New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்
Permalink  
 


இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

 

கடந்த பங்குனி திங்களில் கூகிள் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில்  இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கு கொண்டார். இயேசு மரணித்து உயிர்தெழுந்ததாக கூறப்படும்  நிகழ்வின் நம்பகத்தன்மை பற்றி பல கேள்விகள் வலைத்தளங்களில் உள்ளது என்றும் அது நடந்ததோ இல்லையோ இரமண மகரிஷியின் மரண அனுபவம்  நிச்சயம் அதிகம் நம்பக்கூடியதாக உள்ளது என்றும் கூறினார்

அவர் கூறியதின் சாராம்சம், ‘இயேசு உயிர்த்து எழுந்தார் என்று கூறப்படுகிறது, கிறித்துவ மதத்தின் அடித்தளமே இந்த நம்பிக்கை தான். ஆனால் பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வு நடக்கவேயில்லை  என்று கூறுகிறார்கள், அதை நான் யூடியூபில் (youtube) உள்ள பல ஆவணப்படங்கள் மூலம் அறிந்தேன். அது நடந்ததோ இல்லையோ, ஒரு உண்மையான உயிர்தெழுந்தல் நடந்தது திரு இரமண மகரிஷிக்கே. அவரின் பதினாறு வயதில் மரண அனுபவம் கொண்டு, அதை கடந்தால் ஆன்மஞானம் பெற்றார். அவருக்கு ஒப்பு யாருமில்லை’

இதனை எதிர்த்து பல கிறித்துவ அமைப்புகள் இசைஞானி அவர்கள் ஈஸ்டர் என்னும் உயிர்த்தெழுந்த நாளை ஒட்டி  இயேசுவை அவமதித்துவிட்டதாக ஆரவாரம் செய்தனர். ஊடகங்களும் ஏதோ இசைஞானி மதவெறித்தனமாக கூறிவிட்டார்  என்பது போல திரித்து எழுதின. அவ்வாறு எதிர்த்த கும்பல் பொய்யும் புரட்டும் கொண்டு மதம் பரப்பும் கூட்டம். இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று நிந்திக்கும் கூட்டம். அவர்களின் கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் நடுநிலை நக்கிகள் வழக்கம் போல இளையராஜாவின் கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு வந்த போது மெளனமாக  மதச்சார்பின்மை சாதித்தனர்.

இதை பற்றி நாமும் ஒரு அலசல் செய்யலாமே என்று யோசித்ததில், சில ஒப்பீடுகள் தெரிந்தன. நான் உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பதை பற்றி ஆராயப்போவதில்லை. அதற்கான திறனோ ஆளுமையோ எனக்கில்லை. ஆனால் அஃது சாத்தியமாயின், இவ்விரண்டு நிகழ்வுகளில் எதில் நம்பகத்தன்மை அதிகம் என்பதை சரித்திரம், தர்க்கம் கொண்டு ஆராய இயலும்.

இயேசு:
யூதர்களின் மதத்தில் பூசல் விளைவித்ததால் ரோமர்களால் கொல்லப்பட்டார், இதனை கிறித்துவர்கள் மனித குலத்தின் பாவங்களுக்காக தானே பலி கொடுத்தார் என்று சொல்லுகிறார்கள். (ஆனால் நாம் அறியாத, செய்யாத பாவத்திற்கு நம்மை கேட்காமல் அவரே கொடுத்ததாய் சொல்லபடும் பலியைப் பழியாய்க் கொண்டு குற்ற உணர்ச்சி பச்சாதாபம் மூலம் மத மாற்றம் செய்வது என்ன அறிவோ)

இரமணர்:
தானாக மரணம் என்னும் அனுபவத்தை நாடி ஏற்றார். ஆன்மாவைப் பற்றி அறிந்து தெளிவுற அம்முயற்சி. யாரின் குற்றமோ பாவமோ உந்தவில்லை. பூசலோ சட்டமோ கொலை செய்யவில்லை.

இயேசு:
உடலை பலவாறு துன்புறுத்தி ரத்தக்களறியாக்கி காயங்கள் பல பெற்று மரணித்தார். அத்தனை அடிபட்டு உயிரை தக்க வைக்க வலுவற்ற உடலுக்குள் மீண்டும் உயிர்தெழுந்ததாக கிறித்துவ கூற்று.

இரமணர்:
எவ்வகையிலும் சேதம் அடையாது தானே மூச்சினை நிறுத்தி புலன்களை அடக்கி மரண அனுபவம் கண்டு, காயமுறாத தேகத்திற்கு திரும்பினார்.

இயேசு:
உயிர்தெழுந்தபின் முற்றிலுமாக மறைந்துவிட்டார். உடல் எதுவும் கிடைக்கவில்லை, இத்தனைக்கும் யூதராயினும் சரி கிறித்துவராயினும் சரி உடலை எரிக்காமல் பெட்டியில் பத்திரப்படுத்தும் மரபு கொண்டவர். அக்காலத்தில் கல்பெட்டிகொண்டும் பாதுகாப்பர்.

இரமணர்:
மரணஅனுபவத்தின் பின் பல காலம் உடலுடன் வாழ்ந்து நேர்பட பலருக்கும் ஆன்மிகம் தெளிவித்து பின் உடல் நீத்தார்.

இயேசு:
அவர் மரணித்து உயிர்த்தெழுந்த சம்பவம் அது நடந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின் தான் கூறப்பட்டு எழுதப்பட்டது, அதுவும் ரோமானிய சாம்ராஜ்யம் கிறித்துவத்தை ஏற்ற பின் மத தலைவர்கள் நீசியா (Nicea) போன்ற இடங்களில் மாநாடு நடத்தி கிறித்துவ மதநம்பிக்கைகளை தொகுத்தார்கள். அதில் பல பூசலும் வேறு. விவிலியத்தின் புதிய ஏற்பாடு பல முறை மாற்றி அமைக்க பட்டு, இயேசு மற்றும் அவரின் சீடர்கள் பேசிய ஆரமாய்க், கிரேக்கம் போன்ற மொழிகளிலிருந்து தப்பும் தவறுமாக ஒட்டி வெட்டி செய்த ஒன்று. பல வாய்ப்பட்டு வந்த கதை.

இரமணர்:
அவர் அவரின் மரண அனுபவத்தை அவரே நேர்பட சிலருக்கு சொல்ல, அவர்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள்.

இயேசு:
இயேசுவின் கதையை ஏற்பாடு செய்தவர்கள் ஒரு சாம்ராஜயத்தின் மதமாக அதை நிறுவ நினைத்தவர்கள், அச்சாம்ராஜ்யத்தின் பிற மதங்களையும் முன்னேயே இருந்த வழிபாடுகளையும் அழிக்க நாட்டம் கொண்டவர்கள். இன்றும் அந்த உந்துதல்களாலேயே பணமும் உதவியும் கொடுத்தாவது பிறரை மதம் மாற்றம் செய்ய நினைப்பவர்கள். இன்றும் இந்தியாவின் மிகப் பெரிய நிலமுடைய நிறுவனம் கத்தோலிக்க சர்ச்சுத்தான். இந்த கதையினால் அவர்களுக்கு லாபம் உண்டு.

இரமணர்:
அவரின் அனுபவத்திற்கு பின் எந்த மதமும் ஸ்தாபிக்கவில்லை, அதற்க்கு பின் பல ஆண்டுகள் திருவண்ணாமலை கோவிலில் பாதாளத்தில் பின் மலை குகையிலும் ஒரு கோவணத்தோடு வாழ்ந்தார். மௌனத்தாலேயே குருவானவர். உலகளாவிய எந்த ஒரு பெரும் கும்பினியோ, சாம்ராஜ்யங்களை ஆட்டிப்படைக்கும் சக்தியோ அவரோ, அவரின் வழி செல்வோரோ நாடவில்லை. இக்கதையை சொல்லி மத மாற கேட்கவில்லை. லாப நாட்டம் இல்லை.

மீண்டும் மரணித்து  உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பதில்லை என் ஆராய்தல். ஒரு வேளை சாத்தியமாயின் இந்த இரு நிகழ்வுகளில் எது நம்பக்கூடியது என்று எனக்கு தெளிவாக தெரிகிறது.

மாண்டு உயிர்திரும்புதல் பல மரபுகளில் உள்ளதுதான். நம் தேவார மூவர் இறைவன் அருளோடு செய்ததை ஒப்பிடுதல் மிகச்சுவையானது

  • அப்பூதியடிகளின் குமாரனை சாவிலிருந்து மீட்டார் திருநாவுக்கரசர், ஆங்கு உடல் இருந்தது.
  • திருமயிலையில் பூம்பாவையை மீட்டார் திருஞானசம்பந்தர், அங்கு இருந்தது பூம்பாவையின் சாம்பல் மட்டுமே.
  • சுந்தரமூர்த்தி நாயனாரோ பலகாலம்முன் முதலை விழுங்கிய மகவை பொருத்தமான அளவு வளர்ந்த வயதினனாகவே மீட்டார், ஆங்கோ வெறும் நினைவுகள் மட்டுமே இருந்தது

இதுவெல்லாமே அறிவியல் நோக்கிற்கு சோதனை தான், நம்பிக்கை மட்டுமே சார்ந்தவை. அப்படி இருக்க இயேசுவின் உயிர்த்தெழுதல் மட்டுமே உண்மை, இரமணரின் அனுபவம் பொய் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

அவரவர் நம்பிகை அவரவர்க்கு என்றிருந்து பிறர் நம்பிக்கை பற்றி பேசாமல் இருக்கலாம்தான். ஆனால் அப்படியா இருக்கிறார்கள் கிறித்துவர்கள்? பின் இளையராஜாவை சாடுவானேன்?

அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

மரணதேவனிடம் உரையாடும் நசிகேதன்

ஒருவேளை நாயன்மார்களின் அல்லது இரமணரின் சரித்திரத்தில் உள்ள சம்பவங்கள் நிகழவேயில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி கொள்வதால் எந்த ஊறும் நேர்ந்துவிடாது, ஏனென்றால் அந்த உயிர்த்தெழுதலை விடவும் அற்புதமானது அவர்களது பக்தியும். தமிழும், தத்துவங்களுமே. அவைகள் தான் பிறப்பு, மரணம்,மீளுதல் இவையெல்லாம் தாண்டி நிற்கும். இந்துக்களுக்கு தத்துவார்த்தமாக சாவின் மீது என்ன பயம்? ஒன்று மீண்டும் பிறப்போம் அல்லது வீடு பெறுவோம். ஆனால் கிறித்துவர்களுக்கோ ஒரே வாய்ப்பு தான் , செத்தபின் என்றோ வரும் நீதிநாள் வரை  ஒரு தொங்கலாட்டம் தான் – அழுகும் உடலில் அன்று மீண்டு இயேசு மற்றும் தந்தையின் நீதிக்கு ஆளாகும்வரை.

ஒருவேளை இயேசுவின் உயிர்தெழுதல் நிகழவேயில்லை என்று வைத்துக்கொண்டால், கிறித்தவத்தின் ஆணிவேரே ஆட்டம்கண்டுவிடும். கன்னிக்கு பிறந்ததும் மறித்து உயிர்தெழுந்ததும் தவிர்த்து, கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன்  கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’,
ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு.

சுருங்க சொன்னால்,

  • இரமணரின் அனுபவம் பொய் என்றால், அவரின் ஞானவழிக்கோ, இந்து சமயத்திற்க்கோ எந்த சேதமும் இல்லை.
  • இயேசுவின் உயிர்த்தெழுதல் பொய் என்றால், கிறித்தவத்தில் திருடிய தத்துவ கலாச்சார முறைகள் தவிர எதுவும் இல்லை.
  • இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, கிறித்துவம் குப்பையில் சேரும்
  • இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்.

ஆக கிறித்து என்பவர்  –  வரலாற்றில் வந்த பல மகான்களில் இன்னொருவர் அல்லது ஒரு உலகளாவிய சூதுக்கூட்டம் ஏற்படுத்திய கற்பனை கதாபாத்திரம். இந்த இரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

எவ்வகையில் பார்த்தாலும் இப்படி வரலாறு மெய்ப்பிக்காத ஒரு கதையை நம்பி மத வியாபாரம் செய்யும் கிறித்துவம் புதைகுழியில் கட்டிய வீடு.

இயேசுவை மற்ற ஒரு மனிதரோடு ஒப்பிடுவதாலேயே ஆட்டம் கண்டிடும் ஒரு ஓட்டை வீடு.

அபிப்பிராயங்கள் எப்படி ஆயினும், ஒரு ஆன்மீக நோக்கு உடைய இசைஞானி இவ்விஷயங்களை ஒப்பிட்டு தன் தேடலுக்கு தெளிவுபெறவும் இக்கருத்துக்களை பொது மன்றத்தில் யாரையும் நிந்திக்காது கூறவும் உரிமை  உள்ளது.

தொடரட்டும் அவரது இரமண அனுபவங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்
Permalink  
 


சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 5, 2018 at 3:50 pm

ஸ்ரீ ரகுநந்தன் பாஸ்கரன் அவர்கள் இயேசு மற்றும் ரமணர் உயிர்த்தெழுதல் அனுபவங்களை ப்பற்றி ஒரு ஆழ்ந்த ஒப்பீட்டை முன்வைத்திருக்கின்றார். அருமையானக்கட்டுரை. ஸ்ரீ ரகு நந்தன் ஜி தொடர்ந்து இந்தத்தளத்திலே பக்தி,வேதாந்தம் மற்றும் புறப்புறப்புறப்புறப்புற ரிலிஜியன்களின் அடாவடிகளைப்பற்றியும் எழுதவேண்டுகின்றேன்.
மாற்று சமயங்களுடைய நம்பிக்கைகள் வழிபாட்டுமுறைகளை மூட நம்பிக்கைஎன்று பிரச்சாரம் செய்கின்ற கிறிஸ்தவர்களுடைய எந்த நம்பிக்கையும் அறிவாராய்ச்சியின் முன்னால் நிற்பதில்லை. கிறிஸ்தவத்தினுடைய அடிப்படையான நம்பிக்கைகள் எவையும் ஆதாரப்பூர்வமானவை அல்ல. அவற்றை அறிவுத்தளத்திலே தகர்த்தல் அறிவு நிறை ஹிந்துக்களின் கடமையாகும்.

R Nanjappa on September 5, 2018 at 5:12 pm

இளையராஜா சொன்னது ஒரு புதிய விஷயமே அல்ல. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து வந்தார் என்பதை இன்று மேலை நாடுகளில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. இதைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன், இயேசு என்பவர் ஒருவர் உண்மையில் இருந்தார் என்பதையே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்டர்நெட்டிலும் ஏராளமான விளக்கங்களும் குறிப்புக்களும் இருக்கின்றன. இந்த சர்ச்சை பலவருஷங்களாக நடந்துவருவது. இயேசு என ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகமானது; இருந்தாலும் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது; அவர் மக்களில் சிறந்தவரோ, ஞானியோ அல்ல
I do not believe that one can grant either the superlative wisdom or the superlative goodness of Christ as depicted in the Gospels.என்று 1927லேயே பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சொன்னார். [ Why I Am Not A Christian- by Bertrand Russell].
இயேசு என ஒருவர் சரித்திரத்தில் இல்லை என்பதைப் பலர் எழுதியிருக்கின்றனர். இருந்திருந்தாலும் கிறிஸ்தவப் பாதிரிகள் சொல்வது போல அவர் இல்லை; அவர் சொன்னதைப் பாதிரிகள் திரித்து தங்கள் கடையை[வலையை] விரிக்கிறார்கள் என்பது பலரின் கருத்து. கிறிஸ்துவ கடவுட் கொள்கையில் [Theology] ஆழ்ந்த புலமை பெற்றிருந்த Albert Schweitzer அவர் 1906ல் எழுதிய The Quest For Historical Jesus என்ற நூலில், கிறிஸ்து வெகுவிரைவில் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார், இதைப் பாதிரிகள் மாற்றிவிட்டனர் என்று எழுதினார்.
In Schweitzer’s view, Jesus genuinely believed that his ministry would bring about the end of history and did not see any prolonged period elapsing between his time on earth and God’s final judgment.
எனவே, இயேசு சொன்னதை திரித்துத்தானே சர்ச்சுகள் வளர்கின்றன!
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை வைத்துத்தான் கிறிஸ்துவ வியாபாரம் நடக்கிறது. இதை இன்று உலக அளவில் பலர் நம்பவில்லை. Charles Templeton என்பவர் புகழ்பெற்ற கிறிஸ்தவப் பிரச்சாரகராக [mass evangelist] இருந்தவர்; 50களில் Billy Graham என்ற புகழ்பெற்ற மற்றொரு பிரச்சாரகருக்கு இணையாக இருந்தவர். ஆனால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் கண்ட குறைகளாலும், இயேசுவே கடவுள் என்ற சர்ச்சின் கொள்கையை ஏற்றுக்கொள்ள இயலாததாலும் 1957ல் தன் பொறுப்பிலிருந்து விலகினார். பல வருஷங்கள் ஆழ்ந்து சிந்தித்தபின், கிறிஸ்தவக் கொள்கைளை மறுத்து “Farewell to God” என்ற புத்தகத்தை 1996ல் எழுதி வெளியிட்டார்.[McClelland & Stewart Inc, Toronto] இதில் கிறிஸ்தவக் கோட்பாடுகளை மறுப்பதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“the evidence clearly indicates that Jesus was an illegitimate child who, when he came to maturity, resented it and was alienated from his parents and siblings” என்று எழுதியிருக்கிறார். [பக்கம் 93].
இதில் மூன்றாவது அத்தியாயத்தில் இயேசுவின் வாழ்க்கை பற்றிய பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், இயேசு உயிர்த்தெழுந்தாரா, சொர்க்கத்திற்கு ஆரோகணித்தாரா என்பதை ஆராய்ந்து, இவை கட்டுக்கதைகள் என எழுதியிருக்கிறார்.
“As we have seen, the stories of Jesus’ birth are demonstrably legends. And the same is true of the events that followed his death….even the most sympathetic reading of the events following his death will leave an unbiased reader convinced that they are fables,addenda put forward by his followers hoping to keep the dream alive.”

After pointing out the contradictions in the various gospel accounts, and the questions that would have arisen, he writes:

“Surely, the answers to these and other questions like them would have flashed across Palestine within hours and been recorded somewhere. But there is not one word of it in history.
The entire resurrection story is not credible.

“The major inconsistencies and contradictions in the stories of Jesus’ birth and resurrection make it obvious that they are the imaginings of Christians…
[The Resurrection, The Ascension, pages 117-124]

இளைய ராஜா சொன்னதில் எந்த தவறும் இல்லை. உலகம் முழுவதும் சிந்திக்கும் திறனுள்ளவர்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து விலகி வருகிறார்கள்; சர்ச்சுக்களில் கும்பல் குறைந்து வருகிறது. பல சர்ச்சுகளை மூடிவிட்டார்கள், வியாபாரத் தலங்களாக மாற்றிவருகிறார்கள்.; விஞ்ஞானம் என்றோ கிறிஸ்தவத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறிந்து விட்டது.

பொன்.முத்துக்குமார் on September 5, 2018 at 8:42 pm

// ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. //

அதுகூட ஒரிஜினல் இல்லை என்கிறார் ஜெயமோகன். 🙂 பாவம், விரதம், பாவமீட்பு போன்றவை சமணத்தின் கருத்தாக்கம் என்றும் அவற்றை இங்கு வந்த வணிகர்கள்மூலம் (அரேபியா வழியே என்று சொன்னதாக நினைவு) அவர்கள் பெற்றுக்கொண்டது என்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அ.அன்புராஜ் on September 6, 2018 at 2:09 pm

கிறிஸ்து குறித்த உண்மை தகவலை ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கின்றேன்.யுதர்கள் தங்களை உன்னதநிலைக்குகொண்டு சென்று ரட்சிக்க கிறிஸ்து என்ற தூதரை அனுப்புவா் என்று நம்பினாா்கள்.கிறிஸ்துவின் அடையாளமாக சில நூற்றாண்டுகளுக்கு முன் சுழல் காற்றில் சொர்க்கத்திற்கு சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் புமிக்கு வருவாா் என்றும் பின் கிறிஸ்து பிறப்பாா்.Eliya should precede christ.
இயேசுவை நீா் கிறிஸ்துவா எலியாவா என்று பலரும் கேட்பதை விவிலியத்தில் பரவலாகக் காணலாம்.கானானிய பெண்ணிடம் தண்ணீா் குடித்து விட்டு நான்தான் கிறிஸ்து என்கிறாா். விசயம் காட்டுத்தீயாக பரவுகின்றது.யோவன் என்ற தீா்க்கதரசி தனது சீடரகள் இரண்டு பேரை இயேசுவிடம் அனுப்பி ” வரப்போகின்றது நீா்தானா அல்லது இன்னெருவா் வரக் காத்திருக்க வேண்டுமா ” என்று கேட்டு வரச் சொன்னாா்.அதற்கு இயேசு நீங்கள் நம்புவீர்களாயின் யோவான்தான் எலியா என்று கூறினாா்.ஆக தான்தான் கிறிஸ்து என்று அவர் ஓங்கி அறிவித்தாா்.
யோவான் எலியா அல்ல – சொர்க்கத்தற்கு எந்த உடலோடு போனாரோ அந்த உடலோடுதான் வர வேண்டும். யோவான் அப்படி அல்ல. எனவே யோவான் எலியா என்பதை எற்க மறுத்த அரச சபை கிறிஸ்துவை வேதபுரட்டன் என்று முடிவு செய்து சிலுவையில் அடித்தாா்கள்.அவருக்கு பக்கத்தில் இரு கள்ளா்களையும் சிலுவையில் அடித்தாா்கள். சிலுவையில்அடித்த தினத்திற்கு அடுத்த நாள் யுதர்களுக்க சப்பாத் பண்டிகையாகும். சந்திர உதயத்திற்கு முன்னா் சிலுவையில் பிணங்கள் உயிரோடோ பிணமாகவோ கிடக்க முடியாது.எனவே இரவு வந்த காவலா்கள் கள்ளர்கள் உயிரோடு இருப்பதைப் பார்த்து அவர்கள் காலை முறித்து கொன்று குழிதோண்டி புதைத்து விட்டாா்கள். இயேசுவை வெள்ளை குந்திரிகம் தடவிய துணியால் சுற்றி ஒரு குகையில் வைத்தனா். அங்கிருந்து காப்பாற்றப்பட்டு மாறு வேடத்தில் சீடா்களைச் சந்திக்கின்றாா்.
1இயேசு சிலுவையில் மரணிக்கவில்லை.உயிரோடுதான் இருந்தாா். எனவேதான் குகைக்குள் வைக்கப்பட்டாா்
2. கிறிஸ்து யார் என்பதில் கருத்து வேறுபாடு காரணமாக சிலுவையில் அறையப்பட்டாா்.உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டாா் என்ற கிறிஸ்து மதத்தின் கொள்கை பச்சை பொய்.
3 காயம் எற்பட்டால் இரத்தம் வரும் என்பது அனைவருக்கும் பொருந்தும்.இயேசுவின் இரத்தம் சகல பாவத்தையும் நீக்கும் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
4.நான் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேலர்கள் சந்ததியினருக்காக வந்தேன் வேறு யாருக்கும் அல்ல என்று இயேசு அறிவித்தததன் மூலம் அவர் உலகத்திற்காக வந்தவா் அல்ல.யுதர்களுக்காகவே அவர் வந்தாா் பிறந்தாா்.வாழ்ந்தாா்.

இதற்கு ஆதாரம் விவிலியம்தான். கிறிஸ்தவ சவை தவறாக பல கட்டுக்கதைகளை இயேசு மீது புமத்தி ஒரு தவறான கருத்து மாளிகையை உருவாக்கி கிறிஸ்தவ மதத்தை அதில் கடடியுள்ளாா்கள்.கிறிஸதவ மதம் தவறான கருத்தின் மீது கட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

vedamgopal on September 7, 2018 at 4:56 pm

Cross or dead body stretcher

The Hindu belief is that one who born with perfect physical features itself is due to the (Punya-good deeds) done in earlier birth. Also allows you to do more good deeds (punya) in the current birth and aim for moksha (to avoid rebirth again) As soon as a Hindu changes his religion to Christianity they call you great sinner and sinner by birth (pava piravi – Magha pavi – pava pindam). Also teach you that the first human being Adam was influenced by Satan and committed the first sin, from the day onwards all human being are committing continuous sins. Hence Jesus the son of God born in the world to erase the sins committed by humans before his birth, the sins committed by the current generation and the sins are to be committed by the future generation. Hence he offered his soul and blood and allowed himself to be hanged (Mundam) in the cross alive. (Cross is a stretcher holding the dead body – in Tamil it is called padai). The moment you change the religion the Christian priest offer you wine and bread in the church as a symbolic gesture of accepting Jesus blood and flesh and the brain washing starts here. Also informs you that Jesus had repented and continuously repent all sorts of sins and not to bother about committing any further sins and to get repentance a pure Christian should wear the cross (a dead body stretcher or padai) in the neck and pray in front of Jesus dead body photo, art or statue (Mundam) so that on the judgment day you will be sent to heaven without fail. Whether it is marriage or death both are done at the same dais. Like this the whole of Christianity is built up of false dogmatic belief

BSV on September 8, 2018 at 4:26 pm

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கிருத்துவ தேவாலயங்கள் விலைக்கு விற்கப்பட்டு வணிகமையங்களாகின்றன என்பதும் தேவாலயங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைவதென்பதும் உண்மைகளே. அவற்றிற்குப் பொதுவாக இரு காரணங்கள்: மக்களுக்கு மதநம்பிக்கை குறைந்துவிட்டது கடவுள் நம்பிக்கையும் அதோடு போயிருக்கலாம். அப்படியே இருந்தாலும் மதவாதிகள் கட்டிய கடவுளை நம்பத் தயாரகாவில்லை. புனித பிறப்பு, இறப்பு, மீட்டு இன்று செல்லா. அதை கிருத்துவம் செய்தாலும் வேறுமதம் செய்தாலும் விளைவு ஒன்றே. விஞ்ஞான வளர்ச்சியும் இன்பமான வாழ்க்கைக்கும் மதங்கள் இடையூறு செய்கின்றன என்ற உணர்வும் காரணங்கள். இயேசு பொய் என்றாலும் உண்மை என்றாலும் மதநம்பிக்கை மெல்ல மெல்ல போய்க்கொண்டுதானிருக்கும். இளையராஜா பேட்டியைக் கேட்டவரெல்லாம் இயேசுவை விட்டார்; இரமணரை ஏற்றார் என்றா சொல்லவருகிறீர்கள்?

 உலகத்தின் கிருத்துவ நாடுகளில் புதிதுபுதிதாக கோயில்களே கட்டப்படுகின்றன. தேவாலயங்கள் விற்கப்படுகின்றன. இதற்குக் காரணம், வளரும் கிருத்துவ தலைமுறை விஞ்ஞானத்தின் தாக்குதலாலும், இவ்வுல வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே; மறுவுலகைப்பற்றிய நினைப்பு வீண் என்ற உந்துதல்களாலும், நாத்திகர்களாக. அல்லது மதச்சிந்தனையே வேண்டாமென்பவர்களாகப் போய்விட்டதால், தேவாலயங்கள் வெறும் இடத்தை ஆக்கிரமிக்கும் தேவையற்றவைகளாக போய்விட்டனென்றேன்.

கிருத்துவ அமைப்புக்கள் இயேசுவின் பெயரால செய்யும் அட்டூழியங்களும் அயோக்கித்தனங்களும் கிருத்துவமதத்தை வெறுக்க வைப்பதால், இத்தலைமுறைக் கிருத்துவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். மதமே வேண்டமென்று போனவர்களை விடுவோம்; மதம் வேண்டுமென்பவர்கள் எம்மதத்துக்குச் செல்கிறார்கள் ? தெரியவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard