New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோமா இந்தியா வருகை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தோமா இந்தியா வருகை
Permalink  
 


மாணவர்களுக்குப் புரட்டு வரலாறு

அப்போஸ்தலர்கள் யார்? பன்னிருவர் யார்?
பைபிள்களிலுள்ள தாமஸ்
ஒதுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டுள்ள புதிய ஆகம பைபிள்கள்
தாமஸின் நூல்கள்
உள்ளத்தாட்சிகள் குட்டை வெளிப்படுத்துகின்றன
மைலாப்பூரிலுள்ள இரண்டாவது கல்லறை
மைலாப்பூரிலுள்ள இரண்டு கல்லறைகளுக்கு எதிரான அத்தாட்சிகள்
19729ல் இந்த கல்லறை சந்தேகிக்கப்பட்டது
உயிர்த்தியாகி தாமஸ் ஆனது எவ்வாறு?
மாலுப், கலாமினா, மைலாப்பூர்
கிருஸ்துவ பாதிரிகளின் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகள்
போர்ச்சுகீசியரும்,அரேபியரும்
விஜயநகரப் பேரரசும், போர்ச்சுகீசியரும்
பிராமணர்களை சம்பந்தப்படுத்தும் கதைகள்
தென் இந்தியாவில் தாமஸக்கு ஆறு கல்லறைகள்
கட்டுக் கதை மறுபடியும் வளர்கிறது

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1. நுழைவாயில் தமிழக முதல்வர் தலைமையில் 100 கோடியில் சினிமா துவக்க விழா

2. கிறிஸ்து - பைபிள் ஒரு வரலாற்று அறிமுகம்

3. கிறிஸ்துவ வளர்ச்சியின் வரலாறு

4. தோமோவைப் பற்றி சுவிசேஷ கதைகளில்

5. தோமாவின் நடபடிகள் நூலின் கதை

6. தோமா இந்தியா வருகை - கேரளாவின் கதைகள்

7. கொடுங்கல்லூர் தொல்லியல் ஆய்வு உண்மைகள்

8. சென்னையில் தோமா சர்ச்சுகளும் முன்பு இருந்த கோவில்களும்

9. இந்தியாவின் கல்வி நிலையும் தொழில் நிலையும்

10. மிஷநரிகளும் -ஆங்கிலக் கல்வியும் மதமாற்றமும் 

11. கிறிஸ்துவ ஆங்கில  ஆட்சியின் வேதனைகள்

12. திருக்குறளிற்கு போலி ஓலைசுவடி தயாரித்த சர்ச்சும் நீதிமன்ற வழக்கும்

13. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நுழைவாயில் தமிழக முதல்வர் தலைமையில் 100 கோடியில் சினிமா துவக்க விழா 

 கத்தோலிக்க சபை சார்பில் புனித தோமையார் குறித்த திரைப்படம் 50- 100 கோடி பட்ஜெட் செலவில்  தயாரிக்க 3 ஜூலை 2008 அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பற்றிய திரைப்படத்தை துவக்கவிழா நடைபெற்றது.

புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். 
 “கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும். கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார். அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்” என்று சொல்லி நிறுத்தினார்”//

 கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா?

 

       புனித தோமையார்” படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.“கிறிஸ்துவ விசுவாசத்தின் பிரதான அம்சமான இயேசுவின் உயிர்த்தெழுதலையே விமர்சிப்பவர்கள், புனித தோமையாரையா விட்டு வைப்பார்கள்? பரங்கிமலையில் புனித தோமையார் கொல்லப்பட்ட பாறை இன்றும் இருக்கிறது. `தோமையார்” கொல்லப்பட்ட நாளில், 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை, அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புனித தோமையார் கட்டிய ஏழு தேவாலயங்கள் இன்றும் உள்ளன. அப்படியிருக்கையில் அவர் இந்தியாவுக்கு வரவில்லை, என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தோமையார் இந்தியாவுக்கு வரவில்லை என்று போப் பெனடிக் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். அவர் எப்போது, எங்கு அப்படிக் கூறினார் என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே?// போப் அப்படி எதுவும் கூறவில்லை என்பதே உண்மை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=2302&ncat=TN&archive=1&showfrom=7/4/2008
http://www.mayyam.com/talk/showthread.php?6867-Movie-on-St-Thomas-Rajini-as-Valluvar 
புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார்அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னைசாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில்இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில்ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்’ படத்தின் திரைக்கதைவசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.

tblArasiyalnews_17290461064.jpg  images?q=tbn:ANd9GcSr54wVctLdQMHZMJDQA4W

கடவுள் ஏற்கும் வகையில் சேவை : பட விழாவில் கருணாநிதி வலியுறுத்தல்
ஜூலை 04,2008,00:00  IST
 
 

Latest indian and world political news information

சென்னை : ""ஏழைகளுக்கு உதவி செய்து, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார். "இந்தியாவின் திருத்தூதர் புனித தோமையார்' என்ற திரைப்பட துவக்க விழா, சென்னை சாந்தோம் புனித தோமையார் சர்ச்சில் நேற்று நடந்தது. தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை வரவேற்றார். சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின் பிஷப் சின்னப்பா தலைமை வகித்தார். துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் முன்னிலை வகித்தார்.



படத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எங்கள் ஆட்சிக்கு சிறுபான்மை ஆட்சி என்ற பெயரும் உண்டு. சிறுபான்மை சமுதாயத்தை சீர்தூக்கி விட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆட்சி நடக்கிறது. உலகத்தில் மூன்று கல்லறைகளில் பெருந்தகையாளர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரோமில் ராயப்பர், ஸ்பெயினில் யாகப்பர், தமிழகத்தில் தோமையார். இவர்களில் தோமைய்யரை அய்யர் என அன்போடு அழைக்கின்றனர். அய்யர் என்று அழைக்கும் போது ஏதோ ஒரு பிரிவினரை அழைப்பதாக கருதக் கூடாது. உயர்ந்தோர், சிறந்தோர் என்ற பொருளில் தான் அழைக்கப்படுகிறது. சிறந்த ஒருவரை பாராட்டும் சொல். லாரன்ஸ் பயஸ் பேசும் போது, "கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதியை ஏன் அழைக்க வேண்டும்?' என்று சிலர் கேட்டதாக கூறினார். கருணாநிதி சாதாரணமானவர். கடவுள் ஆயிரம், லட்சம், கோடி மடங்கு பெரியவர். கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா, இல்லையா? என்பது பிரச்னை அல்ல. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.



ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும். நோயுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நலிந்தோருக்கு நன்மை செய்ய வேண்டும். உதவி கேட்ட ஏழையை விரட்டினால், கடவுளை கும்பிடும் கைகளை கடவுளே மன்னிக்க மாட்டார். கடவுளுடன் அன்புவழி பயிற்சி; கருணை வழி பயிற்சி இருக்க வேண்டும். தோமையார், தான் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம், அவர் ஆற்றிய தொண்டு என்னை கவர்ந்தது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். விழாவில், புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எர்னஸ்ட் பால் நன்றி கூறினார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ரஜினி நடிக்கப்போகும் அந்தப் புதிய படத்தின் பெயர் `புனித தோமையார்’. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்து, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு வேதம் போதிக்க வந்து வேதசாட்சியாக உயிர்நீத்தவர்தான் புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்’ படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். `புனித தோமையார்’ படத்தில் அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அதுபோல வள்ளுவரின் மனைவி வாசுகியாக யார் நடிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் இப்போது பந்தல்போட ஆரம்பித்திருக்கிறது.

`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து `புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.

“கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும்.

கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார்.

அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்” என்று சொல்லி நிறுத்தினார்.

`படப்பிடிப்புக்கான வேலைகள் எப்போது தொடங்கும்?’ என்று அவரிடம் கேட்டோம்.

படத்துக்கான முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். கதையை இன்னும் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. தோமையார் வேடத்துக்காக அவரைப் போன்ற உருவத் தோற்றம் கொண்ட சுமார் முப்பது வெள்ளையர்களை கனடா, அமெரிக்க நாடுகளில் பார்த்து வைத்திருக்கிறோம். `ஃபேஷன் ஆஃப் கிறிஸ்ட்’ என்ற படத்தில் இயேசுவாக நடித்த ஜேம்ஸ் கேவியசல் என்பவரையும் பார்த்துப் பேச உள்ளோம். அவரை இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. `புனித தோமையார்’ படம் அகில உலக மொழிகள் அனைத்திலும் வெளியாகும். முதல் பிரதியை வாடிகனுக்குப் போய் போப்பாண்டவருக்குப் போட்டுக் காண்பிப்போம்” என்றவர், அடுத்து ரஜினி மேட்டருக்கு வந்தார்.

“மயிலாப்பூரில் தோமையார் வாழ்ந்த கி.பி. ஐம்பதுகளில்தான் திருவள்ளுவரும் வாழ்ந்தார். இருவருக்கும் இடையில் அளவில்லாத நட்பு இருந்திருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவ போதனைகள் நிறைந்துள்ளன. அதிலும், `ஐந்தவித்தான்’ என்று வள்ளுவர் கூறும் வார்த்தை, அப்படியே இயேசுவைக் குறிக்கும் சொல் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியும்.

வள்ளுவரைப் போலவே தோமையாரும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பார்ந்த விதத்தில் விவாதங்களும், கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன. இதன் எதிரொலியாக திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்பு போன்றவை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

`புனித தோமையார்’ படம் குறித்த விவாதம் நடந்தபோது, எங்களுக்கு நெருக்கமான ஜெரோம் என்ற நண்பர் (ரஜினியின் ஆடிட்டர்), `சிறந்த ஆன்மிக பக்தியுள்ள ரஜினி, வள்ளுவரின் கேரக்டரில் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்’ என்று கூறினார். தமிழ்நெறியை வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு இயங்கும் ரஜினியை வள்ளுவரின் உருவத்தோற்றத்தில் வைத்துப் பார்த்தபோது, எங்களுக்கும் அது சரியாகத்தான் தோன்றியது. உடனே, `உங்களின் நீண்டகால நண்பர் என்ற முறையில் ரஜினியின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு’ என ஜெரோமிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம். அவரும் `விரைவில் இதுபற்றி ரஜினியிடம் பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

`புனித தோமையார்’ படத்தில் ரஜினி வள்ளுவராக நடித்தால் அவருக்கு அது இன்னும் பெருமை தரும். வள்ளுவர் கேரக்டருக்கு ரஜினியின் முகத்தோற்றம் மிகப் பொருத்தமாக இருக்கும். வள்ளுவராக திரையில் ரஜினி வந்தால் அவருக்குத்தானே சிறப்பு? பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்கானென்ட் என்ற புகழ்பெற்ற இயக்குநர் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது.

அதேபோல், சமீபத்தில் நடிகர் அஜித்தின் `ஏகன்’ பட ஷூட்டிங் சாந்தோம் அரங்கத்தில் நடந்தது. அப்போது அஜித்தின் மனைவி ஷாலினியிடம், தோமையார் படம் பற்றிக் கூறினோம். கேரளக் கிறிஸ்துவரான ஷாலினி, தோமையார் பற்றிக் கூறியதும் உற்சாகமாகி விட்டார். `இந்தப் படத்தில் அஜித் நடிக்க வேண்டும்’ என்று நாங்கள் கூறியபோது, `நானே அவரிடம் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதுதவிர, விஜய், விக்ரம் ஆகியோரையும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைக்கப் பேசி வருகிறோம். ஜனவரி மாதத்துக்குப் பின் படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்” என்றதோடு முடித்துக் கொண்டார் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி.

ரஜினியும் வள்ளுவர் வேடத்தில் தான் நடிப்பது தனக்கான மிகப் பெரிய கௌரவம் என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே, அது பற்றி அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், வள்ளுவர் வேடத்தில் ரஜினி வந்து எப்படி கலக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கூடவே, வாசுகியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். “கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும். கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார். அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்” என்று சொல்லி நிறுத்தினார்”//

 கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா?`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத் தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'” என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 100 கோடி பட்ஜெட் செலவில் சாந்தோம் சர்ச்   தயாரிக்கும் திரைபடம்  "புனித தோமையார்" துவக்கவிழா 3 ஜூலை 2008 அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில்  நடந்தது.

tblArasiyalnews_17290461064.jpg

சாந்தோம் சர்சில் அமைந்துள்ள மயிலை உயர் விவிலிய மாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்’ படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் ரஜினிகாந்த் எனவும், அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்றெல்லம் செய்தியை இந்த  திரைக்கதை, வசனகர்த்தாவான பாதிரி பால்ராஜ் லூர்துசாமி பரப்பினார்

images.jpg

சினிமா எடுப்பதான்னதை  பற்றி பாதிரி மேலும் சொல்கையில் கிறிஸ்துவ  தொன்மக் கதை நாயகர்  இயேசு கி.பி. 29-ம் ஆண்டு தூக்குமரத்தில் ரோம் ஆட்சியின் மரண தண்டனையில் இறந்த பின்னர்  சீடர்களில் ஒருவரான தோமோ பாரசீகம் பகுதிகள் வழியாக ஆப்கானிஸ்தான் வந்து பின்னர் கேரளாவில் பணியாற்றி சென்னை  வந்து மரணம் அடைந்ததாக கூறினார்.  திருவள்ளுவரும் தோமோவும்  சந்திக்க  தோமோ போதனையில் தான் திருக்குறள் வந்தது ஏன பாதிரி கூறினார். தோமோ வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என விளக்கி அவற்றை வைத்து சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர்  தெய்வநாயகம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்  என்றும் கூறினார்.

தமிழக அரசின் சார்பாக சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இன்று அறிவிப்போடு அதற்கு முந்தைய வருடம் அதை நடத்தும் பொறுப்பை சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சின் தமிழ் மையம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்பட்டது அதன்மூலம் தொழிலதிபர்கள் பெரும்பணம் அறக்கட்டளைக்கு போக பலம் பண பரத்தோடு அரசியல் சேரன் சேர்ந்திட 100 கோடியில் திரைப்படம் இன்னொரு பக்கம் பெரும் மாநாடு இன்னொரு பக்கம் தெய்வீக கர்நாடக சங்கீதத்தில் மோசடி போர்ஜரி வார்த்தைகள் போட்ட கிருத்தவ ஆல்பங்கள் வெளியீடு இத்தோடு தமிழ் மையம் சார்பாக உலக வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாக நிராகரித்த குமரிக்கண்டம் வேர்ச்சொல் ஆய்வு போன்றவை பற்றி பல புத்தகங்கள் வெளியாகின. அரசியல் பலம் பண பலம் விளையாடியது

 

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே தமிழகத்தில் தமிழர் அல்லாத பெரும் பணக்காரர்கள் நீதிக்கட்சி என்ற பெயரில் கிறிஸ்தவ ஆங்கிலேயரோடு இந்து சொத்துக்களை காக்க தமிழர் விரோத காரியங்களில் செயல்களில் ஈடுபட்டுவந்தனர தேவநேயப் பாவாணரும் ஒரு நூலில் சுட்டிக் காட்டி இருப்பார். 

தோமையார் திரைப்பட அறிவிப்பு வந்தவுடன் பல ஹிந்துத்துவ தமிழ் மெய்யியல் மரபைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர் ஆனால் திருக்குறள் -திராவிட- தமிழ் பேரால் பெயரால் புலவர்கள் அமைதி காத்தனர்.

இந்த நூலாசிரியரும் மேலும் பலரும் தொடர்ச்சியாக வலைதளங்களில் எழுதியும் இந்து அமைப்பினரும் போராட இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.

 

 தெய்வநாயகம்  "திருவள்ளுவர் கிருத்துவரா" நூல் 1969ல் அன்றைய முதல்வர் கருணாநிதி திரு அணிந்துரையோடு வெளி வந்தது. அதில் திருவள்ளுவர் பைபிளிலிருந்து காப்பி அடித்துதான் திருக்குறளை எழுதினார் என்று தெளிவாகக் சுட்டுகிறார்.

6.jpg

 இந்த நூல் பின் மேலும் சில நூல்கள் எழுதிய ட சென்னையில் தேவநேயப்பாவணரோடு சேர்ந்து மிகப்பெரும் நாடு நடந்தது. இதன் பின்னர்தான் திருக்குறளுக்கு ஆச்சாரியா பவுல் எனும் ஜான் கணேஷ் ஐயர் என்பவருக்கு பல லட்சம் கொடுத்து வாடிகன் போப் தரிசனம் வரை செய்துவைத்து திருக்குறளுக்கு மோசடி உரை கிருத்துவ உரையுடன் பழங்கால சுவடி தயாரிக்கும் முயற்சி நீதிமன்றத்தில் சென்று முடிந்தது.

 சாந்தோம் சர்ச் பின்னர் சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கிறிஸ்தவ துறை என ஆரம்பித்து அதில் தரப்பட்டது தான் மேலே சொன்ன முனைவர் பட்டம் அந்த ஆய்விற்கு பெரும் கண்டனம் வர உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அது ஆராய்ச்சி நூல் அல்ல என ஒரு அறிக்கையும் விட்டது.

6a.jpg

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ldquoEngineering-colleges-should-have-Tamil-scholarsrdquo/article16344700.ece

6aa.jpg

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Album-of-Christian-songs-set-in-Carnatic-music-launched/article15329715.ece

 சாந்தோம் சர்ச் வரலாற்றில் முன்பு திருக்குறளுக்கு மோசடி கிறிஸ்துவ ஓலைச்சுவடிகள் தயாரிக்க பெருந்தொகை செலவு செய்த பேராயர்  அருளப்பாவிற்கு பேராயர் சின்னப்பாவும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். 

 

தோமா வருகை என்பது கட்டுக்கதைகள் மட்டுமல்ல இயேசு கிறிஸ்து விவிலியக் கதைகள் இவைகளைப் பற்றியும் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த நூல்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 According to Christian leaders in India, the Apostle Thomas came to India in 52 A.D., founded the Syrian Christian Church, and was killed by the fanatical Brahmins in 72 A.D. His followers built the St. Thomas Church near the site of his martyrdom. Historians however say this apostle, even if he existed, never came to India. The Christian community in South India was founded by a Syrian (or Armenian) merchant Thomas Cananeus in 345 A.D. He led four hundred refugees who fled persecution in Persia and were given asylum by the Hindu authorities.

This story was too commonplace to attract converts. So Christian leaders identified the merchant Thomas with Apostle Thomas and created the dramatic story of the Apostle’s persecution and death at the hands of the ‘wicked’ Brahmins of South India. This became current in the 16th century when the Portuguese gained control of the west coast of India and forced the Syrian Christians to follow the Catholic faith. The Portuguese also destroyed the Kapaleeswara Temple that originally stood on the site now occupied by the San Thome Cathedral on the beach.

The creation of this myth and the history is told in detail by the Canadian scholar Ishwar Sharan (not his original name) in his famous book The Myth of St. Thomas and the Mylapore Shiva Temple. The purpose of the myth was to create a local martyr. Christianity depends heavily on the appeal of martyrs who are projected as victims like Jesus Christ. Then as now, Church leaders liked to pose as victims to generate sympathy and propaganda. But no matter how much they tried, the Hindus of India refused to supply the Portuguese with martyrs. So they were forced to create their own. So they turned the merchant Thomas into the Apostle Thomas killed by the Hindus.

In his foreword to Ishwar Sharan’s book the Belgian scholar Koenraad Elst wrote: “In Catholic universities in Europe, the myth of the apostle Thomas going to India is no longer taught as history, but in India it is still considered useful. Even many vocal ‘secularists’ who attack the Hindus for relying on myth in the Ayodhya affair, off-hand profess their belief in the Thomas myth. The important point is that Thomas can be upheld as a martyr and the Brahmins decried as fanatics.”

Targeting Brahmins to undermine Hinduism was a favorite tactic among missionaries. Elst gives the true picture: “In reality, the missionaries were very disgruntled that the damned Hindus refused to give them martyrs (whose blood is welcomed as ‘the seed of the faith’), so they had to invent one. Moreover, the church which they claim commemorates St. Thomas’ martyrdom at the hands of Hindu fanaticism, is in fact a monument of Hindu martyrdom at the hands of Christian fanaticism. It is a forcible replacement of two important Hindu temples (Jain and Shaiva) whose existence was insupportable to the Christian missionaries.”
Another motivation for the myth was to erase the unsavory record of the Catholic Church’s close association with the Portuguese pirates and even worse, the Goa Inquisition inspired by St Xavier. But serious scholars including Christians have rejected this myth as we shall soon see.

Who was this Apostle Thomas and why was his name invoked? The main sources relating to Apostle Thomas are two Gnostic (non-Biblical) texts known as The Acts of Thomas and the Gospel of Thomas. According to them Thomas was the twin brother of Jesus. For this reason the Thomas myth is not accepted by the Vatican because of a doctrinal problem: Jesus as the Only Son of God cannot possibly have a twin brother. (Greek for Thomas is Didymus, which means twin brother.)

Christians in South India who identify themselves as St. Thomas Christians claim that their ancestors were blessed by Apostle Thomas in 52 A.D. who preached from the Bible. This has no historical basis as we shall see. In fact, there is no evidence that Thomas even existed. His ‘history’ is full of contradictions as will become apparent.

As just observed the Portuguese missionaries who came to India in the 16th century found that they could not do without a local martyr and created the Myth of St. Thomas claiming that he was martyred in India. They gave no explanation as to how they discovered it more than 1500 years later. Marco Polo is supposed to have mentioned it but there is no authentic manuscript that can be attributed to him. Then there is the question of how he discovered it more than a thousand years later.

There is even a Mount of St. Thomas in Mylapore in Chennai with a tomb that is supposed to contain his martyred remains. But the problem is there are several such memorials spread across Persia, Acre (Turkey) and a few other places dating to different times, all laying claim to be the place where Apostle Thomas was martyred and buried!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதல்வர் தொடங்கி வைக்கும் தோமையார் திரைப்படம்!

இன்று சென்னை சாந்தோம் ஆலய வளாகத்தில் தோமையார் பற்றிய திரைப்படத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் கருணாநிதி!

இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார். அவர் சொன்த ஊரிலிருந்து எடுத்துவந்த கல் ஓவியம், அவரது எலும்புத் துண்டு, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் என அனைத்தும் சென்னையில்தான் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனித தோமையார் குறித்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. சுமார் ஐம்பது கோடியில் தயாராகும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர்.

வரும் ஜனவரியில் தொடங்கயிருக்கும் இப்படத்தினை, தோமையாரின் நினைவு நாளான இன்று முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அலஃபோன்ஸ், ஆயர்கள் மற்றும் ஏராளமான பாதிரியார்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழின் முன்னணி நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் இருப்பதாக கூறினார் படத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

*வை.கோ ஒரு கிறிஸ்தவர்*
( என் மனக் குமுறல் )
என் பெயர் வெங்கடேசன் நாயுடு ,
வை.கோ என்கிற வை.கோபால்சாமி ம.தி.மு.க தலைவர், என் அவ்வா வழியில் உறவினர். 2 வருட முன்பு எங்கள் ஊரில் நமது நாயுடு சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கிருஷ்ணன் கோவில் திருவிழா நடைபெற்றது, அதில் வை.கோ அவர்களை சிறப்பு அழைப்பாளராக எங்கள் ஊரின் நாயுடு சங்கத் தலைவர்கள் அழைத்தார்கள்.
திருவிழாவிற்க்கு வந்த வை.கோ. விற்கு பரிவட்டம் கட்டி, நெற்றியில் திலகமிட்டனர், உடனே அவற்றை அழித்துவிட்டார் வை.கோ, இது நமது சமுதாய சங்கத்தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.
திருவிழா முடிவுற்று சில நாட்கள் கழித்து நாயுடு சங்க அவை கூட்டப்பட்டது. இனி வரும் காலங்களில் வை.கோ. வை இனி எந்த ஒரு திருவிழாவிற்கும் அழைக்க கூடாது என்றும், அவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.வை.கோ அவர்கள் எப்போதோ கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்.
வை.கோ அவர்கள் கிறிஸ்தவ மிஷினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். நாயுடுவின் மதம், கடவுள், வாழ்க்கை முறை எல்லாமே ஹிந்து தான். ஹிந்து மதத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனை நாயுடு என்று சொல்ல முடியும்.
மதம் மாறிவிட்டால் அவனின் நாயுடு அடையாளம் நீங்கி விடும்.
வை.கோ அவர்களினால் கிறிஸ்தவர்களுக்கு தான் நன்மையுண்டே தவிர நாயுடு சமுதாய மக்களுக்கு ஒரு நம்மையும் கிடையாது. ஆதலால் நான் கூற விரும்புவது நமது நாயுடு சமுதாய மக்கள் உடனடியாக ம.தி.மு.க கட்சியிலிருந்து விலகுங்கள்.வை.கோ, அவர் பின்னால் யாரும் செல்ல வேண்டாம்.
வெங்கடேசன் என்னும் நான் கடந்த 8 ஆண்டுகாலமாக ம.தி.மு.க கட்சியில் உறுப்பினராக இருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். எப்போது அவர் கிறிஸ்தவர் எனத் தெரிந்தவுடன் அக்கட்சியிலிருந்து விலகி விட்டேன். வை.கோ குடும்பமே கிறிஸ்தவ குடும்பம்..
இப்படிக்கு
மிகுந்த வேதனையுடன்
*வெங்கடேசன் நாயுடு*
*நாராணபுரம்,*
சிவகாசி வட்டம்,
விருதுநகர் மாவட்டம்*


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Sunday, July 13, 2008

ரஜினிக்கு எச்சரிக்கை - ராமகோபாலன்

 
 

இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் எப்போதும் சந்தேகத்துக்குப் பெயர் பெற்றவர். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து தன்முன் வந்தபிறகும், ``அவரது விலாக் காயத்தில் விரலை விட்டுப் பார்த்தால்தான் அவர் இயேசு என்றுநம்புவேன்'' என்றவர் தோமையார். `சந்தேகப் பேர்வழி தாமஸ்' (Doubted Thomas)என்பது அவரது செல்லப்பெயர்.


எப்போதும் சந்தேக சதிராட்டங்களில் இருக்கும் புனித தோமையார் மீதே, இப்போது புதிதாக ஒரு சந்தேகம் சதிராடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மயிலையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் புனித தோமையார் பற்றி படமெடுக்கப்போகும் நிலையில், அதில் திருவள்ளுவராக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வாய்ப்புள்ள நிலையில் ``புனித தோமையார் இந்தியாவுக்கு வந்தார் என்பதே பொய்!'' என்று ஒரு புயல் கிளம்பியுள்ளது.

``இயேவின் சீடரான புனித தோமையார், இந்தியாவுக்கு வரவே இல்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார்; பரங்கிமலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை'' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன். `புனித தோமையார்' படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கப்போகிறார்' என்று ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டரில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்த நாம், `இது என்ன புதுக்கதை?' என்று ஆவலுடன் ராம கோபாலனைச் சந்தித்துப் பேசினோம். ``உண்மை கசப்புதான் என்றாலும், அதை வெளியிட்டு விவாதித்தே தீர வேண்டும்'' என்று ஆரம்பித்து சரவெடியாக வெடித்துத் தீர்த்தார் அவர்.

``புனித தோமையார் பற்றி திரைப்படம் எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் கசியத் தொடங்கியதுமே பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். `இந்தியா பக்கமே எட்டிப் பார்க்காத செயின்ட் தாமஸ் இந்தியா வந்ததாகவும், சென்னையில் அவர் உயிர் விட்டதாகவும் தவறான சரித்திரம் சித்திரிக்கப்படுகிறது' என்று அவர்கள் வேதனைப்பட்டனர். அதோடு புனித தோமையார் இந்தியாவுக்கு வரவே இல்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களையும் திரட்டி என்னிடம் காண்பித்தார்கள்.

`ஆப்கனிஸ்தான் பகுதியில், கொண்டோபர்னஸ் (கொந்தபோரஸ்) மன்னன் கடைசி பாக்டீரிய மன்னன் ஹெர்மேயுஸ் என்பவனைத் தோற்கடித்து, காபூல் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய காலத்தில்,தாமஸ் (கி.பி.21-46) அங்கு வந்து அந்த மன்னனை மதம் மாற்றினார். நாட்டிலும் மதப்பிரசாரம் செய்தார். அதனால், வெகுண்டெழுந்த மக்கள், தாமஸைக் கொன்று விட்டனர்' என அங்குள்ள `தக-டி-பாஹி' கல்வெட்டு கூறுவதாகவும் அதை கிறிஸ்துவ ஐதீகம் நம்புவதாகவும் வரலாறு உள்ளது.ஆக, ஆப்கனிஸ்தான் வரை வந்த தாமஸ், இந்தியாவுக்குள் நுழையவே இல்லைஎன்பதுதான் உண்மை.

தாமஸ் கேரளத்துக்கு வந்தார் என்ற நம்பிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய `ஸ்ரீ வேங்கடேச தேவஸ்தான வரலாறு'என்ற புத்தகத்தின் 230-வது பக்கத்தைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

`கோவாவிலிருந்து கி.பி.1543 செப்டம்பர் மாதம் போர்த்துக்கீசிய கவர்னர் மார்டில் அல் பான்சோ டி சவுசாலின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய கடற்படை கேரளத்தை நோக்கி வந்தது. புனித தாமஸின் நினைவுச் சின்னங்கள் உள்ள பேழை ஒன்றை, கன்னியாகுமரிக்கு அப்பால் கீழைக்கடற் பகுதியில் வாழும் பரதவர்களுக்குக் காட்டுவதற்காக அந்தக் கடற்படை வந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் கடற்படையின் உண்மையான நோக்கம் திருப்பதி வரையிலான படையெடுப்புதான். அந்தப் படையெடுப்பை சதாசிவராயரின் அரசு முறியடித்தது'என்று எஸ்.கிருஷ்ணன் ஆதாரத்துடன் காட்டுகிறார்.

ஆகவே, தாமஸின், திருப்பண்டத்தைத்தான் (உடல் பாகம், பயன்படுத்திய பொருட்களைத்தான்) அந்தக் கடற்படை, புனிதப்பொருளாக எடுத்து வந்திருக்கிறது. அதை வைத்துத்தான் சென்னையில் நினைவுச் சின்னம் எழுப்பி, பின்னர் சமாதி என்று ஆக்கிவிட்டார்கள். ஆக, தாமஸ் சென்னை வந்தார் என்பதே ஓர் அபத்தம். பிருங்கி மகரிஷி சிவபெருமானை நோக்கி தவம் இருந்த இடம்தான் சென்னை பரங்கிமலை. அங்கு சிவபெருமான் நந்தி வடிவத்தில் காட்சி அளித்தார் எனக் கூறும் நந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் இன்றும் உள்ளன. அப்படியிருக்க, பரங்கிமலையை புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும் கூட. அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளது என்பதும் அபத்தமான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணை வடிவேல் முதலியார் என்பவர், அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அண்மையில் போப் பெனடிக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், `செயின்ட் தாமஸ் இந்தியாவுக்குச் செல்லவே இல்லை' என்று கூறியிருக்கிறார். இந்தத் தகவல் இங்குள்ள கிறிஸ்துவ கபட வேடதாரிகளின் தலையில் இடியாக இறங்கி, அவர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.

இங்குள்ள கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார்கள் அதிகரித்து, அவர்களது பெயர் கெட்டுப் போயுள்ள நிலையில், அதை திசைதிருப்பும் நோக்கத்தில்தான் கடந்த ஜூன், இரண்டாவது வாரம், கொச்சியில் பாதிரியார்கள் கூடி தாமஸின் கட்டுக்கதையை வரலாற்று ஆதாரமாகக் காட்டத் திட்டமிட்டனர்.அதன்படியே இந்தத் திரைப்பட அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

இந்த வரலாற்று மோசடி படத்தில், திருவள்ளுவராக நடிக்க ரஜினி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் இதுவரை இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை, கிறிஸ்து இறந்த பின்பு கி.பி.ஐம்பதுகளில் தாமஸ் சந்தித்தார் என்பதே முரண்பாடான ஒன்று. `ராகவேந்திரா', `அருணாச்சலம்', `பாபா' (பாபா முத்திரையைக் காண்பிக்கிறார்) போன்ற பக்திப்படங்களில் நடித்த ரஜினி, வரலாற்றைத் திரித்துக் கூறும் `புனித தோமையார்' படத்தில் நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மதமாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமையார்' படத்தில் ரஜினி நடித்தால் மதமாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன்மூலம், ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிட பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் இந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் வியாபாரத்துக்காக ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண்ணான ஷாலினி, அவரது கணவர் அஜித்தை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். அஜித் உள்பட யாரும் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி `புனித தோமையார்' படத்தைப் பார்க்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வரலாற்று உண்மை என்ற பெயரில் இந்தப் படம் திரைக்கு வந்தால் ஜனநாயக முறையில் அந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்போம். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவோம்'' என்று பொரிந்து தள்ளினார் ராம கோபாலன்.

இவரது குற்றச்சாட்டுகளுடன் `புனித தோமையார்' படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.

``கிறிஸ்துவ விசுவாசத்தின் பிரதான அம்சமான இயேசுவின் உயிர்த்தெழுதலையே விமர்சிப்பவர்கள், புனித தோமையாரையா விட்டு வைப்பார்கள்? பரங்கிமலையில் புனித தோமையார் கொல்லப்பட்ட பாறை இன்றும் இருக்கிறது. `தோமையார்' கொல்லப்பட்ட நாளில், 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை, அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புனித தோமையார் கட்டிய ஏழு தேவாலயங்கள் இன்றும் உள்ளன. அப்படியிருக்கையில் அவர் இந்தியாவுக்கு வரவில்லை, என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தோமையார் இந்தியாவுக்கு வரவில்லை என்று போப் பெனடிக் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். அவர் எப்போது, எங்கு அப்படிக் கூறினார் என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே? போப் அப்படி எதுவும் கூறவில்லை என்பதே உண்மை.

கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்' என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத்தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'' என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி.

தோமையார் பெயரில் தொடங்கியிருக்கும் இந்த வார்த்தை யுத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.

திருவள்ளுவராக ரஜினி... கன்னட வெறியர்களுக்குக் கரி!

கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவிலுள்ள அல்சூர் ஏரிப் பகுதியில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் கன்னட வெறியர்கள் இன்றுவரை அழும்பு செய்து வருகிறார்கள். வள்ளுவர் சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடக்கிறது. அந்தச் சிலையைத் திறந்து வைக்க கர்நாடகாவாழ் தமிழர்கள் இடைவிடாமல் போராடி வரும் நிலையில், கர்நாடகத்தில் பிறந்த ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் செய்தி அங்குள்ள கன்னட வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். ``ஏற்கெனவே ஒகேனக்கல் பிரச்னையில் தன்னுடைய எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்த ரஜினி, இப்போது திருவள்ளுவராக நடித்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
( நன்றி: ரிப்போட்டர் )



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மத மாற்றத்துக்கு துணை போகும் ரஜினி??????????

>> SUNDAY, JULY 13, 2008

http://www.kumudam.com

AHs97-nsOhinsJDMZn_iOIxEiyS20887_5v_2EwT 
17.07.08    ஹாட் டாபிக் 
 

யேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் எப்போதும் சந்தேகத்துக்குப் பெயர் பெற்றவர். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து தன்முன் வந்தபிறகும், ``அவரது விலாக் காயத்தில் விரலை விட்டுப் பார்த்தால்தான் அவர் இயேசு என்றுநம்புவேன்'' என்றவர் தோமையார். `சந்தேகப் பேர்வழி தாமஸ்' (Doubted Thomas)என்பது அவரது செல்லப்பெயர்.

 

எப்போதும் சந்தேக சதிராட்டங்களில் இருக்கும் புனித தோமையார் மீதே, இப்போது புதிதாக ஒரு சந்தேகம் சதிராடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மயிலையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் புனித தோமையார் பற்றி படமெடுக்கப்போகும் நிலையில், அதில் திருவள்ளுவராக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வாய்ப்புள்ள நிலையில் ``புனித தோமையார் இந்தியாவுக்கு வந்தார் என்பதே பொய்!'' என்று ஒரு புயல் கிளம்பியுள்ளது.

 

``இயேவின் சீடரான புனித தோமையார், இந்தியாவுக்கு வரவே இல்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார்; பரங்கிமலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை'' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன். `புனித தோமையார்' படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கப்போகிறார்' என்று ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டரில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்த நாம், `இது என்ன புதுக்கதை?' என்று ஆவலுடன் ராம கோபாலனைச் சந்தித்துப் பேசினோம். ``உண்மை கசப்புதான் என்றாலும், அதை வெளியிட்டு விவாதித்தே தீர வேண்டும்'' என்று ஆரம்பித்து சரவெடியாக வெடித்துத் தீர்த்தார் அவர்.

 

``புனித தோமையார் பற்றி திரைப்படம் எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் கசியத் தொடங்கியதுமே பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். `இந்தியா பக்கமே எட்டிப் பார்க்காத செயின்ட் தாமஸ் இந்தியா வந்ததாகவும், சென்னையில் அவர் உயிர் விட்டதாகவும் தவறான சரித்திரம் சித்திரிக்கப்படுகிறது' என்று அவர்கள் வேதனைப்பட்டனர். அதோடு புனித தோமையார் இந்தியாவுக்கு வரவே இல்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களையும் திரட்டி என்னிடம் காண்பித்தார்கள்.

 

`ஆப்கனிஸ்தான் பகுதியில், கொண்டோபர்னஸ் (கொந்தபோரஸ்) மன்னன் கடைசி பாக்டீரிய மன்னன் ஹெர்மேயுஸ் என்பவனைத் தோற்கடித்து, காபூல் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய காலத்தில்,தாமஸ் (கி.பி.21-46) அங்கு வந்து அந்த மன்னனை மதம் மாற்றினார். நாட்டிலும் மதப்பிரசாரம் செய்தார்.  அதனால், வெகுண்டெழுந்த மக்கள், தாமஸைக் கொன்று விட்டனர்' என அங்குள்ள `தக-டி-பாஹி' கல்வெட்டு கூறுவதாகவும் அதை கிறிஸ்துவ ஐதீகம் நம்புவதாகவும் வரலாறு உள்ளது.ஆக, ஆப்கனிஸ்தான் வரை வந்த தாமஸ், இந்தியாவுக்குள் நுழையவே இல்லைஎன்பதுதான் உண்மை. AHs97-n1qIkGC7v0aVj87WZ-CRMcnH_NgVB_vubD

தாமஸ் கேரளத்துக்கு வந்தார் என்ற நம்பிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய `ஸ்ரீ வேங்கடேச தேவஸ்தான வரலாறு'என்ற புத்தகத்தின் 230-வது பக்கத்தைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். 
 
`கோவாவிலிருந்து கி.பி.1543 செப்டம்பர் மாதம் போர்த்துக்கீசிய கவர்னர் மார்டில் அல் பான்சோ டி சவுசாலின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய கடற்படை கேரளத்தை நோக்கி வந்தது. புனித தாமஸின் நினைவுச் சின்னங்கள் உள்ள பேழை ஒன்றை, கன்னியாகுமரிக்கு அப்பால் கீழைக்கடற் பகுதியில் வாழும் பரதவர்களுக்குக் காட்டுவதற்காக அந்தக் கடற்படை வந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் கடற்படையின் உண்மையான நோக்கம் திருப்பதி வரையிலான படையெடுப்புதான். அந்தப் படையெடுப்பை சதாசிவராயரின் அரசு முறியடித்தது'என்று எஸ்.கிருஷ்ணன் ஆதாரத்துடன் காட்டுகிறார்.  

ஆகவே, தாமஸின், திருப்பண்டத்தைத்தான் (உடல் பாகம், பயன்படுத்திய பொருட்களைத்தான்) அந்தக் கடற்படை, புனிதப்பொருளாக எடுத்து வந்திருக்கிறது. அதை வைத்துத்தான் சென்னையில் நினைவுச் சின்னம் எழுப்பி, பின்னர் சமாதி என்று ஆக்கிவிட்டார்கள். ஆக, தாமஸ் சென்னை வந்தார் என்பதே ஓர் அபத்தம்.  பிருங்கி மகரிஷி சிவபெருமானை நோக்கி தவம் இருந்த இடம்தான் சென்னை பரங்கிமலை. அங்கு சிவபெருமான் நந்தி வடிவத்தில் காட்சி அளித்தார் எனக் கூறும்  நந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் இன்றும் உள்ளன. அப்படியிருக்க, பரங்கிமலையை புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும் கூட. அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளது என்பதும் அபத்தமான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணை வடிவேல் முதலியார் என்பவர், அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார்.

 

இந்த ஆதாரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அண்மையில் போப் பெனடிக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், `செயின்ட் தாமஸ் இந்தியாவுக்குச் செல்லவே இல்லை' என்று கூறியிருக்கிறார். இந்தத் தகவல் இங்குள்ள கிறிஸ்துவ கபட வேடதாரிகளின் தலையில் இடியாக இறங்கி, அவர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. 

இங்குள்ள கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார்கள் அதிகரித்து, அவர்களது பெயர் கெட்டுப் போயுள்ள நிலையில், அதை திசைதிருப்பும் நோக்கத்தில்தான்  கடந்த ஜூன், இரண்டாவது வாரம், கொச்சியில் பாதிரியார்கள் கூடி தாமஸின் கட்டுக்கதையை வரலாற்று ஆதாரமாகக் காட்டத் திட்டமிட்டனர்.அதன்படியே இந்தத் திரைப்பட அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.AHs97-mFigz1whZaR3SIzrWEXjEni8eAT4ZnnyxM

 

இந்த வரலாற்று மோசடி படத்தில், திருவள்ளுவராக நடிக்க ரஜினி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் இதுவரை இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை, கிறிஸ்து இறந்த பின்பு கி.பி.ஐம்பதுகளில் தாமஸ் சந்தித்தார் என்பதே முரண்பாடான ஒன்று. `ராகவேந்திரா', `அருணாச்சலம்', `பாபா' (பாபா முத்திரையைக் காண்பிக்கிறார்) போன்ற பக்திப்படங்களில்  நடித்த ரஜினி, வரலாற்றைத் திரித்துக் கூறும் `புனித தோமையார்' படத்தில் நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மதமாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமையார்' படத்தில் ரஜினி நடித்தால் மதமாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன்மூலம், ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிட பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள். 

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் இந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் வியாபாரத்துக்காக ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண்ணான ஷாலினி, அவரது கணவர் அஜித்தை இந்தப்  படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். அஜித் உள்பட யாரும் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி `புனித தோமையார்' படத்தைப் பார்க்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வரலாற்று உண்மை என்ற பெயரில் இந்தப் படம் திரைக்கு வந்தால் ஜனநாயக முறையில் அந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்போம். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவோம்'' என்று பொரிந்து தள்ளினார் ராம கோபாலன்.

இவரது குற்றச்சாட்டுகளுடன் `புனித தோமையார்' படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.

 

``கிறிஸ்துவ விசுவாசத்தின் பிரதான அம்சமான இயேசுவின் உயிர்த்தெழுதலையே விமர்சிப்பவர்கள், புனித தோமையாரையா விட்டு வைப்பார்கள்? பரங்கிமலையில் புனித தோமையார் கொல்லப்பட்ட பாறை இன்றும் இருக்கிறது. `தோமையார்' கொல்லப்பட்ட நாளில், 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை, அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புனித தோமையார் கட்டிய ஏழு தேவாலயங்கள் இன்றும் உள்ளன.  அப்படியிருக்கையில் அவர் இந்தியாவுக்கு வரவில்லை, என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?  தோமையார் இந்தியாவுக்கு வரவில்லை என்று போப் பெனடிக் கூறியதாக  சிலர் கூறுகிறார்கள். அவர் எப்போது, எங்கு அப்படிக் கூறினார் என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே? போப் அப்படி எதுவும் கூறவில்லை என்பதே உண்மை.

 

கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும்      சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்' என்ற புத்தகத்தை  எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத்தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'' என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி. 

தோமையார் பெயரில்  தொடங்கியிருக்கும் இந்த வார்த்தை யுத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.

 

திருவள்ளுவராக ரஜினி...

 

கன்னட வெறியர்களுக்குக் கரி!AHs97-nTcroQetO6gc9IZC83ryKGjYG6N3FFB_Mx

 

கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவிலுள்ள அல்சூர் ஏரிப் பகுதியில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல்  கன்னட வெறியர்கள் இன்றுவரை அழும்பு செய்து வருகிறார்கள். வள்ளுவர் சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடக்கிறது. அந்தச் சிலையைத் திறந்து வைக்க கர்நாடகாவாழ் தமிழர்கள் இடைவிடாமல் போராடி வரும் நிலையில், கர்நாடகத்தில் பிறந்த ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் செய்தி அங்குள்ள கன்னட வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். ``ஏற்கெனவே ஒகேனக்கல் பிரச்னையில் தன்னுடைய எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்த ரஜினி, இப்போது திருவள்ளுவராக  நடித்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

ஸீ வே. வெற்றிவேல்
படங்கள் : ஞானமணி

http://www.kumudam.com


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

ரஜினி மீது பாயும் இராமகோபாலன்

 



இந்து முன்னணியின் அமைப்பாளரான திருவாளர் ராம.கோபாலன் திடீர் என்று நடிகர் ரஜினிகாந்தின்மீது பாய்ந்திருக்கிறார். மதமாற்றத்துக்குத் துணை போகிறாராம் ரஜினி!
புதிராகத்தான் இருக்கும். ராம கோபாலன் கூறுவதைக் கேட்டால் சிரிப்பாகத் தான் இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் பற்றி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் திரைப்படம் எடுக்கப் போகிறதாம்.. அதில் திருவள்ளுவராக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக திருவாளர் ராமகோபாலன் கேள்விப் பட்டு கொப்பளித்து எழுந்துள்ளார்.

இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வரவேயில்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார். பரங்கி மலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று திருவாளர் ராம கோபாலன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர் (17.7.2008) வெளிப்படுத்தியுள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றவர்கள் எல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு பேசுகிறாராம் திருவாளர் ராமகோபாலவாள்!

புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது. அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும்கூட; அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளன என்பதும் அபத்தமான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணவேல் முதலியார் என்பவர் அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார் என்றெல்லாம் முடிபிளந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வரலாற்று மோசடிப் படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மத மாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமையார் படத்தில் ரஜினி நடித்தால் மத மாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன் மூலம் ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிடப் பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் வாய்வந்த போக்கில் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்தப் படம் வந்தால் கடுமையாக எதிர்ப்பார்களாம்; தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவார்களாம்.
ராம கோபாலன் கூற்றை மறுத்து அருட் தந்தை பால்ராஜ் லூர்துசாமி கூறிய கருத்துகளையும் `குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ளது.



`புனித தோமையார் என்ற இயேசு வின் சீடர் இருந்தாரா? அவர் இந்தியா வந்தாரா? படுகொலை செய்யப்பட்டாரா? என்கிற கேள்விகளை எழுப்பி அதுகுறித்து விவாதங்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும்.

கிறித்துவத்தின்மீதும், `தோமையார் மீதும் விவாதங்களை வைக்கும் இந்து முன்னணி அமைப்பாளர் அதற்கான தகுதி உடையவர்தானா? என்பதுதான் அடிப்படையான கேள்வி ஏன்? முதல் கேள்வியும்கூட!

வரலாற்று ஆசிரியர்களின் துணை கொண்டு, கோதாவில் குதிக்கின்ற அவரை ஒரே ஒரு கேள்வி மூலம் நெட்டித் தள்ளிவிட முடியும்.

வரலாற்று ஆதாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறாரே - அதுபோன்றே வரலாற்று ஆதாரங் களைக் காட்டி ராமன் பிறப்பையும் ராமன் வரலாற்றையும் ஆய்வு செய் யும்பொழுது மார்பு நிமிர்த்தி கருத்துக்குக் கருத்து மோதலுக்குத் தயாராக இருந்ததுண்டா! அவர்கள் போற்றும் சுவாமி விவேகானந்தரிலிருந்து நீலகண்ட சாஸ்திரியார், பண்டித ஜவகர்லால் நேரு உள்பட அனைவரும் இராமாயணம், மகாபாரதம் கட்டுக்கதை என்று எழுதியிருக்கிறார்களே - அதனை ஏற்றுக் கொள்கிறாரா திருவாளர் ராம. கோபாலன்? `பஞ்ச தந்திரம் `அரேபியன் நைட் முதலிய கற்பனைக் கதை களைப் போன்றவைதான் இராமாயணமும், மகா பாரதமும் என்று பண்டித ஜவகர்லால் நேரு (Discovery of India பக்கம் 76-77) எழுதியிருக்கிறாரே

"இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான்; வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று" - என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் ஆய்வுக்கு அக்கிர ராமகோபாலனின் பதில் என்ன?

யாரோ டாக்டர் கிருஷ்ண சாமி அய்யங்கார் எழுதியுள்ளார் என்று தோமையாரை மறுக்கும் இந்தக் கூட்டம் - வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் கூற்றை ஏற்று இராமன் கற்பனை, இராமாயணம் கற்பனைக் காவியம் என்று ஏற்றுக் கொள்ளத்தயாரா?இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக வினாவைத் தொடுக்கும் நேரத்தில் திரு வாளர் ராம. கோபால அய்யர்வாள் கூட்டம் தயா ராக ஒரு பதிலை வைத்துள்ளது. இந்த விஷயத்தில் எல்லாம் வரலாறு - கிரலாறு என்று பேசக் கூடாது. அது `இந்துக்களின் நம்பிக்கை என்று வழுக்கி ஓடுவதில்லையா?

அதே பதிலை தோமையார் விஷயத்தில் கிறித்தவர்கள் சொன்னால், ராம. கோபாலன் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்.

மனித சமுதாயமே தோன்றாத கால கட்டத்தில் ராமன் பதினேழரை லட்சம் வருடங் களுக்குமுன் பாலம் கட்டினான் - அதுதான் சேதுபந்தனம்! அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனம் பேசுவோர்கள் - இன்னொரு மத சம்பந்தமான விஷயம் என்று வருகிறபோது மட்டும் குறுக்குக் கேள்வி களையும் நெடுக்குக் கேள்வி களையும் கேட்க உரிமை படைத்தவர்கள்தானா?


அயோத்தியில் 450 ஆண் டுகளுக்குமுன் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது.

அதனை இடித்த இந்து ராம கோபாலன் வகையறாக்கள் அது ராமன் பிறந்த இடம் என்கின்றன ராமன் வரலாற்று மாந்தன் அல்ல - புராணக் கற்பனைப் பாத்திரம்
புராணக் கற்பனைப் பாத்திரத்துக்காக ஒரு வரலற்றுச் சின்னத்தை இடித்தவர்கள் தோமையார் விஷயத்தில் வரலாற்று ஆவணங்கள் பற்றிப் பேச அருகதை உடையவர்கள்தானா?
வரலாறு தங்களுக்கு உதவாத தருணத்தில் மட்டும் நம்பிக்கை என்னும் முக்காட்டுக்குள் ஒளிந்து கொள் வார்கள்.
``பேச நா இரண்டுடையாய் போற்றி! என்று ஆரியப் பார்ப்பனர்கள்பற்றி அபிடுபே வருணித்ததை அறிஞர் அண்ணா அவர்கள் அருந் தமிழில் ஓவியம் தீட்டிக் காட்டினார்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அது என்றென்றைக்கும் பொருந்தக் கூடியதுதானே!

நடிகர் ரஜினிக்குத் தொழில் சினிமாவில் நடிப்பது; அதுவும் திருவள்ளுவர் பாத்திரத்தை அவர் ஏற்று நடிப்பது என்பது அவருக்குப் பெருமை சேர்க்கக் கூடியதே! அவரைப் போய் ராம. கோபாலன் மிரட்டுகிறார்.
படம் வரத்தான் போகிறது. அப்பொழுது பார்ப்போம் ராமகோபாலன் படை ஜெயிக்கிறதா? - ரஜினி படை ஜெயிக்கிறதா? என்று!

----------- 19-7-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரை


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Life of Saint Thomas on Celluloid

DECCAN CHRONICLE. | DECCAN CHRONICLE
PublishedMay 1, 2017, 12:05 am IST

The prestigious production company, Sivaji Productions, is joining hands with a USA production studio for the production of a Hollywood film, tracing the life of St. Thomas, one of Christ’s 12 apostles who travelled to India. Sivaji Productions will facilitate and provide production services for California based Dharlin Entertainment, on the film titled as Commissioned. Apostle Thomas travelled to India in 52 AD and was killed in Chennai, at present day St Thomas Mount.

The film will follow the story of Apostle Thomas and his travel to India. Preliminary work has begun and the filming is planned for early 2018 with a healthy mix of Indian and international cast and crew. Locations in Kerala, Chennai and Sri Lanka are being considered for this film. Sivaji Productions, managed by Prabhu and Ramkumar, which has produced films like Chandramukhi last produced Aasal, which released in 2010. There were a few rumours doing the rounds that the company may produce actor Vijay’s next film, but there hasn’t been anything concrete about it yet.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Sivaji Productions To Make A Biopic On St Thomas

Sivaji Productions will team up with a USA production studio to make a movie on the life of St Thomas, one of Christ’s 12 apostles who travelled all over India. According to a report, the production house will assist US-based Dharlin Entertainment for the movie, which has been titled Commissioned

RECOMMENDED

The saint travelled to India during 52 AD, and was killed in Chennai, in a suburb which is presently called St Thomas Mount. The film will follow his journey to India and the events that occurred then. 

The pre-production work for the movie has begun, and the shooting will begin early 2018, with Indian and international actors as part of the cast. The movie will be shot in Kerala, Chennai and Sri Lanka. 

Sivaji Productions, which is managed by actors Prabhu and Ram Kumar, had earlier produced movies like the Rajinikanth-starrer Chandramukhi. Their last production was Aasal, which released in 2010. 

Pic: Alchetron



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கடவுளும் நானும்-கருணாநிதி பேச்சு

By Staff| Published: Friday, July 4, 2008, 17:00 [IST]

கடவுளை நான் எற்கிறேனா இல்லையா என்பதல்ல பிரச்சினை. கடவுள் என்னை ஏற்கும்படி நடந்து கொள்கிறாரா என்பதே இப்போதைய பிரச்சினை. எனவே கடவுள் ஏற்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னையில் நடந்த புனித தோமையார் திரைப்பட தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார். ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாறு பிரமாண்டமாக, ஹாலிவுட் முறையில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.

சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை-மைலாப்பூரில் உள்ள சாந்தோம் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது.

 முதல்வர் கருணாநிதியிடம் இந்த திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி வழங்கினார். கருணாநிதி, அதனை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கேரளா திருச்சபை வரலாற்று பேராசிரியர் அருட்தந்தை சேவியர் கூடப்புழா ஆகியோரிடம் வழங்கினார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், ‘அயலி’ - தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கி இருக்கிறது! இந்த விழா ஒரு மாமனிதர் இயேசு பிரானுடைய சிறப்பியல்புகளை வரலாற்றுத் திருப்பங்களை, அவர் புரிந்த தியாகங்களை, அவர் ஆற்றிய தொண்டினை, அரும்பணியினை, மக்கள்பால் அவர் கொண்டிருந்த பேரன்பை விளக்குவதற்காக அதை நிழல்படமாக, பேசும்படமாக, வண்ணப்படமாக, எண்ணக் கருவூலமாக வழங்குவதற்காக தொடங்கப்படுகின்ற விழா. இந்த விழாவிலே என்னை அழைத்திருப்பதைப் பற்றி நம்முடைய லாரன்ஸ் பயஸ் குறிப்பிட்டார். இவரை அழைக்கிறீர்களே, இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆயிற்றே, இவரை அழைக்கலாமா என்று சில பேர் சந்தேகப்பட்டதாகச் சொல்லிவிட்டு, அதற்குரிய விடையையும், விளக்கத்தையும் அவரே இங்கே அளித்தார்.

இது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விழா.  இதற்கு முன்பு இப்படியொரு விழாவில், மைலாப்பூரில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துக்களின் குருநாதர்கள், இந்துக்களின் மரியாதைக்குரியவர்கள், அடிகளார் போன்றவர்கள், சைவ சிரேஷ்டர்கள், வைணவ பெரியோர்கள், கிருபானந்த வாரியார்-இவர்கள் எல்லாம் இணைந்து நடத்திய ஒரு விழாவில், என்னை வாரியாரும், தர்மபுரம் ஆதினகர்த்தரும், குன்றக்குடி அடிகளாரும் மற்றும் சைவ, வைணவப் பெரியோர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.

அதிலே என்னை வாழ்த்தியவர்களில் ஒரு பெரியவர், கடவுளை கருணாநிதி ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், நாம் அவருக்கு இத்தகைய புகழுரையை, வாழ்த்துரையை, பாராட்டுரையை வழங்குவது சரியா என்று சிலர் கேட்கக்கூடும் என்று சொல்லிவிட்டு, அவரே அதற்கு விளக்கமும் அளித்தார், நம்முடைய லாரன்ஸ் பயஸ் போல. அந்த விழாவிலே நான் இறுதியாக உரையாற்றும்போது, கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புவதாக சொன்னார்கள். பிரச்சினை அது அல்ல.

கருணாநிதி சாதாரணம். உங்கள் கோணத்தில் பார்த்தால் கடவுள், கருணாநிதியைவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு பெரியவர், அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சாதாரண கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னாலே அது கடவுளுக்கு அவமானம்.

எனவே, கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியமே தவிர நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா அல்லவா என்பதல்ல பிரச்சினை என்று அன்றைக்கு விளக்கம் அளித்தேன்.

ஆகவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

ஏழையைக் கண்டால் இரக்கம் காட்டு, நோயுற்றவனைக் கண்டால் பரிதாப்படு, உதவிகளைச் செய், நலிந்தோருக்கு நன்மைகளைக் குவித்திடு-இப்படி யார் யார் பாதிக்கப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்களோ, அவர்களிடத்திலே பரிவு காட்டுவதுதான் கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதற்காக செய்கின்ற காரியங்கள்.

அதை விட்டுவிட்டு, ஒரு ஏழை அய்யா சாமி என்று கையேந்தும்போது- போடா முட்டாளே என்று அவனை தள்ளிவிட்டு நாம் கடவுளை கும்பிடுவதிலே எந்தவிதமான பயனும் இல்லை. அந்த கைகளை கடவுள் மன்னிக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மத போதனை செய்தார் என்பதற்காக புனித தோமையார், என்னைக் கவர்ந்துவிட்டார் என்று மாத்திரம் நான் சொல்லமாட்டேன். அந்த மத போதனையை இந்தியத் திருநாட்டில் தன்னுடைய தலைக்கே ஆபத்து வந்தாலும்கூட, தன்னுடைய உயிரே போகக்கூடிய அளவிற்கு தியாகம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும்கூட, தன்னுடைய உயிரைக்கொடுத்து, தன் கொள்கைக்காக வாழ்ந்தார் என்ற அந்த ஒன்றுதான் அவர் ஆற்றிய எல்லா தொண்டுகளையும்விட தலையாயத் தொண்டாக இருந்து என்னைக் கவர்ந்தது.

இந்த காரணத்தால், நான் இந்தக் கதையை படமாக எடுக்கிறார்களே, பெரிய சம்பவங்களில் என்ன வரப்போகிறது என்று புனித தோமையாருடைய கதையை நான் படித்தபோது, அவர் கடைசியாக கொடியவன் ஒருவனால் கொல்லப்பட்டார். சதிக்கு ஆளானார், சதி செய்து கொன்றார்கள், சூழ்ச்சியால் அவரைக் கொன்றார்கள்.

இந்த சென்னை மாநகரத்திலே இருந்து இந்த வட்டாரத்தில் எல்லாம் கிறித்துவ மத போதனையைச் செய்து கொண்டிருந்த அந்த ஆற்றலாளர், அந்த அன்புக்குரியவர் இப்படிக் கொல்லப்பட்டார் என்ற அந்த ஒரு காட்சி மாத்திரமே போதும்-இந்தப் படம் குறித்த காரணத்துக்கு படத்தின் வெற்றிக்கு. தியாக உருவமாக திகழ்ந்த மிகப் பெரும் மனிதர், தோமையார் எனும் பெயருக்குரிய அந்தப் புனிதர் மறைந்த நிகழ்ச்சி நம் மனதைவிட்டு அகலாத நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் அந்த நிகழ்ச்சியில் அவரை வீழ்த்தியவர்களுடைய பெயர் நமக்குத் தெரியாது. வீழ்த்தப்பட்டவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதுதான் வரலாறு, இதுதான் சரித்திரம். பாரி மன்னனை அவனுடைய வள்ளல் தன்மையை அவன் ஆற்றிய அரும் கொடைகளை எல்லாம் நாம் அறிவோம். அந்தப் பாரி மன்னன், சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களின் படையெடுப்பால் வீழ்த்தப்பட்டான். பாரி மன்னன் போர்க்களத்திலே உயிர்நீத்தது நமக்குத் தெரிகிறது. வீழ்ந்தவனின் பெயர் நமக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை வீழ்த்திய சேர மன்னனை, நமக்கு தெரியுமா என்றால் தெரியாது.

நிலைக்கும் பெயர் இது, நிலைக்காத பெயர் எது என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, இந்த கிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றில் தோமையாரின் புகழ், பெயர் நிலைத்த பெயர், நிலைக்கும் பெயர், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய பெயர். அதைத்தான் படமாக எடுக்க திரைக்காவியமாக வடிக்க நம்முடைய நண்பர்கள் இந்த அமைப்பின் மூலமாக இன்றைக்கு முயற்சியை தொடங்குகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெல்க, வாழ்க என்றார் கருணாநிதி.


Read more at: https://tamil.filmibeat.com/specials/04-karunanithi-speaks-on-god.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard