New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ.வெ.ரா வின் - வள்ளுவன் மடையன்தானே


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஈ.வெ.ரா வின் - வள்ளுவன் மடையன்தானே
Permalink  
 


H Raja shared a post.
1 hr · 

அருமை

 
Subramanian Kamaraj

என் சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதில் ஈ.வெ.ரா வின் மேடை பேச்சுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். ஹிந்து மதத்தைப் பற்றியும் பிராமணர்களைப் பற்றியும் மிக ஆபாசமாக, கேவலமாகப் பேசுவார். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மதத்தைப் பற்றி மட்டுமல்ல. நம் தாய் மொழியாம் தமிழைப் பழித்தும், இகழ்ந்தும் பேசுவார். திருக்குறளைப் பற்றி கேலி பேசுவார். திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து, “இங்கு யாராவது பத்தினிகள் இருக்கின்றீர்களா? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார். யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது. ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். வெட்கமாய் சிரிப்பார்கள். “எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார். எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள். கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார். சில தமிழின துரோகிகளும் சேர்ந்து கை தட்டி சிரிப்பாங்க. உலகத்துல யாருக்குமே தெரியாத மிகப்பெரிய விஷயத்தை தான் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ஈ.வெ.ரா சிரித்து மகிழ்வார். பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை. உங்க வள்ளுவன் அயோக்கியன்னு அர்த்தம். பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான். மடையன்தானே அவன்?” என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார்.

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை.

என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார். மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான். தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள் பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார். ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில் இதன் பொருள் வேறு. திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது அந்த குறளுக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?

இதே வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்பதூ உம் எல்லாம் மழை

அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.

பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. தந்சாவூரில் இருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.

ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை. இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை. இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்? அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள். அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் 
பெண் = பெய்யென பெய்யும் மழை. 
அதாவது அவ்வளவுக்கு சமுதாயத்திற்கு நன்மை செய்து உதவும் மா மழை போல இனிமையானவள், நன்மை பயப்பவள். 
புரிகிறதா? இதைத்தான் உலகப் பொது மறையாம் வள்ளுவம் பேசுகிறது. 
பத்தினிப் பெண் is equal to பெய்யெனப் பெய்யும் மழை. 
இப்பொழுது சொல்லுங்கள். வள்ளுவர் மடையனா? முட்டாளா?
#TRCARR



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ் நம் தாய்மொழி. ஒரு மொழியை பற்றி சொல்லும் போதே அதன் கம்பீரமும் வரலாறும் நம்மை மட்டும் அல்ல எத்தனை எத்தனையோ அயல் நாட்டு மனிதர்களை கூட தமிழ் மீது பித்து பிடிக்க வைத்துள்ளது. நம் மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்,முக்கியமாக  செம்மொழியும் ஆகும். 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது இந்தியாவில் வழக்கில் இருக்கும் ஒரே செம்மொழியாகும்

 பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது. இத்தனை வருட தொன்மை வாய்ந்த மொழியும் அதன் கட்டமைப்பும் , அதன் வழியாக ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழியை தான் நாம் சிறு வயதிலேயே  கற்றிருக்கிறோம்  என்று நினைக்கும் போதே , பெருமை விண்ணை முட்டுகிறது.

 வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். “கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது.”

இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய ‘திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்’ (The Comparative Grammar of the Dravidian Languages) ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.

18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

  • சங்க காலம் (கிமு 300 – கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
  • மத்திய காலம் (கிபி 1200 – கிபி 1800)
  • இக்காலம் (கிபி 1800 – இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்

உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்றவர்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

 கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது. தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.

பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் கூறியுள்ளனர்.

“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.

 சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

 உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

 மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

 எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் இதன் மூலம்    புலனாகும்.

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Written by: Sundar Raja Cholan

என் வயதிற்கும்,தகுதிக்கும் தகுந்த கேள்வியை கேளுங்கள் என்று கீ.வீரமணி சொல்கிறார்.நிச்சயம் பொருட்படுத்தத்தக்க விஷயம் ஆனால் அதற்கு முன் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

//கட்டிப்போட்டு இருக்கிற பெண் பிள்ளைகள் எல்லாம் உற்சவம் என்றால்தான் கோவிலுக்குள் பார்க்க முடிகிறது.அங்கே போனால்தான் நான்கு ஆண் பிள்ளைகளோடு உராய முடிகிறது.வீட்டிலேயே இருந்தால் என்ன வேலை என்று மிரட்டுவான் புருஷன்.

அங்கே போய்விட்டால் "வா" என்பான் புருஷன்.'வர முடியவில்லையே,நசுக்குகிறானே,நசுக்குகிறானே' என்பாள் அவள்; 'வா வா முட்டிகிட்டு வா' என்பான் அவன்.அந்த சுகமெல்லாம்,பெண்டாட்டியை கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போனால்தான் அவன் அங்கே அடைகிறான்.அது பழக்கமாய் போயிற்று;இது எல்லோருடைய பெண்டாட்டியும் அந்த கதி ஆனதாலே எவனும் பரிகாசம் பண்ணுவதில்லை.இப்படிப்பட்ட காரியத்தினால்தான் கோவில்கள் தன் உயிரை பிடித்துக் கொண்டு இருக்கிறது.நாம் அதற்கு தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம் பண்ணினால் பெண்டுகள் திரும்பிவிடுவார்கள்.// -

#பெரியார்[19-12-1973] இறுதி உரை.

இப்படி பெரியார் தன் தள்ளாத வயதில் பேசினார்.இதற்குள் இருக்கும் ஒரு வக்ரம் பிடித்த நினைப்பு வயதிற்குரியதா? இப்படி பட்ட சொற்களை தன் வாழ்நாள் முழுக்க உதிர்த்தவரை 20 ம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் என்று கட்டியெழுப்பி அதை பூஜித்துக் கொண்டிருப்பவரிடம் இப்போது கேட்பதே தகுதியை மீறியல்லவா இருக்கிறது? முன்பெல்லாம் கேவலமாக பேசியதற்கு யாரும் பதில் சொல்லவில்லை கூனிக்குறுகி எல்லோரும் கடந்து சென்றார்கள் ஆனால் அதுவே இருமுனை கத்தி போல இன்று பிறரால் இவர்கள் மேல் பாய்ச்சுவதை தாங்க முடியாமல் கதறுகிறார்கள்.ஹெச்.ராஜா பேசுவதை கூட இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையே? எனக்கெதுவோ அதுவே உனக்கும் என்பதை மறந்து விடக் கூடாது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"பெரியார் திருக்குறளைப் போற்றியவர்; அப்படிப்பட்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று சொல்லிவிட்டாரே என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் கூறும் விடை இது. "பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னால் சொல்லட்டுமே. இது பெரியாருக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு; இதில் சம்பந்தம் இல்லாத 'நீங்கள்' தலையிட வேண்டாம்', என பார்ப்பனர் கன்னத்தில் பளீர் என்று அறைந்ததைப் போலப் பளிச்சென்று பழனியப்பன் பதில் அமைந்திருக்கிறது என்றொரு தகவலை விடுதலை (03-10-18) பத்திரிகை பெருமையுடன் தருகிறது.

"தமிழையும், தமிழர்களையும் காட்டுமிராண்டி" என ஈவெராமசாமி சொன்னதற்கு, கரு.பழனியப்பன் தருகிற பதில் சரி தானா? ஒரு குடிகாரன், தன் மனைவியை தெருவில் இழுத்து போட்டு அடிப்பதை கண்டிப்பவனை பார்த்து, அந்த குடிகாரன் "இது என் பொண்டாட்டியை நான் அடிப்பேன், கொல்வேன், அதிலா சம்பந்தம் இல்லாத நீங்கள் தலையிட வேண்டாம்" என சொன்னால், பளீர் என்று அறைந்ததை போன்று என்போமா அல்லது குடிகாரனை பிடித்து, அவன் கன்னத்தில் பளீர் என்று அறையக்கூடிய செயலை செய்வோமா? "ஈவெராமசாமி தமிழர்களின் பெருமையையும், தமிழின் பெருமையையும் அரைகுறையாய் புரிந்து கொண்டு காட்டுமிராண்டி என தமிழையும், தமிழர்களையும் முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்" என எப்போது ஈவெராவாதிகள் ஒப்பு கொள்கிறார்களோ, அதுவரை ஈவெராமசாமி விமர்சிக்கபட்டு கொண்டு தான் இருப்பார்.

அப்படி விமர்சிப்பவர்களை பார்ப்பனர் என்றோ, பார்ப்பனரல்லாதோர் என்றோ பிரித்து பேசுவது, "உருப்படியாக பதில் சொல்ல ஈவெராவாதிகளிடம் யாதொரு பதிலும் இல்லை என்கிற, அவர்களின் வாயாலாகாததனத்தை தான் காட்டுகிறதே தவிர, அது ஒரு போதும் நேர்மையான பதில் ஆகாது. ஈவெராமசாமி தமிழர்களை காட்டுமிராண்டி என சொன்ன விஷயத்தில் பார்ப்பனர்கள் தலையிடக்கூடாது என்கிறான் கரு.பழனியப்பன். சரி - ம.பொ.சியிலிருந்து விபூதி வீரமுத்து என பலர் தொடர்ந்து, ஈவெராமசாமியின் காட்டுமிராண்டி பேச்சை விமர்சித்து வந்தார்களே - அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களா? எந்த தி.க.காரன், இதுவரை யாருக்கு நேர்மையாக பதில் தந்தான். பார்பபனனல்லாத நானும் நூற்றுக்கணக்கில் ஈவெராமசாமியின் பித்தலாட்டத்தை வெளிக்கொணரும் பதிவு போட்டுவிட்டேன். ஒரு தி.க.காரனுக்கும் பதில் சொல்ல திராணியில்லை.

தமிழ் மொழி குறித்த ஈவெராமசாமியின் யோக்கியதையை விளக்கும் இன்னொரு பதிவு இது. ஒரு பார்ப்பனனல்லாதவன் தான் எழுதுகிறான். எவனுக்கும் பதில் சொல்ல திராணி இருக்காது என சவால் விட்டு கூறுகிறேன். "ஈவெராமசாமியின் தமிழ்பற்றை இரண்டாக பிரிக்கலாம். எல்லாவற்றிலும் முரண்பட்ட ஈவெராமசாமி, தமிழ் மொழி பற்றி பேசுகையிலும் முரண்படாமல் இருந்தால் தானே ஆச்சர்யம். திராவிடர் கழகத்துக்கு ஈவெராமசாமி அதிபதியாவதற்கு முன்வரை - அவரது தமிழ்ப்பற்று சிறப்பாக தான் இருந்தது.. திராவிடர் கழகத்திற்கு அதிபதியானதும் - தமிழ்ப்பற்று, அவரிடம் இருந்து விடை பெற்றுபோனது. ஈவெராமசாமி - திராவிடர் கழகத்திற்கு அதிபதியாவதற்கு முன் சொன்னதை சொல்லி தான், "ஈவெராமசாமி தமிழுக்கு விரோதி அல்ல" என காட்ட முயல்கிறார்கள் ஒழுக்க குறைபாடுடன் பிறந்த தி.க.வினர்.

ஈவெராமசாமி - விடுதலை 5.4.67 இதழில் கூறியது. "பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது" என தி.மு.க.,வினரின் தமிழ் மொழி பற்றை சாடிய ஈவெராமசாமி தான், 04.09.1938 - குடிஅரசு இதழில், அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளருக்கு, தமிழ்மொழி சிறப்பை இவ்வாறு சொல்லி பாடமெடுக்கிறார். "நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே - ஏன் இன்றே - எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டு பண்ண முடியும்."
இதே ஈவெராமசாமி தான் மானம் கெட்ட தமிழனாக, மதி கெட்ட தமிழனாக இப்படியும் பேசினார்.. "பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள். வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – “விடுதலை’ (27.11.43)

ஈவெராமசாமி தமிழை துதி பாடியதற்கும், தமிழை இகழ்வதற்கும் இடையே வெறும் நாலு வருஷம் தான் இடைவெளி. 1938ல் சீரும் சிறப்புமாக தெரிந்த தமிழ்மொழி, 1943ல் சீரழிந்த மொழியாகி விட்டதா. 38ல் "தமிழில் படி" என்ற ஈவெராமசாமி, 43ல் "தமிழில் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது" என இகழ்ந்தால் அது எவ்வளவு அயோக்கியதனம். நாலே வருஷத்தில் தமிழ் சீரழிந்த மொழியானதா ஈவெராமசாமி மூளைக்கு. எப்போதும் தமிழ் சீரும், சிறப்புமாக தான் உள்ளது. ஈவெராமசாமியின் அறிவில் தான் குறைபாடு இருந்ததே தவிர, மொழியில் என்ன குறைபாடு. ஈவெராமசாமியின் பிறவிக்குணமே, ஒன்றை இழிவாக பேசிவிட்டு, பிறகு அதை நியாயப்படுத்த காரணங்களை தேடுவார்.. அதுவே தமிழை பழிப்பதிலும் நிகழ்ந்தது. காலமாற்றத்திற்கேற்ப்ப, தமிழ்மொழி தன்னை புடம் போட்டு - தேவையற்றதை கழித்தும், தேவையானதை கற்று கொண்டும், தேவை இருப்பதை தக்கவைத்து கொண்டுமே வந்துள்ளது.

இல்லையென்றால் செத்த நூற்றுக்கணக்கான மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆகி இருக்கும். இதை உணராத தற்குறி தான், ஈவெராமசாமி "தமிழை காட்டுமிராண்டி மொழி" என்றார். 1938ல் தமிழ்மொழியை கொண்டாடிய ஈவெராமசாமி 40களில் தமிழ்மொழியை ஏன் பழித்தார். எதனால் இந்த வித்தியாசம்? ஈவெராமசாமி பாணியில் சொல்வதானால் "முதலில் தமிழ், தமிழர்கள்" என பிழைப்பை ஓட்டினார்.. பிறகு திராவிடம் கிடைத்ததும் அதற்கு விசுவாசமாய் இருந்து, திராவிடத்தை வைத்து பிழைப்பை ஓட்டினார். அவ்வளவே. திருக்குறளுக்கு மாநாடு நடத்தினாராம் ஈவெராமசாமி. திருக்குறளின் பால் ஈவெராமசாமிக்கு இருந்த மையலின் யோக்கியதையை பார்ப்போமா? அது தமிழை காட்டுமிராண்டி என சொன்னதைவிட, படுஅயோக்கியதனத்தை கொண்டிருக்கும்.

ஈவெராமசாமி கூறியது. "நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். எதற்காக வள்ளுவன் படத்தை வைக்க வேண்டுமென்று கருதி வைத்திருக்கின்றார்களோ அதைவிட புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக் களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. -'விடுதலை' 22.4.1970

என்ன மூடர்களா, இப்படி பேசிய யோக்கியதைக்கார ஈவெராமசாமி, திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார் என்று சொன்னால், அது திருவள்ளுவரை பெருமைப்படுத்த இருக்குமா அல்லது திருள்ளுவரை பெருமையாக பேசினால், அதனால் தனக்கு மதிப்பு, மரியாதை கூடுமே என கணக்கு பார்த்து மாநாடு வைத்ததாக இருக்குமா? இரண்டாவது சொன்னது தான் சரி என தொடர்ந்து தரும் ஆதாரங்களை வாசித்து உணரலாம். ஒருவர் படத்தை வைத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதற்கும், அவர் படத்தை தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்வதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. குப்பை தொட்டியில் எதை எறிவார்கள்? இனி இதை வைத்து உபயோதப்படுத்த ஒரு புரியோஜனமும் இல்லை என்கிற எண்ணம் வரும்போது. எங்கள் திருக்குறளால் ஈவெராமசாமிக்கு அப்படி ஒரு எண்ணம் ஏன் வந்தது. அப்படி ஒரு எண்ணம் வரத்தக்க நூல் தானா திருக்குறள்.
ஈவெராமசாமி, திருவள்ளுவர் படத்தை குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என கூறியதை உச்சப்பட்ச வன்மம், வள்ளுவரையே அவமானப்படுத்தும் செயல் என்றே சொல்ல வேண்டும். அறிவற்றவனின் பேச்சு எனவும் சொல்வோம். இந்த ஈவெராவின் முட்டாள் அடிமைகள் தான் லெனின் சிலையை உடைத்ததற்கு பொங்கிய கூமுட்டைகள். பார்ப்பன கவிஞர் பாரதியாரிடம் கூட, ஈவெராமசாமியால் காட்டப்படாத வன்மம் - திருவள்ளுவர் மீது காட்டப்பட்டுள்ளது. "எப்போதாவது பாரதியின் சிலையை குப்பை தொட்டியில் போடுங்கள்" என ஈவெராமசாமி சொன்னதுண்டா. இல்லையே. ஏன்? திருவள்ளுவர் உலக பொதுமறையை இயற்றியவன் அல்லவா. தமிழுக்கு பெருமை சேர்க்கும் எவரையும் மதிக்கக்கூடாது என்கிற திராவிட திருட்டு புத்தியன்றி வேறென்ன இது.

"என்ன ஈவெராமசாமியின் அறிவு இவ்வளவு கேவலமானதாக உள்ளது" என சுட்டி காட்டினால், ஈவெராமசாமியால் குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என சொல்லப்பட்ட வள்ளுவன் இயற்றிய திருக்குறளுக்கு மாநாடு நடத்தியதாக ஈவெராவாதிகள் பெருமையடித்து கொள்வார்கள். 
ஈவெராமசாமி, திருக்குறள் மாநாடு நடத்தியபோது கூறியது 1949ல். "திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்ப தற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை " எவரின் நூலை பாராட்டி ஈவெராமசாமி மாநாடு நடத்தினாரோ - அத்தகைய மனிதரின் படத்தையே குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என்கிறார் "திருக்குறளிள் ஒன்றும் இல்லை" என. ஏன் ஈவெராமசாமி திருக்குறளை 1949ல் ஒழுங்காக படிக்கவில்லையா?
ஒன்றை முழுமையாக வாசித்து கருத்து சொல்ல வேண்டும் என்கிற அறிவின்றி முதலில் பழிப்பது பிறகு ஏற்பது... அல்லது முதலில் ஏற்பது பிறகு பழிப்பது என முரண்பாடு தான்.

மாநாடு நடத்திய திருக்குறளை தான், மறுவருஷமே, 1950 ஈவெராமசாமி இப்படி பழித்தார். "வள்ளுவர் குறளையும், 
அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் ஈவெராமசாமி. 1949ல் எந்த நூலை சிறப்பித்து மாநாடு வைத்தாரோ, அந்த நூலை, அதற்கு மறுவருஷமே மலத்துடன் ஒப்பிடுகிறார். திருக்குறள் மலமில்லை, திருக்குறளை இழிவு செய்ததன் மூலம், ஈவெராமசாமியின் மண்டை மூளை தான் மலமானது.

கடைசியாக சொல்வார்கள் ஈவெராவாதிகள் "உங்கள் வீட்டு பெரியவர்கள் உங்களை கடிந்து கொள்வதில்லையா, அப்படி தான் ஈவெராமசாமி காட்டுமிராண்டி" என சொன்னதும்" என சொல்வார்கள். கடிந்து கொள்வதும், காட்டுமிராண்டி என சொல்வதும் ஒன்றா? ஒருவன் தன் மனைவியையே, அவள் விரும்பாமல் தொடக்கூடாது, பிள்ளைகளையே அநாகரீகமாய் திட்டக்கூடாது எனும் சட்டக்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த தி.க.வினர் என்னவென்றால், "காட்டுமிராண்டி" என சொன்னதற்கு, வெட்கங்கெட்டு போய் சப்பைக்கட்டு கட்ட வருகிறார்கள். அடுத்து வரும்போது, இன்னும் யோசித்து சப்பைக்கட்டு கட்ட வாருங்கள் இல்லை என்றால் ஈவெராமசாமி சொன்னது தப்பு தான் என மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"திருக்குறள் மனுதர்மத்தின் சாரமாம்" பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி (1)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி. பூங்குன்றன்***

v22.jpg

மேனாள் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை (7.11.2018) 7 மணிக்கு  சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ. கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் அரிய உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் நன்றி கூறினார்.

பார்ப்பனர்களை பொறுத்தவரை தமிழையும், தமிழர் களையும், தமிழர்களின் பண்பாட்டையும்  கொச்சைப் படுத்துவதில் எப்பொழுதும் 'நயமாய்' ஈட்டி முனையாய்ச் செயல்படக் கூடிய இட்லர் மனப்பான்மை கொண்டவர்கள். உலகத்திலேயே ஆரிய இனம்தான் உயர்ந்தது என்று ஓங்காரக் குரல் கொடுத்த உன்மத்தன் ஆயிற்றே - அந்த உன்மத்தர்கள் இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்கள் உருவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழில் பேசுவார்கள், தேவைப்படும் இடங்களில் தங்களைத் தமிழர்கள் என்று கூடச் சொல்லிக் கொள்வார்கள்.ஆனால் நடப்பில் மட்டும் அவர்கள் எண்ணம் என்பது திரா விடர் - தமிழர் எதிர்ப்புதான் - தமிழ் மீது துவேஷம் தான்.

இதுபற்றி அறிஞர் அண்ணா கூறுவது கூர்மையானது - கவனிக்கத்தக்கதுமாகும்.  "தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ரெனப்பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" (திராவிடன்நாடு 2.11.1947 பக்கம் 18). பார்ப்பனர்களை எவ்வளவு துல்லியமாக அண்ணா படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இன்றைக்குக்கூட சங்கராச் சாரியார் ஒவ்வொரு நாளும் பூஜை வேளையில் (சந்திர மவுளீஸ்வரர் பூஜை என்று சொல்லிக் கொள்வார்கள்) தமிழில் பேச மாட்டார். பூஜை வேளையில் தமிழ் நீஷப் பாஷை என்று கூறிப் பேச மாட்டார்கள். (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - 'உண்மை' 1.12.1980).

ஓலைச் சுவடிகளை எல்லாம் திரட்டி தமிழ் இலக்கியங் களைப் பதித்தவர் உ.வே. சாமிநாதய்யர் என்று கூறப்பட்டாலும் அதிலும் கூட அவர் தனது பார்ப்பனர் உணர்வைக் காட்டத் தவற வில்லை.

"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்!" எனும் நூலில் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உ.வே.சா. பற்றி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார். "புறநானூற்றில் 'ஆன்முலை யறுத்த' - என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடி களில் உள்ள ஒரு சொல், யாழ்ப் பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் 'அறவோர்' என்று வந் துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் 'பார்ப்பார்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச் சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. 'அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா'தெனும் 'அறங்கூறும் அவ்வடி, 'பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா'தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் 'கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை' எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள 'தன்மை' என்னும் ஒரு சொல் லுக்கு 'அவரவர் சாதி இயல்பு' - என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை 'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்' எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, "இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க் கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது" என்றும்,

'அறிவுடையீரே' என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், 'பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது' என்றும்,

'ஆசில் தெருவில்' என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், 'ஆசில்' (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று 'தோன்றுகின்றது' என்றும் எழுதி, 'பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா' எனும் (இன்னா 3) அடியையும், 'அந்தணர் அமுதவுண்டி' (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கி யங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

v23.jpg

தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெரு மையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்ப தற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களை யெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷ்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களை பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.

v25.jpg

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணை யின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் 'வடசொல்லாட்சி' என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுக் கொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

"இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள் எழுதி யுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியையென் றும், மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென் பதற்குப் பாடஞ்செய்யும் என்றும், அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குப் பரித் தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க."

தமிழ்த் தாத்தா என்று கூறப் படுவரே தமக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழை இப்படி யெல்லாம் குதறி இருக்கின்றார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுவானேன்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருவள்ளுவரைப் பற்றிப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) புரட்டு! (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி. பூங்குன்றன்***

v28.jpg

உ.வே.சா. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

"பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படிச் செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட, பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர் களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!" என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்கள்.

('குடிஅரசு' 10.3.1935 பக்கம் 3,4)

இதுதான்  தமிழ்  வளர்ப்பில்கூட இன பேதக் கண் ணோட்டம்!

v29.jpg

"திரு" என்ற அருந் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவ தில்கூட பார்ப்பனர்களிடத்தில் மல்லுக் கட்ட வேண்டி யிருந்தது.

"திரு"வை எதிர்த்து இரா. இராகவய்யங்கார், உ.வே.சாமி நாதய்யர் முதலானோர் எழுதினர். இரா. இராகவய்யங்கார் "சுதேசமித்திரன்" இதழில் "திரு" என்ற சொல் "ஸ்ரீ" என்பது போலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும், "திரு" என்னும் அடையாளமும் உதவாதது என்றும் மறுத்தெழுதினார். (பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் அவர்களின் "தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்" மேலும் "குறளீயம்" 1.11.2000).

தமிழில் உள்ள ஓர் அழகிய சொல்லைப் பயன்படுத் துவதற்கு இந்தளவுக்குப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் மனப் பாங்கு எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.

சென்னை சிறப்பு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் "துக்ளக்கில்" சோ எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" எனும் கட்டுரைத் தொடருக்கு  "உண்மை" இதழில் "வெறுக்கத்தகுந்ததே பிராமணீயம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய தொடரிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.

"உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!

வ.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry. 

"திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்" என்று எழுதி யுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவ தாக அமைந்து இருக்கிறது. அதில்கூட "அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.

அதாவது, "திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்" என்று எழுதினார்."

(க. திருநாவுக்கரசு அவர்களின் "திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்" சங்கொலி 14.6.1996)

என்னே பார்ப்பனத்தனம்!

ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே பறைசாற்றுவார்கள்; இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கும் இவர்தான் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுக்கும் இவர்தான் தலைவராம். (அப்படித்தானா?) ஆனால் மனம்? ஆதி சங்கரரைப் பற்றி  விவேகானந்தர் சொல்லுவதுபோல அவர் வழி வந்த இந்த சங்கராச்சாரியார்களுக்கு குறுகிய புத்திதான் - தான் பிறந்த பார்ப்பன ஜாதி எனும் ஆணவம் கொக்கரிக்கும் - குரூரக் குணம்தான் - தங்கள் மொழியான சமஸ்கிருதத்தின் மீது தாங்கொணா வெறிதான் - கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புரட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் - குறளைப் பற்றி இடைக்காடர் எனும் புலவர். மதுரைப் பாலாசிரியனார் எனும் புலவரோ,

வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண்திங்கள்

பொன் என நீக்கும் புறஇருளைத் - தெள்ளிய

வள்ளுவர் இக்குறள் வெண்பா அகிலத்தோர் உள் இருள் நீக்கும் ஒளி

என்றார்.

இப்படி உலகத்தாரின் உள் இருள் நீக்கும் ஒளியான திருவள்ளுவர் யாத்த திருக்குறளை லோகக் குரு என்று 'லொக் லொக்'கென்று இருமிக் கொண்டு, இறக்கும் தருவாயில் இருக்கும்  பார்ப்பனர்கள்கூட உச்சிமோந்து போற்றுகிறார்களே, அந்த சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

வைணவப் பெண்மணியாகிய ஆண்டாள் என்பவர் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல், "நாட்காலை நீர் ஆடி" என்று தொடங்குகிறது. அதில் 'செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்' என்பது ஒருவரி.

இதற்கு இந்த லோகக் குரு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

"தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்லுகிறார் என்றால் இந்தப் புரோகிதப் பார்ப்பனக் கும்பலை என்னவென்று சொல்லுவது! 'குறளை' என்பதற்கு என்னதான் பொருள்? அய்காரத்தைக் கடைசியாகக் கொண்ட இந்த சொல்லுக்கான பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும் (மதுரைத் தமிழ் பேரகராதி)

தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்தக் கோட் சொல்லி குல்லுகப்பட்டர் பாம்பரையோ அர்த்தத்தை அனர்த்தமாக்கி ஆனந்தநடனம் ஆடுகிறதே!

இந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்லு கிறார் என்றால் சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தன் பங்குக்கு எதையாவது உளறி வைக்க வேண்டாமா?

மதுரையில் தொழில் அதிபரான பார்ப்பனர் ஒருவருக்கு கைங்கரிய சிரோமணி விருது வழங்க சென்ற இடத்தில் இவர் உதிர்த்த 'உன்னத' மொழி என்ன தெரியுமா?

"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றாரே பார்க்கலாம் ('தினத்தந்தி' 15.4.2004)

"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது." (கீதைஅத்தியாயம் 4 - சுலோகம் 13) இப்படி சொல்லும் கீதையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளும் ஒன்றாம்.

பிறவிக்குருடர்கூட இப்படிக்கூறி இப்படி அடையாளப் படுத்த மாட்டான்.

சந்தனமும் - சாணியும் ஒன்று, பாலும் -  பாஷாணமும் ஒன்று என்று சொல்லும் பாழ்ப்புத்தி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோகக் குணம்!

குறள் மனிதநேயத்தின் குணம்! சங்கரமடம் மனித வெறுப்பின் இனம்!! இரண்டும் எதிர்நிலை மனம்!!! இரண்டும் எதிர் நிலை - ஒன்றல்ல - புரிந்து கொள்வீர்!

'திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை - அதிலும் முதலில் பத்துக் குறள்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று காஞ்சி ஜெயேந்திரர் சொன்னதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதே!

"திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   "நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை" என்ற சிறு நூலில் காணப்படுகிறது.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். 'தமிழன்' என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.

இவர் 'பார்ப்பன வேதாந்த விவரம்' 'வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்' 'நந்தன் சரித்திர விளக்கம்' 'நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை' "திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. "அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது "வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, "சரி, கேளும்" என்றார்.

"நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் 'எம்.ஏ.,' 'பி.ஏ.,' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்" என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து "பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்" என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதர், "ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்," என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.

திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.

இந்த தகவலை "நூதன ஜாதிகள் உற்சவபீடிகை" எனும் நூலிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் சு. ஒளிச்செங்கோ. இத்திசையில் சொல்லிக் கொண்டே போகலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி.பூங்குன்றன்***

v23.jpg

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் 'நச்சு நச்சு' என்று கொடுத்தார் சாட்டையடி!

வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?

எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளை சந்தித்து விட்டு வரலாம் என்று 'ஆனந்த விகடன்' மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் கிளம்பி விட்டார்.

அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.

அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.

ஒன்று - பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை - அதற்கு வழி செய்ய வேண்டும்.

கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு

 

நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூலுக்கு மறுப்பு நூல் ஒன்றை முனைவர் மறைமலை இலக்குவன் எழுதுவார் என்று கூட்டத்தில் அறிவிப்பு.

இரண்டாவது - பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், "நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!" என்றதும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.

v25.jpg

தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.

(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)

சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.

நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் Mirror of Tamil and Sanskrit எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.

5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.

அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். "Tamil Nadu A Land of Vedas" என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).

திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்? அறிவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது - என்பது குறள்.

அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? "பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.

அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மைப் பூண் டொழுகலான்.

என்பது தான் அந்தணருக்கு திருவள்ளுவர் சொல்லும்  விளக்கமாகும்.

நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).

எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.

ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? 'பித்தா பிறை சூடிய பெருமானே' என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.

இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது - ஆரவாரம் மக்களிடையே!

(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். "நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை" என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)

இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.

("சைவமும் தமிழும் தழைத்தோங்குக" என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).

இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.

இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.

கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?

திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

v24.jpg

இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் - அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.

ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.

- நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங் பிரதமராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.

தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு - தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.

எழுத்தாளர் பழ.கருப்பையா

v26.jpg

எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.

2100 ஆண்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம்.  ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.

இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.

'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்' என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.

ஆரியம் வேறு, திராவிடம் வேறு - இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.

உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.

ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.

என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.

(பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.

சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.

ஆரிய - திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.

பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது - ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"

மனு அத்தியாயம் 10 சுலோகம் 841

இது ஆரியத் தத்துவம் - கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்

இது திராவிடத் தத்துவம்.

இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!

நாகசாமியின் இந்த நூலைப் பற்றி - பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

v22.jpg

நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?

நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.

திட்டமிட்டே ஒரு வட்டாரம் - ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தத் திராவிட மண்ணை - பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் - நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.

ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.

குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.

மனுதர்ம சாஸ்திரத்தில் கடைசிக் கடைசியாக சாஸ்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.

"இந்த சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விஷயத்தில்  மேற்சொல்லும் குணமுள்ள பிராமண ருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சய மான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).

இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.

அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை - இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை - சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

(முழு உரை பின்னர்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்தது திருக்குறள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகசாமியின் நூல் தனி நபர் முயற்சியல்ல - ஒரு பின்னணி உண்டு!

 

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று நாகசாமி எழுதிய நூலுக்கான மறுப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்

vm3.jpg

 

சென்னை, நவ.30 திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று நாகசாமி என்ற பார்ப்பனரால் எழுதப்பட்ட நூலுக்குப் பதிலடி கொடுத்து நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நாகசாமி என்ற தனி மனிதரின் முயற்சியால் மட்டும் எழுதப்பட்ட நூல் அல்ல - இதற்குப் பின்னணியில் ஒரு லாபியே உண்டு என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

7.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திருக்குறள் மனு தர்மத்தின் சாரமா? பார்ப்பனர் நாகசாமியின் நூலுக்குப் பதிலடி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இங்கே சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களே,

சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளருமான அன்புத் தோழர் பழ.கருப்பையா அவர்களே,

அன்பு சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

இந்த அறிவார்ந்த அரங்கத்தில் கூடியுள்ள சிறந்த அறிஞர் பெருமக்களே, நுண்மாண் நுழைபுலம் உள்ள சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வந் தாலும், இங்கே நான் பேசுவது முக்கியமல்ல. வழக்கமாக நான் பேசினாலும், இவர் திராவிடர் கழகத்துக்காரர், இவர் இப்படித்தான் பேசுவார் என்று ஒரே வரியில் சொல்லி விடுவார்கள்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

ஆனால், இங்கே பேசிய நம்முடைய அய்யா  பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்,

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி, ஜார்ஜ் ஹார்ட் போன்ற வெளிநாட்டவர்களுக்கெல்லாம் அங்கே தமிழின் பெருமையை, தமிழருடைய பெருமையை, திராவிடருடைய பெருமையை எடுத்து வைத்தவர்.

அதுபோலவே பேராசிரியர் சுப.வீ. அவர்கள், அந்தத் துறையில் ஆழமான அறிஞர், ஆய்வாளர் ஆவார்.

சுய சிந்தனையாளர், துணிச்சலான சிந்தனையாளர்!

அதுபோலவே நம்முடைய அய்யா பழ.கருப்பையா அவர்கள். அவருக்கு எத்தனை கட்சிகளுடைய அடையாளம் இருந்தாலும், அதைவிட மிக ஆழமானது முழுக்க முழுக்க அவர் சிறந்த சிந்தனையாளர், சுய சிந்தனையாளர், துணிச்ச லான சிந்தனையாளர் - அதுதான் மிக முக்கியம். அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசுவார். இங்கே அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண் டிருக்கின்ற நிலையில், ஒரு சில கருத்துகளை மட்டும் நான் சொல்கிறேன்.

இந்தத் துணிச்சல் ஏன் வந்தது?

மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷமம், திருவள்ளுவரைப்பற்றிய விஷமம் இருக் கிறதே, அந்த விஷத்தன்மை பாய்ச்சல், பரிமேலழகரிலிருந்து ஆரம்பித்தது என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

அதேபோன்று இந்த விஷமத்தை செய்தது திட்டமிட்ட ஒரு தனி நபரல்ல, நாகசாமி, அதை அருமை சகோதரர் சுப.வீ. அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

உங்களுக்கு அதை மீண்டும் என்னுடைய தலைமை உரையில், நிறைவுரையில் நினைவூட்டவேண்டும்.

சமஸ்கிருதமும், தமிழும் என்ற பெயராலே எழுதும்போது...

ஒரு பெரிய திட்டம். இதற்கு முன்பு சமஸ்கிருதமும், தமிழும் என்ற பெயராலே எழுதும்போது, அன்றைக்கும் மறுப்பு சொல்லவேண்டிய அளவிற்கு உணர்வுகள் வந்தன.

நாகசாமியினுடைய விஷமம் சில ஆண்டுகளுக்குமுன் வந்தபொழுது, அதை எதிர்த்து, நம்முடைய எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் அகாடமி என்று சொல்லக்கூடிய வாய்ப்பில், அவர்கள் சிறந்த முறையில்,  The tainted spectacles and faulty vision of Dr.Nagaswamy (The real status - of Tamil and Sanskrit) என ஆய்வரங்கத்தினை நடத்தினார்கள்.  பாராட்டவேண்டிய ஒரு பெரிய முயற்சி. முதலில் தமிழும், சமஸ்கிருதமும் என்று சொல்லி, அதாவது சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழே வந்தது என்றார்.

அடுத்த விஷமம் என்னவென்று சொன்னால், திருக்குறள் என்பது மனுதர்மத்திலிருந்துதான் வந்தது என்றார். திருக்குறளில் உள்ள மூன்று பால்களும் எப்படி வந்தது என்று சொன்னால், முதலில் மனுதர்மம், அறம் என்பது அறத்துப்பால் மனுதர்ம சாஸ்திரம்

பொருட்பால் என்பது அர்த்தசாஸ்திரம் காமத்துப்பால் என்பது வாத்ஸாயானாருடைய காமசூத்திரம் என்று அந்தப் புத்தகத்தில் எழுதி வைத்து, தர்ம சாஸ்திரத்தில் இருக்கக்கூடிய நிலைகள்தான் என்று அவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற அந்த நிலை.

அதோடு இன்னொரு முக்கியமான நண்பர் இன்றைக்கு சொன்ன ஒரு தகவல்.

இது தனி நபர்களுடைய முயற்சியல்ல!

திட்டமிட்டு ஒரு பெரிய வட்டாரம் இதை செய்து கொண்டி ருக்கிறது - பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பைச் சார்ந்த பார்ப்பனர்கள்.

நண்பர்களே, இது தனி நபர்களுடைய முயற்சியல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.  இந்திய அளவில், முழு அரசாங்கத்தினுடைய ஆதரவோடு, ஆளுங்கட்சி, மனுதர்மத்தை அரசியல் - சட்டமாக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் - சொல்லக்கூடியவர்கள். இதை இப்பொழுது செய்து கொண்டி ருக்கிறார்கள்.

Tamil Nadu, the Land of Vedas

தமிழ்நாடு என்பதே வேதங்களுடைய மண்.

இது பெரியார் மண் அல்ல; திராவிட மண் அல்ல என்று சொல்லக்கூடிய அளவிற்கு,

தமிழ்நாடு' என்று தனிப் பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா

தமிழ்நாடு வேதங்களுடைய மண்ணாக இருக்கக்கூடாது ' என்பதற்காகத்தான், தமிழ் நாடு என்று தனிப் பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு என்று சொன்னாலே, அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. அதை அப்படியே மாற்றவேண்டும் என்பதற் காகத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்

இந்தப் புத்தகங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே! இது ஏதோ ஒரு புத்தகத்திற்கு மறுப்பு, அல்லது ஒரு கருத்துக்கு மறுப்பு என்பதல்ல.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

எனவேதான், நாம் இந்தியை எதிர்க்கிறோம், சமஸ்கிரு தத்தை எதிர்க்கிறோம், நம்முடைய தலைவர்கள் எதிர்த்தார் கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா , கலைஞர், நாவலர் போன்றவர்கள், தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகளார், சோமசுந்தர பாரதியார், தளபதி அழகிரிசாமி இப்படி எல்லோரும் எதிர்த்தார்கள் என்றால், அது வெறும் மொழி எதிர்ப்பு அல்ல. அருள்கூர்ந்து இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்ப்பதுதான்

தமிழனே இது கேளாய் உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்களே, அதனு டைய அடிப்படையை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, பண்பாட்டுப் படையெடுப்பு, அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அடித்தளத்தில், எல்லா இடத் திலும் நொறுக்கினார்கள்.

இணையத்தில், புதிய புதிய ஏற்பாடுகளையெல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

திராவிடர் இயக்கத்தினர் அரசியல் துறையில் இருந்த பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். ஆனால், அதைவிட ஆழமாக வேரூன்றிய சமுதாயத் துறையில் இருக்கின்ற பார்ப்பனீயத்தை வேரறுத்த பெருமை தந்தை பெரியாருக்கு - சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு. ஏனென்றால், அடித்தளத்தில் இருந்து கைவைத்தார்கள். அதனுடைய அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், இப்பொழுது அவர்கள் புதிதாக இதை யெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். இணையத்தில், புதிய புதிய ஏற்பாடுகளையெல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளமாக, மிகப்பெரிய அளவிற்கு திட்டம் போட்டு இறங்கியிருப்பது, பல கோடி ரூபாய் உள்ள கார்ப்பரேட்டுகள். பன்னாட்டு முதலாளிகள் எல்லாம் தொலைக்காட்சிகளை தங்களு டையகைகளில்வைத்திருக்கிறார்கள்.வாங்கிவிட்டார்கள். ஊடகங்களைத் தங்களுடைய கைகளில் வைத்தி ருக்கிறார் கள். பத்திரிகைகள் அவர்களால் வாங்கப்பட்டு இருக்கின் றன. பங்குகள் பெரும்பாலும் வாங்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் என்ன உத்தரவு போடுகிறார்களோ, அதைத் தான் அந்தந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களாக இருக்கின் றவர்கள் எழுதியாகவேண்டும். இல்லையானால், அந்த ஆசிரியர்கள் அந்தப் பத்திரிகைகளை விட்டு வெளியே வரவேண்டும்.

அண்மையில்கூட, இங்கிலாந்தில் ஒரு ஆசிரியர் தொகுத்து எழுதியிருக்கிறார். இந்து' ஆங்கிலப் பத்திரிகை யில் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்திருக்கிறது. எந்த செய்தியைக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதைத்தான் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அளவில்,    என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எதை நீங்கள் படிக்கவேண்டும் என்பதை, எதை நீங்கள் உண்ண வேண்டும் என்று சொல்வதை அவர்கள் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல. எந்த செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், எதைப் படிக்கவேண்டும் என்பதை, தொலைக்காட்சிகளாக இருந்தாலும் அல்லது ஊடகங்களாக இருந்தாலும் அல்லது செய்தித்தாள்களாக இருந்தாலும் அல்லது புத்தகங்களாக இருந்தாலும் அதை செய்யவேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய ஒரு திட்டம்; அதற்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு இருக்கின்றன.

இங்கே அழகாக சொன்னார் நம்முடைய சுப.வீ. அவர்கள். இப்பொழுது நாம் செய்கின்ற பணியெல்லாம் ஏதோ மேலெழுந்தவாரியான பணி.     To the fringe of the problem என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உள்ளே போக முடியாமல், பிரச்சினையின் விளிம்பிலேதான் நாம் சென்றுகொண்டிருக்கிறோமோ என்று நினைக்கவேண்டிய அளவில் இருந்துகொண்டிருக்கிறது.

பெரியார் கண்ணாடியைப் போட்டுப்பார்க்கவேண்டும்

ஆகவேதான், இந்த முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற நூல்களை எழுதும்போது ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அப்படியென்றால், அதனுடைய நோக்கம் என்ன? பார்ப்பனர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும். அந்தப் பெரியார் கண்ணாடி தான், நுண்ணாடி, ஆகவே, அதைப் போட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு நன்றாகப் புரியும்.

ஏன் ஆங்கிலத்தில் அதை இப்பொழுது எழுத ஆரம்பித் திருக்கிறார்கள். தமிழ்நாடு முக்கியமல்ல அவர்களுக்கு. இப்பொழுது ஹார்வர்டில் தமிழ் உள்ளே போகிறது. அந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் உள்ளே போகும்பொழுது, அங்கே இந்த உணர்வுகள் எப்படியும் திசை திருப்பப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நம்மாட்கள் உடனடியாக மறுப்பு சொல்ல மாட்டார்கள்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நம்முடைய ஆட்கள் பல பேர் பேசுவார்களே தவிர, எழுதுங்கள் என்று சொன்னால், எழுத மாட்டார்கள். உடனடி யாக மறுப்பு சொல்ல மாட்டார்கள்.

இப்படி ஒரு கூட்டத்தைப் போட்டிருக்கிறோம். இன்றைக்கு ஒரு நல்ல கருத்தை நம்முடைய தோழர் பழ.கருப்பையா அவர்கள் சொல்லியிருக்கிறார். எல்லா கட்சிகளிலும் இலக்கிய அணி இருக்கிறதல்லவா? அவர்கள் இனிமேல் செய்ய வேண்டிய பணி என்ன? என்று கேட்டிருக்கிறார். இலக்கியம் என்பதே வடமொழி என்று சொன்னார்கள் முதலில்,

புரட்சிக்கவிஞர் அவர்கள்தான் சொன்னார்கள், இலக்கு இயம் என்று. அந்த வார்த்தை தமிழ்தான் என்று.

அதற்கே போராட வேண்டிய அளவிற்கு அவர்கள் ஆக்கினார்கள்.

சமஸ்கிருதத்திலேயே உங்களுடைய பத்திரிகைகளை அச்சடிக்க வேண்டியதுதானே?

சமஸ்கிருதத்தின் மேன்மையைப்பற்றி இவ்வளவு  பேசுகிறீர்களே, அப்படியானால், சமஸ்கிருதத்திலேயே உங் களுடைய பத்திரிகைகளை அச்சடிக்க வேண்டியதுதானே? சமஸ்கிருதத்தில் புத்தகம் எழுதவேண்டியதுதானே என்றார் நம்முடைய சுப.வீ. அவர்கள் ஒருமுறை.

சமஸ்கிருதத்தைப் படிப்பதற்கு ஆட்கள் இங்கே கிடையாது.

சமஸ்கிருதத்தை அவர்கள் சொல்லிக் கொடுப்பதே, ஆங்கில மொழியை வைத்துத்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், டாக்டர் தமிழண்ணல் அவர்கள் எழுதி, அதனை ஈ.வி.பாலசுப்பிரமணியன் அவர் கள் மொழி பெயர்த்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் முதலில் அதனை வெளியிட்டார்கள்.

மறைமலை அய்யாவின் மறுப்பு நூல் இன்னும் சில மாதங்களில்...!

அதுபோல, இதற்கு மறுப்பு நூலை, நம்முடைய பேராசிரியர் மறைமலை அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்நூல் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளிவரும் என்பதை முதற்கண் அறிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

This book is in English it will not spread  much in 
Tamil Nadu but it will help confuse the foreigners.

நம்முடைய தமிழண்ணல் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், வெளிநாட்டுக்காரர்களைக் குழப்பவேண்டும் - ஹார்வர்டு போன்ற இடங்களில், தமிழ் வராமல் தடுத்தார்கள். தமிழ் இருக்கை அங்கே வந்துவிட்டது. அங்கே கிறித்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேறு விதமாக வருவார்கள் என்று தடுத்தார்கள். அது தோல்வி அடைந்து விட்டது என்றவுடன், இப்பொழுது அதற்கு அடுத்தகட்டமாக, இதுபோன்ற நூல்களைக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு பெரிய குழுவே இருக்கிறது

ராஜீவ் மல்கோத்ரா என்பவர் ஒருவர் அங்கே தலைமை தாங்குகிறார்.

சுப்பிரமணிய சாமி, ராஜீவ் மல்கோத்ரா, நாகசாமி அதே போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள். இன்னொரு நண்பர், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் மோடிக்கு அடுத்தபடியாக நிற்கிறார்; செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். ஆக, இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய குழு இருக்கிறது.

பனிப்பாறையின் முனை!!

நாம் சொல்கின்ற இந்தப் புத்தகம் இருக்கிறதே, Tip of the iceberg- பனிப்பாறையின் முனை. அதனை எச்சரிக்கை செய்யவே இந்தக் கூட்டம். நாகசாமிமீது கோபப்பட்டு அல்ல இந்தக் கூட்டம். இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை மீண்டும் உருவாக்கி, மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் - மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக்க வேண்டும் - அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இப் பொழுது எப்படி ராமனைப்பற்றி பேசுகிறோமோ - சட்டம், நீதிமன்றத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று பேசுகிறோமோ - அதேபோன்று கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசுகிறார்கள்.         தமிழ் மொழியை செம்மொழியாக்க கலைஞர் அவர்கள் அரும்பாடுபட்டு இன்றைக்கு நிலை நிறுத்தியிருக்கிறார். இன்றைக்கு உண்மையிலேயே செம்மொழிக்கான வாய்ப்பு நூற்றுக்கு நூறு கிடைத்திருக்கிறதா? அய்யா அவர்கள்  வேதனைப்பட்டு சொன்னார்களே? சமஸ்கிருதத்திற்கு எத்தனைக் கோடி ரூபாயை ஒதுக்குகிறார்கள்? செம்மொழி யான தமிழுக்கு எத்தனை கோடி ரூபாயை ஒதுக்குகிறார்கள்? செம்மொழிக்குத் தமிழ் தெரிந்தவர் அதிகாரியாக வரு வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? இதையெல்லாம் நினைத்தால் வேதனையாக இல்லையா!

இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம்!

தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் வரவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய நோக்கமாகும்.To establish Tamil has not become a classical language on its own level and capacity, but by borrowing gradually from Sanskrit.

சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கி, பிராகிருதத்திலிருந்து. கடன் வாங்கித்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்ற அத்தனை இலக்கியங்களும் படைக்கப்பட்டதாக நாகசாமி எழுதியிருக்கிறார்.

இதேபோன்று அதைக் காட்டவேண்டும் என்பதற்காகத் தான் முதலில் பொத்தாம் பொதுவில் எழுதினார். சமஸ் கிருதமும் - தமிழும்!

பறைச்சிப்  பெண்ணுக்கும் - பார்ப்பனர் ஒருவருக்கும் பிறந்ததாக சொல்கிறார்கள்!

அதற்கடுத்தபடி பார்த்தீர்களேயானால், திருவள்ளுவரைப் பற்றி அந்த விஷமத்தை எப்படி செய்திருக்கிறார்கள் என்றால், பறைச்சிப் பெண்ணுக்கும் - பார்ப்பனர் ஒருவருக்கும் பிறந்ததாகச் சொல்கிறார்கள். இதைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொருத்தருக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா? திருக்குறளை கீழிறக்குவது - உடனே சாமர்த்தியமாக "இப்படியும் சொல்லப்படுகிறது'' என்று சொல்கிறார்கள்.

அதாவது, யார் புத்திசாலியாக இருந்தாலும், அவன் பார்ப்பானுக்குப் பிறந்தவனாக இருக்கவேண்டும் என்பது தான் அவர்களுடைய தத்துவம்.

திருவள்ளுவரைப்பற்றி புரட்சிக்கவிஞர்!

புரட்சிக்கவிஞர் அவர்கள் திருவள்ளுவரைப்பற்றி எழு தும்போது அற்புதமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

வள்ளுவன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்,

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்

என்னும் பிங்கலந்தைச் செய்யுளை மேற்கோளாக எடுத்துக்காட்டி புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.

வள்ளுவர் என்பது அமைச்சர். அந்த அமைச்சர் களுக்குரிய பண்பாடு. வள்ளுவன் என்பது அமைச்சர்களில் ஒருவர் என்று எடுத்துச் சொன்னார். இதுபோன்று எத்தனையோ கருத்துக்கள் நிறைய இருக்கிறது. நேரமின்மையைக் கருதி அவற்றை இங்கு எடுத்துச் சொல்லவில்லை. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையில் திருவள் ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் பல உரைகளின் தொகுப்பு நூல்: பெரியார் களஞ்சியம் தொகுதி 37 - திருக்குறள் - வள்ளுவர்

பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை எழுதினார். அதனால்தான் அதற்கு எதிர்ப்பு. அதுமட்டுமல்ல, அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது உண்மையைப் பொருத்ததா என்றால், இல்லை. முழுக்க முழுக்கப் பொய் - முழுக்க முழுக்கப் புரட்டு.

அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்கிறார்: பெரியார் பேசுகிறார் கேளுங்கள்: சமீபத்தில் ஒரு தோழரோடு திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறபொழுது, அதன் பெருமையை எடுத்துக்கூற, அவர் ஒரு தேனீக்குடிக்கீரனார் என்ற புலவரால் பாடப் பெற்ற சாற்றுக் கவி ஒன்றை எனக்கு மேற்கோளாக எடுத்துக்காட்டினார். அதாவது பொய்ப்பால் பொய்யே ஆயிப் போயின

பொய்யில்லாத மெய்ப்பாலே மெய்யாய் விளங்கினவே

முப்பாலில் தெய்வத்திருவள்ளுவர் செப்பிய குறளால்

வையத்து வாழ்வார் மனத்து... என்று அந்த சாற்றுக் கவியில் இருக்கிறது என்றார்.

ஆகவே, பொய்யை, புரட்டை எதிர்ப்பதற்காகத்தான் திருக்குறளே வந்தது.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கின்ற மிகப்பெரிய நூல் திருக்குறள்!

எனவே, பொய் மறுப்பு நூல் - ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கின்ற மிகப்பெரிய நூல் என்பதற்கு அடையாளம்தான் திருக்குறள் என்பதை இங்கே மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

மிக அழகாக எடுத்துச் சொன்னாரே நம்முடைய சுப.வீ. அவர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் ஏன் தெரியவில்லை என்று கேட்டார்.

அதேபோன்று, நம்முடைய தோழர் கருப்பையா அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்.

விவசாயம் - வேளாண்மை - உழவு இவற்றைப்பற்றி திருவள்ளுவரின் கருத்து என்ன?

மனுதர்மத்தைப் பார்த்துதான் திருக்குறள் காப்பியடிக் கப்பட்டது என்கிறார்களே, உழவைப்பற்றி மனுதர்மத்தின் கருத்து என்ன? விவசாயத் தொழில் பெரியோரால் நிந்திக்கப்பட்டதாம்!

மனுதர்மத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 84 ஆவது சுலோகம்

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்; அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியிலுள்ள பற்பல ஜந்துக்களையும் வெட்டுகிறது அல்லவா?" இருவேறு பண்பாடுகள் - நேர் எதிரான பண்பாடு, மனுதர்மம் - வருணாசிரம தர்மம் திருக்குறள் - ஜாதி ஒழிப்பு, அனைத்து உயிர்களும் ஒன்று என்று எண்ணுவது. அதுதான் பிறப்பொக்கும் என்பது.

இப்படி வரிசையாக ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். நேரமில்லாத காரணத்தினால் சொல்லவில்லை.

தர்ம சாஸ்திராசினுடைய பிரதிபலிப்புதான் என்று நாக சாமி சொல்கிறார். மனுதர்மத்தில் அவர் எவ்வளவு விஷமத் திற்கு உள்ளாகிப் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்,

பார்ப்பனர்கள் சொல்வதுதான் தர்மமாம்!

12 அத்தியாயங்கள்; 2684 சுலோகங்கள் அத்தனையையும் எழுதிய பிறகு, கடைசியாக முடிக்கிறார்கள்.

12 ஆவது அத்தியாயம் 108 ஆவது சுலோகம் "மனுதர்ம சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி யிராததினாலும் சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும், அந்த விஷயத்தில் மேற்சொல்லும் குணமுள்ள பிராமணாள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சயமான தரும மாகும்."

முடிவு அங்கேதான். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், இன்றைக்கு எப்படி மாறிப் போயிருக்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரும் - ஏனென்றால், காலதேசம் வர்த்த மானத்தில் மாறிப் போயிருப்பார்கள். இன்றைக்கு சூட் போட்டுக்கொண்டு உச்சிக்குடுமி வைத்தி ருப்பார்கள். எல்லாம் மாறும்.

ஆனால், எப்படி இருந்தாலும், பிராமணன் என்ன சொன்னானோ, அவன் சொல்வதுதான் தர்மம் இன்றைக்கும்.

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும் விலக்கியன ஒழிதலுமாம்' என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆரம்பித்த அந்தப் பரிமேலழகருடைய அந்த வாடை எல்லா இடங்களிலும் எப்படியெல்லாம் வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனவேதான் நண்பர்களே, தந்தை பெரியார் ஏன் பண்டிகைகளை எதிர்த்தார்? ஏன் தீபாவளியைக் கொண் டாடாதீர் என்றார்? ஏன் மற்றவைகளை சொன்னார்? ஏன் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னார்? யாரும் சாப்பிடக்கூடாது என்பதற்காக சொன்னாரா? நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - அதுதான் மிக முக்கியம்.

நம்முடைய கடமை என்ன? தமிழர்களே, திராவிடர்களே நீங்கள் சிந்தியுங்கள்!

எனவேதான், நாகசாமிகள் பண்பாட்டுப் படையெடுப்பை மீண்டும் நிகழ்த்தக்கூடிய போர் வீரர்களாகக் களத்தில் வரும்பொழுது, நம்முடைய கடமை என்ன? தமிழர்களே, திராவிடர்களே நீங்கள் சிந்தியுங்கள்!

இப்பொழுது திட்டமிட்டு மீண்டும் நாட்டை பழைய கருப்பனாக, மனுதர்மத்திற்குக் குறளால் ஏற்பட்ட அந்த விழிப்புணர்ச்சி வந்தவுடன், குறளுக்கு மரியாதை வந்துவிட்டது - அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல், மறைத்துப் பார்த்தார்கள்; அது முடியவில்லை என்றவுடன், அடுத்தகட்டமாக, அந்தக் குறளை நாங்கள் பார்த்து எழுதியதுதான் என்கிறார்கள். குறளும், சாஸ்திரமும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள்.

குறளில் எங்கேயாவது கடவுள் என்கிற வார்த்தை இருக்கிறதா?

பெரியார் தான் கேட்டார், குறளில் எங்கேயாவது பிராமணன் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கே யாவது சூத்திரன் இருக்கிறானா? குறளில் எங்கேயாவது கடவுள் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கேயாவது ஜாதி, வர்ணம் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கேயாவது ஆத்மா என்கிற வார்த்தை இருக்கிறதா?

கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் நண்பர்களே!

முப்பால் என்பது இருக்கிறதே, அதை என்ன சொல்கி றார்கள் என்றால், சந்நியாசமும் சேர்ந்ததுதான் என்று நாகசாமி எழுதியிருக்கிறார்.

நாற்பால் என்பது பின்னாளில் இணைக்கப்பட்ட ஒன்று. ஆனால், நம்முடைய பண்பாட்டில், சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம் தொடங்கி பல இடங்களில், பிற்காலத்தில் வந்ததைத் தவிர்த்துவிட்டு, முதலில் பார்த்தால், முப்பால் நாகரிகம் என்பதைத் தவிர,

நாற்பால் என்பது பின்னாளில் இணைக்கப்பட்ட ஒன்று.

வீடு என்பதே கிடையாது - மோட்சம் என்பதைப்பற்றியே கவலைப்படவில்லை. அதனால்தான், வாழ்க்கையைப்பற்றி மிகவும் சிறப்பாக சொன்னார்கள்.

திருக்குறளைப்பற்றி அறிஞர் மு.வ. அவர்கள்

அறிஞர் மு.வ. அவர்கள் ஒருமுறை திருவள்ளுவருடைய திருக்குறளைப்பற்றி சொல்லும்பொழுது,

அறம் - தனி மனித வாழ்க்கை

பொருள் - சமூக வாழ்க்கை

இந்த இரண்டையும் சேர்ந்து நடத்துவது எப்படி என்ப தைத் தெரிந்துகொண்டால், அதுதான் இல்லற வாழ்க்கை யாகும் என்று எளிமையாக வாழ்க்கையைப்பற்றி  சொன்னார்.

 

திசைதிருப்பும் வேலைகளை செய்கிறார்கள்!

எனவேதான், வள்ளுவருடையது வாழும் கலை. தமிழர்களுடைய, திராவிட இனத்தினுடைய பெருமை. எனவே, இந்தத் திராவிட இனத்தினுடைய பெருமையைக்  குலைக்கத் திட்டமிட்டு, ஆரியப் பண்பாட்டை மீண்டும் புதுப்பித்து நம்மீது சுமத்த, பண்டிகைகளை எப்படி புதிது புதிதாக உண்டாக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, புதிது புதிதாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோலத்தான், நம்முடைய நூல்களையே கறையான்கள் அரிப்பதுபோல, திசை திருப்புவதைப்போல செய்து கொண்டிருக்கிறார்கள்.

முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; கருவிலேயே அதை சிதைக்கவேண்டும்!

தமிழர்களே, திராவிடர்களே எச்சரிக்கையாக இருங்கள்! இருங்கள்! என்று சொல்லி, இதை எல்லா மக்களுக்கும் விளக்குங்கள்! அவர்கள் அச்சப்படவேண்டும்; இந்த முயற் சியை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; கருவிலேயே அதை சிதைக்கவேண்டும் என்று கேட்டு, என்னுரையை முடிக்கின்றேன். நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்,



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரா.கண்ணிமை

வடநூலில் கூறப்படும் மூடக்கொள்கை களை மூலமாகக் கொண்டே திருக்குறளை வள்ளுவர் எழுதினார் என்பதை எடுத்துக்காட்ட பரிமேலழகர் அரும்பாடுபட்டுள்ளார். இதை வலியுறுத்தவே நாகசாமி என்பார் முற்பட்டுள்ளார்.

- ஆசிரியர்

திருக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் எந்த முறையில் உரை எழுத எண்ணினார் என்பதை முன்னதாகவே தம் ஆரிய மூட்டையை அவிழ்த்துக் கொட்டிக் காட்டி விட்டார். நூலாசிரியர்கள் நூற்குப் பாயிரம் செய்து முன்னால் அமைத்தல் போலவே தாமும் உரைப்பாயிரம் ஒன்றெழுதி முன்னால் புதுமையாகப் புகுத்தியுள்ளார். அதில் தமிழ் மரபுக்கும், திருவள்ளுவர் உள்ளத்துக்கும் பொருந்தாத மாறுபட்ட ஆரியக் கொள்கைகளை வரிசையாக அடுக்கியிருக்கின்றார். இவைகளைத்தான் குறள் ஆசிரியர் நூலினுள் எடுத்துக் கூறுகின்றார் என்று உண்மையறிவும் - ஆராயும் திறமை யில்லாதவர்களெல்லாம் நம்பும் வகையில் தன் எழுத் தாற்றலை பயன்படுத்தியிருக்கின்றார்.

"முன்மொழிந்து கோடல்" - என்னும் உத்திக்கிணங்க உரைப்பாயிரத்தில் முன்னால் மொழிந்த கொள்கை களுக்கு ஆங்காங்குத் தன் உரையில் இடம் ஏற்படுத்திக் கொண்டு அவற்றைப் புகுத்துகின்றார். தான் வலிந்து கொள்ளும் உரையும், மாறாகத் திணிக்கும் கொள்கையும் வழுவாகத் தோன்றாதிருக்கப் பலவிடங்களில் மூலத் திலேயே கைவைத்திருக்கிறார். இங்ஙனம் தன் கொள் கைகளைத் திருக்குறளின் உள்ளே திணிக்கும் கள்ள வழிகளைக் கண்டாராயினும் வள்ளுவர் உள்ளத்தை மறைக்கும் வழிகாண இவரால் இயலவில்லை. இவர் வலிந்து கூறும் உரைக்கும், நுழைக்கும் கொள்கை களுக்கும், திருத்திய மூலத்திற்கும் மாறாக ஆசிரியர் பல விடங்களில் கூறியிருக்கிறார். இவற்றை அகச்சான்று களைக் கொண்டே ஆராய்ந்து உண்மையை உணரலாம். இனி உரைப்பாயிரத்தை ஆராய்வோம்.

உரைப்பாயிரத்தில் முதன் முதலில் "இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்தற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரானெடுக்கப்பட்ட பொருள்கள் நான்கு; அவைகள் அறம், பொருள், இன்பம், வீடென்பன" - என்று தொடங்குகின்றார். இந்த முதல் தொடரின் கருத்தே தமிழ் மரபுக்கு முரணானது. இந்திரன் முதலிய இறையவர்களின் பதங்களும் (உலகங்களும்), இந்த உலகங்களுக்கு மேலே உள்ள வீட்டுலகமும் (மோட்ச உலகமும்) என்பது இத்தொடரின் பொருளாம். இந்திரன் என்பவன் ஆரியர்களால் கடவுளாகக் கருதப்படும் ஒருவன். தங்கள் வேதங்களில் அவனைப் பலவாறு போற்றுகின்றார்கள். யாகங்களில் தாம் உயிர்பலியிட்டுத்தரும் ஊனையும், கிண்ணங்களில் வார்த்து வைக்கும் சோமபானத்தையும் (மதுவையும்) ஏற்றுக் கொள்ளும்படியும், போரில் தங்களுக்கு உதவிபுரியும் படியும் தங்கள் எதிரிகளான திராவிடர்களை அழிக்கும் படியும் வேண்டுகிறார்கள். அன்றியும் பழந்தமிழ்க் குடிமக்கள் (திராவிடர்) இந்திரனைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவர்கள் என்று கூறுகின்றார்கள். இக் காரணத்தால் தமிழர்களுக்கு நீந்திரர்கள் (இந்திரனைக் கடவுளாகக் கொள்ளாதவர்கள்) என்று பெயர் கொடுத்தும் அழைக்கின்றார்கள். ஆரியர் பரம்பரையாக வணங்கி வந்த இந்திரனை ஆரிய வழக்கப்படி முதலில் வைத்து மொழிந்ததுமின்றி, இந்திரன் முதலிய இறையவர் என இந்திரனுக்கு இறைமைத் தன்மையையும் ஏற்றுகின்றார்.

"இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவில்லார் கூறுகின்ற புகழ் பொருள் சோரா" - என்று அய்ந்தாம் குறளுக்கு அடியில் உரை கூறிய இவர், இங்ஙனம் கூறுவது அறியாமையா, உணராமையா, தம் இனக் கடவுளை உயர்த்த வேண்டுமென்ற விருப்பத் தால் உண்டான மறதியா? அறியோம். இந்திரனை இறை வனாகவும் அவனுக்குரியதாக ஆரியர் களால் கூறப்படும் சொர்க்க உலகத்தை (சொர்க்கலோகம்) அடையக்கூடிய பதமாகவும் கொள்ளும் வழக்கம் பழந்தமிழ் மக்களிடம் இல்லை. இதைப் போல் மற்ற பிர்மலோகம், விட்னு லோகம்" (வைகுண்டம்) முதலிய உலகங்களையும், இவைகளுக்கு மேல் எங் கேயோ வீட்டுலகம் (மோட்ச உலகம்) உள்ளதென்ப தையும் தமிழ்மக்கள் நம்புவ தில்லை - கொள்ளுவது மில்லை. வீடு என்பது இவ் வுலகிலேயே அறியாமையால் நேரும் துன்பங்களை அகற்றி அறிவு விளக்கம் பெறு வதே தமிழர்களுடைய தனிப்பெருங்கொள்கையாகும்.

ஆதலால் இந்திரனையோ - இந்திரன் முதலிய இறைவர் எனக்கூறப்படும் மற்ற கடவுள்களையோ அவர்கள் உலகங்களையோ - (மோட்சத்தை - மோட்ச உலகத்தை) தமிழர்கள் ஒருக்காலும் ஒப்புக்கொள்ளுவ தில்லை. இதனால் இந்திரன் என்ற சொல்லும், வீடு என்ற சொல்-மோட்சம் என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெறுவதற்குக் காரணமில்லை. பின்னால் இந்திரன் என்ற சொல்லை எடுத்தாளவும், அத்தகைய கடவுளாகிய இந்திரனையும் ஆரிய முனியாகிய கவுதமன் சபித்தான் என்ற ஆரியரின் பெருமை கூறவும், அகலிகையைப் பற்றிய புராணக் கதையையும் ஆசிரியர் ஏற்றுக் கொண்டதாகக் காட்டவும் முன்மொழிந்து வைத்தார்.

"நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு" - என்ற குறளில் வீடு என்ற சொல் விடுபடுதல் என்று பொருளில் வருவதை அறியவும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றை வடநூலார் முறையே தருமம்,  அருத்தம்,  காமம், மோட்சம் எனக் கூறுகின்றார். வடநூலார் கூறிய நான்கையும் கூறத்தொடங்கி, அவற்றுள் வீடென்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் அறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் ஏனைய மூன்றுமே நூலில் கூறுவதாக எழுதுகின்றார்.

வடநூலார் நான்கெனக் கொண்டதையே பின்பற்றி வள்ளுவர் கொள்ளவில்லை. வடநூலில் கூறும் தருமம் வேறு; வடவர் காம சாத்திரம்வேறு; தமிழர் காதலின்பம் வேறு; அறம், பொருள், இன்பம் மூன்றையும் முறைப்படி அறிந்து வழுவாதொழுகி அறிவு விளக்கம் அடைந்து இயங்கும் மாந்த நேய வாழ்க்கையே வீடன்றி வேறில்லை. மேலும் "அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் - அ ஃது ஒழுக்கம், வழக்கு, தண்டமென மூவகைப்படும்" - என்று கூறி இவற்றை வடநூலார் முறையே ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தமென்பர் என்று குறிப்பும் எழுதுகிறார். "அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய (நான்கு) வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரிய முதலிய நிலை (ஆசிரமம்)களினின்று அவ்வவற்றிற் கோரிய அறங்களின் வழுவாதொழுகுதல்" - என்று கூறுகின்றார். இவர் குறிப்பிடும் வருணம் வடநூலில் கூறப்படும் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு சாதிப்பிரிவுகளாகும். பிர்மச்சர்யம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்யாசம் என்ற நான்கு பிரிவுகளும், ஆச்சிரமப் பிரிவுகளும் இடம் பெறாத தமிழர் கொள்கைக்குரிய தமிழ் நூலில் சாதிப்பிரிவையும், ஆச்சிரமப் பிரிவையும் சந்து பார்த்துத் திணிக்கவே முந்தி இவற்றை மொழிந்து வைத்தார்.

இவற்றின் இயல்புகளை இனி ஆராய்வோம். மனு நூலில் விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல்தான் அறமென்கிறார். ஆதலால் மனுநூலில் விதித்தவை எவை, விலக்கியவை எவை என்பவற்றை அறிய வேண்டும். அதற்கு மனுநூல் படிக்க வேண்டும். எனவே திருக்குறளைப் படிப்பதற்கு முன் மனுநூலைப் படித்தறிந் தால்தான் குறளில் கூறப்படும் அறம் புலப்படும்.

"பிர்மா இந்த சாத்திரத்தை எனக்கு (மனுவுக்கு) ஓது வித்தார். நான் மரிசி, பிருகு இவர்களுக்கு ஓதுவித்தேன்"

 

- மனுஸ்மிருதி-அத்-1: சுலோகம்: 58

- பிராமணர் இந்த மனுஸ்மிருதியைப் படிக்கலாம். மற்றவருணத்தார்க்கு ஓதுவிக்கக் கூடாது.

- மனு.அத் : 1, சு: 103

- வேதம், சுருதி, மனுசாத்திரம் -ஸ்மிருதி இவை களைத் தர்க்க புத்தியால் மறுப்பவன் நாத்திகன் - அத்: 2, சு: 11

- பிர்மாவின் உயர்ந்த இடமாகிய முகத்தில் பிறந்த பிராமணன் முதல் வருணத்தான் ஆகையால் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தார்களுடைய பொருள்களையும், தானம் வாங்கக் கூடிய பிரபுவாயிருக்கின்றான். ஆதலால் அவன் பிறரிடம் தானம் வாங்கினாலும் தன்பொருளையே உண்டவனாவான்.

- அத்: 1, சு: 100-101

குறிப்பு: பிச்சை ஏற்பவனைப் பிரபு என்று கூறுவதை இந்நூலில்தான் காணலாம்

- பலகாரம், பாயாசம், கிழங்குகள், சுவையுள்ள இறைச்சி, நல்ல நீர் இவையாவும் பிராமணர்களுக்குரியவை.

- அத்: 3, சு: 227

- வாசனைப் பொருள்கள், தருப்பை, பூ, பொன், பால், தயிர், அவல், அரிசி, மீன், மாமிசம் இவை வலுவில் வந்தால் பிராமணன் நீக்கக்கூடாது.

- அத்: 4, சு: 250

- சோறு, பால், சோமபானம் (மது) இறைச்சி இவைகள் யாகத்திற்குரிய அவிசுகள்.

- அத்: 3, சு: 257

- யாகம் செய்து மாமிசம் புசித்தல் தேவ காரியம். தனக்கெனக் கொன்று தின்னல் இராட்சத காரியம்.

- அத்: 5, சு: 31

- உயிர்க்கு ஆபத்து நேருங்கால் நாள்தோறும் பிராணிகளை ஏராளமாகக் கொன்று தின்றாலும் பிராமணன் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரையத்திற்கு வாங்கினாலும், தாமே கொன்று கொண் டாலும், பிறர் கொடுத்தாலும் அதைத் தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கும் பிராமணன் துரஷிக்கப்படமாட்டான்.

- அத்: 5, சு: 30-32

- பசுக்கள், மிருகங்கள், பறவைகள் இவைகளை யாகத்திலும் சிரார்த்த தினத்திலும் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன - ஆதலால் யாகம், சிரார்த்தம் இவைகளில் உயிர்க்கொலை செய்யலாம், அக்கொலை பாவமாகாது.

- அத்: 5, சு: 40-41

- யாகத்திற்காகவே பசுக்கள், மிருகங்கள், பறவைகள் பிர்மமனால் படைக்கப்பட்டுள்ளன. அந்த யாகத்தால் உலகமெலாம் நன்மையடைகிறது. ஆகையால் யாகத்தில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டா.

- அத்: 5, சு: 39

- இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலையென்று நினைக்கலாகாது; வேதத்தினாலேயே தருமம் விளங்குவதால் வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும்.

- அத்: 5, சு: 44

- எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவைகளால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒருமாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.

- அத்: 3, சு: 267

- முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்.

- அத்: 3, சு: 271

- சிரார்த்தத்தில் விதிப்படி அழைக்கப்பட்ட பிரா மணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்கா விட்டால் அவன்21 பிறப்பு பசுவாகப் பிறப்பான்.

- அத்: 5, சு: 35

- அக்கினி எப்படி மேலான தெய்வமாகின்றதோ அப்படியே பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். - அத்: 9, சு: 317



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்? (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடநூலில் கூறப்படும் மூடக்கொள்கை களை மூலமாகக் கொண்டே திருக்குறளை வள்ளுவர் எழுதினார் என்பதை எடுத்துக்காட்ட பரிமேலழகர் அரும்பாடுபட்டுள்ளார். இதை வலியுறுத்தவே நாகசாமி என்பார் முற்பட்டுள்ளார்.

- ஆசிரியர்

நேற்றையத் தொடர்ச்சி....

- பிணத்தை எரிக்கும் தீ, யாகத்திற்கும் பயன்படுதல் போல தீமையான காரியங்களைச் செய்யும் பிராமணர் களும் பூஜிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உயர்குலத்தார் அல்லவா?

- அத்: 9, சு: 318

- சூத்திரன் இம்மையினும் மறுமையினும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன், மனம் வாக்குக் காயங்களால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். பிராமணரில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், அவனுமில்லாத விடத்தில் வைசி யனுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

- அத்: 9, சு: 334-335

- பிராமணன் கூலி கொடுத்தோ - கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிர்ம னால் படைக்கப்பட்டிருக்கிறான்.

- அத்: 8, சு: 413

- மற்ற மூன்று வருணத்தார்க்கும் தொண்டு செய்யும்படி சூத்திரனுக்கு அரசன் உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில் உலகம் அழிந்துவிடுமாகையால் சூத்திரனைத் தண்டித்துப் பணிவிடை செய்விக்க வேண்டும்.

- அத்: 8, சு: 410

- சூத்திரன் தேடிய பொருள்களைப் பிராமணன் தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருள்களுக்கும் உரியவனாக மாட்டான்.

- அத்: 8, சு: 417

- பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனுடைய அங்கங்களை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருள்களைப் பிராமணன் தான் விரும்பியபடி கொள்ளையிடலாம்.

- அத்: 9, சு: 248

- பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய் தாலும் பிராமணனாக மாட்டான். அவனுக்குப் பிராமணத் தொழில் செய்ய அதிகாரமில்லை. பிராமணன் சூத்திர னுடைய தொழிலைச் செய்தாலும் அவன் உயர்குலத்த வனேயாவான். இப்படியே பிர்மா நிச்சயித்துள்ளார்.

- அத்: 10, சு: 75

- சூத்திரன் பொருளாசையால் உயர்குலத்தோர்க்குரிய தொழில்களைச் செய்தால் அவன் பொருள்களை எல் லாம் பறித்துக் கொண்டு அவனைத் துரத்திவிட வேண்டும்.

- அத்: 10, சு: 96

- பிராமணன், சத்திரியன், வைசியன் இவர்கள் தம் வருணத்திலும், தம் கீழ் உள்ள மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் மணம் செய்து கொள்ளலாம்.

- அத்: 3, சு: 13

- சூத்திரப் பெண்ணோடு சமமாய்ப் படுக்கும் பிரா மணன் நரகத்தையடைவான், அவளிடம் பிள்ளை உண்டு பண்ணுகிறவன் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான்.

- அத்: 3, சு: 17

பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பிராமணன் சொத்தில் உரிமையில்லை. அப்பிள்ளை சிரார்த்தம் செய்யலாகாது. அவன் உயிரோடிருப்பினும் பிணத்துக்குச் சமமானவன்

- அத்: 9, சு: 155-178

- பிராமண குலத்திற் பிறந்தவன் கர்மானுட்டான மில்லாதவனாயினும், ஒழுக்கங்கெட்டவனாயினும் அரசனைப்போலவே தீர்மானம் செய்யலாம். (ஆட்சி செய்யலாம், பிறரைத் தண்டிக்கலாம்) சூத்திரன் ஒரு பொழுதும் செய்யலாகாது.

- அத்: 8, சு: 20

- பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய் சொல்லலாம் குற்றமில்லை. பிராமணரல்லாதவரைக் கொன்றாலும் பரவாயில்லை.

- அத்: 8, சு: 112-143

- வைசியனும், சூத்திரனும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வைசியனுக்கு 250 பணங்களும், சூத்தி ரனுக்கு 500 பணங்களும் பொருள் தண்டனை விதிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 277

- பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களை சொல்லித்திட்டும் சூத்திரன் வாயில் காய்ச் சிய இரும்புக்கம்பியை எரிய எரியச் சொருக வேண்டும்.

- அத்: 8, சு: 270-271

- சூத்திரன் மேல் ஜாதியாரை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.

- அத்: 8, சு: 280

- சூத்திரன் (பிராமணரல்லாதவன்) மற்ற மூன்று வரு ணத்தாருடைய மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகும் வரை தண்டிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 359

குறிப்பு: பிராமணன் மற்றவர்களின் மனைவிமார் களைக் கற்பழித்தால் தண்டனை இல்லை போலும்

- தாழ்ந்த சாதிப்பெண் உயர்சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டிக்கக் கூடாது, உயர்ந்த குலப்பெண் ஒரு தாழ்ந்த சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டித்து வீட்டிலேயே அடக்க வேண்டும்

- அத்: 8, சு: 365

- உயர்குலப்பெண்ணைப் புணர்ந்த இழிகுலத் தோனை இறக்கும் வரையில் அடிக்க வேண்டும். கட்டுக் கடங்காமல் இட்டப்படி திரியும் பிராமணப் பெண்களை சூத்திரன் புணர்ந்தால் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவர் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளை யெல்லாம் கொள்ளையிட வேண்டும்.

- அத்: 8, சு: 374

- பிராமணனுடன் சூத்திரன் சமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட்டாவது, பிட்டத்தை அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்திட வேண்டும்.

- அத்: 8, சு: 283

- பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் தூக்கில் இடக்கூடாது. அவன் தலையை மொட்டை அடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத்  தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வருணத்தார்க்குக் கொலையே தண்டனை.

- அத்: 8, சு: 379

- கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாம லும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றஞ்செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது.

- அத்: 8, சு: 80, 381

- பிராமாணம் கேட்கும்போது, பிராமணனைச் சத்தியமாகச் சொல் என்று கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும் அல்லது அவனைத் தண்ணீரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளை இவர்கள் தலைகளில் ஓங்கி அடித்தும், பிரமாணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும். மழுவெடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணீரில் அழுத்திய சூத்திரன் சாகாமலும், அடித்ததால் மனைவி மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.

- அத்: 8, சு: 113-115

- சூத்திரன் இம்மையில் உயிர்வாழ்க்கைக்கும், மறுமையில் மோட்சமடையவும் பிராமணனையே தொழ வேண்டும். அதுவே அவனுக்குப் பாக்கியம்.

- அத்: 10, சு: 122

- சூத்திரன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும், தனக்கெனத் தனியாக பொருள் சேர்த்து வைக்கலாகாது. சூத்திரனிடம் பொருள் இருந்தால் பிராமணனுக்குத் துன்பம் வரும்.

- அத்: 10, சு: 129

குறிப்பு: பொருள் சேர்த்துப் பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

- பிராமணன் உண்டு மிகுந்த உணவும், கட்டிக்கிழிந்த உடையும், சுவையும் ஔதமுமற்ற தானியங்களையும் பிராமணன் பார்த்து சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.

- அத்: 10, சு: 125

- பிராமணன் வைசியனிடமுள்ள பொருளைக் கேட்டுக் கொள்ளாவிடில் வலிமையாலாவது களவினா லாவது யாகத்திற்கு வேண்டிய பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். வைசியனிடமில்லாவிடில் சூத்திரன் வீட்டிலிருந்து ஏராளமாக யோசனையின்றிக் கேளாமல் வலிமையினாற் கொள்ளையிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

- அத்: 11, சு: 12,13

- யாகம் செய்கிறவன் பொருள் தேவர்கள் பொருள் என்றும், யாகம் செய்யாதவர்களின் பொருள்கள் அசுரர்களின் பொருள்களென்றும் வேதம் ஓதுகின்றது. ஆதலால் அசுரர் பொருள்களைத் தேவர்களுடைய பொருள்களாக்குதல் தருமமேயாகும்.

- அத்: 11, சு: 20

- தரும சிந்தனையுள்ள அரசன் இவ்விதம் கொள் ளையிட்டு யாகம் செய்கின்ற பிராமணர்களைத் தண்டிக் கக் கூடாது. அரசனின் அறியாமையால் பிராமணன் பசித்துன்பத்தை அடைகிறான்,

- அத்: 11, சு: 21

குறிப்பு: இதனால் பிராமணன் எந்த விதத்திலும் பிழைக்கும்படி அரசன் வழிதேடி வைக்க வேண்டும். அவர்கள் சொல்லுவனவெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

- பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம்; சத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம். வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம். சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்.

- அத்: 11, சு: 235

- இதில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவைகளைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான். மேற்சொன்ன வேதஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப் பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்.

- அத்: 12, சு: 71,72

குறிப்பு: ஆதலால் இதில் சொன்னபடியே அரசன் பிராமணர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்,. சூத்திரன் பிராமணர்களுக்குத் தொண்டு செய்து நடக்க வேண்டும் என்பது தான் மனுநீதி.

மனுநீதியின் அறநெறியைப் பார்த்தீர்களா? பார்ப்பான் எதையும் தின்னலாம். எந்த குற்றங்களையும் செய்யலாம். யார்வீட்டுப் பெண்களையும் கற்பழிக்கலாம். யார் பொருளையும் கொள்ளையிடலாம். கொலையும் செய்யலாம். அவனுக்குக் குற்றத் தண்டனை கிடையாது. நாவிதக் கூலியில்லாமல் மொட்டையடித்துப் பொருள் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்புவதே தண்டனை. அங்கும் குற்றம் செய்தால் அப்படியே; எப்படியுள்ளது மனு (அ) நீதி?  ஜாதிக்கொரு நீதி! மன்னன் மனுநீதிப்படியே மற்றவர்களை தண்டித்து அவர்களை ஆதரித்து அரசாள வேண்டும். இல்லையேல் அரசனையும் தொலைத்துக் கட்ட மனுவில் இடமுள்ளது.

இத்தகைய அறத்தை, அரசியலை, உயிர்க் கொலையை, ஊன் உண்ணலை, கரவை, கற்பழித்தலை, கொலைகளை, கொடுமைகளை, மடமைகளைத்தான் வள்ளுவர் சொல்லுகிறாராம். திருக்குறளில் அறமாவது மனுநூலில் விதித்த செய்தலும் விலக்கிய தவிர்த்தலும் தான் - என்று பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதினார். இதைத்தான் நாகசாமி போன்றவர்களும், புலவர்களும் போற்றுகின்றனர்.

தமிழ் மரபும், பண்பும் அறியாத பரிமேலழகர் - தமிழர் கொள்கைகளுக்கு மாறுபட்ட வேத விதிகளையும், மனுதர்ம சாத்திர முறைகளையும் நம்பும் ஒருவர் - அவற்றையே வாழ்க்கையின் கொள்கைகளாகக் கொண்ட ஒருவர் எழுதிய உரை எவ்வாறு பொருந்தும்? அதை நம்பும் உணர்வற்றவர்களாகிய நாகசாமிகள் என்ன செய்யப் போகின்றார்கள்?

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

page4_03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Courtesy: Ananthakrishnan Pakshirajan

பெரியாரின் நயத்தக்க நாகரீகத்திற்கு ஒரு சான்று:

"இந்தக் கிருபானந்தவாரியார் எத்தனை காலிப்பயல். எத்தனை பாப்பாத்தியை கெடுத்திருக்கிறான். எத்தனை பெண்களைக் கெடுத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். பேசும் போதே பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பான். இன்று அவன்தான் பெரிய மனிதன். காந்தி வழி நடப்போம், வெங்காய வழி நடப்போம் என்கிறானே! என்ன காந்தி வழி? அவரால் ஒரு ஊசி முனை அளவு கூட நம் மக்களுக்கு நன்மையில்லையே"
- விடுதலை 08.04. 1969

இவரது பக்தகோடிகள் இன்று நாகரீகத்திற்கு உதாரணமே பெரியார்தான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Courtesy: Ananthakrishnan Pakshirajan

பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் சொல்வதைக் கேளுங்கள்!

"வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது."
விடுதலையில் பெரியார் எழுதிய கட்டுரை 21. 06. 1956
பெரியாரைத் தூக்கிப் பிடிப்பவர்களை முழு மூடர்கள் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஹிட்லரின் தொண்டர்களும் யூதப் பெண்கள் ஜெர்மானிய ஆண்களுக்காக வலை வீசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது நாசி இனவெறி இல்லாமல் வேறு என்ன?

இவரை விட சாக்கடைத்தனமாக பேச, எழுத இவரது அடியார்களால் மட்டுமே முடியும்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இது தான் மனு(அ)தர்மம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.03.1935  - குடிஅரசிலிருந்து....

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதார மாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டது மாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக் கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப் படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவ னாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத் திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட் கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவ னாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக் கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக் களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்கா விட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்தி ரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது - அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய் தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவ தையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமண னையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறுவதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Image may contain: 1 person
Erode Nagaraj

உடன்பிறப்பே,

தமிழகம் தரணியில் தாழாது காத்து தலைநிமிரச் செய்திட்ட இனமானச் சிங்கம் தந்தை பெரியார் பெறாத விருதைப் பெற்றதாய்ப் பொய்யுரை கூறிவிட்டதாய் இன்றைய தினம் பார்ப்பனர்களும் அவர்களை ஆதரிக்கும் சற்றொப்ப சிவப்பையொத்த ஒரு வண்ணத்தின் சில ஆர்வலர்களும் ஆர்பரிக்கின்றனரே, அச்செய்தி உன் செவிகளில் உருக்கிய இரும்பாய் உட்புகுந்த அதே போலத்தான் என் செவிகளிலும் வாராது போய்விட்ட பானிப்புயலின் பாதையில் தப்பிய பாதியின் மீதியாய் என் பாதங்களில் பாளமாய் விழுந்தது.

யுனெஸ்கோ என்ற நாலெழுத்து மன்றத்தின் மூன்றாமெழுத்தை முதலெழுத்தாகக் கொண்டு உன் இளந்தலைவன், என் மனத்திற்கினிய மைந்தனும் மங்கிடா கழகத்தின் மாறாத தலைவனுமாகிய தம்பி ஸ்டாலினுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தவனே நான்தான். கலகங்கள் பலவும் கடந்து கழக ஆட்சியும் மலர்ந்து, இனி உன் கனவில் மட்டுமே உன்னுடன் உரையாடுவேன் தம்பி எனக்கூறி அண்ணாவும் அன்றொரு நாள் மறைந்தே போய்விட்ட வேளையில், தாழ்ந்த தமிழகம் வீழ்ந்துவிடக் கூடாதேயென்று தன்மானத் தமிழனின் ஒரே அடையாளமாய் ஒரேயொரு நம்பிக்கையாய் உன் இனமானத் தலைவன் இக்கருணாநிதியைத் தவிர வேறொருவர் எவருமின்றித் தனியனாய் நான் தவித்திட்ட நேரத்தில்...

(ஐயா ரொம்ப நேரமா வாக்கியம் கமாவுலயே ஓடிக்கிட்டு இருக்குங்க

குறுக்கே பேசிக் குழப்பாமலிருப்பாய் கழகத் தமிழறியாக் கடைந்தெடுத்த கடைமடையனே கவுன்சிலர் ஆவதாய் நீ கனவு காண்பதும் அரிது தள்ளிப் போ... கூறுகிறேன் கேள்...)

.... கழகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட முடியும் என்று குள்ள நரிகளான சில குல்லுக பட்டர்கள் கண்டு மகிழ்ந்த பகற்கனவைப் பட்டாசுகளை வெடித்ததும் பதறியஞ்சிப் பறந்துவிடும் பகலிலும் பார்க்கவியலா பட்டமரத்துக் கூகைகளாக சிதறச் செய்து சிந்தனைக்கு வித்திட்ட சீரிய முறையில் உன் தலைவனை ஆதரித்து உன்னை நேராக்கிய வைக்கம் வீரர் தந்தை பெரியார், இத்தமிழகம் கண்ட இந்துக்கடவுள் மறுப்பு நெறியாருக்கு என்ன கைம்மாறு செய்வது என அயராது ஆற்றவேண்டிய அன்றாட அலுவல்களுக்கிடையிலும் திண்டாடாமல் திண்ணங்கொண்டு தீயாய் யோசித்தேன். நோபற்கழகம் ஒன்றை நிறுவியே விடலாமா, ஆஸ்கார் பேரவையொன்றை ஆரம்பித்து மகிழலாமா, கிராமிய வாரியமா, புலிட்சரின் புதுச்சங்கமா என்றெல்லாம் சிந்தித்திருந்த சிறப்பானதொரு பொழுதில் என் சிந்தனையில் உதித்திட்ட சிறு தழலின் பெருவொளிதான் யுனெஸ்கோ மன்றம். யு என்றால் நீ; கோ என்றால் அரசன். ஆகையால், நீயன்றோ அரசன் என்று ஒலிப்பதிலிருந்தே தமிழுக்கும் உலகமே போற்றிடும் அந்த அமைப்புக்குமான தொடர்பை நீ உணர்ந்திருப்பாய்.

வடமேற்கு ஆஸ்த்ரியாவின் வால்ட்டேர், கிழவடக்கு ஆப்பிரிக்காவின் அரிஸ்டாட்டில், மத்திய அமெரிக்காவின் மானமிகு மாக்கியவெல்லி, தென் மேற்கு உருஷ்யாவின் இலாவோத்சூ, பிற்காலப் பிரான்சு நாட்டில் பிறவாத பிளாட்டோ மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் சாக்கிரடீசு என்றெல்லாம் அழைக்கப்படும் சுயமரியாதைத் திலகத்துக்கே பொட்டு வைத்துப் போற்றிடும் நிகழ்வாய் என் கைகளால் நான் அளித்து மகிழ்ந்ததே அவ்விருது. எனவே, ஆசிரியர் வீரமணி அறிவால் விளக்கியதை அடுத்த வினாவேதும் அகத்தில் தோன்றுமுன் அரைநொடியில் அதனை ஏற்று முகநூல் பிரச்சாரங்களில் மூளையை அடகு வைக்காதிரு; முன்னரே உரைத்தது போல் முதல்வராக்கிடு உன் முதலாளி ஸ்டாலினை. கழக ஆட்சி மலர்ந்துவிட்டால் ஸ்டாம்ப்புகளென்ன விருதுகளென்ன அத்தனையும் நம் அவையைத் தேடியே வந்துவிடும்! இன்பநிதியின் பேரனுக்கும் இடையறாது பாயும்!!

#Elections2019 #தேர்தல்2019
#UNESCO #NOBEL #OSCAR #GRAMMY #PULITZER #ஸ்டாம்பு #ஆஸ்திரியா#சங்கம் #கழகம் #வாரியம் #பெரியார்மண் 
#பேரவை #திக #திமுக #சுயமரியாதைக்குப்புடிச்சகேடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

58586736_10162517619485377_6512737675777 58701262_10162518963255377_1173449674460 58707955_10162517617990377_1666861294155 58713254_10162514202530377_8747931642657



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

58769291_10162512832650377_6840030766601 58772321_10162518013080377_1132568492109 58825822_10162512777640377_3635352957484

58842486_10162518190445377_2991088540026 58852875_10162517835650377_4046572299137 58870188_10162515589895377_4199144410962 

58882975_10162518289980377_2410455269944 58887016_10162518289750377_9411937387665 58895125_10162517387540377_6079217764411 

58909884_10162517393390377_8485645231205 58926183_10162517388300377_1002123222864 59039449_10162517616265377_5162001148726



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 59039675_10162511454645377_2594586337604 59064556_10162511457950377_6539273663064 59079114_10162517378385377_6713123420831

59189004_10162518302795377_1715416882984 59189051_10162513476050377_4901470038868 59219971_10162518050930377_5627841762736

59203864_10162511142885377_4730030818611 59285630_10162515596190377_4706723899407 59295317_10162517389015377_6553267336529



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

59295449_10162518973320377_8140689306420 59301525_10162515618135377_1107251412246 59332325_10162518954200377_3775713515214

59369501_10162517394890377_4895622140247 59380706_10162517619020377_8958207696666 59403850_10162518957535377_1717605503829

59406068_10162517998605377_3469763839166 59418639_10162517386510377_8651889177417 59419454_10162518956375377_5388515061037

59444379_10162518047195377_1117874803399 59451310_10162518960150377_5075709238500 59452843_10162518958875377_1067672017303 

59523212_10162518961640377_2749560006163 59530196_10162518082525377_5291517992071 59547452_10162517617110377_6230755639522 

59564989_10162517614860377_6474023338787 59579282_10162517614360377_3592210882874 59690812_10162517967540377_6844106634730 59691591_10162511787240377_2175173478250 59770403_10162513045445377_2774374123881



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

"தமிழாற்றுப்படை பெரியார்!'' அரங்கேற்றம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"வெள்ளைச் சூரியனால் விரட்ட முடியாத இருட்டை கருஞ்சூரியனாய் வந்து விரட்டியடித்தவர் பெரியார்!''

கவிப்பேரரசு வைரமுத்துவின் கட்டுரைக் காவியம்

 

v6.jpg

திருச்சி, மே 18   சூரியனாலேயே விரட்டப்பட முடியாத காரிருளை, கருஞ்சூரியனாக உதித்து அவ்விருட்டை விரட்டியவர் பெரியார் என்று கட்டுரைக் காவியம் படித்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

5.5.2019  அன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவால யத்தில் நடைபெற்ற கருஞ்சூரியன்'' நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: தீராப் புகழ்கொண்ட திருச்சி மாநகரத்தில், தமிழாற்றுப் படையின் நிறைவு கட்டுரைக்கு தலைமை ஏற்க வந்திருக்கும், தமிழர் தலைவர் எங்கள் வணக்கத்திற்குரிய பெருமகன் அய்யா வீரமணி அவர்களே,

ஒட்டப்பிடாரத்தில் இருந்தாலும், இதயமெல்லாம் இந்தக் கலைஞர் அரங்கத்திலேயே ஒட்டிக் கிடக்கும் என் ஆருயிர் அண்ணன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களே,

ஒரு அற்புதமான வாழ்த்துரையை, ஆய்வுரையாக வழங்கி அமர்ந்திருக்கும் நாத்திகப் பேரறிஞர் பேராசிரியர் அருணன் அவர்களே,

இன்று அரங்கேற்றப்படுகின்ற இந்தக் கட்டுரையை வரும் புதன்கிழமை தனது நடுக்கூடத்தில் வெளியிட காத்திருக்கும் நக்கீரன் பத்திரிகை நண்பர்களே,

வெற்றி தமிழர் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவர் என் அன்புத் தம்பி, செயல் தும்பி பி.வி.பாஸ்கர் அவர்களே,

முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திருச்சியின் முன்னணி யாளர்களே, கல்வியாளர்களே, படைப்பாளிகளே, அனைத்துக் கட்சி நண்பர்களே, என் கண்ணுக்குக் கண்ணான மாணவக் கண்மணிகளே, நான் வணங்கும் தாய்க்குலத்து தங்கங்களே, அரங்கம் வழிய வழிய நிறைந்திருக்கும் வெள்ளம் போன்ற தமிழர்களே, வீரம் கடந்தும், நேரம் கடந்தும் ஓடோடி வந்திருக்கும் தமிழ் உறவுகளே, விழாவின் வெற்றிக்குப் பாடுபட்ட என்னருந் தோழர்கள் சீதாராமன், மாருதி கண்ணன், பிரகாஷ், கவிஞர் நந்தலாலா, தமிழ்ச்சங்கம் மருதராஜன், கதிரேசன், பேராசிரியர் குபேந்திரன், பீர்முகமது, ஜெயகர்ணா, டாக்டர் லித்யாஸ் அகமது, ஜெரால்டு, ராஜ், வானதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் செயல் வீரர்களே,

இந்த விழாவை தமிழ் மணக்க மணக்க தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் என் அன்புத் தம்பி கவிஞர் தஞ்சை இனியன் அவர்களே,

பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி தோழர்களே, ஊடக உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி வற்றிவிட்டது என்று யார் சொன்னது? அது இன்று கலைஞர் அறிவாலயத்திற்குள் வெள்ளமாகப் புகுந்திருக்கிறது.

முக்கொம்பில் காணாத வெள்ளம், முத்தமிழுக்குக் கூடியிருக்கிறது இங்கே!

பெரிய திருவிழாவிற்குக் கூடாத கூட்டம், பெரியாருக்குக் கூடியிருக்கிறது இங்கே!

பெரியாரைப்பற்றி பேசினால் பேரப் பிள்ளைகளும் கூடுகிறார்கள்

பெரியாரைப்பற்றி பேசினால், கன்னத்து முடி நரைத்த வர்களும், காதோரம் நரைத்தவர்களும், கழுத்தில் சுருக்கம் விழுந்தவர்களும், கை நடுக்கம் கொண்டவர்களும், மெய்த் தப்பிப் போனவர்களும், நெடுஞ்சாண் கிடையாக விழுகிற வர்கள் மட்டும்தான் வருவார்கள் என்று இருந்த நிலையை மாற்றி, இளைய தலைமுறை வரும், 18 வயது வரும், 24 வயது வரும், பெரியாரின் பேரப் பிள்ளைகள் வருவார்கள் என்று இந்தக் கூட்டம் மெய்ப்பித்து இருக்கிறது. உங்களுக்கெல்லாம் வணக்கம். என் நோக்கம் இதுதான்!

பெரியாரைப்பற்றி, தமிழர் தலைவருக்குச் சொல்லவா நான் கூட்டம் போட்டேன்? பேராசிரியர் அருணனுக்கு சொல்லவா கூட்டம் போட்டேன்? செல்வேந்திரனுக்குச் சொல்லவா? சுகுமாறனுக்குச் சொல்லவா கூட்டம் போட்டேன்? இல்லை, பெரியாரின் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்வதற்காகத்தான் நான் கூட்டம் போட்டேன். புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

உங்களுக்கெல்லாம் பெரியாரைப்பற்றித் தெரிந்தால், உங்களுக்கு சிறகு தொழட்டும்; தன்னம்பிக்கை பிறக்கும். அறிவைத் தேடி வாழ்க்கை நகரும். உங்களுக்கு ஞானம் உங்கள் ரத்தத்தில் எழுதப்படும். பகுத்தறிவு உங்கள் மூளையில் பதியமாகும்.

யாரையும் சார்ந்திருக்கும் வாய்ப்பை அல்ல - நீங்கள் நீங்களே சார்ந்திருக்கும் வாய்ப்பு மட்டும் உங்களுக்கு வழங்கப்படும்.

பெரியாரைப்பற்றிப் பேச வைரமுத்துவுக்குள்ள பூரண உரிமை!

இந்த மேடையில் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். பேராசிரியர் அருணன் இங்கேபேசும் போது, வைரமுத்துவிற்குப் பூரண உரிமை இருக்கிறது பெரியாரைப்பற்றி பேச என்று சொன்னார். ஒருமுறையா சொன்னார்? இருமுறை சொன்னார்; இருமுறையா சொன்னார்? மும்முறை சொன்னார்.

கூறியது கூறலே என்று நான் கலங்கிப் போனேன். வைரமுத்துவிற்குப் பூரண உரிமை இருக்கிறது. தமிழர் தலைவர் வந்தார், அவரும் சொன்னார், வைரமுத்துவிற்குப் பெரியாரைப்பற்றி சொல்ல உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அது எந்தெந்த உரிமை அடிப்படையில் உரிமை இருக் கிறது என்று அந்தப் பெருமக்கள் சொன்னார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், தோழர்களே, தாய்மார்களே, என் அரு மைத் தமிழ்ச் சிங்கங்களே, மாணவக் கண்மணிகளே, எனக்கு ஓர் உரிமை இருக்கிறது. அது என்ன உரிமை தெரியுமா?

மற்றவர்கள் எல்லாம் பிறந்த பிறகு கருப்புச் சட்டை அணிந்தவர்கள். இரவல் சட்டையைத் தைத்துப் போட்டுக் கொண்டவர்கள். தாயின் கர்ப்பத்திலேயே கருப்புத் தோலோடு பிறந்தவன் வைரமுத்து.

அந்த உரிமையிலேதான் எனக்குப் பெரியாரைப்பற்றி பேச உரிமை உண்டு என்று இந்த சிவப்புத் தோல் கொண்டவர்களும் சொன்னார்கள் என்கிறபொழுது எனக்கு மகிழ்ச்சிதான்.

எவ்வளவு பேச்சு இன்று; அருணன் அவர்களின் பேச்சும், தமிழர் தலைவர் அவர்களின் பேச்சும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஒரு தேசியப் பல்கலைக் கழகம் ஆசிரியர் வீரமணி!

தமிழர் தலைவர் அய்யா பேசி முடித்துவிட்டு, நாற்காலியில் அமர வந்தபொழுது, அவர் உள்ளங் கையைப்பற்றி, அந்தச் சூட்டை என் விரல்களின் வழியே இருதயத்திற்குள் இறக்கிக் கொண்டு, அவரிடம் சொன்னேன். பெரியார் இருந்திருந்தால், என்னை எப்படி வாழ்த்தியிருப்பாரோ, அப்படி நீங்கள் என்னை வாழ்த்தினீர்கள் அய்யா'' என்றேன்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில், நடமாடும் நூலகம் இருக்கிறது என்றால், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

ஒரு தேசிய பல்கலைக் கழகம் இருக்கிறது என்றால், அது தமிழர் தலைவர் அவர்கள்தான்.

தமிழகத்தின் வரலாற்றை, தமிழ் இனத்தின் வர லாற்றை, உலக வரலாற்றை, பகுத்தறிவின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட அறிவியல் நம்முடைய கி.வீரமணி அய்யா அவர்கள்.

அந்தப் பெருமகனார் இங்கே வந்திருப்பதற்கு நான் பெருமிதப்படுகிறேன். நான் இவ்வளவு பெரிய பெருந்தலைப் பில் பேசுவதற்கு நான் ஒன்றை இழந்து நிற்கிறேன்.

தமிழ் என்னோடு இருக்கிறது

பகுத்தறிவு என்னோடு இருக்கிறது

தமிழர்கள் என்னோடு இருக்கிறார்கள்

தமிழர் தலைவர் என்னோடு இருக்கிறார்

அருணன் போன்ற அறிஞர்கள் இருக்கிறார்கள்

இவ்வளவு பெரிய கூட்டத் திருச்சபை என்னோடு இருக்கிறது.

ஒரே ஒரு தலை இல்லை.

இன்று கட்டுரை அரங்கேற்றத்தைக் கேட்பதற்கு, என் முத்தமிழ் ஆசான், மூதறிஞர் கலைஞர் இல்லை.

கலைஞர் இல்லாத ஒரு மன்றத்தை, தமிழர் தலைவர் அவர்களைத் தவிர யார் ஈடுகட்ட  முடியும்? அதனால் அவர் வந்திருக்கிறார், அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடம்பெல்லாம் மார்க்சியம்; இதயத்தில் பெரியார் - அவர்தான் பேராசிரியர் அருணன்

பேராசிரியர் அருணனை இந்த மன்றத்தின் மூலமாக, நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவரைப் போன்ற ஒரு கல்வியாளர், தமிழகத்தில் என் ஒரு கை விரலுக்குள் எண்ணிவிடலாம் என்பதை இந்த மன்றத்தில் பதிவு செய்கிறேன்.

வாழ்க்கையெல்லாம் கல்வி - கல்வியே வாழ்வு - வாழ்வே கல்வி - உடம்பெல்லாம் மார்க்சியம் - உணர்வெல்லாம் தமிழ் - இருதயத்தில் பெரியார் - ஒடுக்கப்பட்ட மக்களை, அடக்கப் பட்டவர்களும், நசுக்கப்பட்டவர்களும் என் பாடுபொருள் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு அறிவியல் அருணன் அவர்கள். அவருடைய நூல்களைப் படித்து நான் வியந்திருக்கிறேன். அந்த நூல்களைப் படித்தபொழுது, நான் என்ன சொல்லி பாராட்டினேன் என்பதை இந்த மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

காரல்மார்க்சைப் படித்துவிட்டு, ஏங்கல்ஸ் என்ன சொன் னானோ, அதையே அருணனுக்கு நான் பதிவு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். கல்லாதவர்களுக்கு இது மிகை; அவர் நூலை கற்றவர்களுக்கு அது சரி.

மார்க்சைப் படித்துவிட்டு, ஏங்கல்ஸ் சொன்னான், இவர் நூல்களையெல்லாம் படிக்கின்றபொழுது, இவர் காலமெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தார் என்று தோன்றுகிறது. அந்த நூல்களின் அடிக்குறிப்புகளையெல்லாம் பார்க்கின்றபொழுது, இவர் காலமெல்லாம் படித்துக் கொண்டிருந்தார்'' என்று தோன்றுகிறது.

இதைவிடப் பெரிய, ஒரு புகழ் ஒரு படைப்பாளிக்கு இருக்க முடியாது.

இந்தப் புகழுரையைத்தான் நான் அருணனுக்கு சமர்ப்பித்தேன். இரண்டு பெருமக்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள் என்றால், நான் பூரிப்படைகின்றேன்.

என் தமிழ் செழுமை பெறுகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பணியாற்றவேண்டும் என்று என் விழி துடிக்கிறது. உங்களுக்கெல்லாம் வணக்கம்.

சில செய்திகளைச் சொல்லி என் கட்டுரைக்குள் பயணப் படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த விருந்து ரொம்பப் பெரிது. நான் இலை போட்டுக் கொண்டே இருக்க விரும்பவில்லை. இலை போடுவதிலேயே நேரமாகி விட்டால்,  விருந்து எப்படி சமைப்பது? ஆகவே, ஒவ்வொரு தமிழாற்றுப் படையிலும் நான் சற்று நேரம் உரையாற்றுவேன். பிறகு கட்டுரைக்குள் பயணிப்பேன்.

அந்த உரை என்பது என்ன தெரியுமா?

அந்த உரை என்பது என் அரிசியைப் போடுவதற்கு  நான் சுட வைக்கின்ற உலை.

என் பொன்னை உருக்குவதற்கு நான் காட்டுகின்ற வெப்பம். ஆனால், ஏற்கெனவே உலை இது. பெரியாரைவிட கொதிக்கின்ற உலை உண்டா? இதை எதற்குச் சுட வைத்துக் கொண்டு! பெரியாரைவிட பொன் உண்டா? இதை ஏன் உருக்கிக்கொண்டு! சுத்தமான தங்கம். ஆனாலும்கூட, தமிழர் தலைவர் இங்கே ஒரு வினாவை வீசிவிட்டுப் போனாரே, அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு, என் உரைக்குள் புக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன இடம்?

தமிழாற்றுப் படையில் பெரியாருக்கு என்ன இடம் என்று சில பேர் கேட்கிறார்களாம். தமிழே அறியாதவர்கள் அப்படி கேட்பார்கள்.

நான் ஒன்று சொல்கிறேன் தோழர்களே, இந்தத் தமிழாற்றுப் படை என்ற வரிசையில் மட்டும், பெரியார் இல்லை என்றால், அது தலை இல்லாத கிரீடம் - உயிரற்ற உடல் - வெறும் அலங்காரம். சொல்லப்போனால், என்னைப் போன்றவர்கள் தமிழ் படிக்க வந்த முதல் அன்னை பெரியார்தான். இன்று இந்த சபை சேர்ந்திருக்கிறதே, தமிழர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே, இது பெரியார் கொடுத்த படை. இந்தக் கலைஞர் அறிவாலயம் என்கிற கட்டடம் பெரியார் கொடுத்த படை. இதற்கு வழங்குகிற பெயர் பெரியார் கொடுத்த  படை.

இன்றைக்குத் தமிழர்கள் உற்சாகமாக களப் பணி புரிகிறீர்களே, தமிழர் தலைவர் சொன்னாரே, வெளியே வராத எங்கள் தாய்க்குலத்துத் தங்கங்கள், 80 விழுக்காடு இந்த மன்றத்தை நிரப்பியிருக்கிறார்களே, இது பெரியார் கொடுத்த படை. மற்றவர்கள் எல்லாம், மற்ற படைப்பாளர்கள் எல்லாம் தமிழில் எழுதினார்கள்; பெரியார்தான் தமிழையே எழுதினார். மற்ற படைப்பாளிகள் எல்லாம் தமிழர்கள் படிக்க எழுதினார்கள்;

பெரியார்தான் தமிழர்களைப் படித்து எழுதினார்.

மற்றவர்கள் எல்லாம் யாரோ இட்டுக் கொடுத்த இரவல் எழுத்தில் எழுதினார்கள்.

பெரியார்தான், தான் எழுதுவதற்குத் தமிழுக்குச் சொந்த எழுத்தை உண்டாக்கிக் கொடுத்தார்.

இவ்வளவு பெரிய தமிழ்ப் பேரகனை விட்டுவிட்டு, நான் எப்படி என்னுடைய தமிழாற்றுப் படையை நிறைவு செய்ய முடியும்?

நவீன எழுத்தாளர்களே - ஒரு பெரியாரைப்போல இன்னொரு பெரியாரை எழுதவே முடியாது!

நவீன எழுத்தாளர்களே, விமர்சகர்களே, பெரியாரைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே நேசிக்கிறவர்களே, உங்களுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

எழுத்து எனில் எது? நாவலா? அலங்காரம் உள்ள கவிதையா? கற்பனையா? கட்டுரைப் பதிப்புரையா? ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இயற்சீரும், வெண்சீரும்வந்து, இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வந்து, செப்பலோசையோடு நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளோடு முடிகின்ற வெண்பாவா? இதுவா இலக்கியம்? இதுவும் இலக்கியம் என்று சொல்லலாம்.

ஆனால், ஒரு வெண்பாவைப் போல, இன்னொரு வெண்பா எழுதிவிட முடியும். ஒரு கட்டுரைப் பதிப்புரையைப் போல, இன்னொரு கட்டுரையை எழுதிவிட முடியும். ஒரு குறுந்தொகையைப் போல, இன்னொரு குறுந்தொகையை எழுதிவிட முடியும். ஒரு நளவெண்பாவைப்போல, இன் னொரு நளவெண்பாவை எழுதி விட முடியும். ஒரு தொல்காப்பியத்தைப்போல, இன்னொரு தொல்காப்பியத்தை எழுதிவிட முடியும். ஒரு கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்போல, ஒரு கவிபாட்டுப் பா எழுதிவிட முடியும். ஒரு பொன்னியின் செல்வன் போல ஒரு நந்தினார்க்கு நாயகி எழுதிவிட முடியும். ஒரு பொன்னர் சங்கரைப்போல, ஒரு தென்பாண்டி சிங்கத்தை எழுதிவிட முடியும். ஒரு பெரியாரைப்போல, இன்னொரு பெரியாரை எழுதவே முடியாது.

நகல் எடுக்கப்பட முடியாத தலைவர் பெரியார்!

பெரியார் மட்டும்தான் நகல் எடுக்க முடியாத அசல். அவரை இந்தத் தலைமுறைக்கு நான் அறிமுகம் செய்யாவிட்டால், நான் இந்த நூற்றாண்டில் இருந்த பேனா பிடித்த எழுத்தாளன் என்கிற தகுதியை இழக்கிறேன்.

என் காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை, என் காலத்தில் என் தமிழால், என் தமிழர்களின் கடைசித் தமிழனுக்கு என்ன கொண்டு போய் சேர்ப்பேன் என்பதும் என் வரலாறு. அதுதான் எனக்குப் பிறகு கணக்குப் பார்க்கப்படும் எண்கள். அந்த எண்களில் ஒன்றுதான் தமிழாற்றுப் படை தோழர்களே. இந்தத் தமிழாற்றுப் படைக்காக நான் விழிந்திருந்த இரவுகள், விழித்திருந்த பகல்கள், படித்த நூல்கள், இழந்த திரையுலகம், திருடப்பட்ட மானம், என்மீது எய்யப்பட்ட அம்புகள், என் வாழ்வைப் பழித்த பழிமுறைகள், என் தாயைப் பழித்த இழிமொழிகள், தனிமையில் இருக்கிறபொழுது, பேனாவை சற்றே நகர்த்தி வைத்துவிடலாமா என்று எண்ணச் செய்த வினைகள். இப்படி ஒரு நிலையை 50 ஆண்டுகளில் நான் எந்தப் படைப்புக்கும் கொடுத்ததில்லை. அதனாலேயே இது எல்லா படைப்புகளையும்விட சிறந்ததாக இருக்கிறது.

ஊர் உறங்கியிருக்கும்; உலகம் உறங்கியிருக்கும். இலைகளுக்கு மத்தியில் காற்று உறங்கியிருக்கும். பூவிழியில் பனித் துளி உறங்கியிருக்கும். நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு, நிலாகூட உறங்கியிருக்கும். நானும், என் தமிழும் மட்டும் விழித்திருப்போம்.

"எத்தனை எத்தனை முறை திருத்தியிருப்பேன்?''

என் இரண்டு விரல்களுக்கு மத்தியில் ஒரு பேனா, என்னை சற்று கீழே வைக்கமாட்டாயா என்று  கெஞ்சும். என் விரல்களே எனக்குத் துணை இருக்கும்பொழுது, அஃறிணையே நீ துணை இருக்கக்கூடாதா என்று நான் பேனாவை செல்லமாக வைவேன். இந்தக் குறிப்பு போதாது என்று, உ.வே.சா. நூலகம் செல்வேன், பெரியார் நூலகம் செல்வேன். கன்னிமாரா நூலகம் செல்வேன். என் வீட்டு நூலகம் என்பது எனக்குப் பத்தாது. என் வீட்டு நூலகம் என்பது நான் படிக்க மட்டும். இது உலகத் தமிழே படிக்கவேண்டுமே! உலகத் தமிழர்கள் படிக்கவேண்டுமே! பிறகுதான், ஒருமுறை எழுதுவேன், கிழிப்பேன், தூர எறிவேன்.

வைரமுத்து எங்கே உன் முத்திரை!

எங்கே உன் தமிழ்?

இதுவா உலகிற்கு நீ அரங்கேற்றக் கூடிய கட்டுரை - கிழித்தெறி!

ஒருமுறை, இருமுறை கிழித்தெறிவேன் - மீண்டும் அமர்வேன். முதல் வரி தொடங்குவதற்கு மூன்று நாள்கள் காத்திருப்பேன். இறுதி வரி என்ன என்று யோசிப்பேன். யோசித்து, முதலில் சில நேரங்களில் முதல் வரி வராது; இறுதி வரி வந்துவிடும். இறுதி வரியிலிருந்து முதல் வரிக்கு முடிச்சுப் போடுவேன். 2,200 சொற்களில் என் கட்டுரையை எழுதி முடிக்கவேண்டும் என்று என்னுடைய மூளை உத்தரவு போடும். இந்த மூளையின் உத்தரவைக் கேட்குமா, முத்தமிழ்? அது 3,500 சொற்களில் சென்று முடியும். பிறகு, நான் பெற்ற குழந்தையை நானே கொல்வதுபோல,  கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வதுபோல, என் வார்த்தைகளை நானே தேய்த்துத் தேய்த்து சுருக்குவேன். பிறகு 2,200 சொற்களாக ஆக்குவேன். பிறகு அய்ந்து முறை திருத்துவேன். திருத்தி முடித்துவிட்டு, குளிக்கப் போவேன், குளியல் அறையிலிருந்து என் தொலைப்பேசியில் என் உதவியாளரை அழைத்து, டைப் செய்யாதே, நிறுத்து, நான் வந்துவிடுகிறேன் என்பேன்.

ஈரத் துண்டை கட்டிக்கொண்டே, மேலே வரச்சொல்லி, அதைத் திருத்திக் கொடுப்பேன். ஒரு எழுத்துப் பிழை வந்துவிட்டால், என்னை நானே நொந்துகொள்வேன்.

சொற்றொடர் அமைவது என்பது அய்ந்து சொற்றொடர்கள் ஒரே நிலையில் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.

ஒரே ஓசை விழுந்து, உயரத்தில் ஒரு தொடர் முடிந்தால், அடுத்த நான்கு வாக்கிய தொடர் உயரத்தில் முடியாமல் பார்ப்பேன். இயல்பாக நான் கவிஞன் என்பதினால், கவிதைச் சொற்கள் வந்து ஆங்காங்கே மண்டியிடும். ஆங்காங்கே கூடாரம் இடும் - என்னை அறியாமல்! மல்லிகைப் பூ விற்ப வரின் வீட்டுக்காரி வீட்டில், மல்லிகைப் பூ வாசம் அடிக்காமல் என்ன செய்யும்?

அவள் மீன் விற்றுக்கொண்டு தெரு வழியே போனாலும், அவள் பூ வாசனை மறைக்குமா?

நான் உரைநடை எழுதப் போகின்றபொழுதும், கவிதை என்னை துரத்திக் கொண்டே வருகிறதே, நான் என்ன செய்வேன்?

அதை நான் செல்லமாகக் கிள்ளி வீட்டிற்குப் போ என்று அனுப்புவேன்.

வீட்டிற்குப் போன கவிதை, பாதி வழியில் திரும்பி வந்து, நான் போய்ட்டு வந்துட்டேன்'' என்று சொல்லும்.

சில நேரம் அந்தக் கவிதை சொல்லும், நீ நினைக்கிறாய், உன் கட்டுரைக்குள் கவிதை வந்தால், தமிழர்கள் கொஞ்சமாட்டார்கள் என்று நினைக்கிறாய். அதைக் கொஞ்சுவதற்காகவே சில பேர் கட்டுரை வாசிக்கிறார்கள் தெரியுமா?'' என்று கவிதை கட்டளைபோடும். அந்தக் கவிதையின் சொல்லையும் சில நேரம் கேட்பேன்.

இதை மாற்றியவன் நீ - ஆற்றிய வாக்கியம் என்று எழுதியிருக்கிறேன்.

அடப்பாவி, நான் உறங்கிக் கொண்டு இருந்தால் அல்லவா, கவிதை இப்படி உற்சவம் செய்யவேண்டும். நான் தவிர்க்கப் பார்த்தாலும் வந்து விழுகிறதே, இது எப்படி? விட்டுவிடு, இது இயல்பு!

அதாவது, இரட்டைக் குழந்தை பிறந்தால், ஒன்றைக் கொன்றா விடுகிறோம். அதையும் சேர்த்துத்தானே நம்முடைய குழந்தை.

கட்டுரையோடு கவிதை ஒட்டிக்கொண்டு வந்தால், ஒட்டட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

இப்படியெல்லாம் 24 ஆளுமையாக, எங்கள் ஞானப் புலவரை உங்கள் மத்தியில் கொண்டு வந்திருக்கிறேன்.

இந்தக் கவிதையை வெளியிடுவதற்கு என் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர எனக்கு எந்தக் குறையும் இல்லை என்று கருதுகிறேன்.

பொதுநலனுக்காக பாடுபடுபவன் தன்மானம் பார்க்க மாட்டான்

என்மீது விழுந்த பழிமொழிகளை நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்று இந்த சமுகம் என்னைக் கேட்கலாம். இது உன் இயல்புக்கு விரோதமாயிற்றே, நீ அப்படிப்பட்டவன் இல்லையே! சுடுகின்ற சுயமரியாதைக்காரனாயிற்றே, நீ எப்படி சகித்துக் கொண்டாய் என்று கேட்கலாம்,

இதற்கும் பெரியார்தான் துணை நின்றார்.

பொது நலனுக்காகப் பாடுபடுகிறவன், தன்மானம் பார்க்க மாட்டான்.

இதற்கும் பெரியார்தான்.

அதற்குமேல் ஒரு கவிதை வந்து விழுந்தது, அந்தக் கேள்விக்கு.

எப்படித்தான் சகிச்சிக்கிட்டே, இது உன்னுடைய இயல்பு இல்லையே! ரண களம் பண்ணுவியே நீ! ஏன் இதை சகித்துக் கொண்டாய், கண்டுக்காமல் எப்படி விட்டுவிட்டாய்.

என் உள்மனதில் உறங்கிக் கொண்டிருந்த கவிதை வந்தது - வண்டு துளைத்த மூங்கில் மரம்,

புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லையா!

நெருப்பில் போட்டவுடன்,

மாசுகள் எல்லாம் கழன்றோடி

24 காரட் மட்டும் எஞ்சவில்லையா!

இந்தப் பழி என்கிற நெருப்பு, பழி என்கிற வண்டு,

உன்னை புதைத்த பிறகும்,

சுட்ட பிறகும்,

நீ ராகமாகி விடு!

நீ ராகமாகி விடு!!

இதோ மனோ, திருவங்கிமலை சரவணன், புலேந்திரன் இதுபோன்றவர்கள் இருக்கின்றபொழுது, எனக்கு என்ன பிழை வந்துவிடும்?

வைரமுத்துவின் தாயைப் பழித்தால்...?

தமிழர்கள் நினைக்கமாட்டார்களா, வைரமுத்துவின் தாயைப் பழித்தால், அது தமிழ்த் தாயையே பழித்தமாதிரி என்று.

இதுவரைக்கும் நான் பேசவில்லை! தமிழாற்றுப் படை நிறையட்டும் என்று காத்திருந்தேன்.

நிறைவடைந்துவிட்டது. இந்தக் கூட்டத்தைப் பார்த்தால், தமிழர் தலைவர் அய்யா அவர்களே, திரும்பவும் இப்படிக் கிடைப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? கிடைக்கமாட்டீங்க நீங்க.

உங்களைப் பார்த்தால், என் உயிர் வழியே, துயரம் எல்லாம் தமிழாக வந்து கொட்டியதோ என்று சொல்லத் தோன்றுகிறது.

மற்ற கட்டுரைகளில் தோழர்களே, சில வாக்கியங்களை நீங்கள் இழந்தாலும், இழப்பில்லை. சில கட்டுரைகளில் சில வார்த்தைகளை இழந்தாலும் இழப்பில்லை. பெரியார் குறித்து நான் எழுதியிருக்கின்ற இந்தக் கட்டுரையில், ஓர் எழுத்தை இழந்தாலும், நீங்கள் வாழ்நாளை இழப்பீர்கள்.

என் வாழ்நாள் பெருமை!

தமிழே, உன் காலடியில் ஞானத்தலைவன், அறிவுக்கிழவன், பகுத்தறிவுத் தந்தை, மறைந்த பிறகும் சூரியனாய் உலவிக் கொண்டிருக்கின்றவன், அந்தப் பெரியார் கட்டுரையில், தீரர்கள் கோட்டமான திருச்சியில், காவிரிக் கரையில், அரங்கேற்றுவதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன் தமிழர்களே, உங்கள் வாழ்த்துகளையே வரமாகக் கேட்கிறேன்.

பெரியார்!

ஒளிச்சேர்க்கை முடிந்து உதிர்ந்துபோன இலையை மரம் நினைவு கூர்வதில்லை. இறந்த பறவை எதற்கும் காட்டுக்குள் இரங்கல் தீர்மானம் ஏதுமில்லை. யானையோ புலியோ சிங்கமோ இறந்தாலும் ஆண்டு நினைவுகள் அனுசரிக்கப்படுவ தில்லை. மனிதன் மட்டும்தான் இறந்த பிறகும்  நினைக்கப்படு கிறான். அதிலும் எல்லா மனிதர்களும் எல்லாக் காலங்களிலும் நினைக்கப்படுவதில்லை. ஈமத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே பலமனிதர்கள் உலர்ந்துபோகிறார்கள். சில மனிதர்கள் மரித்த நாளில் மட்டும்தான் நினைக்கப்படுகிறார்கள்; நிகழ்கால நிம்மதிக்காகவே மரித்த சில மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்.

எவனொருவனின் வாழ்வும் வாக்கும், செயலும் பொரு ளும் மனிதக் கூட்டத்தின் தற்காலத் தருணத்திற்கும் தேவைப் படுகின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனிதன் நினைக்கப்படு கிறான். கல்லறையில் அவன் உயிரோடிருக் கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார்; இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.

பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?

அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?

கருஞ்சூரியனாய் வந்த கலகக்காரர்!

வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?

உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை ஆடைசூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?

400 கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4 கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?

(தமிழாற்றுப்  படையில் பெரியாரா? என்று கேட்பாருக்கு இந்த 12 சொற்கள் கொண்ட ஒரு வாக்கியம்தான் பதில்)

எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?

(சரியா? இல்லையா? கவிஞர் வைரமுத்து அவர்கள் கேட்க, ஆமாம் என்று மக்கள் குரல் ஓங்கி ஒலித்தது)

192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் - மதம் - சாதி - விதி - மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழியாகிய அறிவாளி என்பதா?

இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை.

(எவ்வளவு பெரிய வீரனை, இரண்டு போர்வைக்குள் மூடி மாற்றிவிட்டார்கள்)

 

மனிதநேயம்தான் பெரியாரின் இலக்கு!

பெரியார் எனில் பிராமண எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு என்று கருதுகிறவர்கள் அவரைக் கண்ணைமூடிக் கண்டவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. யானை அசைவம் என்று அதன் தோற்றம்கண்டு முடிவு கட்டுகிறவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. மனிதநேசம்தான் பெரியாரின் இலக்கு; பகுத்தறிவுதான் அவர் பாதை; சுயமரியாதைதான் வாகனம்; சமத்துவம்தான் அவர் சக்கரத்தின் அச்சு.

(பேச்சாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும் மிக முக்கிய மான ஸ்டேட்மெண்ட்)

05.01.1953 அன்று பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதியை எழுத்து மாறாமல் பதிவு செய்கிறேன்:

பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகமும், நானும் சொல்லுவ தெல்லாம் விரும்புவதெல்லாம் நாங்களும் கொஞ்சம் - வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.''

பெரியாரின் இந்த வாக்குமூலத்தில் நாங்களும் கொஞ்சம்'' என்ற சொல்லாட்சி வலி மிக்கது; வாஞ்சை மிக்கது மற்றும் அவரது மனித நேசத்துக்கு மாறாத சாட்சி சொல்வது.

அரசியல் தலைவரல்லர் பெரியார்!

பெரியார் ஒருநாளும் அரசியல் தலைவராக இருந்த வர் அல்லர்; வன்முறையை வரவேற்றவர் அல்லர்; பட்டத் துக்கும் பதவிக்கும் அதிகாரத்தின் ஒளிவட்டத்துக்கும் ஆசைப் பட்டவர் அல்லர். ஆனால் தான் உண்டாக்கிவிட்ட அரசியல் தலைவர்களையெல்லாம் தன் கொள்கைக்குச் சேவகர்களாகச் செய்துகொண்டவர். மனிதர்களின் மரபணுக்களோடு இணைந் தோடிக் கொண்டிருக்கும் இழிவுகளைத் துடைப்பது, வாக்கு வங்கி அரசியல்வாதிக்கு வசப்படாது என்று ஆதியிலேயே அறிந்துகொண்டவர்.

தமிழர்களின்  ஈராயிரமாண்டுச்  சமுதாய வரலாற்றில்  அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறச்சீற்றங்கள் பதிவான துண்டு. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என்ற வள்ளுவர் குறள் வெறும் இலக்கியச் சினமாகவே வடிந்துவிட்டது.

பறைச்சியாவ தேதடா?  பணத்தியாவ தேதடா?  இறைச்சி, தோல், எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ!'

என்ற சிவவாக்கியம் வெறும் ஆன்மிகக் கோபமாகவே அடங்கிவிட்டது.

இவைபோன்ற கவிதைச்சினங்களெல்லாம் இலைகளின் மீது பூச்சிமருந்து தெளித்தனவே தவிர, வேர்ப்புழுக்களைச் சென்று விசாரிக்கவேயில்லை. அந்த வகையில் தமிழ்ப் பெரும்பரப்பில் அநீதியின் ஆணிவேர்களை அசைத்ததும், சமுகக்கேடுகளின் அடிவேர்களைக் கெல்லியதும், வருணா சிரமத்தின் கிளைகளை வகிர்ந்ததும் பெரியாரின் பெருங் கோபம் மட்டும்தான்.

ஒருவன் பிராமணன் - இன்னொருவன் சூத்திரன்!

ஒரு மனிதன் கைநீட்டிப் பேசுகிறான்; ஒரு மனிதன் கைகட்டிப் பேசுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் பிராமணன் - இன்னொருவன் சூத்திரன்.

மாடத்தில் ஒருவனுக்குக் காலுக்கும் தலையணை.  மண் குடிசையில் ஒருவனுக்குக் கையே தலையணை. உற்றுப்பார்த் தால் ஒருவன் செல்வந்தன்; இன்னொருவன் வறியவன்.

ஒருவன் அழுக்குப்படாமல் பொருளீட்டுகிறான்; இன்னொ ருவன் புழுதியிலும் சகதியிலும் பொருள் தேடுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் கற்றவன்; இன்னொருவன் கல்லாதவன். ஓர் உடல் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறது. இன் னோர் உடல் கட்டுண்டு கிடக்கிறது. உற்றுப்பார்த்தால் ஓர் உடல் ஆண்; இன்னோர் உடல் பெண்.

சுதந்திரத்தால் அல்ல - சுயமரியாதையால்!

பிராமணன் - சூத்திரன்,  ஏழை - பணக்காரன், கற்றவன் - கல்லாதவன், ஆண் - பெண் ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயின, இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை (இதற்குப் பிறகு நான் போட்டிருக்கிற சொல்லாட்சிதான் மிக முக்கியம். என்னுடைய சொல்லாட்சியை மிக முக்கிய மாக நீங்கள் கவனிக்கவேண்டும். படிக்கும்பொழுது, அடிக் கோடிட்டுப் படியுங்கள். இந்தக் கட்டுரையை தோழர்களே, ஒருமுறை அல்ல, பலமுறை படியுங்கள். யாரும் மனதிற்குள் வாசிக்கக் கூடாது; வாய் விட்டு வாசிக்கின்றபொழுது, சுற்றி நின்று குடும்பம் கேட்கவேண்டும்) என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர்தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது, சுயமரியாதையால்தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த (பெரியார் யார் என்று சொல்கிறேன், அவர் துறவி, இவர் துறவி என்று சொல்கிறார் களே இங்கே பாருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)  ஒரு சமுகத் துறவிதான் பெரியார்.

 

(தொடரும்)

 

(குறிப்பு: கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய கட்டுரையின் இடையிடையே கூறியவைகள் அச்சு எழுத்தில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரை அரங்கேற்றம்

v12.jpg

திருச்சி, மே 20  தந்தை பெரியார் தொடாத துறையேயில்லை; அதேநேரத்தில் அவை அத்தனையும் ஆதாரத்தையும், ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டது என்றார்  கவிப்பேரரசு வைரமுத்து.

5.5.2019  அன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவால யத்தில் நடைபெற்ற கருஞ்சூரியன்'' நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒரு தமிழ் மகன் திருமணம் செய்ய வேண்டுமானால் வாழ்க்கைத் துணைநலம் என்பான். ஆனால் ஆரியக் கருத்தில் பேசும்போது கல்யாணம், விவாகம், கன்னி காதானம் என்கிறான்.வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. வாழ்க்கைத் துணை என்பதில் சம உரிமையும், கன்னிகாதானம் என்பதில் அடிமைத்தன்மையும் புகுத்தப்பட்டு விடுகிறது. இம்மாதிரியே ஆரியக் கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்குத் தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது என்று கண்டறிந்து சொன்னவர் பெரியார்.

இப்பொழுது புரிகிறதா? ஏன் மொழி கலக்கக்கூடாது என்பது. வாழ்க்கை துணை நலம், எனக்கு நீ துணை; உனக்கு நான் துணை. கன்னிகாதானம் என்றால், என் கன்னியை உனக்குத் தானம் செய்கிறேன். அவள் என்ன பொருளா? பசுமாடா?  உருளைக்கிழங்கா? அவளுக்கென்று உணர்ச்சியில்லையா? உரிமையில்லையா? ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்ணுக்கும் இருக்கிறது  என்று வாழ்க்கை துணைநலம் சொல்லுகிறது. கன்னிகாதானம் அப்படி சொல்லவில்லை என்று பெரியார் சொல்கிறார், என்றார் கவிஞர் வைரமுத்து)

 

வாழ்க்கைத் துணைநலமும் - கன்னிகாதானமும்!

வாழ்க்கைத் துணை என்பதில் பெண் உயிராகிறாள்; கன்னிகாதானம் என்பதில் பெண் பொருளாகிறாள்.

ஒரு மொழிக்குள் இன்னோர் மொழி வெறும் சொல்லை மட்டும் அழைத்து வருவதில்லை. ஓர் இனத்தின் மரபணுக்களை மாற்றும் கலாசாரக் கிருமிகளோடுதான் அது நுழைகிறது என்பதை ஆய்ந்தறிந்த பண்பாட்டு விஞ்ஞானி பெரியார். இந்த மாபெரும் கண்டறிதலுக்குப் பின்புதான் பிறமொழி நுழைவுக்குத் தமிழில் தடைச்சுவர் கட்டப்பட்டது.

சங்க இலக்கியத்தில் பிறமொழிக் கலப்பு 2 விழுக் காடு.திருக்குறளில் 3 விழுக்காடு. சிலப்பதிகாரம் மணி மேகலையில் 6 விழுக்காடு.தேவார திவ்வியப் பிரபந்தங் களில் 15 விழுக்காடு.வில்லி பாரதம், கம்பராமாயணத்தில் 20 முதல் 25 விழுக்காடு.தலபுராணங்களிலும் திருப்புகழிலும் 60 முதல் 70 விழுக்காடு என்பது தமிழ்ச்சொல்லியல் வரலாறு. பெரியார் கொடுத்த பெருங்குரலுக்குப் பிறகுதான் பிறமொழிகளின் ஊன்றுகோல் இல்லாமல் தன் சொந்தக் கால்களால் நடக்கத் தலைப்பட்டது தமிழ்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழிசையின்மீது பெரியார் காதலுற்றது ஏன்?

கலைத்துறையின் மீது பெரிதும் காதலுறாத பெரியார் தமிழிசையின் மீது மட்டும் தனிப்பார்வை செலுத்தினார். காரணம் கல்லா மக்களின் கல்வி காதுவழி புகுகிறது என்பதுதான். தெலுங்கில் இருப்பதால் தெலுங்குக் கீர்த்தனை, வடமொழியில் இருப்பதால் வடமொழிப்பாட்டு என்பதுபோல், தமிழில் இருந்தாலே அது தமிழிசை என்பதைப் பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழிசை இயக்கம் தோன்றியவுடன் மயக்கம் தீர்ந்துவிடும் என்று இறுமாந்திருந்த பெரியாருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பாட்டு தமிழாகிவிட்டது; ஆனால் உள்ளடக்கம் பழைய பஞ்சாங்கமாகவே இருந்தது.

கண்ணன் சேலை திருடிய சிருங்காரங்களும், கந்தபுராணத்தின் களிறுதரு புணர்ச்சியும், சிவன் ஆடிய திருவிளையாடல்களும், பாற்கடலில் பரந்தாமன் பள்ளி யெழுச்சிகளும் தமிழிசைக்குள் புகுந்து சம்மணங்காலிட்டு அமர்ந்துகொண்டன. பெரியார் அதிர்ச்சிக்குள்ளானார். தமிழில் பாடுவது மட்டுமா தமிழிசை? தமிழின் அறிவை பண்பாட்டை விரிவு செய்வதல்லவோ தமிழிசை! இதே உள்ளடக்கம் வேறு மொழியில் இருந்தபோது விளை வேதுமில்லை. அதுவே தமிழில் பாடப்படும்போது பல்லவி பல்வலி தருகிறதே, சரணம் மரணம் தருகிறதே என்று பெரியார் கலங்கியிருக்கக்கூடும். கதை ஒன்று சொல்லித் தன் கலக்கத்தை விளக்கினார்:

(பெரியார் எவ்வளவு பெரிய சிறுகதை ஆசிரியர் பாருங்கள்; பெரியார் மட்டும் துறையை மாற்றியிருந்தால், பல எழுத்தாளன் காலியாகி இருப்பான். அவர் சீர்திருத்தத் திற்குப் போனதினால், நிறைய பேர் பிழைத்துக் கொண் டார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)

பல் விளக்கச் சோம்பேறித்தனப்பட்ட மருமகனைப் பார்த்து ஒரு மாமியார், பல் விளக்கும்படி மருமகனுக்குச் சொல்ல வெட்கப்பட்டு, கரும்பு சாப்பிட்டால் பல் வெள்ளையாகும் எனக்கருதி, மறைமுகமாய், மாப்பிள்ளை! இந்த ஊர்க் கரும்பு நல்ல ருசியாக இருக்கும். ஒரு துட்டுக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சொல்லிக் காசு கொடுத்தாள். மாப்பிள்ளை அதை வாங்கிக் கொண்டுபோய் எள்ளுப் பிண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பல்லை இன்னும் கேவலமாக்கிக்கொண்டு கரும் எண்ணெய்ப் பசையுடன் வந்தால் மாமியாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அது போலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சி இந்நாட்டில் நடந்து வருகிறது என்று கருத வேண்டியிருக்கிறது.''

மூன்றே வாக்கியங்களில் சொல்லப்பட்ட உணர்ச்சியும், உண்மையும், நகைச்சுவையும் பயன்பாடும் மிக்க சிறு கதையிது.  பெரியார் ஒரு புனைவியல் மேதை!

தொலைநோக்குச் சிந்தனை என்பது ஒரு விஞ்ஞானியின் குணம்.

பெரியார் ஒரு விஞ்ஞானி!

 

(விஞ்ஞானிதான் சொல்வான், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று. பெரியார் ஒரு விஞ்ஞானி என்றார் கவிஞர் வைரமுத்து)

ஒரு தலைவனுக்கும் அது வாய்த்திருந்தால் அது அச்சமுகம் செய்த பேறு. பெரியாருக்கு அது வாய்த்திருந்தது. விஞ்ஞான விமோசனத்தால் மக்களின் பிறப்பு விகிதம் குறையும். சாவும்கூடக் குறைந்து போகும். தனிநபர் சொத்துரிமை ஒழிந்து போவதால் பிள்ளைபெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை அதற்கு சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்துபோகும். கல்யாணம் என்பதே ஒழிந்துபோகும் என்பதனால் விதவை என்ற ஒரு ஜாதி இல்லாமல் போகும்.

(கேட்க சாதாரணமாக இருக்கிறது; இந்த உலகத்தில் மிக உயர்ந்த பொருள்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும்; சூரியன்தான்  உலகத்தின் உயர்ந்த பொருள், அது எல்லோருக்கும் கிடைக்கிறது. காற்று தான் உலகத்தின் மிகப்பெரிய பொருள். இரண்டு நிமிடத்திற்குமேல் ஆக்சிஜன் இல்லை என்றால், முடிந்து போனது கதை. மூளையின் மரணம்தான், மரணம். அந்தக் காற்று எவ்வளவு வலிமையாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியம், மூக்குக்குப் பக்கத்தில் அது வந்து உட்கார்ந்துவிட்டுப் போகிறதே, காற்று. எது மிகமிக உயர்ந்ததோ, அது இலவசமாக உங்கள் கிட்டே வந்து நிற்கும். பெரியார் காற்றைப் போல, சூரியனைப் போல என்றார் கவிஞர் வைரமுத்து)

குழந்தை பிறப்பதற்கு ஆண்  - பெண் சேர்க்கை அவசியமில்லை. தரைவழிப் போக்குவரத்து குறைந்து தனிமனிதர்கள் வானத்தில் பறக்கத் தொடங்குவார்கள் என்ற பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகளையெல்லாம் ஓர் அறிவியல் அனுமானம் என்று கருதலாம்.

(இதையெல்லாம்கூட சொல்லிவிடலாம், இப்படி வரும், அப்படி வரும் என்று. நான்கூட எழுதினேன், அழகிய நிலவில், ஆக்சிஜன் நிரப்பி, அங்கே உனக்கு ஒரு வீடு செய்வேன்; எனக்குத் தெரியும், அங்கே ஆக் சிஜன் இல்லை என்று.  ஆக்சிஜன் இல்லாத இடத்தில், அய்ஸ்வர்யா ராயை கொண்டு போய் வைக்க முடியுமா? அழகிய நிலவில், ஆக்சிஜன் நிரப்பி, அங்கே உனக்கு ஒரு வீடு செய்வேன், இது ஒரு கவிதை, கற்பனை - இதையெல்லாம் சொல்லிவிடலாம். பெரியார் சொன்ன தைக்கூட அனுமானிக்க முடியும். இப்பொழுது நான் சொல்லப்போவதுதான் பயங்கரமான விஷயம், மிகமிக முக்கியமான விஷயம் என்றார் கவிஞர் வைரமுத்து).

 

காந்தி கொல்லப்படுவார் என்று காந்தியாரிடமே சொன்ன பெரியார்!

ஆனால், மகாத்மா காந்தி கொல்லப்படுவார் என்ற செய்தியை அவரிடமே சொல்லிப்போன தொலை நோக்குதான் இன்னும் இந்த நாட்டின் நூற்றாண்டு ஆச் சரியமாய் உறைந்து கிடக்கிறது. 1927இல் பெங்களூருவில் உத்தமர் காந்தியடிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் நேர்ந்த உரையாடலை இப்போது இங்கே பதிவு செய்கிறேன்:

(உங்களுடைய கவனம் அப்படி, இப்படி என்று சிதறக்கூடாது. என் சொற்களுக்குப் பக்கத்தில் உங்கள் இருதயம், உங்கள் கண், உங்கள் மூளை அப்படியே இருக்கட்டும் என்றார் கவிஞர் வைரமுத்து)

பெரியார்: இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக் கிறான்.  நானும்  தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம்.

எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.

காந்தியார்: அப்படி அல்ல. நான் இப்போது சொல்வதை பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலே நாம் எல்லோரும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்துமதத்தின் பேராலேயே நீக்கிவிடலாமல்லவா?

பெரியார்: தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலும்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதைப் போல், இன்று தாங்கள் செய்வதை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.

காந்தியார்: இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார்:நான் சொல்லுகிறேன்; தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது.   தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

(பெரியார் என்ன மனுஷனா? விஞ்ஞானியா? சரித்திர ஆய்வாளனா? என்றார் கவிஞர் வைரமுத்து).

1927 இல் சொன்னது; 1948 இல் நடந்தேறிவிட்டது.21 ஆண்டுகளுக்குப் பிறகு பலித்தே போயின பெரியார் காந்தியிடம் சொன்ன கவலைச் சொற்கள். வருத்தம்தான். ஆனால், பெரியார் ஒரு சமுக விஞ்ஞானி.

(இன்றைக்குத் தலைவர்கள் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும்பொழுது, அவர்கள் அன்று சொல்ல நினைத்ததை மட்டும் சொல்லிவிட்டு, திரும்பி விடு கிறார்கள்; அடுத்த கேள்விகளுக்கு முன்பாக, காருக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், பெரியார், இன்னும் ஏதாவது கேள்வி இருக்கிறதா? திட்டுகிறாயா? திட்டு'' என்பார் என்றார் கவிஞர் வைரமுத்து)

 

எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர் பெரியார்!

எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர் பெரியார். முட்டாள்களின், வஞ்சகர்களின், கோழைகளின் கேள்விகளையும் அவர் இயல்பாக எதிர்கொண்டிருக்கிறார். அவரை வெல்ல முடியாத கூட்டத்திலிருந்து வெறுப்பின் உச்சத்தில் அவர்மீது ஒரு கேள்வி வீசப்பட்டது. நீ யாருக்குப் பிறந்தவன்?

(நாம் எல்லாம் எவ்வளவு நினைக்கின்றோம் அவரை; அவர் எவ்வளவு கீழே கிடத்தப்பட்டு இருந்திருக்கின்றார். மக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன், அவரிடம் கேட்கிறான், நீ யாருக்குப் பிறந்தவன்?'' என்று. நீங்களும், நானுமாக இருந்தால், என்ன செய்திருப்போம்? என்றார் கவிஞர் வைரமுத்து)

இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் மண்புழுகூடப் படமெடுக்கும்; கரப்பான் பூச்சியும் மீசை முறுக்கும். ஆனால், அணுவளவும் அதிரவில்லை பெரியார். நான் யாருக்குப் பிறந்தவன் என்பது பற்றிக் கவலையில்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தவன் என்று என்னாலும் சொல்ல முடியாது. தம்பி நீ யாருக்குப் பிறந்தாய் என்று உன்னாலும் சொல்ல முடியாது. அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை. யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை.  அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

(இந்த உலகத்தில் வேறு யார் இப்படி பதில் சொல்ல முடியும்?  யாரிடம் இந்தக் கேள்வி வீசப்பட்டிருந்தாலும், அவருடைய பாதுகாவலர்கள் சும்மா இருப்பார்களா? என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறான்; என்னைப் பார்த்து அம்பு தொடுக்கிறவன் எல்லாம், தூர நின்றுதான் பேசுகிறான்; நேரில் நின்று யாரும் பேசவில்லை. அப்படி பேசினால், நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பீர்களா? தமிழ்ச்செல்வன் பார்த்துக் கொண்டிருப்பாரா? செல்லத்துரை பார்த்துக் கொண்டிருப்பாரா? மணி பார்த்துக் கொண்டிருப்பாரா? பாலகாலிங்கம் பார்த்துக் கொண்டிருப்பாரா? மறைந்து நின்று வம்பை வளர்ப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. பரவாயில்லை, அதெல்லாம் முடிந்து போனது; தமிழுக்காகத் தாங்கிக் கொள்வோம் என்றார் கவிஞர் வைரமுத்து).

ஞானமும், மானமும் உள்ளவன்தான் இந்த இழிந்த கேள்விக்கு இப்படி உயர்ந்த விடைசொல்ல முடியும். பெரியார் விடைசொல்லாத கேள்விகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், பெரியார் விட்டுச்சென்ற பல கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை. இந்த இருட்டுப் பிடித்த சமுகத்தைப் பார்த்துப் பெரியார் கேட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளில் சில கேள்விகளை மட்டும் பதிவு செய்கிறேன்.

சிறுவயதில் குழந்தைகள் சாமி வைத்து விளை யாடுவார்கள். கல்லடுக்கி, குச்சிபரப்பி, அதன்மேல் துணி இலை காகிதத்தால் கூரை செய்து கோயிலாக்கி, பொம்மைகளைச் சாமிகளாக்கித் தகரங்களை வாத்தியங்களாக்கி விளையாடுவார்கள். 7, 8 வயதுவரை பெற்றோர்கள் ரசிப்பார்கள். 13 வயதில் ஆணும், பெண்ணும் அதே விளையாட்டைத் தொடர்ந்தால் அடே குட்டிச் சுவரே! அரைக்கழுதை வயதாகி இன்னமும் சாமிவைத்து விளையாட வெட்கமில்லையா என்று கடுத்த முகத்தோடு கேட்பார்கள். வயதான பிறகும் சாமி விளையாட்டு விளையாடும் பெற்றோர்களைப் பார்த்து அதே குழந்தைகள் திருப்பிக் கேட்டால் என்ன சொல்வோம்?

ஒரு பறவை இறப்பதற்கு முன்னிட்ட முட்டையாய் இந்தக் கேள்வி அனாதையாய் நிற்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பது குற்றமா?

ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பது பற்றிய சமுக அரசியலை முன்வைத்துப் பெரியார் தொடுத்த வினா முக்கியமானது.

(இன்றைய பிரச்சினையை 1920 லேயே சந்தித்தி ருக்கின்றார் பெரியார் என்றார் கவிஞர் வைரமுத்து)

பெரியார் கேட்கிறார்:

மாடு தின்பதும் மது அருந்துவதும் நீங்கள் பறையர்களாக இருப்பதற்குக் காரணமென்று சொல்வது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் இருப்பவர்கள்தான் இன்று உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தவிரவும் நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சார்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போலச் சரியானபடி சம்பா திக்கவும் தாராளமாகச் சாப்பிடவும், தெருவில் நடக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப்பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. கோழியும், மீனும், பன்றியும், எச்சிலையும், பூச்சி புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க - புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், பிண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்?

உணவு குறித்த இந்தக் கேள்வி இன்னும் பசியோடு அலைந்து கொண்டேயிருக்கிறது விடையென்ற இரையின்றி.

பெண்ணுரிமைபற்றி பெரியார் கேள்வி - ஆண்கள் நிசப்தம்!

பெண்ணுரிமைக்காகக் கேட்கப்பட்ட பெரியாரின் இன்னொரு கேள்வி ஆணாதிக்கத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறது.

பிள்ளைப் பேறில்லை என்ற காரணத்தைக் காட்டியும், வேறு அற்பச் சண்டைகளைக் கொண்டும் ஆண்கள் ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணையும் மணந்து கொள்கின்றனர். பெண்ணும் இதே காரணத்தைக்கொண்டு சர்வாதிகாரத்துடன் மற் றொரு ஆணை மணந்து வீட்டில் சேர்த்துக்கொண்டால் கணவன் சும்மாயிருப்பானா?''

பெண்ணுரிமைக்குப் பரிவு காட்டிய பெரியாரின் கேள்விக்கு ஆணாதிக்கத்தின் பதில் நீண்ட நிசப்தமாகவே இருக்கிறது.

பொதுவெளியில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஒரு தலைவன் தன் தனிப்பட்ட இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதிலிருக்கிறது அவனது சமுகத் தொண்டின் மெய்த்தன்மை.

(ஊருக்கெல்லாம் ஆருடம் சொல்லலாம்; உனக்கு வருகிறபொழுது எப்படி நடந்துகொள்கிறாய் என்பதுதான் முக்கியம். சுத்தம் என்பது என்ன? என்று என்னிடம் கேட்டார்கள். கண் காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது சுத்தம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று கேட்டார்கள். சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம் என்று சொன்னேன். அதுபோன்று, ஒரு தலைவனின் பெருமை, அவன் சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்கிறான் என்பதுதான் முக்கியம் என்றார் கவிஞர் வைரமுத்து)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாகம்மையார்பற்றிய பெரியாரின் இரங்கல் இலக்கியம் உலகப் புகழ் பெற்றது

தன் முதல் துணைவி நாகம்மையார் 1933 இல் மறைந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை ஓர் உலக இலக்கியம் என்றே என்னைக் கருதச் சொல்கிறது. உலகத்தின் எந்தக் கல்லறைக் கவிதைக்கும் அது குறைந்ததில்லை. சொல்லப்போனால் துணைவியின் மரணத்தை இப்படிப் பொருள் கொண்டவர் எவருமில்லை. துணைவியாரின் மரணத்தைக் கொண்டாடி இப்படி எழுதுகிறார் பெரியார்:

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டிருந்தேனே அல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனோ என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. பெண்கள் சுதந்திர விசயமாகவும், பெண்கள் பெருமை விசயமாகவும், பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

(என்னருமை நாகம்மாள்'' இதைவிடவா கவிதை வரிகள்; ஒரு கிழவன், கிழவி செத்த பிறகு கொஞ்சுகிறான் பாருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படு வது மாத்திரமல்லாமல் அதை உண்மை யென்றும் கருதுகிறேன். நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல சஞ்சாரத்திலேயே சுற்றுப் பிரயா ணத்திலேயே இருக்க வேண்டும் என்று கருதி இருந்த துண்டு. அதற்கு வேறு எவ்விதத் தடையும்  இருந்திருக்க வில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மை தருவதாகுக.

உலகத்திலேயே இறப்பைக் கொண்டாடிய இரங்கல் செய்தி இதுவாகத்தான் இருக்க முடியும்.

வானத்தின்கீழ் பெரியார் பேசாத பொருளே இல்லை!

சூரியன் வந்து வந்து போகும் இந்த வானத்தின் கீழே பெரியார் பேசாத பொருளில்லை. கடவுள் - மதம் - ஜாதி - ஆண் - பெண்  கல்வி  - காதல் - இலக்கியம்  - கலை - அறிவியல் - அறவியல்  - அரசியல்  - உலகியல் - உளவியல் - இறந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலம் - ஜனனம் - மரணம் என்று அவர் தொடாத துறையில்லை. ஆனால் ஆதாரமும், ஆராய்ச்சியும் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொன்னதில்லை.  அவர் மொழியில் அலங்காரம் இல்லை;  ஆடம்பரம் இல்லை. சத்தியம் சவுக்காரம் போட்டுக் குளிக்கவேண்டியதில்லை. மனித குலத்தின் சமத்துவத்துக்காகப் பேராசைப்பட்ட துறவி அவர். திராவிடர்களின் மேன்மைக்காகத் துன்பத்தை இழுத்துத் தோளில் போட்டுக் கொண்டவர். அடக்குமுறைக் கும், சிறைவாசத்துக்கும், இழிவுக்கும், ஏளனத்துக்கும் அடிக்கடி ஆளானவர். இவரைப்போல் இப்படி ஒரு தலைவர் இந்தியப் பரப்பில் முன்னுமில்லை; பின்னு மில்லை.

94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்த பெரு வாழ்வில் எண்ணாயிரத்து இருநூறு நாட்களைச் சுற்றுப் பயணத்திற்கே செலவிட்டவர். எட்டு லட்சத்து இருபதாயிரம் மைல்கள் சுற்றுப்பயணம் செய்தவர். அதாவது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு சுற்றி வந்தவர். இருபத்தோராயிரத்து நானூறு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றியவர். அவரது அத்தனை சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு செய்து ஓடவிட்டால் 2 ஆண்டுகள்  5 மாதங்கள் 11  நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.

தமிழர்களின் மனித அதிசயம் பெரியார். காற்றைப் போல் தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர்.

90 வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்த தமிழ்ப் புலத்தின் பேரறிஞர் ஒருவர் தன் மரணத்தின் முன்நிமிடத்தில் இப்படிச் சொல்லிப் போனார்: இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலை பெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்; இன்னொருவர் பெரியார்.

வாழ்க பெரியார்! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரையாற்றினார்.

(குறிப்பு: கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய கட்டுரையின்'' இடையிடையே கூறியவை அச்சு எழுத்தில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??

02/05/2019

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல்புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!)

அவர் ஒரு ஃபேஸ்புக் சுட்டியை அனுப்பியிருந்தார். ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் எனும் அன்பர் ஒருவர் இந்தப் பெரியாரிய யுனெஸ்கோ பொய்மை பற்றி எழுதியதை வைத்து, ஏகத்துக்கும் பொங்கி, இந்த திராவிடலை அரைகுறையார் வீரமணியார் ஒரு அறிக்கை வெளியிட்டதைப் பற்றித் தான் அது.
 
-0-0-0-0-
 

நிரந்திர விடலை வீரமணி அவர்களின் அறிக்கை:

 
 

அதற்கான, ஜகன்னாத் அவர்களின் எதிர்வினை.

 
-0-0-0-0-
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சரிதான். பிரச்சினை என்னவென்றால் நான் இந்த ஃபில் ஸுக்கர்மேன் புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்; வறட்டு நாஸ்திகவாதத்தைப் பேசும் அரைகுறைப் புத்தகங்களை எழுதியிருப்பவர் இந்த ஆசாமி – ஆராய்ச்சி என்பதின் கிட்டவே போகாமல், காற்றுவாக்கில் வந்ததை படிப்பறிவோ பின்புலமோ இல்லாமல் அட்ச்சிவுடுபவர்; வீரமணியாருக்குப் பொருத்தமான ஜோடிதான்!  (இன்னொரு அக்கப்போருக்காக இந்த ஆள் எழுதிய எழவுகளை ஒரு காலத்தில் படித்திருக்கிறேன்; வாழ்க்கையை எப்படியெல்லாம் வீணடிக்கிறேன்! )

ஆகவே, ஜகன்னாத் அவர்களின் காத்திரமான எதிர்வினை  /கருத்துகளுக்கு அப்பாற்பட்டு:

1. ஆச்சரியத்துக்குரிய வகையில், பெரியாருக்கு ஒரு விருதும் சான்றிதழும் யுனெஸ்கோவினால் கொடுக்கப் படாததால், அதனைப் பற்றி ஒரு காத்திரமான தரவுபூர்வமான விவரமும் இல்லை. இதனை என்னால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

ஆகவே கொடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் ஒரு மசுத்துக்கும்விவரம் இல்லை.

ஆனால் திராவிட லாஜிக் என்பது திராபை லாஜிக். இது எப்படி இருக்கிறதென்றால்…

எனக்கு நொபெல் பரிசு (சகல துறைகளிலும், பலவருடங்களுக்குத் தொடர்ச்சியாகக்) கொடுக்கப்படவில்லை என்கிற விவரம் இணையத்தில், பொதுஅறிவுப் புலத்தில் இருக்காது.

ஏனெனில் நான் வாங்கவில்லை – ஆனால் மேற்படி எழுதியிருக்கிறேன்!  ஆகவே, திருட்டுத் திராவிட லாஜிக் எழவின் படி – நான் மெய்யாலுமே அந்தப் பரிசில்களை ‘வாங்கி’யிருக்கிறேன்.

எப்படி இருக்கிறது கதை!

2. வீரமணி பகர்கிறார்: “க்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும்.”

 

இல்லை. அதனை வெளியிட்டது க்ரீன்வுட் பதிப்பகம். ஏபிஸி-க்ளியோ குழுமத்தைச் சார்ந்தது.

 

இதற்கும் ‘ஆக்ஸ்போர்டு ‘ பல்கலைக்கழக எழவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

(திராவிட உதிரிகளுக்கு எதற்கெடுத்தாலும் அந்த கேம்ப்ரிட்ஜும் யேலும் ஆக்ஸ்போர்டும்தான்! அவைகள் என்னபாவம் செய்தனவோ!

ஆம், அண்ணாதான் உலகிலேயே முதல்முறையாக ‘பிகாஸ்’ (because) எனும் வார்த்தையை மூன்றுமுறை ஒர்ரே வாக்கியத்தில் உபயோகப்படுத்தினார். அதைக்கேட்ட வெள்ளைக்காரக் கூவான் தன் மூக்கில் உடனடியாக விரலை வைத்துக்கொண்டானன்றோ?)

2. வீரமணி பகபகர்கிறார்: “Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும்

இல்லை. அவர் எழுதவில்லை. அப்புத்தகத்தைத் தொகுத்தது இந்த ஃபில். அதுவும் அவர் ‘ஃபிக்‘ அல்லர். (ஒரு பெயரைச் சரியாக எழுதத்தெரியவில்லை; புத்தகத்தையும் படிக்கவில்லை – இந்த தண்டகருமாந்திரங்களுடனெல்லாம் பொருத வேண்டிய நிலை எனக்கு வரவேண்டுமா?)

3. வீரமணி: ” (தொகுதி 1 ) ”  ” அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது. 

இல்லை; அது தொகுதி 2ல் இருக்கிறது.

அதுவும் 143ஆம் பக்கத்தில், 142ஆம் பக்கத்தில் அல்ல!

 

அடிப்படை விஷயங்களைக் கூடச் சரிபார்க்கத்தெரியாத அறிவிலிகள்!

4. அது இன்னையா நரிஸெட்டி எனும் தெலுகு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டது.

 

இவரும் வீரமணி வகை பகுத்தறிவாள நாஸ்திகர்தாம். இன்னுமொருமதச்சார்பின்மைத் திலகம்!

ஹிந்து நம்பிக்கைகளை தரவுகளே இல்லாமல் விளாசும் அதே சமயத்தில், மிகவும் கவனமான பகுத்தறிவுடன் இஸ்லாம், க்றிஸ்தவம், பௌத்தம் பக்கமே போகமாட்டார்! (ஒரு விதமான பயம் கலந்த நடுக்கம்தான் காரணமாக இருக்கவேண்டும்; மேலும் கூலிக்கு மாரடிக்கும் வாழ்வில், வீரமணிபோல அவருக்கும் ‘சுதந்திரம்’ இல்லை; வெறும் வெறுப்பியத் தந்திரம் மட்டும்தான் இருக்கிறது. ஆகவே இவரை குள்ளநரி ஸெட்டி எனவும் கருதலாம்!

சுட்டுப்போட்டாலும் தமிழ்வராத, தமிழச் சூழலை அறியாத ஆசாமியாதலால், விலாவாரியாக திராவிடர் கழகம் பெரியார் யுனெஸ்கோ என்று கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். (ஊக்க போனஸாக – இவர் எழுதிய பலவிவரங்கள் புளுகுகளன்றி வேறொரு ஆகச்சிறந்த சுக்குமில்லை – ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் அடிவருடியாகவும் இருப்பதால் கொஞ்சம் தேவலாம்!)

5. சரி. இப்படி இவர் யுனெஸ்கோ கினெஸ்கோ என அட்ச்சிவுடுவதற்கு என்ன ஆதாரம் என்று பார்த்தால்..

 
 

அடடே – நம்மூர் ‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைகள்தாம்! வரிசையில் நின்று ரேஷன் வாங்கி, படையல் வைத்துவிட்டாரே பார்க்கலாம்! சரியான, சோம்பேறிப் பகுத்தறிவாளர்!

‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் குப்பை, நம் வீரமணியின் பெரியார் திராவிடர்கழக’  மடம் பதிப்பிப்பது! http://www.modernrationalist.com/ 

இன்னாங்கடா?

நீங்களே ரூம்புபோட்டு ரோசிச்சி கண்டுபிடித்துப் புளுகியதை,  தேவைமெனெக்கெட்டு ஒரு கூமுட்டை மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்களே மறுபடியும் சுட்டிக்காட்டிப் பெருமைப் பட்டுக்கொள்வீர்களா?

அதுவும் வரிக்கு வரி புளுகு. உங்களுக்கெல்லாம் திராவிட இளைஞக் குஞ்சாமணிகளின் ஏகோபித்த ஆதரவு ஒன்றுதான் கேடு!

திராவிடப் பேடித்தனத்துக்கும் புளுகுணி மாங்கொட்டைத் தனத்துக்கும் இது இன்னுமொரு சான்றுதான்!

நன்றி!

இதுதாண்டா வீரமணி! இதுதாண்டா பஹூத் அறிவு!

விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??

02/05/2019

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல்புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!)

அவர் ஒரு ஃபேஸ்புக் சுட்டியை அனுப்பியிருந்தார். ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் எனும் அன்பர் ஒருவர் இந்தப் பெரியாரிய யுனெஸ்கோ பொய்மை பற்றி எழுதியதை வைத்து, ஏகத்துக்கும் பொங்கி, இந்த திராவிடலை அரைகுறையார் வீரமணியார் ஒரு அறிக்கை வெளியிட்டதைப் பற்றித் தான் அது.
 
-0-0-0-0-
 

நிரந்திர விடலை வீரமணி அவர்களின் அறிக்கை:

 
 

அதற்கான, ஜகன்னாத் அவர்களின் எதிர்வினை.

 
-0-0-0-0-
 

சரிதான். பிரச்சினை என்னவென்றால் நான் இந்த ஃபில் ஸுக்கர்மேன் புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்; வறட்டு நாஸ்திகவாதத்தைப் பேசும் அரைகுறைப் புத்தகங்களை எழுதியிருப்பவர் இந்த ஆசாமி – ஆராய்ச்சி என்பதின் கிட்டவே போகாமல், காற்றுவாக்கில் வந்ததை படிப்பறிவோ பின்புலமோ இல்லாமல் அட்ச்சிவுடுபவர்; வீரமணியாருக்குப் பொருத்தமான ஜோடிதான்!  (இன்னொரு அக்கப்போருக்காக இந்த ஆள் எழுதிய எழவுகளை ஒரு காலத்தில் படித்திருக்கிறேன்; வாழ்க்கையை எப்படியெல்லாம் வீணடிக்கிறேன்! )

ஆகவே, ஜகன்னாத் அவர்களின் காத்திரமான எதிர்வினை  /கருத்துகளுக்கு அப்பாற்பட்டு:

1. ஆச்சரியத்துக்குரிய வகையில், பெரியாருக்கு ஒரு விருதும் சான்றிதழும் யுனெஸ்கோவினால் கொடுக்கப் படாததால், அதனைப் பற்றி ஒரு காத்திரமான தரவுபூர்வமான விவரமும் இல்லை. இதனை என்னால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

ஆகவே கொடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் ஒரு மசுத்துக்கும்விவரம் இல்லை.

ஆனால் திராவிட லாஜிக் என்பது திராபை லாஜிக். இது எப்படி இருக்கிறதென்றால்…

எனக்கு நொபெல் பரிசு (சகல துறைகளிலும், பலவருடங்களுக்குத் தொடர்ச்சியாகக்) கொடுக்கப்படவில்லை என்கிற விவரம் இணையத்தில், பொதுஅறிவுப் புலத்தில் இருக்காது.

ஏனெனில் நான் வாங்கவில்லை – ஆனால் மேற்படி எழுதியிருக்கிறேன்!  ஆகவே, திருட்டுத் திராவிட லாஜிக் எழவின் படி – நான் மெய்யாலுமே அந்தப் பரிசில்களை ‘வாங்கி’யிருக்கிறேன்.

எப்படி இருக்கிறது கதை!

2. வீரமணி பகர்கிறார்: “க்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும்.”

 

இல்லை. அதனை வெளியிட்டது க்ரீன்வுட் பதிப்பகம். ஏபிஸி-க்ளியோ குழுமத்தைச் சார்ந்தது.

 

இதற்கும் ‘ஆக்ஸ்போர்டு ‘ பல்கலைக்கழக எழவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

(திராவிட உதிரிகளுக்கு எதற்கெடுத்தாலும் அந்த கேம்ப்ரிட்ஜும் யேலும் ஆக்ஸ்போர்டும்தான்! அவைகள் என்னபாவம் செய்தனவோ!

ஆம், அண்ணாதான் உலகிலேயே முதல்முறையாக ‘பிகாஸ்’ (because) எனும் வார்த்தையை மூன்றுமுறை ஒர்ரே வாக்கியத்தில் உபயோகப்படுத்தினார். அதைக்கேட்ட வெள்ளைக்காரக் கூவான் தன் மூக்கில் உடனடியாக விரலை வைத்துக்கொண்டானன்றோ?)

2. வீரமணி பகபகர்கிறார்: “Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும்

இல்லை. அவர் எழுதவில்லை. அப்புத்தகத்தைத் தொகுத்தது இந்த ஃபில். அதுவும் அவர் ‘ஃபிக்‘ அல்லர். (ஒரு பெயரைச் சரியாக எழுதத்தெரியவில்லை; புத்தகத்தையும் படிக்கவில்லை – இந்த தண்டகருமாந்திரங்களுடனெல்லாம் பொருத வேண்டிய நிலை எனக்கு வரவேண்டுமா?)

3. வீரமணி: ” (தொகுதி 1 ) ”  ” அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது. 

இல்லை; அது தொகுதி 2ல் இருக்கிறது.

அதுவும் 143ஆம் பக்கத்தில், 142ஆம் பக்கத்தில் அல்ல!

 

அடிப்படை விஷயங்களைக் கூடச் சரிபார்க்கத்தெரியாத அறிவிலிகள்!

4. அது இன்னையா நரிஸெட்டி எனும் தெலுகு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டது.

 

இவரும் வீரமணி வகை பகுத்தறிவாள நாஸ்திகர்தாம். இன்னுமொருமதச்சார்பின்மைத் திலகம்!

ஹிந்து நம்பிக்கைகளை தரவுகளே இல்லாமல் விளாசும் அதே சமயத்தில், மிகவும் கவனமான பகுத்தறிவுடன் இஸ்லாம், க்றிஸ்தவம், பௌத்தம் பக்கமே போகமாட்டார்! (ஒரு விதமான பயம் கலந்த நடுக்கம்தான் காரணமாக இருக்கவேண்டும்; மேலும் கூலிக்கு மாரடிக்கும் வாழ்வில், வீரமணிபோல அவருக்கும் ‘சுதந்திரம்’ இல்லை; வெறும் வெறுப்பியத் தந்திரம் மட்டும்தான் இருக்கிறது. ஆகவே இவரை குள்ளநரி ஸெட்டி எனவும் கருதலாம்!

சுட்டுப்போட்டாலும் தமிழ்வராத, தமிழச் சூழலை அறியாத ஆசாமியாதலால், விலாவாரியாக திராவிடர் கழகம் பெரியார் யுனெஸ்கோ என்று கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். (ஊக்க போனஸாக – இவர் எழுதிய பலவிவரங்கள் புளுகுகளன்றி வேறொரு ஆகச்சிறந்த சுக்குமில்லை – ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் அடிவருடியாகவும் இருப்பதால் கொஞ்சம் தேவலாம்!)

5. சரி. இப்படி இவர் யுனெஸ்கோ கினெஸ்கோ என அட்ச்சிவுடுவதற்கு என்ன ஆதாரம் என்று பார்த்தால்..

 
 

அடடே – நம்மூர் ‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைகள்தாம்! வரிசையில் நின்று ரேஷன் வாங்கி, படையல் வைத்துவிட்டாரே பார்க்கலாம்! சரியான, சோம்பேறிப் பகுத்தறிவாளர்!

‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் குப்பை, நம் வீரமணியின் பெரியார் திராவிடர்கழக’  மடம் பதிப்பிப்பது! http://www.modernrationalist.com/ 

இன்னாங்கடா?

நீங்களே ரூம்புபோட்டு ரோசிச்சி கண்டுபிடித்துப் புளுகியதை,  தேவைமெனெக்கெட்டு ஒரு கூமுட்டை மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்களே மறுபடியும் சுட்டிக்காட்டிப் பெருமைப் பட்டுக்கொள்வீர்களா?

அதுவும் வரிக்கு வரி புளுகு. உங்களுக்கெல்லாம் திராவிட இளைஞக் குஞ்சாமணிகளின் ஏகோபித்த ஆதரவு ஒன்றுதான் கேடு!

திராவிடப் பேடித்தனத்துக்கும் புளுகுணி மாங்கொட்டைத் தனத்துக்கும் இது இன்னுமொரு சான்றுதான்!

நன்றி!

இதுதாண்டா வீரமணி! இதுதாண்டா பஹூத் அறிவு!

விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??

02/05/2019

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல்புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!)

அவர் ஒரு ஃபேஸ்புக் சுட்டியை அனுப்பியிருந்தார். ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் எனும் அன்பர் ஒருவர் இந்தப் பெரியாரிய யுனெஸ்கோ பொய்மை பற்றி எழுதியதை வைத்து, ஏகத்துக்கும் பொங்கி, இந்த திராவிடலை அரைகுறையார் வீரமணியார் ஒரு அறிக்கை வெளியிட்டதைப் பற்றித் தான் அது.
 
-0-0-0-0-
 

நிரந்திர விடலை வீரமணி அவர்களின் அறிக்கை:

 
 

அதற்கான, ஜகன்னாத் அவர்களின் எதிர்வினை.

 
-0-0-0-0-
 

சரிதான். பிரச்சினை என்னவென்றால் நான் இந்த ஃபில் ஸுக்கர்மேன் புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்; வறட்டு நாஸ்திகவாதத்தைப் பேசும் அரைகுறைப் புத்தகங்களை எழுதியிருப்பவர் இந்த ஆசாமி – ஆராய்ச்சி என்பதின் கிட்டவே போகாமல், காற்றுவாக்கில் வந்ததை படிப்பறிவோ பின்புலமோ இல்லாமல் அட்ச்சிவுடுபவர்; வீரமணியாருக்குப் பொருத்தமான ஜோடிதான்!  (இன்னொரு அக்கப்போருக்காக இந்த ஆள் எழுதிய எழவுகளை ஒரு காலத்தில் படித்திருக்கிறேன்; வாழ்க்கையை எப்படியெல்லாம் வீணடிக்கிறேன்! )

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆகவே, ஜகன்னாத் அவர்களின் காத்திரமான எதிர்வினை  /கருத்துகளுக்கு அப்பாற்பட்டு:

1. ஆச்சரியத்துக்குரிய வகையில், பெரியாருக்கு ஒரு விருதும் சான்றிதழும் யுனெஸ்கோவினால் கொடுக்கப் படாததால், அதனைப் பற்றி ஒரு காத்திரமான தரவுபூர்வமான விவரமும் இல்லை. இதனை என்னால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

ஆகவே கொடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் ஒரு மசுத்துக்கும்விவரம் இல்லை.

ஆனால் திராவிட லாஜிக் என்பது திராபை லாஜிக். இது எப்படி இருக்கிறதென்றால்…

எனக்கு நொபெல் பரிசு (சகல துறைகளிலும், பலவருடங்களுக்குத் தொடர்ச்சியாகக்) கொடுக்கப்படவில்லை என்கிற விவரம் இணையத்தில், பொதுஅறிவுப் புலத்தில் இருக்காது.

ஏனெனில் நான் வாங்கவில்லை – ஆனால் மேற்படி எழுதியிருக்கிறேன்!  ஆகவே, திருட்டுத் திராவிட லாஜிக் எழவின் படி – நான் மெய்யாலுமே அந்தப் பரிசில்களை ‘வாங்கி’யிருக்கிறேன்.

எப்படி இருக்கிறது கதை!

2. வீரமணி பகர்கிறார்: “க்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும்.”

 

இல்லை. அதனை வெளியிட்டது க்ரீன்வுட் பதிப்பகம். ஏபிஸி-க்ளியோ குழுமத்தைச் சார்ந்தது.

 

இதற்கும் ‘ஆக்ஸ்போர்டு ‘ பல்கலைக்கழக எழவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

(திராவிட உதிரிகளுக்கு எதற்கெடுத்தாலும் அந்த கேம்ப்ரிட்ஜும் யேலும் ஆக்ஸ்போர்டும்தான்! அவைகள் என்னபாவம் செய்தனவோ!

ஆம், அண்ணாதான் உலகிலேயே முதல்முறையாக ‘பிகாஸ்’ (because) எனும் வார்த்தையை மூன்றுமுறை ஒர்ரே வாக்கியத்தில் உபயோகப்படுத்தினார். அதைக்கேட்ட வெள்ளைக்காரக் கூவான் தன் மூக்கில் உடனடியாக விரலை வைத்துக்கொண்டானன்றோ?)

2. வீரமணி பகபகர்கிறார்: “Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும்

இல்லை. அவர் எழுதவில்லை. அப்புத்தகத்தைத் தொகுத்தது இந்த ஃபில். அதுவும் அவர் ‘ஃபிக்‘ அல்லர். (ஒரு பெயரைச் சரியாக எழுதத்தெரியவில்லை; புத்தகத்தையும் படிக்கவில்லை – இந்த தண்டகருமாந்திரங்களுடனெல்லாம் பொருத வேண்டிய நிலை எனக்கு வரவேண்டுமா?)

3. வீரமணி: ” (தொகுதி 1 ) ”  ” அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது. 

இல்லை; அது தொகுதி 2ல் இருக்கிறது.

அதுவும் 143ஆம் பக்கத்தில், 142ஆம் பக்கத்தில் அல்ல!

 

அடிப்படை விஷயங்களைக் கூடச் சரிபார்க்கத்தெரியாத அறிவிலிகள்!

4. அது இன்னையா நரிஸெட்டி எனும் தெலுகு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டது.

 

இவரும் வீரமணி வகை பகுத்தறிவாள நாஸ்திகர்தாம். இன்னுமொருமதச்சார்பின்மைத் திலகம்!

ஹிந்து நம்பிக்கைகளை தரவுகளே இல்லாமல் விளாசும் அதே சமயத்தில், மிகவும் கவனமான பகுத்தறிவுடன் இஸ்லாம், க்றிஸ்தவம், பௌத்தம் பக்கமே போகமாட்டார்! (ஒரு விதமான பயம் கலந்த நடுக்கம்தான் காரணமாக இருக்கவேண்டும்; மேலும் கூலிக்கு மாரடிக்கும் வாழ்வில், வீரமணிபோல அவருக்கும் ‘சுதந்திரம்’ இல்லை; வெறும் வெறுப்பியத் தந்திரம் மட்டும்தான் இருக்கிறது. ஆகவே இவரை குள்ளநரி ஸெட்டி எனவும் கருதலாம்!

சுட்டுப்போட்டாலும் தமிழ்வராத, தமிழச் சூழலை அறியாத ஆசாமியாதலால், விலாவாரியாக திராவிடர் கழகம் பெரியார் யுனெஸ்கோ என்று கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். (ஊக்க போனஸாக – இவர் எழுதிய பலவிவரங்கள் புளுகுகளன்றி வேறொரு ஆகச்சிறந்த சுக்குமில்லை – ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் அடிவருடியாகவும் இருப்பதால் கொஞ்சம் தேவலாம்!)

5. சரி. இப்படி இவர் யுனெஸ்கோ கினெஸ்கோ என அட்ச்சிவுடுவதற்கு என்ன ஆதாரம் என்று பார்த்தால்..

 
 

அடடே – நம்மூர் ‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைகள்தாம்! வரிசையில் நின்று ரேஷன் வாங்கி, படையல் வைத்துவிட்டாரே பார்க்கலாம்! சரியான, சோம்பேறிப் பகுத்தறிவாளர்!

‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் குப்பை, நம் வீரமணியின் பெரியார் திராவிடர்கழக’  மடம் பதிப்பிப்பது! http://www.modernrationalist.com/ 

இன்னாங்கடா?

நீங்களே ரூம்புபோட்டு ரோசிச்சி கண்டுபிடித்துப் புளுகியதை,  தேவைமெனெக்கெட்டு ஒரு கூமுட்டை மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்களே மறுபடியும் சுட்டிக்காட்டிப் பெருமைப் பட்டுக்கொள்வீர்களா?

அதுவும் வரிக்கு வரி புளுகு. உங்களுக்கெல்லாம் திராவிட இளைஞக் குஞ்சாமணிகளின் ஏகோபித்த ஆதரவு ஒன்றுதான் கேடு!

திராவிடப் பேடித்தனத்துக்கும் புளுகுணி மாங்கொட்டைத் தனத்துக்கும் இது இன்னுமொரு சான்றுதான்!

நன்றி!

இதுதாண்டா வீரமணி! இதுதாண்டா பஹூத் அறிவு!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள்

03/05/2019

ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா??

-0-0-0-0-
 

எனக்கு, வசைச் சொற்கள் ஒரு பிரச்சினையுமில்லை, திட்டப்பட்டுத் திட்டப்பட்டுத் திகட்டிவிட்டது (கடைசியாக இந்தத் திட்டுத்திட்டவாதிகளுடன் ஐக்கியமானவர்கள் என் பேராசான் ஜெயமோகன் அவர்களின் சிலபல சீடகேடிகள்). பதிலுக்கு, முடிந்தவரை பண்பு(!)டனும் திட்டுவதிலும் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. ஆனால் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் இதனைச் செய்வதில்லை. இந்த ஒத்திசைவெழவில் மட்டும்தான் இந்தக் கோரம்.

…ஆனால் முடிந்தவரை கேள்விகளுக்குப் பதில் கொடுக்கவே முயல்வேன் (=முயல்களை எடுத்துச்செல்லப் பயன்படும் வண்டி, குறிப்பாக எஸ்ராமகிருஷ்ணனால்);  …இருந்தாலும் ஒரு நீஈஈஈஈஈள வரிசை இதற்கு இருக்கிறது, என்ன செய்ய!  (பல மாதங்கள் முன் என்னிடம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் பற்றிய காத்திரமான புத்தகங்களை+ஆசாமிகளைப் பற்றிக் கேட்ட அன்பருக்கு என் மன்னிப்புக் கோரல் – கூடிய விரைவில் அனுப்புகிறேன்)

கேடயம்:

அ. அந்தக் கேடயம் உண்மையாக இருக்கலாம். ஏனெனில், ஏதோ மண்டபத்தின் யாரோ தச்சுவேலை செய்து கொடுத்தது தானே அந்தத் திருட்டுத் திராவிடர்கழகத் திருவிளையாடல்?

ஆ. ஆனால், யுனெஸ்கோ, ஜெனமத்தில் இந்த மாதிரி கேடயம் எல்லாம் இவ்விஷயங்களுக்குக் கொடுத்ததாகச் சரித்திரமே இல்லை. அவர்கள் கொடுத்திருப்பதெல்லாம் மெடல்கள் மட்டுஂமே!

இ. யுனெஸ்கோ மன்றம் என்று ஒன்று அதிகாரபூர்வமாக, யுனெஸ்கோவை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கவே முடியாது. இருந்திருக்கவும் முடியாது. இது வெறும் லோக்கல், கலக்கல் சாராய, அற்பத் தீராவிடச் சமாச்சாரம்.

நான் ஒரு ‘இங்கிலாந்து மன்றம்’ அல்லது ‘லெமூரிய மன்றம்’ எனவொன்றை ஆரம்பித்து எனக்கு நானே, என் செலவில், ‘தறுதலை வீரமணி அவார்ட்‘ என ஒரு கேடயத்தைக் கொடுத்துக்கொண்டால் – அதனை அந்த கேடுகெட்ட இங்கிலாந்தோ ஏழவெடுத்த லெமூரியாவோ அல்லது மானமிகு(!) வீரமணியோ கொடுத்தாகவா அர்த்தம்? வீரமணியே என்னைப் புகழ்ந்ததாகவா  அர்த்தம்?

ஈ. ஆகவே நீவிர் கொடுத்திருப்பது, இந்த நகைக்கத்தக்க சர்ச்சை தொடர்பான கேனயம். கேடயம் அல்ல. மிக்க நன்றி!

உ. யுனெஸ்கோ மன்றங்கள் (இந்தமாதிரி எழவு ஒன்றுதான் கேனயத்தைக் கொடுத்திருக்கிறது) என்பவற்றின் செயல்பாடுகள் தீவிரமாக வரையறை செய்யப்பட்டுள்ளன.  அதற்கான சுட்டி இதோ: Clubs, Centres and Associations for UNESCO

மேலும் – இந்தக் குப்பைகளின் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை எனவேறு – மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர் இந்த யுனெஸ்கோ அமைப்பினர்.

“Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.”

இந்த மன்றம் கின்றம் எல்லாம் குப்பைகள். இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியவைகள். துடைத்து எறியப் படவேண்டியவைகள். எரித்து மறுசுழற்சி செய்யப்படவேண்டியவைகள்!

அல்லது மண்ட்ரம் – mandram – என அக்குப்பையாளர்களே எழுதியிருப்பதைப் போல – அது மண்டுகளுடைய மண்டுகளுக்காக மண்டுகளால் நடத்தப்பட்ட, மண்டபத்துத் தச்சன் செய்தளித்த கேனயம்; அவ்ளோதான்!

இதையெல்லாம் கேனத்தனமாக, ஒரு ஆதாரம் எனக் காட்டும் படுமட்டமான நிலையில் இருக்கும் திராவிடக் குஞ்சாமணிகள், தேவையான அறிவுரைகளை இங்கு பெற்றுக்கொண்டதால் தாராளமான அகலலாம். நன்றி.

மன்னிப்புக் கோரல் குறித்து:

போடா, அறிவில்லாதவனே. புளுகில் புழுக்கும் திராவிடப் பதரே! உன்னைப் போன்ற அறிவிலிகளையும் பொய்யர்களையும் பொருட்டாக மதித்து, இப்படித் தரவுகளுடன் எழுதுகிறேனே – அதற்காக என்னிடம் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நல்ல திராவிடக் குஞ்சாமணி. இதற்கு ஒரு மேலதிகத் தலீவராக நல்ல பெருந்திராவிடப் கடும்புளுகுப் பெருங்குஞ்சாமணி.

போங்கடா…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

எனவே, தான் மேல் இரண்டு நூல் களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபு ராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமா யணத்தில் ராமனும் ஆரியத் தலை வர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள் ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டு மிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப் படுகின்றன. அதில்தான் வைக்கப் புல்லி லிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட் டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத் திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதி விட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்த தாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற்றிற்குத் தகப்பன் மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டி ருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட் சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப் பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக் கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்பட வில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமயமாகவே காட்டப்பட்டிருக் கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப் படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில் ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக் கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மை யையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத் திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித் திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட்டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விப சாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித் திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக்கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதக னாய் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பிறந் தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக் கமாக நடந்து கொண்டிருப்பதாக யாரா லும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத் தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளு டைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப்பெண்டை அடைந்து கூடி இன் புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்.                  - தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள் (1)

 

13.11.1948 - குடி அரசிலிருந்து...

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச் சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறை களையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?


ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரியநூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள் வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப் பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர் களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்


மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறுகிறன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்து ணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற் கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்தி ருக்கக் கூடியனவும் ஆன கருத்துக் களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக் குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத் திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு ராமாயணக் காலட்சேபமா?


நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டு மென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க் கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப் பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப்பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!


கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டி லேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும், எல்லோ ருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்தி ருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. திராவிடர்களை இழிமக்களென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மை யைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும் படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்


ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழி தன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற் பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற் பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படு கின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Stanly Rajan
வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம்

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்

முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்குகு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது

சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் அல்லது வேறு பெயர்கள்

இந்துக்களின் சொல்லை வள்ளுவன் அப்படியே வைத்திருக்கின்றான்

அப்படியே தெய்வம் என்பதும் இந்துக்கள் பெயரே, தமிழ் இந்துக்கள் வணங்க பயன்படுத்திய பெயர். "வானுறையும் 
தெய்வத்துள் வைக்கபடும்" என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன்

முத்தாய்பாக ஐம்புலன்களை கட்டுபடுத்தாவன் நிலைக்கு "இந்திரனே சாலுங் கரி" என ஆணித்தரமாக சொல்கின்றான்

பெண்ணாசையால் இந்திரன் பட்டபாடுகளை சொல்லும் குறாள் அது, இந்திரன் கதை இந்துமதம் தவிர எந்த மதத்தில் இருந்தத்?

அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து

"கோளில் பொறியியற் குணமிலவே எண்குனத்தான்" என்கின்றான் வள்ளுவன் அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம்

இதையே அப்பரும் "எட்டு வான் குணத்து ஈசன்" என அழகாக குறிப்பிடுகின்றார், ஆக வள்ளுவன் இந்துக்களின் நம்பிக்கையினை குறளில் வைத்திருக்கின்றான்

பிறவிபெருங்கடல் என வாழ்வினை சொல்வது இந்துக்களே வள்ளுவன் அதனை குறளில் வைத்திருக்கின்றான்

இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களை குறிக்கின்றான்

வேறு எந்த மதத்து தெய்வம் மலர்மிசை ஏகிற்று?

தானமும் தவமும் என இந்துக்களின் நம்பிக்கையினையே வள்ளுவன் சொல்கின்றான்

இந்துக்களின் தர்மத்தையே துறவு முதல் பல இடங்களில் அவனால் குறளாக வைக்க முடிந்தது

நன்றாக ஆய்ந்து படித்து பாருங்கள், வள்ளுவன் ஒரு இந்து என்பதும், இந்துக்களின் நம்பிக்கையினையும் தத்துவத்தையும் அவன் குறளாக வைத்திருகின்றான் என்பதும் புரியும்

குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்த கழகம் , ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதபட்டது

தொடக்க கால வெள்ளையர்கள் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே

குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யபட்ட கட்டுகதையே அன்றி வேறல்ல‌



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

அதையொட்டித்தான் ராமன் அவ தாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத்தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத்தன்மைகள். ஆண் கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண் டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவார பாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப் பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண்டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வமென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவி களா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பா ரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய் கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கை யைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத் திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத் தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார் களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத் தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக் காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா அவன் முகம் என்று பாடிவிட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத் தகங்களில் எழுதியிருக்கிறோமே, இவ் வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமா யணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குற ளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்துவிட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 16:10

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

அதையொட்டித்தான் ராமன் அவ தாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத்தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத்தன்மைகள். ஆண் கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண் டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவார பாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப் பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண்டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வமென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவி களா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பா ரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய் கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கை யைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத் திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத் தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார் களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத் தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக் காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா அவன் முகம் என்று பாடிவிட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத் தகங்களில் எழுதியிருக்கிறோமே, இவ் வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமா யணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குற ளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்துவிட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (4)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

வால்மீகி ராமாயணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு அரேபியன் நைட் கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன் கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்று தான் வர்ணித்துள்ளார்.

மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங்கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமுக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திரா விட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான், திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப் பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்துவிட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற் குப் பரிகாரம் உடனடியாகச் செய் யப்படவேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட் டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப்படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர் களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடிய வில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப் பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந் தறியாமல் இதையொட்டி அகத்தியன் வளர்த்த தமிழ் என்று புகழ்பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப்புலவர்கள். நாய் நன்றி காட்டு வதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்து விட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட் டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்றுகொண்டு, தாம் பணி யாற்றும் வகையில், ஏனைய திராவி டர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷ ணனைக் கொண்டுவந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.

என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்வி தானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாரா இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந் தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண்டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே.  அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும்.

இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர் களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரிகிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய் கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான், அன்று தொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோ பாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே.

ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும் என்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

திராவிடர் கழகத்தினர் திருக்குறள் மாநாடு நடத்தினார்கள்.

சில பேச்சுகளைக் கேட்டேன். மூன்று குறட்பாக்கள் நினைவிற்கு வந்தன:

"அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்."

"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்"

"பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்."

கயமையையே கொள்கையாகக் கொண்டுள்ள சிலர் திருக்குறளைப் பற்றி இம்மாநாட்டில் பேசினார்கள். இவர்களைப் போன்றவர்களின் பேச்சுகளைக் குறித்ததுதான் முதற் குறள். சத்தம் இருந்ததே தவிர சாரம் இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரியாரிய நாசித் தற்குறிகளையும் வெறியர்களையும் தவிர உலகில் யாரும் ஒரே சாதியையோ இனத்தையோ குறிவைத்துப் பேசமாட்டார்கள். இந்தியாவின் தொன்மையான மொழியாகிய சமஸ்கிருதத்தின் அழகையும், அமைப்பையும் இலக்கிய வளத்தையும் குறைவாகப் பேச மாட்டார்கள்.

இரண்டாவது குறள் இவர்களைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறது.

இவர்கள் நடுவு நிலைமை தவறியதால் ஆக்கங்கள் என்று இவர்கள் மனங்களில் தோன்றியவற்றை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமண எதிர்ப்பு அவற்றில் ஒன்று; சமஸ்கிருத எதிர்ப்பு மற்றொன்று. பிராமண எதிர்ப்பினால் மற்றைய சாதிகளுக்கு நன்மை பிறக்கும் என்றும் சமஸ்கிருத எதிர்ப்பு தமிழுக்குப் பெருமை தரும் என்ற எண்ணங்கள் இவர்களிடம் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது.

மூன்றாவது குறளுக்கு விளக்கம் தேவையில்லை என எண்ணுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவள்ளுவரைச் சமத்துவ நாயகனாக வடிவமைத்தை விட முட்டாள்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஊழை நம்புகிறவர்கள் சமத்துவத்தை நம்புவது என்பது இயலாத காரியம். 
ஊழ், சிற்றினம் சேராமை போன்ற அதிகாரங்களை எழுதியவர் அவர்.

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்.'

'மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.'

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை' போன்ற குறள்களுக்கு வலிந்து பொருள் கொண்டால் ஒழிய திருவள்ளுவர் குல ஒழுக்கம் என்று ஒன்றிருக்கிறது என்பதை நம்பினார் என்பதும் ஊழின் வலிமையின் மீது ஐயப்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரியும். 
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' - இக்குறளில் 'ஊழையும்' என்று சொல்வதிலிருந்தே ஊழை வெல்வது அவ்வளவு எளிதன்று என்று அவர் சொல்கிறார் என்பது வெளிப்படை.

திருவள்ளுவர் அவருடைய காலத்தின் பிரதிநிதி. என்றைக்கும் உண்மையாக இருக்கக் கூடிய குறள்கள் பலவற்றை எழுதியிருப்பதாலேயே அவரை மார்க்ஸின் முன்னோடி, பெரியாரின் கொள்ளுத்தாத்தா, சாதி ஒழிப்புச் செம்மல் என்று சொல்வது முட்டாள்தனம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

13.11.1948-குடி அரசிலிருந்து...

ராவணனை விட்டு விபீஷணன் நீங்கிய தற்கும், சுயமரியாதைக் கட்சியை விட்டு ராம நாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோ பாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன் னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்ப னர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத்கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாத தல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்தி களுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டு விடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.

பித்தலாட்ட போர்வை கீதை! அதற்கு பெரிய நெருப்பு குறள்!

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலி யுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத் தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ண னிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலப மாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித்தாலோ தர்மத்தின் படி நடக்க வேண் டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்த லாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!

குறளை முசுலிம்கள், கிறிஸ்தவர்கள் உட் பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமி சம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரி தமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது.

முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முசுலிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக் களைக் கொண்ட குறள் அடிகளை ஏராள மாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்ட லாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறி யூட்டி, நற்பண்புகளையும் ஒழுக் கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப் பட்ட நூல்தான் திருக்குறள். எனவேதான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடி யுடன் விபூதிப் பட்டையுடன் காட்டு கிறார்கள். அவரோ எம்மதமும் இல்லா தவராகவே தோற்று கிறார். ஒரு இடத்தில் மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண் டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டு மானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டு கிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

இராமாயணக் கூத்து ஏன்?

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்ப தில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக் குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

எவளோ ஒருத்தி சொன்னாளாம் பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசு தாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள் வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண் டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள்.

தொடரும்

ஆரியரின் ஆத்திரம்

வள்ளுவரை ஆரிய மதத்தோடு சேர்த்துக் கொண்டு எப்படி அவர் மறைக்கப்பட்டு வந்தாரோ, அப்படியே புத்தரையும் பார்ப்பனர் மறைத்து வந்ததை வெட்ட வெளிச்சமாக்கு கிறோமே என்கின்ற ஆத்திரத்தின் காரண மாகப் பார்ப்பனர் கண்டபடிப் பேசுகிறார்கள். நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. மேலெல்லாம் மலம் பூசிக் கொண்டு திரிபவன் மற்றொருவ னைப் பார்த்து, 'உன்மேல், கெட்ட நாற்றம்; அடிக்கிறது' என்பது போல்தான் அது.

("புரட்சிக்கு அழைப்பு", என்ற நூலிலிருந்து)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குறள் மல வாடை வீசுகின்றது.
ஆரிய மத சம்பிரதாயங்களையும்,மூட
நம்பிக்கைகளும் கொண்ட நூல் திருக்குறள்.
[20.1.1929 குடியரசில் வடுக பன்றி சொரியான்]
திருக்குறள் ஆரியதருமத்தை,
மனுதருமத்தை அடியோடு கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணரவேண்டும்.
[14.03.1948 மூன்றாம் திருக்குறள் மாநாட்டில்
சூத்திரன் ரோம்சாமி]
இப்படி மாத்திமாத்திப் பேசி நம்மை லூஸாக்கி ஆனால் தன்னோட இனப்பாதுகாப்பை உறுதி செய்த தந்திர நாய்க்கன்.
பெண்கள் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும்.
பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.[சொரியான் சொன்னது குடியரசு 08.02.1931]
கல்யாணம் என்ற அமைப்பு இருப்பதால்தான் கணவன் மனைவி என்ற உறவும் பெண் அடிமைத் தன்மையும் உருவாகின்றது.சொரியான் உரை பெங்களூர் விடுதலை 26.06.1973]
கண்ணகி திருகி எறிந்த மார்பில் பாஸ்பரஸ் இருந்ததா?[சேலத்தில் சொரியான் உரை.22.071951 விடுதலை 28.07.1951]
இல்லறம் என்றாலே சுதந்திரமற்ற வாழ்வு என்று அர்த்தம்.
ஆண்கள் மட்டும் நன்றாகப் படித்து வேலைக்கு போய் நன்றாக சம்பாதித்தால் அதற்கேற்றபடி பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து சுகம் பெற்றுச் செல்வார்கள்.
ஒரு 10,20 பேரிடத்தில் இந்தப் பழக்கம் ஏற்பட்டால் விரைவில் பரவி விடும்.யாரும் தவறாகவும் நினைக்க மாட்டார்கள். [சொரியான் கட்டுரை விடுதலை 02.03 1969]
.
பொறந்தநாளாம் இந்த தேவடியாமகனுக்கு ஏனேனின் இவனோட
கருத்துப்படி சூத்திரர்கள் எல்லாரும் தேவடியாமகன்கள் என்றுச் சொல்லி தமிழரை மட்டும் தேவடியாமகன்கள் என்றே சொல்லிவந்தார் வடுக தேவடியாமகன்.
மலையாளியை ஒரு நாளும் சொல்லவில்லை.
வடுகர்களை ஒரு நாளும் சொல்லவில்லை.
கன்னடர்களை ஒரு நாளும் சொல்லவில்லை.
தமிழரையும்,பண்பாட்டையும்.நாகரீகத்தையும்
இழித்த இழிபிறவி இந்த திராவிட நாதாரி.
த்தூ த்தூ த்தூ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”

22.07.1951-இல் சேலம் பொதுக் கூட்டத்தில் #பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 27.07.1951 தலையங்கம்.

இதுதான் தமிழின் மணிமகுடமாக விளங்குகிற சிலப்பதிகாரத்தை பற்றி பெரியார் பேசியது.

இதில் கொடுமை என்னவென்றால் பெரியாரை பெண்ணிய போராளி என்றும் சமத்துவ எழுஞாயிறு என்றெல்லாம் கதையளந்து கொண்டிருப்பார்கள்.ஆனால் தேவடியாள் மீது பெரியாருக்கு எப்பேற்பட்ட கரிசனம் உள்ளது பார்த்தீர்களா?

இது மட்டும் அல்ல அவர் திருநங்கை மீதெல்லாம் மிக மிக கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்.பிரச்சனைகளை களைய வேண்டும் மானுடம் நல்லதை நோக்கி நகர வேண்டும் என்கிற உயரிய சிந்தனையெல்லாம் அவருக்கு இருந்ததே இல்லை.

எல்லாவற்றையும் வெறுப்பினாலே அணுகினார்.இது ஒரு முற்றிய மனநோயின் அறிகுறி என்று யாரும் சொல்லாததற்கு ஒரே காரணம் அவரால் எந்த நஷ்டமும் தேர்தல் அரசியலில் இல்லாததுதான்.

சென்றமுறை பிக்பாஸ் - 2 வின் போது யாஷிகா,ஐஸ்வர்யா இருவருக்கும் இருப்பது ஓரினச்சேர்க்கை ஈர்ப்பு என்று நக்கலாக விமர்சித்து ஒருவரின் பதிவுக்கு கீழே பெரியார் படத்தை வைத்திருக்கும் ஒருவர் எழுதியிருந்தார்.உடனே பதிவை எழுதியவர் பெரியார் படத்தை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறீர்கள்? பெரியாரை படியுங்கள் என்று மறுமொழி இட்டிருந்தார். .

எனக்கு அதை பார்த்ததும் நகைச்சுவையாக இருந்தது.பெரியார் இருந்திருந்தால் இதை விட கேவலமாக LGBT யை பற்றியெல்லாம் பேசியிருப்பார்.இதை இந்தியாவிற்குள் புகுத்த காரணமே ஆரிய சதி என்று சொல்லி ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்.பிக்பாஸை நடத்துகிற கமல்ஹாசனை ஆரியன் என்று திட்டி தீர்த்திருப்பார்.

எனவே இங்கு பெரியாரை படி என்பவன் மிகப்பெரிய போலி.தான் விரும்பிய எல்லாமும் அதில் உள்ளதாக இவனே கற்பனை செய்து கொண்டு நடைபோடுகிறான்.

தமிழ்-தமிழர்-இலக்கியம் என்பதின் மேலெல்லாம் துளி அக்கறை கூட இல்லாதவர் பெரியார்.சமூகத்தில் அனைத்து பேரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பற்றியெல்லாம் அவர் என்றும் சிந்தித்ததே இல்லை.பழிப்பு,வெறுப்பு,குதர்க்கம் இந்த ஆதார விதிகளில் இயங்கி வந்தவர் அவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமஸ்கிருதம் உலகின் ஒரே அறிவியல் மொழியாம்!

 

- புலவர் பா.வீரமணி -

இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழி (இந்து, 12.8.2019) என்று கூற நாணி, உலகிலேயே என்று கூறியிருப்பதில் மத்திய மனித வள துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அட வாடித்தனமும், சர்வதிகாரப்போக்கும் முண்டியடுத்து வெளிப்பட்டுள்ளது. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.

சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்ட வர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன் மொழி அறிஞர். உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களை யும் ஆழக்கற்றவர், வேதங்களையும், உபநிடதங்க ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங் களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பயன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி யார் சமஸ் கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்ட மிட்ட போது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத் தைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக் கூடம் இலக்கண நுட்பங் களையும் அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத் தில் பெருஞ்சுமையாக ஏற்றி வைக்குமே ஒழிய சமு தாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்பு வாதங்களையுமே தெரிந்துகொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டீஸ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்குப் போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற் கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல், கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - எழுதியவர் - சவுமியேந்திரநாத் தாகூர் - 1972 - பக் - 41- சாகித்திய அகாதெமி

- நன்றி: 'முகம்' மாத இதழ், அக். 2019

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

 

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

 

1. உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள் கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; மக்கள் மேற்கொள்ள வேண்டி யவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத் தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த் தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, மக்கட்செல்வம் என்பது இதன் பொருளாம்.

2. தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற் கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்

(தொல். களவு. 1)

எனவும்,

அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப

(தொல். செய்யுள் 411)

எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது. புறநானூறு :

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிபடூஉம் தோற்றம் போல (புறம். 31)

எனவும்,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம் (புறம், 28)

எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்

(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும் முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவை பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3. வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற் கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற் பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனுஸ்மிருதி, கவுடலீ யம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங் களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக் கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4. யாருக்கு உரியன?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வட மொழிக்குரியனவா? (அல்லது) தமிழ் மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரிய னவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத் துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக் களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத் துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை ‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5. மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக் கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது 'திரிவர்க்கம்' எனப் படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரை யில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனுஸ்மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம் முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6. நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான வற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண் டினராகிய திருமங்கையாழ்வார்,

"......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்

மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்

நன்னெறி மேம்பட்டன நான் கன்றே

எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,

அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்

இருந்தவருக்கு அருளுவது

எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,

அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி...."

எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், நாற் பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி எனவும், நன்னூல் ஆசிரியர் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.

- வியாழக்கிழமை (24.10.2019) தொடரும்



-- Edited by Admin on Friday 25th of October 2019 08:59:20 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமஸ்கிருதம் உலகின் ஒரே அறிவியல் மொழியாம்!

 

- புலவர் பா.வீரமணி -

இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழி (இந்து, 12.8.2019) என்று கூற நாணி, உலகிலேயே என்று கூறியிருப்பதில் மத்திய மனித வள துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அட வாடித்தனமும், சர்வதிகாரப்போக்கும் முண்டியடுத்து வெளிப்பட்டுள்ளது. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.

சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்ட வர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன் மொழி அறிஞர். உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களை யும் ஆழக்கற்றவர், வேதங்களையும், உபநிடதங்க ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங் களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பயன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி யார் சமஸ் கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்ட மிட்ட போது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத் தைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக் கூடம் இலக்கண நுட்பங் களையும் அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத் தில் பெருஞ்சுமையாக ஏற்றி வைக்குமே ஒழிய சமு தாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்பு வாதங்களையுமே தெரிந்துகொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டீஸ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்குப் போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற் கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல், கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - எழுதியவர் - சவுமியேந்திரநாத் தாகூர் - 1972 - பக் - 41- சாகித்திய அகாதெமி

- நன்றி: 'முகம்' மாத இதழ், அக். 2019

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

 

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

 

1. உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள் கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; மக்கள் மேற்கொள்ள வேண்டி யவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத் தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த் தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, மக்கட்செல்வம் என்பது இதன் பொருளாம்.

2. தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற் கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்

(தொல். களவு. 1)

எனவும்,

அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப

(தொல். செய்யுள் 411)

எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது. புறநானூறு :

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிபடூஉம் தோற்றம் போல (புறம். 31)

எனவும்,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம் (புறம், 28)

எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்

(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும் முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவை பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3. வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற் கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற் பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனுஸ்மிருதி, கவுடலீ யம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங் களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக் கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4. யாருக்கு உரியன?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வட மொழிக்குரியனவா? (அல்லது) தமிழ் மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரிய னவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத் துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக் களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத் துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை ‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5. மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக் கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது 'திரிவர்க்கம்' எனப் படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரை யில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனுஸ்மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம் முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6. நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான வற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண் டினராகிய திருமங்கையாழ்வார்,

"......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்

மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்

நன்னெறி மேம்பட்டன நான் கன்றே

எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,

அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்

இருந்தவருக்கு அருளுவது

எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,

அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி...."

எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், நாற் பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி எனவும், நன்னூல் ஆசிரியர் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.- வியாழக்கிழமை (24.10.2019) 



-- Edited by Admin on Friday 1st of November 2019 05:29:00 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ் முப்பால் மரபும், வடமொழி நாற்பால் மரபும் - டாக்டர் தி. முருகரத்தனம்

 

 
1.            உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :
 
“இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன”, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள்கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; 
 
மக்கள் மேற்கொள்ள வேண்டியவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ‘ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை’ எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,  ‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத்தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த்தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, ‘மக்கட்செல்வம்’ என்பது இதன் பொருளாம்.
 
2.            தமிழில் முதற்பொருள்கள் :
 
தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற்கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்”
(தொல். களவு. 1)
எனவும்,
 
‘அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப’
(தொல். செய்யுள் 411)
எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது.
 
புறநானூறு :
‘சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிபடூஉம் தோற்றம் போல’
(புறம். 31)
எனவும்,
‘அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்’
(புறம், 28)
எனவும் கூறுகின்றது.
 
கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,
‘அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்’
(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.
 
இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.
 
இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும்முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவைபற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.
 
3.            வடமொழியில் முதற்பொருள்கள் :
 
இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற்பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனு°மிருதி, கௌடலீயம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங்களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக்கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.
 
4.            யாருக்கு உரியன ?
 
ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வடமொழிக்குரியனவா? (அல்லது) தமிழ்மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரியனவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத்துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக்களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத்துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை
‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)
 
5.            மும்முதற்பொருளின் காலம் :
 
தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக்கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது ‘திரிவர்க்கம்’ எனப்படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரையில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனு°மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம்முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.
 
6.            நாற்பால் மரபு தோன்றல் :
 
இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலானவற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டினராகிய திருமங்கையாழ்வார்,
“......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்
மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்
நன்னெறி மேம்பட்டன நான் கன்றே”
எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,
“அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்தவருக்கு அருளுவது”
எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,
“அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி....”
எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.
 
அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், ‘நாற்பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி’ எனவும், நன்னூல் ஆசிரியர் ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.
 
ஆதலால், தென்மொழி வடமொழி அடங்கிய இந்திய மரபில் முப்பால்மரபு 5, 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்திலும், அதன்பின் நாற்பால் மரபும், வழக்கிற்கு வந்தன எனத் தெளிவாகிறது. இவ்வாறு முப்பால் மரபு, நாற்பால் மரபாக மாறியது என அறியலாம். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றமாக மட்டுமே இது தோன்றவில்லை. இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தின் விளைவே இது எனக் கொள்ளவேண்டும். அந்த மாற்றம் ஓர் அடிப்படையான மாற்றமாகும். இந்திய மக்கள் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைப் போக்கினையும் அதுமாற்றி அமைத்த மாற்றமாகவும் கருதலாம். இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.
 
7.            நாற்பாலின் நோக்கம் :
 
அறம், பொருள், இன்பம் என முப்பால் மரபு வழங்கிய தொடக்கக் காலத்தில் முப்பொருள்களும் ஒரே சீரான சிறப்புப் பெற்றன; ஒரே சீரான அழுத்தம் பெற்றன. அதாவது வாழ்க்கைக்கு அறம் தேவை; அது போலவே பொருளும் தேவை; அதுபோலவே இன்பமும் தேவை. மூன்றுமே சீராகத் தேவைப்படும் என்பது அக்காலத்தின் கொள்கை. மக்கள் அறத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலை வாழ்க்கையாகக் கொண்டனர் என இதனால் அறியலாம்.(1)
 
ஆனால், முப்பால் மரபோடு வீட்டுப்பால் சேர்க்கப்பட்டபோது நான்காவது பாலாகிய வீட்டுப்பாலே சிறந்தது எனவும், மற்றவை அத்துணைச் சிறப்பு இல்லாதவை எனவும், வீட்டுப்பாலே குறிக்கோள் எனவும், மற்றவை மூன்றும் கருவிகள் எனவும் விளக்கங்கள் தரப்பட்டன. இதன்பொருள் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு உரிய அறம், பொருள், இன்பம் புறக்கணிக்கப்பட்ட மறுமைவாழ்வுக்குரிய வீடு போற்றப்பட்டது என்பதாகும். அதாவது சமூகக் கருத்தாக இருந்த முப்பால், சமயக் கருத்தாகக் கொள்ளத்தக்க நாற்பாலாக உற்ற மாற்றமே இது என்பதாகும். இந்த மாற்றமே மக்கள் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றமாகும். உலக விருப்பக் கொள்கையிலிருந்து உலக மறுப்புக் கொள்கைக்கு இந்திய மக்கள் வந்ததாகக் கொள்ள வேண்டும்.
 
இந்த மாற்றம் ஏற்பட்ட காலம். இந்து சமயம் தன் சாத்திரங்களாலும், காவியங்களாலும், தத்துவங்களாலும், வருணாசிரம தர்மம் எனும் சமூக அமைப்பாலும், உருவமும் உறுதியும் பெற்ற காலம் ஆகும். அதாவது ஆரியப் பண்பாடு இந்திய நாட்டுப் பண்பாட்டின் பல
 
கூறுகளையும் தன்மயமாக்கித் தன் மேன்மைக்கும் நலத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட காலமாகும்.
 
இக்காலத்தில் முப்பால் மரபு, பிராமணியமய மாக்கப்பட்ட அதாவது ஆரியமயமாக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக தரப்பட்டது. முப்பால் மரபில் இந்த உலக வாழ்க்கை வற்புறுத்திப் பேசப்பட்டது; சமய வாழ்க்கை சிறப்பாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பாசாம் போன்றவர்கள், ‘அர்த்தமும், காமமும் உலோகாயதக் கருத்துக்கள் கொண்டுள்ளன’ என எடுத்துக்காட்டுவதை கருத்தில் கொள்ளவேண்டும் (2) உலோகாயதத் தத்துவக் கருத்துக்களும் இவ்வுலக வாழ்வை வற்புறுத்தும் கருத்துக்களும் நீக்கப்பட்டு மறுவுலக வாழ்வை வற்புறுத்தும் சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு, வகுக்கப்பட்ட மரபே நாற்பால் மரபாகும். பண்டை அறம் பொருள் இன்பங்களுக்கு அடிப்படையான, இவ்வுலகத்துக்கான கருத்துக்கள் ஆரியர் அல்லாத இந்திய மக்களுக்கும் குறிப்பாகத் திராவிட மக்களுக்கும் உரியவையாக இருந்திருக்கலாம். இந்திய நாட்டின் வாழ்க்கைக்குரிய எத்தனையோ தத்துவக் கருத்துக்களும், சமூகக் கருத்துக்களும், இலக்கிய மரபுகளும், கதைகளும் ஆரியமயமாக்கப்பட்டமை போன்றே இம்முப்பால் மரபும் ஆரிய மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையினையே வடமொழியில் நாம் காணுகின்றோம். தமிழகத்திலும் இது பரப்பப்பட்டது.
 
நாற்பால் மரபின் அடிப்படையான கருத்து. நான்காவதான வீட்டுப்பாலே சிறந்ததாகும் என்பது, மற்ற மூன்று பால்களும் புறக்கணிக்கத்தக்கன என்பதும் ஆகும்.
 
“ஈதல்அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு இட்டதே இன்பம்;
பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு”
என்னும் அவ்வை பாட்டு இதனை எடுத்துக்காட்டும்.
 
ஆரிய மரபு இப்பெருமாற்றத்தினை-இவ்வடிப்படை மாற்றத்தினை, மெல்ல மெல்லச் செய்ததாகத் தெரிகிறது. முப்பால் மரபினை அது முற்றிலும் கைவிடவும் முடியவில்லை. காரணம் அதன் பெருமை போற்றத்தக்கது. அதன் தேவை தவிர்க்க முடியாதது. ஆயினும் இம்முப்பால் மரபினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை! ஆகவே அது அதனை மாற்றி அமைத்தது; நான்காவது பாலே சிறந்தது எனக் காட்டும் அப்பணியினை நிறைவேற்றியது. முப்பாலினையே போற்றி முப்பால் எனவே பெயரிட்டு வள்ளுவர் செய்த திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் முப்பால்களையும் தாழ்த்தி இருப்பதைக் காணலாம். ‘அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றினுள் ஏனைப்பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை மறுமை வீடு என மூன்றையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து’, ‘இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார்’, ‘அப்பொருளைத் துணைக் காரணமாக உடைத்தாய் இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார்’ என்னும் பரிமேலழகரின் உரைக்கருத்துக்கள் ஆரிய மரபின் இயல்பினை எடுத்துப் பேசுகின்றன.
 
அய்யம்
 
முப்பால் மரபினை நாற்பால் மரபாகத் தன்மயமாக்கினும் ஆரிய மரபு எப்போதும் அய்யக கண்கொண்டே முப்பாலை நோக்கி வந்திருக்கின்றது. நான்கு பால்களிலும் எது சிறந்தது என்னும் வாதங்களில் அது புலனாகிறது.
“மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் இது பற்றிப் பேசப்படும் ஓரிடம் குறிப்பிடத்தக்கது. பாரதப் போர் முடிவுற்றுப் பாண்டவர்கள் வெற்றி நிலை நாட்டியபோது எங்கும் பேரழிவு இருப்பது தெரிந்தது. அசுவத்தாமன் பாண்டவர்களுடைய நண்பர்களை முறையில்லாத வகையில் கொன்று குவித்திருந்தான். இப்பேரழிவினைக் கண்டு பாண்டவர்கள் அய்வரும் கசிந்து கண்ணீர் மல்கினர். இந்த உலகில் எதுதான் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்பது பற்றி அவர்கள் விதுரருடன் கூடி ஆராய்ந்தனர். அறமா, பொருளா, இன்பமா எது? விதுரர் அறமே சிறந்தது என அதற்குரிய காரணங்களைத் தந்து பேசினார். அர்ச்சுனன் பொருளேப் போற்றத்தக்க பொருள் எனப் பெரிதாக எடுத்துப் பேசினான். பீமன் இன்பமே சிறந்தது என விரித்துப் பேசினான். நகுலனும் சகாதேவனும் முப்பால்களுமே அளவுடன் மேற்கொள்ளத் தக்கவை எனப் பேசினர். தர்மர் மனநிறைவு பெறவில்லை. இங்கே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது. நான்காம் பாலைப் பற்றி பேச்சு இல்லை”. (தி.மு. குறள்நெறி)
 
இக்கருத்துக்கள் முப்பால்பற்றி ஆரிய மரபு அய்யம் கொண்டிருந்தது என்பதையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஆதலால் அதனுடன் நான்காம் பாலைச் சேர்த்து அதற்கு முதன்மை இடம் தந்து முப்பாலை அது இழிவுபடுத்தியது. அதாவது, இம்முப்பொருள்களையும் கருவிகளாக்கி வீட்டுப்பாலைக் குறிக்கோளாக வைத்தது. இதுவே வடமொழியாக்கத்தின் இறுதிப் பணியாயிற்று. மகாபாரதம் இன்றுள்ள நிலையில் பிராமணியத்தால் தன் தேவைக்கேற்ப மாற்றி எழுதப்பட்டது என அறிஞர்கள் சுட்டுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.(3)
 
திருவள்ளுவரது நூலில் நாம் முப்பாலே காண்கின்றோம். அவர் முப்பாலில் எப்பால் சிறந்தது என எப்போதும் ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை. அவர் எதனையும் கருவியாக்கவில்லை. எதனையும் முடிவாக்கவில்லை. இந்த உலக வாழ்க்கைக்கு எல்லாமே தேவை என்பது அவர் கருத்து போலும். அவர் மரபே தமிழ் மரபு எனக் கொள்ளலாம். உலகச் சிந்தனையாளர் ஆல்பர்ட் ஷ்வைட்சர் இவ்வாறே கருதுகிறார்.(4)
 
இம்முப்பால் மரபு தமிழ் மரபு என்றே நாம் கொள்ளலாம். காரணம் இந்தியா முழுவதிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றிய நூல்களில் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றனையும் எடுத்து ஒரே ஆசிரியரால், ஒரே நூலால் செய்யப்பட்டது இத்தமிழ்த் திருக்குறளே. வடமொழியில் முப்பால் மரபு தொடக்கக் காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை) ஆங்காங்கே சுட்டப்பட்டிருந்தாலும் தர்ம சாத்திரங்களும், அர்த்த சாத்திரங்களும், காமசாத்திரங்களும் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்து இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றாகக் கண்டு விளக்கிய நூல் ஒன்றாயினும் அங்குத் தோன்றவில்லை. திருக்குறள் ஆசிரியர் முப்பாலைப் பற்றி எழுதுகின்றபோது முப்பாலும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை எனப் பார்க்கும் ஒரு விரிந்த பார்வை அவரிடத்து அமைந்திருப்பதை நாம் காணலாம்.
 
வடமொழியில் இம்முழுப் பார்வை, குறைப் பிறவியாகவே அமைந்துள்ளது. அது முழுமை பெறவில்லை. தமிழ் மரபே முழுமைப் பெற்றது. ஆதலால் முப்பால் மரபுக்கு உரியவர்கள் தமிழர்களே எனலாம். தம் முப்பால் மரபினைத் தமிழர்கள் மறந்துவிட்டு, ஆரிய மொழி மயமாக்கப்பட்ட, நாற்பால் மரபினைத் தம் மரபாகப் போற்றி மயங்குகின்றனர். தமிழ் மக்கள் இனியேனும் மயக்கம் தெளிவீராக!
 
 
(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முழு உரை:

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்.

வள்ளுவர் குறளை அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்' என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது' என்று பதில் கூறுவேன்.

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக நாளாக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

நான், 'இப்படி இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இந்த இடத்தில் இப்படி இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன். சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.

புராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துக்கள் ஆட்டம் கண்ட பின்தான், குறளின் பொருளை உணரும் அறிவு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு - பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால், இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன்.

குறளில் இப்படியிருக்கிறேதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்? என்று கேட்காதீர்கள், நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் - நான் குறளை ஆதரிக்கிறேன். அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன், உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்; கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்கள் மாத்திரம்தான் வாங்கிவருவோம். அதுபோலவே, குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன்.

குறளில் எதோ சில குறைகள் இருக்கலாம், இருக்கமுடியும். ஏனென்றால், அது 1950-வது வருடத்திய, இன்றைய மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்தைய சங்கதி, திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. மதவாதிகள் வேண்டுமானால், 'எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்' என்று பலரை
விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.

திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி கிடந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும்.

ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக - குறளே நம்முடைய மதமாக இருத்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே பிறப்பால் இழிந்தவராக ஆக்கிவிட்டார்கள். திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்காவிட்டாலும் அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள். வள்ளுவர் பிறப்பைப்பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால், குறளைப் போன்ற நீதிநெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான்
என்பது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கேவலம் என்பதை மறந்துவிட்டார்கள். இது அக்காலத்தில் அறிவாளிப் பாப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடத்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவுபடுத்திவிட்டார்கள்,

நாட்டில் புராணங்களைப்பற்றியும், இராமன் சீதை தொடர்பு பற்றியும், கந்தன் வள்ளி காதல் லீலைகள் பற்றியும், கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகளுடனான லீலைகள் பற்றியும் எல்லோருக்கும் - பாமரர்கள்,
பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற்கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்; தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது, தெரிய வாய்ப்பும் இல்லை. இந்தப்படியாக குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ மக்கள் மனத்தில் குறளின் கருத்துக்கள் புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.

நான், ஆரியக் கருத்துக்களெல்லாம் - அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவைகளெல்லாம் ஒரு கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன
என்று கூறி அவைகளை, ஆரியக் கருத்துக்களை அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர்
உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது. ஆகவேதான், நாம் வள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம்.

வள்ளுவர் யார், எந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர், ஆரியக் கருத்துக்களைக் கண்டிப்பவர், அவைகளை வெறுப்பவர் என்று தான் நமக்குத் தெரிகிறது.
அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை.

அவ்வளவு காலம் ஆரியக் கருத்துக்களை எதிர்த்து, அதற்காகத் துன்பங்கள் பல பட்டிருக்கும் சமணர்களும் திருக்குறளை ஆதரிக்கிறார்கள். சைவ சமயத்தாரும், வைணவ மதத்தாருங்கூட. திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக்கொள்ளுகின்றனர். இஸ்லாம் மதத்தவர்களும், கிறிஸ்துவ மதத்தவர்களும் திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தை தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாளவேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது.

குறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு இடத்திலாவது 'இந்து' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது 'இந்து' என்ற சொல் காணப்படவே இல்லை,

அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்சத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை . குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர வீடு-மோட்சம் பற்றி அவர் கூறி
இருப்பதாக இல்லை. அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவுகளைக் கூறுகிறார். மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டார்.

திருவள்ளுவர் கடவுளைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில், 'கடவுள் வாழ்த்து' என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம்பெறவில்லை. மேலும், இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழாரம் அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், 'குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச்செருகல் என்று. சிலர், 'அப்படியெல்லாம் இல்லை வள்ளுவர் பாடியதுதான்' என்று கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக்கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு இருக்கின்ற கடவுள்களுக்கா வள்ளுவர்
வாழ்த்துக் கூறினார்? இல்லை, கடவுள் வாழ்த்தில் வரும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் 'கடவுள்' என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு, 'எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த என்பதாகக் கடவுளைக் குறிக்க கடவுள் என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கையாளவில்லை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல குறள் முழுவதிலுமே 1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் -
உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை .

இரண்டாவது, கடவுள் வாழ்த்து என்பதே கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதியாகும். சர்வ வல்லமையும் படைத்த, நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு கடவுள் வாழ்த்து' என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி கடவுள் என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா?

வள்ளுவர் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சர்வ வல்லயையுடைய சர்வேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுக்களோடு குறளை நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுக்கள், அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காதத்தான். வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகன கருத்துக்களை வைத்துத்தான் வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

-விடுதலை, நாள்: 30 - 05 -1950



-- Edited by Admin on Friday 8th of November 2019 10:09:46 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார்

v3.jpg

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனு டைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடை முறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?

ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப் பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்

மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறு கின்றன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும் பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக் கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு

ராமாயணக் காலட்சேபமா?

நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப் பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!

கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத் தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டிலேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட் டுக்காரப் பையன் வரையும், எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டி யாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரை களும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட் டது. திராவிடர்களை இழிமக்களென்று வலி யுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்

ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருது கிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டது தான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற்பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட் டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித் தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படு கின்றன. அதில்தான் வைக்கப் புல்லிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டு மானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத்திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்ச பாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை யில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற் றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப் படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத் தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண் டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத் தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர் கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனு மார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப் படவில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமய மாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில்

ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும் தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக் கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட் டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விபசாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக் கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதகனாய் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசர தனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப் பெண்டை அடைந்து கூடி இன்புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, "மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்." அதையொட்டித்தான் ராமன் அவதாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறி கொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப் பட்ட தெய்வத்தன்மைகள். ஆண்கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவாரபாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதா யிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப்பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண் டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வ மென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்ட தட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவி களுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர் பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக் கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண் டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோச லையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய் கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும் போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத்தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளு கிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக்காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் "அன்றலர்ந்த செந் தாமரையை வென்றதம்மா அவன் முகம்" என்று பாடி விட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத்தகங்களில் எழுதி யிருக்கிறோமே, இவ்வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்து விட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள். வால்மீகி ராமா யணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு "அரேபியன் நைட்" கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன்கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்றுதான் வர்ணித்துள்ளார். மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத் துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள் ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனு டைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடை முறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?

ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப் பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்

மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறு கின்றன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும் பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக் கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு

 

ராமாயணக் காலட்சேபமா?

நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப் பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!

கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத் தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டிலேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட் டுக்காரப் பையன் வரையும், எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டி யாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரை களும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட் டது. திராவிடர்களை இழிமக்களென்று வலி யுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்

ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருது கிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டது தான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற்பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட் டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித் தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படு கின்றன. அதில்தான் வைக்கப் புல்லிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டு மானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத்திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்ச பாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை யில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற் றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப் படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத் தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண் டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத் தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர் கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனு மார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப் படவில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமய மாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில்

 

ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும் தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக் கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட் டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விபசாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக் கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதகனாய் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசர தனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப் பெண்டை அடைந்து கூடி இன்புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, "மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்." அதையொட்டித்தான் ராமன் அவதாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறி கொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப் பட்ட தெய்வத்தன்மைகள். ஆண்கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவாரபாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதா யிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப்பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண் டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வ மென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்ட தட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவி களுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர் பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக் கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண் டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோச லையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய் கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும் போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத்தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளு கிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக்காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் "அன்றலர்ந்த செந் தாமரையை வென்றதம்மா அவன் முகம்" என்று பாடி விட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத்தகங்களில் எழுதி யிருக்கிறோமே, இவ்வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்து விட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள். வால்மீகி ராமா யணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு "அரேபியன் நைட்" கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன்கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்றுதான் வர்ணித்துள்ளார். மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத் துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள் ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

 

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

புதன், 13 நவம்பர் 2019 16:2

v18.jpg

சென்னை, நவ. 13- திருவள்ளுவரை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை, ருத்திராட்சம், விபூதி ஆகிய இந்து மத அடையாளங்களுடன் திருவள் ளுவர் படம் வெளியிடப்பட்டதைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (12.11.2019) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக பொதுச்செயலாளர் து.ரவிக் குமார், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

"கடவுள், மதம், ஜாதி, கோவில், மோட்சம், நரகம், மறுபிறப்பு, ஆத்மா என்ற சொல்லை எங்கும் பயன்படுத் தாதவர் திருவள்ளுவர். “கடவுள் வாழ்த்து‘ என்று அதிகாரம் பிரித்தவரும் திரு வள்ளுவர் கிடையாது. இந்த நிலை யில் திருக்குறள் ஹிந்து நூல் என்பது மோசடியே"- என்றார் திராவிடர்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள்.

எழுச்சித் தமிழர் உரை

இதில் திருமாவளவன் பேசியதா வது: உலகப் பொதுமறையான திருக் குறளை எழுதிய திருவள்ளுவரை இந்து மதத் துறவி என்று அடை யாளப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி புதிது இல்லை என்றாலும் இப்போது சில மாதங்களாக இந்துத்துவ சக் திகள் திருவள்ளுவர் தங்களுக்கு மட் டுமே உரியவர் என்று சொந்தம் கொண் டாடி வருகின்றனர். திருவள்ளுவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இதை சாதாரண மாக எடுத்துக் கொள்ள முடியாது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை. மதம் என்ற கட்டமைப்பே இல்லாமல் வழிபாட்டு முறைகள் இருந்த காலம் அது. மனிதர்கள் அனைவரும் சமம். பிறப்பின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்று உயரிய கருத்தைச் சொன்னவர் திருவள்ளுவர். அவரது சிந்தனைகள் இந்து மதத்துக்கு எதிரானது. எனவே, அவர் இந்து துறவியாக ஒருபோதும் இருக்க முடியாது.

அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட மதச்சாயம் பூசியவர்கள் மீதும், வள் ளுவரின் சிலைக்கு காவி சால்வை அணிவித்து அவமானப்படுத்தியவர் கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக் காமல் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வள்ளுவரை அவமானப்படுத்தியவர் கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிந்தனை செல்வன், மு.முகமது யூசுப், எஸ்.எஸ்.பாலாஜி, த.பார்வேந்தன், வி.கோ.ஆதவன், அ. அசோகன், வீர.ராஜேந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆச்சாரியார்,நேரு,பிரசாத் இவர்களை விட அந்தஸ்த்தில்,பணம் காசில் இவர்களில் யாருக்கு நான் குறைந்தவன் என்று சொல்ல முடியும்? இரண்டு தலைமுறையாக நாங்கள் பெரிய வியாபாரக் குடும்பம்;செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ள பெரியதனக் குடும்பகாரர்களாயிற்றே!

எந்த பார்ப்பனத் தலைவர்கள் என்பவர்களாகட்டும்,அவர்களுடைய முன் தலைமுறையை எடுத்துப் பார்த்தால்,அவர்கள் புரோகிதர்கள்தானே! அவர்கள் வீதி விளக்கு வெளிச்சத்தில் படித்த போதே அந்தஸ்து உள்ளவனாக,பெருமைக்கு உரியவனாகத்தான் நானிருந்தேன்.

#பெரியார் 31-01-1934 சென்னை சொற்பொழிவு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெரியாருக்கு இருக்கிற பிரச்சனை முழுவதுமாக வெளிப்பட்ட வரிகள் இவை என்று நினைக்கிறேன்.பெரியார் தான் காங்கிரஸில் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை விட தனக்குரிய மரியாதை தன்னை விட குறைவானவர்களுக்கு கிடைக்கிறது என்கிற அந்தஸ்து மோதல்தான் அவரை வாட்டியிருக்கிறது.

அந்த வரிகளை கூர்மையாக வாசியுங்கள்.பிராமணன் முன் தலைமுறையில் புரோகிதம்தானே பார்த்திருப்பார்கள்? நான் எப்பேற்பட்ட பணக்கார குடும்பம் தெரியுமா என்கிறார்.அதாவது,பிராமணனையே புரோகிதம் செய்ய வைத்த குடும்பம் என்று சொல்ல வருகிறார்.அடுத்தது,அவர்கள் தெரு விளக்கில் படித்த போது நாங்கள் எப்பேற்பட்ட ஆள் தெரியுமா என்கிறார்.நிற்க.

இதுதான் அடிப்படை கேள்வி எழ வேண்டிய இடம்.பெரியார் சொல்கிறபடி பிராமணன் சதி செய்திருந்தால் எப்படி சூத்திரன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பெரியார் குடும்பம் இப்பேற்பட்ட பணக்காரர்களாக இருந்திருக்க முடியும்?

வர்ணாஸ்ரமத்தில் சூத்திரர்கள் இவ்வளவு அதிகாரத்தை வைத்திருந்தார்கள்,அந்தஸ்தோடு இருந்தார்கள் என்றால் இரண்டாயிரம் வருடம் பிராமணன் அழுத்திவிட்டான் என்பது எப்பேற்பட்ட அபத்தவாதம்? இந்த இரட்டை நிலைப்பாடு இன்று வரை திமுகவிடம் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களிடம் வெளிப்படுவதை பார்க்கலாம்.

உண்மையில் பெரியார் விரும்பியது பழைய நாயக்கர் பாளையங்களின் அதிகாரத்தை.இன்னும் சொல்லப் போனால் தென்னிந்தியாவில் விஜயநகர பேரரசுகள் கோலோச்சிய அதிகாரத்தை மீட்கத் துடித்தார்.அதற்கு அவர் திராவிடஸ்தான் என்ற பெயர்களை வைத்துக் கொண்டால் கூட அதனுடைய மூலம் கட்டியெழுப்ப நினைத்தது பாரம்பரிய பெருமையைத்தான்.

அது முடியாமல் போகிற போது,மக்கள் எழுச்சியை காங்கிரஸ் உருவாக்கி அதில் சாதரண மனிதர்கள் அரசியல் அதிகாரத்தை நமக்கு சமமாக பெற்று நமக்கு மேலேயும் செல்கிறார்கள், என்பதை தாங்க முடியாமல் வேறொரு அரசியலை கையிலெடுக்கிறார்.எனக்கு மீண்டும் அதிகாரத்தை தராத அல்லது அதற்கு தடையாக இருக்கிற பிராமணர்களையும் அவர்களுக்கு மரியாதை தருகிற ஹிந்து மதத்தையும் என எல்லாவற்றையும் கரித்துக் கொட்டும் அரசியலை கையிலெடுத்துவிட்டார்.

பெரியார் பொதுவுடைமை வழி சமத்துவவாதி என்றால் அவர் கலப்புத் திருமணத்தை ஆதரித்திருக்க வேண்டும்.ஆனால் அவர் பிராமணனுக்கும் நமக்கும் நடந்தால்தான் கலப்பு என்கிறார்.கோவிலில் சூத்திரர்களுக்கு நிகராக பஞ்சமர்களை விட்டுவிட்டீர்கள் என்கிறார்.இதெல்லாம் பொதுவுடைமை வழியிலான சமதர்மத்தை விரும்பும் ஒருவரால் பேச முடியுமா?

அதோடு தனக்கு கீழ்படியும் போர் வீரர்களையே கேட்டார்,உண்மையில் இது மன்னர் காலம் என்றால் அவர் கேட்டது நவகண்டம் கொடுத்துக் கொள்கிற படையை.கடைசி வரை அவர் துளிகூட ஜனநாயகம்,வாக்குரிமையை எல்லாம் மதித்தவர் அல்ல.

பால்தாக்கரே ஏன் அதிகாரத்தில் பங்கு கொள்ளவில்லை? அதற்கு மிக முக்கியமான உளவியல் காரணம் அவர் யாருக்கும் சலாம் போட விரும்பவில்லை,அதைத்தாண்டி தனக்கு சமமாக யாரையும் அவர் நினைத்துக் கூட பார்த்ததில்லை.தன்னை நிகரற்ற அரசனாக அவருடைய மனம் கற்பனை செய்து விதைத்து மரமாக வளர்த்துவிட்டது.ஆனால் பால்த்தாக்கரே தன் சிவசேனாவை தேர்தல் களத்தில் நிரூபித்தார்.

பெரியார் தேர்தல் களத்தையே வெறுத்தார்.அதை கடைசி வரை நம்பாமலே தனக்கு நிகர் யாருமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.அதனுடைய வெளிப்பாடுதான் அவர் மேற்கண்டபடி யாருக்கு குறைந்தவன் நான்? என்று பேச வைத்திருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sadanandam Krishnakumar
May 31, 2018 ·
பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

ஈ.வே.ரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்று சிலர் கூறுகிறார்கள்.

அவர் பறைச்சி ரவிக்கை போட ஆரம்பித்தது துணிவிலை ஏறக் காரணம் என்று பேசியது பலராலும் அன்று கண்டிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசினாரா?
தாழ்த்தப்பட்ட மக்களை அவர் எவ்வாறு நோக்கினார் என்று இங்கே அலசுவோம்.

இந்த பேச்சை கருணாநிதி தனது முரசொலியில் 1962 ம் ஆண்டின் பொங்கல் சிறப்பு இதழில் கோட்டோவியம் (கார்ட்டூன்) போட்டு வெளியிட்டார்.
(அப்போது திமுக வும் ஈவேராவும் எதிரிகள்.
1968ல் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்கள் சேர்ந்துகொண்ட பிறகு ஆறாண்டுகள் கழித்து ஈவேரா பேசிய சப்பையான விளக்கத்தைதான் பதிலாகத் தந்து பலரும் அவர் நல்லவர் என்று காட்ட முயல்கிறார்கள்)

அன்பு பொன்னோவியம் என்பவர் 2.3.1963 அன்றைய "நாத்திகம்" வார இதழுக்கு 'ஆசிரியர் அவர்களுக்கு' பகுதியில் "ஆதி திராவிடர்களும் பெரியாரும்" என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார்.

அந்த கடிதம் ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசியதையும் அதன்பிறகு அதற்கு சரியான விளக்கமோ மன்னிப்போ கூறாதிருந்ததையும் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
ஈவேரா ஆரம்பித்திலிருந்தே இப்படி பேசிவந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே படியுங்கள்

** "துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்!
வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்"
என்று பெரியார் கூறியதாகச் செய்திகள் வந்த போது மலைத்து விட்டவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்று நான் அப்பாவி அல்ல.
ஏனெனில், 1939ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரியாரை கூர்ந்து கவனித்து வரும் பல பேர்களில் நானுமொருவன்.

எங்களது நினைப்பிற்கு காரணம் பெரியார் அவர்களோ, அன்றி அவரது பத்திரிகையோ,

அது பற்றிய விளக்கத்தை தராமையாலும்,
பொதுக் கூட்டங்களிலும் கூட அதைப்பற்றி பேச்சு எழாததாலும்,
குறிப்பாக சமீபத்தில் நடந்த மாநாட்டின் போது அதைப் பற்றிய தகவல் எதையும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் எங்களுக்கு மலைப்பு ஏற்பட்டதில் தவறில்லை.
பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களைச் சாடி பழித்துப் பேசியிருக்கிறார்.**

சென்னையில் அம்பேத்கரிஸ்ட்கள் நடத்திய 'அம்பேத்கர்' இதழின் சூட்டுகோல் பகுதியில் (1963 நவம்பர் & டிசம்பர்)

"ஒரு முறை ஈ.வெ.ரா.
துணி விலை ஏறி விட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டதுதான் என்று கூறினார்.
அன்று மறுப்பு கூறினோம்."
என்று வெளியானது.

கே.எஸ். சீதாராமன் அவர்கள் தான் எழுதிய
"கோலார் தங்கவயல் வரலாறு" எனும் (1989. பக்.193) நூலிலும் பெரியாரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி திராவிடர் வேறு, ஆதி திராவிடர் வேறு என்றே பெரியார் கருதியதாக குறிப்பிடுகிறார்.

இனி தாழ்த்தப்பட்டவரை ஈவேரா எப்படி பார்த்தார் என்று அலசுவோம்

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
(குடியரசு 16.6.1926.)

இங்கே நாங்கள் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினரை
நீங்கள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவோரை
(அதாவது தாழ்த்தப்பட்டவரை)

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதி திராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)

இதன்பொருளும் மேற்கண்டதை ஒத்ததே.

அதாவது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதிகளின் தளபதியாகத்தான் ஈவேரா தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

அவர் தாழ்த்தப்பட்டோரை மட்டுமன்றி கிறித்துவ இசுலாமியரையும் கேவலமாகக் கருதினார்.
ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

// 1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன.//

அதாவது தாழ்த்தப்பட்டோர் கீழ்த்தரமானவர்களாம்.
பார்ப்பனர்களைப்போல பிறமதத்தினரும் தாழ்த்தப்பட்டோரும் பிராமணரல்லாத சாதியாருக்கு எதிரிகளாம்.

மேலும் கூறுவதைப் பாருங்கள்.

// நம்மில் கீழ்த்தர மக்கள் என்பவர்கள் தங்களுடைய இழிநிலை பற்றி கவலை இல்லாதவர்கள்.

சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள்//

ஆக தனது 85 வயது வரை ஈவேரா தாழ்ப்பட்டோரை இழிவாகத்தான் கருதியுள்ளார்.

பறையர்களைக் கேவலமாகப் பேசிய அதே ஆண்டு அவர் சிறுபான்மையினரையும் இசுலாமியரையும் கேவலமாக எழுதியுள்ளார்.

"நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,
தனி நீதி போன்ற காரணத்தினாலும்,
மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,

நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து,
வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)

ஈவேரா பார்ப்பனரை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை ஆதிக்கசாதிகள் பிடிக்க உழைத்தவரே அன்றி அவர் தாழ்த்தப்பட்டோருக்காகச் சிறுதுரும்பையும் அசைத்ததில்லை.

ஏற்கனவே டி.கே.மாதவன் என்பவர் நடத்திவந்த வைக்கம் போராட்டத்தில் ஈவேரா கடைசியாக பத்தோடு பதினொன்றாகத்தான் போய் கைதானார்.

நாடார் ஆலையநுழைவுப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதும் இவ்வாறே.

இடவொதுக்கீடு போராட்டமும் இவ்வாறே.

ஆக கடைசிக்கட்டத்தில் போய் பங்குகொண்டு ஏதோ தானே முதலில் இருந்து முன்னின்று நடத்தியதைப் போலப் பீற்றிக்கொள்வது அவர் பாணி.
அவரது சீடர்களும் அந்த போராட்ட வரலாற்றை அப்படியே ஈவேராவுக்கு எழுதிவைப்பார்கள்.

பெரியாரால்தான் இதெல்லாம் நடந்தது என்பதைப்போல திரித்து எழுதுவார்கள். இனியும் இப்பொய்யர்களை நம்பவேண்டாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

மீள் பதிவு:
பெரியாரியவாதிகள்திராவிடத் தந்தை எழுதிய குப்பைகளைக் கூட படிக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு சான்று:

தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல்) ஆங்கில எழுத்துகளை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துக்களைத் தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவேயில்லை. இந்நிலையில் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று ஒரு லட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாராடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்கிறாய்?

தமிழை ஒதுக்கி விட்டால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொளவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழில் இருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?"
பெரியார் 1968

பெரியாரியர்களுக்கு தர்க்க ரீதியாக சிந்தித்தால் தலைவலி மண்டையைப் பிளந்து விடும் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் தர்க்கரீதியாகக் கூடச் சிந்திக்கவும் தேவையில்லை. இதில் பெரியார் தெளிவாகச் சொல்கிறார். தமிழை ஒதுக்கி விடு என்று. ஆங்கிலம் படிப்பது தமிழை ஒதுக்கினால்தான் முடியும் போன்ற இருமையான சிந்தனைகளைப் பரப்பிக் கொண்டே தன் காலத்தைக் கடத்தி தமிழர்களையும் சீரழித்தவர் பெரியார். எனவே அதே இருமை மொழியில் சொல்லப் போனால் பெரியாரியர்கள் அவருடைய சீடர்களாக இருக்க விரும்பினால் தமிழை ஒதுக்கி விட வேண்டும். தமிழை ஒதுக்க விரும்பாவிட்டால் பெரியாரை ஒதுக்கி விட வேண்டும். அல்லது குறைந்த பட்ச அறிவாவது இருந்தால் ஏதோ தமிழருக்கு விடிவெள்ளியாக வந்தவர் பெரியார் என்று புருடா விடுவதையாவது விட்டுவிட வேண்டும்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard