New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்
Permalink  
 


இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்

 

இறந்த இயேசுவை யூத  புராண ராஜா தாவீது பரம்பரையில் உலக அழிவிற்கு முன்பான  கடைசி சந்ததியில் வரவேண்டிய ராஜா என குறிக்கும் வகையில் பவுலும் அவர் இயேசு தாவீதின் விந்தணு பரம்பரையில் பிறந்தார் எனக் குறித்துள்ளார்.  மாற்கு சுவி கதையில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற யூதேயா வந்த இயேசு உடனே கலிலேயா திரும்பி தன் இயக்கம் தொடங்கி நடத்தினார். அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்காக  ஜெருசலேம் நுழைவை ஒரு பெரிய தலைவனாக உள்ளே வந்தார் என   மாற்கு கதை அமைந்து உள்ளது

 அரசனைப் போல ஜெருசலேமுக்குள் இயேசு நுழைதல் -                                                          images%252815%2529.jpgimages%252812%2529.jpg

மாற்கு 11:1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். ..
 2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். ...

 
7 சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார்.

மத்தேயு சுவி இதே ஜெருசலேம் நுழைதல் கதை  சொல்லும் பொழுது            சகரியாவின்  தீர்க்கதரிசனத்தை தவறாக புரிந்து கொண்டு ஒரே நேரத்தில் தாய் கழுதையின் மேலும் குட்டி கோவேரி கழுதையில் மீதும் அமர்ந்து வந்தாராம்.  எபிரேய மொழி புரியாமல் மத்தேயு கதாசிரியர் தீர்க்கம் நிறைவேறியதாக கதை செய்தமை நடைமுறையில் உளறலாக அமைந்தது.

images%252814%2529.jpg images%252813%2529.jpg 

மத்தேயு 21:1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ..                                                                                                         2 சீஷர்களிடம் இயேசு,, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 3 யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாக  இருக்கின்றன.  விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். 4 தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.    5.இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார். பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார்.    ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” 6 இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். 7 அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். 8 இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். 

IMG_20210223_000025.png IMG_20210222_235527.png

IMG_20210223_000055.pngimages%252825%2529.jpg
 தாவீது குமாரனே -ஓசன்னா-ரோமன் ஆட்சியிலிருந்து காப்பாற்றுங்கள்

 

 மாற்கு 11:9முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! 10. வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!”  என்று ஆர்ப்பரித்தனர்.

 

இதே கதையில் இயேசு ஜெருசலேம் ஆலயத்தை நெருங்க மக்கள் ஓசன்னா என கத்தி வரவேற்றார்களாம்.   ரோமன் கொடுங்கோல் ஆட்சியின் கீழ்  இஸ்ரேல் மக்கள் தாவீது ராஜாகுமாரனே எங்களை ந்த ஆட்சியில் இருந்து  விடுவியுங்கள் என பொருளாகும்.  ஆனால் இதை மறைத்து இன்று இயேசுவை புகழ்ந்து கத்தினார்கள் என மூல மொழியில் இல்லாதபடி   மோசடியாக  மொழி பெயர்க்கின்றனர்.                                                                                                                  ‘ஓசன்னா’ என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்பதே பொருள். (ARULVAKKU.COM) 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்
Permalink  
 


இயேசு கதை வளர்ந்த விதம்-1

 
சுவிசேஷங்கள் இயேசு மரணத்திற்கு 40 - 70 வருடம் பின்பு இறந்த மனிதரை - இறை மனிதன்  தெய்வீகராகக் காட்ட புனையப் பட்டவை.
images?q=tbn:ANd9GcRsj3ofdzVVwntrLqCXjlX  images?q=tbn:ANd9GcRwDSMQ3EYx1TxAakuJPl-
மாற்கு1:4 திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

images?q=tbn:ANd9GcTvu1oRhEKrHque4q6Ij5F  images?q=tbn:ANd9GcTbP9OJRnvplK1jB0yVEai



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற இயேசுவை சாத்தான் சோதித்தார் எனக் கதை.

மத்தேயு4:1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
இந்தக் கதை பழைய ஏற்பாட்டில் மோசே - எலியா வாழ்க்கையில் நடந்ததாக உள்ளதில் இருந்து சுட்டவை.
images?q=tbn:ANd9GcQl9dWLE704lBiddS5LfH_ images?q=tbn:ANd9GcSL4gVAo5awDa-mYxBwj_d
யாத்திராகமம்34:28 மோசே அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை: தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.
 1இராஜாக்கள்19:8அப்பொழுது எலியா  எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா,  நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.  

images?q=tbn:ANd9GcQy_hyfc-xU6YEmfdkS24C 
images?q=tbn:ANd9GcTmBJuAhsnVJaEq9QYrcK7     
மொட்டை தலையர் என்ற குழந்தைகளை கொன்ற எலியா


முன்பு பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகளை ஏசு என்னும் கதை நாயகன் மேல் திணிக்கப் பட்டுள்ளது தொடர்ந்து காண்போம்.

 
யோவனிடம் ஞானஸ்நானம் பெற்றபின் பரிசுத்த ஆவி ஏசு மீது வர, வானிலிருந்து குரல் ஏசு- தேவகுமாரன் என்றது. இதை விட்டு விட்டீர்.

சாத்தான் தூக்கி செல்ல 40 நால் உணவு நீர் இல்லாது உபவாசம் இருந்தார். 
ஏசு தெய்வீகர் என்னும் இந்நிகழ்ச்சிகள் போல பழைய ஏற்பாட்டில் இருந்தால் தவறா? இதை சொல்ல நீர் யார்?


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

நண்பர் ரிச்சர்ட் நன்றி,  -விளக்கம் சேர்க்கப்பட்டது
 
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

சிறையில்  அடைக்கப்பட்ட யோவான் ஞானஸ்நானி தன் சீடர்களை அனுப்பி ஏசுவை- 
மத்தேயு 11:2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்

வரவேண்டிய யூதர்களின் அரசர் - ரோம் ஆட்சியை விரட்டி தாவீது நாற்காலியை மீட்பவர் தானா? என்றால் - முதலில் அதிசயங்கள் கதை சொல்லப்பட்ட அதிசயங்கள் பொய் என்பது தெளிவான உண்மையாகும். 
மேலும் மாற்கு யோவான் கைதிற்குப் பிறகு தான் ஏசு இயக்கம் என்பார். ஆனால் நான்காவது சுவியில் ஏசு சீடர்களுடன் செல்லும் போது யோவன் ஞானஸ்நானர் அங்கே இருப்பதாகக் கதை.
இயேசுவும் யோவானும்
யோவான்3:22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.
மாற்கு தெளிவாகப் பொய் சொன்னர் என்பதும் தெளிவு.
  AAOd8Mw187ZyUHRelE1OtOul0OwkGfXYn0JQbrrS
மத்தேயு 4:8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.


இப்படி ஒரு மலை- உலகில் உள்ள அனைத்து அரசுகள் பார்க்கும்படி இல்லவே இல்லையே?

மேலும் யூதேயாவில் 800 அடி உயர 3 மலைகளை இது தான் சாத்தான் கூட்டிச் சென்ற மலை எனப் புனைகின்றனார்.

இவையெல்லம் புனையப் பட்டவை என்பதற்கு வேறு காரணமே இல்லை. மேலும் வானத்தில் இருந்து வந்த குரல் ஒரு சுவியில் - ஏசுவிடம் நேரடியாக் பேசும் வேறு சுவியில் மக்களிடம் சொல்லும் அறிவிப்பாகா உள்ளது.
ஏசு இயக்கம் ஆரம்பித்து சீடர்கள் சேர்த்தார், இந்தக் கதைக்கு சாட்சிகளே கிடையாது. அனைத்தும் கற்பனை புனையல்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

சுவிசேஷங்கள் புனைக்கதையா? வரலாறா? புராணக் கதைகளா?

 
கிறிஸ்துவ நண்பரிகள் பலர் மதம் பரப்ப கொடுத்த கட்டுரைகள் இணைப்புகள் இங்கே 1  இங்கே2  இங்கே3  இங்கே4  இங்கே5

மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லகேமில் தச்சராய் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரி ஏசுவின் பெற்றோர்.
லூக்காவின் சுவிசேஷம் கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரி ஏசுவின் பெற்றோர்.
 மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் லூக்கா விருப்பப்படியான            சுவிசேஷம்
2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.2: 1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
  1:16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 3:23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்
 1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச  வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்1: 26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ‘அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்றார்.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ‘ மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்
மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு சிவிசேஷத்தில், முதலில் புனையப்பட்டது; பேதுருவின் சீடருக்கு இது தெரியாது. இயேசுவின் அன்புச் சீடர் எனப்படும் யோவான் சுவிப் புனையலிலும் கன்னி பிறப்பு இல்லை.
பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு; ரோம் மன்னன் ட்ராஜான் (பதவி ஏற்பு- 98) ஆட்சியில் வரையப்பட்டது யோவான் சுவி. சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும்.

வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:
The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.
images?q=tbn:ANd9GcSNKduqyH4I4z7BlhNHIhe  images?q=tbn:ANd9GcQ8X2LPGXF-hPUDxhgoArX 
இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ்
Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.


Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய துகலிலேயாவி ல்என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
நாம் புரிந்து கொள்வது – சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 
மத்தேயுவின் ஜோசப்-மேரி யூதேயா நாட்டிலுள்ள பெத்லஹேமில் வாழ்ந்தவர்கள், தங்கள் வீட்டில் பிரசவம் நடந்தது.
லூக்காவின் ஜோசப்-மேரி கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தில் வாழ்ந்தவர்கள்,
1000 வருடம் முன்பு வாழ்ந்ததான முன்னோர் ஊரில் போய் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிரசவம் நடந்ததாம்.

சர்ச் மக்களிடம் முக்கிய சீடர் பேதுருவின் மொழிபெயர்ப்பாளர் எனவும், பவுலோடும் சுற்றுப்பயணம் செய்தவர் தான் மாற்கு என்கிறது. இவர் ஏசு கலிலேயா நாட்டிலுள்ள கப்பர்நகூம் பகுதியை ஏசுவின் வீடுள்ள பகுதி என்வும் கூறியுள்ளார்.
மேலே உள்ளதில் ஏதாவது ஒன்று உண்மையாக இருக்கலாம், அல்லது மூன்றுமே தவறாகவும் இருக்கலாம்.
நடுநிலை வரலாற்று உண்மை- சுவிஷேங்கள் –கதாசிரியர்கள் யார்?

தெரியாது; ஆனால் அவர்கள் ஏசுவை அறிந்தவர்கள் இல்லை.
 
இயேசுவும் அன்புச் சீடரும்
யோவான் 21:20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
 

ஏசு இரண்டாவது வருகை வரை அன்பு சீடர் உயிரோடு இருக்க வேண்டுமாம்- பழைய உடம்பில் மீன்டும் காட்சி தந்ததான ஏசு சொன்னாராம்

 இறந்த ஏசுவை தெய்வீகர் எனப் புனைய எழுந்த புராணங்களே



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷ்க் கதைகள் மட்டுமே. எந்த ரோமன் அல்லது இஸ்ரேல் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும். 

1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க                                                                        செய்யாமை யானுங் கெடும்.
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்

ஏசு மரணதண்ட்னையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் வசூல் தேவைக்கு ஏற்ப மாற்றி- திரித்து- சேர்த்து- நீக்கி என புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது. 

மாற்கு சுவிசேஷக் கதையில் (பொஆ 70- 80) மரணதண்டனை தூக்குமரத்தில் ஏசு இறந்து விட்டார் என உடலை இறக்க ரோமன் கவர்னர் பிலாத்துவிடம் அனுமதி கேட்டது- மிகத் தெளிவாக -ஏசு கைது, விசாரணை, மரணதண்டனை எல்லாமே ரோமன் கவர்னர் செய்தது என்பதை உறுதி செய்கிறது

 மாற்கு 15: 43  அரிமத்தியா ஊர் சேர்ந்த ஜோசப் ரோமன் கவர்னர் பிலாத்துவிடம் இறந்த ஏசுவின் பிண உடலைக் கேட்டான். 44. ஏசு  இயேசு இறந்து போனார் எனக் கேட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டு, ஏசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்து, 45 ஏசு மரணம் உறுதி செய்த பின் ஏசுவின் பிண உடலை அடக்கம் செய்ய  எடுத்துச் செல்ல யோசேப்புக்கு ரோமன் கவர்னர்  அனுமதி அளித்தார்.

 பெரிய ஏரோது மரணத்திற்குப்(பொமு.4) பின்பு - இஸ்ரேலை 3 மகன்கள் ஆட்சி செய்தனர்

லூக்கா 3:1 அது திபேரியு சீசர் ஆட்சியின் 15வது வருடம் போது  யூதேயா ரோமன் கவர்னர் பொந்தியு பிலாத்துவும், ஏரோது அந்திப்பா கலிலேயாவும், ஏரோது பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான். 
மத்தேயு 2:22 அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் - இவன் ஆட்சியில் பொஆ.6ம் ஆண்டின் போது பஸ்கா பண்டிகையின் போது ஜெருசலேம் யாவெ தெய்வ ஆலயத்தில் கலவர்ம் யூதேயாவினை சேர்ந்த யூதாஸ் என்பவரால் நடத்தப் பட ரோம் யூதேயாவின் ஆட்சியை தன் கீழ் நேரடியாக கொணர்ந்து சிரியா கவர்னர் கிரேனியூ கீச் கொணர்ந்தது. 
அப்போஸ்தலர் 5:37 தெயுதாஸ் பின் மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் கலிலேயாவின்  யூதாஸ்  தலைமையில் வந்து தாக்கிய போது  கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறி ஓடினர்.  
 யூதேயாவில் ஒரு சென்சஸ் (மக்கள் தொகை கணக்க்டுத்து சொத்து-வருமானம் அடிப்படையில் வரி ஏற்ற) பொஆ 7- 8 வாக்கில் நடந்த்து


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்
Permalink  
 


Paul winter, in his analysis of the trial of Jesus, considers that many of the contradictary elements in the story may be regarded as later interpolations,which in any case, are of secondary importance.  These include the investigation by Annas, the night session of the Sanhedrin; the mocking in the high priest's house; the morning session without sentance (Luke); the scene with Herod Antipas; the Barabbas episode in its present form; Pilate's benovalence; and the scourage before death (John) Page-454 

Only a few town or village are definitely mentioned in Gospels and it is impossible to locate some of them with accuracy

None of the Mountains in Galilee can be identified- theywere then as much as they were today. Page-449, Pictorial Biblical Encyclopedia

Excavations and debates have never succeeded in reaching a definitive conclusion about the site of Calvary or the tomb of Christ. The traditional  site of the Holy Sepulture stands, was authenticated by a Vision of St.Helana, mother of Emperor Constantine in the early 4th century CE. The sub-terrain vault and substructure of the church  date from the time of Constantine.

Modern investigation have suggested a site further north known as Garden Calvary , but the repeated destruction and rebuilding of walls of Jerusalem, as it expanded during the following centuries make certainty impossible Page-457 PBE

Messiah: The Eschatological King who is to rule ove the Israel at the end of the days.

None of the Older sources referred to a Messiah who should appear on earth in poverty and humility tobe rejected by his own people, suffer and die, giving his life as ransom for mankind.  This new conception was the work of Jesus' followers, who merged glory and humiliation in the combination of the "Son of Man" with the "Sufffering servant".  Page-456

The difference between the religion of Jesus and the religion of Paul are largely due to the fact that Paul’s was a religion of salvation, closely akin to Hellenistic Mysteries. Paul thought of Jesus Christ in an essentially a Greek Idiom. It seems reasonable to suppose that the Church in Apostolic and Sub-Apostolic times were aware of the kinship between the symbolism of the institution (cf: Jn-6) were aware of the kinship between the symbolism of the institution of Eucharist and the sacraments of the mystery cults. This may  also be partly the explanation for the transformation of the Original Passover meal into an entirely symbolic right – Page -295

The Hellenistic Mystery religions (Isis & Mythra cults)  which madePurity of life a condition of membership and prescribed absence  solemn Baptism, inward religious experience, the idea of Purity regeneration, so the divine personality and final nupital vapture, unity of soul of the initiative with theDeity also prepared for the way of Christ. Page-381

Ebonites rejected sacrifices, but otherwise observed the Mosaic law, when they Prayed they faced Jerusalem. They believed in Jesus as Messiah, but denied his Divinity and the Virgin birth. They had only Matthew’s Gospel and would have nothing to do with Paul. Page-204

Jesus was born before the death of Herod (4BCE) where as the only Census known in the period took place 10 -13 years later, whil Qurinius was Roman Governor of Syria. This has suggested that thealternative theory that Jesus was a Galilean, was born in Nazareth, the story of birth in 'David city' of Bethlehem being developed later to justify the claim that it flfilled the Prophecy of Mich 5: 2-5, the Messiah was to issue from the house of David Page-449

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: இயேசு பற்றிய சுவிசேஷக் கதாசிரியர்கள் ஹீப்ரு அறியாமல் செய்த கூத்துகள்
Permalink  
 


Passion narratives written from the pont of view of those who believed in his Resurrection, concluded with Jewish burial in the Garden tomb of Joseph of Arimethea, outside the Northern wall of Jerusalem and his resurrection.  Excavations and debates have never succeeded in reaching a definitive conclusion about the site of Calvary or the tomb of Christ. The traditional  site of the Holy Sepulture stands, was authenticated by a Vision of St.Helana, mother of Emperor Constantine in the early 4th century CE. The sub-terrain vault and substructure of the church  date from the time of Constantine.

Modern investigation have suggested a site further north known as Garden Calvary , but the repeated destruction and rebuilding of walls of Jerusalem, as it expanded during the following centuries make certainty impossible. Page-452/7 PBE



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard