New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)
Permalink  
 


தொடர் : வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)
- நேச குமார்

[ முன்னுரை ]

வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஒரு பார்வை
(டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)
 
முன்னுரை:
 
இஸ்லாம் - இதுதான் இன்றைய உலகில் மிகவும் கவனத்தைப் பெற்றிருக்கின்ற தலைப்பு. இஸ்லாத்துடன் தொடர்புடைய எதுவும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது - அது மதமாயிருக்கட்டும், இஸ்லாமிய சமூகமாயிருக்கட்டும், இஸ்லாம் தொடர்பான செய்திகளாயிருக்கட்டும், தனிப்பட்ட முறையில் நாமறிந்த
இஸ்லாமியர்களாயிருக்கட்டும். இஸ்லாம் பற்றிய இன்றைய உலகின் கவனத்தை திருப்பச் செய்தது இஸ்லாத்தின் பெயரால் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைகள் - இந்தியாவின் காஷ்மீராகட்டும், பாலஸ்தீனமாகட்டும், நாகூராகட்டும், ஈராக்காகட்டும், மேலப்பாளையமாகட்டும், பெஸ்லனாகட்டும்,
நியூயார்க் நகரின் இரட்டைக்கட்டிடங்களாகட்டும், கோவையாகட்டும் - இஸ்லாம் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது, இஸ்லாத்தின் பேரில் அதைப் பின்பற்றுபவர்களுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் உந்துதலில் செயல்படும்  மதப்பிடிப்புள்ள ஒரு மனிதக் குழுமம், அக்குழுமத்தின்
உறுப்பினர்களால் நடத்தப்படும் கடவுளுக்கான, கடவுளின் கட்டளைகளின் அடியொற்றி நடத்தப் படும் புனிதப்போர்.
 
இஸ்லாத்தின் அடித்தளம்:
 
இப்புனிதப்போருக்கு ஆன்மிக அடித்தளமும், நியாயத்தன்மையும் வழங்குபவை சில நம்பிக்கைகள். கடவுளால் மனித குலத்திற்கு இடப்பட்ட சில கட்டளைகளைப் பற்றிய நம்பிக்கைகளே மதப்பிடிப்புள்ள இஸ்லாமியர்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டி, அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் உந்து சக்தியாயிருக்கிறது - அவர்களின் சிந்தனையை நிறுவனப்படுத்தி ஒரே இலக்கில் செயல்பட வைக்கிறது. இஸ்லாம் குறித்த கடுமையான தாக்குதல்கள் - பாராட்டுக்கள், புகழாரங்கள் - அவதூறுகள், செய்திகள் - விமர்சனங்கள் என பல வெளிவந்திருக்கின்றன, வந்து கொண்டுள்ளன. ஆனால், யாரும் இந்நம்பிக்கையின் மூலத்தை உரைத்துப் பார்த்ததில்லை. இந்நம்பிக்கையின் மூலத்தை உரைகல்லில் ஏற்றி உரைத்துப் பார்த்தவர் ஒருவர் உண்டு - அவர் டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட்.
 
டாக்டர் எல்ஸ்ட் :
 
டாக்டர் எல்ஸ்ட், ஒரு கத்தோலிக்க ·ப்ளெமிஷ் (·ப்ளெமிஷ் - டச்சு மொழி பேசும் பெல்ஜியர்கள்) குடும்பத்தில் 1959ம் ஆண்டு பெல்ஜியத்திலுல்ள லவன் என்னுமிடத்தில் பிறந்தவர். லவன் நகரில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சீன ஆய்வுக்கல்வி, இந்தோ-ஈரானிய ஆய்வுக்கல்வி போன்றவற்றைக் கற்று, இந்து மீட்சி குறித்த பொருளில் ஆய்வு செய்து லவனில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
 
நான்காண்டுகள் இந்தியாவில் தங்கி, நேரடியாக இந்தியர்களைத் தாக்கும் பிரச்சினைகளையும், சமூகக் குறைபாடுகளையும் அலசிய டாக்டர். எல்ஸ்டின் முதல் புத்தகம் அயோத்திப் பிரச்சினை குறித்து வெளிவந்தது. பின், பல தளங்களில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு 15 புத்தகங்கள், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை கருத்துலகிற்கு அளித்துள்ளார். சீன வரலாறு, பன்முகக் கலாச்சாரத்தன்மை, ஆரியப் படையெடுப்பு குறித்த ஆய்வுகள், மொழிப்பிரச்சினை, இஸ்லாமியர்களின் உளப்பாங்கு என பல தலைப்புகளில் அவரது படைப்புகள்  தொடர்ந்து வெளிவந்து உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்துமதம், புத்தமதம், சீனா, கீழை நாடுகளின் தத்துவயியல்கள், பாகன் மரபுகள் என்று கொய்ன்ராட் எல்ஸ்டின் கவனத்தைப் பெற்ற பல விஷயங்கள் குறித்த அவரது ஆழ்ந்த கருத்துக்கள் கீழை நாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அனைவரையும் அவரது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
 
இந்தியாவில் இந்து மீட்சி குறித்துத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் டாக்டர்.எல்ஸ்ட், இந்துத்வா இயக்கங்களையும் குறை கூறத் தயங்கியதில்லை. இந்தியச் சார்பு நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுப்பவர் என்றாலும், இன்னமும் இந்தியர்கள் சில காலணியாதிக்கக் குறைபாடுகளைக் களையவில்லை என்ற
பெரும் குறை அவருக்குண்டு. அதனினும் குறிப்பாக, வரலாறு குறித்த இந்தியர்களின் கண்ணோட்டம் பற்றிய ஆதங்கம் நிறையவே அவருக்கு உண்டு.
 
வஹி பற்றி டாக்டர் எல்ஸ்ட் :
 
இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட வஹி எனும் இறை ஆவேச நிலையில் அவருக்கு வெளிப்பட்ட ஆன்மிக நிலை. இந்நிலையிலிருந்துதான் அவருக்கு இறைத்தொடர்பும், அதைத் தொடர்ந்த உலக சமுதாயத்திற்கான இறைக்கட்டளைகளும், சமுதாய வழிகாட்டுதல்களும் ஏற்பட்டன.

இந்த வஹி குறித்து டாக்டர்.எல்ஸ்டின் எட்டு கட்டுரைகளை காஷ்மீர் ஹெரால்டு வெளியிட்டுள்ளது. இக்கட்டுரைகளில், இஸ்லாமிய வரலாற்றாவணங்களில் காணப்படும் வஹி பற்றிய செய்திகள், அந்நிலைபற்றிய இந்திய யோகியரின் விளக்கங்கள், ஐரோப்பிய உள ஆய்வு நிபுனர்களின் கருத்துக்கள் ஆகியவை விரிவாக அலசப்பட உள்ளன.
 
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" எனும் தமிழாசான் பாரதியின் கூற்றினை மெய்யாக்கும் வண்ணம், உலகின் கவனத்தைப் பெற்ற இந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழோவியத்தில் வர உள்ளன. தொடர்ந்து எட்டு வாரங்கள் இவை வர உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இவை ஒரு கருத்துக் கொடையாக அமைந்து, நமது சமூகத்தை, சிந்தனையை இவை செறிவு படுத்தும்.
 
முன்னுரைக்கு முடிவுரை:
 
இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்துள்ள டாக்டர் எல்ஸ்டிற்கு நன்றிகளை நவின்று, இவற்றுக்கான உரிமை அவரிடத்திலேயே உள்ளது என்பதையும் தெரிவித்து, மொழிபெயர்ப்பின் - அடிக்குறிப்புகளின் குறைகள் எனதே, ஆக்கத்தின் செறிவுகள் அவரைச் சார்ந்தவை என்பதை தெரிவித்து இம்முன்னுரையை முடித்து, தொடரைத் தொடங்குகின்றேன்.
 
வணக்கங்களுடன்,

- நேச குமார்

oooOOooo


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)
Permalink  
 


[ திருக்குரான் வெளிப்பட்ட ஆவேச நிலை குறித்த யோகியர்/சித்தர் பார்வை ]

இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்களின் போது, பெரும்பாலான முஸ்லிம் அல்லாதோரும் முந்தய முஸ்லிம்களும், இஸ்லாத்தின் பாதகமான அனுகுமுறைகள் - குறிப்பாக பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் குறித்த இஸ்லாத்தின் பார்வைகள் போன்றவற்றை குறித்தே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இஸ்லாம் என்பது முதலாவதாக நம்பிக்கையின் மார்க்கம் - சில உண்மை விளம்பல்களின் மீது கட்டமைக்கப்பட்டது அது. இதன் பின்னரே அது ஒழுக்கம் குறித்த  கட்டுப்பாடுகள், அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகள் அடங்கிய மதம். ஆகவே, இஸ்லாம் வாழ்வதும் வீழ்வதும் இரண்டு நம்பிக்கைகள் - உண்மை விளம்பள்களைச் சார்ந்திருக்கின்றது. அவையாவன:

1. பிரபஞ்சத்தைப் படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வே. அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.

2. மனித குலத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட கடைசி நபி(மனிதர்களுக்கு கடவுளின் கட்டளைகளை கொணர்ந்துரைக்கும் இறைத்தூதர்) முகம்மது அவர்கள். இந்த முகம்மது மூலமாக அல்லாஹ் மனித குலத்திற்கான தமது இறுதி போதனைகளை அனுப்பிவைத்தார். முகம்மது அவர்களின் 40ஆவது வயதிலிருந்து( கி.பி 610) சாகும் வரை(கி.பி 632),  திருக்குரான் என்று அழைக்கப்படும் இந்த மனித குலத்திற்கான வழிகாட்டுதல்கள்-கட்டளைகள், தொடர்ந்து "வெளிப்படுத்தப்பட்டன".

இதில், முதல் நம்பிக்கை கடவுளின் மாண்புகள் சம்பந்தப் பட்டது. இந்நம்பிக்கையில் இஸ்லாத்திற்கும் ஏனைய ஓரிறைக் கோட்பாடு கொண்ட மதங்களுக்கும் ஒப்புமை ஏற்படலாம். பன்முகத்தன்மை அதிகம் விரவிக் கிடக்கும் இந்து மதத்தோடு கூட சில அர்த்தப்படுத்தல்களுக்குப்பின் ஒப்புமை ஏற்படலாம்("ஒரே உண்மையை சான்றோர் பல பெயர்களில் அழைக்கின்றனர்"). ஆனால், இரண்டாவது நம்பிக்கைதான் இஸ்லாத்தை ஏனைய மதங்களிலிருந்து பிரித்துக் காண்பிக்கின்றது - இந்நம்பிக்கை முகம்மது அவர்களின் நபித்துவம் பற்றியது.

முதன் முதலாக காஷ்மீர் ஹெரால்டில் 2002-2003ல் வெளிவந்த இந்த முதல் கட்டுரையானது, முஸ்லிம் அல்லாதோரின் பார்வையில், இந்த இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை குறித்து ஆய்ந்தது. இக்கட்டுரையானது முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த இந்துப் பார்வையை பிரதிபலிக்கும்.

காலனிக்காலத்திற்கு முன்னர் இந்துக்கள் இஸ்லாம் குறித்த புரிதல்களை பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை, அதிலும் குறிப்பாக இஸ்லாத்தின் ஆதார அடிப்படையான முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்து எந்தவித அபிப்ராயமும் இந்துக்களிடையே நிலவியதாகத் தெரியவில்லை. 1875ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தாம் முதன் முதலாக இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குரானைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பெரும்பாலும் திருக்குரானின் முரண்பாடுகள், பகுத்தறிவிற்கொவ்வாத நம்பிக்கைகள், கொடூரமான கட்டளைகள் குறித்தே தமது விமர்சனங்களை வெளிப்படுத்தினார். பின்னர், ஆரிய சமாஜத்தின் விமர்சனங்கள் முகம்மது அவர்களின் கொடுங்கோன்மை, அவரது ஒழுக்கமற்ற தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றையே மையமாகக் கொண்டு விளங்கின (உதாரணமாக ராஜ்பால் அவர்களின் " ரங்கீலா ரசூல்" - இது முகம்மது அவர்களின் பாலியல் வாழ்க்கை பற்றியது). ஆனால், இவையெல்லாம் இஸ்லாத்தில் இறைவனின் வசனங்கள் "வெளிப்பட்ட" விதத்தை கவனிக்க வில்லை.

இஸ்லாத்தின் மூல நம்பிக்கையை ஆழ்ந்து கவனித்தோமானால், அடிப்படை நம்பிக்கையானது முகம்மது அவர்களின் இறை ஆவேசம் பற்றியது எனக் காணலாம். முகம்மது அவர்கள் அடிக்கடி இறையுணர்வு மிகுந்ததோர் ஆவேச நிலைக்கு(வஹி) சென்று அல்லாஹ்வின் கட்டளைகளை கேட்டு பிறருக்கு உரைப்பார். சமீப காலங்களில் இஸ்லாத்தை ஆய்வு செய்யும் இந்து ஆய்வாளர்கள், முகம்மது அவர்களின் சமகாலத்தவர்கள் - வஹியை நேரில் கண்டவர்கள் இந்த ஆவேசம் குறித்த ஐயங்களை வெளிப்படுத்தியிருப்பதைக் கண்டு வஹி குறித்த தமது சந்தேகங்களை இவை நிரூபிப்பதாகக் கருதுகின்றனர்: "முகம்மது அவர்களின் விமர்சனத்தை உதாசீனம் செய்துவிட்டு தமது கடவுள் நம்பிக்கைகளில் உறுதியாக நின்றனர் மக்கா நகர்வாசிகள். அல்லாஹ் கூறுகிறார்: 'அல்லாஹ்வைத் தவிர மெய்யான நாயகன் இல்லை என்று உரைத்தும் இவர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் சொன்னார்கள்:'ஒரு பைத்தியக்கார மனிதருக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?'(திருக்குரான் வசனங்கள் 37:35-36) 'அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்தது குறித்து ஆச்சர்யமடைந்தனர்; " இவர் ஒரு சூனியக்கார பொய்யர்" என்று அவர்கள் கூறினர்'(திருக்குரான் வசனம் 38:4)  "(S.R.கோயல் : ஹிந்துக் கோவில்கள்(என்ன நிகழ்ந்தது அவற்றிற்கு?) - இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு., வாய்ஸ் ஆ·ப் இந்தியா, டெல்லி 1993, பக் 334)

அனேகமாக சுவாமி விவேகானந்தர் தாம் முதன் முதலாக இந்த நபித்துவத்திற்கும், முகம்மது அவர்களின் குறைபாடுடைய தலைமைத்துவத்திற்கும் உண்டான தொடர்பைக் குறித்து கருத்து தெரிவித்தவர்.பிறழ்ந்த தன்மையிலிருந்து பிறந்த நபித்துவத்தின் குறைபாட்டுத்தன்மை காரணமாகவே, அச்சுறுத்தல்கள், கொடும் செயல்கள் மூலம் முகம்மது அவர்கள் தமது இறைக்கடன்களையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் பிறர் மீது சுமத்த நேர்ந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் சாதாரண வியாபாரி ஒருவர் உங்களிடம் வந்து தமக்கு சில குரல்கள் கேட்பதாகவும், அவை கடவுளின் கட்டளைகள் என்றும் ஆதலால் நீங்கள் எல்லோரும் அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்று கூறினால், அவருக்கு 'ஏதோ' நிகழ்ந்து விட்டது என்றே நீங்கள் கருதுவீர்கள் அல்லவா? - இந்த வித்தியாசமான நிகழ்வு குறித்து விவேகானந்தர் தமது கருத்தை தெரிவித்து, முகம்மது அவர்கள் தாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு மனிதர்களிடம் கட்டளைகளை சொல்லவேண்டிய விசேஷ நபர் என்று கருத நேர்ந்ததை, அதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய காரணங்களை குறித்த தமது விளக்கங்களை முன்வைத்தார்.

திருக்குரான் வெளிப்பட்ட விதம் குறித்த விசேஷ கருத்தை இந்து சமுதாயம் முன்வைத்தது - தமது யோகியர், சித்தர் தம் அனுபவங்களின் அடிப்படையில். சரியான வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால் எவ்வாறு யோகியர் தவறான பாதையில் செல்லக் கூடும், ஆன்மீகப் பாதையில் என்னென்ன அபாயங்கள் உள்ளன என்பதற்கு உதாரணமாக விவேகானந்தர் முகம்மது அவர்களை உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்: " இந்த நிலையைப் பற்றி யோகிகள் எச்சரிக்கின்றனர். எவ்வளவு உன்னதமான மனிதர்களாகயிருந்தாலும், இந்த நிலையில் வீழ்ந்தவர்களில் பெரும்பாலோர் மனப்பிறழ்வுக்கு உள்ளாவதும், தப்பித்த ஒரு சிலர் கூட தடுமாறுவதும், ஆன்மீக செறிவு நிறைந்திருந்தும் அதனூடே ஒருசில  மூடநம்பிக்கைகளுக்கு இவர்கள் ஆட்படுவதையும் காணமுடிகிறது. இத்தகையோர் மாய உலகில் மாட்டிக் கொண்டு மனத்தோற்றங்களுக்கும் பிரமைகளுக்கும் ஆட்பட்டனர். இதன் காரணமாகவே, முகம்மது அவர்கள் காப்ரியேல்(ஜிப்ரீல்) தன்னிடம் வந்து தன்னை புராக் எனும் சுவனக்குதிரையில் ஏற்றி சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது என்று நம்பி, பிறரிடம் எடுத்துரைத்தார்”.

" ஆனால், இப்படியான மனத்தோற்றங்களினூடே முகம்மது சில அரிய ஆன்மீக உண்மைகளையும் எடுத்துரைத்தார். நீங்கள் குரானைப் பார்ப்பீர்களானால், மூட நம்பிக்கைகளினூடே மிகச் சிறந்த ஆன்மீக உண்மைகளும் கலந்து உரைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இதை எவ்வாறு விளக்குவது? முகம்மது இறையாளர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த இறையுணர்வு திடீரென அவருக்கு கிட்டியது. அவர் ஒரு பயின்ற யோகி/சித்தர் அல்லர், அவருக்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. முகம்மது உலகிற்கு செய்த நன்மைகளை நினைவு கூறுங்கள், அவரது வெறியின் விளைவால் உலகிற்கு ஏற்பட்ட மிகப் பெரும் அழிவுகளையும், அனர்த்தங்களையும் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கானோரை நினைவு கூறுங்கள், குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர், அழிக்கப் பட்ட நாடுகள், உயிரழக்க நேர்ந்த லட்சோப லட்சம் பேர்(...) ஆகவே, முகம்மது மற்றும் அவரைப் போன்ற மதகுருமார்களின் வாழ்வை நோக்கும்போது இந்த அபாயத்தின் தீவிரம் புலனாகும். ஆனால், அதே சமயம் அவர்கள் அனைவரும் இறையுணர்வு தூண்டப்பட்டவர்தாம். ஒரு நபியானவர் எவ்வெப்போது தமது இறையுணர்வுகளை உச்சகட்ட நிலைக்கு கொண்டு சென்று ஆவேச நிலையையெட்டி ஆன்மீக வெளிப்பாடுகளை கொணர்ந்தாரோ, அப்போதெல்லாம் பல ஆன்மீக உண்மைகளையும் அதனூடே சில அடிப்பட¨வாதக் கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கொணர்ந்தார். இதனால் இம்மாதிரியான மனிதர்களின் போதனைகள் எவ்வளவுக்கெவ்வளவு நன்மைகளை உலகிற்கு ஈந்தனவோ அதே போன்று உலகிற்கு ஊறுகளையும் விளைவித்தன”. (Vivekananda: Complete Works, பாகம் 1, பக் 184 - அவரது ராஜ யோகம் பற்றிய புத்தகத்தின் ஏழாவது அத்தியாயம் : “தியானமும் சமாதியும்”).

ஆன்மீக பரிசோதனைகளின் விளைவாக எழும் மனப்பிறழ்வுகளே திருக்குரானின் வெளிப்பாடுகள் என்று பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு கால்வினிஸ்ட் (கிறிஸ்துவ) போதகரும் மத ஆய்வாளருமான ஜிஸ்பெர்டஸ் வோர்டஸ் என்பார் தெரிவித்துள்ளார். இவர், இந்தோனேசியாவில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரச்சாராம் செய்வதற்காக  மதப்பிரச்சாரகர்களை பயிற்றுவித்தவர்( இது குறித்து Kare Steenbrink தமது Dutch Colonialism and Indonesian Islam Contacts and Conflicts 1595-1950, Rodopi Amsterdam/Atlanta 1993 எனும் புத்தகத்தில் விவாதித்துள்ளார்). கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பிரிவு கிறிஸ்துவ மதகுருமார்களின் ஆன்மீக பயிற்சிகளை கண்டனம் செய்த ப்ராடஸ்டண்டுகளும் இதே அபாயங்கள் குறித்தே எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைகள் முகம்மது அவர்களுக்கும் பொருந்தும்.

பெரும்பாலான யோக நூல்கள் ஹடயோக முறைகளை தவறாக பின்பற்றுவது குறித்து எச்சரிக்கின்றன. சரியான முறையில் பின்பற்றினால், உடனடியாக பெரும் நன்மைகளைத் தரும் இந்த யோக/தாந்த்ரீக/சித்தர் முறைகள், நியதிகளை சரியான முறையில் பின்பற்றாவிட்டால் யோகியருக்கு/சித்தர்களுக்கு விளையக்கூடிய கெடுதிகளையும் பட்டியலிடுகின்றன. சரியான முறையில் பிராணாயாமம் செய்யாததால் ,நரம்பு மண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து யோகிகள், தமது சக யோகியர்களுக்கோ அல்லது மாணாக்கர்களுக்கோ விளைந்த கேடுகளை கூறும் செவிவழிச் செய்திகளும் யோக பாரம்பர்யங்களில் நிறையவே உண்டு. கோபி கிருஷ்ணா என்பவர் எழுதி 1967ல் வெளிவந்த(தற்போதும் நிறைய கடைகளில் இப்புத்தகம் கிடைக்கிறது) Kundalini, the Evolutionary Energy in Man எனும் புத்தகத்தில் சரியான முறையில் செய்யப்படாத யோகமுறைகளின் கடும் பின்விளைவுகள், உடலுக்கு நேரும் துன்பங்கள் பற்றிய விவரனை தரப்பட்டுள்ளது. ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவரான வந்தே மாதரம் ராமச்சந்திர ராவ் அவர்கள் ஒருமுறை என்னிடம் அவரது நன்பர் ஒருவர் செய்த தவறான பிராணாயாமத்தால் நேர்ந்த பக்க விளைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது நன்பருக்கு மூளையும் இதயமும் பாதிக்கப் பட்டு காலமானாராம். இதுபோன்றே தாவோயிஸத்தின் சக்தி(பிராண) வழிப்படுத்துதல் முறையான க்யூகாங்க்(Qigong)கிலும் இது போன்ற எச்சரிக்கைகளும், உதாரண சம்பவங்களையும் காண முடிகின்றது. உலகெங்கும் இது போன்று திடீரென்று ஆன்மீக “வெளிப்பாடுகள்” நேர்வோர்க்கெல்லாம் “ஞானம்” பிறப்பதோடு மட்டுமல்லாமல், தமக்கு வெளிப்பட்ட ‘ஞானம்’ மட்டுமே உண்மை ஆகவே தாமே முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற அசைக்க முடியாத (மூட) நம்பிக்கையும் ஏற்படுகிறது. நவீன மதக்குழுக்களிடையே அதைத் தோற்றுவித்த மதகுருமார்களின் சுயமுக்கியத்துவத்தை பாருங்களேன், இது புரியும்.

இந்திய யோக/சித்தர் மரபுகளில் வந்தோர் இது போன்ற ஆபத்தான மனச்சுழல்களிலிருந்து தப்பியது ஏனென்றால், அவர்களின் முன்னோடிகள் இது போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் குறித்த நெடிய ஆய்வின் மூலம் பாதுகாப்பான, ஆரோக்கியமான யோக முறைகளை பிறப்பித்து, பதஞ்சலியின் யோக சூத்திரம் போன்ற அற்புதமான ஆக்கங்களை வழிகாட்டியாக அமைத்துச் சென்றனர். ராம் ஸ்வரூப் அவர்கள் (Hindu View of Christianity and Islam, Voice of India, Delhi 1993, பக் 45-46) இந்திய யோக முறையானது இது போன்ற நீண்ட நெடிய பாரம்பர்யத்தின் விளைவாக எழுந்த முறைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் விள¨வாக ஏனைய உள்ளார்ந்த ஆன்மீக நெறிகளைக் காட்டிலும் சீர்ந்து விளங்குவதாக தெரிவிக்கின்றார். ஆகவே இந்நோக்கில் , இந்திய யோக முறைகளை ஷமன்களின் மனமயக்கும் மூலிகைகளின் மூலமாக எழுப்பப் படும் மயக்க நிலைகளோடும், முகம்மது அவர்களின் வரவேற்பின்றி அழைக்கப்பட்ட விண்-குரல்களோடும் ஒப்பிடுவது என்பது “எல்லா மதங்களும் ஒன்றே” என்று இப்போது பாஷனாகிவிட்ட கோஷங்களுடன் ஒத்திருந்தாலும், அடிப்படையில் மிகவும் வித்தியாசப்பட்டவை என்பதால் முறையற்ற ஒப்புமைகளாகின்றன.

சமீப காலங்களின் ராம் ஸ்வரூப்பும், சீதா ராம் கோயலும் விவேகானந்த சுட்டிக் காட்டிய திருக்குரான் வெளிப்பாட்டுக் கோட்பாட்டை இன்னமும் செம்மைப் படுத்தியுள்ளனர். ராம் ஸ்வரூப், யோக சமாதியின் பல்வேறு நிலைகளைப் பற்றி விவரித்து அவற்றில் சிலவற்றில் யோகசமாதியில் சில மனமயக்கங்களும் ஏற்படுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்(Hindu view of Christianity and Islam, பக் 107). சீதாராம் கோயல் அவர்கள் செங்கிஸ்கானுக்கு ஏற்பட்ட ஆவேச நிலை பற்றி விவரித்து, அந்நிலையிலிருந்து அவர் பிறப்பித்த கட்டளைகள் காரணமாக ஒரு பெரும் குழுவின் நாயகராக அவர் ஆகி, அக்குழு பெரும் (படையெடுப்புகளின் மூலமாக) வெற்றிகளை ஈட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார் (The Calcutta Quran Petition, 3rd ed., Voice of India Delhi 1999, p.238-249; with reference to Ibn Ishaq: Sira Rasul Allah, tra. Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, p. 104/150 - 107/154).

இவர்களிருவரும் முடிவுக்கு வருவது என்னவென்றால், இம்மாதிரியான மனமயக்கங்களுக்காட்பட்டு அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மூலம் பரப்பப்பட்ட ஒரு இறைக்கோட்பாட்டை நிராகரித்த பாகன் அரபிகளின் சிந்தனை சரியே. ஆனால், அவர்கள் வரலாற்றால் மன்னிக்க இயலாத தவற்றை செய்தனர், அதாவது போரில் முஸ்லிம்களிடம் தோற்றது. ஆனால், “ இது முதன் முறையல்ல, ஒரு சாந்தமான சமூகம் தீவிரத்தன்மை கொண்ட போக்கிரிகளிடம் வீழ்வது. நமது காலத்திலேயே லெனின், மா சே-துங், ஹிட்லர் போன்றோர் சமுதாயத்தை வெற்றி கொள்ளவில்லையா என்ன?” என்கிறார் சீதாராம் கோயல் (Goel: Hindu Temples Vol 2, 2nd ed., p.272).

நானறிந்த வரையில் மேலே சொன்ன விமர்சனங்களே இஸ்லாம் குறித்து உலகில் நிலவும் விமர்சனங்களுள் கடுமையானவை. கிறிஸ்துவ விமர்சகர்கள் என்னதான் இஸ்லாத்தை திட்டித் தீர்த்தாலும், அதன் ஏக இறைக் கோட்பாட்டை அவர்கள் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர். ஆனால், இந்த இந்து எழுத்தாளர்களுக்கு இப்படியான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லை. அது போன்று கிறிஸ்துவர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருக்கின்றது. முகம்மது அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வெளிப்பட்ட” கட்டளைகள் குறித்து திட்டினால், அவர்களது பழைய ஏற்பாடு சம்பந்தமான நம்பிக்கைகளையும் வேறு யாராவது கேள்விக்குள்ளாக்களாம். எனவே, என்னதான் “மரியாதையின்றியும்”, இதிகாச நம்பிக்கைகளை தகர்க்கிற விமர்சனங்களை நமது பத்திரிகைகளும், விமர்சகர்களும் இஸ்லாம் குறித்து முன்வைத்தாலும், இந்த இந்து-மீட்சியர் ஆய்ந்து உரைப்பது போன்ற  முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த கடுமையான விமர்சனங்களை ஏனையோர் முன்வைப்பதில்லை.

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குரான் வெளிப்பட்ட விதம் குறித்து சில புதிய கண்ணோட்டங்கள் ]

நவீன மேற்கத்திய அறிஞர்களும், ஏன் சில இஸ்லாமிய அறிஞர்களும் கூட குரான் வெளிப்பட்ட விதத்தைப் பற்றி ஆய்ந்து, அது அச்ச-மனப்பிறழ்வின் விளைவாக எழும் மனப்பிராந்திகளின் வெளிப்பாடு எனக்கருதுகின்றனர். இக்கட்டுரையில், இது குறித்து இடதுசாரி சிந்தனையாளரான மாக்ஸிம் ராடின்சனின் கருத்துக்கள் / பார்வைகளைக் காண்போம்.

உலகப் புகழ் பெற்ற பென்குவின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள மாக்ஸிம் ராடின்சனின் ஆய்வு நூலான "முகம்மது" வில், முகம்மது ஒரு பித்தலாட்டக்காரர் என்பதை தீர்க்கமாக அவர் மறுக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டு கிறிஸ்துவ மத-அரசியலாளர்களால் மட்டுமல்ல, முகம்மதுவை ஒரு முற்போக்காளராகக் காட்ட விரும்பும் இஸ்லாமிய-மதவாத சார்பு இடதுசாரி அறிஞர்களாலும்  முன்வைக்கப் படுகிறது. சமூக சீர்திருத்தத்தை, மதநம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த ஒரு பிற்போக்கான சமுதாயத்தாரிடையே வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவே கடவுளிடம் பேசுவதாக கட்டுக்கதைகளைக் கட்டி, அதன் மூலம் வெற்றிகரமாக தமது சீர்திருத்தக் கருத்துக்களை முகம்மது பரப்பினார் என இவர்கள் கருதுகின்றனர். ஆனால், ராடின்சன் இக்கருத்தை தீர்க்கமாக மறுக்கின்றார்:

"மனோதத்துவம் மற்றும் மனவியல் சம்பந்தமான நவீன முன்னேற்றங்கள், முகம்மது அவர்களின் வெளிப்பாடுகளை பித்தலாட்டம் என்று எளிமையாக மறுக்க வழி செய்கின்றன. ஆனால், இது போன்ற சில பித்தலாட்டங்கள் இருந்தாலும், முகம்மது விஷயத்தில் இது அதீதமான ஒரு முடிவு என்றே சொல்லமுடியும். ஏனென்றால் இது போன்ற மோடிமஸ்தான் வேலைகள் மிகக்குறைவாகவே நடைபெறுகின்றன. ஆனால், இப்போது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், பலர் இது போன்ற மனப்பிரமைகள் / கற்பனைக்குரல்கள் தமக்கு நிஜமாகவே கேட்பதாக/பார்ப்பதாக எண்ணக் கூடும். ஆனால் இது போன்ற தீவிரத்தன்மை கொண்ட நம்பிக்கைகள் ஒருவருக்கு இருப்பதால், இதெல்லாம் உண்மையென்றாகா".

அப்படியென்றால், எங்கிருந்து வெளிப்பட்டன இந்த குரான் வசனங்கள்? அவர் மேலும் விளக்குகிறார்:

"ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன (...) மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம். ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது."

ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது.

" ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை, கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன. இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன."

அவரது நபித்துவக்காலத்தின் இறுதி வரை (ஆரம்பக் காலங்கள் தவிர - இது பற்றி அடுத்த பாகத்தில் காணவுள்ளோம்) முகம்மது தமக்கு வெளிப்பட்ட தரிசனங்களும், குரல்களும் இறைத்தன்மை வாய்ந்தவை என்று உறுதியாக நம்பினார். சாதாரண மனிதர்கள் தாம் நேரில் காண்பவற்றை நம்புவதை விட, இந்த வஹி எனும் இறைஆவேச நிலையில் அவருக்கு வெளிப்பட்ட கருத்துக்களை மிகப்பெரிய உண்மைகள் என்று முகம்மது அவர்கள் தீவிரமாக நம்பினார்.

இக்காலத்தில் கூட மனநோய் மருத்துவமனைகளிலும், இறைக்குழுமங்களிலும் (cults) பலர் தமக்கு விண்ணிலிருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன என நம்புவதைக் காணமுடியும். இவர்களில் சிலர், இவையெல்லாம் உண்மை என பிறரையும் நம்பவைத்துவிடுவதைக் காணமுடிகிறது. கடவுளிடமிருந்து தமக்கொரு விசேஷ தொலைபேசித் தொடர்பு இருக்கிறது, அல்லது அமானுஷ்ய உலகோடு தமக்கு தொடர்பு இருக்கிறது என்று தமது அடியார்களை நம்பவைத்து அவர்களின் விசேஷ மரியாதைக்கும், அளப்பரிய அன்பிற்கும், பற்றிற்கும் உரித்தவர்களாக இவர்கள் ஆகிவிடுகின்றனர். இப்படி பிரமைகளில் சிக்குண்டு கிடக்கும் இவர்கள், பார்ப்பதற்கு பல சமயம் சாதாரணர்களாகவோ அல்லது ஒரு சில சமயங்களில் நார்மலான மனிதர்களைவிடவும் வெற்றிகரமானவர்களாகவோ கூட தென்படுவர்.

அதன்படியே, தமது தரிசனங்கள் மூலம் ஜோன் ஆ·ப் ஆர்க், தம்மைச் சுற்றியிருந்தோர் பிரிட்டிஷாரை எதிர்கொள்ளத் தகுந்த மனோசக்தியையும், நம்பிக்கையையும் ஊட்டினார். அதுபோன்றே, செங்கிஸ் கானும் இறைஆவேசங்களின் மூலம் மங்கோலிய நாடோடிகளின் தலைமைத் தெய்வமான தெங்க்ரியிடமிருந்து கிட்டிய இறைவசனங்களின் மூலம் தம்மைப் பின்பற்றும் ஒரு வலுவான கூட்டத்தை உருவாக்கி, தொடர்ந்த போர்களின் மூலம் பரந்து விரிந்து ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்த சாம்ராஜ்யம் அவருக்குப்பின் ஒருசில தலைமுறைகளிலேயே சிதறுண்டு வீழ்ந்தது. ஆனால், இந்த வகையில் நீடித்த வாழ்வு கொண்ட ஒரு மிகப்பெரிய மதவாத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முகம்மது   விண்குரல்களைக் கேட்டவர்களிலேயே வித்தியாசமானவராய், வெற்றிகரமானவராய் விளங்குகின்றார்.

ஆரம்பக்காலத்தில் வெளிப்பட்ட வசனங்கள் எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை, ஆனால் போகப் போக வெளிப்பட ஆரம்பித்த குரான் வசனங்களே முகம்மதுவின் சமகாலத்தவரிடையேயும், பிற்கால இஸ்லாமிய ஆய்வாளர்களிடையேயும் இந்த குரான் வெளிப்படும் இறை ஆவேசம் குறித்து ஐயங்கள் எழ காரணமாயின. இந்த தருணங்களில் குரான் வசனங்கள் வெளிப்பட்ட விதம், முகம்மதுக்கு மிக வசதியாய் அமைந்ததே காரணம். இதில் அனைவரும் நன்கு அறிந்த ஒரு உதாரணம், இத்தகைய இறை ஆவேச நிலையில் அல்லாஹ்விடமிருந்து முகம்மதுக்கு கிடைத்த மண உரிமை சம்பந்தமான வெளிப்பாடுகள்(revelations). இவற்றின் படி முகம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப்பை  அவர் மணந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அல்லாஹ்வின் வசனங்கள் வெளிப்பட்டன. அதுவரை அராபிய மக்களிடையே நிலவி வந்த வழக்க-விதிமுறைகளின் படி, இவ்வாறு வளர்ப்பு மகனின் மனைவியை, அந்த தத்தெடுத்த தந்தை மணந்து கொள்வது முறைகேடாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், தக்க தருணத்தில் வெளிப்பட்ட இறை வசனங்களின் மூலம்(திருக்குரான் வசனங்கள்- 33:37, 33:50) முகம்மதுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து அல்லாஹ் விலக்களித்தார். கிறிஸ்துவ மத-அரசியலாளர்கள் இந்த சம்பவத்தை முகம்மது அவர்களின் அடக்க முடியாக் காம உணர்வுகள் தொடர்பான மிகச்சிறந்த உதாரணமாகக் காட்டுகின்றனர். ஆனால், இது இஸ்லாமிய அடிப்படைக் கட்டுமானத்தை உடைக்கும் உதாரணம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில், உணர்ச்சித் தடுமாற்றங்கள் சாமான்ய மனித உணர்வு சம்பந்தப் பட்ட விஷயம் என்று பலர் புறந்தள்ளக் கூடும். ஆனால், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வஹி வெளிப்படுவது இஸ்லாத்தின் அடிப்படையையே ஐயுறவைக்கும் விஷயம் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை.
ராடின்ஸன் கூறுகிறார் :

" முதலில் நியாயமாக வெளிப்பட்ட இந்த இறை வசனங்கள், பிறகு தடுமாற ஆரம்பித்தன. ஏனெனில், பிறகு முகம்மது பல முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது. இவையாவும் ஆட்சியதிகாரம், சமயத்துக்கு தகுந்தாற்போன்று எடுக்க வேண்டிய முடிவுகள், சட்டச் சிக்கல்கள் ஆகியவை சம்பந்தப்பட்டவை. இவை சம்பந்தப்பட்ட அல்லாஹ்வின் கட்டளைகள் முகம்மதுவுக்கு ஆவேசம் வந்து அல்லாஹ்விடம் தொடர்பு ஏற்படும் வரை காத்திருக்கா. அவர் தொடர்ந்து பலவித முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஓய்வொழிச்சலில்லாமல் இவை அவரைப் பின் தொடர்ந்தன, அவரது வழிகாட்டல்கள் எதிர்நோக்கப் பட்ட நிலையில் கடவுளிடமிருந்து அவர்மூலம் வந்தடைந்த கட்டளைகள் அனைவரையும் அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்தன. இச்சூழலில் உண்மைகளை மெலிதாக வளைத்து சமயத்துக்கு தகுந்தாற்போல் வெளிப்பாடுகளை வெளியிடும் சஞ்சலத்திற்கு முகம்மது உள்ளானாரா? ஏனெனில் , ஒரு சில குரான் வசனங்கள் முகம்மதுவின் ஆசா பாசங்கள், கணக்கீடுகளோடு சரியாகப் பொருந்தியுள்ளன. இதை அவர் தெரிந்தே செய்தாரா, அல்லது அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள் இவைகளா? - இது குறித்த எந்தவித முடிவுக்கும் நம்மால் என்றும் வரமுடியாது என்றே தோன்றுகிறது"

இது போன்ற ஒருசில சந்தேகத்துக்கிடமான தருணங்களையும், வசனங்களையும் வைத்து முகம்மது குறித்த பொதுப்படையான முடிவுகளுக்கு நாம் வரமுடியாது: " சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது (...) ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது (...) இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின, குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன. இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோ·ப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."

முகம்மதுக்கு அடிக்கடி ஏற்பட்ட இந்த இறை ஆவேச நிலையைப் பற்றி நமக்கு எதாவது சந்தேகங்கள் இன்னமும் இருப்பின், அவற்றை தீர்த்து வைப்பது வஹி கிட்டிய ஆரம்பக் காலங்களில் இவை குறித்த முகம்மதுவின் கருத்துக்களே. ராடின்ஸன் கூறுகிறார்:

" முகம்மது எதோ திட்டம் போட்டு இவையெல்லாவற்றையும் செய்தார் என்று நாம் கருத இடமில்லை. ஏனெனில், அவருக்கு இந்த வெளிப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்போ அல்லது அத்தருணத்திலோ அவரது மனதில் ஏற்பட்ட ஐயங்கள், சஞ்சலங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறித்த துல்லியமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நிகழ்ந்தன என்றே கருத இடமிருக்கின்ற நிலையில், முகம்மதுவின் ஆன்மீக உயர்நிலையைப் பற்றி கூறவிழைந்த பாரம்பர்யங்கள் இது போன்ற சாமான்ய மனித உணர்வு சம்பந்தப்பட்ட சம்பவங்களை இடையில் இட்டுக்கட்டி சேர்த்திருக்க வாய்ப்பேயில்லை".

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் வெளிப்பட்ட இறை-ஆவேசநிலை குறித்து முகம்மதுவுக்கே எழுந்த ஐயங்கள் ]

குரான் வெளிப்பட்ட விதம் குறித்து உலகிலேயே முதன்முதலாய் சந்தேகம் கொண்ட நபர் வேறு யாருமல்ல, முகம்மதுவேதான். அவரது நபித்துவத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் அவருக்கே தமக்கேற்படும் இந்த இறையுணர்வு நிலை குறித்த சந்தேகங்கள் இருந்தன.

கி.பி 610ம் ஆண்டு, மெக்கா நகருக்கு வெளியே தங்கி ஆன்மீகப் பாதையில் நடைபோட முயற்சித்துக் கொண்டிருந்த முகம்மதுவுக்கு, அவரே சற்றும் எதிர்பாராதவிதமாக ஒருசில தோற்றங்களும், குரல்களும் கேட்க ஆரம்பித்தன. காப்பிரியேல் எனும் தேவதூதனின் ஆவியானது விஸ்வரூப தோற்றமளித்து, "ஓது" என்று கட்டளையிட்டது. இந்த முதல் 'வெளிப்பாடை'த் தொடர்ந்து, தமக்கு மனநோய் தோன்றிவிட்டது அல்லது பேய்பிடித்துக் கொண்டது என்றே முகம்மது எண்ணினார்.

இத்தகைய திடீர்த் தோற்றங்களினாலும், விண்-குரல்களினாலும் மிகுந்த மனசஞ்சலமடைந்து, வாழ்நாளின் ஏனைய பகுதிகளையெல்லாம் மெக்கா நகரின் முட்டாளாக கழிக்க விரும்பாத அவர், மலை மீதிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்: "இப்படிப்பட்ட சூழலில், உலகிலேயே நான் மிகவும் வெறுத்ததெல்லாம் இது போன்றதொரு ஆவேச நிலையடையும் கவிஞன் அல்லது ஆவியின் ஆளுமைக்குட்பட்ட மனிதனையே. இனி நாசமாய்ப் போவேனாக என்று நினைத்துக் கொண்டேன். பேய் பிடித்தவன் அல்லது
பித்துக்கவிஞனென்று எனை குரைஷிகள் கூற அனுமதியேன்! மலைமுகட்டிலிருந்து சீறிப்பாய்ந்து எனதுயிர் துறப்பேன், இந்தத் துயரநிலையிலிருந்து விடுதலை பெறுவேன்" (Ibn Ishaq’s Sirat Rasul Allah, tra. Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, p.106/153)

முகம்மது மட்டும் இந்த முடிவில் உறுதியாய் நின்று, இந்த முடிவை நிறைவேற்றியிருந்தாரெனில், இஸ்லாத்தின் வரலாறு அத்தோடு முடிவுக்கு வந்திருக்கும், துர்-ஆவி என அவர் கருதியதன் ஆளுமையிலிருந்து முகம்மதுவுக்கும் விடுதலை கிட்டியிருக்கும். ஆனால், அவரை இந்த முடிவிலிருந்து மாற்ற அந்த ஆவியே அவருக்குத் துணை புரிந்தது.

முகம்மது கூறுகின்றார்: "ஆகவே, இந்த முடிவை நிறைவேற்றும் வண்ணம் நான் மேலே செல்லலானேன். அப்போது பாதிவழியில், விண்ணிலிருந்து ஒரு அசரீரி எழுந்தது. 'ஓ முகம்மதுவே! நீரே அல்லாஹ்வின் தூதன், நான்தான் கேபிரியேல்" (மேலே கண்ட நூல்).

இந்த தோற்றங்கள் அவருக்கு திரும்பத்திரும்ப ஏற்பட்டன. இப்படித் திரும்பத்திரும்ப ஏற்பட்ட தரிசனங்கள் முகம்மதுவுக்கு அவரது மனநிலை குறித்த ஐயங்களைத் தெளிவிக்கப் போதுமானவையாக இருந்தனவா என்பதை நாம் அறியோம். ஆனால், இதைவிட முக்கியமான ஒரு விஷயம் இத்தருணத்தில் அவருக்குத் துணை நின்றது: "அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன், முன்னேயும் செல்லாமல் பின்னேயும் போகாமல். அத்தருணத்தில் கதீஜா தம்முடையா ஆட்களை மெக்கா நகருக்கு வெளியே அனுப்பி என்னைத் தேடிப் பிடித்து
அழைத்துவருமாறு பணித்தாள். இந்நிலையில், அவர் (கேபிரியேல்) என்னிடமிருந்து பிரிந்தார், நானும் அவரிடமிருந்து மீண்டேன்" (மேலே கண்ட அதே நூல்).

இத்தகைய 'வெளிப்பாடுகள்' அடிக்கடி தொடர்ந்து ஏற்பட ஆரம்பித்த நிலையில், முகம்மதுவின் மனைவியான கதீஜாதான் அவரை ஆறுதல்படுத்தி, அவருக்கு ஏற்படும் இறை-ஆவேச நிலைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கினார். பிற்காலத்திலும் கூட ஏனையோர் முகம்மதுவைக் குறித்து சந்தேகம் கொண்டபோதுகூட கதீஜா அவருக்கு உறுதுணையாக இருந்து உதவினார்: "அவரின் (கதீஜா) மூலம் கடவுள் தம்முடைய நபியின் மனப்பாரத்தைக் குறைத்தார். இம்மாதிரி புறத்தே தூற்றப்பட்டாலும், வீடு
திரும்பியதும் (கதீஜா மூலமாக) இறைவன் அவருக்கு ஆறுதலை அளித்தார். (கதீஜா) அவரை ஆசுவாசப்படுத்தி, மனப்பாரத்தைக் குறைத்து, அவர் (முகம்மது) கண்ட சத்தியத்தை முன்மொழிந்து, எதிர்ப்புகளை உதாசீனப்படுத்தும் உள்ள வலுவை (முகம்மதுவுக்கு) ஊட்டினார்" (மேலே கண்ட அதே நூல்:111/155)

இதையெல்லாம் விடவும் (கதீஜாவின்) முக்கியமானதொரு பங்களிப்பு என்னவென்றால், முகம்மதுவுக்கே தமக்கு ஏற்படும் இந்த இறையாவேசநிலை குறித்த சந்தேகங்கள் இருந்த நேரத்தில், கதீஜா அவருக்கு தெம்பை ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்தார்.

கதீஜா, முகம்மதுவுக்கு நம்பிக்கையை ஊட்டியவிதம் இவ்வாறிருந்தது. (முதல் வஹிக்குப் பிறகு) முகம்மது வீடு திரும்பியபோது கதீஜாவிடம் கூறினார்: "கவியான அல்லது பேய் பீடித்த நான் நாசமாய்ப் போவேனாக!". ஆனால் கதீஜாவோ, "காசிமின் தந்தையே (முகம்மதுவின் முதல் மகனின் பெயர் காசிம்) கடவுளிடம் நான் தஞ்சமடைகின்றேன்! எனதன்பே, இது அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. கடவுள் உம்மை அந்த நிலைக்குத் தள்ள மாட்டார். உமது நேர்மை, நம்பகத்தன்மை, நற்பண்புகள், காருண்யம் ஆகியவற்றை
கடவுள் அறிவார். உண்மையிலேயே நீவிர் எதையாவது கண்டிருக்கக் கூடும்" என்று கூறினார். அதற்கு முகம்மது : "ஆம், எதையோ கண்டது நிஜம்தான்" என்று பதிலளித்தார்.
(மேலே கண்ட அதே நூல்:106/153)

நிச்சயமாக முகம்மது எதையோ கண்டார். அதாவது, புலன்களின் வழி தகவல்களைச் சேகரித்து தோற்றங்களையும், குரல்களையும் தோற்றுவிக்கத் துணைபுரியும் புலனுணர்வு நரம்புகள் பலவித தகவல்களை அவரது மூளைக்கு அனுப்பின. ஆனால், இவையெல்லாம் நரம்பு மண்டலத்தின் பொய்த்தகவல்களா அல்லது அந்தக்கால நம்பிக்கைகளின்படி பேய் பிடித்ததன் விளைவா? கதீஜாவும் அவரது ஒன்றுவிட்ட (கிறிஸ்துவச்)சகோதரர் வராக்கா பின் நவ்·பாலும் முகம்மதுவுக்கு கிட்டியவை நிஜமான ஆன்மீக தரிசனங்கள், அவருக்கு நபித்துவம் கடவுளால்
வழங்கப் பட்டுவிட்டது என்றே நம்பினர். ஆனால், முகம்மதுவுக்கோ இது சம்பந்தமாக சந்தேகங்களும், பெரும் சஞ்சலங்களும் இருந்தன. நல்லகாலமாக முகம்மதுவின் அன்பு மனைவிக்கு ஓர் உபாயம் தென்பட்டது. இந்த உபாயத்தின் மூலம், அவருக்குக் கிட்டிய வஹியைச் சோதித்து, அது ஆன்மீக மேலுணர்வே என்ற நம்பிக்கையை, அவரது நபித்துவத்தின் பாதையில் பயணிக்கும் உள்ளத் துணிவை, முகம்மதுவுக்கு கதீஜா அளித்தார்.

அடுத்தமுறை முகம்மதுவுக்குள் அமானுடக்குரல் கேட்கும்போது தம்மிடம் சொல்லுமாறும், பின்னர் அது தேவன் காப்ரியேலா அல்லது வேறு ஏதாவது வழக்கமான பிசாசா என்று முடிவு செய்வோம் என்றும் அவர் முகம்மதுவைக் கேட்டுக் கொண்டார். அப்படியே மறுமுறை முகம்மதுவுக்கு கேப்ரியேலின் தரிசனம் கிட்டியவுடன் "இதோ கேப்ரியேல் வந்துவிட்டார்" என்று கதீஜாவை உடன் அழைத்தார்.  "எழுந்திரும் என் மாமன் மகனே!" என்று அவரை எழுப்பிய கதீஜா, "எழுந்து என் இடத்தொடைப் பக்கம் அமர்வீராக" என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. "என்ன இன்னும் அவரைக் காண்கீறாரா" என்று கேட்க "ஆம்" என்றார் முகம்மது. "சரி, இப்போது வலத்தொடைப் பக்கம் வந்தமர்வீராக!" என்று சொல்லி "இன்னும் உள்ளாரா?" என்று கேட்க "ஆம்" என்று பதில் சொன்னார் முகம்மது.

பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முகம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் கேப்ரியேலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா மேல்திரையை விலக்கினார். தம் வடிவை வெளிக்காட்டி "இப்போது காண்கிறீரா?" என்று கேட்க "இல்லை" என்றார் முகம்மது. "மகிழ்வீர் என் மாமன் மகனே! நீங்கள் கண்டது தேவனையே, சாத்தானை அல்ல!" என்று உறுதி செய்தார் கதீஜா. (மேலே கண்ட அதே நூல்: 107/154)

முகம்மதுவின் பார்வைக்கு மட்டுமே தேவன் தோன்றி மறைந்த கதை இப்படிச் சொல்லப் படுகிறது. இதைத் தொடர்ந்து வர்ணிக்கும் இஷாக் இது குறித்து இரண்டாவதாகச் சொல்லப்படும் வழக்கையும் சேர்த்துச் சொல்கிறார். கதீஜாவின் மகள் பாத்திமா, அவர் மகன் ஹூசேன், ஹூசேனின் மகள் பாத்திமா, அவர் மகன் அப்துல்லா மூலம் சொல்லப்படுவது மேலும் விளக்கமாய் இருக்கிறது. அதன்படி கதீஜா நபியவர்களை உறவு கொள்ள அழைத்ததாகவும், உடன் கேப்ரியேல் விலகிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அதைக் கேட்ட கதீஜா "இது உண்மையில் தேவனேயன்றி சாத்தானில்லை" என்று அறிவிக்கிறார். (அதே நூல்)

அக்கால நம்பிக்கைப்படி, முகம்மது கண்டது இச்சை மிகுந்த துர்தேவதையாய் இருக்குமாயின் அது கதீஜாவுடன் உறவு கொள்வதைக் கண்டு நின்று சுகித்திருக்கும் என்றும், உலகவாழ்வைத் துறந்த தேவனுக்கு இக்காட்சியில் விருப்பமில்லாமல் நகர்ந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

மனைவி நடத்திய இந்தச் சோதனையின் மூலம் தாம் கண்டது தேவனையா என்ற முகம்மதின் சந்தேகம் தீர்ந்தது. இதன்மூலம் தாமே இறைவனின் பிரத்யேகப் பிரதிநிதி என்று நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய முகம்மது பின்னர் தொடர்ந்து கேப்ரியேலின் செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இவை ஓர் உதவியாளரால் தொகுக்கப்பட்டுப் பின்னர் குரான் என்ற புத்தகமானது. இதன் பின்னரும் ஒருமுறை மீண்டும் இந்தச் 'சாத்தானின் உரையோ' என்ற சந்தேகம் எழுந்தது.  அதையும் பார்ப்போம்.

மெக்காவாழ் மக்கள் தம் நபித்துவத்தை, தாம் பெற்ற இறைவசனங்களைத் தொடர்ந்து மறுத்து வருவதைக் கண்ட முகம்மது அவர்களைத் தம்பக்கம் திருப்ப ஒருவழியைக் கண்டுபிடித்தார். இறைவனைப் பன்முகங்களில் வழிபட்டுவந்த மெக்காவாழ் மக்களைத் தம்பக்கம் திருப்ப 'அல்லாஹ்வைத் தவிர வேறிறையில்லை' என்ற தம் அடிப்படைச் சித்தாந்தத்தையே கொஞ்சம் விட்டுக் கொடுப்போமே என்று முகம்மது முடிவு செய்த நேரமது.

மெக்காவாழ் பூர்வகுடிமக்களான பாகன்மாரை சகிப்புத்தன்மையற்ற வெறியர்கள் என்றும், முகம்மதுவின் புதுமைக் கண்டுபிடிப்பான 'ஒரேவழியினை' ஒதுக்கித் தள்ளியவர்கள் என்றும் தற்காலத்திய வரலாற்றுவாதியர் சொல்வதற்கு மாறாக, அவர்கள் எல்லாவழிகளையும் அரவணைத்துச் செல்பவராகவும், இக்காலத்திய இந்தியர்களின் பாஷையில் சொல்வதென்றால்  உண்மையில் 'செக்யுலரா'கவும் இருந்தனர்.

அவர்களின் புராதன ஆலயமான காபாவுக்கு வெளியே நடந்த ஒரு சந்திப்பில் முகம்மதுவிடம் ஒரு சமரசத்திட்டத்தையும் கொண்டு வந்தனர். "வாருங்கள், தாங்கள் தொழுவதை நாங்கள் தொழுகிறோம். நாங்கள் தொழுவதைத் தாங்களும் ஏற்பீர்! நாம் இப்படி இணைவோம்!" (மேலே கண்ட அதே நூல்:165/239) என்றனர். மேலும் முகம்மதுவால் தம் வழியின் உயர்வினை நிரூபிக்க முடியுமென்றால் அதையும் தாங்கள் ஏற்பதாகச் சம்மதித்தனர். "தாங்கள் தொழுவது நாங்கள் தொழுவதைவிட மேன்மையானது என்றால், அக்கூறுகளையும் ஏற்போம்; அல்லது நாங்கள் தொழுவது மேன்மையானது என்றால் அதன் கூறுகளையும் உங்கள் மார்க்கத்தில் கொள்வீராக!" (மேற்சொன்ன நூல்)

அத்தருணத்தில்தான் முகம்மதுவுக்கு இப்படி விட்டுக்கொடுக்கும் போக்கையும், யாதொரு பன்முகத்தன்மையையும் நிராகரிக்கும் 'வெளிப்பாடு' தோன்றியது. "சொல்வீர், ஓ நம்பிக்கை அற்றவர்களே, நீங்கள் தொழுவதை நான் தொழவில்லை; நான் தொழுவதை நீங்கள் தொழவில்லை. மேலும் நீங்கள் தொழுது வருவதை நான் தொழவும் மாட்டேன். நான் தொழுவதை நீங்களும் தொழப் போவதில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு!" (திருக்குரான் வசனம் - 109)

பிறிதொரு சந்தர்ப்பத்தில் மெக்காவாழ் பூர்வகுடியினர் முகம்மதுவின் பெரிய தந்தையார் இறக்கும் தருணம், அவர் படுக்கையைச் சூழ்ந்துகொண்டு சமரசமாய்ப் போவோமென வேண்டிக் கேட்கையில் (அவர் மார்க்கத்தை அவர் கடைபிடிக்கட்டும்; நாங்கள் எங்களின் வழியே செல்ல வேண்டுகிறோம்) முகம்மது அத்திட்டத்தை முற்றாய் நிராகரித்து, தம் 'ஒரேவழி'க் கோட்பாட்டையும், தம் நபித்துவத்தையும் அவர்கள் ஏற்பதைத் தவிர வேறுவழியே இல்லையென்றும் சொல்லி விட்டார். (மேற்சொன்ன நூல்: 191/278)

ஆயினும் ஒரு கட்டத்தில் மெக்கன்மாரை எப்படியாவது தம் ஒரேவழிப் பாதையில் திருப்ப சற்றே நிபந்தனைகளைத் தளர்த்தினார் முகம்மது. மெக்காவாழ் பாகன்மாரிடையே மிகப்பிரபலமாய் இருந்த அல்-லாத், அல்-உஸா, மனாத் என்ற முப்பெரும் தேவியரை ஏற்றுக்கொள்ளவும் திடீரென்று சம்மதித்தார். உடன் ஒரு 'வெளிப்பாடும்' விண்ணிலிருந்து தோன்றியது அவருக்கு. "அல்-லாத், அல்-உஸா மற்றும் மூன்றாவதான மனாத் ஆகியோரைப் பற்றி யோசித்தாயா? அவர்கள் விண்ணுலகின் அன்னங்கள், அவர்களது பரிந்துரை (அல்லாஹ்வால்) ஏற்கப்படும்( ஆதலால் அவர்களின் வழிபாடும் ஏற்புடைத்ததே!)" (மேற்சொன்ன நூல் 165/239)

அவ்வளவுதான். மெக்கன்மாருக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது. தாம் வணங்கும் தேவியர் அல்லாஹ்வுடன் சேர்ந்திருப்போரே என்ற இறைத்தகவல் கேட்டு இஸ்லாமியர்களுடன் சேர்ந்தே தொழுதனர். அவர்கள் இஸ்லாத்துக்கே மாறி விட்டதாகவும் செய்தி பரவியது. 

பாகன்மாரின் உற்சாகம் நெடுநேரம் நீடிக்கவில்லை. முகம்மதுவுக்கு மேலும் ஒரு வெளிப்பாடு இறங்கி வந்தது. அவர் சாத்தானால் இப்படி ஏமாற்றப் பட்டதாகவும், தேவியரை வணங்கும் வரிகளைச் சாத்தான், வஹியின் வழியே வழக்கமான குரான் வெளிப்பாடு போல் தோன்றும்படி இடைச்செருகி விட்டதாகவும் சொன்னது அந்த இறைவசனம்.

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். " (திருக்குரான் வசனம் - 22:52 மற்றும் மேற்சொன்ன நூல்: 166/239)

இதன் பின்னர் குரானில் கேப்ரியேல் வாக்காகத் திருத்தப்பட்ட வசனமும் எழுந்தது.

"நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?) உங்களுக்கு (மட்டும்) ஆண் சந்ததி, அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததியா? அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.  இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை¢ நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை¢ நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்¢ எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது." (திருக்குரான் வசனம் - 53:19-23)

இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டாலும், முகம்மதைச் சார்ந்த சிலரே எப்படி இவ்வளவு கவனக்குறைவாய் இருக்க நேர்ந்தது என்று எழுப்பிய சந்தேகத்தையும் கடந்து சென்றாலும், இங்கே கூர்ந்து கவனிப்போருக்கு ஒரு கேள்வி எழும்: முகம்மது இப்படி சாத்தானால் இந்த இடத்தில் ஏமாற்றப்பட்டார் என்றால், மற்ற வசனங்களிலும் எதுவுமே அப்படி இல்லையா என்று.

இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பாய்ந்துவரும் இஸ்லாமியப் பரிந்துரையாளர் வழக்கமாய்ச் சொல்வது மேற்சொன்ன நிகழ்ச்சியில் வருவதுபோல் இறைவனோ, கேப்ரியேலோ எவை உண்மை வசனங்கள் என்று தெளிவுபடுத்துவார் என்று. இப்படி ஒரு வசனத்தை உறுதிப்படுத்த அதே முகம்மது வழியாக அடுத்து ஒரு வசனம் இறங்கிவர
வேண்டியிருக்கிறது போலும்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முகம்மது தாம் இப்படிச் சாத்தானால் ஏமாற்றப்பட்ட குறுகிய காலத்தில் மிகவும் வருந்தியதையும், இறைநடுக்கத்தில் இருந்ததையும் (மேற்சொன்ன நூல்: 166/239) புரிந்து கொள்ள முடிகிறது. மெய்யான இறைவாக்கையே பதிவுசெய்ய வேண்டும் அவர் முயன்றிருப்பதும் தெரிகிறது. ஆனால், எப்போது கதீஜாவின் மடியில் அமர்ந்து காப்ரியேலின் குரலையும், தோற்றத்தையும் கான்பதை வைத்து அது நல்ல சக்தியின் தோன்டுதலா அல்லது தீய சக்தியின் திசை மாற்றலா என்று முடிவு செய்தாரோ, அப்போதே முகம்மதுவின் 'வெளிப்பாடுகளிலிருந்து' பகுத்தறிவு விடை பெற்றுக்கொண்டது என்ற முடிவுக்கே நாம் வர வேன்டியிருக்கின்றது.

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குரான் வெளிப்பட்ட ஆவேச நிலை குறித்த யோகியர்/சித்தர் பார்வை ]

முகம்மதின் இறை-வேச நிலைக்கு தரவாய் எழும் 'கலாச்சாரத் தொடர்புத்தன்மை' குறித்தான வாதங்கள்
 
மனோதத்துவக் கோட்பாடுகளுள் ஒரு பிரிவு உண்டு. இன்றைக்கு அது வலுவிழந்து நின்றாலும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மிக வலுவானதாய் விளங்கிய அக்கோட்பாட்டின் படி, முற்றிலும் மாறுபட்ட ஒரு கலாச்சார, காலத்தய மனிதர்களின் உளவியல் குறித்து இன்றைய தேதியில் நிலவும் நாகரிக கோட்பாடுகளை வைத்துக் கொண்டு ¬ஆய்வு செய்வது தவறு, அது 'கலாச்சார மேட்டிமை'யின் குறியீடாக விளங்குகிறது என்பதாம். ஆகவே, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரபி குறித்த இன்றைய உளவியல் ஆய்வுகள், அலசல்கள் குறித்த வாதங்களை பொதுமக்களிடம் முன்வைக்கும்போது அது நமது கலாச்சார மேட்டிமையின் குறியீடாகக் கொள்ளப் படுகிறது. இன்றைய அளவுகோள்களை வைத்து ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு முற்றிலும் வித்தியாசமான காலகட்டத்தில், கலாச்சார சூழலில் வாழ்ந்த ஒருவரது உளவியலை நாம் கணிக்க முடியாது என்பதான வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. அதிலும் மனோதத்துவம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதோரிடையே இத்தகைய வாதங்கள் இன்று மிகவும் பிரபலம்: பின்நவீனத்துவ அறிவுஜீவிகள், மற்றைய கலாச்சாரங்களின் நபர்கள் பற்றி தீர்மாணிப்பதை தவிர்க்கின்றனர்.

ஆகவே, இம்மாதிரியான ஆவேச 'சாமியாடல்கள்' மற்றும் கடவுளிடம் ஆவேச நிலையில் பேசுதல்கள், குறி சொல்தல்கள் ஆகியன பல கலாச்சாரங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகின்றன என்பதே இதுபோன்றோரின் வாதமாக உள்ளது. இதன்படி, ஷமன்கள் ஆவியுலகத்துடன் ஆவேச நிலையில் தொடர்பு கொண்டது போன்றே முகம்மதுவும் வஹி மூலமாக கடவுளிடம் தொடர்பு கொண்டார் என்ற நியாயப் படுத்துதலும் இதற்கு கிட்டுகிறது. முகம்மதின் வஹியை ஒரு கோடங்கியின் சாமியாடல்கள் என்று அழைப்பது, அவரது 'இறுதி நபி' என்கின்ற ஏகோபித்த பட்டத்திற்கு பின்னடைவே என்றாலும், அவருக்கு 'மனப்பிறழ்வு' ஏற்பட்டிருந்தது, 'சித்தப் பிரமை' பிடித்திருந்தது, 'கற்பனைக் குரல்களை' கேட்டார் போன்று சொல்வதை விட உயர்வானதாகவே தென்படுகிறது. ஜார்ஜ் பியூவர்ஸ்டீன்(Holy Madness, Arkana Books 1992, மதத்திற்கும் மனதின் பிறழ்வுகளுக்குமான தொடர்பை விவரிக்கும் புத்தகம் இது) முகம்மதை ஒரு முனி என்றே கருதி அவருக்கு உயரிய இடத்தை வழங்குகிறார் தமது நூலில்.

ஆனாலும்,  கலாச்சாரத் தொடர்புத்தன்மை குறித்தான வாதங்களை இதுபோன்ற முன்நவீனக் கலாச்சாரங்களின் அறிஞர்களே மறுத்து விடுகின்றனர். இன்றைக்கு நாம் மனப்பிறழ்வாய் கருதும் சில அடையாளங்கள் பழைய கலாச்சாரங்களில் ஆன்மீக வெளிப்பாட்டின் குறியீடுகளாக பார்க்கப் பட்டன என்று கருதுவது தவறு என்றும், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மனநோய் சம்பந்தமான சொற்களான மானியா, பருனோயு(paranoia) போன்றவை அந்தக் கால கிரேக்கர்கள் நமக்குத் தந்துவிட்டுச் சென்றவைதாம் என்பதை நமக்கு இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (இந்திய)ஆயுர்வேத, திபெத்திய மருத்துவ பழைய நூல்களில் மனநோய்களுக்கான மருத்துவ முறைகள் விவரிக்கப் பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், மனநோய் சம்பந்தமான கருத்துக்கள் இல்லாத பழைய கலாச்சாரங்களே இல்லை எனலாம். நாம் எடுத்துக்கொண்ட இவ்விஷயத்தில், அரபியருக்கு மனோதத்துவம் பற்றிய அறிவு ஏழாம் நூற்றாண்டிலேயே இருந்தது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியவில்லை என்றாலும், முகம்மதுவின் மன ஆரோக்கியத்துக்கு என்னவோ ஆயிற்று என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதை நம்மால் காண முடிகிறது.
நமது கடந்த கட்டுரையில் முகம்மதுவே ஆரம்பக் காலங்களில் தமக்கு ஏற்படும் வெளிப்பாடுகள் குறித்த நம்பிக்கையின்மையையும், தமது மனப்பிறழ்வு குறித்த ஆரோக்கியச் சிந்தனைகளையும் கொண்டிருந்தார் என்பதைக் கண்டோம். அவரது முதல் மனைவியான கதீஜாதான் இந்தமாதிரி அவருக்கு கிபி 610லிருந்து தொடர்ந்து ஏற்பட்ட ஆவேச நிலைகளையும், விண்குரல் அனுபவங்களையும் பற்றிய சஞ்சலங்களைத் தெளிவித்து அவருடைய நபித்துவம் பற்றிய நம்பிக்கைகளை அவர் மனதில் விதைத்தார். அதேசமயத்தில் பெரும்பாலான மக்கா நகரவாசிகள் இது குறித்து அவநம்பிக்கை கொண்டு, முகம்மது நபி அடிக்கடி செவிமடுப்பது கடவுளின் குரல்கள், கட்டளைகள் என்பதை நம்ப மறுத்துவந்தனர். இன்றைக்கு இருக்கும் நவீன காலனி மனோபாவ மனோதத்துவ நிபுனர்கள் அவர்களது மனதில் இப்படியான சந்தேகங்களுக்கு வித்திடவில்லை, மாறாக அதே கலாச்சாரப் பிண்ணனியில், அதே காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களே முகம்மதுவிற்கு அடிக்கடி ஏற்படும் இறை-ஆவேச நிலை, அந்நிலையில் அவர் மூலம் வெளிப்படும் கடவுளின் குரல்கள் போன்றவை குறித்த இப்படியான சந்தேகங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்த சூழலின் பின்புலத்திலேயே முகம்மதுவுக்கு ஏற்படும் இந்நிலை குறித்த தமது மறுப்புக்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.
 
குரானிலேயே ஒரு டஜனுக்கு மேற்பட்ட இடங்களில் முகம்மது அல்லது ' அவர் கேட்ட அமானுடக் குரல்' இப்படியான கூற்றுக்கள்(அதாவது முகம்மதுவுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது, பிசாசின் ஆளுமைக்குள்ளானவர் அவர் போன்றவை) குறித்து அவருக்கு 'எச்சரித்துள்ளதையும்', இம்மாதிரியான கருத்துக்களுக்கு எதிராக அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்க்கும் போதித்துள்ளதையும் காணமுடிகிறது. இது இந்த பத்து குரான் வசனங்களில் தெள்ளத் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது: 15:6,23:70/72,34:8,34:46/45, 37:36/35, 44:14/13, 52:29, 68:2, 68:51, 81:22. இது போன்று:” 'அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள” (குரான் 23:70)
 
இது மட்டுமல்லாது, பிசாசின் ஆளுமைக்குள்ளானவர்கள் என்று குற்றம் சாட்டப் பட்ட பல பழைய ஏற்பாட்டின் இறைத்தூதர்கள் சம்பந்தமாகவும் முகம்மது குறிப்பிடுகின்றார்: முன்னால் வாழ்ந்த நபிமார்கள் குறித்து பொதுவாக குரான் வசனம் 51:52ல்("இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.  "), நூஹ்(நோவா) 23:25, மூஸா(மோஸஸ்) 26:27/26 மற்றும் 51:39. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பைபிளில் எங்குமே இப்படியான குறிப்புகள் இந்த நபிமார்களைப் பற்றி குறிப்பிடப் படவில்லை( பைபிள் ஹொசியு ஒரு நபியைப் பற்றிய இம்மாதிரியான குற்றச் சாட்டைக் குறிப்பிடுகிறது: "தேவ வியின் நபராகிய இவருக்கு பைத்தியக்காரப்பட்டம் கட்டுகின்றனர் இவர்கள், இவர்களின் குற்றவுணர்வைப் போன்றே வலுவானது இவர்களின் எதிர்ப்பு" ஹொசியு 9:7, ஆனால் இந்த நபி பற்றி முகம்மதுவுக்கு எதுவுமே தெரியாது). பைபிளைப் பற்றி மேலோட்டமான விபரங்களை மட்டுமே அறிந்து வைத்திருந்த முகம்மது, இம்மாதிரியான குறைபாடுடைய கூற்றுக்களின் மூலம் தமது பரிதாப நிலைக்கு மற்ற நபிமார்களைத் துணைக்கழைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது.
 
ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தோமானால், அந்தக் கால அரபியர் ஒன்றும் மனவியல் நிபுனர்கள் அல்ல, ஆனால் முகம்மதுவின் மனதில் எதோ கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் அவர்களால் திட்டவட்டமாக உணர முடிந்தது. ஒரு சில இடங்களில், முகம்மது அதிகாரத்தை குறிவைத்து செயல்படும் அதீதக் கற்பனையுடைய ஒரு கவிஞர் என்ற கூற்றையும் அவர்கள் உரைத்திருப்பது இந்த குரான் வசனங்கள் மூலம் தெளிவாகிறது: 21:5,36:69,37:36/35, 52:30, உதாரணமாக:'இவை கலப்படமான கனவுகள்" இல்லை, 'அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, 'இவர் ஒரு கவிஞர்தாம்" (21:5). முகம்மது ஒரு சூனியக்காரர் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது:17:47, 25:8. இதை எதிர்கொள்ளும் விதமாக (மதம்மாறா) அரபியருக்குத்தான் மதிமயங்கிவிட்டது என்று முகம்மது கூறியுள்ளதையும் காணமுடிகிறது(23:89), ஆனால் பெரும்பாலும் முகம்மது பைபிளில் காணும் நபிகளின் மீது பொதுமக்கள் கூறிய(கூறப்பட்டதாக தாம் கூறும்) குற்றச்சாட்டுகளையே தமக்கு சாதகமாக துணைக்கு அழைத்துக் கொள்வதையே நாம் காணமுடிகிறது: மோஸஸ்17:107/108, ஸூயப்(Shu'aib) 26:185, ஸாலீஹ் 26:153.

"எனக்கு முன்னாள் வந்து சென்ற உண்மையான நபிமார்களை நீங்களெல்லாம் புறக்கணித்து பைத்தியக்காரன், சூனியக்காரன் என்று சொன்னது போலவே என்னையும் சொல்கின்றீர்கள்" என்ற முகம்மதின் வாதம், அவரது நபித்துவத்தை ஏற்காதவர்களின் வாதத்தை புரட்டிப் பொட்டு அதுவே நபித்துவத்திற்கான அத்தாட்சி என்பது போல கெட்டிக்காரத்தனமாக மாற்றிவிட்டது. நாலுபேர் சந்தேகித்தால், நார்மலான சாமான்ய மனிதர்களுக்கு தம்மைப் பற்றியே சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால், முகம்மதுவோ இப்படி எண்ணலானார்: என்னைப் பார்த்து இவர்களெல்லாம் பைத்தியக்காரர், சூனியக்காரர், பித்தலாட்டக்காரர், பொய்யர், கபட நாடகதாரி என்றெல்லாம் கூறுவதிலிருந்தே நான் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு, உயர்ந்த ஸ்தானத்தை உடைய கடவுளின் தூதர் என்பது புலனாகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள நோவா, மோஸஸ் போன்ற மிக உயர்ந்த நபிகளுடன் நானும் உயர்ந்து நிற்கின்றேன்.
 
ஆனால், அறிவியல் நோக்குடன் ழ்ந்து கவனிப்பவர்களுக்கு தமது மன நிலை குறித்த எதிர்மறை கருத்துக்களை இப்படிப் புரட்டிப் போட்டு தமக்குச் சாதகமாய் புரிந்து கொண்டதும், பிரச்சாரம் செய்ததும் பகுத்தறிவுக்கொவ்வா மனநிலையை,  அறிவுபூர்வமாக விளக்குவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் மிக மேம்போக்கான சப்பைக் கட்டே.

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1) ]

வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை

முகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1)

முகம்மது முதன்முதலாக தமது கருத்துக்களை வெளியிடத் துவங்கிய போதே, அவரது நபித்துவ-மனப்பிறழ்வுக்கான மனோரீதியான காரணங்களை ஆய முற்பட்டு, அவரது மனநலம் குறித்த ஐயங்களை சுற்றியிருந்தோர் வெளிப்படுத்தத் துவங்கினர். இம்மாதிரி வெளிப்படுத்தப் பட்ட கருத்துக்களுள், கிறிஸ்துவ மத-அரசியலார் தெரிவித்த ஒரு அபிப்ராயமானது முகம்மது வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர் என்பது. இதற்கு ஆதாரமாக, அவருக்கு வாயில் நுரை தள்ளி, தரையில் விழுந்து உதைத்துக் கொண்டார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்ந்து, பதிவு செய்து விட்டுப் போயுள்ள சம்பவங்களை காண்பிக்கின்றனர், இவர்கள். இது ஒரு குறிப்பிடத் தக்க யூகமே. ஆனால், இம்மாதிரி வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர்கள் தமக்கு கடவுளால் அனுப்பப்பட்ட ஆவிகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், காதில் குரல்கள் கேட்பதாகவும், பிம்பங்கள் கண் முன் தோன்றுவதாகவும் நம்பி, இந்த மூடநம்பிக்கைகளை வாழ்நாள் முழுக்க தீவிரமாக நம்பி செயல்படுவதில்லை என்பதால், இந்த யூகம் முழுவதும் சரியென்று சொல்வதிற்கில்லை. ஆனால், மனோதத்துவம் மிகவும் முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் இதை விடச் சிறந்த பல விளக்கங்களை மனோதத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

டாக்டர்.ஹெர்மன் சோமர்ஸ் என்ற ·ப்ளெமிஷ் மனோதத்துவ நிபுனர் இது குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முதன்முறையாக முன்வைத்துள்ளார். இவர் முதலில் ஜெஸ்யூட் ஆக இருந்து பிறகு பைபிளில் காணப்படும் நபிமார்கள் பலரிடத்தே மனச்சிதைவுகளின் அறிகுறிகள் தென்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மத நம்பிக்கைகளைப் பற்றி ஐயுற்று நாத்திகராக மாறியவர் ஆவார். இவரது புத்தகம் இதுவரை டச்சு மொழியில் மட்டுமே கிடைக்கின்றது : Een andere Mohammed ('மாறுபட்ட முகம்மது', ஹாடவிச், ஆண்ட்வெர்ப் 1993). ஆனால் அவரது புத்தகத்தின் சாரத்தை ஆங்கிலத்தில்(கு:தமிழில்) இங்கு தருகிறேன். அவர் தமது ஆய்வுக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டவை, முகம்மதின் குணாதிசயங்கள்,  நடவடிக்கைகள் பற்றி விவரமாகவும் துல்லியமாகவும் விளக்கும் குரான், ஹதீதுகள் (Hadiths- பொருள் வாரியாக வரிசைப் படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்கள்) மற்றும் சிரா (Sira Literature- முஸ்லிம் அறிஞர்களால் வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்பட்டுள்ள முகம்மதின் வாழ்க்கைக் குறிப்புகள்) நூல்கள் ஆகியன.

இது போன்ற ஆதார நூல்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது, ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அது - இயேசுவுக்கும் முகம்மதிற்கும் இடையே உள்ள வித்தியாசம். இயேசு என்பவர் - ஒரு கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரம். அடிப்படையில் போதனைகளை முன்மொழிந்த - குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரு வரலாற்று நபருடன், அக்கால கடவுள் நம்பிக்கைகள், ஆன்மீகப் பெரியவர்களின் குணநலன்கள் ஆகியவற்றைக் கலந்து, மெல்ல உருவெடுத்த சர்ச்சின் வசதிக்கேற்ப அக்கால அரசியல்-ஆன்மீகச் சூழல்களுடன் பொருந்தும் ஒரு கதாபாத்திரமாக காலப்போக்கில் உருவெடுத்ததே இயேசு அல்லது ஜீஸஸ் என்று இன்று அறியப்படும் நபர். ஆகவே, இயேசுபிரான் குறித்த வரலாற்று ஆய்வுகள் ஒரு எல்லையோடு திரும்பி விடுகின்றன. அவர் யார், உண்மையில் என்ன சொன்னார், எப்படி வாழ்ந்தார், என்ன போதித்தார், குணநலன்கள் யாவை என்பவை மூடுபனியிலூர்ந்து வரும் வெண்புறா போன்று தெளிவாக கணிக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், முகம்மதின் கதை வேறு - அவர் முழுக்க முழுக்க சரித்திரத்தில் துல்லியமாக பதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகர்.

கவனித்துப் பார்த்தோமேயானால், வரலாற்றின் வழி தென்படும் முகம்மது குறித்த ஐயங்களையும் எழுப்பும் அறிஞர்களின் வாதங்களும் உண்டு (vide e.g. Ibn Warraq : The Origins of the Koran, Prometheus, New York, 1998). இவற்றை நாம் ஒப்புக் கொண்டோமேயானால், இஸ்லாம் மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது எனலாம். ஏனெனில், இஸ்லாம் என்ற மத நம்பிக்கையும், அதன் வாழ்வடிப்படைச் சட்ட திட்டங்களும் முகம்மது என்ற ஒரு ஒற்றை நபரின் வாழ்வு, வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவை உண்மையிலேயே நிகழ்ந்தவை என்ற நம்பிக்கைகளின் மீதே கட்டமைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் பொய், முகம்மது என்ற நபரின் வாழ்வு, குணநலன்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்த நம்பிக்கைகள் சந்தேகத்திற்கிடமானவை என்ற இந்த வாதத்திலிருந்து, இஸ்லாத்தைக் காக்கும் பணியை நாம் செய்திட விழைந்திடவில்லை என்றாலும், இத்தகைய வாதங்கள் அதீதமானவையாகவே தோன்றுகின்றன.

மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய ஆதாரங்கள் ஏன் நம்பகமானவை என்றால், முகம்மதையும் அவரது கூட்டாளிகளையும் பற்றி அதிர்ச்சிகரமான, அவதூறாகக் கருதக்கூடிய தகவல்களையும் அவை தருகின்றன (முகம்மது மனநிலை சரியில்லாதவர் என்று அவருடன் இருந்தோர் கருதியது உட்பட). இந்நிலையில், உண்மை என்று கருதியதாலேயே இவையெல்லாம் பதிந்து வைக்கப் பட்டுள்ளனவே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இந்த வரலாற்று ஆவணங்களைப் பதித்தோருக்கு கிடையாது என்றே  தோன்றுகிறது. அவ்வாறு இல்லையெனில், முகம்மதைப் பற்றிய இதுபோன்ற சகிக்கவொண்ணா தகவல்களைப் பதிந்து வைக்க வேண்டிய அவசியம், அவரைப் பின்பற்றிய இஸ்லாமியர்களுக்கு இருந்திருக்காது.

இத்தகவல்களை மாற்றிப் பதிந்து வைக்க எந்தவித அரசியல் - hagiographical நிர்ப்பந்தங்களும் அந்த முஸ்லிம்களுக்கில்லை. அவர்களுக்கு நிச்சயமாக எவ்வித உள்நோக்கங்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை. முகம்மது ஏற்படுத்திவிட்டுச் சென்ற சில அரசியல் முறைகள், விதிகள் குறித்துக் கூட நமக்கு இந்த ஐயம் எழலாம். ஆனால் இதிலும் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல சமயங்களில் முகம்மதே இது விஷயமாக வாய்மூடி மெளனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் மரணப் படுக்கையிலிருந்தபோது கூட, தமக்குப் பின்னால் நிலவ வேண்டிய அரசியல்-வாரிசு முறை பற்றி சொல்ல வந்தபோது அவர் அதற்கு அனுமதிக்கப் படவில்லை (இந்த வாரிசு உரிமைப் போராட்டமே அலி, அவரது மகன் ஹ¤சைன் உயிரையும் குடித்து, ஷியாக்களை உருவாக்கி இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தியது). ஆனால், நபிமொழிகளும் ஏனைய வழக்குகளும் அரசியல் ஆதாயங்களுக்கு, சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தை கட்டமைக்க வேண்டிய அவசியங்களுக்கு அப்பாற்பட்டு,  முகம்மதின் குணநலன்கள், பல சந்தர்ப்பங்களில் அவரது முடிவுகள் குறித்த பல சகிக்கவொண்ணா தகவல்களை, எந்தவொரு நாகரிக மனிதனும் வெட்கித் தலைகுனியவைக்கும் தகவல்களை முன்வைக்கின்றன.

நிச்சயமாக இவையெல்லாம் இடைச்செருகல்களாகவோ, உள்நோக்கங்களுடன் செய்யப்பட்டவையாகவோ இருக்க வாய்ப்பில்லை. முகம்மதை விவரிக்கும் வழக்குகள் விஷயத்தில் இது மிகவும் உண்மை எனலாம். முகம்மதின் உயரம், நிறம், சுத்தபத்தம், பாலியல் வாழ்க்கை போன்றவற்றை கேட்டு ஆய்ந்து பதிந்து வைத்துச் சென்ற,  அப்பாசிட் அல்லது உம்மையத் காலத்தில் வாழ்ந்த மதப்பிடிப்புள்ள முஸ்லிம் அறிஞர்கள் இவையெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து உருவாக்கினர் என்று நாம் கருத எவ்வித முகாந்திரமும் இல்லை.

பிற்காலத்தில் இந்த ஆதார வழக்குகள் மற்றும் ஆவணங்களைத் தொகுத்து இஸ்லாமிய நூல்களை காபந்து செய்த காலத்தில் எதாவது சில மாற்றங்கள், சில சேர்க்கைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் கூட பெரும்பாலும் காணப்படுபவை சரியான தகவல்கள், துல்லியமான பதிவுகள் என்றே நாம் கருத முடிகிறது.  அதிலும் மிக முக்கியமாக இந்த நவீன யுகத்தில் ஒரு மனநோயின் அறிகுறியாக நிபுணர்கள் கருதும் அதே விடயங்கள் அந்தக் காலத்திலேயே முகம்மதின் குணநலன்கள், நடவடிக்கைகள், செய்கைகள் அவருடன் கூட இருந்தோரால் கவனிக்கப்பட்டு அது பிற்காலத்தில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதெல்லாம் உண்மைதான், கட்டுக் கதைகளோ உள்நோக்கங்களுடன் கூடிய இடைச்செருகல்களோ இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

டாக்டர் சோமர்ஸ் கூறுகிறார்:

"வாசகர்கள் ஒரு விஷயத்தில் கவனமாயிருக்க வேண்டும். மனநோய்க்கான அறிகுறிகள் முகம்மதிடம் தென்படுவது குறித்து நாம் சுட்டிக் காட்டும்போது சில நிபுணர்கள், வரலாற்றறிஞர்கள் மற்றும் டாக்டர்கள், இவையெல்லாம் பிற்காலத்தில் எழுதப் பட்டவை, ஆகையால் இவையெல்லாம் மதவாதிகளின் கட்டமைப்புகள், சேர்க்கைகளாக இருக்கலாம்; எனவே இத்தகைய நபிமொழிகள், நபிவழக்குகள் மற்றும் தொன்மையான இஸ்லாமிய வரலாற்றாவணங்களின் அடிப்படையில் இன்று செய்யப் படும் ஆய்வுகள் சரியல்ல என்ற கூறுகின்றார்கள்.(...)

இத்தகைய வழக்குகள், மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள், மெய்யல்ல என்ற தவறான அடிப்படையில் அவர்களின் நிராகரிப்பு அமைந்திருக்கின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். (...)

முதலாவதாக, நபிவழக்குகள், தொன்மையான இஸ்லாமிய ஆவணங்கள் பெரும்பாலும் மிகச்சரியான தகவல்களை தம்மிடத்தே கொண்டிருக்கின்றன. இரண்டாவதாக நவீன மருத்துவம், நோய்களின் அறிகுறிகளை மிகத்தெளிவாக ஆய்ந்து பகுத்திருக்கின்றது. தனிப்பட்ட அறிகுறிகள் (symptoms) மற்றும் இத்தகைய அறிகுறிகளின் தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகள் (syndrome) குறித்த தெளிவான தகவல்கள் நம்மிடையே இன்று உள்ளன. (...)

தொன்மையான இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நபிவழக்குகள் ஆகியவற்றைக் காண்போமேயானால், நாம் ஆச்சர்யப்படும்படி மனப்பிறழ்வு குறித்து இன்று நாம் அறிந்து வைத்திருக்கின்ற தனித்தன்மை கொண்ட அறிகுறிகளும் (symptoms), தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகளும் (syndrome) துல்லியமாகவும் தெளிவாகவும் இந்த இஸ்லாமிய வழக்குகளில் பதிந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இந்தக் காலத்தில் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அறிகுறிகள், அந்தக் காலத்தைய
ஆவணங்களில் பதிந்து வைக்கப் பட்டிருப்பதால் அவை நிச்சயமாக நம்பத்தகுந்தவையே." (பக் 18)

ஒருவர் குறிப்பிட்ட நபர் மனநோய்க்கு ஆட்பட்டவர் என்று பொதுப்படையாக கூறுவதற்கும் (பைத்தியக்கார விடுதிகளில் உள்ளோர்களின் நடவடிக்கைகள் குறித்த ஜோக்குகள் நிறைய நம்மிடையே நிலவுகின்றன அல்லவா அவை போன்று), ஒரு நபரை paranoia syndrome ஆட்கொள்ளும்போது தென்படும் அறிகுறிகள் குறித்து ஒவ்வொன்றாக ஒருவர் கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படி ஒருவர் கூறினால், ஒன்று அவர் மனவியல் மருத்துவ நூல்களிலிருந்து ஒருவர் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது
அந்த நோய்க்காட்பட்ட ஒரு நபரை நேரில் கண்டு அறிகுறிகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

டாக்டர். சோமர்ஸின் கருத்துப் படி, முகம்மது paranoia நோய்க்காட்பட்ட ஒரு நபர்க்கான தெளிவான உதாரணம். Paranoia syndrome-ன் தெளிவான தோற்றமானது, ஒரு நபர் தமக்கேற்படும் மாயபிம்பங்களினால், தன்னைப் பற்றியே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதாகும். இந்த மாயபிம்பங்களானது ஒலிகளாகவும் (காதில் குரல்கள் கேட்பது), ஒளி பிம்பங்களாகவும் (இதில் மாயத் தோற்றங்கள் கண்களுக்குத் தென்படும்), அல்லது உள்ளுணர்வுகளாகவும் (இவை உண்மையென்று அவர்கள் மிக உறுதியாக நம்பும்படி இருக்கும்; வெளிப்படையாக மற்றவர்களுக்கு தென்படுபவை, இவற்றுக்கு எதிரிடையாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கையை அசைக்க முடியாது) இருக்கலாம். இந்த மனப்பிறழ்வின் நாயகமாக அவர்களே இருப்பர். அதன்படி அவர்களுக்கு எதிராக அனைவரும் கூட்டு சேர்ந்து சதிசெய்வர் அல்லது எதோவொரு பிரபஞ்ச நிகழ்வின் ஏக சாட்சியாக அந்த நபரே இருப்பார் அல்லது அந்த நபரே ஒரு மிகச்சிறந்த குறிக்கோளை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்பவராக நியமிக்கப் பட்டிருப்பார்.

இதில் முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கும் முகம்மதுக்கெதிரான கூட்டுச் சதி பற்றிய அவரது கருத்துக்கள் குறித்த மிக மெல்லிய அவுட்லைனே சரித்திரத்தில் தென்படுகிறது. முகம்மது தாம் மக்கத்தவர்களால் துன்புறுத்தப் பட்டே மக்கா நகரை விட்டு வெளியேறி யாத்ரிப்/மதீனா நகருக்கு தம்மைச் சேர்ந்தவர்களுடன் ஓட நேர்ந்தது என்ற கருதினார் (பிற்காலத்தில் அவரது வன்செயல்களை நியாயப் படுத்த முயல்வோரும் இதே கருத்தை நம்பி முன்மொழிந்தனர்). ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தைக் கவனித்தோமேயானால், மதீனா/யாத்ரிப் நகருக்கு முகம்மது தம்மை நம்பியவர்களுடன் இடம் பெயர்ந்த பின்னர் தமது அடியார்களின் குடும்பத்தாரை மக்கா நகரிலிருந்து அழைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார். அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இங்கு ஒரு கேள்வி எழுகிறது, முகம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் எதிரிகளாகப் பாவித்து அவர்களை தீர்த்துக் கட்டுவதே தமது குறிக்கோள் என்று மக்கத்தவர்கள் நினைத்திருப்பார்களேயானால், அப்படி சதிசெய்து ஓடியவர்களின் குடும்பத்தாரை அக்கால வழக்கப் படி, பிணையாக பிடித்துவைத்திருக்கமாட்டார்களா? ஓடியவர்களுடன் மீண்டும் போய் சேர்ந்துகொள்ள அவ்வளவு எளிதாக அவர்கள் அனுமதித்திருப்பார்களா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, மக்கத்தவர்கள் துவேஷம் பாராட்டி, முகம்மதையும் அவரின் அடியார்களையும் தீர்த்துக் கட்ட முனைந்தனர் என்று கருதுவது தவறாகும்.

உலகின் முடிவைப் பற்றிய மிக ரகசியத் தகவல்களை - இறுதி(த் தீர்ப்பு) நாள் - தாம் மட்டுமே அறிந்துள்ளது (ஆனால், சரியான நாளை மட்டும் அறியாமல் இருப்பது, அப்படி சரியான நாளை குறிப்பிட்டிருந்தால் அது நிறைவேறுகிறதா இல்லையா என்பது இத்தகைய மனமயக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்) என்ற மன மயக்கம் பைபிளில் (பழைய ஏற்பாடு), பல நபிமார்களிடமும் நாம் காணமுடிகின்ற ஒரு அறிகுறியாகும். இன்னும் சொல்லப் போனால், முகம்மதையும் விட அவர்களிடம் இது குறித்த தீர்மானமான கருத்துக்களை நாம் காணமுடிகிறது. குரான் வசனங்கள் 15: 85, 44:10/9,78:40 போன்றவற்றில் உலகின் முடிவு சமீபமாயிருக்கின்றது என்று முகம்மது கருதியது தெளிவாகிறது (இயேசு கிறிஸ்துவின் அபோஸ்தலர்களுக்கும் இப்படியான நம்பிக்கை விதைக்கப்பட்டதை இங்கே குறிப்பிட வேண்டும்). இறுதித் தீர்ப்பு நாளின் விவரனையானது, குரானில் அடிக்கடி உச்சாடனம் செய்யப்படும் ஒரு விஷயமாகும். கிறிஸ்துவ மற்றும் யூத மதநம்பிக்கைகளிலிருந்து காப்பியடிக்கப் பட்ட இந்த விஷயம், அவற்றையும் தாண்டி முகம்மதுவிற்கு ஏற்பட்ட மாயத்தோற்றங்களின் காரணமாக மிகத் துல்லியமாக விவரிக்கப் பட்டிருப்பதை காணமுடிகிறது. இந்த தோற்றங்களின் மேல் ஏற்பட்ட நம்பிக்கைகளின் காரணமாக இந்த இறுதித் தீர்ப்பின் போது இன்னின்ன வகையானோர்க்கு இதது ஏற்படும் என்றும் ஒவ்வொரு மதக்கூட்டத்திற்கும் என்னவிதமான தீர்ப்புகள் வழங்கப் படும் என்றும் இந்த நாளில் முகம்மதுவுக்கு மகோன்னத நிலை (முகம்மதுவுக்கு அடுத்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் இடமும் விவரிக்கப் பட்டுள்ளது) போன்றவை குறித்தும் தீர்க்கமான விவரனைகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், முகம்மதுவின் அடிப்படையான மனப்பிறழ்வானது ஒரு மையப்புள்ளியையே ஆதாரமாகக் கொண்டு சுழன்று சுழன்று அவரை நிலைகொள்ளாமல் அடித்துவந்தது. நாம் ஏற்கெனவே கண்டது போன்று இந்த மனமயக்கம் குறித்து முதலில் அவருக்கே பற்பல சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. ஆனால், காலப்போக்கில் திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்த தோற்றங்களை அவர் நம்பத் தொடங்கி, தாமே இந்த பிரபஞ்ச வழிகாட்டி - தாம் இந்த விசேஷப் பணிக்கென தேர்வு செய்யப் பட்டிருக்கின்றோம் என்று நம்பலானார். அவர் கடவுளின் ஒரே பேச்சாளர், அது மட்டுமல்ல உலகிற்கு கடவுள் அனுப்பி வைத்த கடைசி பேச்சாளர் - இறுதித் தீர்ப்பு நாள் வரை அவரே இறைவனின் ஏக தூதர் - 'நபிகளின் முத்திரை' என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததை காண முடிகிறது. இந்த விசேஷப்பணியானது அவருக்கு அந்த முக்கியமான நாளில் வெளிப்பட்ட இரண்டாவது விண்குரல் மூலம் வழங்கப்பட்டது. முதலில் அவரை 'கரை' என்றது, அவர் கண்முன் தோன்றிய அமானுஷ்ய ஆவியானது ["உரத்துச் சொல்" அல்லது "உரை" - அரபியில் "(இ)க்ராஹ்" - ஆதலின் குரான் என்ற பெயர் ஏற்பட்டது]. அதைக் கேட்டு அஞ்சி, தமக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அல்லது தீய ஆவி தம்மை பிடித்துக் கொண்டது என்று நடுநடுங்கி தற்கொலை செய்து கொள்ள ஓடிய முகம்மதுவுக்கு, நடுவே இரண்டாவதாக காப்ரியேல் என்ற ஆவி விண்ணில் தோன்றி "ஓ முகம்மதே நீரே கடவுளின் தூதர், நான்  ஜிப்ரீல்" என்றது (Sira, Guillaume translation., பக்.106/153 ; குரான் 96:1)

இந்த மனப்பிறழ்வானது வியாபாரியாக இருந்த முகம்மதை, கடவுளின் தூதராக மாற்றி, அந்தக் காலத்தில் ஒரு சிறு ரகசியக் குழுவின் தலைவராக, கல்ட் லீடராக உருமாற்றி, பிறகு அரசியல் அபிலாஷைகள் கொண்ட ஒரு பெரிய மதத்தலைவராக, பின் மதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசின் தலைவராக மாற்றி, அதன்பின் கடைசியாக ஒட்டுமொத்த அரேபியாவையும் தன் கொடையின் கீழ்க்கொணர்ந்த சாம்ராஜ்ய அதிபதியாகவும் உலகையே ஆக்கிரமித்து தனது ஆளுகையின் கீழ் கொணரவிரும்பும் ஒரு மதத்தை உருவாக்கியவராகவும் உருமாற்றிவிட்டது.

அவரைப் பற்றிய இந்த நம்பிக்கையே முஸ்லிம்களின் ஆதார சுருதியாக விளங்குகிறது "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை, முகம்மது அல்லாஹ்வின் தூதர்" என்ற (கலிமா) கோஷம் ஒவ்வொரு முஸ்லிமையும் மற்ற எல்லோரிடத்திருந்தும் வேறுபடுத்தி, அவரவர் மனதிலும், சமூகத்திலும் பிரிவினையை உண்டாக்கி வைத்திருக்கின்றது. கடவுள் ஒருவனே என்ற ஏக-இறைக் கோட்பாடானது பலவித மத ஆசான்களால் முன்மொழியப்பட்டு பல மதங்களிலும் நிலவி வரும் நிலையில், இந்த முகம்மதின் விசேஷ தகுதி குறித்த நம்பிக்கையே இஸ்லாத்தின் வித்தியாசமான அம்சமாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், முகம்மது சொல்லியவை (குரான்), சொல்லி நடந்து காட்டியவை (ஹதீஸ், சுன்னாஹ்) போன்றவை கடவுளால் மனித குலத்துக்குக் கடைசியாக அனுப்பப்பட்ட ஒரே பேச்சாளரின் சொற்களாகவும், செயல்களாகவும், தீவிர மதநம்பிக்கையுடைய முஸ்லிம்களுக்குத் தென்பட்டு, இந்த குரான், ஹதீஸ், சுன்னாஹ் போன்றவையே அவர்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கங்களாக விளங்கி வருகின்றன. ஆனால்,  மேலே கண்டவாறு அறிவியல் ரீதியாக பகுத்தாய்ந்து காணும்போது, உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பி செயல்படும் ஒரு மதநம்பிக்கையானது, மனப்பிறழ்வால் எழுந்த ஒன்று என்பதை அறியும்போது அது நமக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகமதுவின் மனநலம் குறித்த டாக்டர் சோமர்ஸின் ஆய்வுகள்(2) ]

சரித்திரத்தில் எத்தனையோ மதநிறுவனர்களைப் பார்க்கிறோம். ஆனால் ஏனையோர்களைக் காட்டிலும் முகம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம் குறித்து நிறையவே துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் ஆதார நூல்களிலிருந்து கிடைக்கும் இத் தகவல்களை வைத்து முகம்மது உண்மையிலேயே மனம் பிறழ்ந்தவரா, பாரனாய்ட் நிலைக்காட்பட்டவரா என்ற சந்தேகத்தை உறுதி செய்ய முடியுமா என்று மேலும் பார்க்கலாம்.

முகம்மதுவின் சிறிய பிராயத்தைப் பற்றிய பதிவுகள் அதிகம் அறியப் படாதவை. ஆனாலும் கிடைக்கும் சில விந்தையான தகவல்கள் மனநோயின் ஆரம்பகால அறிகுறிகள்(prodromes) அப்போதே தென்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

சிறு வயதில் அந்தக்கால அரபியர் நடைமுறைப்படி முகம்மது வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்தார்(நகரத்தில் வாழ்பவர்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் கிராமத்தில் உறவினர்களிடம் பாதுகாப்பாய் வளர்ப்பது வழக்கம் - குறிப்பு: கிராம அரபிப் பெண்கள் நகரப் பெண்களைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருந்ததாலோ என்னவோ, இவர்களிடம் குழந்தைகளை விட்டு பால்கொடுக்கச் சொல்வதும் அக்கால அரபியர் வழக்கமாயிருந்தது) . மூன்று வயதுச் சிறுவனாய் இருக்கையில் முகம்மது ஒருமுறை தரையில் ஏதோ ஒரு அதிர்ச்சியில், பலவீனமாய்ப் படுத்துக் கிடப்பதைப் பார்த்து ஓடி வந்தார் அவர் வளர்ப்புத் தாய் ஹலீமா. வெள்ளை உடையணிந்த யாரோ இருவர் வந்து, தன் வயிற்றைக் கீறி உள்ளே எதையோ தேடியதாய்ப் புலம்பினார் சிறுவன் முகம்மது.

இதைக் கண்டு பயந்து போன ஹலீமா, குழந்தைக்கு மேலும் ஏதாவது பிரச்னை வருவதற்குள் அவரின் சொந்தப் பெற்றோரிடமே அனுப்பி வைக்க முடிவு செய்தார். சிறுவன் முகம்மதுவின் உடலுக்குள் ஏதோ பேய் (அல்லது ஜின் ) புகுந்திருப்பதாய் கருதினார் ஹலீமா. மனச்சிதைவின் அறிகுறியாய் இதை உறுதிபடச் சொல்ல முடியாது என்றாலும், சிறுவயதில் இருந்தே முகம்மதுவிடம் ஏதோ பிரச்னை இருந்ததை இது காட்டுகிறது.

வாலிபனாய், நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராய், வலுவுடன் இருக்கையில் இதைப் போன்ற அசாதாரண நிகழ்வுகள் முகம்மதுவின் வாழ்க்கையில் பதிவு செய்யப் படவில்லை. தளர்ந்த நிலையில் நடுவயதில் அவை திரும்பவும் திரும்பின அவரிடம்.

குரான் வெளியாவதற்கு சில வருடங்கள் முன்பாகவே இது தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் அவர் மனைவி கதீஜாவும் ஏதோ சாத்தானின் பார்வை பட்டு விட்டதாக இதை நினைத்து பேயோட்டுபவர்களிடம் இவரை அழைத்துப் போனார். அவரின் சமகாலத்தவர் கூட முகம்மதின் இதைப்போன்ற மனநிலை மாற்றங்களை அறிந்திருந்தனர். இதெல்லாம் முகமதின் மனநலம் குறித்த நம் சந்தேகங்களை உறுதிப் படுத்தும் சம்பவங்கள்.

வரவர முகம்மதின் ஆவேச நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க கதீஜா அவரை வராக்கா இப்னு நவஃபால் என்ற இறையாளரிடம் அழைத்துப் போனார். அவர் மனநோய் மருத்துவர் அல்ல, - இறைநம்பிக்கை மிகுந்த, தளர்ந்து போன ஒரு முதியவர்(குறிப்பு: கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர், வயோதிகர், கண் பார்வை மங்கியவர், ஹீப்ரூ மொழியையும், யூத நம்பிக்கைகளையும் அறிந்தவர் இந்த வராக்கா என்று ஹதீதுகள் தெரிவிக்கின்றன ). அவர் முகம்மதுவின் நிலையைப் பார்த்து விட்டு, முகம்மது காணும் காட்சிகள் உண்மைதான் என்று சான்றிதழ் வழங்கி விட்டார். அதிலிருந்துதான் கதீஜாவும் கணவருடன் சேர்ந்து அந்தக் காட்சிகளை நம்ப ஆரம்பித்தார். சொல்லப் போனால் கதீஜாதான் இஸ்லாத்தின் முதல் நம்பிக்கையாளர். தன்னுடைய சுய அறிவை மூட்டை கட்டிவிட்டு, முகம்மது சொல்வதே வேதவாக்கு என்று அன்றிலிருந்து அவர் அதற்கு அடிமையானார்.

சகிப்பின்மையும் மனநோயின் ஓர் அறிகுறிதான் மேலே சொன்னதைப் போல், சில உறுதிப்படுத்தும் தகவல்களை விட, முகம்மதுவின் கூற்றாகவே அவர் கண்ட காட்சிகளைப் பற்றித் தெரிய வருபவை, அவரை மனம் பிறழ்ந்தவர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றன. சொர்க்கத்திலிருந்து கேட்ட உரத்த குரல் மற்றும் நெடிதுயர்ந்த உருவம் ஒன்று முகம்மதை முன்னிலைப் படுத்திச் சொன்னவை: நீயே இறைத்தூதன். அகிலத்தைப் படைத்த ஆண்டவனால் அவர் சொற்களைப் பரப்ப அவரால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி என்று. அது மட்டுமின்று, 'அகிலத்தின் ஆட்சியில் முகம்மதுவுக்குக் கிட்டிய பிரதம அதிகாரம், இறைவனின் ஏக-இறுதிப் பிரதிநிதி, மண்ணிலே மானுடத்தை முழுமையாய் ஆள்வதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட துணைத் தலைவர், இறுதித்தீர்ப்பு நாளில் பாவிகளைப் பற்றி முடிவெடுக்கையில் இடைத்தரகராய்க் கிடைத்த நியமனம்' என்று முகம்மதுவைப் பற்றிய எழுப்பப் பட்ட பிம்பங்கள் எல்லாமே இதை உறுதி செய்வன.

தன்னைப் பற்றியே அவர் எழுப்பிக் கொண்ட இந்த மனக்கோட்டைக்கும், உண்மையில் அன்றைய நிலையில் அவருக்கிருந்த சமூக அங்கீகாரத்துக்கும் இருந்த இடைவெளி மிக அதிகம். சாதாரண வணிகர் என்றே பலராலும் பார்க்கப்பட்டு, பின்னர் பலவிதங்களில் ஏளனமாய்ப் பேசப்பட்ட ஒரு மதக்கூட்டத் தலைவராய் தன்னை உயர்த்திக் கொண்ட முகம்மதுவிற்கு இது தாங்க முடியாததாய் இருந்தது. தன்னை விமர்சனம் செய்வோரை கொஞ்சமும் சகித்துக் கொள்ளாமை, பின்னர் அவர்களைக் குறிபார்த்து மறக்காமல் பழிவாங்குவது போன்ற குணாதிசயங்கள் ஒரு மனநோயாளியின் அம்சங்கள் என்றே எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றிச் சொல்லலாம். சரித்திரத்தைப் பார்த்தால் இடித்துரைக்கும் சகாக்களைக் கொன்றழித்த கொடுங்கோலர்கள் பலர். இருந்தாலும் முகம்மதுவைப் போல் விடாது தேடிச் செய்த அழித்தொழிப்பும், அதற்குக் காரணமாய்ச் சொல்லப்படும் அவரது இறைஆவேச சாமியாடல்களும், அவர் மனநலத்தைத் தனித்துக் காட்டும் சான்றுகளாகும்.

சொல்லப் போனால் வரலாற்றில், பல கொடுங்கோலர்கள் இதைப் போன்ற மனநிலையைக் கொண்டே வெற்றி தேடிக் கொண்டதைப் பார்க்கிறோம். மனச்சிதைவுக்கும் வெற்றிக்கும் ஏதோ ஒரு பொருத்தம் போல் இருக்கிறது. குறிப்பாக 'மெகலோமேனியா' என்ற எதிலும் தன்னையே மையமாய் வைத்துப் பார்க்கும் வெறி, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு தூண்டுகோலாய் இருப்பதையும் காணலாம். மனநோயின் உடற்கூறுச் சான்று முகம்மதின் இந்த மெகலோமேனியாவிற்கு, அவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தது, குழந்தைகளைப் பறி கொடுத்தது போன்ற சொந்த வாழ்க்கையின் சோகங்களும் ஒரு வகையில் காரணமாய் இருக்கலாம்.

ஆனாலும் இதைப் போன்ற ஃபிராய்டியக் காரணங்கள் மட்டும் அவர் மனநோயை விளக்க உதவாது. ஃப்ராய்ட் தொடங்கிவைத்து பின்னர் எழுபதுகளில் மிகவும் பிரபலமான ஃபிராய்டியக் கருத்துகள் உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட முக்கியமாய்க் கருதப் படுகின்றன. சிறுவயதில் பள்ளியில் பிரகாசிக்க முடியாதது,ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் ஒரு மனிதன் தன் பிற்கால வாழ்வில் அதை ஏதோ ஒரு வகையில் சரிக்கட்ட முயல்கிறான். இது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்ட அணுகுமுறை. இதற்கு சைக்கோட்ரோபிக் மருந்துகள் பலனளிப்பதைப் பார்க்கிறோம்.

 

முகம்மதின் விஷயத்தில் இந்த மனோதத்துவ அணுகுமுறையை விட அவர் உடல்ரீதியான பிரச்னைகளும் சேர்ந்திருக்கின்றன. முகம்மதின் உடல்நலத்தைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருவது என்னவென்றால், அவர் தீராத தலைவலியால் அவதிப் பட்டிருந்தார் என்பது. அதைக் குணப்படுத்த கழுத்தின் இரண்டு ரத்தநாளங்களை வெட்டி(இரத்தத்தை வடித்து)க் கொண்டதாகத் தெரிகிறது. முகம்மதின் மனச்சிதைவை இதை வைத்து எடை போட முடியாவிட்டாலும், இந்தக் காரணம் ஒரு வலுவான ஆதாரம் என்று கொள்ளலாம்.

 முகம்மது தன் சிறுவயதில் தரையில் விழுந்து கிடந்தது ஒருவகை வலிப்புநோய் என்று பைஸாண்டினைச் சேர்ந்த(Byzantine) தியோபேன்ஸ் குறித்து வைத்திருக்கிறார். இதுவும் ஒரு திருப்தியான ஆதாரம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் வலிப்பு நோயால் ஒருவன் நிரந்தர மனநோய்க்கு ஆளாவதில்லை. வலிப்பிலிருந்து மீண்டபின் அதைப்பற்றியே நினைவிருக்காது. ஆனால் பாரனாய்ட் போன்ற மனோவியாதிகள் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நம்பகமான அறிகுறி என்று ஆராய்ந்து பார்த்தால் இறைமயக்கம் ஏற்பட்ட பின்னர் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி முகம்மது தன் வாயாலேயே சொல்வதை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்டத்தில் காட்சிகள் கிட்ட ஆரம்பித்த காலத்தில் ஆவி வந்து தன்னைத் தாங்க முடியாமல் அழுத்துவதாகச் சொல்கிறார். இறைமயக்கத்தைத் தொடர்ந்து தன் காதில் கேட்ட பேரொலியையை, வெளியிலிருந்து யாரோ பலமாய்த் தாக்கியது போன்ற உணர்வை, அப்துல்லா இப்ன் உமரிடம் அவர் ஒருமுறை சொல்வதையும் கவனிக்க வேண்டும்.

தன் காதில் கேட்ட ஒலிகள் தாங்க முடியாததாய் இருந்ததாகவும், தன் செவிப்பறைகள் மிகவும் தளர்ச்சியுற்று இருந்ததாகவும் முகம்மது சொல்கிறார். அதனால்தான் அவர் இசைநிகழ்ச்சிகளின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதை அவுரங்கசீபும், அயதுல்லா கொமேனியும் அப்படியே பின்பற்றினார்கள்.

இப்ன் சய்த் பதிவு செய்துள்ள படி முகம்மது சொல்வது: "எனக்குக் கிட்டிய காட்சிகள் இருவகை. சிலநேரம் காப்ரியேல் வந்து நேருக்கு நேர் சொல்வது. அதை ஆனால் மறந்து விடுகிறேன். சில சமயம் மணியடிப்பது போலவோ, அலையடிப்பது போலவோ சத்தம் கேட்டு நான் குழப்பத்தில் ஆழ்கிறேன், ஆனால் அந்த நேரம் நான் காண்பதெல்லாம், கேட்பதெல்லாம் என்னை விட்டுப் போவதில்லை."

முகம்மதின் மனக்குழப்பங்களுக்கு இதை நியூரோபேதலாஜிகல் ஆதாரமென்று சொல்லலாம். முகம்மதின் மனோவியாதிக்கான உடற்கூறு ரீதியான காரணம் என்று டாக்டர்.சோமர்ஸ் சுட்டிக் காட்டுவது அவரின் நடுமூளைக்குள் பிட்யூட்டரி கிளாண்டின் முன்பகுதியில், மெயின் சென்ஸரி நரம்புகளுக்கு மிக அருகில் ஒரு கட்டி வளர்ந்திருக்கலாம் என்பது. ஆனால் இது யூகத்தின் அடிப்படையில் சொல்வதே தவிர, நன்கு தெரிந்த சைக்கோபேதலாஜிகல் காரணங்களை விட உறுதியான ஆதாரமாய் இல்லை. வருங்காலத்தில் இதை மேற்கொண்டு உறுதியாய் யாராவது ஆராயலாம். காரணங்கள் எப்படி இருந்தாலும் பதிந்து வைக்கப்பட்டுள்ள தெளிவான தகவல்களின் மூலம் ஆய்ந்து பார்க்கும்போது, முகம்மதின் மனச்சிதைவு தெளிவான மடுவின் அடிப்பரப்பைப் போல் உற்று நோக்குவோர்க்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

oooOOooo[ 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இஸ்லாத்துக்குள் இருக்கும் சில நுட்பமான பேதங்கள் ]

முகம்மதுவுக்குக் கிட்டிய இந்த 'வஹி தரிசனத்தின்' பின்புலத்தை அறிவியல்பூர்வமாய் அலசி அறிந்து கொண்ட நிலையில் இனி நிஜவாழ்வில் இதன் தாக்கத்தையும், இஸ்லாத்தின் உண்மையான பிரச்னை என்னவென்றும் இந்த அலசல் தந்த வெளிச்சத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பல நூற்றாண்டு மாயையில் சிக்கியுள்ள நம் அண்டை வீட்டு முஸ்லிம்களை முதலில் எதிர்கொள்வது எப்படி? அதையும் இந்த முடிவுரையில் யோசிப்போம்.

(1) இஸ்லாத்துக்குள் இருக்கும் சில நுட்பமான பேதங்கள்

இதற்கு முதல்படி இஸ்லாத்தைக் குறித்த நம் புரிதலைக் கூர்மைப் படுத்திக் கொள்வது. யாராவது எங்கேயாவது இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் முதலில் பாய்ந்து வந்து 'இவன் இனவாத வெறுப்பைத் தூண்டுபவன்' என்று முத்திரை குத்தி ஒதுக்குவது பொதுவாய் இஸ்லாமியர் அல்ல, இஸ்லாமியர் அல்லாதவரே. எப்படி கம்யூனிஸத்தைக் குறித்து விமர்சிப்பவரை, அதுவும் தக்க ஆதாரங்களோடு மறுதளிக்க முடியாத எதிர்தரப்பு வாதம் வைப்போரைக் கூட சற்றேனும் செவி கொடுத்துக் கேட்காமல், 'ஆ, அது எப்படி நீ புனிதமான கம்யூனிஸத்தை விமர்சிப்பாய்?' என்று பாய்ந்து வரும் ஒரு கூட்டம் இருக்கிறதோ,
அப்படியே இன்று இஸ்லாத்தைக் குறித்த நேர்மையான விமர்சனங்களையும் எடுத்து வைப்பதைத் தடுக்க பலர் இருக்கிறார்கள். மேலும் பெருவாரி இந்துக்களுக்கும், இதர இஸ்லாமியர் அல்லாத பலருக்கும், இஸ்லாத்தைக் குறித்து ஏதோ ஒருவகை பரிவு இருக்கிறது. அவர்கள் பொதுவாய் சுபிக் கவிதைகளில், இஸ்லாத்தின் பொற்காலக் கனவுகளில் மனதைப் பறி கொடுத்தவர்கள்.

ஒரு வாதத்துக்காக இப்படிப் பார்ப்போம். ஏதோ ஒரு காலத்தில் இஸ்லாத்தின் சில உன்னதமான சாதனைகளை ஏற்றுக் கொண்டாலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கும், அவற்றுக்கும் உள்ள வித்தியாசங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கமாய்ச் சொல்லப்படும் சாதனைகளான அல்ஜீப்ரா, அரேபியச் சித்திர எழுத்து மற்றும் பலரையும் கவர்ந்த சுபிக்களின் ஆன்மீகத் தேடல் கொண்ட தத்துவப்பாடல்கள் போன்ற எல்லாமே அடிப்படை இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவை.

முதலில் அரேபியச் சித்திர எழுத்து, ஜியோமிதி நகாசு வேலைகள் மற்றும் குறிப்பான வடிவற்ற அழகம்ஸங்கள் எல்லாம் மனித, விலங்கு வாழ்வியலைச் சித்தரிக்கும் கலைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டக் காரணத்தால் எழுந்தவை. மேலும் அவை ஏதோ புதிய கண்டுபிடிப்புகளும் அல்ல. அந்த நாளில் இருந்து இஸ்லாத்துக்கு முந்தைய மனித சமுதாயம் போற்றி வந்த பலவிதமான கலை வடிவங்களின் ஒரு வெளிப்பாடுதான். 

அல்ஜீப்ரா மற்றும் பல அறிவியல் அம்சங்கள் எல்லாம் பல அரேபியக் கொடுங்கோலர்களே ஏற்றுக் கொண்டபடி, இந்தியா, சீனா, கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவைதான். 'உலகிலேயே உயர்ந்த தூய்மையான மதம் நாங்கள் பெற்ற எங்கள் மதம்' என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே அவர்கள் நெஞ்சம் நிறையப் பெருமை கொள்ளப் போதுமானதாக இருக்க, மற்ற சாதாரணமான சாதனைகள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாய் இருக்கவில்லை. இந்த அல்ப விஷயங்கள் எல்லாம் பிற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை என்று சொல்லிக் கொள்ள அவர்கள் தயங்காததற்கு இதுவே காரணம்.

சுபிக்கள் பரப்பிய 'தான் என்ற உணர்வை அழித்து கடவுளுடன் கலக்கும்' முக்கியமான கோட்பாடு கூட வேதாந்த, பௌத்த சமயங்களில் இருந்து பெறப்பட்டதுதான். ஆனால் ஆரம்பத்தில், உபநிஷதங்கள் சொல்லும் 'நானே பரம்பொருள்' (அனால் ஹக் என்று அரபியில் மாற்றி) என்ற கொள்கையைப் பரப்பிய சுபிக்கள், இறைவனுக்கு எதிராய் சதி செய்வதாய்க் குற்றம் சாட்டப்பட்டு ஒட்டுமொத்தமாய்த் தீர்த்துக் கட்டப்பட்டார்கள். காலப்போக்கில் ஒருவகை சமரசம் ஏற்பட்டு, இஸ்லாத்துக்கு ஒத்துவராத கொள்கையாய் இருந்தாலும், இந்த சுபியிஸத்தால் பெருத்த அபாயம் இல்லை என்று கருதியோ என்னவோ அதையும் இஸ்லாத்தின் ஒரு கூறாக அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஏதோ ஆன்மீகக் கோணங்கிகளுக்கும், படிப்பறிவில்லாத பக்திமான்களுக்கும் ஒரு வடிகாலாய் இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் தப்பித்திருக்கிறது.

எது எப்படியோ, வெளி ஆட்களைக் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற 'கண்ணைக் கவரும் காட்சிப் பொருட்கள்' எல்லாம் உண்மையான இஸ்லாத்தை எடை போடவோ, வரையறுக்கவோ எந்த வகையிலும் உதவாது. இது மட்டுமில்லாமல், ஆதாரமான இஸ்லாமியக் கோட்பாடுகளை வைத்துப் பார்த்தாலும், அதற்குள் இருக்கும் சில தவிர்க்க முடியாத அம்சங்களை, நிபந்தனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் பொதுவான இறைக் கொள்கைகள், ஒழுக்கங்கள் மட்டுமின்றி சில பிரத்யேகமான இஸ்லாமியக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ ஒருவகையில் பெருவாரி மக்கள் மதிப்பைப் பெறுவதற்கு திருக்குரானில் முகம்மதால் சேர்க்கப்பட்ட மரபு சார்ந்த ஒழுக்கங்கள், திருடாமை, புறங்கூறாமை, குழந்தைநலம், படைகள ஒழுக்கம் போன்ற சில அம்சங்களைப் பார்க்கலாம். மோஸஸ் தனது பத்து கட்டளைகளில் எப்படி தன் கண்டுபிடிப்புகளான ஏக இறைக் கொள்கை, உருவவணக்க எதிர்ப்பு, இறைவன் நாமத்தைப் பகிரங்கமாய்ச் சொல்வதற்குத் தடை, வாரத்தில் ஒருநாள் ஓய்வு போன்ற புதிய
கொள்கைகளுடன் தொன்றுதொட்டு இருந்துவரும் பொய் சொல்லாமை, திருடாமை, பெற்றோர் வணக்கம், பிறன்மனை விழையாமை போன்ற நெறிமுறைகளைக் கலந்து கட்டிக் கொடுத்தாரோ, அது போலவே முகம்மதுவும் தன் கண்டுபிடிப்புகளுடன், பல பண்டைய காலத்திய நெறிமுறைகளையும் சேர்த்தே சொல்லி இருக்கிறார். மோஸஸ், முகம்மது இருவருக்குமே தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வெகுஜன மதிப்பைத் பெறுவதற்கு இப்படி மரபுமுலாம் அவசியமாய் இருந்திருக்கிறது.

விவிலியத்தையோ, குரானையோ படிக்கும் ஒரு சாதாரணன், தான் அதனால் ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டதாகச் சொல்லவும் இது வாய்ப்பளிக்கிறது. உலகளாவிய பொதுத்தன்மைகள் சிலவற்றை - அவை இஸ்லாத்துக்கு மட்டுமே சொந்தமான கொள்கைகள் இல்லையென்றாலும் - போதிக்கும் விஷயத்தில் திருக்குரானும் ஒரு மதிப்புக்குரிய நூல்தான்.

அதே நேரம் இஸ்லாத்தைத் தனித்துக் காட்டுவதாகச் சொல்லப்படும் அதன் ஆதாரக் கொள்கைகளை நன்கு கவனித்துப் பார்த்தால், அதன் ஏக இறைக் கொள்கையை (அல்லாவைத் தவிர வேறு இறைவனில்லை) பார்க்கும்போது, முகம்மதுவின் நபித்துவ நம்பிக்கையையும் (முகம்மதே அல்லாவின் தூதர்) சேர்த்தே பார்க்க வேண்டும். 

முதலாவதாக ஏக இறைக் கோட்பாடு, பரம்பொருள் ஒன்றே என்று சொல்லும் கோட்பாடு, குரானிலோ, பைபிளிலோ மட்டும் சொல்லப் படுவது அல்ல. மேலும் இக்கொள்கை ஒரு வகையில் அரிஸ்டாடிலின் தத்துவங்களிலும், ஸ்டாய்ஸிஸத்திலும், ஜாரதுஷ்றாவின் அஹ¤ர மஸ்தாவிலும் எடுத்துச் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம். ஏன், பல இறைக் கோட்பாடு கொண்டதாகத் தாக்கப்படும் இந்து நூல்களின் ஆதாரமாக இந்த ஏக இறைக் கோட்பாடு இருப்பதைக் காணலாம்.

இடைக்காலத்திய மற்றும் நவீனத்துவத் தத்துவச் சிந்தனையாளர்கள் (அல் அராபி, குஸானஸ், ப்ரூனோ, கலீலி, லெப்னிஸ் போன்ற) பலர் அகிலத்தைப் பற்றியும், பிரக்ஞையைப் பற்றியும் பல முன்னோடியான கருத்தாங்களை உருவாக்கி உள்ளனர். ஆக கொள்கைரீதியாகப் பார்த்தால், இந்த ஏக இறை தத்துவத்தைப் போதிக்கும் மதங்களுடன் - இஸ்லாம் உட்பட - ஒத்துப் போவதில் யார்க்கும் பெரிதாய் எதுவும் பிரச்னை வரப் போவதில்லை.

அடுத்த முறை உங்கள் அடுத்த வீட்டு இஸ்லாமியர் 'அல்ஹம்துலில்லா' என்றோ அல்லது அல்லாவைப் போற்றி வேறு எதுவும் சொன்னாலோ, அவரைப் பற்றி அவசரப்பட்டு ஏதோ ஜிஹாதி என்று முடிவெடுத்துவிட வேண்டாம். அல்லா வாழ்த்து என்பது நீங்கள் - ஹிந்துக்கள் - பகவானைப் போற்றிச் சொல்வது போன்றதே.

உண்மையான பிரச்னை ஆரம்பமாவது எப்போது என்றால், இந்த அல்லாவானவர் தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ள, முகம்மதுவுக்கு மட்டும் காபிரியலால் அருளப்பட்ட குரான் புத்தகத்தில் விவரிக்கப் பட்டுள்ள குணாதிசயங்கள் மட்டும் கொண்ட தனி இறைவன் என்று அவர் என்று புரிந்து கொள்ளத் தொடங்குகிறாரோ அன்றிலிருந்து. அதற்குப் பின்னர் நீங்கள் உஷாராய் இருப்பது நலம்.

இஸ்லாத்தின் அடிப்படையான பிரச்னை அல்லாவோ, ஏக இறைக் கொள்கையோ அல்ல; முகம்மதுவும், அவரின் பிரத்யேக நபித்துவ நம்பிக்கையும் மட்டுமே.

ஏக இறைக் கொள்கை எங்கும் இருப்பது. முகம்மதுவும் அவர் நூலும் மட்டுமே இஸ்லாத்தைத் தனித்துக் காட்டும் விஷயங்கள்.

ஏக இறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், சொர்க்கத்திலிருந்து முகம்மது வைத்திருந்த பிரத்யேகத் தொலைபேசி இணைப்பை மறுதளிப்பதில் எவ்விதத் தயக்கமும் இருக்கக் கூடாது. இதுதான் இஸ்லாத்தைக் கவனமாய் ஆராய்ந்து பார்த்தால் நாம் போய் முட்டிக் கொள்ளும் பகுத்தறிவு அற்ற இறுதித் தடைக்கல்.  இந்த இடத்தில் யாதொரு சர்க்கரை தடவிய மழுப்பல்களையும், எம்மதமும் சம்மதம் என்பது போன்ற பிதற்றல்களையும் ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஏனெனில் இஸ்லாம் என்ற மதத்தை வரையறுக்கும் இந்த அடிப்படையே தவறானது. இது ஒரு சாதாரண இடைக்காலத்து வணிகர் ஒருவரின் மயக்கத்தில் பிறழ்ந்த
நம்பிக்கை. இதைப் போய் அபாரமான சிந்தனையாளர்களான யாக்ஞவல்கியருடனோ, புத்தருடனோ, கன்பூசியஸ¤டனோ, லாவோஸியுடனோ, சாக்ரடீஸ¤டனோ ஒப்பிடுவது முட்டாள்தனமானது.

(2) தெளிவாய்ப் பேசுவோம்

எடுத்தவுடன் இஸ்லாத்தின் அடிப்படையான இந்தத் தவறுகளை நமக்குத் தெரிந்த இஸ்லாமியரிடமே சுட்டிக் காட்டுவது கடினமான காரியம். ஆரம்பத்தில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவர் யாராய் இருந்தாலும் 'நம்பிக்கை அற்றவன்' என்ற சலுகையை சில காலம் அனுபவிக்கலாம். அதுவும் மாறி வரும் இன்றைய உலகில், அவர்கள் வேறு வழியில்லாமல் 'நம்பிக்கை அற்றவர்'களை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இங்கே நம்பிக்கை என்பது இறைவனின் மீதல்ல; முகம்மதுவின் நபித்துவத்தின் மீது. ஒரு முறை முகம்மதுவின் இறுதி நபித்துவத்தை ஏற்றுக் கொண்டால், அடுத்ததாக குரானையும், அதன் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அப்புறம் என்ன நீங்களும் இஸ்லாமியர்தான்.

தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம்.

இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம். சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள். 'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின்
பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.

யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச் சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி. அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். 

இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.

இதுநாள்வரை வெளி உலகம் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்படுவதாலேயே பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், அடிப்படைவாதிகளின் அராஜகப் போக்கு தொடர்ந்து வந்திருக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு மேற்கத்திய கலாசாரத்தைப் பற்றியும், சக ஆசிய கலாசாரங்களைப் பற்றியும் இவர்கள் எதிரிகள் என்று திரும்பத்திரும்ப போதிக்கப்பட்டு வருவதும் ஒரு முடிவுக்கு வரும். அவர்களின் சிந்தனை எல்லை, வரும் தலைமுறையில் நிச்சயம் விரியும்.

இஸ்லாமிய நாடுகளின் கொடுமைகளிலிருந்து மீண்ட பலர் நடத்தும் வலைத்தளங்களில், இஸ்லாத்தின் இருண்ட பக்கத்தை, அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர் மீது நடத்தும் வன்முறைகளை. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, குறிப்பாய் பகுத்தறிவுக்கு ஒத்து வராத இஸ்லாமிய அடிப்படை வாதத்தைப் புட்டுப்புட்டு வைப்பதை ஏற்கனவே பார்க்கிறேன். புத்தகங்களை எரிக்கலாம். சுதந்திரமாய்ப் பேசுவதைத் தடை செய்யலாம். ஆனால், தகவல்துறையில் நடந்துவரும் புரட்சிகளை, அது சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல், சத்தமில்லாமல், வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள இஸ்லாமியர் வீட்டுக்குள் நுழைவதை யார் என்ன செய்ய முடியும்.

(3) வேறு என்ன வழி?

மேற்கத்திய அனுபவங்களை வைத்து அனுமானித்தால், மதத்தின் பிடியிலிருந்து வெளிவருவதன் சில பக்க விளைவுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருபுறம் பார்த்தால், மக்கள் வெளிப்படையாகவும், நன்கு விஷயஞானம் பெற்றவராகவும், சில சங்கடமான பிரச்னைகளை நேர்மையாய் எதிர்கொள்பவராகவும் இருக்கலாம். ஆனால் மறுபுறம் பார்த்தால், மதத்தைப் புறக்கணிக்கும் பலர் அதனுடன் சேர்த்து தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் பழமைவாதம் என்று எறிந்து விடுகிறார்கள். இதை வைத்துப் பார்த்தால் முஸ்லிம் மக்கள் பயப்படுவதையும் புரிந்து கொள்ளலாம். எங்கே இது கடைசியாய் தங்களை, வரம்பில்லாத அட்டகாசம், கேடுகெட்ட நுகரும் போக்கு, குழுவெறி கொண்ட சின்னச்சின்ன மதங்கள், பொதுவான கலாசாரச் சீரழிவு என்று கொண்டு போய் விடுமோ என்று மதத்தின் பிடியிலிருந்து வெளியே வந்து சுதந்தரமாய்ச் சிந்திக்கப் பயப்படலாம். இன்று இஸ்லாமியர் அல்லாதவர் உலகம், ஹாலிவுட், மெக்டொனால்ட்ஸ், ப்ளேபாய் என்றே அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்போது, அவர்கள் ஒண்டவந்த மேற்கத்தியப் பிசாசை விட ஊர்ப்பிசாசே மேல் என்று யோசித்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்குதான் இந்துசமயம் மற்றும் இதர ஆசியச் சம்பிரதாயங்கள் நல்ல ஒரு பங்காற்ற முடியும். மதத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தாலும் சிறப்பாய், ஒழுக்கமாய் வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கீழை கலாசாரங்களால் எடுத்துக் காட்ட முடியும். மதநம்பிக்கை என்பது யாரோ ஒரு தனிமனிதரின் சொந்த சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அதை வாழ்நாள் முழுவதும் சுமப்பதை விட எளிமையானது என்று அவர்களால் சுலபமாய்ச் சுட்டிக் காட்ட முடியும். இந்தியாவில் இது மேலும் சுலபம். இங்கே இன்னும் உயிருடன் இருக்கும், மானிடம் கண்ட மகோன்னதமான சித்தாந்தங்களை, அவற்றைத் தனிமனித அளவில் ஏற்றுக் கொண்டோ,
நிராகரித்தோ சிக்கல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் அவர்கள் சூழப்பட்டுள்ளார்கள். இந்துக்கள் தங்களின் மரபின் உன்னதமான விஷயங்களைத் தாங்களே மீட்டெடுத்து, சில மூடப்பழக்கங்களுக்குத் தலைமுழுகி விட்டு, உதவிக்கரம் நீட்டினால், சில நூற்றாண்டுப் பிரிவினையை மறந்து, தங்களின் வேர்களைத் தேடி, இன்னும் உயிருடன் இருக்கும் தங்கள் சொந்தக் கலாசாரத்துக்குத் திரும்புவது சரியான தீர்வாய் இருக்கும்.

oooOOooo[ நேசகுமாரின் முடிவுரை ]

கடந்த இரு மாதங்களாக தமிழோவியத்தில் வெளிவந்த இந்தத் தொடர் இத்துடன் முடிவுக்கு வருகிற நிலையில், இது குறித்த எனது சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதலாவதாக, இந்த படைப்பை சீரிய முறையில் பிரசுரித்து, சில சமயங்கள் நான் தாமதப் படுத்திய போதும் பொறுமையுடன் மடலிட்டு, என்னைத் தொடர்ந்து எழுதவைத்த தமிழோவியம் கணேஷ் சந்திரா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவருக்கு பக்கபலமாய் இருக்கும் தமிழோவியம் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

இரண்டாவதாக, இதை ஒவ்வொரு வாரமும் பொறுமையுடன் படித்து எனக்கு குறை, நிறைகளை சுட்டிக் காட்டியோர், இத்தொடரைப் பற்றி குழுமங்களிலும், மடல்களிலும் விவாதித்தோர் ஆகிய அனைத்து இணைய வாசகர்களுக்கும், இணைய வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கிப் படித்து என்னை ஊக்குவித்தோருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - இக்கட்டுரைகளைக் கண்டு வெகுளாமல், கருத்துச் சுதந்திரத்தை மதித்து உடன்படாதபோதும் கண்ணியம் காத்தமைக்கு.

இந்த மூன்று சாராருக்கும் நன்றிகளை நவிலும் இவ்வேளையில், உங்களிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு முக்கியமான கேள்விக்கும் எனது விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கின்றேன். பல வாசக அன்பர்களின் மனதில் கட்டுரையைப் படிக்குமுன்னரே ஏற்பட்டிருக்கக் கூடிய கேள்வி, உலகில் பல பிரச்சினைகள் இருக்க, ஏன் இந்த வஹி பற்றிய ஆய்வு என்பதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கின்றேன். என்றென்றும் உலகில் நன்மையும் தீமையும் கலந்தே இருந்து வருகின்றன. கீழத்தய மரபுகளின் அசைக்கமுடியா அடிப்படை நம்பிக்கை என்று ஒன்று உண்டு என்றால் , அது இந்த நன்மை-தீமை கலப்பும், இவற்றின் மோதல்களினால் உருண்டு முன்னேறும் உலகம் பற்றிய கோட்பாடாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆகவே, உலகில் பல பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். பிரச்சினைகள் இல்லா உலகம் என்பது கனவுலகம் மட்டும்தான்.இவற்றில், இன்றைய உலகை, உலக நாகரிகத்தை, பண்பாட்டை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல், தீவிர மதப்பிடிப்பு கொண்டு கடவுள் பற்றிய தமது கோட்பாடுகளே உயர்ந்தவை என்றும், மற்றவர்கள் எல்லாம் வழிகேட்டிலும், ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையிலும், உண்மையான கடவுளின் கட்டளைகளை புறக்கணித்து அக்கடவுளை அவமதிப்பு செய்பவர்களாக இருக்கின்றனர் என்று நம்பும் மதத்தீவிரவாதிகள். இவர்களது இலக்கிற்கு எதுவும் தப்புவதில்லை -  ருஷ்யாவின் குழந்தைகளாயிருக்கட்டும், நியூயார்க் நகரின் பணியாளர்களாயிருக்கட்டும், லண்டன் நகரின் பயணிகளாயிருக்கட்டும், காஷ்மீரின் பண்டிட்டுகளாயிருக்கட்டும், கோயம்பத்தூர் நகரவாசிகளாயிருக்கட்டும், கீழக்கரையின் இந்துக்களாகயிருக்கட்டும் - இவர்கள் எல்லோரும் உண்மையான இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பவர்கள், கடவுளுக்கு மாறு செய்பவர்கள், ஒழுக்கக் கேடானவர்கள் ஆதலால் இவர்கள் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள், இழிவு படுத்தப் படவேண்டியவர்கள், தத்தமது ஊர்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றப் படவேண்டியவர்கள் என்பதே இத்தகைய அடிப்படைவாதிகளின் உறுதியான எண்ணமாயிருக்கிறது.

இதனால், இந்தத் தீவிரவாதிகள் தங்களது அந்தஸ்து, குடும்பம், வேலை எல்லாவற்றையும் துறந்து கடவுளின் பாதையில் போரிடத் தயாராகின்றனர். இத்தகைய தீவிரவாதத்தை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக, வாய்ப்பில்லாத இளைஞர்களின் விரக்தியில் எதிரொலியாக பார்ப்பது தவறு என்பது இன்று உலக மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்று - ஒசாமா பின் லேடனுக்கு இல்லாத செல்வவளம் இல்லை. காஷ்மீரிகளின் வாழ்க்கை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருப்போரில் பெரும்பாலானோரை விட வளமானதாகவே இருந்தது, இருக்கிறது. பாலஸ்தீனத்தில் வெளியேற்றப்பட்டவர்களைப்போன்ற பலநூறுமடங்கு
இந்துக்கள், கிறிஸ்துவர்கள் பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும், காஷ்மீரிலிருந்தும் வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களெல்லாம், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆகவே, வருமானம் இல்லாதது, எங்கோ ஒரு மூலையில் உள்ள பாலஸ்தீனப்பிரச்சினை, இன்று இருந்துவரும் ஈராக் பிரச்சினை ஆகியவை இவற்றுக்கு காரணம் அல்ல. ஏனெனில் 1400 வருடங்களாக இந்த தீவிரவாதச்செயல்கள் நடந்து வருகின்றன. 'அல்லாஹ¤ அக்பர்' என்ற கோஷத்துடன் அழிக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், மதம் மாற மறுத்ததற்காக கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு இதன் காரணமாகவே 'ஹிந்துகுஷ்' என்று அழைக்கப்படுகின்ற பாக்-ஆ·ப்கான் மலைத்தொடர்கள், அடிமைகளாக்கப்பட்டு மிருகங்கள் போல் ஈரானுக்கு இழுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்தியர்களின் வரலாறுகள் உலகெங்கும் அதிர்ச்சியுடன் படிக்கப் படுகின்றன. ஆகவே, இந்த தீவிரவாதம் புதிதல்ல.  இந்தியர்களாகிய நாம் இந்த தீவிரவாதத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 1300 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம்.

இதை எப்படி எதிர்கொள்வது? வன்முறையை வன்முறை மூலம் தீர்க்க முடியாது. போலீஸ் கொண்டு இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக எதிர்கொள்வது ஜனநாயக முறையில் அமைந்த சுதந்திர நாடுகளால் இயலாத ஒன்று. ஏனெனில்,தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாது அமைதியான முறையில் வாழ்வு நடத்திவரும், சமூகத்தின் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் ஒரு மதக்கூட்டம் இதே எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக சென்ற மாதம் நடந்த லண்டன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அங்கே வசிக்கும் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள், மேற்கத்திய வாழ்வு முறை அழித்தொழிக்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் நல்லவேளையாக இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆகவே, இவற்றின் மூல காரணத்தை அமைதியான முறையில் ஆய்ந்து விவாதிப்பது, சிந்திப்பது ஆகியவையே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாத்தியமான முறை, சாத்வீக முறை.

ஆகவே, இச்செயல்களுக்கு என்ன காரணம்? நமது சக மனிதர்கள், சகோதரர்கள், என்றோ ஒருநாள் நமது உறவினர்களாக இருந்தவர்கள் மனதில் இத்தகைய மாறுபாடு ஏற்பட்டு அசுரபலத்துடன் நமது வாழ்க்கை முறைய, சமூகத்தை அழித்திட ஏன் இவர்கள் எண்ணுகின்றனர்? மாமன் மச்சான் என்று உறவுமுறை கொண்டாடி, வீட்டு விசேஷங்களுக்கு அழைத்து, நட்புடன் பழகும் நமது அண்டை அயலார்கள், மதவிஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்காமல், எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் வன்செயலகளில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்று ஆய்ந்து, அலசுவது இன்றையமையாத ஒன்றாகிறது.

இதனால்தான் வஹி பற்றிய இந்த ஆய்வுகள் அவசியமாகின்றன.

ஆம், முஸ்லிம் அல்லாதவர்கள் இழிவு படுத்தப் படவேண்டும் என்பது வஹி மூலம் ஏக இறைவன் அறிவித்த ஒன்று. பாகிஸ்தானில் இந்துச் சகோதரரர்களை இழிவுபடுத்தும் அப்பாவி முஸ்லிம்களை குறைசொல்லி பிரயோசனம் இல்லை. கா·பிர்கள் (முஸ்லிம் அல்லாதோர்) அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் என்பது இந்தியாவைப் படையெடுத்துவந்து அழித்த துருக்கியரின் தனிப்பட்ட எண்ணம் அல்ல, அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த கட்டளை.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை. நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று. ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின் வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும் வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத கட்டளைகள் -  இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை மு·மீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை, இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று.

ஆகவே, இத்தகைய மதவாதத்துக்கு, மத அடிப்படைவாதத்துக்கு, இவற்றிலிருந்து வெளிக்கிளம்பும் வன்கும்பல்களுக்கு, அவற்றின் தீவிரவாதச்செயல்களுக்கு, ஊற்றுக்கண்ணாயிருப்பது அல்லாஹ் எனும் அரபி இறைவன், தமது வானவர் ஜிப்ரீல் மூலம் தாம் தேர்ந்தெடுத்த முகமது என்ற நபிகள் நாயகத்துக்கு அறிவித்த
வஹியாகும். இந்த வஹி மூலமே அல்லாஹ் தம்மையும்,ஜிப்ரீலையும்,தமது தூதரையும் நம்பும் மு·மீன்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எவ்வாறு மாற்று மதத்தோரை நடத்தவேண்டும், அவர்களிடையே எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படித்தாக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டுள்ளார்...... அல்லது, அப்படி நம்பப்படுகிறது!

ஆம், இந்த நம்பிக்கையே இச்செயல்களின் பின்னால் உள்ளது. இந்நிலையில், இந்த வஹி பற்றி ஆய்வு செய்வதும், விவாதிப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும். மனிதர்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் மதப்பிளவுகளை தகர்த்து அனைவரையும் சகோதரர்களாக, நன்பர்களாக, சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர்களாக மாற்றும் என்பதே எனது நம்பிக்கை. அதனை நோக்கிய எனது சிறு முயற்சியே இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

இது சம்பந்தமாக விரைவில் இன்னுமொரு முக்கிய அறிவிப்பு தமிழோவியத்தில் வெளியாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard