New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுகி.சிவம் பேச்சு வியாபாரி பொய்கள் -அரவிந்தன் நீலகண்டன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சுகி.சிவம் பேச்சு வியாபாரி பொய்கள் -அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


சுகி.சிவம் ஒரு திறமையான  பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.

திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.

‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது 
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி 
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு 
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை 
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து 
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல 
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் 
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;

ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லி வழிபடுகின்றனர் அந்தணர். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர் என்றோ அன்னியர் என்றோ அல்லது வடக்கத்தியர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக ‘தொல்குடி’ என காட்டப்படுகின்றனர். இந்த வழிபாட்டை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிற அதே முருகன் குறமகள் அளிக்கும் பலியையும் ஏற்றுக்கொள்கிறார். எப்படிப்பட்ட வழிபாடு?

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் 
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி 
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇச், 
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 
பெருந்தண் கணவீரம் நறுத்தண் மாலை 
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி 
நளிமலைச் சிலம் பின் நன்னகர் வாழ்த்தி, 
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க 
உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி

இங்கு எங்கும் ஒரு முறை சிறந்தது மறுமுறை தாழ்ந்தது என நக்கீரர் கூறவில்லை. ஒன்று தமிழருடையது மற்றது அன்னியருடையது என அவர் சொல்லவில்லை. வேத வழிபாட்டிலும் ஊன் பலி உண்டு.வேத சமுதாயத்தில் ஆவேச வழிபாடுகள் - induced altered states of consciousness- உண்டு. வாக் சூக்தத்தில் தேவி ஆவேசிப்பதை கூறுகிறாள். ஆனால் வேதத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி இவ்விரு முறைகளும் ஒன்று இழுக்காக ஒன்று மேலாக கருதப்படவில்லை. அவை இனரீதியாக அடையாளப்படுத்தப்படவும் இல்லை. இவை இரண்டுமே முருகனுக்கு விருப்பமானவைதாம். பின்னாட்களில் உயிர்பலி கொடுத்தலை பௌத்தமும் சமணமும் கீழாக கருதிய போது கண்ணப்பர் மூலம் வழிபாட்டு முறைகளல்ல சிரத்தையும் பக்தியுமே முக்கியம் என காட்டியது இந்து சமயம்.

இங்கு முக்கியமாக நக்கீரர் கூறுவதை கவனிக்க வேண்டும்:

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.

விளக்கம் [கிவாஜ]: “தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும்.”

இதுவே பாரதிய ஞானத்தின் உச்சம். ஏறக்குறைய அனைத்து சமய சாத்திரங்களிலும் பிரஸ்தான த்ரயமோ பக்தி பனுவல்களோ பழந்தமிழ் இலக்கியமோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது இதுவே: ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது வேதம். ‘அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் 
எவ்வயி னோயும் நீயே’ என்பது பரிபாடல்.

‘யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிதுமிச்சதி/ தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ 7:21 ’எவர் எவர் என்னை எந்தெந்த மூர்த்தி வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட்டாலும் அவரவர் நிலைப்பாட்டை அவ்வடிவத்திலேயே உறுதிகொண்டதாக்குகிறேன்.’ என்பது பகவத் கீதை. 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்' என்பது அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.

வேதம் கூறிய பெரும் சத்தியமான ஒருமையின் பன்மை பன்மையின் ஒருமை என்பதை சங்க இலக்கியங்களும் நம் அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே, ஒரு பேச்சுக்கு ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டை ஒத்துக் கொண்டால் அவர்கள் என்ன ஒப்பந்தம் வைத்து கொண்டிருப்பார்கள்? சுகி.சிவத்தின் பாணியில் சொன்னால் ‘மொழி உன்னுது தத்துவம் என்னுது எப்படி எப்படி மொழி உன்னுது தத்துவம் என்னுது’ என்று சொல்லியிருப்பார்களோ? இது எப்பேர்பட்ட அபத்தம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் வரும். வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் அரவணைத்து பன்மையையும் மாற்றத்தையும் அரவணைத்து செல்லும் தர்மம் நம் சனாதன தர்மம். முருகன் என்கிற சுப்ரமணியன் அதில் ஒரு பெரும் ஞான தரிசனம், பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பேருரு.

இன்னும் சொன்னால் முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்று பெயர். கந்தன் என்கிற மிக மிக சகஜமான தமிழ் பெயரின் வேத வடிவம் ஸ்கந்தன். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், அருமையான கட்டுரையான ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ என்பதில் கூறிய தரவுகள் சில இங்கு முக்கியமானவை: “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த ‘கந்துடைப் பொதியில் ‘ குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”

கந்து என்பதும் ’ஸ்கந்த’ ’ஸ்கம்ப’ என்கிற பிரபஞ்ச பெருந்தூண் வடிவில் நிற்கும் தெய்வத்துடன் தொடர்புடையது. ’கம்பு’ என்பதும் உறவுடைய சொல்லே. அதர்வ வேதத்தில் வரும் ஸ்கம்ப சூக்தம் ஸ்கம்பமாக வெளிப்படும் பிரம்மத்துக்கு வேத மந்திரங்கள் அனைத்துமே பாகங்கள் என கூறுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின்னால் இதை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேத மந்த்ர சொரூபா நமோநம’ என்கிறார்.

ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார்.

இந்த பிளவுப்பார்வையை - நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சி பார்வையும் அருட்பார்வையும் கால்டுவெல் சந்ததியாருக்கு ஏற்பட்டுவிடவும் இல்லை.

தன் வாழ்க்கைக்கு இந்து மத கோவில்களில் இந்து சமய கூட்டங்களில் ஆன்மிக பேச்சாளராக வாழ்ந்துவரும் ஒருவர், ஆன்மிக பெரியார்களின் அருட்பார்வையையும் ஆழமான ஆராய்ச்சிப் பார்வையையும் விடுத்து கால்டுவெல் பார்வையுடனும் சீமான் பார்வையுடனும் நம் தமிழ் கடவுளை அணுகுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது அன்றி வேறென்ன?

வேதனை. வெட்கம்.

https://m.youtube.com/watch?v=3ZXB0kq3GRM&feature=share

https://www.facebook.com/10000035944…/posts/2520163611338929

அரவிந்தன் நீலகண்டன் ஜி

சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.

திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.

‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது 
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி 
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு 
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை 
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து 
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல 
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் 
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;

ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லி வழிபடுகின்றனர் அந்தணர். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர் என்றோ அன்னியர் என்றோ அல்லது வடக்கத்தியர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக ‘தொல்குடி’ என காட்டப்படுகின்றனர். இந்த வழிபாட்டை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிற அதே முருகன் குறமகள் அளிக்கும் பலியையும் ஏற்றுக்கொள்கிறார். எப்படிப்பட்ட வழிபாடு?

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் 
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி 
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇச், 
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 
பெருந்தண் கணவீரம் நறுத்தண் மாலை 
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி 
நளிமலைச் சிலம் பின் நன்னகர் வாழ்த்தி, 
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க 
உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி

இங்கு எங்கும் ஒரு முறை சிறந்தது மறுமுறை தாழ்ந்தது என நக்கீரர் கூறவில்லை. ஒன்று தமிழருடையது மற்றது அன்னியருடையது என அவர் சொல்லவில்லை. வேத வழிபாட்டிலும் ஊன் பலி உண்டு.வேத சமுதாயத்தில் ஆவேச வழிபாடுகள் - induced altered states of consciousness- உண்டு. வாக் சூக்தத்தில் தேவி ஆவேசிப்பதை கூறுகிறாள். ஆனால் வேதத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி இவ்விரு முறைகளும் ஒன்று இழுக்காக ஒன்று மேலாக கருதப்படவில்லை. அவை இனரீதியாக அடையாளப்படுத்தப்படவும் இல்லை. இவை இரண்டுமே முருகனுக்கு விருப்பமானவைதாம். பின்னாட்களில் உயிர்பலி கொடுத்தலை பௌத்தமும் சமணமும் கீழாக கருதிய போது கண்ணப்பர் மூலம் வழிபாட்டு முறைகளல்ல சிரத்தையும் பக்தியுமே முக்கியம் என காட்டியது இந்து சமயம்.

இங்கு முக்கியமாக நக்கீரர் கூறுவதை கவனிக்க வேண்டும்:

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.

விளக்கம் [கிவாஜ]: “தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும்.”

இதுவே பாரதிய ஞானத்தின் உச்சம். ஏறக்குறைய அனைத்து சமய சாத்திரங்களிலும் பிரஸ்தான த்ரயமோ பக்தி பனுவல்களோ பழந்தமிழ் இலக்கியமோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது இதுவே: ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது வேதம். ‘அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் 
எவ்வயி னோயும் நீயே’ என்பது பரிபாடல்.

‘யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிதுமிச்சதி/ தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ 7:21 ’எவர் எவர் என்னை எந்தெந்த மூர்த்தி வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட்டாலும் அவரவர் நிலைப்பாட்டை அவ்வடிவத்திலேயே உறுதிகொண்டதாக்குகிறேன்.’ என்பது பகவத் கீதை. 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்' என்பது அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.

வேதம் கூறிய பெரும் சத்தியமான ஒருமையின் பன்மை பன்மையின் ஒருமை என்பதை சங்க இலக்கியங்களும் நம் அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே, ஒரு பேச்சுக்கு ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டை ஒத்துக் கொண்டால் அவர்கள் என்ன ஒப்பந்தம் வைத்து கொண்டிருப்பார்கள்? சுகி.சிவத்தின் பாணியில் சொன்னால் ‘மொழி உன்னுது தத்துவம் என்னுது எப்படி எப்படி மொழி உன்னுது தத்துவம் என்னுது’ என்று சொல்லியிருப்பார்களோ? இது எப்பேர்பட்ட அபத்தம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் வரும். வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் அரவணைத்து பன்மையையும் மாற்றத்தையும் அரவணைத்து செல்லும் தர்மம் நம் சனாதன தர்மம். முருகன் என்கிற சுப்ரமணியன் அதில் ஒரு பெரும் ஞான தரிசனம், பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பேருரு.

இன்னும் சொன்னால் முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்று பெயர். கந்தன் என்கிற மிக மிக சகஜமான தமிழ் பெயரின் வேத வடிவம் ஸ்கந்தன். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், அருமையான கட்டுரையான ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ என்பதில் கூறிய தரவுகள் சில இங்கு முக்கியமானவை: “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த ‘கந்துடைப் பொதியில் ‘ குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”

கந்து என்பதும் ’ஸ்கந்த’ ’ஸ்கம்ப’ என்கிற பிரபஞ்ச பெருந்தூண் வடிவில் நிற்கும் தெய்வத்துடன் தொடர்புடையது. ’கம்பு’ என்பதும் உறவுடைய சொல்லே. அதர்வ வேதத்தில் வரும் ஸ்கம்ப சூக்தம் ஸ்கம்பமாக வெளிப்படும் பிரம்மத்துக்கு வேத மந்திரங்கள் அனைத்துமே பாகங்கள் என கூறுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின்னால் இதை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேத மந்த்ர சொரூபா நமோநம’ என்கிறார்.

ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார்.

இந்த பிளவுப்பார்வையை - நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சி பார்வையும் அருட்பார்வையும் கால்டுவெல் சந்ததியாருக்கு ஏற்பட்டுவிடவும் இல்லை.

தன் வாழ்க்கைக்கு இந்து மத கோவில்களில் இந்து சமய கூட்டங்களில் ஆன்மிக பேச்சாளராக வாழ்ந்துவரும் ஒருவர், ஆன்மிக பெரியார்களின் அருட்பார்வையையும் ஆழமான ஆராய்ச்சிப் பார்வையையும் விடுத்து கால்டுவெல் பார்வையுடனும் சீமான் பார்வையுடனும் நம் தமிழ் கடவுளை அணுகுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது அன்றி வேறென்ன?

வேதனை. வெட்கம்.

https://m.youtube.com/watch?v=3ZXB0kq3GRM&feature=share

https://www.facebook.com/10000035944…/posts/2520163611338929



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சுகி.சிவம் பேச்சு வியாபாரி பொய்கள் -அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


!முருகன் தான் தமிழ்க் கடவுள், சுப்பிரமண்யன் இல்லை என்று சுகி. அவர்கள் சொல்கிறார், சொல்லட்டும் தவறில்லை, அனால் சுப்ரமண்யம் என்ற வடமொழிச் சொல்லை சு பிராமணீயம் என்று எப்படி மாற்றலாம் , சு+ ப்ரம்மண்யம், இதன் பொருள் சிறப்பாக பரப்ரம்மம் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது, மேலும் அந்த .பரப்ரம்மம் ஆகிய ஆதி சிவனே சுப்ரமண்யன் ஆனார் என்பது கருத்து, அதனால் பாலசுப்ரமண்யன் என்றும் கூறுவர் ,பால என்பதற்கு இளைய என்பதும் ஒரு பொருள், முருகு என்ற கமிழ்ச் சொல்லிற்கும் இளமை என்ற பொருள் உண்டு, சித்தர்கள் எழுதிய ' வைத்திய நூல்களில் இள சான. மூலிகையைக் குறிக்க முருகு என்று பயன்படுத்துவர், மேலும் நம் உடலின் இளமை மாறாதிருக்க உதவுவது சோற்றுக் . கற்றாழை , இதை குமரி என்பர், அது போல இளமை என்பதை குறிக்கும் வகையில் குமரன் என்றனர், குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான், கந்து என்ற வடசொல்லுக்கு சேர்தல் என்று பொருள் , அதே தமிழில். கந்து என்பதை கட்டுதல் என்ற பொருளில் சொல்லப்படும், கந்து என் பதற்ரும் இளமை அழகு என்ற பொருள்கள் உண்டு, .முருகன் தெய்வயானையை மணந்தார், வள்ளிக் குளத்தியை காதல் மணம் புரிந்தார் இது புராணம் , ஆனால் புராணங்களில் கூறப்படுபவற்றிற்கு , உன்ன மயான தத்துவப் பொருள் இருக்கும், அதை அறிய வேண்டும், தெய்வயானை மனிதரின் ஆயுளை காக்கும் சக்தி அதாவது பிரம்ம ஞான சக்தி, ஒரு,மனிதர் அறுபதாம் கலியாணத்தில் சிறப்பாக பூஜிக்கப்படுபவள் இந்த ஆயுர் தேவதையான ஷஷ்டி தேவி யாவாள், வள்ளியோ க்ரியா சக்தி, அதாவது செயலாற்றும். ஆற்றல், இது பூத தத்துவ ஆற்றல், பஞ்ச பூத மயமான உலகம், அதில் வாழம் உயிர் களுக்கும் ஆற்றல் தருவது, என இருவகை சக்திகளையும் தன்னகத்தே கொன் பவர் சுப்ரம்மண்யன் எனப்படும முருகன், குமரன் ஆவார்!

நன்றி திரு Santhanam Pammal ஐயா



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1. தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!

2. ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!

3. புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகள் அல்ல; "விடுமுறை" நாட்கள் மட்டுமே!

4. பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் , மூன்று கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.

5. சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!

6. வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறியர்கள்.ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்!

7. ஒரு ஹிந்துத் தமிழன் சபரி மலை, காசி, திருப்பதி போன்றத் தலங்களுக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம்; ஆனால், அதே ஹிந்துக்களின் வரிப் பணத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனிதப் பயணம்!

8. எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால், அது மத பயங்கரவாதம்;
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான இந்து அப்பாவிகளைக் கொத்துத் கொத்தாக கொன்றால் அது புனிதப் போர்.

9. வீட்டில் வேட்டி கட்டி பொங்கலைக் கொண்டாடும் ஹிந்து ‘பார்பனீயத்தின் அடிமை’; ஆனால், வீட்டில் லுங்கி கட்டி, ரம்ஜான் கொண்டாடுபவனும்,
கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனும் ‘திராவிடத் திலகங்கள்’!

10. சாதியை ஒழிக்க, சமூக நீதி நிலைக்க,பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மத சார்பு; ஆனால், பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்களை ஆண்டு அவர்கள் மீது 'ஜசியா' போன்ற வரிகளை மத அடிப்படையில் போட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது மத சார்பின்மை.

11. ஒரு கடவுள் கொள்கையுடைய மதம் உயர்ந்தது; ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (அத்வைதம்) இந்து மதம் கேவலமானது.

12. சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் விக்ரகங்களை வணங்கினால் அது மூடநம்பிக்கை; ஆனால், விமானத்தில் போய் வெற்றிடத்தை வணங்கி வந்தால் அது புனிதமானது.

13. மும்பையில் எங்காவது ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு மறுக்கப்பட்டால் அது மத வெறி; ஆனால் கைராணாவில் (உ.பி) 300க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களால் விரட்டப் பட்டால் அது மத சார்பின்மை.

14. மாட்டுக் கறி திருடிய முஸ்லிம் ஒருவன் இறந்து போனால் அவன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்; ₹ 40 லட்சம் மதிப்புள்ள வீடு; குடும்பத்தினருக்கு அரசு வேலை - இது மத சார்பின்மை;
ஆனால், பசு வதையை தடுக்கச் சென்ற ஒரு ஹிந்து கொல்லப் பட்டதற்கு, நீதி கேட்டால் அது மத வெறி.

15. பெரும்பான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள், தாம் தெய்வங்களாக வணங்கும் ராமன் மற்றும் கிருஷ்ணன் பிறந்த நாட்களுக்கு அரசு விடுமுறை கேட்டால், அது மத வெறி; ஆனால், வந்தேறி மதங்களைத் தோற்றுவித்த முஹம்மது மற்றும் யேசுவின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிப்பது மத சார்பின்மை.

16. இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி பிடித்தவர். ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மத சார்பற்ற மனிதர்!

17. 2000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய மதம் உயர்வானது;
ஆனால், அதற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான கலாச்சாரம் கேவலமானது.

18. நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி;
ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.

19. ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன; ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.

20. ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன்;
ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.

21. மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

22. மத உணர்வுகளை புண் படுத்துகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்ற பெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி; ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.

23. விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களைத் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி;ஆனால், 100 கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று 'ஒவேசி' பேசினால், அது மத சார்பின்மை.

24. கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் அது பார்பனீயம்;ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது திராவிடம்.

25. குதிரையின் காலை வெட்டினால் அது மதவெறி;
ஆனால், கொத்தாக பலரை கொன்றால் அது மத சார்பின்மை.

26. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்தியில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அது இந்துக்களின் மத வெறி; ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய நாடுகளில், மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது 'அமைதி மார்க்கத்தின்' அன்பு வழி.

27. பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்துப் போராடினால் அது மத வெறி; ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மத சார்பின்மை!

28. எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள் நுழைய தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல்;
நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் 'நவ துவாரங்களை' மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.

29. வருஷத்துக்கு ஒரு முறை தீபாவளி சமயம் பட்டாசு வெடிப்பதும், விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் எடுப்பதும் சமூகத்துக்குகு எதிரானது; ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கிலும், கொடூரமாகக் கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.

30. அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன்; ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard