New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


13_09_2010_011_043-mukesh.jpg?w=291&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தடை நீக்கம்: 2- வது குழந்தை பெற சீனா அனுமதி
Beijing சனிக்கிழமை, செப்டம்பர் 11, 10:58 AM IST
பெய்ஜிங், செப்.11-
தடை நீக்கம்:    2- வது குழந்தை பெற சீனா அனுமதி
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை சீனா அரசு கட்டாயமாக அமல்படுத்தி வருகிறது. அதையும் மீறி ஒன்றுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் கருகலைப்பு செய்தல், வயிற்றில் வளரும் குழந்தையை அழித்தல் போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சீன மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எனவே, சீனர்கள் ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஒரு குழந்தை திட்டத்தை ரத்து செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குவது என முடிவு செய்துள்ளது.
அதுவும், ஏற்கனவே ஒரு குழந்தை மட்டும் இருக்கும் தம்பதி மட்டுமே 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இத்திட்டம் அடுத்த ஆண்டு (2011) முதல் அமலுக்கு வருகிறது.
பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் 4 மாகாணங்களில் 2012-ம் ஆண்டில் இருந்தும், அதைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தகவலை அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ஹே யாபு தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை திட்டத்தை கட்டாயமாக அமுல்படுத் தியதன் மூலம் சீனாவில் 40 கோடி மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கம்பளிக்குள் சுருண்டு கிடக்கும் கராத்தே சாம்பியன்!
-அலட்சியம் காட்டும் பள்ளி நிர்வாகம்

Karthick%201.jpg



மாவட்ட அளவில், மாநில மற்றும் தேசிய அளவில் என தேசம் முழுவதும் வென்றெடுத்த பதக்கங்களின் எண்ணிக்கை 140. இதில் தங்கப்பதக்கம் மட்டும் நாற்பது. இலங்கை, இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் ஜூனியர் உலக சாம்பியனாக வலம் வந்ததற்காக மட்டும் நான்கு தங்கப்-பதக்கங்கள். இதில்லாமல் 2016-ம் ஆண்டு இந்திய தேசத்தின் சார்பாக கராத்தே வீரனாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு.

இத்தனை சாதனைகளுக்கும், தகுதி-களுக்கும் சொந்தக்காரரான திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 13 வயது கராத்தே வீரன் கோகுலுடைய இப்போதைய நிலைமை..?

Karthick%202.jpgதலையை சுற்றிலும் முப்பதுக்கும் மேற்பட்ட தையல்கள். இரண்டு வருடங்கள் கட்டாய ஓய்வு. எந்த பயிற்சிக்கும் செல்ல முடியாத நிலைமை. போதாக்குறைக்கு பக்கவாதம் பற்றிக்கொள்ளும் அபாயம்! மகனின் நிலையைக் கண்டு, அவனருகே கண்ணீருடன் சோகக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கோகுலின் தந்தை ராஜ முத்துவை சந்தித்தோம்.

‘‘குழந்தை பருவத்தில் எந்த சுறுசுறுப்பும் இல்லாமல் அமைதியாகவே இருப்பான். யாரிடமும் பேசவே மாட்டான். அப்படிப்பட்டவனை, உற்சாகப்படுத்தி, கராத்தே பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம்.

அவனுடைய கராத்தே திறமையை பார்த்து கோவை, திருப்பூரில் உள்ள பெரிய பள்ளிகளில் இருந்து கட்டண சலுகை கொடுக்கிறோம். இங்கே சேர்த்துவிடுங்கள் என்று அழைத்தனர். தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று, இங்குள்ள ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தோம்.

அவர்களும் அட்மிஷன் போது டியூசன் பீஸ் கட்ட வேண்டாம். மற்ற பீஸ்களை மட்டும் கட்டினால் போதும். வெளிநாடுகள் சென்று போட்டிகளில் கலந்துகொள்ளும் செலவு முழுவதையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றுதான் கோகுலை சேர்த்துக் கொண்டார்கள்.

ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்ந்த இரண்டு வருடங்களில் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சென்று மூன்று முறையும் தங்கப்பதக்கம் வென்று வந்திருக்கிறான். இதுவரை ஒரு ரூபாய் கூட பள்ளி சார்பில் செலவிடவில்லை. பதக்கம் பெற்று வந்தபோது மட்டும் ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மாணவன் கராத்தேவில் உலக சாம்பியனாயிருக்கிறான் என்று விளம்பரப்-படுத்திக்-கொண்டவர்கள், இப்போது எந்த கராத்தே போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் செய்து-விட்டனர்’’ என்ற போதே அவர் கண்களில் நீர் வழிகிறது.

துடைத்துக்கொண்டு தொடர்ந்தார். ‘‘இதுவரை அந்தப் பள்ளியில் விளையாட்டு போட்டிகளே நடத்தாதவர்கள் கடந்த மாதம்தான் விளையாட்டு பொருட்களை வாங்கிவந்து பள்ளி அளவில் போட்டிகளை நடத்த முயற்சித்தனர். வகுப்புகள் முடிந்ததும் ப்ராக்டீஸ் செய்ய மாணவர்களை கிரவுண்டிற்கு அனுப்பிவிட்டு பி.டி. மாஸ்டர் காணாமல் போய்விட்டார்.

ஒரு பகுதியில் இருந்து ஜாவ்லின் த்ரோ (ஈட்டி எறிதல்) ப்ராக்டீஸ் நடந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது ஒரு மாணவன் எறிந்த ஈட்டி கோகுலின் தலையில் பாய்ந்து விட்டது. கோகுலின் தலையில் ஈட்டி குத்தி ரத்தம் கொட்ட... மாணவர்கள் எல்லோரும் பயந்து அலறி ஓட, கோகுலாகவே தலையை பிடித்துக்கொண்டு பி.டி. ரூமிற்கு ஓடியிருக்கிறான். அங்கிருந்த ஆசிரியர்கள், அருகில் உள்ள அருள்புரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு டாக்டர் இல்லை. அங்கிருந்த நர்ஸ் ஏழு தையல் போட்டு, பள்ளி தாளாளர் காரில் கொண்டுவந்து வீட்டு வாசலில் இறக்கிவிட்டு போய்விட்டனர். தகவல் கேட்டு நான் வீட்டுக்குச் சென்று பார்த்தால், வாந்தி எடுத்தபடி கோகுல் சுயநினைவில்லாமல் இருந்தான்.

Karthick.jpgஅதன்பின் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் எடுத்தோம். அதில், தலை எலும்பு முறிந்து மூளையில் குத்தி ரத்தம் உறைந்திருப்பதால் உடனடியாக ஆபரேஷன் செய்யச் சொன்னார்கள். ஆபரே­ஷன் செய்து மூன்று நாட்கள் ஐ.சி.யு. வார்டில் வைத்து காப்பாற்றி இப்போதுதான் கோகுலை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கிறது. ஒரு முறை மருத்துவமனைக்கு வந்த பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், எழுபதாயிரம் ரூபாய் கொடுத்தார். மீதி தொகைக்கு ஏதாவது வழி செய்யுங்கள் என்று கேட்டேன். அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

ஈட்டி குத்தியதால் வலது கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு எந்த பயிற்சியும் செய்யக்கூடாது. இரண்டு வருடம் முடிந்தவுடன் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். என்னோட மகனின் கனவும் தகர்ந்து, அவன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது...’’ என்று கதறியழுதார்.

கோகுலின் பாதிப்பை பற்றி கேட்க பள்ளிக்குச் சென்றோம்.

‘முகப்பிலே இந்தோனேஷியாவில் நடந்த கராத்தே போட்டியில் பங்கேற்று திரும்பும் கராத்தே ஜூனியர் உலக சாம்பியன் கோகுல் வருக... வருக!’ என்ற பிளக்ஸ் போர்டுகள் நம்மை வரவேற்றன. ‘பள்ளியில் தாளாளரும் இல்லை... முதல்வரும் இல்லை’ என்றார்கள்.

பள்ளி தாளாளர் கிருஷ்ணனை தொலைபேசியில் பிடித்தோம். ‘‘கிரவுண்டில் விளையாடும் போது தெரியாமல் நடந்திருக்கிறது. அதற்கு நிர்வாகம் என்ன செய்யமுடியும்? இருந்தும் அந்த பையனுக்கு செலவெல்லாம் பார்த்தாகிவிட்டதே. இனிமேல் நாம் என்ன செய்ய முடியும்?’’ என்று நம்மிடமே அவர் கேட்டவிதம் நம்மை நிலைகுலையச் செய்தது.

கடல் கடந்து கராத்தேவில் சாதனையை புரிந்தவன் கம்பளிக்குள் சுயநினைவின்றி இருப்பது நியாயமா என்பதை பள்ளி தாளாளர் சிந்தித்து, அந்த குடும்பத்துக்கு உரியதை உரிய நேரத்தில் செய்தால், அதுதான் பள்ளிக்கு கௌரவம் தேடித்தரும். அதை செய்வார்கள் என்றே நம்புவோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுரை விமான நிலையத்துக்கு யார் பெயர்?
கலவர பீதியில் தென்மாவட்டங்கள்

Madurai.jpg



மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும்’ என்று தேவர் அமைப்புகளும், ‘இமானுவேல் சேகரன் பெயரைத்தான் சூட்ட வேண்டும்...’ என்று தலித் அமைப்புகளும் வரிந்துகட்டி நிற்கின்றன. வேறு சில சாதிய அமைப்புகளும்கூட தங்கள் இனத்துத் தலைவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக போராட்டம், உண்ணாவிரதம் என்று மதுரை தகித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வருகின்ற செப். 12-ம் தேதி மதுரை சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கப் போகிறது என்பதை பதட்டத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் மதுரை மக்கள். ‘தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் விவகாரம் சாதிய கலவரத்தையும் தூண்டி விடலாம்...’ என்று அரசுக்குக் கிடைத்திருக்கும் தகவலைத் தொடர்ந்து, ரொம்பவே பதைபதைப்பில் இருக்கிறார்கள் அதிகாரிகள்.

Madurai%201.jpg தேவர் தேசிய பேரவையின் தலைவர் திருமாறனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘சுதந்திரத்துக்காக போராடிய தேசிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர். இன்றைக்கு சாதிய தலைவராக குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இரண்டு பேருக்கு மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. அதில் ஒருவர் தேவர் ஐயா.

தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் எண்ணிக்கை அதிகம். மதுரை திருநகரில்தான் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்தார். மறைந்தார். பத்தொன்பது சாதிகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த கைரேகை சட்டத்தை எடுக்கச் சொல்லி போராடியவர். முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவுக்காக மதுரைக்கு வந்த முதல்வர் கலைஞர், ‘மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும்...’ என்று சொல்லிவிட்டுப் போனார். நாங்களும் சந்தோஷப்பட்டோம். ஆனால், சாதியத் தலைவர்கள் பலரையும் தூண்டிவிட்டு, ‘விமான நிலையத்துக்கு எங்கள் சாதி தலைவர் பெயரைத்தான் வைக்கணும்’னு சொல்லி கொடிபிடிக்க வைத்தார். அவரு நேரடியா சொல்லாட்டியும், கலைஞரோட தூண்டுதலாலத்தான் அவங்க எல்லாம் இப்படி கிளம்பி வந்தது. கலைஞர், இப்படித்தான் முக்குலத்தோரை தொடர்ந்து ஏமாத்துறாரு.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், காங்கிரஸின் சுதர்சன நச்சியப்பனை அனுப்பி எங்களிடம் பேச சொல்லியிருக்கிறார். அதுபடி நச்சியப்பனும் எங்ககிட்ட பேசுனாரு. ‘மதுரை சர்வதேச விமான நிலையத்தை பிரபுல் பட்டேல் திறக்க வரும்போது பிரச்னை எதுவும் கூடாது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் தான் வைக்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதைத்தான் நாங்க நம்பியிருக்குறோம். எங்க நம்பிக்கை பொய்த்துப் போனால், தென் மாவட்டத்துல ஏற்படப்போகும் டென்ஷனை யாராலும் தடுக்க முடியாது...’’ என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துச் சொன்னார்.
Madurai%202.jpg
தலித் அமைப்புகள் சார்பாக, ‘தியாகி இமானுவேல் பேரவை’யின் பொதுச் செயலாளர் சந்திரபோஸ் நம்மிடம் பேசினார்.

‘‘தியாகி இமானுவேல் தீண்டாமைக்கு எதிராக போராடிய தலைவர். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் தான் வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டது. அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர போராடி தன்னுயிரை கொடுத்தவர் இமானுவேல்.

Madurai%204.jpgமதுரை விமான நிலையம் 1932&ல் தொடங்கப்-பட்டது. அப்போது அந்த விமான நிலையம் அமைக்க பள்ளர் சமூகத்தினருடைய விளைநிலங்கள் தான் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மூன்று முறை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் எங்கள் சமூக மக்கள் விளைநிலம் 98 ஏக்கர் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்குக்கூட எண்பத்தொன்பது வீடுகளை சின்ன உடைப்பு கிராமமக்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து விமான நிலையத்துக்காக எங்கள் சமூக மக்கள்தான் நிலம் கொடுத்திருக்கிறாங்க. அதனால மதுரை விமான நிலையத்துக்கு எங்க மக்களின் தலைவராக இருக்கும் இமானுவேல் சேகரனுடைய பெயரைத்தான் சூட்ட வேண்டும். முத்துராமலிங்கத் தேவருக்கு நாடாளுமன்றத்தில்கூட சிலை வைத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. ஆனால், இமானுவேலுக்கு அப்படி எந்த கௌரவமும் கிடைக்கலை. குறைந்தபட்சம், விமான நிலையத்துக்காவது பெயர் வைக்கலாமே...’’ என்றவர், ‘‘முதல்வர் கருணாநிதி முக்குலத்தோர் என்றால் பயப்படுகிறார். ‘மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க சிபாரிசு செய்கிறேன்’ என்று சொல்லும் கருணாநிதி, தலித் மக்களையும் முக்குலத்தோர் மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகு, மீறி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட்டால், தலித் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தலித் இன மக்கள் கருணாநிதிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.’’ என்று முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்து பேசிமுடித்தார்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் மகேந்திரன் நம்மிடம் பேசும்போது,

‘‘சென்னையில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு காமராஜர் மற்றும் அண்ணா பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைவிட குறைவான மரியாதைதான் பெரியாருக்கு கொடுக்கிறார்கள். சமூகநீதிக்காக போராடியவர் பெரியார். தீண்டாமை ஒழிப்புக்கு குரல்கொடுத்தவர். திராவிடர் கழகத்தில் பயின்ற கலைஞர் சமத்துவ நாயகன் பெரியார் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். தென் தமிழகம் வாயார அவர் பெயரைச் சொல்லிப் பார்க்க வேண்டும். இது பெரியாருக்கு கலைஞர் செய்யும் தொண்டாக இருக்கும்...’’ என்றார்.

மதுரையில் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்து வழிபடும், ‘கண்ணகி பேரவை’யின் நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் கொடிபிடித்து கிளம்பியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நம்மிடம்,

‘‘மன்னனிடம் நீதி கேட்டு போராடி மதுரையை கண்ணகி எரித்த வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மதுரையில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு கண்ணகி பெயர் வைப்பது தான் சிறப்பாக அமையும்...’’ என்றார்கள். ‘அய்யய்யோ, இன்னும் எவ்வளவு பேர், பெயர் கோரிக்கையோட லெட்டர் பேடும் கையுமா திரியறாங்களோ தெரியலையே...’ & விமானத் துறை அதிகாரி ஒருவரின் சோகப்புலம்பலுக்கு, விடை சொல்வார் யார்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


<!--.style2 {color: #0033CC}.style3 {color: #FF0000}.style4 {color: #003399}.style5 {color: #0000CC}
-->

ராமஜெயம் உயிருக்கு குறி:
அதிர்வுகளை ஏற்படுத்திய அடுத்தகட்ட விசாரணை!

Ramajayam%202.jpg

 

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தை கொலை செய்ய சதி’ என கடந்த வாரம் முழுவதும் மீடியாக்களில் செய்திகள் அலையடித்தன.

இந்த பரபரப்புச் செய்தி, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ராமஜெயத்தை கொலை செய்ய தீட்டப்பட்ட சதித் திட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரனின் மகன் செந்தூரேஸ்வரனுக்கு தொடர்பிருக்கிறது என்று போலீஸ் விசாரணையைத் தொடங்க, விவகாரம் மெல்ல அரசியலாகிக் கொண்டிருக்கிறது. காரணம், செந்தூரேஸ்வரன் தே.மு.தி.க.வில் மாநில நிர்வாகியாக இருப்பதுதான்.

மத்திய மண்டலத்தில் பிரபல தாதாவாக விளங்கிய ‘முட்டை’ ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டபிறகு திருச்சியை சுற்றிலும் வளர்ந்து வந்த ரவுடிகள் பலரும் வாலைச் சுருட்டி அமைதியானார்கள்.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, சுருட்டிய வால் மீண்டும் நீள ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் குணா என்கிற குணசீலன். ‘முட்டை’ ரவியின் வலது கரமாக இருந்து செயல்பட்டவன். ரவி, மரணத்துக்குப் பிறகு வேகமாக வளர ஆரம்பித்தான்.

பிரபல ரவுடி சேட்டு, செங்கல்பட்டு அ.தி.மு.க. பிரமுகர் குரங்கு குமார் ஆகியோர் கொலை செய்யப்-பட்ட வழக்குகள் உட்பட பத்தொன்பது வழக்குகள் குணா மீது நிலுவையில் உள்ளன.
Ramajayam%203.jpg
மத்திய மண்டலத்தில் நடந்துவந்த குற்றச் செயல்கள் பலவற்றிலும் குணாவின் பங்களிப்பு இருப்பதாக சந்தேகித்து, அவனை தேடி வந்தனர் போலீஸார். இந்நிலையில்தான் குணாவை கைது செய்தது திருச்சி போலீஸ்.

குணாவை மீடியாக்களுக்கு முன்பு நிறுத்திய போலீஸ், ‘வரிசையாக நாலைந்து கொலைகளைச் செய்ய திட்டமிட்டிருந்தான். இதில் திருச்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் அடக்கம்’ என்று பரபரப்புத் திரியை பற்ற வைத்தார்கள்.

Ramajayam%201.jpgஅமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்தான் திருச்சியைச் சேர்ந்த அந்த அரசியல் பிரமுகர் என செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செந்தூரேஸ்வரனை அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குணா கைது விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘குணாவை கைது செய்து தீவிரமாக விசாரித்தோம். சில பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகச் சொன்னான். கொலைப் பட்டியலில் ராமஜெயமும் இருப்பதாகவும் கேஷுவலாக சொல்ல, அதிர்ச்சியாக இருந்தது.

‘சேலத்தில் நடந்த வீரபாண்டி ஆறுமுகம் மகன் கல்யாணத்துக்கு திருச்சியில் இருந்து காரில் போனார் ராமஜெயம். அப்பவே அவரை முடிச்சிடணும்னு திட்டம் போட்டோம். வொர்க் அவுட் ஆகலை. தப்பிச்சுட்டார்’னு குணா சொன்ன தகவல் அடிப்படையிலதான் விசாரணை விறுவிறுப்பாக நடக்கிறது.

செந்தூரேஸ்வரனுக்கு ராமஜெயத்தோடு முன்விரோதம் இருக்கும் தகவல் தெரிந்து, அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு கூடைப்பந்து சங்க விவகாரத்தில்தான் இரண்டு குடும்பத்துக்கும் பகை இருக்கிறது.

Ramajayam.jpgகூடைப்பந்து வீரரான செந்தூரேஸ்வரனை சங்கத்தின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது தியானேஸ்வரனின் ஆசை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் பிரச்னை வெடித்து, நடிகர் நெப்போலியன் தலைமையில் ஒரு குரூப், தியானேஸ்வரனுக்கு எதிராகக் கிளம்பியது. சங்கத்தை தங்கள் கைக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் நெப்போலியனுக்கு ஆதரவாக ராமஜெயம் செயல்பட ஆரம்பித்தார். ராமஜெயத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை தியானேஸ்வரனால் சமாளிக்க முடியவில்லை. உடனே, நீதிமன்றத்தை நாட ஆரம்பித்துவிட்டார். இருந்தும், சட்ட ரீதியாகவே சங்கத்தை தன்வசப்படுத்தி விட்டார் ராமஜெயம். சங்கத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். இதனால், ராமஜெயத்தின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள், தியானேஸ்வரனும் மகனும். அதுதான், குணா மூலம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறதோ என்று சந்தேகித்து விசாரிக்கிறோம். குணாவின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட போனிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்திருக்கிறது.



அதை விசாரிக்கும்போதுதான், செந்தூரேஸ்வரன் வரை தொடர்புகள் நீள்கிறது. அந்த விஷயங்களை விசாரிக்கத்தான் செந்தூரேஸ்வரனை அழைத்தோம். தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மறுத்து விட்டார். தேவையானால், தொடர்ந்து விசாரணைக்கு அழைப்போம். இன்னும் சில தினங்களில் விசாரணை முடிந்துவிடும். அப்போது எல்லா தகவல்களும் வெளியில் வரும்’’ என்றார்கள்.

ராமஜெயம் தரப்பில் பேசினோம்.

‘‘சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு கிளப்புகள் சார்பாகப் புகார்கள் வந்தன. அதன்பிறகுதான், ராமஜெயம் அந்த விவகாரத்தில் தலையிட்டார். தற்போது சங்கம் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. மற்றபடி, அவருக்கு யாரும் எதிரிகள் கிடையாது. சொல்லப்போனால் ‘மறப்போம், மன்னிப்போம்’ என்கிற ரீதியில் செந்தூரேஸ்வரனுக்கும் சங்கத்தில் பொறுப்பு கொடுக்கலாம் என்கிற முடிவில் இருந்தார் ராமஜெயம். அதற்குள் இப்படியொரு தகவல் வந்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது...’’ என்றார்கள்.

திருச்சியில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்த செந்தூரேஸ்வரனிடம் பேசியபோது, ‘‘நான் என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். சம்பந்தமில்லாமல் என்னை வம்புக்கு இழுக்குறாங்க. குணா யார்னே எனக்குத் தெரியாது’’ என்றார் சிம்பிளாக.

திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குணாவிடம் பேசினோம். ‘‘செந்தூரேஸ்வரன் கறுப்பா, சிவப்பான்னே எனக்குத் தெரியாது. போலீஸ் ஏன் இப்படியொரு தகவலைப் பரப்புதுன்னு தெரியலை. எந்த வாக்குமூலமும் நான் கொடுக்கலை...’’ என்றான்.

குணாவின் வழக்கறிஞர் ராஜேந்திரகுமாரோ, ‘‘குணாவை என்கவுன்ட்டரில் கொலை செய்து விட போலீஸ் துடிக்கிறது. அதனால்தான் விடாமல் கதைகளை பரப்புகிறார்கள். சட்டரீதியாக இந்த என்கவுன்ட்டர் சதியை முறியடிப்பேன்’’ என்றார்.

திருச்சி போலீஸ் கமிஷனர் வன்னியப்-பெருமாள், ‘‘குணா வாக்குமூலம் கொடுத்-திருப்பது உண்மை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் விரிவாகப் பேசுகிறேன்’’ என்றார்.

எப்படியோ குணா விவகாரம், பலருடைய உறக்கத்துக்கு உலை வைத்திருக்கிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நரபலியான நஜிமுன்நிஷா?
-அதிர்ந்த அவத்தாண்டை

Kishore.jpg



ஒன்றுமறியாத ஆறுவயது பெண் குழந்தை நஜிமுன்நிஷா மர்மமான முறையில் இறந்து போக, ‘நரபலி’ என்று ஒருதரப்பும், ‘இல்லை... பகையைத் தீர்த்துக் கொள்ள பழிவாங்கிவிட்டார்கள்...’ என்று இன்னொரு தரப்பும் சொல்லிக் கொண்டிருக்க, சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது சாயல்குடி அருகேயுள்ள அவத்தாண்டை கிராமம்.

பிரச்னையை அந்தப் பகுதியில் இருக்கும் த.மு.மு.க.-வினர் கையில் எடுக்க, போலீஸ் பதட்டத்தில் செய்வதறியாது தவிக்கிறது.

Kishore%202.jpgநிஷாவின் தாயார் ரசீதாபானு நம்மிடம், ‘‘கடந்த வாரம் ஒரு நாள் காலை 11 மணி இருக்கும். பக்கத்து வீட்டு புள்ளையோட வேப்ப மரத்துகிட்டப் போய் வேப்பமுத்து பொறுக்கி விளையாடிகிட்டு இருந்தா நஜிமுன். கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் பார்த்தா, அவளைக் காணலை. ஊர்முழுக்கத் தேடினோம். கண்டுபிடிக்க முடியலை.ஊருக்குள்ள விசாரிச்சேன். வேப்ப மரத்தடியில் விளையாடிகிட்டு இருந்த புள்ளைய மதரசாவில் குர்-ஆன் படிக்கும் ஷாஜகானும், அரிய நாயகிபுரத்தை சேர்ந்த நிஜாமுதீனும் மிட்டாய் வாங்கி கொடுத்து கூட்டீட்டு போனாங்கன்னு தகவல் சொன்னாங்க.

Kishore%201.jpgஅவங்க ரெண்டு பேரையும் தேடினோம். அகப்-படலை. மறுநாள் மதியம்... ஆடு மேய்க்கும் சில பேர் வந்து, ‘கண்மாய் காட்டு கருவைக்குள் நஜிமுன்நிஷா நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கா. சென்ட்ரிங் கட்டையால் தலையை அடிச்சி நொறுக்கி, நரபலி கொடுத்திருக்காங்க’னு சொன்னாங்க. பதறி-அடிச்சு-கிட்டுப் போய்ப் பார்த்தோம். என் செல்ல மகளை நரபலி கொடுத்துட்டாங்க...’’ என்று சொல்லி கதறினார்.

நஜிமுன்நிஷாவின் தந்தை இப்ராஹிமிடம் பேசினோம். ‘‘நஜிமுன்நிஷா கொலை செய்யப்பட்டுக் இடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சென்ட்ரிங் கட்டையானது, கோடாங்கியின் புதுவீடு கட்டும் இடத்தில் இருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டிருக்கு. கோடாங்கி, பேய் வன-வாசம் செய்யும் இடத்துல வீடுகட்டுறாரு. அதுக்கு பரிகார-மாகத்தான் எம்பிள்ளைய நரபலி கொடுத்து இருக்காரு. எம் புள்ளையை கொலை செய்ய கோடாங்கிக்கிட்ட கொண்டு போய் ஒப்படைச்சதுதான் ஷாஜகான், நிஜாமுதீன் வேலையா இருக்கும். 

இதையெல்லாம் போலீஸ்-கிட்டயும் சொல்லி-யாச்சு. நடவடிக்கை இல்லை. விவகாரத்தை இனிமேல த.மு.மு.க. பார்த்துக்கும்...’’ என்றார்.

அவத்தாண்டை பஞ்சாயத்து தலை-வரான அமானுல்லா நம்மிடம், ‘‘சந்தேக-மெல்லாம் அந்த கோடாங்கி பயமீதுதான் படிஞ்சு கிடக்கு. இப்ராஹிமுக்கும் கோடாங்கிக்கும் பகை உண்டு. பகையை தீர்த்துக்-கறதுக்காகத்தான் ஒருபாவமும் அறியாத பச்சிளம் குழந்தையை கொன்னுருக்கணும்...’’ என்றார். 

கோடாங்கி என்ன சொல்கிறார்?

‘‘குர்-ஆன் ஓதுற பசங்கதான் கடைசியா அந்தப் புள்ளைய அழைச்சுகிட்டுப் போனதை பார்த்-திருக்காங்க. அவனுங்களை இறுக்கி பிடித்து விசாரித்-தாலே போதும்... உண்மை வந்துடும். மற்றபடி, கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.’’ என்றார் கோடாங்கி.

மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான பிரதீப் குமாரிடம் கேட்டபோது, ‘‘கொலையில் க்ளூ கிடைச்சு இருக்கு. வெகுவிரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்...’’ என்றார் உறுதியாக.

கொலையாளிகளை விரைந்து பிடித்து, பிஞ்சுக் குழந்தையின் மர்ம மரணத்துக்கு விடை காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாப்பாடகி மீது பாதுகாவலர் “செக்ஸ்” புகார்
Las Vegas வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 11:59 AM IST
லாஸ்ஏஞ்சல்ஸ், செப். 10-
பாப்பாடகி மீது பாதுகாவலர் “செக்ஸ்” புகார்
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி பிரிட்னி பியர்ஸ், இவரது முன்னாள் பாதுகாவலர் பெர்னாண்டோ பிளோர்ஸ், இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் புறநகர் கோர்ட்டில் பிரிட்னி பியர்ஸ் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் தான் அவரிடம் பணிபுரிந்த போது விருப்பம் இன்றி தன்னுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாகவும், அடிக்கடி அது போன்று தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது அறைக்கு அழைத்து தன் முன் ஆடையின்றி நிர்வாணமாக “போஸ்” கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்னி பியர்ஸ் அமெரிக்காவின் உயரிய கிரம்மி விருது பெற்றவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MoD yet to order probe into mystery death of Captain

TIMES NEWS NETWORK

New Delhi: Did Captain Sumit Kohli,a Shaurya Chakra awardee,kill himself Or,was he killed because he knew the culprits behind a fake encounter in Jammu and Kashmir 
The mystery behind the death of Kohli,who was serving with 18 Rashtriya Rifles in Lolab Valley of Jammu and Kashmir when he was found dead with gunshot wounds on April 30,2006,is yet to be resolved even after four years.
On August 28,defence minister A K Antony had assured Kohlis mother Veena,who claims her son was murdered,that the matter would be examined once again,as reported earlier.On Tuesday,however,both the ministry as well as the Army said no fresh probe had been ordered into the incident as yet.Defence secretary Pradeep Kumar has called for the relevant files and will look into them, said an official.
Kohlis family members are demanding an independent probe since they claim the brave officer was targeted by his seniors because he knew who was behind the killing of four porters in a fake encounter in Lolab on April 20,2004.Pointing at the glaring contradictions in the autopsy and medical reports,they say there was a cover-up to pass off the murder as suicide.
The Army,on its part,has claimed Kohli was on psychotropic drugs since he was depressed due to serious personal and marital problems and it was a clear case of suicide.
Kohlis sudden death,just two months after he was awarded the Shaurya Chakra,the countrys third-highest gallantry award in peacetime,had wreaked havoc on his family.His father had suffered a stroke,and died a day after the officers cremation.

Pc0081700.jpg
WAITING FOR JUSTICE: Defence minister A K Antony had assured Kohlis mother Veena that the matter would be examined once again



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Chola statue: TN team meets Modi

Ajitha Karthikeyan | TNN

Chennai: Chances of getting back the 11th century bronze statue believed to be that of great Chola king Rajaraja I from a private museum in Ahmedabad brightened after a high-level team from Tamil Nadu,led by school education minister Thangam Thennarasu,made a representation to Gujarat chief minister Narendra Modi and museum authorities in this regard.
A day after calling on Modi and apprising him of the significance and sensitivities attached to the Chola statue,the team visited the Calico Museum of Textiles on Tuesday and handed over a letter written by chief minister M Karunanidhi,requesting the museum authorities to gift the statue to the state.With Tamil Nadu set to celebrate later this month the millennium of the world famous Brahadeeswarar Temple (Big Temple) built by Rajaraja I,there has been a popular demand that the government should get back the statue from the museum,managed by Sarabhai Foundation.
The bronze statue,which according to temple inscriptions was made by Thennavan Moovendha Velan the chief administrative officer of the Big Temple during the lifetime of Rajaraja I (circa 1010 AD),was acquired in 1940s by trust founder Gautam Sarabhai.A statue of his queen,Lokamadevi,is also a prized possession of the museum.
The team,which also comprised state tourism secretary V Irai Anbu,renowned archaeologist Dr R Nagaswamy and historian Kudavayil Balasubramaniyan,met Sarabhai Foundations managing trustee Gita Sarabhai and made a direct request,besides seeking Modis help to resolve the issue.
Calico Museum director D S Mehta told TOI that the team met our managing trustee and gave a letter written by the chief minister.However,weve asked them to give us evidences in writing to prove that the statue is that of the Rajaraja. 
Once they provide us evidence by archaeologists,we will place it before our trustees and consultants for discussion and take a decision.Unless and until they give the evidence in writing,we cannot comment on the issue, he said.

Pc0070900.jpg
BONE OF CONTENTION: The statue at Calico museum


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆஸ்திரியாவில் பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
aPlus.gifக்கள்

ஆஸ்திரியாவில்    பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
வியன்னா, செப்.7-
ஆஸ்திரியா நாட்டில் உள்ள டொனாவ்டேட் நகரை சேர்ந்தவர் நடாஷா காம்புஷ்க் (22). 10 வயது சிறுமியாக இருந்தபோது இவள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.
மிகவும் அழகாக இருந்த அவளை பிரிக்லோபில் (44) என்ற நபர் ஒரு வேனில் கடத்தி சென்றான். பின்னர் வியன்னாவில் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் குடோனில் அடைத்து வைத்தான்.
பின்னர் அவளை அடித்து உதைத்து சித்ரவதை செய்தான். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தி “செக்ஸ்” சித்ரவதை செய்தான். அவளை வெளியே விடாமல் 8 ஆண்டுகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தான்.
இந்த நிலையில் அங்கிருந்து தப்பி வெளியே வந்து போலீசில் புகார் செய்தாள். உடனே போலீசார் பிரிக்லோபில்லை கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய அவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

நடாஷா காம்புஷ்சுக்கு தற்போது 22 வயதாகிறது. இவள் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறாள். அதில் தான் கடத்தப்பட்டு செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டதை மிக உருக்கமாக தெரிவித்து இருக்கிறா
ள்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_002_005-direct.jpg?w=132&h=30007_09_2010_001_005-movie.jpg?w=300&h=290

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_016_003-cell.jpg?w=300&h=126

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_007_027-pc.jpg?w=300&h=228

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_010_012-adopt.jpg?w=300&h=209

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_006_039-aryavathi.jpg?w=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_005_011-kallushop.jpg?w=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காஷ்மீருக்கு சுயாட்சி கொடுத்தால் தவறில்லை!

Kalai%201.jpg

 



கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. அதில், காஷ்மீரில் தற்போது நிலவிவரும் கலவரச்சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்த விவாதத்தில், பல கட்சிகளும் பல்வேறு தீர்வுகளை முன்வைத்துள்ளன. “தெருவில் கல்லெறிந்து போராடும் இளைஞர் கூட்டத்தை மென்மையாகக் கையாளும் முறைகளை படைப்பிரிவினர் கண்டுபிடிக்க வேண்டும்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Kalai.jpgஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியது எல்லோரையும் கவர்ந்தது. அதில் காஷ்மீரிகளின் உள்ள கிடக்கையையும் எதிர்பார்ப்புகளையும் விளக்கியதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (றிளிரி) பகுதியை மீட்பது குறித்தும் அவர் நினைவுபடுத்தினார். 1993&ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கான சுயாட்சி தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது குறித்து வலியுறுத்தினார்.

அவரது இந்த கோரிக்கையின் பின்னே ஒரு வரலாறு உள்ளது. இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைக்கு மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தங்கள் நிலையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. காஷ்மீரின் அப்போதைய மன்னர் ஹரிசிங் தனித்து இருக்க முடிவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானிய பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய போது, அதை தடுக்க முடியாத ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தபோது, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட 2/5 பகுதியை மீட்கமுடியாமல் போனது. 

ஆனால் மன்னர் ஹரிசிங்கை எதிர்த்து, ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் கீழ், இந்தியாவுடன் இணைவதற்காக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் போராடினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர்கள் போராடினர். உழுபவர்களுக்கு நிலம் பிரித்து தரப்படவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. தவிர, மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் கோரும் அவர்களது கோரிக்கையும் 1952-ல் ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே கோரிக்கையை ஆதரித்து 1944-லிலேயே தேசிய மாநாட்டுக் கட்சியின் கோபோர் மாநாட்டில் கம்யூனிஸ்டுகளால் கொண்டு-வரப்பட்ட தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்பு, காங்கிரஸ் கட்சி அதிகாரக்-குவிப்பில் இறங்கியது. மாநில உரிமைகளை மிதித்தது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயாட்சி உரிமையை வலியுறுத்தியதற்காக, 1953-ல் ஷேக் அப்துல்லாவின் அரசு கலைக்கப்பட்டு, அவர் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். இந்தியாவுடன் இணைந்திருப்பதற்கு இறுதிவரை உறுதியோடு போராடிய அவருக்கு ஏற்பட்ட கதி இதுதான். இன்று அவரது மகன் பரூக் அப்துல்லாவும் அதே உணர்வுடன்தான் பேசுகிறார். “எல்லாவிதத்திலும் தோல்வியடைந்த பாகிஸ்தானுடன் இணைய காஷ்மீர் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆனால், தனிக் காஷ்மீரம் என்ற பிரிவினைவாதிகளின் குரலுக்கு அவர்கள் செவிசாய்க்கும் ஆபத்து உருவாகியுள்ளது. இந்திய அரசு உடன் செயல்படாவிட்டால், அது நிகழும்” என்று அவர் கூறியபோது, பி.ஜே.பி. தவிர மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதற்கு பலத்த ஆதரவு இருந்தது. ஆனால், காஷ்மீருக்கு மட்டும் மாநில சுயாட்சி வழங்கினால், மற்ற மாநிலங்களும் அதே கோரிக்கையை முன்வைக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறது.

Kalai%203.jpg“பல்வேறு மொழி பேசும், கலாசார வேறுபாடுகளைக் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சிதான் மத்திய அரசு” என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை மத்தியில் ஆண்டு வருபவர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர். அவ்வாறு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்படுவதால், தேசத்தின் ஒருமைப்பாடு மேலும் வலுப்பெறும் என்பதற்கு அமெரிக்காவின் அரசியல்முறை சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் இதில் சாதனையே படைத்தது. அங்கு தேசிய இனப்பிரச்னை எழவே இல்லை. ஐ.நா.வின் மனித உரிமைக் கழகமும் இதை ஆதரிக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பிரிவினை-வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து, காஷ்மீர் மக்கள் வரலாறு காணாத அளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். மத்திய ஆட்சி-யாளர்-களின் தொடர்ந்த நிராகரிப்புகளுக்குப் பின்பும் காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீதிருந்த தங்களது நம்பிக்கையை இதன்மூலம் எதிரொலித்தனர். ஆனால், பயங்கரவாதத்தை அடக்குவது என்ற பெயரால் சிறப்பு அதிகாரம் கொண்ட துணை ராணுவப் படையை அங்கு குவித்து, தொடர்ந்து அட்டூழியங்கள் புரியச் செய்து, அம்மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டு விட்டது.

காஷ்மீரில் நடப்பது மக்களின் தன்னெழுச்சியான போராட்டம். அங்கு போராடும் மக்களின் எண்ணங்களை அரசு புரிந்து கொண்டு செயல்படவேண்டும். அங்குள்ள படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை உடன் ரத்து செய்து, படைகளை நிலைமை சீர்படுத்துவதற்கு ஏற்ப விலக்கிக் கொள்ளும் உறுதிமொழியுடன் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களைத் தவிர்த்து, மற்றவர்களுடன் பேச்சுவார்த்தையை உடனே துவங்குவதுதான் அரசின் முன்னுள்ள ஒரே வழி. சட்டமன்றத்தில் சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பேசி, சுயாட்சி வழங்குவது அடுத்த கட்ட நடவடிக்கை. 

Kalai%202.jpgமத்தியில் தனித்து ஆட்சி செய்ய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க மட்டும் வாய்ப்புள்ள இன்றைய நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் சுயாட்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது. இக்கோரிக்கையை வலுவாக முன்வைத்த திராவிடக் கட்சிகள்கூட, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தங்கள் கோஷத்தின் முதல் பகுதியைப்பற்றி கவலைப்படுவது இல்லை. 1957-ல் தனது தேர்தல் அறிக்கையில், பிரிந்து போகும் உரிமையைக் கோரிய தி.மு.க., இன்றைக்கு மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதையே குறிக்கோளாக்கிக் கொண்டுள்ளது. எனவே காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கினால், எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்கும் நிலையில் கூட பல மாநில அரசுகள் இல்லை. மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் கூட்டாக உள்ள உரிமை பட்டியலில் (நீஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) உள்ள பல சட்டப்பிரிவுகளை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றும்போது கூட இக்கட்சிகள் வாய் திறப்பதில்லை. 

இதையெல்லாம் மனதில் கொண்டு காஷ்மீர் மக்களை இந்திய அரசு வென்றெடுக்காவிட்டால், காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்று கூறிவரும் சீனாவின் கரமும் வலுப்பெறும் ஆபத்து உள்ளது. அதன்பிறகு, காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயமும் ஏற்படலாம்! 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_09_2010_001_005-sa-22.jpg?w=162&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே கடன்: 
மோசடி பணத்தில் சினிமா எடுத்த பாதகர்கள்!

Trichy%203.jpg



குடும்பத்துக்கு இருக்கும் 50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக வேலை தேடி துபாய் போனவருக்கு இப்போது 70 லட்சம் ரூபாய் கடன்! என்னது..? 

ஆமாம்... ஒருவர் இருவர் அல்ல, சம்பாதிப்பதற்காக துபாய் போன சுமார் 150 தமிழர்களின் நிலைமை இதுதான். 

Trichy%202.jpg‘துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எங்களது அல் தவா கான்கிரீட் கம்பெனி, அல் லிஜிமா பிளாஸ்டர்- டைல்ஸ் கான்ட்ராக்ட், ஆசியா- கல்ப் டெக் கான்ட்ராக்ட் உள்ளிட்ட 16 நிறுவனங்களில் பணியாற்ற கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீசியன் தேவை’ 

-இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து இந்தியா முழு-வதி-லுமிருந்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் திருச்சி மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த தினேஷும் ஒருவர். நடந்ததை அவரே விளக்கினார்.

‘‘2005-ம் வருடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தரசு என்பவரின் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிக்கு சேர்ந்தேன். என்னுடன் பணிபுரிந்த பலரிடமும், ‘உங்களுக்கு இனிமேல் சம்பளம் வங்கிக் கணக்கில் போடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பிக்கவேண்டும் என்று கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், சம்பளத்தை வழக்கம்போல் கையிலேயே கொடுத்தார்கள். 

இந்த நிலையில்தான் சிட்டி பேங்க் அதிகாரிகள் சிலர் எனது வீட்டுக்கு வந்து, ‘உங்கள் மகன் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். எப்போது கட்டுவீர்கள்?’ என கேட்டிருக்கிறார். இதை குடும்பத்தினர் எனக்கு போன் பண்ணிச் சொல்ல, அதிர்ச்சியாகிவிட்டேன். உடனே, எனது உரிமையாளர் முத்தரசிடம் கேட்டபோது, ‘எனது அண்ணன் செண்பககுமார் நிறுவன வளர்ச்சிக்காக கடன் வாங்கி இருக்கிறார்’ என்றார். மேலும் அதிர்ச்சியாகி செண்பககுமாரிடமே கேட்டேன். 

‘சில தேவைகளுக்காக நானே உங்கள் பெயரில் கடன் வாங்கி இருக்கிறேன். விரைவில் கடனை தீர்த்து உங்களை இந்தியா அனுப்பிவிடுவேன்’ எனக் கூறினார். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாததால் நான் தொடர்ந்து பிரச்னை செய்தேன். அதனால், கடந்த டிசம்பர் மாதம் எனது சிட்டி பேங்க் கடனை முடித்து என்னை அனுப்பிவிட்டனர்’’ என கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்த தினேஷ்... 

‘‘நான் இங்கு வந்தபிறகுதான் என் பெயரில் மேலும் 2 வங்கிகளில் இன்னும் 70 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருப்பது எனக்குத் தெரிந்தது. இப்போது செண்பககுமாரும் வங்கி மோசடிக்காக சிறையில் இருக்கிறார். என்னை தேடி மீண்டும் வங்கிக்காரர்கள் வந்தால் என்ன செய்வது?” என்று தேம்பித்தேம்பி அழுகிறார் தினேஷ். 

Trichy%201.jpgஇவரது உதவியுடன் துபாயில் உள்ள ராமசாமி நாராயணனுடன் பேசினோம். “தூத்துக்குடியைச் சேந்த செண்பககுமார், முத்தரசு ஆகியோர் ஷார்ஜா தூதரகத்தில் பணியாற்றும் ஜமால் ஒபைட் அல்மசூரி என்ற அரேபியரின் பெயரில் துபாயில் மெஸ்கோ மெரைன் சர்வீசஸ் மற்றும் 16 துணை நிறுவனங்களை லைசென்ஸ் பெற்று நடத்தி வருகின்றனர். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஜேக்கப் தாமஸ் என்பவர் இவர்கள் நிறுவன பங்குதாரர். வந்த வருமானத்துடன் மேலும் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு துபாயில் 2006 மற்றும் 2007-ம் ஆண்டு இளையராஜாவை அழைத்து 2 இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதுபோன்ற செலவுகளுக்காக இவர்களிடம் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றனர். 

தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் ஆவணங்கள் இவர்களிடமே இருந்ததால் இது எளிதாகி உள்ளது. தொழிலாளர்களிடம் வங்கி கணக்கு தொடங்கி தருகிறேன் என்று கையெழுத்து பெற்று, சில ஆயிரங்கள் சம்பளம் பெறும் எங்களுக்கு, இவர்களே சில லட்சங்கள் சம்பளம் என போலி சம்பளச் சான்றிதழ் தயாரித்து கடன் வாங்கியுள்ளனர். மேலும் தொழிலாளர்களின் விசா காப்பியிலும் மாறுதல் செய்துள்ளனர். இதுபோல் இவர்கள் மொத்தம் ரூ.150 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளனர்.

இந்த கடன் தொகையில்தான், கூல் புரொடெக்ஷன்ஸ் என்ற பெயரில் ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, பரத் நடித்த ‘ஆறுமுகம்’, மற்றும் ‘பிடிச்சிருக்கு’ ஆகிய படங்களை தயாரித்தனர். இசை நிகழ்ச்சிக்காக வந்த இளையராஜா, எஸ்.பி.பி. உள்ளிட்ட திரை பிரபலங்களுக்காக துபாயில் கிலோ கணக்கில் தங்க நகைகள் வாங்கி உள்ளனர். இது தவிர செண்பககுமாரின் 2 மனைவிகளும் சென்னை, கேரளாவில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். வங்கி அதிகாரிகள் எங்களது அலுவலகத்திற்கு வந்தபோதுதான் எங்கள் பெயரிலும் கடன் இருப்பது தெரியவந்தது. இதைத் தவிர எங்களது விசாவிற்கும் அவர்கள் கட்டணம் செலுத்தாததால் வெளியில் செல்லும் நடைபாஸ் (பதாக்கா) இல்லாமல் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை’’ என்ற ராமசாமி நாராயணன் தொடர்ந்து,

Trichy%204.jpg‘‘6 மாதங்களுக்கு முன்பு துபாயில் உள்ள சிட்டி பேங்கில் கடன் மோசடி செய்ததாக செண்பககுமாரை கைது செய்துவிட்டனர். செண்பககுமாரின் தம்பியான முத்தரசு துபாயில் ஏற்கனவே ரூ.70 கோடி வரை கடன் பெற்று, இந்தியாவிற்கு வந்து தூத்துக்குடியில் ஸ்டார் ஓட்டல் வைத்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். எங்களை வங்கி கடன்தாரர் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவில் உள்ள செண்பககுமாரின் சொத்துக்களை கைப்பற்றி வங்கிகள் தங்கள் பணத்தை மீட்கவேண்டும். இந்த பிரச்னைகளை எல்லாம் இந்திய தூதரகம் மற்றும் துபாய் தூரகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. யாரோ கடன் பெற்று உல்லாசமாய் வாழ்ந்ததற்கு அப்பாவிகளான 150 பேருக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கொடுமையாக இதுபோல கடன் பெற்றதாக வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் வாய்மேட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், துபாயிலேயே தற்கொலை செய்துகொண்டுவிட்டார் ” என்றார்.

தலைமறைவான மற்றொருவரான முருகன், “செண்பககுமாரின் நிறுவனங்களுக்கு ஸ்பான்சராக உள்ள அரபி மசூரியன் எங்களிடம் வந்து நான் கடனை தீர்த்து உங்களை காப்பாற்ற முயற்சி செய்கிறேன். புகார், பத்திரிகை செய்தி என்று போனால் நீங்கள் இருக்கும் இடத்தை வங்கி அதிகாரிகளுக்கு காட்டிகொடுத்து விடுவேன். சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்று மிரட்டுகிறார்” என்றார் அழுதபடியே.

இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வர், மத்திய அமைச்சர் நெப்போலியன், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்கள் என பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை தீர்வு எதுவும் வரவில்லை என்கின்றனர் கடனாளியாகி நிற்கும் குடும்பத்தினர்.

வழக்கம் போல் தமிழனை- தமிழன் ஏமாற்றும் இந்த பிரச்னையில் அரசுகள் ஆறப்போடாமல் துரித நடவடிக்கை எடுத்து 150 குடும்பங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திறந்தவெளி பல்கலை பட்டங்கள்:
-குழப்பத்தின் உச்சியில் அரசு ஊழியர்கள்!

University.jpg



பலருடைய எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்து, தமிழகத்தின் கடைக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் வரையில் தூக்கமிழந்து தவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் காரணம் தமிழக அரசின் ஒரே ஒரு அரசாணை. குழப்பங்களை மட்டுமே கொட்டிவைத்திருக்கும் அந்த அரசாணையின் பின்னணி?

2008-ம் ஆண்டில் சென்னை பிலிம் இன்ஸ்டி-டியூட்டின் முதல்வர் பதவி காலியானது. அந்த பதவிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலமாக நேரடியாக எம்.ஏ. படிப்பு படித்தவர்.

ஆனால், இவருக்கு அடுத்த நிலையில் இருந்த மதன் கேப்ரியேல் என்பவர் முறையாக பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு அதன்பிறகு முதுநிலைப் படிப்பு படித்தவர். ‘எனக்குத்தான் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும். திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலமாக எம்.ஏ., படிப்பு முடித்த ரமேஷுக்கு முதல்வர் பதவியை வழங்கியது தவறு...’ என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் கேப்ரியேல். 

இதனை விசாரித்த நீதிமன்றம், ‘பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாத முதுநிலை படிப்பு முடித்த ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கியது தவறு...’ என்று உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலம் படித்து முதல்வர் பதவி பெற்ற ரமேஷ் நீக்கப்பட்டு, பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முதல்வராக கேப்ரியேல் பொறுப்பேற்றுக் கொண்டார். 

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18 அன்று தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஓர் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதுதான், அரசு ஊழியர்கள் பலருடைய எதிர்கால வாழ்க்கையிலும் இருட்டைப் பாய்ச்சியிருக்கிறது

University%201.jpg. ‘திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலமாக முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இனிமேல் அரசு வேலைவாய்ப்புத் தரமுடியாது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்-படிப்பு, அதன்பிறகு முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததையே முறையான தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பதவி உயர்வும் வழங்கப்படும்...’ என்பதுதான் அந்த அரசாணை! 

இதனால், ஏற்கனவே திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலமாக நேரடியாக முதுநிலைப் பட்டப்-படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்து, பதவி உயர்வும் பெற்றவர்களின் நிலை என்ன? என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

இதுபற்றி அரசு ஊழியர் சங்க வட்டாரங்களில் பேசினோம். ‘‘முதலில் அரசின் இந்த உத்தரவு எந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வருகிறது என்கிற தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் படித்து அரசுப் பணிக்கு வந்து பதவி உயர்வு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளா? மற்றவர்கள் ஏமாளிகளா?

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு ஆசிரியர் பயிற்சி முடித்து பட்டயம் பெற்று பணியில் சேர்ந்த பலரும் பிறகு நேரடியாக எம்.ஏ., முடித்து அதற்கான பதவி உயர்வு பெற்று பணியில் இருக்கிறார்கள். பிறகு பி.எட்., என்கிற படிப்பையும் முடித்து மொத்தம் நான்கு ஊதிய உயர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நேரடியான எம்.ஏ., படிப்பு செல்லாது என்றால், அவர்களின் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் ரத்து செய்யப்படுமா? 

பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட தமிழக அரசின் 32 துறைகளிலும் இந்த முறையை பின்பற்றத்தான் அரசு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு பணியாளர்களை அரசுக்கு பணியமர்த்தும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இதற்கு நேர்மாறான நிலை நிலவுகிறது. 

‘திறந்தவெளி பாடத்திட்ட முதுநிலைப் பட்ட-தாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கலாம். ஆனால், இனிமேல் பணிக்கு அமர்த்தப்படுகிறவர்கள், திறந்தவெளி அமைப்புப் பாடத்திட்டம் மூலமாக நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால், அதனை தகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது...’ என்கிறார்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில். 

கடந்த மார்ச் மாதம் குரூப்-2 தேர்வு எழுதி, இரண்டு லட்சம் பேர் வரையில் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் எண்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் திறந்தவெளி பாடத்திட்ட முறையில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள்தான். அவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்தால், பணிவாய்ப்பு பெற முடியாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 2009-லேயே உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக வெளியிடப்பட்ட பிறகும், அதனை கண்டுகொள்ளாமல் பணியாளர் தேர்வாணையம் இருந்தது ஏன்? தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விவரங்களை கோரினால், ‘உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அப்போதைக்கு எங்களுக்கு எந்தத் தகவலும் கிடையாது...’ என்கிறார்கள். 

இதற்கிடையில், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் படிப்பு குறித்த விவரங்களும் அவர்களுடைய சர்வீஸ் ரெக்கார்டு புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். ஆனால், எந்த வகையில் அவர்கள் படித்து வந்தார்கள் என்பது அதில் தெளிவாக இருக்காது. லட்சக்-கணக்-கான அரசு ஊழியர்--களையும் அழைத்து, இனிமேல் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றால், அது நடைமுறையில் சாத்திய-மில்லாதது. எனவே, இந்தக் குழப்பத்தை எப்படி அரசு தீர்க்கப் போகிறது என தெரியவில்லை’’ என்று விளக்கமாக கூறினார்கள்.

இது தொடர்பாக பணியாளர் நலத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற அவ-மதிப்புக்கும் தமிழக அரசு ஆளாகிவிடக் கூடாது என்பதையும் மனதில் வைத்து, நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்கள்.

ஒருபக்கம் வருமானத்துக்காக திறந்தவெளி அமைப்புப் பட்டப்படிப்பை அனுமதிப்பதும், இன்னொருபக்கம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, ‘திறந்த வெளி’ பட்டப்படிப்பு படித்தவர்களை நசுக்குவதுமாக அரசுத் தரப்பு இரட்டை முகம் காட்டி வருகிறது. ஆக, இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களைக் காட்டிலும் குற்றவாளி என்றால் அது அரசுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!



p3a.JPG
விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )


அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

( நன்றி: விகடன் )



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_003_046baby.jpg?w=300&h=181
05_09_2010_013_025-kuzanthai.jpg?w=300&h=183


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா?

1.jpg
டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!

1.jpg

""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி. 

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார். 

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.1.jpg

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுமிகளுக்கு தயாரான தாலி!

1.jpg
""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?

1.jpg

""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.1.jpg

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயில் ஊர்களில் எமர்ஜென்ஸி கெடுபிடி!

1.jpg

தமிழக மக்களின் அடிப் படை உரிமைகளை, ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் திருப்பணியை பரவலாக்கத் தொடங்கிவிட் டது இந்தியத் தொல்பொருள் துறை.

தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் பரப்பளவில் 2 சதவிகித நிலத்திற்கு "பூட்டுப்' போடும் மத்திய அரசின் புதிய சட்டத்தைப் பற்றி செப்டம் பர் முதல் தேதி நக்கீரனில் "முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை' செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதேநாளில் குடந்தை தாரா சுரத்தில் இருந்து "குடும்ப அட்டை களையும் வாக்காளர் அட்டை களையும் திருப்பிக் கொடுக்கும்...' போராட்டத்திற்கான அறிவிப்பு வந்தது. 

யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம் பரியச் சின் னங்களில் கும்பகோணம் அருகிலுள்ள தாரா சுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்தக் கோயி லைச் சுற்றிலும் 300 மீட்டர் (சுமார் 1000 அடி) சுற்றளவிற்கு தடை செய்யப் பட்ட பகுதியாக வும், ஒழுங்குமுறைப் பகுதியாகவும் அறிவித்திருக்கிறார் கள். இந்த 1000 அடி சுற்றளவுக் குள் அமைந்துள்ள வீடுகளில் பழுது பார்க்கவோ, ஓடு மாற்றவோ, ஒயர் மாற்றவோ, பெயிண்ட் அடிக்கவோ கூடாது என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தாராசுரம் பொதுமக்களின் போராட்டக்குழுத் தலைவர் விஜய்யிடம் நடந்ததைக் கேட்டோம்.1.jpg

""25 வருடத்துக்கு முன்பு, இந்தக் கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. அவைகளை அகற்றி, இராஜராஜன் நகர்னு ஒரு இடத்தைக் கொடுத் தாங்க. அந்த இடத்தில் வீடு வாசலைக் கட்டினோம். சிலபேர் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்ப திடீர்னு வந்து இங்கேயும் எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு தடுக்கிறார்கள். பாதி கட்டியும் பாதி கட்டாமலும் கிடக்குது. ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் எல்லாம் ஒழுகும் நிலையில் இருக்கு. நாங்க எல்லாரும் பட்டா உள்ள பிளாட்டுகளைத்தான் வாங்கியிருக்கிறோம். எங்க சொந்த இடத்தில் எங்க உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார். உயிர் போனாலும் பரவாயில்லை. எங்க உரிமைகளை பறிகொடுக்க மாட்டோம்'' என்கிறார் விஜய்.

""அய்யா... உயிருக்கு ஆபத்து உண்டாக் கக்கூடிய தொழிற்சாலைகளை ஊருக்கு வெளியே ரொம்ப தொலைவில காட்டுக் குள்ள கட்டுவாங்க. கோயிலை எங்கே கட்டுவாங்க? ஊருக்கு நடுவில கட்டுவாங்க. கோயிலைக் கட்டிவிட்டு ஊரைக் காலிபண்ணுங்கனா என்ன அர்த்தம்? வருஷா வருஷம் திருவிழா நடத்தி, சொந்தஞ் சுருத்து களை வரவழைச்சுக் கொண்டாடி அன்ன தானம், விளம்பரம்னு செஞ்சதுனாலதானே இந்தக் கோயிலுக்கு பேரும் புகழும் வந்துச்சு. சுத்தி... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒண்ணும் இருக்கக்கூடாதா? அப்புறம் அது பாழடைஞ்ச கல்லறைத் தோட்டம் மாதிரி யில்ல ஆயிடும்? இந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் புகழ் சேர்ப்பதே இங்கே இருக் கிற சிற்பிகளும், ஓவியர்களும், பாத்திரம் செய்கிறவர்களும், நெசவாளர்களும்தானே.... எங்க வீடு வாச கடைகளுக்கு மட்டும் என் னத்துக்கு இவ்வளவு எமர்ஜென்சி கெடுபிடி?'' -கடைக்காரர் ராமபாக்கியத்தின் குமுறல்.

""மழையில வீட்டுச் சுவர் கரையுதேன்னு செங்கல்லை வச்சுக் கட்டினோம். வந்து தடுத்துப்பிட்டாக. வர்ணம் பூசப் பிடாது. சுண்ணாம்பு அடிக்கப் பிடாது. ஒட்டடை அடிக்காதேங் கிறாங்க. இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது?'' -இது குடும்பத் தலைவி பத்மாவின் ஆதங்கம்.

""அதிகாரிகள் செய்யும் அதிரடிக் கட்டுப் பாடுகளால் தாரா சுரம் ஊரே அழியப் போகுது. தமிழர் களை எல்லாம் விரட்டிவிட்டு கோ யிலை வெளிநாட் டுக்காரன்ட்ட கொ டுக்கப் போகிறார் களா?'' -இது மகேஷ் தமிழ்வா ணன் கேள்வி.

அரசின் தடை உத்தரவுகளை நிறை வேற்றிக்கொண்டி ருக்கும் தாராசுரம் பேரூராட்சியின் இ.ஓ.வான மோகன் தாஸிடம் இதைப் பற்றிக் கேட்டோம். ""எங்களுக்கு மேலிடத்து உத்தரவுங்க. உத்தரவை மீறினா ஒரு லட்சம் அபராதம். 2 வருஷம் சிறைனு அறிவிச்சிட் டாங்க. அதனாலதான் பாதுகாப்பு வேலையில கவனமா இருக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அவர்.

""தொன்மை மிகுந்த பண்பாட்டு கலைச் சின்னங்களை பாதுகாத்து எழில் குன்றாமல் வருங்காலத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமைதான். கோயிலையொட்டி பல நூறடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் தோண்டியதாலும், புதிய பிரமாண்ட கட்டடங்களுக்கு பல அடி ஆழ அஸ்திவாரப் பள்ளம் தோண்டியதாலும்தான் காளஹஸ்தி ராஜகோபுரம் நொறுங்கியது. திருவரங்கம் ராஜகோபுரம் வெடித்துக் கொண்டு நிற்கிறது. 

இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களை கோயிலையொட்டி செய்யத் தடை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, முன்னூறு, நானூறடி தாண்டியுள்ள வீடுகளுக்கு மராமத்து செய்வதைக்கூட தடுத்தால் எப்படி மக்கள் வாழ முடி யும்?'' என்பதுதான் தமிழகத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் கேள்வி!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பதற வைக்கும் நிஜ வில்லன்!

1.jpg
தனது கிட்னாப் அதிரடிகளால்... அரியலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தியின் குடும்பத் தைப் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறான்... அவரது முன்னாள் கார் டிரைவரான மணிகண்டன்.

கடந்த ஜூன் மாதம்... 9-ஆம் வகுப்பு படிக்கும் அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமியின் மகன் தர்மதுரை.. திடீரென காணாமல் போக... ""கடத்தி யது நான்தான். பணம்கொடுத்தால் உயிரோடு விடுவேன்''’என செல்போனில் வீரப்பா சிரிப்பு சிரித்து அமரமூர்த்தியின் குடும்பத்தையே பதறவைத்தான் மணிகண்டன். இரண்டு நாள் கழிந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கிளியனூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த இனோவா காரில் இருந்து... தர்மதுரையை மீட்டனர் காக்கிகள். கடத்திய மணிகண்டனோ பிடிபடாமல் எஸ்கேப்பாகி விட்டான்.

இந்தநிலையில்... கடந்த 30-ந் தேதி இதே பழனிச்சாமி மூத்தமகன் கவுசிக்கைக் குறிவைத்தான் மணிகண்டன். ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கிப் படித்துவந்த கவுசிக்கை... யாரோ உறவினர் பேசுவதுபோல் செல்போனில் பேசி விடுதியில் இருந்து வெளியே வரவழைத்தான். தன் நண்பர்கள் இருவர் சகிதம்... கவுசிக்கை அப்படியே கோழியை அமுக்குவதுபோல் அமுக்கி காரில் பலவந்தமாக ஏற்றினான். ’""கவுசிக்கைக் கடத்தியாச்சு. பணத்தை ரெடி பண்ணுங்க''’ என அமரமூர்த்தி குடும்பத்துக்கு... தகவல் மூலமே இரண்டாவது முறையாய் பகீர் தந்தான். 

"ஓவர். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பேக் சைட்ல இருக்குற ஆனந்த் ஓட்டலை... டவர் காட்டுது. அங்க சர்ச் பண்ணுங்க ஓவர்'’என உயரதிகாரிகள் வாக்கிடாக்கி மூலம் உத்தரவு பிறப்பிக்க... டி.சி.ருபேஷ்குமார், மீனா தலைமை யிலான டீம் ஓட்டலை முற்றுகையிட்டது. இப்போது ஓட்டலை விட்டு செல்போன் அடையாளம் நகர்கிறது என மீண்டும் தகவல் வர... அட இப்பதாங்க.. ஒரு ஆம்னி வேனில் ஒரு காலேஜ் பையனோட மூணு பேர் போனானுங்க’ என்றனர் ஓட்டலில் இருந்தவர்கள். இதைத் தொடர்ந்து திருச்சியின் 9 செக் போஸ்ட்டுகளிலும் போலீஸ் டீம் அலர்ட் டாக நின்றது. இதை உணர்ந்த மணிகண் டன் டீம்... கவுசிக்கை இனி கொண்டு போகமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு.. காவேரி ஓடத்துறை அருகே இறக்கி விட்டுவிட்டு எஸ்கேப் ஆக.. இந்தத் ததவல்...டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்குப் போக... இதைத்தொடர்ந்து சத்திரம் எஸ்.ஐ. இந்திரா டீம்... காயத்தழும்புகளோடு இருந்த கவுசிக்கை மீட்டது. மீட்கப்பட்ட கவுசிக் நம்மிடம் ""இந்த முறை உன்னை உயிரோடு விடறேன். ஆனா விரைவில் மறுபடியும் கடத்துவேன்னு மிரட்டிட்டுப்போனான் மணி''’என்றார் வெட வெடப்பு மாறாதவராக.

அரியலூர் எஸ்.பி.அலுவலகக் காக்கிகளோ “""மணிகண்டன் டேஞ்சரஸ் பேர்வழி. சென்னையில் இருக்கும் கூலிப்படைகளோட தொடர்பு உள்ளவன். இவன் அப்பா சரவணனும் காங்கிரஸ்காரர்தான். தன் பையன் சரியில்லைன்னு அவர் எம்.எல்.ஏ.கிட்ட வருத் தப்பட... அவனை எங்கிட்ட விடுப்பா, சரியாய்டு வான்னு எம்.எல்.ஏ. அவனை டிரைவரா வச்சிருந்திருக் கார். இருந்தும் அவன் திருந்தலை. இப்ப அவர் குடும் பத்திலேயே விளையாடறான்''’என்றார்கள் எரிச்சலாய்.

முதல் கடத்தலிலேயே எஸ்கேப் ஆன மணிகண்டன்... அடுத்தக் கடத்தலையும் தைரிய மாக அரங்கேற்றி.. போலீஸுக்கே தில்லாய் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறான். அவனை எப்போது மடக்கப்போகிறார்கள் காக்கிகள்?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CONTINUING PROTESTS 
Anxious parents oppose high fees as school fails to abide by govt norm

M Ramya | TNN

Chennai: Many parents of children studying in Union Christian Matriculation Higher Secondary School in Chetpet on Friday protested against the management for raising the fees without prior intimation in the middle of the academic year.Around 100 of them staged a protest in front of the school for two hours.
James Vivek,a parent,said,I paid Rs 2,410 during the first term and was told to pay Rs 2,490 in the second term,but when I went to pay the fees the other day I was told to pay Rs 3,915.The school sends us circulars for even small issues,why couldnt it inform us about this earlier.Even the books are very expensive.I paid Rs 1,500 last year.This year they asked me to pay Rs 5,000. 
The protest is the latest in a series of such incidents during the last couple of months,when parents of several students took to the streets to oppose schools not abiding by the government ruling that they follow the structure proposed by the Fee Determination Committee.Though the government had made it clear that schools can expect the revised fee structure only from the next academic year and that they had to adhere to the proposed fee structure in the meantime,several schools have not paid heed to it.
Managements plead that they cannot collect the fees proposed by the fee committee because it is too low.S Gunasekaran,president,High Level Committee Federation of Association of Private Schools in Tamil Nadu,said,In the last seven months,schools have been fighting a prolonged battle on several fronts for their survival.This situation has made our day-to-day functioning difficult.All our expansion plans,introduction of new facilities,technology and welfare measures have been put on hold.Teachers and other staff members have been faced with uncertainty too.Parents are also anxious. The stalemate continues.
Meanwhile,some schools had appealed against the decision of the Fee Determination Committee headed by Justice K Govindarajan,in the Madras high court.The last of the arguments were heard on Friday,and orders have been reserved.All the stakeholders await the verdict in this case eagerly as it will also define the future course of action.
ramya.m@timesgroup.com


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Umashankar hits out at Karunanidhi a day after reinstatement


CHENNAI: A day after his suspension was revoked by the state government, IAS officer C Umashankar on Friday accused Tamil Nadu chief minister M Karunanidhi of harassment by framing false charges against him for being honest in service. 

Umashankar told mediapersons that without Karunanidhi's knowledge, he could not have been suspended from service. "I have been targeted with the chief minister's full knowledge. IAS officers who issued the suspension order were mere tools in the hands of the political executive. It was improper on the part of the government to give a press release on my suspension. My suspension was meant to be a shock treatment to the IAS and IPS officials in the state," he charged. 

His wife Suryakala, son Sugeeswaran and daughter Tharunika were present at the media briefing. 
Umashankar, who was under suspension for 43 days, however, thanked the government for revoking the suspension and said he would join duty on Monday as managing director of the Tamil Nadu Small Industries Corporation

About the charge that he produced a fake caste certificate to join IAS, he said while his mother was Christian, his father was Hindu. "All my 11 siblings have all along remained Hindus. But my mother named me Ashok and got it recorded in my SSLC book that I was a Christian Pallar. My father was agitated over that and there used to be a lot of violence at home. Finally, when I was doing my final year in college, my father got me officially converted to Hinduism, changed my name to Umashankar and also got it notified in the government gazette." 

He said the community certificate was verified by state government officials twice, based on a request from the Union Public Service Commission in 1990. On the government's instruction, the Tirunelveli collector had once again summoned him for yet another inquiry about the community certificate, he said, adding that the state government had no locus standi to initiate such an inquiry when his employer was the UPSC or the central government. "Let me make it clear now. For the past two years, I am a practising Christian. However, I have not changed my religion legally."

Read more: Umashankar hits out at Karunanidhi a day after reinstatement - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Umashankar-hits-out-at-Karunanidhi-a-day-after-reinstatement/articleshow/6489476.cms#ixzz0yX3pmf9N


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ancient swords unearthed near Vedaranyam

NAGAPATTINAM: Five swords and a dagger, believed to be centuries old, were unearthed by labourers from an agricultural field in a village near Vedaranyam in Nagapattinam district on Friday. 

The villagers stumbled upon the weapons when they were tilling the land owned by Kalitheerthan at Aayakkaranpulam village. They were found at a depth of two feet in the field. Though revenue officials are not sure of the age of the weaponry, they said that it could be centuries old. 

The age of the weapons and the material with which they were made crafted are not known, said tahsildar S Karunankaran. He said the weapons were taken to the taluk office in Vedaranyam where experts from the state archaeology department are likely to visit to ascertain their origin. 

After the first sword was found, Kalitheerthan and other workers began carefully digging the area and found the remaining pieces. The find attracted curious villagers who thronged the spot to have a look at the weapons that had aesthetically designed hilt. 

Three of the swords were double-edged. One sword was found in three fragments. Even the other swords, more than three feet long, were fragile. The official said that though idols had been unearthed from the Vedaranyam as well as Nagapattinam several times in the past, weapons are uncommon.

Read more: Ancient swords unearthed near Vedaranyam - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Ancient-swords-unearthed-near-Vedaranyam/articleshow/6488705.cms#ixzz0yX3XItON


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100904a_008101006-teacher.jpg?w=300&h=153
04_09_2010_008_043-azad.jpg?w=223&h=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_003_013-slice1.jpg?w=300&h=246

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100904a_00210a011-arisi.jpg?w=300&h=205
20100904a_004101009-darumapuram.jpg?w=204&h=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மூட்டைப் பூச்சியினால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தலாம்
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது. உலகம் முழுவதும் அனைவரையும் பயமுறுத்திகொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு வந்தாலும் யாரும் மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதற்கு தீர்வாக தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் எய்ட்ஸ் கலந்த ரத்தத்துடன் மூட்டை பூச்சியை கலந்து விட்டனர். ஆச்சரியமூட்டும் வகையில் மூட்டைப்பூச்சி சாக வில்லை. அதற்கு பதிலாக எய்ட்ஸ் கிருமிகள் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். என அதன் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ACCIDENT RELIEF 
Pay victim for future loss of income: SC

Dhananjay Mahapatra | TNN

New Delhi: If a person suffers permanent disability in an accident caused by a vehicle,then the compensation due to him should be computed taking into account not only his present earnings but also future loss of income,the Supreme Court has ruled.
The SC distinguished between claim for damages and compensation and said damages were given for an injury,whereas compensation stood on a slightly higher footing.While damages were given for atonement of injury caused,the intention behind compensation was to put back the injured party as far as possible in the same position,if the injury has not taken place,by way of grant of pecuniary relief,it said.
The case before a bench,comprising Justices G S Singhvi and A K Ganguly was of painter Yadava Kumar,who in a road accident in Karnataka suffered 30-40 % permanent disability,preventing him from resuming his profession or even taking up manual labour.
The high court had granted him compensation of Rs 72,000,rejecting his plea to consider the future loss of income as he could no longer do painting jobs.The SC took a serious view of this incompassionate approach of the HC.Justice Ganguly,said,In this case,the approach of the HC in totally refusing to grant any compensation for loss of future earnings is not a correct one. 
While ordering the National Insurance Company to pay Kumar Rs 2 lakh,which was computed by the SC after taking into account future loss of earnings,Justice Ganguly said,In the determination of the quantum of compensation,the court must be liberal and not niggardly in as much as in a free country,law must value life and limb on a generous scale. 
It added,It goes without saying that in matters of determination of compensation,both the MACT and the courts are statutorily charged with a responsibility of fixing just compensation.It is obviously true that determination of a just compensation cannot be equated to a bonanza.At the same time,the concept of just compensation obviously suggests application of fair and equitable principles and a reasonable approach on the part of the tribunals and courts.

Pc0101500.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CBI to probe Justice Yadav in land scam

CJI Gives Permission For Investigation;Agency Likely To Reopen The Cash-At-Door Case 

TIMES NEWS NETWORK

New Delhi: Chief Justice of India S H Kapadia has given permission to CBI to probe the alleged role of Justice Nirmal Yadav of Uttarakhand High Court in the Solan land scam and this could lead to reopening of the controversial cashat-door episode.
Transferred to Uttarakhand this year after being kept off judicial work for more than a year in her parent Punjab and Haryana HC,Justice Yadav could face questioning by CBI which claims to have evidence to link the alleged mistaken delivery of Rs 15 lakh at Justice Nirmaljit Kaurs residence,though the money was actually meant for Justice Yadav.
Though the CBI extensively probed the delivery of cash and its alleged link to former additional advocate general of Haryana Sanjeev Bansal and a Delhi hotelier Ravinder Singh,the case was closed after requisite sanction was not given by the relevant authorities.
Having filed closure report in the trial court last year and after transfer of Justice Yadav to Uttarakhand HC,CBI sought revival of the case by deciding to get to the bottom of the irregular purchase of land in Solan by Justice Yadav and a large number of her kin.
The CBI claims that the cash delivered mistakenly at the doorstep of Justice Kaur was actually meant for Justice Yadav for payments to be made towards the land deal.What hindered its progress in the probe was an observation in the file by the investigating officer that fresh permission from the CJI was required for proceeding with the probe into the land scam.
With CBI getting permission now from CJI Kapadia,which will now be formalised by an order from President Pratibha Patil,she being the appointing authority for HC judges,the agency thinks it can now go ahead with the probe and come out with the complete story linking the land scam to the cash-atdoorstep incident.
The controversy came to light on August 13,2008,when Justice Kaur discovered Rs 15 lakh at the door of her official residence,but alleged that though actually meant for Justice Yadav,it was delivered at her place because of mistaken identity.Justice Yadav was asked to be off judicial work pending the in-house inquiry by a three-judge panel set up by the then CJI.In addition,CBI also started a probe into alleged irregular land purchases by Justice Yadav in Himachal Pradesh.
But with the three-judge panel not giving any concrete proof and CBI being asked not to proceed with the chargesheet on the advice of then attorney general due to lack of evidence,the case was closed and Justice Yadav resumed judicial work.

Pc0101100.jpg
UNDER SCANNER: The CBI has sought revival of the case by deciding to get to the bottom of the irregular purchase of a property in Solan (above) by Justice Nirmal Yadav


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ten more arrested for attack on hotel,house

TIMES NEWS NETWORK

Chennai: The police on Thursday arrested 10 more persons from Kodambakkam,T Nagar and Saidapet and detained 26 others in connection with the attack on a hotel and a house in Little Mount and Velachery Road late on Tuesday night.Ten autorickshaws were seized.
On Sun TV chief executive officer Hansraj Saxenas name in the police first information report (FIR),a senior officer said: We are looking into the legal issues.We are not sure whether Saxena was behind the attacks. 
The Guindy police registered a case based on the complaint by the manager of Checkers Hotel,Chandrasekar,under the IPC and the Tamil Nadu Private Property Damage and Loss Act against Saddique and 100 others.
Based on the complaint lodged by Soumithry Dharmasenan (65),the Guindy police registered a case under the IPC and the Tamil Nadu Prevention of Women Harassment Act against Hansraj Saxena and 30 others.
A police officer said,We arrested five persons on Wednesday and another 10 on Thursday.All the 15 have been remanded in judicial custody. Initial inquiries revealed that those who carried out the two attacks were hired by two persons called Balaji and Balu.We have not yet identified the prime accused.The probe is on.Once the prime accused is located,we will collect the call details of the mobile phones to tie up the links, another officer said.
According to the police,the incidents were a fallout of a scuffle involving two gangs at Neelankarai on Sunday.Saxena told TOI that his friends had lodged a complaint with the Neelankarai police after a drunk person fell on their car. In her complaint,Soumithry Dharmasenan said her son had told her about a few persons beating him and his friends at Neelankarai beach.Dharmasenan said that when she planned to lodge a complaint she got a phone call from a person who identified himself as Saxena.The caller allegedly threatened her saying that if she complained to the police,her son would be butchered and obscene pictures of her daughter published.
At the Checkers Hotel,the police said,a gang came in search of Siddharth,a friend of the hotel owner,Vinoj Selvam.The hotel authorities said the gang members damaged properties worth over Rs 40 lakh and looted Rs 2.6 lakh from the safe and demanded that Siddharth be produced before them in 24 hours.

Pc0031500.jpg
WHODUNNIT: The Checkers Hotel at Little Mount damaged by the goons



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!

1.jpg

""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி. 

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார். 

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.1.jpg

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?

1.jpg

""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.1.jpg

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுமிகளுக்கு தயாரான தாலி!

1.jpg
""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மருத்துவமனையில் குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாய்
ஆகஸ்ட் 31,2010,03:53 IST
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை போட்டுவிட்டு தாய் ஓடிவிட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை எக்ஸ்-ரே பிரிவு அருகே நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அது மஞ்சள் நிற உடையணிந்த ஒருமாத ஆண் குழந்தை என தெரிந்தது. அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் நின்ற இளம் பெண், மூதாட்டி அக்குழந்தையை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது, அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘பரதம் உள்ளே... கரகம் வெளியே..! ’’
பெரிய கோயில் ‘ஆயிர’விழாவில் கலைத் தீண்டாமை!

Thanjai%201.jpg


தஞ்சை பெரிய கோயிலில் அதைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்கு சற்றும் குறைவில்லாத ‘ராஜ மரியாதை’ நாட்டுப்புறக் கலைகளுக்கும் கிடைத்திருக்கிறது. 

Thanjai%202.jpgஆமாம். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு இன்றுவரை இந்தக் கோயிலுக்குள் இடம் இல்லை. அதேபோல, பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவுக்காக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கும் அரசு விழாவில்... கோயிலுக்குள் பரதநாட்டியக் கலைஞர்கள் ஆட, நாட்டுப்புறக் கலைகஞர்களுக்கு கோயிலுக்கு வெளியே தெருவோரத்தில் இடம் ‘ஒதுக்கப்பட்டிருக்கிறது’.

‘‘கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி, கோலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தெருக்கூத்து ஆகியவை தெருவோர நிகழ்ச்சிகளாக நடத்தப்படும்... பெரியகோயில் வளாகத்தினுள் பரதநாட்டிய கலைஞர்கள¢ சங்கம் சார்பில் நடன கலைஞர்கள் நடத்தும் பரதநாட்டியம், நாதஸ்வர இசைநிகழச்சி, 1000 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெறும்’’ என்ற அறிவிப்புதான் சதயவிழாவை சர்ச்சை விழாவாக ஆக்கியிருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார்,

‘‘பெரிய கோயில் என்பது தனிப்பட்ட மன்னர் ஒருவரால் மட்டும் கட்டப்பட்டது அல்ல, ஆயிரக்கணக்கான மக்களின் மகத்தான உழைப்பின் சின்னமாகும். ஆனால், அந்த மக்களின் கலைகள் எல்லாம் தெருவோர நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதும், மேட்டுக்-குடி கலைகள் கோயிலுக்குள் அரங்கேறும் என சொல்லப்பட்டிருப்பதும் தஞ்சை மண்ணின் கலைஞர்களின் மனதை காயப்படுத்துகிறது. கலையின் பெருமையை எடுத்துக்காட்டும் பெரியகோயில் உள்ளுக்குள்ளே நாட்டுப்புற கலைஞர்களை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார். 

இந்தப் பிரச்னையில் தகித்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் மாநில செயலாளர் பெ.மணியரசனை சந்தித்தோம். 

‘‘பேரரசன் ராஜராஜசோழன் சாதிவேறுபாடு பார்க்காமல் குடியரசு போல் ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்துள்ளார் என்பதற்கு வரலாற்று கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன.

Thanjai%203.jpgதஞ்சை பெரிய கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த-வர்களுக்கு முடிதிருத்தும் தொழிலாளர்--களை அமைத்தார். அவர்களில் தலைமையாக உள்ள ஒருவருக்கு Ôராஜராஜப் பெரும்நாவிதர்Õ என்ற பட்டத்தையும் கொடுத்தார். தனக்கே உரிய சிறப்பு பட்டத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தவர் ராஜராஜன். அதே-போன்று கோயிலை எழுப்பிய தலைமை பொறியாளர் குஞ்சறமல்லன் என்ப-வருக்கும் Ôராஜராஜப் பெருந்தச்சன்Õ என்ற பட்டத்தை கொடுத்து சிறப்பு செய்தார். இது தொழில் ரீதியாக வந்த சாதிய ஒதுக்கீடாக இல்லை.

மேலும், மன்னன் ஒருவருக்கு மக்கள் தலைவர் என்னும் Ôஜனநாதன்Õ என்ற பட்டம் வழங்கியதும் ராஜராஜனுக்-குத்தான். எனவே, அத்தகைய பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் சாதி வேறுபாடு பார்ப்பது ராஜராஜனுக்கும், தமிழ¢ சமூகத்துக்கும் ஏற்படுத்தும் அநீதியாகும். பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள் பெரிய கோயில் வளாகத்தினுள் நடத்தப்படும் என்றும், கிராமப்புற கலைநிகழ்ச்சிகள் தெருவோர நிகழ்ச்சிகளாக நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கலைத் தீண்டாமையாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 

இதே பெரிய கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தப்பாட்டம் நடத்த வந்த கலைஞர்களை இந்து சமய அறநிலையத்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. தமிழக முதல்வர் முன்னின்று நடத்தும் விழாவில், இதுபோன்ற அடித்தட்டு மக்களின் கலைநிகழ்ச்சிகள் தெருவோரத்தில் நடத்தினால் அது தமிழ் சமூகத்துக்கும், தமிழர் அறத்திற்கும் எதிரானது ஆகும். கலைசார்ந்த தீண்டாமைக்கு முதல்வர் முடிவுகட்ட வேண்டும்’’ என்றார். 

இதுகுறித்து தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் கூட¢டமைப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘எங்களுக்கு ஒருமுறையாவது கோயிலுக்குள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அதிகாரிகள், ‘செம்மொழி மாநாடு போல் வெளியில் மேடை போட்டுத் தருகிறோம்’ என்கிறார்கள். நாட்டியாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு உதவி செய்கிறது. ஆனால், நாட்டுப்புற கலை-களான கும்மியாட்டம், கோலாட்டம், கரகம் போன்ற அனைத்து கலைகளும் அழிந்து வருகின்றன. முற்போக்கு அடவுகள் உள்ள கரக கலைஞர்கள் தமிழகத்திலேயே 3, 4 பேர்கள்தான¢ இருப்பார்கள். இப்படிப்பட்ட கலைகள் அழிந்து வருவதை தடுப்பதற்கு அரசுதான் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்ய வேண¢டும். கோயிலுக்குள் நிகழ்ச்சிகள் அனுமதி வழங்காவிட்டால் நான் மட்டுமல்ல எந்த நாட்டுப்புறக் கலை-ஞர்களும் பங்குபெற மாட்டோம்’’ என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் பேசினோம். ‘‘கோயிலுக்குள் நாட்டுப்புற கலைந¤கழ்ச்சிகள் நடத்துவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என¢று பொறுப்போடு பதிலளித்தார்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் கவனிப்பாரா தமிழ்நாட்டை ஆளும் கலைஞர்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோறு போடுமா தமிழ்?
பதில் சொல்லும் வெள்ளிக்குறிச்சி

Kishore%203.jpg



‘‘தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பே கிடைக்காது. ஆங்கில வழிக்கல்விதான் சரி...’ என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எல்லாம் கான்வென்ட் பக்கம் துரத்திக் கொண்டிருக்கும் இந்த தமிங்கிலிஷ் யுகத்தில்...

வீட்டுக்கு ஒரு தமிழாசிரியரை பெற்றிருக்கிறது ஒரு கிராமம்.

என்ன உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறீர்களா? நமது தமிழய்யா நண்பர் ஒருவர் சொன்ன இத்தகவல் கேட்டு நாமும் இதே போலத்தான் கிள்ளிப் பார்த்துக்கொண்டு புறப்பட்டோம். 

Kishore%201.jpgசிவகங்கை மாவட்டம், மானா-மதுரைக்கு அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமம்தான் அந்த தமிழ் ததும்பும் கிராமம். ஊர் முகப்பு வயல் வெளியிலேயே ‘ஐயா வணக்கம்’ என நம்மை வரவேற்ற கிராமத்து பெரியவரான கேசவனிடம் பேசினோம். ‘‘சங்கத் தமிழ் புலவரான நக்கீரன் மதுரையில் பாண்டிய மன்னனது அவையில் பாடி விட்டு, ராமேஸ்வரம் கோயிலை பார்த்து தரிசிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பாண்டிய மன்னனும் நக்கீரனை வைகை ஆறு வழியாக குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ராமேஸ்வரத்துக்கு வழி அனுப்பி வைத்துள்ளார். சாரட் வண்டி எங்கள் வெள்ளிக்குறிச்சி வைகை ஆறு முகத்துவாரத்துக்கு வந்தபோது, குதிரையின் குளம்படி தடுக்கிவிட்டதில் நக்கீரன் அப்படியே ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அந்த நேரத்தில் ஆற்றுக்குள் திடீர் வெள்ளப் பெருக்குவர, ஆற்று மணலை ஒருபிடி எடுத்து வணங்கியுள்ளார் நக்கீரன். 

அப்போது ஆற்று மணல் சுயம்பு லிங்கமாக பிரசன்னமாகி, நக்கீரனை வெள்ளப் பெருக்கில் இருந்து காப்பாற்றி எங்கள் ஊருக்குள் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டது. ‘நான் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆளே காணாமல் போயிருப்பேன். சக்திவாய்ந்த உங்கள் மண்ணில் உள்ள ஏதோ ஒரு தெய்வம்தான் சுயம்பு லிங்க வடிவில் தோன்றி என்னைக் காப்பாற்றி இருக்கு. மீண்டும் உயிர் கொடுத்த உங்க ஊரை மறக்கமாட்டேன்’ என நக்கீரன் நெக்குருகியுள்ளார்.

Kishore%202.jpgஎங்கள் மக்களோ, ‘எத்தனையோ மன்னாதி மன்னர்கள் தங்களது சபையில் உங்க காலடிபாதம் படக் காத்து கிடக்கும்போது, உங்க பாதம் எங்க மண்ணில் பட்டதற்கு நாங்கதான் கொடுத்து வைத்திருக்கணும். நீங்க சொன்ன சுயம்புலிங்கத்தை இனி நாங்க நக்கீர குரவனாகவே நினைத்து வழிபடுவோம். நீங்கதான் இனி எங்களுக்கு தமிழ்க்கடவுள் மட்டுமின்றி குலக்கடவுளாகவும் ஆகப்போகிறீர்கள்’ எனக் கூறியுள்ளனர். நக்கீரனோ, ‘உங்க பிள்ளைகளை எல்லாம் தாய்ப்பாலோடு சேர்த்து தமிழ்ப்பாலையும் ஊட்டி வளருங்கள். அதாவது முதன்மையாக தமிழை படிக்க வையுங்கள். அப்புறமா பாருங்க உங்க கிராமத்தை’ என அருள்பாலித்துள்ளார். எங்க மூதாதையர்களும் நக்கீரன் வாக்கை வேதவாக்காக்கிக் கொண்டுவிட்டார்கள்.

அதனால்தான், இன்றைக்கும் இந்த கிராமம் வீட்டுக்கு ஒரு தமிழாசிரியர் வீதம் பொருளாதாரத்திலும் எல்லாவகையிலும் மேலோங்கி நிற்கிறது’’ என்று மெய்சிலிர்த்து பெருமிதப்பட்டார் கேசவன்.

வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த கருப்புதேவன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்று முனைவராகவும், டாக்டர் மணிமேகலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகிறார்கள்.

டாக்டர் கருப்புதேவன் நம்மிடம் பேசும்போது, ‘‘எங்க முன்னோர்களின் தமிழ்ப் பணியை இந்த தலைமுறை இளைஞர்களும் பின்பற்றி வருகிறோம். அதற்கு தமிழன்னையும் தக்க கைமாறு செய்துவருகிறாள். இன்றைய இளைஞர்கள் வெள்ளிக்குறிச்சியை பின்பற்றி நடந்துவந்தால் எல்லாவகையிலும் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கலாம்’’ என்றார்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமலிங்கம் நம்மிடம், ‘‘எங்கள் கிராமத்தில் தமிழ்ப் படித்த எல்லோரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் நல்ல பணியில் இருக்கிறார்கள். 

வீரமாமுனிவரின் தமிழ் சீர்திருத்த எழுத்துக்-களையெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எங்க வெள்ளிக்குறிச்சி தமிழாசிரியர்கள்தான் பெருமளவில் கற்றுக்கொடுத்தனர். இன்றைக்கு சீர்திருத்த தமிழ் எழுத்துக்கள் செம்மொழி மாநாடு வரைக்கும் கிளை பரப்பி நிற்கின்றன’’ என்று அக மகிழ்ந்தார்.

இந்த கிராமத்து இளைஞரான ராம்குமார் சிவகங்கை மன்னர் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார்.

‘‘மன்னர் மேனிலைப்பள்ளியில் எங்கள் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த புலவர் ராமலிங்கமும், செல்லமும் தமிழாசிரியர்களாக பணிபுரிந்தார்கள். அவர்கள் இருவரும் ஓய்வுபெற்றபோது, அதே இடத்தில் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த நானும், இன்னொரு தமிழாசிரியரும் பணி நியமனம் செய்யப்பட்டோம். வெள்ளிக்குறிச்சி போய் வெள்ளிக்குறிச்சி வந்துள்ளது என சக ஆசிரியர்கள் கமென்ட் அடித்தார்கள். வெள்ளிக்குறிச்சி தமிழாசிரியர் என்றால் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அத்தனை மரியாதை’’ என்றார் பெருமிதமாக.
Kishore.jpg
வெள்ளிக்குறிச்சி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தமிழ் வளம் கொண்டு திகழ்கிறார்கள். திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் அம்மாவாக பணிபுரியும் மாலதி நம்மிடம், ‘‘நான் மட்டுமின்றி பூவந்தி அருகே தலைமை ஆசிரியையாக எங்க ஊர் கருப்பாயி அம்மா, மற்றும் அக்கா விஜயா எல்லாம் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களில் கோலோச்சுகிறோம்’’ என்றார். 

‘தமிழ் சோறுபோடுமா?’ என தமிழ்நாட்டிலேயே பலர் எகத்தாளம் பேசும் நிலையில்... அவர்களின் வாயை தமிழாலேயே அடைக்கிறது இந்த வெள்ளிக் குறிச்சி என்னும் தமிழ்க் குறிச்சி கிராமம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MAMA,I WANT THE BEST BDAY EVER

WITH LAKHS BEING SPENT ON CHILDRENS PARTIES,WEDDING PLANNERS AND CORPORATE EVENT MANAGERS ARE ROPED IN 

Kamini Mathai | TNN


WALKING on broken glass,cutting a cake in the middle of the ocean,flying in Bollywood actresses childrens birthday parties in Chennai are getting bigger,better,bolder.It used to be about a little party at home,just mom,dad,the neighbours and classmates.Then the birthday party planners showed up with their tattoo artistes and magicians on call.Today,wedding planners and corporate event managers are being roped in so the little darlings are given the party of a lifetime.
Sundar Babu of Precision Pro Events,an eight-year-old corporate events management company,says he tapped into the birthday party market three years ago.Its been booming ever since, says Sundar.Three years ago,Rs 12,000 was the average party budget.When we got a party for Rs 60,000,it was huge.Today,we average Rs 2 lakh for a birthday party, he adds.
Sundar says that the most expensive birthday party he has co-ordinated for was a Rs 17 lakh one for a businessmans toddler.Since it had a Bollywood theme,Sundar flew in an actress for Rs 4 lakh and a playback singer for Rs 3 lakh,both of whom performed live.For another 12-year-olds birthday,since she wanted to be the star of the evening,Sundar designed a rotating stage,which saw the girl performing a dance routine,before dramatically descending to the floor amidst smoke and disco lights to cut the cake.Birthday parties have become a status symbol, he says.Its as much about what the child wants as the experience parents want to give their guests, he says.
RS Sasirekha,mother of a five-year-old,believes her son deserves the best party she can throw.His parties are like a festival, says Sasirekha,who has been throwing mega theme parties three years in a row,each averaging Rs 2 lakh.I have one son and want the best for him.My husband and I dont celebrate our birthdays or wedding anniversaries or throw parties.This is our event of the year, she says.About 100 relatives and friends are invited,an eight kg cake and buffet spread ordered,and albums created.The birthday boy changed his outfit at least five times in five hours.This is the last big party for him,so its the biggest, says Rekha.When he turns six,he will begin knowing the value of money and thats when we need to bring him down to earth.Well scale down the party. 
Wedding planners Vidya Singh and Rekha Rangaraj of Sumyog say that they have been organising several birthday parties of late.Parents come to us with themes and we work out sets,invites,gifts and games based on it.We recently did an Oscar party for a teenager,where we rolled out the red carpet and handed out Oscar statuettes to guests.Weve done a pirate theme,where we had a skeleton,captaining a ship, says Vidya.
While for some parents,big is in,there are others who look for more adventurous ways to throw a party.So in rolls the bed of nails.Hafiz Khan of Ezone says,We are primarily into corporate events.But,in the last couple of years,we find parents wanting us to replicate the same for their children. While he charges an average of Rs 10,000 to Rs 15,000 for his parties,Hafiz admits its the more adventurous parents who approach him.
His parties include standing on a bed of nails,zorbing on the lawn,cutting a cake in a catamaran in the middle of the ocean,walking on broken glass all of which he has done at birthday parties for five-year-olds.None of it is dangerous, says Hafiz.
Rajshree Kartik,mother of two young boys,tries to think up something new every year.I have a theme but work on a budget.Im looking at a different experience for my children,rather than a lavish one, she says.So,last year,she brought farm animals to her sons birthday.Not too expensive,but definitely novel.
kamini.mathai@timesgroup.com

Pc0020800.jpg

Pc0021000.jpg
BIG BASH: Children have a blast at a jungle theme party (left); ornate cakes are a must at these extravagant events (above)


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

DW I N D L I N G D I G N I T Y

He makes a living out of death.


Jambus work is unusual.Death is an occasion for this 65-year-old Soundi Brahmin to make a living.But,I cant pray for more income as that would mean more people should die,which is inhuman, he says sadly.He has just arrived at the house where a 75-year-old man has passed away.Following the purohits instructions,he asks the relatives to chant Lord Shivas name.Then,he,along with three others,lifts the body from the second floor of a flat in Tiruvanmiyur in Chennai,and accompanies it to the cremation ground to conduct the final rites.Jambu has been doing this for the past 40 years,first in his native village in Thanjavur district,and later in the city.I earn around Rs 300 for every death.Some families pay me extra, he says.He has a son and a daughter,both school-going.His wife is a cook and earns around Rs 1,000 per month.Put together our income is around Rs 3,000 per month, says Jambu.The income is not regular and it varies every month.We really find it difficult to manage the family especially taking care of the education expenses.My son is in the 12th standard and with the help of some philanthropists,I have put him in a coaching class for Maths and Physics, says Jambu.

Assignments are few,earnings meagre... 


At the crack of dawn,V Subramanian,65,leaves his dilapidated rented house near Ramakrishna Mutt Road in Mylapore in Chennai.He walks to the Mylapore tank and waits,sometimes for hours and sometimes in vain,for a senior purohit to assign him for marriage functions or death ceremonies.This is his daily routine.If he is lucky,he earns Rs 1,000 per month.I dont get money every day and it is only during September-October,just before Navarathri,I accompany the chief purohits to various houses for 15 days.During this period I earn a bit, says Subramanian (in lead picture).The 15-day period is when people from all communities propitiate the departed souls of their forefathers,the occasion referred to as Mahalaya.He is past retirement age,but he sees no scope to rest as his meagre income is necessary to keep the home fire burning.He has never heard of the old-age pension given by the government.His wife S Sudha,50,works as a domestic help in nearby houses and the couples two sons are now working as assistants in a dry cleaning shop.We pay Rs 1,500 as house rent.Even this is in arrears since March and I have asked my husband to borrow money.I had to discontinue my younger sons education after he failed in two subjects in the Class 10 exam.Due to poverty,I asked him to go for a job along with my elder son, says Sudha.

Pc0081600.jpg
WAITING FOR WORK: Priests at Mylapore


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

BRAHMINS ON THE MARGINS,FIGHT FOR SURVIVAL

IGNORED BY POLITICAL PARTIES AND DENIED WELFARE,LARGE SECTIONS OF A TRADITIONALLY ELITE CLASS LIVE IN POVERTY 

B Sivakumar | TNN

Chennai: V Subramaniam,65,has been a priest for over three decades,assisting in Hindu rituals and ceremonies for most of his life.He is treated with respect by the community when he steps into a house to perform a puja or solemnize a marriage.
There is little else to show for it though.His monthly income of Rs 1,000 is below the poverty line.He lives in a dilapidated house,his wife works as a domestic help,and his sons have dropped out of school.The future is clearly bleak.
Such is the plight of a large section of Tamil Nadus Brahmin community,often regarded to be at the top of the discriminatory caste order and therefore denied welfare benefits by a government intent on social justice.
The daily income of Subramaniam and other Brahmins like him in Chennai,who make a living merely by assisting at Hindu ceremonies and rituals,tend to vary a great deal.
There are seasons when marriages are not conducted at all or pujas may be few.
In several cases,such families get by with the wives working as cooks.Most save on rent by living in decrepit houses in the older quarters like Triplicane or Mylapore where they share rooms with other families.
Although perceived as a community that places a premium on education,many are often unable to afford hefty school or college fees.N Ravi,who works as an accountant with a private firm,recently pulled his son out of an engineering college as he could not afford the fees.
He shifted him to an arts college.As students from the forward community largely comprising Brahmins,a section of Pillais,Chettiars and Mudaliars are ineligible for fee concessions,many poor Brahmins like Ravi struggle to educate their wards.
Most poor Brahmins in and around Mylapore and Mambalam are not even aware of the state governments old age pension scheme nor do they get the free colour televisions being distributed by the administration.The only government benefit they avail of is the purchase of essential commodities in the public distribution system at a subsidized rate.
Mylapore MLA S Ve Shekher says,More than 50% of the Brahmins live a hand-to-mouth existence.It is a myth that all Brahmins lead a comfortable life.There are Brahmins who drive autos,carry bodies and take care of cremation and serve as waiters in restaurants.When those from other communities doing similar jobs enjoy government benefits like education grants,why not poor Brahmins 
Some months back,Shekher,who has also stared a forum for the community,presented a memorandum to chief minister M Karunanidhi seeking extension of benefits to poor Brahmins,but there has been no response so far.
Tamil Nadu Brahmins Association (Tambras) secretary V Jagannathan notes that Brahmins hardly enter government service now since reservations are heavily weighed against them;most are either employed in the private sector or run their own enterprises.The more professionally qualified end up migrating to other states.
None of the government schemes applies to the poor in forward communities.Even the free cycles given to girl students was made universal only after the association made a representation,he says.
S Chellappa,a marriage caterer says many poor Brahmins in the city have now moved to the suburbs beyond Tambaram as they can no more afford rent here.The general view is that Brahmins have been marginalised by successive governments on the basis of historical reasons,many of which may no longer be relevant.
Some also feel Brahmins are not as assertive as other communities,and their associations have little political clout or support even within the community.Political commentator Cho Ramaswamy summed it up with a brief opinion.
Brahmins are not wanted in Tamil Nadu,beyond that I do not want to comment.

Pc0081800.jpg
Brahmins are not wanted in Tamil Nadu.Beyond that,I do not want to comment 

Cho Ramaswamy POLITICAL ANALYST



Pc0081900.jpg
It is a myth that all Brahmins are leading a comfortable life 

S Ve Shekar MLA MYLAPORE



Pc0081500.jpg
PUSHED TO THE WALL: Subramanian who works as a priest,with his wife at his house in Mylapore



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Brahmins on margins remain outside widening welfare net



Pc0012500.jpg
LONG WAIT: At Mylapore,Brahmin priests wait to be assigned their work for the day
CHENNAI: A group of men, both young and old, some even close to 80, huddle in a corner of a street leading to the ancient Kapaleeswarar temple in Mylapore on a rainy evening. They are waiting for a senior priest (purohit) to hand out assignments for the next day.

These may vary from assisting in a marriage ritual to chanting funeral prayers. Most of them eventually will come away with a couple of token payments of Rs 200-300 made by householders for such poojas or ceremonies. Given the irregular nature of their income, not many earn more than Rs 2,000 to 3,000 per month. 

Traditionally associated with learning and education, the Brahmins of Tamil Nadu, who constitute roughly 4-5% of the six-crore population, are perceived to be a socially and economically advanced elite, but not many realise that today a large section of the community lives precariously close to the poverty line. 

According to the Tamil Nadu Brahmin Association (Tambras), about 30% of Brahmins in the state can be described as economically backward and they number close to 10 lakh. However, they are denied aid by the government as they are seen to belong to a traditionally affluent community. 

Efforts by legislators such as S Ve Shekher to have them included in welfare schemes for housing and education have not succeeded so far. Their only source of income is what senior priests part with from their share of offerings made by householders and devotees during Hindu rituals. 

Ravi Sastrigal, a purohit in Mylapore, says, "The chief priest gets Rs 2,000-3,000 for a marriage. His juniors get Rs 500-600, plus free food, for reciting mantras. And then there are those who accompany them as mere helpers they get about Rs 150-200."

http://timesofindia.indiatimes.com/city/chennai/Brahmins-on-margins-remain-outside-widening-welfare-net-/articleshow/6448640.cms#ixzz0xrTI5KEH

-- Edited by devapriyaji on Saturday 28th of August 2010 06:56:01 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

103 more trucks with explosives missing

TIMES NEWS NETWORK

Bhopal/Jaipur: MP police on Thursday made the alarming disclosure that the number of trucks laden with explosives that went missing was not 61 but 164.These trucks were carrying mostly detonators and gelatin sticks,and the fact that the actual number of trucks missing is 103 more than previously thought has sent security agencies into tizzy.
The MP police said 103 trucks carrying 450 tonne of explosives were sent by Rajasthan Explosives and Chemicals Limited (RECL) in Dholpur,Rajasthan,to Sangam Explosives Limited,Chanderi in Ashoknagar district of Madhya Pradesh.Sixtyone trucks,which went missing earlier,were carrying 9-12 tonne of explosives each.Since April this year,103 trucks have been sent from Dholpur to the Chanderi firm.But none of them reached Chanderi, Gwalior range IGP Arvind Kumar said.We are sure they left the Dholpur factory.But why they havent reached Chanderi is under investigation... whether they entered Madhya Pradesh at all is also under investigation, he said.
In mid-August,the Union home ministry and the two states police were shocked to find that 61 trucks,carrying explosives from RECL,Dholpur,to Ganesh Explosives in MPs Sagar district,did not reach their destination.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Workers strike potful of gold on temple premises

Cops Seize 19 Coins,Two On The Run With 27 More 

TIMES NEWS NETWORK

Villupuram: The district police and revenue officials recovered 19 gold coins,part of a treasure unearthed by three construction workers.While one man surrendered before the police and handed over 19 coins,two others are absconding with 27 gold coins,police said.
P Munusamy,55,hailing from Pillaiyarpalayam in Kancheepuram district and two others,whose identities have been withheld,found a gold treasure while demolishing the walls of an ancient temple in a remote village,Kuzhi,in Villupuram district.
They were thrilled to find 46 ancient gold coins in a pot buried in the ground.The elated workers divided the gold coins among themselves and absconded.Meanwhile,the contractor based in Kancheepuram,who engaged the three workers to demolish the temple wall,came to know about the treasure.He called Munusamy over phone and instructed him to hand over the treasure to him or face severe action.The scared worker approached the Tiruvanainallur police and narrated the events leading to the treasure being unearthed.He surrendered 19 gold coins that he took from the temple site and also disclosed the identities of two other workers to the police.He claimed that the two persons are in possession of 27 gold coins.
Police engaged a jewel appraiser,who ascertained that the coins were made of gold,following which they seized the valuables and registered a case under section 102 of CrPC.They later alerted the revenue officials about the seizure.
A team of revenue officials led by Tirukoilur tahsildar R Bhama recovered the priceless antique coins and handed them over to Tirukoilur sub treasury.

Two idols found 


Two idols of Hindu deities,about three feet in height,have been discovered while digging a land in Devipattinam in Ramanathapuram district.Abdul Kareen was levelling the land on Tuesday when the men digging the soil discovered that they had struck an idol and unearthed two idols,one of Lord Vishnu and another of Garudalvar.




__________________
« First  <  Page 25  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard