சந்திராவும் அபயாவும்
மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை எழுதியவர் குமரகுருபரர். இவர் குருநாதரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார். இறுதியில் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். மயிலாடு துறையைக் கடந்து குருநாதர் மாசிலாமணி தேசிகர் வாழும் தருமபுரி மண்ணை மிதித்த உடனேயே அவருடைய மனதிலிருந்த கேள்விகள் அகன்றன.
இந்தத் தகவலை
ஊரிற் குறுகினேன்; ஓர் மாத்திரையளவு
பேரிற் குறுகினேன் பின்
பண்டார மும்மணிக் கோவையில் அவரே எழுதினார். முதல் வரியில் வரும் குறுகினேன் என்பது அவ்வூரைச் சேர்ந்தேன் என்பதைக் குறிக்க. இரண்டாவது வரியில் வரும் ‘குறுகினேன்’ சொல்வது குறைந்தது என்பதை. சீவனாக இருந்த தான் ஒரு மாத்திரை குறைந்து சிவனாக ஆனேன் என்கிறார் குமரகுருபரர்.
சில சன்னிதிகளை அடைந்த உடனேயே கேள்விகள் புசுக்கென்று காணாமல் போய்விடும். ஆன்மிக ஆற்றலின் விளைவு அது.
நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. விஷயத்தை விலாவாரியாகச் சொன்னால்தான் ஓரளவாவது போய்ச் சேரும். ஆகவே மின்வெளிச் சிந்தனைகளாக வெளிப்படும் எனது கருத்தாக்கங்கள் போகப் போகத் தெரியும்…
இனி தினமலரிலிருந்து ஒரு செய்தி…
ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.யான சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் சந்திரா போட்டியிட முடியாது. ஆதி திராவிடர் எனப் பொய்கூறி அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய பெயர் குளோரி சந்திரா. அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவர் கிறிஸ்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ முறைப்படிதான் சந்திராவுக்கும் அவரது கணவர் சூசை மாணிக்கத்துக்கும் திருமணம் நடந்தது. எனவே இந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை என்பது மனுவின் சாரம்.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன் சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தார். (பார்க்க:தினமலர், 03 டிசம்பர் 2008).
கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
சில கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பகலில் மட்டும் பத்தினி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். என்னடா, மதத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக சேரநாட்டிலிருந்து இதோ ஒரு செய்தி.
கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த அபயா என்ற கன்னிகாஸ்திரீ 1992ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார். ஒரு பாதிரியாருடன் வேறொரு கன்னிகாஸ்திரீ உறவுகொள்வதை அபயா பார்த்துவிட்டதால், அவர் தீர்த்துக் கட்டப்பட்டார் என்று சொல்லப் பட்டது. போலீஸ் விசாரணைக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஒத்துழைப்புத் தராததால் பொதுமக்களிடையே எதிர்ப்பு உருவானது. பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு, 16 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த வழக்கில் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ரகயில் என்ற பாதிரியார்களும் செஃபி என்ற கன்னிகாஸ்திரீயும் CBI போலீசாரால் கோட்டயத்தில் கைது செய்யப்பட்டனர்.
கேரளத்தைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் செய்தி இது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து’ என்ற சொலவடையை ‘பாவத்தையும் மன்னிப்பையும் பக்கத்தில் வைத்து’ என்று மாற்றிக் கொள்ளலாம்.
நம்முடைய அழகையும் ஐஸ்வர்த்தையும் திருச்சபை கடத்திக் கொண்டு போகிறதே, உயிரோடிருந்தும் நாம் ஊமையாகிவிட்டோமே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு வருகிறது ஒரு சேதி, அடுத்த தவணையில்…
மேற்கோள் மேடை:
“ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ ஒருமுறையாவது சேரித் தமிழர்களுக்காகச் சிறை சென்றதுண்டா?”
- தலித் முரசு, திங்களிதழ், தலையங்கம்





கடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி நடுத்தெருவில் திண்டாடச் செய்தார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு காலை நேரத்தில் பேசினார் சுப. வீரபாண்டியன். அவர் ஈ.வே.ரா குறித்த தகவல் ஒன்றைக் கூறினார். திராவிடர் கழகம் நடத்திய கூட்டமொன்றில் யாரோ ஒருவர் ஈ.வே.ராவைக் கேள்வி கேட்டாராம். அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த ஈ.வே.ரா, தன்னை ஆதரித்துக் கைதட்டியவர்களைக் கண்டித்தாராம். கைதட்டலால் கேள்வி கேட்டவரின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்றாராம் அவர்.
ஊடகங்களின் கடாட்சத்தால் உருவானதுதான் பகுத்தறிவு இயக்கம் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ‘நந்தனார்’ என்ற திரைப்படம்தான் (எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்தது – 1942) அவர்களுடைய வாதத்திற்கு அடிப்படை. திரைப்படத்துக்கு எது ஆதாரம் என்று பார்த்தால் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனம்’.


காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு திரைப்படத் துறையினர் செய்த பணிகளைப் பார்த்தோம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைமை எப்படி நடத்தியது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைச் சொல்லப் போகிறவர் வெங்கட் சாமிநாதன் / வியப்பளிக்கும் ஆளுமைகள்:
திரைப்படங்களால் தி.மு.க. வளர்ந்தது. தி.மு.க.வால் திரைப்பட வசூல் குவிந்தது. இதன் உச்சகட்டமாக உதித்தவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருடைய முத்திரை அழுத்தமாக விழுந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது (1967) அவர் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலே பரங்கிமலையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரைப் பார்க்க இரா.செழியன் வந்தார்.

1961-ல் பந்துலு ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை வெளியிட்டடர். ஆங்கிலேயக் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கப்பல் கம்பெனி நடத்தி, அதனால் ஆட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகி சுதந்திரப் போராட்டத்தில் பங்கும் கொண்டு சிறை சென்று சிறையில் செக்கிழுத்த தியாகி வ.உ. சிதம்பரனாரின் கதை….
சோமசுந்தரம் பிள்ளை சாதாரண சோதிடர் அல்ல… அக்காலத்திலேயே அதிக வருமானமுள்ள பெரிய ‘நாடி சோதிடர்’. எங்கிருந்தோ எப்படியோ அடையப் பெற்ற சில அபூர்வமான ஓலைச்சுவடிகள் அவரிடமிருந்தன… அந்த ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது ‘கிரந்த லிபி’ எனப்படும் ஒருவகைத் தமிழ் எழுத்தாகும். அதனைப் படிப்பதற்கு முறையான பயிற்சி வேண்டும்… அவர் தனது கம்பீரமான குரலில் அந்தக் கவிதைகளை கணீர் என்று பாடுவார். அவர் பாடப்பாட ஏகாம்பரம் பிள்ளை என்ற உதவியாளர் அதனை எழுதுவார். சில நாட்களில் நானும் எழுதக் கற்றுக் கொண்டேன்.
இந்தியாவின் தொழில் வளர்ச்சி, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்டது. போர்முனையில் பதுங்கு குழிகள் அமைப்பதற்கு மணல் மூட்டைகள் தேவைப்பட்டன. அதன் விளவாக இந்தியச் சணலின் விலை அதிகரித்தது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. ஆயுதங்களுக்காகவும் ரயில்வேயின் பயன்பாட்டுக்காகவும் இந்திய எஃகின் தயாரிப்பு கூடியது.
நான் பாரதியாரை நினைத்துப் பார்க்கிறேன். “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே….” என்று பாரதி எழுதியது 1919ல். நவ இந்தியாவின் எழுச்சியை அகக்கண்ணால் கண்டவர் அவர். ‘சுதேசித் தொழிலுக்கு பிரிட்டிஷ் அரசு போட்ட முட்டுக்கட்டைகள்’ பற்றியும் பாரதி கட்டுரை எழுதியிருப்பதாக நண்பர் ஹரிகிருஷ்ணன் சொல்கிறார். பாரதியை நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்; அவர் தோய்ந்து பார்த்திருக்கிறார்.
சூழ்நிலையையும் ஆவணங்களையும் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அது அவருக்கு உதவக்கூடும். வீரமணிக்கு உதவக்கூடியது விஞ்ஞானக் கதை.
பொது மக்களுக்காக இருக்கும் கிணறு, குளம், பிரார்த்தனைக் கூடங்கள் முதலியவற்றை இன்னார்தான் உபயோகிக்கலாம், இன்னார் உபயோகிக்கக் கூடாது என்று தடுக்கக் கூடாது. அது போன்று தடுப்பவர்களுக்குத் தண்டனை அளித்தாலும் தவறில்லை.


