New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.
Permalink  
 


EVR the uncertain mindset. .

"ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.

என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி

K.M. பாலசுப்பிரமணயம்
மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். " 
- தோழர் பா.ஜீவானந்தம்.
~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~
H ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,

ஈவேரா வை ப.ஜீவானந்தம் கிழிகிழின்னு கிழிக்கறதையும் படிக்கணும்! 

"அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர்.

பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது.

இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:

வெளியிட்டவர் என்பதற்காக 

ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.

அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி. 

தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை. 

சர்க்கார் அழிவ நடவடிக்கையைக் 

கண்டு ஈவேரா மிரண்டார்.

சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் 

தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். 

ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும்,

இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.

என்னை மானங்கெட்டத்

தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா,

K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.

''பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.

தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.

1) ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் - பின்னர் சமதர்ம விரோதிகளான R K சண்முகம் செட்டியார், ஏ ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈவேரா.

2) ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று புகழ்ந்தார் ஈவேரா.

3) லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்கள் எல்லாம் ஒழிய வேண்டும் சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக் குலாவினார் ஈவேரா.

4) மதங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று விருது நகர் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார் ஈவேரா!

5) திருநெல்வேலி மாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி, அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தர பாரதியை ஆதரித்து 'குடியரசில்' தலையங்கம் எழுதினார் ஈவேரா! 

("ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம் - சந்தியா பதிப்பகம் - பக்கம் 25 -29)
-----'-----------'--------------'-----------'----- 
நான் மேலே காட்டியிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர் ப ஜீவானந்தம் அவர்கள், ஈவேரா வைப் புத்தகம் முழுக்கக் கிழித்துத் தொங்க விட்டிருப்பதில் சிறிய சாம்பிள்தான்.
என்னுடைய கவலையே கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு "பாலன் இல்லத்தின்" மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்! பாவம் வீதி வீதி யாக உண்டியல் குலுக்கி சேர்த்த மணத்தில் கட்டியதாகக் கூறிக் கொள்கிறார்கள்!!
நன்றி.Abvp. chandran.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.
Permalink  
 


பெரியார் உயிரோடு இருந்த வரை அவரது காலத்திற்கு பின் அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது ? என்று உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை ....

மணியம்மை உயிரோடு இருந்தவரை அவர் நிர்வகித்து வந்ததுகூட சட்டப்படி தவறில்லை.

பெரியாரைப்போலவே மணியம்மையும் உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை.

பெரியார் மற்றும் மணியம்மையால் நிர்வகிக்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் டிரஸ்ட் பேரில் பதியப்படவில்லை.

பெரியார் திராவிடர் கழகம் வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியாரின் அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குச் சொந்தமானது!’ என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கவில்லை.

‘உங்களிடம் உரிமையிருப்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? அந்த ஆவணத்தைக் காட்டினால் மட்டுமே நீங்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அது மக்கள் சொத்தாக மாறி விடுகிறது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியாரின் அசையாச் சொத்துகளுக்கான உரிமை யாருக்கு என்பதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை தாமாகவே மக்கள் சொத்தாக மாறிவிடுகின்றன என்பது தான் தற்போதுள்ள சட்ட பூர்வமான நிலை’

பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர் எழுதி வைக்கவில்லை.

பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர, தனது சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை.

எனவே, பெரியாரின் சொத்துகளுக்கு அந்த அறக்கட்டளை உரிமை கோர முடியாது. சட்டப்படி அதுவும் மக்கள் சொத்தாகத்தான் கருதப்படும்.

விவாதித்ததாகக் கூறப்படும் தி.க. தலைமை, பெரியார் பெயரிலிருக்கும் சொத்துகளை விரைவில் விற்றுவிடுவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் உள்ளது.

* சென்னை செனாய் நகரில் ஒரு சொத்தும்,

* திருவிடைமருதூரில் இரு சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பிலிருந்தே செய்திகள் வந்துள்ளன.

மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.

பெரியாரின் சொத்துகள் மக்கள் சொத்தாக மாற்றப் பட்டு, அரசின் கண்காணிப்பில் அது நிர்வகிக்கப்பட வேண்டும் .

* சென்னையிலுள்ள பெரியார் திடல்,

* ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம்,அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம்,

* பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள்,

* மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்குச் சொந்தமான பல சொத்துகள் ஈரோட்டில் உள்ளன.

* திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை,

* திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம்,

* சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் ....

* தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன.

மேற்காணும் சொத்துக்கள் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் அறிந்திராத சொத்துக்கள் அனைத்திற்கும் வீரமணி சட்டப்படியான வாரிசுதாரர் இல்லை.

ஏனெனில் வீரமணி முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கும் பெரியாருக்கும் ரத்த சம்பந்தமான ஒட்டோ, உறவோ கிடையாது.

பெரியாரின் சொத்துக்களுக்கு சட்டப்படி உரிமைகோர அவரது ரத்த சம்பந்தமான பேரன் என்ற முறையில் ஈ.வி.கே.எஸ் மட்டுமே உரிமை கோர முடியும்.

இதுபற்றி வழக்குபோடுவது யார் ? எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பதுபோல் ,

பெரியாரின் சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்தவேண்டும்.

நன்றி - Sankara Narayanan



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் திருச்சியில் இருந்து கல்லணைக்கு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. திருச்சி மேலப்புதூரில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில் இருந்து மோட்டார் ஊர்வலத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் அந்தோணிடிவோட்டா, பங்கு தந்தைகள், கிறிஸ்தவ அமைப்பினர், இளைஞர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊர்வலம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு‘ என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியை வைத்து கொண்டு சென்றனர். ஊர்வலம் மேலப்புதூரில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட், பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், வேங்கூர் வழியாக கல்லணையை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்ற இளைஞர்கள் வழிநெடுக பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்றனர்.
https://www.dailythanthi.com/News/Districts/2018/04/09024322/The-Ceylon-Management-Board-is-set-up-to-set-up-a.vpf



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3

 

img1101224019_2_1

மூன்றாவது சர்ச்சைக்கு வருவோம். இது கீழவெண்மணியில் பெரியார் ஆற்றிய எதிர்வினையைப் பற்றிய கேள்வி. கீழவெண்மணியில் பெரியாரின் அறிக்கை உப்புசப்பு இல்லாதது என்று பாண்டே கூறுகிறார். கீழவெண்மணி படுகொலை கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று வீரமணி சொல்கிறார். திரு.பாண்டே விடுதலையிலிருந்து பெரியார் விடுத்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார். அதை மறுத்து திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மறுப்பு இது :

கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டபொழுது சென்னை பொதுமருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து, இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அன்னியர் ஆண்டாலும் பரவாயில்லை. (விடுதலை 28-12-1968) என்று கூறிடும் அளவுக்கு தந்தை பெரியார் கோபம் கொண்டிருந்தாரே,

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா?

இதுதான் திராவிடர் கழகத்தினுடைய மறுப்பு அறிக்கை. இந்த மறுப்பு அறிக்கை திரிபுவாதத்தை தவிர வேறில்லை; அதையும் பார்ப்போம். பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பந்தமாக மூன்று அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த மூன்று அறிக்கைகளிலும் பெரியாரின் அக்கறை எப்படியிருந்தது என்பதை பார்ப்போம்.

முதல் அறிக்கை இது.

“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். ‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன´ மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்’ என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்:

1.காந்தியார் கொல்லப்பட்டார்.

2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3.போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42-பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42-பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90-பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக’ இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்ல´ என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

‘விடுதலை’, 28.12.1968

இரண்டாவது அறிக்கை இது.

“இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

 இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!

 “பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

 இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்’ ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1.காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2.சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய – பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

 “Patriotism is the last refuge of a scoundrel. “

“தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்.” – [ஜான்சன்]

 ‘விடுதலை’, 28.12.1968]

இந்த இரண்டு அறிக்கையும் ஒரே நாளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

44 தலித் மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இதுதான் பெரியார் ஆற்றிய எதிர்வினை. மனசாட்சி உள்ளவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் – இதுதான் தலித் மக்களின் படுகொலைமீது கொண்டுள்ள அக்கறை அறிக்கையா?

இது எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

இத்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற ஆதிக்கசாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தலித்துகளை மிகக் கொடூரமாக நடத்திவருவது ஆதிக்கசாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட ஆதிக்கசாதி இந்துக்களையும் பெரியார் எதிர்க்கவில்லையே ஏன்?

இனி மூன்றாவது அறிக்கைக்கு செல்வோம். இந்த மூன்றாவது அறிக்கைதான் பெரியாரின் தலித் மக்களின் மீதான போலி அக்கறையை வெளிக்கொண்டுவந்த அறிக்கை. பெரியார்  பேசிய பேச்சு ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது. அதிலும் இப்போது அந்த அறிக்கைகளை ஆதரித்து வீரமணி போன்றவர்கள் பேசுவது இன்னும் அயோக்கியத்தனம்தானே தவிர வேறில்லை.

இதோ அந்த அறிக்கை….

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

விடுதலை 20-1-1969

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கும் திராவிடர் கழகத்திற்கு,

‘இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்’ என்று மூன்றாவது அறிக்கையிலேயே சொல்லிவிட்டாரே! இந்த அரசு ஒழிந்து வெளிநாட்டு அரசு வரவேண்டும் என்று மூன்றாவது அறிக்கையில் காணோமே!. முதலில் கூறியிருக்கிற இரண்டு அறிக்கைகளுக்கும் நேர்மாறாக அல்லவா அவரது மூன்றாவது அறிக்கை உள்ளது? பெரியாரின் அறிக்கைகளை திரிபுவாதம் செய்வது பாண்டே அல்ல வீரமணியும், திராவிடர் கழகமும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எதற்கெடுத்தாலும் பிராமணர்களை கடுமையாக எதிர்க்கும் பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பவத்தில் நாயுடுக்களை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அது ஒன்னுமில்லைங்க தோழர்,

பெரியார் 1920வரையிலும் 29 பொது நிலையங்களில் அங்கத்தினராயும், நிர்வாகஸ்தராயும், தலைவராயும் இருந்திருக்கிறார்.

அதில் ஒன்று நாயுடு சங்கம்.

இப்போது புரிகிறதா ஏன் பெரியார் கோபால கிருஷ்ண நாயுடுவை எதிர்க்கவில்லை என்று!

தொடரும்

பெரியாரின் அறிக்கைக்கான ஆதாரங்கள்

1. http://tamizachi.com/articles_detail.php?id=242

2.http://tamizachi.com/articles_detail.php?id=244

குறிச்சொற்கள்: ஈ.வெ.ராகி. வீரமணிதிருமாவளவன்தொலைக்காட்சி விவாதம்பார்ப்பனர்கள்பார்ப்பனீயம்பிராமண துவேஷம்பெரியாரின் மறுபக்கம்ரங்கராஜ் பாண்டேவிடுதலை பத்திரிகைவீரமணி



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

 

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

 

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு –

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)

(தொடரும்…)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)

(தொடரும்…)

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

 

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

 

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு –

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)

(தொடரும்…)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 அரவிந்தன் நீலகண்டன் on September 7, 2009 at 8:56 am

திருச்சிகாரர் வாதத்தை திசை திருப்பவில்லை தமிழ் ஓவியா…வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்த பிராம்மணர்களின் எண்ணிக்கையை விட தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திராவிட இயக்கத்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை. குறைவு மட்டுமல்ல கீழ்வெண்மணி சம்பவத்துக்கு ஈவெரா வெளியிட்ட மனிதத்தன்மையற்ற அறிக்கையானது மனநிலை பிறழ்ந்த திராவிடக்கும்பலின் தலித் விரோத மானுட விரோத இனவெறி கோட்பாடுகளுக்கு என்றென்றைக்கும் சான்றாக விளங்குகிறது. திராவிட கழகத்தின் அடுத்த தலைவராக ஒரு தலித்தை சரி வேண்டாம், தள்ளாத வயதில் ஈவெராவை திருமணம் செய்து கொள்ள வைக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை தலைவியாக்கியிருக்க வேண்டாமோ? ஈவெரா மனத்தளவில் வக்கிரமும் செயலளவில் ஆபாசமும் கொண்டவர். அன்றைக்கு புரையோடிப்போயிருந்த சமுதாய அவலங்களை தன் வெறுப்பியல் ஆபாசங்களுக்கு முற்போக்கு முலாம் போட மூலதனமாக்கிக்கொண்டார். அதற்காக அவரது முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஈவெரா ஒரு சமுதாய மனநிலை பிறழ்ச்சியின் அடையாளமாக பகுத்தாய்வு செய்யப்பட வேண்டியவர். அந்த பகுத்தாய்வை நாம் தொடக்கி வைப்போம்…ஈவெராவின் கடைசி சிலையும் அருங்காட்சியக பொருளாக மாறும் வரை



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

53533226_823487957999923_185740772010622



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

53533226_823487957999923_185740772010622 

பெரியார் கொள்கைக்கு குழி தோண்டிய திராவிடர்கழகம்


கி.வீரமணி - மணியம்மை பற்றி வே.ஆனைமுத்து

பதினெட்டு ஆண்டுகளில் மூன்று தடவைகள் பெரியாரின் விருப்பத்தை நான் மறுதலித்தது ஏன்.

மணியம்மையாருக்கு நல்ல பிள்ளையாக - நல்ல ஆளாக நடந்து கொண்டாலொழிய நான் நல்ல பெயரோடு பெரியாரிடம் பணியாற்றி மீள முடியாது. அம்மையாரின் தன்மை அப்படி. இவற்றை 1950 குன்னம் மாநாடு முதலே நான் நன்றாக அறிந்திருந்தேன். மேலும் 1958ல் நானும் தஞ்சை தென்னார்க்காடு மாவட்டங்களின் தோழர்களும் வேலூர் சிறையிலிருந்த போது மணியம்மை வீரமணி சேட்டைகள் குறித்து எங்கள் மடல்களின் மூலம் மிக தெளிவாக தெரிந்திருந்தேன். 

பெரியார் காலத்தில் அவருடைய மனதில் என்னை பற்றி களங்கம் கற்பித்திட நிறைய அதிகாரமும் வாய்ப்பும் மணியம்மைக்கு இருந்தன. இவையே நான் மறுதளிக்கும் காரணங்கள். 

அதற்கு மேல் எழுதினால் நான் விரசமாக - அருவருப்பாக தெரியும்.

நன்றி - பெண்ணியம் இதழ்
நவம்பர் 2007 முழுமதி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard