New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?


Guru

Status: Offline
Posts: 25024
Date:
கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?
Permalink  
 


கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும். கீழடியில் இதுவரை கிடைத்திருப்பவை எவையும் வரலாற்றைப் புரட்டிப் போடுபவை அல்ல என்றுதான் சொல்கிறேன். அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பித்தலாட்டங்களுக்கு நான் ஆமாம் சாமி போட முடியாது.

சரி, அகழ்வாய்வாளர்கள் நகர நாகரிகங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடான Eurasia at the Dawn of History -Urbanization and Social Change என்ற புத்தகத்தில் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பு இது: How Can Arch aeologists Identify Early Cities? Definitions, Types, and Attributes? மைக்கேல் ஸ்மித் எழுதியது. அதில் அவர் நகர நாகரிகத்திற்கு 21 அடையாளங்கள் அல்லது தடையங்கள் இருக்க வேண்டும் என்கிறார்:
அவை
1.மக்கள் தொகை
2. நகரப்பரப்பு
3. மக்களடர்த்தி
4. அரண்மணைகள்
5. அரசர்கள் மற்றும் சமூகத்தில் உச்சநிலையில் உள்ளவர்களை புதைத்த இடங்கள்
6. பெரிய வழிபாட்டுத்தலங்கள்
7. பொதுக் கட்டிடங்கள்
8. கைவினைக் கூடங்கள்
9. சந்தைகள், கடைகள்
10. மதில்கள், கோட்டைகள்
11. நுழைவாயில்கள்
12. இவற்றை ஒன்று சேர்க்கும் தடையங்கள்- தெருக்கள், குளங்கள், ஓடைகள், முதலியவை
13. சிறிய வழிபாட்டுத்தலங்கள்
14. வீடுகள்
15. மக்கள் கூடுவதற்கான இடங்கள்
16. நகரின் நடுப்புற அமைப்பு
17. சமூகத்தில் உயர்ந்த ஆனால் உச்சநிலையில் இல்லாதவர்களைப் புதைத்த இடங்கள்
18. சமூகத்தின் பல தட்டுக்களுக்கான அடையாளங்கள்
19. அருகில் இருந்த நகரங்கள், கிராமங்கள்
20. நகரித்தின் உள்ளே அல்லது அருகில் நடக்கும் விவசாயம்
21. இறக்குமதிப் பொருள்கள்

நமக்கு இதே தடையங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளை வைத்துக் கொண்டு, நமது அகழ்வாய்வாளர்களும் இது போன்ற பட்டியலைத் தயாரிக்கலாம்.
இப்போது கீழடிக்கு வருவோம். அங்கு வண்டி வண்டியாக பானைச் சிதறல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்கள் வேறு ஏதும் கிடைக்கவில்லை. நான் ஒரு அனுபவமிக்க, ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்த ஒரு தொல்லியளாளரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது: They are all fragmentary and not found in one structural phase. No evidence of any fortification, dwelling or contiguous structure. The habitation may be fairly large. But structural and artefactual remains are poor. அதாவது மக்கள் வாழ்ந்திருக்கும் தடையங்கள் இருந்திருக்கலாம், ஆனால் நகரக் குடியிருப்புகள் என்று நிரூபிக்க கிடைத்திருக்கும் சான்றுகள் போதாது என்கிறார்.

கீழடியில் இதுவரை நடந்திருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் (மத்திய மாநில அகழ்வாராய்ச்சிகள்)கிடைத்திருக்கும் எல்லாத் தடையங்களை வைத்துக் கொண்டுதான சரியான முடிவிற்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு இடத்தில் கிடைத்ததை மட்டும் வைத்துக் கொண்டு மேலும் கீழும் குதிப்பதை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கொடி பிடிப்பவர்களும் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் செய்யத் தயங்குவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழில் ஒரு கதை உண்டு. அரசகுமாரியின் ஒரு தலைமயிர் இழையை வைத்துக் கொண்டு அரசகுமாரன் ஒருவன் அவர் படத்தை தத்ரூபமாக வரைந்தான் என்று. இன்று கீழடி அந்த அரசகுமாரியின் நிலையில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் அது எப்படியிருந்தது என்பதை தற்காலத் தமிழ் அரசகுமாரர்கள் – வரலாற்றோடோ, அகழ்வாராய்ச்சியோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்- வரையத் தொடங்கியிருக்கிறார்கள். எந்த லட்சணத்தில் அவை இருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
தனது தரப்பிலிருந்து கீழடியை பற்றி தமிழக அரசு ஒரு புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறது. அதில் இருக்கும் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

கீழடி தனித்தன்மை வாய்ந்ததா?

தமிழ் திராவிட, அரைகுறை மார்க்சிய வெறியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிக காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்திய நாகரிகப் பெரும்பரப்பில் ஒரு சிறிய பகுதி. தமிழ் நாட்டிற்கு வடக்கிலிருந்து குடியேறுதல் 1500 BCEயில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இங்குள்ளவர்களோடு கலந்து படைத்தவைகளில் வடக்கு-தெற்கு கலவை நிச்சயம் இருக்கும். கீழடியில் கிடைத்திருக்கும் கறுப்பு சிவப்பு பானை, சிந்துச் சமவெளியிலும் கங்கை மற்றும் வட இந்தியப் பிரதேசத்திலும் கிடைத்திருப்பது தற்செயலல்ல. கண்ணாடி மணிகளும் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன. தமிழகத்தில் இடுகாடு அல்லாத இடம் ஒன்றில் முக்கியமான பொருட்கள் கிடைத்திருப்பது கூட இது முதல் முறை அல்ல. காவிரிப்பூம் பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் கிடைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இது போன்று பல இடங்கள் இருக்கின்றன. கீழடி தனித்தன்மை வாய்ந்தது அல்ல.

கீழடி நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்ததா?

இதைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதாது. மிருகங்களில் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் தடயங்கள் கிடைக்கவில்லை. வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை. இடம் பானை வனையும் இடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஆறாம் நூறாண்டு BCEல் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்தது கீழடி என்று சொல்ல இன்னும் ஆதாரங்கள் தேவை.

கரிமப்பகுப்பாய்வு – என்ன சொல்கிறது?

இதற்கு முன் கீழடியில் அகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். தோண்டியதை மூன்று அடுக்குகளாகப் பிரித்துக் கொண்டார்கள். முதல் அடுக்கு காலத்தில் மிகப் பிந்தைய அடுக்கு. அதன் பண்பாட்டுக் காலம் கி.பி. நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிகளிலிருந்து கி.பி. 11-12 நூற்றாண்டுகள் வரை. அதற்கு அடுத்த நடு அடுக்கின் பண்பாட்டுக் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் -ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. கடைசி அடுக்குத்தான் மிகப் புராதன அடுக்கு. அதன் பண்பாட்டுக்காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. எனவே கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இருக்கலாம். கால இடைவெளி 1800 ஆண்டுகள். இதை நான் சொல்லவில்லை. அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது கரிமப் பகுப்பாய்விற்கு வருவோம்.
பல தளங்களில் கிடைத்த கரித்துண்டுகளை கரிமப்பகுப்பாய்வு செய்து அதில் ஒன்றின் வயது 580 BCE என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவ்வயது ஆராய்ச்சி செய்யப்பட்ட கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது மரம் கரியாக மாறியது 580 BCE என்பதை மட்டும்தான் அது சொல்கிறது. சுற்றியுள்ள எந்தப் பொருட்கள் மீதும் அதை ஏற்ற முடியாது. இந்தத் தகவலை வைத்துக் கொண்டு அருகே கிடைத்த பானைத் துண்டுகளின் வயதும் அதுதான் என்று சொல்ல முடியாது. மேலும் பானையின் வயதும் பானைக்கீறல்களின் வயதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பானைகளை பல ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க முடியும். அதுவும் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பானைகளாக இருந்தால்.

பிராமி பானைத்துண்டுகளின் காலம் என்ன?

பதினொன்று இடங்களில் அகழ்வாய்வுக் குழிகள் வெட்டப்பட்டன. அதில் A3/2 குழியில் மேல்பகுதி பானை ஓடுகளால் நிரப்பப்பட்டிருந்தன. வண்டி வண்டியாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று ஆங்கிலக்குறிப்பு சொல்கிறது. தளம் மேலும் கீழுமாக மாறி விட்டது என்றும் சொல்கிறது. எனவே கீழடியில் கிடைக்கும் பானைத் துண்டுகளின் காலத்தை மதிப்பிடுவது கடினம். பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் எந்த அடுக்கில் கிடைத்தன என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அவை கடைசி அடுக்கில் கிடைத்திருந்தாலும் அதன் கால கட்டம் பொது ஆண்டுக்கு முன் ஆறாம் நூற்றாண்டு என்று சொல்ல முடியாது. அதிக பட்சமாக அதன் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று சொல்லலாம். அப்படிச் சொல்வது கூடக் கடினம்.

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும் கீழடிக்கும் தொடர்பு இருக்கிறதா?

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு பின்வந்த எந்த இந்தியக்கலாச்சாரங்களுக்கும் அதோடு ஒரு இழையால் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு நேரடியாக இணைந்திருக்கிறது என்ற பொருள் அல்ல. அங்கிருந்தவர்கள் இங்கு நேரடியாக வந்து குதிக்கவில்லை. கீழடியில் கிடைக்கும் பானைக் கீறல்களை சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் குறியீடுகளோடு ஒப்பிடுவது பரிதாபகரமானது. அறிவிற்குப் புறம்பானது.

திட்டம் என்ன?

திட்டம் தெளிவானது. தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கும் முன்னால் என்று நிரூபிக்க வேண்டும். கரித்துண்டுகளின் காலத்தை பானையோடுகளின் காலத்தோடு இணைத்து, இரண்டும் ஒன்று என்று சொன்னால் தமிழுக்கு வரிவடிவம் அசோகன் பிராமி வருவதற்கு முன்னால் என்று நிறுவ முடியும். எனக்கும் அப்படி நிறுவ முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். இப்போது நடப்பது முற்றிலும் அறமில்லாத, அறிவியலுக்குப் புறம்பான செயல் என்றுதான் சொல்ல முடியும்.
தமிழ் பிராமி ஆறாம் நூற்றாண்டில் வந்தது என்றே வைத்துக் கொள்வோம். இதன் பொருள் தமிழில் எழுத்து முறை குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியடையாமல் தேக்கத்தில் இருந்தது என்றுதான் பொருள். தமிழில் முழுமையான கல்வெட்டு பொது ஆண்டு நான்காம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. பானையில் கிடைப்பவையும் கல்வெட்டுகளில் கிடைப்பவையும் வெறும் பெயர்களும் – பாதி பிராகிருதப் பெயர்கள் – யார் யாருக்குக் கொடை செய்தார்கள் என்பவை மட்டும்தான். பல பிழைகள் மிகுந்தவை. மாறாக அசோகனின் கல்வெட்டுகள் விரிவான உலகைப் பற்றி அழகிய, மேம்பட்ட மொழியில் பேசுகின்றன். மொழியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் அசோகன் பிராமி மொழிக்கும் பானைக்கீறல்களில் கிடைத்திருக்கும் மொழிக்கு மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழன் ஆயிரம் ஆண்டுகள் சரியாக எழுத முடியாமல் இருந்தான், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தான் என்று சொல்பவர்கள்தாம் பானைக்கீறல்களின் வயதை வலிந்து பின் தள்ளுவார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இதே காலகட்டத்தில் சங்கப் பாடல்கள் வந்து விட்டன. அதன் அழகும், நுட்பமும் உலகறிந்தது. தமிழன் கவிதை மொழியில் உச்சத்தை அடைந்து விட்ட அதே காலகட்டத்தில் சரியாக எழுத முடியாமல் ஆயிரம் ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தான் என்று சொல்வது சரியாக இருக்குமா?
எனவே இவ்வாதாரத்தை வைத்துக் கொண்டு தமிழ் மொழி வரலாற்றைக் கட்டமைப்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை. அறிவியல் அணுகுமுறை அல்ல.

கீழடி நம்பிக்கையில்லாத சமூகத்தைச் சார்ந்ததா?

அன்றைய சமூகத்தில் நம்பிக்கை என்பது பிரிக்க முடியாத அங்கம். மேலும் சங்க இலக்கியத்தில் இந்துக்கடவுளர் பேசப்படுகிறார்கள். அதற்குப் பிற்காலத்தை இந்துக் கடவுளர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் கீழடியில் 1800 வருடக் கலாச்சாரத் தொடர்ச்சி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது அறிவுள்ள செயலாகாது.

முடிவாக…

1. கீழடி நகர நாகரிகம் அல்லது நதிக்கரை நாகரிகம் என்பதை நிறுவ இன்னும் வலுத்த ஆதாரங்கள் தேவை.
2. கீழடியில் கிடைத்த எல்லாப் பொருட்களும் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆராய்ச்சி சொல்லவில்லை. அவற்றில் பல இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முந்தையவை.
2. கரிமப்பகுப்பாய்வில் கிடைத்த காலம் கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கீழடியில் கிடைத்த மற்ற பொருட்களுக்குப் பொருந்தாது.
3. கரித்துண்டுகளில் காலத்தை பானைத்துண்டுகள் மேல் ஏற்றுவது அறமாகாது. அதிகபட்சமாக பானைத்துண்டுகளின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஊகம் செய்யலாம். அதையும் பானைத்துண்டுகள் கரித்துண்டுகளுக்கு மிக அருகாமையில் அதே தளத்தில் கிடைத்திருந்தால் மட்டுமே சொல்ல முடியும்.
4. சிந்துசமவெளி நாகரிகத்தையும் கீழடியையும் நேரடியாக இணைப்பது அறிவார்ந்த செயலாகாது.
4. கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது நகைப்பிற்குரியது.

நான் மிகவும் பெருமை மிக்க தமிழன். தமிழின் தொன்மை அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டால் அதிகம் மகிழ்ச்சி அடைவது நானாகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அகழ்வாராய்ச்சியையும் மொழியாராய்ச்சியையும் பயன்படுத்துவது தமிழை இழிவு செய்வது என்று நான் திடமாக நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால்:
https://thefederal.com/the-eighth-column/2019/09/24/keeladi-excavation-raises-more-questions-than-answers/



__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை:

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின் மிகப்பழைய பானையின் வயது 20,000 ஆண்டுகள். சீனாவில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பானைகள் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வனையப்பட்டன.

கீழடியில் கிடைக்கும் பானையோடுகள் பேசப்படுவதின் காரணம் அவற்றின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்கள். முன்னால் கிடைத்த பானையோடுகளிலும் பெயர்கள் கிடைத்திருந்தாலும் கீழடியில் இவை மிக அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்ற செய்தியும், அங்கு கிடைத்திருக்கின்ற கரித்துண்டின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டு என்ற செய்தியும் இங்கு கிடைத்திருக்கும் பானையோடுகளை மிக முக்கியமானதாக ஆகின்றன. இவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு கரித்துணடின் வயதை பானையோடுகள் மேல் ஏற்றி இந்தியாவிலேயே எழுதும் முறை தமிழ்நாட்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது என்று சில தமிழ் அறிஞர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கரித்துண்டின் அதே வயதை பானை ஓடுகள் மீது ஏற்ற முடியாது. அது எந்த அடுக்கில் கிடைத்ததோ அந்த அடுக்கின் வயதைத்தான் அதில் கிடைக்கும் மற்ற பொருட்களுக்குக் கொடுக்க முடியும். அதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. நாம் அந்த விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். நாம் பானை ஓடுகளில் எழுதியிருப்பவை என்ன என்பதைப் பற்றிப் பேசுவோம். அவற்றைப் பற்றி மற்றைய வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவோம். எழுத்துக்கள் பானையோடுகளில் மட்டும் அல்ல, கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பானையோடுகளை மட்டும் நாம் கருத்தில் கொள்ள முடியாது. கல்வெட்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

எழுத்தைக் கண்டு பிடித்தவர்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எழுத்தைக் கொண்டு மொழியை வளப்படுத்த முயல்வார்கள். எழுதுவதில் பழக்கம் ஏற்பட ஏற்பட எழுதும் முறையிலும், எழுதப்பட்டிருப்பவற்றின் உள்ளடக்கங்களிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படும். உதாரணமாக ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுவதிலும், முனைவர் பட்டம் பெற்றவர் எழுதுவதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும் என்பதை ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட அறிவான். அவ்வாறு தமிழில் எழுத்தும் எழுதியிருப்பவற்றின் உள்ளடக்கமும் வளர்ச்சி அடைந்ததா என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும்.

அதற்கு முன்னால் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இது: எழுத்து வளர்ச்சியடைய வேண்டுமானால் அதன் தேவை மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழகத்தில் அப்படிப்பட்ட தேவை இருந்ததா? யாருக்கு அது இருந்திருக்க முடியும்?

பரவலான எழுத்தறிவு தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா?

நான் என்னுடைய ‘தமிழ், வடமொழிகள், கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்’ கட்டுரையில் உலகில் எங்கும் அந்தக் காலகட்டத்தில் பரவலாக எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கீழடியில் கிடைத்த பானையோடுகளை வைத்துக் கொண்டு சிலர் சொல்வது இது: பானையில் பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும்;பானை எளியவர் பயன்படுத்துவது; எல்லாப்பானைகளின் சொந்தக்காரர்களும் பானைகள் மீது எழுதியிருக்க வேண்டும்; எனவே எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது பரவலாக இருந்திருக்க வேண்டும். மகாதேவனும் இதைச் சொல்கிறார். ஆனால் எழுத்துகள் எல்லாப்பானைகளிலும் கிடைக்கவில்லை. சில பானைகளிலேயே கிடைக்கின்றன. பானைகளை எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. அவை சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பானைகளாக இருக்கலாம். மேலும் பானையில் பெயரை பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இன்றும் பாத்திரங்களில் பெயரை நாமே பொறித்துக் கொள்வதில்லை. அதற்கென்றே இருப்பவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.

மேலும் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம். பானையில் எழுதுபவர் எழுத எப்படி, எங்கே கற்றுக் கொண்டார்? அவர் எதை வைத்து எழுதக் கற்றுக் கொண்டார்? எதில் எழுதினார்? கல்வியறிவு என்பது அவருக்கு ஏன் தேவையாக இருந்தது? இவற்றிற்கெல்லாம் பதில்கள் கிடைத்த பிறகுதான் தமிழகத்தில் கல்வியறிவு பரவலாக இருந்தது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியும்.

கிரேக்க சமுதாயத்திலும் கல்வி அறிவைப் பரப்ப தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கீழ்தட்டு மக்களுக்கும் கைவினைஞருக்க்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. வில்லியம் ஹாரிஸ் எழுதிய Ancient Literacy என்ற புத்தகம் சொல்வது இது:
The conclusion which should be drawn from all this is that archaic Greece reached no more than a rather low level of craftsman’s literacy. It would be astonishing if as much as IO% of the population as a whole was literate in the sense defined earlier. ( பழங்கால கிரேக்கத்தில் கைவினைஞரின் எழுத்தறிவு மிகவும் குறைவாகத்தான் இருந்தது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டும். பொதுமக்களிடையே எழுத்தறிவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டும்). தமிழ்நாடு விதி விலக்காக இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கிரேக்க நாட்டிலும் பானை எழுத்துக்கள் பரவலாகக் கிடைக்கின்றன. கிமு எட்டாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.
எனவே தமிழகத்தில் பரவலான எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு கூற முடியும்.

அப்படியென்றால் பானைகளில் யார் எழுதினார்கள்? அதை அறிய பானையோடுகளில் எழுதப்பட்டிருப்பவை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்

பானையோடுகளில் எழுதப் பட்டிருப்பவை என்ன?

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பானையோடுகளில் அனேகமாக பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை. பானைகளின் காலம் துவங்குவது கிமு ஆறாம் நூற்றாண்டு என்றே எடுத்துக் கொண்டாலும் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைக்கின்றன. அதாவது தொள்ளாயிரம் ஆண்டுகள்! அவற்றில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர்களே பொறிக்கப் பட்டிருக்கின்றன.

இவற்றைக் கருத்தில் வைத்துக் கொண்டு வரலாற்று அறிஞர் சுப்பராயுலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

Pottery Inscriptions of Tamil Nadu – A Comparative View என்ற மிக அருமையான கட்டுரையை அவர் ஐராவதம் மகாதேவன் பாராட்டு மலரில் எழுதியிருக்கிறார்.
அவர் சொல்பவை இவை:

1. பானையில் தமிழின் 18 மெய்யெழுத்துகளும் கிடைக்கின்றன

2. உயிர் எழுத்துக்களில் அ, ஆ, இ, உ, ஊ, எ, ஒ இவை சொற்களின் முதல் எழுத்துகளாகக் கிடைக்கின்றன. ‘ஆ’ மிக அரிதாகவே கிடைக்கிறது.

3. சொற்களின் நடுவில் அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ கிடைக்கின்றன. ‘ஓ’ இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.

4. ஆனால் பிராகிருத மொழி எழுத்துகள் (ஷ, ஸ, ஹ போன்ற) பதினொன்று கிடைக்கின்றன. பிராகிருதப் பெயர்களை எழுத பிராகிருத எழுத்துகளையே சில சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

5. எழுத்துக்களைப் பொறிக்கும் விதமும் அதிக வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.

6. எழுதியிருப்பவற்றைப் படிப்பதற்கும் சில விதிகள் தெரிந்தால்தான் படிக்க முடியும். ‘ஸாதனதை அனதவான’ என்று எழுதியிருப்பதை ஸாதந்தை அந்தவன் என்று படிக்க வேண்டும். ‘அனதாவான அதன’ என்று எழுதியிருப்பதை அந்தவன் அதன் என்று படிக்க வேண்டும். ‘காணணான அதன’ என்று எழுதியிருப்பதை கண்ணன் அதன் என்று படிக்க வேண்டும் ‘முலான பெற அனதானன ஊம (ணெ)’என்பதை முலன் பெற அந்தனன் ஊம (ணெ) என்று படிக்க வேண்டும்.

7. அவர் அட்டவணைப் படுத்தியிருக்கும் 270 பானையோடுகளில் 192 ஒரு சொல் கொண்டவை;64 இரு சொற்கள் கொண்டவை; 8 மூன்று சொற்கள் கொண்டவை; 5 நான்கு சொற்கள் கொண்டவை. ஒரே ஒரு ஓட்டில்தான் ஆறு சொற்கள் இருக்கின்றன.

(கீழடியில் கிடைத்தவை எல்லாம் ஒரு சொல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன என எண்ணுகிறேன்.)

8. மொத்தப் பெயர்களில் ஐந்தில் ஒரு பங்கு பிராகிருதப் பெயர்கள். தமிழ்ப்படுத்தி எழுதப்பட்ட பிராகிருதப் பெயர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், பாதி பிராகிருதப் பெயர்கள்.

9 கிடைத்த பெயர்களில் இருபதைத் தருகிறேன்: 1. விஸாகி 2. கித்த. 3. மாஸாபாக 4. மாகிசம்ப 5 இலோகிபா 6. டகாஸி. 7. குவிரன் அதன் 8. தூகா 9. அந்தைய சம்பன் அகல் 10. ஸந்ததன் 11. ஸாசா 12. லிகன். 13 வாருணி. 14. ஸாதன். 15. தேவா. 16. அஸூ 17 ரஜக 18 சமுதஹ 19 யகமித்ரஸ 20. மதினகா
இவை தமிழ்ப்பெயர்கள் என்று சொல்ல முடியுமா? (கீழடியில் கிடைத்த பெயர்களுக்கும் இப்பெயர்களுக்கும் உள்ள் ஒற்றுமையைப் பார்க்க வேண்டும் – ‘குவிரன் அதன்’ ‘அதன்’ போன்ற பெயர்கள்.)

10. கொடுமணலில் ‘நிகம’ என்ற பெயர் பொறித்த பானை கிடைத்திருக்கிறது. நிகம என்றால் வர்த்தகர்களின் குழுமம்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சுப்பராயுலு பிராகிருதம் பேசும் வணிகர்கள் அசோகப்பிராமி (பிராமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தெளிவிற்காக அசோகப்பிராமி என்று சொல்கிறேன்) எழுத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார். தமிழில் எழுதும் முறை பிராகிருத மொழியின் தாக்கம் பெற்றிருக்கின்றது என்பதையும் அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

எழுத்தின் தேவை அந்தக் காலகட்டத்தில் அதிகமாக வணிகர்களுக்கு மட்டுமே இருந்தது. எனவேதான் வணிகர்கள் புழங்கும் இடங்களில் அதிகமாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைக்கின்றன.

இப்போது கல்வெட்டுகளுக்கு வருவோம்.

கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன?

தமிழ் பிராமியிலிருந்துதான் அசோகப் பிராமி பிறந்தது என்று சொல்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி அறியாதவர்கள். தன்னுடைய புகழ் பெற்ற நூலான Early Tamil Epigraphy என்ற நூலில் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மொத்தம் 121 கல்வெட்டுகள். நான் முந்தையக் கட்டுரையில் சொன்னதைப் போல இவை அனைத்தையும் ஒரு A4 அளவுத் தாளில் எழுதி விடலாம்.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

மாங்குளம் கல்வெட்டு- கிமு இரண்டாம் நூற்றாண்டு:
கணிய் நந்தாஅஸிரிய்இ
குவ்அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன்
பணஅன் கடல்அன் வழுத்திய்
கொட்டுபித்தஅ பளிஇய்
பொருள்: பார்! நந்தஸிரி குவன் கணிக்கு அளித்த கொடை. இக்குடில் கடலன் வழுதி (என்ற பெயருள்ள) நெடுஞ்செழியனின் பணியாளரின் ஆணையால் குடையப்பட்டது.

இன்னொரு மாங்குளம் கல்வெட்டு:
கணிஇ நதஸிரிய் குவ(ன்)
வெள்அறைய் நிகமது
காவிதிஇய் காழிதிக அந்தை
அஸூ தன் பிணஉ கொடுபிதோன்

பொருள்: நந்தஸ்ரீ குவன், கணத்தின் தலைவன்(கணி). அந்தை அஸூதன், முத்துகளைக் கண்காணிப்பவன், வெள்ளறை வணிகர் குழுமத்தின் தலைவன் (காவிதி -அரசு கொடுக்கும் பட்டம்) கொடுத்த குகை.

அரிட்டாபட்டி – கிமு இரண்டாம் நூற்றாண்டு:

நெல்வெளிஇய் சிழிவன் அதினன்
வெளியன் முழாகை கொடுபிதோன்
பொருள்: நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் கொடுத்த குகை,

கிமு இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அனைத்தும் இதே போன்றுதான் இருக்கின்றன. அனேகமாக எல்லாம் ஒரு வரிதான் (மாங்குளம் கல்வெட்டுகளைத் தவிர). . கிமு ஒன்றாம் நூற்றாண்டிலும் இதே கதைதான். ஆகப்பெரிய கல்வெட்டு சித்தன்னவாசலில் இருக்கிறது.
எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த கவுடிஇ
தென்கு சிறுபொசில் இள
யர் செய்த அதிட்அனம்
பொருள்: எருமை நாசு குமுழூரில் பிறந்த கவுதி(க்கு) (காவிதி). தென்கு சிறுபொசில் இளையர் செய்த இருக்கை (அதிட்டானம்).

கிபி ஒன்றாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய கல்வெட்டு இது திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது.
எருகாடுர் இழகுகுடும்பிகன் பொலாலையன்
செய்தா(ன்) ஆய்சயன் நெடுசாதன்
பொருள்: பொலாலையன் (தந்த பரிசு). எருக்காட்டில் இருக்கும் (குடும்பிகன்) ஆய்ச்சயன் நெடுச்சாத்தன் செய்தது.
ஜம்பை கல்வெட்டு:
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி
பொருள்: சத்தியபுத்தன் (புத்திரன்) அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பள்ளி.

கிபி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.
புகளூர் கல்வெட்டு:
முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ)ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்
பொருள்: முதிய அமணத்துறவி யாற்ற்றூர் செங்காயபன் இருப்பிடம். இக்கல் குடையப்பட்டது இளங்கடுங்கோ, ஆதன் செல் இரும்பொறை மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளவரசனாக ஆகிய போது.

கிபி நான்காம் நூற்றாண்டு நேகனூர்பட்டி கல்வெட்டைப் பார்ப்போம்:
பெரும்பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி செ
யிவித்த பள்ளி
பொருள்: இக்குடில் சேக்கந்தி அண்ணி, பெரும்பொகழ் சேக்கந்தியின் தாயாரால் செய்விக்கப்பட்டது.

பானைகளில் இருக்கும் பெயர்களில் பல கல்வெட்டுகளிலும் இருக்கின்றன. குவிரன், அதன் போன்ற பெயர்கள். அனேகமாக வணிகர்களின் பெயர்கள். சமணப் பெயர்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் தமிழ் பிராமியின் பிறப்பை ஆராய வேண்டும்.
தமிழ் பிராமி எவ்வாறு பிறந்தது?

அறுநூறு ஆண்டுகள் கல்வெட்டுகள் அனைத்தும் ‘இவருக்கு இவர் கொடுத்தது’ என்ற வகையில்தான் இருக்கின்றன. இவற்றோடு பானையோடுகளின் மொழியையும் சேர்த்துக் கொண்டால் 1000/1200 வருடங்களில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் நம் கையில் இருக்கின்றன. இக்காலகட்டத்தில்தான் சங்க இலக்கியம் தோன்றியது. அழகாக, நுண்ணுணர்வோடு உலகமே மெச்சத்தக்க படைப்புகள் தமிழில் பிறந்தன. ஆனால் அவற்றின் தாக்கம் எழுத்தில் ஏன் கிடைக்கவில்லை? ஏன் இவ்வளவு பிழைகளோடு கல்வெட்டு மற்றும் பானையோட்டுப்பதிவுகள் இருக்கின்றன? இவற்றிற்கும் சங்கத் தமிழுக்கும் ஏன் தொடர்பே இல்லாதது போல் இருக்கிறது?
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியின் எழுத்து வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக – கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை – குறிப்பிடத்தக்கதாக இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இதே காலகட்டத்தில் பிராகிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் மிகப் பரவலாக, அழகிய சொல்லாட்சிகளோடு கிடைக்கின்றன. பல்லவக் கல்வெட்டுகளும் முதலில் பிராகிருதத்திலும் பின் சமஸ்கிருதத்திலும் எழுதப் பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பானை ஓடுகளிலும் பிராகிருத மொழியைக் குறிக்கும் பிராமி எழுத்துகள் மிகவும் எளிதாகக் கலந்திருக்கின்றன என்பதையும் நாம் பார்த்தோம்.

இதனால்தான் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி அசோகப் பிராமியிலிருந்து பிறந்தது என்று சொல்கிறார்: தமிழ் பிராமி கல்வெட்டுகளின் பரிணாம வளர்ச்சி குறிப்பாக அதன் முந்தைய ஆண்டுகளில் வடக்குப்பிராமி, தெற்குபிராமியை ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக நிகழ்ந்தது என்றும் சொல்கிறார்.
அவர் சொல்பவை:
1. தமிழ் பிராமியின் 26 எழுத்துக்களில் 22 எழுத்துக்கள் அசோகப் பிராமியின் எழுத்துக்களைப் போல அப்படியே அல்லது கிட்டத்தட்ட அப்படியே இருக்கின்றன.
2. தமிழ் எழுத்து வரிசைப் படுத்தியிருப்பதும் அசோகப் பிராமியை ஒத்தே இருக்கிறது.
3. தமிழின் கூடுதல் எழுத்துகளான ‘ற’ ‘ன’ ‘ழ’ ‘ள’போன்றவற்றை தொல்காப்பியர் வல், மெல், இடையெழுத்துகளின் வரிசைகளில் கடைசியில் சேர்த்திருக்கிறார்.

மகாதேவன் காட்டும் கால அட்டவணை இது
அசோகப் பிராமி
(கிமு மூன்றாம் நூற்றாண்டு)

தமிழ் பிராமி
(கிமு இரண்டாம் நூற்றாண்டு)

வட்டெழுத்து
(கிபி ஐந்தாம் நூற்றாண்டு)

தமிழெழுத்து
(ஏழாம் நூற்றாண்டு)

மகாதேவனைக் கடந்து நாம் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நிச்சயம் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மகாதேவனின் புத்தகத்தைப் போன்று வலுவான சான்றுகளுடன் உலக வரலாற்று, அகழ்வாரய்ச்சி, கல்வெட்டு, மொழி வல்லுனர்களின் பார்வைக்கு கொண்டு வரும்படியான புத்தங்களை எழுத வேண்டும். தமிழ் ஊடகங்களிலும் மாநாடுகளிலும் பேசி கைதட்டுகள் வாங்குவது எளிது. ஆனால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.

கீழடி மொழி வரலாற்றைத் திருப்பிப் போடுகிறதா?

இதுவரை கிடைத்திற்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை.

கீழடியில் கிடைத்திருக்கும் பானையோடுகளிலும் புதிதாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவை அனைத்தும் பெயர்களையே குறிக்கின்றன. பழைய பெயர்கள். தமிழ் பிராமியிலிருந்து அசோகப் பிராமி பிறந்தது என்பதற்கான எந்தத் தடையமும் கீழடி பானையோடுகளிலிருந்து கிடைக்கவில்லை. வலுவான சான்றுகள் கிடைக்கும் வரை ‘தமிழ் பிராமியிலிருந்து பிறந்த அசோகப் பிராமி பெரும் வளர்ச்சி அடைந்தது ஆனால் தமிழ் பிராமி மட்டும் 1200 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தது’ என்ற நிலைப்பாடு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்காது. அது தர்க்கப்பூர்வமாகவும் சரியாகாது.

தமிழ் பிராமியில் விரிவாக, தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுகளைத் தேட வேண்டும். அவை கிடைத்தால், அவற்றின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று அறுதியிடப்பட்டால், தமிழின் வரலாறு மாற்றி எழுதப்பட வாய்ப்பு இருக்கிறது. பானைத்துண்டுகள் அதைச் செய்ய முடியாது.

பி ஏ கிருஷ்ணன்
கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
Early Tamil Epigraphy – Iravatham Mahadevan Cre-A, Harvard, 2003
Pottery inscriptions of Tamil Nadu – A comparative view, Y Subbrayulu, in Airavati, Varalaru.com, 2008
Ancient Literacy, William Harris, Harvard University Press, 1989



__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி

காலச்சுவடு மார்ச் 2025ல் வெளிவந்த கட்டுரை:

அகழ்வாய்வும் அரசியலும்

அகழ்வாய்வு என்றும் அறிவியலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து எத்தனை தொலைவில் இருக்க முடியுமோ அத்தனை தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அகழ்வாய்வும் தொல்லியல் துறைகளும் அறிவியலை விட்டு வெகு தூரம் சென்று விட்டன என அண்மைக்கால நிகழ்வுகள் சில நினைக்க வைக்கின்றன. அவை அரசியலை இறுக்கமாக அணைத்துச் செயல்படுகின்றன. முன்முடிவுகளோடு அகழ்வாய்வுகள் அணுகப்படுகின்றன. முழுமையான நோக்கு இல்லாமல் தேவையானவற்றை மட்டும் உருவி எடுத்து, அவற்றை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தோதான தரவுகளை முன் வைத்து அவற்றின் மூலம் முன்முடிவுகளை நிறுவும் வேலைகள்தான் இங்கு நடக்கின்றன.

தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு “இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழ்வாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அரசியல் வெளியீடு போல அமைச்சர்களின் ஆசி பெற்று வருவது இந்தியாவில் மட்டும் நடைபெறும் அதிசயம். சில அகழ்வாய்வாளர்களும் புத்தகத்திற்கு பட்டும் படாமலும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியர்கள் வரவு என்பதே பொய், அவர்கள் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்ற முன்முடிவை நிறுவ வட இந்தியாவில் நடத்தப்படும் விந்தை நிகழ்வுகளுக்கு ஈடாக தமிழகத்திலும் நடைபெறுகிறது. இங்கு தமிழன் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வன் என்ற முன்முடிவை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இரும்புக்காலம் என்றால் என்ன?

இரும்பின் தொன்மை என்ற தலைப்பு சரியானதாகத் தோன்றவில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் மனிதன் இரும்பை மற்றப் பொருட்களிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி. அதை முதலில் செய்தது தமிழன்தான் என்று நிறுவ வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லும் புத்தகம் இது. ஆனால் அப்படி வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல புத்தகம் கொடுக்கும் தரவுகள் சரியானவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெண்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic). இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்பிரிவுகளுக்கான காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான வெப்பம் 232 C) சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்கான தொழில் நுட்பம் அன்றைய மனிதனிடம் இல்லை.

 இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம். வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலம். விதி விலக்குகளும் இருக்கின்றன.. உதாரணமாக எகிப்து நாட்டில் இரும்பு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுத்து முறை இருந்தது. வரலாறு பதியப்பட்டு வந்தது.

இந்தியா ஒரு விதி விலக்காக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் வரிவடிவங்கள் எழுத்துகள்தாம் என்பது நிறுவப்பட்டால்,  அதுவும் வரலாற்றுக் காலத்திற்குள் வரலாம். வரலாற்றுக் காலம் என்பதும்  இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

 ஒரு இடத்தில் இரும்புக்காலம் பிறந்தது என்று சொல்ல வேண்டுமானால் இரும்பைப் பரவலாக அங்கிருந்த மனிதன் பயன்படுத்தத் துவங்கிய காலமாக அது இருக்க வேண்டும்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆயுதங்களின் துணையோடு அண்டையில் இருக்கும் பகுதிகள் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையு்ம், அதனால் மக்கள் தொகை பெருகிய காலத்தையுமே இரும்புக் காலம் என்று அழைக்க முடியும். முக்கியமாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

இரும்புக்காலத்திற்கு முன் இரும்பு

இரும்புக்காலம் வந்தபிறகுதான் மனிதன் இரும்பை பயன்படுத்தத் துவங்கினான் என்று ஆய்வுகள் சொல்லவில்லை. மாறாக இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பைப் பயன்படுத்திக்   கொண்டிருந்தான் என்று சொல்கின்றன. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பு தயாரிக்கும் முறை பரவியதா? மக்கள் தொகை அதிகரித்ததா போன்ற பல விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.

இரும்பின் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிவகளையிலும் மற்றைய இடங்களிலும் கிடைத்த இரும்பின் காலம் அதே குழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்தை வைத்துக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இரும்பும் அதுவும் ஒரே இடத்தில் கிடைத்ததால் அவை இரண்டும் ஒரே காலத்தியது என்று ஊகம் செய்யலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செய்ய முடியுமா, அறிவியல்பூர்வமாக அத்தகைய கணிப்பு ஒப்புக்கொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவதற்கு முன்னால் அகழ்வாய்வு குறித்த சில விவரங்களையும் விதிகளையும்  புரிந்து கொள்வது அவசியம்.

மண்ணடுக்கு – Stratigraphy

ஓர் இடம் மண்மூடிப் போகும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருள்கள் எந்த இடத்தில் புதையும் போது இருந்தனவோ அதே இடத்தில் அப்ப்படியே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன – நில அதிர்வு, வெள்ளம் , மனிதர்களே அங்கு தோண்டிப்பார்த்து திரும்ப மூடுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வரை.  ஒரே இடத்தில் மனிதன் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கலாம். அது நடக்கும்போது அவனது வாழ்விடம் முந்தையர் வாழ்ந்த இடத்தில் மேல் இருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வாழும் இடத்தில் மண்ணில் மாற்ற ஏற்பட்டாலும் அதன் அடியில் புதைந்து இருப்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இது தொடர்ந்து நடக்கும் போது பல அடுக்குகள் ஏற்படுகின்றன. இதை அகழ்வாய்வாளர்கள் மண்ணடுக்குகள் (Stratigraphy) என்று அழைக்கிறார்கள்

மண்ணடுக்கு விதிகள்

அதாவது ஒரு இடத்தில் காலப்போக்கில் மண், மணல், பாறை, பாகுபட்ட பொருட்கள் ஆகியவை அடுக்குகளாக தேங்குகின்றன. ஒவ்வொரு அடுக்கும் (stratum) ஒரு குறிப்பிட்ட காலத்தினை குறிக்கும். பழைய அடுக்குகள் கீழே இருக்கும்.  புதியவை மேலே இருக்கும். எனவே மண்ணடுக்குகளில் தொல்பொருடகள் கீழுள்ள மண்ணடுக்குகளில் காணப்படும் எனில் அவை காலத்தால் முற்பட்டவை. நடு அடுக்குகளில் கிடைக்கும் தொல்பொருட்கள்  கீழடுக்களில் கிடைக்கும் பொருட்களுக்கு காலத்தால் பிறபட்டவை.. மேலுள்ள மண்ணடுக்களில் கிடைப்பவை காலத்தால் கீழுள்ள அடுக்குகளில் கிடைத்தவற்றிற்குப் பிற்பட்டவை. இது Law of Superposition (மேற்கிடை நிலை விதி?) என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர இன்னொரு விதியும் இருக்கிறது: எந்த மண்ணடுக்கின் காலமும்  அதில் கிடைக்கும் மிகவும் பிற்பட்ட காலத்திய தொல்பொருளை விட முன்னதாக இருக்காது.  அதாவது ஒரு மண்ணடுக்கில் 18ம் நூற்றாண்டுப் பொருள் கிடைத்தால் அந்த அடுக்கு 17ம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க முடியாது என்று இந்த விதி சொல்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இடத்தில் சோழர்கள் கால படிமம் ஒன்றும் பால்பாயிண்ட் பேனா ஒன்றும் கிடைத்தால் அந்த இடத்தின் காலம் சோழர் காலப் படிமத்தியது அல்ல. பால்பாயிண்ட் பேனாவின் காலத்தியது என்பதுதான். இன்னொன்றும் சொல்ல வேண்டும் சோழர் காலப்படிமமும் பால்பாயிண்ட் பேனாவும் ஒரே அடுக்கில் கிடைத்தன் என்பதினால் பால் பாயிண்ட் பேனா சோழர் காலத்திலேயே இருந்தது என்று சொல்ல முடியாது.  இனி இரும்பும் கரித்துண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் கரித்துண்டின் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு வருவோம். இது கரித்துண்டு எங்கே இருந்தது என்பதைப் பொருத்திருக்கிறது. தோண்டும்போது ஒரு அடுப்பும் கரித்துண்டுகளும் இரும்புப் பாத்திரங்களும் கிடைத்தால் இரும்புப்பாத்திரமும் கரித்துண்டுகளும் ஒரே காலத்தியதாக இருக்கும் என்று ஊகம் செய்யலாம். இது போன்ற இல்லாத பட்சத்தில் கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது சரியாக இருக்காது. ஒரு இடத்தில் கரித்துண்டு இருப்பது பல காரணங்கள் இருக்கலாம். அது அங்கே இரும்புப் பொருட்கள் புதைபடும் முன்னால் இருந்திருக்கலாம். வேறு எங்கோ கிடைத்த கரியை/ காட்டுத்தீயால் உருவான கரியை மனிதன் அங்கு கொண்டு வந்திருக்கலாம். இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். மேலும் ஒரு அடுக்கில் சிதைவுற்றதின் அடையாளங்கள் இருந்தால் (அதாவது புதைந்திருந்த இடத்தை மனிதன் திரும்பத் தோண்டியிருக்கலாம். இடம் நாளடையில் மறுபடியும் புதைந்து போய் இருக்கலாம்) அங்கு கிடைக்கும் பொருட்களின் வயது ஒரே காலத்தியதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இனி புத்தகத்திற்கு வருவோம்

புத்தகம் என்ன சொல்கிறது?

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பிட்ட சில இரும்பு ஆலைகளைப் பற்றிப் பேசி விட்டு அவை கி.மு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் புத்தகம் பேசும் காலத்தைய -அதாவது இன்றைக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த- எந்த இரும்பு ஆலையும் மாங்காடு, கீழ்நமண்டி, மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் அக்காலகட்டத்தின் இரும்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.(ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது உள்ளூர் மக்கள் தோண்டி அவர்களாகவே அறிவித்தது. எந்தச் சான்றுகளையும் கொடுக்கவில்லை.)

மாங்காடு முதலிய இடங்களில் எல்லாம் இரும்புப் பொருட்கள் ஈமக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்குழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலத்தைக் கணக்கிட்டு அதன் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது. ஈமக்குழிகள் என்பவை மனிதர்கள் மீண்டும் மீண்டும் வரும் இடம். எனவே அவற்றில் இருக்கும் எல்லாப் பொருட்களும் சமகாலத்தியவையாக இருக்கலாம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

மாங்காடு, கீழ்நமண்டி மற்றும் மயிலாடும் பாறை

மாங்காட்டில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது. இது சிதைவுற்ற பதுக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று புத்தகமே சொல்வதால்  இதை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இங்கு முக்கியமாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாங்காட்டில் எடுத்துக் கொண்ட மாதிரி இரும்பு. கரித்துண்டு அல்ல.  இதே போன்று சேலம் மாவட்டத்தில் தெலுங்கனூர் என்ற இடத்தில் கிடைத்த வாளின் காலம் கணிக்கப்பட்டது. இங்கு பிடிக்கு ஒரு காலமும் (1425-1233 கி.மு.) வாளுக்கு ஒரு காலமும் (2900 -2627 கி.மு.)கிடைத்தது இரண்டிற்கு இடையே வித்தியாசம் சுமார் 1500 வருடங்கள்!

 கீழ்நமண்டியில் கிடைத்த இரும்புப் பொருட்களில் காலம் கி.மு 1692 என்று புத்தகம் சொல்கிறது. இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டது கரித்துண்டு. அது ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றிய தகவல் இல்லாமல் அதன் வயதை இரும்பிற்கு ஏற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

மயிலாடும் பாறை அகழ்வாய்வுகளைப் பற்றி தமிழ் நாடு அரசு இன்னொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது: அது சொல்வது இது:¨ வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில் முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்  கா.ராஜன் அவர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஅவ்அகழாய்வில்  வெளிக்கொணரப்பட்டநம்பிக்கை  அளிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில்முறையான அகழாய்வுப் பணிகள் 2021-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக்குழிகளிலிருந்து  பெறப்பட்ட மாதிரிகளின் வழி முக்கியமான இரண்டு AMS காலக்கணிப்புகள்  பெறப்பட்டுள்ளன இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ  மற்றும்  130 செ.மீ  ஆழத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன இவற்றின் சராசரி  மைய அளவீட்டுக்காலம் (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும்.

புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் எங்கே இருந்தன என்ற தகவல் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் வாழ்விடப் பகுதிக்கும் ஈமப்பகுதிக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றியும் வாழ்விடப் பொருட்களின் காலம் பற்றியும் ;புத்தகம் ஏதும் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தன. பின்னர் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்தன. இங்கு இந்தியத் தொல்லியல் துறையும் தமிழ் நாடு தொல்லியியல் துறையும் iஅகழ்வாய்வுகள் நடத்தின. இதில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் நெல் தானிய மாதிரிகள் காலக்கணக்கீட்டிற்கு அனுப்பப்பட்டன. கிடைத்த காலம் கி.மு.650 -840. இதே ஆதிச்ச நல்லூரில் தமிழ் நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் வாழ்விடப் பகுதியில் மேற்கொண்ட காலக்கணக்கீடில் கரித்துண்டின் காலம் கி.மு 2613 என்று அறியப்படுகிறது. இங்கும் இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இனி சிவகளைக்கு வருவோம். சிவகளைப் பறம்பில் மொத்தம் 17 அகழ்வாய்வுக் குழிகள் (10×10 மீட்டர்) தோண்டப்பட்டன. அகழ்வாய்வுக் குழியின் இவற்றில் முக்கியமான குழிகள் A 2 பகுதி II மற்றும் III. A 2 பகுதியில் மூன்றாவது தாழி இறுக்கமாக இருந்தது. அதில் இருந்த நெல்மணியும் இரும்பாலான பொருட்களும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155.  

மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தன. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 2953 முதல் 3345 வரை.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

  1. அரிசி மணிகளின் காலத்தையும் கரித்துண்டுகளின் காலத்தையும் இரும்புப் பொருட்களுக்கு மாற்றி இருக்கிறது என்பதைத் தவிர ,கிடைத்த  பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் ஒரே பத்திற்கு பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு.  புத்தகம் என்ன சொல்ல வருகிறது? இரண்டாயிரம் வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2000 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை. மேலும் இரும்புப் பொருட்கள் இரண்டாயிரம் ஆண்டுகளில் மாற்றமே இல்லாமல்  இருந்தனவா? ஒரே மாதிரியான இரும்புப் பொருட்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்களா? இவற்றைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
  2. இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இக்கட்டுரையின் முற்பகுதியின் சொன்னேன். இ்ங்கும் சொல்கிறேன்.. இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலம். இரும்பின் காலம் அல்ல. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அவற்றின் காலங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.
  3. கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.
  4. இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
  5. தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை.
  • புத்தகம் இன்னொரு முக்கியமான தகவலைக் கொடுக்கிறது. அதை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் விட்டது வியப்பை அளிக்கிறது.  நெல்மணிகளின் காலம் ஆதிச்சநல்லூரிலும் கணக்கிடப்பட்டது. சிவகளையிலும் கணக்கிடப்பட்டது. சிவகளை ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கிலோமீட்டரில் இருக்கிறது. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த நெல்மணிகளின் காலங்கள் மூன்று இடங்களில் கணக்கிடப்பட்டன. அவை  கி.மு. 1052, 1257 மற்றும் 1384. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு.1155. நெல்மணிகள் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் இருப்பதும் கரித்துண்டுகளின் கால வித்தியாசம் ஆயிரக்கணக்கில் இருப்பதும் எதைக் காட்டுகிறது? கரித்துண்டின் காலத்தை வைத்து எதையும் கணிப்பது சரியாக இருக்காது என்பதைத்தானே? அதுவும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் தாழிகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்குமானால் அதை வலுவான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
  • புத்தககம் தரும் மற்றொரு வியப்பான தகவல் ஒரே குழியில் இருக்கும் இரண்டு தாழிகளுக்கு இடையே இருக்கும் கால வித்தியாசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! அதாவது ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்து கொண்டிருந்தது என்பது நம்பக் கூடியதாகவா இருக்கிறது? அதுவும் அங்கு இருக்கும் தாழிகளுக்கு அதிகச் சேதம் இல்லாமல்?

8. எனக்குத் தெரிந்து ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அக்காலத்திய செங்கல் கிடைத்ததாகத் தெரியவில்லை. இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தை விட செங்கல் செய்யும் தொழில் நுட்பம் கடினமானது அல்ல. வெட்பமும் இரும்பை உருக்குவதை விட அதிகம் தேவையில்லை. செங்கல் என்ற சொல்லே தமிழில் மிகப் பின்னால் வருகிறது. சங்க இலக்கியத்தில் கூட செங்கல் என்ற சொல் இடம் பெறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘இஷ்டிகா’ என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமான இட்டிகை என்ற சொல்லே அகநானூற்றில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் மற்றைய இடங்களில் செங்கல் கி.மு 3500 ஆண்டு காலத்திலேயே பயன்படுத்தப்படத் துவங்கி விட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் செங்கல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  ஆனால் தென்னிந்தியாவில் செங்கல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே பரவலாகக் கிடைக்கத் துவங்குகிறது. எனவே  இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு செங்கல் செய்யும் முறை ஏன் தெரியவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதுவும் இரும்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகில் மற்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் பயன்படுத்திய மக்களுக்கு செங்கல் பற்றிய தொழில் நுட்பம் தெரியவில்லை என்று கூற முடியுமா? அதுவும் வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த ஆதிச்சநல்லூர் மக்களுக்கு செங்கலைப் பற்றி ஏன் தெரியவில்லை?

ஆப்பிரிக்க உதாரணம்

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artifacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் தொல்லியல் வல்லுனர்கள் நைஜர், ருவாண்டா, புருண்டி போன்ற இடங்களில் ஆய்வு செய்து ஆப்பிரிக்கர்கள் கி.மு 3600 காலகட்டத்திலேயே இரும்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொன்ன கூற்று கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது.  இவர்கள் காலவரையறை செய்வது என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்) அடிப்படையிலே தவிர இரும்பு பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்தத்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது.

கட்டுரை மேலும் சொல்கிறது.

Zangato began excavations at the site after a violent storm struck in 1992, sweeping away part of the capping sediments and exposing a layer of metallic objects, potsherds, and stone tools. Zangato and his team spent nine field seasons at the site, opening more than 800 square meters. They recovered 339 stone artifacts and a host of evidence for ironsmithing: a blacksmith’s forge, consisting of a clay-lined furnace, stone anvil, and part of a ceramic pot that likely held water for cooling or possibly tempering red-hot iron. They also found charcoal storage pits, 1450 pieces of slag, 181 pieces of iron bloom, and 280 small iron lumps and objects, including two needles.

சங்காடொ என்பவர் ஆய்வு செய்து முழு இரும்பு ஆலைகளையே கண்டுபிடித்தார். இரும்பை உருவாக்கியிருப்பதற்கு தேவையான ஆதாரங்களை அளித்தார். நம்மைப் போலவே அவர்களும் கரித்துண்டு மாதிரிகளை (ஏழு மாதிரிகள்) காலக்கணக்கீடு செய்தனர். கி.மு. 1612 முதல் கி.மு.3490 வரை.

மற்றைய ஆய்வாளர்கள் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இதையும் சொல்கிறார்கள்.

 “Although it seems that the seven oldest radiocarbon dates form a coherent group, they are all coming from a few square meters in a very disturbed

archaeological site.”…“They are closely bounded by pits and structures well

dated to around 2000 B.P. and later.” This means that later ironworkers could have dug into ground laced with charcoal from an earlier occupation or forest fire, giving dates that are far too old. To push back the dates convincingly, say critics, the team needs to publish more detailed stratigraphic data and charcoal studies. They also need several consistent lines of chronological evidence,

such as thermoluminescence (TL) dates on clay furnaces, accelerator mass spectrometre (AMS) dates on short-lived plant remains, and indirect dates from sequences of ceramic tiles.

மிகச் சிறிய இடத்தில் சிதைவுற்ற பகுதிகளில், கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு அறுதியான முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள். கரித்துண்டுகள் முன்னால் இருந்தவர்கள் பயன்படுத்தியதாக இருந்திருக்கலாம் அல்லது காட்டுத்தீயின் எச்சமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்கள்! இன்று வரை உலகளவில் இந்த காலக் கணக்கீட்டை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

முடிவாக,

  1. இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.
  2. கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது வலுக்கட்டாயமாக ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.
  3. சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிட்டு அதுதான் துல்லியமானது என்று சொல்வது சரியாகாது.

தமிழன் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தத் துவங்கி விட்டான் என்று சொல்வதற்கு இன்னும் வலுவான ஆதாரங்கள் வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன்.

உதவி செய்த புத்தகங்கள்

இரும்பின் தொன்மை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2025

மயிலாடும் பாறை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2022

Excavations ar Adichchanallur, Archaeological Survey of India, 2020

SCIENCE, VOLUME 323, 9 January, 209



__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்

(குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்)

இரும்பின் தொன்மை என்ற பெயரே சரியில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழன் இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி.

இப்புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெங்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic. இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படிப் பிரிப்பதற்குக் காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை  உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான உஷ்ணம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான உஷ்ணம் 232 C)  சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக உஷ்ணம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்குத் தேவையான தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகள் மனிதனிடம் இல்லை.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தை நான்  சொல்ல வேண்டும். இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் அந்தந்த காலகட்டங்களில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம். நம் இரும்புக் காலமும் சீனத்தின் இரும்புக் காலமும் ஒன்றல்ல.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். (இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம் – சில விதி விலக்குகளைத் தவிர. இந்தியா ஒரு விதி விலக்கு. இங்கே இரும்புக்காலம் வரலாற்றுக் காலத்திற்குள் வருகிறது. இதுவும் இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.) இதில் முக்கியமான சொல் ‘பரவலாக’. அதாவது மனிதன் ஆயுதங்களை வைத்து இன்னொரு இடத்தின் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையுமே நாம் இரும்புக் காலம் என்று அழைக்கிறோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்த காலம்.

இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பை உபயோகித்துக் கொண்டிருந்தான். இது தமிழ் நாட்டில் மட்டும், இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று திரு ஸ்டாலின் சொல்வது போலச் சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பைத் தயாரிக்கும் முறை பரவியதா? போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.  “இரும்பின் தொன்மை” புத்தகம் அவ்வாறு சொல்லவில்லை.  

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

  1. இந்தியாவில் இரும்பு உலைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தன என்று சொல்கிறது. குறிப்பாக கொடுமணல் கிடைத்த இரும்பு உருக்கும் உலையைப் பற்றிச் சொல்லி விட்டு அது போன்ற தொல்லியல்தளங்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று சொல்கிறது.
  2. மாங்காட்டில் கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது.
  3. மயிலாடும் பாறையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு 2172
  4. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த (மண்ணடுக்கு 4)இரும்புப் பொருட்களின் சராசரிக் காலம் கி.மு 2522.
  5. சிவகளையில் கிடைத்த பொருட்களைக் குறித்து புத்தகம் சொல்வது இது: மூன்று தாழிகள் கிடைத்தன. அதில் மூடி இறுக்கமாக இருந்த தாழியிலிருந்து நெல்மணிகளும் இரும்பாலான பொருட்களும் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155. மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தது. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 3345.
  6. தெலுங்கனூரில் கிடைத்த வாளின் பிடியின் காலம் 2900-2727. மறுபகுதியின் காலம் 1422-1233.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

  1. கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு புத்தகத்தின் கூற்றுப்படியே 2500 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதாவது 2்000 வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2500 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை.
  2. இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டின் காலம். இரும்பின் காலம் அல்ல.  அகழ்வாராய்வின் அடிப்படை விதி ஒரு மண்ணடுக்கின் காலம் அதில் கிடைக்கின்ற காலத்தில் மிகவும் பிற்பட்ட பொருளில் காலம் என்று தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு மண்ணடுக்கில் 15ம் நூற்றாண்டின் பொருள் கிடைத்தால் அதன் காலம் 15ம் நூற்றாண்டு என்றுதான் கொள்ள வேண்டும். அதில் கி மு இரண்டாம் நூற்றாண்டின் பொருள் ஒன்றும் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதே அடுக்கில் காலம் அறுதியிடப்படாத பொருளுக்கு கி மு இரண்டாம் நூற்றாண்டு என்று கால வரையறை செய்ய முடியாது. அதாவது கரித்துண்டின் காலத்தை அப்படியே இரும்பிற்கு ஏற்ற முடியாது. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அதன் காலத்தைப் பற்றியோ குறிப்பிடவில்லை.
  3. இவர்களே கத்தியின் பிடிக்குக் காலம் ஒன்று மற்ற பகுதிக்கு ஒன்று என்று சொல்கிறார்கள்! அதாவது பிடி செய்து  1500 ஆண்டுகளுக்கு பிறகு வாள் செய்யப்பட்டு பிடியோடு பொருத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்! எல்லா நம்பிக்கைகளையும் ஆய்வுக்கூட அறிக்கை மீது வைத்தால் முடிவுகள் இது போன்று வேடிக்கையாகத்தான் இருக்கும்.
  4. கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.
  5. இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
  6. தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. கீழடி நிச்சயம் நகர நாகரிகம் இல்லை.

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artefacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது கி.மு 3600 என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்!) அடிப்படையில் இரும்புப் பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்த்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது!

சுருக்கமாக,

  1. இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.
  2. கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.
  3. சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது சரியாகாது.
  4. ஒரே கத்தியில் பிடிக்கு ஒரு காலம் மற்ற பகுதிக்கு இன்னொரு காலம் என்ற முடிவு வந்தது ஒரு பொருளின் காலத்தை ஆய்வுக் கூட முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றைய சான்றுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரையறை செய்வது சரியாகாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 25024
Date:
Permalink  
 

பிராமி – சில கேள்விகள்

பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன – சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள். இவ்வளவு அழகாக மொழியை வெளிப்படுத்தும் எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் உடனே தோன்றி செயல்பட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.
மௌரிய அரசு வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது இங்கு வந்த மெகஸ்தனிஸ் இந்தியர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னதனால் இங்கு எழுத்து வடிவம் இல்லை என்று சொல்வது சரியல்ல. மெகஸ்தனிஸ் சொன்னது சாதாரண மக்களைப் பற்றி. அவரே மக்களில் ஏழுவகைப் பிரிவுகளைக் கூறுகிறார். அதில் முதல் பிரிவான தத்துவவாதிகளைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அரசர்களுக்கு தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே மௌரியர் காலத்திலும் எழுத்து இருந்திருக்க வேண்டும்.(Any philosopher who may have committed any suggestion to writing – Strabo – of the seven classes among Indians – page 83 McCrindle’s translation, 1926 Calcutta edition)

மெகஸ்தனிஸ் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர் சொன்னதாக மற்றவர்கள் எழுதியிருப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது அவரது ‘இண்டிகா’ புத்தகம் கிடைக்கவில்லை. அவரே தங்கத்தைத் தோண்டும் எறும்புகள் இந்தியாவில் இருக்கின்றன என்று சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி கேள்விகளுக்கு வருவோம்.

பிராமி எங்கு பிறந்தது?

பிராமி மொழிக்கு மூதாதைகள் செமெடிக் மொழிகள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் கூட அது இந்தியாவிற்கு எட்டாம் நூற்றாண்டு BCEல் வந்தது என்று நம்புகிறார்கள். ( (They) are known to believe that Brahmi was introduced in India in the 7th or 8th century
BC(cf. T.W. Rhys Davids,Buddhist India , 1903) இத கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தின் பேராசிரியர் திலீப் சக்ரவர்த்தி சொல்வது. பிராமி சிந்துச் சமவெளி நாகரிக மொழியின் தொடர்ச்சி என்றும் இந்தியாவில் பிறந்தது என்றும் அவர் நினைக்கிறார்

ஏன் அவ்வாறு நினைக்கிறார்?

அவர் சொல்வதையே கேட்கலாம்.

My opinion is that the general problem of the rise of Brahmi script should not be disassociated from the picture of archaeological developments at the dawn of the historical period. The idea that the development of the Brahmi is rooted in the earlier Indus script seems to receive support from two developments. First, the chronological gap between the end of the Indus civilization and the early historic period of the Ganga plain has considerably narrowed. On the one hand, the terminal date of the Indus civilization has comedown to the 13th century
BC, as the occurrence of Indus seals from the Kassite period at Nippurand in Bahrain, and some relevant radiocarbon dates from Harappa, among other places,indicate. On the other hand, the date of the NBP,the most important pottery marker of the Gangetic valley early historic period, is now raised to c. 800 BC, if not somewhat earlier.

அவர் மேலும் சொல்கிறார்:
Looked at from these points of view, the postulated appearance of the Brahmi script around 800 BC is quite probable in at least parts of the Ganga plain, although there is no direct archaeological evidence yet. அதாவது பிராமி கங்கைச் சமவெளியில் 8 நூற்றாண்டு BCEல் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சக்ரவர்த்தி கருதுகிறார்.

பொருந்தலில் கிடைத்த பானைக் கீறலைப் பற்றி வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

சக்ரவர்த்தி அது 5ம் நூற்றாண்டு BCE ஐச் சேர்ந்ததுதான் என்று கருதுகிறார் என்பது உண்மை. ஆனால் அவர் அது கங்கைச் சமவெளியில் பிறந்த பிராமியைத் தழுவியதாகத்தான் கருதுகிறார். அவர் சொல்வது இது: There is no point in forgetting that what is called Tamil-Brahmi is essentially Brahmi script adopted to facilitate the writing of Tamil. அவர் பிராமி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லவில்லை.

சக்ரவர்த்தி சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையோ அல்லது அங்குள்ளவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசினார்கள் என்பதையோ முழுமையாக நிராகரிப்பவர். தமிழர்கள்தாம் சிந்துச் சமவெளி மக்கள் என்ற கருத்தை கட்டுக்கதை என்று சொல்பவர். மொழியின் அடிப்படையில் ஒரு நாகரிகம் கட்டமைக்க முடியாது என்று கருதுபவர். ஆரிய, திராவிடப் பிரிவினையை சாடுபவர்.

மகாதேவன் சொல்வது இது: Supposing a large number of carbon-datings are available from various sites, which will take us to the period of the Mauryas and even the Nandas, we can consider. But to push [the date of the origin of the Tamil-Brahmi script] a couple of centuries earlier with a single carbon-dating is not acceptable because chances of contamination and error are there.” அதாவது ஒரே ஆதாரத்தை வைத்துக் கொண்டு சாமியாடக் கூடாது, பல ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்.

சுப்பராயுலு சொல்வது இது: The date of the Tamil-Brahmi script found at Porunthal, on palaeographic basis, could be put only in the first century BCE/CE and “cannot be pushed back to such an early date [490 BCE].” The three letters “va-y-ra” found on the ring-stands were developed and belonged to the second stage of Mr. Mahadevan’s dating of Tamil-Brahmi. “It is premature to revise the Tamil-Brahmi dating on the basis of a single carbon date, which is governed by complicated statistical probabilities,” Dr. Subbarayalu said. The word “vayra” is an adapted name from the Prakrit or Sanskrit “vajra” and it is difficult to explain convincingly the generally dominant Prakrit element in Tamil-Brahmi inscriptions found on rock and potsherds if Tamil-Brahmi is indigenous and pre-Asokan and transported from south India to north India, he says. இதுதான் உண்மையான வரலாற்றாசிரியரின் அணுகுமுறை. அவர் பானையில் எழுதியிருப்பது காலத்தில் பிந்தையது என்கிறார். தமிழில் இவ்வளவு பிராகிருதக் கலப்பு இருக்கும் போது பிராமி எழுத்து தமிழ்நாட்டில் பிறந்தது என்று சொல்வது சரியாக இருக்காது என்றும் சொல்கிறார்.

இது பேராசிரியர் வாரியர் சொல்வது: Its importance lay in the fact that while the Asokan-Brahmi began in the 3rd century BCE, the Porunthal script could be dated to 5th century BCE, he says. “But we cannot argue that Brahmi was invented by the southern people. That is a different issue.” அதாவது ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் பிராமி தெற்கில் இருப்பவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்கிறார்.

இது பேராசிரியர் ஃபால்க் சொல்வது: Misinterpreting megalithic logograms for Brāhmī writing at Porunthal he “reads” va-y-ra (“meaning diamond”) on a ring-stand 14C-dated to 490 B. C. by an American laboratory. The non-letters put aside, the presence of stirrups in the same tomb sounds suspicious too. அவர் அது பிராமி எழுத்தே இல்லை என்கிறார்.

எனவே பொருந்தலில் கிடைத்ததை வைத்துக் கொண்டு முக்கியமான வல்லுனர்கள் யாரும் பிராமி தமிழ்நாட்டில் தோன்றியது என்று சொல்லவில்லை. ஒரு பானைத்துண்டை வைத்துக் கொண்டு அதுவும் பிராகிருதமொழியின் தமிழாக்கம் போன்ற சொல் ஒன்றை வைத்துக் கொண்டு, இம்முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள்.

சரி, இப்போதுதான் கீழடி சொல்கிறதே, அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

கீழடியில் கரிமப்பகுப்பாய்வு செய்திருக்கப்பட்டிருப்பது ஒரு கரித்துண்டில். தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த பானைத்துண்டுகள் அதே தளத்தில் கிடைத்தன என்று அரசு வெளியீடு சொல்லவில்லை. அதே தளத்தில் இருந்தாலும் தளத்தின் காலம் 600 BCEல் இருந்து 300 BCE வரை என்று தமிழக அகழ்வாராய்ச்சியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். எனவே பானைத்துண்டு ஆறாம் நூற்றாண்டு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆறாம் நூற்றாண்டு என்பது உறுதியாகி விட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

நிச்சயம் மாட்டேன். ஓரிரு சான்றுகள் உதவா. மகாதேவன் சொன்னது போல நிறையச் சான்றுகள் நிறைய இடங்களில் இருந்து வேண்டும். பானைகளில் இருக்கும் பெயர்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வரமுடியாது. மொழி வளம் மிக்க கல்வெட்டுகள் வேண்டும்.

ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?

என்னுடைய கல்வெட்டுகளைப் பற்றிய பதிவிற்குக் காத்திருங்கள்.

பி ஏ கிருஷ்ணன்

https://www.academia.edu/40197879/Dilip_K._Chakrabarti_1_

https://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

https://www.academia.edu/11754083/Owners_graffiti_on_pottery_from_Tissamaharama



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard