New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறுபாணாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிறுபாணாற்றுப்படை
Permalink  
 


சிறுபாணாற்றுப்படை

http://sangacholai.in/10-3.html

மணி மலை பணை தோள் மா நில மடந்தை
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புது பூ செம்மல் சூடி புடை நெறித்து		5
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்று கதிர் கடாவுறுப்ப		10
பாலை நின்ற பாலை நெடு வழி
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணி வயின் கலாபம் பரப்பி பல உடன்		15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என	20
மால் வரை ஒழுகிய வாழை வாழை
பூ என பொலிந்த ஓதி ஓதி
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி		25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்		30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ		35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல		40
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா		45
குளவி பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று	50
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பின்
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த		55
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற		60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான்
தென் புல காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன்		65
தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்		70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை		75
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்	80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை
நாடா நல் இசை நல் தேர் செம்பியன்
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய		85
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்		90
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி
வால் உளை புரவியொடு வையகம் மருள
ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ்		95
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை
கமழ் பூ சாரல் கவினிய நெல்லி			100
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவ கடல் தானை அதிகனும் கரவாது
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை	105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த
காரி குதிரை காரியொடு மலைந்த			110
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம்
விரி கடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள்		115
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொல் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும்			120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை		125
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக இ நாள்
திறவா கண்ண சாய் செவி குருளை		130
கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்		135
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள்		140
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்		145
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர		150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்		155
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்		160
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்
பைம் நனை அவரை பவழம் கோப்பவும்
கரு நனை காயா கண மயில் அவிழவும்		165
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும்
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி		170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு		175
தேமா மேனி சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர்
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து		180
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மான தோன்றும்		185
மருதம் சான்ற மருத தண் பணை
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர்
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை		190
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து
தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்	195
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப		200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன		205
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்	210
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும்
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த		215
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த
பல் மீன் நடுவண் பால் மதி போல
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி		220
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து
கான குமிழின் கனி நிறம் கடுப்ப			225
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது		230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை மாசு இல்		235
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி
கா எரியூட்டிய கவர் கணை தூணி
பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்		240
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி		245
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு
பருவ வானத்து பால் கதிர் பரப்பி			250
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல		255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை
கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ		260
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு	265
எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி
குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
இடிந்த கரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)இடமெல்லாம் அறல்பட்டு,					5
மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
இரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று,
வெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள் கால்களைக் கிழிப்ப,
இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்
காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால்,						10
பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய,
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி -
மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து,
எண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று,
(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த		15
மயில்கள் - அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து
வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய்,
இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல
திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று			20
பெருமையையுடைய மலையில் வளரும் வாழை - அவ்வாழையின்
பூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற) 
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,			25
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல
(கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த
முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்;				30
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க,
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,					35
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
(புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
(தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்,
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,					40
கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,					45
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 50
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த
கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும்,
(நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும்,
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், 		55
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற,	60
விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
தத்திவரும் நீரை(த் தனக்கு) எல்லையாகவுடைய கொற்கை அரசனும்;
தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்,	65
தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே; அதுவன்றியும்,
நறிய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே					70
(சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்)தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,
எழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து,
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து,
அழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,			75
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
கிழக்கு நாடுகளின் காவலருடைய குடியிலுள்ளான் - பகைவரின்
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும் 			80
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(தான்)விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும்,
மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்துக்
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த							85
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்,
பெரிய மலை நாட்டையுடைய பேகனும்; வண்டுகள் உண்ணும்படி
நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த
சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரினைக் கொடுத்த,
மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் மலைச்சரிவுகளையுடைய					90
பறம்பின் அரசன் பாரியும்; ஒலிக்கும் மணியினையும்,
வெள்ளிய தலைச்சிறகுகளையும் உடைய குதிரையோடு, (தன்)நாட்டையும், (ஏனையோர்)வியக்கும்படி
அருளினையுடைய நன்றாகிய மொழியினால் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும் 
கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும்
இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும்	95
நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும்,
ஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும்,
வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,
ஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில்
கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின் 			100
அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும், 
எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,
ஆரவாரமுள்ள கடல்(போலும்) படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்; மறையாமல்,
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,		105
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே
நறிய பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும்,
சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும்,
காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் , 				110
ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்; என்று கூறப்பட்ட அக்காலத்தே,
(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு மாற்றான திணிந்த தோளினையுடைய
எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்,	115
நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,				120
குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்,
யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும்,
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய	125
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக - இன்று,
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,					130
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்:
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,		135
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; (மதம்)வீழ்கின்ற கதுப்பினையும்,			140
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம், நீங்களும்
இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும்,
பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின்,				145
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,					150
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,
(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -
உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்				155
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,
(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட, 
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய	160
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,
தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்,		165
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்,
கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்,
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்,
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,			170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய
வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் -
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற)
எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,				175
தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர்,
நறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும்,
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து 	180
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும்,						185
மருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும்,
சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் -
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,			190
பிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர், 					195
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்			200
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்,
தூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே,
கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,
கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற		205
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி -
(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,
இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,
செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும், 		210
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
வாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
(தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்,
ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும்,
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,			215
அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
(புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று,
இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி -					220
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,
அழகிய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
மணியை நிரைத்து வைத்ததைப் போன்ற அழகினையும்; பொருந்தச் செய்து,
வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில்)வகை அமைந்த குடத்தின் மேல் உள்ள,
காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,								225
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, ‘பலகாலும்						230
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்' எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும்,
நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் - மாசில்லாததும்,					235
மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கவர்த்த கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய,
பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,	240
மடைநூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,
ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இள வெயில் (தரும்)ஞாயிற்றை எள்ளி நகையாடும் தோற்றமுடைய,
விளங்குகின்ற பொன்(னாற்செய்த) (உண்)கலத்தில் (நீ)விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து,
குறைவுபடாத விருப்பத்தால் தானே நின்று உண்ணச்செய்து,					245
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி, (அதன்)பின்னர்,
(தன்)படைத்தலைவர் கொண்டுவந்த நல்ல நிறத்தினையுடைய பொருள் குவியலோடு,
கூதிர்க் காலத்து வானில் பால் (போலும்)ஒளியைப் பரப்பி,						250
(முழு)உருவ அழகுத் திங்கள் ஒளிவட்டம் கொண்டாற் போல,
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,							255
உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்,
வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,	260
அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில் - மெல்லிய தோளினையும்,
துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து,
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,		265
உரும் (தான் சேறற்கு)இடித்துச் சென்ற (பிறர்)ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய,
மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனான - கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும்,
(பிறர்பால் நில்லாதே)போகின்ற புகழ் (தன்னிடத்தே)நிலைபெறக் காரணமான குணத்தையும் உடைய -
நல்லியக்கோடனை நீயிர் விரும்பியவராய்ச் செல்வீராயின்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
இடிந்த கரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)இடமெல்லாம் அறல்பட்டு,					5
மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
இரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று,
வெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள் கால்களைக் கிழிப்ப,
இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்
காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால்,						10
பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய,
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி -
மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து,
எண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று,
(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த		15
மயில்கள் - அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து
வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய்,
இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல
திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று			20
பெருமையையுடைய மலையில் வளரும் வாழை - அவ்வாழையின்
பூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற) 
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,			25
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல
(கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த
முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்;				30
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க,
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,					35
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
(புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
(தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்,
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,					40
கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,					45
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 50
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த
கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும்,
(நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும்,
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், 		55
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற,	60
விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
தத்திவரும் நீரை(த் தனக்கு) எல்லையாகவுடைய கொற்கை அரசனும்;
தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்,	65
தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே; அதுவன்றியும்,
நறிய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே					70
(சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்)தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,
எழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து,
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து,
அழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,			75
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
கிழக்கு நாடுகளின் காவலருடைய குடியிலுள்ளான் - பகைவரின்
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும் 			80
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(தான்)விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும்,
மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்துக்
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த							85
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்,
பெரிய மலை நாட்டையுடைய பேகனும்; வண்டுகள் உண்ணும்படி
நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த
சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரினைக் கொடுத்த,
மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் மலைச்சரிவுகளையுடைய					90
பறம்பின் அரசன் பாரியும்; ஒலிக்கும் மணியினையும்,
வெள்ளிய தலைச்சிறகுகளையும் உடைய குதிரையோடு, (தன்)நாட்டையும், (ஏனையோர்)வியக்கும்படி
அருளினையுடைய நன்றாகிய மொழியினால் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும் 
கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும்
இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும்	95
நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும்,
ஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும்,
வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,
ஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில்
கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின் 			100
அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும், 
எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,
ஆரவாரமுள்ள கடல்(போலும்) படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்; மறையாமல்,
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,		105
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே
நறிய பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும்,
சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும்,
காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் , 				110
ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்; என்று கூறப்பட்ட அக்காலத்தே,
(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு மாற்றான திணிந்த தோளினையுடைய
எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்,	115
நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,				120
குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்,
யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும்,
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய	125
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக - இன்று,
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,					130
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்:
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,		135
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; (மதம்)வீழ்கின்ற கதுப்பினையும்,			140
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம், நீங்களும்
இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும்,
பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின்,				145
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,					150
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,
(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -
உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்				155
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,
(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட, 
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய	160
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,
தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்,		165
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்,
கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்,
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்,
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,			170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய
வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் -
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற)
எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,				175
தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர்,
நறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும்,
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து 	180
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும்,						185
மருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும்,
சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் -
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,			190
பிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர், 					195
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்			200
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்,
தூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே,
கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,
கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற		205
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி -
(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,
இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,
செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும், 		210
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
வாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
(தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்,
ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும்,
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,			215
அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
(புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று,
இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி -					220
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,
அழகிய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
மணியை நிரைத்து வைத்ததைப் போன்ற அழகினையும்; பொருந்தச் செய்து,
வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில்)வகை அமைந்த குடத்தின் மேல் உள்ள,
காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,								225
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, ‘பலகாலும்						230
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்' என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்' எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்' எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்' எனவும்,
நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் - மாசில்லாததும்,					235
மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கவர்த்த கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய,
பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,	240
மடைநூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,
ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இள வெயில் (தரும்)ஞாயிற்றை எள்ளி நகையாடும் தோற்றமுடைய,
விளங்குகின்ற பொன்(னாற்செய்த) (உண்)கலத்தில் (நீ)விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து,
குறைவுபடாத விருப்பத்தால் தானே நின்று உண்ணச்செய்து,					245
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி, (அதன்)பின்னர்,
(தன்)படைத்தலைவர் கொண்டுவந்த நல்ல நிறத்தினையுடைய பொருள் குவியலோடு,
கூதிர்க் காலத்து வானில் பால் (போலும்)ஒளியைப் பரப்பி,						250
(முழு)உருவ அழகுத் திங்கள் ஒளிவட்டம் கொண்டாற் போல,
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,							255
உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்,
வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,	260
அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில் - மெல்லிய தோளினையும்,
துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து,
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,		265
உரும் (தான் சேறற்கு)இடித்துச் சென்ற (பிறர்)ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய,
மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனான - கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும்,
(பிறர்பால் நில்லாதே)போகின்ற புகழ் (தன்னிடத்தே)நிலைபெறக் காரணமான குணத்தையும் உடைய -
நல்லியக்கோடனை நீயிர் விரும்பியவராய்ச் செல்வீராயின்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பத்துப்பாட்டு – சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை –  Sirupānātruppadai  

Copyright © All Rights Reserved

Translated by Vaidehi Herbert

பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 269

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

This song has 269 lines in Āsiriyappā/Akaval meter, and was written by Nallūr Nathathanār. The King is Ōymān Nalliyakōdan, the ruler of Māvilangai.  This is the shortest of the guidance poems.   The valor and greatness of the king is mentioned.  Also mentioned are the seven great benefactors of ancient Tamil Nadu. There is a beautiful description of viralis.

நிலமகளின் தோற்றம்

மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று, (1–3)

The Land as a Woman

The wide land as a young woman
has sapphire-yielding mountains
for breasts and bamboo for arms.
Like a swaying pearl strand on her
breasts, a forest stream cascades down,
coming from afar, distressing the mountain.

Notes:   நச்சினார்க்கினியர் உரை – இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று.  இது மெய்யுவமம்.  பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார்.

Meanings:   மணி மலை – mountains where gems (sapphires) can be found, sapphire-colored mountains, பணைத்தோள் – bamboo-like arms, மாநில – big land, மடந்தை – young woman, அணி முலை – beautiful breasts, துயல் வரூஉம் – move (வரூஉம் – இன்னிசை அளபெடை), ஆரம் போல – like a pearl strand, like sandal garland, செல் புனல் – flowing waters, உழந்த – distressing, சேய்வரல் கான் யாற்று – of a forest stream coming from a distance

கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்துக்   5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல், (4-6)

On the eroding shore of the stream
is a fragrant grove where cuckoos
prick fresh wild jasmine blossoms
and drop them, blanketing the fine,
black sand that resembles a
a maiden’s curly, spread hair adorned
with flowers.

Notes:  கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.

Meanings:    கொல் கரை – shores attacked by the water, eroding shores, நறும் பொழில் – fragrant groves, குயில் குடைந்து – cuckoos prick, உதிர்த்த புதுப்பூ – dropped new flowers, செம்மல் – jasminum grandiflorum, வாடல் பூ, பவழமல்லி, சூடி – wore, புடை – sides, நெறித்து – wavy, curly, கதுப்பு விரித்து அன்ன – like spread hair, காழ் அக – with black color, நுணங்கு – fine, அறல் – black sand

இளைப்பாறும் பாணன்

அயில் உருப்பு அனைய ஆகி, ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழிநாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்பப்,   10
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, (7-12)

The Bard’s Family rests under a Kadampam Tree

The late summer’s morning sun
spreads its intense hot rays on
the long wasteland path.
The day has started to heat up.

They walked slowly on pebbles
as hot as iron, that tore into their
skin, and rested under the dappled
shade of a kadampam tree.

Notes:  வேனில் நின்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளவேனிற் பருவம் நிலைபெற்ற.  வழிநாள் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னாகிய முதுவேனில்.

Meanings:    அயில் உருப்பு – heat like that of iron, அனைய – like, ஆகி – was, ஐது – slowly, நடந்து – walked, வெயில் – hot sun, உருப்புற்ற – became hot, வெம்பரல் – hot pebbles, harsh pebbles, கிழிப்ப – tearing, வேனில் – early summer time, நின்ற – happening, வெம்பத வழிநாள் – in the late summer season that comes after summer, very hot season, காலை ஞாயிற்று கதிர் – morning sun’s rays, கடா உறுப்ப – spreading the heat, பாலை நின்ற – with the attributes of the wasteland, பாலை நெடுவழி – long wasteland path, long pālai land path, சுரன் முதல் – in the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), மராஅத்த – of a kadampam tree, கடம்பு, வெண்கடம்பு – Kadampa Oak, Anthocephalus cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), வரி நிழல் – dappled shade, அசைஇ – rested, stayed (அசைஇ – சொல்லிசை அளபெடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விறலியரின் அழகு

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என,
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி;  (13-22)

Beauty of the Viralis

The oiled, black hair of the viralis
is beautiful like the dark clouds that
shower delicate rain. Dancing pea****s
with sapphire hued plume eyes are ashamed
to be in their presence and hide themselves
among a flock of peahens.  Their bare feet
lacking ornaments are pretty like the
tongues of tired, distressed dogs.  Their
thick thighs placed close to each other
are like the trunks of dark female elephants
that drape down touching the ground.
Their lovely hairstyles appear like flowers
on banana trees, thick like thighs, growing
continuously on the tall mountains.

Notes:  Viralis are female artists who danced and sang. பொருநராற்றுப்படை 40 – இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், நற்றிணை 225 – வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல்லியல் மகளிர் ஓதி அன்ன.  ஒழுகிய வாழை (21) – நச்சினார்க்கினியர் உரை –  ஒழுங்குபட வளர்ந்த வாழை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையறவு படாது ஒன்றன் பின் ஒன்றாய்க் கிளைத்து வாழும் இயல்பினுடைய வாழை மரம்.  குறங்கு என (20) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் தொடையைப் போலத் திரண்ட வாழை, செறிந்த குறங்கின் குறங்கு (20) – நச்சினார்க்கினியர் உரை – ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும்.  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  ஒற்றைமணிமாலை அணி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்றைக்கூறி முடித்த பின்னர் அதன்கண் அமைந்த பொருளையே மீண்டும் உவமையாக எடுத்து நிரல்படக் கூறுதல்.

Meanings:    ஐது வீழ் – delicately falling, இகு பெயல் – falling rain (implies the clouds that come down as rain), அழகு கொண்டு அருளி – is beautiful and graceful, நெய் கனிந்து – decorated with oil, இருளிய கதுப்பின் – with black hair, கதுப்பு என – like hair, மணி வயின் கலாபம் – eyes in the plumes that are like sapphire, பரப்பி – spread, பலவுடன் – with many, மயில் மயில் – pea****s and peahens, குளிக்கும் – hiding, சாயல் – beauty, nature, சாஅய்  உயங்கு நாய் – tired and distressed dogs, tired and lean dogs (சாஅய் – இசை நிறை அளபெடை), நாவின் – like their tongues, நல் எழில் – fine beauty, அசைஇ – causing sorrow (அசைஇ – சொல்லிசை அளபெடை), வயங்கு இழை – splendid jewels, உலறிய – devoid, அடியின் – with feet, அடி தொடர்ந்து – with the feet, ஈர்ந்து – attracted down, நிலம் தோயும் – touch the land, இரும் பிடி – black/big female elephant, தடக் கையின் – like the big trunks, சேர்ந்து – thick, rounded, உடன் – placed one next to another, செறிந்த – close, குறங்கின் – and thighs, குறங்கு என – like thighs, மால் வரை – tall mountains, ஒழுகிய வாழை – banana trees that are growing properly, banana trees that are growing continuously, (வாழ் ஐ – living forever, living well), வாழைப்பூ என – like banana flowers, பொலிந்த ஓதி – splendid hairstyle

நளிச்சினை வேங்கை நாள் மலர் நச்சிக்
களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப்   25
பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை; முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் 30
மட மான் நோக்கின் வாணுதல் விறலியர், (23-31)

They wear fresh vengai flowers that
have blossomed on dense tree branches.
Honeybees that come to drink honey
from the blossoms buzz around their bodies
thinking their sallow spots are flowers.

Their desire-giving breasts with jewels
are lovelier than the bright buds of kōngam
trees.  Sweet juice in the clusters of palmyra
fruits that are like their breasts, is like the
saliva in their mouth.

With virtue suited to wear mullai blossoms
of the forest with white kullai flowers that
are like the teeth of women, their foreheads
gleam, and their delicate glances are like
those of deer.

Notes:  Po. Ve. Somasundaranar has interpreted the words on line 30 as ‘முல்லை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய’ in his commentary.  The phrase முல்லை சான்ற கற்பின் occurs also in Akanānūru 274 and Natrinai 142.  Na. Mu. Venkatasami Naattaar has interpreted the words முல்லை சான்ற கற்பின்   as ‘முல்லை மலர் அணிந்த கற்புபினையுடைய’ in his Akanānūru commentary.  Po. Ve. Somasundaranar interpreted the words as ‘முல்லை மாலை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய’ in his Akanānūru commentary.  Avvai Duraismy interpreted the words as முல்லை இருத்தல் என்னும் கற்பு நெறி in his commentary for Natrinai 142.  முல்லை முறை in Paripadal 15 has been interpreted by Po. Ve. Somasundaranar as முல்லை மகளிரின் கற்பு. கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:   நளிச் சினை – closely growing branches, large branches, வேங்கை – Kino Tree, Pterocarpus marsupium, நாள் மலர் – day’s fresh flowers, நச்சி – desiring, களி சுரும்பு – honey bees happy with drinking nectar, அரற்றும் – they hum, they buzz, சுணங்கின் – because of the yellow spots, சுணங்கு – yellow spots, பிதிர்ந்து – scattered, யாணர் – fresh, abundant, கோங்கின் அவிர் முகை – bright buds of kongam trees, Cochlospermum gossypium, a gum producing tree, எள்ளி – teasing, பூண் அகத்து ஒடுங்கிய – staying on their chests with jewels, வெம்முலை – desire-giving breasts, desirable breasts, முலை என – like breasts, வண் கோள் – big clusters, பெண்ணை – palmyra palm, வளர்த்த – raised, நுங்கின் இன் சேறு – like the sweet water of nungu, இகுதரும் எயிற்றின் – with secreting teeth, எயிறு என – like teeth, குல்லை – sacred basil, or cannabis, அம் – beautiful, புறவில் – in the forest land, குவி – pointed, முகை – buds, அவிழ்ந்த – opened, முல்லை சான்ற கற்பின் – with the virtue suitable to wear mullai flowers, மட மான் நோக்கின் – with the looks of a delicate deer, வாள் நுதல் – bright forehead, விறலியர் – female artists who sing and dance

விறலியரின் காலைத் தடவி விடும் இளையர்கள்

நடை மெலிந்து அசைஇய, நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப், (32 – 33)

The Bard’s young trainees Massage their Feet

The bard’s young apprentices gently
massage their small, pretty and delicate
feet that are tired of walking.

Meanings:   நடை மெலிந்து – slow walking, அசைஇய – tired (அசைஇய – சொல்லிசை அளபெடை), நல் மென் – fine and delicate, சீறடி – small feet, கல்லா இளையர் – untrained/uneducated youngsters (bard’s apprentices), மெல்ல – delicately, தைவர – massaged

பரிசில் பெற்ற பாணன் குடும்பத்துடன் வந்த பாணனைச் சந்திக்கிறான்

பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ,   35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை;
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்,
துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த முதுவாய் இரவல! (34-40)

A Bard who had received Gifts meets the the Bard with a Family

and Guides him

O wise man with sorrow and deep
frustration over not finding donors
in this world, who desires donors,
whose stress of walking has ended,
whose bard is playing sweetly and
in a perfect manner, nattappādai
and pālai tunes, holding the lute on

his left side, its tightly twisted strings

appearing like they were made with

gold!  Listen to me!

Notes:  பாலை (36) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இஃது ஐந்து வகைப்படும்.  தக்கராகம், நோதிறம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் என்னும் ஐந்துமாம்.  இயங்கா வையத்து (38) – நச்சினார்க்கினியர் உரை – வள்ளியோர் இன்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே.  இனி இயங்கும் வையம் சகடமாகலின் உலகத்திற்கு இயங்கா வையமென வெளிப்படை கூறிற்றுமாம்.  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – அசைதல் இல்லாத பூமியிலே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை-  விறலியரின் அசைஇய அடியினை இளைஞர் வருடவும், சீரியாழைப் பாண்மகன் இயக்கவும் முனிவு இகந்திருந்த இரவில என்பதாம்.  குறிஞ்சிப்பாட்டு 146 – நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 –  நைவளம் பழுநிய நயந்தெரி பாலை.  புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 – பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்.

Meanings:   பொன் வார்ந்தன்ன– like made into strings with gold,  புரியடங்கு நரம்பின் – with twisted tight strings, இன்குரல் – sweet voice, சீறியாழ் – small lute, இடவயின் – on the left side, தழீஇ – hugging (சொல்லிசை அளபெடை), நைவளம் – nattapādai melody, secondary melody of Kurinji, University of Madras Lexicon, பழுநிய – perfect, நயந்தெரி – sweetness seen, பாலை –  pālai tunes, கைவல் – talented, பாண்மகன் கடன் அறிந்து இயக்க – a bard knowing his duty and playing well, இயங்கா வையத்து – in this world, in this world with no movement, in this moving world, the world that is not a wagon (இயங்கா வையம் – இயங்காத வண்டியாகிய உலகம், பூவா வஞ்சி என்றும்  சூடா வஞ்சி என்றும் வஞ்சி நகரைக் குறித்தல் போன்று), வள்ளியோர் – donors, நசைஇ – desiring (சொல்லிசை அளபெடை), துனி கூர் – great anger, great hatred, எவ்வமொடு – with sorrow, துயர் ஆற்றுப்படுப்ப – controlled by sorrow, முனிவு இகந்து இருந்த – with the sorrow of walking ended, முதுவாய் இரவல – O man wise man who seeks gifts

சேர நாட்டின் வளமை

கொழுமீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயராக்,   45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)

Prosperity of Chēra Nādu

In the Chēra country, a buffalo
with a big mouth grazes on
waterlilies with large petals,
trampling on fat fish and
chopping them with its feet.

It walks through turmeric plants
as the leaves rub on its back with
fine hairs, chews its cud spreading
the fragrance of waterlilies, and
lies on a bed of wild jasmine, in
the shade of a jackfruit tree on
which delicate pepper vines grow.

Notes:  மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு.

Meanings:   கொழு மீன் – fat fish, குறைய – to be ruined, to be chopped, ஒதுங்கி – walked, வள் இதழ் – big petals, thick petals,  கழுநீர் – kuvalai flowers, waterlilies, மேய்ந்த – grazing, கயவாய் – big-mouth, wide mouth, எருமை – buffalo, பைங்கறி – tender black pepper (vines), நிவந்த – spread, பலவின் – jackfruit tree’s, நீழல் – shade (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), மஞ்சள் மெல் இலை – tender turmeric leaves, மயிர்ப்புறம் – back side with fine hair, தைவர – rubbed, விளையா இளங்கள் நாற – with the fragrance of tender honey from waterlilies, மெல்குபு பெயரா – it chews and then chews its cud, குளவி – wild jasmine, Millingtonia hortensis, பள்ளி – bed, பாயல் கொள்ளும் – it sleeps

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்,
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று, (47-50)

He is the protector of the West,
the heir of the Chēra clan,
King Kuttuvan with fast chariots.
He placed the Chēra curved bow
symbol on the Himalayas of enemies.
His shoulders are strong like the cross
bars on the gates of fortresses.
His land is rich with flowing streams
and his forts are secure with gates.
If you go to his Vanji city
what you get will be much less.

It is not only that,

Notes:  அதாஅன்று (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு.  அது என்னும் சுட்டு வஞ்சியைச் சுட்டி நின்றது.

Meanings:    குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like (உவம உருபு), திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வருபுனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that (இசைநிறை அளபெடை)

பாண்டிய நாட்டின் பெருமை

நறவுவாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய் பூங்கண்ணி செவி முதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த (51-55)

Pride of Pāndiya Nādu

On a wagon pulled by strong
oxen, owned by a salt merchant
wearing on his chest a fine garland,
carved with an iron chisel from wood
pieces from a delicate nunavan tree
with honey-dripping blossoms, and
wearing under his ears a garland
with flowers made with netti,

Notes:  செய் பூங்கண்ணி செவி முதல் திருத்தி (54) – நச்சினார்க்கினியர் உரை – கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியில் நெற்றி மாலையாகக் கட்டி.  நறவுவாய் உறைக்கும் (51) – நச்சினார்க்கினியர் உரை – தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்றும் துளிக்கும்.

Meanings:   நறவுவாய் – having honey (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நுனி – rim, edge, உறைக்கும் – they drip, நாகு – young, delicate, முதிர் – mature, நுணவத்து – from the nunā tree, morinda umbellate or Morinda Tinctoria or Morinda Citrifolia, நுணா மரம், noni (நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது), அறைவாய் – chopped pieces, குறுந்துணி – small pieces, அயில் உளி – iron chisel, sharp chisel, பொருத – hit, கை புனை – hand made, செப்பம் – perfect, கடைந்த – carved and made, மார்பின் – on his chest, செய் பூங்கண்ணி – flower garland made with netti, கிடேச்சு, Aeschynomene aspera, செவி முதல் திருத்தி – wearing under the ears, நோன் பகட்டு – with strong oxen, உமணர் – salt merchant, ஒழுகையொடு வந்த – arriving with a wagon

மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கித்,
தோள் புற மறைக்கும், நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற   60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும், (56-61)

a female monkey that is like his
daughter plays with a shell rattle
stuffed with lovely pearls
resembling the teeth of tender
women, its opening a thin slit as
narrow as a sword’s sharp edge.
His sons wear bright jewels, and
his wife is pretty with a delicate
waist and swaying five-part braid
that hides her back and shoulders.

Notes:  நளி நீர் (57) – நச்சினார்க்கினியர் உரை- செறிந்த நீர்மையுடைய, உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 368  – செறிந்த நீர்.  முத்தைப் போன்ற பற்கள்:  அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.

Meanings:   மகாஅர் அன்ன – like children (இசைநிறை அளபெடை), மந்தி – female monkey, மடவோர் – delicate women, நகாஅர் அன்ன – like teeth (நகாஅர் – இசைநிறை அளபெடை), நளி நீர் முத்தம் – pearls from the dense ocean, pearls that are splendid (செறிந்த நீர்மையையுடைய முத்து), வாள் வாய் – like a sword’s edge, எருந்தின் – in a shell, வயிற்று அகத்து – inside the stomach, அடக்கி – closed, தோற்புறம் மறைக்கும் – hiding the shoulders and back, நல்கூர் நுசுப்பின் – with a tiny waist, உளர் இயல் ஐம்பால் – swaying five-part braid, well combed five-part braid, உமட்டியர் – salt merchant’s wife, ஈன்ற – gave birth, கிளர் – bright, பூண் – jewels, புதல்வரொடு – with her sons, கிலுகிலி – rattle, ஆடும் – plays

தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென் புலம் காவலர் மருமான், ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்   65
தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, (62-67)

The Pāndiyan king Cheliyan
of Korkai city that has the ocean
with moving waves as its boundary
is the protector of the southern lands.
Heir to the Pāndiyan clan, he wears
garlands that are sweet to the eyes.

He has seized enemy lands, and
owns a regal pearl umbrella and fast
riding chariots.
He made Tamil flourish with a proud
tradition in Mathurai filled with happy
streets.  The gifts that you will get from
him will be far less.

It is not only that.

Meanings:   தத்து நீர் – full waters, moving waters, spreading waters, வரைப்பு – boundary, கொற்கைக் கோமான் – the king of Korkai, தென் புலம் – the southern land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, மண் மாறு கொண்ட – seized enemy lands, மாலை – pearl strands, வெண்குடை – white royal umbrella, கண்ணார் கண்ணி – garland that is sweet to the eyes (neem garland – Pāndiyan symbol), கடுந்தேர் – fast chariot, செழியன் – Pāndiyan king, தமிழ் நிலைபெற்ற – Tamil language flourished, Tamil language was stable, தாங்கு அரு மரபின் – with a proud tradition, மகிழ்நனை மறுகின் மதுரையும் – Mathurai with happy streets, வறிதே – it is less, அதாஅன்று – not only that (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, இசைநிறை அளபெடை)

சோழநாட்டின் பெருமை

நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த,
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில்,   70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின், (68-71)

Pride of Chōla Nadu

On the shores of drinking water
reservoirs with fragrant water,
dense kadampam trees have
dropped from their lovely flower
strands pollen that resembles
red pattuppoochis, making the
place appear like paintings.

Notes:  துணை ஆர் கோதை (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடம்பின் பூ புனைந்த மாலை போறலின், துணை ஆர் கோதை என்றார்.  நச்சினார்க்கினியர் உரை – கோதை போல பூத்தலிற் கோதை என்றார்.

Meanings:  நறு நீர் – fragrant water, பொய்கை – tanks, ponds, அடைகரை –  sand filled shores, water filled shores, nearby shores, நிவந்த – growing, spread, துறு நீர் – dense nature, கடம்பின் துணை ஆர் கோதை – flowers of the kadampam tree that appear like garlands, Anthocephalus cadamba, Kadampa Oak, ஓவத்து அன்ன – like paintings (ஓவம், அத்து சாரியை), உண் துறை மருங்கில் – at the drinking water shores, near the drinking water shores, கோவத்து அன்ன – like the pattupoochi, velvet soft red little bug, Trombidium grandissimum, பட்டுப்பூச்சி, இந்திர கோபம் (கோவத்து  – கோவம், அத்து சாரியை), மூதாய், தம்பலம், கொங்கு – pollen, சேர்பு – together, உறைத்தலின் – since they have dropped

வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன,
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை   75
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும், (72-77)

Divine lotus buds resembling
growing breasts have loosened and
opened to become beautiful blossoms.
Their red petals look appear like
dipped in wax. They resemble the
palms of hands, and beautiful male bees
hover over their reddish gold centers,
flapping their wings and embracing their
loving mates as they sing in seekāmaram tune.

Meanings:   வருமுலை அன்ன – like growing breasts, வண் முகை – lush buds, உடைந்து – loosening, திருமுகம் – beautiful face, அவிழ்ந்த – blossomed, தெய்வத் தாமரை – divine lotus – since Lakshmi resides on it, ஆசு இல் – faultless, அங்கை – palm, அரக்கு – red wax, தோய்ந்தன்ன – like it was dipped, சேயிதழ் – red petals, பொதிந்த – filled, செம்பொற் கொட்டை – red golden center part, ஏம – pleasurable, இன் துணை – sweet partners, தழீஇ – embraces (சொல்லிசை அளபெடை), இறகு உளர்ந்து – flapping their wings, காமரு – beautiful (விகாரம்), தும்பி – honey bees, male bees,  காமரம் – seekāmaram tune, செப்பும் – sings

தண் பணை தழீஇய தளரா இருக்கைக்,
குணபுலம் காவலர் மருமான், ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்   80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே; அதாஅன்று, (78-83)

The king, the heir of the Chōla clan,
the protector of the east, guards his
busy, cool towns surrounded by fields.

He is Chempiyan with chariot forces,
fine fame and big hands with bright
bracelets, who destroyed a hanging
fortress, rubbed by thunderbolts.

The gifts you get in his Uranthai city
with citizens with unshakable strength
will be much less.

It is not only that.

Notes:  தூங்கு எயில் (81) – Lord Siva burned and destroyed the 3 hanging fortresses of the Asurars who caused great distress to the Thevars.  This story has been used to express the might of the Chōla king.

Meanings:   தண் பணை – agricultural lands (fields, ponds etc.), தழீஇய – surrounding (சொல்லிசை அளபெடை), தளரா இருக்கை – prosperous places, established places, குண புலம் – eastern lands, காவலர் – protector, மருமான் – heir, ஒன்னார் – enemies, ஓங்கு எயில் – tall forts, கதவம் – entry gates, உருமு – thunderbolt, சுவல் சொறியும் – neck hits against, தூங்கு எயில் – hanging fort, எறிந்த – ruined, தொடி விளங்கு – wearing bright bracelets, தடக்கை – large hands, நல்லிசை – fine fame, நாடா – not seeking, நற்றேர் – fine chariot forces, செம்பியன் – Chōla king, ஓடாப் புட்கை – strength of not backing off, unmoving strength, உறந்தையும் – Uranthai city, வறிதே – what you will receive is less, அதாஅன்று – it is not only that (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, இசைநிறை அளபெடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடையெழு வள்ளல்களின் சிறப்பு

பேகன்

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்,
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய   85
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும், (84-87)

The Greatness of the Seven Great Benefactors

Pēkan

Pēkan of the powerful Āviyar clan
with rare abilities, lord of a huge
mountain, who generously gave his
clothing to a pea**** roaming in the
forest on his flourishing mountain
slopes with unfailing rain, and

Meanings:   வானம் – rain, வாய்த்த – occurring well, unfailing, வள மலைக் கவாஅன் – flourishing mountain slopes (கவாஅன் – இசை நிறை அளபெடை), கான மஞ்ஞைக்கு – to a forest pea****, கலிங்கம் – clothing, நல்கிய – gave, அருந்திறல் – difficult to obtain abilities, rare abilities, அணங்கின் – with beauty, with power, ஆவியர் – Āviyar clan, பெருங்கல் நாடன் – leader of a huge mountain

பாரி

……………சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய,
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்   90
பறம்பின் கோமான் பாரியும், (87 – 91)

Pāri

Pāri, the lord of Parampu
Mountain with roaring white
waterfalls that cascade down the
slopes, who gave his tall chariot
to a mullai vine with small flowers,
in the long path where punnai trees
put out fragrant blossoms with
honey to attract honey bees, and

Meanings:   சுரும்பு – honey bees, உண – to drink (உண உண்ண என்பதன் விகாரம்), நறு வீ – fragrant flowers, உறைக்கும் – drop honey, flourish, நாக – punnai trees, mast wood trees, or surapunnai trees, long-leaved two-sepalled gamboge according to the University of Madras Lexicon, நெடுவழி – long path, சிறு வீ – small flowers, முல்லைக்கு – to the jasmine vine, பெருந்தேர் – a big chariot, நல்கிய – gave, பிறங்கு – bright, tall, loud, வெள்ளருவி – waterfalls, வீழும் – falling, சாரல் – mountain slopes, பறம்பின் கோமான் பாரியும் – the lord of the Parampu Mountain Pāri and

 

காரி

……………………… கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடித் தடக் கை காரியும், (91-95)

Kāri

 

Kāri adorned with sliding bracelets
on his huge hands,
who gifted horses with jingling bells
and white plumes, awed people with
his kind, good words, whose bright,
tall spear caused terror, and

Meanings:   கறங்கு மணி – sounding bells, ringing bells, வால் உளை – white mane, white hair decoration – Po. Ve. Somasundaranar gives both meanings in his urai book, புரவியொடு – with the horse, வையகம் மருள – as the world is awed, as people are awed, ஈர நல்மொழி – kind nice words, இரவலர்க்கு – to those who ask for alms, ஈந்த – gave, அழல் – rage (Po. Ve. Somasundaranar interprets it as the rage of Kotravai), திகழ்ந்து – splendid, இமைக்கும் – glittering, அஞ்சுவரு – causing fear, நெடுவேல் – long spear, கழல் தொடி – sliding bracelets, swirling bracelets (வினைத்தொகை), தடக் கை – huge hands, proud hands

ஆய் அண்டிரன்

…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும், (95-99)

Āy Andiran

Āy Andiran, the kind-worded
man bearing a bow
and wearing sandal paste on
his strong shoulders,
who happily gifted the clothing
that he got from the snake
along with bright blue gems,
to the god who sits under
a banyan tree, and

Meanings:   நிழல் திகழ் – bright and splendid, நீல – sapphire gems, நாகம் நல்கிய – given by a snake, கலிங்கம் – clothing, ஆல் அமர் செல்வற்கு – to god Sivan who sits under a banyan tree, அமர்ந்தனன் கொடுத்த – he gave happily, சாவம் – bow, தாங்கிய – bearing, சாந்து புலர் – sandal paste dried, திணிதோள் – strong shoulders, ஆர்வ நன்மொழி ஆயும் – Āy with caring kind words

அதிகன்

……………………….. மால் வரைக்
கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி   100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும், (99-103)

Athikan

Athikan with a long spear,
an army as loud as an ocean,
and burning great rage,
who gave the nectar-sweet, rare,
ripe nelli fruit that grew on the
fragrant slopes of a lofty mountain
to the poet Avvaiyār, and

Meanings:   மால் – tall, வரை – mountain, கமழ் பூஞ்சாரல் – mountain slopes with flower fragrance, கவினிய – beautiful, நெல்லி – gooseberry tree, அமிழ்து – life giving nectar, விளை – ripe, mature, தீம் கனி – sweet fruit, ஔவைக்கு – to the poet Avvaiyār, ஈந்த – gave, உரவுச்சினம் – strong anger, கனலும் – burning rage, ஒளி திகழ் – bright, நெடுவேல் – long spear, அரவக்கடல் – loud ocean, தானை – armed forces, அதிகனும் – Athikan also

நள்ளி

…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக்கைத்,  105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும்,  (103-107)

Nalli

Nalli with large hands
that were victorious in battles,
who donated endless wealth
to those who were friendly for
their livelihood and made them
happy, owner of a country with
dense mountains with tall peaks
where rain never fails and wind
resides,

Meanings:   கரவாது – without hiding, நட்டோர் – friends, those who are kind, உவப்ப – to be happy, நடைப் பரிகாரம் – wealth to remove poverty, wealth to live life well, முட்டாது – without limits, கொடுத்த – gave, முனை விளங்கு – succeeding in battle, தடக்கை – huge hands, துளி மழை பொழியும் – rain drops fall, வளி துஞ்சு – winds reside, winds stay, நெடுங்கோட்டு – with tall peaks, நளி மலை நாடன் நள்ளியும் – Nalli with his country with dense mountains,

ஓரி

…………………….. நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த   110
ஓரிக் குதிரை ஓரியும், (107-111)

Ōri

Ōri, owner of a horse named Ōri,
who donated to dancers and musicians,
fine lands with hills and young, tall
surapunnai trees with dense branches
bearing fragrant, bright flowers.  He
fought with Kāri who rode on a horse
named Kāri.

Notes:  There are references to this battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.  There are references to Kāri killing Ōri in Natrinai 320, Akanānūru 209, and Sirupānātruppadai 110-111.   Kāri killed Ōri and then gave away Ōri’s Kolli Mountain to the Chēra king (Akanānūru 209).

Meanings:   நளி சினை – crowded tree branches, நறும் போது – fragrant buds, கஞலிய – bright, crowded, நாகு – youth, முதிர் – tall, mature, நாகத்து – with surapunnai trees, long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, குறும் பொறை – small hills, boulders, நல்நாடு – fine country, கோடியர்க்கு – to the artists who sang and danced, ஈந்த – gave, காரிக் குதிரை – horse named Kāri, காரியொடு – with Kāri the donor, மலைந்த – fought, ஓரிக் குதிரை – a horse with plumes

……………………. என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்; (111-112)

These men who won
rising wars had shoulders
as strong as the wooden bars
on fortress gates.

Meanings:   என ஆங்கு – thus, எழு சமம் – rising wars, கடந்த – won, எழு – wooden cross bars on forts, உறழ் – like (உவம உருபு), திணி தோள் – strong shoulders

நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்,
விரிகடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள்.  (113-115)

King Nalliyakōdan’s Donorship

Nalliyakōdan bore with strength
and effort the burden of donorship of the
seven kings, and he took it upon himself
to make the wide world with oceans
as its fence flourish.

Meanings:   எழுவர் பூண்ட ஈகை – the charity undertaken by the seven, செந்நுகம் – perfect burden, விரிகடல் – spread ocean, வேலி – fence, வியலகம் – wide world, விளங்க – to flourish, ஒரு தான் தாங்கிய – he alone bears it, உரனுடை – with strength, நோன் தாள் – great effort

நறு வீ நாகமும், அகிலும், ஆரமும்,
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல் மா இலங்கை மன்னருள்ளும்,   120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடிப்,
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கைப்,
பல் இயக் கோடியர் புரவலன், (116-125)

In his Māvilankai city that bears
the name of the ancient, famous
Ilangai since its inception, wood
pieces of punnaiakil and sandal
come down the rivers and become
floats for women playing in the ports.

A king without blemish, a great one
amidst kings of fine, huge Māvilankai
of unruined tradition, his sword never
missed its mark.  He is a brave warrior
with the strength of a tiger.

He was born in the Ōviyar clan, a very
proud man.  He had scars on his perfect
adorned with bravery anklets,
by rubbing them against the bodies of
elephants he rode in battles.

His large hands which are charitable
like the rain clouds have donated female
elephants to those who came in need.
He protects dancers and musicians
who play many instruments.
He is a king with a great reputation.

Notes:  The Māvilangai described here is in the North Arcot area, according to J. V. Chelliah.  புறநானூறு 176 – பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை.  தொல் மா இலங்கை (119) – இரா.  இராகவையங்கார் உரை – கருப்பித்தபோதே (நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே) பழமையான பெருமையினையுடைய இலங்கையென்னும் பேரைப் பெற்றதுமான நன்றாகிய பெருமையையுடைய இலங்கை, நச்சினார்க்கினியர் உரை – கருப்பித்த முகூர்த்தத்திலே பழையதாகிய பெருமையையுடைய இலங்கையின் பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையுடைய இலங்கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ராவணன் ஆண்ட வலி மிக்க பழைய இலங்கை என்றவாறு.

Meanings:   நறு வீ – fragrant flowers, நாகமும் – punnai trees and, Calophyllum inophyllum, Mast wood tree, Punnai tree, or surapunnai tree, long-leaved two sepalled gamboge according to the University of Madras Lexicon,  அகிலும், ஆரமும் – akil wood (eaglewood) and sandalwood, துறை ஆடு மகளிர்க்கு – to women who bathe in the water ports, தோள் புணை ஆகிய – as a float, பொரு புனல் – flood, தரூஉம் – brings (இன்னிசை அளபெடை), போக்கரு மரபின் – with a tradition that is hard to be destroyed (of his Māvilankai), தொல் மா இலங்கை – ancient huge Ilankai,  கருவொடு பெயரிய – had the name from the beginning, நல் மா இலங்கை – splendid huge Māvilankai (Māvilangai and Nalliyakodan are mentioned in Puranānūru 176), மன்னருள்ளும் – among all the kings, மறு இன்றி – without fault, விளங்கிய – shined, வடு இல் – blemish-less, வாய்வாள் – sword that does not miss its mark, உறுபுலி துப்பின் – with strength like that of a tiger, ஓவியர் பெருமகன் – a leader born in the clan of painters (artists), களிற்றுத் தழும்பு இருந்த கழல் – scars from his anklet rubbing the elephants (in battles), தயங்கு – moving, திருந்து அடி – perfect feet, பிடிக் கணம் – herd of female elephants, சிதறும் – gives, பெயல் மழைத் தடக்கை – large hands that give like the rain clouds, பல் இயம் – many music instruments, கோடியர் – artists, புரவலன் – donor, benefactor, பேர் இசை – great fame

பரிசு பெற்ற பாணன்
மன்னனைப் பாடிச் சென்ற முறை

………………………………………………………..பேர் இசை

நல்லியக்கோடனை, நயந்த கொள்கையொடு,

தாங்கரு மரபின் தன்னும் தந்தை

வான் பொரு நெடு வரை வளனும் பாடி,

முன் நாள் சென்றனம் ஆக, (125-129)

Bard who got Gifts from the King

With the desire to get gifts
from Nalliyakōdan of great fame
who comes from a proud tradition,
we sang about him, his father,
and about his sky-hitting, lofty,
rich mountains just a few days ago.

Meanings:  பேர் இசை நல்லியக்கோடனை – to Nalliyakōdan of great fame, நயந்த – desired, கொள்கையொடு – with the principle to obtain, தாங்கு அரு – very proud, மரபின் – in the tradition, தன்னும் – about him, about Nalliyakōdan, தந்தை – his father, வான் பொரு – sky-hitting, நெடு வரை – tall mountains, வளனும் பாடி – sang about its prosperity (வளன் – வளம் என்பதன் போலி), முன் நாள் – a few days ago, சென்றனம் ஆக – we went,

நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமை நிலை

……………….. இந்நாள்,
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை,   130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில், (129-132)

Poverty before Meeting Nalliyakōdan

In our kitchen, a female dog
who had just given birth
was whimpering in sorrow,
her breasts dried up and
unable to feed her newborn
pups with curved ears
whose eyes had not opened,

Meanings:   இந்நாள் – those days, the days before we met him, திறவாக் கண்ண – unopened eyes, சாய் செவி – curved ears, குருளை – puppies, கறவா – not secreting milk, பால் முலை – breasts that give milk, கவர்தல் – to take, to drink, நோனாது – unable to tolerate, புனிற்று நாய் –a dog that has recently given birth, குரைக்கும் – barks, புல்லென் – lusterless, poor, அட்டில் – kitchen

காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த,
பூழி பூத்த புழல் காளாம்பி,
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்,   135
வளைக் கை கிணைமகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட………… (133-140)

wooden rafters were ruined on the
roof, termites had ruined the old walls
and hollow mushrooms had grown.

My wife wearing bangles, with a shrunk,
tiny waist, was filled with sorrow.
She plucked vēlai greens with her large
fingernails, boiled them without salt,
and embarrassed that others might
see our poverty and slander, closed the
house door as she ate with our very large
clan, removing hunger’s pain.

Notes:  கிணைமகள் (136) – நச்சினார்க்கினியர் உரை – கிணைப் பறை கொட்டுவோனுடைய மனைவி, மகள்.  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.

Meanings:  காழ் சோர் –  wooden rafters ruined (on the roof), முது சுவர் – old walls, கணச் சிதல் – swarms of termites, அரித்த – ruined, பூழி – dust, பூத்த – appeared, புழல் – hollow, காளாம்பி – mushroom, ஒல்குபசி – hurting hunger, உழந்த – giving sorrow, ஒடுங்கு நுண் மருங்குல் – with a very tiny waist, வளைக் கை – hands wearing bangles, கிணைமகள் – a female belonging to the drummer family, வள் உகிர் – big finger nails, குறைத்த – plucked, குப்பை வேளை – vēlai  greens growing in dirt, Sida rhombifolia, Rhomb-leaved morning mallow, உப்பிலி – without salt, வெந்ததை – what was boiled, மடவோர் – ignorant people, those who slander, காட்சி – to be seen, நாணி – embarrassed, கடை அடைத்து – close the door, இரும்பேர் ஒக்கலொடு – with a very large group of relatives, with a dark large group of relatives, ஒருங்கு – totally, உடன் – immediately, மிசையும் – ate, அழி பசி – ruining hunger, வருத்தம் – sorrow, வீட – to be removed

நல்லியக்கோடனின் வள்ளன்மை

…………………. பொழி கவுள்
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி,
யாம் அவண் நின்றும் வருதும். (140-143)

The Generosity of the King

We just returned from his palace
with gifts of a small-eyed, musth
flowing, strong killer elephant
decorated with chiming bells on
its flanks, along with a big chariot.

Meanings:   பொழி கவுள் – musth-flowing cheeks, தறுகண் – killing, பூட்கை – strength, தயங்கு மணி – moving bells, bright bells, மருங்கின் – on the sides of its body, on the flanks, சிறு கண் யானையோடு – with an elephant with small eyes, பெருந்தேர் – a big chariot, எய்தி – received, அவண் நின்றும் – from that place (Nalliyakōdan’s palace), வருதும் – we have returned

பாணனின் ஆற்றுப்படுத்தும் பண்பு

……………………… நீயிரும்,
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின், (143-145)

One Bard Guiding the Other

If you go to him with your
very large, loving clan
and with a reverential mind,

Notes:  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.

Meanings:   நீயிரும் – you, இவண் – here, நயந்து இருந்த – with kindness, இரும்பேர் ஒக்கல் – very big group of relatives, dark large group of relatives, செம்மல் உள்ளமொடு – with noble minds, செல்குவீர் ஆயின் – if you go



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும்

பரதவர் தரும் விருந்தும்

அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர,   150
பாடல் சான்ற நெய்தல் நெய்த நெடுவழி
மணி நீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின், (146-153)

Seashore town of Eyirpattinam and hospitality of Fishermen

you will go on a long seashore
path fit for verses of poets,

where waves rise up and spread

on the white sand and sapphire

hued ponds abound.
You will see fragrant thālai trees
lapped by waves
and bearing goose-like flowers,
fresh cherunthi flowers that look
like gold, first batch of flowers put
out by mundakam plants that
appear like bright sapphire gems,
and new buds on punnai trunks
that resemble pearls,
before you reach a Eyirpattinam
with walls and cold-water ponds.

When you reach there,

Meanings:   அலை நீர் – waves, தாழை – thālai trees, Pandanus odoratissimus, அன்னம் பூப்பவும் – blooming like goose, தலைநாள் – early days of summer, செருந்தி – cherunthi flowers, Ochna squarrosa, panicled golden – வாட்கோரை, Sedge, Cyperus, தமனியம் – gold, மருட்டவும் – awing, கடுஞ்சூல் – first yield, first set of flowers, முண்டகம் – mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinose, கதிர் மணி கழாஅலவும் – put out flowers that look like sapphire gems (கழாஅல – இசை நிறை அளபெடை), நெடுங்கால் புன்னை – tall-trunked punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நித்திலம் வைப்பவும் – put out buds that look like pearls, கானல் – seashore grove, வெண்மணல் – white sand, கடல் – ocean, உலாய் –  spreading, நிமிர்தர – rising, பாடல் சான்ற – fit for verses of poets, famed, நெய்தல் – seashore land, நெடுவழி – long path, மணிநீர் – sapphire-hued water, வைப்பு – towns, places, மதிலொடு – with walls, பெயரிய – with the name ‘Eyil’ which means fort walls, பனி நீர் படுவின் – with cold water ponds, பட்டினம் – Eyirpattinam, படரின் – if you go there

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்  155
கரும் புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து,
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,   160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்; (154-163)

fishermen will give you aged
liquor that their wives with
sharp, spear-like eyes and pretty,
faultless faces that make the moon
jealous prepared, burning
fragrant akil driftwood as red
flames glow and black smoke rises,
the wood brought and heaped on
the shore by the swollen waves, and
appearing like tall, sleeping camels.

If you go to Kidangil town
with groves full of flower clusters
and sing the praises of the noble king
adorned with fresh bud garlands,
with perfect rhythm and beats
as your viralis dance,
they will give you kulal fish dishes.

Meanings:   ஓங்கு நிலை – tall, ஒட்டகம் – camels, துயில் மடிந்தன்ன – like they are sleeping, வீங்கு திரை – swollen waves, heavy waves, கொணர்ந்த – brought, விரை – fragrant, மர விறகின் – pieces of wood, கரும் புகை – black smoke, செந்தீ – red flame, மாட்டி – lit, பெருந்தோள் – broad shoulders, மதி – moon, ஏக்கறூஉம் – to pine (இன்னிசை அளபெடை), மாசு அறு – without blemish, faultless, திரு முகத்து – with pretty faces, நுதி வேல் – sharp spear, நோக்கின் – with looks, நுளைமகள் – neythal land women, women of the fishermen community, அரித்த – filtered, பழம்படு – aged liquor, பரதவர் – fishermen, மடுப்ப – give to drink, கிளை மலர் – flower clusters, flowers on branches, படப்பை – flower garden, கிடங்கில் கோமான் – the king of Kidangil, தளை அவிழ் – ties (bud) opened, open blossoms, தெரியல் – flower garland, தகையோன் – the esteemed man, பாடி – singing, அறல் – with perfect beats, குழல் – flute, பாணி – beats, தூங்கியவரொடு – with the viralis who dance, வறல் – dried, குழல் சூட்டின் – with cooked kulal fish, பெறுகுவீர் – you will get

வேலூர் செல்லும் வழியும்
எயினர் தரும் விருந்தும்

பைந்நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயா கண மயில் அவிழவும்,   165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச்   170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின், (164-173)

On the way to Vēlūr and Hospitality in the Wasteland

On the way to Vēlūr you
will see avarai buds that
look like strung coral,
dark colored kāyā flowers
resembling pea**** necks,
musundai flowers blooming
on thick vines appearing like
small palm-frond boxes,
and lush kānthal flowers
blossoming like fingers.

In the long woodland paths,
tiny red pattupoochis crawl on
the ground, waterfalls flow from
the wide mountain clefts and
when the sun’s rays go down
behind the wide mountains in the
beautiful forest with mullai vines,
blossoms resembling tips of spears
bloom in the pond.

If you go further and reach Vēlūr,
victorious with its victory spears,

Notes:  கொட்டம் (166) – நச்சினார்க்கினியர் உரை – பனங்குருத்தால் செய்விக்கப்படும் சிறிய பெட்டி, கொட்டை – நூற்கின்ற கொட்டையுமாம்.  முல்லை சான்ற முல்லை அம் புறவின் (169) – நச்சினார்க்கினியர் உரை – கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றி இருந்த தன்மை அமைந்த முல்லைக் கொடி படர்ந்த.  அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்,  சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற முல்லை அம் புறவின், மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.

Meanings   பைந்நனை – fresh buds, அவரை – avarai bean, Dolichos lablab, பவழம் கோப்பவும் – have put out flowers that are like coral (the flowers appear like they are strung together), கரு நனை – black buds, காயா – kāyā flowers, Memecylon edule, ironwood tree, கண மயில் – pea**** flocks (like the necks of pea****s that live in flocks), அவிழவும் – bloomed, கொழுங்கொடி – thick creeper, முசுண்டை – musundai, Rivea ornata, Leather-berried bindweed, கொட்டம் கொள்ளவும் – have become like palmyra frond boxes, செழுங்குலை – lush clusters, large clusters, காந்தள் – kānthal flowers, கைவிரல் பூப்பவும் – bloom like fingers on the hand, கொல்லை – forest land, நெடுவழி – long path, கோபம் – red pattuppoochi, Trombidium grandissimum, பட்டுப்பூச்சி, இந்திர கோபம், மூதாய், ஊரவும் – crawl, முல்லை சான்ற முல்லை அம் புறவின் – in the beautiful mullai forest with jasmine vines, விடர்கால் அருவி – split mountain waterfalls, வியன் மலை – wide mountains, மூழ்கி – sinking, சுடர் கால் – sun, மாறிய – hiding, செவ்வி நோக்கி – looking at that time, திறல் வேல் நுதியின் – like the tips of spears, பூத்த – blossomed, கேணி – pond, விறல் வேல் – victorious spears,  வென்றி – victorious, வேலூர் எய்தின் – if you reach Velūr

உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு   175
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்; (174-177)

women in the wasteland, who
reside in huts that are hot due to
the burning sun, will be hospitable
to you and the women in your
family with skins like sprouts of
sweet mango trees, who wear few
bangles, and feed you rice and
dishes cooked with sweet tamarind
sauce and meat of forest cattle.

Notes:  அகநானூறு 394 – இன் புளி வெஞ்சோறு.

Meanings:   உறு வெயிற்கு – due to the hot sun, உலைஇய – felt sad (சொல்லிசை அளபெடை), உருப்பு – heat, அவிர் – bright, விளங்கும், குரம்பை – huts, எயிற்றியர் – women in the wasteland, pālai land, அட்ட – cooked, இன் புளி – sweet tamarind, வெஞ்சோறு – hot rice, desirable rice, தேமா – sprouts of sweet mango trees (ஆகுபெயர் மாந்தளிர்க்கு), மேனி – bodies, சில் வளை – few bangles, ஆயமொடு – with friends, ஆமான் – jungle cow, சூட்டின் – with cooked wild cow’s meat, அமைவர – to satisfaction, in full, பெறுகுவிர் – you will get

ஆமூர் வளமும் உழத்தியரின் உபசரிப்பும்

நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி, நெடிது இருந்து,   180
புலவுக் கயல் எடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாட்போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்,   185
மருதம் சான்ற மருதத் தண் பணை
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின், (178-188)

Prosperity of Āmūr and hospitality of farm women

If you reach Nalliyakōdan’s Āmūr,
a town with heavy protection
from which Brahmins don’t leave,
you will see
fertile, cool fields and beautiful
moats with cold water,
short-trunked kānji tree branches
with fresh, fragrant flowers that
appear like garlands on branches,
kingfishers with gold color beaks
sitting for a long time on them
and eyeing the water-filled ponds,
diving and taking stinking carp fish
and walking on lotus leaves with
their sharp claws,
scratching, tearing and scarring them,
blue male honey bees with red eyes
attacking newly opened white lotus buds
with green leaves and thorny stems
at dawn for honey, appearing like the
dark snake on the white moon.

Notes:  மருதம் சான்ற:  மருதம் சான்ற – மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186.  அரவு நுங்கு மதி:  குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.

Meanings:   நறும் பூங்கோதை தொடுத்த – flowers that appear like garlands strung with fragrant flowers, நாட்சினை – branches with day’s fresh flowers, குறுங்கால் – short trunked, காஞ்சிக் கொம்பர் ஏறி – climb on the kanchi tree branches, Thespesia populnea, Portia Tree, பூவரச மரம் (கொம்பர் – மொழி இறுதிப் போலி), நிலை அரும் குட்டம் – water level that is never stable, நோக்கி – see, நெடிது இருந்து – long time, புலவு – fish reeking, கயல் எடுத்த – takes fish, Carp, கெண்டை, Cyprinus fimbriatus, பொன் வாய் – golden colored beaks, மணிச்சிரல் – kingfishers, வள் உகிர் – sharp claws, கிழித்த வடு ஆழ் – torn and scarred, பாசடை – green leaves, முள் அரை – stem with thorns, தாமரை – lotus flowers, முகிழ் – buds, விரி – open, நாட்போது – early morning, கொங்கு – honey, கவர் – to take, நீல செங்கண் சேவல் – blue colored male bee with red eyes, மதி சேர் – covering the moon, அரவின் மானத் தோன்றும் – appearing like a snake, மருதம் சான்ற – with marutham lands, மருதத் தண் பணை – agricultural land’s cool fields, அந்தணர் அருகா – Brahmins not reduced in numbers by leaving, அருங்கடி – great protection, வியன் நகர் – huge town, அம் தண் கிடங்கின் – with beautiful cool moats, அவன் ஆமூர் – his Amoor, எய்தின் – if you reach

வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை,   190
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ மகமுறை தடுப்ப,
இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்; (189-195)

The younger sister of a farmer who
owns mighty bulls with strong necks
and victorious walk,
a woman with braided hair on her
small back resembling a female elephant’s
trunk and bangles on her hand, will serve
white rice balls, from rice pounded with an
iron pestle whose ends have been blunted,
served with split-legged crabs, with the help
of her children, blocking you from leaving.

Notes:  மகமுறை தடுப்ப (192) – நச்சினார்க்கினியர் உரை –  உழவர் தங்கையாகிய மகடூ தான் உள்ளே இருந்து தன் பிள்ளைகளைக் கொண்டு நும்மை அடைவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே  இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறுபோல உபசரித்து விலக்கவென்றுமாம். கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (195) – நச்சினார்க்கினியர் உரை – கவைத்த காலினுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங் கலந்த கலப்புடனே பெறுவிர்.  பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.

Meanings:   வலம் பட – with strength, in a victorious manner, நடக்கும் – they walk, வலி புணர் எருத்தின் – with strong necks, உரன் கெழு நோன் பகட்டு – with very strong mighty oxen, உழவர் தங்கை – a farmer’s younger sister, பிடிக்கை அன்ன – like the trunk of a female elephant, பின்னு வீழ் சிறுபுறத்து – with braid that drapes down her small back, தொடிக் கை – hands with bangles, மகடூஉ – woman (இன்னிசை அளபெடை), மகமுறை – with the help of her children, like taking care of her children, தடுப்ப – will block, இருங்காழ் – iron rod, உலக்கை – rice pounding pestle, இரும்பு முகம் தேய்த்த – the iron fronts blunted, அவைப்பு – pounded, மாண் அரிசி – well pounded rice, அமலை – rice balls, abundant rice, வெண்சோறு – white rice, கவைத்தாள் – split-legged, அலவன் – crabs, கலவையொடு – with that mixture, with that combination, பெறுகுவிர் – you will get

நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும்
அதன் அண்மையும்

எரி மறிந்தன்ன நாவின் இலங்கு எயிற்றுக்
கரு மறிக் காதின், கவை அடிப் பேய் மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப ,  200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே; (196-202)

Splendor of Nalliyakodan’s Town

Appearing like a corpse-eating, laughing
female ghoul with bright, blood-stained
teeth, that wears goats as earrings, has a
slanted, flame-like tongue and forked legs,
are elephants with blood-stained huge nails
on their feet that have kicked corpses.
Their musth flows down their cheeks and
mixes with the fine dust on the streets of
Nalliyakōdan’s ancient town with festivals.
It is not very far.  It is nearby.

Meanings:   எரி மறிந்தன்ன நாவின் –  with a tongue appearing like slanted flame, இலங்கு எயிற்று – with bright teeth, கருமறிக் காதின் – wearing black goats as earrings, கவை அடி – forked legs, split legs, பேய் மகள் – female ghoul, நிணன் உண்டு – eat fatty meat of the dead (நிணன் – நிணம் என்பதன் போலி), சிரித்த தோற்றம் போல – like the laughing appearance, பிணன் உகைத்து – kicked dead bodies during war, சிவந்த பேர் உகிர் – red huge nails, பணைத்தாள் – big legs, அண்ணல் யானை – noble elephant, esteemed elephant, அருவி – flowing liquid, flowing musth, துகள் – dust, அவிப்ப – damp, நீறு – fine dust, அடங்கு – controlled, தெருவின் – with streets, அவன் –  Nalliyakōdan, சாறு அயர் – festivities celebrating, மூதூர் – ancient town, சேய்த்தும் அன்று – it is not far, சிறிது நணியதுவே – it is a little close

நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்

பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன,   205
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, (203-206)

Nalliyakōdan’s Palace Doors

Nalliyakōdan’s well protected
palace doors are always open,
to kinai drummers, poets and
Brahmins who chant the Vedas,
like the one open eye of the tall
Himalayas where gods reside.

You should enter the palace.

Meanings:   பொருநர்க்கு ஆயினும் – to war bards who sing praises, to kinai drummers who sing praises at dawn, புலவர்க்கு ஆயினும் – to poets, அருமறை – rare Vedas, நாவின் – reciting with their tongues, அந்தணர்க்கு என்றாலும் – also to Brahmins, கடவுள் – god, மால் வரை – very high mountains, கண்விடுத்தன்ன – like eyes that are opened, அடையா வாயில் – doors are never closed, அவன் – Nalliyakōdan, அருங்கடை – protected gate, குறுகி – going close

சான்றோர் புகழ்தல்

செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த, (207-209)

The Wise Praise Him

The wise praise the king for his
gratitude to those who have
helped him flourish with splendor,
for staying away from people with
low minds, for having a kind
face, and for uttering sweet words.

Meanings:   செய்ந்நன்றி – good deeds, அறிதல் – to understand, சிற்றினம் – people of low minds, இன்மையும் – without them, இன்முகம் – sweet face, இனியன் ஆதலும் – he is being sweet, செறிந்து விளங்கு சிறப்பின் – filled with flourishing splendor, அறிந்தோர் – those who know him, ஏத்த – praise him



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மறவர் போற்றல்

அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும்,   210
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்தக், (210-212)

Warriors Praise the King

Brave warriors who achieved
greatness with their swords,
praise the king for showering
graces without rage on those
who fear him, and tolerating
enemy warriors who lost to him.

Meanings:   அஞ்சினர்க்கு – to those who are afraid (warriors of his enemies who lose to him), அளித்தல் – showering graces, வெஞ்சினம் இன்மையும் – and without great rage, ஆண் அணி புகுதல் – to enter where there are rows of warriors, அழி படை – ruined army, தாங்கலும் – tolerating, வாள் – swords, மீக்கூற்றத்து – with great words, வயவர் – strong warriors, ஏத்த – praise

மகளிர் வாழ்த்தல்

கருதியது முடித்தலும், காமுறப்படுதலும்,
ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த, (213-215)

Women Praise Him

Women wearing kohl in their
beautiful eyes with red lines, praise
the king for his ability to unite
with women in the way he intends,
being liked by women, not being
one sided, and for understanding
the sorrow of others.

Notes:  கருதியது முடித்தலும் (213) – நச்சினார்க்கினியர் உரை – தன் நெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்க வல்ல தன்மையையும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்பால் ஊடக கொண்ட மகளிரின் ஊடலை எளிதே தீர்த்து அவரைத் தான் எண்ணியாங்கு எண்ணியபொழுது புணர்ந்து மகிழும் தன்மையையும்.

Meanings:   கருதியது முடித்தல் – finishing what he intended with women, காமுறப்படுதலும் – to be liked by women, ஒருவழிப் படாமை – not being one sided, not being controlled, ஓடியது உணர்தல் – understanding the sorrow of others, அரி – red lines, ஏர் – beautiful, உண்கண் – eyes with kohl, அரிவையர் – women, ஏத்த – praise

பரிசிலர் ஏத்தல்

அறிவு மடம்படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த, (216-218)

Those who Receive Gifts Praise Him

Bards who get gifts from him
praise him for
lowering himself before the
unintelligent to match them,
revealing his intelligent self
in front of intelligent people,
giving gifts according to talents,
and for donating without limits.

Meanings:   அறிவு மடம்படுதலும் – ignorant and lowering oneself, அறிவு நன்கு உடைமையும் – with good intelligence, வரிசை அறிதலும் – knowing their abilities of those who come for gifts, வரையாது கொடுத்தலும் – giving without limits, பரிசில் வாழ்க்கை – those who get gifts and live, பரிசிலர் – those who get gifts, ஏத்த – praise

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி

பன் மீன் நடுவண் பால்மதி போல,
இன்னகை ஆயமொடு இருந்தோற் குறுகி, [219-220]

The King is Seated in His Court

Approach the king who is
seated, amidst a group of artists
who bring him joy, appearing
like the white moon in the midst
of stars.

Notes:  இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி (220) – நச்சினார்க்கினியர் உரை – இயல் இசை நாடகத்தாலும் இனிய மொழிகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையணுகி,

Meanings:   பல் மீன் – many stars, நடுவண் – in the middle, பால் மதி போல – like the white moon, இன் நகை – sweet words, ஆயமொடு – with a group of artists – musicians, poets and actors, இருந்தோற் – he is there, குறுகி – approach him

நல்லியக்கோடன் முன்னிலையில்
யாழ் வாசிக்கும் முறைமை

பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துக்,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்பப்,  225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது, (221-230)

Playing the Lute in Front of the King

On the beautiful stem are lute
strings, lying on the frets,
tight and loose according to the
need, appearing like a wiggling snake
that tightens and loosens its grip on
a green-eyed monkey that holds it by
its head.

There are rows of nails on the edge,
fastening the sides of the pot-like base,
looking like rows of gems.

Remove your lute from the well-crafted
leather cover in the color of the kumilam
fruits of the forest, and to sing perfectly in
all the Puram themes, understand the
meaning well, strum your lute that sounds like
sweet honey and nectar, and sing well according
to the manner prescribed by music books.

Notes:  பாடு துறை முற்றிய (228) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீவிர் பாடும் துறைகள் எல்லாம் முடியப் பாடுதற்கு.

Meanings:   பைங்கண் – green eyes, ஊகம் – monkey, பாம்பு பிடித்தன்ன – like it holds a snake, அம் கோடு – beautiful stem, செறிந்த – closely tied, அவிழ்ந்து வீங்கு – loosened and tightened, திவவின் – with frets, மணி நிரைத்தன்ன – like rows of gems, வனப்பின் – beautifully, வாய் அமைத்து – attached well, வயிறு சேர்பு – attached to the stomach (body part of the lute), ஒழுகிய வகை அமை – in an appropriate manner, அகளத்து – to the pot, கானக்குமிழின் – kumilam fruits from the forest, Gmelina arborea, கனி நிறம் – fruit color, கடுப்ப – like, புகழ் வினை – handwork, பொலிந்த – flourishing, பச்சையொடு – with leather, தேம் பெய்து – pouring honey (தேம் தேன் என்றதன் திரிபு), அமிழ்து பொதிந்து – having nectar, இலிற்றும் – pouring, அடங்குபுரி நரம்பின் – with the tightly twisted strings, பாடு துறை முற்றிய – to sing in the perfectly in all the Puram themes, பயன் தெரி கேள்வி – understanding the meaning well, கூடு கொள் – increased,  இன் இயம் – sweet music instrument, குரல் குரல் ஆக – mixed  voice and instrument, நூல் நெறி மரபின் – according to music book tradition, பண்ணி – sing, ஆனாது – without reducing

மன்னனைப் புகழ்ந்து பாடும் தன்மை

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை,………… (231-235)

What to say to the King

Praise the king and tell him how he
holds his palms together and is
respectful to elders, how he embraces
young warriors with kindness, how he
protects his farmers with his just
scepter, and how harsh he is to enemy
kings owning chariots who he attacks
with spears.  Even before you utter a few words,

Meanings:   முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – that you are respectful to elders whom you greet with palms joined together, இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – that you are welcoming to warriors, that you are welcoming to women, ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – that you provide protection with your scepter, தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – and saying that your spear is harsh to enemy kings who come in chariots, நீ சில மொழியா அளவை – even before you utter a few words,

மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு

………………மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கிக்,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள்   240
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில், (235-241)

The Hospitality of the King

he will give you clothing to wear
made from peels of faultless bamboo
and liquor that will give you rise like
a cobra in rage that raises its hood.

He will serve you many different foods
that have been created using a cookbook
written by Bheeman with a chest like
that of the snow-covered Himalayas,
older brother of Arjunan who wears a
breast cloth with flower designs,
and has a quiver which contains the arrow
that he used to burn the Kāndavam forest,
at the request of the fire god.

Notes:  அறுவை (36) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடை மறுக்கப்பட்டதால் அறுவை என்பது ஆடைக்கு காரணப்பெயர் என்க.  பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி (237) – நச்சினார்க்கினியர் உரை – பாம்பேறி மயக்கினாற்போல மயக்கின கட் தெளிவைத் தந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பினது நஞ்சேறி மயக்கினாற்போன்று மயக்கும் கள்ளினது தெளிவைப் பருகும்படி தந்து, ச. வே. சுப்பிரமணியன் – பாம்பு சினந்து எழுந்தது போன்று எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான்.  அகநானூறு 348 – கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி.

Meanings:   மாசு இல் – without blemish, காம்பு – bamboo, சொலித்தன்ன – like peeled, அறுவை – clothing, உடீஇ – wore the clothing (உடீஇ – சொல்லிசை அளபெடை), பாம்பு வெகுண்டன்ன – like an angry snake that lifted its hood up, like snake poison that rises up, தேறல் – alcohol, நல்கி – gives, கா எரியூட்டிய – burnt the Kāndavam forest, கணை – arrows, தூணி – quiver, an arrow holder, பூவிரி கச்சை – beautiful cloth with flower designs, புகழோன் – famous man, தன்முன் – one before him (elder to Arjunan), பனி வரை மார்பன் – Bheeman with a chest like a snow covered mountain, பயந்த – gave, நுண் பொருள் – fine material, பனுவலின் – from a book, வழாஅ – in a faultless manner (வழாஅ – இசை நிறை அளபெடை), பல்வேறு அடிசில் – many kinds of food items

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டித், (242-245)

Figuring what you like, he will
serve you unlimited quantities
of desired foods with hospitality,
in golden bowls that shine in
a manner that blames the blazing,
tender-rayed sun surrounded by
planets, in the shining, bright sky.

Meanings:   வாள் நிற விசும்பு – bright sky, கோள்மீன் சூழ்ந்த – surrounded by planets, இளங்கதிர் ஞாயிறு – sun with tender rays, எள்ளும் தோற்றத்து – in a blaming way, விளங்கு பொற்கலத்தில் – in shining gold bowls, விரும்புவன பேணி – gives what you like with hospitality, ஆனா விருப்பின் – with great desire, தான் நின்று ஊட்டி – he will stand in front and feed you

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்

திறல் சால் வென்றியொடு, தெவ்வுப்புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு, (246-249)

The Gifts Given by the King

The king has chased away
strong enemies from his land,
ruined fortresses of
brave kings with spear brigades,
removed the poverty of bards,
and gave them precious gifts
that were brought back from
wars by his soldiers.

Meanings:   திறல் சால் – with strength, வென்றியொடு – with victory, தெவ்வு – enemy, புலம் – land, அகற்றி – remove, விறல் வேல் மன்னர் – brave king with spears, மன் –stable, எயில்முருக்கி – ruin their forts, நயவர் – those who came with desire, பாணர் – bards, புன்கண் – poverty, sorrow, தீர்த்த பின் – after it is removed, வயவர் – warriors, தந்த – brought, வான் கேழ் – superior colors (Po. Ve. Somasundaranar – பொன், மணி முதலிய நிதியம்), நிதியமொடு – with precious wealth

பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி,   250
உருவ வான் மதி ஊர் கொண்டாங்குக்,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல,   255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழி நடைப் பாகரொடு, (250-258)

He will give you fine chariot
that rides well, built well by
skilled carpenters, its wheels,
with hubs carved with sharp chisels
and radiating spokes and sharp rims,
appearing like the monsoon sky’s
moon floating with milky white rays,
and attached to the middle part of the
chariot which is painted, is its red lac
ceiling appearing like the strewn
clusters of open buds from the high
branches of tall murukkam trees.

Notes:  பாகரொடு (258) – நச்சினார்க்கினியர் உரை – பாகருடைய தேரைப் பாகரென்றார் ஆகுபெயரால், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – தேரோடு, பாகர் என்பது மரத்தினால் இயன்ற தேரின் சுற்றுச் சுவர்.  அயில்வாய் (253) – நச்சினார்க்கினியர் உரை – கூரிய வாய், சூட்டிற்கு ஆகுபெயர்.

Meanings:   பருவ வானத்து – of the season’s sky, பால் கதிர் – milk-like white rays, உருவ வான் மதி – moon in the beautiful sky, ஊர் கொண்டாங்கு – like it is moving, கூர் உளி – sharp chisel, பொருத – hit with it, வடு ஆழ் – deep scars, நோன் குறட்டு – with strong wheel hubs, ஆரம் – wheel spokes, சூழ்ந்த – surrounding, அயில்வாய் – iron rims, sharp rims, நேமியொடு – with wheels, சிதர் – strewn, நனை – buds, முருக்கின் – of murukkam trees, முருக்கம், Coral tree, Erythrina variegate, சேண் –ஓங்கு – very high, நெடுஞ்சினை – large branches, long branches, ததர் – clusters, பிணி – tightness, அவிழ்ந்த – opened, தோற்றம் போல – like the appearance, உள் – inside, அரக்கு – red wax, red lac, எறிந்த – placed, உருக்கு – melted, உறு – fitting, போர்வை – ceiling of the chariot, top cover of the chariot, கருந்தொழில் வினைஞர் – skilled men who do difficult work, கைவினை – hand work, artistry, முற்றி – accomplished, ஊர்ந்து – ride on the chariot, பெயர் பெற்று – famous, எழில் நடை – beautifully riding, பாகரொடு – along with a chariot (பாகர் – தேர், ஆகு பெயர்)

மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாண் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ,   260
அன்றே விடுக்குமவன் பரிசில், (259-261)

On that day, he will also gift you the gift
of a strong bull with a bright face, faster
than a trotting horse, along with a charioteer.
and allow you to leave.

Meanings:   மா – horse, செலவு – going fast, ஒழிக்கும் – ruins, நோன் தாள் – strong legs that run, வாண் முக – bright faced (bull), பாண்டில் – bull, வலவனொடு – with a charioteer, தரீஇ – will give (தரீஇ – சொல்லிசை அளபெடை), அன்றே – on that day, விடுக்கும் – he will let you leave, அவன் பரிசில் – his gifts

நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்

……………………..மென்தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பித்
துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு   265
எறிந்து உரும் இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணிச்
செல் இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே! (261-269)

The Splendor and Fame of Nalliyakōdan

Go to him with everlasting fame,
who is adorned with garlands made
with tender leaves.

He is the lord of the mountains
where moving, clear clouds crawl
on the hard-to-scale peaks, where
bamboo grow, roaring thunder
attacks the summits, and fog passes
through the spread pea**** plumes,
of sapphire hue,
that resemble the beautiful, delicate
hair of women of tender arms,
swaying walk and garments on their
loins, that is spread to infuse the
aroma of fragrant akil smoke.

Meanings:    மென்தோள் – delicate arms, delicate shoulders, துகில் அணி – wearing clothing, அல்குல் – waist, loins, துளங்கு – moving, இயல் – nature, மகளிர் – women, அகில் உண விரித்த – spread for akil wood smoke to enter (உண உண்ண என்பதன் விகாரம்), அம் – beautiful, மென் கூந்தலின் – like the delicate hair, மணி மயில் – sapphire-colored pea****, கலாபம் – feathers, plumes, மஞ்சு – fog, low clouds, இடைப்பரப்பி – spread between, துணி – clear, மழை – clouds, தவழும் – crawl, spread, துயல் – moving, கழை – bamboo, நெடுங்கோட்டு – on the tall mountain peaks, எறிந்து – hitting, உரும் – thunder, இறந்த – passed, ஏற்று – climbing high, அரும் சென்னி – difficult summits, குறிஞ்சி கோமான் – lord of the kurinji land, lord of the mountains, கொய் தளிர் – plucked tender leaves, கண்ணி – garland, செல் இசை – not having moving fame like others, நிலைஇய பண்பின் – with traits that last (நிலைஇய – சொல்லிசை அளபெடை), நல்லியக்கோடனை – to Nalliayakōdan, நயந்தனிர் செலினே – if you go with desire



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard