New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீரமணியின் காலித்தனமான் அராஜக மறுப்பு - நாயக்கருக்கு யுனஸ்கோ விருது கதைகள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வீரமணியின் காலித்தனமான் அராஜக மறுப்பு - நாயக்கருக்கு யுனஸ்கோ விருது கதைகள்
Permalink  
 


எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விக்கிப்பீடியாவிலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!

 

பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!

a2.jpg

அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாருக்கு 1970 இல் அளித்த விருது பொய்யென்று தவறான தகவல்களைக் கூறி, விக்கிப்பீடியாவிலிருந்து அந்தத் தகவலை நீக்கியிருக்கிறது ஒரு பார்ப்பனக் கும்பல். இந்த 2019 இலும் பார்ப்பனர்கள் பிறவிக் கிரிமினல்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்றே போதாதா? பார்ப்பனர்களைத் தெரிந்துகொள்வீர் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈ.வெ.ராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கியதாக திராவிட ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பி, அதை விக்கிப்பீடியாவில் சேர்த்து வைத்திருந் தார்கள். ஈ.வெ.ரா. பற்றிய கட்டுரை sem-protected என்ற வகையைச் சேர்ந்தது. நேரடியாக யார் வேண் டுமானாலும் திருத்திவிட முடியாதது. விக்கிப்பீடியா அங்கீகரித்த பதிப்பாசிரியர்கள்தான் திருத்த முடியும்.

1998 வரையிலான யுனெஸ்கோ விருதுகள் பட்டி யலில் ஈ.வெ.ரா. பெயர் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி நான் திருத்தம் கோரியிருந்தேன். விக்கிபீடியா அதை ஏற்று அந்தப் பொய்யான தகவலை நீக்கி உள்ளது. திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் என்று அந்த செய்தியில் வெளியாகியுள்ளது.

பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்ப தற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இப்படி ஒரு பார்ப்பன சதி ஆரவாரம் இல்லாமல் நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கிரகாரத்தின் அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்திலும் அய்யா அக்னி திராவகத்தை ஊற்றி அலறச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை இருட்டடிக்க எந்த எல்லைக்கும் சென்று பார்ப்பனர்கள் கீழிறக்க வேலையில் ஈடுபடுவார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையிலிருந்துஅப்பட்டமானஇந்துத்துவா கொள்ளியைக் கையில் பிடித்து அலைந்து கொண் டிருக்கும் ஓர் இணைய தளம்தான்  tmnews24.com.  தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்ப்பனர் ஒருவர் இந்தியாவிலிருந்து இயக்கும் வேலையைச் செய்துகொண்டு இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற பார்ப்பனர் இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறான்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனமே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்த லாட்டக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?

யுனெஸ்கோ மன்றம் என்ற அய்.நா.வின் அதிகார பூர்வமான கிளைதான் அவ்விழாவை நடத்தியது.

a3.jpg

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27.6.1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர் திரிகுண சென்தான் அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியாருக்கு விருது வழங்கினார் என்பது உலகறிந்த தகவலாகும்.

‘‘Periyar, the Prophet of the New Age;
The Socrates of South East Asia;
Father of the Social Reform Movement;
And Arch Enemy of Ignorance,
Superstitions, Meaningless Customs and Base Manners”

புது உலக தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிர தாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி''

என்ற வாசகங்களும் அந்த விருதில் பொறிக்கப் பட்டு இருந்தன.

அந்த விருதினை பெற்றுக்கொண்ட தந்தை பெரியார், அய்.நா. மன்றத்தின் மற்ற மற்ற வாசகங் களைவிட  "அறியாமைக்கு, மூடநம்பிக்கைக்கு அர்த்தமற்ற சம்பிரதாயத்திற்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம்'' என்று ஏற்புரையும் வழங்கினார்.

இவை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரபல ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன.

இவை எல்லாம் பொய்யென்று ஒரு பார்ப்பான் சொன்னதாகவும், அதனை விக்கிப்பீடியா ஏற்றுக் கொண்டு, பெரியாருக்கு விருது வழங்கப்பட்ட தகவலை நீக்கியதாகவும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் ஒரு பார்ப்பான்.

இந்தப் பித்தலாட்டத்தை செய்ததோடு அல்லாமல் திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்' என்றும் குறிப்பிடுகிறார் என்றால், இவர்களின் திமிரின் அளவு எத்தனை டிகிரிக்குச் சென்று இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஆட்சி அதிகாரம் தங்கள் கூட்டத்திடம் உள்ளது எனும் குருட்டுத் தைரியத்தில் எதையும் செய்ய லாம் என்று கருதுகிறார்கள் போலும்; இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும். Phic Zucker Man  (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும். அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

The United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) eventually gave an award to Periyar, and the Union Education Minister Triguna Sen, in Madras (Chennai), on June 27, 1970. The citation hailed Periyar as ‘‘the Prophet of the New Age, the Socrates of South East Asia, Father of Social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and bas manners'' என்று வெளிவந்துள்ளது.

பார்ப்பனர்கள் நினைத்தால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஆசாமிகளை எல்லாம் ஜெகத்குரு' என்பார்கள். கொலைக் குற்றத்தில் ஜெயிலுக்குப் போன பேர்வழியென்றாலும் ஜெகத்குரு' என்பதில் மாற்றுக் குறையாமல் கூவுவார்கள்.

அதேநேரத்தில், தமிழினத்தின் பாதுகாவலரை - கட்சிக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியார் என்று போற்றப்படும் சகாப்தத் தலைவரைப்பற்றி உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனக் கும்பலை நம் மக்கள் அடையாளம் காணவேண்டாமா?

ஜெகந்நாத் ஸ்ரீனிவாசன் என்ற பேர்வழியின் முயற்சிக்கு விக்கிப்பீடியா ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் விக்கிப்பீடியாவின் காதைத் திருகி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!

 கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

30.4.2019



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard