‘என்ன அமைதியாய் இருக்கிறாய் ? நான் நினைத்தால் உன்னை விடுவிக்கவும் முடியும், கொல்லவும் முடியும் தெரியாதா ?’ பிலாத்து அரச தோரணையில் சொன்னான்.

‘என் மேல் உமக்கிருக்கும் அதிகாரம் எல்லாம் விண்ணகத்தில் இருக்கும் என் தந்தை தந்தது தான். இல்லையேல் உனக்கு என்மீது எந்த அதிகாரமும் இருக்காது’ இயேசு சொல்ல பிலாத்து தனது இடது கையால் மோவாயைத் தேய்த்தான்.

‘..எனவே என்னை உம்மிடம் கையளித்தவனே பெரும் பாவம் செய்தவன்’ இயேசு சொல்ல பிலாத்து ஆச்சரியத்துடன் திரும்பினான்

அப்படியானால் தான் பாவம் செய்தவனாக மாட்டோமா ? என்னிடம் இவரைக் கையளித்தவர்கள் தான் பாவம் செய்தவர்கள் என்றால் இயேசுவின் விஷயத்தில் நான் மன்னிக்கப்பட்டேனா ? பிலாத்து இயேசுவின் கண்களை முதன் முதலாக சற்று நேசத்துடன் பார்த்தான்.

திரும்பி வந்து மக்கள் கூட்டத்தினரின் முன்னால் நின்றான் பிலாத்து. எப்படியும் இயேசுவை விடுதலை செய்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இப்போது அவனுக்குள் வலுத்திருந்தது. மக்களைப் பார்த்து பிலாத்து சொன்னான்.

‘இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை’


‘குற்றம் இல்லையா ? கலிலேயா துவங்கி, யூதேயா வரை மக்களைக் கெடுத்து மக்களை கலவரத்துக்காய்த் தூண்டி விடும் இந்த மனிதனிடம் குற்றம் இல்லையா ?’ குருக்கள் தூண்டிவிட மக்கள் கத்தினார்கள்.

‘ஓ.. இவன் கலிலேயனா ?’ பிலாத்து கேட்டான்.

‘ஆம்…’

‘அடடா.. அப்படியானால் இவன் எருசலேமில் ஆட்சிசெய்யும் ஏரோது மன்னனின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இவனை அங்கே அனுப்புங்கள்’ பிலாத்து நழுவினான்.

தன்னுடைய முதுகில் ஏறி அமர்ந்த பிரச்சினையை இத்தனை இலகுவாக இன்னொரு தோளுக்கு மாற்ற முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. ஏரோது இப்போது எருசலேமில் தானே தங்கியிருக்கிறார் எனவே ஏரோது மன்னனிடம் உங்கள் இயேசுவைக் கொண்டு செல்லுங்கள், பிலாத்து ஆனந்தமாய் பின்வாங்கினான்.

அன்னா, கயபா மற்றும் கூட்டத்தினருக்கு வேறு வழியில்லை. ஏரோதின் மாளிகை நோக்கி அடுத்த பயணம் துவங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

ஏரோது முன்னிலையில்

Image result for Jesus in front of herod

இயேசு ஏரோதின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

ஏரோது இயேசுவைக் கண்டதும் மகிழ்ந்தான். இயேசு எருசலேம் நகரில் மிகவும் பிரபலமடைந்திருந்ததால் ஏரோது இயேசுவைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தான். எப்படியாவது இயேசுவைக் காணவேண்டும், அவருடைய அற்புதங்கள் சிலவற்றைக் கண்ணால் காணவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டிருந்தான்.

ஏற்கனவே ஏரோதை இயேசு ‘குள்ள நரி’ என்று அழைத்திருந்தார். ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானைக் கொலை செய்ததால் அவருடைய ஆதரவாளர்களின் கோபம் ஏரோதின் பக்கம் இருந்தது. அதன் பின் இயேசுவும் ஏரோதை குள்ள நரி என்று அழைத்தபின் இயேசுவின் ஆதரவாளர்கள் அனைவருமே மறைமுகமாக ஏரோதுக்கு விரோதமாகவே இருந்தார்கள். இப்போது இயேசுவை திருமுழுக்கு யோவானின் சீடர்கள் ஆதரிக்கிறார்கள். அவர்களில் பலர் திருமுழுக்கு யோவான் தான் இயேசுவாக உலவுவதாகவும் நம்பினார்கள். ஏரோதும் அந்த நம்பிக்கை கொண்டிருந்தான் !

‘நீர் தான் இயேசுவா … ‘ ஏரோது நகைப்புடன் கேட்டான்.

இயேசு மெளனமாய் இருந்தார்.

‘நீ நிறைய அற்புதங்கள் செய்தாயாமே.. கொஞ்சம் செய்து காட்டு பார்ப்போம். எனக்கும் பொழுது போகும்’ ஏரோது சிரித்தான்.

கூட வந்திருந்த மறைநூல் அறிஞர்கள், குருக்கள் எல்லோரும் இயேசுவின் மேல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தார்கள்.

இயேசு எதற்கும் பதில் சொல்லவில்லை.

‘நீ செத்தவனை உயிர்ப்பித்தாயாமே ? இங்கே உயிரோடு இருக்கும் யாரையாவது செத்துப் போகச் செய் பார்க்கலாம் ‘

‘பிசாசைத் துரத்தினாயாமே… உன் கைகளைக் கட்டியிருக்கும் சங்கிலியை உடைத்துவிடு பார்க்கலாம்’

‘என்ன கடவுளின் மகனை சங்கிலியால் கட்டமுடியுமா ?’ ஏரோதின் ஏளனப் பேச்சுகள் கூட்டத்தினரை ஆரவாரம் செய்ய வைத்தன.

ஏரோது எப்படியேனும் இயேசுவை வைத்து சில மாந்திரீக செயல்களைச் செய்து காட்ட வைத்து பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

‘இவன் கடவுளின் மகனல்லவா ? இவனுக்கு ஒரு நல்ல பட்டாடையை உடுத்துங்கள்’ ஏரோது சொல்ல படைவீரர்கள் அவருக்குப் பட்டாடை ஒன்றை அணிவித்தார்கள்.

‘அரசே வாழ்க…’ ஏரோது மன்னன் போலியாக இயேசுவின் முன்னால் குனிந்தான்.

இயேசு அவர்கள் முன்னிலையில் ஓர் ஏளனச் சின்னமாக நின்றார். இயேசுவின் பொறுமையும் அமைதியும் ஏரோதின் மனதைக் குழப்பின. ஒருவேளை இவர் இறைவாக்கினராய் இருப்பாரோ ? என்னும் குழப்பம் அவருக்குள் எழுந்தது. நமக்கு ஏன் வம்பு என்று ஏரோது நினைத்தான்.

‘இதோ… இவனை பிலாத்துவிடமே கூட்டிக் கொண்டு போங்கள். அவர் சொல்லும் தண்டனையை இவருக்கு வழங்குங்கள்’ ஏரோது சொன்னான்.

‘என்ன பிலாத்துவிடமா ? மீண்டுமா ? இவன் கலிலேயன் ஆனதனால் நீங்கள் தான் இவருக்குத் தண்டனை வழங்க வேண்டும்’ அன்னா குறுக்கிட்டான்.

‘இவன் கலிலேயனாய் இருந்தாலும் இவனுடைய செயல்களெல்லாம் யூதேயா எங்கும் தான் நடந்திருக்கிறது. அவனை நீங்கள் கைது செய்தது கூட பிலாத்துவின் ஆளுகைக்கு உட்பட்ட எருசலேமில் தானே. எனவே பிலாத்துவிடமே இவனைக் கொண்டு செல்லுங்கள். இவனுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கினாலும் அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ ஏரோது சொல்ல அன்னா பெருமூச்சு விட்டான்.

‘ம்ம்… ஆகட்டும்.. மன்னனை இழுத்துச் செல்லுங்கள்.. வீரர்களே அவர் அரசர் .. மரியாதை செலுத்தி அழைத்துச் செல்லுங்கள்’ என்று ஏரோது ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

இயேசுவும் கூட்டத்தினரும் வெளியேறியதும் ஏரோதின் மனதுக்குள் பொறி தட்டியது. அவனுடைய புருவங்கள் விரிந்தன. கண்களில் திகில் படர்ந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இயேசுவைக் கொல்ல ஏரோது மன்னன் முயன்றபோது இயேசு சொல்லியிருந்தார். எருசலேமில் தான் தன்னுடைய மரணம் நிகழும் என்று !. எப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பின் நடப்பதை அவரால் அத்தனை சரியாய் சொல்ல முடிந்தது ? எரோது மன்னனிடம் அதுவரை இருந்த சிரிப்பு மறைந்து விட்டிருந்தது. பயமும் திகிலும் அவனுடைய முகத்தை அப்பின.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

மரண தண்டனை
christ-before-pilate-mihaly-munkacsy

கூட்டம் இயேசுவைக் கூட்டிக் கொண்டு மீண்டும் பிலாத்துவின் மாளிகைக்கே வந்தது.

‘இவனுக்கு நீர் தான் தண்டனை வழங்க வேண்டுமாம். என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கலாம் என்று ஏரோது அனுமதி வழங்கியிருக்கிறார்.’ அன்னா சொன்னார்.

பூமராங் போல தன்னை நோக்கியே மீண்டும் வந்த வழக்கைக் கண்டு பிலாத்து வருந்தினான். அவன் அன்னா வை அழைத்தான்.

‘இதோ.. இந்த மனிதனிடத்தில் நீங்கள் சாட்டும் குற்றச் சாட்டுகள் எதையும் நான் காணவில்லை’

‘இல்லை. இவன் குற்றவாளிதான். இதோ, இத்தனை மக்கள் கூறுகிறோமே. எங்கள் தலைமைச் சங்கத்திலும் முடிவாகி விட்டது இவன் குற்றவாளி தான் ‘ அவர்கள் கத்தினார்கள்.

‘நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் என்னுடைய விசாரணையிலோ, ஏரோது மன்னனின் விசாரணையிலோ எதுவும் தெரியவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுவிப்பேன்’ பிலாத்து சொன்னான்.

‘விடுவிப்பதா ? முடியாது. இவன் மரணதண்டனை அனுபவிக்க வேண்டும்’ அவர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

‘மரண தண்டனையா ? சாவுக்குரிய தண்டனை ஏதும் இவனிடம் நானோ, ஏரோது மன்னனோ காணவில்லை. எனவே இவனை சித்திரவதை செய்து விடுவிப்பேன். எனவே மீண்டும் இப்படி ஒரு தவறை இவன் செய்யமாட்டான்’ பிலாத்து சொன்னான்.

அன்னாவும், கயபாவும் மக்களிடையே இயேசுவைக் கொல்லவேண்டுமெனக் கத்துங்கள் என்று தூண்டினார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்ற இயேசுவின் ஆதரவாளர்களை அவர்கள் கூட்டத்துக்கு வெளியே தள்ளினார்கள்.

பிலாத்து மீண்டும் இயேசுவை விசாரித்தான்.

திடீரென பிலாத்துவுக்கு ஒரு யோசனை. அவர்களுடைய வழக்கப்படி பாஸ்கா விழாவின் போது கைதி ஒருவரை விடுதலை செய்யலாம். குறைந்த குற்றம் செய்த ஒரு மனிதனை விடுதலை செய்வது வழக்கம். அப்போது சிறையில் அதிபயங்கரக் கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பரபா. அவன் ரோம அரசுக்கு எதிராக பலத்த கலகம் செய்தவன். பல கொலைக் குற்றங்களும் அவனுடைய பெயரில் உண்டு.

அவனோடு ஒப்பிட்டால் இயேசு செய்ததாகச் சொல்லப்படுபவையெல்லாம் வெறும் சாதாரண குற்றங்கள் தான். எனவே பரபாவை விடுதலை செய்யவா இயேசுவை விடுதலை செய்யவா என்று கேட்போம். மக்கள் கண்டிப்பாக இயேசுவைத் தான் கேட்பார்கள் என்று பிலாத்து நினைத்தான். அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பிறந்தது.

‘அமைதி… அமைதி…’ பிலாத்து மக்கள் முன்னிலையில் எழுந்து நின்றான்.

கூட்டம் அமைதியானது.

‘உங்களுக்கு நான் ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன். நல்ல முடிவு எடுங்கள். பாஸ்கா விழாவை முன்னிட்டு நான் ஒரு கைதியை விடுதலை செய்யப் போகிறேன். நன்றாகக் கேளுங்கள். பரபா என்னும் கொலையாளியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாபெரும் கலகக் காரன். கொலையாளி. அவனை நான் விடுதலை செய்வதா ? இதோ இந்த குற்றமற்ற இயேசுவை விடுதலை செய்வதா ? சொல்லுங்கள்’ பிலாத்து கேட்டான்.

‘பரபாவை…. ‘ கூட்டத்தினரைக் கத்த வைத்தனர் கூட்டத்தில் கலந்திருந்த குருக்களின் ஆதரவாளர்கள்.

‘என்ன பரபாவையா ? அவன் எப்படிப்பட்ட குற்றவாளி தெரியுமா ? அவனையா விடுதலை செய்யவேண்டும்’ பிலாத்து மீண்டும் கேட்டான்.

‘ஆம். பரபாவை விடுதலை செய்தால் போதும். இயேசுவை விடுவிக்க வேண்டாம்’ கூட்டம் கத்தியது.

பிலாத்து குழம்பினார். ‘அப்படியானால் உங்கள் இயேசுவை நான் என்ன செய்வது ?’

கூட்டத்தினர் ஒருவினாடி மெளனமானார்கள்.

‘சிலுவையில் அறையும்’ ஒரு குரல் ஓரமாய் ஒலித்தது. அந்த ஒலியைப் பிடித்துக் கொண்டே பல ஒலிகள் உயர்ந்தன. சில வினாடிகளில் கூட்டத்தினர் ஒரே குரலில் கத்தத் துவங்கினார்கள்

‘சிலுவையில் அறையும்… ‘
‘சிலுவையில் அறையும்…. ‘
‘சிலுவையில் அறையும்….’

‘சிலுவையில் அறையுமளவுக்கு இவன் செய்த தவறு என்ன ?’ பிலாத்துவின் கேள்வியைக் எதிர்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

Image result for People shouting crucify

பிலாத்து தளர்ந்து போய் ஆசனத்தில் அமர்ந்தான்.

‘இவனைக் கொண்டு போய் சித்திரவதை செய்து கூட்டி வாருங்கள்’ பிலாத்து அரைமனதுடன் ஆணையிட்டான்.

படைவீரர்கள் இயேசுவைச் சித்திரவதைக் கூடத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.

இரும்புச் சங்கிலிகள், முள்கம்பிகள், இரும்பு உருண்டைகள் என்று கையில் கிடைத்த ஆயுதங்களயெல்லாம் வீரர்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். இயேசு அவர்கள் முன்னிலையில் நிராயுதபாணியாய் நின்றார்.

இயேசுவைச் சங்கிலியால் கட்டி ஒரு தூணில் பிணைத்த வீரர்கள் அவரை அடிக்கத் துவங்கினார்கள். முள்கம்பிகள் அவருடைய முகத்தையும் உடம்பையும் இழுத்துக் கிழித்தன. சங்கிலிகளும் கூர்மையான முள் சாட்டைகளும் இயேசுவின் உடம்பில் இரத்தக் கோடுகளை வரைந்தன. இயேசு வலியால் துடித்தார். ஆனாலும் மனம் தளரவில்லை.

வீரர்கள் தங்கள் கை ஓயும் வரை இயேசுவை அடித்தார்கள். இயேசு இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

பின் அவர்கள் அவருக்கு ஒரு சிவப்பு அங்கியை அணிவித்து
‘யூதரின் ராஜாவே வாழ்க…’ என்று சொல்லிக் கொண்டே எட்டி உதைத்தார்கள். இயேசுவின் காயமான உடம்பு மண்ணில் உருண்டது.

அவர்கள் கூர்மையான முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி இயேசுவின் தலையில் வைத்தார்கள். தலையில் வைத்த கிரீடத்தின் மேல் தடிகளால் அடித்தார்கள். முட்கள் அவருடைய தலையைத் துளைத்தன. நெற்றியைக் கிழித்தன. தலை இரத்தத்துக்குள் அமிழ்ந்தது.

சித்திரவதை முடிந்து இயேசுவைத் தூக்கிக் கொண்டு மக்களின் முன்னிலையில் நிறுத்தினார்கள் படைவீரர்கள்.

‘பாருங்கள். இதோ மனிதன். ‘ பிலாத்து சொன்னான்.

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

மக்கள் கத்தினார்கள்.

‘பாருங்கள். இவனுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கிறேன். இவன் இனிமேல் உங்களுக்கு எதிராகப் பேசுவான் என்று நினைக்கிறீர்களா ? சிலுவையில் அறையக் கூடிய அளவுக்கு இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை. எனவே நான் இவனை விட்டுவிடப் போகிறேன்’ பிலாத்து மீண்டும் சொன்னான்.

‘குற்றம் இல்லையா ? எங்களுக்கு ஒரு நியாயப் பிரமாணம் உண்டு. இவன் கடவுளின் மகன் என்று பிரகடனப் படுத்தினான். எனவே இவன் சாகவேண்டும்’ அவர்கள் குரலுயர்த்தினார்கள்.

பிலாத்து இதைக் கேட்டு இன்னும் அதிகமாக வருந்தினான். ஒருவேளை இவர் கடவுளின் மகனாக இருப்பாரோ ? என்ற கவலையும் அவரைப் பிடித்துக் கொண்டது.

‘இவன் செய்த குற்றம் என்ன ?’ பிலாத்து குரலை உயர்த்தினார்.

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

மக்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்.

‘உங்கள் மன்னனை நான் சிலுவையில் அறையவா ?’ யூதர்களை நோக்கிய ஒரு ரோமரின் கேள்வியாக ஒலித்தது பிலாத்துவின் அந்த கேள்வி.

‘எங்களுக்கு சீசர் மட்டுமே அரசர்’ குரல் கூட்டத்திலிருந்து கிளம்ப, எல்லோரும் அதையே திரும்பச் சொன்னார்கள். அந்த கத்தலில் இருந்த அரசியல் விளையாட்டு பிலாத்துவுக்கு விளங்கியது. இனிமேல் இயேசுவை விடுவிப்பது சாத்தியமில்லை என்பது பிலாத்துவுக்குப் புரிந்தது.

இயேசுவை விடுவிக்க நினைக்கும் தன்னுடைய முயற்சி பெரும் கலவரத்தை நோக்கிப் போவதை அறிந்த பிலாத்து கூட்டத்தினர் முன்னிலையில் தண்ணீரை எடுத்து
‘இவனுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி தன்னுடைய கைகளைக் கழுவினான்.

மக்கள் முன்னிலையில் தன்னுடைய கைகளைக் கழுவி விட்டு ஆசனத்தில் அமர்ந்தான் பிலாத்து.

‘இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்’ மக்கள் அசரவில்லை.

‘சரி… இவனை உங்கள் விருப்பம்போலச் செய்ய அனுமதிக்கிறேன்’ பிலாத்து சொல்ல மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

பரபா விடுதலை செய்யப்பட்டான்.

இயேசு சிலுவை மரணத்துக்காய் தீர்ப்பிடப்பட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

சிலுவைப் பயணம்

4a24c21d7f

அதன்பின் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான வேலைகள் மும்முரமாகின. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது.

சிலுவை என்பது பாரமான இரண்டு மரத் துண்டுகளை, இரண்டு இரும்பு கொக்கிகளால் இணைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கொலைக்கருவி. அவமானச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்களை அந்த சிலுவையில் கிடத்தி, கைகளை விரித்து மரத்தின் இரண்டு முனைகளிலும் வைத்து ஆணியால் அறைந்து, கால்களை கீழே இழுத்து இன்னொரு ஆணியால் அறைந்து தொங்க விடுவார்கள்.

பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் வருவோர் போவோரெல்லாம் பார்க்கும் விதமாக மலையில் அவர்களை சிலுவையில் சாகும் வரைத் தொங்க விடுவார்கள்.

சிலுவைச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ, அவர்கள் தாங்களாகவே அந்த சிலுவையைத் தோளில் சுமந்து கொண்டு தங்கள் மரணம் நிகழப்போகும் இடம் வரை தூக்கிக் கொண்டும் வரவேண்டும். ஒரு கொடுமையான சாவு. சாவு பற்றிய பயம் ஒருபுறம், அவமானம் ஒரு புறம், நினைத்துப் பார்க்க முடியாத வலி ஒருபுறம் என சிலுவைச் சாவுக் குற்றவாளிகள் படும் அவஸ்தை விவரிக்கக் கூடியதல்ல.

சிலுவையில் தொங்கவிட்டபின் மாலை வரை சிலுவையிலேயே தொங்கியும் முழுமையாய் இறக்காத மனிதர்களும் இருப்பார்கள். படைவீரர்கள் வந்து அவர்களுடைய கால்களை வெட்டி எறிவார்கள்.

இதோ, இயேசுவின் தோளிலும் இப்போது ஒரு சிலுவை வைக்கப்படுகிறது. இயேசுவை ஏற்கனவே இரவு முழுவதும் சித்திரவதை செய்திருந்ததால் அவரால் நேராக நிற்கவும் முடியவில்லை. ஆனால் கண்களிலும், மனதிலும் மட்டும் அதே உறுதி.

இயேசுவை கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்கவைத்தார்கள். கொல்கொதா என்பதற்கு மண்டைஓடு என்பது பொருள்.

படைவீரர்கள் கூட்டத்தினரை விலக்கி வழிஏற்படுத்த, நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.

இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.

படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்தார்கள். இரண்டு பேர் அவரை எழுப்பி விட மீண்டும் சிலுவை அவருடைய தோளில் போடப்பட்டது.

இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார்.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

விஷயம் எப்படியோ பரவி விட்டிருக்க. வெளியே பாமரமக்கள் ஏராளமானோர் குழுமியிருந்தார்கள். இயேசுவின் தீவிர சீடர்கள் தலைமறைவாகிவிட்டிருக்க, இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.

இயேசு தொடர்ந்து நடந்தார்.

சாலைகளின் இருபுறமும் மக்கள் ஓடி வந்தனர். ஊர் முழுதும் தகவல் சட்டென்று பற்றி எரிந்தது. இயேசுவின் ஆதரவாளர்களும், சீடர்களும், இயேசுவை நேசிப்பவர்களும் சாலைகளின் இருபுறமும் திகில் அலையும் கண்களோடும், குமுறும் நெஞ்சத்தோடும் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

அவர்களால் நம்ப முடியவில்லை. நேற்று வரை எல்லோருக்கும் பார்வை கொடுத்துக் கொண்டிருந்தவர், தொழுநோயாளிகளைக் குணமாக்கிக் கொண்டிருந்தவர், ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தவர், சிங்கம் போல சீடர்களுடன் உலா வந்து கொண்டிருந்தவர் இன்று என்ன ஆயிற்று. அது இயேசு தானா அல்லது வேறு யாரோவா ? தண்ணீரில் கூட தடுமாறாமல் நடந்தவர், தரையில் நடக்க முடியாமல் தடுமாறுகிறாரே ! மக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள்

இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு சுற்றியிருந்த மக்களின் பார்வைகளைப் படித்தார். பெண்களின் அழுகுரல் அவரைக் கரைத்தது. தன்னிடம் எஞ்சியிருந்த வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி பேசினார்.
‘எருசலேம் மகளிரே… எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’.

சொன்ன இயேசுவின் பார்வை கூட்டத்தினரிடையே அழுவதற்கும் திராணியில்லாமல் என்ன செய்வதென்றே அறியாமல் பித்துப் பிடித்து நின்ற ஒரு முகத்தின் மீது பட்டது.

அவருடைய தாயார் !

Image result for Mary seeing jesus carrying cross

எந்த ஒரு தாயால் தன் மகனை இந்த கோலத்தில் பார்க்க முடியும் ? காலில் கல் இடித்து விட்டாலே கலங்கிப் போகும் தாய்மை மரணத்தைத் தோளிலேற்றி மகன் செல்வதை கண்டு கரையாமல் இருக்க முடியுமா ?

அந்தப் பார்வையைத் தாங்க முடியாத இயேசு தடுமாறித் தரையில் விழுந்தார். பூமி அவருடைய இரத்தத்தைக் கொஞ்சம் துடைத்துக் கொடுத்தது.

மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை. கொல்கொதா மலை இன்னும் தொலைவில் இருந்தது.

இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை. சிலுவையை யாராவது ஒருகை தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே, இயேசுவின் பார்வையில் தன்னுடைய பாரத்தைச் சுமக்கும் தோள்கள் ஏதாவது தென்படுகிறதா என்ற ஏக்கம்.

‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது. என்ன செய்யலாம் ?’

‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’

படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டான்.

‘ஏய்… நீ யார்..’

‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது… நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.

‘எங்கிருந்து வருகிறாய்’

‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’

‘சரி… சரி.. வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா…’

‘ஐயா… என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார். சிலுவையில் அறையப்படுபவர்கள் தான் சிலுவையைத் தூக்கிச் செல்வார்கள். தான் சிலுவையைத் தூக்கிச் சென்றால் அந்த அவமானம் தனக்கும் வருமே என்று பயந்தாரோ அல்லது தான் இயேசுவின் மறைமுக ஆதரவாளர் என்பதை படை வீரர்கள் அறிந்து கொண்டார்களோ என்ற பயமோ சீமோனை நழுவச் சொன்னது.

அவர்கள் விடவில்லை. அவரைக் கட்டாயப் படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன் !.

கொல்கொத்தா மலை இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தது. குற்றவாளிகளின் இரத்தம் சுமந்து சுமந்து அழுக்காகிக் கிடந்த கொல்கொதா மலையில் இயேசுவின் இரத்தத் துளிகள் விழுந்தன.

இயேசுவையும் சிலுவையையும் மலையுச்சியில் கொண்டுபோய் போட்டார்கள்.

இயேசுவை மட்டும் சிலுவையில் அறையாமல் அவருடன் இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்து குற்றவாளிகளோடு குற்றவாளியாக அவரை நிற்கவைக்கவேண்டும் என்று ஏற்கனவே அலுவலர்கள் முடிவு செய்திருந்தார்கள். அந்த இரண்டு குற்றவாளிகளும் கூட இப்போது கொல்கொதா மலையுச்சியில் வந்து சேர்ந்தார்கள்.

இயேசுவுக்கு திராட்சை இரசத்தில் கசப்பைக் கலந்து ஒருவன் குடிக்கக் கொடுத்தான். இயேசு அதைக் குடிக்கவில்லை.

பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்ந்து ஆணிகளால் அறைந்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் வீறிட்டு அலறியது. இயேசு வலியால் துடித்தார். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது. தனக்கு ஆதரவாய்ப் பேச யாராவது வருவார்களா என்று இயேசுவின் கண்கள் பார்த்தன. கடைசிவரை யாரும் வரவேயில்லை.

ஒவ்வொரு கைதியையும் சிலுவையில் அறைந்த பின் சிலுவையில் அந்த கைதியில் பெயரை எழுதி வைப்பது வழக்கம். அதன் படி பிலாத்துவின் கட்டளைப்படி “யூதர்களின் அரசன்” என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.

பெயர்ப்பலகையைப் பார்த்த கயபா எரிச்சலடைந்தான். பிலாத்துவின் முன்னிலைக்கு விரைந்தான்.

Image result for INRI

‘அரசே.. இது சரியில்லை. ‘யூதர்களின் அரசன்’ என்று பெயர்ப்பலகையில் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதினால் அவர் உண்மையிலேயே யூதர்களின் அரசன் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதாகிவிடும். ‘யூதர்களின் அரசன் நான்’ என்று எழுத வேண்டும். அப்போது தான் இவன் போலித் தீர்க்கத் தரிசி என்பது தெரியும் என்றான்’

பிலாத்து கோபத்தில் எழுந்தான். ‘நான் எழுதியது எழுதியது தான்.. நீர் போகலாம்’. பிலாத்துவின் கோபம் கயபாவை சட்டென்று பின் வாங்க வைத்தது.
பிலாத்து நம்பினானா ! இயேசு தான் உண்மையில் யூதர்களின் அரசர் என்னும் கூற்றை பிலாத்து நம்பினானா ? கேள்விகள் கயபாவைக் கலங்கடித்தன.

சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது !

‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அந்த அங்கி மேலிருந்து கீழ் வரை ஒரே துணியால் உருவாக்கப்பட்டிருந்தது.

‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’

‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை !’

‘இவனை ஆணியில் அறைந்தது நான் தான்… எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’ அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள்.

‘இந்தச் சண்டை முடியப்போவதில்லை. ஒன்று செய்யலாம். நம்முடைய பெயர்களையெல்லாம் எழுதிச் சீட்டுப் போடலாம். யாருடைய பெயர் வருகிறதோ, அவருக்கே இந்த ஆடை… என்ன சொல்கிறீர்கள் ?’ ஒருவர் கேட்க, மற்றவர்கள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.

Image result for Soldiers for jesus dress

‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளத்துக்குள் எதிரொலித்தன.

இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.

‘திருக்கோயிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’

‘பிறரை விடுவித்த மகானே… உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா ?’

‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’

சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.

‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின. கண்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. எங்கே என் நம்பிக்கைக்குரிய சீடர்கள் ?

அதுயார் ? யோவானா ? அருகில் யாரது ?  என்னுடைய திருச்சபையைக் கட்டுவேன் என்று நான் உறுதியளித்திருந்த பேதுருவா ? எங்கே என் மற்ற சீடர்கள் ? மற்ற ஒன்பது நண்பர்கள் எங்கே ? ஒரு நண்பனுக்காக உயிர்கொடுக்க வேண்டாம் . அவனுடைய மரணப் பயணத்தில் கூட அருகிருக்கப் பயந்து ஓடி விட்டார்களா ? இயேசுவின் பார்வையில் நிராகரிப்பின் வலி.

இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளன் இயேசுவை நோக்கி தலையைத் திருப்பினான்

‘ இயேசுவே… நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்றான்.

அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ
‘நீ இன்னும் திருந்தவில்லையா ? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே.’ என்று கூறிவிட்டு இயேசுவின் முகத்தைப் பார்த்து

‘இயேசுவே என் தவறுகளை மன்னித்து என்னையும் உமது விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்’ என்றான்.

இயேசு அவனிடம்,’ நீ என்னுடன் வான்வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.
விடைபெறுகிறார் இயேசு
_________________

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 

 

jesus cross

நண்பகல்.

திடீரென நாடெங்கும் இருள் பரவியது. வெயில் கொளுத்த வேண்டிய நண்பகலில் நாடே இருண்டதைக் கண்ட மக்களும், தலைவர்களும் பதட்டமடைந்தார்கள். அந்த இருள் மூன்று மணி வரை நீடித்தது.

சிலுவை மரத்துக்குக் கீழே இயேசுவின் தாயார் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் அன்பு மகனை உயிருக்குள் இரத்தம் வழிய உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய உடலும் உள்ளமும் ஒட்டுமொத்தமாய் சோர்ந்துபோய் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

சிலுவையின் கீழே மூன்று மரியாக்கள் நின்றிருந்தார்கள். ஒன்று அன்னை மரியாள். இன்னொருவர் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாய் மரியாள் இன்னொருவர் மகதலா மரியாள். மகதலா மரியாள் விபச்சாரத் தொழில் புரிந்து வந்தவள். அவளிடமிருந்து இயேசு ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். அதன்பின் அவள் அவருடைய சீடரானவர்.

இயேசு தன் தாயைப் பார்த்தார். அருகிலே நின்றிருந்த தன் சீடர் யோவானைப் பார்த்தார். இயேசுவிடம் மிகவும் நெருக்கமான அன்புடையவர் யோவான். அவர்தான் அன்னையை இங்கே வரவழைத்திருக்க வேண்டும்.

இயேசு தன் தாயை நோக்கி

‘அம்மா….’ என்று அழைத்தார்.

தாய் கதறினாள். அவளால் ஏதும் பேச முடியவில்லை. மரணத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் மகனை ஏறிட்டுப் பார்க்கவும் அவளால் முடியவில்லை.

‘அம்மா… அதோ உன் மகன்’ என்று சீடரை நோக்கிக் கூறினார்.

சீடரை நோக்கி
‘இதோ உன் தாய்…’ என்றார். சீடர் கண்ணீருடன் தலையாட்டினார். அன்னையின் கரங்களைப் பற்றினார். அந்த வினாடி முதல் அன்னையை அந்த சீடர் தன்னுடைய சொந்த அன்னையாகப் பார்த்தார் என்பதை அந்த பற்றிய கரங்கள் பறை சாற்றின. இயேசுவின் இந்த தாய்ப்பாசம் சீடரை பெரும் வியப்புக்குள்ளாழ்த்தியது. எப்போதுமே எதற்குமே கவலைப்படாத் இயேசு அன்னையைக் குறித்துக் கவலையடைகிறாரா ? தாய்ப்பாசத்தை தரணிக்கு உணர்த்துகிறாரா ?

‘தாகமாய் இருக்கிறேன்’ இயேசுவின் குரல் சிலுவை உச்சியிலிருந்து மெல்லியதாய் விழுந்தது.

படைவீரர்கள் உடனே கடற்காளானைக் காடியிலே தோய்த்து ஒரு ஈட்டியில் குத்தி அவரிடம் நீட்டினார்கள். அவர் அதைக் குடிக்கவில்லை. அவருடைய ‘தாகமாயிருக்கிறேன்’ என்னும் வார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்ளுமளவுக்கு படைவீரர்கள் பக்குவமடைந்திருக்கவில்லை.

காலை ஒன்பது மணியளவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிற்பகல் மூன்று மணிவரை சிலுவையில் தொங்கினார்.

மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் கத்தினார்
‘எலோயி.. எலோயி… லெமா சபக்தானி…’. என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ? என்பதே அதன் பொருள். சிலுவையின் கீழ் அதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் சில ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டார்கள்.

படைவீரர்களோ சிரித்தார்கள்.

‘ஏய்.. இவன் இறைவாக்கினர் எலியாவைக் கூப்பிடுகிறானா ?’

‘ஒருவேளை எலியா வந்து இவரைக் காப்பாற்றுவாரோ ?’

‘பார்ப்போம்… ஒருவேளை ஏதாவது சுவாரஸ்யம் நிகழலாம்…’

அன்னாவும் கயபாவின் காதுகளிலும் இந்த வார்த்தைகள் விழுந்தன. கயபா அன்னாவை நோக்கிச் சிரித்தான்.

‘பாருங்கள்… இவன் தான் கடவுளின் மகன் என்றான், பிறகு இவனே கடவுள் என்றான். இப்போது கடவுளே என்னை ஏன் கை விட்டீர் என்கிறான் !… இவன் ஒரு பைத்தியக்காரன் தான்’ கயபா சத்தமாய்ச் சிரித்தான். சரியான தீர்ப்பைத் தான் வழங்கியிருக்கிறோம் என்று அவனுடைய மனசு அவனை சமாதானப் படுத்தியது.

அன்னா கயபாவைப் பார்த்தான்.

‘கயபா… உனக்கு மூளை மழுங்கிவிட்டதா ? மறை நூல் சொல்லியிருக்கும் தீர்க்கத் தரிசனங்கள் நிறைவேறுகின்றன. நீ சிரிக்கிறாயே ? ‘ அன்னாவின் குரல் நடுங்கியது.

‘என்ன சொல்கிறீர்கள் ?’ கயபாவின் சிரிப்பு சட்டென்று காணாமல் போயிருக்க குரலில் பதட்டமிருந்தது.

‘உன்னதப்பாடல் இருபத்து இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என் இறைவா என் இறைவா என்ன் என்னைக் கை நெகிழ்ந்தீர். அந்த தீர்க்கத் தரிசனம் இன்று இங்கே நிறைவேறியிருக்கிறது போல் தெரிகிறது.. அப்படியானால்…’ அன்னா இழுத்தார்

‘தலைவரே… நீங்கள்…. ‘

‘நான் வீட்டுக்குப் போகிறேன்… ‘ அன்னா நிற்காமல் விரைந்தார். கயபா குழப்பத்தில் விழுந்தான்.

‘தந்தையே… உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ இயேசு உரத்த குரலில் மீண்டும் கத்தினார். அதைச் சொன்னதும் இயேசுவின் தலை சாய்ந்தது.

Image result for jesus on the cross

இயேசு உயிர்விட்டார் !

முப்பது ஆண்டுகாலம் வெளியுலகுக்குத் தெரியாத தனி வாழ்க்கை நடத்திய இயேசு, தன்னுடைய மூன்று ஆண்டு புயல் போன்ற பணிகளால் இலட்சக் கணக்கான மக்களை தன் பால் ஈர்த்து மக்களுக்கு வாழ்வின் தத்துவங்களையும், போலித்தனமான வாழ்க்கையில் அடையாளங்களையும் விளக்கினார். இன்று நல்லது செய்தார் என்ற காரணத்துக்காக சிலுவையில் உயிர்விடுகிறார்.

இயேசுவின் எதிர்ப்பாளர்கள் இதை வெற்றி என்று ஆர்ப்பரித்தார்கள், இயேசுவின் ஆதரவாளர்களுக்குத் தான் இது தான் வெற்றி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அதே நேரத்தில் எருசலேம் தேவாலயத்தின் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அங்கே கூடியிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

பாறைகள் வெடித்துச் சிதறின. பெரும் மலைகள் பிளந்தன. பல கல்லறைகள் திறந்தன. இறந்த பலருடைய உடல்கள் உயிருடன் எழும்பின !

கொல்கொத்தா மலையில் சிலுவையருகே நின்றிருந்த படைத்தலைவர்களும் படைவீரர்களும் நடு நடுங்கினார்கள். மலையே கவிழ்ந்து விடுவதுபோல ஆடியது.

இயேசுவைப் பழித்தவர்கள் எல்லாம்
‘இ…இவர் உண்மையிலேயே இறைவாக்கினர் தான்’

‘ஐயோ இவர் கடவுளின் மகனே தான்….’  என்று நடுக்கத்துடன் அலறினார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 மரணம் மரித்துப் போனது !

download (1)

இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை இரகசியமாய்ப் பின்பற்றிய சீடர்கள் பலர் இருந்தார்கள். பொதுமக்களிடையே தங்களின் மேல் ஒரு முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும், உறவினர்களிடையே பிரிவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளியே யாருக்கும் சொன்னதில்லை.

அவர்களில் ஒருவர் யோசேப்பு. அவர் அரிமத்தியா என்னும் ஊரைச் சேர்ந்தவர். மிகப்பெர்¢ய செல்வந்தர். அவர், தான் இயேசுவின் சீடர் என்பதை வெளிப்படையாகச் சொன்னதில்லை. ஆனால் இயேசுவின் போதனைகள்¢ன் மீதும், மறுவாழ்வு, விண்ணகம் பற்றிய கொள்கைகளின் மீதும் நல்ல பிடிப்பு வைத்திருந்தார். இயேசு இறந்துவிட்டார் என்னும் செய்தி அவருடைய தயக்கங்களையெல்லாம் உடைத்து விட்டது. அவருடன் நிக்கதேம் என்னும் சீடரும் இருந்தார். அவரும் இயேசுவை இரகசியமாய்ப் பின்பற்றியவர். இருவரும் பிலாத்துவின் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் தான். இவர்கள் இருவரும் இயேசுவின் சீடர்கள் என்பதை பிலாத்து அறிந்திருந்தான்.

அவர்கள் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்டார்கள்.

இயேசு உயிருடன்  வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர் என்பதை வெளியே சொல்ல தயங்கியவர்கள். இப்போது இயேசுவின் மரணம் அறிந்தபின் தைரியமாக முன்வருகிறார்கள். இயேசுவுடன் இருந்த சீடர்கள் தலைமறைவாகவும், உயிருக்குப் பயந்தும் ஒளிந்து கொண்டிருக்கையில் இரண்டு இரகசியச் சீடர்கள் வெளிச்சத்துக்கு வந்தார்கள்.

பிலாத்து வீரனை அழைத்தான்.

‘இயேசு இறந்து விட்டாரா?’

‘இறந்து விட்டார் மன்னா. அவருடைய விலாவை ஈட்டியால் குத்திப் பார்த்து அவர் இறந்ததை உறுதிப்படுத்தினோம். அவர் ஏற்கனவே இறந்து விட்டிருந்ததால் அவருடைய கால்களை முறிக்கவில்லை’ வீரன் சொன்னான்.

‘அவருடைய எலும்புகளில் ஒன்று கூட உடைபடாது’ என்னும் மறை நூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. ஆனால் யாரும் அதை அறியவில்லை.

‘சரி… நீங்கள் போய் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து எடுத்துப் போய் அடக்கம் செய்யுங்கள்’ அனுமதி கொடுத்தான் பிலாத்து.

அவர்கள் இருவரும் சென்று சிலுவையில் ஆணிகளில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவைப் பார்த்தார்கள். அவர்கள் கண்கள் கலங்கின. எத்தனையோ அரும் பெரும் விளக்கங்களைச் சொன்னவர். எத்தனையோ அற்புதங்களின் சொந்தக்காரர். அவருடைய முடிவு இப்படியாகிவிட்டதே என்று அவர்கள் கலங்கினார்கள்.

சிலுவையைத் தரையில் சாய்த்து, ஆணிகளைப் பிடுங்கி இயேசுவின் உடலை அவர்கள் தனியே எடுத்தார்கள். கைகளும் கால்களும் ஆணிக் காயங்களினால் பிளந்திருந்தன. விலாவில் ஆழமாய் ஓர் ஈட்டிக் காயம்.

அன்னை மரியாள் இயேசுவின் உடலை மடியில் ஏந்தினாள். தொழுவத்தில் பிறப்பு. வசதிகளில்லாமல் மடியிலும், ஆவின் கொட்டிலிலும் துயின்ற மகன். இப்போது மரணம். இப்போதும் சொந்த ஊரில் இல்லை. சொந்த வீட்டில் இல்லை. ஏதோ ஒரு மலையில், ஒரு கொடுமையான சாவுக்குள் சென்று இறந்து போய் கிடக்கிறான் மகன். அன்னையின் கண்களில் அழுகை கூட ஆவியாகியிருந்தது.

அவர்கள் இயேசுவின் உடலை மெல்லிய துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். சுமார் முப்பது கிலோ வெள்ளைப்போளமும், சந்தனத் தூளும் அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றையும் இயேசுவின் உடலோடு வைத்துக் கட்டினார்கள்.

கல்வாரி மலையருகே ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கல்லறை இருந்தது. அதை யோசேப்பு தனக்காக உருவாக்கியிருந்தார். அந்தக் காலத்தில் பழைய கல்லறைகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது. ஆனால் இந்தக் கல்லறை அப்படிப்பட்டதல்ல. புத்தம் புதிதாக செல்வந்தர் யோசேப்பு தமக்காய் உருவாக்கி வைத்திருந்த கல்லறை.

அந்தக் கல்லறையில் இயேசு அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை வாயில் ஒரு மிகப்பெரிய கல்லினால் அடைக்கப்பட்டது.

இயேசுவின் மரணம் சீடர்களுக்கு அதிர்ச்சியாகவும், கலக்கமாகவும் இருந்த அதே நேரத்தில் மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் கொண்டாட்டத்தின் நாளாக இருந்தது.

‘ஒருவழியாக ஒரு மிகப்பெரிய தொல்லை இன்றுடன் தீர்ந்தது. இனிமேல் பிரச்சினையில்லை. நாம் இழந்துபோன பெயரும் புகழும் இனிமேல் நமக்கு திரும்பவும் கிடைக்கும்’

‘அவன் பின்னால் சென்ற மனிதர்களையும் நாம் சும்மா விடக்கூடாது. அவர்களையும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்.’

‘அதெல்லாம் எதற்கு ? அவன் செத்ததும் அந்த கூட்டம் காணாமலேயே போய்விட்டது. இனிமேல் அந்தக் கவலை நமக்கு வேண்டாம். அவனுடைய சீடர்கள் சாதாரணமானவர்கள், அவர்களுக்கு ஆற்றலோ, திறமைகளோ எதுவும் கிடையாது. எனவே அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இனிமேல் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். மீன் பிடிக்கவோ, வரி வசூலிக்கவோ.’ சிரிப்பொலிகள் அலைந்தன.

‘அது சரிதான்…’

‘நம்முடைய திட்டம் கனகட்சிதம்… அதுவும் பரபாவையா, இயேசுவையா யாரை விடுதலை செய்யவேண்டும் என்று மன்னன் கேட்டபோது ஒருவினாடி பயந்துவிட்டேன். எங்கே மக்கள் இயேசுவைக் கேட்பார்களோ என்று. நல்லவேளை நாம் கூட்டத்தைச் சரியாகக் கட்டுப்படுத்திவிட்டோம்’..

அவர்கள் ஆனந்தமாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள். தங்கள் முதுகை அழுத்திக் கொண்டிருந்த தேவையில்லாத ஒரு பாரம் இறங்கிப் போன நிம்மதி அவர்களிடம் தெரிந்தது.

‘ஏய்… எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது..’

‘என்ன ?’

‘இயேசு உயிருடன் இருந்தபோது, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருந்ததாய் ஞாபகம்’

Image result for Soldiers in Jesus tomb

‘அவனாவது உயிர்த்தெழுவதாவது… அதைப்பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறாய் ? அதெல்லாம் நடக்காது.’

‘நடக்காது என்பது தான் என் நம்பிக்கையும்… ஆனால் ‘

‘என்ன ஆனால்..’

‘ஒருவேளை அந்த சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டு இயேசு உயிர்த்தார் என்று கதை கட்டலாம் அல்லவா ?’

அவன் சொன்னதும் எல்லோரும் நிமிர்ந்தார்கள்.

‘அப்படி நடந்தால். அது மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே உண்டாக்கிவிடும். இயேசு உண்மையிலேயே கடவுள் தான் என்று மக்கள் கூட்டம் நம்பி விடவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா ?’

‘அட… ஆமாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் நாம் உடனே மன்னனிடம் போய், அந்தக் கல்லறையைக் காவல் காக்க ஏற்பாடு செய்யவேண்டும். என்ன சொல்கிறீர்கள் ?’

‘கண்டிப்பாக… ‘

அவர்கள் நேராக பிலாத்துவிடம் ஓடினார்கள்.

‘மன்னா… இயேசுவைக் கொன்றது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்…ஒரு விண்ணப்பம்’

‘என்ன விண்ணப்பம்’ பிலாத்துவின் குரலில் எரிச்சல் தெரிந்தது. இயேசு குற்றமில்லாதவர் என்றும் இந்தக் கூட்டத்தினரின் பொறாமை தான் அவரைக் கொன்றது என்றும் பிலாத்து அறிந்திருந்தான். எனவே அந்தக் கூட்டத்தினரைப் பார்ப்பதையே வெறுத்தான். முதலில் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று உயிரை வாங்கினார்கள், பின் யூதர்களின் அரசன் என்ற பெயர்ப் பலகைக்கு பிரச்சினை செய்தார்கள். இப்போது என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறார்கள் ?

‘மன்னா.. அந்த இயேசு உயிரோடு இருந்தபோது இறந்தாலும் மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொல்லியிருந்தான்’

‘சரி.. அதற்கென்ன இப்போது ? அவர் உயிர்த்தால் பார்த்துக் கொள்ளலாம்’

‘அதில்லை மன்னா. அவனுடைய சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து எங்கேயாவது போட்டு விட்டு அவன் உயிர்த்துவ்¢ட்டான் என்று கதை கட்டிவிடலாம் அல்லவா’

‘நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை’ பிலாத்து கேட்டான்.

‘மன்னா.. இந்த மூன்று நாட்களும் அந்தக் கல்லறையைக் காவல் காக்கவேண்டும். மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்பது தான் அவனுடைய பேச்சு. எனவே மூன்று நாட்கள் மட்டும் காவலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எங்கள் விண்ணப்பம்’

‘உங்களிடமே வீரர்கள் உண்டே. அவர்களைக் கொண்டு நீங்கள் காவல் புரியுங்கள். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ பிலாத்து எரிச்சல் குறையாமல் பேசினான்.

‘உங்கள் அனுமதிக்கு நன்றி அரசே’ கூட்டத்தினர் கலைந்தனர்.

உடனே சென்று படைவீரர்களை ஏற்பாடு செய்தனர். படைவீரர்கள் இயேசுவின் கல்லறைக்குச் சென்று அவருடைய உடல் கல்லறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினார்கள். பின் கல்லறையை மூடி அதை சங்கிலிகளால் பொருத்தி சீல்வைத்தனர். இரண்டு காவலர்கள் அந்தக் கல்லறை வாசலில் கண்விழித்துக் காவல் இருந்தார்கள்.

Image result for Jesus risen

மூன்றாவது நாள் காலை !

திடீரென நகரில் நிலநடுக்கம் ஒன்று உருவானது. எங்கும் நிலம் அதிர்ந்தது. கல்லறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களும் பயந்து போனார்கள். அந்த மலையே குலுங்குவது போலானது.

திடீரென வெள்ளுடை அணிந்த இரண்டு வானதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து கல்லறையின் அருகே நின்றார்கள். காவலர்கள் செத்தவர்களைப் போலானார்கள்.

சட்டென்று கல்லறையைக் கட்டிவைத்திருந்த சங்கிலிகள் உடைந்து தெறித்தன. கல்லறையை மூடி வைத்திருந்த கல் உருண்டோடியது.

இயேசு உயிருடன் வெளியே வந்தார் !

காவலர்கள் வெலவெலத்துப் போய் கிடைத்த திசையில் ஓடி மறைந்தார்கள்.
*



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 42 : உயிர்த்த இயேசுவின் காட்சிகள்

john-20-_christ-appears-to-mary-magdaleneஅந்த நேரத்தில் மகதலா மரியாளும், யாக்கோபின் தாய் மரியாவும், சலோமியுமாக இயேசுவின் கல்லறையருகே வந்தார்கள்.

அவர்கள் கைகளில் நறுமணப் பொருட்கள். யூத மரபுப்படி கல்லறையிலிருக்கும் உடலில் நறுமணப் பொருட்கள் பூசுவது வழக்கம்.

‘காவலர்கள் இருப்பார்கள். நாம் கேட்டால் அவர்கள் கல்லைப் புரட்டி நமக்கு உதவுவார்களா ?’ என்று உரையாடிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள்.

கல்லறையை நெருங்க நெருங்க அவர்கள் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருக்கிறது ! அவர்கள் கல்லறையை நோக்கி ஓடினார்கள். அங்கே கல்லறையின் கல் புரட்டப்பட்டிருக்க அதன்மேல் வானதூதர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வெண்ணிற ஆடையணிந்த வானதூதர்களையும், மின்னலைப்போல் ஒளிரும் அவருடைய தோற்றத்தையும் கண்ட இருவரும் நடுங்கினார்கள். வானதூதர் அவர்களிடம்

‘அஞ்சாதீர்கள். இயேசுவைத் தேடித் தானே வந்திருக்கிறீர்கள். அவர் இங்கே இல்லை. சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்’ என்றார்.

அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

‘செல்லுங்கள். போய் பேதுருவிடமும் மற்ற சீடர்களிடமும் இயேசு உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் உங்களுக்குச் சொன்னது போல அவரை அங்கே காண்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்’

அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது. தாங்கள் காண்பது கனவா? இல்லை நிஜமா என்பதைப் புரிந்து கொள்ளவே அவர்களுக்கு சற்று நேரம் பிடித்தது..

அவர்கள் பயமும் பரவசமும் அடைந்தவர்களாக கல்லறைக்கு உள்ளே உற்றுப் பார்த்தார்கள் அங்கே இயேசு இல்லை. அவர்கள் இருவரும் சீடர்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கி தலை தெறிக்க ஓடினார்கள்.
Related image

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேர் எம்மாவு என்னும் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். எம்மாவு எருசலேமிலிருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது.

இயேசுவின் மரணத்தைக் குறித்தும், அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். இரவு நேரம். அவர்களுடைய கண்களிலும், பேச்சிலும் சோகம் வழிந்தது.

இயேசு வந்தார்.

இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்தார். அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

என்ன பேசுகிறீர்கள் ?, இயேசு வினவினார்.

எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தான் பேசிக்கொண்டே வருகிறோம், அவர்கள் சொன்னார்கள்.

எருசலேமில் என்ன நடந்தது, இயேசு கேட்டார்.

நடந்து கொண்டிருந்த சீடர்களில் ஒருவரான கிளயோப்பா குரலில் கொஞ்சம் கோபம் கலந்து கேட்டார்.
‘எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகள் உமக்கு மட்டும் தான் தெரியாது போலிருக்கிறது. நாங்கள் இயேசுவைப் பற்றித் தான் பேசுகிறோம். அவர் மிகவும் நல்லவர். சொல்லிலும், செயலிலும் கை தேர்ந்த இறைவாக்கினராக இருந்தார். அவர் வந்து உலகை மீட்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை மதவாதிகளும், அரசியல்வாதிகளும் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்’ என்றார்.

‘ஓ… அப்படியா ?’ இயேசு விஷயம் தெரியாதவர் போல காட்டிக் கொண்டார்.

‘ஆம். ஆனால் இன்றைக்கு என்ன நடந்ததென்றால், சிலர் கல்லறைக்குச் சென்று பார்த்தபோது அவர் இல்லையாம். யாருக்கோ காட்சி கொடுத்தாராம். இவையெல்லாம் எங்கலைக் குழப்புகின்றன’ என்றார்கள் அவர்கள்.

‘இறைவாக்கினர் உரைப்பதெல்லாம் நடந்து தானே ஆகவேண்டும்’ என்று சொன்ன இயேசு மறை நூலில் எழுதப்பட்டிருந்த தீர்க்கத் தரிசனங்கள் யாவற்றையும் விளக்கத் துவங்கினார். அவர்கள் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டு நடந்தார்கள்.

சீடர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கினார்கள்.

‘நீங்கள் எங்கே போகிறீர்கள் ?’

‘இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது’ இயேசு சொன்னார்.

இன்று இரவு எங்களோடு தங்கிவிட்டு நாளை செல்லுங்கள். சீடர்கள் கேட்டார்கள். இயேசுவும் இசைந்தார்.

உணவு உண்ணும் நேரம்.

இயேசு அப்பத்தை எடுத்தார். வானத்தை அண்ணந்து பார்த்து கடவுளைப் போற்றி அப்பத்தைப் பிட்டார். அவர்கள் பார்த்தார்கள்.

இயேசு !!! சட்டென்று அவர்கள் அவரை அடையாளம் கண்டார்கள். இயேசு புன்னகையுடன் அவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார். இத்தனை நேரம் எப்படி நாம் அவரை அடையாளம் காணாமல் இருந்தோம் ? அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இயேசு அவர்களிடமிருந்து மறைந்தார்.

அவர்கள் இந்த செய்தியை சீடர்களுக்குத் தெரிவிக்க எருசலேம் நோக்கி ஓடினார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

சீடர்கள் ஒரு அறையில் கதவுகளை மூடி அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய மனமெங்கும் ஏராளமான கேள்விகள். இயேசு அரசராவார் என்று ந்¢னைத்திருந்தோம், இயேசு ஒரு மிகப்பெரிய தலைவராவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்படி எதிர்ப்புத் தெரிவிக்காமலேயே சிலுவையில் உயிர்விடுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இனிமேல் என்ன செய்வது ? நம் பழைய தொழிலுக்கே திரும்பிப் போவதா ? இயேசு சொன்னதுபோல அவருடைய கொள்கைகளைச் சொல்லித் திரிவதா ?

அவர்கள் பல்வேறு கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்டுக் குழம்பிக் கொண்டிருக்கையில், மகதலா மரியாவும், மற்ற மரியாவும் மூச்சிரைக்க ஓடி வந்தனர்.

‘என்ன ஆச்சு ? ஏதேனும் பிரச்சினையா ? ஏன் ஓடி வருகிறீர்கள் ? உங்களை யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா ? கயபாவின் ஆட்களா ? இல்லை வேறு யாராவதா ? ‘ சீடர்கள் பரபரத்தார்கள்.

‘இல்லை… இல்லை….’ அவர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை.

‘என்ன ? சொல்லுங்கள். இங்கிருந்து நாம் தப்பி ஓடவேண்டுமா ? விரைவாய் சொல்லுங்கள். என்ன செய்தி’ சீடர்களின் பதட்டம் அதிகரித்தது.

‘இயேசு… இயேசுவின் கல்லறை திறந்திருக்கிறது !’

‘என்ன ? கல்லறை திறந்திருக்கிறதா ? அதைப் பூட்டி சீல்வைத்துக் காவலிருந்தார்களே’

‘உண்மை தான். ஆனால் காவலர்களைக் காணவில்லை. வானதூதர் கல்லறைக்கு அருகிலே நின்றிருக்கிறார்’

‘வானதூதரா ?’ சீடர்கள் சட்டென்று பரவசமானார்கள்.

‘ஆம். இயேசு உயிர்த்துவிட்டாராம். விரைவில் நமக்கெல்லாம் காட்சி தருவாராம்’ அவர்கள் சொல்ல சொல்ல சீமோன் பேதுரு கதவைத் திறந்து கொண்டு கல்லறையை நோக்கி ஓடினார். அவருடன் இன்னொரு சீடரும் ஓடினார்.

அவர்கள் ஓடி வந்து கல்லறையைப் பார்க்க, கல்லறை காலியாய் இருந்தது. இயேசுவைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த துணிகள் மட்டும் கல்லறைக்குள் தனியே கிடந்தன.

‘இயேசு உயிர்த்துவிட்டாரா ? மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொன்னாரே ! சொன்னபடி உயிர்த்துவிட்டாரா ‘ அந்த எண்ணமே சீடர்களுக்குள் மலை மலையாய் புத்துணர்ச்சியை ஊட்டியது. அவர்கள் முகங்களில் பிரகாசம். அவர்கள் ஆனந்தத்துடன் ஓடினார்கள்.

Image result for Mary Magdalene and jesus after resurrection

மகதலா மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார். அப்போது இயேசு அவருக்குக் காட்சி கொடுத்தார். கண்ணீர் மல்க தலை குனிந்திருந்த மகதலா மரியா இயேசுவை அடையாளம் காணவில்லை. அவரை தோட்டக்காரன் என்று நினனத்தாள்.

‘அம்மா ஏன் அழுகிறாய் ?’ இயேசு கேட்டார்.

‘ஐயா… இயேசுவின் உடலைக் காணவில்லை. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா ?’ மரியா அழுகையுடன் கேட்டாள்.

‘மரியா….’ இயேசு அழைத்தார்.

மரியா என்ற குரலைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அங்கே இயேசு நின்று கொண்டிருந்தாள்.

‘ராபூனி………….’ அவள் ஆனந்தத்தில் அலறினாள்.

‘மரியா. என் நண்பர்களிடம் போய் நான் விண்ணகத் தந்தையிடம் செல்லவேண்டும் என்று சொல் என்று கூறிவிட்டு மறைந்தார். மகதலா மரியா ஆனந்தத்தின் உச்சிக்குத் தாவினாள்.


கயபா முன்னிலையில் செய்திகள் பரிமாறப்பட்டன.

கயபா படை வீரர்களை அழைத்தான். ‘இயேசுவின் சீடர்கள் தான் உங்களைத் தாக்கி சங்கிலிகளை உடைத்துவிட்டு இயேசுவின் உடலை திருடிக் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஊரெங்கும் செய்தி பரப்புங்கள்’ என்று ஆணையிட்டான்.

கயபாவின் படைவீரர் ஒருவரைத் தாக்கி விட்டு கல்லறையைக் கவர்கதெல்லாம் கனவிலும் நடக்க முடியாத நிகழ்ச்சி. அதுவும் பயந்து நடுங்கி, இயேசுவின் மரண நேரத்திலேயே அருகில் இல்லாத சீடர்களால் இது நிகழ்ந்திருக்கிறது என்பது கடுகளவும் ஒத்துக் கொள்ள முடியாதது. மக்கள் கயபாவின் வதந்தியை நம்பவில்லை.

கயபாவின் செய்தி வினியோகம் உண்மையில் இயேசுவுக்கு மீண்டும் பல ஆதரவாளர்களைச் சம்பாதித்து தந்தது.

Image result for Jesus appearing with his disciples in room

இயேசுவும் சீடர்களும் தனியறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். எப்போது தலைவர்கள் வருவார்களோ, எப்போது தங்களைக் கொல்வார்களோ என்னும் பயம் அவர்களைப்பிடித்து ஆட்டியது.

பூட்டிய கதவுகள் பூட்டியபடி இருக்க, இயேசு அவர்கள் மத்தியில் வந்து நின்று
‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.

சீடர்கள் அதிர்ந்தார்கள். ஏதோ பேயைக் காண்பது போல அவர்கள் திகிலுற்றார்கள்.

‘பயப்படாதீர்கள். நான் தான். ஆவியல்ல. என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காணும் இந்த எலும்பும் சதையும் ஆவிகளுக்குக் கிடையாது.’ இயேசு சொன்னார்.

சீடர்கள் ஆனந்தமாய் அதிர்ந்தார்கள்.

இயேசு தன்னுடைய கைகளையும் கால்களையும் சீடர்களிடம் காண்பித்தார்.

பின் புன்னகையுடன்’ உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்று மீண்டும் வாழ்த்தினார். அப்போது தோமையார் அவர்களுடன் இல்லை. மற்ற சீடர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.

உண்பதற்கு ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா ?, இயேசு கேட்டார்.

சீடர்களோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து அகலாமல் இருந்தார்கள். ஒருவர் ஓடிச் சென்று வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் கையில் எடுத்து, சீடர்களுக்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டார்.

மோசேயின் சட்ட நூல்களிலும், இறைவாக்கினர் நூல்களிலும், திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேறுவதற்காகத் தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. இயேசு அவர்களிடம் சொல்ல சீடர்கள் இன்னும் பயம் விலகாதவர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்க்கவேண்டும் என்றும் பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்றும் எருசலேம் முதல் அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறை சாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இதற்கு நீங்கள் சாட்சிகள், இயேசு சொன்னார்.

பின் அவர்கள் மேல் ஊதி,’ தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவனுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவனுக்கு அவை மன்னிக்கப்படும். எவனுடைய பாவங்களை மன்னிக்காமல் விடுவீர்களோ, அப்பாவங்கள் மன்னிக்கப்படாது’ என்றார்.

சீடர்கள் பரவசமானார்கள். இயேசு இல்லாமல் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு, தங்களுடைய பணி முடிவடையவில்லை, இனிமேல் தான் அதிகரிக்கப் போகிறது என்பது புரிந்தது. அவர்கள் உற்சாகமானார்கள்.

அதன்பின் இயேசு மறைந்தார்.

கொஞ்ச நேரத்தில் தோமா வந்தார்.

சீடர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.

தோமா ஏற்கனவே சந்தேக புத்திக்காரர். ஆனால் எதையும் உண்மையென்று அறிந்துவிட்டால் பின் அதை ஆழமாய் பின்பற்றுபவர். அவர் சீடர்கள் சொன்னதையும் முதலில் நம்பவில்லை
‘நீங்கள் இயேசுவைப்பற்றிய நினைவிலேயே இருப்பதால் உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. நான் இதை நம்பமாட்டேன்’ தோமா சொன்னார்.

‘உண்மையாகவே நடந்தது தான். எல்லோரும் ஒரே நேரத்தில் இயேசுவைக் கண்டோம்’ சீடர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் என்ன சொன்னாலும், நான் அவருடைய கைகளில் ஆணிக்காயங்கள் இருக்குமே அதில் என்னுடைய விரலையும், விலாவின் காயத்தின் என்னுடைய கைகளையும் விட்டுப் பார்க்காமல் நம்பமாட்டேன்’ என்றார். சீடர்கள் வருந்தினார்கள்.

எட்டு நாட்கள் கடந்தன.

இயேசு மீண்டும் அவர்களுக்குத் தோன்றினார். இப்போது தோமையாரும் உடனிருந்தார்.

‘தோமாவே… இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு. இதோ என் விலா. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தீர்த்து நம்பிக்கை கொள்’ இயேசு சொல்ல தோமா ‘ என் இயேசுவே… உம்மை நம்புகிறேன்..’ என்று கத்தினார்.

‘நீ என்னைக் கண்டதால் நம்புகிறாய். காணாமலேயே நம்புபவன் பேறு பெற்றவன்’ இயேசு சொல்ல தோமா அமைதியானார்.

Image result for Jesus appearing with his disciples and thomas

அதன்பின் ஏராளமான சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தார். உயிர்த்த பின் சுமார் ஐநூறு பேருக்கு இயேசு காட்சியளித்ததாக இறையியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்பு தன் சீடர்களுடன் பெத்தானியாவில் வந்த இயேசு அவர்களை ஆசீர்வதித்தார்.

‘விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் உலகமெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள். செயல்களினால் என்னை மக்களுக்குப் போதியுங்கள். மக்களுக்கு தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்.’ என்றார்,

சீடர்கள் இயேசுவின் போதனைகளை சற்றும் சிதறவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இயேசு தொடர்ந்தார்.

‘நம்பிக்கையுடன் திருமுழுக்கு பெறுவோர் மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்களோ தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் அருள் அடையாளங்கள் புரிவர். அவர்கள் என் பெயரால் பேய்கள் ஓட்டுவார்கள், புதிய மொழிகளைப் பேசுவார்கள், பாம்புகளைத் தம் கையால் பிடிக்கும் தைரியம் கொண்டிருப்பார்கள். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது. அவர்கள் கை வைத்தால் நோயாளிகள் சுகம் பெறுவார்கள்’ என்றார்.

Image result for Jesus went to heaven

சீடர்கள் அனைவருடனும் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார்.

சீடர்களுக்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கிய இயேசு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். பின் தன்னுடைய கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்த்து,

‘இதோ.. உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்’

என்று சொன்னார். சீடர்கள் மனதுக்குள் அது மிகப்பெரிய தன்னம்பிக்கையை வளர்த்தது. பின் இயேசு அவர்கள் முன்னிலையிலே விண்ணேற்றம் அடைந்து தன் தந்தையிடம் சென்றார்.

சீடர்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard