New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி: கிடைத்தது என்ன? ஒரு அரசியல் கடந்த அறிவியல் பார்வை


Guru

Status: Offline
Posts: 25271
Date:
கீழடி: கிடைத்தது என்ன? ஒரு அரசியல் கடந்த அறிவியல் பார்வை
Permalink  
 


கீழடி: கிடைத்தது என்ன?

ஒரு அரசியல் கடந்த அறிவியல் பார்வை

ராகவேந்திரன் SS 

பொருளடக்கம்

1 தொல்லியல் தொடக்கங்கள்

2 அடுக்குகள், அகழிகள், காலம்

3 காலத்தின் அறிவியல்

4 அறிவியலின் அச்சாணி

5 அரசியல் நம்பிக்கைகள்

6 கிடைத்தது என்ன?

7 வரலாற்று அபாயம்

8 எழுத்தறிவுக் கட்டுக்கதை

9 தோண்டிய இருவர்

10 பத்திரிகையாளர் சந்திப்புகள்

11 இடமாற்றச் சர்ச்சை

12 தொடர்வதில் தொல்லைகள்

13 அறிவை மிஞ்சிய அரிதாரம்

14 கிளிக் பெயிட் சிக்கல்கள்

15 அருங்காட்சியா  பொருட்காட்சியா?

16 கருத்தியல் கட்டாயங்கள்

17 பிற அகழ்வாராய்ச்சித் தளங்கள்

18 பொற்காலப் புனைவுகள்

19 மதச்சார்பின்மை புனைகதை

20 தவறவிட்ட தருணங்கள்

21 வகுப்பறை வருத்தங்கள்

22 ஆவணமே ஆக்ஸிஜன்



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
RE: கீழடி: கிடைத்தது என்ன? ஒரு அரசியல் கடந்த அறிவியல் பார்வை
Permalink  
 


1 தொல்லியல் தொடக்கங்கள்

பொதுவாக, தொல்லியல் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், கண்டுபிடிப்புகள் பற்றிய எண்ணம்தான் வரும்: புதைக்கப்பட்ட ஒரு பானை, தொலைந்துபோன ஒரு நாணயம், அல்லது மண்ணிலிருந்து வெளிப்படும் ஒரு கற்கருவி. இந்தக் கண்டுபிடிப்புகளே முழு கதையைச் சொல்லிவிடும் என்று நம்புவது எளிது.

ஆனால், தொல்லியல் என்பது பொருட்களைப் பற்றிய ஆய்வு அல்ல.

அது, பொருட்கள் கிடைத்த இடம் (Context) மற்றும் காலம் (Time) ஆகியவற்றுடன் அந்தப் பொருட்கள் கொண்டுள்ள உறவைப் பற்றிய ஆய்வு.

·     ஒரு பானை தனியாக இருந்தால் அது வெறும் களிமண்தான்.

·     அது பூமியில் எந்த இடத்தில் இருந்தது, அதைச் சுற்றி என்ன மண் இருந்தது, மற்றும் வேறு எந்தெந்தப் பொருட்கள் அதனுடன் இருந்தன என்று நமக்குத் தெரிந்தால் மட்டுமே, அது வரலாறாக மாறுகிறது.

பின்னணியில்லாத (Contextless) ஒரு தொல்பொருள் என்பது, ஒரு புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட ஒரு வாக்கியத்தைப் போன்றது. பார்ப்பதற்கு அர்த்தமுள்ளதுபோல் இருக்கும், ஆனால் அதன் உண்மையான பொருளை நம்மால் உணர முடியாது.

ஆதாரம் எப்போது ஆதாரம் ஆகிறது?

தொல்லியலாளர்களுக்கு, அகழ்வாராய்ச்சிக்குத் தோண்டப்பட்ட குழி (Excavation Trench) என்பது வரலாற்றின் ஒரு பக்கம். பூமி தனக்கான வரலாற்றுப் புத்தகத்தின் அத்தியாயங்களைத் அடுக்கு அடுக்காக உருவாக்கிக் கொள்கிறது.

·     ஒரு அடுக்கு எவ்வளவு ஆழத்தில் இருக்கிறதோ, அது அவ்வளவு பழமையான வரலாற்றுப் பக்கம்.

·     இந்தச் செங்குத்தான அடுக்குகளின் வரிசை முறைக்கு அடுக்கியல் (Stratigraphy) என்று பெயர். மனிதக் கைகள் தொடாத மாற்றப்படாத காலவரிசையின் ஆதாரம் இந்த அடுக்குகள்.

ஒரு பொருள் இந்த அடுக்குக் காலவரிசையிலிருந்து சரியாகப் பதிவு செய்யப்படாமல் அகற்றப்பட்டால், அது அதன் பிறப்புச் சான்றிதழை இழக்கிறது. அந்தச் சான்றிதழை நாம் இழக்கும்போது:

·     அது எங்கிருந்தோ வந்த ஒரு வியாபாரிக்குச் சொந்தமானதா,

·     அருகில் உள்ள ஒரு கோவிலின் பூசாரிக்குச் சொந்தமானதா,

·     அல்லது தவறுதலாக அதைக் கீழே போட்ட ஒரு பயணிக்குச் சொந்தமானதா —என்பதை நம்மால் அறிய முடியாது.

அதன் மண்-கதை (Soil-story) இல்லாமல், மிகவும் அழகான தொல்பொருள் கூட பொருளற்றதாக மாறிவிடுகிறது.

தொல்லியலாளரின் கடமை

பொறுப்புள்ள ஒரு தொல்லியலாளரின் பணி மிகவும் பணிவானது. முன்னாள் தொல்லியலாளர் பி.எஸ். ஸ்ரீராமன் கூறியது போல்:

"ஒரு தொல்லியலாளரின் வேலை பாதுகாப்பாகத் தோண்டுவது, பொருட்களை மீட்பது, அவற்றை துல்லியமாகக் குறியிட்டு அறிக்கை அளிப்பது மட்டும்தான். மீதமுள்ளவற்றை மற்ற நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விளக்கம் அளிப்பது (Interpretation) என்பது வெறும் அடிக்குறிப்புதான், அதுவும் முதலில் "இவாறு இருக்கலாம்" என்ற சந்தேகத்துடன் தான் சொல்ல வேண்டும்."

இந்த பணிவு பலவீனம் அல்ல. இது அறிவியலை வெறும் கதைகளிலிருந்து பிரிக்கும் கட்டுப்பாடு. கண்டுபிடிப்புகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்ட பிறகு:

·     செராமிக் ஆய்வாளர்கள் (Ceramic analysts) களிமண்ணை அடையாளம் காண்பார்கள்.

·     கல்வெட்டியல் அறிஞர்கள் (Epigraphers) எழுத்துக்களைப் படிப்பார்கள்.

·     கதிரியக்கக் கரிம ஆய்வகங்கள் (Radiocarbon labs) வயதைக் கணக்கிடும்.

·     வரலாற்று ஆய்வாளர்கள் கலாசாரத் தன்மையை ஆராய்வார்கள்.

தொல்லியல் கண்டுபிடிப்புகள் என்பது தனி ஒருவரின் சாதனை அல்ல. அது ஒரு தொடர் ஓட்டம்; அதில் ஒவ்வொரு நிலையிலும், அடுத்த ஓட்டக்காரரைச் சேதமடையாமல் சென்றடைய வேண்டும்.

பின்னணி தொலைந்தால், உண்மை தொலைந்துவிடும்

·     கிடைத்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம், வியப்பை உருவாக்கும், அறிவை அல்ல.

·     அறிவியல் ஆய்வின்றி பெரிய முடிவுகளை அறிவிக்கும் ஒரு அரசியல் தலைவர், பெருமையை உருவாக்குவார், துல்லியத்தை அல்ல.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், பின்னணி (Context) கைவிடப்படுகிறது. பின்னணி இல்லாத தொல்லியல், தொல்லியல் அல்ல; வெறும் நாடகம்.

·     ஆவணங்கள் அலட்சியமாக கையாளப்பட்டால், கதைகள் கட்டப்படுவதற்கு ஒரு மேடையாகிறது.

·     அடுக்கு இல்லாத ஒரு பானை, மக்கள் விரும்பும் எந்தக் கதையையும் வடிவமைக்கக்கூடிய ஒரு கருவியாக மாறுகிறது.

உண்மை ஒருமுறை அழிக்கப்பட்டாலோ அல்லது மறைக்கப்பட்டாலோ, அதை மீண்டும் தோண்டி எடுக்க முடியாது. மண் இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதில்லை.

ஒரு எச்சரிக்கை உதாரணம்

ஒரு எளிய யதார்த்தத்தைக் கவனியுங்கள். எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களில், கோவில் சிலைகளுக்குப் பதிலாக, கடவுளரின் காகிதப் படங்கள், காலெண்டர்களை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இப்படங்கள் எளிதில் அழியக்கூடியவை; அவை இரண்டு நூற்றாண்டுகள் மண்ணுக்குள் உயிரோடு இருக்காது. ஒரு கற்கோயில் நிலைத்திருக்கலாம், ஆனால் இந்த வீட்டுக் கோயில்கள் மறைந்துவிடும்.

வருங்காலத் தொல்லியலாளர்கள் நம்முடைய சுற்றுப்புறங்களைத் தோண்டிப் பார்க்கும்போது, வடிகால்கள், பானைகள், மற்றும் சுவர்கள் மட்டுமே கிடைக்கும். சிலைகள் எதையும் காணவில்லை என்றால், நாம் ஒரு மதச்சார்பற்ற சமூகம் என்று அவர்கள் முடிவுக்கு வரலாம். இந்த முடிவு தவறு என்று நமக்குத் தெரியும்.

இது தொல்லியலுக்கு இரண்டு கோட்பாடுகளை கற்றுக்கொடுக்கிறது:

1.  ஆதாரத்தின் இல்லாமை என்பது இல்லாமைக்கு ஆதாரம் ஆகாது. (Absence of evidence is not evidence of absence)

2.  மண் எது மிஞ்சுகிறதோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறது; மக்கள் உண்மையில் எப்படி வாழ்ந்தார்கள் எதை நம்பினார்கள் என்ற முழு உண்மையை அல்ல.

மண் பேசும் அறம்

தொல்லியல் கண்டுபிடிப்புகள் வரலாற்றையே உலுக்கும் சக்தி கொண்டவை. இது நாகரிகங்களின் ஆரம்பக் கோடுகளை மாற்றலாம், பண்டைய அறிவின் வரைபடங்களை விரிவாக்கலாம், அல்லது, மறக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தலாம்.

ஆனால், இந்தச் சக்தி தொல்லியலாளரிடம் பொறுமை இருக்கும்போது மட்டுமே கிடைக்கும்.

·     அவசரமாகச் சொல்லப்பட்ட ஒரு முடிவு ஒரு வரலாற்றுப் பிழையாக மாறலாம்.

·     மண் பேசுவதை முடிப்பதற்கு முன்பே உலகிற்கு சத்தம் போட்டு அறிவிக்கப்பட்ட ஒரு முடிவு கைதட்டலைப் பெறலாம், ஆனால் அது வரலாற்றைச் சேதப்படுத்தும்.

ஒரு தொல்பொருள் மண்ணிலிருந்து வெளிவரும்போது, அதைச் சுற்றியுள்ள மௌனம்தான் அதன் பாதுகாப்பு. விளக்கம் அளிப்பது மெதுவாகபல நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகுமே நிகழ வேண்டும். கடந்த காலத்தின் மாபெரும் காலவரிசையில் அந்த தொல்லியல் பொருட்களின் இடத்தை உறுதிப்படுத்திய பின்னரே இறுதி முடிவுகள் வெளிவர வேண்டும்.

இந்த நூலின் நோக்கம்

கீழடி பற்றிய ஆர்வம் மிக அதிகமாக இருப்பதால், மற்ற தளங்களை விடவும் இந்தக் கட்டுப்பாடுகள் கீழடி ஆய்வுக்கு மிகவும் தேவைப்படுகிறது. பெருமை, அரசியல் மற்றும் உணர்ச்சி ஆகியவை அந்தக் கட்டடத்தைச் சுற்றிப் பறவைகளைப் போல வட்டமிடுகின்றன; என்ன கதையைச் சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்கக் காத்திருக்கின்றன.

ஆனால், இந்த நூல், மண் மட்டுமே காலவரிசையைத் தீர்மானிக்கிறது என்ற கொள்கையிலிருந்து தொடங்குகிறது. தொல்லியல் அந்தக் குரலை மதிக்க வேண்டும். மேலும், ஒரு பானை பொய் சொல்ல ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

2 அடுக்குகள், அகழிகள், காலம்

ஒவ்வொரு நாகரிகமும் சில ரகசியங்களை விட்டுச் செல்கிறது. காகிதத்தில் அல்ல, மண்ணில். வெள்ளம், காற்று, அன்றாட வாழ்வின் ஓட்டம் போன்ற இயற்கையின் சக்திகள் மெதுவாக மனித செயல்பாடுகளைப் புதைத்துவிடுகின்றன.

முன்பு துடிப்பான ஒரு தெரு, இறுக்கப்பட்ட மண்ணின் ஒரு மங்கலான கோடாகிறது. ஒரு வீடு இடிந்து மண் மேடாக மாறுகிறது. உடைந்த பானை காலத்தின் அடுக்குகளுக்கு அடியில் மறைகிறது.

பூமி எதையும் மறப்பதில்லை; அது காலத்தின் வரிசையிலேயே எல்லாவற்றையும் அடுக்கி வைக்கிறது. ஒவ்வொரு அடுக்காக, சரித்திரம் பாதுகாக்கப்படுகிறது — அதை மீண்டும்  பொறுமையாகப் படிக்க வருவோருக்குக் காத்திருக்கிறது.

காலம் செங்குத்தானது, கிடைமட்டமானது அல்ல

ஒரு நாகரிகத்தைப் புரிந்துகொள்ள, ஒருவர் வெளிப்பக்கமாகப் பார்க்காமல், கீழ்நோக்கிப் பார்க்க வேண்டும். நாம் மிதிக்கும் மேலடுக்கு மண், வரலாற்றின் இன்றைய பக்கம். அதற்கு அடியில் உள்ள ஒவ்வொரு நிலையும் பழமையானது. அந்தச் செங்குத்து வரிசை முறைக்கு அடுக்கியல் (Stratigraphy) என்று பெயர் — அதாவது, பூமியை ஒரு காலவரிசையாகப் படிக்கும் அறிவியல்.

நாம் கவனமாக, அடுக்கு அடுக்காகத் தோண்டும்போது, நாம் ஒரு காலப்பயணத்தை மேற்கொள்கிறோம். தொல்லியலாளர்கள் பண்டைய சரித்திரம் எனும் நூலின் பதிப்பாசிரியர்கள் ஆகிறார்கள். இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் மெதுவாகத் திறந்து படிக்க வேண்டும்.

நான்காவது அடுக்கில் இருக்கும் ஒரு பானை, எட்டாவது அடுக்கில் இருக்கும் பானையின் அதே வயதாக இருக்க முடியாது. வெறும் ஐந்து சென்டிமீட்டர் ஆழ இடைவெளியில் காணப்படும் இரு நாணயங்கள், இருவேறு நூற்றாண்டுகளுக்கு உரியவையாக இருக்கலாம்.

அகழிகள்: கடந்த காலத்திற்கான சாளரங்கள்

ஒரு அகழி (Trench) என்பது தரையில் உள்ள ஒரு குழி அல்ல. அது வரலாற்றைப் பார்க்கத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு சாளரம். தொல்லியலாளர்கள் ஒரு சட்டகத்தைப் (Grid) நிறுவி, ஆய்வுகளைப் படிக்கிறார்கள், பழைய செயற்கைக்கோள் படங்களை ஆராய்கிறார்கள், பின்னர் எங்கே தோண்டுவது என்று தேர்வு செய்கிறார்கள்.

பிறகு அவர்கள் மெதுவாகத் தோண்டி, சுவர்கள், தளங்கள், அடுப்புகள், வடிகால்கள், தூண்ககள் என்று, மனிதர்கள் வாழ்ந்ததற்கான வடுக்களை வெளிப்படுத்துகிறார்கள். ஓர் அகழி என்பது ஒரு கேக்கை வெட்டுவது போன்றது: நாம் அடுக்குகளும், உட்பொருட்களும், என்ன வரிசையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். அது ஒரு கட்டுப்பாடான ஊடுருவல்.

ஓர் அகழிக்குள் உள்ள எதுவும் ஆவணப்படுத்தாமல் தொடப்படுவதில்லை; ஒவ்வொரு ஆய்வும் பூமியின் கதையில் ஒரு புதிய வாக்கியத்தை வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுப் பிழைகள்:

ஆனால் பூமி எப்போதும் ஒரு சரியான நூலகர் அல்ல. மனித மற்றும் இயற்கை செயல்பாடுகள் அடுக்குகளைக் குழப்பலாம். ஒரு விவசாயி ஆழமாக உழுவது, ஒரு விலங்கு குழி தோண்டுவது, ஒரு மர வேர் சுழன்று செல்வது, அல்லது பிற்கால வீடு ஒன்று பழைய மண்ணில் அடித்தளம் தோண்டுவது போன்ற நிகழ்வுகள் மூலம், திடீரென்று ஒரு இளைய பொருள் ஒரு பழைய அடுக்குக்குள் மூழ்குகிறது.

அது வரலாறு அல்ல; வரலாற்றுப் பிழை. இத்தகைய இடையூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படாவிட்டால், தொல்லியல் ஒரு ஆபத்தான மாயையாகிறது. தவறாக காலம் கணக்கிட்ட ஒரு பானை ஓடு, ஒரு கலாசாரத்தின் காலவரிசையை சில நூற்றாண்டுகள் நகர்த்தக் கூடும். இதனால்தான் தொல்லியலாளர்கள் தாங்கள் தோண்டும் அகழியை உட்பட, எல்லாவற்றையும் சந்தேகிக்கப் பயிற்சி எடுக்கின்றனர்.

தவறான விளக்கத்திற்கு எதிரான போர்

தொன்மையான கலாச்சாரம் என்று கூற வேண்டும் என்ற நம்முடைய ஆசை நம்மை அறிவுக் குருடர்கள் ஆக்கலாம். ஒரு செங்கல் தளம் அரண்மனை போலத் தோன்றலாம்; அது ஒரு வீட்டின் முற்றமாக மட்டுமே இருக்கலாம். கட்டப்பட்ட ஒரு வடிகால் நகரத் திட்டமிடல் போலத் தோன்றலாம்; அது கழிவு நீர் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கான எளிமையான வழியாக இருக்கலாம்.

நாம் ஒரு நாகரிகத்திற்காக ஆவலுடன் இருக்கும்போது, சாதாரண ஆதாரத்தை பெரிய ஆதாரமாகத் தவறாகப் புரிந்துகொள்கிறோம். தொல்லியல் இதற்கு நேர் எதிரான மனப்பான்மையைக் கொண்டுள்ளது. அதன் முதல் தேவை பணிவு.

ஆர்வத்திற்குப் பதிலாகப் பொறுமையை வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பூமி கவிதை எழுதுவதில்லை; அது கணக்கு ஏடுகளை எழுதுகிறது. அது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது, என்ன நடக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதை பூமி சொல்வதில்லை.

காலத்தை சரியாக அளவிடும் கருவிகள்

அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு காலக் கணிப்பு வருகிறது. இது அடுக்குகளை உண்மையான ஆண்டுகளுடன் இணைக்கும் அறிவியல். கரி, எலும்பு, தாவர எச்சங்கள், எரிக்கப்பட்ட விதைகள் போன்ற பொருட்களில் கதிரியக்கக் கரிமப் பகுப்பாய்வு (Radiocarbon Analysis) செய்யப்படுகிறது. இது ஒருவர் கடைசியாக எப்போது தீ மூட்டினார் அல்லது உணவு சமைத்தார் என்பதைக் காட்டும்.

பானை ஓடுகள் மற்றும் மணிகள், வேறு தளங்களின் எடுத்துக்காட்டுகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இரும்பு கண்டறியப்பட்டால், உலோகவியல் ஆய்வுகள் (Metallurgical studies) அதன் தொழில்நுட்ப நிலையை அடையாளம் காண்கின்றன. விளக்கம் அளிப்பது ஒரு குழு முயற்சியாக மாறுகிறது; அங்கே பல அறிவியல்கள் ஒன்றையொன்று சரிபார்க்கின்றன. எல்லா அறிவியல் துறைகளும் ஒப்புக்கொள்ளும் போது மட்டுமே, ஆய்வு முடிவுகள் வரலாறாக வெளிப்படுகிறது.

அவசரப்படாமல் மண்ணைப் படித்தல்

செயல்முறை முடிவதற்கு முன்பே கண்டுபிடிப்புகளை வெளியிடும் ஆசை இயல்புதான். பத்திரிகையாளர்கள் என்ன "கண்டெடுக்கப்பட்டது" என்று கேட்கிறார்கள். அரசியல்வாதிகள் அது எதை "நிரூபிக்கிறது" என்று கேட்கிறார்கள். ஆர்வலர்கள் "பண்டைய பெருமை உண்மைதானே?” என்று கேட்கிறார்கள்.

ஆனால் தொல்லியலாளர் இரு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்: என்ன கிடைத்தது? எந்த அடுக்கில் கிடைத்தது?

இந்தப் பதில்கள் தெளிவாக இல்லாமல், நாம் வரலாற்றைத் தீர்மானிக்க அவசரப்படக் கூடாது. நாம் அவசரமாக இருக்கிறோம் என்பதற்காகக் காலம் வேகமெடுப்பதில்லை. வரலாறு அவசரத்திற்குப் பரிசளிக்காது.

அடுக்கியலின் விதி

இந்த நூலில் நாம் ஆராயப் போகும் தளம், ஒரு நகரம், ஒரு நாகரிகம், தமிழர் உணர்வுக்குச் சான்று என்று பேசப்படுகிறது. இது நம்பிக்கையையும் பெருமையையும் தூண்டியுள்ளது — இவை கலாச்சாரத்திற்கு அற்புதமான உணர்ச்சிகள், ஆனால் அறிவியலுக்கு ஆபத்தான உணர்ச்சிகள்.

எந்தவொரு உரிமைகோரலுக்கும் தீர்வு காண்பதற்கு முன், நாம் இந்த அத்தியாயத்தை நினைவில் கொள்ள வேண்டும். கீழடியில், அடுக்குகள் எவ்வளவு கவனமாகப் படிக்கப்பட்டன, அகழிகள் எவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டன, அதன் காலவரிசை எவ்வளவு முழுமையாக மதிக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். இந்தச் செயல்முறை உறுதியாக இருந்தால், முடிவுகள் நிலைத்து நிற்கும். செயல்முறை பலவீனமாக இருந்தால், தளர்வான மண்ணின் மீது கட்டப்பட்ட கட்டிடம்போல், வரலாற்றுப் பெருமை சரிந்துவிடும்.

பூமி உண்மையை மிகைப்படுத்துவதில்லை. பூமி புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. கீழே இருப்பதைக் காட்டிலும் மேலே இருப்பது இளையது. நாம் இந்த விதியை மீறினால், நாம் தொல்லியல் ஆய்வை விடுத்து நாம் கற்பனைக் கதை எழுதுகிறோம். ஒரு உரிமைகோரல் எவ்வளவு ஆழமானதோ, அதன் பின்னணி (Context) அவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும். வரலாற்றை மதிக்க, நாம் மண்ணை மதிக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

3 காலத்தின் அறிவியல்

ஒவ்வொரு கலாச்சாரமும் தான் மிகவும் பழமையானதாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. நம்முடைய முன்னோர்கள் மற்றவர்களை விட முன்னரே நடந்தார்கள், முன்னரே எழுதினார்கள், முன்னரே ஆட்சி செய்தார்கள் என்பது ஒரு பெருமிதமான எண்ணம். ஆனால் அறிவியலின் நோக்கம் நம்மைப் பெருமைப்படுத்துவது இல்லை.

அது நம்மை திருத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் பெருமைக்கு வெகுமதி அளிப்பதில்லை; பொறுமைக்குத்தான் வெகுமதி அளிக்கிறது. முதலில் யார் வந்தார்கள் என்று நிரூபிக்க நாம் தொல்லியலைக் கேட்கும்போதே நாம் நேர்மையிலிருந்து விலகிச் செல்கிறோம். வரலாறு ஒரு பந்தயம் அல்ல. காலவரிசையை அடுக்கு அடுக்காக, அறிவியல் நோக்குடன் ஆய்வுசெய்ய வேண்டும்.

கரிமக் கதிரியக்கக் கணிப்பு

ஒரு பானை பழமையாகத் தெரிய முடியாது. ஒரு செங்கல் பண்டையதாக உணர முடியாது. மணி தன் வயதைத் தானே அறிவிக்க முடியாது. தொல்லியலில் காலக் கணிப்புகள் அனைத்தும் அறிவியல் அளவீட்டைப் பொறுத்தவை. அது கற்பனையையோ அல்லது உற்சாகத்தையோ பொறுத்தவையல்ல.

காலத்தைக் கணக்கிட மிகவும் மதிக்கப்படும் முறை கரிமக் கதிரியக்கக் கணிப்பு (Radiocarbon dating). இது கரி, விதைகள் அல்லது எலும்பு போன்ற முன்பு உயிரோடிருந்த பொருட்களில் எவ்வளவு கரியம்-14 (Carbon-14) மீதமுள்ளது என்று கவனமாகப் பகுப்பாய்வு செய்கிறது. ஒரு நெருப்பு எரிந்தபோது அல்லது ஒரு உணவு சமைக்கப்பட்டபோது, அந்த எச்சங்களுக்குள் இயற்கையே ஒரு கால முத்திரையை விட்டுச் சென்றது. ஆய்வகங்கள் அந்த முத்திரையைத் துல்லியமாகப் படிக்கின்றன. இந்தக் ஆய்வு, யூகங்களை விட, வெறும் பார்வையை விட மிகவும் நம்பகமான கால வரம்புகளை (Date-ranges) உருவாக்கும்.

கரிமக் கதிரியக்க முடிவுகள் ஒருபோதும் ஒரே ஆண்டாக இருப்பதில்லை. அவை ஒரு கால வரம்பைக் கொடுக்கின்றன — உதாரணமாக, பொ.ஆ.மு. 350 முதல் பொ.ஆ.மு. 200 வரை. அறிவியல் ரீதியாக எப்போதும் அந்த முழு வரம்பையும் பயன்படுத்த வேண்டும். நமக்கு சௌகரியமாக உள்ள ஆண்டை மட்டும் பயன்படுத்தக் கூடாது.

ஆனால் பொது விவாதம் இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது: மிக முந்தைய சாத்தியமான ஆண்டு ஒரு தலைப்புச் செய்தியாகிறது. பிந்தைய ஆண்டு புறக்கணிக்கப்படுகிறது. மேலும் நிச்சயமற்ற தன்மை (Uncertainty) விவாதத்திலிருந்து மறைந்துவிடுகிறது.

ஒரு தேதி அதன் சந்தேகத்தின் வரம்பை (Margin of doubt) விட்டுவிட்டு வழங்கப்பட்டால், அந்தத் தேதி பிரச்சாரமாக மாறிவிடுகிறது. நாம் பெருமை பேச வேண்டும் என்பதற்காக அறிவியல் நோக்கம் இங்கே பலியாகிறது.

பானை வடிவவியல்

எல்லாப் பொருட்களுக்கும் கரிமக் கதிரியக்கக் கணிப்பு செய்ய முடியாது. பானை ஓடுகளுக்குள் கரியம்-14 இல்லை. அதற்குப் பதிலாக, நிபுணர்கள் ஏற்கனவே காலமிடப்பட்ட தளங்களிலிருந்து கிடைத்த ஒத்த பானைகளுடன் இவற்றை ஒப்பிடுகிறார்கள். இது செராமிக் வடிவவியல் (Ceramic Typology) என்று அழைக்கப்படுகிறது.

இது பயனுள்ளது. ஆனால் இது மட்டும் தனியாக ஒருபோதும் இறுதி முடிவாக இருக்காது. ஒரு பானை வர்த்தகத்தின் மூலம் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குப் பயணிக்கலாம். ஒரு பானை வடிவம் பல நூற்றாண்டுகளாக மாறாமல் இருக்கலாம். பழமையானது போலத் தோன்றுவது, உண்மையில் பிற்காலப் பானையாக இருக்கலாம். எனவே, கலாச்சாரப் பெருமையை திருப்திப்படுத்துவதற்காக, உறுதுணை ஆதாரம் இன்றி, வடிவவியலைக் கொண்டு காலவரிசையை பின்னுக்குத் தள்ளக்கூடாது.

பொருளை விட அடுக்குதான் முக்கியம்

காலக் கணிப்பு பொருளுக்கு உரியதல்ல, அது இருக்கும் மண் அடுக்குக்கு உரியது. ஒரு குறிப்பிட்ட அடுக்கில் உள்ள ஒரு உயிர்ப்பொருளை (கரிமக் கதிரியக்கம் மூலம்) பொ.ஆ.மு. 500 எனக் கூறலாம். அப்போது, அதே அடுக்கில் உள்ள தொல்பொருட்களுக்கும் அந்த வரம்பை நாம் ஒதுக்கலாம்.

ஆனால், குழப்பமான அடுக்கில் தளர்வாகக் காணப்படும் ஒரு மணியின் காலநிலை குறித்து நாம் கணக்கிட முடியாது. ஒரு பொருளைத் தவறான அடுக்குக்குள் நகர்த்துவது, ஒரு தளத்தின் முழு காலவரிசையையும் சிதைத்துவிடும். ஒரு சில சென்டிமீட்டர் பிழை கூட ஆயிரம் ஆண்டுகளை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

உணர்ச்சி- மிகப்பழமையான தவறு

தொல்லியலுக்குள் உணர்ச்சி நுழையும்போது, தேதிகள் வளைந்து கொடுக்கின்றன. உண்மைகள் விரும்பிய கதைக்கு ஏற்பச் சுருங்குகின்றன. அரசாங்கங்கள் பழைய தேதிகளில் அரசியல் லாபத்தைக் காண்கின்றன. சமூகங்கள் பெருமையைக் காண்கின்றன. ஊடகங்கள் பரபரப்பைக் காண்கின்றன.

அனைவரும் மிக முந்திய ஆண்டுகாலம் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் தொல்லியல் இதை எதிர்க்க வேண்டும். அறிவியல் காலக் கணிப்பின் வேலை யாரையும் பெருமைப்படுத்துவது அல்ல. அது காலவரிசையை துல்லியமாக்குவது. இந்த உண்மை  யாருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் மாறாது.

பாதுகாக்கப்பட வேண்டிய வரலாறு

ஒரு நாகரிகம் அதன் முன்னோர்கள் எவ்வளவு காலம் முன்பு வாழ்ந்தார்கள் என்பதனால் உயர்ந்ததாக மாறுவதில்லை. அதன் மக்கள் எவ்வளவு ஆழமாக வாழ்ந்தார்கள் — அவர்கள் உருவாக்கிய யோசனைகள், அவர்கள் விட்டுச் சென்ற அழகு, அவர்கள் உருவாக்கிய சமூகங்கள் — என்பதுதான் உண்மையான பெருமை.

ஒரு தளம் எதிர்பார்த்ததை விட இளையதாக இருந்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை. ஆனால் அதன் வயதை நாம் நேர்மையின்றி ஊதிப் பெருக்கினால், முழு பாரம்பரியமும் ஆய்வுக்கு உட்படும்போது சரிந்துவிடும். நம்பிக்கையின் மேகத்தில் நிற்பதை விட, உறுதியான மண்ணில் நிற்பதே சிறந்தது.

கீழடியை மதிப்பிடுவதற்கு முன்

நாம் ஆய்வு செய்யும் தளம் ஏற்கனவே கடும் போட்டி, சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படுவதற்கு முன்பே முடிவுகள் சத்தம் போட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. சில மாதிரிகள் ஆரம்ப நூற்றாண்டுகளை ஆதரிக்கின்றன; மற்றவை ஆதரிப்பதில்லை. கீழடியின் உண்மைக் கதை இன்னும் வடிவம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.

பூமி பேசுவதை இன்னும் முடிக்கவில்லை. அது முடியும் வரை, நமக்கு ஒரே ஒரு கடமைதான் உள்ளது: அறியப்பட்டதற்கும் விரும்பப்படுவதற்கும் இடையேயான எல்லையைப் பாதுகாப்பது. கீழடியின் ஆய்வு முடிவுகள் உணர்ச்சியிலிருந்து அல்ல, அறிவியலிலிருந்து வந்திருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வை

கடந்த காலம் பொறுமையானது. அது கண்டறியப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருந்தது. நாம் அதைப் சரியாகப் புரிந்துகொள்ள இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கும். கடன் வாங்கிய பெருமையால் நம்மை நாமே அவசரப்பட்டு முடிசூட்டிக் கொள்ள வேண்டாம். மெதுவாக நிரூபிக்கப்பட்ட ஒரு வரலாறு நிலைத்திருக்கும். முன்கூட்டியே சத்தம் போட்டு அறிவிக்கப்பட்ட ஒரு வரலாறு விரைவில் வெட்கமாக மாறும். பண்டைய தமிழைக் கௌரவிப்பது, உண்மையை ஆதரிப்பதன் மூலமே நிகழ வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

4 அறிவியலின் அச்சாணி

தொல்லியல் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தோம். நாம் யாராக இருந்தோம்  என்ற உண்மை நம் அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறது. நம்முடைய முன்னோர்கள் நகரங்களை உருவாக்கியவர்களா, கவிஞர்களா, வணிகர்களா, போர் வீரர்களா, ஆத்திகர்களா அல்லது நாத்தீகர்களா என்று மக்கள் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த ஆர்வம் தொல்லியலாளரின் மீது அதிக அழுத்தத்தை உருவாகுகிறது. கேமரா வெளிச்சங்கள் மண்வெட்டியைப் பின்தொடர்கின்றன. ஒலிவாங்கிகள் அகழிகள் மீது வட்டமிடுகின்றன. மண்ணைப் பதிவு செய்யப் பயிற்சி பெற்றவர் திடீரென்று அரசியல் பேச அழைக்கப்படுகிறார். தவறுகள் சரியாக இந்த இடத்தில் தான் தொடங்குகின்றன.

ஸ்ரீராமனின் எல்லைக்கோடு

கீழடி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் ஆணையர், திரு பி. எஸ். ஸ்ரீராமன். அவர் ஒரு முக்கியமான விஷயத்தை விளக்கினார். தொல்லியல் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் இதை மனதில் வைக்க வேண்டும்.

"ஒரு தொல்லியலாளரின் வேலை பாதுகாப்பாகத் தோண்டுவது, பொருட்களை மீட்பது, அவற்றை துல்லியமாகக் குறியிட்டு அறிக்கை செய்வதுதான். மீதமுள்ளவற்றைச் சிறப்பு நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விளக்கம் அளிப்பது என்பது வெறும் அடிக்குறிப்புகள் போலத்தான். அதுவும் முதலில் ஒரு பெரிய 'இருக்கலாம்' என்ற சந்தேகத்துடன் இருக்க வேண்டும்.” அவருடைய இந்த வார்த்தைகள் அறிவியல் நெறிமுறையின் அச்சாணி.

தொல்லியலாளர் ஆதாரத்தை அதன் மிகவும் உடையக்கூடிய தருணத்தில் தொடுகிறார். அதாவது, அது முதன்முறையாக மண்ணிலிருந்து வெளிவரும்போது. அந்தத் தருணம் பணிவைக் கோருகிறது. தொல்லியலாளர் உடனடியாகப் பெரிய முடிவுகளை அறிவித்தால், புதிய தரவுகளை மாறாத கொள்கையாக மாற்றும் அபாயம் உள்ளது.

அறிவுசார் வேலைப் பிரிவினை

அகழாய்வு அறிக்கை முடிந்த பிறகு, கல்வெட்டியல் அறிஞர்கள் எழுதப்பட்டதைப் படிக்க வேண்டும். செராமிக் ஆய்வாளர்கள் பானை ஓடுகளை வகைப்படுத்த வேண்டும். உலோகவியலாளர்கள் தொழில்நுட்பத்தை ஆராய வேண்டும். உயிர்-தொல்லியலாளர்கள் மனித எச்சங்களைப் படிக்க வேண்டும். கதிரியக்கக் கரிம ஆய்வகங்கள் காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். வரலாற்று ஆசிரியர்கள் இவை அனைத்தையும் ஒரு பின்னணியில் இணைக்க வேண்டும். ஒரு தொல்லியலாளர் இந்த வேலைகள் அனைத்தையும் தனியாகச் செய்ய முயற்சிக்கும்போது, அதன் விளைவு ஆராய்ச்சியாக இருப்பதில்லை. அது கதைகள் சொல்வதாகவே இருக்கும்.

ஒரு வரலாற்று எச்சரிக்கை

இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தொல்லியலாளர்களில் ஒருவர் சர் மோர்டிமர் வீலர். சிந்து சமவெளி நாகரிகத்தில் அவர் பணிபுரிந்தபோது, அங்குள்ள கோட்டைச் சுவர்களையும் அம்பு முனைகளையும் கண்டார். அவர் உடனடியாக, "இங்கே போர் நடந்தது. ஆரியர்கள் ஹரப்பர்களைத் போரிட்டு விரட்டி இருக்க வேண்டும்" என்று அறிவித்தார்.

அது ஒரு சாத்தியக்கூறு மட்டுதான். ஆனால் போதுமான ஆதாரம் இல்லை. இதன் விளைவு, பல தசாப்தங்களாக இனவாதக் கோட்பாட்டிற்கு வழி வகுத்தது. ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு சமூக மற்றும் அரசியல் தளத்தையே மாற்றியது. மண் அதை நிரூபித்தது என்பதனால் அல்ல. ஒரு பிரபலமான தொல்லியலாளர் அதை அவசரப்பட்டு அறிவித்தார் என்பதனால்.

பிற்கால ஆராய்ச்சி, அத்தகைய வன்முறைப் படையெடுப்புக்கான தெளிவான ஆதாரம் எதையும் காட்டவில்லை. கால நிலை மாற்றம், ஆற்றின் திசை மாற்றம், வர்த்தகச் சரிவு — போன்ற பல காரணிகளை பின்னாள் அறிஞர்கள் கண்டறிந்தனர். ஆனால் வீலரின் ஆரம்பகால அவசரம் தேசத்தையே பிளக்கும் அரசியலுக்கு இன்றுவரை அடிநாதமாக விளங்குகிறது. ஒரு தொல்லியலாளரின் பொறுமையின்மை, பல தலைமுறைகளின் தவறான புரிதலாக மாறியது.

பொறுமையற்ற பொருள்தேடல்

தொல்லியலாளர்கள் பேசும்போது, அவர்களுடைய வார்த்தைகள் தலைப்புச் செய்திகளாகின்றன. தலைப்புச் செய்திகள் பொது உண்மையாகின்றன. பிற்காலத் திருத்தங்கள் முதல் உற்சாகம் எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு தூரம் செல்வதில்லை. தொல்லியல் சமூகம் இந்தப் படத்தை ஏற்கனவே பலமுறை கற்றுக் கொண்டுள்ளது. தவறான கதையை முதலில் வடிமைப்பது எளிது. பிற்காலத்தில் அதைச் சரி செய்வது ஏறக்குறைய அசாத்தியம்எஸ்.

முதல் விளக்கம் பெருமைக்கோ அல்லது வருத்தத்திற்கோ அடித்தளமாக மாறுகிறது. அதன் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு திருத்தமும் துரோகம் போல் தோன்றுகிறது. அதனால்தான் ஸ்ரீராமன் அவர்கள் கொள்கை வெறும் முறையானது மட்டுமல்ல. அதுதான் அறிவுநேர்மை.

கீழடியின் கண்டுபிடிப்புகள், தமிழ் வரலாறு மற்றும் அடையாளம் பற்றிய தீவிரமான விவாதங்கள் நடந்த ஒரு தருணத்தில் வந்து சேர்ந்தன. அந்த உற்சாகம் புரிந்துகொள்ளத் தக்கதுதான். ஆனால் உற்சாகம் ஆதாரம் அல்ல. நாம் அவசரப்பட்டு "நகரம்," "நாகரிகம்," அல்லது "மதச்சார்பற்ற சமூகம்" என்று பேசினால், வீலரின் பிழையை மீண்டும் செய்ய நாம் முனைகிறோம். எச்சரிக்கை இல்லாத தொல்லியல், அது ஒரு ஆடம்பரமான சித்தாந்தமாக மாறிவிடும்.

கீழடியை ஒரு புகழ்பெற்ற, பண்டைய, நகரமயமாக்கப்பட்ட தமிழ்ச் நாகரிகத்திற்கு ஆதாரமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை வலுவாக இருக்கிறது. ஆனால் ஆசை உண்மை அல்ல. அறிவியலில் உண்மையை காக்கவேண்டும் என்றால், அதன் நிச்சயமற்ற தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும்.

கட்டுப்பாடு என்னும் கலை

முடிவு செய்யும் உரிமை ஒரு தனிப்பட்ட தொல்லியலாளருக்கோ அல்லது ஒரு அரசாங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. அது முழு அறிவியல் சமூகத்திற்கும் சொந்தமானது. அறிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மாற்று வாதங்கள் கேட்கப்பட வேண்டும். மாற்று விளக்கங்கள் சோதிக்கப்பட வேண்டும். தோல்விகள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். ஒரு தனியான அகழியில் உள்ள ஒரு ஒற்றை மண்வெட்டி ஒரு முழு நாகரிகத்திற்காகவும் பேசுவதில்லை.

வரலாறு ஒரு மெதுவான நீதிபதியைப் போன்றது. எந்தத் தீர்ப்பும் வழங்குவதற்கு முன் ஆதாரம் வாக்குமூலம் எல்லாம் வேண்டும்.

நல்ல தொல்லியலாளர்கள் கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் "இருக்கலாம்," "அநேகமாக,"  "உறுதிப்படுத்தப்படவில்லை" என்று எழுதுகிறார்கள். "இதுதான்" என்று எழுதுவதை விட இந்தக் கவனம் தான் அதிகம். அந்தக் கவனம் கோழைத்தனம் அல்ல. அதுவே ஆய்வுக்குத் தரும் மிக உயர்ந்த மரியாதை. உண்மைக்கும், முறைக்கும், முன்னோருக்கும் கொடுக்கும் மரியாதை.

பூமி தன்னை எளிதில் வெளிப்படுத்தாது. அதன் அர்த்தத்தை நாம் அவசரப்பட்டு அறிவிக்கக் கூடாது.

கீழடியைச் சுற்றியுள்ள சந்தைக் கூச்சல்களை நாம் எதிர்கொள்வதற்கு முன், நாம் இந்தக் கொள்கையில் நம்மை நிலைநிறுத்த வேண்டும். தொல்லியலாளர் வரலாற்று ஆசிரியராக மாறினால், மண்ணின் குரல் மனித அவசரமாக மாற்றப்படுகிறது. அவசரம் எப்போதுமே கடந்த காலத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வழி. கீழடியின் உண்மையைப் பாதுகாக்க, யார் எதை எப்போது விளக்குகிறார்கள் என்பதன் எல்லைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

5 அரசியல் நம்பிக்கைகள்

வைகை ஆறு நீண்ட காலமாகத் தென் தமிழ்நாட்டின் வாழ்க்கையை வடிவமைத்து வந்துள்ளது. 2010களின் தொடக்கத்தில் மதுரைக்கும் சிவகங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த தொல்லியலாளர்கள், புதைந்த குடியிருப்புகளைக் குறிக்கும் பல மண்மேடுகளை அடையாளம் கண்டனர்.

இவற்றில், கீழடியில் உள்ள மேடு தனியாகத் தெரிந்தது. 2015-16 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) முதல் விரிவான அறிக்கைகள், அங்கே செங்கல் கட்டுமானங்கள், நடைபாதைகள் மற்றும் நிரந்தர வாழ்விடத்தைக் குறிக்கும் தொல்பொருட்கள் இருந்ததாக விவரித்தன. சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் ஆவணங்களும், கீழடியை பண்டைய மதுரை நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் நிலப்பரப்பாகப் பின்னர் சித்தரித்தன.

குடியிருப்பிலிருந்து ஒரு அமைப்பு வரை

அகழ்வாராய்ச்சிகள் முன்னேறியபோது, கீழடி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் மட்டுமல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்தனர். மாறாக, அது வைகை நெடுகிலும் பரவியிருந்த ஒரு பரந்த மனித வலையமைப்பின் பகுதியாக இருக்கலாம் என்றனர். 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பாரம்பரிய ஆய்வுகள், கீழடிக் குழுமம் (Keezhadi Cluster) பற்றிக் குறிப்பிடத் தொடங்கின.

அதாவது, வாழ்விடம், கைவினைப் பகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடுகாடுகளை உள்ளடக்கிய ஒரு குடியேற்ற அமைப்பு என்று கூறப்பட்டது. தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை, குறுகிய சுற்றளவில் மேலும் மூன்று தளங்களை — கொந்தகை, அகரம், மற்றும் மணலூர் — அடையாளம் கண்டபோது இந்த யோசனை மேலும் முக்கியத்துவம் பெற்றது.

கொந்தகை — இறந்தவர்களின் நகரம்

2020 ஆம் ஆண்டில் மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கைகள், கொந்தகையில் குறிப்பிடத்தக்க ஈமத்தாழிகள் (Urn Burials) மற்றும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தன. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி செய்தித்தாள்கள், கீழடி மக்களுடன் தொடர்புடைய "மனித உருவ அளவிலான எலும்புக்கூடுகள்" கண்டுபிடிக்கப்பட்டதாக விவரித்தன.

ஈமப் பொருட்களின் (Grave Goods) இருப்பு மற்றும் தனித்துவமான பானை ஓடுகளைக் கொண்டு, கொந்தகை, கீழடியில் வசித்த அதே சமூகத்திற்குக் கொந்தகை ஒரு கல்லறையாகச் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மணலூர் — தொழில்துறை துணைக்கோள்

ஜூன் 2020 இல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மணலூரில் ஒரு பெரிய உலைக் களம் (Furnace-like structure) போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது. அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள், எரிக்கப்பட்ட களிமண் அம்சம், பானை அல்லது செங்கல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்துறை சூளைகளைப் (Kilns) போல இருப்பதாகக் கூறினர். அந்த விளக்கம் உறுதியானால், மணலூர் கீழடியின் வளர்ச்சிக்குத் தேவையான கைவினைப் பொருட்களை வழங்கியிருக்கலாம். இது ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு மற்றும் வள விநியோகம் இருந்ததைக் குறிக்கிறது.

அகரம் — ஒரு வசிப்பிட அக்கம்

2021 இல் அகழாய்வு அதிகாரிகளுடனான ஊடக நேர்காணல்கள், அகரம், கீழடியின் பொருள் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகும் வாழ்விடத் தடயங்களை (Occupational Deposits) அளித்தது என்று விளக்கின. கட்டமைப்பு எச்சங்களும் தொல்பொருட்களும் அங்கே வாழ்விடத்தின் அம்சங்களைக் காட்டின. இது கீழடியின் அன்றாட வாழ்க்கைக்கு உதவிய அல்லது அதன் நீட்சியாக இருந்த ஒரு குடியேற்றத்தைக் குறிக்கலாம் — அதாவது, மையக் குடியேற்றம் என்று கருதப்படும் கீழடிக்கு ஒரு குடியிருப்புத் துணையாக அகரம் இருந்திருக்கலாம்.

குழுமம் ஏன் முக்கியம்?

கீழடியில் வாழ்விடம், கொந்தகையில் இடுகாடு, மணலூரில் கைவினை உற்பத்தி மற்றும் அகரத்தில் வீடுகள் — இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கும்போது ஒரு திட்டமிட்ட குடியேற்ற அமைப்பை ஒத்திருக்கிறது. இது பண்டைய சமூகங்கள் தங்களை எப்படி ஒழுங்கமைத்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, வசிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் இறந்தவர்களுக்கான இடங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், இணைக்கப்பட்டிருந்தன என்பதைக் காட்டுகிறது.

செய்தித்தாள்கள், குறிப்பாகத் தமிழ் மொழி ஊடகங்கள், இந்த விளக்கத்தை விரைவாகக் கொண்டாடின. இதை ஒரு வைகை ஆற்றுப் படுகை நாகரிகத்திற்கு "ஆதாரம்" என்று அழைத்தன. அரசியல் ரீதியாக, இது வடக்கு மைய வரலாற்றிற்கு ஒரு மாற்று கதையை வழங்கியது. தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு நகர்ப்புறப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தார்கள் என்ற பெருமையைத் தூண்டியது.

ஆய்வின் போதாமை

ஆனால் அறிவியல் மற்றும் தொல்லியல், கலாச்சார ஆர்வத்தை விட மெதுவாகவே செயல்படுகிறது. ஒரு குடியேற்ற வலையமைப்பைப் நாகரிகம் என்று அழைக்க, பல அறிவியல் தகுதிகள் வேண்டும்.

1.  சமகாலத்தன்மை (Contemporaneity): தொடர்புடைய தளங்கள் அனைத்தும் ஒரே காலவரிசைக்குள் உறுதியாகக் காலமிடப்பட வேண்டும். தற்போது, தி இந்து மற்றும் பிற வெளியீடுகளில் வெளியிடப்பட்ட கரிமக் கதிரியக்க முடிவுகள் சில கீழடி அடுக்குகளுக்கு வலுவான தேதிகளைக் காட்டுகின்றன. ஆனால் தொடர்புடைய தளங்களுக்கான முடிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

2.  பரஸ்பர இணைப்பு ஆதாரம் (Interconnected Evidence): இடுகாடுகள், கைவினைப் பகுதிகள் மற்றும் வாழ்விடங்கள் பொருள் ரீதியான இணைப்புகளைக் காட்ட வேண்டும். அதாவது, பொதுவான பானை ஓடு வகை, பொருந்தும் ஈமப் பொருட்கள், பொதுவான கட்டிடக்கலை வடிவங்கள் ஆகியவை செய்தியாளர் சந்திப்புகளில் அல்லாமல், தொழில்நுட்ப அகழாய்வு நினைவுக் குறிப்புகளில் வெளியிடப்பட வேண்டும்.

3.  போதுமான அகழாய்வு (Sufficient Excavation): கீழடியிலேயே அதன் மொத்த மேட்டின் ஒரு சிறு பகுதி மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. கொந்தகை, அகரம் மற்றும் மணலூரில் இதைவிடவும் குறைவாகவே உள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு நாகரிகத்தை ஊகிப்பது ஒரு கற்பனையான கணிப்பு.  இது பொதுவெளியில் தவறான சரித்திரப் புரிதல்களை விளைவிக்கும்.

4.  சமூக மறுஆய்வு பொறுப்பு (Peer-Reviewed Accountability): ஆரம்பகால எழுத்தறிவு மற்றும் நகர்ப்புற அளவு உள்ளிட்ட கீழடியைச் சுற்றியுள்ள பல கருத்துகள் இன்னும் சுயாதீன நிபுணர்களின் மறு ஆய்வில் உள்ளன. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியத் தொல்லியல் துறை (ASI), அதிகாரப்பூர்வ முடிவுகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன், அகழாய்வு விளக்கத்தின் சில பகுதிகளுக்கு "மேலும் உண்மையான தரவு தேவை" என்று பொதுவில் கூறியுள்ளது.

இந்த நான்கும் பூர்த்தி செய்யப்படும் வரை, "நாகரிகம்" என்ற வார்த்தை ஒரு அறிவியல் முடிவு அல்ல; அது ஒரு அரசியல் நம்பிக்கையாகவே இருக்கும்.

கொண்டாட்டத்திற்கு முன் அமைதி

ஒரு கருதுகோளாக இருந்தாலும், கீழடிக் குழுமம் பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய செழுமையான கற்பனைக்கு வழிவகுக்கிறது.  திட்டமிடப்பட்ட குடியிருப்புகள், சிறப்பு வாய்ந்த கைவினை உற்பத்தி, இறந்தவர்களின் அடையாளம் மற்றும் சடங்குகள் இவை முன்பு கருதப்பட்டதை விட அதிகக் கட்டமைப்பு கொண்ட ஒரு சமூகம் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. இதுவே ஏற்கனவே ஒரு பெரிய சாதனைதான்.

கீழடியின் சமூகக் கதை அதன் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட வேகமாக ஓடிவிட்டது. அரசியல்வாதிகளும் பிரபலங்களும் அகழிகளை மேடைகளாக மாற்றியுள்ளனர். பத்திரிகையாளர்கள் கருதுகோள்களை அறிவிப்புகளாக செய்துள்ளனர். இந்தச் சத்தத்தில், மண்ணின் மெதுவான குரல் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தக் குழுமக் கருதுகோள் பிற்காலத்தின் உண்மையாகப் பெருமையுடன் நிலைநிற்கலாம். ஆனால் நாம் அதற்கு அவசரப்பட்டு நாகரீகம் முடிசூட்டினால், அது ஆதாரம் இல்லாத கற்பனை தான். உண்மை, வைகையைப் போலவே, அதன் சொந்த வேகத்தில் பாய அனுமதிக்கப்பட வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

6 கிடைத்தது என்ன?

கீழடி, தென்னிந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அதிகாரப்பூர்வ ஆவணம் உள்ள சில தளங்களில் ஒன்றாகும். இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதன் விரிவான அகழாய்வு அறிக்கையை ஜூன் 2025 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதே மாதம், மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன் நிபுணர் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அறிவித்தது. இதன் பொருள், நாம் இந்தக் கட்டுரையில் விவாதிக்கும் பல தகவல்கள் அரசியல் பேச்சுகளிலிருந்தோ அல்லது ஊடகங்களின் ஆரவாரத்திலிருந்தோ வருவதில்லை. மாறாக, இந்திய அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆவணங்களிலிருந்து வருகின்றன.

குடியிருப்பைக் குறிக்கும் கட்டமைப்புகள்

இந்தியத் தொல்லியல் துறை 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடத்திய அகழாய்வு அறிக்கைகள் செங்கல் கட்டுமானங்கள், நேர்கோட்டுச் சுவர்கள், சுடுமண் உறைகிணறுகள் (Terracotta ring-wells), ஓடுகளின் பகுதிகள் மற்றும் தளப்பரப்புகள் போன்றவற்றை விவரிக்கின்றன. இவை மனித வாழ்விடங்களைச் சேர்ந்தவை என்று தெளிவாகத் தெரிகிறது.

இந்த விவரங்கள் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையின் 2020-2024 களச் சுருக்கங்களிலும் மீண்டும் காணப்படுகின்றன. இவை ஒவ்வொரு அகழாய்வு கட்டத்தையும் இணைக்கும் அதிகாரப்பூர்வ வெளியீடுகள். குறிப்பாகச் சுடுமண் உறைகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு உறைகிணற்றின் இருப்பு, கழிவு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உருளை வடிவப் பிரிவுகளால் ஆன ஒரு சுடுமண் குழாய் அமைப்பு, ஆகஸ்ட் 2024 இல் மாநிலத் தொல்லியல் துறையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய அமைப்புகள் இத்தளத்தில் வாழ்ந்த மக்களின் கட்டுமானத் திறனுக்கான வலுவான எடுத்துக்காட்டு. இது சரியாகக் காலமிடப்பட்டு, அதன் பின்னணி உறுதி செய்யப்பட்டால், தற்காலிகக் குடியேற்றம் அல்லாமல் அங்கே ஒரு கட்டமைக்கப்பட்ட வாழ்விடம் இருந்ததைக் குறுக்கும்.

தொல்பொருட்கள்: மக்களின் வாழ்க்கைச் சான்றுகள்

2019 ஆம் ஆண்டில், மாநிலத் தொல்லியல் துறை கீழடியிலிருந்து கிடைத்த பொருட்களின் முதல் ஒருங்கிணைந்த பட்டியலை வெளியிட்டது. கருப்பு மற்றும் சிவப்பு பானைகள் (Black-and-Red Ware), ரோலட்டட் பானைகள் (Rouletted Ware) மற்றும் நன்கு மெருகூட்டப்பட்ட சிவப்பு நிறப் பூச்சுப் பானைகள் உட்பட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளைப் பட்டியலிட்டது. இந்த வகைப்பாடுகள் ஆரம்பகால வரலாற்றுத் (Early Historic) தொல்லியலில் அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள்.

அதிகாரப்பூர்வ மாநிலப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பொருட்கள் பின்வருமாறு:

·     நூல் நூற்கும் கருவிகள் மற்றும் எலும்புக் கருவிகள். இது ஜவுளி அல்லது கைவினை வேலைகள் இருந்ததைக் காட்டுகிறது.

·     பளிங்குக் கற்கள், அகேட், குவார்ட்ஸ் போன்ற அரை விலைமதிப்பற்ற கல் மணிகள் மற்றும் சங்குகள்.

·     சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உலோகவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இரும்புக் கருவிகள்.

·     அருங்காட்சியகத்தின் தொல்பொருள் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள களிமண் விளையாட்டுத் துண்டுகள் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு பகடை.

இவை சென்னை உயர் நீதிமன்றம், அரசு அருங்காட்சியகத்தின் அங்கீகாரப் பிரிவு மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பொருள் பட்டியலில் (Object-inventories) வந்தவை.

கல்வெட்டுகளும் எழுத்தறிவும்

மார்ச் 2020 இல், தமிழ்-பிராமி எழுத்துக்களுடன் கூடியபொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் பதிவு செய்யப்பட்டதை தமிழ்நாடு தொல்லியல் துறை பொதுவில் உறுதிப்படுத்தியது. இந்தப் பானை ஓடுகளில் சில, துறையால் நியமிக்கப்பட்ட கல்வெட்டியலாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று "குவிதாந்" என்று படிக்கப்பட்ட தனிப்பட்ட பெயரைக் கொண்டிருந்தது. இது இப்போது அதிகாரப்பூர்வப் பதிவில் ஒரு பகுதி.

அடுக்கியலில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டால், இத்தகைய கல்வெட்டுகள் குறைந்தது செயல்பாட்டு ரீதியான எழுத்து கொண்ட ஒரு சமூகத்திற்கான வாதத்தை முன்வைக்கும். ஆனால் ஒவ்வொரு பொறிக்கப்பட்ட ஓட்டின் தேதியும் இன்னும் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏ.எம்.எஸ். மாதிரிகள்

நான்காம் கட்ட அகழாய்வின் போது, சுமார் மூன்றரை மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட கரி மாதிரிகள், புளோரிடாவில் உள்ள துரிதப்படுத்தப்பட்ட நிறை நிறமாலை (AMS - Accelerator Mass Spectrometry) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு அதன் 2019 கீழடி அகழாய்வு ஆவணத்தின் ஒரு பகுதியாகச் சமர்ப்பித்த சோதனை முடிவுகள், பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டைச் சுற்றியே அதன் அளவீட்டு வரம்பை (Calibrated range) மையமாகக் கொண்டிருந்தன.

இந்தத் தகவல்கள் பின்வரும் கூறுகளை மட்டுமே உறுதி செய்கிறது:

·     கரி இருந்த அடுக்கு சேதமடையாமல் இருந்தது.

·     அதனுடன் தொடர்புடைய தொல்பொருட்கள் அதே காலப்பகுதியைச் சேர்ந்தவை.

·     சுயாதீன நிபுணர்கள் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள்.

இந்தியத் தொல்லியல் துறையின் 2025 செய்தி அறிக்கை, முந்தைய வரைவுகளில் இருந்த சில காலவரிசை விளக்கங்கள், அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் "மேலும் உண்மையான தரவு" தேவை என்று வெளிப்படையாகக் கூறியது. இதன் பொருள் தேதிகள் சாத்தியமானவை என்றாலும், இன்னும் இறுதியானவை அல்ல.

நமக்குத் தெரிந்தது என்ன?

அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து மட்டும், கீழடி பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது என்று நாம் உறுதியாகக் கூறலாம்:

·     நிரந்தரமான செங்கல் கட்டுமானங்கள்.

·     உறைகிணறுகள் மற்றும் குழாய் அமைப்புகள் போன்ற நீர் தொடர்பான கட்டமைப்புகள்.

·     பல்வேறு கைவினைப் பொருட்கள் — ஜவுளி, மணிகள் செய்தல், எலும்பு மற்றும் உலோக வேலைகள்.

·     ஓய்வு மற்றும் அலங்காரத்திற்கான அன்றாடப் பொருட்கள்.

·     தமிழ்-பிராமி கல்வெட்டுகளின் தொகுப்பு.

·     ஆரம்பகால வரலாற்று நூற்றாண்டுகளில் (early historic period) வாழ்விடம் இருந்ததாகக் கூறும் கதிரியக்கக் கரிமத் தரவு.

இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் உண்மையானவை. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் அருங்காட்சியகப் பட்டியல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

நிரூபிக்கப்படாமல் இருப்பது என்ன?

அதே அதிகாரப்பூர்வப் பதிவுகால் சில கட்டுப்பாட்டையும் (Restraint) மறைமுகமாகக் குறிக்கிறது:

·     குடியேற்ற மேட்டின் ஒரு சிறிய பகுதி மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

·     இதுவரை முழுமையான தெரு அல்லது அக்கம் பக்கத்து அமைப்பு கண்டறியப்படவில்லை.

·     "நகரம்" அல்லது "நாகரிகம்" போன்ற வார்த்தைகள் அதிகாரப்பூர்வ இந்தியத் தொல்லியல் துறை முடிவுகளில் இல்லை.

·     குடியேற்றத் திட்டமிடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால் நிரூபிக்கப்படவில்லை.

·     வர்த்தக வலைப்பின்னல்கள் குறிப்பிடப்படுகின்றன, ஆனால் நிரூபிக்கப்படவில்லை.

·     அடுக்கியல் வரிசைமுறை இன்னும் பல்வேறு அகழிகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

எனவே, கீழடி சிக்கலான தன்மையைக் காட்டினாலும், அது நகர்ப்புற நாகரிகத்திற்கான முழுமையான தொல்லியல் அளவுகோலை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.

தரவுககள் ஆசைகள்

கீழடியை ஒரு முக்கியமான ஆரம்பகால வரலாற்றுக் குடியேற்றமாக — அநேகமாகத் தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான ஒன்றாக — கொண்டாடப் போதுமான ஆதாரம் உள்ளது. அது எந்த மிகைப்படுத்தலும் இல்லாத ஒரு தகுதியான சாதனை ஆகும். ஆனால், யாராவது இத்தளத்தைப் பயன்படுத்தி "கருத்தியல் வெற்றி" (Ideological victory) என்று சொல்வது அபத்தம். கலாச்சாரம், மொழியியல் அல்லது மதவியல் ரீதியாக உண்மைகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இவற்றை பேசுவது, அறிவியல் ஆய்வின் நேர்மையை ஆபத்துக்கு உள்ளாக்கும்.

மறுஆய்வு, நகலெடுத்தல் மற்றும் சூழல் ரீதியான உறுதிப்படுத்தலைச செய்யும்வரை கண்டுபிடிப்புகள் வரலாறு ஆகாது. கீழடி ஒரு குறிப்பிடத்தக்க தளம். அது வியப்பையும் பொறுமையையும் கோருகிறது. அதன் உண்மைகள் முதிர்ச்சியடைய நாம் அனுமதிக்க வேண்டும்.

மண் ஒவ்வொரு துப்பும் அளித்து, ஒவ்வொரு நிபுணரும் ஒவ்வொரு எண்ணையும் சரிபார்த்த பிறகுதான், கீழடி உண்மையில் என்னவாக இருந்தது என்று நாம் சொல்ல முடியும்.

அதுவரை, பொறுப்புள்ள பதில் : நிறைய கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிறைய அறியப்படவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

7 வரலாற்று அபாயம்

பல ஆண்டுகளாக, பல ஊடக அறிக்கைகளும், செய்தியகளும் கீழடியை பண்டைய தமிழ் நாகரிகத்தின் ஒரு வெளிப்பாடாக முன்வைத்துள்ளன. அவற்றில் சில கூற்றுக்கள் பின்வருமாறு:

"கீழடி பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமையானதாக இருக்கலாம். இது வைகை ஆற்றங்கரையில், ஒரு எழுத்தறிவு பெற்ற நகர்ப்புற நாகரிகம் இருந்தது என்பதைக் காட்டுகிறது." — அகழாய்வின் கூறப்பட்ட கண்டுபிடிப்புகளைச் சுருக்கமாகக் கூறும் 2025 ஆம் ஆண்டின் ஒரு தேசிய நாளிதழின் கட்டுரை.

"தொல்லியலாளர்கள் தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செங்கல் வீடுகள், வடிகால் கால்வாய்கள், நீர் மேலாண்மை குழாய் அமைப்புகள், வணிக மணிகள், உலோகக் கருவிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இது 2,600 ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுகிறது. இது தென்னிந்திய வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது." — தேசிய நிறுவனத்திடமிருந்து மாநில நிறுவனம் பொறுப்பேற்ற பிறகு, 2024 ஆம் ஆண்டின் ஒரு பத்திரிகை கட்டுரை.

"முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மட்டும் 5,500 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பானைகள், மணிகள், கருவிகள், ஆபரணங்கள். வட இந்திய நகரங்கள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பண்டைய தமிழ் மக்கள் நகரவாசிகள், எழுத்தறிவு பெற்றவர்கள், தொழில்துறை திறன் கொண்டவர்கள், கலாச்சார ரீதியாக முன்னேறியவர்கள் என்பதற்கு கீழடி ஆதாரமாக நிற்கிறது." — முதல் இரண்டு அகழாய்வுப் பருவங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும், இந்தியத் தொல்லியல் துறையின் ஆதரவு பெற்ற அறிக்கைகளிலிருந்து இந்த கருத்துகள் உள்ளன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்தக் கூற்றுக்கள் அரசியல்வாதிகள், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஆர்வலர்களால் எதிரொலிக்கப்படுகின்றன. இவை இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்ட,  சுயாதீனமான "தென்நாட்டு நாகரிகத்திற்கு" ஒரு உறுதியான ஆதாரம் போலக் காட்டப்படுகின்றன.

அடுக்குக் குழப்பம்

ஆனால் அறிவியல் தலைப்புச் செய்திகளை ஏற்கவில்லை. அதிகாரப்பூர்வப் பதிவுகளும், கீழடி திட்டத்தின் சமீபத்திய விமர்சனங்களும், இந்த செய்தி அறிக்கைகளை கருதுகோள்களாகவே அணுக வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

கீழடி அகழாய்வுத் தளத்தின் கிடைக்கப்பெற்ற அறிக்கைச் சுருக்கத்தின்படி, தமிழ்-பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய பானை ஓடுகள் மற்றும் தொல்பொருட்கள் "கழிவு கொட்டும் குழிகள்" என்று விவரிக்கப்பட்ட அமைப்புகள் உள்ளன. இந்தக் குழிகள், பழைய அடுக்குகளுக்குள் தோண்டப்பட்டதால், முந்தைய அடுக்குகளை ஊடுருவி, வெவ்வேறு காலப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.

இந்த கலப்பு காரணமாக, ஆழமான மட்டங்களில் உள்ள சில கரி மாதிரிகள் முந்தைய கால கரிமக் கதிரியக்க தேதிகளைக் கொடுத்தாலும், அந்தக் தேதிகள் கல்வெட்டுப் பானை ஓடுகளுக்கோ அல்லது பிற பானை துண்டுகளுக்கோ பொருந்துவதற்கான தெளிவான, ஆதாரம் இல்லை.

சுயாதீன தொல்லியலாளர்களின் கருத்துக்கள், இத்தகைய கலவையான சூழல் அடுக்கியலின் ஒருமைப்பாட்டைக் (Stratigraphic integrity) கெடுக்கிறது என்று எச்சரிக்கின்றன. அதாவது, அவை குழப்பமடைந்த அடுக்குகளிலிருந்து வந்திருந்தால், "பொ.ஆ.மு. 580 எனக் காலமிடப்பட்ட கரி" உடன் "தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓட்டை" இணைக்க முடியாது. தெளிவான அடுக்கு ரீதியான ஆதாரம் இல்லாமல், கீழடியிலிருந்து கிடைத்த ஆரம்பகால எழுத்து பற்றிய கால நிர்ணயம் கேள்விக்குறியாகிறது.

மாறுபடும் உண்மைகள்

ஜூலை 2025 இல், தொல்லியலுக்குப் பொறுப்பான தேசிய நிறுவனம், முதன்மை அகழாய்வாளர் சமர்ப்பித்த இறுதி வரைவு அறிக்கையை மதிப்பிட்டது. அந்த அறிக்கையில் பொ.ஆ.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான "காலகட்டம்-1" இன் ஆரம்பத் தேதியை தவறு என்று கூறுகிறது.

தேசியத் துறையின் தலைவர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஆரம்பகாலத்தின் நிர்ணயம் உறுதிபடுத்தப்படவில்லை, மேலும் அதிகபட்சமாக இந்த தளம் பொ.ஆ.மு. 300 க்கு முந்தையதாக இருக்கலாம்" என்று வலியுறுத்தினார். இது ஒரு பெரிய திருத்தம். ஆரம்பகாலக் கூற்றை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளுகிறது. இதன் மூலம் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டின் நகர்ப்புற நாகரிகம் என்ற முந்தைய கூற்றுகள் தவறு என்று தெரிகிறது.

எனவே, ஊடகங்களில் அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறப்படும் "பொ.ஆ.மு. 580 தொடக்கம்" என்ற கதையை, இந்தியத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கவில்லை.

பார்வைகள் முடிவுகள் அல்ல

மாநிலத் தொல்லியல் துறையின் சமீபத்திய கள அறிக்கைகளின்படி, கீழடியில் மொத்த மேட்டுப் பகுதியின் ஒரு பகுதி மட்டுமே இதுவரை அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான அகழிகள் சிறு பகுதிகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளன.

இதன் அடிப்படையில், "நகர்ப்புற அளவிலான குடியேற்றம்," "நகரத் திட்டமிடல்," அல்லது "மக்கள் தொகை அடர்த்தி" பற்றிய பல செய்திகள் வெறும் ஊகமே. தெருக்கள், சுற்றுப்புறங்கள் அல்லது மக்கள் தொகைப் பற்றிய விரிவான தரவுகள் இன்னமும் கிட்டவில்லை. வரலாற்றுத் தொல்லியலில், இத்தகைய ஊகங்கள் ஆபத்தானவை. வசிப்பிடப் பகுதிகள், தெருக்கள், கழிவு அமைப்புகள், சந்தைகள் அல்லது குடிமை உள்கட்டமைப்பின் முழுமையான தளவமைப்பு இல்லாமல், "நகரம்" என்ற கூற்றுக்கு இடமில்லை.

மறு ஆய்வு தேவை

2025 ஆம் ஆண்டின் ASI அறிக்கை பரவலான செய்தியாக மாறியது. ஆனால், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தேசியத் தொல்லியல் அமைப்பு அந்த அறிக்கை இன்னும் "மறுஆய்வில்" இருப்பதாக அறிவித்தது. சில பகுதிகள், குறிப்பாகக் கட்டமைப்புத் திட்டங்கள், கலாச்சார-காலப் பெயரிடல் மற்றும் அடுக்கியல் ஆவணங்கள் ஆகியவை "மீண்டும் செய்யப்பட வேண்டும் அல்லது தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியது.

மறு ஆய்வு செய்யப்பட்ட வெளியீடு வெளிவரும் வரை, அறிவார்ந்த ஒருமித்த கருத்து இல்லை. இதன் விளைவாக, பொதுத் தலைப்புச் செய்திகளாக்கப் பல முடிவுகள் இன்னும் அறிவியல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சாத்தியக்கூறுகள்

தள அறிக்கைகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் சுயாதீன மறுஆய்வுகள் மூலம் நாம் அறியும் உண்மைகள்:

·       செங்கல் கட்டமைப்புகள், உறைகிணறுகள் மற்றும் சுடுமண் குழாய் அமைப்புகள் உள்ளன.

·       மக்கள் அங்கே ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது.

·       பல தொல்பொருட்களின் தொகுப்பு உள்ளது. பல்வேறு வகையான பானைகள், மணிகள், உலோகக் கருவிகள், கருவிகள் மற்றும் ஆபரணங்கள். இவை கைவினை வேலைகள், வீட்டு வாழ்க்கை, வர்த்தகம் அல்லது பண்டமாற்று இருந்ததைக் குறிக்கின்றன.

·       சில அடுக்குகளிலிருந்து கிடைத்த கரி மாதிரிகள் கதிரியக்கக் கரிமக் காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளன. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்விடம் இருந்ததற்கான சில அறிகுறிகளைக் காட்டுகிறது.

·       கல்வெட்டுகளுடன் கூடிய பானை ஓடுகள் உள்ளன. இவை அங்கே ஆரம்பகால எழுத்து அல்லது முன்-எழுத்து மரபுகள் இருந்ததற்கான சாத்தியத்தைக் காட்டுகின்றன.

அசாத்தியக்கூறுகள்

குழப்பமான சூழல்கள், வரையறுக்கப்பட்ட அகழாய்வு, நடந்துகொண்டிருக்கும் அறிக்கை மறுஆய்வு இவற்றின் அடிப்படையில், பின்வரும் கூற்றுக்கள் தவறு:

·       கீழடி குடிமை நிறுவனங்கள், நிர்வாகம் அல்லது பெரிய அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு "நகரம்".

·       இத்தளம் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு "தமிழ்ச் நாகரிகத் தொடர்ச்சி" யைக் குறிக்கிறது.

·       பொறிக்கப்பட்ட அனைத்து பானை ஓடுகள், தேதியிடப்பட்ட கரி அடுக்குகள் மற்றும் கட்டமைப்பு எச்சங்கள் ஆகியவை ஒரே சீரான கலாச்சாரக் காலப்பகுதியைச் சேர்ந்தவை.

·       கீழடி, வட இந்திய நாகரிகங்களுக்கு முன்பிருந்த அல்லது இணையாக இருந்த ஒரு சுயாதீனத் தென் நாகரிகத்திற்கான உறுதியான ஆதாரம்.

வரலாற்று அபாயம்

ஆதாரங்களுக்கும் ஆரவாரத்திற்கும் இடையிலான இந்த இடைவெளி மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒரு கதை பொதுமக்களின் மனதில் கட்டமைக்கப் பட்டுவிட்டது. அடையாளம், பெருமை, மொழி அல்லது பிராந்திய அரசியல் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்ட கதை. இப்படி ஒன்று உருவானால், பின்னால் அதை திருத்துவது மிகவும் கடினம். அறிவியலில் இருந்து வரும் திருத்தங்கள் பரபரப்பான தலைப்புச் செய்திகளைப் போல மக்களின் கவனத்தைப் பெறுவதில்லை.

கீழடியின் நிச்சயமற்ற கூற்றுக்கள் உறுதியான வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், எதிர்காலத் தலைமுறையினர் தவறான வரலாற்றை நம்ப நேரிடும். அதற்கு எதிராக வரும் எந்தவொரு ஆதாரமும் புறக்கணிக்கப்படலாம் அல்லது அடக்கப்படலாம். ஏனெனில் பிழையை ஏற்றுக்கொள்வது மனித இயல்பில் அரிது.

கீழடி இப்போது ஒரு முக்கியமான தொல்லியல் நிகழ்வு. அதே சமயத்தில், சிக்கலான அறிவியல் பார்வைகள் நிறைந்த, இன்னமும் முடிவுபெறாத ஆய்வு. ஊடகங்கள் இதுகுறித்து செய்தி வெளியிடும்போது, சில குறிப்புகளை சொல்வது அவசியம்:

·       தொடர்ச்சியான, முறையான அகழாய்வு தேவை. அது முழு அடுக்கியல் ஆவணத்துடன் இருக்க வேண்டும்.

·       அனைத்து ஆய்வகத் தரவுகள், சூழல் தாள்கள், வரைபடங்கள், கரிமக் காலக் கணிப்புப் பதிவுகள் ஆகியவற்றின் வெளிப்படையான வெளியீடு.

·       பல்வேறு துறைகளில் இருந்து வரும் அறிஞர்களால் சுயாதீனமான சகாக்களின் மறுஆய்வு.

·       தொல்லியல் கண்டுபிடிப்புகள் (தரவு) மற்றும் விளக்கம் (கோட்பாடுகள்) ஆகியவற்றுக்கு இடையேயான தெளிவான பிரிப்பு.

·       அறியப்பட்டதற்கும் ஊகிக்கப்பட்டதற்கும் அல்லது கற்பனை செய்யப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தும் தெளிவான செய்தி விளக்கம்.

கீழடியின் ஆதாரம் அத்தகைய ஆய்வைத் தாண்டி உறுதி செய்யப்பட வேண்டும். அப்போது பண்டைய தமிழ்ச் நகர்ப்புற நாகரிகம் பற்றிய கூற்றுக்கள் வரலாற்றில் அதன் இடத்தை சந்தேகத்திற்கு இடமின்றி எய்தும். அதுவரை, ஒவ்வொரு கூற்றையும் உண்மையாக அல்லாமல் — ஒரு சாத்தியக்கூறாகவே நாம் கருத வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

8 எழுத்தறிவுக் கட்டுக்கதை

கீழடி தொல்பொருட்கள் பேச்சுப்பொருள் ஆன தருணத்திலிருந்து, அறிவியல் தளத்திற்கு அடியில் ஒரு உணர்ச்சி ஓட்டம் பாயத் தொடங்கியது. இந்தத் தளம் ஒரு உண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். தமிழ்ச் நாகரிகத்தின் பெருமையான சங்க இலக்கியம், வெறும் கவிதை மேதைமை மட்டுமல்ல, அது ஒரு உண்மையான வரலாற்று உலகத்திற்கான சாளரம் இருக்க வேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.

தொலைக்காட்சி அரங்குகள், அரசியல் பேரணிகள், தலைப்புச்செய்திகள் முதல் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் வரை, ஒரு கதை உடனடியாக உருவானது — கீழடி சங்கக் கலாச்சாரத்தை நிரூபிக்கிறது.

இது வசீகரிக்கும் யோசனைதான். கவிதைகள் துடிப்பான ஒரு சமூகத்தை விவரிக்கின்றன. அகழிகள் ஒரு குடியேற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று முழுமைப்படுத்த வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

ஆனால் அறிவியல் கோருகிறது ஒன்றுதான்: ஆதாரம். ஒரு கவிதை என்பது கள நாட்குறிப்பு அல்ல. மண் அடுக்குகள் இலக்கிய காலவரிசைகளுக்கு ஏற்பத் தங்களைத் சரிசெய்து கொள்ளாது. இலக்பொ.ஆ.மும் தொல்லியலும் கட்டாயத் திருமணம் செய்துகொள்ளும்போது,  அறிவியல் அழிந்துவிடும்.

சங்க இலக்கியத்தில் இருப்பது என்ன?

இரண்டையும் ஒப்பிடுவதற்கு முன், இலக்கிய மூலத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சங்க இலக்கியம் என்பது ஒரு வரலாற்று காலவரிசை அல்ல. அது ஹெரோடோடஸ், அசோகரின் கட்டளைகள் அல்லது இடைக்காலச் செப்பேடுகள் போலச் செயல்படவில்லை.

அது உவமைகள், கற்பனை, மிகைப்படுத்தல் மற்றும் கருத்தியல் நிறைந்த ஒரு கவிதை மரபு . கவிதைகள் நிலப்பரப்புகள், உணர்ச்சிகள், மன்னர்கள், காதலர்கள், வீரர்கள், பாணர்கள், கால்நடைகள் மற்றும் மழையைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் அவை அளவிடக்கூடிய எதனுடனும் தங்களை அரிதாகவே பிணைக்கின்றன.

சங்க நூல்கள் கிட்டத்தட்ட எந்த நிலையான தேதியையும் வழங்குவதில்லை. துல்லியமான புவியியல் ஒருங்கிணைப்புகளையோ அல்லது இட அமைவு அடையாளங்களையோ குறிப்பிடுவதில்லை. அவை நகரங்களைப் பற்றிக் குறிப்பிட்டாலும், ஆய்வு செய்யக்கூடிய தகவல்களாக அல்லாமல், அழகியல் பின்னணிகளாகவே உள்ளன. தொல்லியலுக்குத் தேவைப்படும் விதத்தில் கவிதைகளை ஒரு வரைபடத்திலோ அல்லது காலவரிசையிலோ குறிக்க முடியாது.

இது அவற்றின் மதிப்பைக் குறைத்துவிடாது. சங்க இலக்கியம் உலகக் கவிதையின் ஒரு தலைசிறந்த படைப்பு. ஆனால் அது ஒரு நேரடி வரலாற்று ஆவணம் அல்ல. அதை வரலாறு எற்று சொல்வது இலக்கியம் தொல்லியல் இரண்டிலுமே தவறான புரிதல்.

உணர்ச்சியின் வழியில்

இதையெல்லாம் மீறி, கீழடி ஒரு சங்க நகரம் என்ற பிரபலமான கதை எழுந்தது. இதன் பின்னால் உள்ள தர்க்கம் எளிமையானது. இந்தத் தளம் பண்டையதாகத் தோன்றுகிறது. தொல்பொருட்கள் நேர்த்தியாக இருக்கின்றன. மேலும் தமிழ்-பிராமி இருப்பு எழுத்தறிவைக் குறிக்கிறது. இங்கிருந்து, பொது விவாதம் முடிவுகளுக்குத் தாவிச் சென்றது. இது சங்கப் பாடல்களில் விவரிக்கப்பட்ட நாகரிகமாகவே இருக்க வேண்டும்.

வடிகால் கட்டமைப்புகள் உறுதி செய்யப்பட்டால், அவை கவிதைகளில் உள்ள நகர்ப்புறக் குடியேற்றங்களின் விளக்கங்களுடன் பொருந்தும் என்றொரு கூற்று இருந்தது. பானை ஓடுகளில் உள்ள எழுத்துகள் சங்க காலத்தின் எழுத்தை குறிக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது.

இந்தத் தளத்தின் "மதச்சார்பற்ற" தன்மை இலக்கியத்தின் தார்மீக உலகக் கண்ணோட்டத்துடன் பொருந்துகிறது என்ற கருத்துக்கள் இருந்தன. இந்த இணைப்புகள் தமிழர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக திருப்தியளிப்பதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருந்தன. ஆனால் இவை எதுவுமே அறிவியல் ரீதியாக நிறுவப்படவில்லை.

தமிழ்-பிராமி கல்வெட்டுகள் சுமார் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தோன்றுகின்றன என்பதை தொல்லியல் அங்கீகரிக்கிறது. கீழடியின் தேதிகள் இந்த பரந்த ஆரம்பகால வரலாற்றுக் காலத்திற்குள் வருகின்றன. இதன் பொருள், இத்தளம் சங்க இலக்கியத்தை இயற்றிய அல்லது தொகுக்கப்பட்ட காலவரிசைக்கு சமகாலத்தியதாக இருந்திருக்கலாம்.

அறிவியல் இங்கேயே நின்றுவிடுகிறது. ஊகங்கள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

ஒரு எழுத்து தானாகவே ஒரு நாகரிகத்தை உருவாக்குவதில்லை. ஒரு பெயரைக் கொண்ட பானை ஓடு ஒரு கவிஞரின் இருப்பை நிரூபிக்காது. குடியேற்ற முறை, அடர்த்தி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் இன்னும் உறுதியாகவிலை. ஒரு சில வீடுகள் ஒரு "நகர்ப்புற மையத்தை" உறுதிப்படுத்தாது. கீழடியில், அந்தக் கூறுகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பல முடிவுகள் ஒரு அங்கே பெரிய நகரம் இல்லை என்றே சுட்டிக்காட்டுகின்றன.

எழுத்து, கருவிகள், மணிகள் மற்றும் பானைகளின் இருப்பு ஒரு மேம்பட்ட குடியேற்றத்தைக் காட்டுகிறது. அது ஒரு சங்க காலப் பெருநகரத்தைக் காட்டுவதில்லை. இலக்கியம் தொல்லியலுக்கு இயல்பான ஆதாரமாக இருப்பது சரி. ஆனால், ஒரு இலக்கியத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஆய்வு அகழிக்குள் இறங்கக்கூடாது.

காலவரிசைச் சிக்கல்

காலக் கணிப்பில்தான் மிக முக்கியமான சிக்கல்உள்ளது. பல நூற்றாண்டுகளாகப் பல கட்டங்களில் இலக்கியம் தொகுக்கப்பட்டதால், சங்க காலத்தின் காலவரிசை நிச்சயமற்றதாக உள்ளது. பல அறிஞர்கள் சங்கத் தொகுப்பை பொ.ஆ.மு. 300 முதல் கி.பி. 300 வரை வைக்கிறார்கள். இதில் பெரிய கருத்து வேறுபாடு உள்ளது.

கீழடியின் கதிரியக்கக் கரிமத் தேதிகளும் அகழி, பின்னணி மற்றும் ஆய்வகத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. சில தேதிகள் பொ.ஆ.மு. 600–200 ஐச் சுற்றியுள்ள அடுக்குகளைக் காட்டுகின்றன. மற்றவை கி.பி. ஆரம்ப நூற்றாண்டுகளில் வருகின்றன. இந்தத் தளம் பல காலங்களைக் கொண்டது. கீழடியை "சங்க காலத்தின்" ஒற்றைப் பிம்பமாக நடத்த முயற்சிப்பது, உண்மை இல்லாத ஒரு மாயையை உருவாக்குகிறது.

இலக்பொ.ஆ.மும் தொல்லியலும் காலத்துடன் போராடுகின்றன. ஆனால் இரு தரப்பிலும் நிச்சயமற்ற நிலை இருக்கும்போது, இவற்றை இணைக்காமல் இருப்பது நலம். இதுவரை, கீழடியில் சங்க மன்னர்கள், கவிஞர்கள், வம்சங்கள், நிகழ்வுகள் அல்லது புவியியல் குறிப்புகளுடன் வெளிப்படையாக இணைக்கும் கல்வெட்டோ அல்லது தொல்பொருளோ கிடைக்கவில்லை. காலவரிசைகள் ஒன்றுடன் ஒன்று மேற்படிந்தாலும், அவை நேரடி ஆதாரத்தின் மூலம் ஒன்று என்று சொல்ல இடமில்லை.

சுயாதீன எழுத்தறிவுக் கட்டுக்கதை

கீழடியைச் சுற்றியுள்ள அரசியல் ரீதியாகப் பெரிதுபடுத்தப்பட்ட கூற்று, இது சுயாதீனமான தமிழ்ச் எழுத்து மரபை நிரூபிக்கிறது என்பதுதான். அதுவும் இந்த எழுத்துகள் வடதிசை, அசோகா பிராமி தாக்கத்திற்கு முந்தைய எழுத்துக்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தக் முடிவு மக்களிடம் உண்மை என்றே நம்பிக்கையுடன் வழங்கப்படுகிறது. ஆனாலும், அதற்கான அறிவியல் விவாதம் வேறு விதமாக உள்ளது.

தமிழ்-பிராமி, பரந்த பிராமி எழுத்தின் ஒரு பிராந்தியத் தழுவலாகவே பரவலாகக் கருதப்படுகிறது. கீழடியில் உள்ள எழுத்துக் குறிகள் ஒரு எழுத்து அமைப்பு அல்ல. அவை பெரும்பாலும் மொழியியல் பொருள் இல்லாத சின்னங்கள். அவை பல கலாச்சாரங்கள் மற்றும் காலப் பகுதிகள் முழுவதும் தோன்றுகின்றன. அவற்றைப் "முன்-எழுத்து" (proto-writing) அல்லது "மூதாதையர் தமிழ் எழுத்து" என்று விளக்குவது வெறும் ஊகம்தான்.

கீழடியில் உள்ள கல்வெட்டுகள் உண்மையில் மதிப்புமிக்கவை. ஆனால் அவை தனிநபர்கள் பெயர்கள் அல்லது எளிய வார்த்தைகளை குறிக்கின்றன. அவை ஒரு இலக்கியக் கலாச்சாரத்தை, ஒரு அதிகாரத்துவ அமைப்பை, அல்லது ஆவணங்களின் பரவலான மரபுகளை நிரூபிக்கவில்லை. "எழுத்தின் இருப்பு" என்பதிலிருந்து "உயர் எழுத்தறிவு நாகரிகம்" என்ற பாய்ச்சல் ஆதாரம் இல்லாத பொய்.

சங்கச் சமூகமும் கீழடிச் சமூகமும்

இருப்பினும், சில பரந்த ஒற்றுமைகளைக் கவனிக்க முடியும்.

·       சங்கப் பாடல்கள் விவசாய நிலப்பரப்புகள், கால்நடைச் செல்வம், கைவினைஞர்கள் மற்றும் வர்த்தக வழிகள் பற்றி விவரிக்கின்றன.

·       கீழடி விவசாயக் கருவிகள், கால்நடை எச்சங்கள், பானை மரபுகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் குறிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அளித்துள்ளது.

வேறுபாடுகளும் முக்கியமானவை.

·       சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் பெரிய, காவிரிப்பூம்பட்டினம் போன்ற கடலோர நகரங்கள்.

·       கீழடியில் இருப்பது சாதாரண உள்நாட்டு குடியேற்றம்.

·       சங்க ஆட்சியாளர்கள் அல்லது கவிஞர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் கண்டறியப்படவில்லை.

சங்க இலக்கியத்தையும் தொல்லியல் கண்டுபிடிப்பையும் மக்கள் இணைத்துப் பார்க்கும்போது ஒரு அரண்மனை வளாகம், ஒரு கோட்டை நகரம் அல்லது ஒரு இலக்கிய மையத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கீழடி ஒரு வளமான ஆரம்பகால வரலாற்றுக் கிராமம், அல்லது டவுன் வகைக் குடியேற்றம். சங்கக் கவிதை ராஜ்யங்கள், அரசவைகள் மற்றும் பரந்த நகர்ப்புற மையங்களைக் கற்பனை செய்கிறது. ஒன்று பொருள் சார்ந்தது. மற்றொன்று உருவகமானது. அவை ஒன்றுக்கொன்று துணைபுரியலாம், ஆனால் அவற்றை இணைக்க முடியாது.

இரண்டையும் இணைப்பதன் அரசியல்

கீழடியைச் சங்க இலக்கியத்துடன் சமன்படுத்தும் ஆசை அறிவியல் சார்ந்தது மட்டுமல்ல. அது அரசியல். திராவிட சித்தாந்தக் குழுக்களுக்கு, கீழடி கலாச்சார சுயாட்சி, மொழியியல் பெருமை மற்றும் பிராந்திய அடையாளத்தை வலியுறுத்துவதற்கான ஒரு கருவியாக உள்ளது.

இது தொல்லியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை விளக்குவதற்கு நுண்ணிய அல்லது வெளிப்படையான அழுத்தத்தை உருவாக்குகிறது. அரசியல் முகம் பொதுமக்களின் இடையே ஒரு பொய் பரப்பப்படுகிறது. அதன் விளைவாக, பொதுமக்களின் உற்சாகம் அரசியல் எதிர்பார்ப்பாக மாறுகிறது. இந்தச் சுழற்சிக்கு இடையே அறிவியலின் எச்சரிக்கை துரோகம் போலத் தெரிகிறது.

இந்தச் சூழல் நேர்மையான ஆராய்ச்சியை கடினமாக்குகிறது. ஒரு தளம் ஆய்வு செய்யப்படுவதற்கு முன் கதைகள் வந்துவிட்டன.

இலக்கியமும் தொல்லியலும்

இலக்கியத்தை தொல்லியலுடன் தொடர்புபடுத்த ஒரு சரியான வழி உள்ளது. அது பொதுவெளியில் நாம் பார்ப்பதை விட மிகவும் கட்டுப்பாடானது. இலக்கியம் கருதுகோள்களைத் தூண்டலாம். தொல்லியல் அந்தக் கருதுகோள்களைச் சோதிக்கலாம். ஆனால் ஒன்று மற்றொன்றை நிரூபிக்க வேண்டிய கட்டாய இல்லை.

பரபரப்பான துறைமுக நகரத்தை விவரிக்கும் ஒரு கவிதை, அந்த நகரத்தின் இருப்பை நிரூபிக்க முடியாது. கல்வெட்டுகள் அல்லது சந்தேகத்திற்கு இடமில்லாத கலாச்சார அடையாளங்கள் அவற்றுடன் பிணைக்கப்படாவிட்டால், ஒரு தொல்லியல் தளம் கவிதை ஆக்கங்களை உறுதிப்படுத்த முடியாது. இரண்டு துறைகளும் பேசலாம், ஆனால் ஒன்றுக்காக மற்றொன்று பேசக்கூடாது.

பொறுப்பான அணுகுமுறை, இரண்டு ஆதாரத் தொகுப்புகளையும் சுயாதீனமான சாட்சிகளாக நடத்துவதுதான். ஒவ்வொன்றும் அதன் சொந்த வரம்புகள், பலங்கள் மற்றும் பார்வைப் பிழைகள் (Blind Spots) கொண்டவை. அரசியல் அழுத்தத்தின் மூலம் அல்லாமல், இரு பக்கங்களிலிருந்தும் இயல்பாக ஒருங்கிணைவுகள் தோன்றும்போது மட்டுமே ஒரு தொடர்பைக் கோர முடியும்.

கவிதைகள் கவிதைகளாக இருக்கட்டும்

சங்க இலக்கியத்திற்கு உறுதிப்படுத்த கீழடி தேவையில்லை. கீழடிக்கு சங்க இலக்கியம் தேவையில்லை. ஒன்று தமிழ்க் கற்பனையின் பெருமை. மற்றொன்று தமிழ்ச் வரலாற்றின் உண்மை. இவை இரண்டும் தமிழ்ப் பெருமையை வெவ்வேறு வழிகளில் பலப்படுத்துகின்றன. ஒன்றுக்குள் மற்றொன்று அழிந்து விழாமல் இணைந்து இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை ஒரு செழுமையான, மிகவும் நேர்மையான பாரம்பரியத்தை உருவாக்குகின்றன.

கவிதைகள் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கலாம். மண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கலாம். எந்தச் சித்தாந்த சுமையுமில்லாத வாசகர்கள் இரண்டிற்கும் செவிசாய்க்க முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

 9 தோண்டிய இருவர்

தொல்லியல் என்பது மண்ணைப் பற்றிய அறிவியல் மட்டுமல்ல. மனோபாவத்தைப் பற்றிய அறிவியலும் கூட. இரண்டு தொல்லியலாளர்கள் ஒரே அகழியைப் பார்க்கலாம். ஆனால் வெவ்வேறு உள்ளுணர்வோடு வெளியேறலாம். கீழடி இந்த பிளவை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியது.

ஒருபுறம், கே. அமர்நாத் ராமகிருஷ்ணா. அவர் அந்தத் தளத்தின் காலவரிசை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றிய தனது விளக்கத்தில் வைத்த நம்பிக்கை, பலரின் ஆதரவுக்கான அழைப்புக் குரலாக மாறியது.

மறுபுறம், பி. எஸ். ஸ்ரீராமன். அவர் முறையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர். மண் வெளிப்படுத்தியதை மிகைப்படுத்துவதற்கு அவர் தொடர்ந்து மறுத்தார். இவர்களுடைய முரண்பட்ட குரல்கள் கீழடிக் கதையை மட்டுமல்ல. அதைச் சுற்றியுள்ள அரசியலையும் வடிவமைத்தன.

ஸ்ரீராமனின் பொறுமையான அணுகுமுறை

இந்தக் குழப்பத்தின் நடுவே, அப்போது ஒரு மூத்த அதிகாரியாக இருந்த பி. எஸ். ஸ்ரீராமன் அகழாய்வின் மூன்றாம் கட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நாடகப்பூர்வமான வெளிப்பாடுகளை எதிர்பார்த்துச் செய்தியாளர்கள் அந்தக் கட்ட அகழியைப் பார்வையிட்டபோது, கவனமான நேர்மை கொண்ட ஒரு மனிதரை அவர்கள் சந்தித்தனர்.

ஸ்ரீராமன் அவர்களிடம் தெளிவாகக் கூறினார்: "இந்தக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை." அவர் மேலும், "இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலிருந்து வர்த்தக இணைப்புகள் போன்ற முடிவுகளை நம்மால் எடுக்க முடியாது" என்று கூறினார்.

தி நியூஸ் மினிட்டில் வெளியான இந்த வார்த்தைகள், கீழடி குறித்த ஆர்வத்தைக் கடுமையாகக் குறைத்தன. ஸ்ரீராமனைப் பொறுத்தவரை, தொல்லியலுக்கு விதிகள் இருந்தன. தரவு முதலில் வரவேண்டும், விளக்கம் காத்திருக்க வேண்டும். அவர் கீழடியை மற்ற எந்தத் தளத்தையும் போலவே நடத்தினார். இது ஒரு கலாச்சார சிகரம் அல்ல; ஒரு பொறுமையான புதிர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெற்ற பின்னரும், மூன்றாவது கட்டத்திற்கான அறிக்கையைத் தயாரிக்குமாறு ASI யால் ஸ்ரீராமன் முறையாகக் கேட்கப்பட்டார். ஜூலை 2025 இல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அவர் அளித்த நேர்காணலில், "தனது அறிக்கையைப் பொதுமக்களுக்குக் கொடுப்பது அகழாய்வாளர் பொறுப்பு" என்று கூறினார்.

அவர் நகர நாகரிகம், எழுத்தறிவு, அல்லது தமிழ்ப் புத்துயிர் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஆவணப்படுத்தல் — அடுக்குகள், மாதிரிகள், சூழல்கள் — பற்றிப் பேசினார். அவருடைய வார்த்தைகள் ஒரு தத்துவத்தைச் சுட்டிக்காட்டின: தொல்லியலின் முதல் கடமை அடையாளம் அல்ல; துல்லியம் ஆகும்.

அமர்நாத் ராமகிருஷ்ணனின் வாதம்

இதற்கு நேர்மாறாக, ராமகிருஷ்ணா முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். 2025 இல், அவர் நீண்டகாலமாக எதிர்பார்த்த அகழாய்வு அறிக்கை ASI மறு ஆய்வாளர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்கொண்டது. அவருடைய காலவரிசையின் பகுதிகள், குறிப்பாகக் கீழடியின் முன்மொழியப்பட்ட ஆரம்ப காலம், ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சகம் வெளிப்படையாகக் கூறியது.

மறு ஆய்வாளர்கள், கலாச்சாரக் காலத்தை பொ.ஆ.மு. 300 க்குப் பிறகு உள்ள காலத்திற்கு மாற்ற பரிந்துரைத்தனர். ராமகிருஷ்ணா வலுவாக எதிர்வினையாற்றினார். ஜூலை 17, 2025 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு நேர்காணலில், அவர், "ஒரு அறிக்கை ஒப்படைக்கப்பட்ட பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது; பிழை திருத்தம் மட்டுமே நடக்கும். நான் அந்தக் கருத்தை மாற்றினால், நான் ஒரு குற்றவாளியாக ஆகிறேன்" என்று அறிவித்தார்.

இது முறையான அறிவியல் மொழி அல்ல. இது நிறுவன அழுத்தத்திற்கு எதிராகப் பேசும் போராட்ட மொழி.

"இந்த அறிக்கையில் அனைத்து ஆவண ஆதாரங்களும் காலவரிசைத் தொடர்ச்சியும் உள்ளன" என்று அவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார். அவருடைய தேதிகள் "அடுக்கியல் தொடர்ச்சி மற்றும் AMS முடிவுகளின்" அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் தனது விளக்கத்தை பல சாத்தியக்கூறுகளில் ஒன்றாக அல்லாமல், அறிவியல் ரீதியாகச் சரியானது என்று கட்டமைத்தார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் மதுரையில் நடந்த ஒரு விரிவுரையில், "வரலாறு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று அறிவித்தார். கல்வெட்டுகள், மண் மற்றும் கற்கள் ஆகிய தொல்லியல் சான்றுகள் இலக்கியக் கற்பனையை விட மேலானது என்று அவர் வலியுறுத்தினார். இவை போற்றுதலுக்குரிய உணர்வுகள். ஆனால், அவருடைய சொந்த விளக்கங்களின் அறிவியல் அணுகுமுறை போதுமானதாக இல்லை.

இரு வேறு தத்துவங்கள்

இவ்வாறாக, கீழடி இரண்டு தொல்லியல் தத்துவங்களின் சந்திப்பு மையமாக மாறியது. ஸ்ரீராமன் விநயத்தை வற்புறுத்தினார். தொல்பொருட்கள் தங்களால் முடிந்ததை மட்டுமே பேசட்டும், அதற்கு மேல் வேண்டாம் என்றார்.

ராமகிருஷ்ணா நம்பிக்கையை வலியுறுத்தினார். அடுக்குகள் ஒரு தெளிவான கதையைச் சொல்கின்றன, அதைப் பலமாக உறுதிப்படுத்துவது தொல்லியலாளரின் கடமை என்றார். இரண்டு கருத்துக்களும் தொல்லியல் நடைமுறைக்குள் உள்ளன.

இரண்டு ஆய்வாளர்களும் தாங்களே துறையின் கொள்கை நிலைப்பாட்டை பாதுகாப்பதாக நம்பினர். ஆனால், அரசியல் சக்திகள் அவர்களில் ஒருவருக்குப் பின்னால் அணிதிரண்ட பிறகு, அவர்களுடைய அணுகுமுறைகள் கடுமையாக வேறுபட்டன.

அரசியல் இரைச்சல்

ராமகிருஷ்ணாவின் இடமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன. பொதுமக்களின் பாசம் நிர்வாக அங்கீகாரத்தை உருவாக்காது. திராவிடக் கட்சிகள், மே 17 இயக்கம், தமிழ்க் கலாச்சார ஆர்வலர்கள் மற்றும் பல பொது விமர்சகர்கள் அவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரினர்.

ஆனாலும் இந்த குழுக்களில் எதற்கும் இந்தியத் தொல்லியல் துறையின் மீது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. ஒரு மத்திய அரசுத் துறை என்பதால், ASI யின் பணியாளர்கள் மற்றும் இடமாற்றங்கள் மத்திய குடிமைப் பணி விதிகளின் கீழ் மட்டுமே வருகின்றன. எந்த ஒரு மாநிலக் கட்சி, கலாச்சார அமைப்பு அல்லது ஆர்வலர் குழுவும் இடமாற்றத்தைத் தடுக்கவோ, சவால் விடவோ மாற்றவோ முடியாது.

அவர்களுடைய போராட்டங்கள் அடையாளப் பூர்வமாகவே முக்கியத்துவம் பெற்றன. நிறுவன ரீதியாக அல்ல. அவை இரைச்சலை உருவாக்கின. கொள்கையை உருவாக்கவில்லை.

அந்த இரைச்சல் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அது ஒரு அதிகாரியின் சாதாரண இடமாற்றத்தைத் தியாகக் கதையாக மாற்றியது. அது ஒரு அறிவியல் பிணக்கை அடையாளத்தின் அரசியலமைப்பு நெருக்கடியாக உயர்த்தியது. அது ஒரு தொல்லியலாளரைக் கலாச்சாரக் காவலர் நிலைக்கு உயர்த்தியது.

இதற்கிடையில், மெதுவான அறிவியலையும் எச்சரிக்கையான முடிவுகளையும் ஆதரித்த மற்றொரு தொல்லியலாளர். அவருடைய வாழ்க்கையை வரையறுத்த கட்டுப்பாட்டால் பெரிதும் மறைக்கப்பட்டு, பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவராகவே இருந்தார்.

கீழடிக்குத் தொல்லியல் அறிவியல் தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, இரு தத்துவங்களின் சண்டையே கிடைத்தது. அடையாளம், அரசியல் மற்றும் பொது ஆசை ஆகியவை ஒன்றாகக் குவியும்போது, தொல்லியல் எவ்வாறு அரசியல் ஆயுதமாக மாறுகிறது என்பதற்கான உதாரணம் கீழடி.

கீழடி வெறுமனே ஒரு பண்டைய வாழ்விடத் தளம் அல்ல. அது நவீன தமிழகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஒரு கண்ணாடி. கதைகள் எப்படி உருவாகின்றன, எப்படி நாயகர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், கடந்த காலம் எப்படிப் புரிந்து கொள்ளப்படும், அதிலும் அவசரப் போக்குகள் என அனர்த்தத்தை விளைவிக்கும், என்பதைக் காட்டுகிறது.

முடிவில், எந்தத் தொல்லியலாளர் "சரியானவர்" என்பது கேள்வி இல்லை. உண்மையான கேள்வி இதுதான்: யார் முறையைப் பாதுகாத்தார்? ஏனெனில் தொல்லியலில், உண்மையைப் போலவே, வரைமுறையும் முக்கியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

10 பத்திரிகையாளர் சந்திப்புகள்

தொல்லியல் மெதுவாகச் செயல்பட வடிவமைக்கப்பட்ட ஒரு துறை. சான்றுகள் பதிவு செய்யப்பட வேண்டும். அடுக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும். தேதிகள் சோதனை செய்யப்பட வேண்டும். முடிவுகள் உள் மற்றும் வெளி ஆய்வுகளில் சரிபார்க்கப்பட வேண்டும்.

இந்த உடனடித் தகவல் யுகத்தில், தொல்லியலின் வேகம் பெரும்பாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு வேகத்துடன் ஒத்துப்போவதில்லை. கீழடி இந்த மோதலின் மிகத் தெளிவான உதாரணம். விளக்கங்கள் அறிவியல் இதழ்களை எட்டுவதற்கு முன்பே ஒலிவாங்கிகளையும் தொலைக்காட்சி நிலையங்களையும் அடைந்தன.

ஆரம்பகால வேகம்

அகழாய்வின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு போக்கு அதிகரித்தது. கீழடித் தளத்தின் காலவரிசை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் முக்கியமான அம்சங்கள் தீர்வு காணப்படாமல் இருந்தன. அப்போதைய முடிவுகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேசிய பத்திரிகையாளர் சந்திப்புகள் நடந்தன.

பத்திரிகையாளர்களுக்கு அழகான அகழிகள், கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட தொல்பொருட்கள், எழுத்தறிவு கொண்ட சமுதாயத்தை உணர்த்தும் பானை ஓடுகளின் படங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் கற்பனை இந்த காட்சிகளைப் பற்றிக்கொண்டது. தற்காலிகமாக இருக்க வேண்டிய அறிவிப்புகள் உறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கருதுகோள்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு, அவை உண்மை என்று அனைவரும் நினைக்கும் அளவுக்குத் தொடர்ந்தன.

ஒரு சில பானை ஓடு ஒரு பெயருடன் கிடைத்தால் அது பரவலான எழுத்தறிவை நிரூபிக்க முடியாது என்று தொல்லியலாளர்கள் அறிவார்கள். ஒரு வடிகால் கால்வாய் நகரமயமாக்கலை அறிவிக்க முடியாது. ஒப்பீட்டுத் தரவு இல்லாமல், ஒரு சில வீடுகள் சமூகத் தன்மையை வெளிப்படுத்தாது.

எனவே, முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன் ஒரு தளம் முழுமையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அறிவியல் நுணுக்கத்திற்கு அரிதாகவே இடமுண்டு. உறுதி, நம்பிக்கை மற்றும் சூடான கதைகளே ஊடகங்களுக்குத் தேவை.

தரவை மீறிய முடிவுகள்

கீழடியின் பத்திரிகையாளர் சந்திப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தன. குறிப்பாக கீழடி விவகாரம் அரசியல்மயமாக்கப்பட்ட கட்டத்தில் எல்லா ஊடகங்களும் கீழடியை உற்று நோக்கின. இந்த ஊடக வெளிச்சத்தில் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கூறுவதற்கும் அவற்றை விளக்குவதற்கும் இடையேயான எல்லை அடிக்கடி மங்கலாக்கியது.

ஆரம்பகால எழுத்தறிவு, கலாச்சார நேர்த்தி மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் பற்றிய அறிக்கைகள், உறுதியான ஒருமித்த கருத்தை தெரிவிப்பதாகக் காட்டப்பட்டன. சில சமயங்களில், ஊடகங்களின் விவரிப்புகள் அதையும் தாண்டி நகர்ந்தது. முடிவுகள் தரவுக்கு முன்னால் பாய்ந்து சென்றன. பின்னர் தரவு முடிவுகளுடன் பொருந்தும்படி மாற்றப்பட்டது.

மறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகள் இல்லாதது இந்தத் தவறுகள் மேலும் வளர வழிவகுத்தது. வெளியிடப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமல், உரத்த குரல்களும் அதிகார அறிவிப்புகளும் நிகழும் மேடையாக மாறியது. தொல்லியல் பகுத்தறிவுக்குப் பதிலாக, சொற்பொழிவுகளின் சொல்நயம் செய்தியானது.

அகழாய்வுப் பத்திரிகைகள், சூழல் அறிக்கைகள், ஆய்வகக் குறிப்புகள், விரிவான அடுக்கியல் வரைபடங்கள் ஆகியவை பொது மக்களுக்குப் புரியாது. அறிவியல் இல்லாத இடத்தை அரசியல் ஆக்கிரமித்தது. மக்கள் கீழடி பற்றிய செய்திகளுக்கு அதிகார அழுத்தங்களால் வடிவமைக்கப்பட்ட பத்திரிகை அறிக்கைகளை நம்பியிருந்தனர்.

அறிவியல் மேல் அவநம்பிக்கை

இந்நிலை ஒரு முரண்பாட்டை உருவாக்கியது. கீழடியைப் பற்றி எவ்வளவு அதிகமாகப் பேசப்பட்டதோ, அவ்வளவு குறைவாக பொதுமக்கள் அதைப் புரிந்துகொண்டனர். அது ஆய்வு செய்யப்படும் முன்பே ஒரு அரசியல் சின்னமாக மாறியது. அதன் முக்கியத்துவம் ஒலிவாங்கிகள் மற்றும் கேமரா லென்ஸ்கள் மூலம் கதைகளாக உருவாக்கப்பட்டது. பொது விவாதத்தின் களத்தில், கீழடி ஒரு விவாதப் பொருள் ஆனது.

இதற்கிடையில், அவசர முடிவுகளை எடுப்பதற்கு எதிராக எச்சரித்த தொல்லியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களுடைய முறையான ஒழுக்கம் பற்றிய எச்சரிக்கைகள் செய்தி ஆகவில்லை.

கார்பன் தேதிகள் உள்நாட்டு அளவில் சீராக இருக்க வேண்டும். தொல்பொருட்கள் தனியாக அல்லாமல் அவற்றின் அசல் இடத்தில் வைத்து விளக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காலங்கள் தனிப்பட்ட கண்டுபிடிப்புகள் மூலம் அல்லாமல் பல ஆய்வுகள் மூலம் நிறுவப்பட வேண்டும். என்று தொல்லியலாளர்கள் நினைவூட்டினர். ஆனாலும் கேமராக்கள் அவர்களைப் புறக்கணித்தன.

மறு ஆய்வு காட்சிக்குள் நுழைந்தபோது, பொதுப்பார்வை அறிவியலுக்கு எதிராகத் திரும்பியது. ஆரம்பகாலக் கூற்றுக்களுக்குச் சவால் விடுவது கல்விச் செயல்முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படவில்லை. உண்மையை மறைக்கும் முயற்சிகளாகக் கருதப்பட்டன. திருத்தங்களைப் பரிந்துரைத்த மறுஆய்வாளர்கள் சில வட்டாரங்களில் தமிழர் அடையாளத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அறிவியல் முறையே ஒரு அரசியல் அச்சுறுத்தலாக மறுவடிவமைக்கப்பட்டது.

உண்மையை நம்ப மறுத்தல்

பொதுமக்கள் ஊகத்தை உண்மையாக ஏற்றுக் கொண்டனர். அறிவியல் சரிபார்ப்பை நம்ப மறுத்தனர். கீழடியின் செய்தி ஊடக விவரிப்பில் தொல்லியல் புறந்தள்ளப்படும் என்பதை வெளிப்படுத்தியது.

தகவல் கொடுக்க வேண்டிய பத்திரிகையாளர் சந்திப்புகள் பிரச்சார மேடைகளாக மாறின. அவை, அறிவியல் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத எதிர்பார்ப்புகளை உருவாக்கின.

கீழடிக்குச் சரியான அறிவியல் முறை தேவைப்பட்டது. அதற்குப் பதிலாக, உணர்ச்சிப் பூர்வமான கேள்விகளுக்கு விரைவான பதில்களை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. உரையாடலின் நங்கூரமாக இருக்க வேண்டிய தொல்லியல், கைவிலங்காக மாறியது.

கற்றுக்கொண்ட பாடம்

பாடம் எளிமையானது. ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது:

ஒரு தளம் பலரால் பேசப்படுவதால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆய்வு செய்யப்படுவதால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

முடிவுகள் அகழிகளிலிருந்து மிக வேகமாகப் பாய்ந்து செல்லும்போது, அவை முடிவுகளாகவே இருக்காது. அவை கதைகளாக மாறிவிடும்.

மேலும் கதைகள், ஒருமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால், மறு ஆய்வு மூலம் அதனை மாற்றுவது கடினம்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

11 இடமாற்றச் சர்ச்சை

பெரும்பாலான அரசுத் துறைகளில், ஒரு அதிகாரியின் இடமாற்றம் எல்லோரும் கடந்து செல்லும் ஒரு நிகழ்வுதான். இது பொது உணர்வுகளிலிருந்து சுயாதீனமாகச் செயல்படும் பணி விதிகளைக் கொண்ட, அரசாங்க செயல்பாடு. ஆனால் 2017 ஆம் ஆண்டில், இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) வழக்கமான இந்தச் செயல்பாடு சர்ச்சையைக் கிளப்பியது.

முக்கியமற்றதாக இருக்க வேண்டிய ஒரு இடமாற்றம் அரசியல் நாடகத்தின் ஒரு காட்சியாக மாறியது. கீழடி, சில அகழாய்வுக் கட்டங்களை மட்டுமே முடித்திருந்தாலும், அதன் அகழிகளைத் தாண்டி அரசியலாகா ஏற்கனவே மாறிவிட்டது என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே, அதன் தலைமை தொல்லியலாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இடமாற்றம், ஒரு சர்ச்சைக்கான மையப் புள்ளியாக ஆனது.

நிர்வாக விளக்கம்

இந்த நடவடிக்கையை ASI அதிகாரிகள் வழக்கமானது என்று விவரித்தனர். அதிகாரிகள், குறிப்பாக 'குரூப் ஏ' சேவைகளில் உள்ளவர்கள், நிர்வாக சுழற்சியை உறுதி செய்வதற்காக காலம் தோறும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ குறிப்பு எதுவும் இல்லை.

களத்தில் அவரது செயல்திறனில் திருப்தியின்மை இருந்ததாகக் குறிக்கும் எந்த முறையான குறிப்பும் இல்லை. அதிகாரத்துவ அமைப்புக்குள், இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிர்வாக முடிவாகவே பதிவானது. ஆனால் அந்த அமைப்புக்கு வெளியே, பொதுக் கற்பனை ஏற்கனவே ஒரு மாறுபட்ட கதையை எழுதத் தொடங்கிவிட்டது.

அரசியல் தலையீடு

கீழடி தமிழ் அடையாளம், பெருமை மற்றும் வரலாற்று மீட்டெடுப்பு ஆகியவற்றின் மையப்புள்ளியாக மாறிய ஒரு தருணத்தில், இடமாற்றம் பற்றிய செய்தி தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்குள் கசிந்தது. ஒரு குறிப்பிடத்தக்க தளம் ஒரு தமிழ்த் தொல்லியலாளரால் அகழாய்வு செய்யப்படுகிறது என்ற எண்ணம் திட்டத்தைச் சுற்றியுள்ள கலாச்சார மனோபாவத்துடன் அழகாகப் பொருந்திப் போனது.

அந்தத் தொல்லியலாளர் இடமாற்றம் செய்யப்பட்டபோது, திராவிட அரசியல் கட்சிகள் அதை உடனடியாக ஒரு அச்சுறுத்தலாகவே உணர்ந்தன. பொது விவாதம் ஒரு பாய்ச்சலை எடுத்தது: அரசாங்கம் "வழக்கமானது" என்று கூறியதை, பலர் பழிவாங்கும் நடவடிக்கை என்று அறிவித்தனர்.

திராவிடக் கட்சிகள், குறிப்பாக திமுக மற்றும் விசிக, இந்த இடமாற்றத்தைக் கண்டித்தன. இந்த நடவடிக்கை, தமிழ்த் தொன்மையின் கண்டுபிடிப்பைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி என்று அவர்களின் அறிக்கைகள் குற்றம் சாட்டின. மாணவர் குழுக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் இந்த வாதத்தை எதிரொலித்தனர். வரலாற்று ஒடுக்குமுறை நடந்ததாகக் குற்றம் சாட்டினர்.

தொல்லியலை அரசியலுடனும், அறிவியலை உணர்வுடனும் கலந்த முழக்கங்களை ஏந்தியபடி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த குறியீடு நியாயமானதா என்று கேட்பதற்கு முன்பே, இந்த நிகழ்வுகள் அரங்கேறின.

மௌனத்தின் தாக்கம்

ராமகிருஷ்ணாவின் தனிப்பட்ட பதிலும் ஊகங்களுக்கு இடம்தருவதாக இருந்தது. இடமாற்ற உத்தரவுக்குப் பிறகு அவர் நெடுவிடுப்பு எடுத்தார். மேலும் அறிக்கைகளின்படி, அவர் முறையான பொறுப்பு ஒப்படைப்பு நடைமுறைகளை முடிக்கவில்லை. அவருடைய மௌனம் ஒரு கதை சொல்லும் சாத்தியமாக மாறியது.

மௌனம் ஊகங்களுக்கு வளமான மண். அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அவர் ஆதாரங்களை ஒப்படைக்க மறுக்கிறாரா? அவர் ஒரு கலாசாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் அவரை அகற்ற "ஒன்றிய" அரசு முயற்சிக்கிறதா?

இந்தக் கூற்றுக்களில் எதற்கும் ஆவண ஆதாரம் இல்லை. ஆனாலும் அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்த உணர்ச்சிபூர்வமான தர்க்கத்திற்கு ஒத்திசைவாக அமைந்ததால் பரவலாகப் பேசப்பட்டன.

இடமாற்ற உத்தரவுகள் மத்திய அரசின் தனிப்பட்ட உரிமை. போராட்டங்கள், தலையங்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் — எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தாலும் — நிர்வாக அதிகாரத்தை மாற்றாது. ASI அதிகாரிகளின் உள் இடமாற்றங்களில் ஒரு மாநிலக் கட்சி, ஒரு கலாச்சார அமைப்பு அல்லது ஒரு பொது இயக்கத்தால் தலையிட முடியாது என்பது சட்டம் கூறும் உண்மை. ஆனாலும், போராட்டங்கள் அநீதியின் ஒரு பிம்பத்தை உருவாக்கின. அது இந்த சட்ட உண்மையை மறைத்தது.

உண்மைக்குப் புறம்பான மாற்றம்

இடமாற்றம் பற்றி எவ்வளவு அதிகமாக விவாதிக்கப்பட்டதோ, அவ்வளவு தூரம் அது அதிகாரத்துவ யதார்த்தத்திலிருந்து வதந்திகளாக மாறியது. அமர்நாத் ராமகிருஷ்ணன் போராடும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக மாறினார். இடமாற்றம் கலாச்சார ஒடுக்குமுறையின் உருவகமாக மாறியது.

இந்த மாற்றத்தில், தொல்லியல் நிர்வாகத்தின் சிக்கல்கள் — ஆவணப்படுத்தல், மேற்பார்வை, துறைசார் ஒருங்கிணைப்பு, நிதி மேற்பார்வை — ஆகியவை முற்றிலும் மறைந்துவிட்டன.

வெளிப்படையாக விவாதிக்கப்படக்கூடிய அறிவியல் கேள்விகள் அரசியல் சிக்கல்களுடன் இணைக்கப்பட்டன. தளத்தின் காலவரிசை பற்றிய எந்தவொரு திருத்தமும், விமர்சனமும் அதே "ஒடுக்குமுறையின்" நீட்சியாகவே காணப்பட்டது. கீழடி ஒரு போர்க்களமாக மாறியது. அங்கு நிர்வாக உண்மைகள் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்துடன் ஒப்பிடும்போது முக்கியமற்றதாக இருந்தன.

இதற்கிடையில், அகழாய்வு புதிய தலைமையின் கீழ் தொடர்ந்து நடந்தது. அது நடக்க வேண்டிய ஒன்றுதான். அரசியலுக்காகத் தொல்லியல் ஆய்வை நிறுத்த முடியாது. ஆனால் பொதுமக்கள் மேற்கொண்டு நடந்த ஆய்வுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒரு தொல்லியலாளர் பொதுமக்கள் கேட்க விரும்பிய "உண்மை"யைப் பேசியதால் அகற்றப்பட்ட நாயகனாக சித்தரிக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்தவர், முழு தொழில்முறை ஒழுங்குடன் செயல்பட்டாலும், சந்தேகத்துக்கு உரியவராகவே பார்க்கப்பட்டார். இந்த பதற்றம் பல ஆண்டுகளாகக் கீழடித் தளத்தின் மீது நிழலிட்டது.

பொதுப் புரிதலின் பலவீனம்

இந்த இடமாற்றச் சர்ச்சை அறிவியல் நிறுவனங்களைப் பற்றிய பொதுப் புரிதலில் உள்ள ஒரு ஆழமான பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் குறியீடாக மாறும்போது, சாதாரண நிர்வாக முடிவுகள் சதிச்செயல்களாக உருமாறும். கலாச்சாரப் பெருமை தீவிரமடையும்போது, வழக்கமான காகிதப்பணி கூட வரலாற்று ஒடுக்குமுறையாக விளக்கப்படும். இடமாற்றத்தின் உண்மை அரசாங்கத்தின் சாதாரண செயல்முறை. ஆனால் இடமாற்றத்தின் உட்பொருள், கூட்டு கற்பனையில் விபரீதமாக விரிந்தது.

முடிவில், இடமாற்றம் ஒரு வழக்கமான நிர்வாக நடவடிக்கையா அல்லது மறைக்கப்பட்ட அழுத்தமா என்ற கேள்வி கிட்டத்தட்ட தேவையற்றது. முக்கியமானது என்னவென்றால், பொது மக்கள் நிர்வாகத் தர்க்கத்தை எவ்வளவு விரைவாகக் கைவிட்டார்கள், சதிச்செயல் என்ற கூற்றை எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான்.

கீழடி இந்த மாற்றத்திற்கான அரங்கமாக மாறியது. ஒரு அகழாய்வுத் தளம் உணர்வுகளின் போர்க்களமாக மாறியது. மேலும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு இடமாற்ற உத்தரவு, ஒரு தேசிய சர்ச்சையாக மாறியது.

கீழடியின் மண் ஒரு கதையை வழங்கியது. இடமாற்றம் மற்றொரு கதையை வழங்கியது. தமிழ்நாடு இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

12 தொடர்வதில் தொல்லைகள்

தொல்லியல் என்பது, நீண்ட நினைவுத் திறன் கொண்ட ஒரு துறை. இது தனிநபர்களின் நினைவல்ல. மாறாக, பூமியின் நினைவுகளை ஆவணங்களாக நுணுக்கமாக மொழிபெயர்க்கும் துறை.

ஒவ்வொரு அகழிக்கும் ஒரு பதிவு தேவை. ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு வரைபடம் தேவை. ஒவ்வொரு தொல்பொருளுக்கும் ஒரு பின்னணி தேவை. தொல்லியலின் உண்மைகள் தொல்பொருட்களில் மட்டும் இல்லை. அவற்றைப் பிணைக்கும் சூழலில்தான் உள்ளது. அவை எங்கே கண்டுபிடிக்கப்பட்டன, எப்படி வைக்கப்பட்டிருந்தன, அவற்றுக்கு மேலே என்ன இருந்தது, கீழே என்ன இருந்தது என்பவைதான் முக்கியம்.

இதை மறந்தால், ஒரு தளம் வாழ்க்கைத் தொடர்ச்சியாக இல்லாமல், வெறும் பொருட்களின் தொகுப்பாக மாறிவிடும். இதனால்தான் ஆவணங்கள் இல்லாதபோது தொல்லியல் முறை பிழறும். கீழடி, இதற்கு விதிவிலக்கு அல்ல.

நிர்வாக மாற்றத்தின் பாதிப்பு

கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இடமாற்ற உத்தரவு 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அகழாய்வுத் துறையின் வழிமுறைகள் பொதுவெளியில் முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பக் கட்டங்களில் கணிசமான தொல்பொருட்கள், அடுக்கியல் வடிவங்கள், மண் மாதிரிகள் மற்றும் கலாச்சார அடுக்குகள் குறித்த குறிப்புகள் இருந்தன.

ஆனால் தொல்லியலில் விளக்கம் என்பது தனிப்பட்ட செயல் அல்ல, ஒரு கூட்டு முயற்சி. ஒரு புதிய அதிகாரி ஒரு அகழியை மட்டுமல்ல, ஒரு அறிவுசார் கட்டமைப்பையும் பெறுகிறார். இந்தக் கட்டமைப்பு பதிவுகளின் வடிவத்தில் மட்டுமே உள்ளது. ஆவணங்கள் தெளிவாக ஒப்படைக்கப் படாவிட்டால், தொடர்ச்சி உடைந்து போகிறது.

அறிக்கைகள் ராமகிருஷ்ணா இடமாற்றத்திற்குப் பிறகு விடுப்பு எடுத்ததாகவும், முறையான ஒப்படைப்பு நடைமுறைகளை உடனடியாக முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டன. இது அவருடைய தனிப்பட்ட முடிவா, அவரைச் சுற்றியுள்ள அரசியல் புயலுக்கு ஒரு பதிலா, அல்லது வெறும் நிர்வாக தாமதமா என்பது தெளிவாக விளக்கப்படவில்லை.

ஆனால் அதன் விளைவு தெளிவாக இருந்தது:

புதிதாக வந்த அதிகாரி நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டார். என்ன அகழாய்வு செய்யப்பட்டது? என்ன மீதமுள்ளது? என்ன மாதிரி எடுக்கப்பட்டது? எவற்றிற்குத் தேதி நிர்ணயிக்கப்பட்டது? எந்தச் சூழல்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டன, எவை சரிபார்ப்பிற்குக் காத்திருந்தன? என்று ஏகப்பட்ட இடைவெளிகள். இடைவெளிகளை விளக்க முடியாது. விளக்காமல் ஆய்வையும் முழுமை செய்ய முடியாது.

ஸ்ரீராமன் மீதான சுமை

இந்தத் தொடர்ச்சிச் சீர்குலைவு, பி. எஸ். ஸ்ரீராமன் மூன்றாவது கட்டப் பொறுப்பை ஏற்றபோது, அவர் மீது ஒரு சிக்கலை சுமத்தியது. காகிதத் தொடர்ச்சி சுமூகமாக மாறாத ஒரு தளத்தைப் பெற்றபோதிலும், அவர் அறிவியல் நிலைத்தன்மையை பராமரிக்க வேண்டியிருந்தது.

புதிய அதிகாரி வெறுமனே ஒரு அகழிக்குள் நுழைந்து தோண்டத் தொடங்கினார் என்று பொதுமக்கள் கற்பனை செய்தனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் முழுமையடையாத ஆவணங்கள், உயர்த்தப்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் சந்தேகத்தின் புயலுக்குள் நுழைந்தார்.

அவருடைய பதவிக் காலத்தில் ஸ்ரீராமன் எச்சரிக்கையை வலியுறுத்தினார். வலுவான ஆதாரம் இல்லாமல் நகர்ப்புறம், எழுத்தறிவு அல்லது தொலைதூர வர்த்தகத்தைக் கோருவதில் அவர் தயக்கம் காட்டினார். அவர் பெற்ற ஆவணங்களின் பலவீனத்தை தொல்லியல் புரிந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு தொல்லியலாளர் நிச்சயமற்ற அடிப்படை அடுக்குகளின் மீது உறுதியான விளக்கங்களைக் கட்டமைக்க முடியாது. ஆவணப்படுத்தல் தான் இந்தத் துறையின் முதுகெலும்பு. முதுகெலும்பு வளைந்தால், உடல் நேராக நிற்க முடியாது.

அறிக்கையின் சட்டப்பூர்வப் பங்கு

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மேற்பார்வையிட்ட அகழாய்வுப் பருவத்திற்கான இறுதி அறிக்கையைத் தயாரிக்குமாறு ASI ஸ்ரீராமனிடம் கேட்டது. ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் மீண்டும் வெளிப்பட்டது. ஒரு அறிக்கை என்பது வெறும் கதை அல்ல. அது ஒரு தளத்தின் சட்ட, அறிவியல் மற்றும் காப்பக நினைவகம்.

அதில் கச்சாத் தரவு, சூழல் குறிப்புகள், முறையான படிகள், எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் தளத்தைப் பார்க்கத் தேவையான ஒவ்வொரு விவரமும் இருக்கும். ஓய்வு பெற்ற பிறகு அவர் அளித்த நேர்காணலில், ஸ்ரீராமன் பொதுமக்களுக்கு அகழாய்வாளரின் கடமையைப் பற்றிக் கூறினார்.

அவர் பத்திரிகையாளர் சந்திப்புகள் அல்லது அரசியல் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஆளுமைகளையும் சர்ச்சைகளையும் தாண்டி வாழக்கூடிய பதிவுகளை உருவாக்கும் கடமையைப் பற்றிப் பேசினார்.

ராமகிருஷ்ணாவின் சொந்த அகழாய்வு அறிக்கை குறித்த பிந்தைய சர்ச்சை இந்த விஷயத்தை மேலும் உறுதிப்படுத்தியது. ASI க்குள் உள்ள மறு ஆய்வாளர்கள் அவர் முன்மொழிந்த காலவரிசையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தபோது, அவர்கள் வெறும் விளக்கங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.

அந்த விளக்கங்கள் தாங்கிக் கொண்டிருந்த அடிப்படை ஆவணங்களுடன் அவர்கள் மாறுபட்டனர். காலவரிசை விவாதங்கள் சித்தாந்தத்திலிருந்து அல்ல, தரவுத் தடத்திலிருந்து எழுகின்றன. அதாவது, சூழல் தாள்கள், தேதியிடப்பட்ட மாதிரிகள் மற்றும் அடுக்கியல் வரைபடங்கள் ஆகியவற்றிலிருந்து எழுகின்றன. இவை முழுமையடையாமல், முரண்பாடாக, அல்லது போதுமானதாக இல்லாவிட்டால், அவற்றின் மீது கட்டப்பட்ட எந்த விளக்கமும் நிலையற்றதாக மாறிவிடும்.

ஆவணம் தான் உண்மைத் தொடர்ச்சி

கீழடியின் கதையை அதன் ஆவண முறிவுகளை ஒப்புக்கொள்ளாமல் சொல்ல முடியாது. பொதுவெளியில் கவனம் தொல்பொருட்கள் மீது விழுந்தது. கருப்பு மற்றும் சிவப்பு பானைகள், மணிகள், செங்கல் கட்டமைப்புகள் மற்றும் எழுத்து அடையாளங்கள் இவைதான் அடிப்படை. ஆனால் இவற்றை நங்கூரமிடும் காகித வேலைகள் உறுதியாக இருந்தால்தான் அறிவியல் ரீதியாக இவை முக்கியம்.

சூழல் இல்லாத ஒரு தொல்பொருள் அர்த்தமற்றது என்று பலமுறை பார்த்துள்ளோம். பின்னணி இல்லாத எழுத்து ஒரு வதந்தி. அடுக்கியல் இல்லாத தேதி ஒரு யூகம். அகழிகள் மழைநீரால் நிரம்பும்போது தொல்லியல் உடைவதில்லை. பதிவுகள் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தவறும்போதே அது உடைகிறது.

இந்தப் பாடம் கீழடியையும் தாண்டி நீண்டுள்ளது. ஒவ்வொரு தொல்லியல் தளமும் மனித குறுக்கீடுகளுக்கு ஆளாகிறது — இடமாற்றங்கள், ஓய்வு பெறுதல், நிர்வாக தாமதங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள். ஒரு அமைப்பின் பலம் அதன் காகித வேலைகளில் உள்ளது.

இது எந்தவொரு தனிப்பட்ட தொல்லியலாளரும், எவ்வளவு திறமையானவர் அல்லது கவர்ச்சியானவராக இருந்தாலும், தளத்தை விட அவர் பெரிதல்ல. ஆவணங்களின் தொடர்ச்சி தடுமாறும்போது, தளம் பலவீனமடைகிறது. அது உடையும்போது, வரலாறு ஆவதற்கு முன்பு புனைவாக மாறிவிடுகிறது.

கீழடி பெரும்பாலும் தமிழ் அடையாளம், பெருமை மற்றும் பண்டைய தொடர்ச்சியின் சின்னமாக விவரிக்கப்படுகிறது. ஆயினும், இந்த அடுக்குகளுக்கு அடியில் ஒரு அமைதியான உண்மை உள்ளது.

மிகவும் முக்கியமான தொடர்ச்சி நாகரிகத் தொடர்ச்சி அல்ல, காப்பகத் தொடர்ச்சி. அது செங்கற்களில் அல்ல, பதிவுகளில்தான் உள்ளது. பூமி கடந்த காலத்தின் துண்டுகளைப் பாதுகாக்கலாம். ஆனால் ஆவணப்படுத்தல் மட்டுமே அந்தத் துண்டுகளின் அர்த்தத்தைப் பாதுகாக்க முடியும்.

தொல்லியலில், நினைவுதான் முறை. மேலும் நினைவு தடுமாறும்போது, முறை உடைகிறது. கீழடி ஒருமுறைக்கு மேல் அந்தச் சரிவின் விளிம்பில் நின்றது. அது மண்ணில் என்ன இருந்தது என்பதனால் அல்ல. கோப்புகளில் என்ன இருந்தது என்பதனால்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

13 அறிவை மிஞ்சிய அரிதாரம்

தொல்லியல் என்பது வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய மண்வெட்டியால், அடுக்கு அடுக்காகத் தோண்டி; காகிதத்தில் பென்சிலால் எழுதி எழுதி; ஊகத்தின் மீது கதிரியக்கக் கரிமக் காலக் கணிப்பு மூலமே அது இயங்கும். அதன் அதிகாரம் பொறுமை மற்றும் வழிமுறைகளில் உள்ளது. ஆனாலும் ஒரு பிரபலம் அகழாய்வு அகழிக்குள் நுழையும்போது, அந்த வேகம் மாறிவிடுகிறது.

ஒரு கூட்டம் கூடுகிறது. பத்திரிகை வாகனங்கள் வந்து சேர்கின்றன. ட்ரோன் மேலே பறக்கிறது. கடுமையான சூரிய ஒளியின் கீழ் அமைதியாக நடந்த வேலை ஒரு மேடைக் காட்சியாக மாறுகிறது. தொல்லியலாளர் பின்னணிக்கு செல்கிறார். கேமரா முன் பகுதிக்கு வருகிறது. சரிபார்ப்புக்குப் பதிலாக சவடால்கள் வரத் தொடங்குகிறது. இந்தத் தலைகீழ் மாற்றத்தில், பிரபலங்களின் வார்த்தைகளே பிம்பங்களாக, அந்த பிம்பகளை ஆதாரங்களாக மாறத் துவங்குகிறது.

 அகழி ஒரு மேடையாகும் தருணம்

தொல்லியலில் பிரபலங்களின் ஈடுபாடு புதியதல்ல. அருங்காட்சியகங்கள் நீண்ட காலமாகத் தலைவர்களை அழைப்பதுண்டு. ஆனால் கீழடி அகழாய்வுகள் பாரம்பரியம், அடையாளம், மொழியியல் பெருமை, பிரிவினை அரசியல் ஆகியவற்றின் கொந்தளிப்பான சூழலில் உள்ளது. பிரபலங்களின் செயல்பாட்டிற்கு ஒரு காந்தமாக இந்தச் சூழல் அமைந்தது. திரைப்பட நட்சத்திரங்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் முதல் வலைதளப் பிரபலங்கள் வரை, யார் வேண்டுமாறும் செய்தியாக மாறினர். ஒவ்வொரு வருகையும், வேண்டுமென்றே, பொது நினைவை மறுவடிவமைக்கிறது.

கூடுதல் அகழி விரிவாக்கங்கள், ஆய்வகச் சோதனைகள் மற்றும் கவனமான அடுக்கியல் பகுப்பாய்வுக்காக மாதக்கணக்கில் வாதிட்ட தொல்லியலாளர் தனது வேலையை செய்துகொண்டு இருக்கிறார். எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ஒரு நட்சத்திரம் வருகிறார். பாதுகாப்புப் படையினர் பாதையைச் சுத்தம் செய்கிறார்கள். பார்வையாளர்கள் செல்ஃபி எடுக்க முண்டியடிக்கிறார்கள். கேமராக்கள் ஒரு செங்கல் அமைப்பை நோக்கிச் சுட்டுகின்றன. பிரபலம் “இறுதியான” முடிவுகளை கேமராவில் முழங்குகிறார். இந்தக் கூத்தில் தொல்லியலார் நிலைதான் பரிதாபம்.

ஏப்ரல் 2023 இல் தமிழ்த் திரைப் பிரபல நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டபோது இந்தச் காட்சி நடந்தது. அவரது வருகை "கூட்டத்தை ஈர்த்து தளத்தைச் சுற்றி ஒரு பண்டிகை சூழ்நிலையை உருவாக்கியது" என்று செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 23 ஏப்ரல் 2023). நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அவற்றில் பல, அறிஞர்கள் இன்னும் மதிப்பீடு செய்யும் பணியில் இருக்கும் தொல்பொருட்களின் தோற்றங்களையும் அர்த்தங்களையும் தானே விளக்கும் தலைப்புச் செய்திகளாக மாறின.

மீண்டும் ஜனவரி 2025. நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கீழடிக்குச் சென்றபோது, உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் இந்த வருகையை "தமிழ்ச் நாகரிகத்திற்கான ஒரு பெருமையான தருணம்" என்று குறிப்பிட்டன. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த நிகழ்வை வெளியிட்டபோது, அவரது வருகை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வந்த கவனத்தை வலியுறுத்தியது. இதன் மூலம் பிரபலங்களின் ஆர்வத்தை கலாச்சார அங்கீகாரத்துடன் மறைமுகமாக சமன்படுத்தியது.

ஒரு நட்சத்திரம் அதைப் போற்றியதால், தொல்லியலின் துல்லியம் அதிகரிக்கவில்லை. ஆயினும் பொது விவாதத்தில், கீழடியின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

ஒரு பிரபலத்தின் வருகை ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கிறது:

·       கலாச்சார சமிக்ஞை — பெருமை, சொந்தம் மற்றும் சித்தாந்த சார்புகள்.

·       மக்கள் தொடர்பு — சமூகப் பொறுப்பு மற்றும் கலாச்சார ஈடுபாட்டின் பிம்பத்தை வலுப்படுத்துகிறது.

·       சுற்றுலா ஊக்கம் — துறைகள் அரசாங்கங்களுக்கான பாரம்பரிய ஊக்குவிப்பை அதிகரிக்கிறது.

·       கதை வடிவம் — மாநில அரசு சொல்ல விரும்பும் கதைக்கு வலு சேர்க்கிறது.

நாகரிகம், நகரம் என்று சொல்ல ஆர்வமாக உள்ள ஒரு சமூகத்தில், ஒரு செல்வாக்கு மிக்க நபரின் கருத்து, அறிஞர்களின் கருத்துகளை விட ஓங்கி ஒலிக்கிறது. இதனால்தான் இத்தகைய வருகைகள் நடிகர்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

கைடுகளாக ஆன அமைச்சர்கள்

அரசியல் தலைவர்கள் ஒரு அகழாய்வை வழி நடத்த முயலும்போது, அதன் அரசியல் தன்மை தெளிவாகிறது. அறிவியல் அறிக்கைகள் தற்காலிகமாக இருக்கும்போது கூட, அவர்களின் இருப்பு அரசு அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

அக்டோபர் 2021 இல், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கீழடி தளத்தைப் பார்வையிட்டார். தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் இந்த நிகழ்வை விரிவாக வெளியிட்டன. தி டெக்கான் ஹெரால்ட் (10 அக்டோபர் 2021) முதலமைச்சர் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தார் என்றும், அதிகாரிகள் அவருடன் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார் என்றும் செய்தி வெளியிட்டது. இந்த வருகை கீழடியை ஒரு தொடர்ச்சியான அகழாய்விலிருந்து ஒரு அரசு ஆதரவு பெற்ற பொதுக் கதையாக உயர்த்தியது.

ஆகஸ்ட் 2025 இல், நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கீழடியின் பண்டைய காலக் கதையை விரைவுபடுத்தி தேசிய அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது, மிகவும் நாடகமயமான ஒரு தருணம் நிகழ்ந்தது.

என்டிடிவி (26 ஆகஸ்ட் 2025) மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் (27 ஆகஸ்ட் 2025) செய்திகளின்படி, கமல்ஹாசன் பிரதமருக்குக் கீழடி கருப்பொருள் கொண்ட ஒரு நினைவுப் பரிசை வழங்கினார் என்றும், தமிழ்ச் நாகரிகத்தை வெளிப்படுத்த மத்திய ஆதரவைக் கோரினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சைகை — ஒரு குறியீட்டுத் தொல்பொருள் பிரபல-அரசியல்வாதியிடமிருந்து அரசாங்கத் தலைவருக்கு மாற்றப்பட்டது — கலாச்சார லாபியின் ஒரு பொதுச் செயல்பாடாக மாறியது.

பொதுமக்களுக்கு, இத்தகைய அறிக்கைகள் தீர்ப்புகள் அல்லது மதிப்பீடுகள் போலத் தோன்றுகின்றன. இந்தச் செயல்பாடுகள் பொதுவாக சகாக்களின் மறுஆய்வு மற்றும் ஆய்வகச் சரிபார்ப்புக்குச் சொந்தமானவை. அவை தொலைக்காட்சியில் பேசும் விமர்சனங்களுக்குச் சொந்தமானவை அல்ல.

இந்த நிலையை மாற்றும் ஒரு முயற்சியும் நடந்தது.

சமீபத்தில், ஜூன் 2025 இல், மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கீழடிக் கண்டுபிடிப்புகளின் அறிவியல் உண்மைகள் குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார். அவர் "தொழில்நுட்ப ஆதரவு வலுப்படுத்தப்பட வேண்டும். அறிவியல் அங்கீகாரம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்" என்று கூறினார், தி பிரிண்ட் (7 ஜூன் 2025);. பின்னர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (9 ஜூன் 2025). இதனை உடனடியாக "தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான சதி" என்று திராவிட மாடல் ஆர்பாட்டம் செய்தது என்பது சொல்லத் தேவையில்லை.

கேமரா அறிவியல்

ஒரு பிரபலம் ஒரு பானை ஓடு அல்லது அகழிச் சுவரின் அருகில் நின்றவுடன், அந்தப் படம் எந்த அகழாய்வு அறிக்கையையும் தாண்டிப் பயணிக்கிறது. அது வகுப்பறைகள், வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள், யூடியூப் விளக்கங்கள் மூலம் பரவுகிறது.

·       ஒரு தொலைக்காட்சிப் பிடிப்பு அடுக்கியல் பதிவை மறைக்க முடியும்.

·       ஒரு வைரல் ரீல் ஒரு கதிரியக்கக் கரிமத் தேதியை மூழ்கடிக்க முடியும்.

·       ஒரு பிரபலத்தின் பேச்சு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை விட சத்தமாகக் கேட்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளில், ஆசிரியர்கள் சில சமயங்களில் பிரபல வர்ணனையாளர்களின் யூடியூப் கிளிப்களை ஒளிபரப்பினர். சங்க காலத்துக்கு முந்தைய வரலாற்றிற்கான அறிமுகப் பொருளாகப் இந்தக் காணொளிகளைப் பயன்படுத்துகிறார்கள். பிரபலம் என்பது நம்பகத்தன்மைக்கான ஒரு மாற்றாக மாறுகிறது. இது கல்வியாளர்களை பெருங்கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில், பாரம்பரிய தளங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் படங்களுக்கான மேடைகளாக மாறுகின்றன. இருப்பினும், கீழடி ஒரு வகையில் தனித்துவமானது. ஏனெனில் இங்குதான் தொல்லியலே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. ஒரு ஒற்றைப் படம் ஒரு விளக்கக் காணொளியாக மாறுகிறது: "அவர்கள் அங்கே சென்றால், இது உண்மையாகவே இருக்க வேண்டும்." என்று மக்களும் நம்பத் துவங்கினர்.

 அதிகார அழுத்தம்

அருங்காட்சியகங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் கவனத்தை வரவேற்கின்றன. காட்சிக் கூடங்கள், பிரத்தியேகப் பயணங்கள் ஏற்பாடு செய்வதன் மூலமும், ஊடக அனுமதி என்று கீழடி அருங்காட்சியகம் ஆய்வை விட விளம்பரத்திற்கு செய்த செலவு அதிகம். மக்கள் வருகையை அதிகரிக்க இத்தகைய பிரபலங்கள் உதவுகிறார்கள்.

ஆனாலும் இதனால் பின்வரும் அபாயங்கள் எழுகின்றன:

·       அரசியல் கதைகளை மெய்ப்பிக்கும் விதமான பெயர்ப்பலகைகள் மீண்டும் எழுதப்படுகின்றன.

·       அறிவியலுக்கு பதிலாக அடையாள மதிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

·       தொல்பொருட்களை தவறாக முன்னிலைப்படுத்த அலுவலர்கள் மீது அழுத்தம் ஏற்படுகிறது.

அருங்காட்சியகத்தை ஒரு காட்சிப்பெட்டியாக மாற்றுவது ஒரு உலகளாவிய நிகழ்வு. கீழடியின் விஷயத்தில், இந்த ஆபத்து தீவிரமடைகிறது. வருகை தரும் நட்சத்திரங்களுக்காக நடக்கும் இந்த நிகழ்வுகளில் அகழ்வாராய்ச்சி பெரிதாக மதிக்கப்படுவதில்லை. அவர்கள் எதைக் கேட்க, பார்க்க விரும்புகிறார்களோ அதை அருங்காட்சியாக அலுவலர்கள் ஏற்பாடு செய்கிற்னனர். இதில் உண்மை கடுகளவு, அரசியல் கடலளவு.

இதன் விளைவுகள் கல்வியிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகிறது. கற்பித்தல் மாறும்போது, பொது நினைவும் அதைத் தொடர்கிறது.

வரலாற்றின் படிமமாதல்

பிரபலங்களின் தலையீடுகள் பெரும்பாலும் அடையாளத்தை மையமாகக் கொண்ட உறுதிப்பாடுகளை உருவாக்குகின்றன:

"இந்த நட்சத்திரம் நம் நாகரிகம் இவ்வளவு பழமையானது என்று நம்பினால், அது உண்மையாகவே இருக்க வேண்டும்."

இத்தகைய அறிக்கைகள் குறுக்குவழிகளை உருவாக்குகின்றன. தரவு முதிர்ச்சியடைவதற்கு முன்பே அவை விளக்கங்களை படிமமாக்குகின்றன (Fossilise). தொல்லியலாளர்கள் நிச்சயமற்ற தன்மைகளைக் கேள்வி கேட்காமல் கதைகளை உறுதிப்படுத்த வேண்டிய அழுத்தத்தை உணர்கிறார்கள்.

ஆழமான ஆபத்து தவறான தகவல் அல்ல. அந்தத் தகவலை ஒரு சித்தாந்த உண்மையாக மாற்றுவதே ஆபத்து. கலாசாரப் பெருமை, சித்தாந்த வாதமாக மாறும்போது, தொல்லியல் பதிவு உணர்ச்சியின் பிணையாக மாறுகிறது. தேதிகள் உணர்ச்சிபூர்வமான எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டும். தொல்பொருட்கள் அடையாளக் கோரிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயங்கள் உருவாகின்றன.

பிரபலங்கள் — பெரும்பாலும் அறியாமலேயே — இந்தச் செயல்முறையை வேகப்படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களின் வார்த்தைகள் அறிஞர் எச்சரிக்கையை விட வேகமாகப் பயணிக்கின்றன.

பிரபலம் எனும் இருமுனைக் கத்தி

பிரபலங்களின் கவனம் நிதி, விழிப்புணர்வு, சுற்றுலா, பெருமை ஆகியவற்றைக் கொண்டு வருகிறது. கூடவே சிதைவு, இரைச்சல், அரசியல் ஆகியவற்றையும் கொண்டு வருகிறது. தொல்லியலுக்கு வெளிப்படைத்தன்மை தேவை. ஆனால் அதனை அறிஞர்கள் செய்யவேண்டும் அரிதரக்காரர்கள் அல்ல.

கேள்வி பிரபலங்கள் பாரம்பரிய தளங்களைப் பார்வையிட வேண்டுமா என்பதல்ல.

கேள்வி, சமூகத்தால் செயல்பாட்டிலிருந்து ஆதாரத்தை வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்பதுதான்.

கீழடியின் கதையில், கவன ஒளி (Spotlight) ஒரு எதிரி அல்ல.

நிழல்களின் இல்லாமைதான் எதிரி.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

14 கிளிக் பெயிட் சிக்கல்கள்

தொல்லியல் ஒரு காலத்தில் அறிவார்ந்த நூல்களில் அமைதியாக வாழ்ந்தது. இன்று அது யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்கள் மூலம் ஆரவாரமாக விரிவடைகிறது. அண்மை நினைவில் உள்ள மற்ற எந்த இந்திய அகழாய்வை விடவும் கீழடி இந்த அல்காரிதத்தால் விழுங்கப்பட்டுள்ளது.

இது பரபரப்புவாதிகளுக்கு ஒரு சரியான மூலப்பொருளாக மாறியது: ஒரு பழங்காலத் தளம், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி, கட்டமைக்கப்படும் ஒரு நாகரிகக் கதை, அடையாள உறுதிப்படுத்தப் பசியுடன் இருக்கும் ஒரு சமூகம்.

இந்தக் கொந்தளிப்பான கலவைக்குள் டிஜிட்டல் கதைசொல்லிகள் நுழைந்தனர். அவர்கள் தொல்லியலாளர் அல்ல, களப் பணியாளர் அல்ல, ஆய்வகப் பகுப்பாய்வாளர் அல்ல. ஆனால் கற்பனை வளம் நிறைந்தவர்கள்.

ஒரு அகழி ஒரு பானை ஓட்டைக் காட்டிய தருணமே, ஒரு காணொளியின் முகப்படம் (Thumbnail) ஒரு நாகரிகத்தை அறிவித்தது. ஒரு கரிமத் தேதி சகாக்களின் மறு ஆய்வுக்குச் செல்லும் முன்பே, ஒரு தலைப்பு "சதித்திட்டம்" என்று கூவியது. ஒரு ஒப்பீட்டு ஆய்வு ஒரு கல்வி இதழில் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பல லட்சக் கணக்கானோர் ஏற்கனவே உணர்ச்சிப்பூர்வமான கதைகளை கண்டு தாங்களும் உணர்ச்சி வசப்பட்டனர்.

தொல்லியலின் அதிகாரம் கவன ஈர்ப்பின் உளவியலால் அரியணையில் இருந்து இறக்கப்பட்டது.

அல்கரித அலப்பறைகள்

கீழடிக்கான யூடியூப் தேடல் முடிவுகளை விரைவாகப் பார்த்தால், விவாதம் முற்றிலும் பரபரப்பு உணர்வுக்குள் சென்றது தெளிவாகும். நிஜ உலக உதாரணங்கள் திகைக்க வைக்கின்றன:

"Keeladi Tamil history: கீழடியில் ஆதி மனிதனின் முகம்..."

இங்கு, எலும்புத் துண்டு பகுப்பாய்வுகள் "பண்டைய தமிழ்ச் சமூகத்தின் முகங்களாக"  மாற்றப்படுகின்றன. இது ஒரு ஒற்றை முடியிலிருந்து ஒரு முழுப் படத்தை வரையும் டிஜிட்டல் பித்தலாட்டம்.

"Centre Vs TN: The fight over Keeladi civilisation findings..."

இது தொல்லியலை ஒரு அரசியல் மல்யுத்தப் போட்டியாகக் கட்டமைக்கிறது. அறிவியல் விசாரணையை அரசாங்கப் போட்டியின் ஒரு காட்சியாக குறைக்கிறது.

"கீழடியின் வரலாற்றை மறைக்க நடக்கும் அரசியல்..."

இந்தத் தலைப்பு தமிழ்ச் நாகரிகத்தைப் புதைப்பதற்கான ஒரு தொடர்ச்சியான சதித்திட்டத்தை சாதாரணமாக வலியுறுத்துகிறது. இதற்கு ஆதாரம் தேவையில்லை. வெறும் உணர்வு போதுமானது.

"2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர் முகங்கள்..."

மீண்டும், முகங்களுக்கான வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், தரவை விடக் காட்சிகள் சந்தேகங்களை நம்பிக்கையாக மாற்றும்.

இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு வெளிப்பாடு, ஒரு அச்சுறுத்தல், அல்லது ஒரு கண்டுபிடிப்பை முன்னிலைப்படுத்துகிறது. இவைதான் அல்காரிதம்களை ஈர்க்கும் சரியான உணர்ச்சித் தூண்டுதல்கள். தொல்லியல் ஒரு துறையாக இல்லாமல், ஒரு குறிச்சொல்லாக (algorithm keyword) மாறிவிட்டது.

இந்த காணொளிகளின் உண்மையான புத்திசாலித்தனம் — அல்லது ஆபத்து — என்னவென்றால், அவை தமிழ்ச் சமூக அடையாளத்தை ஒரு விற்பனைப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.

"இது நமது புதைக்கப்பட்ட வரலாறு. யாரோ அதை மறைக்க முயற்சித்தனர். இப்போது நாம் அதைப் பாதுகாக்க வேண்டும்."

இத்தகைய கதைக்களம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாதது. ஏனெனில் இது பார்வைகளை மட்டுமல்லாமல், விசுவாசத்தையும் உறுதி செய்கிறது. பார்வையாளர்கள் தகவலுக்காக வருவதில்லை. அவர்கள் தங்கள் நாகரிகத்தைப் பாதுகாக்க வருகிறார்கள். ஒவ்வொரு கிளிக்கும் ஒரு கலாச்சாரப் பங்கேற்புச் செயலாக மாறுகிறது. ஒவ்வொரு பகிர்வும் ஒரு அரசியல் அறிவிப்பாக மாறுகிறது. ஒவ்வொரு கருத்தும் அடையாளப் போரில் ஒரு அணிவகுப்பாக மாறுகிறது.

இது தற்செயலானது அல்ல, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது.

கதை வியாபாரம்

யூடியூப் போன்ற தளங்கள் நடுநிலையான அறிவுப்பெட்டகங்கள் அல்ல. அவை அதி தீவிரத்தின் பெருக்கிகள். நிச்சயமற்ற தன்மை, நுணுக்கம் அல்லது கல்வி ரீதியான கட்டுப்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் காணொளிகள் அரிதாகவே சிறப்பாகச் செயல்படுகின்றன. மாறாக, பின்வருவனவற்றை அறிவிக்கும் காணொளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன:

·       ஒரு வெளிப்பாடு,

·       ஒரு துரோகம்,

·       ஒரு சதித்திட்டம்,

·       ஒரு நாகரிக வெற்றி.

இதன் விளைவு கணிக்கக்கூடியது. பொதுமக்கள் கீழடியை ஒரு அறிவியல் விசாரணையின் தளமாக அல்லாமல், ஒரு அடையாள மோதலின் போர்க்களமாகக் காண்கிறார்கள். "மத்திய அரசு vs மாநில அரசு," "வடக்கு vs தெற்கு," "ஆரியர் vs திராவிடர்," "உண்மை vs ஒடுக்குமுறை" — இவைதான் ஒவ்வொரு பானை ஓடும் விளக்கப்படும் சாளரங்களாக மாறுகின்றன. இது அகழாய்வைக் காட்டிலும் அரசியலின் வெற்றி.

 பரபரப்புத் தந்திரங்கள்

1. பெருமைக்கான தூண்டுதல்

இந்தத் தந்திரம் ஒவ்வொரு தொல்பொருளையும் தமிழ்ப் பண்டைய காலத்தின், தனித்துவத்தின் மற்றும் மேன்மையின் ஆதாரமாக உயர்த்துகிறது. ஒரு சாதாரண வடிகால் கால்வாய் ஒரு பெருநகரத்திற்கான ஆதாரமாக மாறுகிறது. தமிழ்-பிராமி தாங்கிய ஒரு பானை ஓடு ஒரு முழுமையான எழுத்தறிவுச் சமூகத்தை அறிவிப்பதற்கான நியாயமாகிறது. கீழடி ஒரு குடியேற்றத்தை அல்லாமல், திராவிட நாகரிகத்தின் தொட்டிலைக் குறிக்கிறது என்று நம்ப பார்வையாளர் ஊக்குவிக்கப்படுகிறார்.

இது வெற்றி பெறுகிறது. ஏனெனில் பெருமை அனைவரும் விரும்பும் ஒரு உணர்ச்சி. இது தொல்லியலை ஒரு அங்கீகாரச் சடங்காக மாற்றுகிறது.

2. பயத்தின் தூண்டுதல்

இங்கே, கீழடி யாரோ மறைக்க முயற்சிக்கும் ஒரு வரலாற்று உண்மையாகக் கட்டமைக்கப்படுகிறது. தலைப்புகள் "ஒடுக்குமுறை," "அரசியல்," மற்றும் "மறைக்கப்பட்ட வரலாறு" பற்றிப் பேசுகின்றன. வெளிச் சக்திகள் — பொதுவாக வட இந்திய, பிராமணிய, அல்லது மத்திய அரசு நிறுவனங்கள் — தமிழ்ச் சமூக அடையாளத்தை அழிக்க விரும்புகிறார்கள் என்பதே இதன் உள்ளார்ந்த பொருள்.

பயம் பார்வையாளர்களைப் பெருமையை விட இறுக்கமாகப் பிணைக்கிறது. இது ஒரு அவசரத்தை உருவாக்குகிறது: "அவர்கள் இதை நீக்குவதற்கு முன் பாருங்கள், பகிருங்கள்!"

3. சதித்திட்டத்தின் தூண்டுதல்

இந்தத் தந்திரம் தெளிவற்ற அறிவியல் சூழலில் செழித்து வளர்கிறது. ஒரு இடமாற்றம் அறிவின் படுகொலையாக மாறுகிறது. தாமதமான அறிக்கை நாசவேலைக்கான ஆதாரமாக மாறுகிறது. தொல்லியலாளர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு நிறுவன ஒடுக்குமுறையாக மாறுகிறது.

சதித்திட்டங்கள் ஆன்லைனில் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஏனெனில் அவை ஒன்றுமில்லாத நிகழ்வுகளைக் கூட கதைக்களமாக மாற்றுகின்றன. அவை பார்வையாளர்களுக்கு ஒரு வில்லனையும் ஒரு நாயகப் பாத்திரத்தையும் கொடுக்கின்றன.

4. காட்சித் தந்திரம்

AI மூலம் உருவாக்கப்பட்ட முகங்கள், சிஜிஐ நகரங்கள், கற்பனையான தொல்பொருட்கள் — இவை மிகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் கருவிகள். மனித மூளை தரவை விட முகங்களை நம்புகிறது. இந்தத் தந்திரம் எலும்புத் துண்டுகளிலிருந்து முழு உடலியல் அமைப்புக்கு, அகழிகளிலிருந்து பரந்து விரிந்த நகரங்களுக்குத் தாவிச் செல்கிறது. பல தசாப்த கால முறையான ஆராய்ச்சியை இது கண்டுகொள்ளாமல் கடக்கிறது.

ஒரு முகம் காட்டப்பட்டவுடன், எந்த மறுப்பும் அந்தத் தாக்கத்தை நீக்க முடியாது.

5. எளிமைப்படுத்தல் தந்திரம்

காணொளிகள் அடிக்கடி கீழடி "சங்க இலக்கியத்தை நிரூபிக்கிறது" என்று அறிவிக்கின்றன. இது வேண்டுமென்றே செய்யும் ஒரு குழப்பம். கவிதை வரலாற்று ஆவணமாக மாற்றப்படுகிறது. மேலும் தொல்லியல் இலக்கியத்தை வைத்து அலங்கரிக்கப்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு ஒத்திசைஸ்ந்த கதையை கொடுக்கிறது. அதே நேரத்தில் முறையான அறிவியலை முழுமையாக நீக்குகிறது.

இந்தத் தந்திரம் சந்தேகத்தை கதையாகவும், கதையை உறுதியாகவும் மாற்றுகிறது.

மக்கள் கீழடியைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பது சோகமல்ல. அவர்களின் ஆர்வம் சுரண்டப்படுகிறது என்பதுதான் சோகம். இந்தத் தளம் தமிழ்ச் சமூக அடையாளத்தின் சின்னமாக மாறும்போது, அது ஒரு அறிவியல் திட்டமாக இருப்பது குறைகிறது. நிபுணர்களுக்கு தெளிவு இல்லை என்பதற்காக அல்ல. அவர்களுக்கு வைரல் ஆகும் தன்மை இல்லை என்பதற்காகச் சமூக ஊடகங்கள் அவர்களை அணுகுவதில்லை.

உண்மை மெதுவாகச் செல்லும். ஆத்திரம் வேகமாகச் செல்லும்.

தொல்லியலுக்குப் பொறுமை தேவை. அல்காரிதம்கள் வேகத்திற்குப் வெகுமதி அளிக்கின்றன.

அறிவியல் திருத்தங்களால் வளர்கிறது. கதைகள் நிரந்தரத்தைக் கோருகின்றன.

கீழடி, இந்தப் போட்டுயில் சிக்கி, சமூக அரசியல் நாடகத்தில் ஒரு பாத்திரமாக மாறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

15 அருங்காட்சியா  பொருட்காட்சியா?

ஒரு அருங்காட்சியகத்தின் சோகம். கண்ணாடியின் உள்ளே தோன்றும் பொருட்களின் வரிசைகளுக்குப் பின்னால் உண்மை அமைதியாக அமர்ந்திருக்கிறது. இந்தப் பொருட்களைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் வரலாற்றைக் காண்கிறோம் என்று நம்புகிறார்கள். உண்மையில், அந்தப் பொருட்களுக்கு நேரடிப் பெருமை எதுவும் இல்லை. மக்கள் "வரலாறு" என்று பார்ப்பது அந்தப் பொருளை அல்ல, அது பற்றிய ஆவணத்தை.

இந்தத் தொடர்பின் முறிவே கீழடி அருங்காட்சியகத்தின் சோகக்கதை. அழகாகப் பிரகாசிக்கும் பொருட்கள், ஆனால் அவற்றின் முகவரிகள் அகழிக்கும் கண்காட்சிக்கும் இடையில் எங்கோ தொலைந்துவிட்டன.

ஆவணம்தான் உயிர்நாடி

ஒரு அருங்காட்சியகம் ஒரு நினைவு இயந்திரமாக இருக்க வேண்டும். அறிவியல் பாதுகாப்பின் சங்கிலியை உடைக்காமல், அகழாய்வுகளைப் பொது அறிவாக மொழிபெயர்க்கிறது. பின்னணி (Provenance) அந்த இயந்திரத்தின் இதயத் துடிப்பு.

ஒவ்வொரு மணி, ஒவ்வொரு பானை ஓடு, ஒவ்வொரு சுடுமண் உருவமும் அதன் ஒருங்கிணைப்புகளை (Coordinates) கொண்டிருக்க வேண்டும். அது எங்கிருந்து வெளிப்பட்டது, எந்த அடுக்கு அதைத் தாங்கியது, அந்த அடுக்குடன் தொடர்புடைய தேதி என்ன,  அது குறிக்கும் கலாச்சாரக் காலம் என்ன? இந்த ஒருங்கிணைப்புகள் இல்லாமல், மிகவும் கண்கவர் தொல்பொருள் கூட ஊமையாகிவிடும். தொல்லியல் பொருட்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அது பொருள்களிடையே நிகழும் உறவுகளுக்கு மதிப்பளிக்கிறது.

ஆனாலும், கீழடி அருங்காட்சியகம், அவசரமாக அமைக்கப்பட்ட பல பாரம்பரிய திட்டங்களைப் போலவே, அறிவை விட காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதன் காட்சிகள் பார்வைக்கு அழகாக இருக்கின்றன. நேர்த்தியான செட்டிநாடு கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அகழாய்வை சுருக்கமாகக் கூறும் பலகைகளுடன் இருக்கின்றன.

ஆனால் ஒரு தந்தத் தாயக்கட்டை எங்கே கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு சுடுமண் உருவம் எந்த அடுக்கியல் அடுக்கைச் சேர்ந்தது, அல்லது ஒரு இரும்புக் கத்தி ஒரு காலக் கணிப்பு மாதிரியுடன் எப்படித் தொடர்புடையது என்று தெரிந்துகொள்ள விரும்பும் பார்வையாளருக்கு அங்கே பதில்கள் கிடைக்காது. தொல்பொருட்கள் அவற்றின் நங்கூரங்களை இழந்துவிட்டன.

 ஆவணத்தின் தாமதம் அரசியல் ஆர்வம்

இது எப்படி நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள, நாம் பொருட்களின் பாதையைப் பின்பற்ற வேண்டும். அகழாய்வு செய்யப்பட்ட பொருட்கள் முதலில் ஆவணப்படுத்தல், பட்டியலிடுதல், பாதுகாத்தல் மற்றும் அறிவியல் ஆய்வு எனும் நிலைகளைக் கடக்கின்றன. அதன் பிறகுதான் அவை அருங்காட்சியகத்தை அடைகின்றன.

ஆனால் கீழடியின் விஷயத்தில், தமிழ்ப் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை — அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற அவசரம் — தொல்லியல் பதிவுகளை முந்திவிட்டது. அரசியல் ஆர்வம், நிர்வாக அழுத்தம் மற்றும் பொது எதிர்பார்ப்பு ஆகியவை ஆவணப்படுத்தும் கடமையை விட, காட்சிப்படுத்தும் அவசரம் மேலோங்கிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. ஆய்வறிக்கைகள் நகர்வதற்கு முன்பு பொருட்கள் நகர்ந்தன. தொல்லியலில், இத்தகைய இயக்கம் பேரழிவு தரக்கூடியது.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டவற்றையும் அகழாய்வு உண்மையில் உருவாக்கியவற்றையும் நாம் ஒப்பிடும்போது இது தெளிவாகிறது. இந்த வேறுபாடு வெறும் அளவின் வேறுபாடு மட்டுமல்ல. அது அறிவின் அடிப்படைக் கோட்பாட்டின் வேறுபாடு ஆகும். அதாவது, காட்டப்படுவது முழுமை அல்ல. தவிர்க்கப்படுவது பெரும்பாலும் அறிவியல் ரீதியாக முக்கியமான பகுதி.

இந்த ஒப்பீடு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கும் அறிவியல் பதிவுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டும் ஒரு கண்ணாடி.

கீழடி அருங்காட்சியக காட்சி (பொதுமக்கள் பார்ப்பது)

ASI அகழாய்வு கண்டுபிடிப்புகள் (அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டது)

தந்தம் மற்றும் சுடுமண் தாயக்கட்டைகள்

பல வகைகளில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள்

ஆண் மற்றும் பெண் சுடுமண் உருவங்கள்

சுடுமண் மனித மற்றும் விலங்கு உருவங்கள் (மிகப் பெரிய எண்ணிக்கையில்)

இரும்புக் கத்தி

இரும்பு, செம்பு மற்றும் பிற உலோகக் கருவிகள்

அச்சு குறியிடப்பட்ட நாணயங்கள்

பல கட்டங்களில் நாணயங்கள், முத்திரைகள் மற்றும் அச்சிடப்பட்ட பொருட்கள்

அகழிகள் மற்றும் ஈமப்பேழைகளின் பிரதிகள்

உண்மையான ஈமப்பேழைகள், கட்டுமான எச்சங்கள், உறைக் கிணறுகள், செங்கல் சுவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு

கல்வெட்டுகளுடன் கூடிய தமிழ்-பிராமி பானை ஓடுகள் உட்பட விரிவான பானைத் தொகுதிகள்

காட்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள்

சூழல் தாள்கள், அடுக்கு விளக்கங்கள், அடுக்கியல் வரைபடங்கள், மண் மாதிரிகள், மணிகள், நூற்புக் கருவிகள், நகைகள், கூரை ஓடுகள், தரைத் துண்டுகள்

முதன்மையாகத் தெரிவது அளவின் சமச்சீரற்ற தன்மை மட்டுமல்ல. சூழலின் சமச்சீரற்ற தன்மையும் கூட. அருங்காட்சியகம் நாகரிக நேர்த்தியின் ஒரு கதையைச் சொல்லக்கூடிய பொருட்களைக் காட்டுகிறது. ஆனால் அத்தகைய கதையை நியாயப்படுத்தும் தொல்லியல் சூழ்நிலைகளை அரிதாகவே குறிக்கிறது. எந்தவொரு விளக்கத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் அகழாய்வுப் பதிவுகள் விளக்கப்படவில்லை. பிரபலமான கூற்றுக்களுக்கு முரண்படக்கூடிய அல்லது நுணுக்கத்தைச் சேர்க்கக்கூடிய முழு வகைப் பொருட்களும் — மணிகள், சுழல் வளையங்கள், தொழில்துறை குப்பைகள், கட்டிடக்கலைத் துண்டுகள் — பார்வையாளர்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.

 அறிவு ஆவியாகும் போது

இந்தக் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவற்றின் சரியான சூழலுடன் இனி இணைக்க முடியாது என்று ஒருவர் உணரும்போது சோகம் ஆழமாகிறது. ஆவணப்படுத்தல் தவறும்போது, அந்தப் பொருள் நிரந்தரமாக அதன் பிடிப்பை இழக்கிறது. அருங்காட்சியகம் அதனுடன் வந்த களக் குறிப்புகள் இல்லாமல் பின்னணியைப் பின்னோக்கி ஒதுக்க முடியாது.

தொல்லியலாளர் நினைவிலிருந்து ஒரு அடுக்கியல் வரிசையை மீண்டும் உருவாக்க முடியாது. லேபிள்கள் பொருந்தாமல் அல்லது முழுமையடையாமல் இருந்தால், ஒரு குடியிருப்பு அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மணியை ஒரு குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்ட மணியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. பாதுகாப்புச் சங்கிலி துண்டிக்கப்படும்போது, அறிவு ஆவியாகிவிடுகிறது.

இதன் விளைவாக அருங்காட்சியகம் கட்டுக்கதைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக மாறுகிறது. சூழல் இல்லாமல், அந்தப் பொருள் ஒரு சின்னமாக மாறுகிறது. சின்னங்கள் பார்வையாளர் விரும்பும் எந்தக் கதையினாலும் நிரப்பப்படலாம்.

ஒரு சுடுமண் உருவம் நகர்ப்புற நேர்த்தியின் ஆதாரமாகிறது. ஒரு பானை ஓடு பண்டைய தமிழ்ப் எழுத்தறிவின் ஆதாரமாகிறது. ஒரு நாணயம் பரந்த வர்த்தக வலைப்பின்னலின் அடையாளமாகிறது. இந்தப் பொருட்கள் இனி தொல்லியல் ரீதியானவை அல்ல. அவை உருவகங்கள். பின்னணி இல்லாத ஒரு அருங்காட்சியகம் பொதுக் கற்பனையைத் திருத்துவதில்லை. அரசியல் மூட நம்பிக்கைகளையே வளர்க்கிறது.

எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீய விளைவுகளை உணர்வார்கள். சரியாகப் பட்டியலிடப்பட்ட தொல்பொருட்கள் இல்லாமல், அவர்களால் வேலையைத் தொடர முடியாது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களால் மறு விளக்கமளிக்கவும் முடியாது. அல்லது அதை மற்ற ஆரம்பகால வரலாற்றுக் குடியேற்றங்களுடன் துல்லியமாக ஒப்பிட முடியாது. அவசரமும் ஆர்வமும் அரசியலும் பதற்றத்தை ஏற்படுத்தின. பதறிய காரியம்? சிதறித்தான் போனது.

பொறுப்பின் தேவை

இந்தப் பொருட்களை நிர்வகிக்கும் அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்குச் சூழலின் முக்கியத்துவம் தெரியும். ஆனாலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைக் கொண்டுதான் வேலை செய்ய வேண்டும்.

இதோ பொருட்களை அறிவியல் பலவீனம் அவர்களுக்குப் புரிகிறது. ஆனாலும் அவர்களின் வேலை சரித்திரத்தைத் திருத்துவது அல்ல காட்சிப்படுத்துவது. அழகாகவே காட்சிப்படுத்தி உள்ளனர். அழகு சில நேரங்களில் இழப்பை மறைக்கிறது.

கீழடி அருங்காட்சியகத்தின் உண்மையான பாடம், பாரம்பரியம் முதலில் பொறுப்புடன் ஆவணப் படுத்தப்பட்டால் மட்டுமே பொறுப்புடன் காட்சிப் படுத்தப்பட முடியும். ஒரு அருங்காட்சியகம் முடிவுப் புள்ளி அல்ல. அது அகழாய்வின் ஒரு தொடர்ச்சி. அகழ்வாய்வுத் தளத்தின் வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். அருங்காட்சியகம் அந்த கடமையை மறக்கும்போது, அது வரலாறு அல்ல, மூடத்தனத்தின் ஒரு நினைவுச் சின்னமாகிறது.

முடிவில், பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன என்பது சோகமல்ல. அவை அவற்றின் கதைகள் இல்லாமல் காட்சிப் படுத்தப்பட்டன என்பதுதான். ஒரு அருங்காட்சியகம் என்பது கடந்த காலத்திற்கு ஒரு வாக்குறுதி. கீழடியின் அருங்காட்சியகம், அதன் அனைத்து கம்பீரத்திலும், வரலாற்றுப் பின்னணி தியாகம் செய்யப்படும்போது அந்த வாக்குறுதி பலவீனமாகிறது. பொருட்கள் நவீன விளக்குகளால் பிரகாசிக்கிறது. ஆனால் நிழல்கள் வரலாற்றை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டன



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

16 கருத்தியல் கட்டாயங்கள்

பெருமை என்பது ஒரு உணர்வாகத் தொடங்குகிறது. அது ஒரு இயக்கமாக மாறுகிறது. அதுவே கட்டுப்படுத்தப்படாமல் போனால், அது ஒரு கட்டாயமாக மாறிவிடுகிறது. கீழடி பற்றிய வரலாற்றில், பெருமை என்பது வெறும் ஆய்வுகளை மிகைப்படுத்துவதோடு நிற்கவில்லை; கடந்த காலம் என்ன பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதையே அது கட்டுப்படுத்தத் தொடங்கியது.

இந்தக் கட்டுப்பாட்டுக்கு அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளோ, கரியமலக் காலக் கணிப்புகளோ, அல்லது மட்பாண்ட ஆய்வுகளோ காரணமில்லை. தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாகக் குடிகொண்டிருந்த திராவிட அரசியல் கருத்தியலே காரணம். அதாவது, மதம் சாராத, பிராமண ஆதிக்கம் இல்லாத, தன்னாட்சி பெற்ற ஒரு தமிழ்ச் சமூகத்தை நிறுவ வேண்டும் என்ற ஆசை. கீழடி ஒரு தொல்பொருள் ஆய்வுத் தளமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உடனடியாகவே அது ஒரு கலாச்சார அறிக்கையாக (Cultural Manifesto) திரிக்கப்பட்டது.

திராவிடக் கருத்தியல்

இது ஏன் நடந்தது என்று புரிந்துகொள்ள, நாம் திராவிட இயக்கத்தின் சிந்தனைக் கட்டமைப்பிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சாதி வேறுபாட்டிற்கும், பிராமண ஆதிக்கத்திற்கும் எதிரான கிளர்ச்சியாகத் தோன்றிய அந்த இயக்கம், வெறும் அரசியல் மறுசீரமைப்பை மட்டும் நாடவில்லை. இந்திய வரலாற்றிலிருந்தே விடுதலை பெற விரும்பியது.

தமிழ்ச் சமூகம் ஒரு தொன்மையான, பகுத்தறிவுமிக்க, சமத்துவமான, மதச்சார்பற்ற கடந்த காலத்தைக் கொண்டதாக இருந்தால், நிகழ்காலப் பிரிவினை அரசியலு ஒரு தார்மீக அடித்தளம் கிடைக்கும் என்று அந்த இயக்கம் நம்பியது. அந்த இயக்கத்திற்கு வேத மதம் தீண்டாத, சமஸ்கிருதத்தின் தலையீடு இல்லாத, வடக்கின் தாக்கம் இல்லாத ஓர் தொன்மை தேவைப்பட்டது.

இவர்கள் சித்தாந்தப்படி தமிழ்ச் சமூகம் மிகவும் பழமையானதாக, நகர நாகரிகம் கொண்டதாக, எழுத்தறிவு பெற்றதாக, ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும். எனவே, கீழடி இவற்றை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தொல்பொருள் ஆதாரம் கிடைப்பதற்கு முன்பே, கருத்தியல்ரீதியான தேவை இருந்தது. கீழடியின் ஆரம்பகால அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், மட்பாண்டங்கள், மணிகள் மற்றும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் வெளிவந்தன.

உடனேயே, கலாச்சாரக் கற்பனை வேகமெடுத்தது: இதுதான் திராவிட நாகரிகத்தின் தொட்டில்; இது கோயில்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, சடங்குகள் இல்லாத ஓர் உலகம். இது மதத்தால் அல்லாமல், பகுத்தறிவாலும் நகரத் திட்டமிடலாலும் வரையறுக்கப்பட்ட ஒரு சமூகம் என்று கருதப்பட்டது. இந்த முடிவுக்கு வந்ததும், உடனடியாக, கொண்டாட்டத்துடன் பிரகடனம் செய்யப்பட்டது.

எதிர்ப்புக் குரலின் மௌனம்

இந்த விவாதத்தில் மற்ற தரப்பிலிருந்து எந்த எதிர்க்கோரிக்கையும் எழவில்லை. கீழடி வேத காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ, அல்லது இந்தத் தளம் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றோ எந்தவொரு பெரிய அரசியல் அல்லது கலாச்சாரக் குழுவும் வலியுறுத்தவில்லை. உண்மையில், தேசியவாதக் கண்ணோட்டம் – தமிழ்நாட்டில் கேலி செய்யப்பட்டாலும் – இந்தத் தளம் குறித்து குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்பாட்டுடன் இருந்தது.

தேசியவாத வர்ணனையாளர்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டும் இந்தியாவின் நாகரிக மரபின் பகுதிகள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். ஒன்றை உயர்த்துவதற்காக மற்றொன்றைத் தாழ்ந்த, கீழடி அவர்களுக்குத் தேவையில்லை.

எதிர்ப்பு இல்லாத நிலை ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. இந்த வெற்றிடத்தில், திராவிட இயக்கத்தின் விளக்கம் எதிர்ப்பின்றி நிலைத்தது. அறிவியல்ரீதியாக தவிர்க்க அல்ல, அரசியல்ரீதியாக விளக்கங்கள் வளர்ந்தன.

எதிர்ப்புக் குரல் இல்லாதது ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தியது: ஊகங்கள் ஒருமித்த கருத்தாக மாறின. கீழடி ஒரு மதச்சார்பற்ற நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்ற கருத்தை யாரும் மறுக்காதபோது, அந்தக் கருத்து மேலும் மேலும் இயல்பானதாகத் தோன்றியது. வேறு எந்தக் காலவரிசையும் அரசியல்ரீதியாக முன்வைக்கப் படாதபோது, ஒரே ஒரு காலவரிசை கலாச்சாரரீதியாக அடிப்படைக் கோட்பாடாக மாறியது. ஒரு தரப்பின் மௌனம் மற்றொரு தரப்பின் உறுதியை வலுப்படுத்தியது. தொல்லியல் ஒரு ஒரு நபர் பேச்சாக (Monologue) மாறியது.

இல்பொருள் வரலாறு

மதம் இல்லாத கடந்த காலம் என்ற முடிவு, ஒரு கலாச்சாரம் எவ்வாறு நிலைத்து நிற்கிறது என்பதைப் பற்றிய தவறான புரிதலின் அடிப்படையில் உருவானது. இன்று நாம் அறிந்திருக்கும் கோயில் கலாச்சாரம் பெரும்பாலும் இடைக்காலத்தின் தொடக்கத்திலிருந்து உருவானது.

அதன் கட்டட அமைப்பு – கருங்கல் அடித்தளங்கள், வானுயர்ந்த கோபுரங்கள், சிற்ப வேலைப்பாடுகள் – முந்தைய காலங்களில் கிடையாது. அழியக்கூடிய நிரந்தரமற்ற அமைப்புகளே ஆன்மீகத் தலங்களாக இருந்தன. கீழடியில் கோயில்கள் இல்லாதது, மதம் இல்லை என்பதைக் குறிக்கவில்லை. நாம் அங்கீகரிக்கும் கோயில் வடிவம் அப்போது இன்னும் வளரவில்லை என்பதை மட்டுமே அது காட்டுகிறது.

ஆரம்பகால மதவியல் மிக எளிதில் அழியக்கூடிய தடயங்களை விட்டுச்செல்கிறது. மரம் எரிந்து போகிறது. களிமண் கரைகிறது. வண்ணம் பூசப்பட்ட பரப்புகள் மங்கிவிடுகின்றன. வீட்டில் கடவுளை வணங்கப் பயன்படுத்தப்பட்ட சிறிய பொருள்கள் அரிதாகவே பாதுகாக்கப் படுகின்றன. காணிக்கையாக அளிக்கப்பட்ட கரிமப் பொருள்கள் முற்றிலும் மறைந்து விடுகின்றன.

சிலைகள், முத்திரைகள், தாயத்துகள் அல்லது எடுத்துச் செல்லக்கூடிய வழிபாட்டுப் பொருள்கள் கூட தொலைந்து, உடைந்து கவனிக்கப்படாமல் போகலாம். மண் உறுதியானவற்றை மட்டுமே தக்கவைக்கிறது. மதக் கட்டடங்கள் இல்லாதது மதம் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று வாதிடுவது, வாதமல்ல பிடிவாதம்.

இந்தத் தவறு அரசியல் நாடகத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறியது: கோயில்கள் கண்டுபிடிக்கப்படாததால் கீழடி மதச்சார்பற்றது; எனவே பண்டைய தமிழ்ச் சமூகம் மதச்சார்பற்றது. மதக் கட்டடங்களுக்கான ஆதாரம் இல்லை என்ற தற்போதைய தகவல், மதமே இல்லை என்ற கட்டாய அறிவிப்பாக மாறியது. இத்தகைய முடிவுகள் அறிவியலின் விளைவுகள் அல்ல. அவை கருத்தியல் தேவையின் கட்டாயங்கள்.

கட்டாயப் பெருமை

இந்தக் கருத்தியல் தேவையானது மேலும் வலுப்பெற்றது. அது திராவிடக் கற்பனையுடன் கச்சிதமாகப் பொருந்தியது. மதத்திற்கு முன்பே தமிழ்ச் சமூகம் நுட்பமானதாக இருந்திருந்தால், மதமே வெளியிலிருந்து வந்த ஒரு ஊடுருவலாக மாறுகிறது. சமஸ்கிருதத்திற்கு முன்பே தமிழ் எழுத்தறிவு இருந்திருந்தால், சமஸ்கிருதம் ஒரு திணிப்பாக மாறுகிறது. வேதக் கலாச்சாரத்தின் சார்பின்றி தமிழ் நகர வாழ்க்கை செழித்திருந்தால், தமிழ் அடையாளம் ஒரு எதிர்ப்பின் கதையாகிறது. அரசியல் திட்டத்திற்கு, இந்தக் கதை உருவானது. தொல்லியலுக்கு, இது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

ஒருமுறை இந்தக் கதை உறுதி செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அதற்கு ஆதரவாகவே விளக்கப்பட்டது. ஒரு வடிகால் அமைப்பு பகுத்தறிவுத் திட்டமிடலுக்கான ஆதாரமாக மாறியது. கீறல்கள் கொண்ட ஒரு பானை பரவலான எழுத்தறிவுக்கு ஆதாரமாக மாறியது. சந்தேகம், கேள்வி எல்லாம் "தமிழ்த் துரோக"-மாக ஆனது.

நுணுக்கமான அறிவியல் விளக்கங்கள் "சதி!” என்று நிராகரிக்கப்பட்டன. எச்சரிக்கையுடன் பேசிய ஒவ்வொரு அறிஞரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட்டது. கடந்த காலம் இனியும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஓர் ஆவணம் அல்ல. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அடையாளமாக மாறியது.

பெருமை இயல்பாகவே தீங்கு விளைவிப்பதல்ல. தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான பெருமை அசாதாரணமான கலாச்சார சாதனைகளுக்கு உந்துசக்தியாக உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கதைதான் உண்மை என்று மண் உறுதி செய்ய வேண்டும் என்று பெருமை கோரும்போது, பெருமை ஒரு கட்டாயமாக மாறுகிறது. அந்தக் கட்டாயம் பிறகு கோட்பாடாக மாறுகிறது.

கீழடிக்குத் தானே பேசுவதற்கான சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால், முதல் அகழாய்வுக் குழி தோண்டுவதற்கு முன்பே எழுதப்பட்ட ஒரு கதையை அது பெற்றது. இந்தத் தளம் ஒரு அரசியல் தத்துவத்தின் சின்னமாக மாறியது.  ஒரு துடிப்பான, சிக்கலான ஆரம்பகால வரலாற்று குடியிருப்பு, யதார்த்தங்களிலிருந்து அகற்றப்பட்டு, ஒரு பண்டைய மதச்சார்பற்ற கற்பனை உலகின் அச்சுக்குள் வலிந்து திணிக்கப்படுகிறது.

இதன் முரண்பாடு வேதனையானது. ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கோர முயலும்போது, நேர்மை அவசியம். கருத்தியல் திரிபிலிருந்து வரலாற்றை விடுவிக்க முயலும்போது, அது மற்றொரு திரிபை உருவாக்குகிறது. தமிழ்ச் சமூகத்தைக் கௌரவிக்க முயலும்போது, அதன் செழுமையை ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்குள் அது வரையறுக்கிறது. மேலும், அடையாளத்தைப் பாதுகாக்க முயலும்போது, அது ஆய்வின் முறைமையையே ஆபத்தில் ஆழ்த்துகிறது.

வரலாறு பெருமிதமாக இருக்க, தூய்மையாக இருக்க வேண்டியதில்லை. நாகரிகம் முக்கியமானதாக இருக்க மதச்சார்பற்றதாக இருக்க வேண்டியதில்லை. துண்டுகளாக எஞ்சியிருக்கும் கடந்த காலம், சமகால அரசியலின் குரலாக மாறக்கூடாது.

நாம் யார் என்று கீழடி நமக்குச் சொல்ல வேண்டுமா, அல்லது நாம் யாராக இருக்க விரும்புகிறோம் என்று கீழடி மூலம் நாமே சொல்லிக்கொள்ள வேண்டுமா?

ஒரு பாதை அறிவியல் ஆய்வுக்கு இட்டுச் செல்கிறது.

மற்றொரு பாதை அரசியல் கதைக்கு இட்டுச் செல்கிறது.

கீழடியின் சோகம் என்னவென்றால், இரண்டாவது பாதைதான் மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

17 பிற அகழ்வாராய்ச்சித் தளங்கள்

தொல்பொருள் தளங்களில் சில சத்தம் போடும்; சில மெதுவாக ரகசியம் பேசும். கீழடி சத்தத்துடன் வெளிச்சத்திற்கு வந்தது. முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கு முன்பே, அது அரசியல் மயமாக்கப்பட்டு, மிகைப்படுத்தப்பட்டு, பொதுவெளியில் பேசப்பட்டது. ஆனால், அமைதியான ஆய்வுத் தளங்கள் உள்ளன. அந்த இடங்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் ஒருபோதும் பிரபலமாவதில்லை.

அங்கு நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் தலைப்புச் செய்திகளாக அல்லாமல், கல்வி சார்ந்த ஆய்வுகளில் மெதுவாக வளர்கின்றன. அத்தகைய தளங்களின் முக்கியத்துவம், நுணுக்கமான அகழ்வாராய்ச்சி, கவனமான ஆவணப்படுத்தல் மூலமாக அமைதியாக வளர்ந்து வருகிறது. ஆதிச்சநல்லூர், கொடுமணல், மற்றும் அரிக்கமேடு ஆகிய தளங்கள், தொல்லியல் என்பது வேடிக்கைக் காட்சியாக இல்லாமல், அறிவியலாக நடத்தப்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்குச் சான்றாக நிற்கின்றன.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது ஒரு பிரம்மாண்டமான இரும்புக் காலத் (iron age) தளம். இதன் அகழ்வாராய்ச்சி வரலாறு கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கு நீள்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் உட்பட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களால் ஆரம்பகால ஆய்வுகள் நடத்தப்பட்டன. பின்னர், இந்தியத் தொல்லியல் துறையாலும் மாநிலத் துறைகளாலும் பல பருவங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்குள்ள பொருட்களின் கரிமக் காலக் கணிப்பு, பொ.ஆ.மு 696 முதல் பொ.ஆ.மு 905 வரை மனிதச் செயல்பாடுகள் இருந்ததாகக் காட்டுகிறது. மேலும், தனிப்பட்ட சில கண்டுபிடிப்புகள் சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் கூடச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தத் தளமே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

அதன் மேடுகளும் ஈமச் சின்னங்களும் "பண்டைய நாகரிகம்" பற்றிய கோஷங்களின் எளிமைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பரந்து கிடக்கின்றன. இந்த அகழ்வாராய்ச்சிகள் ஈமத்தாழிகள், எலும்புக் கூடுகள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், மணிகள் மற்றும் ஆரம்பகால எழுத்துக்கான ஆதாரங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளன.

இவை அனைத்தும் அடுக்கடுக்கான சூழலுடன் கவனமாகக் குறிக்கப்பட்டு, கதிரியக்கச் சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இருப்பினும், ஆதிச்சநல்லூர் ஒரு கலாச்சார அடையாளச் சின்னமாகக் குறைவாகவே பேசப்படுகிறது. அதன் கண்டுபிடிப்புகள், கல்விசார் நூல்களிலும் தடயவியல் அறிக்கைகளிலும் நிலைத்திருக்கின்றன.

கொடுமணல்

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ள கொடுமணல் மற்றொரு அமைதியான தளம். பல பத்தாண்டுகளின் களப்பணி மூலம் இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 1960-களின் முற்பகுதியில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகளால் இது அடையாளம் காணப்பட்டது.

பின்னர், 1980-களில் முறையான அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. கொடுமணல், ஆரம்பகால வரலாற்று காலகட்டத்தில் நடந்த தொழில்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அசாதாரண ஆதாரங்களை அளித்துள்ளது. கரிமக் காலக் கணிப்புகள் இந்தத் தளத்தின் முக்கிய குடியிருப்பு காலம் சுமார் பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டு வரை பரவியிருப்பதாகக் கூறுகின்றன.

இது தென்னிந்தியாவின் பிந்தைய இரும்புக் காலம் (late iron age) மற்றும் ஆரம்ப வரலாற்று காலகட்டத்துடன் (early historic period) இணைகிறது. சடங்கு தளங்கள் அல்லது நினைவுச் சின்னங்களால் வரையறுக்கப்பட்ட நகர குடியிருப்புகளைப் போலல்லாமல், கொடுமணல் பொருளாதார வாழ்க்கையின் அடித்தளத்தைக் காட்டுகிறது. இரும்பு உருக்குவதைக் குறிக்கும் உலைகள் மற்றும் கசடுகள், ரத்தினக் கற்கள் கைவினையைக் குறிக்கும் மணிகள் மற்றும் அரைக்-கற்கள், துணி நெசவுப் பணிகளின் எச்சங்கள், மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துகள் ஆகியவை இங்கு கிடைத்துள்ளன.

பரப்பளவு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை உள்ளடக்கியது. விரிவான ஆய்வுகள் மூலம், ஈமச் சடங்குகளுடன் இரும்பு உற்பத்தி மற்றும் கைவினைத் தொழில் நடந்த பல இடங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான கல்திட்டைகள் மற்றும் பெருங்கற்கால (megalithic) ஈமச் சின்னங்கள், மரணம் மற்றும் நினைவுகளைச் சுற்றியுள்ள பண்டைய சமூக நடைமுறைகளைப் பற்றிப் பேசுகின்றன.

பல பத்தாண்டுகளாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழகத் தொல்லியல் துறை மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் கொடுமணல் ஆய்வுக்குப் பங்களித்துள்ளனர். இருப்பினும், இது பொதுமக்களின் காட்சியை விடவும் கல்விசார் ஆர்வத்தின் ஒரு பொருளாகவே நீடித்துள்ளது.

அரிக்கமேடு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரிக்கமேடு, ஒரு உலகளாவிய தளம். இங்கு ஒரு கடற்கரை குடியேற்றம் இருந்தது. இந்தியப் பெருங்கடல் உலகம் முழுவதும் தொடர்புகளைக் கொண்ட ஒரு செழிப்பான துறைமுக நகரமாகச் செயல்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால்  முறையான அகழ்வாராய்ச்சிகள் நடந்தன.

பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பொது சகாப்தத்தின் ஆரம்பகாலம் வரை நீடித்த இந்தோ-ரோமானியப் பரிமாற்றத்துடன் பிணைக்கப்பட்ட பௌதீகக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி இந்த ஆய்வுகள் மூலம் தெரிகிறது. அரிக்கமேட்டில், ஆம்போரா துண்டுகள், அர்ரடைன் மட்பாண்டங்கள், ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், மணிகள் மற்றும் ரத்தினக் கற்கள் அகழப்பட்டன. இவை உள்ளூர் கைவினையும் நீண்ட தூர வர்த்தகமும் சந்தித்த ஒரு துடிப்பான வணிக மையத்தை நிரூபிக்கின்றன.

இந்தத் தளமும் ஏறக்குறைய ஐம்பது-அறுபது ஏக்கர் பரவியுள்ளது. இதன் கடற்கரை அமைப்பானது 'Periplus of the Erytheraean Sea' போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்ட கடல்சார் வர்த்தகத்திற்கான மையம். இங்கும் ஆவணப்படுத்தல் கவனமாகச் செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகள் சூழலுடன் பதிவு செய்யப்பட்டு, தேதியிடப்பட்டு, செவ்வியல் மூலங்களுடன் ஒப்பிடப்படுகின்றன.

மேலும் பண்டைய வர்த்தக இயக்கங்களின் பரந்த மறுகட்டமைப்புகளில் இணைக்கப் படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையில் அரிக்கமேட்டின் முக்கியத்துவம் ஆழமானது. ஆயினும், அதன் மதிப்பு ஒருபோதும் அரசியலுடன் பிணைக்கப்படவில்லை. இதன் கதை அடையாள அரசியலில் அல்லாமல், ஆய்விதழ்கள், மற்றும் இந்தியப் பெருங்கடல் பரிமாற்றத்தின் ஒப்பீட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் சொல்லப்படுகிறது.

அமைதியே பலம்

இந்த மூன்று தளங்களையும் இணைப்பது அவற்றின் தொன்மை மட்டுமல்ல, ஆய்வின் நெறிமுறை. ஆதிச்சநல்லூரின் ஈமத்தாழி இடுகாடு, நாகரிகத்தின் தோற்றம் பற்றிய கதையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பே, கதிரியக்கக் காலக் கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. கொடுமணலின் தொழில்துறை ஆதாரம், பல அகழ்வுப் பருவங்களில் ஆவணப் படுத்தப்பட்டது. அரிக்கமேட்டின் வர்த்தகக் கண்டுபிடிப்புகள் பிராந்திய ஆதிக்கம் பற்றிய ஒரு கருத்தியல் புள்ளியை நிரூபிக்கப் பயன்படாமல், மத்தியதரைக் கடல் தொடர்புகள் பற்றிய பரந்த விவாதங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

ஒவ்வொரு இடத்திலும், கதை சொல்லும் ஆசையை விட ஆய்வு முறையே விளக்கத்திற்கு வழிவகுத்தது. அகழ்வாராய்ச்சியாளர்கள் அடுக்குகளைப் பதிவு செய்தனர், கலைப் பொருட்களை வரைபடமாக்கினர், காலக் கணிப்புக்காக மாதிரிகள் எடுத்தனர், மேலும் கலாச்சார வரலாறு பற்றிய பரந்த முடிவுகளுக்கு வருவதற்கு முன்பே சக மதிப்பாய்வுக்காகக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர். சமகால விவாதங்களைச் சுற்றியுள்ள ஊடக சத்தத்திலிருந்து விலகி, அவர்களின் பணி ஆய்வுக் கட்டுரைகள், தொழில்நுட்ப அறிக்கைகள் மற்றும் அறிவார்ந்த உரையாடல்களில் அமைதியாக நிலைத்திருக்கிறது.

இந்த அமைதி இந்தத் தளங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கவில்லை. மாறாக, அது அவற்றின் அதிகாரத்தை அதிகரிக்கிறது. தொல்லியல் என்பது நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான ஒரு உரையாடல்; அது போர்க்களம் அல்ல என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன. மறு விளக்கம், எதிர்கால தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் பிற பகுதிகளுடன் ஒப்பீட்டு ஆய்வுக்கான ஆற்றலை இது பாதுகாக்கிறது. உண்மைக்கு சத்தம் தேவையில்லை என்பதை இந்தத் தளங்கள் காட்டுகின்றன. உண்மைக்கு ஆவணப்படுத்தலே தேவை.

கீழடிக்கு ஆதிச்சநல்லூர், கொடுமணல், மற்றும் அரிக்கமேடு ஆகியவற்றுக்குக் கிடைத்த அதே பொறுமையும், படிப்படியாக, கவனமாக வெளியிடும் அதே வலியுறுத்தலும் கிடைத்திருந்தால், மனித வரலாற்றுக்கு அதன் நீண்ட காலப் பங்களிப்பு இருந்திருக்கும். அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு சின்னமாக மாறுவதற்குப் பதிலாக, அது தென்னிந்தியாவின் ஆரம்பகால வரலாற்றின் மற்றொரு ஆதாரமாக இருந்திருக்க முடியும். இதர அமைதியான தளங்கள் ஒரு ஆழமான பாடத்தைக் கற்பிக்கின்றன: தொல்லியல் அடையாள அரசியலின் கவனத்திற்கு உட்படாக் கூடாது. கோஷங்கள் மற்றும் தலைப்புச் செய்திகளைப் பின்பற்றுவதை விட மண் அடுக்குகளைப் பின்பற்றும்போது அது மிகவும் பலமாக இருக்கிறது.

ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் அரிக்கமேடு போன்ற தளங்களின் அமைதியான இருப்பில், நாம் அறிவியல் தொல்லியல் ஆய்வின் நீடித்த மதிப்பைக் காண்கிறோம் – ஆதாரங்களின் மெதுவான குவிப்பு, சூழலின் நுணுக்கமான பதிவு, திறந்த மனப்பான்மை – அது நமது நம்பிக்கைகளுடன் பொருந்துகிறதா அல்லது நமது அனுமானங்களுக்குச் சவால் விடுகிறதா என்பதைப் பற்றி கவலை இல்லை. இந்த அமைதியில்தான் ஒரு ஆழமான வரலாறு உருவாக முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

18 பொற்காலப் புனைவுகள்

வரலாறு சொல்லப்படும் விதத்தில் சில சமயங்களில் ஒரு அமைதியான வன்முறை இருக்கிறது. அதுதான் எளிமைப்படுத்தும் வன்முறை. தமிழகத்தின் கடந்த காலம், ஒரு பல வண்ணக்களஞ்சியம் . ஆறு ஓடும் குடியிருப்புகள், துறைமுகங்கள், தொழில்துறை பட்டறைகள், ஆன்மீகத் தளங்கள், மேய்ச்சல் நிலங்கள், குன்றின் மீதான கோட்டைகள் இவை அனைத்தும் அதன் பகுதிகள். பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்த ஈமக் களங்கள் மூலம் ஒரு விரிந்த நிலப்பரப்பாக இருந்தது.

ஆனால், நவீன கற்பனையில், இந்த ஒழுங்கற்ற பன்மைத்தன்மை பெரும்பாலும் ஒரே ஒரு அடையாளக் கற்பனைக்குள் திணிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் ஒரே மாதிரியாக, பகுத்தறிவுடன், மதச்சார்பற்றதாக, நேர்த்தியானதாக, அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் விட உயர்ந்ததாக இருந்தது என்ற கற்பனை. இந்தக் கதை கேட்க அருமையாக இருக்கிறது, ஆனால் தெளிவுபடுத்துவதில்லை. அது உற்சாகப்படுத்துகிறது, ஆனால் தகவல் அளிப்பதில்லை. இந்தக் கூற்றின் ஆபத்து கீழடியைச் சுற்றியுள்ள விவாதங்களில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

பொற்காலத்தின் அரசியல் நோக்கம்

"பண்டைய தமிழ்ப் பொற்காலம்" என்ற கருத்து ஒரு அரசியல் நோக்கத்திற்கு உதவுகிறது. இது சந்தேகங்களுக்கு இடமின்றிப் பெருமையையும், சிக்கலற்ற அடையாளத்தையும், தடையில்லாத தொடர்ச்சியையும் வழங்குகிறது. கலாச்சார ஒருங்கிணைப்பை நாடும் இயக்கங்கள், சீரான, தற்கால அரசியலை எதிரொலிக்கும் கடந்த காலத்தையே விரும்புகின்றன.

முரண்பாடுகளுடனும் பிராந்திய வேறுபாடுகளுடனும் சீரற்ற முறையில் வளர்ந்த ஒரு கடந்த காலத்தை விட, பூமியிலிருந்து முழுமையா அப்படியே வெளிப்பட்ட ஒரு நாகரிகம் மிகவும் கவர்ச்சிகரமானது. ஆனால், தொல்லியல் அத்தகைய ஆசைகளுக்குக் கட்டுப்படுவதில்லை. மண் ஒரு கருத்தியலின் வடிவத்திற்கு ஒத்துப் போக மறுக்கிறது.

உண்மையில், தமிழ் உலகம் ஒருபோதும் ஒரே கலாசார வடிவமாக இருந்ததில்லை. ஆதிச்சநல்லூரின் ஈமத்தாழிகள், கொடுமணலின் தொழில்துறை இயங்குதிறனில் இருந்து மிகவும் வேறுபட்ட விரிவான சடங்கு மரபுகளைக் காட்டுகின்றன. அரிக்கமேட்டின் சர்வதேச வர்த்தக இணைப்புகள், ஆரம்பகால வரலாற்று குடியேற்றங்களின் உள்நாட்டு வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகளாவிய கடற்கரை வாழ்வைக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் இரும்புக் காலம், ஆரம்பகால வரலாற்று காலத்தை பின்பற்றவில்லை. ஈமச் சடங்கு கலாச்சாரங்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வேறுபடுகின்றன. சடங்கு நடைமுறைகள் காலத்திலும் புவியியலிலும் மாறுபடுகின்றன. இவை அனைத்தும் ஒரே பண்பு கொண்ட ஒரே நாகரிகம் என்று கூறுவது, தவறல்ல. சொல்லப்போனால், சங்க இலக்கியம் காட்டும் ஐந்திணை வாழ்வை அது பிரதிபலிக்கிறது. ஆனால், அந்த பன்மைத் தன்மை தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல இந்த இதியத் துணைக்கண்டத்தின் இயல்பு. இதனை ஒரு மொழியியல் சமூகத்தின் அடையாளமாக மட்டும் பேசுவது தவறு. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனிதர்களின் சிக்கலான வாழ்க்கையை ஒரே அரசியல் கோஷமாக முயல்வது அபாயமான கற்பனை.

கீழடியில் சமயம்

கீழடியின் சுவர்கள் நேர்த்தியாக இருந்தன. எழுத்துக்கள் கொண்ட ஓடுகள் புகைப்படம் எடுக்க வசதியாக இருந்தன. அதன் செங்கல் கட்டமைப்புகள் நவீனப் பார்வையில் அடையாளம் காணக்கூடியதாக இருந்தன. ஆதிச்சநல்லூர் அல்லது கொடுமணலை உயர்த்துவதை விட கீழடியை உயர்த்துவது எளிதாக இருந்தது. ஏனெனில், கீழடி ஒரு பண்டைய நகரத்தைப் போல காட்சியளித்தது.

தமிழ்நாடு அதன் அறிவுசார் பாரம்பரியத்திற்கு ஒரு அடையாளத்தை நாடிய ஒரு தருணத்தில், கீழடி பார்வைக்கு திருப்தி அளிக்கும் ஒரு காட்சியை வழங்கியது. இந்தத் தளத்தைப் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே, ஒரு முழு கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பணி அதற்கு வழங்கப்பட்டது.

கீழடியின் கட்டமைந்த பிம்பத்திற்கு பின்னால், தமிழ்நாட்டின் பன்மைத்தன்மை கொண்ட கடந்த காலம் மறைக்கப்பட்டது. மதவியல் வாழ்க்கையை வெளிப்படுத்திய ஈமக் களங்கள், மதச்சார்பற்ற கதைக்கு முரண்பட்டதால் புறக்கணிக்கப்பட்டன. கைவினைத் திறனையும் உலோகவியலையும் காட்டிய தொழில்துறை குடியிருப்புகள், எழுத்தறிவு பெற்ற, நேர்த்தியான நகர்ப்புற உலகத்தின் பிம்பத்திற்குப் பொருந்தாததால் ஓரங்கட்டப்பட்டன.

உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கடற்கரை மையங்கள், ஒரு தூய்மையான, தனிமைப்படுத்தப்பட்ட கடந்த காலத்தைக் காட்டாவிலை. உலகுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கடந்த காலத்தைக் காட்டின. இதனால் அந்தக் கண்டுபிடிப்புகளும் பொற்காலக் கற்பனைக்கு வெளியே விடப்பட்டன. கீழடி, ஒரு வரலாற்றுத் திரிபாக இருந்தபோதும், பண்பாட்டுப் பெருமை என்று வேடமிட்டு, இறுதியான திராவிட மாடலின் மூதாதையாக மாற்றப்பட்டது.

வரலாற்றை அழித்தல்

ஒருமைப்படுத்துதல் என்பது வெறும் அறிவார்ந்த தவறு அல்ல. இது ஒருவித அழிவு வேலை. கருத்தியல் வசதிக்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பொற்காலம், அதன் முன்மொழிவை ஆதரிக்காத எல்லாவற்றையும் புறக்கணித்தது. கடந்த காலத்தில் சடங்குகள் இருந்தால், அதை மறுக்க வேண்டும் அல்லது மதச்சார்பற்ற குறியீடாக மறு விளக்கம் செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் சீரற்ற வளர்ச்சி இருந்தால், அந்த வெற்றிடங்களை இட்டு நிரப்ப வேண்டும். கடந்த காலத்தில் பல செயல்பாட்டு மையங்கள் இருந்தால், பொற்காலத்தின் ஒரு படிநிலை என்று அதை திணிக்க வேண்டும். இந்தத் திரிபு வேலைகளால் மனித வாழ்க்கையின் சிக்கலான தன்மை ஒரு ஆதாரமாக இல்லாமல், அச்சுறுத்தலாக மாறுகிறது.

நாகரிகங்கள் முழுமையாக உருவாகி வெளிப்படுவதில்லை. அவை சீரற்ற முறையில் வளர்கின்றன. ஒரு பிராந்தியத்தில் உள்ளூர் கண்டுபிடிப்புகளும், மற்றொரு பிராந்தியத்தில் சடங்கு மையத்தன்மையும் இருக்கும். அது கருத்தியலில் இருந்து செதுக்கப்பட்ட ஒரே வார்ப்பு அல்ல. காலத்தினாலும் புவியியலினாலும் செய்யப்பட்ட பல வண்ணக் கலவை. தமிழ் தொன்மையை ஒற்றை பகுத்தறிவுவாத நாகரிகமாக விவரிக்க வேண்டும் என்பது ஒரு நவீன விருப்பம். ஒரு பண்டைய உண்மை அல்ல.

தொல்லியல் அறிவுக்கு வழிகாட்டியாக

ஒரு ஒற்றை நாகரிகக் கற்பனை உணர்ச்சிபூர்வமான ஒற்றுமையை உருவாக்குகிறது. ஒரு சக்திவாய்ந்த தோற்றக் கதையை வழங்குகிறது. சமகாலக் கருத்தியல்களைப் பழங்காலத்தின் திணித்து நியாயப்படுத்துகிறது. ஒரு பன்மைத்தன்மை கொண்ட கடந்த காலம் நபர் கூற்றாக (Monologue) மாறுகிறது. தொல்லியல் வழிகாட்டியாக இருப்பதற்குப் பதிலாக, கற்பனைக்கு ஒரு களமாக மாறுகிறது.

இதனால் ஆராய்ச்சிக்கு ஏற்படும் தீங்கு நிரந்தரமானது. அரசாங்க நிதி அறிவியல் வளமுள்ள தளங்களுக்குப் பதிலாக அடையாளமாக மாற்றப்பட்ட தளங்களை நோக்கிப் பாய்கிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கேள்விகளைக் கேட்பதை விட உறுதிப்படுத்தவே அழுத்தத்தை உணர்கிறார்கள். அறிக்கைகள் அறிவார்ந்த ஆவணங்களுக்குப் பதிலாகப் போர்க்களங்களாக மாறுகின்றன. விமர்சனம் ஒரு சாதாரண ஆய்வு முறையாக இல்லாமல், சந்தேகமாகவே கருதப்படுகிறது. கடந்த காலம் அடையாள அரசியலால் சொந்தம் கொண்டாடப்பட்ட பிறகு, அறிவியலால் அதை மீட்டெடுப்பது கடினமாகிறது.

ஆனால், தமிழ் கடந்த காலத்திற்கு அத்தகைய எளிமை தேவையில்லை. அதன் செழுமை அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. ஆதிச்சநல்லூரின் ஈமச்சடங்கு பகுதிகள், கொடுமணலின் பட்டறைகள், அரிக்கமேட்டின் கடல்சார் இடங்கள், வைகை ஆற்றின் பள்ளத்தாக்கு முழுவதும் சிதறிக் கிடக்கும் குடியிருப்புகள் – இவையனைத்தும் தமிழ்ப் பாரம்பரியம்தான். இவற்றில் எதுவும் ஒரே பொற்காலத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டியதில்லை.

கடந்த காலத்தைக் கௌரவிப்பது என்றால், அது சிக்கலானதாக இருக்க அனுமதிக்க வேண்டும். அதைப் பாதுகாப்பது என்றால், அதை ஒரு கருத்தியலுக்குள் சுருக்கக் கூடாது. தமிழ் உலகிற்குப் புத்தம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை; அதன் பன்மைத்தன்மையே போதுமான புதையல். ஒரு குறைபாடற்ற பொற்காலத்தை உருவாக்க முயற்சிக்கும்போது, தமிழ் வரலாற்றின் திறந்த தன்மை, பன்முகத்தன்மை, நெகிழ்ச்சி, பல நூற்றாண்டுகளாகப் பல வாழ்க்கை முறைகளுக்கு இடமளிக்கும் திறன் இவற்றை நாம் மறுதலிக்கும் ஆபத்து உள்ளது.

ஒரே நாகரிகம் எனும் கதையின் ஆபத்து அது உண்மையல்ல என்பது மட்டுமல்ல. அத்தகைய  கடந்த காலம் ஒரு குறுகிய நோக்கு என்பதுதான் சிக்கல். தமிழ்வரலாற்றுக்கு கோஷங்களோ கொள்கை முழக்கங்களோ தேவையில்லை. அது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

19 மதச்சார்பின்மை புனைகதை

தமிழ்க் கலாச்சாரம் ஒருபோதும் வெறுமையான சூழ்நிலையில் இருந்ததில்லை. அது ஒருபோதும் மதச்சார்பற்றதாகவோ, நாத்திகமாகவோ, இருந்ததில்லை. இந்த குணங்கள் அனைத்தும் நவீன அரசியல் கொள்கைகள். ஆனால், அவை கடவுளர்கள், சடங்குகள், பலிகள், சகுனங்கள், ஆவேசம் மற்றும் நிலத்தின் புனிதத் தன்மை ஆகியவற்றை அறிந்திருந்த ஒரு பண்டைய சமூகத்தின் மீது பின்னோக்கித் திணிக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாதது போல பாசாங்கு செய்வது, நிகழ்காலத்தின் கருத்தியலைப் பிரதிபலிக்க வரை கடந்த காலத்தை சிதைப்பதற்குச் சமமாகும். செருப்புக்கு ஏற்றார்போல் பாதத்தை வெட்டும் வேலை.

சங்க இலக்கியத்தில் பக்தி

தமிழ்ச் சமூகத்தின் மிகப் பழமையான மற்றும் செழுமையான பதிவாக இருக்கும் சங்க இலக்கியம், தெய்வீக மொழியைப் பேசுகிறது. அதன் கவிதைகள் வெறும் தத்துவக் கட்டுரைகள் அல்ல. அவை உணர்ச்சிமிக்க உலகங்கள். அங்கே கடவுள்கள் நிலப்பரப்புகளில் உலாவுகிறார்கள். மேலும், அரசர்கள் வெற்றியைத் தவிர வேள்விகள் மூலமும் புகழைப் பெறுகிறார்கள்.

திருமுருகாற்றுப்படையில் முருகனைப் பார்த்துக் கூறப்படும் சொற்கள், மக்களின் மத உணர்வைப் பற்றி எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை:

 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்

கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா! செந்தில் வாழ்வே!

(திருமுருகாற்றுப்படை, நேரிசை வெண்பாக்கள்-5)

இது வெறும் உவமை அல்ல. இது பக்தியின் மிகப் பழமையான தமிழ் வடிவம். இது தனிப்பட்ட, நெருக்கமான, வழிபாட்டு உணர்வு கொண்டது.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. (பரிபாடல்-திரட்டு 8:7-12)

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார். இது பண்டைத் தமிழர்களின் வேத வாழ்விற்கு ஒரு எடுத்துக்காட்டு. இங்கே குறிப்பிடப்பட்ட அதே மதுரையின் தொடர்ச்சியான வைகை நாகரீகத்தில்தான் கீழடியும் உள்ளது.

அந்த மக்கள் வேதம் சொல்வதை ஒரு பெருமிதாமக மட்டுமே சொல்லவில்லை, பாரத கலாசாரத்தின் விழாக்களையும் கொண்டாடி உள்ளனர். ஒரு எடுத்துக்காட்டு:

மழை கால் நீங்கிய மகா விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகத்தில் அம்ம !

(அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்)

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.

இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.

யாகங்களும் பிராமணர்களும்

'பண்டைய மதச்சார்பற்ற தமிழ்' என்ற கட்டுக்கதை எங்கு மிகத் தீவிரமாக உடைகிறது என்றால், புறநானூறில்தான். அதன் பாடல்கள் அரசர்களின் சிறப்பு வேத யாகங்களைச் செய்வதன் மூலம் மதிப்பிடுவதைக் காட்டுகின்றன.

புறநானூறு 15-இல், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்ந்து பேசும் கவிஞர் எழுதுகிறார்:

 “நற்பனுவல் நால் வேதத்து அருஞ் சீர்த்திப்

பெருங் கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி

பொங்கப் பன்மாண வீயாச் சிறப்பின்

வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம்

பல கொல் யாபல கொல்லோ பெரும!”(புறம் 15)

நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்த்து “நீ செய்த யாகங்களில் நட்ட யாகத் தூண்கள் பலவா அல்லது போர்க்களத்தில் வெற்றி கொண்டு அதன் சின்னமாக நட்ட வெற்றித் தூண்கள் பலவா? இவற்றுள் யாபல?” என்கிறார்.

அதே கவிதை அரசரின் வேள்வியில் வழிபாட்டு நெய் பெருகி வழிவதைப் பற்றி விவரிக்கிறது:

நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?

 (புறநானூறு 15)

இது மதச்சார்பின்மை அல்ல.

இது தமிழின் மிகப் பழமையான கவிதையில் யாக கலாச்சாரம்.

பிராமணர்கள் கூட விளிம்புநிலை நபர்களாக அல்லாமல், சடங்கு அதிகாரிகளாகக் காட்டப்படுகிறார்கள். புறநானூறு பாரம்பரியத்தில் உள்ள ஒரு உரை அடிப்படையிலான வரி, அவர்கள் சடங்கு செயல்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது:

 அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கிற், றுஞ்சும்

பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

(புறநானூறு 6 காரிகிழார்.)

 அந்தியில், அந்தணர் செய்யும் முத்தீ வழிபாட்டில் இமயமும் பொதிகையும் உறங்க செல்கின்றன. அதாவது இந்த முத்தீ ஓம்பல் இமயம் முதல் குமரி வரை இருந்தது.

வேதமும் ஒற்றுமையும்

தமிழிலக்கியம் சடங்கு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்; நாகரிக ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறது. கவிஞர்கள் மகாபாரதத்தை ஒரு வட இந்திய நூலாக அல்ல, தங்கள் சொந்தக் கலாச்சார எல்லைக்குள் அறிந்திருந்தனர்.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு 2)

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது. துரியோதனன் முதலிய கௌரவர் நூற்றுவரும் பாண்டவர் ஐவரோடு பகைத்துப் போரிட்டனர்; போரிட்டு மாண்டனர். அப்போர்க்களத்தில் சேரலாதன் போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்துச் சிறப்புச் செய்துள்ளான் என்பது இப்பாடலின் பொருள்.

மகாபாரதம் மட்டுமல்ல, இராமாயணமும் பண்டைத் தமிழ்நாட்டிற்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது.

கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(புறநானூறு 378)

இராமனுடன் காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் கடத்திச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரிந்து, தன்னை பின்தொடர, அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக அங்கங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள்.

அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் அவற்றை எடுத்து, எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் மாற்றி மாற்றி அணிந்துகொண்டது என இந்த, புறம் 378ஆவது பாடலில் ஊன் பொதி பசுங்குடையார் சொல்கிறார்.

இன்றும் தென் மாவட்டத்தில் தூத்துக்குடி அருகே உள்ள ஊர் பெயர் 'குரங்கணி'. இது சீதாதேவியின் முத்து ஆரம் விழுந்த இடமாக நம்பப்படுகிறது.ஊன் பொதி பசுங்குடையார், சோழன் இளஞ்சேட் சென்னி அரண்மனை வயிலில் பாடிய அந்த பாடலின் கவித்துவ வரியாகவே 'குரங்கணி' என்று உள்ளது.

இது தனிமைப்படுத்தப்பட்ட நிலை அல்ல. இது ஒற்றை பாரத நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே தமிழகமும் இருந்தது என்பதன் இலக்கிய ஆதாரம்.

அகநானூறிலும் இதே ஒற்றுமை விரிகிறது. இது நான்கு வேதங்களின் ஒழுங்கைச் சமூகத்தின் நிலைப்படுத்தும் கொள்கையாகக் கூறுகிறது:

புனைகதைகளின் வீழ்ச்சி

இவையனைத்தும் வெளிப்படுத்துவது :

·       பண்டைய தமிழர்கள் மதச்சார்பற்றவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

·       அவர்கள் மத உணர்வுடையவர்களாக, சடங்குகளைப் பின்பற்றுபவர்களாக, அண்டவியல் நோக்குடையவர்களாக இருந்தார்கள்.

வேதக் கலாச்சாரம் முற்றிலும் வட இந்தியக் கலாச்சாரம் என்றால், இந்தக் கவிதைகள் இருந்திருக்க முடியாது. தமிழரசர்கள் யாகங்கள் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்க் கவிஞர்கள் வேத நூல்களைப் புகழ்ந்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சமூகம் முருகன், மாயோன், ஈசன், வருணன் மற்றும் இந்திரன் ஆகியோரை ஒரு தொடர்ச்சியாக வணங்கி இருக்க மாட்டார்கள்.

சங்க உலகம் வெளிப்படுத்துவது இதுதான்:

·       'ஆரியர் மற்றும் திராவிடர்' என்ற மதப் பிளவு இல்லை.

·       நாத்திகம் கொண்ட தமிழ்த் தொன்மை இல்லை.

·       தனிமைப்படுத்தப்பட்ட நாகரிகம் இல்லை.

·       வெளியிலிருந்து கலாச்சார திணிப்பு இல்லை.

மாறாக, தமிழ்க் கடவுளர்களாக இருந்தவர்கள் வேத தெய்வங்களே. சங்க இலக்கியம், தமிழ்ச் சமூகம் வேதத்துடன் இணைந்து வாழும் ஒரு நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. அங்கே சடங்கும் கவிதையும் இணைகின்றன. நிலப்பரப்பும் தெய்வத்தன்மையும் ஒன்றாகப் பாய்கின்றன. சமஸ்கிருதமும் தமிழும் காலம் காலமாகவே பின்னிப் பிணைந்துள்ளன.

திராவிட அரசியலுக்கு, அதன் நவீன கருத்தியல் நிலைப்பாட்டைச் சட்டப்பூர்வமாக்க ஒரு மதமற்ற தமிழ் வரலாறு தேவைப்படுகிறது. காலனித்துவ அதிகாரத்திற்கு, ஒரு பிளவுபட்ட இந்தியா தேவைப்பட்டது. ஆனால், கவிதைகள் இரண்டையும் மறுக்கின்றன.

அது கடவுளர்கள், தீப்பிழம்புகள், மந்திரங்கள், மூதாதையர்கள், யூபத் தூண்கள், பலி மண்டபங்கள், யாத்ரீகப் பாதைகள், புனிதமான நிலப்பரப்புகள் அண்டவியல் அறிவு என்று சங்கத்தமிழகம் உயிர் துடிப்புடன் இருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

20 தவறவிட்ட தருணங்கள்

கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை; தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. இது மத்திய அரசின் சதித்திட்டத்தாலோ அல்லது நாசவேலையாலோ நிகழவில்லை. மாறாக, எந்தவொரு அறிவியல் அகழ்வாராய்ச்சியிலும் இருக்க வேண்டிய தரநிலைகள் இல்லாததால் நிகழ்ந்தது.

தமிழக அரசு இந்தத் தளத்தை ஓர் அடையாளப் போர்க்களமாக அல்லாமல், ஆராய்ச்சியின் நேர்மைக்கான ஒரு நிரூபணத் தளமாக நடத்தத் தயாராக இருந்தால், இந்தப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து தொல்லியல் ஆய்வுகளுக்கும் இது ஒரு அளவுகோலாக மாற முடியும்.

அகழ்வாராய்ச்சி நெறிமுறைகள்

முதல் குழி வெட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே தொல்லியல் ஆய்வு தொடங்குகிறது. அறிவியல்ரீதியாக நம்பகமான ஒரு அகழ்வாராய்ச்சிக்கு, அதன் கேள்விகள், முறைகள், மாதிரி சேகரிப்பு உத்திகள், பதிவு அமைப்புகள் மற்றும் வெளியீட்டு காலக்கெடு ஆகியவற்றைக் குறிப்பிடும் ஒரு ஆராய்ச்சி வடிவமைப்பு தேவை.

கீழடிக்கு இதுவரை அத்தகைய வடிவமைப்பு பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு குழியும் ஒரு ஆராய்ச்சிக் கேள்விக்குத் தேவைப்படுவதால் மட்டுமே இருக்க வேண்டும்.

அகழ்வாராய்ச்சி தொடங்கியவுடன், முதன்மைப் பொறுப்பு கண்டுபிடிப்பது அல்ல; ஆவணப்படுத்துவது. மண்ணே பொய் சொல்ல முடியாத ஒரே சாட்சி. ஆனால், அதையும் தவறாகப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு அடுக்கையும், ஒவ்வொரு நிரப்பலையும், ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் தனித்த கண்டுபிடிப்பாக அல்லாமல், சூழலாகப் பதிவு செய்ய வேண்டும்.

கீழடி போன்ற ஒரு தளத்திற்கான நெறிமுறை, ஒவ்வொரு கலைப்பொருளும் அதன் ஆயங்கள் (coordinates), ஆழம், மண் விளக்கம், அதனுடன் தொடர்புடைய அம்சங்கள் மற்றும் அதன் உடனடி அடுக்கடுக்கான உறவுகள் ஆகியவற்றுடன் பதிவு செய்யப்பட வேண்டும். அடுக்கு இல்லாத ஒரு பானை என்பது ஆதாரமல்ல, அது வதந்தி; பின்னணி அற்ற ஒரு மணி என்பது தொல்லியல் அல்ல, அது ஒரு நாடகக் காட்சி.

காலக்கணிப்பின் அவசியம்

கீழடி, விளக்கத்திற்கு வருவதற்கு முன் மாதிரிகளைச் சேகரிக்கும் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கதிரியக்கக் காலக் கணிப்பு, பைட்டோலித் பகுப்பாய்வு, மைக்ரோமார்ஃபோலஜி, இரசாயனத் தடயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறுகட்டமைப்பு ஆகியவற்றுக்காக மண் மாதிரிகள் முறையாக எடுக்கப்பட வேண்டும். இவை கலைப்பொருட்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் சீல் வைக்கப்பட்டு, குறியிடப்பட்டு, சேமிக்கப்பட்டு, பட்டியலிடப்பட வேண்டும்.

இது இல்லாமல், காலவரிசை சிதைந்துவிடும். ஒவ்வொரு வரலாற்றுக் கூற்றும் நிற்கும் முதுகெலும்பு காலவரிசைதான்.

அதிகாரிகள் மாற்றப்படும்போதும், ஓய்வு பெறும்போதும், அல்லது பொது சர்ச்சைக்கு உட்படும்போதும் தொல்லியல் பதிவுகளை இழக்கும் ஒரு சங்கடம் உள்ளது. கீழடி இதற்கு எதிரான ஒரு முன்னுதாரணத்தை அமைக்க வேண்டும். ஒவ்வொரு காகிதத் துண்டு, புகைப்படம், வரைபடம், மாதிரி குறியீடு, ஜிபிஎஸ் தரவு மற்றும் மெட்டாடேட்டா பதிவு ஆகியவை ஒரு பிரத்யேக டிஜிட்டல் மற்றும் பௌதீகக் களஞ்சியத்தில் வைக்கப்பட வேண்டும். காகித வேலைகள் சிதைந்தால் தொல்லியல் ஆய்வும் சிதைகிறது. கீழடி ஆவணப் பாதுகாப்பின் ஒரு முன்மாதிரியாக மாறினால் மட்டுமே நம்பகமானதாக மாறும்.

வெளியீடும் விமர்சனமும்

வெளியிடப்படாத ஓர் அகழ்வாராய்ச்சி என்பது அறிவை விட்டுச் செல்லாமல் அழிக்கப்பட்ட ஒரு தளம். கீழடி ஒரு கடுமையான வெளியீட்டு நெறிமுறையை ஏற்க வேண்டும். பருவ அறிக்கைகள் பன்னிரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முழு தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வெளியிடப்பட வேண்டும்.

அகழ்வாராய்ச்சியுடன் தொடர்பில்லாத தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சமூகப் peer review நடத்தப்பட வேண்டும். சமூகப் peer review-க்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்புகள் கூடாது. அடுக்குகள் ஆய்வு செய்யப்படுவதற்கு முன் நாகரிகத்தைப் பற்றிய கூற்றுக்கள் கூடாது. கீழடி தரவுகள் மூலம் பேச வேண்டும், ஒலிபெருக்கிகள் மூலம் அல்ல.

தோற்றுவாய் (Provenance) என்பது இந்தத் துறையின் நெறிமுறைக் கட்டமைப்பு. ஒவ்வொரு பொருளுக்கும் ஆவணப்படுத்தப்பட்ட தோற்றம் இருக்க வேண்டும். அதன் சூழல்கள் அறியப்படாத அல்லது வெளியிடப்படாத கலைப்பொருட்களை ஒரு அருங்காட்சியகம் காட்சிப்படுத்த முடியாது; அத்தகைய காட்சிப்படுத்தல் அது மாநிலத் தொல்லியல் துறையின் தவறான செயல்பாடு.

கீழடியின் அருங்காட்சியகம் தோற்றுவாயை பதிவு செய்யும் பணியே தலையாயப் பணி என்று கருத வேண்டும். காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் அதன் குழி, இடம், அடுக்கு, தொடர்புடைய அம்சங்கள் மற்றும் கால வரம்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இது இல்லாமல், அருங்காட்சியகம் ஒரு அறிவியல் இடமாக இல்லாமல், வெறும் விசித்திரப் பொருட்காட்சியாக மாறிவிடும்.

அரசியல் விலகலும் கூட்டுறவும்

அறிவிப்புகளின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரசியல்வாதிகளுடன் நிற்கக் கூடாது. ஊடகங்களுக்கக அகழ்வாராய்ச்சி உத்திகளைத் திருத்தக் கூடாது. ஆராய்ச்சி இயக்குநரைத் தவிர வேறு யாராலும் எந்தவொரு அகழ்வாராய்ச்சி பருவமும் திறந்து வைக்கப்படக்கூடாது.

தொல்லியல் அரசியல் அழுத்தத்திலிருந்து காக்கப்பட வேண்டும். அரசியல் தீங்கானது என்பதனால் அல்ல, அது பொறுமையற்றது என்பதால். மண்ணுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அரசியல்வாதிகளை விடுத்து, மண்ணுக்குச் சேவை செய்ய வேண்டும்.

கடைசியாக, இந்த அளவுள்ள ஒரு தளத்தை எந்தவொரு தனிப்பட்ட அகழ்வாராய்ச்சியாளரோ, துறையோ அல்லது மாநிலமோ நிர்வகிக்க முடியாது. மட்பாண்டங்கள், உலோகங்கள், விலங்கினங்கள், கல்வெட்டுகள், கதிரியக்க அறிவியல், ஜிஐஎஸ் மேப்பிங், பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் ஆகியவற்றில் நிபுணர்கள் சம பங்காளிகளாகக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த நடவடிக்கை கீழடி பிழைகளை விரைவாகத் திருத்தும், விளக்கங்களை செம்மைப்படுத்தும். அறிவியலில் உறுதியை விடப் பணிவு அதிக மதிப்புமிக்கது.

இந்தத் தரநிலைகள் கனவுகள் அல்ல. இவை உலகின் வேறு எந்த இடத்திலும் உள்ள தொல்லியல் துறையின் அடிப்படை எதிர்பார்ப்புகள். அறிவியல் நேர்மை கலாச்சாரப் பெருமையுடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதைத் தமிழ்நாடு நிரூபிக்கும் ஒரு ஆய்வகமாக இந்தத் தளம் மாறினால், கீழடியின் கதை இறுதியாக சர்ச்சைக்கு மேலாக உயர்ந்து அறிவின் களத்தில் நுழையும்.

தொல்லியல் என்பது மண் எதைக் காட்டுகிறது எனும் காட்சி அல்ல. நாம் எவ்வளவு உண்மையுடன் செவிகொடுக்கிறோம் என்ற சோதனை. கீழடிக்கு ஆர்ப்பாட்டம், பயம் திரிபில்லாமல் தமிழ்நாடு செவிகொடுக்க வேண்டும். 



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

21 வகுப்பறை வருத்தங்கள்

தொல்லியல் என்பது நாம் குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு கதை அல்ல; அது நாம் அவர்களுக்குக் கற்பிக்கும் ஒரு முறை. ஆனால், தமிழ்நாட்டில் கீழடி அறிவியல் செயல்முறையைப் பற்றிய ஒரு ஆய்வாக வகுப்பறைகளுக்குள் நுழையவில்லை. அது ஒரு கலாச்சாரச் சான்றிதழாக, ஓர் அடையாளச் சின்னமாக, ஒரு கருத்தியல் ஆயுதமாக நுழைந்தது.

மாணவர்கள் கவனிக்கவோ, கேள்வி கேட்கவோ, பகுப்பாய்வு செய்யவோ, அல்லது ஒப்பிடவோ வாய்ப்புகள் இல்லை. ஆய்வுக்குப் பதிலாகக் கருத்துத் திணிப்பு நடக்கிறது. பொறுமைக்குப் பதிலாகப் பெருமை போதை போல ஊட்டப்படுகிறது .

அறிவு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறித்து ஒரு தலைமுறைக்குக் கற்பித்திருக்க வேண்டிய ஒரு தளம், அதற்குப் பதிலாக ஏற்கனவே முழுமையான "உண்மைகளாக" அவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஆசிரியர்கள், அகழ்வாராய்ச்சியை வெளிப்படுத்தப்படும் ஆய்வாக அல்லாமல், நீண்ட காலமாக அடக்கப்பட்டிருந்த "தமிழர் பெருமையின்" வெளிப்பாடாக கீழடியை மாணவர்கள் முன் வைத்தனர். மாணவர்கள் ஆதாரங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்பே முடிவுகளைக் கற்றுக்கொண்டனர். இது கல்வி அல்ல; அரசியல் பிரச்சாரம்.

நிச்சயமற்ற தன்மையின் தொடக்கம்

உண்மையான தொல்லியல் கல்வி நிச்சயமற்ற தன்மையுடன் தொடங்குகிறது. மாணவர்கள் கதைக்கு முன் தளத்தைப் பார்க்க வேண்டும். சூழல்கள் புரிந்து கொள்ளப்படும் வரை மட்பாண்டங்கள் பேசாது என்பதையும், மாதிரிகள் சோதிக்கப்பட்ட பின்னரே காலங்கள் வெளிவரும் என்பதையும், ஒவ்வொரு கூற்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான ஆதாரம் தேவை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கருத்து வேறுபாடு என்பது கிளர்ச்சி அல்ல, அது அறிவியல் பணியின் ஒரு பகுதி என்று அவர்களுக்குக் காட்டப்பட வேண்டும். சந்தேகத்தைத் தாங்க முடியாத ஒரு வகுப்பறை சிந்தனையாளர்களை உருவாக்க முடியாது; அது பிரிவினை பேசும் ஆட்டு மந்தைகளை மட்டுமே உருவாக்கும்.

'நாகரிகம்' என்ற சொல் நீண்ட, பல பருவ பகுப்பாய்வு ஆதாரங்கள் மூலம் உருவாக வேண்டிய ஒரு சொல். ஆனால், வகுப்பறைகளில், அது ஒரு முழுமையான அடையாளமாக வழங்கப்பட்டது: நாங்கள் இதுவாக இருந்தோம், நாங்கள் அதுவாக இருந்தோம், நாங்கள் ஏற்கனவே சிறந்தவர்களாக இருந்தோம். இந்த வகையான கற்பித்தல் திறமையை அல்ல, போலிப் பெருமிதத்தை உண்டாக்குகிறது.

ராக்கிகர்கி முன்மாதிரி

இந்தியாவில், மற்றொரு தளம் தொல்லியல் ஆய்வு பொதுமக்களின் புரிதலுக்குள் எவ்வாறு நுழைய முடியும் என்பதற்கு ஒரு மாதிரியை வழங்குகிறது. ராக்கிகர்கி (Rakhigarhi) – இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட மிகப் பெரிய ஹரப்பா நகரங்களில் ஒன்று. இது குறித்த அவசரமாக பள்ளிகளிலோ அல்லது ஊடகங்களிலோ வரவில்லை. மெதுவான ஆய்வு முறையின் மூலம் வந்தது. அகழ்வாராய்ச்சிகள் பருவம் வாரியாக ஆவணப்படுத்தப்பட்டன. அடுக்கு முறை, மட்பாண்டங்களின் வகைப்பாடு, ஈமச் சடங்கு பகுப்பாய்வு மற்றும் கதிரியக்கக் காலக் கணிப்பு முடிவுகள் பற்றி நிபுணர்கள் தொகுத்த பிறகுதான் அறிக்கைகள் வெளிவந்தன.

எந்தவொரு அமைச்சரும், இந்திய நாகரிகம் "நிரூபிக்கப்பட்டது" என்று குழியில் நின்று அறிவிக்கவில்லை. சக மதிப்பாய்வு முடிவதற்கு முன்பே எந்தவொரு பள்ளிப் பாடப்புத்தகமும் பண்டைய வரலாற்றை மீண்டும் எழுதவில்லை. அறிவியல் மெதுவாக நகர்ந்ததால், பொதுமக்களும் மெதுவாகவே கற்றுக்கொண்டனர்.

ராக்கிகர்கியின் ஈமக் களங்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் இறுதியில் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, முடிவுகள் எச்சரிக்கையுடன் விளக்கப்பட்டது: மரபணு ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது, அவர் சிந்து சமவெளி மரபணுவின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

கண்டுபிடிப்புகள் முக்கியமானவை, முழு நாகரிகத்தைப் பற்றிய இறுதி முடிவுகள் அல்ல. விஞ்ஞானிகள் ஊடகங்களின் தாளத்திற்கு ஆட மறுத்தனர். பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர்கள் மறுத்தனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஒரு கல்வித் தரத்தை அமைத்தனர்: உங்களுக்குத் தெரிந்ததைக் கற்பியுங்கள், தெரியாததை ஒப்புக்கொள்ளுங்கள், கோட்பாட்டையும் பாரம்பரியத்தையும் ஒருபோதும் குழப்ப வேண்டாம்.

ராக்கிகர்கி, தொல்லியல் ஆய்வு சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படும்போது எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைக் காட்டியது. அதன் முடிவுகள் விசுவாசத்தை விட ஆர்வத்தை உருவாக்கியது. இது எந்தவொரு கருத்தியலையும் அங்கீகரித்ததால் அல்லாமல், பண்டைய வாழ்க்கையின் சிக்கலான தன்மையை – கைவினையின் அமைதியான துல்லியம், நகர்ப்புறத் திட்டமிடலின் வடிவியல், ஈமச் சடங்குகளின் கவனமான நடைமுறைகள் – வெளிப்படுத்தியதால் உலக அறிஞர்களை ஈர்த்தது.

சிந்திப்பவர்களை உருவாக்குதல்

கீழடிக்கு அதே கண்ணியம் தேவை. கீழடி என்ன "நிரூபிக்கிறது" என்பதைவிட, கீழடி எவ்வாறு ஆராய்ந்து படிக்கப்படுகிறது என்பதைத் தமிழ்ப் பிள்ளைகள் அறிய வேண்டும். ஒரு குழியில் ஏன் செங்கல் வரிசை கிடைக்கிறது, மற்றொன்றில் குடியிருப்புக் கழிவுகள் ஏன் காணப்படுகிறது; ஏன் ஒரு கருப்பு மற்றும் சிவப்பு ஓடு ஒரு அடுக்கில் தோன்றுகிறது, அடுத்ததில் ஏன் இல்லை; ஏன் கரிமம்-14 மாதிரிகள் மீண்டும் சோதிக்கப்பட வேண்டும்; ஏன் ஒரு விளக்கம் மற்றொன்றை விட வலிமையானது என்றெல்லாம் அவர்கள் கேட்க உரிமை வேண்டும். தொல்லியல் என்பது கலாச்சார கற்பனைகளை உருவாக்குவது அல்ல, கேள்விகளைக் கொண்ட ஒரு துறை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

திணிப்பற்ற கல்வி கீழடியை அதற்குரிய இடத்திற்கு திருப்பும். கடந்த காலங்கள் தயாராக மரபுரிமையாகப் பெறப்படுவதில்லை; அவை கவனிப்பு, எச்சரிக்கை, ஒப்பிடுதல் மற்றும் தன்னைத் தானே திருத்திக்கொள்ளுதல் மூலம் துண்டு துண்டாகக் கட்டமைக்கப் படுகின்றன இந்த உண்மையை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். உறுதிப்பாட்டில் வேரூன்றிய பெருமையை விட, ஆதாரத்தில் வேரூன்றிய பெருமை வலிமையானது என்று காட்டுவதாகும்.

எதிர்கால குடிமக்கள் என்ன சிந்திக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், எப்படி சிந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாணவர்கள் முறையைப் புரிந்து கொள்ளும்போது, அவர்கள் வேடிக்கையான காட்சிகளால் ஏமாற மாட்டார்கள். சூழலைப் புரிந்து கொள்ளும்போது, கோஷங்களுக்கு பலியாக மாட்டார்கள். அறிவியலின் மெதுவான நடையைப் புரிந்து கொள்ளும்போது, உடனடி வரலாற்றுத் கதை சொல்லிகளை எதிர்ப்பார்கள்.

கீழடி அடையாளத்தின் பாடமாக அல்லாமல், ஆய்வின் பாடமாக வகுப்பறைகளில் எதிரொலிக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் அறிவுசார் எதிர்காலத்திற்கு அதிக நன்மையை செய்யும். ராக்கிகர்கியைப் போல, கற்பிக்கும் ஒரு தளமாக, கலைப்பொருட்கள் பணிவைக் கற்பிக்கும் ஒரு தளமாக மாறும்.

முடிவு அல்ல, ஆர்வமே வரலாற்றின் உண்மையான மரபு. மேலும், கல்வி அந்த மரபைக் கௌரவிக்கும்போது, அது விசுவாசிகளை அல்ல, சிந்தனையாளர்களை உருவாக்குகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

22 ஆவணமே ஆக்ஸிஜன்

தொல்லியல் என்பது இறந்தவர்கள் முற்றிலும் உயிருள்ளவர்களைச் சார்ந்து இருக்கும்  துறை. ஒரு குழியில் கிடக்கும் மட்பாண்டத் துண்டு தவறான விளக்கத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாது. கருகிய விதை முன்கூட்டிய முடிவுக்கு எதிராகப் போராட முடியாது. ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளரை மண் திருத்த முடியாது.

எனவே, தொல்லியல் ஒரு அரிய வகையான பணிவைக் கோருகிறது: பொதுமக்களுக்குப் பொறுமை இல்லாவிட்டாலும், அரசியல் வர்க்கம் அடையாளங்களுக்குப் பசித்திருந்தாலும், ஆதாரம் அதன் சொந்த வேகத்தில் வெளிவர அனுமதிக்க வேண்டும் என்ற விருப்பம் அது.

கீழடி மீதான ஆதிக்கம்

தமிழ்நாடு அதன் பரந்த தொல்லியல் செழுமையுடன், இன்னும் பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால், அரசியல் தலையீட்டால், அந்தப் பொறுப்பை எவ்வளவு எளிதில் கைவிட முடியும் என்பதை கீழடி வெளிப்படுத்தியது. அகழ்வாராய்ச்சி திராவிட அரசியல் கதைகளுடன் சிக்கிய தருணத்தில், மண் பேச அனுமதிக்கப்படவில்லை.

திராவிட இயக்கம் சக்தி வாய்ந்தது. கலாச்சாரரீதியாக செல்வாக்கு மிக்கது உணர்வு ரீதியாக எதிரொலிப்பது. நீண்ட காலமாகத் தமிழ்த் தொன்மையைப் பற்றிய ஒரு கதையை இந்தச் சித்தாந்தம் நம்பியுள்ளது. அந்தக் கதை தமிழ்ச்சமூகம் பகுத்தறிவு கொண்டது, மதச்சார்பற்றது, வட இந்திய மரபுகளை விட உயர்ந்தது என்று கூறுகிறது. சரியான நேரத்தில் கிடைத்த கீழடி, இதற்கு ஒரு மேடையை வழங்கியது.

அது ஒரு தளம் மட்டுமல்ல; அது ஒரு வாக்குறுதி. ஒரு பருவத்தின் அறிக்கை கூட மதிப்பாய்வு செய்யப்படுவதற்கு முன்பே, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்தனர். பத்திரிகையாளர் சந்திப்புகள் தரவுகளுக்குப் பதிலாக விளக்கங்களை முன்வைத்தன.

இந்த மாற்றம் தமிழ்ப் பாரம்பரியம் பலவீனமாக இருப்பதால் நடக்கவில்லை. அரசியல் கருத்தியல் தொல்லியல் அங்கீகாரத்தை விரும்பியதால் நடந்தது. கீழடி திராவிட அரசியல் மேடையாக மாறியது. இதற்குக் கொடுத்த விலை, அறிவியல் நேர்மை.

அகழ்வாராய்ச்சி ஒரு நாடகமா?

அரசியல் தலையீடு தொல்லியல் ஆய்வைத் திரிக்கிறது. அகழ்வாராய்ச்சி கேள்விகளிலிருந்து விளம்பரத் தேவைகளுக்கு மாறுகிறது. அகழ்வாராய்ச்சி முடிவகளை வெளியிடும் நேரம், அரசியல் நிகழ்வுகளுடன் ஒத்துப்போகும்படி திட்டமிடப்படுகின்றன. பருவத் திட்டங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அல்ல,  அமைச்சர்களால் மறுவடிவமைக்கப் படுகின்றன.

தமிழ்நாடு அறிவியல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், வெறியுடன் அல்லாமல் தெளிவுடன் தங்கள் கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு தலைமுறைக் குடிமக்களை உருவாக்கும். உண்மையான பெருமை, அமைதியாக, ஆதாரத்தில் நிலைத்திருப்பதை அவர்கள் அங்கீகரிப்பார்கள்.

தொல்லியல் என்பது எதிர்காலத்திற்கான ஒரு வாக்குறுதி: கடந்த காலத்தை உண்மையுடன் பார்போம் எனும் வாக்குறுதி. இந்த வாக்குறுதியை அரசியல் அழித்துவிட்டது. திராவிட நிறக் கண்ணாடிகள் ஊடகம் முதல் வகுப்பறை வரை பரவிவிட்டன. ஆனால், கீழடி இன்னும் இந்தத் திரிபிலிருந்து மீள முடியும். தமிழ்நாடு அதன் வரலாற்றுக்குத் தகுதியான ஒரு அருங்காட்சியகக் கலாச்சாரத்தை இப்போதும் உருவாக்க முடியும். ஆனால் அதற்கு தைரியம் தேவை – அரசியல் ரீதியான கற்பனைகளை பொய்கள் என்று ஒப்புக்கொள்ளும் தைரியம்.

தமிழ்நாடு மிகைப்படுத்தல் இல்லாத அருங்காட்சியகங்களுக்குத் தகுதியானது. தமிழ்ப் பாரம்பரியம் நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல், உண்மை மூலம் பார்க்கப்படத் தகுதியானது.

அப்போதுதான் தொல்லியல் அதன் சரியான நோக்கத்திற்குத் திரும்பும்: அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அல்ல, புரிதலை விரிவுபடுத்துவதற்காக; விசுவாசிகளை உருவாக்க அல்ல, சிந்தனையாளர்களை உருவாக்க; அரசியலுக்குச் சேவை செய்ய அல்ல, உண்மைக்குச் சேவை செய்ய.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் மற்றும் மேலும் பல தளங்கள் நமக்கு ஒரு சங்கடமான உண்மையைக் காட்டியுள்ளன. தமிழ்த் தொல்லியல் ஆய்வில் மண் மௌனமாக இருப்பதால் அது தோல்வியடையவில்லை. மாறாக, மாநில ஆட்சியதிகாரம் அதன் பேச்சைப் பாதியிலேயே நிறுத்துகிறது என்பதால்தான் அது தோல்வியடைகிறது.

அகழ்வாராய்ச்சிகள் அரசியல் சுழற்சிகளால் வடிவமைக்கப் பட்டுள்ளன. நிச்சயமற்ற தன்மை வருவதற்கு முன்பே அருங்காட்சியகங்கள் உறுதியை வெளிப்படுத்தும்படி கேட்கப்பட்டுள்ளன. அறிக்கைகளுக்குப் பதிலாக வெளிப்பாடுகளை எதிர்பார்க்கும் வகையில் பொது மக்கள் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர்.

புதிய மாதிரி தேவை

ஒரு புதிய மாதிரி தேவை. அது ஒரு இலட்சியமாகவோ, கனவாகவோ அல்லாமல், உலகளாவிய அறிவியல் நடைமுறையில் வேரூன்றி, இந்தியாவின் யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட ஒரு நெறிமுறையாக இருக்க வேண்டும். அதில் அகழ்வாராய்ச்சிகள் ஒரு பருவத்தின் அறிவிப்புகளாக அல்லாமல், பல வருட திட்டங்களாக இருக்க வேண்டும். அரசியல் காற்று மாறும் போது மாற்றப்படாமல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீண்ட காலம் தளத்துடன் இருக்க வேண்டும். முன்கூட்டிய விளக்கத்தின் சுமை இல்லாமல் ஆராய்ச்சி வெளிவர அனுமதிக்கும் ஒரு மாதிரி தேவை.

தொல்லியல், ஆய்வு நோக்கத்துடன் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் எதிர்கால அகழ்வாராய்ச்சி ஒவ்வொன்றும் ஒரு ஆராய்ச்சி வடிவமைப்பு அறிவிக்கப்பட்ட பின்னரே தொடங்க வேண்டும். கேள்விகள், மாதிரி சேகரிப்பு உத்திகள்,  வெளிப்படையாக இருக்க வேண்டும். உண்மையான தொல்லியல் கேள்விக்கு பதிலளித்தாலன்றி, குழிகள் தோன்றக்கூடாது. பூமி தலைப்புச் செய்திகளுக்கான வாய்ப்பாக அல்லாமல், ஒரு ஆவணக் காப்பகமாக கருதப்பட வேண்டும். அதனை ஆவணப்படுத்தல் நிர்வாக வேலை அல்ல; அது தொல்லியல் ஆய்வின் ஆக்ஸிஜன்.

அகழ்வாராய்ச்சியின் உண்மையான இதயம் ஆவணக் காப்பகம். குழிகள் மீண்டும் நிரப்பப்படுகின்றன; கலைப்பொருட்கள் அருங்காட்சியகங்களுக்குச் செல்கின்றன; ஆனால் ஆவணக் காப்பகம் உண்மையைப் பாதுகாக்கிறது. தமிழ்நாடு ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிக் காலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் நேரடிக் களஞ்சியங்களை உருவாக்க வேண்டும். அங்கு வரைபடங்கள், புகைப்படங்கள், மாதிரிப் பதிவுகள் மற்றும் மெட்டாடேட்டா ஆகியவை மூன்று பிரதிகளில் இருக்கும்.

இது அரசியல் ஆர்வம் கொண்டவர்களால் அல்லாமல், அறிஞர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். ஆவணக் காப்பகங்கள் தோல்வியடையும் போது, தளங்கள் இரண்டு முறை இறக்கின்றன: ஒரு முறை அவை தோண்டப்படும்போது, மறுமுறை அவற்றின் பதிவுகள் மறையும்போது.

அரசியல் சாராத நிறுவனங்கள்

பொதுத் தொடர்பும் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆவணப்படங்கள், செய்தி கட்டுரைகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள் மற்றும் பொது விரிவுரைகள் தொல்லியல் ஆய்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொல்லியல் என்ன "நிரூபிக்கிறது" என்பதற்கு அல்ல.

பணிவே துணை

இறுதியில், எந்தச் சீர்திருத்தமும் பணிவைவிட முக்கியமல்ல. கேள்விகள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படும்போது தொல்லியல் செழித்து வளர்கிறது. தமிழ்நாடு வேகமான பெருமையைவிட மெதுவான உண்மையையும், கட்டுக்கதையைவிட முறையையும், பிரசாரத்தைவிடப் பொறுமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவுசார் நேர்மையின் அடையாளமாக மக்கள் "நமக்கு இன்னும் தெரியாது" என்ற சொற்றொடரைக் சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பூமி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

எப்படிக் கேட்க வேண்டும் என்று நாம் கற்றுக்கொள்ள இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம்.

மண்ணே கடைசியாகப் பேசட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 25271
Date:
Permalink  
 

நிலமகளுக்கோர் விண்ணப்பம்

காலந்தன்னை கருவினிலே கனமாய்சுமக்கும் பெட்டகமே

ஞாலம்போற்றும் இருமொழிகள் இணைந்தஇருப்பின் இட்டகமே

பாலும்நீரும் போல்பிரியா பண்பாடெனவே வந்திடுவாய்

சீலமிழத்தல் இல்லாத பொறுமைஎமக்கும் தந்திடுவாய்

 

அகழ்வாராய்ச்சி அதுநடந்தால் புத்தகம்போல விரிந்திடுவாய்

திகழும்தேசம் தெளிவடைய புதியசரித்திர விருந்திடுவாய்

புகழ்வாரிகழ்வார் இருவருமே புன்னகைமௌனம் காக்கட்டும்

நிகழ்வைநிதமும் அறிவியலின் நிதர்சனமொன்றே ஊக்கட்டும்

 

தோண்டியெடுக்கும் பணியிதுவாம் தோன்றியதெல்லாம் கருத்தல்ல

வேண்டியதெல்லாம் சொல்லுவது வெறும்பயல்பேச்சு உறுத்தல்ல

தீண்டியபொருளை தீர்ப்பளிக்க அறிவியலாய்வு நிகழட்டும்

தூண்டியபடியே பேசிடுவோர் துச்சமென்றுலகம் இகழட்டும்

 

மாடலின்மடியில் உறவாடும் மதியில்லாத மூடர்களே

நாடிதைமதியா நச்சுகளின் நயமில்லாத சீடர்களே

ஊடகப்போட்டியில் உண்மையினை போகிறபோக்கில் உதறிடுவார்

தேடலின்முடிவில் தேசியம்தான் தெரிந்தாலுடனே கதறிடுவார்

 

கரியம்தன்னில் கதிரியக்கம் காலம்காட்டும் கண்ணாடி

பிரிவினைபேசும் பித்தர்களே உண்மைதெரியும் பின்னாடி

உரிமைகோரல் உளறல்களால் உண்மைக்கென்றும் ஆபத்து

விரியுமறிவை வீண்செய்தால் வருவோர்க்கேது சம்பத்து

 

பாழ்படுமரசியல் சிக்காமல் பண்பாமறிவியல் ஓங்கட்டும்

வீழ்திடுமாரியம் என்றோதும் வீண்சொல்லாடல் நீங்கட்டும்

கீழடியாய்வின் முடிவுகளை கல்விக்குரியோர் சொல்லட்டும்

ஆழமிலாத பொய்நீங்கி ஆன்றோருண்மை வெல்லட்டும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard