மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்!
கொலை வழக்கில் காதலி விடுதலை, காதலன் சிறையில்: டி.வி.,தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டவழக்கில் மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் டி.வி.,நடிகை மரியா மற்றும் கப்பல் படை ஜெரோம் மேத்யூ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும் , ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்.
முக்கோணக்காதல்: டி.வி.தொடர்அதிபர்கொலைவழக்கில்கன்னடநடிகைவிடுதலை[1]: கன்னட நடிகை மரியா சூசைராஜ். இவர் கடற்படை அதிகாரியான எமிலி ஜெரோமை காதலித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளராக விளங்கிய நீரஜ் குரோவரை மரியா சந்தித்தார். நடிக்க வாய்ப்பு கேட்டார். இதில் இருவர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை மலாடில் உள்ள காதலி மரியாவின் வீட்டுக்கு ஜெரோம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 7 ந் தேதி சென்றார். அங்கே மரியாவின் படுக்கை அறையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் இருந்தார். இதைக்கண்டதும் ஜெரோமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இருவர் இடையே வாய்த்தகராறு மூண்டது. இது வலுத்தபோது, நீரஜ் குரோவரை ஜெரோம் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதையடுத்து அவரது உடலை காதலியுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி இரண்டு பைகளில் போட்டுக்கொண்டு காரில் தானே அருகிலுள்ள மானோர் என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று ஜெரோம் எரித்தார். இந்த முக்கோணக் காதல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரூரமான கொலை: மரியா ஜெரோமுக்கு என்று தீர்மானித்திருந்தார்களாம். ஆனால், மரியா நீரஜுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள், ஜெரோம் கொச்சியிலிருந்து மரியாவின் வீட்டிற்கு வந்தபோது, மரியாவின் படுக்கையறையில் நீரஜ் இருந்ததைப் பார்த்ததும், கொதித்துப் போன ஜெரோம் அவனைக் குத்திக் கொலைசெய்து விட்டான். இதனை மறைக்க இருவரும் முயன்றுள்ளனர். இருவரும் சேர்ந்து தான் அவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிகிறது. மரியா மாலிற்கு (கடைக்கு)ச் சென்று கத்தி முதலியவற்றை வாங்கி வருகிறாள். கொலை நடந்த பிறகு, ராம் மூன்னூறு துண்டுகளாக வெட்டப்பட்டது.
நீதிபதியின் தீர்ப்பு வியப்பாக இருக்கிறது: இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பு துலக்கி நடிகை மரியாவையும், அவரது காதலர் ஜெரோமையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 30.06.2011 அன்று நீதிபதி எம்.டபிள்யூ. சந்த்வானி தீர்ப்பு வழங்கினார், தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது: “இந்த வழக்கில் நீரஜ் குரோவரை ஜெரோம்தான் கொலை செய்தார்என்பதற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. ஆனால் என்னகாரணத்திற்காக இந்தக் கொலை நடந்தது என்பதை அரசு தரப்பில்தெளிவுபடுத்தவில்லை. ஜெரோம் தனது பெற்றோரின்விருப்பத்துக்கு மாறாக மரியாவை திருமணம் செய்து கொள்ளநிச்சயித்துள்ளார். மரியா மூலமாக அவருக்கு நீரஜ் குரோவரைதெரிந்திருக்கிறது. அவருக்கு அவர்களது உறவில் சந்தேகம்எழுந்திருக்கிறது. எனவே தான் அவர் சம்பவத்தன்று மும்பைக்குவந்திருக்கிறார். இந்த சம்பவம் கண நேரத்தில் நடந்துமுடிந்திருக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ளபெண்ணுடன் இன்னொரு ஆண் இருப்பதை பார்க்கிறபோது எந்தஒரு ஆணும் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். கட்டுப்பாட்டைஇழக்கத்தான் செய்வார். அந்த சூழ்நிலையின் நிமித்தமாகஜெரோமும் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.