New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாந்தோம் சர்ச்சின் சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சாந்தோம் சர்ச்சின் சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
Permalink  
 


 

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

 

தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

‘தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ‘மாநாடு’ உண்மையில் ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரக் கூட்டம் ஆகும். தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் மொழி – பண்பாடு, அதன் தொன்மை ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றினை பயன்படுத்தி எவ்வாறு தமிழரின் சமய வாழ்க்கையை கிறிஸ்தவப்படுத்தலாம்; எப்படி தமிழரின் உயர்ந்த ஆன்மிக இலக்கியங்களை கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே இந்த மாநாட்டின் உண்மையான உள்நோக்கமாக விளங்கியது எனலாம். எனவே இந்த மாநாடு உண்மையில் தமிழரின் மீது ரோம-கத்தோலிக்கத்தாலும் தமிழ்நாடு-மலேசியா-சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில கிறிஸ்தவ மத மேன்மையாளர்களாலும் நடத்தப்படும் ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியே ஆகும்.

தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழே உலகின் முதல் மொழி’ ‘உலகின் முதல் மனிதன் தமிழனே’ எனக் கூறிவிட்டால் உள்ளம் புளகாங்கிதம் அடைந்துவிடுகிறது. உடனே அவ்வாறு கூறுபவர்களின் ஏனைய கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதனை எதிர்க்காமல் மௌனிக்கவோ தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, அங்கு வந்திருந்த ஒரு சில -கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்த- இந்துக்களான தமிழ் அறிஞர்களிடம் தனிப்பட்ட உரையாடலில் தெய்வநாயகத்தின் மையமான பிரச்சார கருத்தான ‘சைவமும் வைணவமும் புனித தாமஸ் கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் offshoot’ என தெளிவாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; தாங்கள் இதனை ஏற்கவே இல்லை என அடித்துக் கூறினர். ஆனால் இவர்கள் எவருக்கும் தமிழரின் ஆன்மிக பண்பாட்டின் மீது நடத்தப்படும் இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பை மேடையில் கண்டிக்க அல்லது மறுக்கத் தோன்றவில்லை. அவையடக்கம் காரணமாகவும் மாநாடு நடத்துபவரின் மனத்தை நோகடிக்க அவர்கள் விரும்பாத காரணத்தினாலும் அவர்கள் அதனை செய்யவில்லை போலும்! இதனை அந்த மாநாட்டின் நடத்துனர்களாக இருந்த முனைவர். தெய்வநாயகம்-தேவகலா அணி மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்த மாநாடு உண்மையிலேயே தமிழர் சமயம்-பண்பாடு ஆகியவற்றினை உலகறிய செய்வதற்காக நடத்தப்படும் ஒரு உன்னதமான முயற்சி என்பதாக எண்ணினர் வேறு சில வெள்ளந்தியான தமிழ் அறிஞர்கள். அவர்கள் பொதுவாக அளித்த பாராட்டினை தெய்வநாயகமோ தேவகலாவோ அல்லது கத்தோலிக்க மதச்சபையோ ‘தோமா கொண்டுவந்த ஆதி கிறிஸ்தவத்தின் offshoot தான் வைணவமும் சைவமும்’ என்கிற தங்களின் நிலைப்பாட்டுக்கான ஆமோதிப்பாகக் காட்டத் தான் போகிறார்கள். ஆனனல் அதைப் போல நேர்மையற்ற, கயமையான செயல் பிறிதொன்று இருக்க முடியாது.

எதுவாயினும் இந்த மாநாட்டில் பேசப்பட்ட பல கருத்துகள் ஆதாரமற்றவை; அவை கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்துக்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கருத்துகள்; சில கருத்துகள் அப்பட்டமான வெறுப்பியல் பிரச்சாரமாகவும் இருந்தன. வேறு சில கருத்துகள் சிறுதும் அறிவியல் தன்மையற்றவையாகவும் இனமேன்மைவாதக் கருத்துகளாகவும் இருந்தன. முக்கியமாக முனைவர் தெய்வநாயகத்தின் பல கருத்துகள் சிறிதும் வரலாற்று அடிப்படை அற்றவையாகவும் தவறானவையாகவும் இருந்தன என்பதுடன் அவையே அவரது கோட்பாட்டின் ஆதார தூண்களாகவும் விளங்கின என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த சில இந்துக்கள் இந்த போலி பிரச்சாரத்தால் மிகவும் மனத்துயரடைந்து மாநாட்டின் மூன்றாள் நாள் (ஆகஸ்டு 16) தமிழ்இந்து.காம் இணையதளத்தை அணுகினர். அதற்கு முன்பே அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் எழுதிய தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ் என்ற இதுபற்றிய கட்டுரையைப் பற்றியும் தேடி அறிந்து அதனைப் படித்திருந்தனர் என்பதும் தெரியவந்தது. பொதுஜன ஊடகங்களில் வராத முக்கியமான கருத்துக்களைக் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இணையம் கொண்டிருக்கும் அபரிமிதமான சக்தி நமக்கு வியப்பூட்டியது!

ஒரு இந்துத் தமிழர் அக்கட்டுரையையும், அத்துடன் அந்த மாநாட்டு நிகழ்வுகளில் செய்யப்பட்ட சில தவறான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் ஒரு சிறு கட்டுரையும் இணைத்து பல பிரதிகள் எடுத்து அதனை அந்த மாநாட்டில் விநியோகிக்கப் போவதாகவும் நமக்குத் தெரிவித்தார். அவர் அசோக்நகர் அனுமான் கோவிலின் அறங்காவலரும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருமான கணேசன் அய்யா அவர்கள்.

திரு. கணேசன் அய்யாவின் ஊக்கத்தையும், முனைப்பைக் கண்டு நாமும் பெரும் உற்சாகம் அடைந்தோம். அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். உடனடியாக தமிழ் இந்து தளம், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களை நோக்கி சில ஆழமான கேள்விகளை எழுப்பும் முகமாக, போஸ்டர் வடிவில் சில display materials களையும் கணினியில் வடிவமைத்து அளித்தது. இந்த மாநாட்டில் கூறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து ஒரே இரவில் கோர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பு இது குறித்த ஆய்வினை முன்னகர்த்த மிகவும் தேவையானது என்பது நமது தாழ்மையான எண்ணம். “பரிணாம அறிவியல் வெறும் ஊகமா? சம்ஸ்கிருத கல்வெட்டுகளின் காலம் என்ன? கடவுள் மனிதனாக வருவார் என்னும் கோட்பாடு கிறிஸ்துவுக்குப் பின்னர் தான் இந்தியாவுக்கு வந்தததா? தெய்வநாயகத்தின் சைவ நூல் மேற்கோள் மோசடி” – இவை உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய நம் தரப்பு வாதங்கள் அதில் இருந்தன.

மாநாட்டின் முடிவு நாளான ஞாயிறு அன்று நிகழ்வு காலை 9:30க்கு மேலேதான் ஆரம்பித்தது. திரு.கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தனது கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க முடிவு செய்ததுடன், தாம் கொண்டுவந்திருந்த போஸ்டர்களைக் காட்டவும் மாநாட்டின் அதிகாரிகளில் ஒருவரான முனைவர் தேவகலாவிடம் அனுமதி கோரினார். ஆனால் தேவகலா அதற்கு ‘அங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும் இங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும்’ என்றும் கூறி தாமதித்துக்கொண்டிருந்தார். கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தார்.

திரு.ஜெயமோகனின் கட்டுரை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களின் மனசாட்சியினுள் வேலென நுழைந்திருக்கக் கூடும் என்பதனை ஊகித்த முனைவர் தெய்வநாயகம், ஒரு ஆராய்ச்சியாளருக்கு தகுதியல்லாத, ஆனால் கிறிஸ்தவத்தின் ஒரு மூன்றாந்தர பிரச்சாரகனின் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பிரதி விநியோகத்தை விமர்சனம் செய்தார். மதிப்பிற்குரிய கணேசன் அய்யா அவர்களை பெயர் குறிப்பிடாமல் ‘சைத்தானின் பிள்ளை’ என சொன்ன கொடுமையை என்னவென்பது! தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது.

ஆனால் தமிழ் இந்து.காம் எழுப்பிய ஆணித்தரமான ஆதாரபூர்வமான கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் இந்த தெய்வநாயகம்-தேவகலா அணியினரால் பதிலளிக்கவோ, எதிர்வினை புரியவோ முடியவில்லை என்பதால், இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டு அங்கிருந்த தமிழறிஞர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஷயத்தையே அங்கு வந்திருந்த அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மறைத்து விட்டனர். இதுதான் இந்த மாநாட்டினை நடத்தி சென்று கொண்டிருந்தோரின் ‘ஆராய்ச்சி நேர்மை’.

அந்தக் கேள்விகள், வாதங்கள் இங்கே (.pdf கோப்பு வடிவில்).

இதன் முக்கியமான விளைவு என்ன? தெய்வநாயகம் மாநாட்டு மேடையில் தமது கருத்துகளுக்கும் கத்தோலிக்க சபைக்கும் தொடர்பில்லை என அறிவிக்க வேண்டியதாயிற்று. அதற்கு முந்தைய நாள் இருந்த துணிவும் வேகமும் வெளிப்படையான வெறுப்பியல் பிரச்சாரமும் விஷமத்தன தூண்டுதல்களும் இல்லமாலாயிற்று, மாநாட்டின் முழுக் கவனமும் இந்த மாநாடு சமய நல்லிணக்கத்துக்கு எதிரானது அல்ல என நிரூபிப்பதாக அமைய வேண்டியதாயிற்று.

தமிழர்களின் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மௌனம் காக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி அய்யா வைகுண்டரும், பாரதியும், சுவாமி சித்பவானந்தரும் உருவாக்கிய பண்பாட்டு பாதுகாப்பு சமுதாய அக்கறை எனும் பாரம்பரியத்தில் தன்னையும் ஒரு சிறு சேது பந்தன அணிலாக இணைத்துக் கொண்டதில் தமிழ் இந்து.காம் பெருமை அடைகிறது.

துணிச்சலுடனும் பொறுமையுடனும் விவேகத்துடனும் தன்னை இழிவாக விளித்த தெய்வநாயகத்திடமே ‘நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என உண்மை தமிழருக்கே உரிய மனித நேய பண்பாட்டுடனும் செயல்பட்ட அய்யா கணேசன் அவர்களுக்கும், இம்முயற்சியில் அவருக்கும் உறுதுணையாக இருந்த மற்றவர்களுக்கும், தமிழ் இந்து.காம் தனது பணிவான வணக்கங்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திரு தெயவநாயகத்தின் மாநாட்டின் 2ம் நாள் இரண்டு நாளின் பெரும்பான்மையான நேரம் நானும் ஒரு ஆய்வு மாணவனாக உள்ளே இருந்தேன்.

2ம் நாள் மத்யம் ஒருவர் இவர்- எம்பில் மற்றும் பிஎக்டி பட்டம் படித்தவர் ஆற்றிய உரை. நிகழ்ச்சிக்கு, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.தெய்வசுந்தரம் தலைமை. உரை படித்தபின் வந்திருந்தோர் கேள்விகட்கு உரையாசிரியர் பதில் தரவேண்டும், ஆனால் அவர் தனக்கு பதிலாக தெய்வநாயகமே பதில் தருவார் எனறிட தலைவர் அது தவறு என்றிடவும், கடைசியில் தெய்வநாயகம் தான் பதில்கள் உளறினார்.
அவர்கள் இடைவேளையின் போது தனி பேச்சில் படிக்கப்பட்ட கட்டுரையின் மேற்கோள்கள், சொன்ன பதிலின் இவற்றில் பல தவறு என தெளிவாக மறுக்கப் பட்டவை, ஆனால் இது ஒன்றும் அறிஞர் சபையோ- செமினாரோ அல்ல, வெறும் சர்ச்சின் பண பலத்தால் பெருமைக்கு நடத்தப் படுவது.

 நான் பழகிய நண்பர் அழைத்தார்  என வந்தேன் என்றார்.

முன்பே தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்கள் தான் பெரும்பான்மையான கலந்து கொண்டவர்கள். கேள்விகளும்  தயாரித்தவை, வந்த ஒரு சில நடுநிலையாளர் கேள்வி எழுதித் தந்தாலும் அது நேரமின்மை என படிக்கப் படாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

மாநாட்டரையில் நான் நண்பர் மூலம் ஒலிப்பதிவு செய்தேன்.

தேவகலா ஒளிப்பதிவு ஏற்பாடு செய்திருந்தார். அதன் VCD வேண்டும் என மின் அஞ்சல் அனுப்பினேன்.விலைப் பட்டியல் அனுப்பினார் –தேவகலா.

3ம் நாள் தெய்வநாயகத்தின் தலைமை உரை. தலைமை நாங்க திரு. ஒளவை.நடராசான் அவர்கள். தெய்வநாயகம் ஆன்மவியல் என்னும் தன் கட்டுரை வாசித்த பின், ஒளவை.நடராசான் அவர்கள் எழுந்து தெய்வநாயகம் கூறியவை பெரும் பாலும் தவறானவை. சமயம், ஆன்மா போன்ற அடிப்படை சொற்கள் சமஸ்க்ருதம் என்றார். உடனே தெய்வநாயகத்தின் தவறான் ஆய்வுக் கட்டுரை என முனைவர் பட்டம் ரத்து ஆனதின் கைடான – தமிழ் பன்னாட்டுத்துறையின் அன்னி தாமஸின் கணவருமான திரு.ச.வே.சுப்ரமணியம் சில கூறினார். அவையும் தவறு என ஒளவை.நடராசான் தெளிவாகக் கூற, தமிழ் – சமஸ்க்ருதம் தமிழ்பற்று என்பதாக என்னவோ தெய்வநாயகம் உளறிட அத்தலைமை உரை விவாதமே செய்யப் படவில்லை. தலைவரே தவறு என்றதோடு. ஒளவை.நடராசான் உடன் இடைவேளை போது தனியாக பேசிய போது, மேலும் தொல்காப்பியத்க்தை தெய்வநாயகம் பயன்படுத்தியுள்ளவையும் அர்த்தமற்ற – எழுதப்ப்ட்ட முறைக்கும் ஒவ்வாதது என்றார், ச,வெ கூறியது தமிழ் நடைக்கே எவ்வளவு தவறு என்றும் சிறு விளக்கம் கொடுத்தார்.

ஒளவை.நடராசான் மேலும் தருமபுர ஆதின மடத்தில் விவாதம் நடந்த போது தெய்வநாயகம் தன் தரப்பு சரி என சைவ அறிஞர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் தராமல் முழித்து நின்றார் எனவும் சொன்னார்.  அந்த நிகழ்ச்சி கூட்டத்தில்  பிள் அறிவோ, சைவ சித்தாந்த அறிவோ தெய்வநாயகமிடத்திற்கு வெகு குறைவு எனத் தெளிவானது, பல கேள்விகட்கு மௌனம் என நடந்து வெளியேறினார்.

நான் மாநாட்டின் போது தருமபுர ஆதின மடத்தில் முன்பு தெய்வநாயகம் கலந்து கொண்ட கேள்விபதில் நிகழ்ச்சியின் VCD என விற்றதை வாங்கியதில் ஒரு சில நிமிடம் தவிர தேவகலா தன் அப்பாவை பற்றி வெற்று பேச்சுக்களெ இருந்தது.  ஆனால் VCD பொய் கூறியது.

நான் தேவகலாவிற்கு ஆய்வு மாணவன் எனக்கு முழுமையான பதிவு சற்றும் எடிட் செய்யாதது வேண்டும் நீங்கள் கொடுத்துள்ள விலைப் பட்டியல் VCD அப்படியா என மின் அஞ்சல் அனுப்பினேன், இரு நினைவூட்டலும் அனுப்பினேன்.
பதில் இல்லை.

இவர்கள் தராதரம் அவ்வளவு தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

“மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்

 

ல ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் ஒரு தமிழாசிரியர், அவர் திருக்குறள் ஆர்வலர், ஒரு திருக்குறள் மன்றத்தில் பல மாதங்கள் வாராந்திர்க் கூட்டங்களில் தொடர் சொற்பொழிவு செய்து வந்தார்.

அஙுகு திருக்குறளையும் பைபிளையும் ஒப்பிட்டு பார்த்து சொற்பொழிவு ஆற்ற, திரு. ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தவர் பேசுவதாக ஏற்பாடு நடந்தது.

என் நண்பர், தானே இரண்டையும் பொருத்தி வேறுபாடுகளை பல சொற்பொழிவுகளில் பேசினார். என்னிடம் சிலவற்றை விவாதிப்பார்.

அந்தப் பேராசிரியர் ஒரு நூல் எழுத உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் நான் நண்பரிடம் நிறைய பேசிய போது, என் நண்பர் கூறினார்-முதலில் பைபிளோடு குறளை ஒப்பிட்டுப் பேச தெய்வநாயம் தொடர்பு கொள்ளப்பட, அவர் சற்றும் ஆர்வம் காட்டாததால் இந்தப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப் பட்டார், இத்தலைப்பு வருகிறது என்பதால் பல வாரங்கள் நான் திருக்குறள் அறங்கள் கிறுஸ்துவத்துக்கு முரண் எனக் காட்டினேன், விவிலிய வாக்கியங்கள் தேர்ந்தெடுக்க உங்கள் உதவியும் ந்ன்றாகப் பயன்பட்டது ,அதையும் பேராசிரியர் கேட்டார் என்றார்.

நான் மேலும் பல வரலாற்று ரீதியிலான நூல்களின் பக்கங்களின் ஜெராக்ஸ் எடுத்து; ரோம் சர்ச் வரலாற்றுப் பதிவுகளின் மிகவும் பழைமையானவைப்படி தாமஸ், மத்தேயூ, பிலிப் போன்ற சீடர்கள் மதப் பிரச்சாரப் பணியில் ஈடுபடானல் ஜெருசலேமில் சாதாரணமாக இறந்தனர் என்பதக் காட்டினேன். பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL.

http://biblelamp.wordpress.com/1995/04/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.

திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?

இப்போதனை இன்று தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிலர், இப்போதனை இந்துக்களைக் கவர ஓர் அருமையான வழி என்று நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சிறிது விளக்கமான பதில்கூற வேண்டியது அவசியம்.

அ. இவர்கள் போதிப்பதென்ன?

டாக்டர் மு. தெய்வநாயகம் (விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஒப்பாய்வு), ஞானசிகாமணி (அகத்தியர் ஞானம்) போன்றோர் வடவராகிய ஆரியர்களின் செல்வாக்கற்ற, கலப்பில்லாத திராவிட சமயங்கள், தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலனாகிய தோமாவின் (தோமா தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்படாத ஆதாரபூர்வமற்ற ஓர் ஊகம் மட்டுமே) கிறிஸ்தவப் போதனைகளின் செல்வாக்கினால், தனித்துவமுள்ள உருவவழிபாடற்ற, ஒரே தேவனைக் கொண்ட தமிழர்களின் சமயமாக இருந்தது என்றும், சைவசித்தாந்தமும், திருக்குறளும் சித்தர்களின் பாடல்களும் கிறிஸ்தவ செல்வாக்கினால் வளர்ந்த இவ்வாதி திராவிட சமயங்களைப் பற்றித்தான் போதிக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள். இப்போதனைகளை இன்னும் பெரிதுபடுத்தி சாது செல்லப்பா போன்றோர் இந்துக்களைக் கவரும் நோக்கில் கிறிஸ்தவப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருக்கும்போது நான் ஏன் அவர்களோடு சமமானமுறையில் ஒரே மேடையில் அமர்ந்து இருபகுதியுமே பயனடையும் விதத்தில் அமைதியான கலந்துரையாடல்களை (Dialogue) நடந்தக்கூடாது? என்ற முறையிலும் தயானந்தன் பிரான்ஸிஸ் (தமிழ்ச் சைவம்) போன்றோர் எழுதி வருகிறார்கள். இப்போதனைகள் இன்று தமிழகத்தின் வேதாகமக் கல்லூரிகள்வரை போயிருக்கின்றன. இவர்களுடைய கூற்றுகளுக்கும் போதனைகளுக்கும் வேதத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

ஆ. இவர்களுடைய போதனை ஏன் தவறானது?

தோமா தமிழகத்திற்கு வந்தாரா? என்ற ஆராய்ச்சியை எல்லாம் உங்கள் கரத்தில் வைத்துவிட்டு இவர்களுடைய கருத்துக்களின் மூலமும், எழுத்துக்கள் மூலமும் எவ்வளவு தூரம் திருமறை தவறான முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது முக்கிய நோக்கம். அதை வைத்தே நீங்கள் உண்மை எங்கிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியும்.

தோமா தமிழகம் வந்தாரா?

தோமா இந்தியாவிக்கு வந்தார் என்று இன்றுவரை வரலாற்றினால் நிரூபிக்கப்படவில்லை. இது வழிவழி வந்த நம்பிக்கையே தவிர அதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. தோமாவின் வழியில் வந்ததெனக் கருதப்படும் சீரியக்கிறிஸ்தவம் திருமறையின் போதனைகளுக்கு முரணான காரியங்களைக் கொண்டிருப்பதால் அதைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது. இது கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒன்று என்று கூறுவது போலாகும். மயிலாப்பூரிலும், கேரளத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலை வழிபாட்டிற்கான பல அறிகுறிகள் காணப்படுவதால் அதற்கும் திருமறை சார்ந்த கிறிஸ்தவத்திற்கும் தொடர்பிருக்க முடியாது. ஏனெனில் திருமறை சிலை வழிபாட்டை வற்புறுத்திக் கண்டிக்கின்றது (யாத்திராகமம் 20:1-7). அதேநேரம், வரலாற்றை வைத்து திருமறையை நிரூபிக்க முற்படுவதும் தவறான காரியம். வரலாற்றின் கண்டுபிடிப்புகளோடு திருமறையின் போதனைகளும் ஒத்துப்போகுமானால் அதை ஏற்றுக்கொள்ளலாம். வரலாறும் பாவத்தினால் கறைபடிந்து காணப்படுவதால் அதைக்கொண்டு பரிசுத்த வேதத்தை நிரூபிக்க முற்படுவது தவறு.

திராவிட எழுச்சி இயக்கம்

இவ்வாய்வுகள் தமிழரையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஆரியர்களுக்கு எதிராக உயர்த்திக் காட்டும் நோக்கத்தில் எழுந்தனவே தவிர திருமறையையும், கர்த்தரையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தவையல்ல. இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் காணப்பட்ட திராவிட சமயங்கள் ஆரியக் கலப்பற்ற தளித்தன்மை கொண்ட சமயங்களாக இருந்தன என்று நிரூபிப்பதுதான். சித்தர்களின் பாடல்களும், திருக்குறளும் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்காமல் அவற்றைக் குறைகூறுகின்றன என்பதற்காக, அவை கிறிஸ்தவ செல்வாக்குப் பெற்றதால்தான் அப்படிப் போதிக்கின்றன என்ற வாதம் பொருத்தமற்றது. இது அக்காலத்தில் ஆரிய எதிர்ப்பினால் எழுந்த போதனையாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்லாது சைவசித்தாந்தத்திலும் திருக்குறளிலும் திருமறைக்கு ஒவ்வாத அநேக போதனைகள் உண்டு. திருக்குறளில் காணப்படும் தெய்வத்தைக் குறித்த பொதுவான வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டுக் கூறுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது தமிழ் மரபு என்று சிலர் வாதிட முற்பட்டாலும், திருமறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தில் காணப்படாத வேறு பெயர்களை பயன்படுத்தி கர்த்தரை அழைப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் திருவள்ளுவர் இயேசுவை அறிந்திருந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. உண்மையிலேயே அவர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் தெளிவாக கிறிஸ்துவை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதோடு, திருமறையின் போதனைகளைத்தான் தன்நூலில் விளக்கியிருப்பார், வள்ளுவர் புலால் உண்ணலையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேதம் அதைத் தடைசெய்வதில்லை (ரோமர் 14:1-4).

திராவிட சமயங்கள்

திராவிட சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களும் கிறிஸ்தவ திருமறையின் அடிப்படையில் எழுந்த இந்தியத் திராவிட சமயங்கள் என்பது டாக்டர் மு. தெய்வநாயகத்தின் வாதம். கிறிஸ்தவத்திற்கே உரித்தான திரித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பிதா, குமாரன், ஆவியாகிய அதே தேவனைத்தான் திராவிட சமயங்களும் வேறு பெயர்களில், தமிழகத்திற்கேற்ற முறையில் பயன்படுத்தின என்று இவர் எழுதியுள்ளார். ஆனால் இது திருமறைக்கே புறம்பான ஒரு விளக்கம். எந்த ஒரு மனிதனும் திருமறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கர்த்தரைப்பற்றிய திரித்துவ விளக்கங்களைத் தாம் நினைத்த விதத்தில் எந்தவொரு இனம் அல்லது விளக்கங் கொடுக்க முடியாது. அது நம் பார்வைக்கு எவ்வளவுதான் கவர்ச்சியுள்ளதாகவும் நன்மை அளிக்கும் காரியமாகவும் தென்பட்டாலும் அது திருமறைக்கு விரோதமான காரியம். அதேநேரம் இவர்கள் கூறுவதுபோல் பரிசுத்த ஆவியைப் பெண்ணாக உருவகப்படுத்தி ‘அம்மையாக‘ அழைக்க திருமறை எவ்விதத்திலும் இடங்கொடுக்காது. இத்தகைய விளக்கங்கள் திருமறையைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் காரியங்களே தவிர, கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவரை மேன்மைப்படுத்தும் செயல்களல்ல.

திருமறை, திருக்குறள், சைவசித்தாந்தம்

திருக்குறள், சைவசித்தாந்தம் போன்ற சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களைக் கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடுவது வேதத்திற்குப்புறம்பான காரியமாகும். திருமறை தேவ ஆவியினால் அருளப்பட்ட திருவசனமாக இருக்கின்றது. அதன் சத்தியங்களிலும், போதனைகளிலும் எந்தவித தவறிற்கும் இடமேயில்லை. அதை உலக நூல்களோடு ஒப்பிட்டு சமப்படுத்திப் பார்க்கக்கூடாது. டாக்டர் மு. தெய்வநாயகமும் மற்றவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். அதேநேரம், திருக்குறள், சைவசித்தாந்தம் போன்றவற்றில் சில நல்ல கருத்துக்களும், போதனைகளும் காணப்படலாம். அவற்றை மட்டும் வைத்து, திருமறைக்கு சமமாக இப்புத்தகங்களை நாம் மதிப்பிடக்கூடாது. திருமறையைப் பொறுத்தவரையில் அதற்கு சமமான நூல்கள் உலகில் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் ஒருவனுக்கு சத்திய வசனமாகிய திருமறை மட்டுமே தேவையே தவிர, வேறு எந்தப்புத்தகத்தின் உதவியும் தேவையில்லை. ஆகவே திருமறையின் விளக்கத்தைத்தான் நாமனைவரும் நாடவேண்டும் வேறு சமயக் கோட்பாடுகளையோ சித்தாந்தங்களையோ அல்ல.

கிறிஸ்தவமும் இனப்பாகுபாடும்

திருமறையில் இனப்பாகுபாட்டிற்கு இடமில்லை. அப்படியிருக்க, திருமறை வழிவந்த சமயங்களாக திராவிட சமயங்கள் இருக்குமானால் அவை ஆரிய, பிரமாண வெறுப்புள்ளவைகளாக இருப்பதெப்படி? திருமறை எல்லா இனமக்களுக்கும் உரித்தானது. அதன் போதனைகளனைத்தையும் எல்லா இனமக்கள் மத்தியிலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். நம் இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவிதத்தில் நாம் திருமறையை மாற்றமுடியாது. ஆனால், நமது கலாச்சாரத்தில் இருந்து, தேவனுக்கும், திருமறைக்கும் பொருந்தாது காணப்படும் அம்சங்களைக் களைந்தெடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே, ஓர் இனத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த திராவிட சமயங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் சொந்தமானதும் எல்லா இனங்களையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமையுள்ள திருமறையின் அடிப்படையிலான கிறிஸ்தவத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

கிறிஸ்தவத்தைத் திராவிட சமயங்களோடு ஒப்பிட்டுக் காட்டும் செயலின் பல்வேறு தவறுகளை நாம் அடையாளம் காணமுடிந்தாலும் முடிவாக சில உண்மைகளை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் பரந்த கொள்கையுடையவர்கள் (Liberal). இவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் பூரணத்துவத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையுள்ளவர்களல்ல. ‘தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியுள்ளது‘ என்ற பேதுருவின் வார்த்தைகளை இவர்கள் விசுவாசிப்பதில்லை. கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்சிப்பின் வழிமுறைகளிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. புற சமயங்களோடு கிறிஸ்தவத்தை சமப்படுத்தி கிறிஸ்துவின் பெயருக்கே இவர்கள் களங்கம் தேடித்தருகிறார்கள். இவர்களின் வார்த்தையில் மயங்கி, இப்போதனை மற்றவர்களை இலகுவாக கிறிஸ்துவிடம் கொண்டுவர உதவுமே என்று எண்ணிச் செயல்படுவது கர்த்தருடைய வார்த்தையை நம் காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். எரிச்சலுள்ள தேவன் இப்பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாராக.

This Article is though saying too much as boasting for Christianity still worth reading for all.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 தன் மானமுள்ள தமிழனாக இருந்தால் போலி முனைவர் மு.தெய்வநாயகம் மிகத் தெளிவாக 15ஆம் நுற்றாண்டில் கடற்கரையோரமிருந்த கபாலீஸ்வரர் கோயிலைப் பிடுங்கி பொய்யாக தோமா கதையைக் கட்டிவரும் -போலியான மதமான கிறுஸ்துவத்தை நீக்கி மீண்டும் கபாலீஸ்வரர் கோயில் நிர்மாணிக்க -அங்கே ருத்ரம் சமகம் சொல்லவும் -ப்ரதோச வழிபாடும் சிவராத்திரி வழிபாடும் நட்த்த போராட வேண்டும்.

ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்து

 

கடைசியில்  -“என் தேவனே என் தேவனே- என்னை ஏன் கைவிட்டீர் ” என்ற கடைசி மரண ஓலத்துடன் இறந்தார்

66f8b-wp_20140115_018.jpg?w=640
03de6-wp_20140115_020.jpg?w=640

c070a-wp_20140115_021.jpg?w=640
71e4b-wp_20140115_022.jpg?w=640
நண்பர் வினோத்திற்கும் மற்றவருக்கும் விளக்கம் – சேர்த்தது

சாந்தோம் சர்ச்சின் பணத்தில் “திருவள்ளுவர் கிறிஸ்தவரா” என்னும் நூலை கருணாநிதி அணிந்துரையுடன் அன்பழகன் வெளியிட ஆரம்பித்து, மேலும் பல நூல்கள் புனைந்து, பின் கத்தோலிக  சாந்தோம் சர்ச்சின் 100% பணத்தில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் தொடங்கி அதில் “விவிலியம்-திருக்குறள்- சைவ சித்தாந்தம் என்னும் பி.எச்.டி. முனைவர் பட்டம் வாங்கினார். அதன் வழிகாட்டியான பன்னாட்டு தமிழ் நிறுவனம் பின் அதை ஆய்வுக் கட்டுரை அல்ல எனத் தெளிவு படுத்தியது.

இவரின் உளறல் முனைவர் ஆய்வு மிகுந்த எதிர்ப்பு வர – தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி – அவரை உதவிப் பேராசிரியர் பதவியிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வெளியேற்றியது.
இதையெல்லம் மறைத்து கிறிஸ்துவ மதமாற்றப் பணியை தமிழ் பெயரில் கேவலமானபடி செய்கிறார். இவருக்கு சீமான் எனும் செபாஸ்டியன் சைமன் ஆதரவு வேறு.

   
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
    
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.
சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.
மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.
கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.
எனவே தமிழர் சமயத்தில் கல்வியும் தெய்வப் பணியும் செய்வோர் அந்தணர்.
தில்லை வாழ் தீட்சதர்கள் ஒரு சிறுபான்மைக் குழுவினர் ஆயிரம் ஆண்டுகளாக தில்லையை பராமரித்து வருபவர்கள்.
தவறுகள் திருத்த்ப்பட வேண்டும். தமிழ் வழிபாடு தினமும் தில்லையில் உண்டு.
தமிழரின் தொன் சமயம் தொடர வேண்டும்





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

 

Saint Thomas(புனித தோமையாரின் வாழ்க்கையை 50 கோடி ரூபாய் செலவில் எல்லா மொழிகளிலும் படமாகத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதன் தமிழ்த் திரைக்கதை வசனப் பிரதியைத் தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. புனித தோமா இந்தியாவுக்கு வந்ததே வரலாறுபூர்வமான உண்மையா என்பது உட்படச் சிந்திக்கப் பல விஷயங்கள் உள்ளன. மேலே படியுங்கள்…)

இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது. இது குறித்துச் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன:

தென் அமெரிக்காவில், அங்கு சென்ற ஸ்பானிய-கத்தோலிக்க சபையினர், அங்கிருந்த பூர்விகக்குடிகளின் புராதனப் பண்பாட்டையும் அவர்களது மூதாதையக் கடவுளரையும் தோமா அங்கே கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் கூறுகள் என்று சொல்லிச் சொல்லித்தான் அவர்களை மதமாற்றம் செய்திருக்கிறார்கள். எனவே கிறிஸ்தவமல்லாத பண்பாட்டுச் செழுமைகள் எல்லாம் கிறிஸ்தவத்தால்தான் உருவானது எனக் கூறும் இதே காலனிய-மதமாற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகத்தான் இந்தியாவிலும் திருக்குறள், சைவசித்தாந்தம் என எல்லாமே தோமா கொண்டுவந்த கிறிஸ்தவத்தால் விளைந்தது எனச் சொல்லும் இன்றைய கத்தோலிக்க சபையின் முயற்சியாகத் தோன்றுகிறது.

கிறிஸ்தவம் தொடங்கிச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே சிலுவை கிறிஸ்தவ மதச்சின்னமாகக் கருதப்பட்டது. நால்வர் சொல்லும் ஏசு காதைகள் (synoptic gospels) சிலுவைச் சின்னத்தைக் குறிப்பிடவில்லை என்பதுடன் சிலுவை கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனிய (pagan) சூரிய வழிபாட்டுச் சின்னமாகவும் இருந்து வந்தது. மக்களிடம் பிரபலமான சிலுவைச் சின்னம், நிறுவனக் கிறிஸ்தவத்தால் மூன்றாம் நூற்றாண்டில்தான் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், தாமஸ் பொதுசகாப்தம் (C.E.) 50களில் எவ்வாறு சிலுவையைக் கல்லில் செதுக்கியிருக்க முடியும்? தோமாவால் செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கல் சிலுவையைத்தான் தோமா தமிழகத்துக்கு வந்ததற்கான ‘வரலாற்றுச் சான்றாக’ கத்தோலிக்க சர்ச் காட்டிவருகிறது, என்பதனாலேயே இந்தக் கேள்வி மிக முக்கியமானதாக இருக்கிறது.

Thomas Mythமூன்றாவதாக, மார்க்கோ போலோவும் சரி, பின்னர் அவரை அடியொற்றி எழுதியவர்களும் சரி, ஒரு வனவாசியால் தவறுதலாக தாமஸ் கொல்லப்பட்டதாகவே கூறுகின்றனர். அதுவும்கூட ஆதாரமற்ற செவிவழிக்கதைதான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இன்றுவரையாக கத்தோலிக்க சபையின் பிரசாரத்தில் தோமாவைக் கொன்றவர்கள் அந்தணர்கள் எனச் சொல்லப்படுவதைக் காண்கிறோம். தமிழ்நாட்டில் ஆரிய-திராவிட இனவாதப்புரளி மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது உருவாக்கப்பட்டுள்ள வெறுப்பியல் பிரசாரத்தை தங்கள் மத-பிரசார நோக்கத்துக்காக கத்தோலிக்க சபை பயன்படுத்த விழைவதாகவே தெரிகிறது. அதன் விரிவாக்கம்தான் இன்று பலகோடி ரூபாயில் எடுக்கவிருக்கும் செயிண்ட் தாமஸ் திரைப்படம்.

ருவாண்டாவில் அண்மையில் டட்ஸீக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையில் கிறிஸ்தவ மதப்பிரசாரகர்கள் உருவாக்கிய இனவாதக் கோட்பாடுகளின் பங்களிப்பைக் குறித்து சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விவாதங்களை நோக்கும்போது தமிழகத்திலும் இனவாதக் கோட்பாடுகளை மத-பிரசாரத்துக்குக் கத்தோலிக்க சபை பயன்படுத்துவது தார்மீகமானதா என்பதையும் கத்தோலிக்கப் பெருமக்கள் சிந்திக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சாந்தோம் சர்ச்சின் சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
Permalink  
 


தோமாவும் தமிழ்நாடும் – ஓர் அரைகுறை ஆய்வரங்கம்

கட்டுரையாளர்: செந்தமிழ் வேள்விச் சதுரர்

மு.பெ.சத்தியவேல் முருகனார்

Photo   images?q=tbn:ANd9GcQWKpDgCz5LgGhRVR1VgFQ

“தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புகழாரம்! பதிலுக்குக் கலைஞர் ஜெயலலிதாவிற்கு ஆசி!”
இது எப்படி நடக்கவே நடக்காத கற்பனையோ அதை விட கற்பனை ஒன்றை முன்னிறுத்தி அய்வரங்கம்என்ற பேரில் அழைத்தார் முனைவர் மு.தெய்வநாயகம் அவர்கள். தலைப்பு இது தான்: “இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறுத்துவ நாடே – எவ்வாறு?”
இந்த ஆய்வரங்கத்திற்கு என்னை அழைத்தார். ‘இது எனக்கு உடன்பாடில்லாதது; எனவே வருவதற்கில்லை’ என முதலில் மறுத்தேன்.
“இல்லை; இந்த ஆய்வரங்கத்திற்கு இந்துக்களில் சார்பாக நீதிபதியாக நீங்கள் கலந்து கொண்டு உங்கள் தீர்ப்பை அளிக்கலாம். மொத்தம் ஐந்து நீதிபதிகள்; அதில் நீங்களும் ஒருவர்’ என்றார்.
மற்ற நான்கு நீதிபதிகள் யார், யார் என்ரு கேட்டேன். அவர் இஸ்லாம் சமய சார்பில் ஒருவர், கிறுத்துவ திருச்சபை சார்பில் ஒருவர், தமிழ் அறிஞர் ஒருவர், நாத்திகரில் ஒருவர் – அதாவது திராவிடர் கழகத்திலிருந்து ஒருவர் என்றார்.
ஐந்து நீதிபதிகள் எப்படி தீர்ப்பு வழங்குவார்கள்? தனித் தனியாகவா அல்லது மாறுபட்ட தீர்ப்புகள் அமையுமானால் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்படுமா? என்று கேட்டேன்.
“இல்லை தனித்தனியே ஐந்து நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பைத் தொகுத்து ஒரு நீதிபதி தீர்ப்பை அளிப்பார் என்றார். அவர் அநேகமாக நாத்திகச் சார்புடைய நீதிபதியாக இருப்பார்” என்றார்.
முதலில் அவர் என்னை தொகுத்தளிக்கும் தீர்ப்பை வழங்கும்படி கெட்டார். நான் மறுத்து விட்ட்தால் எந்த மதத்தையும் சாராத நாத்திகரே ஏற்புடையவர் என்ற கருத்தைச் சொன்னார்.
அதன்படி 27, 28, 29-08-2013 ஆம் நாட்களில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கம் ஏற்பாடாயிற்று.
பன்மத அறிஞர்களிடையே சிகாகோவில் விவேகானந்தர் கலந்து கொள்ளவில்லையா? விவேகானந்தர் அளவிற்கு யான் பெருமையும் அறிவும் உள்ளவன் அல்லன் என்றாலும் அவரது முன்னுதாரணத்தை அடியொற்றி அந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டேன். அத்துடன் அது ஒரு ஆய்வரங்கம் தானே தவிர ஒரு கிறுத்துவ சமயப் பரப்புக் கூட்டமல்ல என்ற நியாமும் என்னை ஊக்குவித்தது.
இதற்கு முன் தமிழ் வழிபாட்டுத் தொடர்பாக திரு.தெய்வநாயகம் அவர்களுடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன். தமிழ் வழிபாட்டுக்கு ஆதரவு என்ற கருத்து ஒன்றே குறைந்தளவு இணைப்பு. சரி! ஆய்வரங்கத்திற்கு வருவோம்!
ஆய்வரங்கில் 27-08-2012 ஆம் நாள் இறை வேண்டலை அருட்தந்தை V.G. அருள்ராஜ் அடிகளார் செய்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்க ஆய்வரங்கம் தொடங்கியது.
தெய்வநாயகத்தின் கருதுகோளுக்கு மறுப்புக் கேள்வி தொடுக்கும் குழுவிற்குத் தலைவராக அமைக்கப்பட்ட பிரதமப் பேராயர் முனைவர் எஸ்றா சற்குணம் அவர்கள் ஏறத்தாழ 15 கேள்விகள் அடங்கிய நீண்ட பட்டியலை அச்சேற்றி அவற்றைத் தொடுத்தும் விளக்கியும் சிற்றுரை ஆற்றினார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கேள்விகளை முன்வைக்கும் பொறுப்பில் நீதிபதிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு பணி என்னிடம் விடப்பட்டது. முதலில் ஆய்வரங்கத்தில் கலந்து கொண்ட நீதிபதிகள் ஐவரின் பட்டியலைத் தருகிறேன்.
  1. செந்தமிழ் வேள்விச் சதுரர்
    மு.பெ.சத்தியவேல் முருகனார் B.E., M.A., M.Phil.
    அர்ச்சகர் பயிற்சிப் பேராசிரியர், S.R.M. பல்கலைக் கழகம்
  2. ரெவரண்ட் டாக்டர். ஆர்தர் ஜெயக்குமார் M.Th. Ph.D
    பேராசிரியர் கிறித்துவ இயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
  3. முனைவர் சம்சுதீன் M.A. Ph.D
    பேராசிரியர் அரபி மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
  4. பேராசிரியர் முனைவர் ஆ.ஜீவானந்தம் M.A. Ph.D
    திராவிடர் விடுதலைக் கழகம்
  5. முனைவர் தங்கையா M.A. Ph. D
    தமிழ் இலக்கியப் பேரவை, சென்னைப் பேராயம்
தமிழ் அறிஞர் சார்பில் கலந்து கொண்ட முனைவர் தங்கையா அவர்களும் கிறித்துவர் என்பது குரிப்பிடத்தக்கது. ஆக நீதிபதிகளில் இரண்டு கிறித்துவர்கள், ஒரு இஸ்லாமியர், ஒரு நாத்திகர், ஒரு சைவர் என ஐவரும் கலந்து கொண்டோம்.
பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் கேள்விகளைத் தொடுத்து அமர்ந்த பின் அவரது கேள்விகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து முன் வைக்க நீதிபதிகள் கலந்து பேசி அவற்றை ஒருங்கிணைப்பாளராக யான் மேற்கொண்டேன். உடன் 5 நீதிபதிகளும் அவற்றைக் குறிப்பின் எடுத்துக் கொண்டோம். இனி, குறிப்பின்படி கேள்விகளும் அதற்கு முனைவர் தெய்வநாயகம் அளித்த பதில்களும் வருமாறு.
கேள்வி: தோமா வழி திராவிட கிறுத்துவத்தை விவிலிய அடிப்படையில் புரிந்து கொள்ள முடியுமா?
மு.தெ. பதில்: புரிந்துகொள்ள முடியும்.
(பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
மு.தெ. பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[என் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லை; போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்; மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது.  எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.
[என் கருத்து: தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார். ஆனால் இவரோ பல்லாண்டுகளாக, அவரே கூட்டத்தில் ஒரு சமயத்தில்சொன்னபடி 45 ஆண்டுகளாக, தோமா தமிழ்நாட்டிற்கு கி.பி. 52ல் வந்து 20 ஆண்டுகளாக சமயக் கொள்கைகளைப் பரப்பினார் என்று போர்த்துகீசியர்கள் 12 ஆம் நூறாண்டில் கட்டிய கதையை நம்பியும் அதைப் பரப்பியும் அதையொட்டி ஒரு நூல் எழுதி முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால் இப்போது அது கட்டுக்கதை என்கிறார்; அதற்குத் தான் பதிலளிக்க வேண்டியதில்லை என்று அடாவடியாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த வகை நியாயம் என்று நடுநிலையாளர்களைத் திகைக்கச் செய்கிறார்.]
கேள்வி: இப்படிச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? நீங்கள் திருச்சபையைக் கேட்டீர்களா?
மு.தெ. பதில்: என்னைப் பொறுத்தவரை தோமா தமிழ் நாட்டிற்கு கி.பி. 52ல் வந்த பிறகு தாம் தமிழகத்தில் சமய நெறி உருவாகியது. அப்போது தமிழ் நாட்டில் இந்துமதம் என்பதே இல்லை. தோமாதான் ஒரு சமயக் கோட்பாட்டை உருவாக்கினார். அதனைத் தான் இந்துக் கிறித்துவம் என்கிறேன்; திராவிடக் கிறித்துவம் என்கிறேன். இங்கே இந்து மதம் என்பது பற்றி விளக்க வேண்டும். இன்று காணப்படும் அல்லது சொல்லப்படும் இந்து மதம் வேறு; இந்துத்வா வேறு.
[என் கருத்து: தோமா தமிழகத்திற்கு கி.பி. 52ல் வந்தார் என்பது கட்டிவிட்ட கதை என்று கூறிய பின் கட்டிவிட்டதாக இவரால் கூறப்படும் கத்தோலிக்கத் திருச்சபையிடம் இவரே விளக்க, கேட்டுப் பதில் பெற்றாரா என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலே இவர் நழுவவிட்டார். உண்மையில்இதற்கு முன் இருந்த போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் தோமா தமிழ் நாட்டிற்கு வந்ததே இல்லை என்று தெளிவு படுத்தி இருக்கிறார். அதை முற்றிலும் மறைத்துவிட்டு இந்து கிறித்துவம், திராவிடகிறித்துவம் என்றெல்லாம் ஆதாரமில்லாதவைகளை மற்றொன்று விரித்தலாகக் கூறிச்செல்கிறார். திராவிட கிறித்துவம் என்றால் அது தமிழ்நாட்டிற்குத் தொடர்புடையதாகக் கூறலாம்; இந்துக் கிறித்துவம் என்றால் அது இந்தியா முழுமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட கிறித்துவம் என ஒன்றிருக்கிறதா என்பதே தெரியாத போது தமிழ்நாட்டையும் தாண்டி இந்துக் கிறித்துவம் எப்படி வந்தது என்றும் தெரியவில்லை. அவர் எண்ணப்போக்கில் எதையெதையோ அள்ளித் தெளித்துக் கொண்டு போகிறார்.]
கேள்வி: அப்படியானால் நீங்கள் கூறும் இந்துக் கிறித்துவத்தில் வரும் இந்து மதம் எது?
மு.தெ. பதில்: சைவமும் வைணவமும் தான் இந்து மதம்; இவை தான் தமிழர்களுடையது.
[என் கருத்து: தமிழர் கண்ட சமயங்கள் சைவமும், வைணவமும் என்பது சரி. ஆனால் இவை இரண்டையும் இணைத்தால் இந்து மதம் வரும் என்று யார் சொன்னது? வட நாட்டில் உருவானவட வேத மதங்களான மீமாம்சை, சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகியவற்றையும் இந்து மதங்கள் என்றல்லவா குறிப்பிடுகிறார்கள்? எனில் இந்து மதம் என்பது ஒரு மதம் என்று கூறமுடியவில்லையே. பல மதங்களின் தொகுப்பாக அல்லவா காணப்படுகிறது? இவற்றை இணைத்து இவைகளை ஒரே சொல்லாகிய இந்து என்று குறிப்பிட்டவன் யார்? இந்தியனா? இல்லை, வெள்ளைக்காரன் தான் 150 ஆண்டுகட்கு முன்கிறித்துவர், இஸ்லாமியர் அல்லாதார்க்கு ஒரு தொகுப்பு அடையாளச் சொல்லாக உருவாக்கினான் என்பதை காஞ்சி மகா பெரியவரே கூறி இருக்கிறாரே! எனில் இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதும் அதில் அடங்கியதாகக் கருதப்படும் சைவமும் வைணவமும் கூட ஒன்றிற்கொன்று ஒத்துப் போகாதே! எப்படி இரண்டையும் சேர்த்து இந்துமதம் என்று கூறுவது? பல மதங்களின் தொகுப்பு அடையாளமாக வெள்ளைக்காரன் இந்து மதம் என்ற ஒன்றைக் கற்பித்தான் என்றால் சைவம், வைணவம் என்ற இரு மதங்களின் தொகுப்பாக இவர் கூறும் இந்து மதம் இவரது கற்பனையே! உண்மையில் சைவத்தை சைவம் என்றே சொல்வதும், வைணவத்தை வைணவம் என்றே சொல்வதும் தான் சரியானதாக இருக்கும்.]
கேள்வி: தோமா தமிழ் நாட்டிற்கு வந்தார் என்றால் அது பற்றி ஏன் விவிலியத்தில் செய்தி இல்லை?
மு.தெ. பதில்: நல்ல கேள்வி. பழைய ஏற்பாடு இன்றுள்ள நிலையில் முதலில் இல்லை. எட்டுவிதமான திரித்தல், மறைத்தல், வெட்டல் போன்ற செயல்களால் பழைய ஏற்பாடு பெரிய சிதைவான மாற்றங்களை அடைந்தது. இம்மாற்றங்களைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். இருப்பதைத் திரிப்பதில் இவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காணப்பெறும் பிராம்மணர்களுக்கு ஒப்பானவர்கள். ஐரோப்பியர்கள் இப்படிச்சிதைவு செய்ததற்குக் காரணம் அவர்கள் இயல்பில் கிறித்துவர்கள் அல்லர். ஐரோப்பியர்க்கும் கிறித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏசு கிறிஸ்து ஐரோப்பியாவை சேர்ந்தவர் அல்லர்; அவர் ஒரு ஆசிய ஆன்மிக சோதி.
இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.
[என் கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]
கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.
முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது. தெய்வநாயகத்தின் ஆதரவாளர்களில் ஒருவர் என்னை நீங்கள் இப்படியெல்லாம் பேச்சின் இடையே இடைமறிக்கக் கூடாது. முழுமையான பேச்சு நிகழ்ந்தபின் தான் கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று சினத்துடன் கூறினார். உடன் திரு.தெய்வநாயகமும் இருந்தார். ஆய்வரங்கத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது கேள்விகளை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதுதான் திரு.தெய்வநாயகம் அவர்களின் வேண்டுகோள். காரணம் பேராயர் சற்குணம் அவர்கள் ஆய்வரங்கத்தில் காலைப் பகுதிக்குப் பின் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை என்று கூறிவிட்டார். எனவே அவரது கேள்விகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆக, உரைக்குப்பின் கேள்வி என்பதற்குப் பதிலாக கேள்விக்குப் பதில் என்றுநிகழ்ச்சி மாறிவிட்டதை அவையறிந்து தானே செய்தோம்? அப்படியானால் கேள்விக்குபதில் வரவேண்டாமா? வரவில்லை என்று அவை சுட்டிக்காட்டினால்அதை நீதிபதிகள் உரையாளருக்குச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? என்று ஆதரவாளரைக் கேட்டபோது உடன் திரு.தெய்வநாயகம் விளக்கம் தந்தார். அதாவது தான் பேசியது அவைக்காகவோ அல்லது நீதிபதிகளுக்காகவோ அல்ல என்றும் தன்னுடன் மாறுபட்ட தனது நன்பரானபேராய சற்குணத்திற்கு சில விளக்கங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவே அப்படி பேசியதாகக் கூறினார்.
இது மேலும் விசித்திரமாக இருந்தது. அவையைக் கூட்டிவிட்டு இவரும் பேராயரும் தங்களிடையே உள்ள பிணக்குக்களை அவையறியாமல் பேச அவையைப் பயன்படுத்திக் கொள்வது அநாகரிகமான செயலாகாதா? அதிலும் அவையில் ரூ.2000/- பணம் செலுத்திவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவையும் வெறும் உரையரங்கம் அல்ல; ஆய்வரங்கம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நீதிபதிகளையும் அமர்த்திவிட்டு இருவர் தமக்குள் ஒருவர்பேசுவது மற்றவருக்கு மட்டும் பொருள் விளங்க என்று குறிப்பாகப் பேசுவது சரியல்ல அல்லவா? அப்படியும் சற்குணம் அவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பதில் வரவில்லை என்பது அவையின் ஆதங்கம். அதைவிட்டு எதையோ மற்றொன்று விரித்தலாய் நீட்டிப் பேசுவது என்ன நியாயம்?
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உணவு வேளைக்கு மேடை கலைந்த போது பேராயர் சற்குணம் நீதிபதிகளாகிய எங்கள் ஐவருக்கும் கை கொடுத்துவிட்டு, ‘அபாரப் பொறுமை உங்களுக்கு’ என்று கூறிவிட்டு சென்றார்.
இடைவேளையில் அவையிலிருந்த பலரும் வந்து தெய்வநாயகம் அவர்கள் செய்வது கொஞ்சமும் சரியல்ல என்ரும் இது முறையாக நடைபெறுகிற ஆய்வரங்கமாகத் தெரியவில்லை என்றும், கேள்விகளுக்கு விடை அளிக்கப்படும் என்று அறிக்கையில் சொல்கிறார்; இன்னும் பேச்சிடையேயும் கூறுகிறார்; ஆனால்எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றனர். அப்போது அது கேட்டு எங்களை அணுகிய திரு.தெய்வநாயகம் அவர்கள் காலையில் பேசியது சற்குணத்திற்காக என்று மீண்டும் கூறினார். அங்கிருந்தவர்கள் புன்னகை பூத்துக் கலைந்தனர்.
அதன் பிறகு மாலை 5.00 மணிக்கு அவை கூடியது. திரு.தெய்வநாயகம் மீண்டும் 1 மணி நேரம் சொற்பொழிவாற்றினார். அதிலும் தோமா தமிழகம் வந்தது பற்றிய ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. வேண்டுமென்றால் தன்னுடைய 5 நூல்களைப் படியுங்கள் என்றார். எனக்கு அவை தரப்படவில்லை என்றபோது அவை தரப்பட்டன. சொற்பொழிவில் குறிப்பாக அவர் சொன்னது கீழே தரப்படுகிறது.
மு.தெ.சொற்பொழிவு: தோமா தமிழகத்திற்கு வந்தபோது நாட்டில் சிவலிங்கம் இருந்தது. ஆனால் சிவவழிபாடு இல்லை. அதைப் பரப்பியவர் தோமா தான். அவர் தான் தமிழ்நாட்டில் சைவ வைணவ சமயங்கள் உருவாவதற்குக் காரணமானவர்.
[என் கருத்து: சிவலிங்கம் இருந்தது ஆனால் சிவவழிபாடு இல்லை என்பதை போன்ற கருத்து அறிவுக்கு பொருந்தாத கருத்தாகாதா? அப்படியென்றால் சிவலிங்கம் என்பதை ஒரு பொம்மை போல தமிழர்கள் வீட்டிலெ வைத்து விளையாடினரா? அது சரி! தோமா ஏசு கிறித்துவின் சீடரானால் அவர் தமிழகத்திற்கு வந்து கிறித்துவின் பரப்புரைகளை அல்லவா பரப்ப வேண்டும்? அதைவிட்டு தமக்கு ஒரு தொடர்பும் இல்லாத சிவ வழிபாட்டைத் தமிழர்களுக்க் எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும் அது கி.மு. 7500 காலத்தைச் சேர்ந்தது என்றும் பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்திலேயே மனிதவளப் பண்பாட்டுத்துறை விஞ்ஞான அய்வு அடிப்படையில் அறிக்கை வெளியிட்டதே! அங்கே ஏராளமாக சிவலிங்கங்களும, சிவன் கோயில்களும் இருந்ததாக அகழ்ந்து அறிந்த சர் ஜான் மார்ஷல் அவைகளைப் பட்டியலிட்டு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளாரே! அப்படியானால் தோமா தமிழகம் வருவதற்கு முன்னே ஏறத்தாழ 7500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிவ வழிபாடு செய்திருப்பதற்கான ஆணித்தரமான சான்று கிடைத்திருக்க, தோமா வந்து தான் சிவ வழிபட்டைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பது அது வரை தமிழர்கள் சிவலிங்கத்தைப் பொம்மை போல வைத்து விளையாடினர் என்பதும் எவ்வளவு அண்ட புளுகு என்பதைக் கேட்போர் அனைவரும் உணர்வர் என்பது திண்ணம்.
அதுமட்டுமா, முதல் கடல்கோளில் மூழ்கிப் போன பஃறுளி ஆற்றினை உள்ளடக்கிய தமிழ்நாட்டை ஆண்ட முதுகுடுமிப் பாண்டியன் சிவபெருமானை கோயில் கட்டி வணங்கினான் என்று புறநானூறு கூறுகிறதே!
“பணியியர் அத்தை நின்குடை முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”
என்று புறநானூற்று வரிகளுக்கு இவர் என்ன பதில் சொல்லுவார்?
சிவ வழிபாடும், சைவ சித்தாந்தமும் திராவிடருக்கே (தமிழருக்கே) உரியது என்று G.U.Pope அவர்களே கூறும் போது இவர் தோமா வந்து தமிழர்களுக்குசிவ வழிபட்டைக் கற்றுக் கொடுத்தார் என்பது நகைக்கத் தக்கதாய் உள்ளது!
சரி! தோமா சைவத்தை உருவக்கினார் என்பதே நகைப்புக்கு உரியதாக இருக்கும் போது அவர் வைணவத்தையும் ஏன் உருவாக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா? எப்படி சிறிது கூட காரண காரிய அறிவுக்குப் பொருந்தாமல் இப்படி எல்லாம் பேச முடிகிறதோ??!! இது இவரால் மட்டுமே முடியும்! இதை 45 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் என்பது இன்னும் வேடிக்கை! ]
கேள்வி: கிறித்துவத்தில் மூவொருமைக் கோட்பாடு உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த Trinity என்ற கோட்பாடு கான்ஸ்டள்ளடன் மன்னன் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) காலத்திலேயே கிறித்துவத்தை உலக மதங்களில் காணப்படும் மூன்று கடவுள் கோட்பாட்டைப் போலப் புகுத்திப் போதிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதனை மறுக்கமுடியுமா?
மு.தெ. பதில்: (இதற்கும் அவர் நேரிடையான பதில் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.) அவர் பேசியதின் சாரம் இது: அதாவது Trinity என்பது இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் என்பதாம்.
எனது இடைமறிப்பு: ஐயா! இந்த Trinity பற்றி கிறித்துவச் சபைகளிலேயே வேறு ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றிக் கேட்கலாமா?
மு.தெ. பதில் : தாராளமாகக் கேளுங்கள்!
என் கேள்வி: ஸ்வீடிஷ் விஞ்ஞானியும் தத்துவவாதியும் ஆன ஸ்வீடன்பர்க் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மு.தெ.: (பதில்லை)
என் கேள்வியின் தொடர்ச்சி: ஸ்வீடன்பர்க் அவர்களின் காலம் கி.பி. 1688 – 1772. இவர் கடவுளை Triune God என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்து New Jerusalem Church என்ற ஒன்றை உருவாக்கினார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? Trinity சரியா? Triune சரியா?
மு.தெ. பதில்: இதுபற்றி தாங்களே கூறிவிடுங்கள்!
என் விளக்கம்: Triune God என்பது பரம்பொருளின் மூன்று குணங்களைக் குறிக்கும் எஙிறார் ஸ்வீடன்பர்க். அறிவி, இச்சை, செயல் என்ற இம்மூன்று குணங்களை இயற்கையாக உடைய ஒரு சித்துப் பொருள்தான் பரம்பொருளாகிய கடவுள். (இதையொட்டி சைவ சித்தாந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப ஸ்வீடன்பர்க் உலகத் தோற்றத்தை விளக்கியதைச் சுருக்கமாக விளக்கினேன்)
மு.தெ: அவையோரே! பாருங்கள்! நாம் அழைத்து வந்திருக்கிற நீதிபதிகள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர் என்பது தெரிகிறதா? (குறிப்பாக என் பெயரைச் சொல்லி) இவர் மிக நுண்மாண் நுழைபுலம் உடையவர். இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய இந்த Trinity தங்களுக்குள் பேசிய மொழி என்ன தெரியுமா? தமிழ் தான்! தமிழே உலகத்தின் முதல் மொழி. இதற்கு விவிலியத்தில் ஆதாரம் இருக்கிறது. ஆதியாகமம் 11 – ஐப் படியுங்கள்! ஆனால் Trinity கோட்பாடு விவிலியத்தில நேரடியாகக் கூறப்படவில்லை.
[என் கருத்து: Trinity கோட்பாடு விவிலியத்தில் நேரடியாக கூறப்படவில்லை என்றால் இவர் அதை அறிந்தது எப்படி? அதை விவிலியத்தில் எப்படி இவர் ஏற்றி கூறலாம்? இவரை அடியொற்றி சில கிறித்துவர்கள் நூலே எழுதியிருக்கிறார்கள். இதற்கு கிரித்துவ திருச்சபைகளின் ஆதரவு உண்டா? அடுத்து, உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்று இவர் கூறியது இன்று மானிடவியலாளர்கள், கடலடி ஆய்வறிஞர்கள், உலகப் பழமையான எழுத்தினை கணினி மூலம் ஆய்வு செய்பவர்கள் ஐயத்திற்கு இடமின்றி நிறுவி வருவது உண்மை. ஆனால் இதற்கு இவர் கூறும் ஆதியாகமம் 11 சரியான மேற்கோள் ஆகுமா என்றால் ஆகாது என்பது தான் உண்மை.
                  “ஆதியாகமம் 11: 1 : பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது.
ஆதியாகமம் 11: 6 : அப்பொழுது கர்த்தர் இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைப்பட மாட்டாது என்று இருக்கிறார்கள்
ஆதியாகமம் 11: 7 : நாம் இறங்கிப் போய் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறு மாறாக்குவோம்”
 விவிலியத்தில் இப்பகுதியில் ஆதியில் ஒரே பாஷை பேசப்பட்டது என்று தான் வருகிறதே தவிர அது தமிழ் என்ற குறிப்பு தினையளவும் இல்லை. அத்துடன் அம்மொழியை இறைவனே தாறுமாறக்கினான் என்பதும் தமிழுக்கு ஆதரவாக இல்லை.
எனவே இது ஒரு தவறான மேற்கோள். அதை விட விஞ்ஞான ரீதியாக தமிழை உலக முதன்மொழி என்பதற்கு சான்றுகள் பலவுள என்றாலும் இவர் சொல்கிற Trinity தமிழ் தான் தமக்குள் பேசிக் கொண்டது என்பதற்கும் விவிலியத்தில் சான்றுகள் ஏதுமில்லை.
இதைவிட இயேசு கிறித்து பேசிய அறமாயிக் மொழி தமிழோடு நெருங்கிய தொடர்புடைய தமிழின் கிளைமொழி என்பதைக் கூறலாம். அண்மையில் திரு.ம.சோ.விக்டர் என்ற கிறித்துவ அறிஞர் ஒரு ஓளிப்பதிவுக் காட்சியை பேஸ்புக்கில் அளித்தார். அதில் இயேசு சிலுவையில் இறுதியாகக் கூறியவை தமிழே என்று அறுதியிட்டிருக்கிறார்.
இயேசு இறுதியாகக் கூறியது இது என்று விவிலிய புதிய ஏற்பாட்டில் காணப்படும் சொற்கள் இவை “எலியோ! எலியோ ! லாமா! சாபக்தா நீ!”
இதில் எல் என்பது ஓலிக் கடவ்யுளைக் குறிக்கும் தமிழ்ச்சொல். அக்கடவுளை அழைப்பதாக “எலியோ!” என்று அழைத்தார் இயேசு. அடுத்து “சாபக்தா நீ” என்பதை “சாவைத் தா நீ” என்ற தமிழின் திரிபு அது என்கிறார் விக்டர். சிலுவையில் வலி தாங்க முடியாமல் சாவை இறைவனிடம் இயேசு வேண்டினார் என்பது அவர் கருத்து.  இயேசு அறமாயிக் பேசியவர் என்பதனால் அவர் இறுதியில் பேசியது திரிந்த தமிழ் என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
எனவே இது போன்ற ஓரளவிலாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றுகளைக் காட்டாமல் தவறான ஒரு மேற்கோளை திரு.தெய்வநாயகம் கூறியது அவருக்கே உரிய பாங்கு எனலாம்.]
கேள்வி: திருக்குறள் சைவ – வைணவ இலக்கியங்களில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளதா? (திரு தெய்வநாயகம் திருவள்ளுவர் தோமாவின் சீடராய் அவரிடம் கற்று திருக்குறள் எழுதினார் என்று கற்பித்துக் கூறுபவர்.)
மு.தெ. பதில்: இது பற்றி நாளை ( 28-08-2013) ஆய்வுரையில் பேசுவேன். அப்போது இதற்கு விடை வரும்.
தொடரும்……

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

28-08-2013 ஆம் நாள் காலை

மு.தெ. ஆய்வுரை: இதில் திரு தெய்வநாயகம் கூறிய சில முக்கிய கருத்துக்களாவன:
  1. புற வழிபாடு எல்லா மதத்திலும் வன்முறைக்கே வித்திடுகிறது
  2. புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, ஜெஹோவா பற்றிய பெயர் குறிப்பாகக் கூட இல்லை.
  3. பழைய ஏற்பாடு முழுதும் அரசியல்தான்; அதில் காணப்படும் பல தகவல்கள், தரவுகள் கிறித்துவத்திற்கு எதிரானவை.
  4. ரட்சிப்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் உள்ள உண்மைத் தெளிவு பழைய ஏற்பாட்டில் இல்லை.
  5. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலிருந்து நடிப்படைகள் இணைக்கப்பட்டு வடக்கே சமஸ்கிருதம் தோன்றி பொதுமொழி ஆயிற்று.
 
[மீண்டும் அவையோர் தோமா தமிழகத்திற்கு வந்தாரா என்பதை பற்றி ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.]
மு.தெ. விளக்கவுரை: [தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை விளக்க முற்படுகிறார்.] தோமா தமிழகத்திற்கு வருமுன் இங்கே இருந்தது சமணமும் பௌத்தமும் தான். அப்புறம் உருவானது தான் சைவ – வைணவக் கோட்பாடுகள். இப்போதுள்ள கிறித்துவ மதம் எங்கோ கீழே உள்ளது. சைவ சித்தாந்தமோ மிக உயர்ந்த நிலையில் உள்ளது. சித்தாந்தம் கூறாத வேதம் – வேதாந்தத்தை உருவாக்கியவர் வியாசர். அவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான். இராமாயணம் எழுதிய  வால்மீகியும் தாழ்த்தப்பட்டவர் தான். வேத வியாசர் தான் ரிக், யசுர், சாம, அதர்வண வேதத்தை எழுத்துருவில் கொண்டு வந்தார்.
[பேச்சு உணவு இடைவேளை வரை நீண்டு கொண்டு மேலே சென்ற பாணியிலேயே தோமாவின் தமிழக வருகை பற்றிய கேள்வியைத் தொடாமலே சென்று முடிந்தது.]

மாலை 4.30 மணி முதல் மீண்டும் ஆய்வுரை

மு.தெ.: திருக்குறள் தோமா வழியில் உருவாக்கப்பட்ட நூல் ஆனால் இது சமய வரலாற்று நூள் இல்லை; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திருக்குறளில் உயிர் வதைக் கோட்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் உண்டு. (சில குறட்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்) இந்தக் கருத்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இல்லை என்றாலும் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது. ரோமர் 14 பகுதியில் உயிர் வதைக்கு எதிரான வசனங்கள் வருகின்றன (அவற்றை மேற்கோள் காட்டுகிறார்). இவை திருகுறலில் எப்படி வந்தன? தோமா வழிக் கிறித்துவத்தால் திருக்குறலில் இது கூறப்பட்டது. இதை யாராவது மறுக்கமுடியுமா?
[என் கருத்து: உயிர் வதை செய்யலாகாது என்பது உலகில் உள்ள எல்லா அருளாளர்களின் பொதுக் கருத்து. அதை திருவள்ளுவர் கூறினார் என்பதாலேயே தோமாவிடமிருந்து தான் வள்ளுவர் அதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதென்ன கட்டாயம்? தோமா வருவதற்கு முன் தமிழர்காள் எல்லாம் உயிர்வாதை செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தனரா? தோமா வந்தவுடன் அசைவ உணவுகளை தமிழர்கள் விட்டார்காளா?
இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரம் உண்டா? உண்டென்றால் காட்டினாரா? அது ஒரு புறம் இருக்கட்டும்; இவரது மேற்கோளாவது உயிர் வதையை எதிர்க்கிறதா என்றால் அதுவும் இல்லை.
புதிய ஏற்பாடு ரோமர் 14 :2: ஒருவன் எந்தப் பதார்தத்தையும் புசிக்கலாம் என்று நம்புகின்றான்; பலவீனமானவனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்
ரோமர் 14 : 3 : புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; இறைவன் அவனை ஏற்றுக் கொண்டாரே!
இந்த வசனங்கள் எல்லாம் உயிர் வதையை எப்படி எதிர்க்கின்றன என்று திரு.தெய்வநாயகம் தான் விளக்கம் தர வேண்டும். இதைத்தான் தோமாவிடம் கற்றுக் கொண்டு திருவள்ளுவர் உயிர்வதைக்கு எதிராகக் குறட்பாக்களைக் கொட்டினாரா? நல்ல வேடிக்கை இது!]
கேள்வி: திருக்குறளில் இன்பத்துப் பால் இருக்கிறதே! தோமாவிற்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம்? தோமாவிடம் கற்றுக் கொண்டா காமத்துப் பாலைத் திருவள்ளுவர் எழுதினார்? (இந்த கேள்வி பேராயர் எஸ்றா சற்குணம் எழுப்பி விட்டுச் சென்ற கேள்வி. இது மீண்டும் வேறு ஒரு அவை நண்பரால் கேட்கபட்டது.)
மு.தெ. பதில்: திருக்குறளில் இன்பத்துப்பால் இருப்பதைப் பற்றி சிலர் மாறுபடப் பேசுகிறார்கள். அதன் உயர்வு தெரியாமலேயே இவர்கள் பேசுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் கூறப்படும் தலைவன் – தலைவி இறைவனும் ஆன்மாவும் தான். இறைவனை மணவாளன் என்றும் ஆன்மாவை மணவாட்டி என்றும் கூறும் கருத்துக்கள் விவிலியத்தில் உண்டு. எனவே ஆன்மா இறைவனோடு சேர்ந்து அனுபவிக்கும் பேரின்பம் தான் திருக்குறளில் வரும் இன்பத்துப் பால்.
[என் கருத்து: இது ஏற்கத்தக்கதே. விவிலியத்தில் பல இடங்களில் மணவாளன் – மணவாட்டி என்ற குறிப்புகள் வருகின்றன. ஆனால் உரிய விளக்கங்கள் இல்லாமல்.]
மு.தெ: (தொடர்கிறார்) இன்னும் திருக்குறள் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும். திருவள்ளுவர் கி.மு. 31ல் தோன்றியவர் என்று சிலர் ஆராய்ச்சி முடிவுக்கு வந்து அதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு நாட்காட்டிகளை அச்சிட்டு வருகின்றது. உண்மையில் திருவள்ளுவர் கி.பி.3 முதல் 6அம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் இதனை எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமானாலும் வந்து ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். முன்னர் அறிஞர்கள் செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் ஆராய்ச்சியன்று.
இன்னும் திருக்குறள் பற்றிக்கூறிய அவரது கருத்துக்கள்:
ஆதி பகவன் – பகுத்தவன் பகவன்; பகுத்தவன் இறை, பரிசுத்த ஆவி, குமரன் என்று பகுத்தான்.
வாலறிவு – ஒளி அறிவு
இருவினை – பிறக்கும் போதே வாரும் வினை. இது உடனிருப்பதால் சகசமலம் எனப்படும்.
ஐந்தவித்தான் – பேதுரு (St. Peter)
ஐந்தவித்தான் ஆற்றல் – சாவை வென்ற ஆற்றல்
[என் கருத்து: வள்ளுவரை கிறித்துவிற்கு முந்தி 1 ஆண்டுகள் மூத்தவர் என்று சொல்வதை ஏற்க இவருக்கு மனம் இல்லை. ஏனென்றால் முன்னவரானால் தோமாவிற்கு சீடராக முடியாதே! எனவே இதுவரை யாரும் கூறாதவாறு வள்ளுவர் 3 –ஆம் நூற்றாண்டிற்கும், 6 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவர் என்கிறார். ஏன் அவ்வளவு பெரிய மூன்று நூற்றாண்டு இடைவெளி! இதில் இவருக்கே தெளிவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அடுத்து தோமாவோ கி.பி. 52 லிருந்து 72 வரை அதாவது 20 ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தார் என்றும் அவரை பிராம்மணர்கள் கொலை செய்துவிட்டனர் என்பதும் இவர் போன்றவரின் நம்பிக்கை. எனில் தோமாவின் சீடர் வள்ளுவர் என்றால் அவரும் தோமாவின் காலத்தில் தானே வாழ்ந்திருக்க வேண்டும்? பின் வள்ளுவர் எப்படி கி.பி.  3 – 6 நூற்றாண்டுகளின் இடையில் பிறந்தவராக இருக்க முடியும்? சிறுவரும் நகைக்கும் படி ஒரு தகவல் கூறி அதைப் பல்கலைக் கழகத்தில் ஆதாரத்துடன் நிறுவுவேன் என்கிறார். ஏன், இந்த ஆய்வரங்கம் ஆய்வரங்கம் இல்லையா? இங்கே ஒரு தகவலைக் கூறிவிட்டு ஆதாரங்களை கற்பனையாக ஏதோ ஓர் பல்கலைக் கழகத்தில் எதிர்காலத்தில் கூறுவேன் என்பது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை. இன்னுமொன்று : பேதுரு தான் ஐந்தவித்தான் என்கிறார்; ஐந்தவித்தான் ஆற்றல் என்பது சாவை வெல்லும் ஆற்றல் என்கிறார். ஆனால் பேதுருவோ சாவை வென்றதாக வரலாறில்லை. பேதுரு கொலையுண்டார் என்று விவிலியம் சான்று பகர்கின்றது.]
மு.தெ. நிறைவுரை: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கருதப்பட்ட பல கருத்துக்கள், இயேசு பிறந்த பிறகு வந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மறுக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில் பணக்காரனுக்குத் தான் பரலோக சாம்ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. ஆனால் இயேசுவோ ஊசி நுழையும் இடத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்; ஒரு பணக்காரன் பரலோக சாம்ரஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்று கூறியது புதிய ஏற்பாட்டில் வருகிறது. பழைய ஏற்பாட்டில் கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல், கைக்கு கை, கலுக்கு கால் என்று பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று யாத்திராகமத்தில் வருகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவோ, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுக்கன்னத்தைக் காட்டு என்று கூறுகிறார். எனவே பழைய ஏற்பாட்டு யூத மதம் வேறு; புதிய ஏற்பாட்டு கிறித்துவ மதம் வேறு.
பழைய ஏற்பாட்டில் பலி உண்டு; புதிய ஏற்பாட்டில் பலி நிறைவேற்றக் கொள்கை உண்டு. இயேசுவே உலக மக்களை மீட்க தானே பலியுண்டார். அத்துடன் பலி நிறைவேறிவிட்டது. இந்தக் கொள்கையைத் தான் தோமா தமிழகத்திற்கு தந்து தமிழகத்தில் பலிகளை நிறுத்தினார். அதற்கு முன் தமிழகக் கோயில்களில் பலி இடப்படுவது காணப்படுகிறது. அதன்பின் தோமா வழியைத் தமிழகம் ஏற்றுக் கொண்டபோது பலி நிறுத்தப்பட்டது. திருநீறு கூட தோமாதான் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
[நீதிபதிகள் இறுதிக் கேள்வி-பதில் பகுதிக்குப் பின் அளிக்கப் பட வேண்டிய தீர்ப்புகளைப்பற்றிக் கலந்து பேசினோம். அதற்கு நீதிபதிகளை அவர் கடிந்து கொண்டார். நீதிபதிகளைக் கடிந்து கொள்வது எந்த அரங்கமும் காணாத செயல். அதை அவர் செய்தார்.] நான் பேசுகிற பேச்சை நீதிபதிகள் கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தால் தீர்ப்பு எப்படி வழங்க முடியும்?
[இடையில் ஒரு வாலிபர் எழுந்து விவிலியத்தை மேற்கோள் காட்டி ஒரு சந்தேகத்தை கேட்டார். அதெல்லாம் கேட்காதே, போய் நன்றாகப் படி! என்னுடைய நூல்களையும் படி! உட்கார்! என்று அதட்டி அவரை அமர வைத்துவிட்டார்.]

மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை

கேள்விகள் நேரம்

 

[கேள்விகள் குவிந்திருந்தன. அவற்றை நீதிபதிகள் கலந்தாய்வு செய்து கொண்டிருக்கையில் ஒரு கேள்வி எப்படியோ திரு.மு.தெய்வநாயகம் அவர்களுக்கு நேரிடையாக சேர்ந்துவிட்டது. அதனை அவரே படித்துவிட்டுப் பதிலளிப்பதாக சீறினார்.]
மு.தெ.: தோமா தமிழகதத்திற்கு வந்தார் என்பதர்கு historical evidence, archeological evidence, epigraphic evidence காட்டுங்கள் என்று ஒரு கேள்வி என்னிடம் வந்திருக்கிறது. இதையெல்லாம் இந்த குறைந்த நேரத்தில் கூற முடியாது. வேண்டுமானால் என்னுடைய ஐந்து நூல்களைப் படியுங்கள்! இன்னும் தேவையானால் இதற்கெனவே 15 நாட்கள் வேறு ஒரு சமயத்தில் கூடி விவாதத்தில் சரியான் சான்றுகளை அப்போது என்னால் காட்ட முடியும்.
[இடையில் சலசலப்பு செய்து இரு வாலிபர்கள் கடைசி இருக்கைகளிலிருந்து எழுந்து, “சான்றுகளைக் காட்டுங்கள்! இதுவரை அது பற்றி நீங்கள் எதையுமே தொடவில்லை!” என்று கூக்குரலிட்டார்கள். உடனே திரு.தெய்வநாயகமும் அவரது ஆதரவாளர்களில் சிலரும் எழுந்து சத்தமிட்டு அவர்களை அமர வைத்து விட்டார்கள்]
மு.தெ. : (தொடர்ந்தார்) நான் எல்லாவற்றையும் இரண்டு நாளாகத் தெளிவாகக் கூறிவிட்டேன். எனவே தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பது உண்மை. தோமா தமிழகத்திற்கு வரவில்லை என்பவர்கள் கையைத் தூக்குங்கள்!
[சலசலப்பிற்கு அஞ்சி யாருமே கையைத் தூக்கவில்லை. அனால் எதிர்க் கேள்விகள் பல சீட்டுகளில் வந்திருந்தன.]
மு.தெ.: யாருமே கையைத் தூக்கவில்லை எனவே தோமா தமிழகத்திற்கு வந்தார் என்ற கொள்கையை இந்த அவை ஏற்றுகொண்டது.
[என் கருத்து: இது மிகப்பெரும் ஊழி வேடிக்கை! இப்படியே ஆதாரங்கள் எதையும் கூறாமல் எதை வேண்டுமானலும் நிறுவியதாகக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆட்டைப் பலி கொடுப்பவர்கள் அதன் தலையில் தண்ணீரைத் தெளிப்பார்கள். உடனே ஆடு தலையை அசைக்கும். உடனே தன்னை வெட்ட ஆடு சம்மதம் தெரிவித்து விட்டது என்று பூசாரி கத்த ஆட்டின் தலை வெட்டப்படுமாம்! சரி சபை ஏற்றுக் கொள்வதை இப்படி நேரடியாகச் செய்வதானால் எதற்கு ஆய்வரங்கம்? எதற்கு நீதிபதிகள்? அவர்களுடைய தீர்ப்பு எதற்கு? அவையும் இவருமே சேர்ந்து முடிவெடுத்துக் கொள்வதுதானே! ]
கேள்வி: (நான் வாசித்தது) அவையிலிருந்து வந்த மற்றுமோர் கேள்வி! “பழைய ஏற்பாட்டையும், திருச்சபையையும் மிகவும் தாக்கிப் பேசுகிறீர்கள். என்மனம் புண்படுகிறது. நான் குடிகாரனாய் இருந்து திருச்சபையினால் திருந்தி நலமுடன் வாழ்கிறேன். இப்படி நீங்கள் பேசுவது நியாயமா?
மு.தெ.: (காட்டமாக) இது என்ன கேள்வி? இதை நீங்கள் வாசிக்கலாம்? இது ஆய்வரங்கத் தலைப்புக்குப் பொருத்தமானதா? எதை எதை வாசிப்பது என்று தெரியாதா?
நான்: என்ன பேசுகிறீர்கள்? கேள்விக்குழு தேர்ந்தெடுத்து அனுப்பியதைத் தான் நான் வாசித்தேன். நீதிபதி எதை வாசிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைத் தான் வாசிக்க வேண்டும் என்று நீதிபதியை நிர்பந்திப்பது ஓர் ஆய்வரங்க நெறிமுறைக்கு உட்பட்டதாய் இல்லையே! இது பொருத்தமில்லாத கேள்வி என்றால் கேள்வி கேட்டிருப்பவர் உங்கள் பேச்சிலிருந்துதான் அந்தக் கேள்வியை கேட்டுள்ளதாக தெரிவிக்கிறார். நீங்கள் அதைத் தலைப்புக்குப் பொருத்தமில்லாதது என்று சாடினால் அந்தக் குற்றம் உங்களையே சாரும்! காரணம் உங்கள் பேச்சிலிருந்து தான் அந்தக் கேள்வி எழுந்துள்ளது. எனவே தலைப்புக்குப் பொருத்தமில்லாமல் பேசியது தாங்களே என்பதைத் தயவு செய்து உணருங்கள்!
[உடனே அந்த கடைசி இருக்கை வாலிபர் இருவரும் எழுந்து, நீதிபதி ஐயா சொன்னது முற்றிலும் உண்மை! இரண்டு நாட்களாக தலைப்புக்கும் கேள்விகளுக்கும் பொருத்தமில்லாமலே பேசி வருபவர் தாங்கள் தான் என்றனர். அவர்களை அடக்குவாரும் அவர்களுக்கு ஆதரவாய்ப் பேசுவாரும் என சிறிது நேரம் கூச்சல் நேர்ந்தது.]
மு.தெ.: (காட்டமாக) இந்த மாதிரி கலவரம் செய்யத்தான் நீங்கள் வந்தீர்களா? (என்று என்னைப் பார்ர்த்துக் கேட்டார்)
நான்: ஒரு நீதிபதியாக என்னை அழைத்து வந்து விட்டு இப்படி பேசுவது தகுதிக்கு தக்கதல்ல.
[அவையிலிருந்து ஒருவர் எழுந்து வந்து என்னிடம், ‘ஐயா! அவர்களை அடக்குங்கள்!’ என்றார்]
நான்: “ அவையை அடக்குவது ஏற்பாட்டாளர்கள் வேலை.” என்று கூறிவிட்டு, ‘பாஸ்டர் ஸ்டீபன் ! பாஸ்டர் நல்லதம்பி! உடனே மேடைக்கு வாருங்கள்! என்று அழைத்தேன்.
[உடனே பாஸ்டர் ஸ்டீபன் நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவந்து தங்கும் மாறுபாடான கருத்து உண்டு என்றாலும் திரு.தெய்வநாயகம் அவர்கள் தான் கொண்ட கொள்கைகளுக்காக இழந்த இழப்புகளுக்காகவும், தியாகத்திற்காகவும் மதிப்பு வைத்தே இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்ததாகக் கூறி அமைதிப்படுத்தினார்.]
இதன் பிறகு உப்புக் சப்பில்லாமல் சில கேள்விகளும் அதற்கு தெய்வநாயகத்தின் பதிலும் நடந்தேறின. இறுதியில் தெய்வ நாயகம் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு முன் தான் பேச வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டு பேசத் தொடங்கினார்.
மு.தெ: இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதப் போகிறார்கள். முதல் நாள் வந்த ஷம்சுதீன் என்ற இஸ்லாம் பெரியார் வயிற்று வலி காரணமாக இன்று இரண்டாம் நாள் வரவில்லை. [இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது இவரது வழக்கறிக்கை நீதிபதிகள் மேசைமீது வழங்கப்பட்டது.] இப்போது எனது வழக்கறிக்கையை அளித்துள்ளேன். நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சங்களை அறிய எனது 5 நூல்களை அளித்துள்ளேன். அவற்றை முழுவதுமாகப் படித்தால் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும்.  ஏறத்தாழ ஒன்றரை நாட்களில் இந்த ஐந்து நூல்களையும் நீதிபதிகளால் படித்து முடிக்க முடியாது. இருந்தாலும் அவற்றைப் படிக்காமல் தீர்ப்பளித்தால் அது ஒரு தீர்ப்பாகவே இருக்க முடியாது. எனவே வேறு ஒரு சமயத்தில் சுமார் 15 நாட்கள் விவாதிக்கலாம். நீதிபதிகளும் அவற்றைப் படித்து விட்டு விவாதத்தில் கலந்து கொள்ளலாம். இந்தச் சூழ்நிலையில் தீர்ப்பு இன்றே வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவையே சொல்லட்டும்!
[அவையில் சிலர் தீர்ப்பு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்கள் பணம் கொடுத்துக் கலந்து கொண்ட காரணத்தால் இன்றேதீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.]
தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரைமணி நேரம் நீதிபதிகள் நால்வருக்குள்ளே விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எங்களுக்குள் விவாதித்தோம். நீதிபதிகளை அழைத்து வந்து திரு.தெய்வநாயகம் அவமதித்ததை மிகவும் வருத்தத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். படித்து விட்டு வா என்பதும், மேலும் 15 நாட்கள் விவாதிக்க வேண்டும் என்பதும், இரு நாட்களாக தமிழகத்திற்கு தோமாவின் வருகை பற்றியே எவ்வித ஆதாரமும் காட்டாததையும், ‘இந்தியா புனித தோமா வழிக் கிறித்துவ நாடே’ என்று இவரே தேற்றேகாரம் கொடுத்து தமக்குத் தாமே தீர்ப்பு செய்து கொண்டு போலியாக ஆய்வரங்கத்தைக் கூட்டியதும் ஆகிய இவற்றை மிகுந்த கவலையோடும் வேதனையோடும் பேசி, இது முறையற்ற ஓர் ஆய்வரங்கம் என்று முடிவு செய்தோம்.
இறுதியில் நீதிபதிகள் பிரதிநிதியாக பேராசிரியர் ப.ஜீவானந்தம் அவர்கள் தீர்ப்பை வழங்குமுன் சிற்றுரை ஆற்றி தீர்ப்பை வழங்கினார். அது இது தான்:
“முறைமாறாக வழக்கறிக்கையே தீர்ப்பு சொல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் வழங்கப்பட்டதாலும், 5 நூல்கள் படித்துவிட்டு வந்த பிறகு 15 நாட்கள் விவாதம் வைத்தப்பின் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவர் கூறுவதாலும், தீர்ப்பைத் தள்ளி வைக்கிறோம்”
வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டியதே ஏற்புடையது என்றாலும் ஏற்பாட்டாளர்கள் மனம் புண்பட வேண்டாம் என்று தள்ளி வைக்கப்பட்டது என்றோம். [29-08-2013 ஆம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.]
ஆய்ந்து பார்த்தால் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருப்பது உண்மை. ஆனால் இயேசு வழி, தோமா வழியில் சைவம் உருவானது என்பது பாட்டியை பேத்திதான் பெற்றெடுத்தாள் என்பதாக அல்லவா இருக்கிறது??!! இந்தப் பொருளில்லா கூற்றை ஒருவர் 45 ஆண்டுகளாக அறைகூவி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
சரி! தோமா தமிழகத்திற்கு வந்தது பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று முணுமுணுக்காதீர்கள்!. இதன் தொடர்ச்சியாக அந்த ஆய்வை மேற்கொள்கிறோம்! விரைவில் எதிர் பாருங்கள்!!!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்

Posted: மே 24, 2010 in இந்தியா இயேசுஇயேசுகருணாநிதிகிறித்துவம் - கிறிஸ்துவம்,சிலுவைதிருக்குறள்தோமையார்

பி.எச்டி. வாங்கலியோ! சாந்தோம் சர்ச்

Santhome Church Bishop Utterance.

சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் புனித தோமையார்” படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.

This பால்ராஜ் லூர்துசாமி- had 3 P.Hd.

  

`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.//

Sir- It is 100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIES at Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop

Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985

Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993

Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003

Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999

Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.

Former Archbishop Arulappa has written many books  on this falsehood

 File?id=dcnjmj8m_46gstkxxtp_bDr. R. Arulappa: Late archbishop of the Madras-Mylapore Archdiocese.

 https://i2.wp.com/img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_17290461064.jpg

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-

”இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”

This book by Tamil and Shaiva scholar Vidwan Arunai Vadivel Mudaliar is the refutation of Deivanayakam’s spurious doctoral thesis “Viviliyam, Tirukkural, Shaiva Siddhantam Oppu Ayvu”. Mudaliar’s refutation was published in 1991 by the International Shaiva Siddhanta Research Centre, Dharmapuram, Tamil Nadu, India

On this book release funcion Honourable Justice opinion:

Justice Krishnaswami Reddiar strongly criticised the modern tendency of publishing trash in the name of research. He said research must have an aim, a purpose, to get at the truth. Research was not meant to find evidence to denigrate an ancient faith. Research should not start with preconclusions or prejudices. Here the author’s motive was to show the superiority of Christianity. Religion was based not only on facts but also on faith and beliefs. The book had hurt Hindu beliefs.

Justice Krishnaswami Reddiar quoted from the works of Sita Ram Goel and Ishwar Sharan and asserted that the visit of St. Thomas to India was a myth. He wondered how could such a book be published by [the International Institute of Tamil Studies, Adyar, Madras,] set up by the Government. It was a crime that such a book had been written and published and awarded a doctorate degree [by the University of Madras,] he said.

Sir-This book was sent to Santhome Arch Bishop and Deivanayagam, what is your opinion.

NOW SCHOLARLY Opinions from a Jesuit Father

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She hadconverted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//

ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.

திருக்குறள்-G.U.Pope உரை
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
G.U.Pope 543
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
described.

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
G.U.Pope 559
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.//

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

SIR-How come so many P.Hd.s offered when very clearly Christian Scholars so nothing in Thirukural is to do with Bible.Let Mylapur Church stop these CRIMINAL Activities immediately



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Friend requests
Messages
1Notifications
 
Account Settings
 
 
 
Suggested Pages
See All
 
லஞ்ச ஒழிப்புக்கழகம் கோவை
 likes this.
My street prayer
179 people like this.
Esco Comodoro SA
511 people like this.
English (UK) · English (US) · தமிழ் · हिन्दी · اردو
 
Privacy · Terms · Advertising · AdChoices · Cookies · 
Facebook © 2017
 
 
 

அவசியம் படிக்க வேண்டிய பதிவு

சீமானை செபாஸ்டீன் என்று நீங்கள் அடிகடி குறிப்பிட்டு காட்டுவதால் நீங்கள் என்ன சொல்ல வாரீர் மாரிதாஸ்? கிறிஸ்தவர் ஒருவர் நாட்டுக்கு அரசியல் போராட்டத்தை மேற் கொள்ள கூடாதா ? அது ஏன் செபாஸ்டீன் என்று எல்லா நேரமும் கிண்டல் தோணியில் அதை சேர்த்து கொள்கிறீர்? (கேள்வி:ஆரோக்கியராஜ்)

ஆரோக்கிய ராஜ், இதை நீங்கள் தான் முதல் நபர் நாகரீகமாக கேட்டவர். தினமும் 10 anonymous இதே கேள்வியை கொஞ்சம் என்னை திட்டி கேட்பதால் நான் பதில் தருவது இல்லை.

இப்போ நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன்- மற்றவர்கள் ஏன் கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியாது , நான் கூற வலுவான காரணம் உண்டு.

ஒரு சின்ன விஷயம் புரிந்து கொள்ளவும்:

Evangelism – 1850களில் கிருஸ்தவ அமைப்புகள் ஒட்டுமொத்தமாக உலக அளவில் அனைத்து நாடுகளிலும் இருக்கும் பழமையான மத நம்பிக்கைகளை ஆராய்து அறிக்கை தர ஆரம்பிக்கிறார்கள். 
அதில் விசேஷம் என்னவென்றால் “மதம் மாற்ற போகும் நாடில் அந்த நாடின் வரலாற்றை கொஞ்சம் குழப்புவது , அந்த மக்களிடையே பிரிவினையை விதைத்து பிளவுபடுத்தி மெதுவாக மதம் மாற்றுவது” இந்த வேலையை செய்தவர்கள் Evangelist அதற்கான பொதுவான வழிமுறை Evangelism என்று வைத்துகொள்ளவும். 
இது தான் BIBLIOGRAPHY ON WORLD MISSION AND EVANGELISM-ன் அடிப்படை.

இதனால் மொத்த ஆப்ரிக்கவும் தங்களுக்குள்ளாகவே சண்டை இட்டு கொள்கிறார்கள். அதே போல இந்தியாவிலும் ஆரிய திராவிட பிரிவினை விதைத்தது இதே EVANGELISM தான். அதன் நீச்சி 
------------------
2005களில் இங்கே தமிழகத்தில் ஜான்சாமுவேல் , தெய்வநாயகம் இந்த இரண்டு பேரும் தமிழகத்தில் ஒரு புதுவிதமான பிரச்சாரத்தை முன் வைத்தனர். அது

"நம்ம சென்னை St.தாமஸ் மவுண்டில் இந்த கதையை ஆரம்பம் ஆகிறது, கிருஸ்துவின் சீடரான தாமஸ் இங்கே வந்தவர் தமிழர்களுக்கு யேசுவின் தத்துவங்களை ஆன்மீக போதனைகளை சொல்லி திருத்தினார் - அவர் வருவதற்கு முன்னர் இங்கே கண்ட கண்ட விதமாக முறை இல்லாத கடவுள் வழிபாடுகள் இருந்தது அதை சரி செய்து தத்துவங்களை போதித்து திருத்தினார் - அவர் கொடுத்த Soulology கற்றுகொண்ட பிராமணர்கள் அவரை கொன்றுவிட்டு அந்த ஆன்மீக விசயங்களை திரிக்க உருவானதே இந்த ஹிந்து வேதங்கள். பெத்தேலகம் நினைவுக்கல் அதன் நீச்சியாக சிவலிங்க வழிபாடு உருவானது - இந்த திருக்குறல் இருக்கே அது நல்லா படிங்க தாமஸ் அவர்களுடய கருத்தின் வெளிபாடே. முருகன் சிவன் எல்லாம் இந்த தமிழர்கள் முன்னோரே. ஹிந்து மதம் என்ற மதம் ஒன்று இல்லை".

என்று அவர் இஸ்டத்துக்கு அனைத்து வரலாற்றையும் குழப்பி ஆராய்ச்சி நடுத்துறேன் பேர்வழி திருவள்ளுவர் , சிவன் , முருகன் எல்லாம் தாமஸ்க்கு பக்கத்தில் உக்காரவச்சு தாமஸா நடுவுல வச்சு கிறிஸ்தவமே தமிழர்கள் ஆதி மதம் என்று கூற – வழக்கம் போல அதில் பிராமண எதிர்ப்புக்கு வந்த தாமஸ் அவர்களை கொலை செய்தது பிராமணர்கள் தான் என்று கொஞ்சம் தூக்கலாக மசாலா கலந்து அடிக்க உருவாகிறது தமிழர்கள் ஹிந்துகள் இல்லை என்று முதல் கோசம்”.

இன்று இருக்கும் இந்த இந்தியா என்பது "தாமஸ் வழி திராவிட கிறித்தவ நாடா இருந்து அது பின்னர் பிராமணர் , ஆரியர்களால் மனுநீதியின்படி ஒடுக்கபட்டு இந்த நிலைக்கு வந்தது". 
யாரும் சிரிக்க வேண்டாம் , இது பெரிய வெற்றி அடைந்த ஆய்வு. பெரும்பாலான கிருஸ்தவ சபைகள் வரவேற்க - நம்ம கருணாநிதி வாழ்த்தோடு 2005ல் New York நகரில் ஒரு பெரும் மாநாட்டை நடத்தி காட்டினர்.

இதை அங்கீகாரம் செய்தவர்கள் Evangelist. யார் இந்த Evangelist என்று முதலில் கூறிவிட்டேன். 
{கிருஸ்தவர்கள் நம்பிக்கையில் இந்த Cross வந்தது 7ஆம் நூற்றாண்டில் , தாமஸ் இந்தியா வந்த கதையை கத்தோலிக்க அமைப்புகள் ஏற்கவில்லை. அவர் இறந்தது எப்படி என்பத உங்கள் தேடளுக்கே விட்டுவிடுகிறேன். ஆனால் இந்த ஆய்வில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாமே வசதியாக திரிக்கபட்டவை. ஆனாலும் நம்பும்படி பரப்புகிறார்கள். இப்போ இயேசு கையில் வேல் வந்துவிட்டது , மாதா கையில் முருகன் வந்துவிடிட்டார்.. }
----------------------------

இதுலாம் இப்போ எதுக்கு ?

காரணம் இருக்கு .

இந்த மொத்த புதிய கருத்தின் விசயம் இதுவே
-தமிழர்கள் ஹிந்துகள் கிடையாது. இன்றய ஹிந்துதுவா என்பதே கிருஸ்துவின் சீடர் தாமஸால் கொடுக்கபட்ட ஆன்மவியல் தத்துவங்களே. 
ஆக மொழியால் பிரித்து, மதநம்பிக்கையால் நாம் ஹிந்துகள் இல்லை என்று முன்வைக்கும் இந்த கூப்பாடு தானே இதே சீமானும் அவர் தம்பிகளும் கூறுகிறார்கள். சீமானும் கம்பு சுத்துகிறார், வீடுகட்டுகிறார்.. !!! இது புரிகிறதா ???

என்ன வெளிபடையாக தன்னை கிறிஸ்தவன் என்று சொன்னால் எடுபடாது என்று எப்படி சுப உதயகுமார், திருமுருகன் போன்றவர்கள் ஹிந்து பெயரின் பின்னால் ஒழிந்து கொண்டு மக்களை பிரிவினை தூண்டுவது போல் இந்த சீமானும் தன் உண்மை பெயரை மறைத்து கொண்டான்.

ஆனால் குரல்? தன்னை ஹிந்து என்று அடையாலபடுத்தாமல்- தமிழன் என்று அடையாளம் கொண்டு தமிழனை மீட்கிறேன் என்று கூறிய அதே தெய்வநாயகம் பல்லவி தானே இந்த சீமான் என்ற செபாச்டீன் பாடுகிறார்..

இதனால் தான், ஹிந்துகளை மொழியால் பிரித்து தமிழர் ஹிந்து அல்ல என்று மெல்ல இந்த விசத்தை செலுத்துவதால் தான் அவரை நான் சீமான் என்ற செபாஸ்டீன் என்று கூறுகிறேன். இது 100% எவனாது தவறு என்று கூறமுடியுமா?

சில அடிப்படையில் ஒழுங்கா செய்தி தாள்கள் படிக்காத , வரலாற்றை தெரியாத , உலக வரலாறு புரியாத , தேசத்தின் உண்மை முகம் தெரியாத புதிதாக அரசியல் பேசு சிலருக்கு வேண்டும் என்றால் சீமான் யார் என்று உண்மை தெரியாமல் இருக்கலாம் ஆனால் இங்கே படிக்கும் பழக்கம் உள்ள பலருக்கு அவர் யார் என்பது தெரியும்... யாழ்மதி , விஜயலட்மி விவகாரம் தொட்டு இந்த முருகனுக்கு காவடி எடுத்த வரை பின்னல் எந்த மாதிரி திட்டத்துடன் இருக்கிறான் சீமான் என்று நன்கு அறிவர்.

இறுதியாக தமிழ் உணர்வால் இவனை நம்பும் சில ஹிந்துகள் சொல்லுங்கள்:

யாசின் மாலிக் என்ற காஷ்மீர் பிரிவினைவாதிக்கு வக்காலத்து வாங்கும் இவனுக்கும் காஷ்மீருக்கும் என்ன தொடர்பு? அதற்க்கு குரல் கொடுத்த இந்த சீமான் காஷ்மீரில் விரடி அடிக்கபட்ட ஹிந்து மக்கள் மீண்டும் குடியமர்த்த எப்போதாவது பேசியது உண்டா ?? இல்லை சில நுறு ஹிந்து கோவில்களை இடிக்கபட்டத்தை கண்டித்து பேசியது உண்டா??? என்றாவது ஹிந்துகள் பாதிப்பு பற்றி வாய் திறப்பது உண்டா???

நன்கு சுற்றி உற்று நோக்கு- இங்கே அதிகமாக அவனை ஆதரிப்பது கிருஸ்தவர்கள் தான். அதுவும் கொஞ்சம் நன்கு விவரம் தெரிந்து கிருஸ்தவர்கள் தான் தமிழன் என்ற போர்வையில் ஆதரிக்கிறார்கள்.
-----------------------------

எனவே சீமான் - செபாஸ்டீன் என்று அழைக்க காரணம் இவன் கிறிஸ்தவன் என்பது அல்ல – இவன் இந்த தெய்வநாயகம் , ஜான் சாமுவேல் குரலை எதிரொலிப்பதால் ஹிந்துகளை குழப்புவதால் ஹிந்துகள் தேசமாக விடுதலையான இந்தியாவை சிதறடிக்க வேலை செய்வதால் நான் இவனை செபாசஸ்டீன் என்கிறேன்.

“நான் அந்த சிலுவையை சுமர்ந்த ஏழையின் மகனை என்றுமே தவறாக சொல்ல விரும்பியவன் இல்லை. என் போல பெரும்பாலும் ஹிந்துகள் இயேசுவை தவறாக சொல்பவர்கள் கிடையாது. ஆனால் மதம் மாற்ற தெரு தெருவாக திரியும் – ஹிந்து கடவுள்களை பேய்கள் போல உருவகம் செய்து பேசி திரிபவர்களை அடித்து துரத்தவே விரும்புகிறோம். அதில் என்ன தவறு இருக்கு?”.

விளக்கம் தவறா சரியா என்று கொஞ்சம் வரலாற்றை தோண்டவும்.

நான் பார்த்த மிக அருவருக்கத்தக்க மனிதன் என்றால் அது சீமான் என்ற செபாஸ்டீன் தான்.

மீண்டும் தெளிவா ஒன்றை புரிந்து கொள்ளவும் "நான் மாரிதாஸ் எந்த மதத்தின் உள்விவகாரங்களிலும் வந்து விவாதம் செய்பவன் அல்ல. அதே நேரம் ஹிந்துக்களுக்கு நிச்சயம் வக்கீலாக வாதாடுகிறேன் பொது தளத்தில். இதில் என்ன தவறு??? நான் எந்த பதிவிலாவது புத்தம் , இயேசு, நபி என்று யாரையாது குறை கூறி பதிந்தது உண்டா?? இல்லை... நான் இந்த தேசத்தின் ஆன்மாவை நம்புகிறேன் - அதற்க்கு வாதாடுகிறேன்.

அதுவும் ஹிந்து வெறி அல்ல ; ஒரு தர்மம் வேண்டாமா வாழ்வில் அதனால். எல்லாரும் பகுத்தறிவு - மதசார்பின்மை - முற்போக்கு என்று ஹிந்து மத நம்பிக்கை மீது தாக்குதல் நடுத்த சரி நாமாது கொஞ்சம் நியாயம் பேசலாமே என்று நிற்கிறேன். தவறு இல்லையே?

சீமான் நிச்சயம் விரட்டி அடிக்கபடவேண்டிய ஆள் தான் அதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. அவனை விட போவது இல்லை.

அவன் சீமான் என்ற செபாஸ்டீன் தான்.

-மாரிதாஸ்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard