New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கன்னடன் ஈ வெ ராமசாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கன்னடன் ஈ வெ ராமசாமி
Permalink  
 


வேதம் ஓதி, பகுத்தறிவு பேசி, சுயமுரண்பட்டு.....

 

இவை தாம் ஈ வெ ராமசாமி என்பவர் பேசிய.. "பகுத்தறிவுகளின்" சாரம்சம். அவற்றுள் பலவற்றுள் அவரே முன்னுக்குப் பின் சுய முரண்படுகிறார். அதுமட்டுமன்றி யாழ் களத்தில் பேச தடைசெய்யப்பட்ட சொற்களும் அவர் பாவிச்ச வடிவத்தில் இருப்பதால்.. அவருக்காக தணிக்கை செய்யாமல் விடவும்.

 

தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும்.. இந்து மதத்தின் மீது காங்கிரஸின் மீதும் கொண்டிருந்த வெறுப்பும்.. தான் கன்னடன் என்ற இறுமாப்பும்.. இவரின் கருத்துக்களில் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம்.

 

இடையிடையே தமிழர்களை சமாளிக்க தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க.. ரஜனி ஸ்ரைலில்.. தத்துவம் பேசி தமிழ் மக்களை நெகிழ்விப்பத்தையும் காணலாம். யாழ் களத்திலும் இந்த பகுத்தரிவு வாதங்கள் நிறைந்து வருவதும்.. யாழ் கள நிர்வாகம் பிரச்சார மயமாக்கப்பட்ட வடிவில் அதை இங்கு அனுமதித்து வருவதும் அதற்காக ஒத்துழைப்பதும் கண் கூடு. மக்கள் சுயமாக இவை குறித்து சிந்திக்கவும் பகுத்தறியவும்.. பகுத்தரிவு வாதத்தின் உண்மையைத் தன்மையை இனங்காணவும் என்று இவை இங்கிடப்படுகின்றன.

 

தமிழ் காட்டுமிராண்டி பாஷை

 

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

 

தமிழால் என்ன நன்மை?

 

தமிழ் தோன்றிய 3000 - 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

 

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்

 

"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.

 

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

 

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

 

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

 

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.

 

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

 

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

- பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.

 

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

 

நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

 

சிலப்பதிகாரம்

 

இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, "பத்தினி'த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.

 

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

 

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் - முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?

 

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

 

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

- பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.

 

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்

 

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

 

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு - காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை - ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே - என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

- "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.

 

கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி !

 

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் "பூச்சாண்டி, பூச்சாண்டி' என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.

 

- "மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்' என்ற நூலிலிருந்து.

 

பெண்களும் கற்பும்

 

பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

- 3.11.1935 "குடி அரசு' இதழ்

 

பெண்களுக்கு அறிவுரை

 

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

- "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து.

 

உண்மையான சமரசம்

 

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

- "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.

 

பெண்ணடிமை ஒழிய...

 

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.

 

பெண் விடுதலை

 

...கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான, நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்... கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

-"உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்

 

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

 

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

 

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அடிமைத்தனம்

 

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்.

 

கற்பு என்பது புரட்டு

 

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட விளங்கும்.

 

ஒழுக்கம் அவசியமில்லை

 

சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்.

 

கர்ப்பத்தின் விளைவு

 

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

- "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலிலிருந்து.

 

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!

" தந்தை பெரியார் " சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

 

கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

 

" தந்தை பெரியார் " குடிஅரசு 29.10.1933 - "விடுதலை' வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

 

கர்ப்பம் இடையூறானது !

 

""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது.

...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.

 

- குடியரசு கட்டுரை 1.3.1931

 

""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது...

"தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு - விடுதலை 28.6.1973

 

நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?

-தந்தை பெரியார் "வாழ்க்கைத் துணை நலம்' எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்களின் சூழ்ச்சி !

...அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

 

பெண் விடுதலை

 

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

 

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும்- என்பது நமக்குப் புரியவில்லை.

-"குடியரசு' (12.8.28)

 

பத்தினி என்பது முட்டாள்தனம்

 

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

- "விடுதலை' (4.5.73)

 

தேசிய குற்றம்

 

ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?

 

ஆண் போல நடக்க வேண்டும்

 

...எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை "பெண் இனம்' என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது.

- திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவு

 சுயேச்சைக்கு விரோதம்

 

...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.

- "குடியரசு' (6.4.1930)

 

திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது

 

புருஷன் - மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து திருமண முறையில், புருஷன் - மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.

 

""நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை - ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா?

 

கண்ணகி பற்றி..

 

"".....கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது - என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்... கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்.

 

""அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் "பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?

 

""அக்கினி பகவானுக்கு கண்ணகி, "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!' என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?...

""...பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான்.

 

ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் "குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது?

 

""இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!...''

 

(28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை ஆதாரம் : 22.12.2001 விடுதலை)

 

உப்பு, மிளகாயா பெண்கள் !

 

"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?

- "விடுதலை' (11.10.48)

 

கல்யாண முறை ஒழிய வேண்டும் !

 

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது , அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?

- "விடுதலை' (28.6.73)

 

தமிழனுக்கு தனிவழி கிடையாது !

 

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது.

- "குடியரசு' (27.11.43)

 

எல்லாமே தமிழ்தான் !

 

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து

 

தமிழின் பெயரால் பிழைப்பு !

 

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், "தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன்' என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது.

- "விடுதலை' (16.3.67)

 

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது !

 

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.

- "விடுதலை' (27.11.43)

 

இன்றைய தேவை ஆங்கிலம் !

 

...நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- "மொழியும் அறிவும்' நூலில் பெரியார்

 

முக்கொலை !போதாக்குறைக்கு "பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்' என்றும் நாங்கள் "பகுத்தறிவுவாதிகள்' என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், "தமிழுக்கு தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்' என்று சொல்கிறார்கள் என்றால், இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், "மக்களை முட்டாள்களாக்குகிறோம்' என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்த சிப்பாய்கள் வேலை?

- "விடுதலை' (5.4.67)

 

திருக்குறளைக் கண்டிக்கிறேன் !

 

...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.

- பெரியார் பேட்டியிலிருந்து

 

கெட்ட நாற்றம் !

 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், "எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் "இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

- "விடுதலை' (1.6.50) "கலைமகள்' (பிப்ரவரி 73)

 

சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி !

 

...இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை ஆரிய கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணியால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றாளோ - அதுபோலத்தான் இந்த சிலப்பதிகாரம் ஆகும்.

- "விடுதலை' (28.7.51)

 

சுதந்திர நாள் அல்ல, துக்க நாள் !

 

என்னைப் பொறுத்தவரையில் நான் இதை "சுதந்திரம் பெற்ற நாள்' என்று சொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக் கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்றுதான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான்.

 

காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத் தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத் தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத் தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும் மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

- "விடுதலை' தலையங்கம் (15.8.72)

 

ஏமாற்றுத் திருவிழா !

 

...ஆதலால், வெள்ளையருக்கும் காங்கிரஸுக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டிலுள்ள காங்கிரஸல்லாத மக்களுக்கு நன்மை இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை... ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையை விட மோசமான ஆட்சியேயாகும்... ஆதலால் இம்மாதம் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் "ஆரியர் - பனியா' ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.

- "விடுதலை' (20.8.72)

 

சுதந்திரம், சோறு, மானம் இல்லை !

 

பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியாவிடில் சுதந்திரம் இல்லை சோறு இல்லை மான வாழ்வு இல்லை. இது உறுதி! உறுதி! உறுதி!

- "விடுதலை' (25.2.49)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வடநாட்டான் பிரதமராக இருக்கலாமா?

 

வெள்ளையன் ஒழிந்தது போல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா, இந்நாட்டை விட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின், எதற்காக ஒரு "இமயமலைப் பார்ப்பான்' - ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்... எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்து விட்டு, இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக் கூடாதா?

- "விடுதலை' (19.10.48)

 

சுதந்திரத்தின் சரித்திரம் !

 

...சுதந்திரத்திற்கும், காங்கிரஸுக்கும் அதன் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் சம்பந்தமில்லை. வெள்ளையன் தானாகவே வீசி எறிந்து விட்டுப் போன சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள, இந்தியாவில் கட்டுப்பாடான வேறு கட்சிகள் இல்லாமல் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் மாத்திரம் இருந்ததால், முஸ்லிம் லீகுக்கு பயந்து இணங்கி ஆளுக்கு கொஞ்சமாக பங்கு போட்டுக் கொண்டார்கள். அதாவது அனாதியாகக் கிடந்ததை பங்கு போட்டுக் கொண்டார்கள். இதுதான் சுதந்திரத்தின் சரித்திரம்.

 

அநியாயம் நிறைந்த அரசியல் சட்டம் !

 

இந்திய அரசாங்கமானது அநியாயம் நிறைந்து விளங்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும் அரசியல் நிர்ணயசபையாவது ஒழுங்கானது என்று சொல்ல முடியுமா?

- "விடுதலை' (22.9.51)

 

அரசியல் சட்டம் ஒழியட்டும் !

 

எனவே, இவர்களால் செய்யப்பட்ட அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை என்று நாம் கூறுவது மட்டும் போதாது. அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி தேடித்தான் ஆக வேண்டும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை. ஆகையால் அதன் கீழ் நாம் சட்டசபைக்குப் போவது சரியில்லை என்பதை உணர வேண்டும்.

- "விடுதலை' (22.9.51)

 

நெருப்பில் போட்டு பொசுக்குவோம் !

 

நான் சொல்கிறேன் "இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்கு தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டு பொசுக்குவோம்....'

- "விடுதலை' (7.8.52)

 

தேர்தலுக்காக !

 

காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.

- "விடுதலை' (30.3.67)

 

அண்ணாதுரை பற்றி பெரியார் !

 

அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?

 

பொதுத் தொண்டன் எப்படி இருக்க வேண்டும் ?

 

பொதுத் தொண்டனுக்கு தன்னால் பாதுகாக்க, பெருக்க வேண்டிய பெரிய தொழில், சொந்த சொத்து இருக்கக் கூடாது. இருந்தால் எதிரிகளுக்கு பயந்து இலக்ஷியத்தை விட்டுக் கொடுக்க நேரும். மனைவி, பிள்ளை குட்டிகள் இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது. பொதுத்தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து, ஆனால் ""நான் பொதுத் தொண்டன். தியாகி. கஷ்டப்பட்டவன்'' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு. அப்படி நினைப்பாயேயானால், நீ மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவன் - என்றுதான் சொல்ல வேண்டும்.

-பெரியார் எழுதிய "கழகமும் துரோகமும்' என்ற நூலிலிருந்து.

 

இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது

 

யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிற வரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காக பல காரியங்களைச் செய்ய பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்.

- "விடுதலை' (27.1.1970)

 

எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

 

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

- பெரியார் எழுதிய "நமது குறிக்கோள்' என்ற நூலிலிருந்து.

 

மது தேவை !

 

குடிப்பது தவறில்லை. கள் குடிச்சு செத்தவங்க எத்தனை பேர் சொல்லுங்களேன்... நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக் கடை எல்லாம் மூடி இருந்தாங்களே, அப்ப குடிக்காம இருந்தாங்களா? குடிச்சிகிட்டுத்தான் இருந்தாங்க. ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கலை. வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம்... ஜனங்க சோம்பேறியாய் ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான்.

 

கன்னடக்காரன் !

 

ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.

 

கொடுமை !

 

முஸ்லிமை எடுத்துக் கொண்டால், பெண்களை உலகத்தைக் கூட பார்க்க விட மாட்டேன் என்கிறானே. முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

- "விடுதலை' (28.6.1973)

 

மகான் அல்ல !

 

தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- "விடுதலை' (23.12.1953)

 

மடத்தனம் - புளுகு !

 

...அந்த கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்குத் தெரியுமா? ...இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம், புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது?

- "விடுதலை' (28.3.1960)

 

பார்ப்பான் காட்டிய வழி !

 

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு , பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்வாதிகள், பார்ப்பானை குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல், தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா?

 

சனியன் !

 

இன்று நமக்குப் பெரும் சனியனாக "அய்க்கோர்ட் - high court' ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்கு பெரிதும் அனுகூலமாக இருக்கின்றனவென்றே சொல்லலாம்.

- "விடுதலை' (7.10.1972)

 

அரக்கன் !

 

"காங்கிரஸ்' என்பது நமது நாட்டையும், இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான நமது சங்கத்தையும் அழிக்க வந்த ஒரு "அரக்கன்' என்றுதான் சொல்ல வேண்டும்.

- "குடியரசு' (7.11.1926)

 

இவர்களுக்கு எதற்கு ஓட்டு ?

 

...தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது! அதாவது திருடன், காலித்தனம் செய்பவன், எதற்கும் அருகதையற்றவன், பாமரர் ஆகிய அனைவருக்கும் ஓட்டு. இவர்கள் எப்பேர்ப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சற்று நடுநிலையிலிருந்து யோசித்தால், நான் ஏன் அரசியல் வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன் என்பது விளங்கும்.

- "குடியரசு' (14.5.1948)

 

ஆகாயக் கோட்டை !

 

...ஆகவே காங்கிரஸானது ஆரியர் நலனுக்காகவே ஒரு போலியான, கற்பனையான, புராணக் கதைகளின் சேதிகளின் பேரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மாயாஜால வித்தையென்றும், ஆகாயக் கோட்டையென்றும் சொல்லுகிறோம்.

- "விடுதலை' (12.6.1946)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஒழிக்கப்பட வேண்டியவைகள் !

 

மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், சினிமா ஒழிக்கப்பட வேண்டும். நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும் நாணயமும் ஏற்பட வேண்டுமானால், தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

- பெரியார் பிறந்தநாள் விழா மலர் 84 (17.9.1962)

 

"இந்துக்கள் என்றால்...?

 

நான் பந்தயம் கட்டிச் சொல்வேன். நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை! இல்லவே இல்லை என்று கூறுவேன்.

- "கடவுள் ஒரு கற்பனையே' நூலில் பெரியார்

 

வயிற்றுப் பிழைப்பு !

 

நம் நாட்டிலும் கம்யூனிஸ்ட்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை.... எனவே, நாட்டில் பொதுவுடமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித்தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது.

- "உண்மை' (பிப்ரவரிமார்ச், 1972)

 

ஹிந்தி இருக்கட்டும்

 

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- "விடுதலை' (7.10.48)

 

இந்திய அரசாங்கம் வேண்டாம் !

 

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

 

மதிப்பு தேவையில்லை !

 

பாரத மாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால், அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை.... காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்.

- "விடுதலை' (4.8.1955)

 

கம்யூனிஸ்ட்கள் !

 

...நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த மட்டிலும் அத்தனையும் பொய்யாகி விட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டி விடும் அராஜகச் செயல் கொண்டவர்களையும், கொண்டுள்ளது.

- "விடுதலை' (5.8.1955)

 

நியூசென்ஸ்

 

...அரசியல் ரீதியில் இன்று காங்கிரஸுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம்தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லிம் லீக் இன்று செல்லாக் காசாகி விட்டது. "கண்ணீர்த் துளி' (தி.மு.க.) நாட்டுக்கு நியூசென்ஸாகி விட்டது.

பெரியார் பிறந்தநாள் விழா மலர் (17.9.1964)

 

முட்டாள்தனம் !

 

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

"விடுதலை' (14.11.1972)

 

பலி !

 

இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோவிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ, அது போலவே ஆணுக்குப் பெண்ணை பலி கொடுக்கிற விழாத்தானே திருமணம்? இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? ...ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா?

-"விடுதலை' (3.9.1973)

 

மதங்கள்

 

....கிறிஸ்துவ மத தர்மப்படி, "மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள். ஏசு மூலம் ஜபம், பிரார்த்தனை செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்' என்பது கட்டளையாகும். இதனால்தான் மற்ற மதங்களைவிட, கிறிஸ்துவ மதத்தில் நேர்மையற்றவர்கள் அதிகமான பேர்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இஸ்லாமியர்களும் தொழுகையினால், வேண்டுகோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் என்பவர்களோ எல்லா விதமான பாவத்திற்கும், அவை ஒழிய கோவில், குளம், ஸ்தல யாத்திரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும். இந்த நிலையில், எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க முடியும்? மனிதன் எதற்காக யோக்கியனாக இருக்க வேண்டும்?

-"விடுதலை' (3.9.1973)

 

கம்யூனிஸ்ட்களின் வேலை !

 

கம்யூனிஸ்ட் -எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னின்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம் கிட்டே. பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே. இன்னொருவன் வலுத்தால் அவன் கிட்டே. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்ட்தான்.

 

அதற்கு அடுத்தாற்போல காங்கிரஸ் - என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்... இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது... அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்திலே ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்டே பேசிக் கொண்டு, "காலிகளை ஒழித்து விட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா?' என்று கேட்கிறார்கள்.

- 4.11.1973ல் பெரியார் ஆற்றிய உரை

 

துக்க நாள், மோசடி, ஏமாற்றுதல் !

 

நானும் ஆரம்ப காலந்தொட்டு, "இது ஒரு மோசடி, மோசடி என்று "ஏமாற்றுதல்தான்' என்று சொல்லிக் கொண்டேதான் வந்திருக்கிறேன். சுதந்திரம் வந்தது, சுதந்திர நாள் என்ற போதே நான் சொன்னேன் "இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்; மோசடி; நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள்' என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான்.

 

உரிமை !

 

நமக்கு ஞாயம் இருக்கிறது; இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற; நமக்கு ஞாயம் இருக்கிறது, நம் அரசாங்கத்தை அமைக்க. அடியோடு இந்தியா பூராவுக்கும் மாற்றா விட்டாலும் நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாம் தனிச் சுதந்திர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே முன்னே நான் சொன்னாற்போல, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர, நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே! "இந்தியா என்கிற ஒரு தேசம் ஆகணும்; அதிலே நாம் ஒரு நாட்டானாக இருக்கணும் இதற்கு ஒரே தேசம்' அப்படி என்று ஆரம்பிக்கவில்லையே.

- 8, 9.12.1973ல் பெரியார் ஆற்றிய உரை

 

பூணூலின் அர்த்தம் !

 

மானம் இருந்தால் இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானா? "என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது; ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம். அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு உன்னைச் செருப்பாலே - அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் , நமக்கு மானம் இருந்தால்?

 

பொறுக்கித் தின்கிறவன் !

 

அடுத்தாற்போல, ஒழிய வேண்டியது காங்கிரஸ். காங்கிரஸ் ஒழிந்தது; இனிமேல் அது ஒன்றும் உருப்படியாகாது. இப்போதே இரண்டுபேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்து, ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரிகிறது; இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்க லாம் என்று (நினைக்கிறது). சேர்ந்தால் இனி என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்ன ஆகப் போகிறது? இனி எவன் காங்கிரஸை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர?

 

மந்திரி ஆகணும் என்றால் வாழ முடியாது, ஆகிறவன் ஆகிவிட்டுப் போகிறான். சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் முடியாது ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்று விட்டுப் போகிறான். இது இரண்டும் வேணாம் என்கிறவன் நான்!

 

நாம் விட்டது தப்பு. அயோக்கியப் பயல்களுக்கு காங்கிரஸ்காரப் பயல்களுக்கு இடம் கொடுத்தோம். அவன் பார்ப்பான். அதிலே பொறுக்கித் தின்னப் போனவன், நம் ஆள். அதிலே முக்கால் வாசிப்பேர் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒத்துக் கொள்கிறவன்.

- 19.12.1973ல் ஆற்றிய உரையிலிருந்து

 

நாட்டு முன்னேற்றத்துக்கு வழி

 

நான் 1932ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை "கணூணிணீணிண்ஞுஞீ ஏதண்ஞச்ணஞீ ச்ணஞீ ஙிடிஞூஞு" என்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். ""நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள, நாங்கள் பயிற்சி பெறுகிறோம்'' என்றார்கள். ""எவ்வளவு காலமாக?'' என்று கேட்டேன். ""எட்டு மாதமாக'' என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

- "விடுதலை' (28.6.73)

 

ஒரு தமிழ் நூல் கூட இல்லை!

 

...எனவே, தமிழன் இன்றைய நிலையில் தனது வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் என்று தெரிந்து கொள்ளத்தக்க கருத்துக்களைக் கொண்ட தமிழ் நூல் ஒன்று கூட இன்று நமக்கில்லை.

- "விடுதலை' (28.3.60)

 

காந்தியமும் ஒழிய வேண்டும் !

 

இந்திய தேசியக் காங்கிரஸும், காந்தியமும் அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது சமதர்ம உலகத்திற்கே பெரிய இலாபகரமான காரியமாகும். இந்தியாவில் சமதர்மக் கொள்கை என்றைக்காவது ஒருநாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால், அது தேசிய காங்கிரஸும், காந்தியமும் ஒழிந்த நாளாகத்தான் இருக்குமே தவிர, அது ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி.

"குடியரசு' (30.7.33)

 

காந்தியாரின் விஷம் !

 

தோழர் காந்தியாரை விட வைதிகர்களும், சனாதன தர்மிகளும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது எனது அபிப்பிராயம். எப்படியெனில், வைதிகர்களுடைய அக்கிரமம் அயோக்கியத்தனங்கள் எனப்பட்ட விஷமானது, குருடனுக்கும் மூடனுக்கும் நன்றாகத் தெரியும்படியாக இருக்கின்றது. காந்தியாரின் விஷம், மேலே சர்க்கரைப் பூச்சு பூசி, எப்படிப்பட்ட அறிவாளியும் எடுத்துச் சாப்பிடும்படியான மாதிரியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆதலால், வைதிகர்களது விஷத்தை யாரும் சாப்பிட்டு செத்துப் போக மாட்டார்கள் என்பதோடு, அவ்விஷங்கள் வைதிகர்களையே கொல்வதற்குத்தான் பயன்படும் என்றும் சொல்லலாம். ஆனால் "காந்தியாரின் விஷம்' எல்லோரையும் அருந்தச் செய்து, எல்லோரையும் கொல்லத் தக்க மாதிரியில் பூச்சு பூசப்பட்டிருக்கிறது என்பதோடு, காந்தியாரை "மகாத்மா'வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத் தக்கதாகும் என்று சொல்லலாம். ஆதலால், வைதிகப் பிரச்சாரத்தையும் சனாதனப் பிரச்சாரத்தையும் பகிஷ்கரிப்பதை விட, காந்தி பிரச்சாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

- "புரட்சி' தலையங்கம் (10.12.33)

 

காந்திக்கு அஞ்சலி

 

காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை... "உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்' என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்றுதலையும், பாராட்டுதலையும் பெற்று, அதற்காக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்து விட்டார். ...இப்படிப்பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு, இனி எவர் எக்கதியானால்தான் என்ன என்று கூறலாம்.

- "குடியரசு' (7.2.48)

 

காந்தி சிலை இருப்பது அவமானம்

 

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம், காந்தி... எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்... காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும் என்று சொல்லுகிறோம். அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வட நாட்டானுக்கு அடிமையாக்கி விட்டுப் போனது. சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டானுக்கு அடிமைகளாக்கி விட்டார்.

- "விடுதலை' (9.10.57)

 

சிரிக்க மாட்டார்களா ?

 

இந்துக்கள் தேர் இழுப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் பரிகாசம் செய்து விட்டு, முஸ்லிம்கள் கூண்டு கட்டிச் சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாண வேடிக்கை செய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால், உலகம் திருப்பிச் சிரிக்காதா? இந்துக்கள் காசிக்கும் இராமேஸ்வரத்துக்கும் போய் பணத்தைச் செலவழித்து விட்டு, "பாவம் தொலைந்து விட்டது' என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லிம்கள் சிரித்து விட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப் பேட்டைக்கும் போய்விட்டு வந்து, தங்கள் பாவம் தொலைந்து விட்டது என்றால், மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

- "குடியரசு' (9.8.31)

 

மதங்களால் என்ன நலன் ?

 

எதற்காக "இந்து'; எதற்காக "கிறிஸ்தவம்'; எதற்காக "முஸ்லிம்' முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்கு தனித்தனி வேதம்; வேஷம்; செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல், சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன்.

-"விடுதலை' (18.10.72)

 

தொழிலாளர் சங்கம் ஏன் ?

 

பொதுவாக "தொழிலாளர் சங்கம்' என்றாலே, எனக்கு அதனிடத்தில் விருப்பம் இருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதைத் தம் நன்மைக்கும், கீர்த்திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம்.

- "குடியரசு' (30.5.26)

 

ஸ்டிரைக் எதற்கு ?

 

இப்போது எடுத்ததற்கெல்லாம் "ஸ்டிரைக்' ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பெரும்பான்மை ஸ்டிரைக்குகள் சங்கங்களை நடத்துகிற ஆட்களின் ஸ்தாபனங்களின் சொந்த நலனுக்கும், மற்றபடி தங்கள் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளவுமே செய்கிறார்கள். ஸ்டிரைக்கினால் ஏற்படுகிற விளைவுகள் என்ன? ... தொழில் வளர்ச்சி கெட்டு, உற்பத்தி குறைவதோடு மட்டுமல்ல பொது மக்களுக்கும் எவ்வளவு தொந்தரவு ஏற்படுகிறது?

- "விடுதலை' (20.9.52)

 

அப்படியே நம்பி விடாதீர் !

 

சகோதரர்களே! நான் சொல்வன் எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்... "ஒரு பெரியார் உரைத்து விட்டார்' என நீங்கள் கருதி, அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!

- "விடுதலை' (8.10.1951)

 

நாளை என்ன நடக்கும்?

 

நாளை, ஒரு சமயம் சமதர்ம காலத்தில், "பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.

"குடியரசு' (11.10.1931)

 

(பெரியார் தமிழக மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளின் ஒரு சிறு பகுதி, இத்துடன் நிறைவு பெறுகிறது.)

 

தொகுப்பு : சத்யா (தமிழ்நாட்டில் இருந்து வெளியானது ஆக்கமொன்றில் இருந்து - http://satrumun.com/)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '

 

ம.வெங்கடேசன் எழுதிய நூலில் இருந்து விமர்சகர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை. உதவி திண்ணை.கொம்

 

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். 'இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

 

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் 'என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

 

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

 

'நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

 

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

 

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

 

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர், கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருப்பதையும் படித்தேன்.

 

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு - அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

 

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டு வந்திருக்கிறேன்.

 

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். '

 

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -

 

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை, சொல்லும் செயலும் முரணானவையே,வரலாற்றுத் திரிபுகள்,தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,தேசப்பற்று இல்லாத ஈவேரா,பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார் ஆசிரியர் வெங்கடேசன்.

 

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள் ' என்று முத்துராமலிங்கத்தேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

 

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ' என்ற முதல் அத்தியாயத்தில் இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

 

'ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில் பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. '

 

ஈவேரா தமிழரா ?

 

'ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலேஉருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர்

தலைவர் ' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

 

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் ' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். '

 

'நான் கன்னடியன் ' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன் ' என்று சொல்லிக் கொண்டே ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது கொஞ்ச நஞ்சமல்ல.

 

'தமிழும் தமிழரும் ' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

 

' 'இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன். இம்மூவரில்,

 

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.

 

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

 

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள். '

 

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

 

'அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம். '

 

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

 

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

 

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும் துரோகிதானே ?

 

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர் பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின் பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

 

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

 

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

 

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்றுபிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னாபார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.

 

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

 

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

 

In what way Jinnah is not a North Indian ? How is the names Jinnah and Robinson so sweet to you Sir ? How is the name of poor Tilak so bitter to you Sir ? I am not able to understand.

 

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?

 

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்கவேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

 

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் 'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ?

 

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்குஇருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

 

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

 

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடுயார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.

 

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.

 

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்திஎதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' எனராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இதுசரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்றுசொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

 

'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

 

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

 

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

 

இதுவா தமிழ் நாகரீகம் ?

 

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Edited September 20, 2007 by nedukkalapoovan



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ' - ஈ.வே.ரா.வின் முழக்கம்

 

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள்

 

ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள்

 

அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.

 

சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

 

உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள் திரட்டியிருக்கும் மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

 

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

 

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

 

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:

 

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். '

 

(இப்படியான ஈ வெ தான் தமிழர் என்றும்.. தமிழர்களின் விடிவெள்ளி என்றும் இனங்காட்டப்படுகிறார். ஈ வெ யை தமிழகத்தில் முன்னிலைப்படுத்துவதே அநாவசியமானது பித்தலாட்டத்தனமானது...!)

 

தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

 

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்துதிருச்சி முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

 

யார் இந்த கி.ஆ.பெ. ?ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

 

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை

 

பின்வருமாறு:-

 

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் ' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

 

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் ' என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது ? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

 

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

 

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

 

இனியேனும் சொல்வாரா ? இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்

பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன் ?

 

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

 

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார்என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா ?

 

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி வைதிருப்பதே போதுமான சான்றாகும்.

 

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டிமெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கேஎன்று கூறுகிற 'பித்தலாட்டக் கருங்காலி 'களின் கோரிக்கையாகும்.

 

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

 

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

 

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

 

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

 

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:

 

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். '

 

இந்த ஒரு குறிப்பும் போதும்.. ஈ வெ ராவின் உள்நோக்கத்தை வெளிக்காட்ட. ஈ வெ ராவை முன்னிலைப்படுத்தல்.. தமிழ் தேசிய விரோதம் என்றே கொள்ளப்பட வேண்டும்.

 

இந்த விடயத்தில் மத ரீதியில் அவரின் கொள்கைகளை வெறுத்தவர்களின் பங்கு அவரை தெளிவாக இனங்காட்ட உதவியுள்ளது. இவ்வகை ஆதாரபூர்வக் குறிப்புகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு.. ஈ வெ ரா தொடர்பாக போலித் தோற்றம் தமிழர்கள் மத்தியில் வளர்க்கப்படுவது தமிழ் தேசியத்துக்கும் தமிழர் தேசங்களின் இருப்புக்கும் ஆபத்தானது. தமிழர்களைப் பொறுத்தவரை அந்நியர்களை விட ஆபத்தானவர் ஈ வெ ராவ் என்ற கன்னடர்.எமது சமூக விடுதலையை நாமே தீர்மானிப்போம். ஈ வெ ரா தேவையில்லை எமக்கு.. கருத்துரைக்க.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் சொன்னது:
..கடவுள், மத, வேத, சாஸ்திர புராணங்களையும் கோவில்களையும் பண்டிகை, உற்சவங்களையும் வெறுத்தால் மட்டும் போதாது. தமிழ் மொழியையும் வெறுத்தாக வேண்டும். ஏனெனில் தமிழனின் இழிநிலைக்கும் காட்டுமிராண்டித்தன்மைக்கும் ஏற்பவேதான் தமிழ்மொழியும் அமைந்திருக்கிறது...

இந்தியையும் திட்டுகிறார். ஆனால் இன்னொன்றும் சொல்கிறார்!

இன்றைய ஆட்சி (அண்ணா ஆட்சி) சுத்த தமிழர் ஆட்சியாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்த ஆட்சியாக இருப்பதால், சிறிது தமிழ்ப் பயித்தியத்தைக் காட்டிக் கொள்ளவேண்டி இருப்பது குறித்து நான் பரிதாபப் படுகிறேன்.

கடைசியில் சொல்கிறார்:
தப்போ சரியோ ஆங்கிலச் சொற்களைக் கலந்தே நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். உங்கள் தாயாரை மம்மி என்றும் தகப்பனாரை டாடி என்றும், அண்ணன் தங்கைகளைப் பிரதர், சிஸ்டர் என்றும் முதலில் கூப்பிட்டுப் பேசிப் பழகுங்கள். 
விடுதலை 14.12.67

பெரியார் தெளிவாகச் சொல்கிறார்:
1. தமிழ் காட்டுமிராண்டி மொழி
2. மதம் சாதியை வெறுக்கும் அளவிற்குத் தமிழ் மொழியை வெறுக்க வேண்டும். 
3. தமிழ்ப் பைத்தியம் என்று படம் காட்டுவது பிராமணர்களுக்குப் பயந்துதான் 
4. மம்மி, டாடி, பிரதர், சிஸ்டர் என்று கூப்பிட்டால்தான் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து வெளியே வர முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விழித்திரு மிஸ்டர் தமிழா 
***************************************

1. காங்கிரஸ் தலைமை, நேரு குடும்பத்தைச் சாராத, நன்கு படித்த, ஊழல் கறை படியாத வேறொருவரிடம் அந்தக் கட்சியை ஒப்படைக்க வேண்டும்

2. கவுதமன், திருமுருகன் காந்தி, தா பாண்டியன், அமீர், சீமான், பாரதிராஜா, வைரமுத்து. கமலஹாசன், திருமா , வைகோ இவர்களின் பின்னணியை விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

3. ரஜினி, கடைசி முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். கண்டிப்பாக அவர் வந்தால், 2021 சட்டமன்ற தேர்தலில், BJP சப்போர்ட்டுடன் வென்றுவிடுவார். Now or never

4. வேறொரு Finance Minister வர வேண்டும். Jayant Sinha என்னுடைய சாய்ஸ். Piyush Goyal ஒகே தான்

5. தமிழக பா.ஜ.க கட்சிப்பணி மற்றும் முக்கிய பதவிகளுக்கு படித்த இளைஞர் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும். இதற்கு விளம்பரம் தந்து நேர்காணல் செய்தால் கூட ஓகே தான். கட்சிக்கு பணத்தேவை இருக்காது. இப்போதைய தேவை, படித்த, கட்சியை வசப்படுத்தி வளர்க்க ஒரு நபர்.

ரங்கராஜ் பாண்டே போன்றவர்களை தலைவராக நியமிக்கலாம்.

6. அமித் ஷா தன்னுடைய பார்வையை தமிழகம் மீதும் கேரளா மீதும் செலுத்த வேண்டும். முடிந்தால் 1 வருடத்திற்கு வீடு பார்த்து தமிழ் நாட்டில் தங்கினால் கூட ஓகே தான். இது பாஜாகவிற்காக இல்லாவிட்டாலும் இந்தியாவிற்காக செய்ய வேண்டும். ஏதோ ஒரு எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே தோன்றுகிறது

7. கேஜ்ரிவால், தான் ஏன் தோற்றோம் என்று யோசிக்க வேண்டும். ஐ.ஐ.டீயில் படித்த ஒருவர் இப்படி தடுமாறி, வழிமாறி சென்று தோற்பது, படிப்பு மட்டுமே எல்லாம் தந்து விடாது என்பதற்கான வாழும் உதாரணம்

8. கமலஹாசன் தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்னைப் பொறுத்தவரை, அரசியல், சமூக சேவை இதெல்லாம் not his cup of tea. He may better leave the scene without an iota of trace …

9. குஜராத்தில் இருப்பவரும் இந்தியர் தான். பீஹாரில் இருப்பவரும் இந்தியர் தான். மஹாராஷ்ட்ராவில் இருப்பவரும் இந்தியர் தான், அவர்கள் வாக்களிப்பதாலேயே நாமும் பா.ஜ.காவுக்கு வாக்களிக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், நாம் மட்டும் என்ன வித்தியாசமாய் செய்கிறோம் என்று யோசிக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள். திமுக, அதிமுக இரண்டிற்கும் சுயமாக வாக்களித்தால் ஓகே. ஆனால் வேறொரு சக்தி இவர்களின் மனதை மாற்ற முயற்சிக்கிறதா?. அரசியலும் மதமும் கலந்த ஆபத்தான கலவை தான் அவர்களை தீர்மானிக்கிறதோ என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது . மத வியாபாரிகளுக்கு அரசியலால் என்ன லாபம் என்று நாம் தான் யோசிக்க வேண்டும். Nobody gets in without vested interest. Got to introspect.

10. நான் பொதுவாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். வேறெந்த ஊரிலும், நாட்டிலும், இப்படி, நாத்திகம் என்கிற பெயரில் போராளிகள் பித்து பிடித்து அழிவதில்லை. கடவுளை வணங்குவதும், வணங்காததும் அவரவர் விருப்பம், உரிமை, சுதந்திரம்.

ஆனால் ஹிந்து கடவுளை கும்பிடுவதே ஏதோ பெரிய கிண்டலுக்குரியது போல பேச ஆரம்பித்து விட்டது ஒரு கூட்டம்

11. ஏன் எல்லாரும் ஹிந்து மதத்திற்கு எதிராக இவ்வளவு குரல் தருகிறார்கள்? இவை எல்லாமே ஏன் 2016க்கு பிறகு வலுவாகிறது?

நாமெல்லாம் எம்.ஜீ.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தலைவர்களை பார்த்துதான் வோட்டு போட்டுக்கொண்டிருந்தோம் . இதில் எங்கிருந்து சாமி நம்பிக்கை, மத நம்பிக்கை வந்தது?

திடீரென்று என்ன பெரிய பகுத்தறிவு? இந்த கூட்டத்திற்கெல்லாம் துளிர் விட்டுப் போனது ஜெயாவின் மரணத்திற்குப் பிறகு தான்

12. சோஷியல் ஜர்னலிசம் என்கிற பெயரில் ஒரு பாரபட்ச சமூக ஈனச் செயல் செய்து வருகிறார்கள். ஒட்டு மொத்த மீடியாவும் ஊழல் கறையில் திளைக்கிறது. இவர்களுக்கெல்லாம் செய்தியை ஒரு தலை பட்சமாய் எழுதச் சொல்ல எங்கிருந்து பணமும், உத்தரவும் வருகிறது ?

13. மோடியின் வெற்றிக்கு கேரளாவும், தமிழ் நாடும் தேவைப்படவில்லை. ஆனாலும் அவர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு, மக்களை தவறாக வழி நடத்தி. தவறான விவரங்களைத் தந்து, வன்முறையை வளர்க்கும் போராளிகளின் பின்புலனைக் கண்டு பிடித்து, ஒரு வேளை அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததென்றால், அவர்களை உள்ளே தள்ள வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அதைப்பார்த்து மிரள வேண்டும். இது வன்முறை அல்ல. யோக்கியம் . இதைச் செய்யாவிட்டால் இந்த வெற்றிக்கு முழு அர்த்தமில்லை.

மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாடு மோடியை தேர்ந்தெடுக்க வில்லை என்பதற்காக நான் இதை எழுத வில்லை. அதெல்லாம் அவரவர் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அவர் மனதிற்கு எந்தக் கட்சி, எந்த வேட்பாளர் சரி என்று நினைக்கிறார்களோ அவர்களை தேர்ந்தேடுக்கப் போகிறார்கள்.

நான் சொல்வது என்னவென்றால், எச்.ராஜா போன்றவர்கள் வாயைத் திறந்தாலே ஒவ்வொரு பத்திரிகை, ந்யூஸ் இணையதளத்திலும் கிண்டல் செய்வது ஏன்? . இது ஒரு பெரிய அயோக்கியத்தனம். அவர் பேசும் விதம் கடுமையாக இருக்கலாம் , சில புள்ளி விவரங்கள் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு மனிதர் என்ன செய்தாலும் அனைத்து ஊடகங்களும் ஏன் 100% கிண்டல் செய்து, மீம்ஸ் போட்டு எதிர்க்க வேண்டும்? இதை யாருக்கு எதிராக செய்தாலும் தவறு தான். கிட்டத்தட்ட இது ‘Freedom of speech’ என்பதை பாதிக்கிறது . எதற்கு ஒரு தனி மனிதர் மீது இத்தனை காழ்ப்புணர்வு?

யோசித்துப் பாருங்கள். ஜெயலலிதா இருந்த போது ஊடகங்கள் இப்படி இருந்ததே இல்லை. இப்போது மீடியாக்களிலும் , சினிமாக்களிலும் அன்றாடம் நடப்பவை எதுவுமே சரியாகப் படவில்லை. Seems unnatural.

சரி அப்படி அந்த போராளிகளெல்லாம் என்ன செய்து விட்டார்கள். எந்த ஒரு திட்டத்தையாவது செயல்பட விட்டார்களா ?

1996 முதல் 2001 வரை திமுக காலத்தில் எத்தனை மேம்பாலம் கட்டினார்கள். அப்போதெல்லாம் அங்கு குடிசை, கோவில், அலுவலகங்கள் இடிக்கப்படவில்லையா? அவர்களுக்கு வேறு இடம் மாற்றித் தரப்படவில்லையா . எல்லாமே நடந்தது. எல்லா திட்டமும் நடைபெற்று இன்று, மேம்பாலங்கள் உதவியாக இருக்கிறது.

ஆனால், இன்று தமிழ்நாட்டில் அரசால் ஒரு திட்டத்தையாவது நடத்த முடிகிறதா

ஸ்டெர்லைட் ஆலையை மூடுகிறார்கள்.

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு

கூடன்குளத்திற்கு எதிர்ப்பு

ஹைடிரோகார்பனுக்கு எதிர்ப்பு

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு

எல்லாவற்றிக்கும் எதிர்ப்பு.

பின் அதே மக்களிடம் வந்து, "இந்த அரசு ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றியுள்ளதா ?" என்று கேட்கிறார்கள்.

இதற்குப் பெயர் தான் Indirect soft hooliganism .

குறிப்பிட்ட போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பே மீடியா வந்து விடுகிறது.

காரணம், மீடியாவும் இதற்கெல்லாம் உடந்தை.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்த சிலர், 'பின் லேடன்' படத்தைக் காட்டி 'மாவீரன்' என்கிறார்கள். 
Where are we heading towards?

ஹிந்துக்கள் தமிழர்களே இல்லை என்கின்றனர்.

தமிழ் இலக்கியத்தில் ஹிந்து மத வழிபாடே இல்லை என்கின்றனர். தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும் வராத இந்து மத கடவுள்களா?

20 வருடத்திற்கு முன் நாம் பார்த்த திருவள்ளுவர் படத்தின் நெற்றியில் இருந்த விபூதி இப்போது இல்லை. ஏன்? என்ன ஆயிற்று?

'சுந்தர் பிச்சை' என்றால் "நூல் பார்ட்டி", "பெல்ட்டு பார்ட்டி" என்று சொல்வது.

திரும்பவும் சொல்கிறேன். எந்தக்கட்சி வெல்கிறது என்பதல்ல என் பிரச்சனை. ஆனால், pseudo secular paid media, மக்களை ஒரு விதமான Brain washக்கு ஆட்படுத்துகிறார்களோ என்று நான் பயப்படுகிறேன்

14. ஒரு சின்ன புள்ளிவிவரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடைசி 10 வருடங்கள் வெற்றி விவரம் :

2009ல் 82 தொகுதிகளில் போட்டியிட்டு 16ல் வென்றிருக்கிறார்கள் வோட்டு சதவிகிதம் 5.66 %

2014ல் 97 தொகுதிகளில் போட்டியிட்டு 9 வென்றிருக்கிறார்கள். வோட்டு சதவிகிதம் 3.24 %

2019ல் வெறும் 5 தான் வென்றிருக்கிறார்கள். கேரளாவிலும் அடி பெங்காலிலும் அடி . இன்னும் முழு எண்ணிக்கை முடியாததால் வோட்டு சதவிகிதம் தெரியவில்லை. அநேகமாக 2% க்கு குறைவாகத்தான் இருந்திருக்கும்.

அதாவது, 10 வருடங்களில் அவர்களுடைய வெற்றி குறைந்து கொண்டே வந்துள்ளது. கம்யூனிசம் ஒரு தோற்றுப் போன சித்தாந்தம். சீன யுத்தத்தில் அடிபட்ட வீரர்களுக்கு வங்காளத்திலிருந்து ரத்தம் செல்லவில்லை. காரணம், அவர்கள் இதயம் சைனாவில் உள்ளது

இப்படி, மக்கள் இவர்களை நிராகரித்து, தூக்கி அடித்த பின்னும், ஒவ்வொரு டி.வீ. சானல்களிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் தவறாமல் உட்கார்ந்திருப்பார்.

இதை இன்னொரு முறை யோசியுங்கள். அரசியல் களத்தில் இருக்கும், ஆட்சி வழியாக மக்களின் வாழ்க்கையை நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ பாதிக்கப்போகும் கட்சியினர் இருந்தால் சரி. That is, காங்கிரஸ், பா.ஜ.க திமுக, அதிமுக இவர்களை எல்லாம் பேட்டி எடுத்தால் சரி. காரணம் ஒன்று, அவர்கள் எதிர்க்கட்சி அல்லது ஆளும் கட்சி. ஆனால், அரசியல் களத்தில் காணாமல் போன ஒரு கட்சியின் பிரமுகர் எப்போதும் ஏதாவது ஒரு டி.வி பேட்டிக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது எதனால் ? .

காரணம், அவர்களுடைய ஒரே எண்ணம், ஆளுங்கட்சிக்கு எப்போதும் எதிராகப் பேசுவது, எல்லா முன்னேற்றத் திட்டத்தையும் பிரிப்பது என இவை தான்.

அருணன், ராமகிருஷ்ணன், பாண்டியன், முத்தரசன், யெச்சூரி என்று யாராவது ஒருவர் டீவியில் வந்த மயமாகவே இருப்பர். அவர்களுடைய இலக்கு வோட்டு அரசியல் அல்ல, அதில் அவர்கள் தோற்று பல வருடங்கள் ஆயிற்று. அவர்களுடைய குறிக்கோள் , ஒரு சாராரை எதிர்த்துக்கொண்டே இருப்பது தான். ஆனால் டி.வீ சேனல்களுக்கு அது தான் தேவை. யாருக்கு நாட்டின் மீது அக்கறை உள்ளது?

யோசிக்க வேண்டும் ... யோசிப்போம்

Krishnamurthy Krishnaiyerவிழித்திரு மிஸ்டர் தமிழா 

***************************************

1. காங்கிரஸ் தலைமை, நேரு குடும்பத்தைச் சாராத, நன்கு படித்த, ஊழல் கறை படியாத வேறொருவரிடம் அந்தக் கட்சியை ஒப்படைக்க வேண்டும்

2. கவுதமன், திருமுருகன் காந்தி, தா பாண்டியன், அமீர், சீமான், பாரதிராஜா, வைரமுத்து. கமலஹாசன், திருமா , வைகோ இவர்களின் பின்னணியை விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

3. ரஜினி, கடைசி முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். கண்டிப்பாக அவர் வந்தால், 2021 சட்டமன்ற தேர்தலில், BJP சப்போர்ட்டுடன் வென்றுவிடுவார். Now or never

4. வேறொரு Finance Minister வர வேண்டும். Jayant Sinha என்னுடைய சாய்ஸ். Piyush Goyal ஒகே தான்

5. தமிழக பா.ஜ.க கட்சிப்பணி மற்றும் முக்கிய பதவிகளுக்கு படித்த இளைஞர் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும். இதற்கு விளம்பரம் தந்து நேர்காணல் செய்தால் கூட ஓகே தான். கட்சிக்கு பணத்தேவை இருக்காது. இப்போதைய தேவை, படித்த, கட்சியை வசப்படுத்தி வளர்க்க ஒரு நபர்.

ரங்கராஜ் பாண்டே போன்றவர்களை தலைவராக நியமிக்கலாம்.

6. அமித் ஷா தன்னுடைய பார்வையை தமிழகம் மீதும் கேரளா மீதும் செலுத்த வேண்டும். முடிந்தால் 1 வருடத்திற்கு வீடு பார்த்து தமிழ் நாட்டில் தங்கினால் கூட ஓகே தான். இது பாஜாகவிற்காக இல்லாவிட்டாலும் இந்தியாவிற்காக செய்ய வேண்டும். ஏதோ ஒரு எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே தோன்றுகிறது

7. கேஜ்ரிவால், தான் ஏன் தோற்றோம் என்று யோசிக்க வேண்டும். ஐ.ஐ.டீயில் படித்த ஒருவர் இப்படி தடுமாறி, வழிமாறி சென்று தோற்பது, படிப்பு மட்டுமே எல்லாம் தந்து விடாது என்பதற்கான வாழும் உதாரணம்

8. கமலஹாசன் தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்னைப் பொறுத்தவரை, அரசியல், சமூக சேவை இதெல்லாம் not his cup of tea. He may better leave the scene without an iota of trace …

9. குஜராத்தில் இருப்பவரும் இந்தியர் தான். பீஹாரில் இருப்பவரும் இந்தியர் தான். மஹாராஷ்ட்ராவில் இருப்பவரும் இந்தியர் தான், அவர்கள் வாக்களிப்பதாலேயே நாமும் பா.ஜ.காவுக்கு வாக்களிக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், நாம் மட்டும் என்ன வித்தியாசமாய் செய்கிறோம் என்று யோசிக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள். திமுக, அதிமுக இரண்டிற்கும் சுயமாக வாக்களித்தால் ஓகே. ஆனால் வேறொரு சக்தி இவர்களின் மனதை மாற்ற முயற்சிக்கிறதா?. அரசியலும் மதமும் கலந்த ஆபத்தான கலவை தான் அவர்களை தீர்மானிக்கிறதோ என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது . மத வியாபாரிகளுக்கு அரசியலால் என்ன லாபம் என்று நாம் தான் யோசிக்க வேண்டும். Nobody gets in without vested interest. Got to introspect.

10. நான் பொதுவாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். வேறெந்த ஊரிலும், நாட்டிலும், இப்படி, நாத்திகம் என்கிற பெயரில் போராளிகள் பித்து பிடித்து அழிவதில்லை. கடவுளை வணங்குவதும், வணங்காததும் அவரவர் விருப்பம், உரிமை, சுதந்திரம்.

ஆனால் ஹிந்து கடவுளை கும்பிடுவதே ஏதோ பெரிய கிண்டலுக்குரியது போல பேச ஆரம்பித்து விட்டது ஒரு கூட்டம்

11. ஏன் எல்லாரும் ஹிந்து மதத்திற்கு எதிராக இவ்வளவு குரல் தருகிறார்கள்? இவை எல்லாமே ஏன் 2016க்கு பிறகு வலுவாகிறது?

நாமெல்லாம் எம்.ஜீ.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தலைவர்களை பார்த்துதான் வோட்டு போட்டுக்கொண்டிருந்தோம் . இதில் எங்கிருந்து சாமி நம்பிக்கை, மத நம்பிக்கை வந்தது?

திடீரென்று என்ன பெரிய பகுத்தறிவு? இந்த கூட்டத்திற்கெல்லாம் துளிர் விட்டுப் போனது ஜெயாவின் மரணத்திற்குப் பிறகு தான்

12. சோஷியல் ஜர்னலிசம் என்கிற பெயரில் ஒரு பாரபட்ச சமூக ஈனச் செயல் செய்து வருகிறார்கள். ஒட்டு மொத்த மீடியாவும் ஊழல் கறையில் திளைக்கிறது. இவர்களுக்கெல்லாம் செய்தியை ஒரு தலை பட்சமாய் எழுதச் சொல்ல எங்கிருந்து பணமும், உத்தரவும் வருகிறது ?

13. மோடியின் வெற்றிக்கு கேரளாவும், தமிழ் நாடும் தேவைப்படவில்லை. ஆனாலும் அவர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு, மக்களை தவறாக வழி நடத்தி. தவறான விவரங்களைத் தந்து, வன்முறையை வளர்க்கும் போராளிகளின் பின்புலனைக் கண்டு பிடித்து, ஒரு வேளை அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததென்றால், அவர்களை உள்ளே தள்ள வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அதைப்பார்த்து மிரள வேண்டும். இது வன்முறை அல்ல. யோக்கியம் . இதைச் செய்யாவிட்டால் இந்த வெற்றிக்கு முழு அர்த்தமில்லை.

மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாடு மோடியை தேர்ந்தெடுக்க வில்லை என்பதற்காக நான் இதை எழுத வில்லை. அதெல்லாம் அவரவர் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அவர் மனதிற்கு எந்தக் கட்சி, எந்த வேட்பாளர் சரி என்று நினைக்கிறார்களோ அவர்களை தேர்ந்தேடுக்கப் போகிறார்கள்.

நான் சொல்வது என்னவென்றால், எச்.ராஜா போன்றவர்கள் வாயைத் திறந்தாலே ஒவ்வொரு பத்திரிகை, ந்யூஸ் இணையதளத்திலும் கிண்டல் செய்வது ஏன்? . இது ஒரு பெரிய அயோக்கியத்தனம். அவர் பேசும் விதம் கடுமையாக இருக்கலாம் , சில புள்ளி விவரங்கள் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு மனிதர் என்ன செய்தாலும் அனைத்து ஊடகங்களும் ஏன் 100% கிண்டல் செய்து, மீம்ஸ் போட்டு எதிர்க்க வேண்டும்? இதை யாருக்கு எதிராக செய்தாலும் தவறு தான். கிட்டத்தட்ட இது ‘Freedom of speech’ என்பதை பாதிக்கிறது . எதற்கு ஒரு தனி மனிதர் மீது இத்தனை காழ்ப்புணர்வு?

யோசித்துப் பாருங்கள். ஜெயலலிதா இருந்த போது ஊடகங்கள் இப்படி இருந்ததே இல்லை. இப்போது மீடியாக்களிலும் , சினிமாக்களிலும் அன்றாடம் நடப்பவை எதுவுமே சரியாகப் படவில்லை. Seems unnatural.

சரி அப்படி அந்த போராளிகளெல்லாம் என்ன செய்து விட்டார்கள். எந்த ஒரு திட்டத்தையாவது செயல்பட விட்டார்களா ?

1996 முதல் 2001 வரை திமுக காலத்தில் எத்தனை மேம்பாலம் கட்டினார்கள். அப்போதெல்லாம் அங்கு குடிசை, கோவில், அலுவலகங்கள் இடிக்கப்படவில்லையா? அவர்களுக்கு வேறு இடம் மாற்றித் தரப்படவில்லையா . எல்லாமே நடந்தது. எல்லா திட்டமும் நடைபெற்று இன்று, மேம்பாலங்கள் உதவியாக இருக்கிறது.

ஆனால், இன்று தமிழ்நாட்டில் அரசால் ஒரு திட்டத்தையாவது நடத்த முடிகிறதா

ஸ்டெர்லைட் ஆலையை மூடுகிறார்கள்.

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு

கூடன்குளத்திற்கு எதிர்ப்பு

ஹைடிரோகார்பனுக்கு எதிர்ப்பு

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு

எல்லாவற்றிக்கும் எதிர்ப்பு.

பின் அதே மக்களிடம் வந்து, "இந்த அரசு ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றியுள்ளதா ?" என்று கேட்கிறார்கள்.

இதற்குப் பெயர் தான் Indirect soft hooliganism .

குறிப்பிட்ட போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பே மீடியா வந்து விடுகிறது.

காரணம், மீடியாவும் இதற்கெல்லாம் உடந்தை.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்த சிலர், 'பின் லேடன்' படத்தைக் காட்டி 'மாவீரன்' என்கிறார்கள். 
Where are we heading towards?

ஹிந்துக்கள் தமிழர்களே இல்லை என்கின்றனர்.

தமிழ் இலக்கியத்தில் ஹிந்து மத வழிபாடே இல்லை என்கின்றனர். தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும் வராத இந்து மத கடவுள்களா?

20 வருடத்திற்கு முன் நாம் பார்த்த திருவள்ளுவர் படத்தின் நெற்றியில் இருந்த விபூதி இப்போது இல்லை. ஏன்? என்ன ஆயிற்று?

'சுந்தர் பிச்சை' என்றால் "நூல் பார்ட்டி", "பெல்ட்டு பார்ட்டி" என்று சொல்வது.

திரும்பவும் சொல்கிறேன். எந்தக்கட்சி வெல்கிறது என்பதல்ல என் பிரச்சனை. ஆனால், pseudo secular paid media, மக்களை ஒரு விதமான Brain washக்கு ஆட்படுத்துகிறார்களோ என்று நான் பயப்படுகிறேன்

14. ஒரு சின்ன புள்ளிவிவரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடைசி 10 வருடங்கள் வெற்றி விவரம் :

2009ல் 82 தொகுதிகளில் போட்டியிட்டு 16ல் வென்றிருக்கிறார்கள் வோட்டு சதவிகிதம் 5.66 %

2014ல் 97 தொகுதிகளில் போட்டியிட்டு 9 வென்றிருக்கிறார்கள். வோட்டு சதவிகிதம் 3.24 %

2019ல் வெறும் 5 தான் வென்றிருக்கிறார்கள். கேரளாவிலும் அடி பெங்காலிலும் அடி . இன்னும் முழு எண்ணிக்கை முடியாததால் வோட்டு சதவிகிதம் தெரியவில்லை. அநேகமாக 2% க்கு குறைவாகத்தான் இருந்திருக்கும்.

அதாவது, 10 வருடங்களில் அவர்களுடைய வெற்றி குறைந்து கொண்டே வந்துள்ளது. கம்யூனிசம் ஒரு தோற்றுப் போன சித்தாந்தம். சீன யுத்தத்தில் அடிபட்ட வீரர்களுக்கு வங்காளத்திலிருந்து ரத்தம் செல்லவில்லை. காரணம், அவர்கள் இதயம் சைனாவில் உள்ளது

இப்படி, மக்கள் இவர்களை நிராகரித்து, தூக்கி அடித்த பின்னும், ஒவ்வொரு டி.வீ. சானல்களிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் தவறாமல் உட்கார்ந்திருப்பார்.

இதை இன்னொரு முறை யோசியுங்கள். அரசியல் களத்தில் இருக்கும், ஆட்சி வழியாக மக்களின் வாழ்க்கையை நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ பாதிக்கப்போகும் கட்சியினர் இருந்தால் சரி. That is, காங்கிரஸ், பா.ஜ.க திமுக, அதிமுக இவர்களை எல்லாம் பேட்டி எடுத்தால் சரி. காரணம் ஒன்று, அவர்கள் எதிர்க்கட்சி அல்லது ஆளும் கட்சி. ஆனால், அரசியல் களத்தில் காணாமல் போன ஒரு கட்சியின் பிரமுகர் எப்போதும் ஏதாவது ஒரு டி.வி பேட்டிக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது எதனால் ? .

காரணம், அவர்களுடைய ஒரே எண்ணம், ஆளுங்கட்சிக்கு எப்போதும் எதிராகப் பேசுவது, எல்லா முன்னேற்றத் திட்டத்தையும் பிரிப்பது என இவை தான்.

அருணன், ராமகிருஷ்ணன், பாண்டியன், முத்தரசன், யெச்சூரி என்று யாராவது ஒருவர் டீவியில் வந்த மயமாகவே இருப்பர். அவர்களுடைய இலக்கு வோட்டு அரசியல் அல்ல, அதில் அவர்கள் தோற்று பல வருடங்கள் ஆயிற்று. அவர்களுடைய குறிக்கோள் , ஒரு சாராரை எதிர்த்துக்கொண்டே இருப்பது தான். ஆனால் டி.வீ சேனல்களுக்கு அது தான் தேவை. யாருக்கு நாட்டின் மீது அக்கறை உள்ளது?

யோசிக்க வேண்டும் ... யோசிப்போம்

Krishnamurthy Krishnaiyer



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழக தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன??? எப்படிப் புரிந்து கொள்வது? திராவிட மண் பெரியார் மண் என்று ஆரம்பித்துவிட்டார்களே அது பற்றி கருத்தென்ன??

திமுக கூட்டணி வாங்கிய வாக்கு சதவீதம் : 52.64%
{திமுக 32.8% , காங்கிரஸ் 12.76% , CPI 2.43% , CPM 2.40% , முஸ்லிம் லீக் 1.11 , விசி மதிமுக தலா 2 % வரை உண்டு விசி அதே சின்னத்தில் போட்டியிட்டனர் என்பதால் தனியாக மதிப்பீடு இல்லை.}
அதிமுக கூட்டணி : 30.28%
{அதிமுக 18.5% , பாமக 5.42% , பாஜக 3.66%, தேமுதிக 2.19%, மீதம் பிறகட்சிகள் }
தினகரன் அமமுக : 5.25% {SDPI உடன் சேர்த்தால் சில வித்தியாசம் உண்டு}
கமல் மநீம: 3.7% {இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாத சூழல்}
நாம் தமிழர் : 3.8% {ஒரு தொகுதியில் போட்டியிட முடியாத சூழல்}
---------------------------------------------------------
அதிமுக கூட்டணி தோல்விக்குக் காரணம் , திமுக கூட்டணி வெற்றிக்குக் காரணம்

1.மோடி எதிர்ப்பு என்ற விஷயத்தைத் திட்டமிட்ட மக்கள் மத்தியில் வெறுப்பாகக் கொண்டு சேர்த்தது. அதற்காகக் கடந்த 3 ஆண்டுகள் மேல் தீவிரமாக வேலை செய்தது திமுக அதன் ஆதரவாளர்கள். எந்த திட்டமும் அவர் கொண்டுவராத திட்டங்கள் அனைத்தையும் அவர் தான் காரணம் என்று நம்பவைத்தது மட்டும் அல்லாது பிரதமர் நினைத்தால் நிறுத்த முடியும் என்று நம்ப வைத்தார்கள் மக்களை. அதன் விளைவு மோடி வெறுப்பு.

ஈரோடு , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டது ; தஞ்சை பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் தூண்டிவிட்டது என்று மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர் திமுகவினர். அதை மோடி தான் கரணம் என்று மாற்றினார்கள்.

{இந்தவிதமாக வெறுப்பு அரசியல் அனைத்து எதிர்க்கட்சியும் செய்யும் ஆனால் ஒரு வரைமுறைக்குள் இருக்கும் இந்த திமுக நீட தேர்வு வரை அந்த அரசியலைச் செய்தி எவன் செத்தாலும் பரவாயில்லை நாம் ஆட்சியை கைபற்றி ஆகவேண்டும் என்று வேலை செய்தது. அதனால் தான் எந்த மாநிலமும் பள்ளி குழந்தைகள் விசயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை ஆனால் திமுக அதையும் விட்டு வைக்கவில்லை.}

2.மாநிலம் முழுவதும் கிருஸ்தவ , இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக நின்று பாஜக எதிர்ப்பை காட்டியது. ஒருபடி மேலே சென்று சர்ச்சுகள் அனைத்திலும் பெரும்பாலும் பாஜக மோடி அரசுக்கு எதிராக வாக்கு செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி ஒரு தொகுதி மிக மிகச் சரியான எடுத்துக்காட்டு யார் மதவெறி அரசியல் செய்கிறார்கள் என்று. இங்கே இருக்கும் பெரும்பாலான நடுநிலையாளர் எவரும் பேசுவது இல்லை இந்த விஷயத்தை. மதம் அரசியல் என்று பச்சையாக பாஜகவைக் குற்றம் சாட்டும் இவர்கள் தான் மிகக் கொடூரமான மதவெறி கும்பல். மாநிலம் முழுவதும் 5000க்கும் மேற்பட இடங்களில் சர்சுகள் மதம் மாறும் மிசிநெரிகள் வந்துள்ளார்கள் அவர்களுக்கு வந்த நன்கொடை வழி அடைக்கப்பட்டது காரணமாக ஒன்று கூடி தங்கள் மத வெறியைக் காட்டியுள்ளார்கள். இதற்கு லயோலா போன்ற கல்லூரிகள் வலுவான ஆதரவும் கிட்டியது.

3.பத்திரிகைகள் ஊடகங்கள் திமுக என்ற கட்சிக்கு மறைமுகமாக வேலை செய்தது.

கெயில் எரிவாயு திட்டம் என்றால் என்ன? LPG NPG வித்தியாசம் என்ன எதனால் எரிவாயு திட்டம் மிக முக்கியமானது , 30% அளவிற்குச் செலவு மிச்சம் என்பதைத் தாண்டி பாதுகாப்பானது இந்த LPG சிலிண்டரை விட என்ற ஆயிரம் நல்ல விஷயத்தைக் கூறாமல் விவசாயம் கெயில் என்று முடிச்சு போட்டு பிரச்சனையைத் தூண்டிவிட்டது ஆரம்பித்து நீட் தேர்வு வரை அனைத்தையும் தூண்டிவிட்டது முழுக்க முழுக்க பத்திரிக்கைகள் தான்.

4.தேர்தல் நேரத்தில் ஒரு பக்கம் பொள்ளாச்சி விஷயம் கிளப்ப , இன்னொரு பக்கம் அடைமானம் வைத்த நகைகளை மீட்டுத் தருவோம் என்று திமுக வாக்குறுதி கொடுக்க என்று தேர்தலுக்குத் தகுந்த விதமாக மக்களைத் தூண்டவும் கவர்ந்திழுக்கும் வேலையையும் திமுக செய்து இறுதி வரை அதை வாக்காக மாற்றி வெற்றி பெற்றனர்.

அந்த வகையில் முடிவில் எப்படி 20ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் ஆர்கே நகர் மக்களை முட்டாள் ஆக்கினாரோ அதே வரிசையில் திமுக நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டது. அது போதாது என்று அனைத்து வகையான கடனையும் தள்ளுபடி செய்யும் என்ற விதமாகச் செய்திகளைப் பரப்பியது.

5.மாநிலம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் அத்துடன் தினகரனுக்கும் விசுவாசமாக காட்டிக்கொண்டனர். விளைவு தேர்தல் வேளையில் சுணக்கம் ஏற்பட்டது. '

ராமநாதபுரம் , விருதுநகர் , தஞ்சாவூர் , சிவகங்கை , திருச்சி என்று பல இடங்களில் அதிமுக முழுவதும் கட்டமைப்பைத் தெளிவு இல்லாமல் வேலை செய்தார்கள். இது மாநிலம் முழுவதும் தெரிகிறது. அதிமுக 18% வாக்கு கூட இன்று இல்லை என்பது நிதர்சனமான உண்மை. காரணம் கட்டமைப்பு பலவீனமாகியுள்ளது.

6.இயற்கை ஆர்வலர்கள் , போராளிகள் என்ற பிம்பத்தில் ஒரு கும்பலைக் கடந்த 4ஆண்டுகள் மேலாக நக்சல் ஆதரவாளர்களைத் தீவிரமாக வளர்த்து வருகிறார்கள் இங்கே. அவர்களுக்கு வலுவான பிஜேபி அரசு அதற்கான ஆதரவு அரசு இங்கே அமையக் கூடாது என்ற நோக்கம் காரணமாக அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பிரச்சாரங்கள்.

7.பாஜக தலைவர்கள் சிலரின் அவசியமற்ற சச்சரவு தூண்டும் பேச்சுக்கள். நலத்திட்டங்கள் மற்றும் தங்கள் கட்சி சித்தாந்தம் பேசுவதை விட்டுவிட்டு சச்சரவுகளைக் கையில் எடுப்பது போன்ற செயல்கள். 
--------------------------------------------------------

சில எடுத்துக்காட்டு:

திராவிட மண் பெரியார் மண்ணில் பாஜக வரமுடியாது என்று வசனம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது :

அரக்கோணம் தொகுதி திமுக ஜெகத்ரட்சகன் வெற்றி - மொத்த வாக்கு சதவீதம் 57% ; அடுத்த இடத்தில் வந்தவர் பாமக வேலு அவர்கள் வாங்கி வாக்கு - 29%.

இந்த தொகுதி அறிவித்தவுடன் தெரிந்து விவரம் இந்த தொகுதியிலிருந்து 12% இஸ்லாமியர் வாக்கு , 11% கிறிஸ்தவர்கள் வாக்கு , பட்டியலின சமூகத்தினர் 24% வாக்கு பெரும்பாலும் பாமக கூட்டணிக்குச் செல்லாது. சிறுபான்மையினர் வாக்கு பாஜக மீது பரப்பப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தால் கிடைக்காது , அடுத்து பாமக பட்டியலின மக்கள் வாக்கு கிடைப்பதில் சிக்கல். ஆக சுமார் 40%க்கும் மேலான வாக்குகள் நிச்சயம் கிடையாது என்ற நிலையில் அடுத்து 26% வன்னியர் மக்கள் வாழும் இந்த பகுதியில் திமுக நிருத்தியுள்ளவரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர் தான்.

இந்த இடத்தில் பெரியார் மண் என்று கூறும் எவனையும் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் " ஜெகத்ரட்சகன் என்பவர் யார்??? வீர வன்னியர் பேரவை என்ற இயக்கம் தொடங்கிய நபர்தானே... அவரே அங்கே ஒரு பெரும் ஜாதி வெறி பிடித்த நபர் தான்". எனவே ஜாதி ஒழிப்பு அது இது என்று பேசுவது எல்லாம் திமுக அதன் அடிவருடிகள் செய்யும் பித்தலாட்டம். அந்த வகையில் 26% வாக்குகளைப் பிரிக்கும் வழியும் தெரியும் திமுகவிற்கு. மொத்தமாகக் கூறினால் இந்த தொகுதி வேட்பாளராக அறிவித்திடத் தெரியும் அவர் தான் வெற்றி பெறுவார் என்று. ஆனால் அதிமுக பாமக இருவரின் கூட்டணி கணக்கு??? அதில் அதிமுக வாக்கு பாமகவிற்குச் செல்லவில்லை. 6% வாக்குகளைத் தினகரன் பிரிக்கிறார் - அத்துடன் அதிமுகவை அமைப்பு ரீதியாக பலவீனப்படுத்துகிறார். இதனால் அதிமுக ஜெயா இருந்த நாட்கள் போல் வேலை செய்யவும் இல்லை.

உண்மையில் அமைப்பு ரீதியாக அதிமுக மிகப் பலவீனமாக இருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை. யாருக்கு வேலை செய்தால் நமக்கு லாபம் அவ்வளவு தான் நிர்வாகிகள் கணக்கு. எனவே எவரையும் பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லை வேகமாக வேலை செய்யும் எண்ணமும் இல்லை.

ராமநாதபுரம் : பாஜக : 32% , முஸ்லிம் லீக் : 44% , தினகரன் : 14% பிரித்தார். நாம் தமிழர் : 4%;

விருதுநகர் : காங்கிரஸ் : 43.8% , தேமுதிக : 30% , தினகரன் : 10% , கமல் : 5.3% , நாம் தமிழர் : 5%

திருச்சி : தேமுதிக : 15% ; காங்கிரஸ் : 59% , கமல் : 4% , நாம் தமிழர் : 6.2% , தினகரன் : 10%

தஞ்சாவூர் : தமிழ் மாநில காங்கிரஸ் : 21% , திமுக : 56% , தினகரன் : 10% , நாம் தமிழர் : 5.4%, கமல் : 2.2% {2019ல் இதே தொகுதியில் தனித்து அதிமுக 50% வாக்குகளை கைபற்றியது.}

சிவகங்கை : காங்கிரஸ் : 52% , பாஜக : 21.5% ; தினகரன் : 11% , நாம் தமிழர் : 6.5% , மக்கள் நீதி மையம் : 2%

இந்த தொகுதிகளில் பெரும்பாலும் தினகரன் ஆட்களுடன் சேர்ந்து பெரிய அளவில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வேலை செய்தனர் அதிமுகவினர். அதிமுக வாக்கு அப்படியே கூட்டணி கட்சியினருக்குச் செல்லவில்லை இன்னொரு பக்கம் அடுத்து மக்கள் நீதி மையம் , நாம் தமிழர் சேர்ந்து நடுநிலையாளர்கள் வாக்கைக் கவர்வது.

ஸ்ரீ பெரம்பலூர்: திமுக : 56% , பாமக : 20% , மக்கள் நீதி மையம் : 10% , நாம் தமிழர் : 6% , தினகரன் 3%.

மதுரை : கம்யுனிஸ்ட் : 44% , அதிமுக : 30% , மக்கள் நீதி மையம் : 9% , தினகரன் : 9% , நாம் தமிழர் : 4%

கோவை : பாஜக ஒன்றில் வெற்றிபெறும் என்றால் அது கோவையாகத் தான் இருக்கும் என்று பலரும் கணித்த தொகுதி பெரும் தோல்வி. காரணம் கமல் மக்கள் நீதி மையம் நடுநிலையாளர்கள் வாக்கைப் பிரித்தது அவர் பெற்ற வாக்கு 12%. பாஜக பெற்றது 31.34%. அதிமுக கூட்டணி கட்சியினர் வேலை செய்தார்கள் தான் ஆனால் வாக்குகள் செல்லவில்லை. கம்யூனிஸ்ட் 45.6% வாக்குகள் பெற்று வெற்றியைப் பிரித்துள்ளார்கள். இங்கே நாம் தமிழர் வாங்கிய வாக்கு 5% , தினகரன் வாங்கிய வாக்கு 3% ஆகும்
-----------------------------------------

இறுதியாக :

நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் அழிவைச் சந்தித்துவிட்டனர். மேற்கு வங்காளம் என்று மாநிலத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருளாதார மேன்மையை முழுவதும் அழித்து ஒழித்து அடங்கிய கம்யுனிஸ்ட் கட்சியை அங்கே மக்கள் துடைத்து எறிந்துள்ளார்கள். ஆனால் கெடுவாய்ப்பாக இங்கே நாம் வாய்ப்பு கொடுத்துள்ளோம். உலகம் முழுவதும் ஒரு புற்றுநோய் போலப் பரவி ஆடி அடங்கியுள்ள கம்யுனிஸ்ட் சித்தாந்தம் தேவை இல்லாமல் தமிழகம் இடம் கொடுக்கிறது. சர்வ நாசம் ஆக்காமல் ஓயமாட்டான் கம்யூனிஸ்ட்.

நல்லது செய்வது போல் இருக்கும் ஆனால் சர்வ நாசமும் செய்யு கம்யூனிசம், அது ஒரு மனநோய் அவ்வளவு தான் அது என்மட்டத்தில். நலல் இதயம் உள்ளவனை அது வசிகரிக்கும் ஆனால் அது நல்ல மூளை உள்ளவனால் தான் புரிந்து கொள்ள முடியும் பெரும் கேடு விளைவிக்கும் நோய் என்று. {உடனே சீனா ரஷ்ய என்று ஆரம்பிப்பார். ரஷ்ய கம்யூனிஸ்ட் இல்லை ; சீனா கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை 1980களிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டது.}

அந்த வகையில் ஒரு பெரும் கேடுகெட்ட கூட்டத்தை நாம் அனுமதித்துள்ளோம். ஒன்றுக்கு 100முறை சிந்திக்க வேண்டும் கம்யுனிஸ்ட் விசயத்தில். இல்லை இங்கே பெரும் வறட்சியை உருவாக்கி அதற்கு முதலாளிகள் தான் காரணம் என்று அப்போதும் ஒரு கேவலமான வெறுப்பு பேச்சு மட்டுமே பேசி திரிவான். ஒரே ஒரு கம்யுனிசத் இங்கே அவன் சொல்லும் கொள்கை படி ஒரு தொழிற்சாலை நடத்திக் காட்டச் சொல்லுங்கள் நான் நாட்டை காலி செய்கிறேன்.

எனவே கம்யுனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த நபர்களுக்கு நான் சொல்ல வேண்டியது " நல்ல இதயம் உள்ளவனை அது வசிகரிக்கும் ஆனால் அது நல்ல மூளை உள்ளவனால் தான் புரிந்து கொள்ள முடியும் கம்யுனிசம் என்பது ஒரு பெரும் கேடு விளைவிக்கும் நோய் என்று". அதன் வரலாற்று உண்மை இது. 19ஆம் நூற்றாண்டில் மிக பெரிய அழிவை உருவாக்கியது , சர்வாதிகாரிகளை கொடுத்தது எல்லாமே கம்யூனிஸ்ட் தான். இது அசைக்க முடியாது உண்மை.

எனவே தமிழகம் திமுக என்ற கட்சியைத் தேர்வு செய்ததில் கூட ஒருவிதத்தில் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கம்யூனிஸ்ட் அழித்தொழிக்க வேண்டிய ஒரு வியாதி அந்த வியாதியை அனுமதித்து நல்ல விஷயம் அல்ல.

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழகத்தின் தேர்தல் முடிவுகளிலிருந்து நான் உணர்வது மாணவர்கள் இளையவர்கள் மத்தியில் இரண்டு விசயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்

1.நாட்டின் பொருளாதாரம் என்றால் என்ன? இந்தியப் பொருளாதாரத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது ஒன்று. அதனால் பலதிட்டங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்து

2.உலக அளவில் நாடுகள் எப்படியான திட்டங்களை முன்வைக்கின்றன , இந்தியா ஒரு வளரும் நாடாக எப்படி முன்வைக்கிறது? அதில் தமிழகத்தின் பங்களிப்பு இந்த விதமான செய்திகள் முறையாகச் சென்று சேரவில்லை குழந்தைகளுக்கு முக்கியமாக மாணவர்கள் இளையவர்களுக்கு.

இந்த இரண்டையும் சரி செய்யும் முயற்சியாக நான் தகவல்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று முடிவேடுத்துளேன்.

அதன் படி அடுத்த வாரம் முதல் வாரம் ஒருமுறை முக்கியமான அந்த வாரச் செய்திகளும் , ஒருமுறை பொருளாதாரம் சார்ந்த கேள்வி பதில் தொடரும் என்று இரு நிகழ்சியாக என் youtube channelல் வெளியாகும் என்று கூறிக்கொள்கிறேன். {செய்திகளில் சினிமா நடிகைகள் செய்தி , அவர் இவரோடு ஓடிப் போனார் இவர் அவளோடு ஓடிப் போனார் கள்ளக்காதல் என்று கவர்ச்சி செய்திகள் இருக்காது 100% அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகளும் , அது எதனால் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று விளக்கமும் நான் கொடுப்பேன். எந்த அரசியல் சார்பும் இருக்காது. பொது அறிவுக்கான செய்தியாக மட்டும் இருக்கும்.}

மாணவர்களை இளையவர்களை புரட்சி போராட்டம் என்று தூண்டும் கூட்டத்திடம் இருந்து விலகி அறிவியல் , பொருளாதாரம் வியாபாரம் என்று அறிவார்ந்த ஒரு தேடலை நோக்கி நகர்த்தவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதால் இதைச் செய்ய முன்வருகிறேன்.

நான் ஒருவேளை முழுவதும் அரசியலுக்கு வந்துவிட்டாலும் இதைக் கட்டாயம் கைவிட மாட்டேன். இதை நடத்துவது மட்டும் அல்ல மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் தயங்காமல் சொல்வது என்று முடிவு செய்துள்ளேன்.

எனவே வாரம் இருமுறை பாடம் நடத்த போகிறேன் தயார் ஆகிகொள்ளுங்கள் என்ன கேள்வி கேட்க. மாணவர்கள் இளையவர்கள் மட்டும்.

நீங்கள் என்னை ஒரு நாள் புரிந்து கொள்வீர், என் நோக்கம் சரியானது என்று ஏற்றுக்கொள்வீர் என்று நம்பி இந்த முயற்சியைத் தொடங்குகிறேன்.

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கமல் , கமல் அவர்களின் கருத்தை ஆதரிக்கும் அனைவருக்கும்,

நேரடியாக கோட்சே கொலை செய்தான் என்று ஆரம்பிக்கும் வசதியை விடக் கொஞ்சம் 1946ல் நடந்த நவகாளி இந்து மக்கள் படுகொலை , அதற்கு முன் நடந்த direct action day இந்த இரண்டு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு ஒரு நியாயம் பேசுங்கள்??? அதில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் தொடர்புடைய இஸ்லாமிய தேசியப்படை என்ற காட்டுமிராண்டிகளைப் பற்றிப் பேசிவிட்டு பின் அத்தோடு கோட்சே பற்றிப் பேசினால் கொஞ்சம் மக்களுக்கும் வரலாறு என்னவென்று புரியும் ஏன் எது கோட்சே காந்தியைக் கொலை செய்யத் தூண்டியது என்று.

நான் கோட்சே செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. கொலை மனித உயிரை எடுக்கும் அந்த குணம் கொடூரமானதே. ஆனால் அதற்கு தூண்டப்பட்ட காரணங்களையும் பேசினால் தான் சரி. அதைவிட்டுவிட்டு நேரடியாக அவன் மதத்தினை அடையாளப்படுத்தி இந்து தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்வது எதனால்??? கேவலமாக அரசியல்?????

எந்த மதத்தவன் என்பது முக்கியம் அல்ல அவன் செய்யும் காரியம் என்ன என்பதுவே முக்கியம். அப்பாவி மக்கள் உயிரினை எவன் தொட்டாலும் அவன் தீவிரவாதியே அவனை முழுவதும் மனித சமூகத்திலிருந்து விலக்கிப் பார்க்கும் குணம் வேண்டும்.

இதை அனைவரும் ஏற்பீர்...

ஆனால் கொடுமை என்னவென்றால் இயற்கையாகக் கடவுள் என்று கூறினால் எந்த மதம் நாடு இனம் என்று பாராமல் அதை அப்படியே வணங்கிச் செல்லும் குணம் கொண்ட இந்துக்களைத் தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்த முயல்வதை விட அருவருப்பான அரசியல் எதுவும் இல்லை.

கமல் சார் ,

பிள்ளையார் , ஜீசஸ் , இஸ்லாம் என்று அனைத்து மதங்களும் உள்ள புகைப்படத்தைத் தெருவில் நின்று விற்றுப் பாருங்கள் - அதை வாங்குபவன் இங்கே 100% ஒரு இந்துவாகத் தான் இருப்பான். அந்த அளவிற்கு இயற்கையாக அவன் மதச்சார்பின்மையுடன் ஆன்மீக நம்பிக்கையுடன் கலந்தவன்.

தயவு கூர்ந்து இப்படிப் பேசி இருக்கும் இந்துக்களைக் கெடுத்துவிடாதீர்.

அப்புறம் இவர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்ட திமுக திக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் காரர்களுக்கு நான் கேட்பது ஒரே கேள்வி தான்

"இதே போல் அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளையும் மத அடையாளப்படுத்த நீங்கள் தயாரா???? கொஞ்சம் ஆண்மையுடன் பதில் தேவை. அப்படி இல்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் - அந்த தைரியமும் உங்களுக்கு இந்து பெருந்தன்மையுடன் இருப்பதால் கிடைத்த அசட்டுத் தைரியம். ஆனால் இதை ராகுகாலம் எதிர்பார்க்காதீர் - ஏன் என்றால் திருந்து வேண்டியது நீங்கள் தான் இந்துக்கள் அல்ல. நீங்கள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்".

அனைவரும் இந்தியராக ஒன்றுபட்டு ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மதித்து நடந்து கொள்வதில் தான் தீர்வு அமைதி உள்ளது. ஆனால் ஆளூர் சா நவாஸ் , மனுச புத்திரன் என்ற அப்துல் ஹமீது போன்ற ஓநாய்கள் திமுக திக கூட்டத்தை ஆதரிக்கக் காரணம் அவர்கள் இந்துக்களைத் திட்டுவார்கள் என்பதால். இது தான் முதுகில் குத்தும் வேலை.

எனவே நான் சொல்ல விரும்புவது திமுக திக கூட்டத்தை ஆதரிக்கும் கிருஷ்டவ இஸ்லாமிய நண்பர்கள் எவருக்கும் இங்கே மதசகிப்பு தன்மை பற்றிப் பேச எந்த யோக்கியதையும் இல்லை. ஏன் என்றால் "எந்த நாளும் எப்போதும் எந்த மதத்தினையும் தவறாகப் பேசாத நரேந்திர மோடி இஸ்லாம் கிருஷ்டவர் எதிரி என்றும் அவருக்குப் ஓட்டு போடா கூடாது என்றும் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஆதரிக்கும் திமுக திக ஒரு அப்பட்டமான வெளிப்படையாக இந்துக்களை அவர் தம் உணர்வுகளை காயபடுத்து பேசும் கூட்டம் - அவர்களை ஆதரிப்பது எதனால்???? இந்த குள்ளநரித் தனம் சீக்கிரம் உலகம் உணரும். எனவே நீங்களும் திருத்திக் கொள்ளுங்கள்.

கமல் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் மன்னிப்பு கேட்பது நல்லது... அதுவே உயர்வான குணம். மக்கள் பொது அமைதியை கெடுத்துவிட்டீர் உங்கள் வார்த்தையில் கவனமின்மையால்.

-மாரிதாஸ்

{இது சார்ந்து காணொளி வெளியிடக் கேட்டவர்கள் அனைவருக்காகவும் - காணொளியினை youtubeல் வெளியிடப்பட்டுவிட்டது.}



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிட கழகத்தைப் பகுத்தறிவு கூட்டமாக நினைத்த பலருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே :

நீங்கள் ஈ வே ராமசாமி அவர்கள் 1932 ஜூன் 20ஆம் தேதி பிரிட்டனில் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன் உரையாற்றினார் என்ற வரலாற்றைக் காலம் காலமாகத் திராவிட கழகம் கூறிவந்ததை அறிவீர் என்று நம்புகிறேன் - அது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இங்கே இவர்கள் சொன்ன பொய். நமது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் மொத்தமும் முழுவதும் நிரப்பினால் 50,000பேர் வரை இருக்க முடியும். 1932ல் பிரிட்டன் 1932 மக்கள் தொகை , அதில் குறிப்பிட்ட இடத்தின் மக்கள் தொகை அதில் தொழிலாளிகள் மக்கள் தொகை அதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் இல்லை சங்கத்தின் தொழிலாளர் எண்ணிக்கை என்று நீங்கள் எப்படித் தேடினாலும் இந்த 50,000பேர் என்ற எண்ணிக்கையே மிகக் கேவலமான பொய் என்று தெரியவரும்.

அதுவும் இங்கிலாந்து மக்கள் தொகை குறிபிட்ட நகரத்தில் என்று தேடினால் இவர்கள் சொல்லும் கதை எவ்வளவு அருவருப்பானது எனபது புரியும்.

இதே போல் ஈ வே ராமசாமியை வைத்து இவர்கள் அளந்த கதைகள் ஆயிரம் ஆயிரம். அதில் மிக அருவருப்பானது வைக்கம் வீரர் பெரியார் , UNESCO. இதற்கு ஆதாரம் எடுத்து முன்வைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்???? போய் திராவிட கழகத்தின் சட்டையையும் , திமுக சட்டையையும் பிடிக்க வேண்டும் "ஏமாற்றிப் பிழைப்பதற்கு வெக்கமாக இல்லையா என்று அவர்கள் இருவரையும் கேள்வி எழுப்பவேண்டும்" அது தானே பகுத்தறிவு உள்ளவர் செய்யவேண்டும்??? சரிதானே??? ஆனால் ஆதாரத்துடன் நிரூபிக்கும் நபர்களைத் திட்டுவது என்ன பகுத்தறிவு????

திராவிட கழக பகுத்தறிவுவாதிகள் ஜனநாயக போராளிகள் இன்று ஒரு உண்மையை எதிர்கொள்ள முடியாமல் அதைச் சொன்னவர்களை வசைபாடுவது வெக்க கேடு. வீரமணி ஒன்றும் ராஜராஜ சோழன் அல்ல உழைக்காமல் அடுத்தவர் பணத்தில் ஓசி சோறு சாப்பிடும் ஒரு ஜந்து அவ்வளவு தான் எனக்குத் தெரிந்து. அவர் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள் என்று பலவிதமாக எந்த அளவிற்குக் கொள்ளை நடக்கிறது நிர்வாக திருட்டுத்தனம் நடக்கிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஈவே ராமசாமி விட்டுச் சென்ற சொத்தை அனுபவிக்க அவருடன் ஒரு பத்து அருவருப்பான பிறவிகள் சுற்றித் திரிகின்றன. அந்த எச்சைப் பிழைப்பு பிழைக்கும் ஜாதி தோசை சுடும் நபர்கள் வேண்டுமானால் கீ வீரமணி தலைவராக இருக்காலாம் ஆனால் இந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை.

எனவே என்னைத் திட்டுவதை விட்டு விட்டு உங்களுக்குத் திராணி இருந்தால் அங்கே சென்று சண்டை போடவும்.
-------------------------------------------------------------------

அடுத்து திருமுருகன் எதோ யோக்கியவான் போல நினைத்து உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டுத் திரியும் சில நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களும் அவதூறாகப் பேசுவதைக் காண முடிகிறது.

இதோ பாருங்கள் புரிகிறது உங்கள் வருத்தம் கோபம். நீங்கள் நம்பிக்கை வைத்த ஒரு போராளியை ஒரு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நபரை மாரிதாஸ் என்ற நபர் கீழ்மை படுத்தலாமா என்ற அந்த கோபம் புரிகிறது. ஆனால் நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு உரிய நபர் அந்த திருமுருகன் கிடையாது.. ஏன் என்று நானே ஒரு பதிவை இந்த மாத இறுதிக்குள்ளாக விரிவாக வெளியிடுகிறேன். அதனை எடுத்துக் கொண்டு பொறுமையாக நான் சொல்லும் தகவல்கள் சரியா என்று தேடி அறிந்து பின் நீங்களே உங்கள் நம்பிக்கை சரியா என்று சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

நக்கீரன் , விகடன் பத்திரிகைகள் நினைத்தால் என்றவேண்டுமானாலும் எவனை வேண்டுமானாலும் போராளியாக மாற்றுவோம் புரட்சியாளராக மாற்றுவோம் என்ற நிலையில் தமிழகம் இருந்தால் அது நிச்சயம் நாசம் செய்யும் தவிர நல்லது செய்யாது.

நான் கடந்த 18ஆண்டுகள் மேலாகத் தீவிரமாக அரசியலையும் , அரசியல் நகர்வுகளையும் பார்க்கிறவன், போராட்டங்களில் பங்கேற்றவன் என்ற விதத்தில் சொல்கிறேன் "சீமான் கூட ஒரு ஒருபக்கம் ஏற்றுக் கொள்வேன் அவர் பல ஆண்டுகள் நானே கண்டதுண்டு பொது விவகாரங்களில் சரியோ தப்போ நிற்பதை. ஆனால் இந்த திருமுருகன் காந்தி என்பவன் தந்திரமாக திமுக திக கூட்டத்தின் திட்டப்படி லாட்டரி மார்டீன் என்பவரால் உதவி செய்யப்பட்டு , லயோலா கல்லூரிகள் போன்ற கல்லூரிகள் மூலம் அவருக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையும் செய்யப்பட்டு மிக மிக தந்திரமாக போராளியாக உண்மைக்கு மாறாகத் தூக்கி வைக்கப்பட்டவன்.

அவன் நோக்கம் முழுக்க முழுக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும் அதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்கள் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நரி வேலை தான் செய்வது ஒழிய வேறு இல்லை. அதற்கு மக்களிடம் ஒருவித விரத்தியான மனநிலையைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பான். எங்கே எல்லாம் பிரச்சனை தலைதூக்குகிறதோ அதை அப்படியே அரசியல் லாபமாக திமுகவிற்கு மாற்றுவது இவன் செய்யும் வேலை. இவன் மட்டும் இது போல 20க்கும் மேற்பட்ட இயக்கம் இருக்கிறது இங்கே எல்லாமே திக திமுக வழிகாட்டுதலின் பெயரில். இவன் இல்லை என்றால் வேறு ஒருவனைக் கொண்டு வந்திருக்கும் திக.

எனவே நான் ஆதாரத்துடன் வீடியோ பதிவு வெளியிடும் வரை கொஞ்சம் காத்திருங்கள். பின் அதற்குத் திருமுருகன் உரியப் பதிலைச் சொல்லவில்லை என்றால் அது தவறு என்றால் நானே மன்னிப்பு கேட்கிறேன். அது உண்மை என்றால்????? நான் உங்களை கேட்டுகொள்வது ஒன்று தான் “நீங்கள் இப்படி போலிகளை நம்பாமல் உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற என்ன வழி என்று உருப்படியான வேலையை பார்க்கச் செல்லவும்”.

வைகோ என்ற மனிதரை இங்கே பேசாதவர் எவரும் இல்லை ஆனால் நான் என்றாவது அவரை பற்றிப் பேசியது உண்டோ??? அதே போல ஸ்டாலின் ஆரம்பித்து திருமாவளவன் வரை தனிப்பட்ட விதத்தில் மரியாதையைக் குறைவாக பேசியது உண்டா???? பின் ஏன் திருமுருகனைத் தீவிரமாகக் கடுமையாக எதிர்கிறேன். அந்த அளவிற்கு அவன் தரங்கெட்ட தந்திரம். அவன் தகுதி அவ்வளவு தான் என்பதால் தவிர வேறு இல்லை.

திருமுருகன்- திக - திமுக- மார்டீன் - லயோலா - நக்கீரன் இணைந்து மிகப் பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் உலகம் முழுமையாக உணரும்.

இறுதியாக மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது :

போராட்டம், போராளி, புரட்சி என்ற வார்த்தைகள் இங்கே போதையை ஏற்றும் வார்த்தைகளாக மாறிவிட்டது. அந்த வகையில் புகைபிடிப்பது , மது அருந்துவது , கஞ்சா ஏற்றுவது போல தான் இந்த புரட்சி போராளி என்ற வாக்கியமும். தற்காலத்தில் இதுவும் உங்கள் வாழ்வை உங்கள் குடும்பத்தை நாசம் செய்யும் நீங்கள் சரியான காலத்தில் விழித்துக்கொள்ளவில்லை என்றால்.

போராட்டம் புரட்சி என்று திரிந்து காலம் வீணடித்து குடும்பத்தையும் கெடுத்து நின்ற பல நல்ல நபர்களை நான் அறிவேன். அவர்கள் என்று எங்கோ ஒரு லாஜில் உறவு எதுவும் இன்றி வேலையும் சரியாக இல்லாமல் காலம் கடத்துவது. 10வருடம் மேலாக நீதிமன்றம் போலீஸ் நிலையம் வீட்டுக்கும் அலைந்து வாழ்க்கை தொலைத்துவிட்டு நிற்பவர்கள் பலரையும் நான் அறிவேன். ஆனால் இந்த திருமுருகன் போன்றவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் அகப்பட்டவன் அப்பாவியாகத் தான் இருப்பான். அந்த நோக்கத்தில் கூறுகிறேன் தவிர வேறு எதுவும் எதிர்பார்த்து அல்ல.

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யுனெஸ்கோ விருது வழங்கவில்லை என்று ஏறக்குறைய ஒப்புக்கொண்டது ஆனந்த விகடனில் உள்ள பெரியாரிய கும்பல். அடுத்து முரசொலி , தினத்தந்தி, புதிய தலைமுறை, News7 என்று அனைத்து பத்திரிக்கையிலும் இருக்கும் பெரியாரிய கும்பலை வெளியே கூப்பிடுங்கள். விடுதலை நாளிதழில் வெளியாக வேண்டும் மன்னிப்பு கடிதம்.

அத்துடன் யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உள்ள அனைத்து அரசு புத்தகங்கள் மாற்றவேண்டும். இதுவரை லைப்ரேரியில் உள்ள அந்த வகை புத்தங்கள் நீக்க வேண்டும். கல்லூரி ஆரம்பித்து ஆய்வுக் கட்டுரைகள் அதன் அடிப்படையில் 50 ஆண்டுகள் மேல் வந்த அனைத்தையும் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தி அதையும் சரி செய்ய வேண்டும். ஒரு பொய் இதனால் நாட்டில் எவ்வளவு பெரிய தவறான வழியில் மக்களைக் கொண்டு சென்றுள்ளார்கள்????

முதலில் பெரியார் மணியம்மை பல்கலைகழக்திற்கு ஒரு வக்கில் நோட்டீஸ் தயார் செய்யவேண்டும்... அய்யோ எவ்வளவு வேலை...!!!

50 ஆண்டுகளாக ஏமாற்றியது அப்பட்டமாக மாட்டிக்கொண்டு விழிக்கும் வீரமணி வெளியே வரவும். உங்கள் கதவுகள் தட்டும் சத்தம் கேட்கவில்லையா??? சுபவீ எங்கப்பா??? அவருக்கு ஒரு போன் போட்டுச் சொல்லுங்கள் எல்லோரும்.

இந்த பஞ்சாயத்து முடித்ததும். வைக்கம் என்ற இடத்தில் ஈவே ராமசாமிக்குச் சிலை வைத்தது யார் என்ற பஞ்சாயத்து ஆரம்பிக்கப்படும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். அதற்கும் ஆதாரம் இருக்கிறது வீரமணி ஐயா..

மின்கம்பி???? தனியா ஒரு சேனல் ஓப்பன் செய்யலாம் அவ்வளவு பொய் சொல்லி இருக்கேங்க மக்களிடம்!

நீங்கள் விதைத்த வினை......

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கீ வீரமணி அவர்களுக்கு,

UNESCO விருது கொடுக்கவில்லை என்ற குற்றா சாட்டுக்கு தங்களுடைய அறிக்கை படித்தேன் அதற்கு என்பக்க பதிலினை பொதுமக்கள் மத்தியில் வைக்க விரும்புகிறேன். எது சரி என்பதை இனி தமிழக மாணவர்கள் இளைஞர்கள் முடிவு செய்யட்டும். திராவிட கழகம் என்பது எந்த அளவிற்கு கீழ்த்தரமான பொய்களைச் சொல்லக் கூடியவர்கள் என்பதை இதிலிருந்து அநேக மக்கள் விழிப்படையக் கூடும் என்பதால் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

1)கி வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் எடுத்த எடுப்பில்

விக்கிப்பீடியாவிலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!
பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!

என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதற்கு முதலில் உங்களை நான் கேட்க வேண்டிய கேள்வி உங்களுக்கு வெக்கமே கிடையாதா??? ஒரு குற்றஞ்சாட்டு அதுவும் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு அதன் பெயரில் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கியுள்ளார்கள் - உங்களிடம் ஆதாரம் இருந்தால் விக்கிப்பீடியாவில் கொடுத்து அந்த தகவலைச் சேர்க்க வேண்டியது தானே. அவ்வளவு தானே விசயம். அதைவிட்டு விட்டுப் பார்ப்பான் இதில் சதி செய்கிறான் என்று பிதற்றுவதற்கு என்ன இருக்கிறது????? எனவே சொன்னது பிராமணரா இல்லையா என்பது அல்ல விசயம் - பிரச்சனை ஈவே ராமசாமிக்கு அப்படி ஒரு விருது 1970களில் UNESCO அமைப்பால் கொடுப்பப்பட்டதா??? என்பது தான் கேள்வி.

கி வீரமணி அவர்கள் அந்த விக்கிப்பீடியா பக்கத்திற்குச் சென்று அதன் view History பகுதியை எடுத்துப் பார்த்து தாராளமாகத் திருத்தம் செய்யலாம். ஆனால் நீங்கள் ஆதாரம் கொடுக்க வேண்டும் இப்போது. அதான் இன்று தேவை. சென்ற ஜனவரி மாதம் வரை கூட விருதுகள் பட்டியலில் UNESCO விருது 1970 என்ற தகவல் இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் அது இல்லை. இந்த வகை கட்டுரைகள் திருத்தம் யாரும் செய்யலாம் தான் ஆனால் அதிலும் Semi protected வகை கட்டுரைகளைத் திருத்தம் செய்தால் அது உரியத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு நீக்கப்படும் சேர்க்கப்படும். எனவே ஆதாரம் கொடுத்துத் தான் நீக்கப்பட்டுள்ளது என்று புரிகிறதா??? நீங்கள் உங்கள் ஆதாரத்தை வெளியிட இப்போது அது தான் தேவை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்.

2)அந்த அறிக்கையில் அடுத்து மிக முக்கியமான விசயம் 1970களில் கொடுக்கப்பட்டதாகச் சொல்லி ஏமாற்றிய அந்த விருதில் UNESCO நிறுவனம் பின்வருமாறு கூறியதாகக் கூறியுள்ளீர்.

Periyar, the Prophet of the New Age;
The Socrates of South East Asia;

இதில் விசேசம் என்னவென்றால் South East Asia வில் இந்தியா வராது. சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகள் தான் வருமே ஒழிய இந்தியா வராது. இந்தியா இருப்பது South Asia ஆகும். எனவே இது மிகப் பெரிய தவறான தகவல். அத்துடன் திராவிட கழகத்தினர் தங்களுக்கு தாங்களே கொடுத்துக்கொண்ட விருதில் சொன்ன பொய்யில் இருக்கும் மிகப் பெரிய தவறு.

3)அறிக்கையில் பார்ப்பான் அவன் எவன் என்று அனைவரையும் திட்டிவிட்டு இறுதியாக ஆதாரம் என்று ஒரு புத்தகத்தை வீரமணி காட்டியுள்ளார். அதன் விவரம்

Atheism and Secularity Volume 1 என்ற புத்தகம் Phil ZuckerMan என்பவரால் எழுதப்பட்டதாகும். அந்த நூலின் 142 ஆம் பக்கத்தில் ஆதாரம் உள்ளது என்று கூறி ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யைக் கூற முயல்கிறார் கி வீரமணி அவர்கள். ஏன் இதைப் பொய் என்று கூறுகிறேன் என்றால்.

Atheism and Secularity புத்தகம் முழுக்க முழுக்க கடவுள் மறுபாளார்கள் கருத்தைப் பற்றிய தகவல்களை அந்த அந்த நாடுகள் பகுதிகள் உரிய நபர்களிடம் எடுத்து கோர்க்கப்பட்ட ஒரு நூல். அந்த வகையில் இந்த நூலில் Atheism and Secularity of India என்ற பகுதியில் ஈவே ராமசாமி கடவுள் மறுப்பாளராக ஒரு 3 பக்கத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார் அந்த புத்தகத்தை எழுதிய Phil ZuckerMan. அவர் அந்த தகவலை UNESCO அமைப்பிலிருந்து பெறவில்லை மாறாக அந்த தகவலை அவருக்குக் கொடுத்ததே சாச்சாத் இதே வீரமணி அவர்கள் , திராவிட கழகத்தினர் தான் அந்த தவறான தகவலை Phil ZuckerMan அவர்களுக்குக் கொடுத்து உள்ளீர்கள்.

மிக முக்கியம் இந்த புத்தகம் வெளியானது 2009ல் தான். இதன் அடுத்த பதிப்பு 2010. அவ்வளவு தான்.

ஆக இதன் மூலம் இன்னொரு பொய் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அதாவது நீங்கள் தமிழ் நாட்டை மட்டும் ஏமாற்றவில்லை மாறாக முடிந்த அளவு வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களையும் ஏமாற்றியுள்ளீர். எதற்கு இந்த வெக்கம் கெட்ட விருது???? இத்துலாம் தேவை தானா. மிக முக்கியம் விருதுக்கு ஆதாரம் கொடுங்கள் வீரமணி என்றால் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்ரு கை காட்டுவது அசிங்கமாக இல்லையா??? திராவிட கழகத்திடம் அதற்காக ஆதாரம் இல்லையா???

வீரமணி அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இது நவீன உலகம் நீங்கள் எதையும் மறைக்க முடியாது. 50 ஆண்டுகள் மேலாக ஒரு சமூகத்தையே முழுமையாக ஏமாற்றியுள்ளீர்கள். இன்று அப்பட்டமாக அகப்பட்டுக்கொண்டீர். தப்பிக்க வழி இல்லை.

4)இந்த அறிக்கையில் முக்கியமாக கி வீரமணி எப்படி முரண்படுகிறார் என்றால்

"உலகம் அறிந்த ஓர் உண்மையை அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனமே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிடக் கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்த லாட்டுக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?"

என்று கேள்வி எழுப்பிய வீரமணி அடுத்த வரியில் "யுனெஸ்கோ மன்றம் என்ற அய்.நா.வின் அதிகாரப் பூர்வமான கிளைதான் அவ்விழாவை நடத்தியது." என்கிறார். ஆக யுனெஸ்கோ மன்றம் என்ற கிளை அமைப்பு தான் கொடுத்ததாக அடுத்த வரிக்கு வந்துவிட்டார் வீரமணி. முதலில் UNESCO என்றார்கள் பின் UNESCO மன்றம் என்று வந்துவிட்டார்கள்!!! இப்படி அறிக்கை விட வெக்கபட வேண்டாமா???

இதைத் தான் நான் பலவருடமாக கூறுகிறேன். இந்த ஐ நா புகழ் திருமுருகன் காந்தி எப்படி இவர்கள் பொய்யான விதத்தில் உருவாக்கினார்களோ அதே பாணியில் பொய்யான விதத்தில் இந்த விருதும் கொடுத்துள்ளார்கள். இவர்கள் மக்களை மடையர்களாக ஆக்குகிறார்கள். இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி அந்த புகழைப் பரப்பி ஒரு கீழ்த்தரமான வழியில் புகழ் தேடுவது உலகத்திலேயே மிக கேவலமாக அயோக்கியத்தனம் என்பேன். அதுவும் பகுத்தறிவு என்று வாய்கிழியப் பேசும் நபர்கள் இப்படி வெக்கமே இல்லாமல் மாட்டிகொண்டும் மீண்டும் மீண்டும் அந்த பொய்யை எப்படியாவது நிலை நிறுத்தமாட்டோமா என்று பதட்டம் அடைகிறார்கள்.

கி வீரமணி அறிக்கையில் ஆதாரம் இல்லை என்பதைத் தாண்டி இன்னொரு பொய்யும் அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்ற விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்துலாம் ஒரு பிழைப்பா வீரமணி அவர்களே ???? திராவிட கழகத்தின் வரலாற்று பிதற்றல்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வைக்கம் வீரர் பெரியார் , UNESCO வழங்கியதாக சொல்லப்பட்ட விருது....

திராவிட சித்தாந்தம் அழித்து ஒழிக்கபடவேண்டிய பொய்களால் உருவாக்கபட்ட மகா கேவலமான மாய சித்தாந்தம் என்பதற்கு இது ஒரு முக்கியமாக எடுத்துக்காட்டு. ஒரு விருது ?? அதற்கே இவ்வளவு பொய்கள் தேவையா?? பின் மற்ற விசயங்களை சிந்தியுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

டேனியல் காந்தி என்று சொன்னதற்குக் கோபம் தாங்காமல் கொதித்தெழுந்தார் தெருமுருகன் காந்தி என்று செய்தி.

நண்பர்கள் பலர் விருப்பத்திற்கு இணங்கத் திருமுருகன் காந்தி என்ற திராவிட பங்களாவைக் காவல் காக்கும் பங்களா நாய்க் குட்டி தெருமுருகன் காந்திக்கு ஒரு தனி காணொளி விரைவில் வெளியிடப்படும்.

திமுக திக அரசியல் சதுரங்கத்தில் தந்திரமான ஓநாயாகத் திரியும் லாட்டரி மார்டீன் தூக்கிப் போடும் எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு வேலை செய்யும் டேனியல் காந்தி பற்றிய விழிப்புணர்வு காணொளிப் பதிவு இன்னும் சில தினங்களில் நமது YouTube சேனலில் இளையவர்கள் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி வெளியிட விரும்புகிறோம்.

திருமுருகன் போன்ற ஓநாய்களை வீழ்த்தவில்லை என்றால் இங்கே திமுகவை வீழ்த்த முடியாது. எனவே முடிந்த அளவு இளையவர்கள் மத்தியில் அந்த தகவலைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

டேனியல் காந்தினு சொன்னா கோபம்? அவ்வளவு கோபம் வருது! இரு வறேன்.

-மாரிதாஸ்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஈவே ராமசாமி பற்றி உண்மையை எடுத்துக் கூறினால் அவர்கள் குரலை முடக்கவும் , அதை முழுமையாகத் தடுக்கவும் இங்கே ஒரு கூட்டம் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்யும். அந்த கூட்டம் சமீபத்தில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற நண்பர் எழுப்பிய ஆதாரத்துடனான குற்றசாட்டிடை எதிர்கொள்ள முடியாமல் அவர் Facebook கணக்கை முடக்கியுள்ளார்கள் என்று செய்தி.

இதே wikipediaல் 2008 வரை ஈவேரா அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக இருந்த தகவல் - 2009ல் இருந்து மாற்றி ஈவேரா அவர்களை அவருடைய ஆதரவாளர்கள் வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள் என்று மாற்றினார்கள். இதற்கே பலகாலம் சண்டை போட வேண்டியதாகயிருந்தது. ஒரு உண்மையை மாற்ற இவ்வளவு அக்கபோரு.

இப்போது UNESCO விருது என்ற பொய்யை உடைத்து விட்டார்கள். இதனால் சென்ற ஆண்டுவரை ஈவேரா Awards என்ற இடத்திலிருந்த UNESCO இந்த ஆண்டு முதல் தூக்கிவிட்டார்கள் wikipediaல் இருந்து.

இப்போ அப்படி ஆதாரம் இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்??? ஆதாரத்தைக் கொடுத்து அந்த நீக்கப்பட்டது தவறு என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டுக் கதை அளப்பதற்கு வெக்கப்பட வேண்டும் வீரமணி அவர்கள். இப்படி பச்சையாக மக்களை ஏமாற்றி பலகாலம் பிழைப்பு நடத்திய திக கூட்டம் வெக்கமே இல்லாமல் கேள்வி கேட்பவர்களை எதிர்த்துக் கொதிக்கிறது. வீரமணி அவர்களுக்கும் சுபவி அவர்களுக்கும் கொதிப்பாக இருந்தால் போய் கிணற்றில் குதிக்கவும் இல்லை ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். சும்மா நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு இது ஒன்றும் 1970கள், 1980கள் அல்ல , இது 2019. ஆதராம் வேண்டும். அசைக்க முடியாத ஆதாரம்.

ஈவேராவுக்கு UNESCO விருது கொடுக்கவில்லை என்றும் கூறியது மட்டும் அல்ல இங்கே பெரும்பாலும் பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று கூறும் பலவிசயம் வடிகட்டின பொய். வைக்கம் வீரர் பெரியார் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அடுத்தவன் போராட்டத்திற்கு லேபில் ஒட்டி அதை வைத்து ஆதாயம் தேடிய கூட்டம் தானே பின் எப்படி வெக்கம் இருக்கும். எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு முட்டுக்கொடுக்க இவர்களே ஒரு வரலாற்றை எழுதுவது இவர்களுக்குக் கைவந்த கலை. சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கு அதுதானே உழைப்பு , பிழைப்பு எல்லாமே.

கூடிய விரைவில் ஒட்டுமொத்தமாக ஈவேரா என்ற மனிதர் எப்படி இங்கே வலுக்கட்டாயமாக்க மக்கள் மத்தியில் முக்கியமாகப் பட்டியலின மக்கள் மத்தியில் பதியவைத்து மக்களை ஏமாற்றி எப்படி ஆதாயம் தேடினார்கள் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக வீடியோ பதிவினை கூடிய விரைவில் வெளியிடுகிறேன். நீங்கள் ஒரு ID முடக்கலாம் ஒரு பதிவை நீக்கலாம். ஆனால் உண்மை என்றென்றும் தூங்காது, அன்று ஊர் வாயையும் மூட முடியாது.

முழுவதும் அம்மணமாக நிற்க வேண்டிய அருவருப்பான நாட்களைத் திராவிட கழகம் அதன் அரசியல் கழகமும் சந்திக்கத் தயார் ஆகுங்கள். உங்கள் இருவரையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்கும் நாள் நெருங்குகிறது.

ஈவேரா விட்டுச் சென்று 10000கோடி சொத்துக்கு சில நக்கி பிழைக்கும் கூட்டம் வேண்டும் என்றால் அவருக்கு முட்டுக் கொடுக்கட்டும் - அவர்களுக்குப் பசிக்கும் அல்லவா. அதனால் பாவம் அவர்களை அந்த கூட்டத்தை விட்டுவிடலாம். ஆனால் உண்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது. திராவிட அரசியல் செய்த சித்து விளையாட்டுக்களை உடைத்துக் காட்டிட வேண்டிய நேரம் இது. எனவே எல்லோரும் பேசுங்கள்.

வைக்கம் வீரர் பெரியார் என்று பாடப்புகத்தில் எழுதிப் படிக்க வைத்து அதை முக்கிய கேள்வியாகத் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் கேட்டு அதை மாணவர்களை வலுகடடாயமாக படிக்க வைத்து - ஒரு மாநில மக்களையே இரண்டு தலைமுறையாக முழுவதும் முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள் இந்த திமுக திக இரு கூட்டுக் களவாணிகளும்.

சும்மா விடக் கூடாது இவர்களை... கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு special வீடியோ வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மாரிதாஸ்

ஈவே ராமசாமி பற்றி உண்மையை எடுத்துக் கூறினால் அவர்கள் குரலை முடக்கவும் , அதை முழுமையாகத் தடுக்கவும் இங்கே ஒரு கூட்டம் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்யும். அந்த கூட்டம் சமீபத்தில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற நண்பர் எழுப்பிய ஆதாரத்துடனான குற்றசாட்டிடை எதிர்கொள்ள முடியாமல் அவர் Facebook கணக்கை முடக்கியுள்ளார்கள் என்று செய்தி.

இதே wikipediaல் 2008 வரை ஈவேரா அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக இருந்த தகவல் - 2009ல் இருந்து மாற்றி ஈவேரா அவர்களை அவருடைய ஆதரவாளர்கள் வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள் என்று மாற்றினார்கள். இதற்கே பலகாலம் சண்டை போட வேண்டியதாகயிருந்தது. ஒரு உண்மையை மாற்ற இவ்வளவு அக்கபோரு.

இப்போது UNESCO விருது என்ற பொய்யை உடைத்து விட்டார்கள். இதனால் சென்ற ஆண்டுவரை ஈவேரா Awards என்ற இடத்திலிருந்த UNESCO இந்த ஆண்டு முதல் தூக்கிவிட்டார்கள் wikipediaல் இருந்து.

இப்போ அப்படி ஆதாரம் இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்??? ஆதாரத்தைக் கொடுத்து அந்த நீக்கப்பட்டது தவறு என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டுக் கதை அளப்பதற்கு வெக்கப்பட வேண்டும் வீரமணி அவர்கள். இப்படி பச்சையாக மக்களை ஏமாற்றி பலகாலம் பிழைப்பு நடத்திய திக கூட்டம் வெக்கமே இல்லாமல் கேள்வி கேட்பவர்களை எதிர்த்துக் கொதிக்கிறது. வீரமணி அவர்களுக்கும் சுபவி அவர்களுக்கும் கொதிப்பாக இருந்தால் போய் கிணற்றில் குதிக்கவும் இல்லை ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். சும்மா நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு இது ஒன்றும் 1970கள், 1980கள் அல்ல , இது 2019. ஆதராம் வேண்டும். அசைக்க முடியாத ஆதாரம்.

ஈவேராவுக்கு UNESCO விருது கொடுக்கவில்லை என்றும் கூறியது மட்டும் அல்ல இங்கே பெரும்பாலும் பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று கூறும் பலவிசயம் வடிகட்டின பொய். வைக்கம் வீரர் பெரியார் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அடுத்தவன் போராட்டத்திற்கு லேபில் ஒட்டி அதை வைத்து ஆதாயம் தேடிய கூட்டம் தானே பின் எப்படி வெக்கம் இருக்கும். எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு முட்டுக்கொடுக்க இவர்களே ஒரு வரலாற்றை எழுதுவது இவர்களுக்குக் கைவந்த கலை. சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கு அதுதானே உழைப்பு , பிழைப்பு எல்லாமே.

கூடிய விரைவில் ஒட்டுமொத்தமாக ஈவேரா என்ற மனிதர் எப்படி இங்கே வலுக்கட்டாயமாக்க மக்கள் மத்தியில் முக்கியமாகப் பட்டியலின மக்கள் மத்தியில் பதியவைத்து மக்களை ஏமாற்றி எப்படி ஆதாயம் தேடினார்கள் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக வீடியோ பதிவினை கூடிய விரைவில் வெளியிடுகிறேன். நீங்கள் ஒரு ID முடக்கலாம் ஒரு பதிவை நீக்கலாம். ஆனால் உண்மை என்றென்றும் தூங்காது, அன்று ஊர் வாயையும் மூட முடியாது.

முழுவதும் அம்மணமாக நிற்க வேண்டிய அருவருப்பான நாட்களைத் திராவிட கழகம் அதன் அரசியல் கழகமும் சந்திக்கத் தயார் ஆகுங்கள். உங்கள் இருவரையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்கும் நாள் நெருங்குகிறது.

ஈவேரா விட்டுச் சென்று 10000கோடி சொத்துக்கு சில நக்கி பிழைக்கும் கூட்டம் வேண்டும் என்றால் அவருக்கு முட்டுக் கொடுக்கட்டும் - அவர்களுக்குப் பசிக்கும் அல்லவா. அதனால் பாவம் அவர்களை அந்த கூட்டத்தை விட்டுவிடலாம். ஆனால் உண்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது. திராவிட அரசியல் செய்த சித்து விளையாட்டுக்களை உடைத்துக் காட்டிட வேண்டிய நேரம் இது. எனவே எல்லோரும் பேசுங்கள்.

வைக்கம் வீரர் பெரியார் என்று பாடப்புகத்தில் எழுதிப் படிக்க வைத்து அதை முக்கிய கேள்வியாகத் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் கேட்டு அதை மாணவர்களை வலுகடடாயமாக படிக்க வைத்து - ஒரு மாநில மக்களையே இரண்டு தலைமுறையாக முழுவதும் முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள் இந்த திமுக திக இரு கூட்டுக் களவாணிகளும்.

சும்மா விடக் கூடாது இவர்களை... கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு special வீடியோ வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 à®ªà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மொத்த தமிழகமும் லயோலாரி கல்லூரி அதன் தந்திரதாரிகள் - இந்துக்களின் விரோதி திமுக இரண்டையும் விரட்டி அடிக்க வேண்டியதன் காரணத்தை உணர வேண்டிய காலம் இது.

நான் ஜீசஸ் அவர்களை நேசிக்கிறேன் மதிக்கிறேன் ஆனால் ஜீசஸ் வைத்து மத வியாபாரம் செய்யும் கூட்டத்தையும் - அதற்குத் தீவிரமாக வேலை செய்யும் மத வெறி பிடித்த லயோலா கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அதற்கு வக்காலத்து வேலை செய்யும் திக திமுக இந்த கூட்டத்தை முழுவதும் வெறுக்கிறேன். எனவே

நாளை அல்லது நாளை மறுநாள்

லயோலா கல்லூரி நிர்வாகிகள் - திமுக நிர்வாகிகள் இந்த இரண்டு கூட்டமும் செய்யும் தந்திரம் என்ன என்ன? இந்த இரண்டு கூட்டமும் சேர்ந்து எப்படி எப்படி இந்துக்களைத் துரோகம் செய்கின்றன? ஏன் திமுக - லயோலா கல்லூரி இரண்டையும் இந்துக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று முழு விவரத்தை முடிந்த அளவு எளிமையாக விளக்கம் கொடுத்து ஆதாரத்துடன் வீடியோ பதிவினை வெளியிட உள்ளேன்.

தேர்தலுக்காக மட்டும் அல்ல தேர்தல் முடிந்தும் நாம் லயோலா கல்லூரி நிர்வாகிகளைத் தீவிரமாக எதிர்த்து பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் தயார் ஆகவும்.

இது மதவாத மோதல் அல்ல இது இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளக தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகளை அழித்தொழிக்க தந்திரமாக வேலை செய்யும் ஒரு மதவெறி பிடித்த கூட்டத்தை எதிர்த்து நிற்கும் நியாயமான மோதல்.

இந்த வீடியோவினை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

-மாரிதாஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

v27.jpg

சென்னை,மே26,  தமிழகத்தில் வேலூர் தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 3,219 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தியது. இது குறைந்தபட்ச வித்தியாசமாகும். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.வை தி.மு.க. 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. அதிகபட்சமாக 7 லட்சத்தைத் தாண்டியும், குறைந்தபட்சமாக 4 லட்சத்துக்கு மேலாகவும் வாக்கு களைப் பெற்றுள்ளது. அந்த வகை யில் சிறீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 வாக்கு களைப் பெற்றுள்ளார். குறைந்த பட்சமாக தேனியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்கு களை தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங் கிரஸ் பெற்றது.

ஆனால் அ.தி.மு.க. அதிகபட்ச மாக 5 லட்சத்துக்கு மேலாகவும், குறைந்தபட்சமாக ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும்தான் வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில், தேனியில் அ.தி. மு.க. 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுகளையும், குறைந்தபட்சமாக திருச்சியில் ஒரு லட்சத்து 61 ஆயி ரத்து 999 வாக்கு களையுமே அ.தி. மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க. பெற்றி ருக்கிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி வாக்குகளில் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 வாக்குகள் செலுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்கு களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும்.

அ.தி.மு.க. கூட்டணி, ஒரு கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 வாக்குகளை மட்டுமே பெற் றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.

தி.மு.க. மட்டும் 32.76 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத வாக்கு களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 2.43, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் வாக்குகளைப் பெற் றுள்ளன. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க. அய்.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சி களுக்கான வாக்கு சதவீதம் பிரித்துக் காட்டப்பட வில்லை. ஆனாலும் 1.19 சதவீத வாக்குகளை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).

அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66 சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42 சதவீதம் வாக்குகளைப் பெற் றுள்ளன. (புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட் டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான வாக்கு சதவீதம் பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத வாக்குகளை இந்தக் கட்சிகள் பங்களித்ததாக கணக்கிடப்படுகிறது).

அ.ம.மு.க, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 சதவீதமாகும்.

தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 50 வாக்குகளைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சி வாங்கியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 வாக்கு களை  பெற்றிருக்கிறது.  இதன் சதவீதம் 3.72 ஆகும். நாம் தமிழர் கட்சியும்  இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 வாக்குகளை, அதாவது 3.88 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நோட் டாவுக்கு (யாருக் கும் வாக்களிக்க வில்லை) தனி இடம் கிடைப்பதுண்டு. இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்கு களை நோட்டா பெற்றுள்ளது. இது 1.28 சதவீதமாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard