New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்

 

ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி "கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா" என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.

யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  படை ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் கிறிஸ்து ' என்று எழுதி இருந்தது.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.
images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o8n3Gn8EG90TidqVsWEQcnQ1DbmTTq images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZkRSL2JAgvcBqUCc5EL5z92CyBNBjaw7Q
இயேசு யூதர்களின் அரசன்  என்பதன் மூல கிரேக்கம், கிறிஸ்து, எபிரேயம் மேசியா

கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.

இயேசு மத்தேயு சுவிசேஷத்தின்படி பொ.மு. 6ல் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். லூக்கா சுவியின்படி பொ.கா.8ல் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். 
சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, கடைசி வாரம் மட்டுமே யூதேயாவில் ஜெருசலேமில்.யோவான் சுவியின்படி, சீடரோடு 2 வருடத்திற்கும் சற்றெ அதிகமாக இயங்கினார். யோவான் கைதிற்கு முன்பே தொடங்கி யூதேயா- கலிலேயா என மாறிமாறி சுற்றினார். கடைசி 8 மாதங்கள் யூதஏயாவில் தான்.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடு பேராசிரியர்ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned...4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.  A.M.Hunter
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போது மட்டுமே ஜெருசலேம் 
வந்தார்மேலும் -ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் 
என்பதாகும்நான்காவது   சுவியோ வேறுவிதமாக,  முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும் முன்னும்-பின்னும்   இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும்எனச் சொல்கிறார்,   யோவான்3:24- ஞானஸ்நானர் யோவான்  கைதிற்குப்முன்பே ஏசு இயக்கம் 
எனவும் காட்டும்.
மேசியா - கிறிஸ்து
மேசியா - கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி  ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை  (1சாமுவேல்10:12அரசர்கள்9:6;  யாத்திராகமம்29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப் 
பட்டவர் எனும் சொல் ஆகும். 
மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்
  மாற்கு1:2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்
ஞானஸ்நானர் யோவான் தான் எலியா என ஏசு சொல்வதாகவும் உள்ளது.
  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
 லூக்கா7: 27 ' இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை
மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடிஅவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.
//ஆண்டவரின் நாள் - என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?
 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
யோவேல்2:28உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.
 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை
 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 3நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.
ஏசு சீடரை அனுப்பும்போது சொலவதாக கதையில் உள்ளது.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்.  5.இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் ஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.   நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார்.
மத்தேயு11:13 ல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.  
லூக்கா16: 16திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
 இது போலே பலப்பல வசனங்கள் உள்ளன. இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
 
 எலியா வந்த பின்னர் கர்த்தரின் நாளில் தான் வருகை, அது உலகம் அழிவிற்கு தான். இதுவே யூத பழைய ஏற்பாட்டுக் கதியின் நம்பிக்கை ஊகங்கள்.   எனவே தீர்ப்பு நாளில் வருபவர் மேசியா- இறுதி தூதர்.
 
ஆனால் ஏசுவின் காலத்தில் மோசேயின் நாற்காலியில் யூதத் தலைமை பாதிரியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். அவர்கள் நம்பியது.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
தேவனின் பெயரை வீணில் உச்சரிக்கக் கூடாது, அம்மதத்தில் கடவுள் மகனாக அவதரித்தல் எல்லாம் வெற்று கட்டுக் கதைகள்.
 
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாக

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள்தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான்பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போல, ஏசு- பவுல், பேதுரு என அனைவருமே இறந்தனர். மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உல்கம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.
மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 


 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

ஏசு வரலாற்று மனிதர் தானா? - பவுல் -அப்போஸ்தலர் காலத்திலேயே குழப்பம்

 
1தெசலோனிக்கர்4:5ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.16 கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.17 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.18 எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
  images?q=tbn:ANd9GcTy6spZ0OmzBie5UuQ8dVM
2தெசலோனிக்கர்2:2ஆண்டவருடைய நாள் வந்து முடிந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்: திகிலுறவும் வேண்டாம்.3 எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில் இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன்.

சுவிசேஷங்கள் 70- 120 இடையே புனையப்பட்டவை.பவுல் கடிதங்கள் 49- 65  இடையே வரையப்பட்டவை. அன்றிலிருந்து இன்று வரை ஏழைகளையும் முன்னேற்றம் இல்லதவரையுமே மதமாற்றம்

images?q=tbn:ANd9GcRbRL14pHFd_O_fdZKyd7N images?q=tbn:ANd9GcToUZpLHquuck16Ez83_MB
1கொரிந்தியர்2:.7 வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் அறிவுடையவர்கள் எத்தனைபேர்? பிரபலமோ வலிமையோ டையவர்கள்  எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?27 ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
1கொரிந்தியர்15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
12 இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?13 இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.14 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.
22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
.51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.54 அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது.55 சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?56 பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 


1கொரிந்தியர்1: 22 யூதர்கள் அதிசயங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.23ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.
1கொரிந்தியர்1:11என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.12 நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் நான் பவுலைச் சார்ந்துள்ளேன் என்றோ நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் என்றோ நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் என்றோ, நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.13 கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?14 கிறிஸ்பு, காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.15 ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.16 ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.
1கொரிந்தியர்9:1 எனக்குத் தன்னுரிமை இல்லையா? நானும் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?
4உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?5 மற்றத் அப்போஸ்தலரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?6 பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னபாவுக்கும் மட்டுந்தான் உரிமை இல்லையா?7 யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?8மனித வழக்கத்தை மட்டும் வைத்து நான் இதைச் சொல்லவில்லை. திருச்சட்டமும் இதையே சொல்லவில்லையா?
14 அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார்.
2கொரிந்தியர்11:4 உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள். 5 இப்படிப்பட்ட மாபெரும் அப்போஸ்தலரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்.
கலாத்தியர்1:6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! 11 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை: எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை.17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
கலாத்தியர்2:.8 ஆம், யூதர்களின் அப்போஸ்தலராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்
11 ஆனால் பேதுரு அந்தினேயாக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.

15 பிறப்பால் நாம் யூதர்கள்: பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.

21 நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

1யோவான் 4: 1 அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்: அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்: ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்.3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.
2யோவான்1: 7 ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard