New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதங்கள் - இஸ்லாம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மதங்கள் - இஸ்லாம்
Permalink  
 


மதங்கள் - இஸ்லாம்

 
*



*



வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...




*

மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.

*
விவிலியத்தில் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இது முழுமையாக மாறி உள்ளதுபோல் தெரிகிறது. அல்லா மனித சாயலில் படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அல்லா மிகவும் பெரியவன்; அல்லா பெரிதும் கோபப்படுவான்; அல்லா மிகவும் ரோஷக்காரன்; அல்லா வெட்கப்படுவான் - போன்ற சொலவடைகள் மிகவும் பிரபலம். அதாவது இங்கு கடவுள் / அல்லா மனித உருவில் பார்க்கப்படுகிறது / பார்க்கப் படுகிறான். சாதாரண மனித குணங்களைக் கடவுள் மீது ஏற்றுவது "If triangles have gods, those gods would be bigger triangles" என்ற கூற்றினை ஒத்து வருகிறது.

*
பிள்ளைப் பிராயத்தில் சொல்லித் தரப்படுவதால் என்றே நினைக்கிறேன் - பல இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரே மாதிரியான சில கருத்துக்கள் பொதுவாகப் பேசப்படும்.

*எங்களைப் பெற்றவர்களைவிடவும் நாங்கள் நபியை மதிக்கிறோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

*குரான் எந்த மனிதக் கரங்களாலும் மாற்றப்படவில்லை. -(எல்லோரும் எத்துணை ஆராய்ச்சியில் இதைச் சொல்கிறீர்கள்?இவையெல்லாம் சின்னப் பிள்ளையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம் - கத்தோலிக்க கிறித்துவக் குழந்தைகளிடம் "நன்மை"யில் ஏசு அப்படியே ரத்தமும் சதையுமாக இருக்கிறார் என்றும், ஏசு கன்னிமாதாவிடமிருந்து பிறந்தார் என்பதும், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதைச் சொல்லிக் கொடுப்பதையும் அவர்கள் அப்படியே அதைக் காலம் காலமாய் நம்புவதைப் போல.) 

பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களை வெறும் நம்பிக்கைகளால் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதை ஆராய்ச்சி செய்தவர்களின் முடிவுகளைக் கேட்க மட்டுமாவது, கண்களையும் மனத்தையும் திறந்து நாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா? அதில் எது உண்மை என்று அதன்பின் யோசிக்க ஆரம்பிக்கலாமே .. அதைவிட்டு விட்டு 'என் நம்பிக்கை இது; இதை எப்படி யாரும் ஆராய்ச்சி செய்யலாம்' என நினைத்து அதனைப் புறந்தள்ளக் கூடாதல்லவா?


*குரான் அறிவியல் உண்மைகள் பல கொண்டுள்ளது. 

(எல்லா மதக்காரர்களும் சமயம் கிடைக்கும்போது அறிவியல் உண்மைகள் எங்கள் மதத்தில் உள்ளது என்று கூறுவதில் ஏதும் வித்தியாசமில்லை. அப்படி "எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்? 'ஏழு வானம்' என்பது என்ன அறிவியல். இரவுக்குள் பகலையும், பகலுக்குள் இரவையும் .... பூமியை நீட்டி விரித்து ... மலையின் வேர்... இப்படியே பல ...)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை மார்க்கம்.

எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் கற்பிப்பதும், ஆணையிடுவதும் வேறு. ஆனால், நீ வெள்ளை சட்டை போடணும்; உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்; எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வராது; அல்லது எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வரும்; ஆண்கள் தங்க நகை அணியக்கூடாது; 
( தங்கத்துக்கும், Y குரோமோசோமுக்கும் அப்படி என்ன பகை?)
இப்படிப்பட்ட கட்டளைகளை கடவுள் மனிதனுக்குத் தருவாரா? தர வேண்டுமா? sounds kiddish! பிள்ளையைப் பலி கொடு என்று கேட்கிற கடவுள் ஒருவேளை இதுபோன்ற கட்டளைகளைக் கொடுக்கலாமோ?!

இங்கே கடவுளை மனிதானாக ஆக்கும் முயற்சியே இது என்று தெரிகிறது
.

*ஆண்கள் தாங்கள் ஆண்கள் என்பதைக் காண்பிக்க தாடியிடனும், பெண்கள் பர்க்காவுடனும் இருக்க வேண்டும். 
( ஆண்களும் பெண்களும் 
இப்படியெல்லாம் வித்தியாசமாக இருக்க வேண்டுமெனில் அவை அவரது படைப்பில் உள்ள குற்றமா? இப்படி ஆண்கள் பெண்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பது அவரது ஆசை என்றால் சில விலங்கினங்களில் போல் ( மான், கோழி-சேவல்) என்பவற்றில் ஆண் பெண் வேற்றுமை மாதிரி - ஆண்களை ஆண்களாகக் காண்பிக்க வேறு மாதிரியே படைத்திருக்கலாமே; பெண்களையும்தான். நீ தாடி வை; நீ பர்க்கா போடு என் அவரது படைப்பையே அவரே கேள்வி கேட்கிறாரோ?)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எங்கள் மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலுண்டு.
(கேள்விகளே கேட்கப்படும் முன் இப்படி ஒரு நல்ல நம்பிக்கை இருப்பது சரியா? இதற்குப் பெயர்தான் super confidence!
fossils, stem cell therapy, நாளைய CERN results இவைகளைப் பற்றி நான் கேட்டால் பதிலிருக்குமா? இல்லை மதத்தில்தான் கேட்கவேண்டும் என்றால் அதிலும் பல கேள்விகள் கேட்டாச்சே ... இதுவும் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கப்படும் பாடம்; அவ்வளவே.)


*
பரிணாமம் ஒரு கொள்கையேயன்றி நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல.(டார்வின் சொன்ன சில hypotheses அவரைப் பொறுத்தவரை அன்றைய அறிவியல் சூழலில் நிரூபிக்க முடியாத கருத்துக்கள். அவர் 'ஏதோ ஒரு factor' என்று சொல்லிச் சென்றதை இன்று அறிவியல் முழுமையாகப் 'பிரித்து மேய்ந்து' விட்டது. அந்த factor - chromosome, gene, nucleic acids என்று அறிவியலில் முழுமையாக அறிந்தாராயப்பட்டு விட்டது. பரிணாமம் இன்னும் ஒரு தியரி என்ற நினைப்பில் இந்தக் கருத்து ஒரு முகமாக எல்லா இஸ்லாமியர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. சிறுபிள்ளையில் போதிக்கப்பட்ட பாடம். எத்தனை பேர் டார்வினின் பரிணாமக் கருத்து தவறென்று டார்வின் கொள்கைகளைப் படித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்கிறீர்கள்?

கிறித்துவர்களிடமும் இதைப் பரவலாகக் காண முடியும். 
கடவுள் ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண்ணைப் படைத்தார்; ஆகவே, இன்னும் ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு பெண்களைவிட குறைவு என்ற தவறான கருத்து பல படித்த கிறித்துவர்களிடம் கூட உண்டு. என் மாணவன் ஒருவனுக்கு எலும்புக்கூட்டைக் காண்பித்து விளக்கினாலும் ஒத்துக்கொள்ள மறுத்தான். Fossils பரிணாமக் கொள்கையின் உண்மையை விளக்கும் பெரும் தூண்கள். ஆனால், அதெல்லாம் மனுஷனே பண்ணி வச்சிக்கிட்டது என்ற ஒரு பாடமும் போதிக்கப்படுகிறது பக்தர்களின் மனதில்!)


*
ஆதாமிலிருந்து பல நபிகள் தோன்றி அல்லாவின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் மனிதக் கரங்களால் கறை படுத்தப் பட்டதால் இறுதியாக முகமது மூலமாக கடைசிச் சட்டம் தரப்பட்டுள்ளது. இது மனிதனால் மாற்றப்படாதது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

(சில ஐயங்கள்:

ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?

பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது? 


600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

ஒரு பொது நிலைக்கேள்வி:

பல நபிகள்; பல சட்ட திட்டங்கள் கொடுக்கப்பட்டு எல்லாமே மாறி விட்டன. உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் என்று அறிவியல் சொல்ல, பரிணாமத்தை எதிர்ப்போர் ஆதாம் பிறந்தது வெறும் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்பார்கள். இந்தக் கருத்தையே எடுத்துக் கொண்டாலும் முதல் 4500 ஆண்டளவாக கடவுளின் சட்டங்கள் மனிதக் கரங்களால் கைபட்டு மாறிப்போக, அதன் பின்னால் நபியின் மூலமாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய இறுதிச் சட்டம் கொடுக்கிறார் என்றால் --

*முதல் 4500 ஆண்டுகளாக ஆதாம், மோஸே, ஆப்ரஹாம் --- இப்படி மாறி மாறி வந்த சட்டங்களை வைத்து கடவுள் ஏன், எப்படி மனிதர்களைக் குழப்பினார்? முதலிலேயே இதுபோல் முழுமையாகக்'காபந்து செய்யப்பட்ட ஒரு கட்டளைகளைக்' கடவுள் மனிதனுக்குத் தந்திருக்க முடியாதா? ஏன் அப்படி தராமல் இப்போது முகமதுவிடம் மட்டும் இப்படி ஒரு நூலைத் தரவேண்டும் - அதுவும் கடைசி என்ற அறிவிப்புடன். அப்படியானால் முதலில் நடந்த தவறைத் திருத்த, அல்லாவின் second thoughts மூலமாக இந்த நூல் வந்ததா? (இது கடவுளின் திருவுள்ளம் என்றோ, இது அவன் செயல் என்பதோ, அவனது "திருவிளையாடல்" என்பதோ, தீர்ப்பு நாளில் கேட்டுக் கொள்ளலாம் என்பதோ சரியான ஒரு பதிலாக இருக்கக்கூடாது; இருக்க முடியாது.)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

*சரி, இப்படியெல்லாம் இதுவரை தப்பு நடந்து போனது; இனி இப்படி நடக்கக்கூடாதென்று on second thoughts முகமதிடம் கடைசிச் சட்டத்தைக் கொடுத்தார் என்று கொள்வோம். அப்படியானால் அதுவேகடவுள் ஏற்கெனவே ஒரு தவறு செய்துவிட்டார் என்று நிரூபிக்கிறது.

*அப்படி சில தவறுகள் நடந்த பின் தன் சட்டத்தை மனிதனுக்காகக் கொடுக்க எண்ணிய அல்லா, சொல்லப்பட்டதை உடனே குறிப்பெடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுதக்கூடிய ஒருபடித்தவரை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். or atleast திருஞானசம்பந்தர், காளிதாசன் கதை மாதிரி ஏதாவது செய்திருக்கலாம்! ஜிப்ரெல் சொன்னதை அப்படியே ஒரு மனிதன் எதையும் மாற்றாமல் சொல்ல முடியுமா? சரி, அல்லாவின் அருளால் நபியை அப்படியே சொல்லும்படி அருளினார் என்று கொள்வதா? இவ்வளவு கஷ்டம் எதற்கு? இதற்குப் பதில், பேசாமல் ஒரு well written document ஒன்றை ஜிப்ரெல் நபியிடம் கொடுத்திருக்கலாமே. அல்லாவால் முடியாத ஒன்றா அது? 

(ஒரு விளையாட்டு உண்டு. சிலரை வைத்துக் கொண்டு, அதில் முதல்வரிடம் ஏதாவது ஒரு statement ரகசியமாகக் கொடுங்கள். அவர் அதை அடுத்தவரிடம் சொல்லட்டும் ரகசியமாக. நாலைந்துபேர் தாண்டும் முன் அந்த statement முற்றிலுமாக மாறியிருக்கும்.)

*நபி முதலில் தனக்கு மலைக்குகையில் நடந்தது நம்ப முடியாமல் இருந்தது; அவரது மனைவி சொல்லி நம்பியது; ஜிப்ரெல் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி, காலம் சிறிது ஆனபின் அவைகளை அவர்கள் எழுதியது; பின் வந்தவர்கள் அதைத் தொகுத்தது -- இத்தனை குழப்பமானவைகளை விடவும் கடவுள் ஒரு ஆணையை உருவாக்கி அதை அப்படியே நபியிடம் தந்திருந்திருக்கலாமே. எளிது; குழப்பமில்லை; குரானில் மாற்றமே இல்லையா என்று 1400 வருஷமாகக் கேட்கப்படும் கேள்விகளும் இருக்காதே.)

*இசை, கலை, பாடல்கள், ஓவியங்கள் - இவைகளை ஒதுக்கி வைக்கும்படி அல்லா நபியிடம் கூறியுள்ளார்.

(இது நான் பெரிதாக வியக்கும் ஒரு விஷயம். இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப்பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது.இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.

ஒரு பதிவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையை விட்டு விட வேண்டுமென்று எழுதியிருந்ததை வாசிக்கும்போது, அதைவிட 'நீ உன் மூச்சை நிறுத்திக்கொள்' என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சமயங்களைப் பற்றி மட்டும் பேச நினைத்த எனக்கு இன்னொரு சின்ன சமூக வேண்டுகோள் உண்டு.

நம் பதிவர்களிடையே சில முறை ஓர் அனுபவம் கிடைத்தது. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்த அன்னியர் என்ற நினைவு பலரிடம் இல்லை. ஒளரங்கசீப் ஜிஸ்யா வரி வசூலித்தாரே என்றால் நம் நாட்டில் அவரது ஆட்சி முறையாக இருந்த ஒரு அரசு போலவும், அவர் வரி வசூலிப்பது நம் நாட்டை நன்றாக ஆள்வதற்கு என்றும் ஒரு கூற்று வருகிறது. அப்போது ஆங்கிலேயர் விதித்த உப்பு வரியும் சரிதானா? அதை எதிர்த்த காந்தி தவறு செய்து விட்டாரா? இஸ்லாமிய அரசர்கள் அந்நியர்கள்; ஆக்கிரமிப்பாளர்கள். நம் நாட்டைப் படையெடுத்து, அடிமைப் படுத்தி, நம்மை ஆண்டவர்கள் - ஆங்கிலேயர்களைப் போல; பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் போல; போர்த்துக்கீசியவர்கள் போல. இந்த வெள்ளைத் தோல் கொண்ட இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் என்பதற்காக, எந்த நம் நாட்டு கிறித்துவனும் அவர்களைப் போற்றிப் பாடுவதில்லை.

இஸ்லாமிய அரசர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அதோடு நிற்க வேண்டும். ஏன் மதங்களை அவர்கள் மேல் சாற்றி அவர்கள் துதி பாட வேண்டும்? ஜெனரல் டயர் ஒரு கிறித்துவன் என்பதற்காக நம்மூர் கிறித்துவன் ஜெனரல் டயர் தன் கடமையைத்தானே செய்தான் என்று சொல்லி அவனின் பெருமை பேசுவானா?

மதங்களைத் தனித்துப் பாருங்கள். அதை மனிதர்கள் மேல் ஏற்றி, 'என் மதக்காரன் என்றாலே அவன் எனக்கு உறவு' என்று சொந்தம் பாராட்டாதீர்கள். நிச்சயமாக அரசியலோடு மதங்களை இணைக்காதீர்கள். படும் துன்பம் போதும். 

இன்னொன்றும் சிலர் சொல்வதுண்டு. அந்நிய நாட்டுப் படையெடுப்பாளர்களில் பலரும் நம்மிடம் கொள்ளையடித்து தம் நாட்டுக்கு நம் செல்வங்களைக் கொண்டு சென்றார்கள். அதைவிட நம் நாட்டுக்குப் படையெடுத்து வந்து, இங்கேயே அரசாட்சி செய்து நம் நாட்டுக்கு "நல்லது" செய்தார்கள் இஸ்லாமிய மன்னர்கள். இதுவும் ஒரு வேடிக்கையான விளக்கம்தான். கொள்ளைக்காரன் ஒருவன் நம் வீடு நுழைந்து, நம் சோற்றுப் பானையைத் தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் வைத்து சாப்பிட்டான்; இன்னொருவன் கொள்ளையடித்து வெளியே செல்லாமல் நம் சோற்றை நம் வீட்டிலேயே வைத்து நமக்கெதிரே வைத்தே சாப்பிட்டான் - இப்படித்தான் இருக்கிறது அந்த விளக்கம்.

இதையெல்லாம் சொல்வதை வைத்து பாபர் மசூதி விஷயத்தை இங்கு இழுக்க வேண்டாம். ஏனெனில் அதைப் பற்றிய என் கருத்துக்கள் இருப்பது வேறோரிடத்தில் ...



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

1.ஒரே இறை
2.அதுக்கு பெயர் எதுவும் கிடையாது.
3.அது உருவம், பால்நிலை அற்றது.
4.அதற்கு இணையாக ஏதும் கிடையாது.
5.அதைத்தவிர எதுவும் வணக்கத்துக்கு உரியது அல்ல.அடுத்ததை வணங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
6.கடைசிநபியின் வழி வந்த வேதம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.அதனை சந்தேகிப்பவர்கள் அந்த மதத்தில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறார்கள்.
7.வேதத்தில் சந்தேகம் வந்தால் ஹதீஸ். ஆனால் ஹதீஸ் வேதமல்ல.
8.இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்றால் மேலே சொன்னவை அனைத்தும் தேவை.
9.இஸ்லாத்தைவிட்டு வெளியே வரவேண்டும் என்றால் அப்படி ஏதும் தெளிவான சட்டங்கள்/வழிமுறைகள் ஏதும் இல்லை.
10.வேதத்தில் ஏற்படும் சந்தேகம் என்பது நபி/வேத அவமதிப்பு.

***

மேலே சொன்னவை எல்லாம் மத நம்பிக்கைகள். இப்படி எல்லா மதங்களும் அதற்கான நம்பிக்கைகள் கொண்டுள்ளன.

**

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வேதத்தில் உள்ளது என்று நம்புவதாலும், எந்தப் பிரச்சனையானாலும் அதன்வழியேதான் தீர்வு வேண்டும் என்று பார்ப்பதாலும்தான் வேதத்தை மேலும் விளக்க ஹதீஸ், அப்புறம் அதை நடைமுறைப்படுத்த பத்வா என்று நீட்சியடைந்து என்பது எனது கருத்து.

**

ஒரு அம்மா தனது ஒரு வயது குழந்தை ஒருநாள் பால்குடிக்காமல் தூங்கிவிட்டது. மறுநாள் பால்குடுப்பதை தொடராலாமா? அது 
வேதத்தின்படி சரியா என்று மதபோதகர்களிடம் விளக்கம் கேட்கிறது. 

ஒரு இஸ்லாமியப்பெண் கிறித்துவமதக் குழந்தைக்கு முலைப்பால் கொடுக்கலாமா? 

http://search.islamonline.net/search-en/simresults.html?q=breastfeed

இப்ப‌டியெல்லாம் கேட்டு குரான் வழியாக தீர்வு காண்கிறார்கள்.
என்ன செய்வது அவர்களின் நம்பிக்கை.

**
ஒரு குழந்தைக்கு பால்தேவை. ஒரு தாய்க்கு பால்சுரக்கிறது. இதில் மனிதாபிமானம் வேண்டுமா அல்லது மதப்புத்தகம் வேண்டுமா?

**

இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் , ஒரு ஆணுக்கு (அடல்ட்) ஒரு பெண் முலைப்பால் கொடுப்பதன்மூலம் அருகருகே இருந்து வேலை செய்யும் தகுதிவருகிறது என்ரெல்லாம் பத்வா கொடுக்கிறார்கள்.

//“In Egypt a well known religious scholar called Ezzat Attiya made a ‘fatwa’ that to overcome the restrictions of khalwat, a man could breastfeed from a woman – by which action he will become her ‘muhrim’ or blood relation. The two can then happily carry on being alone together with no more fear of breaching ‘khalwat’. Here is a news report from the Associated Press in Cairo about this : // 

http://syedsoutsidethebox.blogspot.com/2009/04/adult-breast-feeding-more-strange.html

பல்கலைக் கழகமும் மற்ற மக்களும் இந்த பத்வா போட்ட மனுசனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.

Friday, November 20, 2009 8:32:00 PM

கல்வெட்டு said...

Sin of khalwa என்று தேடிப்பாருங்கள் ஆச்சர்யமடைவீர்கள்.

Sin of khalwa (staying alone with a stranger)
Gender Interaction in Islam
http://qa.sunnipath.com/issue_view.asp?HD=7&ID=13571&CATE=1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

வால்ஸ்,
//கல்வெட்டு கொடுத்த லிங்கிலிருப்பதில் முக்கியமானதை தமிழில் போடுங்களேன்!
//

கலவெட்டு கொடுத்துள்ள 3 தொடுப்புகளில் இரண்டு அந்த சமயத்தாராலேயே நடத்தப்படுகின்றன. ஒன்று பழைய முஸ்லீம்களால்.

கடைசி தொடுப்பை இங்கே தமிழ்ப்படுத்திப் போடுவது நாகரீகமாகத் தெரியவில்லை. நீங்களே வாசிச்சா எளிதாகப் புரியும் .. கதைகள் தானே! 

ஆனால் சமயத்தாரால் நடத்தப்படும் தொடுப்புகளான, கல்வெட்டு கொடுத்துள்ள Sin of khalwa (staying alone with a stranger) Gender Interaction in Islam
http://qa.sunnipath.com/issue_view.asp?HD=7&ID=13571&CATE=1 பற்றி சில:

தெரியாத ஒரு மனிதனோடு ஒரு பெண் தனித்திருப்பது ஹால்வா என்ற பாவம் என்கிறது இஸ்லாம். ஓஷோ சொல்வது போல் பல மதங்கள் sex என்பதை ஒரு பாவமாகவே பார்க்கிறது. அதிலும் இஸ்லாம் பல படிகள் அதிகம். ஒரு பெண் ஆணோடு எங்கு தனியாக இருந்தாலும் அதில் sex என்பதைத்தான் பார்க்கிறது. மற்ற இரு தொடுப்புகளில் சகோதரனின் மனைவி வீட்டில் இருந்தால் அங்கு ஆண் இருக்கக்கூடாதென்கிறது வியப்பானதுதான். ஒரே அலுவலகத்தில் ஒரு அறையில் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வேலை செய்ய நேர்ந்தாலே அது பாவம் என்றால், அப்போது ஆண்/பெண் மனதில் sex என்பதைத் தவிர ஏதும் இருக்க முடியாதா? எல்லாமே sex சுற்றித்தானிருக்க வேண்டுமா? மானுடப் பிறவிகளுக்கு sex தவிரவும் நிறைய தேவைகள், கடமைகள், முறைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாமே உண்டுதானே?! இதைக் கட்டிக் காக்க மனிதனுக்கு சாமி கூட வேண்டாமே.

ஆனால் இந்த ஹாலால் பாவம் தீர்க்க நபிகளால் கொடுக்கப்பட்ட கதைதான் ex-muslims கொடுத்துள்ள தொடுப்பில் உள்ளது. அந்த வழிதான் கொஞ்சம் பயங்கரமாகப் பட்டது. அதை நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்……………..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

வால்ஸ்,
//கல்வெட்டு கொடுத்த லிங்கிலிருப்பதில் முக்கியமானதை தமிழில் போடுங்களேன்!
//

கலவெட்டு கொடுத்துள்ள 3 தொடுப்புகளில் இரண்டு அந்த சமயத்தாராலேயே நடத்தப்படுகின்றன. ஒன்று பழைய முஸ்லீம்களால்.

கடைசி தொடுப்பை இங்கே தமிழ்ப்படுத்திப் போடுவது நாகரீகமாகத் தெரியவில்லை. நீங்களே வாசிச்சா எளிதாகப் புரியும் .. கதைகள் தானே! 

ஆனால் சமயத்தாரால் நடத்தப்படும் தொடுப்புகளான, கல்வெட்டு கொடுத்துள்ள Sin of khalwa (staying alone with a stranger) Gender Interaction in Islam
http://qa.sunnipath.com/issue_view.asp?HD=7&ID=13571&CATE=1 பற்றி சில:

தெரியாத ஒரு மனிதனோடு ஒரு பெண் தனித்திருப்பது ஹால்வா என்ற பாவம் என்கிறது இஸ்லாம். ஓஷோ சொல்வது போல் பல மதங்கள் sex என்பதை ஒரு பாவமாகவே பார்க்கிறது. அதிலும் இஸ்லாம் பல படிகள் அதிகம். ஒரு பெண் ஆணோடு எங்கு தனியாக இருந்தாலும் அதில் sex என்பதைத்தான் பார்க்கிறது. மற்ற இரு தொடுப்புகளில் சகோதரனின் மனைவி வீட்டில் இருந்தால் அங்கு ஆண் இருக்கக்கூடாதென்கிறது வியப்பானதுதான். ஒரே அலுவலகத்தில் ஒரு அறையில் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வேலை செய்ய நேர்ந்தாலே அது பாவம் என்றால், அப்போது ஆண்/பெண் மனதில் sex என்பதைத் தவிர ஏதும் இருக்க முடியாதா? எல்லாமே sex சுற்றித்தானிருக்க வேண்டுமா? மானுடப் பிறவிகளுக்கு sex தவிரவும் நிறைய தேவைகள், கடமைகள், முறைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாமே உண்டுதானே?! இதைக் கட்டிக் காக்க மனிதனுக்கு சாமி கூட வேண்டாமே.

ஆனால் இந்த ஹாலால் பாவம் தீர்க்க நபிகளால் கொடுக்கப்பட்ட கதைதான் ex-muslims கொடுத்துள்ள தொடுப்பில் உள்ளது. அந்த வழிதான் கொஞ்சம் பயங்கரமாகப் பட்டது. அதை நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்……………..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

ஆசிக்,
இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது.

அல்லது

இசைக்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடையும் இல்லை 

---------

என்று சொல்லும் குரான் வரிகளைத் தாருங்கள். 

முக்கியம்: 
எந்தவிதமான அடைப்புக்குறி விளக்கங்களும் (உங்களின் அல்லது மற்ற யாரின் அல்லது தூதர் முகம்மது சொன்னதாக நம்பப்படும் ஹதீஸ்கள் உட்பட) இல்லாமல் குரானின் வரிகளை மட்டும் வரிகளைமட்டும் தாருங்கள் அதன் மூல மொழியிலேயே. அதற்கான Quran verses எண்களுடன் தாருங்கள்

ஏன் அப்படிக்கேட்கிறேன் நான்? 

* ஆம் என்று நான் ஒரு ஹதீசைக்காட்டினால் இல்லை என்று நீங்கள் ஒன்றைக்காட்டுவீர்கள்.

* இல்லை என்று நான் ஒரு ஹதீசைக்காட்டினால் ஆம் என்று நீங்கள் ஒன்றைக்காட்டுவீர்கள்.

* ஒரே குரான் வரிகளுக்கு (அதிகாரம்/பாகம்/பக்கம்/வரி என்று எண்களுடன் இருந்தாலும்) அடைப்புக்குறிக்குள் ஒவ்வொருவரும் ஒருவிதமாக அர்த்தம் கொடுக்கிறார்கள்.

*******

நீங்கள் இஸ்லாமியராக உங்களின் நம்பிக்கை சார்ந்து சொல்லாமல் ஒரு சாதரண மனிதராக நீங்கள் படித்த / படிக்கும் புனித புத்தகத்தில் இருந்து அது சொல்லும் வரிகளை மட்டும் அதிகார/வரிசை எண்களுடன் சொல்லுங்கள். உங்களின் விளக்கங்கள் பொழிப்புரைகள் வேண்டாம். 

மதம் சார்ந்த விவாதம் /உரையாடல் எனது நோக்கம் அல்ல.

கல்வெட்டு said...

இதோ இப்படித்தான் அடைப்புக்குறிக்குள் போட்டு போட்டு சொல்கிறார்கள்


http://ibnfarooq.tripod.com/music.htm


From the Quran.....

"And of mankind is he who purchases idle talks (i.e. music, singing, etc.)to mislead (men) from the Path of Allah without knowledge, and takes it (the Path of Allah, the Verses of the Qur'an) by way of mockery. For such there will be a humiliating torment (in the Hell-Fire).

(The Noble Qur'an - Luqman 31:6)

"And Istafiz [literally means: befool them gradually] those whom you can among them with your voice (i.e. songs, music, and other call for Allah's disobedience)..."
(The Noble Qur'an - Al-Isra 17:64 )

"The Day of Resurrection draws near, None besides Allah can avert it, (or advance it, or delay it). Do you then wonder at this recital (the Qur'an)? And you laugh at it and weep not, Wasting your (precious) lifetime in pastime and amusements (singing, etc.). So fall you down in prostration to Allah, and worship Him (Alone)"
(The Noble Qur'an - An-Najm 53:57-62) 

மேலும் படிக்க...


http://ibnfarooq.tripod.com/music.htm

************


Is listening to music forbidden in Islam? ‍ என்று கேட்டால் இஸ்லாமிக் போர்டு என்ற இணையத்தளம் ஆமாம் என்று தெளிவாகச் சொல்கிறது. 

http://www.islamicboard.com/worship-islam/134269292-listening-music-forbidden-islam.html

Music, playing it and listening to it is Haraam. This has been discussed many times before on the forums. Insha'Allah these links will help answer your question.

http://www.islamicboard.com/fiqh/20238-music-singing-light-quran-sunnah.html

http://www.islamicboard.com/manners-purification-soul/134265447-music-shaytans-qur.html

http://www.islamicboard.com/manners-purification-soul/134265447-music-shaytans-qur.html

http://www.islam-qa.com/en/ref/5000 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

தருமி,
புனித குரான் , ஹதீஸ், பத்வா, சரியத் என்று எல்லாப்பக்கமும் பேச இயலாது. 

புனித குரானில் "அதுதான் இது" என்று நீங்கள் ஒரு அடைப்புக்குறி விளக்கத்தைக் காட்டினால் "அதுவல்ல அர்த்தம்" என்று இன்னொரு அடைப்புக்குறி எழுத்துகள் மேற்கோள் காட்டப்படும்.

ஒரு ஹதீசைக் காட்டி "அதுதான் இது" என்று நீங்கள் ஒன்றை விளக்க முயற்சித்தால் "அது இந்த ஹதீசில் விலக்கு கொடுக்கப்பட்ட ஒன்று " என்று இன்னொரு மேற்கோள் காட்டப்படும்.

இந்த பத்வா அப்படிச் சொலுதே என்றால், அந்த பத்வாவை நாங்கள் மதிப்பது இல்லை என்று பிடித்த பார்லிமென்டரி / பொலிடிக்கலி கரைக்ட் பத்வா காட்டப்படும்.

இதெல்லாம் தேவையா? 

-------------------

ஒன்று செய்யுங்கள்.....

யாராவது அடைப்புக்குறி வார்த்தைகள் (திரிக்கப்பட்ட அல்லது இஸ்டப்படி பொருள் கூறப்பட்ட) இல்லாத மூல குரானை (மூல மொழி மற்றும் ஆங்கிலம் அருகருகே கொண்ட பதிப்பை) பரிந்துரை செய்யச் சொல்லுங்கள்.

அதில் இருந்து இசை,கலை சம்பந்தமான குரான் அத்தியாயங்களை அவர்களே காட்டட்டும் (எண்களை மட்டும்)

உதாரணம்:

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============

இசை குறித்த விதி
புனித குரான் : பகுதி 2: வசனம் : 10: 

இந்தவிதி அடுத்து வரும் பக்கத்தில் மாறியிருந்தால் அதை 
இசை குறித்த விதி (2)
புனித குரான் : பகுதி 12: வசனம் : 23
============

என்று மட்டும் சொல்லட்டும். 

அப்படி நடந்தால் அல்லாவின் வார்த்தைகளை அப்படியே படித்துப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

------

1.புனித தூதர் முகம்மது உட்பட யாருடைய அடைப்புக்குறி வார்த்தைகள் விளக்கங்களும் வேண்டாம்.

2.ஹதீஸ் வேண்டாம்.

3.பத்வா வேண்டாம்.

4.சரியத் சட்டம் வேண்டாம்.

-----------

அப்படி இருந்தால் எல்லாரும் 5 வருடம் லீவு எடுத்துட்டு அப்புறம் வந்து குரானை மட்டும் பற்றிப் பேசலாம். 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

அறிவியல் Vs ‍ நம்பிகை.

டார்வின் தியரியை தூக்கிச்சாப்பிடக்கூடிய புதிய தியரி ஒன்று ஒருவரால் ஆராய்ந்து அறிவிக்கப்படுமாயானால், அறிவியல் அதையும் சோதிக்கும். அது சரி என்று வரும்பட்சத்தில் டார்வின் குப்பைக்கு போகும். சரியா? இதுதான் அறிவியல்.

**

ஆனால், இதற்கு அடுத்து நபியே இல்லை என்று தீர்மானிப்பது நம்பிக்கை. 
இன்னொரு நபி வரலாம் . அப்ப‌டி வந்து புதிய வேதம் கொடுத்தால் அது நல்லா இருந்தால் இதை விட்டுவிடுவோம் என்று நீங்கள் அறிவியல் போல சொல்லமுடியாது. இறுதித்தூதர் என்ற கோட்பாடு இஸ்லாத்தின் முக்கியமான தூண்

எனவே நம்பிக்கையையும் அறிவியலையும் குழப்ப வேண்டாம்.

The Analyst said...

Dear Aashiq,

The previous comment was meant to be for you too.

Evidence for evolution:
• 29+ evidences for Macroevolution: http://www.talkorigins.org/faqs/comdesc/default.html
• Evidence from biochemical pathways: http://www.jce.divched.org/Journal/Issues/2004/Jul/JCE2004p1051.pdf
• http://www.actionbioscience.org/evolution/lenski.html
• 15 examples of evidence published in Nature: http://www.nature.com/nature/newspdf/evolutiongems.pdf

கல்வெட்டு said...

The Analyst

Thanks for the following link

http://www.youtube.com/watch?v=7ImvlS8PLIo&feature=player_embedded



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

pappu said...

ஒரே கடவுள்னு சொல்லுறதுல ஒரு சந்தேகம். அப்ப மத்த மத கடவுள் எல்லாம்? அவங்க எல்லாம் போலியா? அப்ப போலிய வழிபடுறவங்கள என்ன செய்ய சொல்லுது? அழிக்கவா? அழிக்கலைனா ஒரே கடவுள்ங்கிறத எப்படி ஏத்துக்குறது. அழிச்சா அமைதி வழ,. மற்றவர்களை மதிக்கிறோம் என்பது என்ன கணக்கு. மற்றவர்களை மதிக்கிறோம் எனச் சொல்வது மற்ற மதங்களையும் கடவுள்களையும் ஏற்றுக் கொள்வது இல்லையா....

 

கல்வெட்டு said...

ஆசிக் said....

//But most of the time, reading Qur’an without knowing the circumstances during which the verse was revealed will lead only to confusion.// 


நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் ஆசிக்.

குரான் அந்தக்காலத்தில் அந்த சூழ்நிலைக்கு அந்தக்காலத்தில் வாழந்தவர்களுக்கு மட்டுமேயானது. எல்லா காலத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் உகந்தது அல்ல.

நடைமுறைக்கு உகந்தது இல்லை என்றால் குரானே ஆனாலும் ஒதுக்கிவிட்டு நம்ம வேலையைப் பார்க்கவேண்டும். உங்கள் நடைமுறைக்கு அது தேவையா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். ஹதீஸ்,பத்வா,சரியத் எல்லாம் வேண்டாம்.

*******************


//I clearly said there are NO VERSES IN QUR’AN regarding MUSIC (either condemning it or supporting it). // 

புனித குரானில் இசை பற்றிய ஆதரவோ எதிர்ப்போ இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் சொல்லிய குரான் வரிகளை (அடைப்புக்குறி விளக்கங்கள் இல்லாமல்) பார்க்காமல் நான் பேசவில்லை.

நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுதான். Qur’an 26:225-227 

http://www.alislam.org/quran/search2/showChapter.php?submitCh=Read+from+verse%3A&ch=26&verse=224

இப்படித்தான் வசனம் சொல்லுது

[26:255]And as for the poets — it is the erring ones who follow them.

அதாவது கவிஞனை தொடர்ந்தால் / கவிஞனின் பாதையில் சென்றால் / கவிஞனின் கருத்தைக் கேட்டால்...தவறிழைக்க நேரலாம் என்று சொல்கிறார்.


இதில் ஒன்றும் ஸ்பெசல் இல்லை.
இதைச் சொல்ல கடவுள் அப்புறம் தூதர் வேண்டுமா என்ன? 

என்னமோ போங்க ஆசிக்.

***

கவிஞன் மட்டும் என்ன ஸ்பெசல் கிரியேச்சரா??

இந்த அறிவுரை எல்லாருக்கும் பொருந்தும் ஆசிக். 

இதைவிடச் சிறப்பாக மேலும் தெளிவாக‌ வள்ளுவர் சொல்லியுள்ளார்...

யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காணவேண்டும் என்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

கேள்வி: 1
ஆஷிக்,

//Prophet Muhammad (pbuh) had reasons for his time only, 1400 years ago, to command the Muslims to grow beards. //

This is really great!! இரு கேள்விகள்:
1. அப்போ நீங்க சொல்றது என்னன்னா, இதெல்லாமே சுன்னத். அதனால் இவைகளைக் கடைப்பிடிக்கணும்னு கட்டாயமில்லை; சரியா? அதாவது முகமது சொன்னது எல்லாத்தையும் கடைப்பிடிக்க தேவையில்லை 

2. அதோடு நீங்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது (//…had reasons for his time only, 1400 years ago..//) முகமது சொன்னவைகள் எக்காலத்துக்கும் உரியவை அல்ல; இல்லையா?

நீங்களே சொல்றீங்க .. //.. you misunderstood like urinating, beard, wearing white cloths etc are not the commands of GOD. So what you said is TOTALLY wrong. // 
நன்றி. அது போலவே விருத்த சேதனமும் ஒரு சுன்னத்துதான். இப்படி (நீங்களே சொல்வதுபோல், கட்டாயமாகக் கடைப்பிடிக்கத் தேவையில்லாத) சுன்னத்துகளை எப்படி முழு மூச்சோடு கடைப்பிடிக்கிறீர்கள்? விருத்த சேதனம் செய்து கொள்ளாத இஸ்லாமியர் உண்டா?

//Please prove your point from Qur’an. //
அப்படியானால், மீண்டும் அதே கேள்வி .. குரானை மட்டும்தானே இஸ்லாமியர் கடைப்பிடிக்கணும். பின் ஏன் இந்த Fharl & Sunnath?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

கேள்வி: 2

ஆஷிக்,

//e) To be very open, GOLD is haram for men whereas it is halal for women. But God didn’t command this, prophet did this. //

அப்டின்னா, Why was mohd againt gold for man? Why white dress for men?

//f) Regarding your comments on nudity etc, I do not know where you got from. Please quote Qur’anic verses to prove your point.// 
குளிக்கும்போதும், மனைவியோடு உறவு கொள்ளும்போதும், அதன் பிறகும் எப்படியெப்படி உடை அணிய வேண்டும்; இல்லாவிட்டால் எப்படி அல்லாவுக்கு வெட்கமாக இருக்கும் என்று நம் பதிவாளர் ஒருவர் எழுதியதை வாசித்துள்ளேன். குரானிலிருந்து எடுத்துக் கொடு என்றால் என்னால் முடியாது. ஹாடித், சுன்னத் என்று ஏதுமிருந்தால் உங்களுக்குத் தெரியாதா என்ன?

Saturday, November 28, 2009 8:40:00 PM

தருமி said...

கேள்வி: 3
ஆஷிக்,

//So what ever you said as if GOD said is a PURE LIE and does not have any relations with GOD’s word which is Qur’an. 
THIS REALLY SHOWS HOW MUCH BAD YOU ARE ON THE SUBJECT OF ISLAM. //

LUCKILY I AM. THANKS. ANYWAY, கடவுள் சொல்லாட்டாலும் உங்க நபி சொன்னதுதானே! ஏன் இவைகளைப் பற்றியெல்லாம் சொல்லணும்; தேவையென்ன என்றுதான் என் பதிவில் கேட்டேன்.

Saturday, November 28, 2009 8:41:00 PM

தருமி said...

கேள்வி: 4

ஆஷிக்,

//By the way, are you sure GOD asked Abraham to give his child (pali) to him, do you quote from Qur’an where does GOD asked Ibrahim’s son? //

குரானில் தெரியாதுங்க; ஆனால் பழைய ஏற்பாட்டில் - ஆதியாகமத்தின் 22ம் அதிகாரத்தில் - உள்ளது உங்களுக்கும் உரியதுதானே. பெயர் மாற்றங்களைத் தவிர.......?

Saturday, November 28, 2009 8:41:00 PM

தருமி said...

கேள்வி: 5

ஆஷிக்,

let me put a clear point on that, In Islam there are two important terms, one is fharl (means obligatory or required) and the other is Sunnath (means desirable).

who has done this classification - allah or nabi or later imams?

are all hadiths fharl or sunnah?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

ARE YOU READY TO ISSUE A PUBLIC OPOLOGY FOR LIEING ON GOD OR NOT? – இது ரொம்பவே நல்லா இருக்கு 

ஒரு சின்ன பாய்ண்ட் தம்பி. நான் ஏற்கெனவே என்னை ஒரு மத மறுப்பாளன், கடவுள் மறுப்பாளன், காபிர் என்று அறிவித்துக் கொண்டவன். அவனிடம் போய் இது கடவுள் சொன்னது என்றதும் கைகட்டி வாய் புதைத்து ‘கடவுளைப் பற்றி பொய் சொல்லிவிட்டேன்; எல்லோரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று நான் கூற வேண்டுமென்பதை நீங்கள் demand செய்யும்போது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை உங்கள் மதத்தில் ‘அல்லா’ சொன்னதாக இருந்தாலும், ‘நபி’ சொன்னதாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே. ஏனென்றால் இரண்டையுமே நான் நம்பாதவன். இதையும் பாருங்கள்.

Sunday, November 29, 2009 7:16:00 PM

தருமி said...

இந்தப் பதிவிலேயே நான் சொன்னது: // முகமதிடம் கடைசிச் சட்டத்தைக் கொடுத்தார் என்று கொள்வோம். அப்படியானால் அதுவே கடவுள் ஏற்கெனவே ஒரு தவறு செய்துவிட்டார் என்று நிரூபிக்கிறது.

*அப்படி சில தவறுகள் நடந்த பின் தன் சட்டத்தை மனிதனுக்காகக் கொடுக்க எண்ணிய அல்லா, சொல்லப்பட்டதை உடனே குறிப்பெடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுதக்கூடிய ஒரு படித்தவரை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். or atleast திருஞானசம்பந்தர், காளிதாசன் கதை மாதிரி ஏதாவது செய்திருக்கலாம்! ஜிப்ரெல் சொன்னதை அப்படியே ஒரு மனிதன் எதையும் மாற்றாமல் சொல்ல முடியுமா? சரி, அல்லாவின் அருளால் நபியை அப்படியே சொல்லும்படி அருளினார் என்று கொள்வதா? இவ்வளவு கஷ்டம் எதற்கு? இதற்குப் பதில், பேசாமல் ஒரு well written document ஒன்றை ஜிப்ரெல் நபியிடம் கொடுத்திருக்கலாமே.அல்லாவால் முடியாத ஒன்றா அது?// மேலே சொன்னதின் பொருள் உங்களுக்குப் புரியவில்லையா? அல்லாவும் நபியும் உங்கள் நம்பிக்கைகள். எனக்கு கதைகள். இதில் முதல்வர் சொல்லிவிட்டதாக நீங்கள் நிரூபித்து விட்டால் கதை உங்களுக்கு முடிகிறது; எனக்கில்லை. சொன்னவைகளின் கருத்துதான் எனக்கு முக்கியம். 

தருமி said...

(//If you want to disprove my points, please bring on verses from Qur’an justifying your points //) இசை முக்கியமல்ல என்று கடவுள் சொன்னாலென்ன, நபி சொன்னாலென்ன – கருத்தே தவறாக இருக்கும்போது! சுவனத்தின் நித்திய கல்யாணிகளும், அவர்களுக்கான ‘லாய்லாஹ்’ என்பதும், Sin of Khalwa பற்றியும் -- இவைகள் எல்லாமே அல்லா சொன்னதுதானே? அதுவும் தவிர,சொல்லப்பட்டவைகள் மிகத் தவறாக இருக்கும்போது அவைகளை யார் சொன்னாலென்ன? அதுவுமின்றி, சில கருத்துக்களை அல்லா சொன்னார் என்கிறீர்கள், சிலவற்றை நபி சொன்னது என்கிறீர்கள். ஆனாலும் இரண்டையுமே பின்பற்றுகிறீர்கள்; பின் என்ன வேற்றுமை?

உங்களோடு பேசியதில் இன்னும் நிறைய புதிய விவாதக் களத்துக்குரியவைகள் கிடைத்தன. நன்றி. என் கேள்விகள் அந்தப் பகுதிகளில் இன்னும் வரும். பதில் சொல்ல நீங்கள் வருவீர்களோ என்னவோ? வராவிட்டாலும் கேள்விகள் வரும். ஏனெனில் கேள்விகள் எழுப்புவதும், பலவற்றிற்குப் பதிலின்றி போவதும் மாமூல்தான்.

நன்றி.

Sunday, November 29, 2009 7:23:00 PM

தருமி said...

Sin of Khalwa, லாய்லாஹ் -- போன்றவை என்னவென்பது தெரியாதவர்களுக்காகத் தொடுப்புகள் கொடுத்துள்ளேன். விரும்பியவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

//With or without religion, you'd have good people doing good things and evil people doing bad things, but for good people to do bad things, it takes religion.//

அட .. ரொம்ப நல்லா இருக்கே!

//"serious note.
you might say there is no God, but beleiving in GOd has helped mankind immensely, more importantly has taught him moral values."

This simply is not true.//

இதற்கொரு சான்று இங்கே ...

 

தருமி said...

//With or without religion, you'd have good people doing good things and evil people doing bad things, but for good people to do bad things, it takes religion.//

அட .. ரொம்ப நல்லா இருக்கே!

//"serious note.
you might say there is no God, but beleiving in GOd has helped mankind immensely, more importantly has taught him moral values."

This simply is not true.//

இதற்கொரு சான்று இங்கே ...

தருமி said...

கேள்வி: 6
ஆஷிக், 

//a) There are no verses in Qur’an which condemns Music. The verse that you quoted from Qur’an 26:224 condemns some poets (there is a huge difference between poet and musician)//

இதன் பிறகு நீங்கள் குரானின் 26:225-227 வசனங்களைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் context பார்க்க வேண்டுமானால் முந்திய பகுதியல்லவா பார்க்க வேண்டும். அது என்ன சொல்கிறது: 
அத். 27; 221 -223 என்ன சொல்கிறது: 
221. ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? 
22. பாவியான பொய்யர்கள் ஒவ்வொருவன் மீதும் இறங்குகின்றனர். 
223. (ஷைத்தான்கள்) தாம் கேள்விப்பட்டதைப் (பொய்யர்களின் காதுகளில்,) போடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்கள் தாம். 
224. கவிஞர்கள் – அவர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகிறார்கள். 
Am I twisting?

Here Allah Almighty refers to those poets, who “wander distracted in every valley” and who do not practice what they say. It is these poets who are disapproved. 

இல்லை; எல்லா கவிஞர்களும்தான்.

Tuesday, December 08, 2009 9:05:00 AM

தருமி said...

கேள்வி: 7

ஆஷிக், 

//ii) Drawing: As far as drawing is concerned, in prophet (pbuh)’s period, people drew pictures of animate beings (like men, animals, birds) which directly lead to shirk (associating partners with Allah (swt)) which is condemned by Allah (swt) in several places in Qur’an
Hence it is clear that Messenger of Allah(swt), condemned making images of animate things as it was directly lead to shirk. //

ஆக, படங்கள் வரைவது அல்லாவுக்குப் பிடிக்காது. அப்படியானால், சினிமா, காணொளி (நம்ம ஜாக்கிர் நாய்க் சொல்ற யூட்யூப் எல்லாமே அப்போ ஹராமா??), நிழற்படமெடுத்தல், வரைதல் இதுபோன்ற எதுவும் அல்லாவால் தடை செய்யப்பட்டுள்ளது.

நல்ல கடவுள்! நல்ல மதம்!! ஒண்ணுமே புரியலைங்க … ரொம்ப ரொம்ப வித்தியாசமா அல்லாவும் / நபியும் யோசிச்சிருக்காங்க.

Tuesday, December 08, 2009 9:06:00 AM

தருமி said...

ஆஷிக்,

//People are reading what’s going on and let them decide who is running short of answers.//

ஆமால்ல … அவங்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும்

Tuesday, December 08, 2009 9:07:00 AM

மு மாலிக் said...

//கலவெட்டு கொடுத்துள்ள 3 தொடுப்புகளில் இரண்டு அந்த சமயத்தாராலேயே நடத்தப்படுகின்றன. ஒன்று பழைய முஸ்லீம்களால்.//

பழைய முஸ்லீம்களாலா ? அப்படி ஒரு தொடுப்பு ஒன்றைக் கொடுத்துள்ளாரா ? எது அதுன்னு தெரியலையே ! நான் மூன்றையும் பார்த்தேனே !

Wednesday, December 16, 2009 1:30:00 PM

மு மாலிக் said...

I think, you took that opinion from his this post:

http://syedsoutsidethebox.blogspot.com/2009/10/not-for-muslims.html

If so, you are wrong. He sounds like a rational Muslim.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எனது முந்திய பதிவில் கேட்ட சில கேள்விகளில் ஒன்று:

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?

இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக ஆஷிக் கீழ்க்கண்ட பதிலை அளித்திருக்கிறார். அதை அவர் எழுதிய ஆங்கிலத்திலும், என் தமிழாக்கத்தோடும் கீழே தருகிறேன்.

I do not know whether you read that verse or not. If you would have read, you would not have come to this conclusion. You are referring to Qur’anic verses 86:5-7, what you quoted is the verse 86:7. Would you mind to read the verses 86:5-6 which give answers directly as per your expectation? 

Even in other verses Qur’an tells Man is created from Semen (semen may not be the right word; ( I don’t know what Aashiq says. Semen is and has to be the very right word) Qur’an does not refer that as Semen, it refers it as a surging fluid/ gushing water/ the liquid that pours out). What is stunning to see is not semen; because everybody knows due to semen we are created. Qur’an further moves on to say where exactly the semen comes from. That is a stunner. So my answer to your claim is, you have misunderstood and INFACT QUR’AN DIRECTLY TELLS THAT NEWS AND MORE THAN THAT IT JUSTIFIES THE CURRENT SCIENCE 100% FROM WHERE THE SEMEN COMES FROM.

நீங்கள் குரானின் வாசகத்தை வாசித்தீர்களா என்பது தெரியவில்லை. வாசித்திருந்தால் இது போல் சொல்லியிருக்க மாட்டீர்கள். நீங்கள் குரானின் 86:5-7 வசனங்களில் 86:7 வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். விடுபட்ட 86:5-6 பகுதியையும் வாசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

குரானின் மற்றப் பகுதிகளிலும் மனிதன் விந்திலிருந்து பிறக்கிறான் என்று சொல்லியுள்ளது.(விந்து என்பது சரியான வார்த்தை அல்ல; { ஆஷிக் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை; விந்து என்பதே மிகச்சரியான சொல்லாக இருக்க முடியும்.} குரான் அதனை விந்து என்பதற்குப் பதிலாக ஒரு பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் என்று சொல்கிறது.) எல்லோருக்கும் விந்து பற்றித் தெரியும்; அதனால் அது பெரிய விஷயமில்லை. அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது. ஆகவே உங்கள் கேள்விக்கான என் பதில்: நீங்கள் தவறாக நினைத்துள்ளீர்கள்.உண்மையில் குரான் நேரடியாக அந்த செய்தியைச் சொல்கிறது. அதோடு விந்து எங்கிருந்து வருகிறது என்பதை 100 விழுக்காடு சரியாக இன்றைய அறிவியல் உண்மையோடு சொல்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதற்கு மேலும் ஆஷிக் இவ்வாறு கூறியுள்ளார்:
PLEASE BRING ON A SINGLE VERSE FROM QUR’AN WHICH IS SCIENTIFICALLY INCORRECT. THAT’S IS A OPEN CHALLENGE. 

இங்கே ஆஷிக் சொன்ன குரானின் வசனங்களைத் தருகிறேன்.

நூல்:
குர்ஆன் தர்ஜமா
திரீயெம் பிரிண்டர்ஸ்,
சென்னை.(பனிரெண்டாம் பதிப்பு)

அத்தியாயம்86

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!

6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் –

7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


//(பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது ..//– ஒருவேளை அது முட்டையாக / Ovum-ஆக இருக்கலாம். ஆனால் அது நெஞ்செலும்பிலிருந்தா வருகிறது?

ஆணின் விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?

அதை நீங்களே பார்த்துக் கொள்ள கீழே ஆண் & பெண் பிறப்புறுக்களின் படங்களைத் தந்துள்ளேன்.












இதற்கும் மேலே, குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் பூமி ஒருவிரிப்பா, தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுகின்றனவா என்றெல்லாம் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இப்போதைக்கு -- இந்த ஒரு பருக்கை மட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த இடுகையையும் பார்க்கலாம் ...
http://youtu.be/Foor6wga20A



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

pappu
ஜாகிர் நாய்க் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா அவருஇப்படி முழுப்பூசணிக்காயை பிரியாணிக்குள் இப்படி அமுக்குவார் என்றெல்லாம் தெரியாதே! பயங்கரம்தான்.

கிறித்துவமதத்தில் கூட முதல் கட்டளையே 'நான் தான் உண்மையான சாமி' அப்டின்னு வரும். ஆனா அந்த நாட்ல இஸ்லாம் இருக்குதேன்னு அவர்ட்டா யாரு சொல்றது.

ரொம்ப நல்ல படம்.

மிக்க நன்றி.

mohaashik said...

நண்பர் தருமி, 

இப்போதெல்லாம், இணைய பதிவு உலகில் அதிக ஹிட்ஸ் மற்றும் அதிக பின்னூட்டங்கள் கிடைத்து பிரபலமாக 'இஸ்லாமிய இகழ்வு' ஒரு துருப்புச்சீட்டாக பயன் படுகிறது. கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தற்போது இஸ்லாம் பற்றி பதிவு போட ஆரம்பித்து விட்டார்கள். இதுவே, மலிந்து போகும் போது இது போன்ற எல்லா பதிவுகளும் காணாமல் போகும். எனினும், ஆரம்பித்து வைத்தவர்கள் பிரபலம் ஆவார்கள். 

நீங்கள் குறிப்பிட்ட குரான் வசனத்தில் அதில் சொல்லப்படாத அர்த்தங்களை பிராக்கட்டில் போட்ட நேர்மைக்காக உங்களை பாராட்டுகிறேன். 

அரபிப்புலமை பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீனின் அவ்வசனங்களுக்கான தமிழ் விளக்கங்கள், கீழே: 

86 :5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்கட்டும்.

86 :6 - குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். 

(இது விந்து என்று எப்படி முடிவு செய்தீர்கள், தருமி? மனிதன் படைக்கப்பட பாதி செட் குரோமோசோம்கள் போதுமா? ஓவத்திலுள்ள மீதி செட் வேண்டாமா?)

86 :7 - இது முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையில் இருந்து வெளிப்படுகிறது. 

---->>>கவனிக்க : இங்கு ஆணோ பெண்ணோ குறிப்பிடப்படவில்லை. ஆகையால், இரண்டிற்கும் பொதுவான அல்லது இரண்டையும் சேர்த்தே குறிப்பிட்ட வசனம் என்றே பொருள்கொள்ள வழி உள்ளது.

Tuesday, December 01, 2009 10:52:00 PM

mohaashik said...

part-3

அதேசமயம், இன்று, அறிவியல் வளர்ந்த சூழலில் இவ்வசங்கள் படிப்பவர்களை எந்த முரண்பாட்டிலும் கொண்டுபோய் தள்ளவில்லை. மாறாக, அந்தந்த காலங்களில் அந்தந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு. 

பின்னர் அறிவியல் அறிவு வளர வளர....
பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும். 
ஆனால், குரான் வசங்கள் என்றுமே பொய்யாகப்போனதில்லை. 

முக்காலமும் அறிந்த ஒரு இறைவனால் மட்டுமே இப்படி எல்லா கால மக்களின் அறிவியல் அறிவையும் கணக்கில் கொண்டு எழுத முடியும். அதனால்தான் தினம் தினம் குரான் புதுசாகவே இருக்கிறது. இதுதான் அதன் மகத்துவம். இதுபோல், இவை படிப்பறிவில்லாத ஒரு மாமனிதரின்-நல்லவரின் எண்ணங்கள் இல்லை என்றும், இவை படைத்த அனைத்தையும் நன்கறிந்த படைத்தவனின் வார்த்தைகள்தான் என்பதற்கு இதுபோல எண்ணற்ற சான்றுகள் சொல்ல முடியும்.

Tuesday, December 01, 2009 10:53:00 PM

mohaashik said...

part-2 


ஆண் :- 
நீங்கள் பிரசுரித்த படத்தில் உள்ளபடியே, விதைப்பையில் உருவாகி, முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையில் எதோ ஒரு இடத்தை அடைந்து பின்னர் சிறுநீர் குழாய் வழியே - (என்ன அதிசயம்? சிறுநீர் வரும்போது விந்து வராது, விந்து வரும்போது சிறுநீர் வராது..!. யார் இந்த டிராபிக் ரெகுலேட்டர்?) - துள்ளி குதித்து நீராய் வெளிப்படுகிறதே! 

பெண்:- 
இதிலும் உங்கள் படத்தில் முதுகந்தண்டும் முன்பக்கமும் தெரிகிறது. இதனிடையில் உள்ள ஓவரியிலிருந்து வெளியாகி பெல்லோப்பியன் டியுப் வழியாக துள்ளிக்குதித்து வரும் நீராய் கருப்பையை அடைகிறதே!

ஆக, இது இரண்டு நீரும்-அந்த நீரில் உள்ள மேட்டர்- சேர்ந்தே மனிதனை உருவாக்கிறது. 

உங்கள் படம் மூலம் இன்றைய பாமரனுக்கும் புரிகின்ற ஒரு அறிவியல், அப்போது-1400 வருடங்களுக்குமுன் யாருக்கேனும் சொல்ல இயலுமா? 

ஓவம் பற்றியெல்லாம் தெரியாத, 'விந்து மட்டுமே மனிதன் உருவாக போதும்' என்ற 'அறிவியலும்'(?), கொண்ட அந்நாளில் உள்ள மக்களுக்கு எந்த 'அறிவியல்' குழப்பமும் (?) ஏற்படவில்லை, இவ்வரிகளால்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

மணிகண்டன் ...
//Dr Zakir Naik's views are excellent !//

ஆமா இருக்காத பின்ன?
பேட்டி எடுக்கும் ஆள் என்ன திமிரோட சவுதில மத்த மதத்துக்கு கோவில் கட்ட வாய்ப்பு இர்க்கான்னு கேட்கலாம்.

மெக்காவிற்குள் போகும் ரோட்டுக்கே "முஸ்லீம்" "Non-முஸ்லீம்" அப்படீன்னு பிரிச்சு வச்சுருங்காங்க. கோவில் எல்லாம் அதிகப்படி. 

படம்:
http://en.wikipedia.org/wiki/File:Christian_Bypass.jpg

செய்தி:
http://en.wikipedia.org/wiki/Religious_segregation

In the Holy Cities of Mecca and Medina, both of which are located in Saudi Arabia, only Muslims are allowed. Non-Muslims may not enter or travel through Mecca; attempting to enter Mecca as a non-Muslim can result in penalties such as a fine;[21] being in Mecca as a non-Muslim can result in deportation.[25]
//

http://tyo.ca/islambank.community/modules.php?op=modload&name=News&file=article&sid=714

*******

இஸ்லாம் மட்டுமே 2+2 = 4 மத்ததெல்லாம் 2+2=3 இதுவே முடிவு. ஆமென்.

இப்படிக்கு
இஸ்லாம் பார்வையில் காபிர் கல்வெட்டு (2+2=3)

The Analyst said...

அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது. 

குரானில் இப்படித்தான் சொல்லியிருக்குது:
He is created from a drop emitted- Proceeding from between the backbone and the ribs

சரியா?

ஆஷிக் நீங்கள் இது தான் சரி என்பீர்கள் என்றால், இவ்வசனம் சொல்வதன்படி விந்து சிறுநீரகத்தில் இருந்து வருவதாக அல்லவா அர்த்தப்படுகிறது. 

பிறகெப்படி நீங்கள் இவ்வசனம் 100% சரி என்கிறீர்கள்?

இன்னொரு விந்தை என்னவென்றால், இந்த விந்து சிறுநீரகத்தில் இருந்து வரலாம் என்னும் பிழையான கொள்கையை கிரேக்கர்கள் தான் முதலில் கொண்டுவந்தார்கள். கிரேக்கர்கள் மருத்துவம் சம்பந்தமான நிறைய கொள்கைகளை (அவற்றில் சில சரி, சில பிழை)/ உண்மைகளை கிட்டத்தட்ட முகமது நபியின் காலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருந்தனர். 

என்னைப்பொருத்தவரையில் குரானில் சொல்லியிருப்பதை விட இதுவே பெரிய வியப்பான விடயம். 

நபிக்கு இது எப்படித் தெரிந்து இருக்கும்? 

இஸ்லாமிற்கு முதலிருந்தே அரபியர்களுக்கும் பப்ய்லோன், பெர்சியா, எகிப்து நாட்டவர்க்கும் தொடர்புகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.

அதனால் செவி வழி கேட்ட இக்கதைகள் குர்ஆனில் புகுத்தப்பட்டிருக்கலாம். 

அப்பாடி, ஒருவழியாகத் தமிழில் எழுதி விட்டேன். எல்லாருக்கும் கொஞ்சமாவது நான் எழுதியது விளங்குதா என்று சொல்லுங்கோ. நன்றி. :)

Wednesday, December 02, 2009 2:40:00 AM

பீர் | Peer said...

நான் அறிவியல் படித்தவன் இல்லை, ஆனாலும் எனக்குத் தெளிவாக விளங்குகிறது. பேராசிரியரான உங்களுக்கும் அது நிச்சயம் விளங்கியிருக்கும்..

முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்துஅது வெளியாகிறது. (86:7)
=====

2+2 = 4 என்று சொல்லிவைக்க வேண்டும் என்றால், நாம் பகுத்தறிவாளர்கள் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்?

நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219))))

 

குட்டிபிசாசு said...

//நான் அறிவியல் படித்தவன் இல்லை, ஆனாலும் எனக்குத் தெளிவாக விளங்குகிறது. பேராசிரியரான உங்களுக்கும் அது நிச்சயம் விளங்கியிருக்கும்..

முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)//


பீர் அவர்களே,

முதுகுதண்டு, விலா எலும்பு ... இவை இரண்டும் என்ன என்று தாங்கள் தெரிந்துகொண்டு பேசினால் தேவலாம்.

// 2+2 = 4 என்று சொல்லிவைக்க வேண்டும் என்றால், நாம் பகுத்தறிவாளர்கள் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்?

நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219)//

இதை இப்படியும் கூறலாம். 

2+2 = 4 என்று சொல்லி விளக்க முடியாதவரை, நாம் ஏன் கடவுள் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்?

தருமி ஐயா,

"முஸ்லீம் அல்லாதோர் விஞ்ஞானத்தில் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் அவர்களை முஸ்லீம் நாடுகளுக்கு அழைக்கிறோம்" என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார் ஜாகிர். உலகிலுள்ள மதங்களில் குப்பை கொட்டுபவர்களை விட நாங்களே சிறப்பாக குப்பை கொட்டுகிறோம் என்றும் கூறிவிடுகிறார்.

Wednesday, December 02, 2009 7:01:00 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

தருமி,

மேலே குறிப்பிட்ட குர்ஆன் (86:07) வசனங்களில் يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்றுமனித உடலில் விந்து (Semen) உற்பத்தியாகுமிடம் குறித்து விளக்குகிறது.

அதாவது مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்ற அரபுச்சொல்லுக்கு முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்டப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறதென்ற பொருளிலேயே சொல்லப்பட்டுள்ளது.
++++++++++++++++
يَخْرُجُ = EXIT/OUT; 
مِن=FROM;
الصُّلْبِ = BACKBONE;
بَيْنِ= இடையே 
التَّرَائِبِ = RIBS)
+++++++++++++++++
தற்போதைக்கு இது போதமென்று நினைக்கிறேன்.

கேட்கக்கூடாத கேள்வி: நீங்கதான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி (يَخْرُجُ = EXIT/OUT) விட்டதாகச் சொன்னீர்களே! 

அப்புறம் ஏன் அவங்க மூக்கறுபட்டக் கேள்விகளையே நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? சொந்தச் சரக்கு காலியா?

கல்வெட்டு said...

தருமி,
குரான் அறிவியல் ஆதாரம் தவறு என்று நிறுவுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஆசிக் அல்லது பீர் ஒருக்காலும் குரான் தவறு என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 

குரான் மனிதனை சுயமாகச் சிந்தித்து செயல்படச் சொல்வது இல்லை. உனது சிந்தனைகளே முக்கியம் குரானே ஆனாலும் சிந்தித்து செயல்படுத்து , குரானே கேள்வெ கேட்க தயங்காதே ...என்று குரான் சுதந்திரம் கொடுப்பது இல்லை.

**
பீர் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒரு குரான் வசனம் உள்ளதாகச் சொல்கிறார்.

//
பீர் | Peer said...
நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219)// 


ஆனால் உண்மை அதுவல்ல.. இதோ உண்மையான் வசனம்....


**********


[2:219] اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
[2:219] إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَـٰهَدُواْ فِى سَبِيلِ ٱللَّهِ أُوْلَـٰٓٮِٕكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِ‌ۚ وَٱللَّهُ غَفُورٌ۬ رَّحِيمٌ۬
[2:219] Those who believe and those who emigrate and strive hard in the cause of Allah, it is these who hope for Allah’s mercy; and Allah is Most Forgiving, Merciful.
[2:219] یقیناً وہ لوگ جو ایمان لائے اور وہ لوگ جنہوں نے ہجرت کی اور اللہ کی راہ میں جہاد کیا یہی وہ لوگ ہیں جو اللہ کی رحمت کی امید رکھتے ہیں اور اللہ بہت بخشنے والا (اور) باربار رحم کرنے والا ہے۔


*********

இதற்கான தமிழ் மொழிபெயர்ப்பை பீர் எப்படி செய்துள்ளார் என்று அவரிடமே கேட்க வேண்டும்.

Wednesday, December 02, 2009 9:04:00 PM

கல்வெட்டு said...

// நல்லடியார் said...

தருமி,

மேலே குறிப்பிட்ட குர்ஆன் (86:07) வசனங்களில் يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்றுமனித உடலில் விந்து (Semen) உற்பத்தியாகுமிடம் குறித்து விளக்குகிறது.//

***

நல்லடியார் நீங்கள் குரான் படிக்க கடவது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உங்களுக்கு தோதாக (86:07)க்கு அர்த்தம் கொடுக்க வேண்டாமே ))

உங்கள் தகவலுக்காக.

[86:7] خُلِقَ مِن مَّآءٍ۬ دَافِقٍ۬
[86:7] He is created from a gushing fluid,
[86:7] اُچھلنے والے پانی سے پیدا کیا گیا۔


சரியனா மொழிபெயர்ப்பு பீச்சியடிக்கும் திரவம் அது சிறுநீராகவும் இருக்கலாம் அல்லவா? 

*************
[86:6] فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏
[86:6] فَلۡيَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
[86:6] So let man consider from what he is created.
[86:6] پس انسان غور کرے کہ اسے کس چیز سے پیدا کیا گیا۔
[86:7] خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏
[86:7] خُلِقَ مِن مَّآءٍ۬ دَافِقٍ۬
[86:7] He is created from a gushing fluid,
[86:7] اُچھلنے والے پانی سے پیدا کیا گیا۔
[86:8] يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
[86:8] يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآٮِٕبِ
[86:8] Which issues forth from between the loins and the breast-bones.
[86:8] جو پیٹھ اور پسلیوں کے درمیان سے نکلتا ہے۔

******************

Wednesday, December 02, 2009 9:12:00 PM

குட்டிபிசாசு said...

//During coitus semen is ejaculated from the two storage areas called the seminal vesicles, and NOT FROM THE TESTICLES.

Semen is stored in the seminal vesicles to be ejaculated during coitus.

The seminal vesicles are anterior to the sacrum and coccyx (lower back, loin) and the ribs are anterior to the seminal vesicles. If one was to draw a line from the tip of the coccyx, to the upper portion of the seminal vesicle, either one of the two, and extend the line forward it will catch the ribcage.

The seminal vesicles from which the semen spurts out during coitus, lies between the ribs and the coccyx!
//


During ejaculation process, sperm passes through the ejaculatory ducts and mixes with fluids from the seminal vesicles, the prostate, and the bulbourethral glands (cowper's gland) to form the semen. 

You can find the positions of the above mentioned glands in this picture.

http://en.wikipedia.org/wiki/File:Male_anatomy.png



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

முழுதும் படிக்க ...

Friday, December 04, 2009 6:31:00 PM

கல்வெட்டு said...

http://athusari.blogspot.com/2009/12/blog-post.html - ல்
நல்லடியாருக்கு இட்ட பதில்.

தகவலுக்காகவும் எப்படி இஸ்லாமியர்களே அடைப்புக்குறி சித்து விளையாட்டின் மூலம் குரானை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டவும் இங்கேயும் பதிவு செய்யப்படுகிறது...

***************



---- நல்லடியார் said @ http://athusari.blogspot.com/2009/12/blog-post.html ....

//குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று //

------end---------

நல்லடியார்,
மறுபடியும் பொய். 
குரானை இப்படி திரித்து அடைப்புக்குறிக்குள் உங்களின் சுயவிளக்கங்களை ஏற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.
இப்படியே போனால் கடவுள் இன்னொரு நபி அனுப்பி மறுமுறையும் புது வேதம் அளிக்கவேண்டிய தேவை வ‌ரும். ((

மேலும் அது 75:37 அல்ல 75: 38

[75:38] Was he not a drop of fluid, emitted forth?

(1)drop (துளி) (2)fluid (திரவம்) (3)emitted (வெளிப்பட்ட/வெளிவந்த) இந்த மூன்றுதான் குரானின் 75: 38 ல் உள்ளது.

கருவறை என்ற சொல் உள்ள 75:37 எந்த குரான்?


[75:37] اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏
[75:37] أَيَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَن يُتۡرَكَ سُدًى
[75:37] Does man think that he is to be left to himself uncontrolled?
[75:37] کیا انسان یہ گمان کرتا ہے کہ وہ بے لگام چھوڑ دیا جائے گا؟
[75:38] اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏
[75:38] أَلَمۡ يَكُ نُطۡفَةً۬ مِّن مَّنِىٍّ۬ يُمۡنَىٰ
[75:38] Was he not a drop of fluid, emitted forth?
[75:38] کیا وہ محض منی کا ایک قطرہ نہیں تھا جو ڈالا گیا؟

Friday, December 04, 2009 9:27:00 PM

Quarter said...

//குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது.//

குர்ஆன்: 2:23 இல் அல்லா கூறுகிறார் "முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்"

எனக்கு புரியவில்லை, உலகத்தை நாந்தான் படைத்தேன், என்னை விட பெரியவன் இல்லை என்று அதே குர்ஆனில் கூறும் கடவுள் யாரை பார்த்து சவால் விடுகிறார் என்னுடையதை போல் ஒன்றை உருவாக்கி காட்டு என்று. சாதாரண மனிதன் பிறரை பார்த்து சவால் விடலாம். அல்லாவை மிஞ்சி வேறு சக்தி இல்லை என்னும்போது எதற்காக அல்லா சவால் எல்லாம் விட வேண்டும், குரான் முழுவதும் இது போன்ற சவால்களை பார்க்கலாம்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
-குர்ஆன்:4:82
தன்னை கடவுள் என்று நிருபிக்க அல்லா எவ்வளவு கஷ்ட படுகிறார் பாருங்கள்.

Saturday, December 05, 2009 9:28:00 PM

Quarter said...

முகம்மதுவிற்கு நினைத்த நேரத்தில் எல்லாம் அல்லா வந்து அவரிடம் பேசுவார். அதற்கு அவர்கள் பதிவில் இருந்தே ஒரு நிகழ்ச்சி 

http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html

Sunday, December 06, 2009 8:36:00 PM

Quarter said...

//உலக முஸ்லீம்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புள்ளி மெக்காவிலுள்ள காபா ஆலயம். மற்றபடி கருப்புத் துணியால் போர்த்தப்பட்ட அந்த கட்டிடத்தின் உள்ளே ஒன்றும் இல்லை.//

http://en.wikipedia.org/wiki/Black_Stone

காபாவில் என்ன இருக்கிறது என்ற விபரம் இதில் இருக்கிறது. உள்ளே இருப்பது ஹஜருல் அஸ்வத் என்ற கல்

((ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803) ))


சுவர்க்கத்தில் இருந்து உங்களுக்காக அல்லா கல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது காபாவில் இருக்கிறது. ஒரே வார்த்தையில் ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டீர்களே. காபா செல்லும் முஸ்லிம்கள் அதை தானேவணங்குகிறார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோவி.கண்ணன் said...

//நல்லடியார் said... 
தருமி,

நவீன அறிவியல் கருவுக்கு அவசியமான தாது (SEMEN) உற்பத்தியாகுமிடம் என்று எதைச் சொல்கிறதோ அதையேதான் குர்ஆன்: முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து பிறக்கவில்லையா? 
//

நல்லடியார், நான் இது பற்றிக் கேட்கப் போவது இல்லை. அல்லாவின் அறைகூவல், "குரானைப் போன்று ஒன்றை மனிதர்களால் படைத்துவிட முடியுமா ?" பற்றிச் சொல்லுங்கள்

அப்படியே ஒருவர் படைத்து வந்தாலும் அதை ஒப்பிட்டு பார்த்து நிராகரிக்க அல்லா வருவாரா ? 

அல்லா வந்து சொல்லமாட்டார் என்றே வைத்துக் கொண்டாலும் அதை நிராகரிக்கும் தகுதி வேறு யாருக்கு இருக்கிறது ?

அல்லாவின் அறைகூவல் யாருக்கு சொல்லப்பட்டது ? யார் அந்த அறை கூவலை ஏற்றுக் கொண்டு பிரிதொன்றைக் கொண்டு வரவேண்டும் ?

ஒண்ணும் புரியவில்லை !!!

நான் சவால் விட்டால் என்னுடைய சவாலை ஏற்றுக் கொள்வோரை நான் ஆய்வு செய்தாகவேண்டும். வெறும் சவால் மட்டும் விட்டு விட்டுவிட்டேன் என்றால் அந்த சவால் காலத்துக்கும் மாறாமல் அப்படியே இருக்கும், யாரும் சவாலை முறியடிக்க முடியவில்லை என்று என் சார்பில் பிறர் சொல்வது சரியா ?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

நல்லடியார்,
மீண்டும் மீண்டும் ஒரே செய்தியைச் சொல்கிறீர்கள்.

அல்லா முகம்மது நபியின் வழி சொன்ன கருத்தை நாங்கள் மறுக்கிறோம் . மனித குலத்தை நோக்கி சவால் விட்டவர் அல்லா . அந்த அல்லாவிடம் ம‌ருத்துவச் சான்றை அளிக்கவிரும்புகிறோம். 

முகம்மது இறுதி நபி.
இனிமேல் யாரும் தூதரக வரமாட்டார்கள்.
நல்லடியார் நாங்கள் உங்களை நம்பவில்லை. ஏனென்றால் நீங்கள் அல்லாவைவிட பெரிய ஆள்கிடையாது.

அல்லாவின் சாவலுக்கு உரிய பதிலை அல்லாவிடம் எப்படி அளிப்பது?
(கோவி கண்ணனுக்கு நன்றி)

அவர் வந்து இதை மறுக்காதவரை நீங்கள் அமைதியாக இருக்கலாம்.

Tuesday, December 08, 2009 7:27:00 PM

கல்வெட்டு said...

விந்து தொடர்பாக குரான் செய்திகளுக்கு அல்லாவிற்கு கடிதம்.

அன்பிற்குரிய அல்லா (அண்ணல்முகம்மது நபி காட்டிய ஒரே இறை)

நீங்கள் சொல்லியுள்ள 86:6 மற்றும் 86:7 தவறு. 

86.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
86.006 He is created from a drop emitted

86.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
86.007 Proceeding from between the backbone and the ribs:

(1) மனிதன் drop emitted ல் இருந்து வந்தவன் என்றால் அந்த drop emitted ஆகும் இடம் ஆண்குறியின் முனைதான். அதற்கு முன் அது எமிட் ஆகவில்லை. உற்பத்தி வேறு வெளியேற்றம் (எமிட்) வேறு. 

எனவே backbone and the ribs ல் இருந்து எமிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறு. 

(2) சரி, உற்பத்தியாகும் இடத்தைத்தான் நீங்கள் எமிட் என்று சொல்லுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி நினைத்துக்கொண்டாலும், விந்து Sperm உற்பத்தியாகும் இடம் testes தான் . எனவே அதுவும் தவறு.

உங்களுக்காக சில தகவல்கள்.

விந்து sperm வேறு seminal fluid வேறு. 

sperm சேட்டிலைட் என்றால் seminal fluid ராக்கெட் . sperm எடுத்துச் செல்லும் வாகனம் seminal fluid. 

seminal fluid இருந்து கரு உருவாகாது.

*****

நீங்கள் எதைச் சொன்னாலும் தெளிவாகச் சொல்லுங்கள்.

தெளிவில்லாத காரணத்தால், காபிராகிய நாங்கள் எதைச் சொன்னாலும் "அதுதான் இது" என்று நல்லடியார் வந்து சத்தம் போடுகிறார்.

பீர் வந்த அவர் வீட்டு விசேசத்துக்கு வரக்கூடாது என்கிறார்.

****

உங்களின் சவாலுக்குச் சாவால்

இதுதான் மனிதர்களாகிய நாங்கள் கண்டறிந்த உண்மை. நீங்கள் விட்ட சவாலை எதிர் கொள்ள நாங்கள் ரெடி. நீங்கள் எப்போது வருவீர்கள்? இதை எப்படி உங்களுக்கு கிடைக்கச் செய்வது? 

****

தருமியின் பிளாக்கை நீங்களே நேரடியாக வாசித்து பதிலை, குரானிலேயே 86:6:1 என்றும் 86:7:1 என்றும் தரவும். குரானில் இல்லாததை நல்லடியார் நம்ப மாட்டார். சாவாலுக்கான மறுப்பை நாங்கள் தோற்றதை அல்லது நீங்கள் தோற்றதை குரானிலேயே தந்து , திருத்தப்பட்ட காப்பியை நேரடியாக தருமிக்கும் , நல்லடியாருக்கும் அனுப்பிவைத்தி இந்த சிக்கலை தீர்த்து வைக்கவும்.

உங்களைத் தவிர யாரையும் இந்தவிசயத்தில் நம்ப இயலாத‌ கல்வெட்டு.
-------------------

http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm


The Male Reproductive Tract

The male reproductive tract performs three functions:

* It enables a man to produce offspring.
* It provides him with a supply of male hormones.
* It enables him to experience sexual pleasure.


The Traveling Sperm. The sperm's journey through the male body -- from the testes (the testicles) to the final stage (the orgasm) -- is long and complex:


* Sperm are produced in the testes at a rate of 50,000 an hour within tiny ducts called seminiferous tubules.

* Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on.

* When a man experiences sexual excitement, nerves stimulate the muscles in the epididymis to contract. This forces the sperm to pass into one of two rigid and wire-like muscular channels, called the vasa deferentia. (A single channel is called a vas deferens. It is the vas deferens that is cut during vasectomy.)

* Muscle contractions in the vas deferens from sexual activity propel the sperm along past the seminal vesicles, which are clusters of tissue that contribute fluid, called seminal fluid, to the sperm. The vas deferens also collects fluid from the nearby prostate gland. This mixture of various fluids and sperm is the semen.

* Each vas deferens then joins together to form the ejaculatory duct. This duct, which now contains the sperm-containing semen, passes down through the urethra. (The urethra is the same channel in the penis through which a man urinates. During orgasm, however, the prostate closes off the bladder so urine cannot enter the urethra.)

* The semen is forced through the urethra during ejaculation, the final stage of orgasm when the sperm is literally thrown out of the penis.

Tuesday, December 08, 2009 7:42:00 PM

கல்வெட்டு said...

தருமி , அல்லாவிற்கான கடிதத்தை தனியாக ஒரு பதிவாக போட்டுவிடுங்கள். சவால் இறைவனால் எதிர்கொள்ளப்பட்டு அதே இறைவனால் திருத்தப்பட்ட குரான் வரும் வரை அது அப்படியே இருக்கட்டும். சவால் விட்டவரே வது பதில் சொல்லட்டும் அதுதான் நேர்மை.

நண்பர்களே, இது குரானில் உள்ள அறிவியல் கருத்தை ஆராயும் நோக்கமே. உங்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அப்படியே மதிக்கிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டு said...

>










நல்லடியார்,
கரு உண்டாகமால் இருக்க வாசக்டமி எங்கே செய்யப்படுகிறது?
http://www.clarian.org/ADAM/doc/graphics/images/en/10331.jpg

படத்தைப் பாருங்கள்.
இங்கே கட் பண்ணினால் விந்து வராது.

தெரிந்து கொள்ளுங்கள்..இங்கே கட் பண்ணினால் விந்து Sperm வராது. ஆனால் உடலுறவின்போது seminal fluid வந்து கொண்டுதான் இருக்கும். seminal fluid ல் கரு உண்டாகாது.

**
எனவே மனிதன் பிறப்பத்ற்குத் தேவையான விந்து sperm உருவாகும் இடம் விரையா அல்லது அல்லா சொல்லும் seminal fluid உருவாகும் இடமா?

Tuesday, December 08, 2009 7:55:00 PM

கல்வெட்டு said...

அன்புள்ள தருமி,

விரையில் செய்யப்படும் வாசக்டமியால் குழந்தை பிறக்கவில்லை என்றால் விரையில்தான் ஸ்பெர்ம் உண்டாகிறது என்ப‌து யாருக்கும் புரியும். 

விரையில் வாசக்டமி செய்யப்பட்டாலும் உடலுறவின்போது seminal fluid வந்து கொண்டுதான் இருக்கும். அதனால் கரு உண்டாகாது.

இதை அல்லாவிற்குச் சொல்லிவிட்டு அடுத்த பிரசனைக்குப் போகலாம்.

நான் கடைசியாக இட்ட கீழ்க்காணும் பின்னூட்டங்களை

1. அல்லாவிற்கு கடிதம்

2. வாசக்டமி எப்படி எங்கே செய்யப்படுகிறது என்று சொல்லி விந்து Sperm & seminal fluid க்குமான வேறுபாட்டை சொல்லி விளக்கியுள்ள பின்னூட்டம் படத்துடன்

தனிப்பதிவாக வெளியிட்டால் இந்த விரை விந்து 86:6 / 86:7 பிரச்சனை முடியும்.

தருமி said...

நண்பர்களே! குரான் சொல்பவை எல்லாமே அறிவியல் என்ற கூற்றை மறுக்க இவ்வளவு ஆராய்ச்சிகூட தேவையில்லாத இன்னொரு சான்று தரட்டுமா – குரானில் தேனீக்கள் பற்றிச் சொல்லியிருப்பது: 
[16:69] Then eat from all the fruits, following the design of your Lord, precisely. 
தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுமா – உங்கள் குரானில் சொல்லியபடி??????? இதற்கும் ஏதாவது அறிவியல் தத்துவம் சொல்வீர்களா?

கல்வெட்டு said...

தருமி,
பழம் சாப்பிடும் தேனீக்கள் குறித்த வசனம் 16:70


[16:69] And thy Lord has inspired the bee, saying, ‘Make thou houses in the hills and in the trees and in the trellises which they build.

[16:70] ‘Then eat of every kind of fruit, and follow the ways of thy Lord that have been made easy for thee.’ There comes forth from their bellies a drink of varying hues. Therein is cure for men. Surely, in that is a Sign for a people who reflect.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மு மாலிக் said...

"பழந்தின்னும் தேனீக்கள்" பற்றி:

இதனை நாம் சற்று கவனமாக அணுகுவது சிறந்தது. குர் ஆனின் சொல்லாடல்கள் 1400 வருடங்களுக்கு முந்தையவை. அதன் பொருட்கள் காலப்போக்கில் மாறியே வருகிறது.

உண்ணுதல்/அருந்துதல் எனும் வார்த்தை திட அல்லது திரவ உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்.

"Fruit" எனும் வார்த்தையினை ஆங்கில மொழியிலேயே "பயன் தரும் பொருள்" "விளைவிக்கும் பொருள்" எனும் நோக்கில் தான் பயன் படுத்தப் படுகிறது. இந்த‌ ஆங்கில வார்த்தைப் பற்றி ஒரு பேச்சுக்கு சொன்னேன். அரபி வார்த்தையிலும் இந்த பொருள்தான் உள்ளது என அந்த வார்த்தையின் மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போது அறிய முடிகிறது. அப்துல்லா யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்பு கீழ்காணும்வாறு உள்ளது. கவனிக்க, அதில் "பழம்" எனும் சொல்லாடல் இல்லை.

Then to eat of all the produce (of the earth), and find with skill the spacious paths of its Lord: there issues from within their bodies a drink of varying colours, wherein is healing for men: verily in this is a Sign for those who give thought.

--Quran 16:69 (Translation: abdullah yusuff ali)

http://www.quranexplorer.com/quran/

கல்வெட்டு said...

அன்புள்ள மாலிக்,
நீங்கள் சொல்வதின் சாரம்சம்.....

1. இஸ்லாமிய அறிவாளி (Islamic Scholar ) ஜாகிரை நம்புவது இல்லை.

2. நீங்கள் , "நல்லடியார்" மற்றும் "ஆசிக்" சொன்ன மார்பு இடுப்பு மேட்டர்களை நம்புவது இல்லை அதனால்தான் அடிவயிறு விளக்கம் உங்களிடம் இருந்து இப்போது புதிதாக வருகிறது.

3. அந்தக் கால அரபிமொழியை நம்புவது இல்லை. அதில் பல பிரச்சனகள். தனியாக தொங்கும் விரையை சொல்லவும் தேனீ உண்ணும் தேனைச் சுட்டவும் வார்த்தை இல்லாத மொழி.

4. முகம்மது எழுதப்படிக்கத் தெரியாதவர் அவர் சொன்னதில் தவறு இருக்கலாம்.

5. சிக்கல் நிறைந்த முழுமையடையாத (நீங்கள் சொன்ன தமிழ் போல) அரபியில் அதுவும் எழுதப்படிக்கத் தெரியாதவரிடம் வேதத்தை இறக்கியது இறைவனின் குற்றம்.

6.காபிர்களாகிய நாங்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) காட்டும் மொழி பெயர்ப்பு எல்லாம் தவறு.

ஒத்துக்கொள்கிறேன் உங்களின் நிலைப்பாட்டை...

எல்லாம் சரி....

ஏன் உங்கள் வழியாக தமிழ் மொழியில் சிக்கல் இல்லாத வேதத்தை இறைவன் மறுமுறை அருளக்கூடாது?

Wednesday, December 09, 2009 5:46:00 PM

கல்வெட்டு said...

தருமி,
"மரம் சிடி படிக்கும்" என்று இந்தக்காலத்தில் ஓம்கார் கண்டுபிடிக்கும்போது , "தேனீ பழம் சாப்பிடும்" என்று அந்தக்காலத்தில் ஒருவர் சொன்னது வியப்பல்ல.

ஆன்மீக அன்பர்களுக்கு இதெல்லாம் சகஜம். ))

பாவம் விடுங்கள்

Wednesday, December 09, 2009 5:48:00 PM

வால்பையன் said...

//தொடர்புடைய வசனங்களையும் சேர்த்துப் பொருள் கொண்டால் கருவாக்கத்தின் மூலப்பொருள் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து /Proceeding from between the backbone and the ribs என்று தொடர்சியான நிகழ்வைச் சொல்கிறது.//

தொடர்புடய நிகழ்வின்னா ஏன் இத்தோட நிறுத்திகிட்டிங்க, இன்னு செக்ஸ் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் வரைக்கும் போலாமே!?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

//அரபி மொழி, தட்டுத்தடுமாறி அப்போதுதான் வளர்ந்து கொண்டுவந்திருந்தது. //

மு.மாலிக்,
நீங்க சொல்றதைப் பார்த்தா அல்லா தப்பான ஒரு மொழியையோ, ஒரு ஆளையோ தேர்ந்தெடுத்து விட்டாரோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. மொழியும் வளராத மொழி; தேர்ந்தெடுக்கப்பட்டவரும் படிப்பறியாத போராளி. 

//அப்துல்லா யூசுஃ அலியின் மொழிபெயர்ப்பே முஸ்லீம்களால் முதன்மையானதாகக் கருதப் படும் ஆங்கில மொழிபெயர்ப்பு.//

உங்கள் வேதப் புத்தகத்தை மனிதக் கைபடாமல் கடவுள் காத்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால் அதுவோ பலரால் தெரிந்து கொள்ள முடியாத வளர்ச்சி குறைந்த அன்றைய அரபு மொழியில். மொழியாக்கம் பலரும் செய்தனர், அதில் நீங்கள் சிலது நல்லது; மற்றவை அல்லது என்கிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது?

தருமி said...

//
Then to eat of all the produce (of the earth),..//

என்ன மாலிக் இது? முதலில் தேனீ பழம் தின்னும் எனப்து தவறான மொழிபெயர்ப்பென்று இதைக் கொடுத்தீர்கள். ஆனால் இங்கே eat of all the produce அப்டின்னு வருது ??? 

//அப்துல்லா யூசுஃ அலியின் மொழிபெயர்ப்பே முஸ்லீம்களால் முதன்மையானதாகக் கருதப் படும் ஆங்கில மொழிபெயர்ப்பு. //

அல்லா தான் சொன்ன அரபு குரானை மனிதக் கரங்கள் படாமல் காத்து வந்திருக்கிறார் அப்டின்றீங்க; ஆனால் மொழிபெயர்ப்பில் இத்தனை மாற்றங்கள் எப்படி இருக்கலாம். அதையும் அவராவது நீங்களாவது காத்திடலாமே ..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Paraiyoasai said...

நமக்குள் ஏன் சர்ச்சை. அடுத்து ஒரு மொழிபெயர்ப்பில் விதைகளிலிருந்து (testicles) குதித்து ஓடும் விந்தணுவிலிருந்து என்று எழுதிவிட்டால் சரியாப் போகுது. மூலமொழியில் எந்தச்சொல் பயண்படுத்திருந்தால் என்ன? காலத்திற்கு தகுந்தவாறு, அறிவியலுக்குத் தகுந்தவாறு மாற்றி மொழிபெயர்த்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே. குர்ஆன மட்டும்தான் அல்லா பாதுகாக்கிறான். அதனால் குர்ஆன்லதான மாறக்கூடாது. மொழிபெயர்ப்பில் மாறுவதால் தப்பொண்ணும் இல்லே. சொற்பிரச்சனை வந்தால் அவரு தப்பா மொழிபெயர்த்துள்ளார்னு சொல்லிடுவோம். ஆங்கில மொழிபெயர்ப்புகளே சரியானது என்று சொல்பவர்களெல்லாம் ஒன்றை நமக்கு தெளிவா புரியவைக்கிறாங்க. அதாவது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் முட்டாள்கள் என்பதுதான்.
குறிப்பு; விந்தணுவின் வடிவம் நீர் அல்ல. ஒரு துளி விந்தும் (with semen) தேவை இல்லை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?


தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து விட்ட பின்ää யூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் அநேகர் இஸ்லாத்தின் மீது மிகவும் பிடிப்பாகவும்ää தீவிர நம்பிக்கை கொண்ட மக்களாகவும் இருந்தே அதேவேளையில்ää சிலர் நயவஞ்சகர்களாக தங்களையும் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு நாவில் ஏறிய இறைநம்பிக்கைää இதயத்துக்குள் இறங்க மறுத்து விட்டிருந்தது. இவர்கள் இஸ்லாத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டேää இஸ்லாத்திற்கு எதிரான பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இஸ்லாத்தை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்ததோடுää இஸ்லாத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் இருந்தனர்.

அபுல் அஸ்வத் (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதீனாவில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தும்ää அவர்கள் இஸ்லாத்தின் போதனைகள் பற்றி முழுமையான அளவில் உணராதவர்களாக இருந்தனர்ää இந்த நிலையில்ää அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில்ää அதற்கான தீர்வை வழங்குமாறு அந்தப் பிரச்னையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இருவரது வாதங்களையும் கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர்களில் ஒருவரது வாதம் தான் சரியானது என்று தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள். இதனால் எவருக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்ததோää அவருக்கு அந்தத் தீர்ப்பின் மீது திருப்தி ஏற்படவில்லைää எனவேää அந்த வழக்கை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்.

இருவரது வழக்கையும் கேட்டுக் கொண்ட உமர்(ரலி) அவர்கள்ää உங்களில் மறுபரிசீலனையைக் கோருவது யார்? என்று கேட்டு விட்டுää

ம்.. ம்..! ”இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பின் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லைää அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்றீர்கள்”".

அந்த மனிதர் அதற்குää ‘ஆம்” உமர் அவர்களே..! என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் வழக்கை ஆய்வு செய்து தீர்ப்புக் கூறிய பின்னர்ää அவரது தீர்ப்பை மாற்றும்படிக் கோருகின்றீர்கள்.

”நீங்கள் முஸ்லிம் தானே”"ää என்று கேட்டுக் கொண்டார் உமர் (ரலி) அவர்கள்.

”ஆம்ää நான் முஸ்லிம் தான்”" அந்த மனிதர் பதில் கூறினார்.

கொஞ்ச நேரம் சற்றுப் பொறுத்திருங்கள். விரைவில் நான் என்னுடைய முடிவைக் கூறுகின்றேன்ää அது உங்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கும்”"ää என்று கூறி விட்டுää

உமர் (ரலி) அவர்கள் தனது வீட்டிற்குள் சென்றுää தனது கையில் ஒரு வாளை எடுத்து வந்துää அந்த மனிதரை ஒரே ஒரு போடு போட்டு விட்டுää ”உம் மீது நாசம் உண்டாகட்டும்ää ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக என்னை தீர்ப்புக் கூறச் சொல்கின்றீரா? நீ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பாவிää இஸ்லாத்தை விட்டு வெளியேறியதன் தண்டனைää இந்தச் சாவு தான்”" என்று கூறினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

saarvaakan says:

ஸலாம் இ.சா

குறுந்தாடி வைத்த தவுகீத் அண்ணன் மட்டும்தான் உளறுகிறார் என்றால் உலக அள்வில் பெரிய தாடி வைத்த தவுகீத் பெரிய அண்ணன்களும் அதே உளரல்.பாருங்கள் இந்த கிறித்தவ காஃபிர் ராபர்ட் ஸ்பென்சர் முகமது என்பவர் வரலாற்ரில் வாழ்ந்ததற்கு சான்று இல்லை என புத்தகம் எழுதி விட்டார்.
அது மட்டும் இலாமல் இரு பெரிய தாடி தவுகீத் அண்னன்களிடம் விவாதமும் செய்து இருக்கிறார்.

இதில் என்ன ஆச்சர்யம் எனில் பெருந்தாடி அண்ணன்கள் ஒரு வரலாற்ரு சான்றை கூட முன் வைக்கவில்லை .குரான் இறை வேதம் என்பதால் இறைத்தூதர் முகமதுவும் உண்மை என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து முயற்சி செய்தது செம காமெடி.
அதில் ஒரு பெருந்தாடி அண்ணன் அன்ஜீம் சவுத்ரி இந்தியாவில் ஷாரியா கொண்டுவர ஷாரியா4ஹிந்த் இயக்கம் நடத்துபவர்.
அங்கும் குரானின் சவால்(இது போல இன்னொன்னு காட்டு),குரானில் அறிவியல் தவிர வேறு சரக்கு இல்லை என்பதையே காட்டுகிறது..
இபின் இஷாக்கிற்கு முந்தைய முகமது பற்றிய வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லையென் அடித்துக் கூறுகிறார்கள் காஃபிர்கள்.பைபிள் தொகுத்த ரோம காஃபிர் அரசன் கான்ஸ்டன்டைன் மாதிரி உம்மையாது அரசன் அப்துல் மாலிக்தன் குரானை தொகுட்தார் என்றும் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=Que1xs81Wts
அனைவரும் கண்டுகளியுங்கள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard