New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் திருட்டுகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் திருட்டுகள்
Permalink  
 


சி.எஸ்.ஐ. போலி ஆவணம் தயாரித்ததாக புகார்; பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு

By devapriyaji

போலி ஆவணம் தயாரித்ததாக புகார்;
பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு

http://saveamericancollege.blogspot.com/2009/02/18.html

மதுரை, பிப். 18: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் உட்பட 2 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை பழங்கானத்தத்தை சேர்ந்த தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த போது, பசுமலை சி.எஸ்.ஐ. சபை நிர்வாகக் குழு தேர்தல் முறை கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்தேன். இதனால் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் என் மீது விரோதம் கொண்டார். என்னை ராமநாதபுரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனை தூண்டி விட்டு, பிஷப் எனக்கு தொல்லை கொடுத்தார்.

எனக்கு 22 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சேமநல நிதியிலிருந்து மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க விடவில்லை. 6-வது ஊதியக் குழு பாக்கி தொகையும் வட்டிப் பணமும் கிடைக்க விடாமல் செய்து விட்டனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் என் கையெழுத்தை அழித்தும், திருத்தியும் மோசடியாக போலி ஆவணம் தயாரித்து நஷ்டம் ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், பிஷப் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் தேவராஜ் அதிசயராஜ் மனுத்தாக்கல் செய்தார்.

தேவராஜின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பிஷப் கிறீஸ்டோபர் ஆசீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

  1. தொடரும் பிஷப்பின் மகாத்மியம்
    * இன்றைய (மார்ச் 19, 2009) தினகரன் செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்று:

    *

    ஆசிரியர் அனுப்பிய மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவு

    மதுரை, மார்ச் 19.

    மத்திய கண்கானிப்பு ஆணையத்திற்கு பள்ளி ஆசிரியர் அனுப்பி வைத்த மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் தேவராஜ் அதிசயராஜ். இவர் டில்லியில் உள்ள மத்திய அரசின் கண்காணிப்பு ஆணையத்திற்கு (சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்) அனுப்பிய மனுவில், ‘ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி செய்தேன். பள்ளி மதவழிபாடு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என் மத சுதந்திரத்தில் தலையிடும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மனு செய்தேன். இதன்படி என் புகார் மீது விசாரிக்க ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. மாவட்ட கல்வி அலுவலரும் முறையான விசாரணை நடத்தவில்லை. எனவே மீண்டும் இது குறித்து மனித உரிமை ஆணைத்திற்கு தெரிவித்தேன். மேல் நடவடிக்கை காலதாமதமானதால் என் மத சுதந்திரத்தில் தலையிட்டு மனித உரிமை மீறல் செய்த பள்ளி தலைமையாசிரியர் ஞான சேகரன், இதற்கு காரணமான கிறிஸ்டோபர் ஆசீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இம்மனுவை பரிசீலித்த மத்திய கண்காணிப்பு ஆணையம், ஆசிரியர் தேவராஜ் அதிசயராஜ் மனு மீது தமிழக தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமெரிக்கன் கல்லூரி சி.எஸ்.ஐ. பேராயர் மெகா மோசடி

By devapriyaji

ஜூனியர் விகடனில் …
மதுரையை உலுக்கும் மெகா மோசடி…

அபேஸ் குற்றாச்சாட்டில் ஆசிர்!

”இதுபோன்ற நெருக்கடியான சூழலை நாம் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை. வேகமாகச் செயல்பட வேண்டிய தருணம். இது ஒரு போர்க்களம். இதில் வெற்றி பெற்றே தீருவோம்…”

- ஓர் அரசியல் தலைவரின் உணர்ச்சி முழக்கமல்ல இது… ‘என்னய்யா, இந்த சமாசாரம் உனக்கு தெரியாம போச்சேய்யா’ என்று நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவிடம் இருந்துதான் இப்படி அனல் வார்த்தைகள் தெறித்திருக்கின்றன.

புகழ்பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தைத் தனியாருக்கு விற்கப் போவதாகப் பரவிய தகவலையடுத்து, அதிர்ச்சியடைந்த அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கடந்த 16-ம் தேதி மாலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்தான் சாலமன் பாப்பையா இப்படி முழங்கினார். இவர் அந்தக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்.

அமெரிக்கன் கல்லூரி 127 ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்கது. 1881-ல் ‘அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்’ என்ற அமைப்பால் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் சொத்துக்களை மதுரை
சி.எஸ்.ஐ. பேராயரான கிறிஸ்டோபர் ஆசிர், தனியா ருக்கு விற்க முயற்சிப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சாலமன் பாப்பையா, ”பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன் மருமகன் தவமணி கிறிஸ்டோபரை கல்லூரியின் நிதிக் காப்பாளராக நியமித்துள்ளார். அவரை வைத்துக் கொண்டு பேராயர் நிறைய தவறுகளைச் செய்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தக் கல்லூரியின் கையிருப்பாக இருந்த மூன்றே கால் கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இப்போது அதே தொகை கடனாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரி மைதானத்தை விற்க திட்டமிட்டுள்ளனர். உயிரே போனாலும் சரி… கல்லூரியின் ஒரு அங்குலத்தைக்கூட விற்க அனுமதிக்க மாட்டோம்…” என்று அனல் பறக்கப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்திலேயே ‘அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டி’ உருவாக்கப்பட்டது. கமிட்டி தலைவராக சாலமன் பாப்பையாவும் நிர்வாகிகளாக அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் வின்ஃப்ரட், பார்த்தசாரதி, வசந்தன், ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ இயக்குநர் ஹென்றி டிஃபேன் ஆகியோரும் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் பேசிய ஹென்றி டிஃபேன், ”மதுரையில் பல்வேறு வகையிலும் செல்வாக்கு பெற்ற ஒரு கும்பலோடு கைகோத்துக் கொண்டு பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், அமெரிக்கன் கல்லூரி யைக் கூறுபோட்டு விற்க முயல்கிறார். இந்தக் கல்லூரியின் ஒரு சென்ட் நிலம் அந்தக் கும்பலிடம் சென்றுவிட்டாலும் மதுரையிலுள்ள புகழ்பெற்ற அத்தனை பொதுச் சொத்துக் களையும் அந்தக் கும்பல் அபகரிக்கத் தயங்காது. மக்கள் சக்தியைத் திரட்டி இதை நாம் தடுத்தாகவேண்டும்…” என்றார் காட்டமாக.

முன்னாள் பேராசிரியர் வின்ஃப்ரட் பேசும்போது, ”கல்லூரியின் முதல்வராகவும், செயலாளராகவும் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் இருக்கிறார். கல்லூரியின் சொத்துக்களை விற்க வேண்டுமானால் இவருடைய ஒப்புதல் தேவை. ஆனால், சொத்தை விற்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரை நீக்கினால் சொத்துக்களை எளிதாக விற்று விடலாம் என்று பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் மனக்கணக்குப் போடுகிறார். இதனால் அவர் கடந்த 12-ம் தேதி கல்லூரி முதல்வர் இல்லாத நேரமாகப் பார்த்து தன்னுடைய மருமகனையும் துணை முதல்வர் ஜார்ஜ் செல்வக்குமாரையும் ஏவிவிட்டு போலீஸாரையும் கல்லூரிக்குள் வரவழைத்து முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போட்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மற்ற முன்னாள் பேராசிரியர்களான பார்த்தசாரதியும் வசந்தனும், ”இம்மாதம் 19-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தில் 100 சதவிகிதம் கிறிஸ்துவர்கள் மட்டுமே இருக்கும்படியான ஒரு குழு அமைத்து கல்லூரியை மதுரை-ராமநாதபுரம் திருமண்டலத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் பேராயர். அதே நாளில் நாமும் மதுரை தல்லாகுளத்தில் இந்த சூழ்ச்சியை மக்களிடம் விளக்கும் விதமாகக் கூட்டம் நடத்துவோம்” என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாரிடம் பேசினோம். ”பேராயர் என்பவர் இந்தக் கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவில் ஒரு கௌரவப் பதவியில் இருப்பவர் மட்டுமே. ஆனால், அவர் தன்னைக் கல்லூரியின் உயர் பொறுப்பில் இருப்பவர் போலவும், அதிகாரம் மிக்கவர் போலவும் நினைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு, கல்லூரியின் சொத்துக்களை விற்க முயல்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.
பேராயர் கிறிஸ்டோபர் ஆசிரிடம் அவருடைய மொபைல் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ”நான் பேராயராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு பி.எட். கல்லூரிகள், ஒரு நர்ஸிங் கல்லூரி, ஒரு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்படிப் புதிய சொத்துக்களை உருவாக்கும் நான், இருக்கும் சொத்துக்களை விற்பேனா..? அதுவுமில்லாமல் நிதி மற்றும் சொத்துப் பராமரிப்பு கமிட்டிக்குப் பொறுப்பானவர் முதல்வர்தான். சொத்துக்களை விற்க எனக்கு அதிகாரம் இல்லை. முதல்வரின் நிர்வாகச் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதுவரை அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்ல விடுப்பு கேட்டார். ‘வெளிநாடு சென்று திரும்பும்வரை பொறுப்புகளைத் துணை முதல்வரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்றேன். அதற்குள் நான் சொத்துக்களை விற்க முயல்வதாகக் கற்பனையாக என் மீது குற்றம் சாட்டுகிறார். மற்றபடி, கல்லூரி முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போடப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், ‘தல்லாகுளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரன் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்து, துணை முதல்வருடன் சேர்ந்துகொண்டு என் அறையைப் பூட்டினார்’ என்று போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் கொடுத்திருக்கிறார். முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொண்ட அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டியினர், ‘அரசியல்-அதிகார சக்திகளின் உதவியோடு அமெரிக்கன் கல்லூரியை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது. இதற்குப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் உடந்தை. எனவே, எங்களுடன் இணைந்து கல்லூரியைக் காப்பாற்றுங்கள்’ என்று முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்-களை அனுப்பிவருகின்றனர்.
Posted by தருமி

 

Rate


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமெரிக்கன் கல்லூரி-C.S.I. சொத்தோ?
By devapriyaji
5.12.08 அன்று நடந்த gatemeeting-ல் Dr.S.Premsingh (Member, C.S.I. Cathedral) Chemistry Lecturer “அமெரிக்கன் கல்லூரி – அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் பேசியதின் சுருக்கம்:

அது கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைச் சுரண்டி, இங்கிலாந்து மகாராணியின் காலடியில் படைத்து இன்பம் கண்ட காலம். மாறாக கிறிஸ்துவின் இறைத் தொண்டர்கள் சுயநலம் மறந்து, நம் நாடு வந்து, இந்தியரைச் சிகரமேற்ற கனவு கண்டு மருத்துவம் மற்றும் கல்வியில் தொண்டு செய்த காலம். அப்படி அவர்கள் கண்ட கனவுகளில் நமக்குக் கிடைத்த சில நல் முத்துக்கள்:

இன்று மதுரையின் வாகன நெரிசலிலும் அயராத அகண்ட கோரிப்பளையம் ஏ.வி.(ALBERT VICTOR) பாலம்.
அன்றைய மதுரை மாவட்டம் செழிக்க, தன் சொத்தையே விற்று பென்னி க்விக் கட்டிய பெரியாறு அணை.
இதற்கெல்லாம் மேலாக நம் அமெரிக்கன் கல்லூரி – சில மாணவர்களே இருந்த அக்காலத்திலேயே மைசூர் அரச மாளிகையைக் கட்டிய வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட நமது கல்லூரியின் மெயின் ஹால்.

ஆனால் இன்றோ அமெரிக்கன் கல்லூரியின் சுயநிதி வருமானத்தால் கவரப்பட்டு, கல்லூரியை 99 ஆண்டுகள் அடகு வைக்க, விற்கத் துடிக்கும் கயவர்கள். அவர்கள்தான் அமெரிக்கன் கல்லூரியின் சொந்தக்காரர்களாம். வேதனை!

இறையடியார்களின் கொடைமனத்தால் கடின உழைப்பால் உயர்ந்த நம் கல்லூரியைத் தன் குடும்பச் சொத்தாகப் பாவிக்கும், சுருட்டும் திருட்டுக் கூட்டம். இச்சூழ்நிலையில் எழுந்ததோர் கூட்டம். தம் 3T (Talent, Treasure, Time) தியாகம் செய்து கல்லூரியை வளர்த்த பெரியோர் வாஷ்பர்ன், ஜம்புரோ, டட்லி காட்டிய பாதையில் கல்லூரி ஊழியர் கூட்டம் …
எது வெற்றி பெறும்???

கல்லூரி C.S.I. சொத்தோ?

C.S.I. என்பது தென்னிந்தியத் திருச்சபை – தென் இந்தியாவின் கிறிஸ்துவர்களின் சபை. கிறிஸ்துவர்கள் (கிறிஸ்து + அவர்கள்) யார்? இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு, மன்னிப்பு, தியாகம் என்ற பாதையில் நடப்பவர்களே அன்றி அடாவடித்தனம், வெறித்தனம், சுருட்டல் செய்பவர்கள் அல்ல. சுயநலம் துறந்தவர்களேயன்றி, சுய நலவாதிகள் அல்ல. (பணம் மட்டும் ஒருவரைஅங்கத்தினர் ஆக்காது.)

*கல்லூரி C.S.I.-யை வளர்த்ததே தவிர C.S.I. கல்லூரியை வளர்க்கவில்லை.

*C.S.I. கல்லூரியில் இருந்ததே தவிர கல்லூரி C.S.I –ல் இருக்கவில்லை.

*கல்லூரிக்கு C.S.I.கடன்பட்டிருக்கிறதேயொழிய கல்லூரி C.S.I. –க்குக் கடன்படவில்லை.
C.S.I.-க்கு கல்லூரி, படித்த பிஷப்புகளையும் குருமார்களையும் அங்கத்தினர்களையும் உருவாக்கி பணமும் கொடுத்திருக்கிறதே தவிர, C.S.I. கல்லுரிக்கு ஒரு பைசா கூடக் கொடுத்ததில்லை.

பின்னும் ஏனிந்த குழப்பம்?

மெழுகுவர்த்தி எரிகிறது ….……….

அமெரிக்கன் கல்லூரியின் சிறப்பு candle light ceremony; அதிலும் வியப்பு “Lead Kindly Light” என்று மாணவர்கள் உணர்ந்து பாடும் பாடலால் வரும் உள்ளச் சிலிர்ப்பு.
மெழுகுவர்த்தி தியாகத்தின் எடுத்துக்காட்டு. இன்று இருண்ட இந்தச் சூழ்நிலையில் கல்லூரிஊழியர்களின் “3T” தியாகம் மெழுகுவர்த்தியாய் எரிந்து வெளிச்சம் தந்து கயவர்களை இனம் காட்டும்.

எரிவதனால் சிறிது வெப்பம் உருவாகலாம்; (இன்றைய) மாணவர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படலாம். ஆனால் பல மெழுகுவர்த்திகளின் புகை மேகத்தைச் சென்றடைந்து, கருவாகி, உருவாகி, மழை பொழியும்; அன்று இந்த வெப்பம் தணியும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.

கடைசியாக .. அன்பர்களே,

காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
ஆட்சிகள் மாறலாம்
ஆட்களும் மாறலாம்
ஆனால்
ஆண்டவர் (இறைவன்) மாறுவதில்லை.

நீதியரசர்கள் தங்களுடைய தீர்ப்பை மாற்றலாம். ஆனால் நீதியின் சூரியன் (இயேசுகிறிஸ்து) தன் நியாயத்தீர்ப்பின் நாளில் இவர்களை நியாயத்தால் நிறுத்துவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

http://saveamericancollege.blogspot.com/2008/12/profdr-s-premsighs-speech.html



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“CSI Bishop’s illegal entry and taking possession of The American College”
The Hindu, 15.11.2008 page 6 of Madurai Edition

Women’s Commission for enquiry
Shastry V. Mallady
MADURAI: The Tamil Nadu State Commission for Women has recommended to the State government to hold a proper enquiry into the entry of unauthorised persons inside American College premises on August 29. It also recommended that the enquiry shall specifically look into allegation of breach of official responsibility by the Madurai Police Commissioner K. Nandabalan.

K. M. Ramathal, Chairperson of the Commission, along with Qudsia Gandhi, member, conducted an enquiry at the Madurai District Collectorate on September 19 and 20 after receiving a memorandum from a few women faculty members of the college alleging that “police entered college premises accompanied by the Bishop of CSI and illegally took possession of the Principal’s room apart from misbehaving with the students.”

The American College here is in the thick of a controversy following differences of opinion between two groups led by Bishop of Church of South India A. Christopher Asir and T.Chinnaraj Joseph Jaikumar, who was removed from the post of Principal. (Bishop, who through a bogus Governing Council removed Dr.TCJ Jaikumar from the Principal-ship, in fact has NO Legal rights to do so as per the By-Laws of the Governing Council of The American College. Currently Dr.TCJ Jaikumar is restrained only from the day to day activities as the Principal through a court order on 27th Aug 2008. The stay petition originally moved by Bishop will come for a final hearing on 20th Nov 2008 – Peakay).

“The Women’s Commission strongly recommends that the State government request the Madurai District Collector to ensure that all the women students and teaching faculty members who deposed before the Commission and alleged vulgar and sexual verbal abuse by the police in their depositions to us may be adequately compensated with a payment of Rs.5,000 to each of them,” the report said.

The State Women’s Commission had come to the conclusion that “the Assistant Commissioner of Police, Tallakulam, in Madurai, is openly supporting the Bishop and his men and he has also been responsible for the illegal entry of the Bishop and his men to the college on August 29.”It strongly recommended that the Assistant Commissioner may be immediately transferred outside Madurai city jurisdiction.

Another recommendation made by the Commission was that the Madurai District Collector, Commissioner of Police (Madurai) and the Joint Director of College Education shall ensure that the complaints that have so far been brought to their notice by the students, teachers and representatives or the Management of the American College are dealt with justly as per provisions of law as well as disposed of speedily. “This will also apply to all future complaints that may arise,” the report said.

Over 25 witnesses from both the groups were examined by the Commission.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Prof. SOLOMON PAPPIAH’S APPEAL ….
*

அன்பர்களே ! அறிஞர்களே !

அமெரிக்கன் கல்லூரி
ஆண்டவர் நமக்கு
ஆசியாகக் கொடுத்த
கல்வி வளாகம்.

அதில் இப்போது
போக்கிரிகள் புகுந்து
கடவுளுக்கு விரோதமான
காரியங்களைச் செய்யக்
கனவு காணுகிறார்கள்.
அவர்களைக் களையெடுக்க
வழக்கு மன்றம் ஏறவேண்டிய நிலை !

ஊரை அடித்து உலையில் போட்டிருப்பவரை
எதிர்க்க
உங்கள் இறை வேண்டுதலும்
நெஞ்சம் உவந்து அளிக்கும்
நிதிக் கொடையும் வேண்டி
வீதிப் பிச்சைக்கு வருகிறோம்.

நீதி காக்க உதவுங்கள்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

  1. 02.08.2008 அன்று மதுரையின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாசிவீதி – மேல மாசிவீதிகளின் சந்திப்பில் அமெரிக்கன் கல்லூரியின் மதுரை காமராசர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு (MUTA), மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியரல்லாத அலுவலர் சங்கம்(TANSTAC) இணைந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப் பட்ட விளக்கக் கைச்சீட்டுகளின் நகல்:

    அன்புடையீர்,

    பதிவாளர் அலுவலகத்தைப் பணத்தால் குளிப்பாட்டிப் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு நிர்வாகிகளை ஏமாற்றும் முயற்சியில் இறுதியாக இறங்கியுள்ள பேராயரின் தொடர் மோசடிகள் …

    1. ஏப்ரல் 12 மற்றும் 19 தேதிகளில் கல்லூரியை முறைகேடாகக் கைப்பற்ற மருமகன் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் ரவுடிகளை ஏவியதற்கு CB – CID விசாரணை கோரியும் …

    2. உயர்நீதி மன்ற நீதிபதியின் தொடர் அமைதி முயற்சிகளை அலட்சியப்படுத்தி, சமாதான விரோதியாக செயல்பட்டு வரும் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரின் அணுகுமுறையைக் கண்டித்தும் …
    3. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. ஜவகர் அவர்கள் முயற்சியில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையைக் கடைசி நேரத்தில் ஆணவத்தோடு நிராகரித்ததைக் கண்டித்தும் …

    4. சி.எஸ்.ஐ. என்பதே தன் உயிர் மூச்சாகக் காண்பித்துக் கொண்டிருக்கும் பேராயர் ஆசீர், முதன்மைப் பேராயர் (மாடரேட்டர்) Most Rev. Gladstone அவர்கள் முன்வைத்த அமைதிப் பேச்சு வார்த்தையையே அவமதித்துப் புறக்கணித்ததைக் கண்டித்தும் …

    5. மருமகன் தவமணி சில மாணவர்களுக்கும், சில பணியாளர்களுக்கும் பணம் கொடுத்து, முதல்வர் முனைவர் சின்னராஜ் மேல் PCR வழக்குகளைப் பதிவு செய்ததைக் கண்டித்தும் …

    6. பொய்யான வதந்திகளை நாளும் பரப்பி திருச்சபை மக்களையும், கல்லூரி மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் பேராயரின் அற்பத்தனத்தைக் கண்டித்தும் …

    7. அப்பாவி திருச்சபை மக்களின் காணிக்கைக் காசை வாரி இறைத்து எப்படியாவது மருமகன் தவமணி கிறிஸ்டோபரைப் பதவியில் உட்கார வைத்து கல்லூரியைச் சுரண்ட நினைக்கும் மாமனார், பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரின் பேராசையைக் கண்டித்தும் நடக்கும் …

    … இந்த மாபெரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தாரீர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுரை சி. எஸ். ஐ பேராயர்-டெண்டர் விண்ணப்பத்தை வாபஸ் பெறக்கோரி மிரட்டல் மீது வழக்கு

By devapriyaji

மதுரை சி. எஸ். ஐ பேராயர் மீது வழக்கு
தமிழ் முரசு 7.5.2008
டெண்டரை வாபஸ் பெறக்கோரி மிரட்டியதாக மதுரை சி. எஸ். ஐ பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை புதூர் திருமண்டல தேவாலய அலுவலக அதிகாரி ஜான்சன் இஸ்ரேல் , மதுரை சி. எஸ். ஐ பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், சென்னை சி. எஸ். ஐ நிர்வாகி பாபின் சத்யமூர்த்தி இவர்கள் மூன்றுபேர் மீதும் மதுரை ஜவகர் நகரைச் சேர்ந்தவர் ஜான் ஆரோக்கியதாஸ் ஜே.எல். 6 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் கூறியதாவது :
மதுரை தேவாலயத்திற்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விற்று பல் மருத்துவக் கல்லூரி கட்டுவதாக விளம்பரம் பார்த்தேன். அந்த 7 ஏக்கர் நிலத்தை வாங்க டெண்டருக்கு ரூ. 20 லட்சம் பணமும் கட்டினேன். நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதுடன் 3 பேரும் சேர்ந்து என்னை டெண்டர் விண்ணப்பத்தை வாபஸ் பெறக்கோரி மிரட்டி வருகின்றனர். எனவே இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைஅடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் மதுரை புதூர் குற்றப்பிரிவு போலீசார் மதுரை சி. எஸ். ஐ பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Translation:
Excerpt from a daily “Tamil Murasu” published on 7th May 2008:
According to the directions of the court, a criminal case has been registered against C.S.I Bishop Mr. Christopher Asir, Mr. Johnson Israel and Bobin Sathyamoorthy of Chennai by Madurai Puthur Police based on the charges of Mr. John Arockiadas who lodged a complaint in the J.L.6 Court. In the complaint he has accused C.S.I Bishop Mr. Christopher Asir and two others for threatening him to withdraw a Rs.20 Lakh tender which he submitted to buy 7 acres of C.S.I land in the recent past.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CSI பிஷப்மார்களின் ஊழிய நிலை
By devapriyaji
பிஷப்மார்களின் ஆத்மீக நிலை-சென்னை CSI டையோசிஸ்:

http://www.jamakaran.com/tam/2007/april/bishop.htm

நீங்கள் கடந்த பிப்ரவரி 2007 பத்திரிக்கையில் எழுதியது உண்மை. சென்னை பேராயர் மாதம் ஒருமுறை DALIT SUNDAY ஆராதனை நடத்த வேண்டும் என்று சுற்றிக்கை அனுப்பினார்.

நாங்கள் சபையினராக அந்த ஆராதனையை வெறுத்தோம். கமிட்டியாக தீர்மானம் செய்து ஒவ்வொருவரும் கையெழுத்துப்போட்டு தலித் பெயரில் ஆராதனை செய்வது வேத வசனத்துக்கும் கிறிஸ்துவின் அன்புக்கும் விரோதமானது ஆகும். ஆகவே நாங்கள் தலித் ஆராதனையை எங்கள் சபையில் நடைமுறைப் படுத்தமாட்டோம். இயேசுவின் இரத்ததால் கழுவப்பட்ட அனைவரும் ஒரே குடும்பம் ஆகும். நாங்கள் தலித் என்று பிரிந்து செயல்பட விரும்பவில்லை. எங்கள் சபையில் எல்லா ஜாதியினரும் பணக்காரர்-வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள(தலித்)வர்களும் உண்டு. ஒன்றாகவே எங்களுக்குள் வித்தியாசம் பாராட்டாமல் பழகுகிறோம், ஆராதிக்கிறோம் என்றும் பிஷப் அவர்களுக்கு கமிட்டியாக சேர்ந்து எழுதி அனுப்பிவிட்டோம். பிஷப் அவர்களும் அதற்கு எதிரான நடவடிக்கையோ, கோபமோ கொள்ளவில்லை.

எனக்குத் தெரிந்து எங்களைப்போல் நான்கு சபையினர் பிஷப் அவர்களின் இந்த குறிப்பிட்ட கோரிக்கையை அங்கிகரிக்காமல் எழுதி அறிவித்திருக்கிறார்கள். சிலர் அந்தக் கட்டளையை உதாசீனப் படுத்தி விட்டார்கள்.

திருநெல்வேலி CSI டையோசிஸ்:
ஏறக்குறைய அனைத்து தினசரி தாள்களிலும் வந்துள்ள செய்திகள் நெல்லையில் 22 லட்சம் நிலம் மோசடி, நெல்லை பேராயர் உள்பட 4 பேர் மீது வழக்கு. அதனால் புகார் செய்த நபர்கள் மூன்று பேரை சி.எஸ்.ஐ சபையின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கிவிட்டனர். அவர்கள் தங்களை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் சென்றுள்ளனர். இதுதான் பிப்ரவரி மாதத்தின் பரபரப்பான செய்தியாகும்.

ஜாமக்காரனின் அபிப்ராயம்:
முதலாவது சி.எஸ்.ஐ அத்யட்சாதீனத்தின் நிலம் பற்றிய பிரச்சனை அந்த நிலத்திலிருந்து பிஷப் அவர்களுக்கு 18 சென்ட் மிகக் குறைந்த விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு ரூ.4500க்கு விற்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த நிலம் விற்கப்பட்டது நியாயமா? என்ற கேள்வியைவிட பிஷப் அவர்கள் பதவியில் இருக்கும்போது அந்த நிலத்தை வாங்கியது நியாயமா? அந்த நிலம் வாங்கவேண்டியதின் அவசியம், அவசரம் என்ன? என்பதுதான் என் கேள்வி. காரணம், பிஷப் ஐயாவுக்கு ஏற்கனவே இரண்டு பங்களாக்கள் சொந்தமாக வைத்துள்ளார். டையோசிஸ் பங்களா அரண்மனை மாதிரியான பிரம்மாண்டமான பங்களா. இந்த நிலையில் 18 சென்ட் மிக விசாலமான நிலம் விலை மதிப்பு அதிகம் உள்ள இடத்திலிருந்து வாங்க ஏன் ஆசைப்பட்டார் என்று கூறலாமா அல்லது அந்த நிலத்தை வாங்க சிலரால் தூண்டப்பட்டார்.

என் தனிப்பட்ட அபிப்ராயம் நெல்லை திருமண்டலத்தில் சில பிரச்சனைகளுக்குப்பின் இப்போது தான் திருநெல்வேலி பிஷப் அத்யட்சாதீனத்தை மிக நன்றாக ஆவிக்குரிய விதத்தில் நடத்திக்கொண்டு போகிறார் என்று நல்ல பெயர் எடுத்து வருகிறார். இப்படி பிஷப் அவர்கள் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் ஒரு கருப்புப் புள்ளியாக இந்த பிரச்சனை பூதாகரமாக தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாயிற்று.

நல்ல மிஷனரி பணிகள் இவர் காலத்தில் அன்றும்-இன்றும் வளர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் சில ஆயலயங்கள் கட்டி எழுப்பப்பட பிஷப் அவர்கள் மிகவும் ஊக்குவித்துள்ளார். இப்படிப்பட்ட நல்ல மிஷனரிபாரம் உள்ள பிஷப் ஐயா அவர்கள் ஏன் இப்படி பெயரைக் கெடுத்துக்கொண்டார்?

உண்மையில் இவர்கூட இருப்பவர்கள்தான் இந்த தவறான காரியத்தில் ஊக்கப்படுத்தி பிஷப் அவர்களுக்கு கெட்டப்பெயர் உண்டாக்கி தாங்களும் அதில் லாபம் சம்பாதித்து குளிர் காய ஆசைப்பட்டு இருப்பார்களோ? என்றுதான் என் தனிப்பட்ட முறையில் சந்தேகிக்கிறேன். காரணம் நம் பிஷப் அவர்கள் மிகவும் எளிமையானவர். பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்படுகிறவர் அல்ல என்பதை கடந்த 33 வருடமாக அவர் சிறு கிராமத்தில் குருவானவராகவும், மிஷனரி ஸ்தாபனத்தின் தலைவராகவும் இருந்து, மிஷனரி பணிதளத்தில் பாயில் படுத்து உறங்கியதை நான் அறிவேன். இப்படிப்பட்ட எளிமைமிக்க ஐயா அவர்களின் நல்ல சுபாவத்தையே கெடுத்து, கூடஇருப்பவர்கள் தங்களைப்போல் பிஷப்பையும் ஆக்கிவிட்டனர் என்றுதான் கூறுவேன்.

ஒருவேளை அத்யட்சாதீனத்தில் பலவருட ஏற்பாட்டின்படி ஏழை ஆசிரிய குடும்பத்துக்கும், ஏழை உபதேசியார் குடும்பத்துக்கும், வீடு இல்லாத ஏழைகளுக்கும் அந்த நிலங்களைப் பங்கிட்டுக் கொடுத்து தனக்கும் ஒரு துண்டு நிலம் எடுத்துக் கொண்டிருப்பாரானால் கேட்பவருக்கு பெருமையாக இருந்திருக்கும். ஒருவேளை இப்போது கூறலாம் இது ஏழைகளுக்கான திட்டம்தான். வரிசையாக வீடு இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்று சொல்வார்களேயாகில் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் முதல் ஏழையும் வீடற்றவருமானவர் என்ற நிலையில் பிஷப்புக்கு 18 சென்ட் அளித்தது கேட்பவருக்கு நம் பிஷப்பைப் பற்றியும் நம் டையோசிஸ்ஸைப் பற்றியும் நல்ல அபிப்ராயம் உண்டாகாதே!

விளைவைப்பாருங்கள்.
விஷயம் போலீஸ்வரைபோய், இப்போது கோர்ட் வரை போய்விட்டது. இப்போது பிஷப் அவர்கள் தனக்கு ஏற்பட்ட கெட்டப்பெயரை நீக்க எல்லா தினசரி பத்திரிக்கைளுக்கும் அரை பக்க விளம்பரமாக தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவை இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதே- மேலும் அந்த விளம்பரத்துக்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டிருப்பதாக பத்திரிக்கை நிருபர்களே கூறுகிறார்கள்.

இவ்வளவு பெரிய தொகை தேவையற்ற செலவுதானே! எந்த பணத்தில் இருந்து இந்த பணம் எடுக்கப்பட்டிருக்கும். இனி சபையிலிருந்து நீக்கியவர்களின் கோர்ட் நடவடிக்கைகளை சந்திக்க டையோசிஸ் சார்பில் கேஸ் நடத்த வக்கீலுக்கும், போலீசுக்கும், கைது செய்யாமலிருக்க தனி செலவாக எத்தனை லட்சங்கள் இந்நேரம் தண்ணீர்போல் கரைந்துபோய் இருக்கும்.

உள்ளது போதும் என்று இருங்கள். நான் உங்களை கைவிட மாட்டேன் என்று கர்த்தர் கூறிய (எப் 13:5) வார்த்தைகளை நினைவு கூர்ந்திருந்தால் இந்த நிலை வந்திக்குமா?

நீதிமன்ற தீர்ப்பின் நிலை:
சென்னை CSI டையோசிஸ்: சென்னையில் இதே போன்று நில விற்பனைக்கு சென்னை CSI டையோசிஸ் பிஷப் அவர்கள் முயன்றபோது, சபையினர் பிஷப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் பிஷப் அவர்களின் விற்பனை முயற்சியை தடைசெய்தது.

COURT ORDER ON A S No.356/2002 Dated 24th June 2004. The JUDGEMENT Says:

a).The Bylaws for the properties in bylaw (2) (4) to see III of the Diocesan Constitution shall NOT apply to the Church.

ஜட்ஜ்மெண்ட் இன்னும் பல விஷயங்களை டையோசிஸ்க்கு எதிராக தீர்க்கமாக தீர்ப்பளித்து ஆலய நிலங்களை பாதுகாத்துள்ளது.

CSITA is a bare trust having no power to own any church property. The congregations are the managing trustees of their respective church properties. Only with the reason that even by a rare possibility a group of pastorate committee members should not misuse the property. the concept of the CSITA as a bare trust was conceived. CSITA is NOT THE OWNER EITHER. So if at all a transaction is to take place, there should be a unanimous accceptance of the congregation, Pastorate committee and the CSITA. இன்னும் தீர்ப்பு நீளுகிறது.

ஆந்திரா CSI மாடேரட்டர் உள்ள டையோசிஸ்ஸில், கலெக்டர் எடுத்த நடவடிக்கை:
நமது சி.எஸ்.ஐ மாடரேட்டரின் பொறுப்பில் உள்ள ஆந்திர மாநில அத்யட்சாதீனத்தில் இதேபோன்று சி.எஸ்.ஐ சபைகளின் நிலம் விற்கப்பட்டது. சபை ஜனங்களுக்கு நம் சபையின் நிலத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. நிலம் கோடிக்கணக்கில் விற்கப்பட்டபோது சி.எஸ்.ஐ நலம் விரும்பிகள் சிலர் இந்த நில ஊழலின் விவரத்தை நீதிமன்றம் கொண்டுபோனார்கள்.

In Andhra Pradesh Hoodwinking people church properties have been sold and leased. This apart,Mortgaging the church properties nearly 22 Crores of money has been taken as loan from banks. After the lodging of many complaints, the Collectors of Andhra were directed to issue instructions that properties of Religious Organizations CANNOT to sold/leased/mortgaged etc.. without the prior written permission of the HOUSE COMMITTEE formed by the Government. it may not be a surprise if the Andhra Government promulgates and ACT to this end. what a shame? Have CSITA of MTDA no part in this? Whom are they answerable to? Why are people in deep slumber even at this stage? என்று ஒரு CSI நலம் விரும்பி ஒருவர் ஆதங்கத்தோடு இப்படிக் கேட்கிறார்.

ஆந்திரா சி.எஸ்.ஐயில் மற்றொரு தலைக்குனிவு சம்பவம்:
In Dichpalli, the diocese wanted to start a medical college. Interim reports were given against the feasibility of such a project. But the arrogance,stubbornness and the selfishness of people in authority prevailed(may be the motive was to make an easy collection of capitation fees of Rs.40 lakhs per student admitted in the medical college). To have a medical college, you have to have hospital. So a 450 acres of church property was unethically usurped and the buildings were also constructed with the money taken on loan/ sale proceeds of some property. On a temporary basis interim permission from MCI was obtained. After for 2 years, for various shortcomings on staff, enough Buildings/ facilities and eqipment etc. the permission to run a college has been totally refused. Now it is said that quietly they are trying to sell all the property with the infrastructure standing to a HINDU NRI group from Karimnagar for 25 crores. கரீம்நகர் டையோசிஸ் மாடரேட்டர் அவர்களின் டையோசிஸ் ஆகும். The loan will be returned and the Balance?? is anyone guess. மீதிப் பணத்தைக் குறித்து CSI மாடரேட்டர் சுகந்தர் அவர்களை நீங்கள் சந்தேகித்தால் நான் அதை மறுக்கமுடியாது? If the Andhra act comes through, all their plans will crumble.

The NRI will also loose all his investments made so far. இப்படித்தான் நடக்கப்போகிறது என்று சட்ட நிபுணர்கள் கருகிறார்கள். இப்படி ஒவ்வொரு அத்யட்சாதீனத்திலும் இப்படிப்பட்ட பணம் விழுங்கிகள் சி.எஸ்.ஐ டையோசிஸ்க்குள் எங்கும் காணப்படுகிறார்கள்.

எதிர்த்துக்கேட்டால்:
இவைகளைக் குறித்து கேள்வி கேட்க அந்தந்த சி.எஸ்.ஐ அத்யட்சாதீன திருவிருந்து கைக்கொள்ளும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் உரிமை உண்டு. அந்த அங்கத்தினனின் நன்மைக்காகத்தான் அந்த ஆரம்ப காலத்திலேயே மிஷனரிகள் நிறைய நிலம் சபை மக்களுக்காக வாங்கிப் போட்டார்கள். ஆகவே ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் சபை சொத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும்.

இரகசிய கமிட்டி போடுகிறார்கள், இரகசிய திட்டம் தீட்டுகிறார்கள். தனக்கு சாதகமான கமிட்டி அங்கத்தினனின் கையெழுத்தைப் பெறுகிறார்கள். தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். திட்டம் செயல்படுத்தப்படும் போதுதான், சபை மக்களுக்கு தங்கள் உடுப்பைக்கூட தங்களுக்கும் தெரியாமல் விற்றுவிட்டார்கள் என்று புரிகிறது. என்ன மோசடி இது? சபை சொத்து! சபை பணம்! அது எந்த வகையிலோ பிஷப்மார்களின் கட்டளைப்படி கொள்ளையடிக்கப்படுகிறது? மக்களின் காணிக்கையல்லவா! காணிக்கை என்றால் அது தேவனுடைய பணம் அல்லவா! என்ன துணிகரம் இது?

இதை யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் சபைக்கு எதிரானவன். அவன் சபையின் துரோகி. அவன் சபையைவிட்டு நீக்கப்படவேண்டும் என்கிறார்கள். என்ன நியாயம் இது?

கேள்வி கேட்பவர்கள் யாருக்காக கேள்வி கேட்கிறார்கள். மாடரேட்டர் அவர்கள் மெடிக்கல் காலேஜ் கட்ட வேண்டாம், மாடரேட்டருக்கு அல்லது பிஷப்புக்கு வீடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலா கேள்வி கேட்கிறார்கள். குற்றம் சாட்டியவர்களுக்கு மாடரேட்டரோடும், பிஷப்புடனும் ஏதாவது பகையா? அல்லது சொத்துத் தகராறா?

பிரச்சனைகளை, நிலம் வாங்கும், விற்கும் விஷயங்கள், மெடிக்கல் காலேஜ் கட்டும் விஷயங்கள் ஆகியவைகளை அடிப்படையின் ஆரம்பத்திலேயே சபை ஜனங்களுக்கு அறிவித்திருந்தால் பிரச்சனை எழும்பினாலும் ஆரம்பத்திலேயே சரிப்படுத்தியிருக்காலமே! ஈகோ பிரச்சனையும், தான்தோன்றிதனமும், பண ஆசையும் இதில் வெளிப்படுகிறது. ஆந்திராவில் மாடரேட்டர் CSI டையோசிஸ்ஸில் நடப்பது மலை விழுங்கல் நிகழ்ச்சிகளாகும்.

விலை பேசப்படும் பிஷப் பதவி:
வடக்கு கேரளா டையோசிஸ்ஸில் பிஷப் எலக்ஷன் முடிந்து மாதங்களாகிறது. பேனலில் உள்ள நான்கு குருமார்கள் பின்னாலும் பண பலம் இல்லை. ஆகவே இவர்களிடம் தான் எதிர்பார்க்கும் கோடிகள் கிடைக்காது. மிஞ்சிப்போனால் சில லட்சங்கள் கிடைக்கலாம் என்பதால் மாடரேட்டருக்கு பிஷப்பை தேர்ந்தெடுக்கும் ஏற்பாட்டில் நாட்டமில்லை. இன்னும் விலை ஏறுமா? என்று காத்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் சினாட்டில் ஒருவருக்கொருவர் கீரியும்-பாம்பும்போல இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஒற்றுமை நல்லதுதான். கர்த்தரும் வேதத்தின் மூலம் அதைத்தான் வலியுறுத்திள்ளார். ஆனால் இந்த ஒற்றுமைக்கு பின்னால் ஏதோ பெரிய எதிர்ப்பார்ப்பும்-பங்கும், கொள்ளையும் இருப்பதுபோல் தோன்றுகிறதே! பிஷப்மார்க்கு விலை வைக்கப்பட்டால் பதவியில் வந்த உடனே வட்டியும் முதலுமாக அந்தப் பணத்தை திருப்ப வேண்டுமே? எங்கிருந்து செலவழித்த அந்தப் பணத்தைப் பெறமுடியும்.

அத்யட்சாதீன சபை மக்கள், அத்யட்சாதீன சொத்துக்கள், அத்யட்சாதீன பதவிகள், அப்பாயின்மென்ட், பிரமோஷன், டிரான்ஸ்பர், கல்லூரி சீட், மறைமுக கேப்பிட்டல் பீஸ் இப்படிப் பல வழிகளில் அந்த பணத்தைப் பெற்று அடைத்தாக வேண்டும். அப்படி கொள்ளையடித்த பணத்தை பெற்ற கரைப்பட்ட அந்த கைகள்தான் அத்யட்சாதீன மக்கள் தலையில் வைக்கப்படுகிறது. மக்களுக்கு அதன் மூலம் ஆசீர்வாதம் கிடைக்குமா?!

நம் சபைகளின் போக்கு வர வர மோசமாகிறது. நல்ல குருமார்களையும், அத்யட்சாதீன அரசியல் தன் வலையில் வளைத்துப் பிடிக்கிறது. இதில் ஆசிரியர்-ஆசிரியைகளும் விழுந்துவிடுகிறார்கள். விழாது ஒதுங்கி நிற்கிறவர் தங்கள் ஆத்துமாவை கரைப்படாமல் காத்துக்கொள்கிறார்கள். ஆனால் அத்யட்சாதீனத்தால் அவர்கள் ஒதுக்கப்பட்டு மறைந்தே போகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் எல்லாம் வெளி மாநிலத்தில் படித்து வேலை தேடி முன்னேற வேண்டும். தான் பிறந்து வளர்ந்த சபையில் ஒரு உரிமையும் பெறமுடியாது. இதுதான் இன்றைய நிலை.

நம் சி.எஸ்.ஐ பிஷப்மார்களின் செயல்பாடுகளை வைத்தே தேவனுக்கும்-அவர்களுக்கும் உள்ள இடைவெளியை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் தாமே நம் சி.எஸ்.ஐ சபைகளை தலைவர்களை, குருமார்களை, ஆசிரியர்களை, உபதேசிகளை, பொறுப்பு வகிப்பவர்களை உணர்த்தி தேவ பயத்தை அருளுவாராக. ஆமென்.

நெல்லை CSI டையோசிஸ் பிஷப்:
இப்போது திருநெல்வேலி பிஷப் அவர்கள் செய்ய வேண்டியதும் கர்த்தர் விரும்புவதும் ஒன்றே ஒன்றுதான். வாங்கிய நிலத்தை திரும்ப டையோஸிஸ்கே கொடுத்து விடுங்கள். அது உங்களுக்கு கௌரவத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்கும். கூட உள்ளவர்களின் துர்ஆலோசனைகளைக் கேட்டால் டையோசிஸ் பணத்தை வக்கீலுக்கும், கோர்ட்டுக்கும் கொடுத்து ஆசீர்வாதத்தை இழப்பீர்கள்.

முன்னாள் முதல்வர்.ஜெயலலிதா பதவியில் இருந்தபோது டான்சி நிலத்தை வாங்கினார். சரியான விதத்தில் வாங்கினாலும் பிழையான முறையில் வாங்கினாலும் உயர்பதவியில் உள்ளவர் எந்த சொத்தை வாங்கினாலும் பதவியில் இருக்கும்போது வாங்கக் கூடாது என்ற சட்டமே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அது பதவி பெலத்தை காட்டி பெற்றதாகத்தான் கருதப்படும். ஜெயலலிதா கோர்ட்டுக்கு அலைந்தார் பலகோடிகள் செலவழித்தார், பல பெட்டிகள் பல அதிகாரிகளின் வீடுகளுக்கு சென்றது. சட்டத்தின் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூட இருந்தவர்களின் தவறான வழி நடத்துதலினால், வக்கீல்கள் கொடுத்த தவறான ஊக்கத்தால் மானம் இழந்து, பல கோடிகள் இழந்து- இன்று சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரியின் கதைபோல இவர் வாங்கிய டான்சி நிலத்தை அரசாங்கத்துக்கே இலவசமாக கொடுத்துவிட்டார். அதற்குமுன் நான் கையெழுத்து போடவில்லை என்றார், பத்திரத்தில் உள்ளது என் கையெழுத்தல்ல என்றார். அதன் உண்மைகளை அறிந்த தமிழ்நாடே சிரித்தது. அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் வாங்கியதற்கே இத்தனை பொய் சொல்லி, அவமானப்பட்டு, பணம் இழந்து வேறு வழியில்லாமல் நிலம் திருப்பிக்கொடுத்தார் என்றால், நீங்கள் வாங்கியது அரசாங்க நிலம் அல்ல, மிஷனரிகளின் இரத்தத்தின் துளிகள் அந்த நிலத்தில் உண்டு. ஆகவே வேண்டாம் ஐயா, தயவு செய்து கவுரவம் பார்க்காமல் இனி கர்த்தரின் வசனத்தை பாருங்கள். உள்ளது போதும் என்று இருங்கள், கர்த்தர் உங்களை எந்த குறையும் வைக்கவில்லை.

என் ஜாமக்காரனில் முன்பு நான் எழுதிய சில விஷயங்களினால் திருநெல்வேலி டையோசிஸ்ஸில் மூடப்பட்ட கதவுகள் இப்போதுதான் கொஞ்சகொஞ்சமாக திறக்கிறதைப் பார்க்கிறேன்.

இப்போது நான் எழுதிய இந்த கட்டுரையை யாருடைய தூண்டுதல் பேரிலும் எழுதவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள தினசரிகளில் உங்களைப்பற்றி வந்த செய்திகளால் மனம் மிகவும் வேதனையுற்றேன். என் பழைய நண்பனாக, பல வருடங்களுக்கு முன்பே உங்களின் பல சபைகளில் என்னை ஊழியத்தில் உபயோகித்த அந்த நல்ல எண்ணத்தின் காரணமாக, நீங்கள் நல்ல மிஷனரி பாரம் உள்ள குருவானவர் என்றும், மிஷனரி பாரம் உள்ள பிஷப் என்றும் அழைக்கப்பட்ட உங்களின் அந்த கவுரவ பெயர் காரணமாக-குறிப்பாக நான் உங்களை நேசிப்பதால் இதை எழுதினேன்.

ஒருவேளை இந்த எழுத்தும் உங்களை நேசிக்கிற குருமார்களுக்கு என்மேல் வெறுப்பு உண்டாக்குமானால் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் குறிக்கப்பட்ட என் கூட்டங்களை கேன்ஸல் செய்து எழுதிவிடச் சொல்லுங்கள்.

என்னுடைய ஊழியம் எங்கு தேவை என்று என் ஆண்டவர் அறிகிறாரோ அங்கு எனக்கு வாசல் தானே திறக்கும். ஒரு வாசல் அடைப்பட்டால் மறுவாசல் திறக்கும்.

சபைகளின் வாசலே திறக்கப்படாமல் போனாலும் மாதம் ஒருவாரம் செய்யும் ஆதிவாசிகள் சுவிசேஷ ஊழியத்தை எல்லா வாரமும் செய்வேன்.

ஆகவே என் ஊழியம் எந்த சூழ்நிலையிலும் நிற்காது. என் மரணநாள்வரை ஓடிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட என் எழுத்தும் நிற்காது. அதுவும் என் மரணநாள்வரை எழுதிக் கொண்டேயிருக்கும்.

ஆவியானவர் எனக்குள், என்னோடு இருக்கிறார்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்.

கர்த்தர் திருநெல்வேலி அத்யட்சாதீனத்தை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

http://www.jamakaran.com/tam/2007/april/bishop.htm

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ., பள்ளி: ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்

By devapriyaji

சம்பளம் வழங்காத சி.எஸ்.ஐ., பள்ளி: ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்
அக்டோபர் 30,2009,00:00 IST
ஈரோடு: இரண்டு மாதமாக சம்பளம் வழங்காத சி.எஸ்.ஐ., நிர்வாகத்தை கண்டித்து, ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் வகுப்புகளை புறக்கணித்து, நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.,) கோவை திருமண்டலம் கட்டுப்பாட்டின் கீழ், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்கள் அடங்கியுள்ளன. கோவை திருமண்டல பேராயராக மாணிக்கம்துரை உள்ளார். சி.எஸ்.ஐ., நிர்வாகம் கட்டுப்பாட்டில், 69 துவக்கப்பள்ளி, நான்கு உயர்நிலைப்பள்ளி, ஒன்பது மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள். இதுதவிர, கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்களும் உள்ளன.

ஈரோடு பிரப் ரோட்டில் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1,300 மாணவியர் படிக்கின்றனர். 39 ஆசிரியைகள் உள்ளனர். தாளாளராக பத்மினி விசுவாசம், தலைமை ஆசிரியையாக ஆஷாபலே உள்ளனர். தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட்டது. புதுசம்பள கமிஷன்படி புதிய சம்பளம் விகிதம் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆசிரியைகளுக்கு ஜூலை மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. ஜூலை மாதம் சம்பளத்தை சி.எஸ்.ஐ., நிர்வாகமே வழங்கியது.

ஆயினும், அதற்கடுத்து இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த ஆசிரியைகள், நேற்று, வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியைகள் அனைவரும் பள்ளி கலையரங்க மேடையில் அமர்ந்திருந்தனர். மாணவியர் வகுப்புகளை விட்டு வெளியே வந்து நின்றனர். தலைமை ஆசிரியர் ஆஷாபலேவிடம் கேட்டபோது, “பள்ளி தாளாளரை கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

பள்ளி தாளாளர் பத்மினிவிசுவாசம் கூறுகையில், “புதிய சம்பளக் கமிஷன்படி சம்பளம் போடுவதில் சிறு பிரச்னை உள்ளது. ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தை நிர்வாகம் வழங்கியுள்ளது. அதை வங்கியில் செலுத்தவே செல்கிறேன்’ என்று கூறி “செக்’கை காட்டினார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் அர்த்தனாரி கூறுகையில், “புதிய சம்பள கமிஷன் படி ஆசிரியைகளுக்கு நிர்ணயம் செய்வதில் சிறு பிரச்னை உள்ளது. அதை இன்றைக்குள் சரி செய்து விடுவோம். நாளை (இன்று) அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்’ என்றார்.

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13669



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. பிஷப் மீது கோடி ஒரு ரூபாய் மோசடி வழக்கு !

By devapriyaji

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. பிஷப் மீது கோடி ஒரு ரூபாய் மோசடி வழக்கு !
WRITTEN BY SARA
WEDNESDAY, 23 SEPTEMBER 2009 07:00
சி.எஸ்.ஐ.டயோசீசன் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வசூலித்த 1 கோடியே 23 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, அதன் பிஷப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் .
தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ., டயோசீசன் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் 1.4.2007 முதல் 31.3.2009 வரை அவர்களது மாத சம்பளத்தில் 2 சதவீதம் கட்டாய பிடித்தம் செய்யப்பட்டது.

அதில் வசூலான1 கோடியே 23 லட்சம் ரூபாயை டயோசீசன் கணக்கில் வரவு வைக்காமல், பிஷப் உள்ளிட்டோர் மோசடி செய்துள்ளதாகுற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய திருச்சபை உறுப்பினர் மற்றும் ஊழியர் நலச்சங்க செயலாளர் தூத்துக்குடி சோப்பர் ஜோதிபால் (40), தூத்துக்குடி ஜே.எம் – 1 நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் (59), பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் (61), குருத்துவ செயலாளர் மாணிக்கம் (58) மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சாமுவேல் ஞானதுரை (43), தேவசகாயம் (56), சுரேஷ் தங்கராஜ் சாம்சன் (41), தேவி அசோக் சுந்தர்ராஜ் (59), இர்வின் சார்லஸ் (54) ஆகிய எட்டு பேர் மீது மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததூத்துக்குடி சி.எஸ்.ஐ. பிஷப் மீது கோடி ஒரு ரூபாய் மோசடி வழக்கு !
WRITTEN BY SARA
WEDNESDAY, 23 SEPTEMBER 2009 07:00
சி.எஸ்.ஐ.டயோசீசன் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வசூலித்த 1 கோடியே 23 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, அதன் பிஷப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் .
தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ., டயோசீசன் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் 1.4.2007 முதல் 31.3.2009 வரை அவர்களது மாத சம்பளத்தில் 2 சதவீதம் கட்டாய பிடித்தம் செய்யப்பட்டது.

அதில் வசூலான1 கோடியே 23 லட்சம் ரூபாயை டயோசீசன் கணக்கில் வரவு வைக்காமல், பிஷப் உள்ளிட்டோர் மோசடி செய்துள்ளதாகுற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய திருச்சபை உறுப்பினர் மற்றும் ஊழியர் நலச்சங்க செயலாளர் தூத்துக்குடி சோப்பர் ஜோதிபால் (40), தூத்துக்குடி ஜே.எம் – 1 நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் (59), பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் (61), குருத்துவ செயலாளர் மாணிக்கம் (58) மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சாமுவேல் ஞானதுரை (43), தேவசகாயம் (56), சுரேஷ் தங்கராஜ் சாம்சன் (41), தேவி அசோக் சுந்தர்ராஜ் (59), இர்வின் சார்லஸ் (54) ஆகிய எட்டு பேர் மீது மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3261-thoothukudi



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ. பிஷப் பதவி தேவசகாயம் தொடர ஐகோர்ட் இடைக்கால உத்தரவு

By devapriyaji

பிஷப் பதவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
24inter

http://www.viparam.com/2/3/32439.html

சென்னை: தென்னிந்திய திருச்சபையின் பிஷப் ஆக, 65 வயது வரை தேவசகாயம் தொடர உரிமையுள்ளது என, சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள லெயிட்டி அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவில், “சி.எஸ்.ஐ., பிஷப் ஆக தேவசகாயம் உள்ளார். மே மாதம் 1ம் தேதிக்குப் பின் அவர் பதவியில் தொடர முடியாது.

எனவே, மே மாதம் 1ம் தேதிக்குப் பின் பிஷப் ஆக பதவி வகிக்க தேவசகாயத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது. இம்மனுவை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, “சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகம், பிஷப் தேவசகாயத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரச்னையை தன்வசம் எடுத்துள்ளது. எனவே, பிஷப் ஆக தேவசகாயம் பதவியில் தொடர்வது குறித்து, தலைமைச் செயலகம் முடிவு செய்யும். தேவசகாயத்தின் பதவிக் காலம் குறித்தும் விதிமுறைப்படி, சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகம் முடிவெடுக்கும்’ என உத்தரவிட்டது. இந்நிலையில், சி.எஸ்.ஐ.,யின் பிரதம பேராயர் அனுப்பியக் கடிதத்தில், “பிஷப் தேவசகாயத்தின் பதவிக் காலம் மே மாதம் 1ம் தேதி முடிகிறது. தலைமைச் செயலகம் முடிவெடுக்கும் வரை, மே மாதம் 2ம் தேதி முதல் பிஷப் ஆக தேவசகாயம் இடைக்காலப் பொறுப்பு வகிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து, 65 வயது முடியும் வரை பிஷப் ஆக பதவியில் இருக்க உரிமை உள்ளது. எனவே, பிரதம பேராயரின் கடிதம், சி.எஸ்.ஐ., விதிமுறைகளுக்கு முரணானது; பிஷப் பணியாற்றக் குறுக்கிடக் கூடாது என, ஐகோர்ட்டில் தேவசகாயம் மனு தாக்கல் செய்தார். இடைக்கால மனுக்களை நீதிபதி சந்துரு விசாரித்தார். 65 வயது நிரம்பும் வரை, சி.எஸ்.ஐ., பிஷப் ஆக தேவசகாயம் தொடர உரிமை உள்ளதா அல்லது பதவியேற்று 10 ஆண்டுகள் முடிந்த உடன், பதவியைக் காலி செய்ய வேண்டுமா என்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டன.

மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது நீக்கம் செய்யப்பட்டாலோ ஒழிய, 65 வயது வரை பிஷப் ஆக தொடர உரிமையுள்ளது. பிஷப் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, சி.எஸ்.ஐ., டயசிஸ் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். ஓய்வு பெறும் வயது தொடர்பான விதி, சட்டப்பூர்வமானது. எதிர்தரப்பில் எழுப்பப்பட்டப் பிரச்னைகள், பூர்வாங்க மனு மீதான விசாரணையின் போது தீர்க்கப்பட வேண்டும். அந்தப் பூர்வாங்க மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் வரை, 65 வயது வரை சி.எஸ்.ஐ., பிஷப் ஆக தொடர தேவசகாயத்துக்கு உரிமை உள்ளது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தூத்துக்குடி மோசடி :பாதிரியார் மீது வழக்கு

By devapriyaji

தூத்துக்குடி மோசடி :பாதிரியார் மீது வழக்கு

Wednesday, 03 June 2009
தூத்துக்குடி, திருமண்டலப் பணத்தைக் கையாடல் செய்ததாகப் பாதிரியார் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடிநாசரேத் திருமண்டல உறுப்பினரான சோப்பார் ஜோதிபால் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் திருமண்டலப் பணம் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் புகார் மனு கொடுத்தார். குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தூத்துக்குடிமாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாருககு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பெயரில் தூத்துக்குடிநாசரேத் திருமண்டலப் பொருளாளர் பாதிரியார் சாமுவேல் செல்வராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் தலைவர் பாதிரியார் லர்து ராஜ்ஜெபசிங், பள்ளி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடிநாசரேத் திருமண்டலப் பணம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கையாடல் செய்துள்ளதாக தூத்துக்குடிமாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் செல்லப்பா வழக்குப் பதிவு செய்து பாதிரியார் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கையாடல் செய்த ரூ.20 லட்சத்தை முள்ளக்காடு சர்வே எண்.664/4, 664/6 ல் 4.18 ஏக்கர் இடத்தை 2 கோடி ரூபாய்க்கு விலைபேசி முன்பணம் செலுத்தியுள்ளதாகவும், குற்றப்பதிவு செய்யப்பட்டு மேலும் யாராவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றன



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமெரிக்கன் கல்லூரியில் சி.எஸ்.ஐ., ‘கன்வென்ஷன்’ ஐகோர்ட் தடை

By devapriyaji

அமெரிக்கன் கல்லூரியில் சி.எஸ்.ஐ., சார்பிலான ‘கன்வென்ஷன்’ கூட்டத்திற்கு இடைக்கால தடை* ஐகோர்ட் கிளை உத்தரவு செப்டம்பர் 26,2008,00:00 IST

tblkutramnews_34403192997

மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், சி.எஸ்.ஐ., திருமண்டிலம் சார்பில் இன்று முதல் செப்., 28 வரை நடக்க இருந்த “கன்வென்ஷன்’ கூட்டத்திற்கு ( சிறப்பு நற்செய்தி கூட்டம்) ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அமெரிக்கன் கல்லூரி துணை முதல்வர் அன்புதுரை தாக்கல் செய்த ரிட் மனு:

அமெரிக்கன் கல்லூரியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து ஆர்.டி.ஒ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரித்து கல்லூரி முதல்வராக சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமார் தொடர உத்தரவிட்டார். அதை எதிர்த்து பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கல்லூரி பிரச்னையை விசாரிக்க ஆர்.டி.ஒ.,வுக்கு அதிகாரம் இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டது.

கடந்த மே 28ல் ஆட்சி மன்ற குழு என்னை துணை முதல்வராக நியமித்தது. பிறகு கல்லூரி முதல்வர் மற்றும் செயலராக சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமார் தொடருவது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிஷப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட், கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமார் கல்லூரியின் அன்றாட நிகழ்வுகளில், தலையிட கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

நான் கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வருகிறேன். கல்லூரி கடந்த செப்., 4 முதல் இயங்குகிறது. சி.எஸ்.ஐ., திருமண்டல பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் சார்பில், கல்லூரி வளாகத்தில் “கன்வென்ஷன்’ கூட்டம் இன்று முதல் செப்., 28ம் தேதி வரை நடக்கவுள்ளது. இக்கூட்டத்தால், சட்டம் ஒழுங்கு சீர் கேடு அபாயம் உள்ளது. இவ்வாறு கோரினர்.இம்மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சேவியர் ரஜினி, சிவா, ஷெல்லிசிவக்குமார் ஆஜராயினர்.

பிஷப் தரப்பில் ஆஜரான வக்கீல், “கூட்டத்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது’ என்றனர். இருப்பினும் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கல்லூரி வளாகத்தில் கூட்டம் நடத்த கல்லுரி கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற்றதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கூட்டம் நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. கல்லூரியில் போதிய பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

70 CSI திருட்டு பாதிரியார் யார்?

By devapriyaji

அந்த 70 கருப்பு ஆடு (மேய்ப்பர்கள்) யார்?

http://www.jamakaran.com/tam/2008/october/70.htm

கடந்த ஜாமக்காரனில் முந்தைய CSI சினாட் மாடரேட்டரும், அவர்கூட உள்ள பொறுப்பாளர்களும் அமெரிக்காவிலிருந்து வந்த சுனாமி உதவி தொகையை எப்படி தங்களுக்குள் பங்குபோட்டு எப்படியெல்லாம் பொய் கணக்கு சமர்ப்பித்தனர். அது எப்படி கண்டுபிடிக்கப்பட்டு அதன்பின் இப்போதைய CSI மாடரேட்டர் அவர்கள் ஒரு ரிட்டயர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை கமிஷன் வைத்து அவர்கள் குற்றவாளிகள் என்று உறுதியாக்கப்பட்ட விஷயம் அறிந்தீர்கள். இவைகளை வாசித்த பலர் மிகவும் மன வேதனை கொண்டனர். நம் CSI சபைகள் எப்படியெல்லாம் தரம்தாழ்ந்துபோய் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்தோம்.

அடுத்து நம் CSI சபைகளில் உள்ள அனைவரும் மிகவும் அவமானப்பட்டு தலைக்குனியக்கூடிய சம்பவம் மெட்ராஸ் CSI டையோசிஸ்ஸில் நடைப்பெற்றுள்ளது.

CSI சபை குருவானவர்களுக்காக தென்னிந்தியாவில் பல டையோசிஸ்களில் மாதம் ஒருமுறை அல்லது வருடம் இரண்டுமுறை, சில இடங்களில் வருடத்துக்கு ஒருமுறை குருவானவர்களை தனியாக அழைத்துப்போய் ரிட்ரீட் (ஆவிக்குரிய கூட்டம்) தியான கூட்டம் நடத்துவார்கள். அப்படி நடத்தப்பட்ட பல Clergy Retreat-களில் பிரதான பிரசங்கியாக பலமுறை Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், இரண்டுமுறை நானும் அழைக்கப்பட்டு பிரசங்திருக்கிறோம்.

அதே முறையில் மெட்ராஸ் டையோசிஸ் தங்கள் Clergy Retreat-ஐ இந்தமுறை சென்னையில் நடத்தாமல் பெரிய செலவுசெய்து கடல்கடந்து வெளிநாட்டில் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அக்கூட்டத்தை நடத்தினார்கள். மொத்தம் 128 குருமார்கள் பிஷப்.Rt.Rev.Dr.DEVASAHAYAM அவர்கள் தலைமையில் மலேசியா சென்றார்கள். அங்குள்ள நல்ல பிரசங்கிமார்கள் அந்த கூட்டத்தில் குருமார்களுக்காக பிரசங்கித்தார்கள். மலேசியாவையும் சுற்றி காண்பித்து பல பொருள்களை வாங்கி சந்தோஷத்தோடு குருமார்கள் சென்னை திரும்பினார்கள். குருமார்கள் கூட்டம் நடத்தப்பட்ட இடம் ஒரு ஆங்கிலிக்கன் சபை ஆலயம். அதில் ஆராதிக்கும் சபையினருக்காக அந்தந்த பெஞ்சுகளில் அதற்கென்று பெஞ்சிலேயே அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் விலையுயர்ந்த வெள்ளைக்காரர்கள் காலத்தில் பைண்ட் செய்த அழகான ஞானப்பாட்டு புத்தகம் வைத்திருந்தார்கள். ஒருபக்கம் பாடல்கள், மறுபக்கம் பாட்டு ராகத்தின் ஆர்கன் நோட்ஸ் உள்ள அருமையான புத்தகம் அங்கு வைக்கப்பட்டிருந்ததை நம்குருவானவர்கள் கண்டு ஆளுக்கொன்றாக இவர்களில் சிலர் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இந்தியா வந்துவிட்டனர். மலேசியாவுக்கு போனவர்கள் மொத்தம் 128 குருவானவர்கள். அங்கு திருடப்பட்ட (Hymn Book) புத்தகங்கள் மொத்தம் 70. இப்போது அந்த ஆலயத்தில் 70 குடும்பங்களுக்கு பாட்டுப்பாட பாட்டு புத்தகம் இல்லை. ஒவ்வொரு புத்தகத்திலும் இது ஆலய உபயோகத்துக்கு மட்டுமே. இதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று அந்த புத்தகத்திலேயே எழுதப்பட்டுள்ளது. அதை வாசித்தும் அதை தங்களோடு தூக்கிக்கொண்டு வந்தது எத்தனை பெரிய அவமானத்துக்குரிய செயல். இந்த திருட்டுபட்டம் மலேசியா சென்றுவந்த அந்த குருவானவர்களுக்குமட்டுமல்ல, முழு CSIக்கும், குறிப்பாக தமிழர்கள் அத்தனை பேருக்கும் பெரும் தலைக்குனிவு அல்லவா? 11.7.2008 மெட்ராஸ் டையோசிஸ் பிஷப் அவர்கள் அனைத்து குருவானவர்களுக்கும் அறிக்கை அனுப்பி உடனே அந்த புத்தகத்தை எடுத்தவர்கள் (திருடியவர்கள்) உடனே ஆபீசுக்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டால் நம் அவமானம் நீங்கும் என்று எழுதி அனுப்பியுள்ளார். உணர்த்தப்பட்ட குருமார்கள் டையோசிஸ் ஆபீசுக்கு கொண்டுபோய் கொடுக்க கூச்சப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். காரணம், அந்த புத்தகத்தை கொண்டுவந்து போடும்போது எடுத்தவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம். இதை பிஷப் எப்படி கையாளப்போகிறார் என்று தெரியவில்லை!.

ஆனால் மெட்ராஸ் CSI டையோசிஸ்ஸில் மிக உண்மையாக ஊழியம் செய்யும் அத்தனை குருமார்களும் இந்த நிகழ்ச்சியை பெருத்த அவமானமாக கருதுகிறார்கள். ஒரு குருவானவர் இதை அறிவிக்கும்போது அழுதேவிட்டார். இனி எந்த நாட்டுக்கு நாங்கள் போனாலும் மெட்ராஸ் டையோசிஸ்ஸிலிருந்து வந்திருக்கிறீர்களா? என்று திருடர்களை பார்ப்பதை போலல்லவா பார்ப்பார்கள். ஊழியர்கள்மேல் உள்ள மரியாதை, பயம் எல்லாம் தொலைந்தது என்று மிகவும் மனம் நொந்துபேசினார். இது மிகவும் அற்பமான விஷயம்தான், வெறும் பாட்டுபுத்தகம். இது நடந்தது (Anglican Church, West Malaysia)வில் ஆகும். பொருளை எடுத்தது சென்னை டையோசிஸ் சபைமக்கள் அல்லது பிள்ளைகள் என்றால் அறியாமல் எடுத்துசென்றுவிட்டனர் எனலாம். ஆனால் எடுத்தவர்கள் அனைவரும் சபைகுருவானவர்கள் ஆகும். ஒருவரோ, இரண்டு பேரோ அல்ல, மொத்தம் 70 குருமார்கள் இந்த காரியத்தை செய்திருக்கின்றனர் என்றால் இவர்களின் ஆவிக்குரிய ஜீவியம் எப்படிப்பட்டது என்று அறியமுடிகிறது அல்லவா? இதன்மூலம். கணக்குப்படி சென்னை டையோசிஸ்ஸில் பாதிக்குமேல் உள்ள குருமார்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல என்பது வெளியரங்கமாக தெரிகிறது அல்லவா?

வேதத்தில் 10 கற்பனைகளில் கடைசி கற்பனையாக கர்த்தர் கூறியதாவது: பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத் 20:17. இந்த குருவானவர்கள் இந்த கட்டளையை மீறிவிட்டனர். பிஷப்புக்கு இதைக்குறித்து ஏராளமானவர்கள் கடிதம் எழுதிவிட்டனர். அதில் சிலர் பிஷப்புக்கு அனுப்பின கடிதங்களின் நகல்களை எனக்கு அனுப்பியுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் அந்த 70 குருமார்களின்பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நாங்கள் அறியவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். மனசாட்சி உள்ள குருமார் ஒருவேளை ஒன்று அல்லது இரண்டுபேர் அந்த புத்தகத்தை திருப்பி கொடுக்கலாம். ஆனால் மீதியுள்ளவர்கள் யார் என்பதை அறிந்தாலும் பிஷப் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்? எந்த தண்டனையும் கொடுக்கமாட்டார்!. காரணம், அவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவில்தான் பிஷப் அங்கு பதவியில் நிலைத்து நிற்கிறார்.ஆகவே அவர்களை அவர் பகைத்துக்கொள்ளமாட்டார். இந்த சம்பவம் வெளிப்படையாக அறியப்பட்டதால் இந்த குறிப்பிட்ட டையோசிஸ்ஸின் குருவானவர்களின் சாட்சியில்லாத காரியத்தை நாம் அறியமுடிந்தது.

ஆனால் இதைவிட மோசமான நிலையில் அநேக டையோசிஸ் குருமார்களின் செயல் காணப்படுகிறதே! என்ன செய்ய? கடந்த ஜாமக்காரனில் காணிக்கை தட்டிலிருந்து ஒற்றை 1000 ரூபாய் நோட்டை எடுத்த குருவானவர் கையும்களவுமாக பிடிப்பட்டாரே! சபையினர், சபை மூப்பன்மார் அல்லது பிஷப் அச்செயலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தனர். ஒன்றுமில்லையே!

CSI பிரச்சனை நீதிமன்றத்தின் எல்லை:
CSI சபைகளின் நிலை எத்தனை கீழ்தரமாக போய்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? ஒவ்வொரு டையோசிஸ்ஸிலும் இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் ஏராளம் உண்டு. சென்னை டையோசிஸ்ஸில் பாட்டு புத்தகம் திருடப்பட்டது. அது மிகவும் அற்பமான செயல். ஆனால் பிறர் மனைவியை இச்சித்து இரகசிய குடும்பவாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை பல டையோசிஸ்களிலும், லூத்தரன் சபைகளிலும் அதிகமாகிக்கொண்டே போகிறதே! அப்படியே காணிக்கை திருட்டு, சிறு பெண் பிள்ளைகளிடம் தவறாக நடப்பது, குடித்துவிட்டு ஆராதனையும், திருவிருந்தும் நடத்தியது போன்ற அக்கிரமம் CSI சபைகளிலும், லூத்தரன் சபைகளிலும் பெருகிக்கொண்டே போகிறதே! பிஷப்மார்கள் இந்த தவறுகளையெல்லாம் நன்கு அறிவார்கள். குருவானவர்களின் பாவச்செயலைப்பற்றி புகார் கொடுக்கப்பட்டாலும் பிஷப் நடவடிக்கை எடுக்கமாட்டார். காரணம் பெரும்பாலான பிஷப்மார்கள்பேரில் பலவித மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள், கோர்ட் கேஸ்கள் பெருகிக்கொண்டேபோகிறது. இப்படிப்பட்டவர்கள் எப்படி மற்ற குருமார்கள்மேல் நடவடிக்கை எடுக்கமுடியும்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு பிஷப் செய்த 170 கோடி ஊழல் விவகாரம் ஒன்று ஆதாரத்துடன் சினாட்டுக்கு அனுப்பப்பட்டது. அது சினாட் மெம்பர்கள் எல்லாருக்கும் அனுப்பப்பட்டது. புகார் அனுப்பியவர்களோடு தொடர்புகொண்ட சிலர் என்னோடு பேசினார் அவர்களிடம் அப்போதே சொன்னேன், சினாட் ஒரு நடவடிக்கையும் எடுக்காது. அப்படி புதிய மாடரேட்டர் நடவடிக்கை எடுத்தாலும் ஊழல் செய்த பிஷப்பை ஒன்றும் செய்ய இயலாது என்றேன், நான் சொன்னதுதான் நடந்தது. நடந்துகொண்டு இருக்கிறது. இத்தனை தெளிவான ஆதாரங்களை இவர்கள் பிஷப்புக்கு எதிராக சமர்பித்தும், தலைமைக்கு புகார் அளித்தும், நடவடிக்கை ஒன்றும் இல்லையே!. அது மட்டுமல்ல, பிஷப்புக்கு எதிராக புகார் அளித்த பலர் பிஷப்பால் பழிவாங்கப்படுவார்கள். இப்படிப்பட்ட பழிவாங்குதல் அனைத்து டையோசிஸ்களிலும் நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால் புகார் அளித்தவர்களுடன் தொடர்புகொண்ட சபை குருமார்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கிபோயிருக்கிறார்கள். இவர்களின் வீராப்பு பிஷப்மார் முன் புஸ்வானமாகிப்போனது. அப்படி அடங்கிப்போன பல குருமார்களை நான் அறிவேன்.

CSI டையோசிஸ்ஸில் மக்களின் காணிக்கைகள் இப்படியெல்லாம் துணிகரமாக சபை மக்களின் கண்களுக்கு முன்பாகவே கொள்ளையடிக்கப்படுகிறதே என்று சகிக்கமுடியாமல் மனசாட்சியுள்ள சிலர் நீதி கேட்டு கோர்ட்டுக்குபோக துடித்துபோயிருக்கிறார்கள். அதன் முதல் கட்டமாக இப்போது ஊழலில் சம்பந்தப்பட்வர்களுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாலும்…..தெய்வபயம் இல்லாத அந்த மோசமான பிஷப்மார்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. இப்படிப்பட்ட பிஷப்மார்களுக்கு நம் CSI சட்டம் கொடுத்திருக்கும் வானளாவிய சட்ட பாதுகாப்புதான் இப்படிப்பட்ட ஊழல்கள் அதிகமாக காரணமாகிறது..

சட்டம் என்ன சொல்கிறது?
CSI உருவாகியது 1947ல் ஆகும். அதன்பின் சில பிஷப்மார்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு CSI சட்டத்தை Episcopal முறைக்கு மாற்றிவிட்டனர். இது நடந்தது 2003ம் வருடத்திலாகும்.

ஆரம்பத்தில் 1959ம் வருடம் உருவாக்கப்பட்ட சினாட் சட்டத்தில் பிஷப்மார்களின் அதிகாரத்துக்கு சில கட்டுப்பாடுகள் வரையறை இருந்தது. குறிப்பாக பணம் கையாளும் விஷயத்தில் அந்த குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருந்தது. அதாவது CSI constitution அத்தியாயம் VII- Rule -5,(1952) The Bishop of the diocese shall not as bishop of as president of the diocesan council have any separate controlling authority over the finance of the diocese என்று இருந்தது.

அதனால்தான் பழைய காலத்தில் பிஷப்மார்கள் தங்கள் இஷ்டம்போல் டையோசிஸ் பணத்தை செலவு செய்யமுடியாமல் போனதால் அவர்கள் காலத்தில் பண ஊழல் நடக்கவில்லை. ஆனால் இந்த சட்டத்தை 2003ம் வருடம் திருத்தி அமைத்துக்கொண்டதால் இப்போது கமிட்டி கூட்டாமல், அதற்கென்று உள்ள நிர்வாக கமிட்டியின் அனுமதியையும் பெறாமலே பிஷப்மார் கமிட்டியில் உள்ள சிலரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு தங்கள் இஷ்டம்போல் டையோசிஸ்ஸிலிருந்து பணத்தை கையாடல் செய்து விட்டு, பிறகு கமிட்டி மெம்பர்களிடம் தனித்தனியாக கையழுத்து வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் பிஷப்மார்கள் அவரவர் டையோசிஸ்களில் தனி அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதால் CSI சினாட் டையோசிஸ் பிஷப்மாரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பிஷப் தன் வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலும் கோர்ட் பிஷப்மாரை தண்டிக்க CSI சட்டம் இடம் கொடுக்கவில்லை.

ஆகவே டையோசிஸ் நிலத்தை விற்கும் பணத்தை பத்திரத்தில் ஒரு கணக்கு காட்டிவிட்டு, கையில் தனியாக வாங்கும் பணத்துக்கு கணக்கு காட்டுவதில்லை. கடைகள் கட்டிவிடுவது, காம்பிளக்ஸ் கட்டுவது அதற்கு அட்வான்ஸாக கடைக்காரர்கள் கொடுக்கும் தொகை இப்படி பல வகையில் சில பிஷப்மார்கள் தங்கள் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதற்கு தன்னுடைய நம்பிக்கையான குருமார்களையும், சபையில் சில பெரிய மனிதர்களையும் தனக்கு சாதமாக்கி அவர்களுக்கும் பங்கு கொடுத்து பணம் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக பல பிஷப்மார்கள் இன்றும் INCOME TAX அதிகாரிகளாலும், C.B.I அதிகாரிகளாலும் பலமுறை விசாரிக்கப்பட்டும் அரசியல்வாதிகளால் மீண்டும் மீண்டும் தப்புவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இப்போது CSI சபைகளும், லூத்தரன் சபைகளும் இன்னும் மோசமாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. இந்த விவரங்களை அறிந்த பல பேர் இப்போதெல்லாம் ஆலயத்துக்கு காணிக்கையே கொடுப்பதில்லை. சபையின் இந்த மோசமான நிலைக்கு அடிப்படை காரணம் சபைகளில் பெரும்பாலான குருமார்களுக்கு மனந்திரும்புதல் அனுபவம் இல்லாமல்போனதுதான் காரணம் ஆகும். மேய்பர்கள் மிருக குணமுள்ளவர்களாகி கர்த்தரை தேடாமல்போனார்கள், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. எரே 10:21. ஆகவே நம் CSIயிலிருந்தும், லூத்தரன் சபைகளிலிருந்தும் ஏராளமான சபை மக்கள் பிரிந்துபோய் பெந்தேகோஸ்தே சபைகளில் சேர்ந்துவிடுகிறார்கள். அந்த சபைதான் சி.எஸ்.ஐ சபைகளைவிட உண்மையுள்ளதென்று நம்பி அங்கு போய் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்துக்கும், கல்லறைக்கும் மாத்திரம் CSI சபையிலும், லூத்தரன் சபையிலும் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.

வெளியில் உள்ள அந்த பெந்தேகோஸ்தே சபைகளின் உள்ளே இவர்கள் போனபிறகுதான் அந்த பெந்தேகோஸ்தே சபைகளிலும் ஊழலும், பாவமும், பொய்களும் உண்டு என்று விளங்கிக்கொள்கிறார்கள். ஜனங்கள் இதை தாமதமாக உணருகிறார்கள்.

CSI சபை குருவானவர்களில் பெரும்பாலானோர் சாட்சியில்லாமல் இருப்பதால், சபைமக்கள் சபை குருவானவரை மதிப்பதில்லை. ஆகவே சபை குருவானவர்களின் இரட்சிப்புக்காக மனந்திரும்புதலுக்காக நாம் தினசரி ஜெபிக்கவேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக இப்போதுள்ள நம் CSI, லூத்தரன் சபைகளின் அவல நிலையைக்குறித்து தினசரி தனி ஜெபத்தில் பாரத்துடன் ஜெபிப்போம்.

ஆரம்பத்தில் நீங்கள் வாசித்த 70 குருமார்களின் வெறும் புத்தக திருட்டு மூலம் சென்னை டையோசிஸ்ஸில் பல உண்மையான குருமார்கள் வெட்கி தலைகுனிந்து நிற்கிறார்கள். ஆனால் அதே சமயம் இப்படி வெளிப்படையாக ஊழல் செய்யும் பிஷப்மார்கள் குருவானவர்களைக்குறித்து, தவறு செய்யாத மற்ற நல்ல பிஷப்மார்களும், குருமார்களும் இவைகளை பெரிய பாவமாக கருதுவதில்லை. அதைக்குறித்து வேதனைப்படுவதில்லை இல்லை. அது ஏன்? என்று விளங்கவில்லை! அதற்கு பதில் இப்படிப்பட்ட செய்திகளை அறிவிக்கும் அல்லது வெளியிடும் என் மேல் நல்ல பிஷப்மார்களுக்கும் வெறுப்புதான் உண்டாகிறது. காரணம், இதை அவர்கள் கௌரவ பிரச்சனையாக கருதுகிறார்கள். சபைகள் அழிந்துப்போகிறதே என்ற கவலை, பாரம் இல்லை. என்ன சொல்வது?

நான் நேசிக்கும் ஒரு குறிப்பிட்ட டையோசிஸ் பிஷப் அவர்கள் எந்த ஊழலிலும் அகப்படாதவர். மிகவும் நல்லவர். சமீபத்தில் பல பிஷப்மார், குருமார்கள், சபையின் பெரிய மனிதர்கள் ஆகிய பலர் கூடியிருக்கும் ஒரு இரவு உணவு (Dinner) விருந்தின்போது (நானும் அங்கு அந்த விருந்தில் கலந்துக்கொண்டேன்). அந்த குறிப்பிட்ட பிஷப் மற்றவர்களோடு பேசும்போது இப்படி கூறுகிறார். Dr.புஷ்பராஜ் அவர்களை எனக்கும், என் மனைவிக்கும், என் டையோசிஸ்ஸில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். நான் குருவானவராக பணியாற்றும்போதே எங்களுக்கு டாக்டர்மீது தனி மதிப்பும், அன்பும் உண்டு. அவர் உண்மையான ஊழியர், தெளிவான சத்தியத்தை அவர் கூறியதால் எங்கள் திருமண்டலத்தில் உள்ள பல சபைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் பிஷப்மார்களின் ஊழல் பற்றிய செய்திகளை Expose செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அவர் என்னைப்பற்றி ஒன்றும் ஜாமக்காரனில் எழுதாவிட்டாலும், எங்களைப்போன்ற பிஷப்மார்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்னைப்போன்ற பிஷப்மார்களுக்குதானே அவமானம். அதனால் பிஷப் ஸ்தானத்தில் உள்ள எங்களைப்போன்றவர்களுக்கு குருமார்களுக்கு மக்கள் அந்த காலத்தில் வைத்த மரியாதை இப்போது எங்களிடம் காண்பிப்பது இல்லை என்றார்.

அவர் கூறியது உண்மைதான். ஆனால் நான் பிஷப்மாரைப்பற்றி, குருமாரைப்பற்றி எழுதிய விவரங்களில் தவறான தகவல்கள் எதுவும் இல்லை என்பதும் அவருக்கு தெரியும். அப்படியிருக்க இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறு செய்யாத நல்ல பிஷப்மார்கள் என்ன செய்யவேண்டும், நான்தான் தவறு செய்யவில்லையே என்று வெறுமனேயிருக்காமல் தன்னைப்போல் உண்மையுள்ள பிஷப்மாரை தேடி கண்டுபிடித்து, தவறு செய்யும் இப்படிப்பட்ட பிஷப்மாரின் அல்லது குருமார்களின் மனந்திரும்புதலுக்காக உபவாசித்து ஜெபித்து இருக்கவேண்டும் அல்லவா? இரண்டு பிஷப்மார் ஒன்றுசேர்ந்து ஜெபித்தாலும் போதுமே! அடிக்கடி பிஷப்மார்களாககூடி மற்ற பிஷப்மார்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப்பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலே போதும். தவறு செய்யும் பிஷப்மார்களுக்கு ஒரு பயம் வரும் அல்லது கூச்சமாவது வருமே! இது நடக்குமா? சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் ஜெபஐக்கியம் வைத்து ஒவ்வொரு நாளும் மதியானம் 20 நிமிடம் சேர்ந்து ஜெபிக்கிறார்கள். ஹார்பரில் மூட்டை தூக்கும் தொழிலாளிகள், ஆஸ்பத்திரி நர்சுகள் இவர்கள் தேவனை ருசித்தவர்கள் ஆங்காங்கு கூடிகூடி ஜெபிக்கிறார்கள். ஆனால் நம் பிஷப்மார்கள் இப்படி ஒரு ஜெபஐக்கியம் வைத்து எங்காவது ஜெபித்ததுண்டா? திட்டமிடவும், வழமையான கலந்தாய்வுக்கும் பெரிய விருந்தோடு இவர்கள் ஒரு இடத்தில் கூடுகிறார்கள். ஆனால் பிஷப்மார்கள் மீதுள்ள கெட்ட பெயர்கள் நீங்கவும் தங்களைப்போல் உள்ள பிஷப்மார் மனந்திரும்பவும் இந்த சபை தலைவர்கள் ஒன்றுகூடினால் சபை எத்தனையாய் ஆசீர்வதிக்கப்படும்.

அப்படியே குருமார்களும் கூடி பகிர்ந்துக்கொண்டு தங்களைப்பற்றிய குற்றசாட்டுகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலும் போதும். ஒருவேளை இப்படிப்பட்ட கூடுகை நடந்தாலும் அதில் குற்றசாட்டுகளைப்பற்றி இவர்கள் யாரும் பேசமாட்டார்கள். நீ யோக்கியமா? அவன் யோக்கியமா? உன்னைப்பற்றி தெரியாதா? நீ சாதாரண சபை குருவானவராக இருந்தபோது உன் கடன் எவ்வளவு? இப்போது எத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரன். இவைகளைப்பற்றியெல்லாம் எனக்கும் செய்தி வந்தது என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு நான் தவறு செய்யவில்லை என்று இவர்களை தங்களுக்கு தாங்களே தீர்ப்பு கூறி நியாயப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை இப்படியெல்லாம் பகிர்ந்துக்கொண்டால் தங்களைப்பற்றிய உண்மைகளை தங்களோடு உள்ளவர்களே வெளியே கொண்டுவந்துவிடுவார்களோ என்று இவர்கள் யாருடைய குற்றச்சாட்டையும் பகிரங்கமாக பகிர்ந்துக்கொள்ளாமல் பரம சாதுக்களைப்போல கூடி பிரிந்துபோவார்கள்.

காரணம் பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழிப்போல் ஒவ்வொரு பிஷப்மார்களும் -ஒவ்வொரு குருமார்களும் ஒருவருடைய ஊழலை ஒருவர் அறிவார்கள். அப்படியே இவர்கள் தங்களுடைய ஊழலையும் அறிவார்கள்.

கேள்வி: கோர்ட் மூலமாக பிஷப்மார்களை கட்டுப்படுத்த முடியாதா? என்று சிலர் கேட்டு எழுதியுள்ளார்கள். சட்டசபையில், பார்லிமெண்டில் ஒரு சபாநாயகருக்கு எப்படி வானளாவிய அதிகாரம் உண்டோ, அதுபோல சிறுபான்மையினரான கிறிஸ்தவ சபைகளின் சட்டப்படி பிஷப்மார்களுக்கு கொடுக்க்பபட்ட அதிகாரம் வானளாவியதுதான். CSI Consutition சட்டம் புத்தகத்தை வாசிக்கும்போது தலை சுற்றுகிறது என்றாலும் இவர்களுக்கும் ஒரு எல்லை உண்டு. அது ஒரு சில சட்ட நிபுணர்களுக்கு மட்டுமே அதை எடுத்துக்கூறமுடியும். ஆகவே கேள்விக்கான பதில் பிஷப்மார்களை அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசாங்க சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது.

CSI என்பது ஒரு தர்ம ஸ்தாபனமாகவும், நலிந்தோருக்கு உதவிசெய்யும் ஸ்தாபனமாகவும் குறிப்பாக கிறிஸ்தவ மக்களின் நலன் காக்கும் நோக்கத்தோடு பல சபைகளாக இணைந்து CSI என்ற பெயரில் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தர்ம ஸ்தாபனமாக CSI & லூத்தரன் போன்ற சபைகளும் இயங்குகிறது.

“The Church of South India is a charitable institution established for the welfare of the minority Christians and it has been formed for the welfare of Christian people, who are believer and member it is social organization. it has a separate constitution”.

இப்படி மேலே குறிப்பிட்டபடி நம்முடைய CSI சட்டபுத்தகத்தில் எழுதப்பட்டு, நடத்தப்படுகிற ஒரு தர்மஸ்தாபனம்(Trust)தான் CSI என்பதாகும். இந்த தர்மஸ்தாபனத்தில் பல சபைகள் ஒன்றாக இணைந்து அதாவது சிறுபான்மையினர் என்ற பெயரில் தங்களுக்கென்று சட்டதிட்டங்கள் இயற்றி செயல்படுவதாகும்.

தர்மஸ்தாபனம் என்ற நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் என்ற பெரிய பாதுகாப்பு சட்டம் CSI பிரச்சனைகளில் நடவடிக்கை எடுக்கமுடியாதபடி தடுக்கும். இப்படி இடியாப்ப சிக்கலில் சட்டங்கள் அமைந்துள்ளதால் தவறு செய்த பிஷப் பேரிலோ, மாடரேட்டர் பேரிலே கோர்ட் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. என்றாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு.

அப்படியானால் CSI சபைகளை உருப்பட வைக்கமுடியாதா?

பிஷப்மார்களை சரிப்படுத்த முடியாதா? தவறு செய்த பிஷப்மார்களை தண்டிக்க முடியாதா?

குருமார்களையும் சரிப்படுத்த முடியாதா?

இது புறை ஏறிப்போன கேஸ் யாரும் இனி ஒன்றும் செய்யமுடியாது.

புரட்சி நடிகரும், மக்கள் திலகமும், முன்னாள் முதல்வருமான M.G.R அவர்கள் தான் நடித்த படத்தில் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கவிஞர்.கண்ணதாசன் எழுதிய பாடலை M.G.R பாடியதுபோல, இவர்களாக தேவபயம் கொண்டு திருந்தினால் ஒழிய, இப்போதுள்ள சூழ்நிலையில், இப்போதுள்ள சட்டத்தில் உள்ள ஓட்டைகளின்படி தவறு செய்யும் இந்த சபை தலைவர்களை தண்டிக்கமுடியாது. பிஷப்மார் செய்யும் ஊழல், காணிக்கை கொள்ளை, டையோசிஸ் காணிக்கைப் பணத்திலிருந்து கோடி கோடியாக பணத்தை எடுத்து கோர்ட் கேஸில் நீதிபதிகளுக்கு இவர்கள் லஞ்சம் கொடுப்பதும், இவர்கள் சுகபோகமாக வாழ்வதும் தொடரத்தான் செய்யும். இவர்கள் CSI சபைகளுக்கு செய்யும் துரோகத்தை இவர்களால் நிறுத்த முடியாது.

நான் இதை எழுதுவது நம் CSI சபைகளை அவமானப்படுத்த அல்ல! என் குடும்பத்தில் நாங்கள் சுமார் 4 தலைமுறையாய் LMS, CSI என்று தொடர்;ந்து பரம்பரையாக சபை அங்கத்தினர்களாகவும், சபையில் பலபொறுப்புகளை வகித்தும், சபைக்கும் – சபை மக்களுக்கும் பல விதங்களில் சேவைசெய்து வரும் நாங்கள் எங்கள் கண்களுக்குமுன், நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கவே எங்கள் CSI சபை அழிந்துக்கொண்டு வருவதைக்கண்டு மனம் வேதனைப்படாமல் இருக்கமுடியுமா?

நம் சபையின் பிரச்சனைகளுக்காக யாராவது! எதையாவது செய்ய வேண்டும் என்று என்னோடு பலர் கேட்டுக்கொண்டார்கள். நானோ ஒன்றும் செய்யமுடியாது. நாம் ஜெபிப்போம் என்னால் செய்ய முடிந்தது எனக்கு கொடுக்கப்பட்ட என் பத்திரிக்கை ஊழியம்மூலம், ஒரு சிலருக்காவது நிலைமைகளின் கோரத்தை தெரிவித்து ஜெபிக்க சொல்லி, வேண்டிக்கொள்ள கேட்டுக்கொள்ள முடியும். அவ்வளவே! ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயமுத்தூர் CSI டையோசிஸ் சபை

By devapriyaji

கோயமுத்தூர் CSI டையோசிஸ் சபை பொறுப்பாளர்களுக்கும் சபை குருவானவர்களுக்கும் நான் எழுதும் அறிவிப்பு

பிஷப்.துரை அவர்கள் என்மீது கொண்டுள்ள வெறுப்பு, கோபம் நீங்கள் யாவரும் அறிந்ததே!. ஆகவே என்னை கோவை டையோசிஸ்ஸிலுள்ள CSI சபைகளுக்கு கன்வென்ஷனில் பேச அழைத்தவர்களுக்காக இதை எழுதுகிறேன். அந்த கன்வென்ஷனை நீங்கள் கேன்ஸல் செய்து அதை குறித்து நீங்கள் கமிட்டியை கூட்டி அவர்களோடு பேசி, அதன் முடிவை எனக்கு அறிவியுங்கள். டையோசிஸ் தலைவரின் வெறுப்புக்குள்ளாகிய என்னை நீங்கள் தொடர்ந்து உபயோகித்தால் அதன் விளைவுகளை என்னை அழைத்த நீங்கள்தான் சந்திக்க வேண்டிவரும்.

கடந்த வருடம் கோயமுத்தூர் இம்மானுவேல் CSI ஆலய கன்வென்ஷனில் 3 நாட்கள் பேசினேன். ஆனால் ஒவ்வொருநாளும் எந்த நேரத்திலும் என் கூட்டம் நிறுத்தப்படலாம் என்று நிலைமையில் எப்படியோ 3 நாள் கூட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் பின்விளைவு சபை தலைமை குருவானவர் Rev.Dr.ஜோஸ்வா கரம்சந்தர் அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டார். கூட்டம் தொடங்க இரண்டு வாரத்துக்கு முன்பே அவருக்கு நானே கடிதம் எழுதி கூட்டத்தை நிறுத்திவிடுங்கள் என்று எழுதி எச்சரித்தேன். அதை கமிட்டியில் உள்ள சிலருக்கும் எழுதினேன். ஒன்றுமில்லை தயவுசெய்து கூட்டத்துக்கு வராமல் இருந்துவிடாதீர்கள் என்றனர். அவர்களின் அன்பு, உற்சாகம் என் எண்ணத்தை மாற்றியது அப்படியே வந்தேன், பிரசங்கித்தேன். ஆனால் என்னை அழைத்த குருவானவரின் நிலைமையை கவனித்தீர்களா? Rev.ஜோஷ்வா கரம்சந்தர் அவர்கள் உடனே தாமதமில்லமல் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பின் அப்படியே (கோவை) சூலூர் CSI ஆலய குருவானவருக்கும், கமிட்டியினருக்கும் எழுதினேன். அவர்கள் பிரச்சனை ஏதும் இல்லை, கூட்ட ஒழுங்குகள் யாவும் செய்துவிட்டோம். கண்டிப்பாக வாருங்கள் என்றார்கள். கூட்டம் மிக ஆசீர்வாதமாக அமைந்தது. விளைவு சூலூர் CSI குருவானவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அப்படியே (கோவை) காந்திபுரம் CSI சபை கூட்டங்கள் நடக்க இரண்டு வாரங்கள் இருக்கும்போது Rev.அழகுராஜ் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து உங்களை வைத்து கூட்டம் நடத்த பிஷப் வீட்டிலிருந்து பிரச்சனை எழுந்துள்ளது. சபையின் பழைய கமிட்டி ஒரு வருடத்துக்குமுன்பே உங்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்தனர். ஆனால் இப்போது புது கமிட்டி உள்ளது. ஆகவே கூட்டத்தை கேன்ஸல் செய்து உதவுங்கள் என்றார். உடனே நான் ஐயா, இப்படி ஒரு பிரச்சனை எழும் என்று நான் முன்பே உங்களுக்கும் மற்ற குருமார்களுக்கு அறிவித்ததைப் போல அறிவித்தேன். இப்போதும் என்னால் உங்களுக்கு பிரச்சனை எழவேண்டாம். நீங்கள் ஒரு அதிகாரத்தின் கீழ் இயங்குகிறவர். கமிட்டி இன்று இருக்கும்-போகும் ஆனால் உங்கள் நிலை அப்படியல்ல. ஆகையால் கூட்டத்தை கேன்சல் செய்வதாக குறிப்பிட்டு எனக்கு கடிதம்மூலம் எனக்கு முறைப்படி அறிவியுங்கள் என்றேன். உடனே அதிகாரப்பூர்வான கடிதம் ஒன்றை எனக்கு முறைப்படி எழுதி அறிவித்தபின் காந்திபுரம் CSIயில் சபையில் என் கூட்டம் நிறுத்தப்பட்டது.

அப்படியே கோவை TVS நகர் கிறிஸ்துநாதர் ஆலய குருவானருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேலே உள்ள சபை குருவானவர்களுக்கு ஏற்பட்ட நிலையை குறிப்பிட்டு உங்கள் சபை கூட்டங்களையும் இப்போதே கேன்ஸல் செய்து எனக்கு எழுதி அறிவித்தால் அந்த தேதியை மற்றவர்களுக்கு கொடுத்துவிட உதவியாக இருக்கும் என்றேன். குருவானவர் அவசரக்கமிட்டி கூட்டினர். ஆனால் சபை மக்களும், பொறுப்பாளர்களும் மெத்தப்படித்தவர்கள் அவர்கள் என்னை வைத்து கூட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஆகவே கூட்டத்தை தடை செய்யமுடியவில்லை. அந்த TVS நகரில் நடந்த கூட்டங்களும் வெற்றிகரமாக ஆசீர்வாதத்துடன் நடந்துமுடிந்தது. ஆனால் TVS நகர் CSI சபையின் அந்த குருவானவரும் இடம்மாற்றம் செய்யப்பட்டார். இவைகளில் சிலமுறைபடியுள்ள டிரான்பர்களாகும்.

இப்போது கோயமுத்தூர் CSI டையோசிஸ்ஸில் நான்கு ஊர்களில் CSI சபைகளில் என் கூட்டங்கள் நடக்க இருக்கிறது. அவர்களுக்காக இதை நான் முன்னறிவிப்பாக எழுதுகிறேன். தயவுசெய்து என் கூட்டங்களை கேன்ஸல் செய்துவிடுங்கள். அந்த தேதிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதின்மூலம் என் ஊழியம் எங்காவது பயன்படட்டும். என்னால் உங்களுக்கும் டென்ஷன்! கூட்டம் நடக்குமா, நடக்காதா என்பதை எண்ணி நானும் சரியாக ஜெபிக்க முடியாமல் தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கிறேன். தலைமைக்கு என்னை பிடிக்கவில்லையானால் தயவுசெய்து என்னை உங்கள் சபை கன்வென்ஷனில் உபயோகிப்பதை நிறுத்திவிடுங்கள். நான் வேலை வெட்டியில்லாமல், ஊழியம் இல்லாமல் இருப்பவன் அல்ல.

இந்த நிலைக்கு பிரதான காரணம் என்னவென்றால் கோவை திருமண்டல பிஷப்.துரை அவர்கள் என் பிரசங்கத்தையும், என் ஊழியத்தையும் இதுவரை நேரில் கண்டதில்லை, அறிந்ததுமில்லை. அப்படியே என் சாட்சியைப்பற்றியும் அறிந்ததில்லை. பணவிஷயத்தில் நான் எப்படிப்பட்டவன் என்பதையும் அவர் அறிய நியாயம் இல்லை.

கோவை திருமண்டலத்தில் காந்திபுரம் CSI சபையில் 3 முறை தொடர்ந்து நான் கன்வென்ஷனில் பிரசங்கித்தேன். மற்ற எந்த ஊரிலும், மாநிலத்திலும் நடைபெறாத மாற்றம் என் கூட்டத்தில் காந்திபுரத்தில் நடைபெற்று கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது. அந்த சபை மக்கள் அந்த மாற்றங்களை உணர்ந்து நன்றியுடையவர்களாகத்தான் அவர்கள் என்னை நான்காவது முறையாக கன்வென்ஷனில் பேச என்னை பல மாதங்களுக்கு முன்பே அழைத்து கூட்டத்தையும் ஏற்பாடுசெய்து உறுதிப்படுத்தினர். ஆனால் எலக்ஷன் நடந்து பிஷப்புக்கு ஆதரவானவர்கள் சிலர் புதிய கமிட்டியில் இருந்தனர். அதனால்தான் அவர்கள் சபை மக்களின் ஆர்வத்துக்கு விரோதமாக பிஷப்பின் ஆசையை நிறைவேற்றினார்கள் என்ற நினைக்கிறேன்.

என் திருமண்டலத்தில் உள்ள CSI சபைகளில் உயிர்மீட்சி உண்டாகவேண்டும் என்ற பாரத்தால் நம் டையோசிஸ் கன்வென்ஷன்களுக்கு முன்னுரிமை அளித்து கூட்டம் நடத்த தேதிகள் கொடுத்தேன். என் பாரம் புரிந்துக்கொள்ளாமல் என் திருமண்டலத்தின் தலைவரே என்னை வெறுக்கும் போது அதை எதிர்த்து போராடவோ என்னை விளங்க வைக்கவோ நான் பிரியப்படவில்லை.

சபை குருவானவர்களும் திருமண்டலத்தின் மக்களும் என்னையும், என் நிலையும் புரிந்துக்கொண்டால் அதுவே போதும். நன்றி.

எப்படியோ இனியாவது கோவை திருமண்டல CSI சபையினர், குருவானவர்கள் இப்படிப்பட்ட கசப்பான அனுபங்களோடு தலைமையை (பிஷப்பை) எதிர்த்து என்னை அழைத்து கூட்டம் நடத்தாதிருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கோவை திருமண்டல குருமார்கள், சபை ஆட்சியாளர்கள், சபை விசுவாசிகள் யாவரும் நம் பிஷப் அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜெபம் ஏறெடுப்போம்.

பிஷப் அவர்கள் கடிந்துக்கொள்ளுதலையும், ஆவிக்குரிய ஆலோசனைகளையும் விரும்பாதவர், குறிப்பாக விமர்சனங்களை தாங்கிக்கொள்ள இயலாதவர். கர்த்தர்தாமே அவருக்கு வேண்டிய பெலத்தையும், ஞானத்தையும் அருளுவாராக. நாம் தொடர்ந்து திருமண்டலத்தில் உள்ள அனைத்து திருச்சபை மக்களுக்காகவும், குருமார்களுக்காகவும், பிஷப் ஐயா அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என் ஊழியத்தை CSIயிலிருந்து ஒழிக்க 
பிசாசின் ஞானமான திட்டம்.

2009 பிப்ரவரி தமிழ் ஜாமக்காரனிலும், மார்ச் மாத மலையாள ஜாமக்காரனிலும் மதுரை - ராமநாதபுரம் CSI டையோசிஸ் & கோயமுத்தூர் CSI டையோசிஸ்சிலுள்ளRt.Rev.Dr.ASIR & Rt.Rev.Dr.M.DORAI ஆகிய பிஷப்மார்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துஉறவினர்களுக்கு பதவிகள் அளித்த புள்ளிவிவரங்களையும், அத்யாட்சாதீன பணத்தை நிதி மற்றும்சொத்து பராமரிப்பு கமிட்டியிடமோ, அல்லது திருமண்டல நிர்வாகக்குழுவிடமோ தெரிவிக்கவோ,அனுமதி பெறவோ செய்யாமல் கோடிக்கணக்கில் பணத்தை சம்பந்தமில்லாத பல காரணங்களைக்காட்டி பெரும் தொகைகளை மேலே குறிப்பிட்ட பிஷப்மாரில் சிலர் அத்யட்சாதீனத்திலிருந்து கோடி, கோடியாக பணம் பெற்றுள்ளார்கள் என்று கேள்விப்பட்டதை எழுதினேன்.      இவைகளைக் குறித்தும் இன்னும் சில ஊழியர்களை குறித்தும் என் ஜாமக்காரன் வாசகர்களில் சிலர், அந்தந்த திருமண்டல அலுவலகத்தில் உள்ள பெயர் அறிவிக்காத சிலர், பல்வேறு இடங்களில் உள்ள CSI திருச்சபை முன்னேற்ற நல்லெண்ணக் குழுவினர்களில் சிலர் திருமண்டல ஊழல் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பினர். தமிழ்முரசு 29.8.2008 செய்தித்தாளிலிருந்தும் மேற்கண்ட செய்திகளை தொகுத்து எழுதினேன்.

இதை வாசித்த பிஷப்மார்கள் என்மேல் மிகவும் கோபம் கொண்டார்கள். அதன் காரணமாக என்னை தென்இந்தியா முழுவதும் உள்ள CSI திருச்சபைகளில் நான் ஊழியம் செய்யாதபடி தடுக்க சதித்திட்டம் தீட்டி அதன் முதல் கட்டமாக கோயமுத்தூர் திருமண்டல பிஷப்.துரை அவர்கள் தனி கடிதம் (ஆங்கிலத்தில்) ஒன்றை எனக்கு எழுதினார். அதன் தமிழாக்க தொகுப்பை கீழே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

csi001.jpg

star2.gif 2009 பிப்ரவரி மாதம் ஜாமக்காரன் பத்திரிக்கையில் CSI சபைகளைப்பற்றியும், CSIபிஷப்மார்களைப்பற்றியும் நீங்கள் குற்றம்சாட்டி எழுதியுள்ளீர்கள். அது CSI கோவை திருமண்டத்தின் மேலும் அவர்கள் நிர்வாகத்திற்கும் விரோதமான தவறானதும், துஷணமானதும் ஆன குற்றச்சாட்டாகும். உங்கள் பத்திரிக்கையில் எழுதின பொய் பிரச்சாரத்திற்கு நான் பதில் எழுத விரும்பாவிட்டாலும், அதேசமயம் நீங்கள் யார் என்றும், உங்களில் கிரியை செய்யும் ஆவி இன்னது எது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள உங்களுக்கு சொல்லவேண்டுமென்று ஆவியானவரால் என் உள்ளத்தில் பலமாக ஏவப்படுகிறேன்.    இந்த காரணத்தினால் சில விஷயங்களை நீங்கள் ஆழமாக சிந்திக்கும்படி வேத அடிப்படையில் எழுதுகிறேன்.    ஏசா 11:3ல் எழுதியபடி அவர் (இயேசுகிறிஸ்து) தமது கண்கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டப்படி தீர்ப்புச் செய்யாமலும் இருந்தார்.    இதுதான்கிறிஸ்துவின் ஆவி.

ஆனால் நீங்களோ பார்க்காத ஒன்றை யாரோ பேலியாளின் மக்கள் (Godless People) கூறியதை வைத்து பிஷப்பை குற்றம்சாட்டி அவமானப்படுத்தி, பிஷப்மார் பெயரை கெடுத்துள்ளீர்கள். மேலும் பிஷப்பின் கவுரவத்தையும், நேர்மையையும் குலைத்துவிட்டீர்கள். இதுவா கிறிஸ்துவின் ஆவி?

star2.gif பேலியாளின் மக்கள் (Godless People) கர்த்தரின் கிருபையை தங்கள் சுயலாபத்துக்கும் கெட்ட      விருப்பங்களுக்கும்,      ஆதாயங்களுக்கும் உபயோகப்படுத்துகிறார்கள் (Godless People) அப்படிப்பட்டவர்களோடு நீங்களும் சேர்ந்து செயல்படுவது உங்களுக்கு தெரியவில்லையா? ஆளுகிறவர்களின் ஆளுமையை புறக்கணித்து பழிசொல்லும் இந்த கனவுகாணும் மக்களை அறிந்துக்கொள்ளும் (Discerning of Spiritபகுத்தறியும் ஆவி உங்களுக்கு இல்லையா? உங்களுக்கு தெரியாதததும் புரிந்துக்கொள்ள முடியாதததுமான விஷயங்களை, தேவனுடைய ஊழியன் என கூறிக்கொள்ளுகிற நீங்கள், இந்த தேவையற்ற மனிதர்கள் பிஷப்மார்களைக்குறித்தும், மறைந்தசகோ.தினகரன் போன்ற மற்ற தேவனுடைய ஊழியர்களைக்குறித்தும் விரோதமாக துஷ்பிரயோகம் செய்வது உங்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லையா?

"தாங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற அமளியான கடல் அலைகளும், மார்கந்தப்பி அலைகிற நட்சித்திரங்களுமாயிருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது" (யூதா 13) இந்த வசனத்தின்படி தேவனற்ற மனிதர்களோடு நீங்கள் ஐக்கியம் கொள்ளுகிறீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?

star2.gif இந்த தேவனற்ற மனிதர்கள் காயீன் வழியை பின்பற்றி பிலேயாமைப்போல சுய ஆதாயத்தை தேடி ஓடுவது உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா? உங்களுடைய பத்திரிக்கையில் இந்த தேவனற்ற மனிதர்களின் தவறான குற்றசாட்டுகளும், கடினமாக பேசுகிற தேவனற்ற அவர்களுடைய வழிகளையும் உங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லையா?

star2.gif நம்முடைய விரோதியாகிய பிசாசின் முறுமுறுத்து, குற்றம் கண்டுபிடிக்கும் குணம்கொண்ட இந்த மனிதர்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா?

star2.gif இந்த தேவனற்ற மனிதர்கள் பயணம் செய்யும் அதேபடகில் நீங்களுமா பயணிக்கிறீர்கள்? அவர்கள்    வழியில்தான் நீங்களும் போகிறீர்களா?      நீங்களோ கிறிஸ்துவை இவ்விதமாய் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் உங்களுக்கு தெரியாதா? எபே 4:20.


ஒரு எச்சரிக்கை

"பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தை குறித்துப் பிசாசினுடனே தற்கித்து பேசினபோது, அவனைத் தூஷணமாய் குற்றப்படுத்த துணியாமல், "கர்த்தர் உன்னை கடிந்துக்கொள்வாராக" என்று மட்டுமே சொன்னான்". யூதா 9.

இந்த தேவனற்றவர்கள் எங்கள் அமைதியை இழிவுப்படுத்தி சொல்லும் குற்றங்களை அவர்களோடு சேர்ந்து அவர்களின் செயல்களுக்கு நீங்களும் பங்காளிகளாக இருக்கிறீர்கள் என்பதையும் புரிந்துக்கொள்ளுங்கள். தேவன்தாமே இவர்களை மன்னித்து தம்முடைய மந்தையில் சேர்க்க ஜெபிக்கிறேன். ஜெபத்துடன்.

இப்படிக்கு, கிறிஸ்துவுக்குள்
Rt.Rev.M.DORAI, Bishop.

star2.gif முன் பக்கத்தில் கோவை CSI பிஷப் Rt.Rev.Dr.DORAI அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தைப்படித்தீர்கள். ஆனால் எனக்கு எழுதின கடிதத்தின் நகல்களை அவர் அனைத்து CSIபிஷப்மார்களுக்கும் கோவை திருமண்டல ஆயர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். இதைக் குறித்து பல ஆயர்கள் எனக்கு தொலைப்பேசியில் அறிவித்துக்கேட்டார்கள். பிஷப் அவர்கள் உங்களை அனைத்துCSI சபைகளிலும் ஊழியம் செய்யாதபடியிருக்க இந்த தந்திரமான ஏற்பாட்டை செய்துள்ளார்கள் என்று நினைக்கிறோம்;. அது உண்மையாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். காரணம் எனக்கு எழுதிய கடிதத்தை காரணமில்லாமல் அனைத்து CSI பிஷப்மார்களுக்கும் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையே! தேவனும் அதை அறிவார்.

பிஷப்.துரை அவர்கள் எனக்கு தனிப்பட்டமுறையில் எழுதிய கடிதத்தை அனைத்து CSIபிஷப்மார்களுக்கும், டையோசிஸ் ஆயர்கள் எல்லாருக்கும் அனுப்பியதால் நான் பிஷப்புக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய என் பதிலை நானும் இலங்கை உட்பட அனைத்து CSI தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பிஷப்மார்களுக்கும் செயலர்களுக்கும், கோயமுத்தூர் டையோசிஸ் ஆயர்களுக்கும், சினாட்டில் உள்ளவர்களுக்கும் அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறேன். மேலும் இந்த கடிதத்தை பல மாநில பிஷப்மார்கள் வாசிப்பதால் நாகரீகம் கருதி பிஷப்பற்றிய பல முக்கிய விஷயங்களை அந்த கடிதத்தில் எழுதவில்லை. ஆகவே என் தமிழ்நாட்டு வாசகர்களும், கேரளா மாநில வாசகர்களும் பிஷப்.துரை அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் விவரமும், எழுதயிருந்த, அந்தகடிதத்தில் குறிப்பிடாத மற்ற விவரங்களையும் இப்போது தமிழிலும், மலையாளத்திலும் வெளியிடுவது அவசியம் என்று உணர்ந்தேன். அதற்கு வாய்ப்பளித்த பிஷப்.துரை அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

பிஷப் அவர்களுக்கு,
CSI சபைகளை, CSI பிஷப்மார்களை குற்றம்சாட்டி எழுதுகிறேன் என்று குறிப்பிட்ட நீங்கள் மறைந்த சகோ.தினகரனையும் இதில் இணைத்துள்ளீர்களே ஏன்? சகோ.தினகரன்மேல் உங்களுக்கு மிகவும் பாசமா? இல்லை என்பதும் எனக்கு தெரியும். உங்களுக்கு நாடார் கிறிஸ்தவர்களை பிடிக்காது என்பதையும் நான் அறிவேன். ஏற்கனவே நமக்குள் நாடார் கிறிஸ்தவ ஜாதிதுவேஷம் குறித்த கடித தொடர்பும் அது சம்பந்தமான டேப் விஷயமும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் என்னைப்பற்றி எழுதிய கடிதம் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை பிஷப்மார்களுக்கு அனுப்புகிறீர்கள். அவர்கள் யாவரும் நாடார் கிறிஸ்தவர் என்றும் அவர்களில் சிலர் சகோ.தினகரனை நாடார் கிறிஸ்தவர் என்பதற்காகவாவது நேசிப்பார்கள் என்றும், சில மலையாள பிஷப்மார்களில்ஒன்று அல்லது இரண்டுபேர் சகோ.தினகரன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினதாலும், மாடரேட்டர் அவர்கள் நாடார் கிறிஸ்தவர் என்பதாலும் நிச்சயம் அவர்கள் யாவரின் வெறுப்பும் என்மேல் திரும்பும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள்.    நீங்கள் எவ்வளவு ஆழமான சிந்தனையாளர் என்பது இதன்மூலம் விளங்குகிறது. நாடார் கிறிஸ்தவர்களின் உதவிமட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நீங்கள் பிஷப் ஸ்தானத்தில் இருந்திருக்கமாட்டீர்கள் என்பதையும் மறந்துபோயிருக்கமாட்டீர்கள். காரியம் நடக்க நீங்கள் யாரையும் சரிப்படுத்தும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு என்பதை எல்லாரும் அறிவார்கள்.

star2.gif என்னைக்குறித்தும் இவர்கள் எல்லாருக்கும் தெரியும். நீங்கள் சகோ.தினகரனை இக்கடிதத்தில் சுட்டிகாட்டி வாசிப்பவர் உள்ளத்தில் என்னை வெறுக்க செய்ய நினைத்தாலும் நெல்லை  -  தூத்துக்குடி, மதுரையில் நான் செய்யும் என் ஊழியத்தை தடை செய்யவேமுடியாது. நான் மறுபடியும் அந்த டேப் விஷயம் எடுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனமான ஆயுதங்களை நீங்கள் மீண்டும் கையில் எடுக்கலாம். பிஷப் அவர்களே வேண்டாம். பிரச்சனைகளை இதோடு நிறுத்திக்கொள்வது உங்கள் பதவிக்கு நல்லது. உடனே நான் ஜாதிதுவேஷம் கிளப்புகிறேன் என்று மறுபடியும் புரளிகூற துணியவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

star2.gif நான் 1964ம் வருடம் முதல் இதுவரை பல மாநில பிஷப்மார்களுக்கும், தமிழ்நாட்டு பிஷப்மார்களுக்கும் எவ்வளவோ கடிதங்கள் எழுதியுள்ளேன். அந்த பிஷப்மார்களின் பதில்கள் எல்லாம் ஒரு பக்கத்துக்குள் சுருக்கமாக மிக நாகரீகமாக மரியாதையோடு உள்ள பதில்களாக அமைந்திருந்தன. ஆனால் கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்கள் இதற்குமுன் எனக்கு எழுதிய பல கடிதங்களை சளைக்காமல் பக்கம்பக்கமாக பதிலாக எழுதுவார். அந்த கடிதங்கள் மூலமாகத்தான் அவர்நாகரீகத்தையும் அவருக்குள் உள்ள ஆவி என்ன? என்பதையும் தெளிவாக அறியமுடிந்தது.

star2.gif பிஷப்.துரை அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்துக்கு 24.3.2009 தேதியிட்டு அதை பிரிண்ட் செய்ய ஏற்பாடு செய்தேன். காரணம் பிஷப்பின் கடிதங்களை அனுப்பவேண்டிய விலாசங்களின் எண்ணிக்கை நீண்டுபோனதால் கடிதத்தை போட்டோ காப்பி எடுக்காமல் பிரிண்ட் செய்து அனுப்புகிறேன். அநேகமாக அவைகளை ஒரு வாரத்தில் தபாலில் சேர்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் வீட்டில் இருப்பது வாரத்தில் ஒருநாள்மட்டுமே, மற்ற நாட்கள் முழுவதும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஊழியம் செய்ய சென்றுவிடுவேன். ஆகவே பிஷப் கடிதங்களை அனுப்பும் ஏற்பாடுகளை செய்துவிட்டு இன்று பயணமாகிறேன்.

star2.gif பிஷப் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்திற்கான என் பதிலை பல பாஷையிலுள்ள பிஷப்மார், ஆயர்கள் பார்க்க வேண்டியிருப்பதால் கடிதத்தை நீளமாக எழுதாமல் சுருக்கமாக ஆங்கிலத்தில்எழுதினேன்.

star2.gif அதில் என் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றியும், CSI சபையில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பு ஆகியவைகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். ஜாமக்காரன் பத்திரிக்கை இந்திய அரசாங்க சட்டப்படிடெல்லியில் பதிவு செய்யப்பட்டதாகும் என்றாலும் அதை பொதுமக்கள் வாசிக்கும் பத்திரிக்கையாக வெளியிடாமல் என்னையும், என் ஊழியத்தையும் அறிந்து ஜெபத்தில் தாங்கும் என் வாசகர்களுக்காகமட்டுமே வெளியிடுகிறேன்.

star2.gif என் பத்திரிக்கையில் நம் CSI சபையின் ஊழல்களைப்பற்றியும், பிஷப்மார்களில் சிலர் செய்யும் சர்வாதிகாரம்,    பண ஊழல் ஆகியவைப்பற்றியும் என் வாசகர்கள் எனக்கு தகவல் தந்து என்னை கேள்விகள் கேட்கிறார்கள். நான் அந்த தகவல்களை அப்படியே நம்பிவிடாமல், அதைக்குறித்து சரியாக விசாரித்து சில விவரங்களை கோர்ட் ஆபிஸிலும், சில விவரங்களை போலீஸ் ஸ்டேஷன்களிலும், சில விவரங்களை பேங்க் அதிகாரிகளிடம், சில விவரங்களை அந்தந்த டையோசிஸ் அலுவலகத்திலேயே உள்ள என் வாசகர்களிடத்திலும் நன்கு விசாரித்து ஊழல் புகார்களையும், மற்ற புகார்களையும் உறுதி செய்துகொண்டு ஜெபத்துக்காக வாசகர்களுக்கு அவைகளை அறிவிக்கிறேன். சில பிஷப்மார்களைப்பற்றி நான் உணர்ந்து அறிந்த தவறான சங்கதிகளை விசாரிக்காமலேயும் நான் என் ஆவியில் உணர்ந்ததை விமர்சிக்கிறேன்.

CSI சபைகளை நான் குற்றப்படுத்தவில்லை.
CSI சபைகளில் நடக்கும் ஊழல்களைப்பற்றி மட்டும்தான் எழுதுகிறேன்.
CSI பிஷப்மார்களை நான் குற்றப்படுத்தவில்லை.

ஆனால் ஊழல் செய்யும் CSI பிஷப்மார்களைப்பற்றிய ஊழல்களை மட்டும்தான் வாசகர்கள் அறியவும், விழிப்புணர்வு உண்டாகவும், ஜெபிக்கவும் வேண்டி ஜாமக்காரனில் எழுதுகிறேன்.

CSI சபைகளை திருத்த நான் முயற்சிக்கவில்லை, அது முடியாது என்று அறிவேன். ஆனால் வேதவசனத்தின் எச்சரிப்புகளை சுட்டிக்காட்டி தவறுகளை அறிவிக்கிறேன்.    CSI பிஷப்மார்களை திருத்த    முயற்சிக்கவில்லை  -  அதுவும் முடியாத காரியம் என்பதை நான் அறிவேன். ஆனால் வேத வசனத்தைவிட்டு பிஷப்மார் விலகும்போது வசனத்தை சுட்டிக்காட்டி அவர்களின் ஊழல்களை அறிவிக்கவும் எச்சரிக்கவும் மட்டுமே என் பத்திரிக்கையால் முடியும் என்று அதைக்குறித்துமட்டுமே என் பத்திரிக்கையில் எழுதியுள்ளேன்.

ஆனால் பிஷப்.துரை அவர்களோ நான் அனைத்து CSI சபைகளையும் குற்றப்படுத்துவதாகவும், எல்லாCSI பிஷப்மார்களையும் குற்றப்படுத்துவதாகவும் எழுதி அந்த கடிதத்தை வாசிக்கும் பிஷப்மார் என் மேல் தப்பான அர்த்தம் கொள்ளும் வகையில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும் அவர் கடிதத்தில் சில வசனங்களை எழுதி தான் மகா சாந்த குணமுள்ளவர் போலவும், வேத வசனத்தின்படி ஜீவிப்பதைப் போலவும்,      வேதவசனத்தின்படி ஊழியம் செய்வதை போலவும், வேதவசனத்தின்படி தன் பிள்ளைகளை வளர்த்தியதை போலவும், சில வசனங்களை அக்கடிதத்தில் மேற்கோள் காட்டுகிறார். பிசாசையே மோசே இழிவாக பேசவில்லை என்பதற்கு ஒரு வசனத்தையும்;காணாததையும், கேள்விப்பட்டதையும் வைத்து இயேசு தீர்ப்பு சொல்லவில்லை என்பதற்கு இன்னுமொரு வசனமும், விளக்கமும் கொடுத்துள்ளார். இந்த குறிப்பிட்ட வசனத்தையே எல்லாருக்கும் வழக்கமாக பிஷப் அவர்கள் குறிப்பிடுகிறார் என்பதை சில குருமார் தனக்கு வந்த கடிதத்தை காட்டியபோதுதான் அறிந்தேன்.

மிகாவேல் பிசாசையே இழிவாக திட்ட துணியவில்லை என்று எழுதி அதுபோல் நீங்கள் செயல்படாததால் உங்களுக்குள் பிசாசின் ஆவி இருக்கிறது என்று அர்த்தப்படும் வகையில் எழுதியுள்ளார்.    சுமார் 2003ம் ஆண்டு முதல் பல காரணங்களுக்காக எனக்கும் பிஷப்.துரை அவர்களுக்கும் பல கடிதத்தொடர்புகள் உண்டானது.    அவைகளில் சில பிஷப்.துரை அவர்களின்மனைவியைப்பற்றியது, சில அவர் மகளைப்பற்றியது, சில அவர் பேசியதாக கூறப்பட்ட நாடார் ஜாதிதுவேஷத்தைக் குறித்தது, மற்ற கடிதங்கள் யாவும் அவரைப்பற்றிய விஷயமாகும்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Contd- previous post.

இப்படி நான் இவருக்கு எழுதிய ஒவ்வொரு கடிதமும் 8 பக்கங்கள், 10 பக்கங்கள் என்று எழுதியதால் இவரின் உண்மை சுபாவம் எழுத்துவடிவில் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் வெளிப்பட்டது. பிஷப் அவர்களும் சளைத்தவரல்ல. இவர் பதிலும் பல பக்கங்கள் அடங்கியதாகவே இருக்கும். அதில் அவர் என்னை எவ்வளவு அழகாக வர்ணிப்பார் தெரியுமா? உதாரணத்துக்கு சில:-
1. தாய் சபையை இழிவாக பேசுபவன் நீ,
2. நீர் ஒரு நவீன கால பரிசேயர், 
3. நீர் துர்செய்தி வெளியிடுபவன்,
4. நீர் ஒரு ஜாமக் கோடங்கி (எனக்கு இதன் அர்த்தம்மட்டும் இன்னும் புரியவில்லை)
5. நீர் நேர்மையான கிறிஸ்தவர் இல்லை,
6. நீர் சத்தியத்தை அறியாத மனிதன்,
7. நீர் துப்பு துலக்குபவன் (இந்த பெயரை இவர் எனக்கு ஏன் கொடுத்தார் தெரியுமா?) அது ஒரு துப்பறியும் கதை
8. நீங்கள் ஜாமக்காரனாய் இருக்க தகுதியில்லாதவர்,
9. நீர் கூலிக்கு வேலை செய்யும் ஜாமக்காரன்,
10. நீங்கள் பிதட்டுகிறீர்கள்,
11. சத்தியத்தையும் கடவுளின் வழிகளையும் அறியத் தெரியாத மனிதன் நீங்கள்,
12. நீரும் உமது சுயநீதியிலிருந்து மனம்மாறவேண்டும்,
13. உங்கள் கண்கள் திறக்கவேண்டும்,
14. உம் பத்திரிக்கை நக்கீரன், போலீஸ் போன்ற பத்திரிக்கையாகும்,
15. உம்மை கர்த்தர் கண்டிப்பாராக,
16. நீங்கள் எந்த விதத்திலும் சேலத்தில் உள்ள மற்ற CSI சபையாரைவிட உயர்ந்தவரல்ல.
17. உங்கள் சுயத்தை மையமாக கொண்டுதான் உங்கள் எரிச்சலை விமர்ச்சிக்கிறீர்.
18. குடிக்காமலே குடிகாரனைவிட மோசமாக பேசி எழுதுகிறவர் நீங்கள். 
19. மூத்த குமாரனைப்போல் இருப்பவர் நீங்கள்.
20. நீங்கள் எழுதுவது உங்களுடையது வெறித்தன குமுறல்.
21. தேவனுடைய சித்தத்தை அறியமுடியாத மனிதர் நீங்கள்.
22. நீர் பலே (அரசியல்வாதி) Politician
23. நீர் ஏன் இந்த CSI சபையில் இருக்கவேண்டும்? இது பிஷப்.துரை அவர்களுடைய கேள்வி.

இதை வாசிக்கும் வாசகர்கள், ஆயர்கள், அனைத்து CSI பிஷப்மார்களாகிய, நீங்களே கூறுங்கள். பிஷப்.துரை ஐயாவிடம் உள்ள ஆவி இயேசுவின் ஆவியா? அல்லது பிசாசின் ஆவியா? இருதயத்தின் நினைவுகள்தான் வாய்பேசும் - வாய் பேசுவது எழுத்தாக மாறினது.

மேலே பிஷப்.ஐயா என்மேல் பிரயோகித்த பொன்மொழிகள் எந்தெந்த காரணத்துக்காக, எந்த  சூழ்நிலையில், எந்த காலத்தில் அவர் எழுதினார் என்பதை அவர் விரும்பினால் அந்த கடிதங்களைCDயில் பதித்திருக்கிறேன் அவைகளை சமர்ப்பிக்கிறேன். இப்போது சொல்லுங்கள். எல்லா CSIபிஷப்மார்களைப்பற்றி எழுதும்போது இவரை பற்றிய ஊழல்களை குறிப்பிட்டதுபோலவா எழுதினேன்? இவரைப்பற்றிமட்டும் நான் இப்படி எழுதக்காரணம் என்ன? இவருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை ஏதும் இல்லையே! இவரை இரண்டுமுறை நேரில் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.

நீங்கள் பத்திரிக்கையில் என்மேல் எழுதிய குற்றச்சாட்டுகள் யாவும் பொய்யானது என்று பிஷப்.துரை அவர்கள் எழுதியுள்ளார். இவரைப்பற்றிய செய்திகளை பேங்க் போன்ற மற்ற விவரங்களை எனக்கு அறிவித்தவர்கள் யாராக இருக்கும் என்பதைக்குறித்து அவருக்கு தெரிந்த மாதிரியும், அதன்  அடிப்படையில் அவர்கள் யாவரையும் தேவனற்றவர்கள் என்கிறார்.

ஏப்ரல் மாத தமிழ் ஜாமக்காரனை எழுதும் இன்று 25.3.2009வரை நான் இதன் தொடர்பாக யாரையும் நேரில் பார்த்தது கிடையாது என்பதை கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிடுகிறேன். இந்த செய்திகள் யாவும் பல விதங்களில் நான் கிடைக்கப்பெற்றேன். மேலே பிஷப் அவர்கள் என்னை வர்ணித்தபோது நீர் ஒரு துப்பு துலக்குபவன் என்றாரே! அதுவேண்டுமானால் ஓரளவு உண்மை எனலாம். பிஷப்பற்றிய செய்திகள் உண்மைதானா என்பதை பல விதங்களில் ஊர்ஜிதப்படுத்திய பின்தான் அவரைப்பற்றி ஜாமக்காரனில் எழுதினேன்.    ஆனால் சிலர் சொன்ன தகவலைமட்டும் வைத்து நான் பிஷப் அவர்களைப்பற்றி எழுதவில்லை. அந்த கிடைத்த தகவல் ஆதாரம் உண்மைதானா? என்பதை அறிய என் ஊழியத்தினிடையில் கொஞ்சம் அலைந்தேன் என்பது உண்மை.

star2.gif எப்படியோ எல்லாருடைய கேள்வி என்னவென்றால், பிஷப்பின் உறவினர்கள் பலர் பதவியில் உண்டா? இல்லையா?

star2.gifகுடிகார ஊழியரை தன் மனைவியுடன் சேர்த்து ஒரே நாளில் சேலம் அஸ்தம்பட்டியில் CSIஇம்மானுவேல் ஆலயத்தில் வைத்து குருவாக அபிஷேகம் செய்தாரா? இல்லையா?

star2.gif அந்த குடிகார ஊழியர் இவருடைய நெருங்கிய உறவினரா இல்லையா? இவைகள் எதையும் இவரால் மறுக்கமுடியாது! மறைக்கமுடியாது!

star2.gif இவருடன்கூட பிறந்த தம்பி கையாடின கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு கணக்கு என்ன?அந்த கோடிகள் எங்கேபோனது? CSI செக்கின்மேல் எழுதப்பட்ட நபர் யார்?

star2.gif அந்த கோடிகள் அவர் பெயருக்கு CSI டிரஷரர் கையெழுத்திட்டு கொடுக்க டிரஷரரை யார் தூண்டியது? பிஷப் துரை அவர்களுக்கும் இந்த கோடிகளுக்கும் என்ன தொடர்பு? பிஷப்.துரை அவர்களின் சம்மதம் இல்லாமல் டிரஷரர் இத்தனை பெரிய தொகைக்கு கையெழுத்து போடுவாரா?

star2.gif பிஷப்.துரை கூறுவதுபோல இதைக்குறித்து நான் தீர்ப்பு சொல்லவில்லை. செய்தியை மட்டும்அறிவிக்கிறேன். CSI சபை பணம் எப்படியெல்லாம், யார் மூலமாகவெல்லாம் கைமாறுகிறது என்பதை அறிவிக்கவேண்டியது எங்களை போன்ற ஒவ்வொரு CSI அங்கத்தினர்களின் கடமையல்லவா? குறிப்பாக என்னைப்போன்ற பத்திரிக்கை ஆசிரியரின் பெரும் கடமையாகும்.

star2.gif அந்த பணத்தைப்பற்றி கோவை இம்மானுவேல் ஆலயத்தில் கேள்வி கேட்டவர்களை நீ யாரடா கேள்வி கேட்க? என்றீர்களாமே!. அவர்கள் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? கமிட்டியில் உள்ளவர்களுக்கு உங்களிடம் கேள்வி கேட்க தைரியமில்லை!

star2.gif அப்படி துணிந்து கேள்வி கேட்டால் அவர்கள் கதி என்ன? என்பதை அவர்களே அறிவார்கள்!. ஆகவே கஷ்டப்பட்டு உழைத்து ஆண்டவருக்கு என்று தங்கள் குறைவுகளின் மத்தியிலும், கஷ்டங்களின் மத்தியிலும் காணிக்கையை ஜெபத்துடன் கர்த்தருக்கென்று செலுத்துகிறார்களே அப்படிப்பட்டவர்களின்மனக்கொதிப்புதான் அன்று இம்மானுவேல் சபையில் பிரதிபலித்தது.

star2.gif போலீஸ்ஸோ, கோர்ட்டோ இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாது - CBIயின் இப்போதையை முயற்சியும் பயனில்லாமல் போகும் என்பதை நான் அறிவேன்.

star2.gifஎத்தனை கமிஷன்களை வைத்தாலும் உங்களைப்போன்ற பிஷப்மார்களை ஒன்றும் செய்யமுடியாது.

star2.gif ஆனால் ஒவ்வொரு பைசாவும் கர்த்தரின் பணம் - தேவன் சும்மாவிடமாட்டார். ராஜபோகம், விதவிதமான விலைகூடிய கார்கள், பல பங்களாக்கள், எஸ்டேட்கள், பலமுறை உலகம் சுற்றி செல்லும் யாத்திரை, பேங்க் சேமிப்பு இவைகள் யாவற்றுக்கும் ஒருநாள் நீங்கள் யாவரும் தேவசமூகத்தில் கணக்கு கொடுத்தாக வேண்டும்.

star2.gifநீ யாருக்கு அஞ்சி பயப்படுகிறாய்? நீ பொய் சொல்லுகிறாயே!

star2.gifநீ என்னை நினையாமலும், உன் மனதிலே வையாமலும் போகிறாய்.

star2.gifநான் வெகு காலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாமல் போகிறாய். ஏசா 57:11. இந்த வசனம் கர்த்தர் நேரிடையாக பேசுவதுபோல் இல்லை?

star2.gifபிஷப் என்பது பதவி அல்ல, அது ஊழியம் - ராஜரீகம் அல்ல! இயேசு சொன்னார். நான் ஊழியம்கொள்ளவரவில்லை - ஊழியம் செய்யவே வந்தேன் என்றார். அவர் சொன்னப்படியா செய்கிறீர்கள்.

star2.gif குடிகாரனை ஆயராக அபிஷேகம் செய்ததற்கு மிக அருமையான விளக்கத்தை 16.8.2004 அன்று எனக்கு கடிதமாக எழுதினீர்கள். மறக்கமுடியாத விளக்கம் அது! 28 வேதாகம கல்லூரிகளுக்கு என் பத்திரிக்கை ஜாமக்காரன் பாடமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தனைபேரும் உங்கள் பதிலை ஆராய்ந்து டாக்டரேட் எடுக்க முயலுவார்கள் என்பது உறுதி.

நீங்கள் எனக்கு எழுதியது(16.8.2004):
star2.gifகுடிகாரனை ஆயராக நான் அபிஷேகம் செய்து வைத்ததை குறை கூறுகிறீர்களே உங்களை (டாக்டர்.புஷ்பராஜ்) பார்த்து கேட்கிறேன். உங்களுக்கு இருப்பது உண்மையான ஆவிக்குரிய அனுபவம்தானா?

star2.gif இயேசுகிறிஸ்துவுடன் கூட இருந்த யூதாசை திருடனென்று இயேசு சொன்னார். எச்சரித்தார், ஆனால்  யூதாசை கர்த்தர் துரத்திவிடவில்லை. JESUS (Never Expelled Judas the thief) அப்படியே குடிகாரர்களையும் திருந்த செய்வார். (ஆனால் பிஷப்பாகிய உங்களை குறை கூறினவர்களையும், கேள்வி கேட்டவர்களையும் சபையைவிட்டு (Expelleநீக்கினீர்களே அது எந்த ஆவி?) யூதாசை கர்த்தர் ஏன் துரத்தாமல் விட்டுவைத்தார்? என்று தியானித்து பாரும் அல்லது யாரிடமாவது கேட்டுப்பாரும்.

star2.gif எங்கள் டையோசிஸ் குருவானவர் குடிகாரர்தான் ஆனால் குடிக்காமலே குடிகாரனைவிட மோசமாக பேசியும், எழுதியும் வருகிற உங்களை போன்ற ஊழியர்களை எப்படி திருத்துவதுஎன்பதுதான் என்பாரம்.

star2.gif என் மகளைப்பற்றி எனக்கு ஆலோசனைகூற நீங்கள் யார்?....... உம்முடைய மகனோ, மகளோதவறு செய்துவிட்டால் உம்மை சாட்சி இழந்தவர் என்று கூறினால் அது எப்படி மதியீனமோ அப்படித்தான்........

star2.gifஏலியின் பிள்ளைகள் தவறுசெய்தார்கள் அதனால் ஏலி சாட்சியை இழந்தவர் என்று அவரை நியாயம் தீர்க்க நீர் யார்? (நான் யாரையும் நியாயம் தீர்க்கவே இல்லையே! ஏலிக்கும் பிஷப் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?).

star3.gif இப்படி எழுதியுள்ள பிஷப் அவர்கள் வேதத்தை சரியாக வாசிக்கவில்லை அல்லதுதியானிக்கவில்லை என்பது விளங்குகிறது.    சாட்சிக்கெட்ட பிள்ளைகளால் ஏலிக்கு வந்த தேவ தண்டனைக்கு காரணமாக வேதம் கூறுவதை பிஷப் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

star2.gif 1 சாமு 2:29 நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.

star2.gif 1 சாமு 2:30 என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்னை அசட்டைப் பண்ணுகிறவர்களை நான் அசட்டைப் பண்ணுவேன் என்று கர்த்தர் கூறுகிறார்.

star2.gif 1சாமு 3:13ல் கடைசியாக கர்த்தர் கூறுவதை கவனியுங்கள்: பிள்ளைகளை அடக்காமல் போனதுதான் பாவம் என்று கர்த்தர் குறிப்பிட்டதை கவனியுங்கள். நான் ஏலி ஸ்தானத்தில் உள்ளஉங்களை மகள் விஷயத்தில் குற்றம் சொல்லவில்லையே! இந்த குறிப்பிட்ட ஏலி குடும்ப சம்பவத்தில் கர்த்தர் குறிப்பிடுகிற குற்றச்சாட்டைப்பாருங்கள்.

அவர்களை (பிள்ளைகளை) அடக்காமற்போன பாவத்தினிமித்தம் நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயதீர்ப்புச் செய்வேன் என்று அறிவிக்கிறார். இதைக்குறித்து பிஷப் ஐயா அவர்கள் மேலும் கிளறாமல் இருப்பது நல்லது.

star3.gifகுடிகார ஆயர் விஷயத்தில் நீங்கள் கூறின உதாரணத்தின்படி இயேசு யூதாசை மன்னித்துதன்னோடு வைத்துக்கொள்ளவில்லையே! முதல் திருவிருந்தின்போது அவன் திருந்தவில்லை என்பதை அறிந்து அந்த ஐக்கியத்திலிருந்தே யூதாசை வெளியே அனுப்பிவிட்டதை நீங்கள் வாசிக்கவில்லை?

star2.gif மேலும் அவனாகவே தன் செயலுக்குகேற்ற தண்டனையைதானே தேடிக்கொண்டு கர்த்தரின் சீஷர் பட்டியலிலிருந்து நீக்கிகொண்டானே! கவனிக்கவில்லையா?

star2.gif பிஷப்! தீர்ப்பு நானோ மற்ற யாரும் கொடுக்கமுடியாது. ஆகவே நான் தீர்ப்பு சொன்னதாக இனி கூறவேண்டாம்.

star3.gifதேவனற்றவர்களோடு நானும் சேர்ந்து பிஷப்மாரை தூஷித்தேன், குற்றம் சாட்டினேன் என்றீர்கள். ஆனால்... உங்கள், அதாவது நம் கோவை திருமண்டல செயலர் Rev.ஜெயசீலனுடன்நீங்கள் இணைந்து எத்தனை காரியங்களில் ஒன்றாய் செயல்பட்டீர்கள்.    ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவரை நீங்கள் டம்மியாக வைத்திருந்தீர்கள்.    அதன்பின் சில காரணங்களால் அவர் உங்களுக்கு நெருக்கமானவராகிவிட்டார்.

அந்த காரணத்தை நான் சொல்லவேண்டுமா? மேலும் அவருக்கு சினாடிலேயே நல்ல பதவியையும் வாங்கி கொடுத்து அவரின் தொல்லையிலிருந்து விடுதலை பெற்றீர்கள். அதனால் உங்கள் நல்ல பண்பை பாராட்டுகிறேன்.

star2.gif ஆனால் Rev.ஜெயசீலன் (செயலர்) தேவனற்றவரா? தேவனோடுள்ளவரா? அவர் உங்களைப்பற்றி கொடுத்த அத்தாட்சி பத்திரத்தை கண்டீரா?

star2.gif நம் CSI பிஷப்மாரும், நம் வாசகரும் அதை வாசித்து விவரம் அறியட்டுமே. அதை வெளியிட்டதினால் உங்களுக்கு ஏதாவது மானம் நஷ்டம் ஏற்படுமா?    அதற்காக என்மேல் எந்த தீர்ப்பையும் கூறிவிடாதீர்கள். அத்தாட்சி பத்திரம் வழங்கியவர் நம் திருமண்டல செயலர் ஆவார்.

அதை அடுத்த பக்கத்தில் காணலாம்.

csi002.jpg
csi003.jpg
csi004.jpg
csi005.jpg
csi006.jpg

கோவை CSI திருமண்டல செயலர் முதலில் உங்கள் பெயருக்கு பின்னால் உள்ள டிகிரியிலிருந்து குற்றச்சாட்டை ஆரம்பிக்கிறார். அதை இதுவரை நீர் மறுக்கவேயில்லை. அன்று உங்கள் பெயருக்கு பின்னால் இருந்த டிகிரி வேறே - இன்று உள்ள டிகிரி வேறே!

இதோடு நிறுத்துகிறேன். ஓரளவு CSI வாசகர்கள் சபை ஊழல்களையும், CSI சபைகளின் பிஷப்மார்களில் ஒரு சிலரின் ஊழல்களையும் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த விஷயங்களில் நான் CSI சபையை குற்றம் சாட்டினேனா? என்பதையும் புரிந்திருப்பீர்கள். குற்றம் செய்தவர்களைமட்டும் CSI சபைகளின் நன்மைக்காக ஜாமக்காரன் பத்திரிக்கையில் வெளியிட்டேன்என்பதை வாசகரும் பிஷப்  அவர்களும் அறியவேண்டும். நான் CSI பிஷப்மாரை குற்றம் சாட்டினேனா? அல்லது ஊழல் செய்த CSI பிஷப்மார்களின் ஊழலைமட்டும் பத்திரிக்கையில் வெளிப்படுத்தினேனா? என்பதை நீங்களே நிதானியுங்கள்! குற்றவாளி யார்?

star2.gif இனி CSI பிஷப்மார்களும், CSI சபை விசுவாசிகளும் செய்யவேண்டியது: நம் CSI சபையை இப்படிப்பட்ட ஊழல்வாதிகளிடமிருந்து எப்படி காப்பாற்றுவது?, காணிக்கை பணம் திருடப்படாமல்எப்படி பாதுகாப்பது என்பதைப்பற்றி சிந்தியுங்கள். தவறு செய்தவர்களை CSI சினாட் இதுவரை என்ன செய்துள்ளது? இனிமேலாவது என்ன செய்யவேண்டும் என்பதை CSI சபையில் உள்ள ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவ பெரியவர்களும், CSI மீது வைராக்கியம் கொண்டவர்களும் இணைந்து ஏதாவது செய்து CSI சபைகளை காப்பாற்றுங்கள் என்று இதன்மூலம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

star2.gif ஒருவேளை CSI சினாட் இதற்காக ஒன்றும் செய்யாவிடில் நாமும் ஒன்றும் செய்யமுடியாது.சில குருவானவர்கள், சில CSI நற்பணி மன்றங்கள், CSI அனுதாப சங்கங்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) பல வருடங்களாக பல விதத்திலும் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டுகோர்ட் வழியாகவும் ஏராளமான பணம் செலவழித்து நியாயம்கிடைக்கப் போராடினார்கள். அவர்களை வாழ்த்துவோம். அப்படிப்பட்டவர்களை பிஷப்மார்கள் சபையைவிட்டே நீக்கிவிட்டனர். ஆனால் இனி அதற்காக பயம் வேண்டாம். அப்படி நீக்கமுடியாது என்பதற்கு உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பை கூறிவிட்டது.


24ம் பேராய மன்றத்தைக் குறித்து
உயர்நீதிமன்ற தீர்ப்பு (4.4.94) வெளிவந்தது.

star2.gif இதில் குறிப்பிடப்பட்ட ஒரு விஷயம் (பிஷப்) பேராயர் அனுமதியின்றி ஒரு நபர் கோர்ட்டுக்கு சென்றால் ஒழுங்கு நடவடிக்கை என்ற நம் CSI பேராய விதிகள் 46,57,59,60,68(கு) ஆகியவைகளைக்குறித்து நீதிபதி அவர்கள் தன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

star2.gif எந்த மனிதனும் அவன் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும், குடிமகன் ஒருவன் நீதிகேட்டு நீதிமன்றம் அணுகுவதில் யாரும் (எந்த பிஷப்பும் எந்த Constitutionனும்)குறுக்கிடுவதையோ, தடை செய்வதையோ அனுமதிக்க இயலாது. CSI டையோசிஸ்ஸின் சட்ட புத்தகத்தில் (Constitutionபிஷப்பின்முன் அனுமதியைப் பெற்றப்பின்தான் ஒருவன் நீதிமன்றம் செல்லமுடியும் என்று விதி (சட்டம்) கூறினாலும் வாதிகளுடைய குறையே அல்லது வாதிகள் கூறும் பிரச்சனையே பிஷப் டையோசிஸ்ஸிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்பதுதானே! ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு பேராயரின் முன்அனுமதி பெற்ற பின்னரே கோர்ட்டுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. மேலும் டையோசிஸ்ஸின் எந்த அங்கத்தினரும் டையோசிஸ்ஸின் வேறு எந்த ஒருநபர் பாதிக்கப்பட்டாலும் அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிப்படுத்தவும்,      டையோசிஸ் சட்டமுறைகள் (Constitution)      ஒழுங்காக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் கோர்ட்டுக்கு உரிமை உண்டு.

star2.gifஅற்புதமான தீர்ப்பு. CSI சினாட் அல்லது மாடரேட்டர், பிஷப்மார் சினாட் கமிட்டிகள் இயற்ற வேண்டிய இப்படிப்பட்ட சட்டத்தை ஒரு புறமத நீதியரசர் மூலமாக CSI டையோசிஸ்ஸின் சிலசர்வாதிகார சட்டம் உடைக்கப்பட்டிருக்கிறது.

star2.gif இதைப்போலவே பிஷப்மார்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரத்தை ஒரு சில பிஷப்புகள் தவறாக பயன்படுத்துவதையும் எப்படியாவது, யாரைகொண்டாவது அந்த CSI சட்டம் உடைக்கப்பட வேண்டும். அதற்காக ஜெபிப்போம்.

star2.gif கோயமுத்தூர் பிஷப் அவர்கள் எழுதிய கடிதத்துக்குதான் இந்த பதில் எழுத நேர்ந்தது. 2009 பிப்ரவரி மாதம்தான் நான் ஜாமக்காரனில் இனி நான் பிஷப்மார்களைப்பற்றி ஒன்றையும்எழுதுவதில்லை என்று தீர்மனானித்திருந்தேன். யாரும் பிஷப்மார்களின் எந்த தவறையும் எனக்குஅறிவிக்கவேண்டாம் என்றும் எழுதி அறிவித்தேன். ஆனால் கோவை பிஷப் அவராகவே என் தீர்மானத்தை உடைத்து மறுபடியும் திறப்பு விழா செய்துவைத்துள்ளார்.

star2.gif கோயமுத்தூர் பிஷப் கடிதம் எழுதியதால் இத்தனை விளக்கங்கள் கொடுக்க வேண்டிவந்தது. இதில்    முழு விளக்கமும், முழு விஷயங்களும் நான் எழுதவில்லை. ஒரு சிறுபகுதியைத்தான் சுட்டிக்காட்டினேன்.

star2.gifமதுரை பிஷப் அவர்களும், கோவை பிஷப்போல் எனக்கு கடிதம் எழுதினால் பணபிரச்சனைகளைக் குறித்தும், பிஷப் அவர்களைக் குறித்தும் எழுதி அதற்கு உரிய விளக்கம் கொடுக்க கர்த்தர் ஞானமும், கிருபையும் எனக்குத் தருவார் என்று நினைக்கிறேன்.

star2.gif கோயமுத்தூர் டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் கடிதம் சம்பந்தமாக ஏதாவது நீங்கள் அறியவேண்டுமானால் இனி அவருக்கே கடிதம் எழுதி விவரம் கேட்கலாம். அவரைப்பற்றி எனக்கு எழுத வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் விலாசம்: 
Rt.Rev.Dr.M.DORAI,
Bishop in Coimbatore.
256, Race Course Road, 
Coimbatore- 641 018.
Ph:0422-2213605, Fax:0422-2213369.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CSI SYNODல் பண ஊழல்

By devapriyaji

CSI சினாட்டில் முன்னாள் மாடரேட்டர் Most Rev.Dr.சுகந்தரும், அவர்கூட உள்ளவர்களும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பல கோடி டாலர்களை கொள்ளையடித்த விவரம் அமெரிக்கா TV செய்தி பிரிவு தனது CNN TV மூலம் அறிவித்தது. அதன் விவரங்களை 2008 ஜுன் மாத ஜாமக்காரனில் வெளியிட்டிருந்தேன். CSI சினாடே இப்படிப்பட்ட பண ஊழலில் சிக்கியிருக்கும்போது மற்ற 22 டையோசிஸ்களின் பிரச்சனைகளை, பண விவரங்களை சினாட் விசாரிக்க என்ன யோக்கியதை இருக்கிறது? இதைக்குறித்து CSIயின்மேல் பாரமுள்ளவர்கள் சென்னையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் பலர் புகார்களை அளித்தும், அந்த புகார்களை அனைத்து பிஷப்மார்களுக்கும், சினாட் உறுப்பினர்களுக்கும் அனுப்பியும், பலன் ஏதும் இல்லையே என்று மிகுந்த ஆதங்கத்தோடு பலர் எனக்கு எழுதினார்கள். அதையும் ஜாமக்காரனில் வெளியிட்டேன். இப்போது புதிய மாடரேட்டர் Most Rev.Dr.கிளாக்ஸ்டன் (தெற்கு கேரளாவின் பிஷப்) அவர்களும், புதிய CSI சினாட் பொறுப்பாளர்களும் இந்த பகிரங்க ஊழல் சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பலாம் என்று கடந்த ஜாமக்காரனில் எழுதியிருந்தேன்.

மாடரேட்டர் அவர்களுடன் 2 ½ மணி நேரம் 2008 ஜுன் மாதம் அமெரிக்கா ஊழியங்களுக்காக நான் சென்ற போது நானும், மாடரேட்டர் அவர்களும் ஒரே வீட்டில்தான் தங்க வைக்கப் பட்டோம். ஜுன் 26ம் தேதி விமானத்திலிருந்து மாடரேட்டர் அவர்கள் இறங்கி வந்து சேர்ந்தவுடன், உடைகளைக்கூட களையாமல், ஓய்வு எடுக்காமல் விமான களைப்பையும் பெரிது படுத்தாமல் என்னோடு சுமார் 2½ மணிநேரம் பேசினார். அநேக விஷயங்களை நாங்கள் பகிர்ந்துக்கொண்டது பிரயோஜனமாக இருந்தது. பேசிய பல விஷயங்களில் முன்னாள் மாடரேட்டர் விவகாரத்தைக்குறித்தும் கேட்டேன். அதற்கு தெளிவான பதிலையும், அதில் தலையிடும் மாடரேட்டரின் தற்போதைய நிலையைக்குறித்தும் மனம்விட்டு பகிர்ந்துக்கொண்டார்.

முன்னாள் மாடரேட்டரும், சினாட் செயலரும் இன்னும் இவர்களோடு ஊழல் செய்த அத்தனை பேரிலும் ரிட்டயர்ட்டான நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நீதிபதி அவர்களும் தன் விசாரணை கமிஷனின் அறிக்கையை இதை நான் எழுதும் நாட்களில் இப்போதுள்ள மாடரேட்டர் அவர்களிடம் சமர்பித்திருப்பார் என்று நம்புகிறேன்.

விசாரணையில் முன்னாள் மாடரேட்டர் Most Rev.Dr.சுகந்தரும், மற்றவர்களும் பணம் களவாடியது நிரூபணமாகியதாக செய்தி அறிந்தேன்.

ஆனால், இந்த அறிக்கையின்மேல் இப்போதுள்ள மாடரேட்டர் Most Rev.Dr.கிளாக்ஸ்டன் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அறிக்கை கைக்கு கிடைத்து, மாடரேட்டர் சினாட் கமிட்டியைக் கூட்டி முன்னாள் மாடரேட்டரும், பிஷப்புமான Most Rev.சுகந்தர் அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும் அல்லது எடுத்த கோடிக்கணக்கான பணத்தை திரும்ப ஒப்படைக்க கட்டளையிடவேண்டும்.

ஆனால், இப்போது இரண்டும் செய்யமுடியாத நிலை. குற்றவாளியாக தீர்க்கப்பட்ட முன்னாள் மாடரேட்டர்.சுகந்தர் அவர்கள் ஓய்வு பெற்றுவிடுவார். ஓய்வுபெற்ற அவரை பதவி நீக்கமோ, தண்டனையோ கொடுக்க சினாட் கமிட்டியால் இயலாது. ஒன்று செய்யலாம்! எடுத்த கோடிக்கணக்கான பணத்தை சினாட்டுக்கு திரும்ப செலுத்த அவரைக் கேட்டுக்கொள்ளவேண்டும். அதுவும் திரும்ப செலுத்திவிடுங்கள் என்று கட்டளையிட முடியாது. சினாடின் அதிகார எல்லை அந்த அளவே உள்ளது.

முறைப்படி செய்யவேண்டுமானால் சினாட் போலீஸில் முன்னாள் மாடரேட்டர்மேல் பணம் கையாடல் புகார் அளிக்கவேண்டும். அப்போது பிரச்சனை கோர்ட்டுக்கு போகும். கோர்ட்டுக்கு போனால் கொள்ளையர்களுக்கு மிகவும் சௌகரியமாகிவிடும். காரணம், வாய்தா வாங்கி மாதங்களை கடத்தலாம். கோர்ட்டில் பணவிளையாட்டு நடக்கும். பழைய மாடரேட்டருக்கு கோர்ட் ஒரு விளையாட்டு மைதானமாகும். நீதிபதிகளேகூட இவர் விசில் அடிக்கசொன்னால் விசில் அடிப்பார்கள். ஆந்திர கோர்ட்டிலும், தமிழ்நாட்டு கோர்ட்டிலும் பலமுறை அப்படிப்பட்ட நிலைகளையும் அந்த விளையாட்டையும் கேள்விப்பட்டிருக்கிறோமே!.

அதற்குள் இப்போதுள்ள மாடரேட்டருக்கு பதவிகாலம் முடிந்துவிடும், புது மாடரேட்டர் வருவார், கேஸ்ஸை தொடர்ந்து நடத்த அவர் பிரியப்படமாட்டார். பிரச்சனை தன் பதவி காலத்தில் நடக்காததாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப்போல் மிக உயர்ந்த பதவி வகித்தவரானபடியால் நமக்கெதற்கு தேவையில்லாத கோர்ட் அலைச்சல், பணசெலவு. ஆகவே குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மாடரேட்டர் கேஸ் ஃபைல் குளோஸ் செய்யப்பட்டு அடக்க ஆராதனை நடத்தப்படும்.அவ்வளவே! வாழ்க CSI சினாட்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CSI கோயமுத்தூர் டையோசிஸ் பிஷப்.துரை அவர்கள் தாக்கப்பட்டார்.

By devapriyaji

CSI கோயமுத்தூர் டையோசிஸ் பிஷப்.Rt.Rev.துரை அவர்கள் 2008 செப்டம்பர் மாதம் 28ம் தேதி கோயமுத்தூரில் உள்ள CSI இம்மானுவேல் ஆலய ஆராதனை நடத்த வந்தார். ஆராதனை முடித்துவிட்டு காரில் புறப்பட்டார். வெஸ்ட்ரியில் உட்கார்ந்திருந்தபோது சபையினர் 3 கோடி ஊழல்பற்றி விவரம் கேட்க பிஷப் அவர்கள் கோபப்பட்டு பதில் அளிக்க விவகாரம் முற்றியது.

அப்போது CSI சபையில் பலர் கைகளில் கருப்பு கொடிகளை பிடித்தப்படி பிஷப் அவர்களின் காரை முற்றுகையிட்டனர். ஆலய சொத்துகளை விற்கக்கூடாது என்றும் இதுவரை விற்ற ஆலய சொத்துக்களை மீட்கவேண்டும் என்றும், 3 கோடி கணக்கு என்ன? என்றும் கோஷமிட்டனர். சபைமக்கள் இங்கும் அங்கும் சிதறி ஓடினார்கள். பிஷப் அவர்களின் காரை மக்கள் நகரவிடவில்லை.

இவர்களின் போராட்டத்தின் நோக்கம்:

CSI டையோசிஸ்ஸிக்கு வெளிநாட்டிலிருந்துவரும் நிதி உதவிகளின் கணக்கு காட்டப்படவேண்டும்.

CSI டையோசிஸ்க்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்து பெறப்படும் வாடகையில் நடக்கும் ஊழல் சரிப்படுத்தப் படவேண்டும். பள்ளிக்கூடங்கள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள், டீச்சர் டிரெயினிங் பள்ளிகள் ஆகியவற்றில் பெறப்படும் கல்விக்கட்டணங்களில் நடைபெறும் ஊழல் நீக்கப்படவேண்டும். ஊழல் செய்யப்பட்ட 3 கோடிகளுக்கு விவரம் அளிக்கவேண்டும்.

ஆசிரியர் நியமனத்தில் நிறைய ஊழல்கள் நடைபெற்றுள்ளது. அவைகள் விசாரிக்கப்பட வேண்டும். அதில் நியாயம் வேண்டும்.

CSI சபைகளில் சபை மக்கள் செலுத்தும் காணிக்கை பணக்கணக்கில் நடைபெறும் ஊழல் அது நீக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேலே கூறப்பட்ட விஷயங்களில் நடைபெற்ற ஊழல்களைக்குறித்து எத்தனையோமுறை பிஷப் அவர்களுக்கு புகார் அளித்தும் பயனில்லை. பிஷப் அவர்கள் பேச்சுவாத்தைக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆகவே புகார் எழுதி CSI சினாட்டுக்கு அறிவித்தும் நடவடிக்கையில்லை,நியாயம் கிடைக்கவில்லை. ஆகவே திருமண்டலத்தில் உள்ள மக்களின் பொறுமை எல்லை கடந்துபோனதால்தான் இப்படிப்பட்ட போராட்டத்தில் இறங்கினோம் என்று போராட்ட குழுவினரோடு தொடர்புக்கொண்டவர்கள் கூறினார்கள்.

தங்கள் எதிர்ப்புகளை பிஷப்புக்கு தெரிவித்தபின் நீண்டநேரம் கழித்துதான் பிஷப் காரை போகவிட்டார்கள். ஆனால் அவர் காருக்குபின் அவருடைய மகன்.ஜெரோம் ஓட்டிவந்த காரை சிலர் தாக்கினர். அதன்பின் கார் சாவி ஜெரோமிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் வெறும் முதல் எச்சரிப்பும், அறிவிப்பும் மட்டுமே. கோரிக்கைக்கும் முடிவு தெரியாவிட்டால் எங்கள் போராட்டம் பெரிய அளவில் டையோசிஸ்ஸில் பிஷப் போகும் ஒவ்வொரு சபையிலும் எங்கள் எதிர்ப்பை காட்டுவோம் என்றார்கள். இதன் முழுவிவரம் ஆதாரங்களுடன் வெளிவரும்.

 

Rate This


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.71/2 கோடி மோசடி

By devapriyaji

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.71/2 கோடி மோசடி பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது

http://www.dailythanthi.com/article.asp?NewsID=519892&disdate=10/12/2009&advt=1

சென்னை, அக்.12-

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி முறைகேடு செய்ததாக சென்னை பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செயலாளர் புகார்

சென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென் இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்) பொது செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தென் இந்திய திருச்சபையின் கீழ் 24 துணை திருச்சபைகள் உள்ளன. இதில் 9 திருச்சபையின் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்காவில் இருக்கும் இ.ஆர்.டி தொண்டு நிறுவனம் 17 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 855 ரூபாய் ஒதுக்கியது.

பொருட்கள்

இந்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் மற்றும் மீன்பிடி படகு, மீன்பிடி வலை, வீட்டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்த பணத்தை தென் இந்திய திருச்சபை மூலம் செலவிட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006-லிருந்து 2008-ம் ஆண்டு வரை இந்த பணிகள் செய்யப்பட்டன. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த பாலின் சத்தியமூர்த்தி இந்த பணிகளை முன்னின்று செய்தார்.

அவர் தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோரை இந்த பணியை செய்ய நியமித்தார். இவர்களுக்கு இதற்காக பெரிய அளவில் சம்பளம் கொடுத்தும், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண பணிக்காக செலவளிக்க கொடுத்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியும், ஆடம்பர பங்களா வீடு கட்டியும் பல்வேறு முறைகேடுகள் நடந்து விட்டன.

ரூ.71/2 கோடி

மேலும் செலவு செய்த திட்டங்களுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை. சுமார் 71/2 கோடி ரூபாய் அளவுக்கு இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பெண் டாக்டர் கைது

இந்த வழக்கில் புகார் கூறப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள் டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட்சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட்சுனில் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பெனாடிக்டா சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் ரோட்டில் வசிக்கிறார். இவர் எம்.பி.பி.எஸ். டாக்டராவார். கைதான ராபர்ட் சுனில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் வசிக்கிறார். இவர் வாங்கிய போர்டு எண்டவர் சொகுசு காரை ஏற்கனவே திருப்பி ஒப்படைத்து விட்டார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல டாக்டர் பெனாடிக்டா வாங்கிய எண்டவர் சொகுசு காரையும் போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

தேடுதல் வேட்டை

இதே போல் இவர்கள் வாங்கிய அதிக சம்பள பணம் மற்றும் கம்ப்ïட்டர்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுனாமி நிவாரண பணிகள் நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம், கேரள மாநிலம் ஆகிய இடங்களில் நேரடியாக சென்று இந்த முறை கேடு தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி, கஸ்தூரி ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலினும், சத்தியமூர்த்தியும் திருச்சியில் வசிக்கிறார்கள். பாலின் தென் இந்திய திருச்சபையின் செயலாளர் பதவிக்கு வரும் முன்பு, திருச்சியில் உள்ள கல்லூÖரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றினார். கஸ்தூரி தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொருளாளர் ஆவார்.

மேற்கண்ட இந்த தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு

By devapriyaji

nameethaசி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு

திருநெல்வேலி :நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக மீண்டும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது.

சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களின் நெல்லை பிஷப்பாக ஜெயபால் டேவிட் உள்ளார். நிர்வாக பொறுப்பைக் கவனிக்கும் லே செயலராக இருந்த தினகரின் பதவிக்காலம் முடிந்ததும், அண்மையில் நடந்த தேர்தலில் பிஷப்பின் மைத்துனர் தேவதாஸ் லே செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை சி.எஸ்.ஐ.,யின் தலைமையகமும் அங்கீகரித்தது. ஆனால் தினகர் தரப்பில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி தமது அணியினருக்கு இன்னமும் அதிகாரம் உள்ளதாக கூறிவருகிறார்.

சி.எஸ்.ஐ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், நிறுவனங்களுக்கான நிர்வாகிகளை இருதரப்பினரும் தங்கள் இஷ்டப்படி போட்டிபோட்டு நியமித்து வருகின்றனர். இதனிடையே நேற்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் முன்னாள் லே செயலாளர் தினகர் மற்றும் அவரது சகோதரர் மனோகர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பிஷப் நியமித்த சி.எஸ்.ஐ., அலுவலக புதிய மேலாளர் ஜோசப்ஜெயசிங் உள்ளிட்டோர் தாக்குதலில் காயமுற்றனர். தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் லே செயலர் தினகர் உள்ளிட்டவர்கள் மீது ஜோசப்ஜெயசிங் போலீசில் புகார் செய்தார். பாளையங்கோட்டை போலீசார் இருதரப்பினரையும் விசாரித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுரை அமெரிக்கன் முதல்வர் டிஸ்மிஸ் :பிஷப் கூட்டத்தில் முடிவு

By devapriyaji

முதல்வர் டிஸ்மிஸ் :பிஷப் கூட்டத்தில் முடிவு

தினமலர் செப்டம்பர் 23,2008,00:00 IST

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4949&cls=row3&nc at=TN

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருந்து முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமாரை டிஸ்மிஸ் செய்து, பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தலைமையிலான நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அமெரிக்கன் கல்லூரியின் நிர்வாக கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) ஜார்ஜ் செல்வகுமார், பர்சார் கிறிஸ்டோபர் தவமணி, பி.ஜெயசந்திரன், அருள்ஜீவராஜ், ஜான்மகேந்திரன், மோகன்லார்பீர், டேனியல் எழிலரசு, கேப்ரியல் ஜெயச்சந்திரன் ஆகிய ஒன்பது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமெரிக்கன் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சின்னராஜ் ஜோசப் ஜெய்குமாரை பணியில் இருந்து நீக்கி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் எழும் பிரச்னைகள் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கவும் கவுன்சில் தலைவரான பிஷப் கிறிஸ்டோபர் ஆசீருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.இதனால் ஏற்படும் காலியிடத்தை பூர்த்தி செய்ய, பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர், உறுப்பினர்கள் டேனியல் எழிலரசு, கேப்ரியல் ஜெயச்சந்திரனை கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டு கூட்டம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

இக்குழுவின் ஆலோசனைக்கு பின்னர் ஜார்ஜ் செல்வக்குமாரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலராக நியமிக்கலாம் என்று சிபாரிசு செய்தது.அவரையே முதல்வராக நியமித்து ஏகமனதாக தீர்மானிக்கிறது. துணை முதல்வராக அருள்பிரகாசமும், பர்சாராக கிறிஸ்டோபர் தவமணியும் பணியில் தொடர்வர் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CSI டையோசிஸ் பதவிகள் பிஷப்மார்களின் சொந்தக்காரர்களின் வசமானது

CSI சபைகளின் டையோசிஸ்களில் பெரும்பாலான பிஷப் தன் நெருங்கின சொந்தக்காரர்களைச் சரியான படிப்பு, தகுதி, பணிமூப்பு இல்லாதவர்களானாலும், சீனியாரிட்டி பார்க்காமலும் நிர்வாக கமிட்டியை கலந்தாலோசிக்காமலும்,    தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாகபிஷப் தன் சொந்தங்களை பதவியில் இருத்தி அவர்கள் மூலமாக பணக்கொள்ளையும், சபை, ஸ்தாபனம், கல்லூரி, நிலவிற்பனைகளைகளையும் எந்த எதிர்ப்பும் இன்றி நடத்தி பணக்கொள்ளையில் இறங்கியுள்ளார்கள். ஆந்திரா,    கர்நாடகா,    முக்கியமாக தமிழ்நாடு டையோசிஸ்களில் இப்படிப்பட்ட அக்கிரமம் சர்வ சாதாரணமாக அனைத்து மக்களும் கண்டுக்கொண்டுயிருக்க துணிகரமாக இக்காரியங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் இப்போது இரண்டு CSI டையோசிஸ் பிஷப்மார்களின் சொந்தங்களைக்குறித்து எனக்கு வந்த தகவலின்படி வெளியிடுகிறேன்.


மதுரை-இராமநாதபுரம் CSI டையோசிஸ்
பிஷப்.கிறிஸ்டோபர் ஆசீர் அவர்களின் உறவினர் வகிக்கும் பதவிகள்
பெயர்உறவின் முறைபதவி
1. Mrs.Jothi Sophiaபிஷப்பின் மகள்நர்சிங் கல்லூரி முதல்வர்
2. Mr.Thavamani Christopherபிஷப்பின் மருமகன்அமெரிக்கன் கல்லூரியின் BARSAR
3. Mr.Joelபிஷப்பின் மகன்மதுரை அமெரிக்கன் High Schoolஆசிரியர்
4. Mr.Jebaபிஷப்பின் மகன்?
5. Mr.Jenovaபிஷப்; மருமகனின் தங்கைமதுரை OCPM High School Teacher
6. Mr.Novarajபிஷப் மருமகனின் சித்தப்பாபள்ளிக்களுக்கான தனி அலுவலர்
7. Mr.Maduramபிஷப் மருமகனின் தகப்பனார்மதுரைCSI டையோசிஸ்ஸின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்டிட வேலைகளின் நிரந்தர காண்ட்ராக்டர்.

இந்த கணக்கெடுப்பு செய்தி தொகுப்பு 4 மாதத்துக்கு முந்தியது. இந்த நான்கு மாதத்தில் பிஷப்.ஆசீர்அவர்கள் இன்னும் சொந்தங்கள் எத்தனைப்பேர்களை தன் டையோசிஸ்ஸில் வேறு பல பதவிகளில் அமர்த்தியிருப்பாரோ அறியேன். இதன் இடையில் மேலே குறிப்பிட்டவர்களில் யாரையாவது மாற்றி வேறு சொந்தத்தையோ, வேறு யாரையோ நியமித்திருப்பாரோ நான் அறியேன்.


மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்சனை:

அநேக நூற்றாண்டுகளாக இந்தியாவில் பிரசித்திப்பெற்ற கல்லூரிதான் அமெரிக்கன் கல்லூரி. இங்கு படித்து நீதிபதிகளாகவும், மந்திரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், அரசாங்க உயர் அதிகாரிகளாகவும் ஆகியிருக்கும் நபர்கள் ஏராளம்! ஏராளம்! அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்கள் என்றாலே மிக பெருமையாகவும், கவுரவமாகவும் என்னப்படுவார்கள். இங்கு படித்தவர்களுக்கு உலகெங்கும் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஒரு சொசைட்டி போர்டாக அந்த காலத்து மிஷனரிமார் ஏற்பாடு செய்து CSI டையோசிஸ்ஸின் அதிகாரத்துக்குட்படாத தனி Bபோர்டினால் இந்த கல்லூரி நடத்தப்பட்டு வந்தது. இதன் வளாகத்திலுள்ள Chapelலில் இரண்டுமுறை பல வருடங்களுக்கு முன் நான் பிரசங்கம் செய்து உள்ளேன். இந்த கல்லூரியைப்பற்றியும் இதன் ஆளுமைப்பற்றியும் 1965ம் வருடம் முதல் நான் அறிவேன்.

மதுரை CSI டையோசிஸ்ஸை எத்தனையோ பிஷப்மார் பொறுப்பெடுத்துள்ளனர். அந்த பிஷப்மார் யாரினாலும் இந்த கல்லூரிக்கு ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.    அவர்களெல்லாம் டையோசிஸ் காரியங்களில்மட்டும் தலையிட்டு ஊழியம் நடத்தி வந்தனர். ஆனால் பிஷப்.ஆசீர் அவர்கள் மட்டும்தான் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்கன் கல்லூரியிலும், தன் அதிகாரம் செலுத்திஅமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நீண்டு நெடுங்தூரம் உள்ள, மிஷனரிகள் வாங்கிபோட்ட நிலங்களை விற்று, அங்கு வியாபார Complex கட்டிடம் பணியும் திட்டமும் வேறு பல திட்டங்களும் இட்டு அதை நிறைவேற்ற சவுகரியமாய் தனக்கு சாதகமான நபரை பிரின்சிபாலாக நியமித்தார்.    அது சரிபட்டு வராததால்,    தன் மருமகனையும் Barsarஆக நியமித்தார்.    இப்போதுதான் பிரச்சனை எழும்பிற்று. அமெரிக்கன் கல்லூரி தனி Bபோர்டால் நடத்தப்படுகிறது.    எல்லா நியமனங்களும் Bபோர்டில் உள்ள கமிட்டிதான் தீர்மானிக்க வேண்டும்.      அந்த கமிட்டிக்கு பிஷப் தலைமை தாங்கலாம் ஆனால் ஆளுகைகளில் தலையிட முடியாது. இப்போது பிரச்சனை அதிகமானது. பிஷப் தன் ஆட்களையும், குண்டர்களையும், சில ஆளும் கட்சி தலைவர்களின் துணையுடன் கல்லூரிக்குள் கூட்டிவந்து பிரச்சனை உண்டாக்கினார். உதவிக்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உதவியை நாடினார். முடிவில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அதை தலித் பிரச்சனை என்று கூறி மத கலவரமாற்றினார்கள்.

star2.gif அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, பட்டிமன்றங்கள் மூலம் பிரபலமாகியProf.Dr.சாலமன் பாப்பையா அவர்கள் அதே கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவராகும். அவர் வைராக்கியத்தோடு இதில் தலையிட்டார். அமெரிக்கன் கல்லூரி பற்றிய பத்திர ஒப்பந்தங்களை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து எல்லா அரசியல் தலைவர்களையும் கூட்டி மிஷனரிகள் எழுதிய அன்றைய ஒப்பந்தங்களை காட்டி விவரித்தார். அத்தனைப்பேரும் பிஷப்.ஆசீரின்செய்கைகளையும் பிழையான ஆக்கிரமிப்புகளையும் எச்சரித்தனர். அதற்கும் பிஷப் இணங்கவில்லை.

பிஷப்.ஆசீர் அவர்கள் கோர்ட்டுக்கு போனார்.      கோர்ட் பத்திர ஒப்பந்தங்களை நீதிபதி வாசித்துபிஷப்பை நீதிபதி கண்டித்து இனி அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று பிஷப்பை எச்சரித்து பிஷப் நியமித்த இரண்டு பிரின்சிபல்களையும் நீக்கிவிட்டு சீனியாரிட்டி பிரகாரம் அடுத்த நிலையில் உள்ளவரை பிரின்சிபல்லாக நியமித்து கட்டளையிட்டார். மதுரை கலெக்டர் - போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியவர்கள் கல்லூரியின் இந்த புதிய ஏற்பாடுகளை தொடர்ந்து கவனித்து ரிப்போர்ட் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது பிஷப்.ஆசீர் அவர்களுக்கு பெருத்த அவமானமாகிப்போனது மட்டுமல்ல, மற்ற டையோசிஸ் பிஷப்மார்களுக்கு இந்த கோர்ட் தீர்ப்பு ஒரு பாடமாக ஆனது. இப்படி அதிகாரவெறியும், டையோசிஸ் சொத்து அபகரிப்பும், மதுரைடையோசிஸ் எங்கும் பலவிதங்களில் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பசுமலைஎன்ற இடத்திலிருந்து காலகாலமாக வாழ்ந்த பலரை வீடுகளை காலிசெய்ய சொல்லி அவர்கள் கண்ணீரோடு எழுதிய கடிதங்கள் பல கதைகளை வெளிப்படுத்துகிறது. இத்தனைக்கும் இவர் மதுரைக்கான பிஷப் மாத்திரமல்ல, CSI முழுவதுக்கும் உதவி மாடரேட்டர் பதவியும் வகிக்கிறார். இவர் சபை குருவானவராக இருந்தபோது அன்று பிஷப்பாக இருந்த Rt.Rev.போத்திராஜிலு அவர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தவர்.    இவர் தொல்லை தாங்காமல் பிஷப்.போத்திராஜிலு அவர்களே பதவிகாலம் முடியும்முன் பிஷப் பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கிப்போனார்.

இப்படிப்பட்ட தெய்வபயம் அற்றவர்கள் பிஷப்பாகவும், உதவி மாடரேட்டராகவும் பதவி வகித்து அந்த பதவியின் கவுரவத்தை நாசப்படுத்தி அந்த பதவியை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பது வேதனைக்குறியதாகும். பிஷப்.போத்திராஜிலுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து துண்டுபிரதிகளை அச்சடித்து 1994 சினாட் மீட்டிங்கில் உபயோகித்து சரித்திரம் படைத்தவர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் உறவினர்கள்

பிஷப் அவர்களின் உறவினர்கள் டையோசிஸ்ஸின் முக்கிய பதவிகளில் நிறைந்துள்ளனர். பிஷப்Rt.Rev.துரை அவர்களின் மனைவி Mrs.Rev.சூடாமணி துரை அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட பதவிகள் ஆவன.

1. Ann’s Human Resource Centre,
2. Mother.Jothi - Womens Empowerment
3. Sahayam - Leprosy Rehabilitation
4. Tree - Tribal Women - mowerment - 20 மாவட்டங்களில் நடக்கும் திட்டம்
5. Nesam- Prisoners Family Welfare,
6. Yuvathi- Grilcnild Programme
7. Casu - HIV/AIDS Care and Support,
8. Pasam - Senior Citizen’s Welfare
9. Thunai- Widows Welfare,
10. STC- Secretarial Training Centre
11. Tabitha Tailoring institute,
12. Sengithi - Care for Araramis.

இவைகளில் பெரும்பான்மையானவைகளுக்கு ஜெர்மனி தேசத்திலிருந்து உதவிகள் ஏராளமாக கிடைக்கிறது.

மேலே காணப்பட்ட ஸ்தாபனங்களுக்கு பணவுதவி அவசரமாக தேவை என்று ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து சபைகளுக்கும் உதவி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

star2.gif (ஜெர்மனியில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் இதை விசாரித்து இதற்குமுன் கோயமுத்தூர் டையோசிஸ்க்கு அனுப்பப்பட்ட உதவி பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டு மேற்கொண்டபின் மாத்திரமே உதவிகளை அனுப்பி இந்த நல்ல காரியங்களுக்கு உதவலாம்.    காரணம் இதுவரை பெற்ற உதவிகள் செலவழித்த கணக்குகளில் பல தவறுகள் நடந்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஜாமக்காரனை டொச் மொழியில் மொழிபெயர்த்து வளமையாக சபைத்தலைவருக்கு கொடுக்கும்போது இவ்விவரத்தையும் குறிப்பிட்டு இவைகளின் விவரம் தேவையானால் உங்கள் மூலமாகவே அவர்களை எழுதச்சொல்லுங்கள்).

star2.gifசேலத்தில் மட்டும் 6 ஸ்தாபனங்களுக்கு பிஷப் அவர்களின் மனைவி தலைவி பதவியில் இருக்கிறார்.

star2.gif ஆடிட்டர் கணக்குப்படி ஒருமுறை சேலம் வந்தால் 6 ஸ்தாபனங்களிலும் பிரயாண செலவு-உள்பட மற்ற செலவுகளுக்கான பெரும் தொகையாக தனித்தனியாக TA செலவு தொகையைஒவ்வொரு ஸ்தாபனத்தின் பெயரிலும் பெற்றுக்கொள்வதாக செய்திகள் கூறுகிறது. ஆடிட்டர் அவர்களும் அதை ஆட்சேபித்து இருக்கிறார்.


கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்களின் உறவினர்களின் பதவி பட்டியல்
பெயர்உறவின் முறைபதவி
1. Mr.Murthiபிஷப்.துரையின் கூடபிறந்த தம்பிErode CSI College Secretary
2. Mr.Dhanabalanபிஷப்.துரையின் கூடபிறந்த அண்ணன்CSI ஆரம்ப, தொடக்கப் பள்ளிகளுக்கும் Correspondent ஆக.
3. Mrs.Sudamaniduraiபிஷப்.துரை அவர்களின் மனைவிகண் ஆஸ்பத்திரியின் தலைவர், மன
நலம் குன்றியவர்களின் விடுதி தலைவர்.
Working Womens Hostel தலைவர்
- போதகசேகர Chief Executive Officer
4. Mr.Samuel Sargunamபிஷப்பின் அண்ணன் மகன்Treasurer - Visitor பதவி CSI Hr. Sec. Schools, Erode.
5. Mrs.Metilaபிஷப்பின் அண்ணன் மகள்CSI Hr. Sec. School, Erode.இன்டர்வியூ இல்லாமலே சேர்க்கப்பட்டவர் இவருக்கு பள்ளி அலுவலக வேலை தெரியாததால் ரிட்டயர்ட் ஆன கிளார்க் தனக்கு உதவியாக தற்காலிக வேலையில் அமர்த்தி 4000 சம்பளமாக கொடுக்கிறார்களாம்.
6. Mr.Daniel Thangamபிஷப் அண்ணன் மகன்Paying Hostel Warden. ஏற்கனவே மூன்று இடங்களில் வேலைசெய்து பல குற்றச்சாட்டுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறார்.
7. Mr.Godwin Santhoshபிஷப்பின் அண்ணன் மகன்உடற்கல்வி ஆசிரியர். இவருக்கு சீனியராக பலர் காத்திருக்க எந்தவித இன்டர்வியூயும் இல்லாமல் ஆசிரியர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
8. Mr.Edwin Santhoshபிஷப்பின் மற்றொரு அண்ணன் மகன்அப்பாசாமி கல்லூரியில் புரொபஸர் வேலை.
9. Mrs.Jaculinபிஷப் மனைவியின் தங்கைCSI (Salem) Hr. Sec. School BTஆசிரியை பதவி
10. Isreal Uthaya Thangamபிஷப் அண்ணன் மகன்CSI விடுதி நோட், புக் சப்ளை செய்வது

பிஷப்.துரை அவர்களின் சொந்தங்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. மேலே உள்ள பதவி விவரங்களை தொகுத்தவர்கள் அதை எழுதும்போது மேலும் மீதியுள்ள உறவினர் இரண்டு பேர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலே வாசித்த விவரங்கள் எந்த அளவு உண்மையானது. இப்போது அவர்களில் எத்தனை பேர்களுக்கு வேறு புது பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனைபேர் பதவியில் இப்போது இல்லை என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.

star2.gif இதில் பிஷப்.துரை அவர்களின் கூடப்பிறந்த தம்பியான மூர்த்தி என்பவருக்குதான் சுமார் 3 கோடி ரூபாய் 3 செக்குகளாக டையோசிஸ்ஸிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கோடிகளின் கணக்கின் விவரத்தை கோயமுத்தூர் இம்மானுவேல் ஆலய வெஸ்ட்ரியில் வைத்து சபைமக்கள் பிஷப்பிடம் கேள்வி கேட்டப்போதுதான் வாடா போடா என்ற ஏகவசனத்தில் கேள்வி கேட்டவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் வெகுண்ட மக்கள் பிஷப் காரையும், பிஷப் மகனின் காரையும் போகவிடாமல் சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

star2.gif உறவினர் லிஸ்ட்டில் முதலாவதாக காணப்படும் நபர் Mr.மூர்த்தி அவர்கள் ஆவார். இவர் Erode CSI Christian Art College செயலாளராக இருந்தவர் இவர். பிஷப்.துரை அவர்களின் கூடபிறந்த சகோதரர் ஆவார்.

இவரும் முன்னாள் டையோசிஸ் பொருளாளருமான Mr.சுவாமிதாஸ் என்பவரும் மேற்படி கல்லூரி பேங்க் கணக்கில் Co-Signatoryயாக செயல்பட்டு Bank of Maharastra, Erode Branch A/c. CD 100361ல் நான்கு செக் உபயோகித்துள்ளார்.
1. Cheque No.254870      Date 10-08-2007 தொகை 50 லட்சம்
2. Cheque No.254871      Date 15-09-2007 தொகை 50 லட்சம் 
3. Cheque No.254872      Date 25-10-2007 தொகை 45 லட்சம்
4. Cheque No.254873      Date 26-11-2007 தொகை 25 லட்சம்

ஒரு கோடியே எழுபது லட்சம் என்ற இந்த மொத்த தொகையானது கல்லூரியின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிக்காக என்று எழுதப்பட்ட அதற்காக செலவழிக்காமல் இவர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் வெளியரங்கமான குற்றச்சாட்டு.

மேலும் இந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படி கோயமுத்தூர் டையோசிஸ் நீதி மற்றும் சொத்து பராமரிப்புக்காக ஒரு கமிட்டி உண்டு. அந்த கமிட்டியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை அல்லது நிர்வாக கமிட்டியிடமாவது அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறைகோடுகளை அறிந்து சிலர் கல்லூரி நிர்வாகக் குழு,        அலுவலக பொறுப்பாளர்களிடம் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. கிறிஸ்டியன் வெல்பேர் மூவ்மெண்ட் என்ற சபைக்காக பாடுபடும் நல்லெண்ண சங்கம் 26.8.2008ல் தினத்தந்தி என்ற தினசரி நாளிதழில் எச்சரிக்கை விடுத்தது.    அதன்பின் பிஷப் சார்பில் வக்கீல் பதில் எழுதினார்.    அதன் முடிவு இதுநாள் வரை அறியவில்லை.

star2.gif ஈரோடு பெண்கள் ஆசிரியர் பயிற்சியில் பள்ளியின் கரஸ்பான்ட்டாக இருக்கும் பிஷப்அவர்களின் உடன்பிறந்த தம்பி திரு.மூர்த்தி அவர்களிடம் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க 80 லட்சம்கொடுக்கப்பட்டது.      இதுவரை இதற்கான செலவு செய்ததின் காரணத்தையோ,    கணக்கையோ காண்பிக்கவில்லை.

இதுபோல ஏராளமான பெரும்தொகைகளை கையாண்ட திரு.மூர்த்தி அதன் கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.      இதன் காரணமாக திரு.மூர்த்திஅவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ்ஸில் விவரம் அறிவிக்கப்பட்டு தேடுதல் ஏற்பாடு நடந்துள்ளதால் மூர்த்தி என்பவர் தேடப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

star2.gif முன்காலத்தில் பிஷப்பாக பணி செய்தவர் யாவரும் இயேசுவின் வழியை பின்பற்றி நடந்தனர்.
நான் ஊழியம் கொள்ள வரவில்லை.
நான் ஊழியம் செய்யவே வந்தேன் என்று இயேசு கூறினார்.

ஆனால் இன்று பிஷப்மார் பதவி ஏற்றவுடன் ராஜாவைப்போல் பவனி வர மிக உயர்ந்த விலையுள்ள பல கார்களை டையோசிஸ் பணத்தில் வாங்கி பவனி வரவே ஆசைப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் பங்களாக்களும்,        பிளாட்களும்,        பினாமி பெயரில் சொத்துகளும் வாங்கி குவிக்கின்றனர். தன்  சொந்தக்காரர்களை பணம் பெரும்பகுதிகளில் பதவி கொடுத்து அவர்கள் மூலமாக பணக்கொள்ளை அபாரமாக நடைபெறுகிறது. திருமண்டல பொறுப்பாளர்களுக்கும் இதில் பெரும்பங்கு செல்வதால் எல்லா தவறுகளுக்கும் பக்கபலமாக நிற்கின்றனர்.

இயேசுகிறிஸ்துவிடம் உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள். மத் 12:47.

இயேசுவின் குடும்பத்தினருக்கு ஏன் தன் தாய்க்குகூட எந்த ஒரு தனி சலுகையும் இயேசு கொடுக்கவில்லை. வசனம் சொல்கிறது. வெளியே நிற்கிறார்கள், பேச ஆசையோடு காத்திருக்கிறார்கள் என்று எழுதியுள்ளது.

ஆனால் இன்று தமிழ் CSI சபைகளில் உறவினர்கள் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். பதவிகளில் உயர்த்தப்படுகிறார்கள் எத்தனை வித்தியாசம் பாருங்கள்.

star2.gif இன்று கோயமுத்தூர் டையோசிஸ் CSI பிஷப்.துரை அவர்களுக்கு 2007-2008 வருடத்துக்கான ஊதிய செலவுகளை ஆடிட்டர் அறியிக்கையின்படி அடுத்த பக்கத்தில் வாசியுங்கள்.

பிஷப்.துரை அவர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்5,85,306.00
பிஷப்.துரை அவர்களின் வீடு மற்றும் கார் பராமரிப்பு5,44,139.00
பிஷப்.துரை அவர்களின் கார் பிரயாண செலவு66,415.00
பிஷப்.துரை அவர்களின் பிரயாண செலவு83,067.00
பிஷப்.துரை அவர்களின் கார் பராமரிப்பு,பழுது நீக்குதல்59,000.00
பிஷப்.துரை அவர்களின் செல்போன், அலுவலக போன், வீட்டு போன் பில்2,05,052.00
15,43,899.00
நீதிமன்ற செலவுகள்6,01,201.50

அன்பான வாசகர்களே! மேலே இரண்டு டையோசிஸ் விவரங்களை மட்டும் அதுவும் இவர்களின் தனிப்பட்ட மற்ற சொத்து விவரங்களை, குடும்ப விவரங்களையும், அப்படியே நான் இந்த குறிப்பிட்ட பிஷப்மார்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய தனிப்பட்ட என் கடிதங்களின் விவரம் -  இவர்கள் எனக்கு எழுதிய பதில் கடிதங்களின் நகல்கள் எதுவும் நான் இதுவரை வெளியிடவில்லை.

star2.gif பிஷப் பதவி எப்படி உறவினர்களுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இவ்விவரங்களை மட்டும் இங்கு எழுதியதால் இவர்களுக்கு நான் எழுதிய என் தனிப்பட்ட கடித விவரங்களை இங்கு வெளியிடவில்லை.

star2.gif பிஷப் பதவி மூலம் உறவினர்களுக்கு விதிகளின்படி பதவி கொடுக்காமல், தன் பிஷப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாக பிஷப் உறவினர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற உரிமையுள்ளவர்கள் தங்கள் சீனியர்ட்டிப்படி பதவி அல்லது வேலை கிடைக்கும் என்று ஏக்கத்தோடு ஏராளமானவர்கள் இன்னும் இலவுகாத்த கிளிப்போல காத்துக் கிடக்கிறார்கள்.



star2.gif



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அந்த நாளும் வந்திடாதோ?

star2.gif2005ம் வருடம் என்று நினைக்கிறேன் மத்திய கேரளா (Central Kerala) டையோசிஸ்ஸில் இப்போதுள்ள பிஷப்.Rt.Rev.Thomas Samuel, MA., BD., MTh., STM., அவர்களின் ஒரு மாத போன் பில்25,000 ரூபாயாக இருந்ததை அறிந்தபோது உடனே மறுநாள் 25,000 ரூபாய் கட்டுகளை டையோசிஸ் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்து டெலிபோன் பில் இத்தனை அதிகம்கூட காரணம் என் பிள்ளைகள் அவர்கள் இன்டெர்நெட் மூலம் பேசியதால் ஏற்பட்டது. கடந்த மாதம் பிள்ளைகள் என் வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது அவர்களால் உண்டான செலவு ஆகும். ஆகவே அதை டையோசிஸ் பணத்திலிருந்து எடுக்கவேண்டாம் என்று 25,000 ரூபாய் கொடுத்த சாட்சியுள்ள செய்தி நான் கேள்விப்பட்டபோது, நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி டையோசிஸ்ஸின் பிஷப் அவர்களின் ஒரு மாத டெலிபோன்பில் 1 லட்சம் என்று குமுதம் ரிப்போர்டரில் 11.1.2009 பக்கம் 10ல் எழுதப்பட்டதை வாசித்தபோது என் உள்ளம் மனவேதனையடைந்தது. டையோசிஸ் மக்கள் பணம் எப்படி செலவவாகிறது என்பதை உலக மக்கள் அறியும் வண்ணம் குமுதம் ரிப்போர்டரில் வெளிவரும் அளவுடையோசிஸ்ஸின் கவுரவம் கீழ்நோக்கி போய்விட்டதே! என்ன சொல்ல?

star2.gif பிஷப்மார்களின் அதிகார துஷ்பிரயோகம் இப்போது CSI சபையில் பெரும்பாலானமாவட்டங்களில், மாநிலங்களில் உள்ள டையோசிஸ்களில் சர்வ சாதாரணமாகவிட்டது. தேவபயம் இல்லாமல் போய்விட்டது.

star2.gif இன்று தமிழ்நாட்டு அரசாங்கத்தில் முதல்வரின் குடும்ப உறவினர்கள் நடத்தும் ஆட்சிப்போல CSIடையோசிஸ்களிலும் பிஷப்பின் உறவினர்கள் பெரும்பாலான பதவிகளில் அமர்ந்துள்ளனர்.

star2.gifசென்ட்ரல் கேரளா டையோசிஸ்: பிஷப்.MOOR, தனக்கு கொடுத்த சம்பளத்தில் ஒரு ரூபாய் போதும் மீதி டையோசிஸ் எடுத்துக்கொள்ளட்டும் என்றார். அந்த காலத்தில் 1 ரூபாய் சம்பளத்தில் திருமணம் ஆகாத நான் என்னை காப்பாற்றிக்கொள்ளமுடிந்தது என்றார்.

star2.gifசென்ட்ரல் கேரளா டையோசிஸ்ஸில் தற்காலிக பிஷப்பாக Rt.Rev.BEKEN HAM WASH என்பவர் கல்கத்தாவிலிருந்து வந்தவர். இவர்தான் தன் கடைசி காலத்தை அமைதியாக ஊழியத்திலும் சமுதாய பணியிலும் செலவு செய்ய ஆசைப்பட்டு தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் தடாகம் என்ற இடத்தில் ஆஸ்ரமத்தையும், ஆஸ்பத்திரியையும் ஆரம்பித்தவர். இவர் ஆங்கிலிக்கன் சபையை சேர்ந்தவரானாலும்தடாகம் கமிட்டியில் டிரஸ்டியாக யாக்கோபையா சபையினரையும் சேர்த்திருந்தார். அதனால் தடாகம்ஆஸ்ரமம் யாக்கோபையா சபையின் ஆளுகையில் சென்றுவிட்டது. இந்த பிஷப் காலில் செருப்பு அணியாதவர் தனக்கென்று ஒன்றும் சேர்க்காதவர்.

star2.gifவடக்கு கேரளா டையோசிஸ் பிஷப்.Rt.Rev.பெஞ்சமின் அவர்கள்தான் என்னை வடக்கு கேரளாவில் முதன்முதல் அறிமுகப்படுத்தி கன்வென்ஷன் நடத்தியவர்.    இன்றும் இவர் உயிரோடு இருக்கிறார். இப்போது இவர் வயது 102 வெறும் சைக்கிளில் சென்று ஊழியம் செய்தவர். இவரைக்குறித்து தெற்கு கேரளா பிஷப்பும், பலமுறை CSI மாடரேட்டராக இருந்தவரும், சாட்சியுள்ள மாடரேட்டருமான Most Rt.Rev.JESUDASAN அவர்கள் பிஷப்.பெஞ்சமினைக்குறித்து கூறும்போது இப்படி கூறுகிறார். பிஷப்.பெஞ்சமின் சபைகுருவானவராக தெற்கு கேரளா டையோசிஸ்ஸில் பணியாற்றும்போது சொற்ப சம்பளத்தில் ஊழியம் செய்தார். அப்போது டையோசிஸ் கமிட்டி இவருக்கு சம்பளத்தைக்கூட்டி கொடுக்க தீர்மானித்தது. ஆனால் இவரோ இப்போது எனக்கு கொடுக்கும் சம்பளம் போதும் என் சம்பளத்தை கூட்டவேண்டாம் என்று அறிவித்து எங்களையெல்லாம் ஆவிக்குரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் என்று குறிப்பிடுகிறார்.

பிஷப்.பெஞ்சமின் எழுதிய செய்தி: If you don’t have Ministry, You will go after money, But if you have a ministry, The money will come after you.

star2.gif இவர்களைப்போல மாடரேட்டராகி ரிட்டயர்ட் ஆன தெற்கு கேரளா பிஷப் Most Rt.Rev.ஏசுதாசன்அவர்களும் பணத்துக்கு அடிமை ஆகாமல் சாட்சியுடன் ஜீவித்து இன்றுவரை இந்தியாவின் எல்லா டையோசிஸ்ஸியிலும் மிகவும் மதிக்கப்படும் பிஷப் ஆக உள்ளார்.

இப்படி பண ஆசையில்லாமல் பிஷப் ஊழியத்தை செய்த இவர்களையும், இப்போதுள்ள பண ஊழலில் விழுந்த பிஷப்மார்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களின் சாட்சியுள்ள ஜீவியம் எங்கே? இவர்களின் வருமானத்துக்கு மீறின பணசேமிப்பும், சொத்துக்களும் எங்கே? கர்த்தர் கவனிக்கிறார்.

அன்பானவர்களே! CSIயில் நடக்கும் இப்படிப்பட்ட மோசமான நிலைகளை சரிப்படுத்த முயற்சி எடுக்கும் பல சங்கங்கள் இப்போது சென்னையிலும், தமிழ்நாட்டிலும் எழும்பியிருப்பது சபைகளில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்று நம்பலாம்.

star2.gifசென்னையில் ராணுவ உயர் அதிகாரியாக பணியாற்றிய மேஜர்.விக்டர் அவர்கள் பொறுப்பில்People’s Movement for the reformation of the CSI மூலம் CSIயில் நடக்கும் பல ஊழல்களை வெளிக்கொண்டு வரமுடிந்தது. சென்னை டையோசிஸ்க்காக இவரும் இவர் சகாக்களும் எடுக்கும் பல நல்ல முயற்சிகளை நான் அறிவேன். CSIயின் ஊழல்கள் பலவற்றை கோர்ட்வரை பல ஆயிரரூபாய்கள் செலவழித்து சரியான உண்மையான ஆதாரங்களை திரட்டி வாதாடி வருகிறார். இதன் செலவுகளுக்கு உண்மையான பல CSI கிறிஸ்தவர்கள் இவருக்கு உதவிவருகிறார்கள்.

சென்னையில் CSIயின் நன்மைக்காக வாதாடும் சுமார் 11 இயக்கங்கள், சங்கங்கள் உண்டு.
star2.gifசென்னை பேராய பாதுகாப்பு மன்றம் - சென்னை
star2.gifகிறிஸ்டியன் வெல்ஃபர் மூவ்மெண்ட் - ஈரோடு
star2.gifலய்ட்டி அசோசியேஷன் - சென்னை.
star2.gifமிஷன் ஆப் சர்ச் ரீபார்மேஷன்
star2.gifகிளர்ஜீ லய்ட்டி வெல்பர் அசோசியோஷன் - வெல்லூர்
star2.gifசமுதாய சிந்தனை - கன்னியாகுமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களுக்காக, தன் மற்ற சமூக பார்வையோடு, குமரி CSI சபைகளில் காணப்படும் தவறுகளை தைரியமாக இதன் ஆசிரியர்.Dr.D.PETERஅவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

ஜாமக்காரனும் தன் ஆவிக்குரிய சுவிசேஷ ஊழியத்தோடு தான் அங்கம் வகிக்கிற CSI சபைகள் எப்படியாவது வசனத்தில் வாழ்ந்து மனம்திரும்பின அனுபவத்தோடு வளரவேண்டும் என்ற பாரத்தில் செயல்படுகிறது. அப்படி எழுதும்போது தன் CSI சபையில் நடக்கும் ஊழல்களை களைய அறிவிப்பையும் எச்சரிப்பையும் வெளிப்படையாக கொடுக்கிறது. இப்படி கர்த்தர் தன் சபை மக்களை காப்பாற்ற பல்வேறு சங்கங்களை, ஸ்தாபனங்களை, பத்திரிக்கைகளை, ஊழியர்களை உபயோகிக்கிறார். ஆனால் அவரவர்கள் சபை நிறை-குறைகளை சுட்டிக்காட்டும்போது, சபை தலைவர்கள், குருமார்கள், சபை பொறுப்பாளர்களின் ஊழல்களை வெளியே கொண்டுவரும்போது அவைகளை என்ன நோக்கத்தோடு அப்படி எழுதுகிறோம் என்பது மிகமுக்கியம். சபைமேல் கொண்ட வெறுப்பு, சபை தலைவர்கள்மேல் கொண்ட வெறுப்பு, சபையில் எதிர்ப்பார்த்தது கிடைக்காததால் கொண்ட ஏமாற்றம் ஆகிய பல காரணங்களால் தங்கள் எழுத்துபணியை தவறாக பயன்படுத்தினால் கர்த்தர் சும்மாவிடமாட்டார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். காரணம் சபை கர்த்தருடையது. சபை மக்களும், ஊழியர்களும் கர்த்தருடையவர்கள். ஆகவே அபாண்டமாய் பொய்யான, ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை ஒருவரைகளங்கப்படுத்தவேண்டி அவர்மீது சேற்றை அள்ளி வீசவேண்டி பத்திரிக்கையை பயன்படுத்தினால் அந்த ஊழியத்தில் தேவஆவியானவரின் பங்கு இருக்கவே இருக்காது. ஆகவே இப்படிப்பட்ட விழிப்புணர்வுசபைகளில் உண்டாக்கும் பணி பத்திரிக்கை மூலமாக, துண்டுபிரதி மூலமாக எல்லா டையோசிஸ்களிலும் தொடரவேண்டும். அப்போதுதான் ஊழல் செய்பவர்கள் கொஞ்சமாவது தவறுசெய்ய பயப்படுவார்கள்,    சபைமக்களும் ஊழல் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ண ஒட்டார்!

இதன் முக்கிய காரணம் வாசகர்கள் அறியவேண்டும். நம் சபைக்காக, சபை தலைவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம். நான் எல்லா பிஷப்மாரையும் பிழையானவர்கள் என்றும் எங்கும் கூறியதில்லை. ஒரு சில கருப்பு ஆடுகளால் பல நல்ல பிஷப்மார்களுக்கும் கெட்டபெயர் உண்டாகிறது.    சபை தலைவர்கள் அல்லது பிஷப்மார்களின் தவறுகளுக்கு அரசாங்கம் தண்டனை கொடுக்க இயலாது என்பதால் பிஷப்மார்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று அறிந்து தேவபயம் இல்லாமல், தன் பதவிக்கேற்ற கவுரவம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளாமல் உலக மக்களைப்போல், ரவுடிகளின் தலைவர்களாக தங்களுக்கு எதிரானவர்களை,    தங்களுக்கு எதிராக எழுதுகிறவர்களை தங்களுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை பலவித உபாய தந்திரங்களால் அவர்களை சபையை விட்டு நீக்க திட்டம்இட்டு செயல்படுகின்றனர். ஒரு ஆளை சபையைவிட்டு நீக்கும் விஷயத்தில் பிஷப்மாரின் வானளாவிய அதிகாரம் கோர்ட்டில் செல்லுபடியாகவில்லை என்பதை பல நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அறியத்தருகிறது. அது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. எனவே ஜெபத்தோடு செயல்படுவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

*மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்? *
உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.
உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும் மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ** மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.
இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை. 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும்.
சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுகபோகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Lady doc held for swindling Rs 7.5cr tsunami aid fund
A Selvaraj, TNN 12 October 2009, 03:08am IST

http://timesofindia.indiatimes.com/home/city/chennai/Lady-doc-held-for-swindling-Rs-75cr-tsunami-aid-fund/articleshow/5113896.cms

CHENNAI: A lady doctor and her nephew were on Saturday arrested by Chennai police for allegedly swindling Rs 7.5 crore, which was disbursed by a US-based funding agency to a CSI church in Royapettah for tsunami rehabilitation work.

Police have also confiscated two luxury cars, valued at Rs 18 lakh each, which the accused is believed to have purchased through the funds. A hunt is on for the doctor’s parents, who were office-bearers of the CSI church, for their complicity in the fraud.

This is the first major case of tsunami-rehabilitation related fraud in Chennai. It needs to be noted that in the aftermath of the tsunami, hundreds of NGOs had set up shop in Tamil Nadu thriving on the liberal funds that came from abroad, making it the state with the highest number of NGOs. However, there was little monitoring of how the funds were used.

In the present case, a US-based NGO Episcopal Relief Development had given Rs 17.63 crore to the CSI church in Royapettah for rehabilitation of tsunami-affected people living in coastal Chennai.

“Recently new office-bearers assumed responsibility of administering the church and approached the US funding agency for more money to complete the ongoing rehabilitation work. However, officials at the ERD sought the account summary for the money allotted earlier and the work done till date. The church secretary Moses Jayakumar asked his predecessor Pauline to submit the accounts, but she refused claiming that the ERD funds were allotted to her in individual capacity and argued that she was not accountable to the church office bearers. This led to a tussle and an internal audit carried out by the new office bearers revealed a mismatch in funds allotted and the rehabilitation work completed to the tune of Rs 7.5 crore. Immediately, Moses Jayakumar lodged a complaint with the Chennai police commissioner T Rajendran seeking an investigation into the fraud,” a senior police officer said.

The central crime branch police conducted a probe during which it came to light that Pauline and Sathyamurthy had engaged their daughter Dr Benedicta and her nephew Robert Sunil as consultants for the Tsunami rehabilitation project.

“Both Benedicta and Sunil were entrusted with the funds and were also paid in the order of Rs 80,000 to Rs 90,000 per month in addition to other emoluments including luxury cars for official use. “Nearly Rs 7.5 crore meant for building houses for displaced fishermen, buying fishing nets and boats were siphoned off in this manner,” the officer said.
While Benedicta and Sunil have been picked up, Pauline and her husband are missing



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நான் கண்டது
பொய்க்கு - பொய் சாட்சி

சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி)      அவர்கள் அற்புத மனிதர் என்ற பெயரில் சகோ.D.G.S.தினகரன் அவர்களைப்பற்றி வெளியிட்ட VCD ஒன்றை நான் காண நேர்ந்தது.

சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் சகோ.தினகரனை இயேசுவுக்கு சமமாக்கி அவர் பாணியிலேயே சகோ.தினகரனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் இவர் தான் நடத்திய ஒரு கூட்டத்தில் HIVஎயிட்ஸ் வியாதியஸ்தனை தன் அருகில் இருக்கும் இயேசு மேடையிலிருந்து இறங்கிபோய் அவனை தொட்டு சுகமாக்கிவிட்டார் என்று ஜெபத்தில் ஒரு பெரிய பொய்யைக்கூறி, அந்த நபரையும் பெயர் சொல்லி மேடைக்கழைத்தார். அவனுக்கோ அந்த எயிட்ஸ்நோய் இப்போதும் சுகமாகாமல் அவன் அந்த வியாதியை சுமந்துக்கொண்டு, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறான். எயிட்ஸ் வியாதி இதுவரை சுகமாகியதாக உலக மெடிக்கல் ரிப்போர்ட்டில் இல்லை என்பதை பழைய ஜாமக்காரனில் ஆதாரத்துடன் எழுதினேன். இவர் மேடையில் கூறியது பொய்சாட்சி -  இதைக்குறித்து இதுவரை சகோ.மோகன் சி.லாசரஸ்ஸிடம் பலர் எழுதியும் நேரிலும் கேள்வி கேட்டும் பதில் கூறவில்லை.

இப்போது உலகறிந்த ஒரு விஷயத்தை இவர் அந்த VCDயில் மூடிமறைத்து உலக மக்களை பொய் சொல்லி ஏமாற்றப்பார்க்கிறார். அந்த VCDயில் அவர் கூறிய முதல் பொய்.

star2.gif சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்றும் கர்த்தராக பார்த்து வியாதி மூலமாக சகோ.தினகரனை எடுத்துக்கொண்டார் என்பதாகும்.    அதே CDயில் சகோ.தினகரன் எத்தனைமுறை வியாதிபடுக்கையில் இருந்தார் என்றும்,    தான் அவரை மலர் ஆஸ்பத்திரியில் வியாதிபடுக்கையில் இருக்கும்போதுபோய் பார்த்து வந்ததையும் அப்போது அவர் பேச பெலனின்றி படுக்கையில் கிடந்ததாக அவர் குறிப்பிட்டுவிட்டு, மரிக்கும்முன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இரும்பமுடியாமல் தவிப்பதை அதேVCD படத்தில் சகோ.தினகரனைக்காட்டி, அந்த சூழ்நிலையில் தான் சென்று ஜெபித்து வந்த விவரத்தையும் அந்த விசிடியில் கூறி அறிவித்தார்.    இவ்வளவையும் கூறிவிட்டு சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்று கூறுவது கேலிகூத்தாக தெரியவில்லை? இதற்கு தன் மனைவியின் சொப்பனத்தை சாட்சிக்காக இழுப்பது அபத்தம்.

star2.gif அதுமட்டுமல்ல, சகோ.தினகரன் அவர்களுக்கு எத்தனைமுறை கிட்னி ஆப்ரேஷன் செய்யப்பட்டது. எத்தனைமுறை இருதய அறுவை சிகிச்சை நடந்தது என்பதை பலர் அறிவார்கள். அந்த ஆப்ரேஷனுக்காக ஒவ்வொருமுறை அமெரிக்கா சென்றபோதும் அவருக்கு சுகவீனம் ஒன்றுமில்லை என்று பகிரங்கமாக பொய் சொன்னார்கள். பிஷப்.சுந்தர் கிளார்க் அவர்கள் அமெரிக்கா சென்று படுக்கையில் கிடந்த அவரை கண்டு அதை அப்படியே இந்தியாவில் அறிவித்ததால் சகோ.தினகரன் குடும்பம் பிஷப் மேல் மிகவும் கோபப்பட்டார்கள்.

star2.gif அதைவிட அந்த VCDயில் இவர் கூறியிருக்கும் பெரிய பொய் என்னவென்றால்அத்வானியையும், சங்கராச்சாரியாரையும் சகோ.தினகரன் அவர்கள் சந்தித்தது மிஷனரிகளை காப்பாற்றுவதற்காகத்தானாம்! இது கேட்க தமாஷாக இல்லை! இப்போதெல்லாம் கொஞ்சம்கூட கூச்சம்  இல்லாமல் பொய் இவர் வாயிலிருந்து சரளமாக வருகிறது. அங்கு சங்கராச்சரியாரோடு நடந்த பேச்சுவார்த்தையின்போது சகோ.தினகரன் அவர்கள் தன் கால் ஷூவை கழற்றவில்லை என்பதை பெரிய சிறப்பு செய்தியாக அந்த சிடியில் அறிவிக்கிறார்.   மணி நேரம் இயேசு தன்னை சந்தித்ததை சங்கராச்சாரியாரிடம் கூறி அவருக்கு சுவிசேஷம் அறிவிக்கவே போனார் என்று மோகன் சி.லாசரஸ் அவர்கள் துணிகரமாக பொய் செய்தியை தான் கூடவேயிருந்து பார்த்தைப்போல் அறிவிக்கிறார். இந்த சம்பவத்தில் ஒன்றை இவர் ஒத்துக் கொண்டார். அதாவது சகோ.தினகரன் சங்கராச்சாரியாருக்கு பரிசு கொடுத்தது உண்மை என்றும், ஆனால் அது பூஜை சாமான் அல்ல என்றும், அந்த பெட்டி பூஜைசம்பந்தப்பட்டதல்ல ஆனால் அது பணம்போடும் பெட்டி என்கிறார். இந்த விவரத்தை எப்படி அத்தனை தெளிவாக கூறுகிறீர்கள் என்று அவரிடமே வாசகர்கள் கேளுங்கள். அந்த விவரத்தை வழக்கம்போல் இயேசு மேடைக்கு உங்கள் அருகே வந்து காதில் சொன்னாரா? என்று கேட்டுப்பாருங்கள். அவர் கூறும் பதில் சகோ.தினகரனே என்னிடம் கூறினார் என்பதாகும். குற்றவாளியின் சாட்சி ஏற்புடையதா? மேலும் கூறுகிறார். பூஜை பொருள் கொடுத்ததாக பத்திரிக்கைக்காரர்கள்தான் தவறாக எழுதிவிட்டனர் என்றும், சில கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் அதை எடுத்து எழுதி அவரை அவமானப்படுத்த அந்த செய்தியை வெளியிட்டன என்றும் கூறி அந்த சிடியில் என்னையும் சாடியிருக்கிறார். சங்கராச்சாரியரை சந்தித்த விவரத்தை வெளியிட்ட 11 தினசரி பத்திரிக்கைகள் ஆங்கிலம்-இந்தி-குஜராத்தி பாஷைகளில் வெளியிட்ட பத்திரிக்கைகள் மஞ்சள் பத்திரிக்கையல்ல என்பதை வாசகர்கள் அறியவேண்டும். அவைகள் அரசாங்க அங்கீகாரம் பெற்ற, எல்லாராலும் மதிக்கப்படும் புகழ்ப்பெற்ற பத்திரிக்கைகள் ஆகும். மேலும் அந்த பத்திரிக்கைகள் செய்தியை மட்டுமல்லாமல் அதைப்பற்றிய புகைப்படத்தையும் ஆதாரத்தோடுவெளியிட்டது. அந்த புகைப்படம் மிகத்தெளிவாக சகோ.தினகரன் சங்கராச்சாரியருக்கு அளித்த பரிசு பொருள் வெள்ளியில் செய்த பூஜை பெட்டகம்தான் என்பதை காட்டும்போது, அதை பார்க்கும் நமது கண்கள்கூட பொய் சொல்லுமா? சினிமா நடிகர் S.V.சேகரும் அதைப்பற்றி விளக்கி கூறினாரே! மோகன் சி.லாசரஸ்ஸின் அந்த VCDயை சங்கராச்சாரியாருக்கு அன்று பரிசளிக்கும்போது கூடநின்றவர்கள் கண்டால் கிறிஸ்தவ ஊழியர்கள் இவ்வளவு சின்னதனமாக இந்த விஷயத்தில் பொய் சொல்கிறார்களே என்று கேலியாக பேசமாட்டார்கள். காருண்யா கல்லூரியை யுனிவர்சிட்டியாக அதை மேம்படுத்த சங்கராச்சாரியாரின் சிபாரிசுக்காக சகோ.தினகரனும், பால் தினகரனும் சென்றதையும், மேற்கொண்டு இவர்கள் சங்கராச்சாரியரிடம் என்ன பேசினார்கள் என்பதையும் கூடவேயிருந்து இந்த கூடுகைக்கு ஏற்பாடு செய்து உதவிய நடிகர் S.V.சேகர் அவர்களை யாராவது கேட்டுப்பாருங்கள். இவ்வளவு தெளிவான படத்தோடுகூடிய ஒரு நிகழ்வுக்கு எயிட்ஸ் சுகமானது என்று தன் பாணியில் பொய்வெளிப்பாடு கூறியதுபோல மோகன்.சி.லாசரஸ் அந்த VCDயில் பொய்சாட்சி கூறியிருப்பது யாரை ஏமாற்ற? அல்லது யாரை திருப்திப்படுத்த இப்படி கூறுகிறார்?    இதற்கு சாட்சியாக யாரை அழைக்கிறார் தெரியுமா? சகோ.தினகரனே என்னை அழைத்து அப்படி கூறினார் என்கிறார். இவர் கூறியது உண்மையா என்று இப்போது யார் சகோ.தினகரனை நேரில்போய் பார்த்து கேட்டு உறுதிப்படுத்துவது? அன்று சகோ.தினகரன் அவர்களே அதைக்குறித்து தன் பங்குக்கு பொய்யான தகவலை கொடுத்தார் என்பது நாடறியும். அவரிடம் கேட்டு சொல்லும் இவர் தகவலும் பொய்க்கு - பொய்சாட்சி சொல்லும் தகவலாகும். சகோ.தினகரன் இறந்த பிறகும் சகோ.தினகரனை மோகன் சி.லாசரஸ் அவர்கள் அந்த விசிடி மூலம் அவரை அவமானபடுத்துவது நல்லதல்ல. மக்கள் முன்புபோல அல்ல, விழித்துக்கொண்டார்கள்.

star2.gif மேலும் சந்தடிசாக்கில் இவர் தன்னைப்பற்றி நாட்டுமக்களுக்கு ஒரு இரகசியம் கூறுகிறார். அதாவது  எலிசாவுக்கு எலியாவிடமிருந்து இரட்டிப்பான வரம் கிடைத்ததை சுட்டிக்காட்டி சென்னைV.P.ஹாலில் தன்னை (மோகன் சி.லாசரஸை) சகோ.தினகரன் அழைத்து தலைமேல் கை வைத்து தீர்க்கதரிசனமாக இப்படி கூறினாராம்.    கர்த்தர்தாமே என்னைவிட ஊழியத்தில் இரண்டு மடங்குஇவரை    (மோகன் சி.லாசரஸ்ஸை)    உபயோகப்படுத்தும் என்று கூறியதாக விளம்பரப்படுத்தியுள்ளார். சகோ.தினகரனின் மகன் தம்பி.பால் தினகரனே அப்பாவைவிட தன்னை கர்த்தர்இரண்டு மடங்கு உபயோகிக்கப்போகிறார் என்று கூறியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சகோ.மோகன் சி.லாசரஸ் பால் தினகரனை முந்திக்கொண்டார் என்று நினைக்கிறேன்.    இனி எயிட்ஸ் வியாதி சுகம் ஆனது என்பதைப்போல் இரண்டு மடங்கு பொய்சாட்சிகளை மோகன் சி.லாசரஸ்ஸிமிடருந்து எதிர்ப்பார்க்கலாம்.

star2.gif தமிழ்நாட்டில் இனி லஞ்சமே இருக்காது என்று கூறிய தீர்க்கதரிசன VCD ஒன்றும் மோகன் சி.லாசரஸ் வெளியிட்டிருக்கிறார். இது எதில்போய் முடியுமோ? அந்த தீர்க்கதரிசன CDயில் கூறியிருப்பது எல்லாம் பொய். உதாரணத்துக்கு லஞ்சம்பற்றி கூறியதை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.

இனிவரும் காலத்தில் உலகெங்கும் லஞ்சம் கூடுமே ஒழிய லஞ்சம் குறையாது. இவர் தான் யூகித்ததை தீர்க்;கதரிசனமாக கூறுவதால்தான் இந்த பொய் வெளிப்பாடுகள் இப்படி சரளமாக வருகிறது.பிசாசு இவர்களுக்கு உதவி செய்வான்.எரே 23:16.


உங்களுக்கு தெரியுமா?

star2.gif சகோ.D.G.S.தினகரனின் வல்லமை முகாமில் பயிற்சி பெற்ற அனைவரும் இன்று பல இடங்களில்  ஜெபத்தில் பெயர் அழைக்கிற பொய்யான ஊழியத்தை கற்றுக்கொண்டு அதை தங்கள் பிள்ளைகளுக்கும்,      தன்னோடுள்ள உடன் ஊழியருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.      இவர்கள் சொல்லிக்கொடுக்காமல் போனாலும் கூட உள்ளவர்கள் ஜெபத்தில் பெயர் சொல்லும்முறையை கற்றுக்கொண்டு அவர்கள் எல்லாரும் தனி ஊழியம் தொடங்கிவிடுவார்கள். இப்போது சிலர் நாசூக்காய் ஜெபத்தில் பெயரை அழைக்காமல், வியாதியின் பெயரைமட்டுமே கூறுவார்கள். இப்போது இப்படிப்பட்ட ஊழியத்துக்குதான் மௌசு அதிகம்.

star2.gif இப்படி எயிட்ஸ் கிருமிபோல் பரவிவிட்ட ஜெபத்தில் பெயர் சொல்லும் ஊழியத்தின் ஆரம்ப நாயகன் இந்தியாவில் D.G.S.தினகரன் மட்டுமே. இப்போது அவருடைய மகன் அதை தொடர்ந்து நடத்தி இன்னும் மீதியானவர்களுக்கும் ஜெபத்தில் பெயர் சொல்லி அழைப்பதை சொல்லிதருவார் என்று நினைக்கிறேன்.

star2.gif இதற்கு TVயில் சென்னை சில்க், ஆச்சி மசாலாவுக்கு வரும் விளம்பரம்போல் கோயமுத்தூர்ஜவஹர் சாமுவேலை சாட்சி சொல்லவைத்து வல்லமை முகாமில் இவர் பெற்றவைகளை விளக்கும்படி TVயில் ஏற்பாடு செய்ய வைத்துள்ளனர்.

star2.gif இவர்கள் எல்லாரும் அந்திக்கிறிஸ்துவுக்கு வழிகளை ஆயத்தம் செய்யும் கூட்டத்தினர்.

star2.gifதாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

star2.gif பொதுவாக இவர்கள் பிரசங்கங்களில் எல்லாம் பாவத்தை கண்டித்து பிரசங்கிக்கமாட்டார்கள். பாவம் செய்தவர்களின் பெயர்களை ஜெபத்தில் தீர்க்கதரிசனமாக இவர்கள் கூறமாட்டார்கள். இவர்கள் பிரசங்கம் முழுவதும் ஆறுதலைப்பற்றியும், செழிப்பின் உபதேசமாகவும் இருக்கும்.

star2.gif வேதம் கூறுகிறது: உங்களுக்கு சமாதானமிருக்கும் என்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்,      தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கிஉங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். எரே 23:17.

star2.gif தமிழ்நாட்டின் பெயர் சொல்லி அழைக்கும் பிரபல ஊழியக்கார சகோதரி.பாப்பா சங்கரின்நிலை கண்டீர்களா? 2008 கடந்த ஜுன் மாதம் அவர்கள் வீட்டில் நடந்த கொலை சம்பவத்தை ஊழியர்கள் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

star2.gif சகோ.D.G.S.தினகரனின் ஊழியத்தின் முடிவையும், அவரின் வாழ்க்கையின் முடிவையும், அவரின் மகள் கார் விபத்தில் மரித்த விவரங்களையும், தண்டனைகளையும் தயவுசெய்து மனதிலே வைத்து தவறான ஊழியத்தை திருத்திக்கொள்ளுங்கள்.

star2.gifகர்த்தர் சொல்லாததை கர்த்தர் சொன்னார் என்று கூறும் சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.தினகரன், சகோ.பால் தினகரன் போன்று ஜெபத்தில் பெயர் அழைக்கும் அத்தனை ஊழியக்காரர்களுக்கும் கர்த்தரே அவர்களுக்கு விரோதியாக மாறுகிறார். எரே 23:31,32. கர்த்தர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இப்போது உங்களுக்காக எச்சரிக்கை செய்கிறார் நமது ஆண்டவர்.


பொய்:

star2.gif கர்த்தர் வெறுக்கும் காரியங்களில் ஒன்று பொய் நாவு. நீதி 6:16,17.

star2.gifபொய் சொல்லாதிருங்கள். கொலே 3:9.

star2.gifபொய்யை விரும்பி அதன்படி செய்கிற யாவரும் (பரிசுத்த நகரத்துக்கு) புறம்பே இருப்பார்கள். வெளி 22:15.

star2.gif இதோ தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் (கர்த்தர்) அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்கிறார். எரே 23:31.

star2.gifஎன் ஜனத்தை ..... பெயர்களினாலும் ... கூறி மோசம் போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார் எரே 23:32.

இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை சொல்லுகிற ஊழியங்களை அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களை விட்டுவிலகுங்கள்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஹோமோ-பேய் வேலை என பேய் ஓட்டும்சர்ச் பாதிரிகளின் காணொளி

By devapriyaji

ஹோமோவாக ஒருவன் பிறப்பில் உள்ள தன்மைகள் நிர்ணயக்கின்றன என்றும் இவை இயற்கையானவை என்றும் இவை சட்டப்படி நியாயமானவை என பல நாடுகளில் அனுமதி பேற்றுவிட்ட நிலையில் இது பேய் வேலை என பேய் ஓட்டும் சர்ச் பாதிரிகளின் காணொளி வீடியோ

http://www.google.co.in/url?q=http://www.youtube.com/watch%3Fv%3D9P5k-regP6o&ei=w-noStWCJ4j4sQOA9MXhCA&sa=X&oi=video_result&resnum=2&ct=thumbnail&ved=0CA0QuAIwAQ&usg=AFQjCNEAOWZq4sM-CPt7KOC3PY70HGQNeg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

csi church funds Frauds

By devapriyaji

Diocese funds misuse: Crucial meet next week

M Rafi Ahmed http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Diocese+funds+misuse:+Crucial+meet+next+week&artid=UvBnTZ85KO0=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

COIMBATORE: Even as the CSI Diocese members here are anxiously waiting for the outcome of the crucial Bishops’ council meet scheduled to be held on Monday at the Chennai Royapettah Synod office, some more skeletons have tumbled out of the cupboard of Bishop M Dorai.

 

The members have already agitated over the alleged large-scale misappropriation of diocese funds by the bishop and his younger brother M Moorthy. Prem Kumar, a diocese member had sent a petition to the state DGP seeking action against Bishop Dorai and that was forwarded to the Coimbatore CB-CID for inquiry. As the sleuths began the probe, the bishop moved the district court seeking bail, but was rejected, then a petition was filed in the Madras High Court and is slated to come up for final hearing on Monday.Meanwhile, CSI Welfare Association secretary M Prakash told Express that since the Synod office did not take any steps he has now provided documentary evidences including the letter written by Moorthy seeking Rs 5 lakh for setting up an endowment at CSI Teacher Training Institute and later Rs 6.50 lakh for renovation of its building and compound wall.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Life threat to former CSI bishop

By devapriyaji

Express News Service
First Published : 13 Jan 2010

COIMBATORE: City police on Tuesday registered a case against former secretary of Coimbatore CSI diocese D S Amirtham on charges of manhandling and threatening former bishop and ex-moderator William Moses of dire consequences.
According to sources, Amirtham entered into the special enclosure at CSI Christ Church, where William Moses was present, used filthy words against the former bishop and threatened to kill him.
Based on Moses’ complaint, the Race Course police registered a case against Amirtham for allegedly using abusive language and attempting to murder the former bishop.
The attack comes in the wake of a case filed against CSI Bishop Manickam Dorai and Amirtham by CBCID police on the charge of misappropriation of diocese funds. The case was taken up following complaints by many people including William Moses.
Bishop Dorai, who had sought an anticipatory bail, which was rejected by Sessions Judge on the grounds that he might tamper with the records at diocese office. Following which, he filed an appeal in the Madras High Court which came up for hearing on Tuesday. However, it was adjourned to January 18.
Meanwhile, Chennai Moderator Most Rt Rev Gladson and Synod treasurer Devasahayam on Tuesday deposed before the CB-CID police.
Gladson told a reporter that action would be taken against Dorai if charges are proved and that they would discuss the issue at their meeting scheduled at Courtallam on Thursday.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Police Shielding Bishop

By devapriyaji
தலைமறைவான பிஷப்புக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு
ஜனவரி 20,2010,00:00  IST

சேலம் : கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் பிஷப் மாணிக்கம் துரை, சேலத்தில் உயர் பதவி வகிக்கும் இரு போலீசாரின் ஆதரவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை சி.எஸ்.ஐ., திருமண்டலம் பிஷப்பாக இருப்பவர் மாணிக்கம் துரை. கோவை, தர்மபுரி, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சி.எஸ்.ஐ., பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்விக் கூடங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட இந்த எட்டு மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள், சொத்துக்களின் பராமரிப்பு, நிர்வாகப்பணிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் கண்காணித்த போதிலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், கோவை திருமண்டலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் பிஷப்பையே சார்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்விக் கூடங்கள் மற்றும் சொத்துக்களில், பிஷப் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. “அவரிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த 10ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிஷப் மாணிக்கம் துரை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணிக்கம் துரை தலைமறைவானார். சேலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு போலீசாரே ராஜமரியாதை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் தான், மாணிக்கம் துரையை சி.பி.சி.ஐ.டி.,யின் வலையில் இருந்து பாதுகாத்து, நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற வக்கீல்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னையிலுள்ள உயர்அதிகாரிகள் வரை புகார் சென்றுள்ளது. மாணிக்கம் துரை ஏற்கனவே கோவை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

http://www.maalaimalar.com/2010/01/13140132/CBE02130110indd.html

மோசடி புகார் நிரூபிக்கப்பட்டால் பிஷப் மாணிக்கம் துரை மீது நடவடிக்கை பேராயர் பேட்டி
Coimbatore புதன்கிழமை, ஜனவரி 13, 2:01 PM IST
கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப்பாக இருக்கும் மாணிக்கம் துரை திருச்சபைக்கு சொந்தமாக ரூ. 3 கோடியை கையாடல் செய்து விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிஷப் மாணிக்கம் துரையை கைது செய்ய வேண்டும் என திருச்சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தினார்கள். பிஷப் தலைமறைவாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பிரச்சினை தொடர்பாக சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட் டம் ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருமண்டல செயலாளர் ரிட்சர்டு துரை தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளரும், கல்விக்குழு தலைவருமான அமிர்தம் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமிர்தம் மற்றும் வக்கீல் சாக்ரடீஸ் ஆகியோர் கூறியதாவது:-
பிஷப் மாணிக்கம் துரை தலைமறைவாக இல்லை. இறைப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அவரை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் தென் இந்திய திருச்சபை முதன்மை பேராயர் கிளன் ஸ்டோன் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு வந்து பிஷப் மாணிக்கம் துரை குறித்து பல்வேறு தகவல் களை கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேராயர் நிலையில் இருப்பவர்கள் திருச்சபையின் நிதியை பாதுகாப்பது முக்கியமாகும். இறை பணி செய்வதையே கடமையாக கொண்டவர்கள் மீது இது போன்ற புகார்கள் எழுவது இறைமக்களை புண்படுத்துவது போல் ஆகும். இந்த மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துபேசி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் முன்னாள் பிஷம் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல கல்விக்குழு தலைவர் அமிர்தம் ரேஸ் கோர்ஸ் போலீசில் முன்னாள் வில்லியம் மோசஸ் தன்னை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார் .



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

HC stays poll results of CSI

By devapriyaji

Express News Service
First Published : 14 Feb 2010 03:18:00 AM IST
Last Updated : 14 Feb 2010 06:41:07 AM IST
CHENNAI: A civil court in the City has stayed the operation of the result of the election held on January 14, 2010 at Courtalam in Tirunelveli district for the post of office-bearers of the Church of South India (CSI), Synod, for the biennium 2010-12.
The XI Assistant Judge, City Civil Court, Chennai, granted the injunction while passing interim orders on an interlocutory application arising out of a civil suit from G Albert Jeyaraj of Choolaimedu, on February 12.
The election was conducted and the office-bearers were elected against the earlier orders of the court, the judge observed and granted the stay.
The judge also restrained S Vasanthakumar from functioning as moderator, G Devakadatcham as deputy moderator, MM Philip as general secretary and Dr. Bennet Abraham as Treasurer of the Church of South India (CSI).
While passing interim orders on another application arising out of the same civil suit, the judge has stayed all the proceedings including the resolutions and decisions taken by the newly elected office bearers between January 17 and February 9, 2010.
Plaintiff had made out a prima facie case and the balance of convenience was also in his favour, the judge said, granted the interim injunctions and posted the matter for further hearing on February 25.
Alleging various irregularities in the conduct of the election on January 14, the plaintiff, also one of the Lay Representatives of the Synod elected from the CSI Diocese of Madras, sought the relief.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Justice Krishna Iyer lashes out at Pastoral letter

By devapriyaji

Krishna Iyer lashes out at Pastoral letter

17 March 2009
NewKerala.com

http://www.newkerala.com/nkfullnews-1-5108.html

Kochi, Mar 17 : Canonical papal control over Church properties in Kerala will be a new imperialism repugnant to the secular character and sovereign authority of ‘ We the People of India’, opined Justice (Rtd.) V R Krishna Iyer here today.

Apparently with the approval of the ‘Christian High Command’ a pastoral letter is in circulation in chapels and other biblical institutions criticizing a few Bills of the Law Reforms Commission, Kerala which advocate hundred percent secular reforms in the Christian, Islamic and Hindu theological rituals, said the noted jurist, who is the Chairman of the Commission, in a statement.

Urging the Bishops to withdraw the pastoral letter, Justice Iyer said the vast properties of the Church in the State were the product of parishioner’s contributions and naturally the management of the estate must have democratic dimensions giving a voice to the Christian parishioners.

This was the basis of one Bill objected to by the Bishops who now enjoy the power over the properties and ultimately it is claimed that the Pope controls the Bishops on the basis of Canonical Law.

In India, law making is not left to Vatican but to the constitutional agencies under the authority of our sovereign suprema lex.

” Further, it was also relevant to note that the Christian Trust dimension recommended by the Commission was at the instance of many representations made by sincere Christians. That is why leading thinkers like Justice K.T. Thomas, former judge of the Supreme Court, and Dr M V Pylee, former Vice Chancellor of Cochin University, great Christians and believers, have fully supported the Commission’s recommendations,” Justice Iyer noted.

The second objection raised was to a bill recommending state grants for any Indian family below the poverty line and conforms to the family norm of not having more than two children.

No limitation whatever is put on the number of children nor is there any restraint on the rights of every child whatever be the number, which belongs to every Indian child Christian or non Christian.

The disqualification prescribed for violation of the family norm of not having more than two children prescribed by the Bill, was only for claiming grants and benefits allowed specially by the Bill for families conforming to the mentioned family norm, he pointed out.

The third Bill recommended is wholly out of humanitarian and compassionate considerations rooted on the basis of the humanist compassionate provisions of the Constitution (Article 51 A) that Euthanasia be given support by the State and not confined to any particular religion or community.

” You may agree or disagree but Euthanasia has nothing to do with Christian number of children is beyond the Commission’s comprehension. Family planning and Euthanasia are matters of national concern, not chapel or Church indoctrination. The Commission has taken a benignant view and it is improper and unfair to accuse it as propaganda of the Marxist Government interfering with Christian religion,” Justice Iyer pionted out.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

About Transfer Of Teachers – Writ Petition No. 8491/2009


 

Tuticorin Roman Catholic Management is making many mistakes continuously. They want to crush the teachers in the name of transfers and other illegal actions. The Honourable Full Bench’s decision was rendered on 30.04.1998 and the same has been reported in 1998 (4) LLN Page 804. The decision clearly says that the transfer is not legal and it is not an incident. Unmindful of the orders the management was transferring teachers. Since there were opposition to the transfers, the management applied to the Government to get “transfer power” on 28.02.2008. Previously they filed a review petition against the above full bench order (Review Petition No.139/07) and the Full Bench declined the review on 12.11.2007. They cleverly hid every fact and approached the government and got an order dated 19.01.2009 from the Secretary to the effect that they can continue enjoying “transfer power” as per the memorandum No. 45181.E2/60-2, Education dated 11.06.1960. It is against the full bench orders. It amounts to contempt of court. The management wants this order to threaten the teachers and to keep all the teachers under their mercy. AVE MARIA filed a Writ Petition to quash the order issued by the government in favour of the management (WP 8491/2009). This case came up for hearing on 30.04.2009 and notice is served to the respondents. We appeal to the teachers that they need not obey the orders of the management, if they are transferred. Also they are not entitled to write in the SRs that the teachers are transferrable within the diocese. The management has told a number of lies before the government. Kumar Raja the Superintendent is telling lies and lies continuously on behalf of the Manager who is a figure-head and mouth piece of Kumar Raja. There should be revolution to correct them.  It is a pity that the Manager of these schools does not know the criminal dealings of Kumar Raja. People are requested to pray for justice. God alone can save the teachers and students from the cruel hands of the Manager Bp Yvon Ambroise….


 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Priests’ Questions To Bishop Yvon Ambroise

The priests of Tuticorin diocese in India has raised some questions towards Bishop Yvon Ambroise. Though the papers have not been signed by the priests, the questions are published. Since the Bishop Yvon Ambroise is inhuman in all his activities, the preists are afraid. From the questions and the matters available in the papers we could understand that the priests do not like him. Also it is evident that this Bishop is autocratic and authoritative over the faithful and the priests. The priests want transparency but the bishop is far away from this quality of administration. The priests want justice which is not known to this Bishop. This Bishop seems to be a terror to the priests. He has a small group of people who are singing his songs. Others are discarded openly. From this papers we understand that this Bishop is very poor in administration especially in financial administration. Since he is supported by the present Nuncio, he is jumping between heaven and hell.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Online Petition Against Cruel Bishop Yvon Ambroise


 

Since there is no action against the Cruel Bishop Yvon Ambroise, we have prepared an ONLINE PETITION to be sent to Vatican. Please sign the petition. We will not publish your name. Please click the following link for reading the petition.

http://www.PetitionOnline.com/avemaria/petition.html

We believe that more friends will come forward to sign the petition to chase this cruel man from the diocese


 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Unity Of Humanists To Chase Bishop Yvon Ambroise


 

It is about a discussion that took place in HUMANIST CENTRE at Satankulam. It is friendly but serious meeting of AVE MARIA with office bearers of some associations of Fishermen community. The main issues for discussion is that The Bishop Yvon Ambroise is becoming an alien to the fishermen community. Just like a politician he plays with the poor people misusing thier piety and faithfulness. Miss Carole STORA of France is garlended by Fishermen AssociationsThe fishermen are naturally pious and they built many churches and schools for them. They contributed money and labour for Meeting of Humanists in Humanist Centre in Satankulamestablishing schools. This Bishop does not respect their work and unity. Hemisused a lot of money which was obtained from various international support organizations for these people. It is nothing but cheating. He used the money for the luxuries of his pet priests and nothing was spent for the fishermen. On11.09.2007 for the first time the fishermen unitedly went to the diocese to ask questions regarding the bad school administration and misused tsunami fund. The bishop was totally afraid and with great difficulty he managed to come out of the room with promise that he would pay attention to the issues raised by the fishermen community. He also promised to publish the transparent accounts for the tsunami funds. But till date he has not given any account. At the moment AVE MARIA wants to organize the fishermen communities into a strong group to make revolution againt these atrocities. As the first step this meeting was convened to see the possibilities of the united organizations to fight against the illegalities. The aim of this unity is to chase this bishop out of this traditional diocese to avoid further damages. Miss Carole STORA of France, member of Amnesty Interantionalis making a thourough document of the atrocities and illegalities of the Bishop Yvon Ambrosie to present it to the High Commision of Amnesty Internationl to take action against this bad Bishop. AVE MARIA invites all individual christians and other organizations to give authentic documents to make this initiative effective.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bp Yvon Ambroise Busy With Persecutions!!!


 

Fr.Dr. Charles with the Holy Father Pope John Paul IIThis is Father Dr. Charles. He is with the Holy Father Pope John Paul II. He is at present Parish Priest of Udangudi in Tuticorin diocese. He has been holding this post for more than 2years. This priest is a learned man with 2 doctorates one in Scripture from the University of Ottawa, Canada and the other from

St. Paul University, Canada. He has written important books which are in the universities abroad, in Europe and in

 

America. He goes also visiting to teach in the Universities in Europe and in

 

North America as visiting Professor in Scripture, Philosophy and Administration. He was Coordinator of commissions in Bishop’s House, Tuticorin until Bishop Yvon Ambroise came. Since this priestMiss Sayuri, member of Amnesty International with Fr.Dr. Charles and AVE MARIA Office BearersFather Dr. Charles has been very straight forward and did not yield to the unjust dealings of Bp Yvon Ambroise, the latter decided to send him to a remote troublesome parish Udangudi. He went with utmost obedience and has been working there. But Bp Yvon Ambroise did not stop troubling. He started persecuting this priest in many ways. The Priest is always happy to work with the poor people. Since the Bishop is a sadist, he could not tolerate the priest’s happiness and joy in serving the poor. He found another strategy to humiliate and insult him. The latest of these has been to insult this priest by appointing a corrupt lay man namely Mr. Xavier Leonidoss Peeris from 1st November 2007. If the Bishop had appointed a good man, he would have taken this action happily. But he chose a corrupt person to replace him from the correspondentship. This is in contrary to the diocesan principles where parish priest should also be correspondent of the schools in his parish. This latest incident has been one of the persecuting acts of Bishop Yvon Ambroise against this priest. He has asked Father Dr. Charles not to teach and be only in the parish. He has sent various agents to Udangudi in order to cause troubles against Father Dr. Charles. In all these the Bishop has failed. One of the worst incidents has been that the Bishop told high Police Officials to arrest Father Dr . Charles on a false allegation. The police officials expressed their helplessness to do that. Father Dr. Charles questioned Bishop Yvon Ambroise about this on 10th July 2007 in front of about 150 priests who had gathered with the Bishop in Tuticorin. The Bishop was shocked and was not able to answer or refute this charge. What a shame!!!This is one of the many persecutions this Bishop is doing against this priest. Will this Bishop become a Catholic? WE hope someone will convert him!!!

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ., பிஷப் மீது புகார் ; ஐகோர்ட் கிளை உத்தரவு
ஏப்ரல் 24,2009,00:00  IST

Court news detail

மதுரை ; மதுரை சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர், ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: பசுமலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் சி.எஸ்.ஐ., சர்ச் தேர்தலை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வருகைப்பதிவேட்டை திருத்தியதாக எங்கள் மீது ராமநாதபுரம் பஜார் போலீசாரிடம் புகார் கூறினார். விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இம்மனு நீதிபதி வி. பெரிய கருப்பையா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அஜ்மல்கான், காந்தி ஆஜராயினர். மனுதாரரின் வழக்கு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையை பின்பற்ற வேண்டும் எனக்கூறி இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_04_2010_005_003.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ. பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்  searchGlass_small.png
அமெரிக்காவில் இருந்து மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ததில், குறைவாக மதிப்பீட்டு வரி செலுத்தி முறைகேடு செய்ததற்காக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பிஷப் தேவசகாயத்துக்கு சுங்கத் துறை ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பேராயராக இருப்பவர் வி.தேவசகாயம். சென்னை பேராயத்துக்குச் சொந்தமான சென்னை கல்யாணிமரு‌த்துவமனை, ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌‌த்துவமனை உட்பட பலமரு‌த்துவமனைகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

ஏழை மக்களின் நலனுக்காக மரு‌த்துவமனைகளுக்கு அய‌ல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் 'வொர்ல்ட் மெடிக்கல் ரிலீப்' என்ற அமெரிக்கா நிறுவனம், நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனைக்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக அனுப்பியது. இவற்றில் எக்ஸ்ரே, டயலசிஸ், இ.சி.ஜி. இயந்திரங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் அடக்கம்.

இந்த நிலையில், மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்து இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கபுகார் கொடுக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை டி.ஆர்.ஐ. மேற்கொண்டது. பின்னர் இந்த விவகாரத்தை 2003ஆம் ஆண்டு சென்னை சுங்கத் துறை ஆணைய‌ரிடம் விசாரணைக்காக டி.ஆர்.ஐ. அனுப்பி வைத்தது. புகாரை பெற்றுக் கொண்ட அப்போதைய சுங்கத் துறை ஆணைய‌ர், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை மிகுந்த குறைவாக மதிப்பிட்டு காட்டியதும், உண்மையான மதிப்பை மறைத்தும், வரியை குறைத்தும் கட்டியது தெரியவந்தது. எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிடப்பட்டது.

அதன்படி நகரி சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனை நிர்வாகம், பிஷப் தேவசகாயம், சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி மரு‌த்துவமனை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் டாக்டர் ராஜகுமாரி சுந்தர், ஏஷியன் ஷிப்பிங் ஏஜென்சீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சென்னை தனியார் மருந்து கம்பெனியைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கதா‌க்‌கீது அனுப்பப்பட்டது.

இந்த தா‌க்‌கீது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போதிருந்த சென்னை சுங்கத்துறை ஆணைய‌ர்ராஜன் அவர்களை விசாரித்தார். அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து, கடந்த 31.3.10 அன்று சி.ராஜன் உத்தரவு பிறப்பித்தார்.

அதில், அமெரிக்காவில் இருந்து ரூ.2.22 கோடி மதிப்புள்ள மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 142 வரியாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் அவற்றை குறைத்து மதிப்பிட்டு குறைவாக வரி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக அளவு மதிப்புள்ள இதுபோன்ற பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், வரிச் சலுகைக்காக அரசை ஏற்றுமதியாளர்கள் அணுகலாம்.

சுங்கத்துறை சட்டத்தின்படி முறைகேடாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டன. நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனை நிர்வாகம், ரூ.1.34 கோடி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும். டாக்டர் ராஜகுமாரி சுந்தர், பிஷப் தேவசகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஏ.பி.பிரேம்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், தாமோதரனுக்கு ரூ.25 ஆயிரமும், சூப்பிரன்டென்டன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மோசமான வழியை தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஏசுவின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக நடந்துள்ளனர். வரி செலுத்துங்கள் என்றுதான் ஏசு கூறி இருக்கிறார் எ‌ன்று அதில் கூறப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Indian bishop accused of stealing £335,000: The Church of England Newspaper, March 19, 2010 p 7. March 31, 2010

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
trackback

Manickam%20Dorai.JPGFirst published in The Church of England Newspaper.

A diocesan official has been arrested and a bishop is under investigation by police in India in for allegedly embezzling £335,000 from the coffers of the Diocese of Coimbatore.

On March 8 detectives arrested the former secretary of the Diocese of Coimbatore, D.S. Amirtham, charging him with diverting pensions funds. While serving as director of five diocesan schools, Amirthan is alleged to have siphoned off five per cent of the funds contributed by teachers and the schools into their retirement funds between 2000 and 2008.

In January Amirtham came under police scrutiny after an altercation with the former Moderator of the Church of South India and retired Bishop of Coimbatore, the Rt. Rev. William Moses. Amirtham is alleged to have threatened to kill the retired bishop.

The altercation came after Bishop Moses supported a complaint lodged by members of the diocese with the police against Bishop Manickam Dorai of Coimbatore (pictured) and the bishop’s brother, charging the bishop with colluding in the looting the diocese of 30 million rupees.

Last year charges accusing the bishop’s brother of embezzling funds from a diocesan school were brought to Bishop Dorai by the diocesan Christian Welfare Association. The bishop did not act on the complaints, and told a local newspaper the charges were false and that “there is no truth in it.”

Those complaining of theft wanted “to tarnish the image of the diocese and defame the spiritual head of over 4 lakh (400,000) Christians spread” across the Tamil Nadu state, Bishop Dorai told The Express in an interview published on June 17, 2009.

On Jan 12 police questioned the Moderator of the Church of South India (CSI), Bishop William Gladstone and the church’s treasurer in connection with the allegations. Bishop Gladstone said the CSI synod’s executive committee would await the results of the investigation before it took action.

The Coimbatore affair is the second high profile fraud cause in the last year for the CSI. On Oct 13, 2009, Detectives from the Central Crime Branch of the Madras police arrested the former General Secretary of the CSI along with three members of her family. Dr. Pauline Sathiamurthy was accused of stealing almost £1 million of the tsunami relief funds donated to the CSI by the Episcopal Church.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Indian bishop suspended over corruption allegations: The Church of England Newspaper, April 8, 2010

Published by at 4:21 am under ArticlesEntriesHeadlinesNewsPosts

cen-logo6.gif?w=402&h=76

Bishop%20Dorai.JPG

Bishop Manickam Dorai

First published in The Church of England Newspaper.

The Executive Committee of the Church of South India (CSI) has sent the Bishop of Coimbatore on a two month leave of absence, pending an investigation by church auditors of the diocese’s accounts.

On April 7, The Hindu reported that Bishop Manickam Dorai would surrender his episcopal authority to the Rt. Rev. Paul Vasantha Kumar, Bishop of Tiruchi and Thanjavur while the investigation is underway. Last month Bishop Dorai, two of his brothers and the former diocesan secretary along with 27 others were accused of stealing over £335,000 from diocesan coffers.

On March 8 detectives arrested the former secretary of the Diocese of Coimbatore, D.S. Amirtham, charging him with diverting pensions funds. In January Mr. Amirtham came under police scrutiny after threatening to kill the Rt. Rev. William Moses, the former Moderator of the CSI and Bishop of Coimbatore after the bishop supported a complaint filed by members of the diocese charging the bishop and his cronies with looting the diocese of 30 million rupees.

Mr. Amirtham has been granted bail and has been released on parole, while Bishop Dorai last year denied all charges. The bishop has been helping the Coimbatore Criminal Branch-CID with their investigations.

Bishop Vasantha Kumar has called special meetings of the diocese’s finance committee and executive committee this month to take stock of its fiscal and legal situation. He toldThe Express newspaper his oversight of Coimbatore was a “stopgap” measure and asked that members of the church withhold judgment until the investigative process had run its course.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Former CSI diocesan official arrested for fraud

smaller fontlarger fontprint this articleemail this article to a friend
Former CSI diocesan official arrested for fraud thumbnail

Police have arrested a former official of Coimbatore CSI diocese and is interrogating its bishop for allegedly diverting £335,000 (some 2.30 crore) of Church money, including contibutions and retirement funds.

Former secretary of the Diocese of Coimbatore D S Amirtham was arrested on March 8 for siphoning off five per cent of the funds while serving as director of five diocesan schools.
The case came to light when Amirtham had an altercation with retired Bishop William Moses of Coimbatore. Amirtham also allegedly threatened to kill him, The Church of England Newspaper reported.

The case was brought before Bishop Dorai by the diocesan Christian Welfare Association. He termed the allegations as “false”.

“Those complaining of theft wanted to tarnish the image of the diocese and defame the spiritual head of over 4 lakh (400,000) Christians spread across the Tamil Nadu state,” Bishop Dorai told The Express in an interview.

Meanwhile, on January 12, police questioned the Moderator of the Church of South India (CSI) Vusgio William Gladstone and the Church’s treasurer in connection with the case.

Bishop Gladstone said the CSI synod’s executive committee would await the results of the investigation before it took action.

Source: Indian bishops accused of stealing 3,35,000-the Church of England (The Express)




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Arrest warrant against CSI Bishop

 

 

Staff Reporter

 

 

 

 

 

 

 

TIRUNELVELI: The Nanguneri court has issued an arrest warrant against the Bishop of Tirunelveli CSI Diocese Rev. S. Jayapaul David and five others for allegedly making corrections in a court order.

When John filed a petition in the Nanguneri court with the prayer that no election should be conducted for some posts, including that of lay secretary of Tirunelveli CSI Diocese, the judge gave an order.

The corrections were allegedly made in the order that prevented the then lay secretary A.D.J.C. Dhinakar and his supporters from casting their votes.

Robert Jayakumar filed a petition before the court urging that a criminal case be filed against them.

 

 

 

 

 

 

 

Printer friendly page



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Priest beaten in church row, parish tense

smaller fontlarger fontprint this articleemail this article to a friend
Priest beaten in church row, parish tense thumbnail

A parish in Kerala is tense after a Catholic layman beat a priest, putting him in hospital, in a row over maintenance of the church.

Parishioners blocked a national highway on May 6 demanding action against the priest’s attacker. Police have deployed armed guards in Ezhupunna, a village in Alleppey district.

Father Basil Punchaputhssery, parish priest of Ezhupunna’s St. Raphael Church, was admitted to hospital in Kochi, the state’s commercial capital.

The parish belongs to Ernakulam-Angamaly archdiocese .

A police official told UCA News on May 7 that they have registered a case against two parishioners for attacking the priest.

According to the police, Lalan Tharakan and his son Thomas wanted the priest to cut a tree growing atop the church building. The son beat the priest after a heated argument.

The church, built by the Tharakan family in 1859, was closed 20 months ago after it was found to be in a dilapidated condition. Now, Mass is conducted in a nearby makeshift tent.

The Tharakan family had earlier filed a petition in court against constructing a new church. The court is yet to decide on the matter.

Father Paul Thelakat, the archdiocesan spokesperson, described the incident as “unfortunate and of criminal nature.” He told UCA News May 7 that most parishioners want to rebuild the church.

The parish priest says the father-son duo attacked him unprovoked when he explained to them that the tree could not be cut since the Archeological Survey of India which is looking after the church had banned its renovation.

Thomas told UCA News he only intervened when the priest tried to push his father out of the room. “The parish priest abused my father and me,” he added.

He also pointed out the priest and his assistant are living in the “unsafe” building.

Source: Parish tense after priest beaten in church row (UCAN)




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Church leaders deny forcing minister out

smaller fontlarger fontprint this articleemail this article to a friend
Church leaders deny forcing minister out thumbnail
Father Paul Thelakat

Church leaders in Kerala have denied that they had forced a Catholic minister to quit the state’s Marxist-led coalition government.

Two factions of the Kerala Congress, a regional party with a strong Christian-base and led by two Catholic politicians, in early May decided to merge.

The faction led by P.J. Joseph was with the Marxist-led Left Democratic Front (LDF) for the past 25 years whereas the other faction led by K.M. Mani belonged to the United Democratic Front.

Some Joseph loyalists, who opposed the merger, and a Marxist leader alleged some Catholic bishops in the state had played an active role in bringing the two factions together.

Pinarayi Vijayan, general secretary of the Marxist party’s state unit, asked the Church leaders to stop engineering political mergers and restrict their activities to religious affairs.

“Many Church leaders stooped down to become power brokers. It’s not fair on their part,” Vijayan told UCA News on May 6. The Marxist leader said he would oppose religious leaders “meddling in politics for their selfish goals.”

However, Father Paul Thelakat, spokesperson of the Syro-Malabar Church, told UCA News the Church had no role in the merger. “It may be true some bishops might have advised the leaders for unity as the Church used to do earlier also,” he said.

According to him, Church leaders in Kerala do not consider the Kerala Congress as a Christian party.

Joseph said he quit the LDF because of its anti-minority educational policies. The Church leaders in the state had opposed the government attempts to interfere with their educational institutions and introduce atheism through school textbooks.

Source: Church leaders deny forcing minister out (UCAN)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Blasphemous blogpost leads to school attack

smaller fontlarger fontprint this articleemail this article to a friend
Blasphemous blogpost leads to school attack thumbnail
Sister Ignatio Nudek speaking about the attack

An anonymous blogger’s blasphemous website posting has led to an attack by Muslims on the Catholic-run School of St. Bellarminus located in Bekasi district, West Java.

The angry mob wearing black and claiming to be members of the Islamic Defenders Front (FPI) broke down the gate on the evening of May 6 and smashed the school’s windows, Marsel Jawa, the school’s security guard, said.

The unknown blogger published offensive statements about Islam in late April on a website purporting to belong to the school.

“Our school has become the victim of a false accusation written on a blog by an unknown person,” Sister Ignatio Nudek, who heads the Educational Foundation of St. Bellarminus, told UCA News on May 7.

The offending article was accompanied by a photograph of the Qur’an in a toilet. The website was later blocked by authorities.

“This school does not have such blog. We never disgraced other religions. In fact we have Muslim students too,” the Follower of Jesus nun maintained.

The school reported the attacks to the police.

“Even though the blog has been blocked we want the police to soon investigate the case,” Sister Nudek said.

Three staffs of the school met with representatives of 40 Islamic organizations on April 26, after discovering the blog posting.

“During the meeting, they all understood that we are the victim of the false accusation,” the nun said.

Sister Nudek said the school had also sent official letters containing a clarification of the false accusation to Islamic organizations including FPI and the Forum of Muslims (FUI) as well as local religious leaders.

The school has also reported the attacks to the archdiocese of Jakarta and its commission for ecumenical and interreligious affairs.

“We want this case to be solved as soon as possible. We do not want to make other religious followers, especially Muslims, feel uneasy,” she said.

About 30 policemen remain on guard.

St. Bellarminus school was established in 1992 and has 883 students from kindergarten to senior high school - 514 Protestants, 324 Catholics, 23 Buddhists and 22 Muslims. Most staff are Muslims.

Source: Blasphemous blogpost leads to school attack (UCAN)



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard