New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் சொற்பொருள் கரபி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறள் சொற்பொருள் கரபி
Permalink  
 


தொல்காப்பியர், இன்பமும் - பொருளும் - அறனும் - என்றாங்கு, அன்பொடு புணர்ந்து ஐந்தினை மருங்கின்' என்றார்.

திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப்பட்ட 'அறத்தை, திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவர் எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார்.

அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பமே சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரீகப் புரட்சிக் கொடியை, அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்பஉேம் தோற்றம் போல’ என்று வீரப்பண் பாடி - வீறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக்கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300 ஆண்டுகட்கு முன்பே மறுத்து, தமிழர் பண்பாடுகளை நிலைநாட்டிய மதச் சீர்த்திருத்த ஞானப் புரட்சியாளரான திருவள்ளுவர் பெருமானுக்கு 1972, மே, 3-4-ஆம் நாட்களில் ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது.

தமிழ் மறைச் சிற்பியான திருவள்ளுவருக்கு உலகில் இத்தகைய ஒரு மத ஆய்வுப் போர்க்களம் அவர் வாழ்ந்திருந்த காலம் முதல் அன்று வரை வேற்று மதச் சவாலால் உண்டானதில்லை, உருவானதில்லை. அந்த விவரம் கீழே உள்ளது.

சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வநாயகம் என்பவர், திருவள்ளுவர் கிறித்தவரா?, ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார், எழு பிறப்பு: சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி, திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார்.

இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.

திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார்.

இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக, இந்தக் கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., பணியாற்றினார்.

புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள்.

இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்றத் திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுப்வத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் தினமணி', 'முரசொலி நாளேடுகளில் வந்ததால்தான்.

ஐந்தவித்தான் யார்?

திருக்குறள் பீடம் அழகரடிகள் அணித்தலைவர் : டாக்டர் ச. பால சுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பண்ணாராய்ச்சி வித்தகர். பேராசிரியர் பி. சுந்தரேசனார், சமண மதத் தலைவர், ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம், எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி, எம்.ஏ., ஆகியோர் ஐந்தவித்தான் யார்? அணி உறுப்பினர் அறிஞர்களாவர்.

வான் எது?

அணித் தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், எம்.ஏ., எல்.டி., விசாரத் (இந்தி), அணி உறுப்பினர்கள் : டாக்டர் என். சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம், எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன், எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு, நீத்தார் யார்?

அணித் தலைவர் : டாக்டர் வ.சுப. மாணிக்கம், எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் மு. கோவிந்தசாமி, எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி., புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் பொன்.ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., எம்.ஓ.எல்., பேராசிரியை சரஸ்வதி இராமநாதன், எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி., எழு பிறப்பு!

அணித் தவைர் : தவத்திரு. குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் இரா. சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., வித்வான் வை. இரத்தின சபாபதி, பி.ஓ.எல்.எம்.ஏ., மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வித்வான் வி.பி. நடராசன்.

சான்றோர் யார்?

அணித் தலைவர் : இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை, அணி உறுப்பினர்கள் : பேராசிரியர் டாக்டர் புலவர் மா. நன்னன், எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா, எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை சு.மி. டயஸ், ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., (சமனர்), பேராசிரியை சாரதா நம்பியாரூரான், எம்.ஏ., சோம. இளவரசு.

திருவள்ளுவர் கிறித்துவரா?

அணித் தவைர் : டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : க.த. திருநாவுக்கரசு, எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., (வரலாறு), எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., பி.எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன், எம்.ஏ.

இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வி. முனுசாமி, பி.ஏ., பி.எல். சிறப்புரை ஆற்றினார்.

இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர், அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான, நேர்மையான, கடமையான நீதியை, தீர்ப்பை வழங்கினார். என்ன அந்தத் தீர்ப்பு?

திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையை சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கர் மூலமாகவும், கிறித்துவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர்.

நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதர் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது. மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரை யில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளேன். உலகத்தை உய்விக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறிமுறைகள், ஒவ்வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கூறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ, இவரிடமிருந்து அவர் பெற்றார் என்றோ நினைப்பது இயல்பு. அதற்காக, அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டார்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள்.

எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில் நடைபெற்ற மதக்கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று என்று தேவநேயப் பாவாணர் தனது முடிவுரைத் தீர்ப்பைக் கூறி முடித்தார்.

இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., அவர்கள், மாநாட்டுக்கு வருகை தந்திருந்த புலவரேறு களை எல்லாம் வரவேற்றுத் தனது வரவேற்புரையில் பேசும்போது :

'திருக்குறளை யாத்த திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை.

வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஓர் அகராதி திருக்குறள்:

குறள் பிறந்த நாள் முதல் இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றாதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை.

எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம், தன் மதம் தாண்டவமாடுகின்றதே அன்றி, எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை.

கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே Second hand person னால் எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவைகூட, நேரிடையான பொருளை ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது.

ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும், மதத் தத்துவங்கள் அனைத்தும், தங்களுடைய அடிப்படைகளுக்கு ஏதாவது கிடைக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் திருக்குறள் பெருமை என்னே!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்தப் பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும், பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு தமிழ் மண்ணுக்குப் பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில் குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கூடச் சொல்லி விடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் இறப்பும் காலண்டரில் தெரிகின்றது.

குறளாசிரியர் எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார் என்றுகூட இதுவரைத் தெரியவில்லை.

அதன் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறளைத் தவிர: இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன், இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது.

வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தர் பெருமான் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கின்றது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது,

திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஓடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. அந்தந்தக் காலத்திலே உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக் காலத்தை வைத்தே திருக்குறளின் காலத்தை நிர்ணயித்தார்கள். அதனால் தான், குறளுக்கு உரையாசிரியர்கள் இவ்வளவு வேகமாகப் பெருகலானார்கள். திருக்குறளின் காலம் இதுவரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்போது அது எந்த மதத்துக்குச் சொந்தம்?

உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள காலம் தானா - திருவள்ளுவர் காலம்? அந்த அறிவுக்குத் திட்டவட்டமான கால வரம்பு கண்டதுண்டா?

திருக்குறளைப் பொறுத்தவரை காலம் கடந்த ஒன்றாக இருக்கும்போது, காலச் சக்கரத்தில் மதங்கள் அடிபடுகின்றபோது, தமிழன் என்ற முறையில் - எனக்கு மகிழ்ச்சி. என்றாலும், ஆராய்ச்சி என்ற முறையிலே அது வெறுப்பைத்தான் அளிக்கின்றது.

எனது திருக்குறளை யாரும் பாராட்டலாம் என்பது வேறு எவனும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது வேறு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியார் கூறினார். ஆனால், ஒரு மதத்திற்கே தந்து என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனத்திலிருத்த வேண்டுகின்றேன். இந்தக் காலத்தில் ஒரு பூஞ்செடியைக்கூட, ஒருவன் தனி உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், இயற்கை முன்னே அது பொதுச் சொத்து. எவனுடைய விரல்களிலிருந்து எழுத்தாணி அசைந்தாலும் சரி, அவன் எழுதுகின்ற எழுத்து அவனது அடுக்களைக்குச் சொந்தமல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அது, கட்டளையில்லாமல் வருகின்ற, காற்றில் கலக்க வேண்டிய பொதுச் சொத்தாகும்.

நேரிடையாகவே நான் கேட்கிறேன். உங்களுடைய மதங்கள் கடவுளால் நேரிடையாகப் படைத்ததுதானே!

அதே கடவுளுடைய பொதுத் தன்மையில் ஓர் அனுகூட இருக்காதா மனிதனுக்கு?

ஆகவே, இங்கே ஆய்வுக்காக வந்திருக்கின்ற முப்பத்தெட்டுப் புலமையாளர்களையும் நான் தாள் பணிந்துக் கேட்கின்றேன்.

உங்களுடைய மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து, வெளி வருகின்ற ஆற்றல் படைத்த சிறகுகள், உங்களுக்கு முளைக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

அப்படி முளைக்காவிட்டால், உங்களுடைய முட்டைகளை நீங்கள் சோதனையிடுங்கள். மனிதன் சரி பார்க்க முடியாத மிருகமல்ல. அத்தகைய நிலையிருந்தால், அவனைக் கடவுள் படைக்கவில்லை!

சிந்தனைகள் மிருகத்திற்கு இல்லாதபோது, மனிதனுக்கு மட்டும் இருக்கும்போது, உரிமைகள், வேட்கைகள் இவற்றைத் தாண்டிச்  சிந்திக்கின்ற அவனுக்கு, அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவனைக் கடவுள் படைக்கவில்லை.

திருக்குறள் என்பது, கையில் கிடைத்த பலகாரமல்ல. உங்களது விருப்பம் போல பங்கிடு செய்து உண்பதற்கு.

மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.

திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் துணுக்கம், முடியாத மர்மக் கதையாகவே இருக்கின்றது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறிவிட்டால், பிறக்கப் போகும் தொட்டில்கள், உங்களை மறந்து விடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப சிந்தியுங்கள்.

உங்களுடைய விவாதங்கள் அனைத்தையும், அய்யன் திருவள்ளுவரது உயிர்ச் சொல்லோட்டக் குறள் நாதங்கள் காற்றிலிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

அய்யன் திருவள்ளுவர் முன்னாலே நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக் கூடாது. அவர் எதிர்பார்த்த, முதிர்ச்சியடைந்த முழு மனிதனை உங்களுடைய ஆய்விலே உருவாக்கிக் காட்டுங்கள்.

திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு, அண்ட அளவில் வைத்து மறைந்த சிறு புள்ளியாகக் கருதுகின்றேன்.

ஏனென்றால், அய்யன் திருவள்ளுவன் அண்டத்தைவிட விரிந்தவன் என்பது பொது மக்கள் கருத்து.

இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள், தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யார் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

தன் கருத்தே எதிர்காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல். -

பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்றபோது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது?

நேற்றைய கருத்தே - இன்றையே கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்?

'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நமது திருக்குறள், எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளத்தத்தின் கருத்து, இசுலாமியத்தின் கருத்து, கிறித்தவர்களின் கருத்து, திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்து கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை, கருத்து வண்ணங்கள் இதுவரையில் ஆய்வு நிறக் கலையிலே தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது.

திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம்! நாத மர்மம்! கருத்துச் சூழல்! சிந்தனை மயக்கம்! அறிவின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல் குறி பார்த்தடிக்க முடியாத குறி!

விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிச வாய்வு:

மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து.

அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் விசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த ஒருவன்கூட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே - ஏன்?

ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய, தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும், சூத்திர வடிவில், யாப்பு செய்யுள் வடிவில், நுட்பம் செறிந்த செஞ் சொற்களைப் பெய்து, மந்திரம் - மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அது வராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

எனவே, மனிதன் என்பவன், எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால்தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும்.

இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு: அவற்றை ஆழ்ந்து, கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு

தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை!

தமிழ் மொழியில் அத்தகைய சங்க கால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச்சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது மனிதன் மனம், முழு முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக் கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது.

ஏனென்றால், திருவள்ளுவர் மனம் ஒரு திறந்தவெளி ஒன்றுமில்லாத £60601,363 (""status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") @(5:55, softus is gloss.

எழுதிய அய்யன் திருவள்ளுவன் - இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா?

மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் இயேசு பெருமானுக்குச் சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா?

திருக்குறளுக்கு 空_6ög கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்றுவரை கூடினவா?

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வி. முனுசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக்கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே! இருந்தாலும், இந்த நேரத்தில் இதே கிறிஸ்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல, ஜி.யூ. போப்பைப் போல, வீரமா முனிவரைப் போல!

கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால், வேறொரு கோணத்தில் நோக்கும்போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது.

திருக்குறள் மத நூல் அல்ல. வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதி நூல்:

வேண்டுமானால் இவ்வாறு கூறலாம். அய்யன் திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மதக் கருத்துக்களை ஏற்று, அவற்றை மறுத்து, மதச் சார்பற்ற தமிழர் நெறிகட்குத் தனித்துவம் தந்துள்ளார் என்று! நீங்கள் தான் அதற்கு கட்ட வேண்டும் நியாய வரம்பு!

மதநூல் என்றால் அதிலே மாயம் இருக்கும் அற்புதம் கூத்தாடும்: அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு விலா நோகச் சிரிக்கும் திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே!

மதமே கூடாது என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஓடுகின்ற அருவி.

பொதுவாகப் பார்ப்பவன் மனிதனானான். குறிப்பாகப் பார்ப்பவன் மதவாதியானான்!

'செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை என்றான் - கார்ல் மார்க்சு!

தேவையான ஆசைகளைப் பூர்த்திச் செய்து கொள்பவன் திராணியுள்ள மனிதன் என்றான் - ஏஞ்சல்சு. ஆனால், அய்யன் திருவள்ளுவர், மனக் கலவரத்திலே ஈடுபட்டுத் தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார்.

மனம், என்ன என்பதை விளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர், அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னார். மனத்தின் கண் மாசிலனாதல் என்ற நிலையை உருவாக்க நினைத்தார்!

மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான்சு நாட்டுத் தத்துவவாதிகளான ஆல்பிரைட் கேமு-வைவிட, ஜீன்பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு உலகத் தத்துவ ஞானி திருவள்ளுவரே!

வெறும் டைலக்டிகல் அனாலிசஸ் என்று சொல்வார்களே, அதைத் திருவள்ளுவர் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், அவர் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்க மாட்டார் - படித்தவர்களிடையே சென்று சேர்ந்திருப்பார்,

மனம் உள்ளவரை மாச்சர்யங்கள் உண்டு. அதன் அடிப்படையில் ஒழுக்கங்களை கற்பிப்பது இமாலயப் பிரச்சனை.

'நீங்கள் வெறுமனே இருங்கள் ("Be in nothingness) என்று கூறுவதற்குப் ஃபிரெஞ்சு நாடு காத்திருக்கிறது.

ஆனால், எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன் என்ற தத்து வத்தை 1972-ஆம் ஆண்டுக்கு முன்பே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன். இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை - மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை. என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை. அறிவிலே நுட்ப ஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதீகன் ஆன்மீக சாயம் பூசிவிட்டான் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை - புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார்.

இந்த விசாரணையில், நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ! - மீட்டுக் கொள்வீர்களோ - அது எனக்குத் தெரியாது.

மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை - அது ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு:

அதற்குமேல் சரித்திரமில்லை - அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.

திருக்குறளின் எழுத்துக்கள் - வைதீக அடிப்படையில், வானத்தி லிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது. மிருகத்தைவிட - ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன், இவ்வளவு தான் சிந்திருத்திருப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ, தெரிவதற்கு பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்கு காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற இறுதி ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது!

அவருக்கென்று ஒரு மதம் இல்லை, அவ்வளவு தானே ஒழிய, வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தகைய திருவள்ளுவரை இந்த ஆய்வு மாநாடு என்ற போர்க் களத் தில் நீங்களும் சந்திக்கின்றீர்கள் - புலவர் தெய்வநாயகமும் சந்திக்கின்றார். நீங்கள் இருவரும், காலமாகிக் காணாமல், காற்றிலே கலந்த திருவள்ளுவரைத் தேடுவதற்காக முனைகின்றீர்கள்.

பார்வை ஒழுங்காக இருப்பவர்களுக்கே பாதாளம் தெரியும் என்றான் அரிஸ்டாட்டில்.

திருக்குறள் ஆழத்தை நோக்கி இறங்குவதற்கு வந்திருக்கின்ற தண்டமிழ்ச் சான்றோர்களே!

உங்கள் முன்னாலே விரிக்கப்பட்ட ஆறு கிறித்துவப் புத்தகங்கள் வழியாக, நீங்கள் உதிர்க்கின்ற கருத்துக்கள், இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரைக் காட்டுவதற்காகவாவது அமைய வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசையாகும்.

பல நூற்றாண்டுகட்கு ஒரு வள்ளுவராகப் பிறப்பவர் தான் திருவள்ளுவர்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard