New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லூத் என்றொரு ”லூஸ்”


Guru

Status: Offline
Posts: 24603
Date:
லூத் என்றொரு ”லூஸ்”
Permalink  
 


லூத் என்றொரு ”லூஸ்”

http://iraiyillaislam.blogspot.in/2012/01/blog-post.html

 
மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத்(லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,
லூத் (சோதோம்-தற்பொழுதைய ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில்) தூதராக அல்லாஹ்வால் நியமிக்கப்படுகிறார். இவர் அல்லாஹ்வின் மற்றொரு தூதரன இப்ராஹிமின் நெருங்கிய உறவினர்.
லூத் தனது தூதுப்பணியை செய்து கொண்டிருந்த சோதோம் பகுதில் இருந்த ஆண்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். ஓரினச்சேர்க்கையை எதிர்த்து லூத் செய்த பிரச்சாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. அவர்கள் லூத்தின் அறிவுரைகளை தூக்கி எறிந்தனர். இந்நிலையில் அம்மக்களை அழிக்க அல்லஹ் முடிவு செய்து தனது உதவியாளர்களை (வானவர்கள்) அனுப்புகிறான்.
அந்த வானவர்கள்(உதவியாளர்கள்) முதலில் அல்லாஹ்வின் மற்றொரு தூதரான இப்ராஹிமை சந்திக்கின்றனர். தள்ளாத வயதிலும் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டு, லூத்தின் நகரத்தை அழிக்க இருப்பதையும் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போதுஅறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
குர் ஆன் 11:70
இப்ராஹிம் பதறியவாறு, அங்கு லூத் இருப்பதை கூறுகிறார்.
இப்ராஹீமை விட்டு பயம் விலகிநற்செய்தி வந்த போதுலூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
"அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். "அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும்அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.
குர் ஆன் 29:32
"இப்ராஹீமே! இதை நீர் விட்டு விடுவீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)
குர் ஆன் 11:76
"லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்'' என்றனர்
குர் ஆன் 15:59,60
என்று கூறி, அந்த வானவர்கள் சோதோம் நகருக்கு செல்கின்றனர்.
வானவர்கள் (அழகிய) ஆண்கள் உருவில் லூத்தை சந்திக்கின்றனர். தாங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அதிகாலையில் சோதோம் நகரை தலைகீழாக புரட்டியும், சூடான கற்களை வீசியும் அழிக்க இருக்கும் திட்டத்தை கூறி, லூத்தையும் அவரது குடும்பத்தினரையும் மட்டும் நகரைவிட்டு பாதுகாப்பாக வெளியேருமாறு அறிவுறுத்திக் கூறுகின்றனர்.
"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமதுகுடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.
குர் ஆன் 11:81
இதற்குள், லூத்தை சந்திக்க அழகிய ஆண்கள் வந்திருக்கின்றனர் என்ற செய்தி ஊருக்குள் பரவியது. சோதோமின் ஆண்களில் இளைஞர்களும், கிழவர்களும் லூத்தின் இல்லத்திற்குமுன் பெரும் கூட்டமாக கூடிலூத்தை சந்திக்க வந்துள்ள ஆண்களிடம் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்குமாறு லூத்தை வற்புறுத்துகின்றனர். தனது விருந்தினர்களுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று பதறிய லூத், வெளியில் காத்திருக்கும் அக்கூட்டத்தினரிடம், விருந்தினருக்கு பதிலாக தனது (இரு) மகள்களை வழங்க முன்வருகிறார்.
"இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தைஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.
குர் ஆன் 15:68,69
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?'' என்று கேட்டார்.
குர் ஆன் 11:78
"நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார்.
குர் ஆன் 15:71
தனது விருந்தினர்களைப் பாதுகாப்பதே லூத்தின் நேக்கமாக இருந்தாலும், பெரும் இச்சையுடன் இருக்கும் மாபெரும் கூட்டத்தின் தேவையை, லூத்தின் இரண்டு அல்லது மூன்று மகள்கள் தீர்த்துவைக்க முடியுமா? ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் அந்த உறவிற்கு என்ன பொருள்?
                அதாவது லூத் தனது மகள்களை பாலியல் அடிமைகளாக வழங்க முன்வந்திருக்கிறார் என்பதுதான் இதன் நேரடிபொருள் இதை விளங்க எந்த தப்ஸீர் விளக்கவுரையும் தேவையில்லை. முஹம்மதின் காலத்தில் அவருடன் வாழ்ந்தஸாஹாபாக்களுக்கு இது எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்    மனைவியர்கள் மட்டுமல்லாது எண்ணற்ற அடிமைப்பெண்கள் என்ற வைப்பாட்டிகளாக வைத்திருப்பது அவர்களின் கலாச்சாரமாக இருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அவர்களது வாழ்க்கைமுறையாகவே இருந்தது. பெண் என்ற பாலினத்தை  போகப்பொருளாகவே அவர்கள் நினைத்திருந்தனர். உதாரணத்திற்கு, முஹம்மது மெக்கவிலிருந்து தனது (70-80) தோழர்களுடன் குடிபெயர்ந்து மதீனா வந்தவுடன், அவர்களுக்கு பொருள்களையும் தங்களது மனைவியர்களையும் வழங்கி உதவி செய்தனர், என்பதை இன்றும் முஸ்லீம்களும் பெருமையாகக் கூறுவதை நீங்கள் காணலாம். முஹம்மதின் காலத்து மனைவியர்களின் நிலைஅவ்வளவுதான். (அந்த விஷயத்தில் முஹம்மது ஒரு ‘Ultra Modern” பேர்வழிதான் போலும்!)
குர் ஆன் 11:78, 15:71-ன் மடத்தனம் பிற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு விளங்கியவுடன், லூத் தனது மகள்களை திருமணத்தின் மூலம் வழங்கவே முன் வந்தார் என்று விளக்கவுரைகளை எழுதி, அல்லாஹ்வின் உளறலை சரிக்கட்டினர்.
குர் ஆனின் 11:78, 15:71 வசனத்திற்கு என்னிடமுள்ள M.அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th, K.A.நிஜாமுத்தீன் மன்பயீ, R.K.அப்துல் காதிர் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்துள்ள மற்றொரு தர்ஜமா இவ்வாறு கூறுகிறது.
... என்னுடைய சமூகத்தினரே! (இதோ!) இவர்கள் என்னுடைய புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணம் செய்து கொள்ள) மிக்க பரிசுத்தமானவர்கள்...
குர் ஆன் 11:78
"நீங்கள் (திருமணம்) ஏதும் செய்வதாக இருந்தால், இதோ என்னுடைய புதல்வியர்கள் இருக்கின்றனர்'' என்று அவர் கூறினார்கள்.
குர் ஆன் 15:71
லூத் திருமணம் செய்து தருவதாகவே கூறினார் என்பதை வாதத்திற்காக ஏற்பதாகக் கொண்டாலும், ஒரு பெரும் கூட்டத்திற்கு ஓரிரு பெண்களை எப்படி திருமணம் செய்து வைக்கமுடியும்? குர் ஆன் கூறும் ஒழுக்கநெறி உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அந்த கூட்டத்தினர் தங்களது தேவையைக் குறித்து தெளிவாகவே இருந்தனர்.
"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
குர் ஆன் 11:79
மேலும், வானவர்கள் தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு சோதோமை அழிக்க இருக்கிறோம் என்பதையும் லூத்திடம் தெளிவாகவே அறிவித்துள்ளனர். ஊரையே அழிக்க வந்தவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? இங்கு மடையர் அல்லாஹ்வா? இல்லை லூத்தா?
பின்னர் அல்லாஹ்வின் திட்டப்படி சோதோம் அழிக்கப்பட்டது.
 நமது கட்டளை வந்த போதுசுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்துஅதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.
குர் ஆன் 11:82
சோதோமிலிருந்து தப்பிச்சென்ற லூத் மற்றும் அவரது குடும்பத்தினரான (இரு) மகள்களைத் தவிர அந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் உயிரோடு சமாதியாயினர்.
தனக்குப் பிடிக்காத ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் லூத் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர சோதோமை அழித்ததாக கூறும் அல்லாஹ், ஒன்றை கவனிக்க மறந்துவிட்டான். சோதோம் பகுதியில் ஆண்கள்மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கென்று பெண்களையும், குழந்தைகளையும் உறுப்பினர்களாக உள்ளடக்கிய குடும்பங்களையும் அழித்ததாகவே இங்கு பொருள் விளங்குகிறது.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளும், பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா? கொடுமையாகத் தண்டிக்குமளவிற்கு இவர்கள் என்ன தவறு செய்தனர்? இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
இனப்படுகொலை!
இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ முஹம்மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. அவர் தனது இறுதி பத்து ஆண்டுகளில் இதைத்தான் மாற்று மத்தினர் மீது நிகழ்த்திக் காட்டினார்.
சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?
இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...
onlinepj.com
ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?
சரி... தப்பிச்சென்ற லூசு (மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.
லோத்துவின் கதை பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து...
19:23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான்.
19:24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து,
19:25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
...
19:30 சோர்வாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர்.
19:31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை.
luth+1.jpg19:32 எனவே நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்கு சந்ததி உண்டாக்க நம் தந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள்.

   
19;33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவுகொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
luth+2.jpg19:34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவுகொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவு கொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும் என்றாள்.
19:35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
19:36 லோத்தின் இருமகள்களும் கர்ப்ப முற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
அந்தப் பிள்ளைகளுக்கு லோத்து தந்தையா? தாத்தாவா? பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
...
இதுதான் உலகின் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் வாயிலாக அடியார்களுக்கு போதிக்கும் மோட்சத்திற்குரிய வாழ்க்கைநெறி!
தஜ்ஜால்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வாளின் முனையில் இசுலாம்

 
raiyillaislam.blogspot.in/2012/02/blog-post.html?showComment=1329237098644#comment-c3485593846525617533
வாளின் முனையில் இசுலாம்
வேதங்கள் எதுவானாலும் எங்களைப் பொருத்தவரை மதிப்பிற்குறியவை அல்ல. அவைகளின் சொற்கள் பயங்கரவாதமும் வன்முறையும் நிரம்பியவை. எம்மை பொருத்தவரை அவைகள் வெறும் காகிதக் குப்பைகளே. அவைகளை எம்போன்றவர்கள் விமற்சிக்கும் போது தங்கள் மனம் புண்படுவதாகக் கூறி ஒவ்வொரு மதத்தினரும் வன்முறையில் இறங்குகின்றனர்.  இதற்கு இவர்கள் அருகதையுள்ளவர்களா என்றால் ஒருபோதும் இல்லை. சமீபத்தில் இசுலாமியர்களால்  தாக்கப்பட்ட துராப்ஷா என்பவர் குறித்தும்,மதம் எவ்வாறு சுயநலத்திற்காக பயன்படுகிறது என்பதையும், மதவியாபாரிகள் எப்படியெல்லாம் தங்களது விசுவாசிகளின் அறிவை மழுங்கச் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இதை எழுதியுள்ளோம்.

       செங்கொடியின் என்றொருவரின் பின்னுட்டதை இறையில்லா இஸ்லாம் என்ற எமது வலை தளத்தில் பார்த்த பிறகுதான் கடையநல்லூரில் அரங்கேறியுள்ள கொடுமை எங்களின் கவனத்திற்கு வந்தது.

கடையநல்லூர்.orgஎன்ற வலைத்தளத்தில்..
       கடையநல்லூர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மக்கட்டி துராப்ஷா. இவர் இஸ்லாத்திற்கு எதிரானா கருத்துக்களை கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக தனது இணையதளதில்  லூத் என்றால் லூசு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு அதில் நபிமார்கள் பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டது இஸ்லாமியர்களின் மிகுந்த கோபத்திற்கு ஆளானார்.

                “லூத் என்றொரு லூஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையில் இஸ்லாத்தை பற்றி தவறான புரிதலுடன் இஸ்லாத்தையும் மற்றும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் படி எழுதி உள்ளார்.

       அல்லாஹ்வின் பெயரால் அருக்கபடாத மாமிச உணவான  இவருடைய கடையில் விற்கப்படும் கோழிக் கறியை வாங்க கூடாது என்று அறிவுறுத்தபட்டதுஎன்று செந்தோழன்ஷா என்பவர் மீது ஒரு குற்றச்சாட்டை கடையநல்லூரின் இஸ்லாமிய மேதாவிகள் சுமத்துகின்றனர். செந்தோழன்ஷா, ஹலால் முறைப்படி கோழிகளை அறுப்பதில்லை என்று புகார்கள் வருவதாகவும், இக்கட்டுரையின் பின்னணியில் யூதர்களின் சதி இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும தமிழக அரசியல் என்ற பத்திரிக்கை செய்தியில் ஸைஃபுல்லா ஹாஜா என்பவர் கூறுகிறார்.

                 “லூத் என்றொரு லூஸ்  கட்டுரையை எழுதியது கடையநல்லூருக்கு வெகு தொலைவிலிருக்கும் தஜ்ஜாலாகிய நான்தான்.இறையில்லா இஸ்லாம் தளத்தை நடத்துவதும், இந்த மேதாவிகள் கூறுவதை போன்று  துராப்ஷா என்பவர் அல்ல. ”இறையில்லா இஸ்லாம்” மதநீக்க சிந்தனையாளர்களின் கூட்டுமுயற்சி. ”தஜ்ஜால்” என்ற பெயருடன் இரண்டுஆண்டுகளாக இஸ்லாமை விமர்சித்து வருவதை ஏறத்தாழ அனைத்து இஸ்லாமியஇணையதள நிர்வாகிகளும் அறிவார்கள். ஆனால் எழுதாத ஒரு கட்டுரைக்காகசெந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கின்றனர்.

       ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக கோழி இறைச்சிக்கடையை நடத்தி வருகின்ற செந்தோழன் ஷா, ஹலால் முறைப்படி கோழிகளைக் கொல்வதில்லை என்று ஸைஃபுல்லாவிடம் புகார் கூறியது யார்? அவர் குறிப்பிடும் புகார் உண்மையென்றால், முஸ்லீம் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே விலகி, ஹலால் முறைப்படி கொல்லப்படும் இடங்களுக்கு சென்று விடுவார்கள். மாறாக கடையநல்லூரில் வேறு கோழி இறைச்சிக்கடைகளே இல்லாத்தைபோல பள்ளிவாசலில் வந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். (உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?)

       யூதர்களை சந்தேகிப்பதாகக் கூறுபவர்கள் செந்தோழன் ஷா மீது ஏன் பாயவேண்டும்? அட அப்பரஸண்டி ஆலீமே..! என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? ஏன் யூதர்களோடு நிறுத்திவிட்டீர்கள்? வழக்கம்போல, இறையில்லா இஸ்லாம் தளத்தை அமெரிக்காவின் சி.ஐ.ஏ தான் நடத்துகிறது, யூத ரப்பானிகளின் உதவிகளோடு பாரக் ஒபாமாதான் தஜ்ஜால் என்ற புனைப்பெயரில் எழுதுகிறார் என்று கூறவேண்டியதுதானே?

       கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரோ தங்களது மற்றொரு தளத்தில் ஸைஃபுல்லா ஹாஜாவின் நிலைக்கும் தங்களது முந்தைய நிலைக்கும் மாறுபடுகின்றனர். அவர்கள் நல்லூர்முழக்கம், செங்கொடிச்சிறகுகள், இறையில்லா இஸ்லாம் ஆகிய தளங்களை நடத்துவது தோழர் செங்கொடிதான் என்றுகூறி அவரை மதவிலக்கம் செய்து ஃபத்வாவும் வழங்கி விட்டனர்.
       இறையில்லா இஸ்லாமின்  பின்னுட்ட்த்தில் //உமர்ந்தரகன் கலீல் என்பவனால் எழுதி வேறொரு பெயர் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைகள் தேவையில்லாமல் ஒரு அப்பாவியை பகடைக்காயாக பயன் படுத்தி அவன் வாழ்க்கையை சீரழித்து விட்டாயே.// என்று நல்லூர்முரசு என்பவர் முதலைகண்ணீர் வடிக்கிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. பதில் இல்லாத மதவெறியர்கள் எவர் மீதாவது பழிசுமத்தி தமது வெறியை தணித்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

       நிகழ்காலத்தில் கண்ணெதிரே நிகழ்ந்துள்ள ஒரு நிகழ்வை சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாதவர்கள், ஏதோ ஒரு காலத்தில் எங்கு நிகழ்ந்தது என்ற சிறு குறிப்புகூட இல்லாத குர்ஆனின் கதையாடல் தொடர்பான ஒரு விமர்சனத்திற்கு எதிராகத் துள்ளி குதித்து தமது புரிதலைபற்றி பேசுவது வேடிக்கையானது.
       கட்டுரை குர்ஆனைப் பற்றி சரியான புரிதலிலாமல் எழுதப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் முதலில் சரியான புரிதலை முன்வைத்திருக்க வேண்டும். எதையும் சரிவர விசாரிக்காமல் அவசரகோலத்தில் தீர்ப்பைகூற வேண்டிய அவசியமென்ன?//ஏறக்குறைய ஓராண்டாக அந்த தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன எனும் போது இப்போது மட்டுமென்ன இத்தனை ஆவேசம்?// என்று கடையநல்லூர்.org-ன் பின்னூட்டம் கேட்கிறது. ஆனால் அதற்கு அவர்களிடம் பதிலில்லை.

       மஸ்ஜித் முபாரக்கின்  உரிமையாளர் சைஃபுல்லா ஹாஜாவின் நிலஅபகரிப்பு, ஆட்டோ ஸ்டேண்ட் விவகாரம், துபாய்யில் வசூலித்து ஆட்டையை போட்ட மோசடிகள் ஆகியவைகளை செந்தோழன்ஷா எதிர்த்த நிகழ்வுகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் ஃபேஸ்புக்கில் நண்பர் ஃபெரோஸ் பாபு.
      மேலும் சைஃபுல்லா ஹாஜாவின் மீது ஆமீனா என்றொரு பெண் தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. இவ்வளவு ஏன் எங்களது ஊரிலும், சைஃபுல்லா ஹாஜா தனது பாலியல் வேலைத் தொடர, உதைகளை ஹதியாவாக பெற்றார். இவரது தில்லுமுல்லுகளையும் வண்டவாளங்களையும் அல்லாஹ்வின் அதிகாரபூர்வ இணையதளமானhttp://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/ -ல் “ஸைஃபுல்லா ஹாஜாவின் திருகுதாளங்கள் என்ற பெயரில் பல பாகங்களாக வெளிவந்துள்ளது. பதிலுக்கு, சைஃபுல்லா ஹாஜா தனக்கு நெருக்கமானவர்களிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஆத்தின் தலைமை பேச்சாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இத்தகைய நபர் தான் அம்பலப்பட்டுப்போன வெறியில் எவர் மீதாவது பாய்ந்து தமது வெறியை தணித்துக்கொள்ள அப்பாவியான செந்தொழன்ஷாவின் மீது அபாண்டமாக பழிசுமத்திதனது தாடியையும் குல்லாவையும் காப்பாற்ற முயற்சிக்கிறார். பகல் வேஷம் என்றாவது ஒருநாள் அம்பலத்துக்கு வராமால் போகாது. அம்பலப்பட்டுபோன இவர் விழிபிதுக்கி பித்தம் தலைக்கேற வெறியுடன் அலைகிறார். கடையநல்லூர் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

       நிகழ்காலத்தில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு நிகழ்வை சீர்தூக்கிப்பார்க்கத் தெரியாதவர்கள் புரிதலைப்பற்றி பேசுவது வெட்கக்கேடு! கடையநல்லூர் மஸ்ஜித் முபாரகின் கேணத்தனமான முடிவிற்கு இஸ்லாத்தை பற்றியும் நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை”  என்று இஸ்லாமின் கோரமுகமும் வெளிப்படுகிறது. இதற்கு very good thanks for masjid mubarack”, “very good judgemend” என்ற மதவெறி பின்னுட்டங்கள் வேறு!
உங்களின் இந்த கொலைவெறிதான்  முஹம்மதின் மிக முக்கியமான போதனையாகும் என்பதை குர்ஆனிலுள்ள பின்வரும் வசனம் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வுடனும் அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது கொல்லப்படுதல் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல்…
(குர் ஆன் 5:33)
                இன்று இக்கட்டுரை தொடர்பான விஷயத்தில் செந்தோழன்ஷா குற்றமற்றவர் என்பதை கடையநல்லூர்வாசிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா போன்றவர்களின் தூண்டுதலால், செந்தோழன்ஷா அடைந்த மன, உடல் வேதனைகளுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் கடையநல்லூர் என்ன செய்யப்போகிறது? இல்லை மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கில் கட்டுரையை நகலெடுத்து வீடுவீடாக விநியோகித்த மூடர்கள்தான் என்ன செய்யப்போகிறார்கள்? மதத்தின் பெயரால் யார் எதைக் கூறினாலும் கண்மூடித்தனமாக பின்பற்றுவது இஸ்லாமின் தனிச்சிறப்பு என்பதை உணர முடிகின்றது.
      இஸ்லாமியர்களின் மதஉணர்வு புண்பட்டுவிட்டது என்று கூச்சலிடுபவர்கள் முதலில் அழிக்கவேண்டியது தங்களது புனித நூல்களைத்தான். லக்கும் தீனுக்கும் வலியதீன் என்று மதசகிப்புத்தன்மையை இஸ்லாம் போதிப்பதாக முன்னாள் முஸ்லீம்களான எங்களிடமே முழம்போடுகிறார்கள்.
புகாரி ஹதீஸ் 4357
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
... வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லைஎன்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொன்னேன். பிறகு நான் அதை (கோவில்) உடைத்து விட்டேன். அந்த மனிதரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று சாட்சியம் கூறினார். ...
புகாரி ஹதீஸ் 4356
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம்துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களாஎன்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது யமன் நாட்டு கஅபாஎன்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். அஹ்மஸ்குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள்தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்துஇறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குஎன்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகுஅல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர்தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், (இறைவா!) அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக! என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+1.jpg
ஆப்கானிலுள்ள பாமியன்
என்ற இடத்திலுள்ள புத்தர் சிலை
வெடிவைத்து தகர்பதற்கு முன்
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+2.jpg
வெடிவைத்து தகர்த்தப்
பிறகு


மதஉணர்வு புண்பட்டுவிட்டதாம், நல்ல வேடிக்கை! ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தாலிபான்கள், புராதன சின்னங்களாக இருந்த பாமியன் புத்தசிலைகளை குண்டுகளை வைத்து தகர்த்தபொழுது பவுத்தர்களின் மதஉணர்வு புண்படவில்லையா? 
buddha.jpg
ஆப்கானிலுள்ள மற்றொரு இடத்தில் புத்தர் சிலை
வெடிவைத்து தகர்கப்பட்டது
லக்கும் தீனுக்கும் வலியதீன்” (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்) என்று இஸ்லாம் மதசகிப்புத்தன்மையை போதிப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் இக்குர்ஆன் வசனங்களின் பின்னணியை அறியாமல் பிதற்றுகின்றனர். இஸ்லாம் மதசகிப்புத்தன்மையை போதிப்பதாக உளறுபவர்கள், முஹம்மதின்  மதகிப்புத்தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டும். கீழே அதனை படியுங்கள்.
புகாரி ஹதீஸ் 4287
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்கநபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள்சத்தியம் வந்து விட்டதுஅசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்து விட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிறக்காது என்று கூறிக் கொண்டேதம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.
முகம்மது படைதிரட்டி மக்காநகரை வென்றபோது ஹராம் ஷெரிபில் இருந்த 360 சிலைகளையும் அடித்து நொருக்கினார்கள். குறைசிகளின் தலைமை தெய்வமான ஹுபல் என்ற சிலையை பெயர்த்து ஹராம் ஷெரிபின் நுழைவாயிலின் முதற் படிக்கட்டாக {காலில் மிதிபட வேண்டும் என்பதற்காகா) வைத்துள்ளார்கலாம்.அதன்பிறகு தமது படையணியை அருகிலுள்ள கிராமங்களுக்கும் அனுப்பி அணைத்து சிலைகளையும் அடித்து நொருக்கியுள்ளார்கள்

 ( ஆதாரம் குலாம் ரசுல் என்பவர் எழுதிய ‘முகம்மதுநபியின் சரிதை என்ற நூல். பக்க எண் 327 வெளியீடு: ஹாஜியார் புக் டிப்போ.)

                மக்காவிற்கு அருகிலுள்ள தாயிப் நகரத்து ஸகிஃப் என்ற குலத்தார் இவர்களின் நெருக்கடிக்கு பயத்து இசுலாத்தை தழுவினாலும் தாங்கள் அல்லாவை தொழாதிருக்கவும், தங்கள் தெய்வமான லாத் சிலையை மட்டுமாவது மூன்றாண்டுகளுக்கு வைத்திருக்க அனுமதிக்கவேண்டும் என்றும் குறைந்த பட்சம் தங்கள் தெய்வங்களை தங்கள் கைகளால் அழிக்க உத்திரவிடக்கூடாதும் என்று கெஞ்சியுள்ளனர். கோரிக்கைகள் மறுக்கப்பட்டே இசுலாத்தை ஏற்றுள்ளாகள்.இதிலிருந்து இசுலாத்தை பிற மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெள்ளத தெளிவாக விளங்குகிறது. ஆனால் இவர்களோ உங்கள் மாரக்கம் உங்களுக்கு என்று நாக்கில் தேனைத்தடவி இசுலாத்தை பரப்பியதாக கதைக்கிறார்கள்.
       முஹம்மது மதசகிப்புத்தன்மையை போதித்தது உண்மையெனில் சிலைகளை அடிக்கவேண்டிய அவசியமென்ன?
       அப்பாவி மக்களின் மலிவான மதஉணர்வுகளைத் தூண்டிவிட்டு, கட்டுரைகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூறாமல் தப்பிக்க நினைக்கின்றனர்.மதசகிப்புத் தன்மையைப்பற்றியும் மனம் புண்படுவது பற்றியும் பேச இஸ்லாமியர்கள் எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள்!
தஜ்ஜால்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பாமரனின் விமர்சனத்திலும் மோசடி

 


     லூத் என்றொரு"லூஸ்" கட்டுரையால் முஸ்லீம்கள் என்மீது ஏகமனக்கடுப்பில்இருக்கின்றனர். மீண்டும் லூத்தின் விஷயத்தை உடனடியாகக்  கிளற வேண்டாம்என்பதால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமல்  இருந்தேன்.  ஆனால்,
பின்னுட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பவன்”  என்பவர் கூறுகிறார்...

//தஜ்ஜால் அவர்களுக்கு ரொம்பவும் பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார்பாமரன். இதன்மூலம் 'இஸ்லாத்தில் பதில் இல்லைஎன்ற பொய் பிரச்சாரம்இங்கேயும் சாகிறது.// என்று மெய்சிலிர்த்து கூறுகிறார். மேலும் ##பக்கத்து ஊரான இப்ராஹீம் நபி ஊருக்குத்தானே சென்று இருப்பார்கள்அங்கே சென்று தன்மகள்களை அந்த ஊரு இளைஞர்களுக்கு திருமணம் செய்து தந்திருக்கலாம். தானும்அங்கே வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம்.## என்று தனது யூகங்களை, கம்யுனிசமும் தெரியாமல். இஸ்லாமும் தெரியாமல், பாட்டி வடை சுட்ட கதையைப் போல கூறியிருக்கிறார்.

எனவே பாமரன் அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம், இந்த “பாட்டிக்கதை சொல்லிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியுமென்று(?) நினைக்கிறேன். நீளம் சற்று அதிகமானதால் தனிப்பதிவாக வெளியாகிறது.

பாமரன் என்பவரின் பின்னோட்டம்  ///பைபிளின் லூத் நபியின் கடைசி காட்சியை (மகள்களுடனான உறவு) காட்டியவர்ஆரம்பத்தை (வசதிக்காக) விட்டுவிட்டார்போலும்! அவற்றைப்பாருங்கள்:
Genesis 18:22-33
English Standard Version (ESV)
கடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.
கடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.

அதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.

‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால் என்ன செய்வீர் ? ‘

‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’

‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ ?’
‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’

ஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘

‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’

‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் ?’

‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’
ஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ ?’ என்று கேட்க.

‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.
ஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்..
இதிலிருந்து அந்த ஊரில் பத்து நல்லவர்கள் கூட தேறமாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?///

(இவரின் பின்னோட்டம் முழுவதையும் லூத் ஒரு லூசு தலைப்பின் கீழ் படிக்கவும்.
ஆதியாகமம் 18:20
மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் பாவிகள் என்று பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.
ஆக அதுவரை உங்கள் கடவுளுக்கும் சோதோம் மற்றும் கொமோராவின் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. பலமுறை கேள்விப்பட்டாராம்! போய்ப் பார்ப்பாராம்! ஆரம்பத்தை வசதிக்காக விட்டது நானல்ல!
ஆதியாகமம் 18:23-33 பாமரன் மேற்கோள் காட்டியவற்றைப் பார்ப்போம்.
சோதோமையும், கொமோராவையும் கர்த்தர்(அல்லாஹ்) அழிக்க இருந்ததை ஆப்ரஹாம் தடுக்க நினைத்து அல்லாஹ்வுடன்(கர்த்தர்) பேரம் பேசுகிறார். இதை குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.
இப்ராஹீமை விட்டு பயம் விலகிநற்செய்தி வந்த போதுலூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
முடிவில் பத்து நல்லவர்கள் இருந்தால்கூட அழிக்கக்கூடாது என்பதாக பேரம் முடிகிறது. அதுவரை அல்லாஹ்விற்கு(கர்த்தர்) அங்கு எத்தனை நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதுகூடத் தெரியவில்லை. அற்பமனித இனத்திற்கு இருக்கும் இரக்க உணர்வுகூட கடவுளுக்கு இல்லை என்பதுதான் மேற்கண்ட வசனங்களின் மறைபொருள்.
///பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்ததுபெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!/// என்று கூறும் பாமரன், தனது பதிலில் மொழிபெயர்ப்பில் பிழையெனும்புராதன  தொழில்நுட்பத்தை, வாதத்தை முன்வைக்கிறார்.  .//[சரியான மொழிபெயர்ப்பை கீழே காண்க : தேவை” என்ற சொல்லுக்கு பதில் பாத்தியதைஎன இருப்பதே சரி/// என்று பாமரன் அவர்கள் கூறிவிட்டதால், பாமரனுக்கு அவரது மொழிபெயர்ப்பிலிருந்தே பதில் கூறுவதுதான் சரி. பாத்தியதை எளிமையாகக் கூறினால் “உரிமை”.
அதாவது, சோதோமின் ஆண்கள் லூத்தின் வீட்டின் முன் பெருந்திரளாக குவிந்தபொழுது, அவர்களிடம் தனது மகள்களை வழங்க முன்வருகிறார். ,

அப்பொழுது அந்த ஆண்கள்.... ///11:79. (அதற்கு) அவர்கள் உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்;../// என்றனர். லூத், தானே முன்வந்து (இதுவரை எந்த ஆணையும் அறியாத) தனது மகள்களை வழங்கிய பிறகும், அவர்கள் உரிமையைப்பற்றி ஏன் கூறவேண்டும்? இங்கு உரிமையென்பது திருமண ஒப்பந்தத்தையே குறிக்கிறது.
ஆதியாகமம் 19:12-14
12. அந்த இருவரும் லோத்திடம், உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் உடனே இந்நகரத்தை விட்டு விலகச் சொல்லவேண்டும்.
13. நாங்கள் இந்நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றனர்.
14. ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மண்ந்து கொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேருங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்என்றான். அவர்ளோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணினார்கள்.
       லூத்தின் வீட்டிற்கு முன் குழுமிய ஆண்கள் உரிமையைப் பற்றி பேசியதன் காரணம் லூத்தின் மகள்கள் வேறு ஆண்களுடன் திருமணத்திகாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களைப் புணர்வது முறையல்ல என்பதுதான் முதன்மைப்பொருள். வேறு சிலருடன் திமணத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, மற்ற பலருக்கு தாரை வார்ப்பதுதான் நபித்துவமோ? இங்கு முதலில் ஒழுக்கக்கேட்டை நிகழ்த்துவது யார்? //தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி,அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும்ஐயமுண்டோ?// ஐயமேதுமில்லை பாமரன் அவர்களே!

       ஆனால், அவர்கள் தேடி வந்தது ஆணின் உடலையே எனும்பொழுது லூத் தன்னையல்லவா வழங்கியிருக்க வேண்டும்? அறிவுடைய எந்த ஒரு தந்தையும் தனது மகள்களை ஓநாய்களுக்கு விருந்துபடைக்க முன்வரமாட்டான். லூத்தின் செயலுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் பாமரன் அவர்களே! இதைப்போன்ற சூழ்நிலையில் உங்களது சகோதரியையோ மகளையோ அல்லது பேத்தியையோ திரும்பத் திரும்ப கற்பழிக்க வழங்கமாட்டீர்கள் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. அடிமைப்பெண்களுடன் திருமணபந்தமின்றி கூடுவதை குர்ஆன் பழிப்பிற்குரிய செயல் அல்ல என்று கூறி ஊக்குவித்தாலும் அதை முஸ்லீம்கள் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. முஸ்லீம்கள் மேற்கொள்ளும் இந்த அறநெறிகள் எங்கிருந்து வந்தது?

///லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காகஎதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களேஇரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே? // என்ற பாமரன் அவர்களின் வாதத்தில் எந்த பொருளுமில்லை! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கான ஒப்பந்தத்தில் இருக்கும் பொழுது, ஓநாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் மறுபடியும் வரன் தேடிக் கொண்டிருந்தார் என்பது மடத்தனமாக இல்லையா?

//பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்ததுபெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!///
       பதினான்கு நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரபி அறிஞர்கள்கண்களில்படாத பேருண்மையே பாமரன் அவர்களின் இந்த பதில்! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தனர் எனும் பொழுது சோதோமில் குடும்ப உறவுகள் இருந்தது என்பது புலனாகிறது. //29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா// என்று நீங்கள் (பாமரன்) மேற்கோள்காட்டிய குர்ஆன் வசனமே, சோதோமின் பெண்களும் ஓரினச்சேர்கையில் இருந்தனர் என்ற உங்களது வாதத்தை மறுக்கிறது.

//பாமரன் பதில்: நாம்தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் இன்ஜீலின் (பைபிள்) முதல் வெளிப்பாட்டை நம்புபவர்கள்ஆயினும் பிற்காலத்திய திரிபுகளை அல்-குரான் மூலமாக அறிந்தவர்கள்.// இங்கு எடுத்தளப்படுவது இன்ஜீல் அல்ல என்பதை பாமரன் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வழக்கம் போல லூத்தின் பிற்பகுதிக்கதையை அல்லது தாங்களுக்கு உடன்பாடில்லாத பழைய ஏற்பாட்டின் பகுதிகளை, முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள். இவர்களது மறுப்பிற்கு  குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமுமில்லை. குர்ஆனின் ஒரு மறுப்பை (ஈசா நபிகொல்லப்பட்டார் என பைபிளும் அப்படியில்லையென அல்குரானும் கூறுகின்றன) பாமரன் அவர்களே மேற்கோள்காட்டியிருப்பதை உதாரணமாகக் கொண்டு லூத்தின் பிற்பகுதி கதைக்கு உரிய குரான் ஆதாரத்தை முன்வைக்குமாறு பாமரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக அவர் கூறிய குற்றச்சாட்டு//அவர் தன் பகுத்தறிவை யாருக்காகவோ எதற்கோ விலைபேசிவிட்டார்.// ஆம் இது உண்மைதான் நான் எனது பகுத்தறிவைEnlightenment-டிற்கு விலைபேசி விற்றுவிட்டேன்!

நண்பர் பாமரன் அவர்களே...! லூத் என்றொரு லூஸ்”  இடுகையின் மையத்தில்சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?” என்றொரு கேள்வியையும், அதற்கான பதிலையும் வைத்திருந்தேன் joslflwmfhyqபடித்தீர்களா? சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்? மீண்டும் அதனை கீழே தருகிறேன். படியுங்கள்.

##இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...

       ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?##
 லூத் லூஸானது அங்குதான்!
தஜ்ஜால்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

naren says:

@ஜீவன்

//இதை பற்றி சற்று விரிவாக எழுத முடியுமா?//
விரிவாக்கத்தை மூமின்கள் பாசமாக அன்பாக சொல்லும் தளத்திலிருந்து….http://alagankulam.in/Islam/அபு-பக்கர்-சித்தீக்-ரலி-html
=======================================================

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டுää ஜகாத் என்ற ஏழை வரியை இறைவன் அனைத்து வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் மீது கடமையாக்கி வைத்த பின்ää அதனை வசூலிப்பதற்காக நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுää அதன் நிர்வாகிகள் நாடு முழுவதும் ஜகாத் பணத்தை வசூல் செய்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே எமனைப் பல மாவட்டங்களாகப் பிரித்துää ஒவ்வொன்றிற்கும் ஒரு பொறுப்புதாரியும் நியமிக்கப்பட்டார். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பிரச்சாரகராக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில் தான் சன்ஆ வில் அஸ்வத் அன்ஸி என்பவன் தானும் இறைத்தூதர் தான் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இவனது ஆரம்ப காலப் பிரச்சாரம் வெகு வேகமான நடைபெற்றது. பனீ அஸத் மற்றும் துலைஹா ஆகிய குலத்தவர்கள் தங்களது குலத்தைச் சேர்ந்த ஒருவனைää தங்களுக்குரிய இறைத்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாவதாக முஸைலமா என்ற பொய்த்தூதன் தோன்றினான். அஸ்வத் அன்ஸி யின் வளர்ச்சி இவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. இவன் தன்னைப் பொய்த்தூதனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடல்லாமல்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மடலையும் அனுப்பி வைத்தான். அதில் :

இறைவனின் தூதனான முஸைலமாää இறைவனின் தூதரான முஹம்மதிற்கு எழுதும் மடல். உங்களது இறைத்தூதுத்துவத்தில் ஒரு பங்காளியாக நான் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். இந்த உலகின் பாதி நம்மைச் சேர்ந்ததுää மீதிப் பங்கு குறைஷிகளுக்கு உரியது. ஆனால் இதில் அதிக உரித்துடையவர்கள் குறைஷிகளே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தான்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் ஒன்றை முஸைலாமா என்ற பொய்யனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலமாவுக்கு..ää இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததன் பின்ää நேர்வழியைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக..! சந்தேகமில்லாமல்ää இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. இதில் அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து தன்னுடைய அடிமைகளுக்கு வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது.

இந்தப் பொய்யனுக்கு அறவுரைகள் மூலமும்ää படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இதனால் எந்தப் பயனும் விளயைவில்லை. முஸைலமாவோ தனது படைகளைத் திரட்டிக் கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தவும்ää முஸ்லிம்களின் மீது போர் தொடுக்கவும் புறப்பட்டு விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும்ää முஸைலமாவினுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருமாறு தன்னுடைய பிரதிநிதிகளுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அஸ்வத் அன்ஸி என்பவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டு விட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்புää இந்தப் பொய்த்தூதர்களின் பிரச்சார வேகம் கடுமையாகியது. எமன் முழுவதும் கலவரச் சூழல் பரவியது. எமனில் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகள் தூக்கி எறியப்பட்டுää அந்த இடத்திற்கு கலவரக்காரர்கள் வந்தமர்ந்தார்கள். இன்னும் மதீனாவையும் இந்தப் பிரச்னை விட்டு வைக்கவில்லை. மதீனாவில் வாழ்ந்த குறைஷிகள் மற்றும் பனூ தக்கீஃப் குலத்தவர்களைத் தவிர மற்ற குலத்தவர்கள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியினரோ இந்த பொய்த் தூதர்களால் கவரப்பட்டுää இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் கூடிய சூழ்நிலையில் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட உலக ஆசையால் வார்க்கப்பட்ட மனிதர்கள் பலர்ää தங்களை இறைவனது தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலத்தவர்களிலிருந்து தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களுக்கு வலுச் சேர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களை ஆதரித்தும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அமிர் பின் துஃபைல் என்பவர்ää பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்தவர் வெளிப்படையாகவே இவ்வாறு கூற ஆரம்பித்தார். நான் அரேபியா முழுவதற்கும் தலைவராக ஆக விரும்புகின்றேன். எனவேää குறைஷிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று அறிவித்தார்.

பனூ அஸத் கோத்திரத்தாரின் நண்பர்களான கதஃபான் கோத்திரத்தார்கள்ää நாங்கள் ஏன் குறைஷிக் குலத்தில் உதித்த ஒருவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்ää எங்களது நண்பர்கள் இருக்க நாங்கள் ஏன் குறைஷிக் குலத்து இறைத்தூதருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று கூற ஆரம்பித்தார்கள். இன்னும் குறைஷிகளின் இறைத்தூதர் இறந்து விட்டார்ää பனீ அஸத் ன் இறைத்தூதர் உயிருடன் உள்ளார் என்று இறுமாப்புடன் கூறினார்கள்.

பல நூற்றாண்டுகளாக எமன் தேசத்தை அரசாண்டு வந்த ஹிமையரைட்ஸ் குலத்தவர்களின் இறுதி மன்னரான நுஃமான் பின் முன்திர் ன் பேரனான அப்துல் கைஸ் என்பவனும் தன்னை இறைத்தூதராகப் பிகடனப்படுத்திக் கொண்டான்.

ஆண்கள் தான் என்றில்லைää பெண்கள் கூட தாங்களும் இறைத்தூதர்கள் தான் எனப் பிரகடனப்படுத்தும் செயல்களும் நடைபெற்றன. சஜா என்ற எமன் தேசத்துப் பெண்மணி தன்னைப் பொய்த்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொள்ளää கிறிஸ்தவக் குலமான பனூ தக்லீப் கோத்திரத்தார்கள்ää இந்த பெண் பொய்த்தூதரை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பொய்த்தூதர்கள் தங்களுக்குள்ளேää ஒருவர் மற்றவரது தூதுத்துவத்தை பொய் என பிரஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள்.

துலைஹா என்பவன் தொழுகையிலிருந்து சஜ்தா வை நீக்கி விட்டான்ää மதுபானம் அருந்துவதும்ää விபச்சாரமும் தடை செய்யப்பட்டதல்ல என்று முஸைலமா அறிவித்ததோடுää பெண் தூதராக அறிவித்துக் கொண்ட சஜா வைத் திருமணம் செய்து கொண்டதோடுää ஐந்து வேளைத் தொழுகையை மூன்று வேளையாக மாற்றினான். நீக்கப்பட்ட காலை மற்றும் இரவுத் தொழுகையானதுää சஜாவின் திருமணக் கொடைகளாகவும் என்றும் அறிவித்தான். இவ்வாறாக விதவிதமான அறிவிப்புகள் வெளிவரத் துவங்கின.

இதில் குறிப்பிட்டத்தக்கதும் நாம் கவனிக்கத் தக்கதும் என்னவென்றால்ää யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்களோää அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்த அதே வேளையில்ää சமீக காலத்தில் இஸ்லாத்தை; தழுவியோர்கள் தான் இவ்வாறான பொய்ப்பிரச்சாரத்திற்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால்ää மிக எளிதாக அவர்களால் குழப்பத்தை உண்டு பண்ண முடிந்தது. துலைஹா என்பவன் மட்டும்ää அவனது பிரச்சாரத்தின் காரணமாக மட்டும் பனூ தாய் மற்றும் அஸத் குலத்தவர்களையே ஒன்று திரட்டி வைத்திருந்தான்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலீபா பொறுப்பேற்றுக் கொண்டவுடன்ää இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துää இதனை முறியடிக்க திட்டம் வகுத்தார்கள்.

=======================================================
contd…



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

naren says:

contn..
=======================================================

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார்கள். அலீ (ரலி)ää சுபைர் (ரலி)ää தல்ஹா (ரலி)ää மற்றம் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோர்களை நகரின் முக்கியப் பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை வழங்கிää அவர்களின் கண்காணிப்பில் விட்டிருந்தார்கள். இப்பொழுதுää தனது மக்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் நகரின் பாதுகாப்பு மற்றும் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்துää மதீனாவைப் பாதுகாப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கொண்டதோடுää எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்க ஆரம்பிக்கலாம் எனவேää முழுத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில்ää அபுபக்கர் (ரலி) அவர்களின் சமாதான ஒப்பந்தத்தைää இந்த எதிரிகள் உதாசினம் செய்து விட்டதும்ää இந்த பாதுகாப்பு நடவடிக்கையை துதரிப்படுத்த வேண்டியதும் அவசியமாயிற்று. சமாதானத் தூதுக் கமிட்டி திரும்பி வந்ததன் பின் மூன்று நாட்கள் கழிந்திருந்த நிலையில்ää எதிரிகள் இப்பொழுது தங்களது இருப்பிடங்களை விட்டு விட்டுää முஸ்லிம்களைத் தாக்கும் நோக்கத்துடன் வெளியே வர ஆரம்பித்தார்கள். இவர்கள் அனைவரும் தீ ஹஸ்ஸி என்ற இடத்தில் குழு ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைää இந்த எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்துää கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்தார்கள். கலீபா அவர்களோää தான் வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படியும்ää தனது வருகைக்காகக் காத்திருக்கும்படியும் உத்தரவிட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களுடன் வந்திருந்த தோழர்களும்ää இன்னும் பொதுமக்களும் இப்பொழுது தாக்கும் நோக்குடன் வந்திருக்கும் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்ததோடுää அவர்களைத் திரும்பி ஓடவும் வைத்தார்கள். ஆனால்ää இந்தப் பணி சுலபமான பணியாக முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை.

ஏனெனில்ää எதிரிகள் செய்த சதிச் செயலின் விளைவாக முஸ்லிம்கள் பின்வாங்கவும் நேரிட்டது. காற்றடைக்கப்பட்ட தோல் பைகளைää பாதையெங்கும் பரப்பி வைத்திருந்ததன் காரணமாகää அதன் மேல் கால் வைத்த ஒட்டகங்கள்ää மிரண்டு மதீனாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தன. முஸ்லிம்களின் படைகள் இவ்வாறு திரும்பி ஓட ஆரம்பித்தது எதிரிகளுக்கு மிகவும் மன ஊக்கத்தை அளித்ததோடுää மேலும் படைகளை முஸ்லிம்களை எதிர்த்துக் குவிக்க ஆரம்பித்தார்கள்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள்ää அன்றைய தினமே புதிய உத்வேகத்துடனான தாக்குதல் ஒன்றைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். இரவோடிரவாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த அவர்கள்ää அன்றைய மதிய வேளைக்கு முன்பாகவே எதிரிகளைத் துவம்சம் செய்துää அவர்களைத் தோற்கடித்ததோடுää தீ ஹஸ்ஸியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்த நடவடிக்கையின் காரணமாகää துலைஹா என்ற பொய்த் தூதனின் தளபதியாக இருந்தவனும்ää ஆதரவாளனாக இருந்தவனுமான ஹப்பல் என்பவனின் தலை துண்டிக்கப்பட்டது. மதீனாவின் பாதுகாப்புப் பொறுப்பை நுஃமான் பின் மக்ரான் (ரலி) என்பவரது தலைமையில் அமைந்த சிறு படையின் பொறுப்பில் விட்டு விட்டுää தப்பித்து ஓடியவர்களை துல் கஸ்ஸா வரைக்கும் விரட்டிச் சென்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

முஸ்லிம்களின் இந்த வெற்றி எதிரிகளுக்கு எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. தங்களது குலத்தவர்களில் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்களோää அவர்களை நோவினை செய்ய ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் அங்கங்கள் சிதைக்கப்பட்டனää அவர்களில் சிலரை எரிக்கவும் செய்தார்கள் எதிரிகள். இந்த கொடுமையான செய்திகள் அரபுலக மெங்கும் பரவ ஆரம்பித்தவுடன்ää இது மாதிரியான கொடுமைகளை முஸ்லிம்களின் மீது அனைத்து எதிரிகளும் புரியத் தலைப்பட்டார்கள்.

முஸ்லிம்களின் மீது புரியப்படுகின்ற இந்த அடக்கு முறைகளையும்ää சித்தரவதைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள்ää எதிரிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். துல் கஸ்ஸா வில் கிடைத்த வெற்றியின் காரணமாகää முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் வேகம் அதிகரித்திருந்தது. மனதளவில் அவர்கள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும்ää தன்னம்பிக்கையையும் பெற்றிருந்தார்கள். இன்னும் சில முஸ்லிம்கள்ää தங்களது பகுதியிலிருந்து ஜகாத் பணத்தைக் கூடää தலைநகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்ää உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்திருந்த படைகள் வரும் வரை தலைநகரைப் பாதுகாப்பதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கலீபா அவர்கள் செய்து வைத்திருந்தார்கள். இப்பொழுதுää உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த படை வந்தவுடன்ää அவர்களின் பொறுப்பில் மதீனா நகரின் பாதுகாப்பை வழங்கி விட்டுää அந்தப் படைப்பிரிவு மதீனாவைப் பாதுகாப்பதோடுää சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று கலீபா அவர்கள் முடிவெடுத்துää அதன் படியே செய்தார்கள்.

பின்புää மற்ற முஸ்லிம்களை ஒன்று திரட்டிக் கொண்டுää தன்னுடைய தலைமையின் கீழ் ஒரு படையைத் தயார் செய்துää புறப்பட ஆயத்தமானார்கள். ஆனால்ää அபுபக்கர் (ரலி) அவர்களது சொந்த தலைமையின் கீழ் மதீனாவை விட்டும் படைகள் புறப்படுவதைää சில தோழர்கள் மறுபரீசீலனை செய்யும்படி கலீபாவை வேண்டிக் கொண்டார்கள். அதாவதுää கலீபாவுக்கு நேரக் கூடிய சிறு காயம் கூடää மதீனாவின் நிர்வாக இயந்திரத்தை பலமிழக்கச் செய்து விடும்ää இன்னும் தேவையில்லாத குழப்பங்கள் பரவுவதற்குக் காரணமாகி விடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததேää இதன் காரணமாகும். படையின் தளபதிப் பொறுப்பை யாராவது ஒருவரது தலைமையின் கீழ் விடுவதுää அவர் இறந்து விட்டால் இன்னொருவரை நியமித்துக் கொள்வது என்ற அடிப்படையில்ää படையின் தலைமைப் பொறுப்பில் இருந்து அபுபக்கர் (ரலி) அவர்கள் விலகிää மேற்படி செயல்முறைத் திட்டத்தின் படிää படையை நகர்த்துவது என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால்ää இதற்குச் சம்மதிக்க மறுத்து விட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள்ää தனது தலைமையின் கீழ் படையை நகர்த்துவது என்று இறுதியாக முடிவெடுத்துää அதன்படியேää படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று படையை நகர்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். படை இப்பொழுது துல்கஸ்ஸா வழியாகää ரப்தா என்ற பகுதியில் உள்ள அப்ரக் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதுää எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டார்கள். அப்ரக் இப்பொழுதுää முஸ்லிம் படைகளில் உள்ள குதிரைகளுக்குரிய தீவனத்தை உற்பத்தி செய்யக் கூடிய புல்வெளியாக மாற்றும்படிää கலீபா அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படை மதீனாவில் இருந்து நிறைவாக ஓய்வெடுத்திருந்ததுää நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையான அளவுக்கு ஜகாத் – லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது அப்ரக் கில் தங்கிக் கொண்டுää பொய்த் தூதர்களின் அட்டகாசங்களை அடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்கள் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள். பொய்த் தூதர்களின் கொட்டங்களை அடக்குவதற்கென்றேää பதினொரு படைப் பிரிவுகளை உருவாக்கிää நாட்டின் பல பாகங்களுக்கு அந்தப் படைகளை அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு இருப்பது போல அன்றைய நாட்களில் கூலிக்கு ஆள் அமர்த்திப் போராடும் படைப் பிரிவுகள் இருக்கவில்லை. முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்ää தங்களது உயிர்ää பொருள்ää உடமைகளை அற்பணிக்க முன் வந்ததோடுää அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே போர்க் களத்திற்குள் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் சரிää அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரலி) போன்ற கலீபாக்களின் காலத்திலும் சரிää முஸ்லிம்களைக் கொண்ட படை உருவாக்கப்பட்டுää அதற்கு ஒரு தலைமையையும் நியமித்ததோடுää அந்த ஒரு தலைமையின் கீழ் பல குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களைக் கொண்டு படையை ஒருங்கிணைத்துää அந்த ஒவ்வொரு பிரிவின் தலைமையின் கைகளிலும் அவர்களின் கொடியையும் வழங்கிää போருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அந்தக் கொடியை ஏந்தி இருப்பவர் எங்கே செல்கின்றாரோää அவரைப் பின்பற்றிச் செல்ல வேண்டியது அந்தந்தக் கொடிக்குரிய குலத்தவர்களின் கடமையாகவும்ää இன்னும் அவர் படை நடத்திச் சென்றால் அவருக்குப் பின்னால் தங்களது இளவல்களை அனுப்பி அவருடன் சேர்ந்து கொள்ளச் செய்வதும் அந்தந்தக் குலத்தவர்களின் பொறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு படை வீரரும் தனது சொந்தச் செலவில் போர்க் கருவிகளையும்ää வாகனங்களையும் வாங்கி போருக்குத் தயாராக வேண்டியவராவார்ää இன்னும் அதற்கு வசதியற்றவர்களுக்கு நிதிக் கருவூலகத்திலிருந்து உதவியும் செய்யப்படும். இந்த வழிமுறை நன்றாக அந்தக் காலத்தில் வேலை செய்ததோடுää ஒவ்வொருவரும் தங்களது சொந்த உபயோகத்திற்கென்றே ஆயுதங்களைப் பெற்றிருந்ததும்ää அவர்கள் போருக்குத் தயாராகும் பணியை மிகவும் எளிதாக்கியது.

மேலே நாம் விவரித்த வண்ணம்ää துல் கஸ்ஸாவில் இருந்து கொண்டு அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைப் பிரிவுகளைத் தயாரித்ததோடுää அதற்கு பதினொரு தலைமையையும் நியமித்ததோடுää எந்தத் தலைமையுடன் எந்தக் குலத்தவர்கள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தையும் அறிவித்தார்கள். ஒவ்வொரு தலைமையும்ää அவரவர்க்கென்ற தனிப்பட்ட உத்தரவுகளை கலீபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இதற்கு முன் சந்தித்த எதிரிகளுக்கும்ää இப்பொழுது சந்திக்கப் போகும் எதிரிகளுக்கும் மிகவும் வித்தியாசமிருந்ததுää எனவேää அதனைக் கருத்தில் கொண்டு எவ்வாறு தாக்குதல் தொடுப்பதுää போரை ஆரம்பிப்பது என்பன போன்ற அறிவுரைகளைத் தனது தளபதிகளுக்கு வழங்கிää அவர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த அடிப்படையில்ää காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் துலைஹா என்பவனுக்கு எதிராகவும்ää இக்ரிமா (ரலி) அவர்கள் முஸைலமாவுக்கு எதிராகவும்ää சுபைர் (ரலி) அவர்கள் அஸ்வத் அன்ஸிக்கு எதிராகவும் அனுப்பி வைக்கப்பட்ட முக்கியத் தோழர்கள் ஆவார்கள்.

இன்னும் பொதுவான சில உத்தரவுகளை அனைத்து தளபதிகளுக்கும் கலீபா அவர்கள் வழங்கினார்கள். இந்த உத்தரவுகளில் எதிரிகளை எதிர்த்துப் போர் தொடுப்பதற்கு முதலாகää அவர்களிடம் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படியும்ää இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து நடடிவக்கைகளையும் கைவிடும்படியும் விண்ணப்பித்துக் கொள்வது. இன்னும் சமாதான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு முன் வரும்பட்சத்தில்ää போர் நடவடிக்கைகளைக் கைவிடுவது போன்ற முறைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும்ää இவற்றில் எதுவுமே அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்ää இறுதி நடவடிக்கையாக போரைத் துவங்கும்படியும் கலீபா அவர்கள் அனைத்துத் தளபதிகளுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை பிறப்பித்துää அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

கலீபா அவர்களால் உருவாக்கி வழங்கப்பட்ட பிரமாணங்களைää ஒருவர் முதலில் சென்று எதிரிகளிடம் வாசித்துக் காட்டுவதுää அதற்காக அங்கு அதான் சொல்லப்பட்டு மக்களை ஒன்று திரட்டுவது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மக்களிடம் கலீபாவின் பிரமாணங்களை வாசித்துக் காட்டுவதுää இதனைச் செவியுற்று விட்ட பின் எவர்ää அதனை ஏற்காது அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகின்றாரோ அவரை இஸ்லாத்தின் எதிரியாகக் கணிப்பிடுவதுää அவர்களை ஒடுக்குவது என்பது தான் முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. இதுவல்லாமல்ää இன்னும் சில கட்டளைகளையும் ஒவ்வொரு தளபதிகளுக்கும்ää அவரவர் செல்லக் கூடிய பகுதிகளுக்கு ஏற்றவாறு உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த விரிவான அடிப்படையில் பதினொரு படைப்பிரிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பதினொரு படைப்பிரிவுகளின் பணிகள் பற்றி நாம் இங்கு நோக்குவதுää மிகுந்த சிரமமான ஒன்று என்பதால்ää குறிப்பிட்ட சில படைப்பிரிவுகளின் பணிகள் குறித்து நாம் இங்கு சிறிது நோக்குவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. S.Ibrahim says:

    பன்றிக்கும் இப்னுசாகிருக்கும் உள்ள ஒற்றுமை.
    பன்றிக்கு தனது தகப்பன் யார் என்று தெரியாது.ஆனால் தாய் எதுவென்று தெரியும்.இப்னுசாகிருக்கும் அவன் அம்மா காபிர் என்பது தெரியும் .அப்பா முஸ்லிம் சாகிர் யார் என்பது தெரியாது.பன்றியின் உணவு மலம் .இ.சா.வின் உணவு எழுத்து மலம்.
    பன்றிக்கு மலத்திற்கும் உணவுக்கும் வித்தியாசம் தெரியாது.இரண்டும் ஒன்றாகவே தோன்றும் .இ.சாவுக்கும் நித்தியானந்தாவும் ,நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]க்கும் வித்தியாசம் தெரியாது.
    மூளை காய்ச்சல் நோய் பரவினால் பன்றியை கொள்ளுவார்கள் .இதனால் பன்றி காணாமல் போகிவிடும்.மூளை காய்ச்சல் ஒழிக்கப்பட்டதும் மீண்டும் பன்றியாய் பெருகும் .அதுபோல இணையதளத்தில் இஸ்லாமியர்கள் பிரச்னை ஏற்படுத்தினால் பன்றி காணாமல் போகிவிடும் .பீதி மறைந்ததும் பகடு வெளிவரும்.
    வித்தியாசங்கள்
    பன்றியை கொன்றால் ஜீவா காருண்யா அமைப்புகள் கூட தலையிடாது.ஆனால் இ.சா கண்டிக்கப்பட்டால் சில சாக்கடை குளியல் ரசிகர்கள் கண்டன குரல் எழுப்புவர்கள்

  2. பகடு says:

    மதமல்ல மார்க்க சகோ எஸ் இப்ராஹிம் நல்ல சில அறிவுரைகளை கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு ஸ்பாமில் வைத்திருக்கிறேன்

    எதற்கும் அவர் அருகே இப்போது போக வேண்டாம். காக்காவலிப்பு வந்தாற்போல உதைத்துகொண்டிருக்கிறார். அப்புறம் ஜூவனப்பிரியன் மாதிரி அல்லாஹூ அக்பார் சொல்ல ஆரம்பிச்சா அடுத்த மார்க்கத்தை உருவாக்கிடுவார். ஜாக்ரதை

  3. பகடு says:

    தனக்கு காக்காவலிப்பு வந்தபோது ஜிப்ரீல் வந்து சொன்னிச்சின்னு சொன்னதை நம்பாதவங்களை எல்லாம் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா திட்டிய அதே வார்த்தைகளில் பன்னியே குரங்கேன்னு திட்டி நபிவழியை பின்பற்றியிருக்கிறார் நம்ம மதமல்ல மார்க்க சகோ எஸ்.இப்ராஹிம். இன்னும் கொஞ்ச நேரம் கத்த உட்டா அடுத்த மார்க்கம் வந்துடும். ஜாக்கிரதை

    S.Ibrahim says:

    இந்த முகம்மதுவின் மகள் பாத்திமாவே திருடினாலும் சட்டம் தன கடமையை செய்யும் என்று நீதி வழுவா முஹம்மது நபி [அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும் ]அவருடன் ஒப்பிட மனித குலத்தில் யாருண்டு?
    மக்களுக்கெல்லாம் மன்னராக இருந்து ஒருநாள் கூட வயிறார உண்ணதில்லை நபி [அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும் ] என்று ஏழை மக்களின் உணவு பற்றி சிந்தனையே தனது வாழ் நாள் முழுவதும் அக்கறை கொண்ட அந்த சத்தியவானுடன் ஒப்பிட இங்கு யாருண்டு?
    தனக்கென்று ஏதும் சேமித்து வைக்காது, போரில் கிடைத்த பங்குகளையும் அரசுக்கே அளித்து சென்ற ,தனது வாரிசுகளாக உண்மை விசுவாசிகள் என்று அறிவித்த தர்ம சீலருடன் ஒப்பிட இந்த மனித குலத்தில் யாருண்டு?
    காமப் பொருளாக இருந்த பெண்ணை மனுசியாக்கி ,அவளுக்கும் உணர்வுகள் உண்டு ,சொத்தில் உரிமை உண்டு ,ஒரு ஆணுக்கு இருக்கும் அனைத்தும் உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு என்று உலகில் பெண்ணை உயர்த்திய கொள்கைக் கோமான் நபி [அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்களோடு ஒப்பிட யாருண்டு?
    இருபதாம் நூற்றாண்டு வரை பெண்ணின் மாதவிலக்கை தீட்டகா கருதி அவளை கேவலமாக,நடத்தி வந்திருக்கையில் ,அது ஒரு இயற்கை வெளிப்பாடே என்பதை மக்களிடம் காட்டுவதற்காக ,மாதவிடாய் மனைவியோடு ஒரே தட்டில் உணவு அருந்தி காட்டி ,குரான் படிக்க வைத்து ,பெருநாள் தொழுகைக்கு அச்சமயத்திலும் அழைத்து பெண்களை ஆண்களுக்கு இணையாக உயர்த்திய அந்த சீர்திருத்த செம்மலை இங்கு யாருடன் ஒப்பிட முடியும்?
    அறிவு பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில்,கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களினாலும் குற்றங்களை குறைக்க முடியாத பொழுது,உலகிலேயே குற்றங்கள் குறைவாக உள்ள சவூதி அரேபியா நடைமுறைப்படுத்தும் சட்டத்தை தந்த தத்துவ ஞானி யை யாருடன் ஒப்பிட முடியும்? இறை அருளால் தொடரும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard