New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ....‪#‎சிலுக்கு_ஒழிப்பு_TNTJ‬....


Guru

Status: Offline
Posts: 24601
Date:
....‪#‎சிலுக்கு_ஒழிப்பு_TNTJ‬....
Permalink  
 


Rajendra Ramnivas with Arumuga Sivan and 7 others. 18 hrs · .....‪#‎சிலுக்கு_ஒழிப்பு_TNTJ‬.... இஸ்லாமிற்கு சில எல்லைகள் உண்டு. அதற்குள்ளிருப்பவர் மட்டுமே முஸ்லிமாக இருக்க முடியும். அதை கடப்பவர் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழப்பார். நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் அல்லது கருதிக் கொள் உன் விருப்பப் படி நடந்து கொள் , சாமியை கும்பிடுகிறாயா சரி! இல்லை ஏசுகிறாயா அதுவும் சரி என்பது ஒரு உண்மை சமயத்தின் அடையாளமாக இருக்க முடியாது. இவ்வாறு இல்லாத இஸ்லாம் மட்டுமே உண்மையான சமயம் என்பது இஸ்லாமிய கோட்பாடு..... இதன் விளக்கமே ஷிர்க் எனப்படுகிறது..... لِّلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். (அல்குர்ஆன் : 2:284) 23:92. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். இதுபோல இன்னும் பல வசனங்கள் உண்டு... நாம நம்ம கதைக்கு போவோம்.... تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(229) وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ(4 இந்த வகையில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தமிழகத்தில் முஸ்லிம்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிற – திரு பிஜே வை இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவித்திருந்தது. பிஜே வின் கருத்துகள் மார்க்கத்தை பலவீனப்படுத்துவதாகவும் அதன் அடிப்படைகளை ஆட்டங்கானச் செய்வதாகவும் இருக்கிறது, சாமானிய மக்கள் பேச்சுக் கவர்ச்சியில் மயங்கி அதிகம் யோசிக்காமல் பின்னே சென்று விடுகிறார்கள், அதன் மூலம் தமது அடிப்படையை இழந்து வருகிறார்கள், இஸ்லாத்தை முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டே தகர்த்து வருகிறார்கள், இன்றைய முஸ்லிம் சமூகத்தில் அதனை அழிக்கத்தேவையான அத்தனை அம்சங்களோடு இயங்கி வருகிறார்கள், இந்தச் சூழலில் மக்களை முறையாக எச்சரிப்பதற்காக ஜமாத்துல் உலமா இப்படி ஒரு தீர்மானத்தை அறிவித்திருக்கிறது, இது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவல்ல, ஆழ்ந்த சிந்தனைக்கும் போதிய நிதானத்திற்கும் பிறகு எடுக்கப்பட்டிருக்கிற முடிவாகும். இதற்கான நியாயயத்தை புரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். இது போல ஒரு இழி நிலைக்கு வேறு யாரும் ஆளாகிவிடக் கூடாது, விலகி நிற்கவேண்டும். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு என்பது ஒரு இஸ்லாமிய அமைப்பு அல்ல, அது வேறு ஒரு புதிய மதம் என்பதை ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும். நித்தியானந்தா இந்துமதத்துல சுட்டு புது மதம் ஆரம்பிச்ச மாதிரி... இவ்வமைப்பினர் ஒரு புதிய மதத்துக்காரர்கள் என்பதை சரியாக நாம் மற்றவர்களுக்கு புரிய வைக்காத வரை இவர்களுடைய பித்தலாட்டங்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது, பிஜே முஸ்லிம் அல்ல, அவர் ஒரு புதிய மதத்தின் நிறுவனர். அதாவது... அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று அவர் கூறுகிறார்,..... முஸ்லிம்கள் உருவமற்ற இறைவனை வணங்குகிறார்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த இஸ்லாத்தின் அடிப்படை உண்மையாக இருக்கிற போது – பித்தலாட்ட பிஜே கூறுகிறார். • அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, ( பிஜே தர்ஜமா பக் 1643) • அந்த உருவம் மனிதனின் உருவத்தைப் போன்று இருக்கிறது • இறைவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வான், • இறைவனிடம் மாற்றங்கள் ஏற்படும் • இறைவனுக்கு பல உருவமுண்டு • அந்த உருவங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்யலாம், அவரவர் கற்பனை செய்த உருவங்களில் மறுமையில் இறைவன் காட்சியளிப்பான். பார்க்க : ஏகத்துவம். மார்ச் 2009, பக்கம் 5. 17,18-7-2010 அன்று சென்னை விவாதம் இறைவனுக்கு உருவமுண்டு என்று கூறுவது அரேபிய கலாச்சாரத்தை பொறுத்து யூதர்களின் வழிமுறை . உருவமற்ற இறைக்கோட்பாட்டை கொண்ட முஸ்லிம்களிடத்தில் அந்த யூதக்கருத்தை கொண்டு வந்து திணிக்கிறார் நம்ம பிஜே. புகாரியில் ஒரு ஹதீஸ் வருகிறது. عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ يَهُودِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالْأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ وَالْخَلَائِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ 7414. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, 'நானே அரசன்' என்று கூறுவான்' என்றார். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, 'அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை' எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். மற்றோர் அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்.'51 Book :97 ஒரு யூதர் பெருமானாரிடம் வந்து “அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும்,பூமிகளை ஒரு விரலிலும், மலைகளைஒரு விரலிலும் , மரங்களை ஒருவிரலிலும், மற்ற படைப்பினங்களை ஒருவிரலிலும் வைத்துக் கொண்டு பின்பு.நானே அரசன் என்று கூறுவான்” என்றுசொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள்கடைவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்துவிட்டு “ அவர்கள் அல்லாஹ்வை எப்படிமதிக்க வேண்டுமோ அப்படிமதிக்கவில்லை. எனும் யூதர்களைப்பற்றிய 6;91 ஆவது வசனத்தைஓதிக்காட்டினார்கள். (புகாரி 7414) இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிற இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள்பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். قَالَ الْقُرْطُبِيّ فِي الْمُفْهِم قَوْله " إِنَّ اللَّه يُمْسِك " إِلَىآخِرالْحَدِيث،هَذَا كُلّه قَوْل الْيَهُودِي وَهُمْ يَعْتَقِدُونَ التَّجْسِيموَأَنَّ اللَّه شَخْص ذُوجَوَارِح كَمَا يَعْتَقِدهُ غُلَاة الْمُشَبِّهَة مِنْ هَذِهِالْأُمَّة، இந்த கூற்று யூதனின் கூற்றாகும்.யூதர்கள் இறைவனுக்கு உருவமுண்டு என்றும், இறைவனுக்கு உறுப்புக்கள் இருக்கிறது என்றும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இந்தஉம்மத்திலும் இது போன்ற வரம்பு மீறியகூட்டத்தினர் இருக்கிறார்கள். நூல் : முஃப்ஹிம் மஹ்மூது சுப்கீ (ரஹ்) அவர்கள்“இத்திஹாபுல் காயினாத்” எனும் தனது நூலில் கூறுகிறார். ( மறைவு ஹிஜ்ரி 1352 - இவர் அல்அஜ்ஹர் பல்கலைக் கழகத்தைச்சார்ந்தபெரும் இஸ்லாமிய அறிஞரும், எகிப்தின்ஷரீஆ அமைப்பின் நிறுவனரும் ஆவார் ) وقال محمود خطاب السبكى في كتابه إتحاف الكائنات ببيان مذهب السلف و الخلف فى المتشابهات- وقد قام إجماع السلف والخلف على أن من اعتقد أن اللهتعالى في جهة فهو كافر كماصرح به الحافظ العراقي وبهقال أبوحنيفة ومالك والشافعي وأبوالحسن الأشعريوالباقلاني "அல்லாஹ் ஒரு திசையில் இருக்கிறான்என்று நம்புகிறவன் காபிர், இதைஹாபிழ் இராக்கி அவர்கள் கூறியுள்ளார்கள். இதுவே இமாம்அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம்ஷாபிஈ, இமாம் அபுல் ஹஸன்அல்அஷ்அரி, பாகில்லானி ( ரஹ்)ஆகியோரின் கருத்தாகும்”. இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின்கருத்து. قال الشافعي: لايكفرأحد من أهل القبلة واستثنى من ذلك :المجسم ومنكرعلم الجزئيات - الأشباه والنظائر - للشافعي - (1 / 744( கிப்லாவை ஏற்றுக் கொண்டவர்கள்யாரையும் காபிராக்கக் கூடாது என்று கூறுகிற இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்கிறவனையும் அல்லாஹ்வுக்குச் சின்னச் சின்னவிசயங்கள் தெரியாது என்று சொல்கிறவனையும் காஃபிர் என்று கூறினார்கள். நூல் : அல்அஷ்பாஹ் வந்நழாயிர் (1/744) பிஜே முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் மற்ற நபிமார்களையும் சாதாரணமாக இழிவு படுத்தி தொடர்ந்து இழிவு படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்,.... எந்த அளவுக்கென்றால் .... அவரது தொண்டர்கள் முஹம்மது (ஸல்) அவர்களையும் மற்ற நபிமார்களையும் சர்வ சாதாரணமாக குறை சொல்லிப் பேசுகிற அளவுக்கு துணிச்சல் பெற்று விட்டார்கள், நபித்தோழர்கள் தம்மை அறியாமல் நுனுக்கமான ஷிர்க் வைத்திருந்தார்கள் , முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு யூதன் சொல்லிக் கொடுக்கும் வரை இதை அறியாமல் இருந்தார்கள் என பிஜே தனது உரை ஒன்றில் கூறுகிறார். “ ஒரு யூதர் பெருமானாரிடம் வந்து ஒரு பயங்கரமான குற்றச் சாட்டை முன்வைக்கிறார். உன்னுடைய உம்மத்தினர் மா ஷாஅல்லாஹ் வ ஷிஃத என்று சொல்வதன் மூலம் இணைக் கற்பிக்கிறார்கள். கஃபாவின் மீது சத்தியமாக என்று சொல்லி இணைக்கற்பிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். உடனே ரசூலுல்லாஹ் என்ன செய்கிறார்கள். ஆகா ! ஆமா ! நுனுக்கமான இந்த விசயத்தை நாம கவனிக்காம விட்டுட்டோமே! அப்ப அவ்வளவு சஹாபாக்களுக்கும் அது ஷிர்க் என்று விளங்கல! ரஸூல் (ஸல்) அவர்களும் இதை கவனிக்காம இருந்துட்டாங்க!” இதில் உண்மை என்ன வென்றால்??... ஒரு ஹதீஸ் இப்படி வருகிறது.... நஸயீ : 3713. عَنْ قُتَيْلَةَ امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّكُمْ تُنَدِّدُونَ وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ وَتَقُولُونَ وَالْكَعْبَةِ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا وَرَبِّ الْكَعْبَةِ وَيَقُولُونَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ سنن النسائي 3713 – ஜுஹைனா குடும்பத்தைச் சேர்ந்த குதைலா என்ற பெண்மணி அறிவிக்கிறார். ஒரு யூதர் பெருமானார் (ஸல்)அவர்களிடம் வந்து “ நீங்கள் இணைவைக்கிறீர்கள், அல்லாஹ் நாடினால்,நீயும் நாடினால் என்று சொல்கிறீர்கள். கஃபாவின் மீதாணையாக என்றும்சொல்கிறீர்கள் என்று கூறினார்.அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் “சத்தியம் செய்வதானால் கஃபாவின் இறைவன் மீதாணையாக என்று சொல்லுங்கள் அவ்வாறே இறைவன் நாடினால் என்று சொல்லி விட்டு பிறகு நீ நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டார்கள். (நஸயீ : 3713. மாஷா அல்லா வ ஷிஃத என்று இப்போது ஒரு வர் சொன்னாலும் அது ஷிர்க் ஆக ஆகாது, இது ஷிர்கும் அல்ல, இந்த வாசகத்தை தடுக்கும் உத்தரவு எதுவும் இந்த ஹதீஸ்லி இல்லை, இது மாதிரியான பல வாசகங்கள் குர் ஆனில் இடம் பெற்றுள்ளனர். அல்லாஹ் தன்னையும் இறைத்தூதரையும் வாவு இட்டு இணைத்துக் கூறியுள்ளான், பத்ஹுல் பாரியில் அபூஜஃபர் தாவூதி (ரஹ்) அவர்கள் கூறுவதாக குறிப்பிடப்படுகிறது. عَنْ أَبِي جَعْفَرالدَّاوُدِيِّ قَالَ : لَيْسَ فِي الْحَدِيث الَّذِي ذَكَرَهُ نَهْيعَنْ الْقَوْل الْمَذْكُورفِي التَّرْجَمَة،وَقَدْقَالَ اللَّه تَعَالَى ( وَمَانَقَمُواإِلَّا أَنْ أَغْنَاهُمْ اللَّهُ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ ) وَقَالَ تَعَالَى ( وَإِذْ تَقُولُلِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْت عَلَيْهِ ) وَغَيْرذَلِكَ- فتح الباري شرح صحيح البخاري – ابن حجر (19/ 9( எங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்ற அர்த்தமுடைய ராஇனா என்ற வார்த்தையை சஹாபாக்கள் பயன்படுத்தினார்கள். யூதர்கள் சூழ்ச்சியாக அதை தங்களது வழக்கில் திட்டும் வார்த்தையாக மாற்றிப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ் அதை தடுத்து நீங்கள் உன்ழுர்னா என்றவார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று முஃமின்களுக்குச் சொன்னான். இதில் ராஇனா என்ற வார்த்தை தவறானது அல்ல என்ற போதும் யூதர்களின் சூழ்ச்சியை தடுப்பதற்காக அல்லாஹ் அந்த வார்த்தையை மாற்றினான். அதுபோலத்தான் இந்த இடத்தில் மா ஷாஅல்லாஹ் வ ஷிஃத-வை பெருமானார் (ஸல்) அவர்கள் மாற்றினார்கள். எதார்த்தம் இப்படி இருக்க, சஹாபாக்கள்ஷிர்க் வைத்திருக்க பெருமானார் (ஸல்) அதை அறியாமல் இருந்தார்கள் என யூதர்களைப் போலவே பிஜே வும்கூறுகிறார். இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின் கடமையையும்அந்தஸ்தையும் ஒரு சேர படுகுழியில் தள்ளுகிற வார்த்தைகளை சர்வ சாதாரணமக பேசி இழிவு படுத்தும் பிஜே வின் இப்பாதகச் செயலை யூதர்கள் கூட சிந்தித்திருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் பொய் சொல்லுவார்கள் என அதனால் தான் நமது ஆர்ப்பாட்டங்களுக்கு 500 பேர் வந்தாலும் 5000 பேர் வந்தார்கள் என்று சொல்லுகிறோம் என மிக பகிரங்கமாக கூறுகிறார், முஹம்மது நபி (ஸல்) அவர்களையே சகட்டு மேனிக்கு பந்தாடுகிறவர் மற்ற நபிமார்களை விட்டு வைப்பாரா? இதே இன்னும் சில · தாவூத் (அலை) அவர்கள் தனது ஆட்சியைப் பயன்படுத்தி அடுத்தவரின் சொத்தை அபகரித்தார். மொழிபெயர்ப்பு 8வது பதிப்பு 1374 · யூசுஃப் (அலை) அவர்கள் அடுத்தவரின் மனைவியை விபச்சாரம் செய்ய நாடினார் · (8 வது பதிப்பு 511) · ‘அல்லாஹ் தன் மீது சக்தி பெறமாட்டான்” என்றும் யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டார் (8 வது பதிப்பு 646) இறைத்தூதரின் தரத்துக்கு குறைவானஒன்றை அவர்களுடன் சம்பந்தப்படுத்துவது மரணதண்டனைக்குரிய குற்றம் என சட்டஅறிஞர்கள் கூறுகின்றனர். قال الإمام أحمد بن حنبل : كل من شتم النبي صلى الله عليه وسلم ، أو تنقصه ، مسلمًا كان أو كافرًا فعليه القتل ، وأرى أن يقتل ولا يستتاب . “நபியை ஏசுபவன், அல்லது குறைத்துபேசுகிறவன், முஸ்லிமாக இருந்தாலும்காஃபிராக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டைதான். அவன் கொல்லப்படவேண்டும். தவ்பா செய்யுமாறு அவனிடம்கோரப்படக் கூடாது என்பதே என் கருத்தாகும் என இமாம் அஹ்மது பின்ஹன்பல்( ரஹ்) கூறுகிறார்கள். وقال الإمام مالك : من سب النبي صلى الله عليه وسلم أو شتمه أو عابه أو تنقصه ، قُتِل ، مسلمًا كان أو كافرًا ولا يستتاب நபியை திட்டுகிறவன், ஏசுகிறவன், குறைபேசுகிறவன் முஸ்லிமாக இருந்தாலும்.காஃபிராக இருந்தாலும்கொல்லப்படுவான். தவ்பா செய்யுமாறுஅவனிடம் கோரப்படக் கூடாது என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள். இந்தச் செய்திகளை மேற்கோள் காட்டுகிற இப்னு தைமிய்யா கூறுகிறார். وقـد دلــت الآيــة على أن كـل مـن تـنـقـص رســـول الله صلى الله عليه وسلم جــادًا أو هــازلاً فــقــد كــفــر قُلْ أَبِاللَّهِ وَءَايَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ என்ற வசனம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டுமென்றோ, அல்லது நகைச்சுவையாகவோ, குறைத்து பேசுகிறவன் காஃபிராகிவிட்டான் என்பதை அறிவிக்கிறது. நூல் : الصارم المسلول நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை நாம் முஹம்மது நபி (ஸல்;) அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் என்ன சொன்னார்களோ அது அனைத்தும் சத்தியம் என்று நம்புகிறோம். மக்தப் மதரஸாக்களில் ஈமான் முபஸ்ஸலுக்கு முன் ஈமான் முஜ்மல் என் ஒன்றை நமக்கு உஸ்தாதுகள் கற்றுக் கொடுத்ததை மறந்திருக்கிற மாட்டீர்கள், الأيمان المجمل : التصديق بكل ما جاء به محمد . அல்லாஹ்வை நம்புகிறோம் என்பதற்கு முன்னதாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய வேண்டிய அடிப்படை நம்பிக்கையாகும் இது, ஆனால் நம்ம பிஜே, இவர்களை தம்மிஷ்டத்திற்கு பல விசயங்களை சொல்லியிருக்கிறார்கள், அவை வஹி அல்ல , அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார். · பணயத் தொகையை பெற்றுக் கொண்டு பத்ரு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்து திருத்துகிறான். வஹிக்கு மாற்றமாக கவனக்குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. ( (நபித்தோழர்களும் நமதுநிலையும் 63) அதே போல தன்னுடைய அறிவுக்கு சரியாகப் பட வில்லை என்பதன் பேரில் ஸஹீஹ் என்று முஸ்லிம் உலகம் ஏகோபித்து அங்கீகரித்துக் கொண்ட நபிமொழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார். இன்று அவருடைய தொண்டரடிப்பொடி பி.ஜே பக்தர் குலாமோ... வெண்டைக்காயை முறித்துப் போடுவது போல ஹதீஸ்களை குப்பதை தொட்டிக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,.. புகாரி, முஸ்லிம் என்று நா வரளக் கத்தியவர்கள் இன்று இமாம் புகாரியையை குப்பையில் தூக்கி போடு என்கிறார்கள், சூனியம் இருக்கிறது என்று நம்பிய அவரது ஈமான் சரியில்லை என்கிறார்கள். பிஜே ஏற்றுக் கொண்டது மட்டும் தான் ஹதீஸ் மற்றவை ஹதீஸ் அல்ல என்ற கொள்கையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற மதம் செயல் படுகிறது, இஸ்லாத்திலிருந்தும் குரான், ஹதீஸிலிருந்தும் சிலதை எடுத்துக் கொண்ட சீக்கிய பஹாய் மதங்களைப் போலவே இந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் இஸ்லாத்திலிருந்து சிலதை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது, பிஜே குர் ஆனில் இலக்கணபிழை இருக்கிறது என்று கூறுகிறார். உலக முஸ்லிம்களை மிகவும் திகைப்பில் ஆழ்த்திய விசயம் இது, முழுக்க நம்பத்தகுந்த வேதமான திருக்குர் ஆனை இப்படி கொச்சைப் படுத்திப் பார்க்கும் எண்ணம் முஸ்லிம் சமுதாயத்தை சிதைக்கும் சதித்திட்டத்தின் ஆணிவேறாகும், குர் ஆனில் இருக்கக்கூடிய சில எழுத்துக்களை இவை தவறாக எழுதப்பட்டு விட்டது. இவை இருக்கக் கூடாது என்று பிஜே கூறுகிறார். பிஜே மொழிபெயர்ப்பின் 10 ம் பதிப்பு பக்கம் 64 ல் எழுத்துப் பிழைகளின் பட்டியலை எழுதிவிட்டு சுமார் 20இடங்களில் குர் ஆனில் இருக்கும் எழுத்துக்களை அவை குர்ஆனில் உள்ளவை அல்ல என்று கூறுகிறார். கவனியுங்கள் இதுவரையிலும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று பட்டு நிற்கிற குர் ஆனில் பிஜே நிகழ்த்தும் கைங்கர்யம் எதில் எத்தகைய சந்தேக விதையை விதைக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்! அவர் மீது கொண்டிருக்கிற மோகத்தில் அவரது பக்த குழுவினர் எத்தனை தூரம் முஸ்லிம்களின் வழியிலிருந்து விலகிச் சென்று விட்டனர் என்பதையும் எண்ணிப் பாருங்கள். இவ்வாறு குர் ஆனின் எழுத்துக்களை குறை கூறுவது இஸ்லாமிய நோக்கில் காபிர்களின் செயலாகும். காழி இயாழ் (ரஹ்) ஷிபா எனும் தமது நூலில் கூறுகிறார்கள். وَاعْلَمْ أَنَّ مَنِ اسْتَخَفَّ بِالْقُرْآنِ، أَوِ الْمُصْحَفِ، أَوْ بِشَيْءٍ مِنْهُ، أَوْ سَبَّهُمَا، أَوْ جَحَدَهُ، أَوْ حَرْفًا مِنْهُ، أَوْ آيَةً أَوْ كَذَّبَ به، أو بشيء منه.. أو بِشَيْءٍ مِمَّا صُرِّحَ بِهِ فِيهِ مِنْ حُكْمٍ، أَوْ خَبَرٍ، أَوْ أَثْبَتَ مَا نَفَاهُ، أَوْ نَفَى مَا أَثْبَتَهُ.. عَلَى عِلْمٍ مِنْهُ بِذَلِكَ، أَوْ شَكَّ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ، فَهُوَ كَافِرٌ عِنْدَ أَهْلِ الْعِلْمِ بِإِجْمَاعٍ. குர் ஆனையோ அதன் உருவெழுத்தையோ அல்லது அதில் கொஞ்சத்தையோ மலிவாக கருதுகிறவர் அல்லது குர்ஆனை ஏசுபவர், மொத்த குர்ஆனையோஅதில் ஒரு எழுத்தையோ வசனத்தையோ மறுப்பவர், குர் ஆனை பொய்ப்பிப்பவர், அல்லது அதில் தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரு சட்டத்தையோ செய்தியையோ பொய்பிப்பவர், அதில் இருக்கிற ஒன்றை இல்லை என்று கூறுகிறவர், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுகிறவர் அனைவருமே, இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி காஃபிராவார்கள். திப்யானில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள் أجمعواعلى أن من جحد منه حرفا مما أجمع عليه أوزاد حرفالم يقرأ به أحد وهوعالم بذلك فهوكافر- التبيان في آدابحملة القرآن - (1 / 164 முஸ்லிம்கள் ஏகோபித்துள்ள குர்ஆனின் ஒரு எழுத்தை மறுப்பவன் அல்லது அதில் யாரும் ஓதாத ஒரு எழுத்தை தெரிந்து கொண்டே அதிகப்படுத்துபவன் காஃபிராவான் – (பாகம் 1 பக் 164). இமாம் பத்ருத்தீனுல் ஐய்னீ (ரஹ்) அவர்கள் உம்ததுல் காரியில் கூறியுள்ளார்கள்: وقدأجمعواعلى أن من جحد حرفا مجمعاعليه منالقرآن فهوكافر- عمدة القاري شرح صحيحالبخاري - (29 / 85( “முஸ்லிம்கள் ஏகோபித்த குர்ஆனின் ஒரு எழுத்தை மறுப்பவன் காபிராவான் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர். தப்ஸீர் தப்ரியில் இப்படி ஒரு செய்தி வருகிறது. عن إبراهيم،عن عبدالله، قال: من كفربحرف منالقرآن، أوبآية منه، فقد كفربه كله - تفسيرالطبري - (1 / 55) “குர் ஆனில் ஒரு எழுத்தையோ அல்லதுவசனத்தையோ மறுப்பவன் முழு குர்ஆனைமறுத்தவனை போன்றவனே என அப்துல்லாஹ் பின்மஸ்வூத் ரலி கூறியுள்ளார்கள். (தப்ஸீ தப்ரீ) முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்பாடான உருவமற்ற இறைக் கோட்பாட்டை மறுத்து அல்லாஹ்விற்கு உருவமுண்டு என்று சொன்னது. முகம்மது நபியை(ஸல்) முழுமையாக ஏற்க மறுப்பது, பிஜே ஒப்புக்கொண்ட ஹதீஸை மட்டுமே ஏற்க முடியும் என்று கூறுவது. அதே போல வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. கழா தொழ வேண்டியதில்லை. ஆடைக்கு மேல் உடலை மறைக்கும் ஒரு பேர்வையாக பர்தா அணியத் தேவையில்லை. அல்லாஹ்விற்கு எதிராக கேள்வி கேட்க சைத்தான் மலக்குகளை தூண்டிவிட்டான். சஹாபாக்கள் மார்க்கத்தின் கருத்துக்களை திசை திருப்பி விட்டனர். நபி (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் தர்காக்களை ஜிராரத் செய்திருக்க, தர்காக்களை ஜியாரத் செய்வோரை சமாதி வழிபாடு செய்வோர் என்று கூறுவது போன்ற இன்னும் ஏராளமான வழி கெட்ட கருத்துக்களை கூறுகிற காரணத்தால் தான், பிஜே இஸ்லாமிலிருந்து விலகி விட்டார் என தமிழ் மாநில ஜமாத்துல் உலமா அறிவித்திருக்கிறது. அவரை பின்பற்றுவோர் அவரை ஒரு இஸ்லாமிய பேச்சாளராக கருதுவோர் அனைவரும் எச்சரிக்கை அடைய வேண்டிய விசயங்கள் இவை, அவரை ஆதரிப்போர் இந்த விவகாரங்களில் அவரது கருத்தை ஒத்துக் கொள்வதாகவே பொருள் அமையும். தர்கா ஜியாரத் செய்வோர் தாயத்து அணிவோர் ஓதிப்பார்ப்போருக்கும் எங்கள் மதத்திற்கும் எந்த சம்ப்ந்தமில்லை என்று சொல்லட்டுமே பார்க்கலாம். குறைந்த பட்சம் அவர்களது சிலுக்கு ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகாக இப்போதாவது அவர்களது தொண்டர்களுக்குச் இதை உறுதியேற்கச் சொல்லட்டும். தர்கா ஜியாரத், தாயத்து அணிதல், ஓதிப்பார்த்தலை ஏற்போரும், சூனியம் உள்ளது என்பதை நம்புவோரும், பி.ஜே பக்த கோடிகளின் தகப்பன் எனில் அவனது சொத்தில் பங்கு கேட்காதே! உன்னுடைய சொத்தில் அவருக்கு பங்கில்லை என எழுதி வைத்து விடு! அந்தப் பள்ளிவாசல்களுக்கு போகாதே ! அத்தகையோர் பின் நின்று தொழாதே! அத்தகைய குடும்பங்களில் திருமணம் செய்து கொள்ளாதே! இவற்றை நம்புகிறவர்கள் இப்படிச் செயல்படுகிறவர்களுடைய மதம் எங்களுடைய மதம் அல்ல. அவர்களுடை மயானமும் நமக்கு வேண்டாம். என்று தம்முடைய தொண்டர்களுக்குச் சொல்லி, தானும் (பி.ஜே) உறுதி மொழி ஏற்கட்டும் பார்க்கலாம்! எத்தனை போஸ்டர் அடிக்கிறார்கள்? இப்படி ஒரு போஸ்டர் அடிக்கட்டும் பார்க்கலாம்,!... செய்ய மாட்டார்கள், ஏனெனில், இவர்கள் வெட்கம் கெட்ட விஷமிகள். சுய நலத்தை மையமாக கொண்டு ஒரு குரூப்பிஸமாக இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பலவீனப்படுத்த நினைக்கும் சதி கூட்டங்கள். சுன்னத் ஜமாத்தினர் அறுத்ததை சாப்பிடுவதற்கு சப்புக் கொட்டிக் கொண்டு காரணம் சொல்கிறார்கள், அபூஜஹ்ல் அறுத்ததை கூட சாப்பிடலாம் என்கின்றனர். மக்கா இமாம்கள் சிஹ்ரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பின்பற்றித் தொழலாமா என்ற ஒருவனின் கேள்விக்கு..... மக்கா இமாம்கள் விவரமற்றவர்கள் வெறுமனே குர் ஆன் ஓதத்தெரிந்தவர்கள்... நம் அளவுக்கு ஆய்வு செய்யத் தெரிந்தவர்கள் அல்ல... எனவே அறியாமல் அவர்கள் நம்புவதால் அவர்களை பின்பற்றலாம் என்கிறான். கேனத்தனமாக ஒரு கூட்டம் பி.ஜே சொல்வதை ரசித்து சிரிக்கிறது, ஜமாத்துல் உலமா தலைவரே தங்களது மாநாட்டிற்கு அழைப்பதாக போலி விளம்பரம் செய்து இலாபம் பார்க்க நினைத்தவர்கள். அத்தனை விதமான மோசடித்தனங்களையும் மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு தைரியமாக செய்கிறவர்கள். அந்த அசட்டு தைரியத்தை மூலதனமாக கொண்டவர்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்கி சாதித்துக் காட்ட நினைக்கிறார்கள். தன்னையும் தனது ஆதாரவாளர்களையும் தவிர மற்ற அனைத்து முஸ்லிம்களையும் சரமாரியாக காபிர் முஷ்ரிக் என்று சொல்வதில் பிஜே சாதனை படைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களையும் காபிர்களாக்கி விட்டு இவரும் இவருடனிருக்கிற சில ஆயிரம்பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது அவருடைய வாதமாகும். இவர்களுடைய காபிர் முத்திரைக்கு, மக்கா மதீனா பள்ளிவாசல்களின் இமாம்களும் தப்பவில்லை. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கலை இமாம்களும் தப்பவில்லை. இமாம் ஷாபிஈ, இமாம் அபூஹனீபா போன்ற மத்ஹபு இமாம்களும் தப்பவில்லை. ஏன் சஹாபாக்களும் தப்பவில்லை. ....இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ....... ...இங்ஙனம்.... ‪#‎கெட்டவன்‬.....

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard