அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது
எஸ். பி. முத்துராமன் மனு தள்ளுபடி: ஆயுத பூஜை அன்று தான் வேலை செய்யும் பொருட்கள் மீது மதிப்பு காட்டுகிறான், மரியாதை செய்கிறான். அது மற்றவர்களின் மனங்களையோ, செக்யூலரிஸத்தையோ பாதித்து விடாது[1], என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைப் பிரிவில், நீதிபதி ஆர். சுதாகர் மற்றும் அர்ணா ஜகதீஸன் கொடுத்த தீர்ப்பில், தனிமனிதர்கள் தங்களது உழைப்பிற்குதவும் கருவிகளை மரியாதை செய்வது நாட்டின் செக்யூலரிஸத்தை எதிர்ப்பதாகாது என்று எடுத்துக் காட்டி எஸ். பி. முத்துராமன் என்பவர் பதிவு செய்த மனுவை தள்ளுபடி செய்தார்கள்[2].
அனைத்து மக்களும் கொண்டாடும் விழாக்கள்: “தான் வேலை செய்யும் இடத்தில், தனிமனிதர்கள் தங்களது உழைப்பிற்குதவும் கருவிகளை மரியாதை ஆயுத பூஜை அன்று மதிப்பு காட்டுகிறான், மரியாதை செய்கிறார்கள். அது மதத்தைக் கடந்த விஷயமாகிறது. செருப்புத் தைப்பவர்கள், நெசவாளிகள், விவசாயிகள், ஓட்டுனர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், தச்சர்கள், கடைக்காரர்கள், கணக்கெழுதுவபவர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், வீட்டில் உள்ள பெண்கள், என பற்பலர் இந்த வழுஇபாட்டை செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவஎர்கள் அல்லர். அதுபோலவே, சரஸ்வதி பூஜை அன்று, படிப்பு, அறிவு, எழுத்து முதலியவற்றிற்கு மரியாதை செய்யப் படுகிறது”.