New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியாரியர்கள் நாசிகள் -அண்ணாதுரை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பெரியாரியர்கள் நாசிகள் -அண்ணாதுரை
Permalink  
 


பெரியாரியர்கள் நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது!

திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்:
"செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம்.
ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் ஏதாவது ஒரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிகத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினர அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிகத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடி புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை."
இது அண்ணா 29.8.1937ல் எழுதியது. ஹிட்லரின் அப்பட்டமான இனவெறி உலகிற்குத் தெரிந்த பிறகு எழுதியது. மிகத் தெளிவாக அண்ணா சொல்கிறார். யூதர்களுக்கு நேர்ந்ததே பிராமணர்களுக்கும் நேரும் என்று. எங்களுக்கு ஆசான் ஹிட்லர்தான் என்று. அழித்தொழிப்பைப் பற்றி அன்று அவருக்குத் தெரியாது. அழித்தொழிப்பு அடுத்த அடி.

பெரியார் பிராமணன் ஒழிய வேண்டும் என்றுதான் சொன்னார். ஒரு தடவை அல்ல. பல தடவைகள் சொன்னார். பார்ப்பனியம் என்ற சொல்லையே அவர் அதிகம் பயன்படுத்தியதில்லை

திராவிடச் சண்டியர்கள் பலர் சொல்கிறார்கள்: பிராமணர்களை உயிரோடு விட்டு விட்டோம் என்பதற்காக பிராமணர்கள் வாயைப் பொத்திக் கொண்டு இவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டுமாம்.

விஜயசங்கரும் இதையேதான் சொல்கிறார். இவர் கம்யூனிஸ்டு சண்டியர். இதுதான் வித்தியாசம். பெரியாரியர்கள் நாசிகளாக இருந்தால் பலர் பூண்டோடு அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று சொல்கிறார். அதாவது பிராமணர்கள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பிராமணப் பெண்கள் வயிற்றில் வளரும் கருக்கள் எல்லாம் அழித்தொழிக்கப் பட்டிருக்கும் என்கிறார். அப்படி நடக்கவில்லையே என்ற வருத்தம் அவர் எழுத்தில் தெரிகிறது.
நாசி இனவெறிவாதம் அழித்தொழிப்புக்கு கொண்டு செல்வது வரலாற்றினால் நிர்ணயிக்கப் படுகிறது. நாசிகள் கூட பதவிக்கு வந்தவுடன் அழித்தொழிப்பைத் துவங்கவில்லை. 1941ல்தான் துவங்கினார்கள். 1942ல் நடந்த் வான்ஸி மாநாட்டிற்குப் பின்புதான் அது பூதாகாரமாக உருவெடுத்தது.

பிராமணர்கள் இன்று உயிரோடு இருப்பதற்குக் காரணம் மிகப் பெரும்பான்மையான பிராமணர் அல்லாத தமிழ் மக்கள். அவர்களுக்கும் தமிழ்ப் பிராமணர்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. இன்னொரு காரணம் இந்திய அரசு. இந்தியாவில் இன்னும் மக்கள் ஆட்சிதான் நடக்கிறது.

பெரியாரியர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் நாளை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு இனவெறிக்கு இரை போட்டுக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட சாதியினரைத் தாக்கி கொண்டிருந்தால் இனவெறி வன்முறை வெடிக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டே போகும்.
உண்மையாகவே அவ்வாறு நேரும்போது எதனால் நிகழ்ந்தது என்பதைப் பற்றி அறிவுப்பூர்வமான கட்டுரைகளை ஃப்ரண்ட்லைன் பெரியாரிய நாசிகளிடமிருந்து வாங்கிப் பதிப்பிக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

72686808_3668556986503792_59852247544857 72784979_3665867240106100_59506618555747



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

73055385_2546576482087092_49526891516662



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

75220679_2368160283513401_42377478991417



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

அருந்தமிழ் தோழர்களே!

இந்த நான்காவது சென்னை மாகாணத் தமிழ் மகாநாட்டிற்கு தலைமை வகிக்க என்னை அழைத்து என்னை பெருமைப் படுத்தியதற்காக என் மனமுவர்ந்த நன்றி உங்களுக்கு உரித்தானது. அவ்வண்ணமே எனது நன்றியை உங்களுக்குச் செலுத்துகிறேன்.

இம்மகாநாட்டை மாகாண தமிழர் மகாநாடென்று குறித்திருப்பதால் தமிழர் என்னும் பதத்தின் உண்மைப் பொருளை நாம் சரியாக அறிகிறோமாவென்று சற்று சந்தேகத்திற்கு இடந்தருகிறது என்பதற்குட்பட்ட வரையில் தமிழன் என்கிற பதத்திற்கு ஓர் அர்த்தமே பொருத்தமானது. யார் ஒருவர் தொன்றுதொட்டு தலைமுறை தத்துவமாக தமிழ் மொழியைத்தாய் மொழியாகக் கொண்டு அம்மொழியை பிரதானமாக அனுட்டித்து போற்றி வரு வாரோ அவரே தமிழர் ஆவாரே அன்றி மற்றொருவருக்கும் அப்பதம் பொருத்தமாகாது. அன்னிய நாட்டினர் தமிழ்மொழியில் பெரும் ஆராய்ச்சி செய்து தேர்ச்சிபெற்று புலமைத்தன்மை அடைந்திருப்பினும், தமிழ் மொழிக்கு என்ன அரும்பெரும் தொண்டு புரிந்திருப்பினும் அவர் தமிழர் ஆகமாட்டார்.

தமிழர் யார்

நம் நாட்டில் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்ட, மதுரை சேசுசபையைச் சேர்ந்த பெஸ்கிசாமியாரும் ஆங்கில பாதிரியாராகிய போப்பய்யரும் நமது மொழியில் மிகவும் புலமை அடைந்தவர்கள் என்பது எல்லோரு மறிந்தவிடயம். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியும், போப்பய்யரின் தமிழ் இலக்கணமும், மிகவும் பெருமை வாய்ந்த தமிழ் நூல்களாக இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் வீரமாமுனிவராவது, போப்பய்யராவது தமிழ ரென்று கருதப்படுவார்களா? அவ்வாறே வெளிநாட்டி லிருந்து நம்மிடத்தில் குடியேறியவர்கள், எவ்வளவு காலங்களுக்குமுன் நம்மிடம் வந்து சேர்ந்தவர்களாயினும், இந்நாட்டிலேயே எப்போதுமிருக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களாயினும் நம் தமிழ் மொழியை தன் மொழியாகக் கொள்ளாமல் இருப்பின் அவர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள். அவசிய நிமித்தமும் தன் சவுகரியத்தை உத்தேசித்து நம் மொழியைப் பழக்கவழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரணத்தைக் கொண்டு மாத்திரம் தமிழராக மாட்டார்கள்.

பார்ப்பனர் தமிழரா?

குறிப்பாக நம் நாட்டில் பார்ப்பனர்கள் தமிழர் ஆவார்களா ஆகமாட்டார் என்பதுதான் என் முடிவு. நம் நாட்டில் அநேக நூற்றாண்டுகளாக இருந்திருந்தும் நம்முடன் கலவாமல் தங்களை ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவே வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல் தாங்களே ஏனையோரை விட மேல் வகுப்பினர் என்று சொல்லிக்கொண்டு தம் சொந்த மொழி வடமொழியாகிய ஆரிய மொழியே என்றும் அம்மொழி நம்மொழியாகிய தமிழ் மொழியை விட மேன்மைப்பட்டதென்றும், அது ஒரு தெய்வீக மொழியென்றும், அம்மொழியே கடவுள் வணக்கத்திற்கும் மற்றுமுள்ள அவர்களுடைய சடங்கு களுக்கும் பொருத்தமானதென்றும், தமிழ்மொழி இக் காரியங்களுக்கு பொருத்தமற்றதென்றும், அதை இழிவு படுத்தி பேசுபவர்கள் எவ்விதத்தில் தமிழரென்று அழைக்கப் பட பொருத்தமுள்ளவர் களென்று எனக்கு விளங்கவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் தமிழர் ஆகமாட்டார்கள் என்று சொல்வது மிகையாகாது.

தமிழ் நாடு எது?

மேலும், தமிழ்நாடு என்பது எந்த நாடென்று நிர்ணயிப் பதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. சென்னை நகரிலிருந்து குமரி வரையில் மலையாளத்துக்கு கிழக்கே உள்ள நாடே தற்காலத்திய தமிழ் நாடு என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். நாம் இந்நாட்டிற்கு இப்போது இந்தியமாக்கடலில் மூழ்கிக்கிடக்கும் ஓரிடத்திலிருந்து வடக்கே வந்தோமா அல்லது ஆரியர்கள் வருகிறதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மத்திய ஆசியாவிலிருந்து தெற்கே வந்தோமா என்கிற விஷயம் சரித்திர ஆராய்ச்சிக்காரர் நிர்ணயிக்க வேண்டிய காரியம்.

தமிழர் எவருக்கும் அடிமைப்பட்டவரல்ல

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே நாம் வாழ்ந்து வந்திருக்கிறது நம் நாடே நம்நாடென்பதும் இந்நாட்டு மக்கள் நாமே என்பதும் யாரும் மறுக்க முடியாத விடயம். வடஇந்தியாவில் பல்வேறு மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒவ்வொருவரையும் பின்வருபவர் அடக்கி, ஒருவர் ஒரு காலத்திலும் மற்றொருவர் வேறொரு காலத்திலும் ஆதிக்கம் புரிந்து வந்ததாகவும் சரித்திர மூலமாகவும் அறிகிறோம். தமிழர் வடநாட்டு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததில்லை. ஆனால் நாமும், நம்மைச் சேர்ந்த மற்றொரு திராவிட வகுப்பினரும், ஒரு காலத்திலும் இந்த வடநாட்டு ஆதிக்கங்களில் ஒன்றிற்காவது நாம் உட்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் சந்திரகுப்தர் என்னும் சக்கரவர்த்தியால் ஒரு புகழ்பெற்ற ஆட்சி வடநாட்டில் நடத்தப்பட்டதாகவும் அவருடைய பேரனாகிய அசோக சக்கரவர்த்தி காலத்தில் அவருடைய ஆட்சி ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் இன்னும் வெளிநாட்டிலும் பரவியிருந்ததாகவும் தெரிகிறது.

வடநாட்டார் அந்நியரே

ஆனால் அக்காலத்திலும்கூட நம் நாட்டில் நம் மூவரசர்களாகிய, சேர, சோழ, பாண்டிய மன்னர்களே அரசு புரிந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு முகம்மதியர்கள் வடஇந்தியாவில் புகுந்து தங்கள், ஆதிக்கத்தை நிலைநிறுத்தி டெல்லி மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு பரவிய ஆட்சியை மொகல் சக்கரவர்த்திகள் நடத்தி வந்திருக் கிறார்கள். அக்காலத்திலும் தென்னாட்டாராகிய நாம் அந்த ஆதிக்கத்திற்கு உட்படாமல் தனிப்பட்ட வகையிலேயே நம்முடைய காரியங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆங்கில ஆட்சி நம் நாட்டில் நிலைபெற்ற பிறகே நாமும் வட நாட்டினரும் ஒரே ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கின்றோமே தவிர அதற்குமுன் எந்தக் காலத்திலும் நமக்கும் வடநாட்டினருக்கும் யாதொரு கலப்புமிருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்திலும் தென்னாட்டு திராவிடர் களுக்கும் வடநாட்டு ஆரியர்களுக்கும் ஒத்துமையையோ, சம்பந்தத்தையோ காட்டக்கூடிய காரியம் ஒன்றே. அது எதுவெனில் நம்மிருவரும் ஒரே வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு உள்பட்டிருக்கிறதே ஆகும். மற்ற எல்லாக் காரியங்களிலும் நாம் வேறு அவர்கள் வேறு வகுப்பினராகவே காணப் படுகிறோம். மக்கள் பேசும் மொழியிலோ சாப்பிடும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ, நாம் வேறு அவர்கள் வேறாகவே இருக் கிறோம். மேலும் பூர்வீகக் கலை, நாகரீகம், இவ்விஷயங் களைப் பற்றி விசாரிப்போமானால் வடநாட்டு ஆரியர் களுக்கும் அய்ரோப்பிய ஆரியர்களுக்கும் வெளிப்படும் சம்பந்தம் கூட நம்மவர்களுக்கும் வட நாட்டாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிடர் இந்தியரா?

இன்னும் ஆழ்ந்துபார்ப்போமானால் திராவிட மக்களாகிய நாம் இந்தியர்கள் அல்லவென்றே சொல்ல வேண்டும். இந்தியர் என்று ஒரு பதம் ஏற்படுவதற்கே காரணம், நம் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட தூரத்திலுள்ள பஞ்சால தேசத்தில் ஓடும் இந்தஸ் நதியே அந்த நதியின் பெயர் இந்தஸ் என்று இருந்தபடியால் அதை அடுத்தாற் போல் உள்ள நாட்டிற்கு இந்தியாவென்னும் பெயர் வழங்கப்பட்டது. அந்த நாட்டில் குடியேறி இருந்த மக்கள் கிழக்கே போகப் போக அந்த பெயரும் அவர் களுடனே நகர்ந்து சென்றது. ஆகவே காலக்கிரமத்தில் விந்தியமலை தொடர்புக்கு வடக்கே உள்ள நிலப்பிரிவு முழுவதிலும் இந்தப் பெயர் வழக்கத்தில் வந்தது. அம்மக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒருக்காலும் வராத நம் நாட்டிற்கு அது பொருத்தமாகாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்குமுன் வடஇந்தியாவின் மேல் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் தீ கிரேட் என்னும் ஒரு தளகர்த்தனின் சரித்திரத்தை எழுதிய கிரேக்கர் சரித்திர ஆசிரியர்கள் வடநாட்டைப் பற்றி எழுதும் போது இந்தியாவென்று எழுதினமையால் இந்தியதேசம் இருக்கிற விடயம் மேல் நாட்டார் அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டது. ஆயிரக்கணக் கான மைல்களுக்கப்பால் உள்ள மேல்நாட்டார்கள் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் உள்ள வித்தியாசங்களை அறியாமையால் இமயமலைத் தொடர்புக்கு தெற்கே உள்ள நாடு முழுமைக்கும் இந்தியாவென்று ஒரு பொதுப் பெயர் கொடுத்து அப்பெயர் இப்பொழுது நம் நாட்டிற்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆரியக்கூட்டுறவால் வந்த வினை

இவ்விதம் இரு வகுப்பினரும் தனிப்பட்ட முறையில் வளர்ந்து வந்தபோதிலும் நாளடைவில் இரு வகை கலைகளுக்கும் மொழிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு வடநாட்டு நாகரிகத்தாலும், வடமொழியாலும் நம் நாகரிகமும் நம் மொழியும் சீர்குலைந்து போனதென்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விதம் சீர்குலைந்தமைக்கு தனித்தமிழ் தேய்ந்து மற்ற திராவிட நாடுகளில் தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையாளமாகவும் இருந்து வருகிறதே போதிய சான்றாகும். நாம் பேசி வரும் தமிழே வடமொழியில் கலப்புற்று கெடுதலடைத்திருப்பதை தெற்றென விளக்கும்.

நாகரிகத்தைப் பார்ப்போமானால் சிறு வயதிலேயே பெண்களை மணம் செய்விப்பதும், ஆண்களை இழந்த பெண் மக்களை மறுமணமில்லாமல் வைப்பதும் தீண்டாமைப் பேயை நாட்டில் ஆடவிட்டிருப்பதும், நமக்குள்ளாகவே சாதி என்னும் பேரால் அனேக பிரிவுகளை ஏற்படுத்தி இருப்பதும், நமக்கு ஏற்பட்டிருக்கும் பெருஞ்சீர்கேட்டின் பல அடையாளங்களாகும்.

இவ்வுண்மைகளை நான் வற்புறுத்திச் சொல்வதன் நோக்கம் நாமும் நம்மைச் சார்ந்த மற்ற திராவிட மக்களும் பூர்வீகம் தொட்டு வடநாட்டாருக்கு வேறுபட்ட வகுப்பினர். அவர்களுடன் நாம் கலந்து கொள்ளுவதனால் நமக்கு இடையூறுகள் ஏற்படுமே தவிர வேறில்லை, நம் நாடு ஒரு தனிப்பட்ட நாடு என்பதை நாமெல்லோரும். உணர வேண்டுமென்பதற்கே.

- விடுதலை - 28.12.1938

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard