New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் வைரமுத்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் வைரமுத்து
Permalink  
 


 

தினமணி நாளிதழ் சார்பாக திருவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் வைரமுத்து அவர்கள் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் பேசிய பேச்சு, வைரமுத்துவின் ஞானபீட கனவுக்கே வேட்டு வைப்பதாய் முடிந்திருக்கின்றது. எப்படியாவது ஞானபீட விருதை வாங்கி, தமிழுக்குப் பெருமை சேர்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர் வைரமுத்து அவர்கள். அதற்காக தருண்விஜய்யை தாஜா செய்வதில் தொடங்கி மோடியின் முதுகு சொறிய கவிதைகள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது என சென்று கொண்டிருந்த அவரின் புனிதப் பயணம் அநியாயமாக போர்னோ கவிதைகள் புகழ் ஆண்டாளால் பாதியிலேயே பரிதாபமாக நின்றிருக்கின்றது. இதனால் எச்சிக்கலை ராஜாவைப் பற்றியும், இல.கணேசனைப் பற்றியும் அவர் எழுதலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருந்த பார்ப்பன மகாகாவியம் எழுத முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. வைரமுத்துவின் கவிதா மேதாவிலாசத்துக்கு ஞானபீடம் கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, தாசிமகன் பட்டம் அல்லவா கொடுக்கப்பட்டிருக்கின்றது. குனிந்ததும், நெளிந்ததும், கூழைக்கும்பிடு போட்டதும் இந்தப் பட்டத்தை வாங்கத்தானா?

Vairamuthu 255தன்னை திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களில் தோய்த்துக்கொண்டவராக அறிவித்துக் கொண்டு பல ஆண்டுகளாக கலைஞரின் கவிதை வாலாக தொங்கிக் கொண்டிருந்த வைரமுத்து, கொடுக்கும் காசுக்கு ஏற்ப வார்த்தைக் கடலில் மூழ்கி சொறிந்து விடுவதற்கு ஏற்ற நல்ல ஆதீண்டுக்குற்றிகளை (விலங்குகள் தினவெடுத்தால் சொறிந்து கொள்ளும் கல்) எடுத்து வரும் வல்லமை வாய்ந்தவர். தமிழ்நாட்டில் வைரமுத்துவிற்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்கள் அனைவரும் வைரமுத்துவின் கவிதைகளை வார்த்தை, வார்த்தையாக உடைத்து, பொருள்கொண்டு புளகாங்கிதம் அடைபவர்கள். இதில் சில பேர் படிக்கும் போதே பரவச நிலையை அடைந்துவிடுவதும் உண்டு. அப்படி வாசகனைப் படிக்கும் போதே யார் மெய்மறந்து பரவசநிலையை அடைய வைக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் தமிழ்நாட்டில் சிறந்த கவிஞர்கள் என்ற பட்டமும், அழியாப் புகழும் கிடைக்கும். கம்பரசம் எழுதிய கம்பனில் தொடங்கி திருப்பாவை எழுதிய ஆண்டாள், திரைப்படப் பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, இப்போது வைரமுத்து வரையில் ஒரு பாரம்பரியமே இருக்கின்றது. இவர்கள் அனைவரும் தங்களுடைய காமம் தோய்ந்த கவித்துவத்திற்காகவே கொண்டாடப்பட்டவர்கள். இன்று வரையிலும் கொண்டாடப்பட்டு வருபவர்கள்.

அதனால்தான் ஆண்டாளைப் பற்றி புகழ்பாட ஆண்டாளைப் போலவே எழுதி தமிழ்ச் சமூகத்தில் புகழ்பெற்ற வைரமுத்துவை தினமணி பார்ப்பன வைத்தியநாதன் அழைத்திருக்கின்றார். நிச்சயமாக ஆண்டாளைப் பற்றி தமிழ்நாட்டில் வைரமுத்துவைத் தவிர இன்னொருவரால் சிறப்பாகப் பேச முடியாது. அப்படி தன்னால் சிறப்பாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையில்தான் வைரமுத்துவும் அக்கிரகாரத்து மாமாக்கள் வாயில் எச்சில் ஒழுக உட்கார்ந்திருந்த அந்தக் கருத்தரங்குக்குச் சென்றார். பேச்சின் ஆரம்பத்தில் இருந்தே ஆண்டாளையும், அவள் எப்படி தமிழை ஆண்டாள் என்பதையும் கவிச்சுவை, காமச்சுவை ததும்ப பல வரலாற்றுத் தகவல்களையும் சேர்த்து குழப்பி அடித்துக்கொண்டு வந்த வைரமுத்து, பேச்சின் இறுதியில் கொஞ்சம் குழம்பி, ஆண்டாளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச முற்பட்டு, அவளைப் பற்றி அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'Indian movement: some aspects of dissent protest and reform' என்ற நூலில் ஆண்டாளைப் பற்றி 'Andal was herself a devadasi who lived and died in the srirangam temple' என்று எழுதியிருப்பதாக சொல்கின்றார். ஆனால் கவிஞர் அதற்கு என்ன விளக்கம் என்று தமிழில் சொல்லவில்லை. ஒருவேளை கருத்தரங்கில் உட்கார்ந்திருக்கும் அக்கிரகாரத்து மாமாக்களுக்கு ஆங்கிலம் அத்துப்படியாக இருக்கும் என்று அவரின் திராவிட மூளை யோசித்து இருக்கலாம்.

அது கிடக்கட்டும், இப்படி சொன்ன வைரமுத்து நேரடியாகவே இதைப் பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் எண்ணிப் பார்ப்பார்கள் என்றும் சொல்கின்றார். இந்த இடத்தில்தான் எச்சிக்கலை ராஜா உட்பட பார்ப்பனக் கும்பல் கொதித்தெழுந்து வைரமுத்துக்கு தாசிமகன் பட்டம் கொடுத்ததற்கான கருப்பொருள், உரிப்பொருள் எல்லாம் உள்ளது. நிச்சயம் வைரமுத்து நினைத்திருந்தால் இதைச் சொல்லாமலேயே தனது பேச்சை முடித்திருக்க முடியும், அதுவும் தேவதாசி என்ற முறையைக் கண்டுபிடித்து கோயிலிலேயே விபச்சார விடுதியும் நடத்த முடியும் என்று உலகிற்கே கிளுகிளுப்பு ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுத்த பார்ப்பனக் கும்பலின் மத்தியில் நிச்சயம் வைரமுத்து இதைச் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் இதைச் சொன்ன வைரமுத்துவின் நோக்கம் பார்ப்பனனின் மனதைப் புண்படுத்துவதாக இருக்க துளிக்கூட வாய்ப்பில்லை என்பதுதான். வேறு என்ன நோக்கமாக இருந்திருக்கும் என்றால் இவ்வளவு சிறப்புவாய்ந்த கவிதைகளை எழுதி, படிப்பவர் வாயில் எச்சில் ஒழுக வைத்த ஆண்டாளை ஒரு தேவதாசி என்று மற்றவர்கள் சொல்கின்றார்கள் என்று சொல்வதன் மூலம் பார்ப்பன மாமாக்களின் கவனத்துக்கு அப்படி சொன்னவர்களின் பெயரையும், முகவரியையும் கொண்டு செல்வதும், அவர்களுக்கு எதிராக பார்ப்பனக் கும்பலை கொம்பு சீவி விடுவதுமே வைரமுத்துவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் யார் மீது அம்பு பாயும் என்று வைரமுத்து கணக்கிட்டாரோ, அதற்கு மாறாக தவறுதலாக அந்த அம்பு அவர் மீதே பாய்ந்திருக்கின்றது. தினமணியில் வெளியான அந்தக் கட்டுரையைப் படித்த யாரும் வைரமுத்து, ஆண்டாளைத் தவறாகப் பேசிவிட்டார் என்று நிச்சயம் சொல்லமாட்டார்கள். பார்ப்பானைப் பகைத்துக் கொள்ளும் தைரியமெல்லாம் வைரமுத்து போன்ற பிழைப்புவாதிகளுக்கு ஒருநாளும் வராது என்பது சொல்லித் தெரிய வேண்டிய செய்தியல்ல. ஆனால் எதையுமே முழுவதுமாகத் தெரிந்து கொண்டு பேசாமல் 'இந்துவிரோதிகள், தேசவிரோதிகள்' என்று பட்டம் கொடுப்பதை மட்டுமே தன்னுடைய தொழிலாக செய்துவரும் பார்ப்பனக் கும்பலுக்கு 'ஒரு சூத்திர வைரமுத்து பாப்பாத்தி ஆண்டாளை தேவதாசி (தேவடியாள்) என்று பேசிவிட்டான்' என்று எவனோ ஒரு அரைகுறை பார்ப்பானின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வைரமுத்துவின் பரம்பரையையே முச்சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இதிலே சிறப்பு என்னவென்றால் வைரமுத்துவை தாசிமகன் என்று சொன்ன எச்சிக்கலை ராஜா, தைரியமாக அவன் கருத்தில் உறுதியாக இருக்கின்றான். ஆனால் அவனின் மிரட்டலுக்குப் பணிந்து வைரமுத்து வெட்கம் கெட்ட முறையில் வருத்தம் கோரியுள்ளார் என்பதுதான். வைரமுத்துவுக்கு உண்மையிலேயே தன்மான உணர்வும், சுயமரியாதையும் இருந்திருக்குமேயானால் எச்சிக்கலை ராஜா பேசிய பேச்சுக்கு செருப்பை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்கே சென்று ‘பஞ்சம் பொழைக்க வந்த பார்ப்பார பயலே.. உனக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பாடா’ என்று அவன் வாயிலேயே நாலு சாத்தி சாத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? ஆடம்பர வாழ்க்கைக்காக எழுத்தை அம்மணமாக்கி எழுதும் வைரமுத்து போன்றவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதானே?

இப்போதுகூட வைரமுத்துக்காக மார்க்சிய இயக்கத் தோழர்களும், பெரியாரிய இயக்கத் தோழர்களும் தான் வெளிப்படையாக வந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைரமுத்து யாரைப் பணிந்து விருது வாங்க நினைத்தாரோ, அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு நாய் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. மாறாக அனைத்து நாய்களும் சேர்ந்து அவரைக் கடித்துக் குதறுவதிலேயே குறியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் எல்லாம் இந்த மண்ணை பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிரான தளப் பிரதேசமாக மாற்றி அதை நிரந்தரமாகக் காத்துவர போராடிக் கொண்டு இருக்கும்போது, கேவலம் பேருக்காகவும், புகழுக்காகவும் பார்ப்பன பயங்கரவாதக் கும்பலுடன் கூடிக் கும்மாளம் அடித்த வைரமுத்துவுக்கு இது எல்லாம் ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். அதுபோலவே நடந்துவிட்டது.

பார்ப்பனனின் கைகளில் இருந்து விருது வாங்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. அர்த்தமுள்ள இந்துமதம், ஜெய ஜெய சங்கரா என்று எதையாவது எழுதி பேரையும், புகழையும் வேண்டும் அளவிற்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் வரலாறு காறித் துப்பும். ‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்றார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. ஆனால் வைரமுத்து போன்றவர்கள் பேரோடும், புகழோடும் வாழ உயிரைவிட மேலானதாகக் கருதப்படும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுவிட்டு உலுத்தர்களாய் வாழ்கின்றார்கள். எதை வேண்டும் என்றாலும் எழுதி சம்பாதிக்க முடியும். அப்படி ஒரு கூட்டம் தமிழ் எழுத்துலகில் எண்ண முடியாத அளவிற்கு இருக்கின்றது. அவர்கள் எல்லாம் எந்த வகையிலும் இந்தச் சமூகம் முன்னோக்கி பயணித்துவிடக் கூடாது என்று ஆளும் பிற்போக்கு கும்பலுக்கு ஊதுகுழலாக செயல்படுபவர்கள். அவர்களில் இருந்து வைரமுத்து எந்த வகையிலும் விதிவிலக்கானவர் கிடையாது.

மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை அவரது குடும்பம் நிராகரித்தது. அதன் மூலம் தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்து நின்றது. தன் வாழ்நாளில் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையைத் தவிர வேறொன்றையும் நினைத்திராத அந்தக் கவிஞர்தான் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர். வைரமுத்து போன்றவர்கள் தமிழ்ச்சமூகத்தின் கொடிய வியாதிகள், காறி உமிழப்பட வேண்டியவர்கள். வைரமுத்துவின் பேச்சைக் கேட்டால் சில பேருக்கு உடலெல்லாம் பூரித்துப் போகின்றது. ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கோ எரியக்கூடாத இடமெல்லாம் ஏனோ எரிகின்றது. ஆண்டாள் கேவலமானவள் என்றால், அதைவிடக் கேவலமானவர் வைரமுத்து. இரண்டு பேருமே ஒரே ஆபாச குட்டையில் ஊறிய மட்டைகள். இப்போது கூட வைரமுத்துவிற்காக எச்சிக்கலை ராஜா உட்பட பார்ப்பனக் கும்பலை விமர்சிப்பது, வைரமுத்து என்ற பார்ப்பன கைக்கூலிக்காக அல்ல. பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு பெரியாரிய மண்ணில் புத்தி புகட்டுவதற்காகத்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் வைரமுத்து
Permalink  
 


 

குறு, சிறு, மலை தெய்வ வழிபாட்டிலிருந்த தமிழ்ச் சமூகப் பிரிவினரை பொது சமய வழிபாட்டிற்குள் இழுக்க சமணமும் பவுத்தமும் முயற்சித்தன. அதற்காக தனிக் கோயில்களையும் மடங்களையும் விஹார்களையும் நிறுவி குறிப்பிட்ட அளவிற்கும் வளர்ந்தன. பிறகு இவற்றை அழித்து ஆதிசங்கரரின் சைவம் (தொடக்கத்தில் வைதீகம் எனப் பொதுவில் அழைக்கப்பட்டது) வெற்றிபெற்றது. அன்றைய மன்னர்களின் ஆட்சியதிகார உதவியோடுதான் இவை சாத்தியமாகின. ஆரிய பார்ப்பனியத்திற்குள் உருவான இன்னொரு சமயப் பிரிவான வைணவம் கடைசியாக தமிழ்நாட்டில் உருவாகி குறிப்பிட்ட வளர்ச்சியையும் பெற்றது.

periyazhwar andal

சைவமும் வைணவமும் தமக்குள்ளான மோதலை மன்னராட்சியின் இறுதி அத்தியாயத்தில் இருந்ததால் நிறுத்தி சமரசம் செய்து கொண்டன. அதன் விளைவாக பெருமாள் கோயில்கள் தமிழக கிராமங்கள் வரை பரவின. இதுவல்லாமல் காஞ்சிபுரத்தில் நரசிம்மேஸ்வர சிவாலயம், வேலூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருநெல்வேலியில் சிவன் அணைந்த பெருமாள், தஞ்சையில் ராமலிங்கேஸ்வரர்... போன்ற கலப்பு கோவில்களும் உருவாயின. பெருமாளின் அவதார கதைகள் அனைத்துமே சைவ-வைணவ சண்டையையும் சமரசத்தையும் காட்டுவன. ஆழ்வார், நாயன்மார்களது சண்டைகளும் சமரசங்களும் இந்த ரகம்தான்.

தமிழர்களின் குறு, சிறு, மலைத் தெய்வங்களோடும் சித்தர்களோடும் சமண - பவுத்த துறவிகளோடும் அக்காள், தங்கை, அண்ணன், தம்பி, கணவன், மனைவி என ஏதோவொரு உறவு பாராட்டி முதலில் சிவனையும் பிறகு ஹரியையும் பொய் புரட்டு கதைகள் மூலம் தமிழரிடையே திணித்தது, பார்ப்பனியம். இதற்கு வட மாநிலங்களில் இருக்கும் போதே ஆக்கும் கடவுள் பிரம்மா - காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என சகோதரர்கள் ஆக்கியதும், தமிழகத்தில் முருகனுக்கு சிவனை தந்தையாக்கியதும் வினாயகரை அண்ணன் ஆக்கியதும், அம்மனை சக்தி ஆக்கியதும் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதியாக விஷ்ணுவை ஆக்கியதும் எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்கள். என்னதான் உறவு பாராட்டி கதையளந்தாலும் சிவ மதத்தில் பல சித்தர்களின் வழிபாட்டு தனித் தன்மையை வைணவர்களால் அழிக்க முடியாமல் போனது. பல இடங்களில் பணிந்து சமரசம் செய்து ஒன்று கலக்கவே முடிந்தது.

அந்நிய சமயத் தாக்குதல்களால் தமிழரின் பல குறு, சிறு, மலை தெய்வங்கள் படிப்படியாக தனித்துவமிழந்து இன்று ஶ்ரீ, அம்பாள், ஈஸ்வர, ஹரிஹர என ஒட்டுரக அடையாளம் கொண்ட பார்ப்பனிய கடவுள்களாக மாறியுள்ளன. பல்வேறு தமிழ் இனக் குழு மக்களின் குல தெய்வங்களாக இவை இருப்பதால்தான் முற்றிலும் அழியாமல் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதேபோல் பல பார்ப்பனிய எதிர்ப்பு கூறுகளையும் அடையாளங்களையும் மரபுகளையும் அழியாமல் வைத்திருக்கின்றன.

பார்ப்பனர்களுள் சைவ, வைணவ என இரு பெரும் பிரிவும், வைணவ பிராமணரில் (பெருமாளை வழிபடும் அய்யங்காரில்) வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவும் அதற்குள் பல உட்பிரிவுகளும் உண்டு.

வடகலை பிராமணர்கள் பெரும்பான்மையோர் வேத - உபநிடதங்களில், ஐதீகங்களில், சமற்கிருத மொழியில் பற்றுடையவர்கள். பிற சாதி கலப்பு இல்லாதவர்கள்.

வடகலைக்கு அடுத்த இடத்தில்தான் தென்கலை பிராமணருக்கு மதிப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தென்கலையில் ராமானுஜரின் சீர்திருத்த கொள்கை-நடைமுறைகளால் பல சாதிப் பிரிவினரின் (செட்டியார், யாதவர், நாயுடு போன்றவர்கள்) கலப்பு அதிகம். (சிறீரங்கம் கோயிலில் துளுக்க அல்லது பீபீ நாச்சியார் சிலை வழிபாடு உள்ளதைப் பார்க்கையில் முஸ்லீம் பெண்களையும் ஏதோ ஒரு சமரசத்திற்காக அங்கீகரித்ததும் தெரிகிறது).

வைணவ ஆழ்வார்களில் தமிழுக்கு முதன்மையளித்தவர்களும் அதற்கு எதிராக சமற்கிருதத்தை தமிழோடு கலந்து மணிபிறழ் முறையை கடைபிடித்தவர்களும் உண்டு. தமிழகத்தில் தற்போது தென்கலை வழி கோயில்களின் மடங்களின் ஜீயர்கள், ஆச்சாரியார்கள் பற்றியொழுகும் வழிபாட்டு மொழி சமற்கிருதமே. ஆழ்வார்களின் தமிழ் வழிபாட்டு முறை சில கோவில்களில் பெயரளவிற்கானதாய் உள்ளது. ஆண்டாள் என்கிற 'பிற சாதிப் பெண்'-ஆழ்வாரை (ராஜாஜி வடகலை என்பதால் ஆண்டாள் சர்ச்சை அவர்காலத்தில் எழுந்தபொழுது பெரியாழ்வாரின் கற்பனை பாத்திரம் இது என முற்றிலும் நிராகரித்தார்) ஏற்றுக் கொண்டதும் இப்பிரிவினர் மட்டுமே.

பெருமாளும் ஆண்டாளும் பெரும்பான்மை சிவ பக்தர்களால்கூட தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பிட்ட சிறுபான்மை பார்ப்பன - சத்திரிய - வைசிய பிரிவில் சில சாதியினரால் மட்டுமே துணை கடவுள்களாகப் பாவிக்கப்படுகிறது.

*******

பாஜக தலைவர் எச்.ராஜா பெரிதாக்கிய ஆண்டாள் சர்ச்சைக்கு தமிழர்களிடம் உள்ள வரவேற்பை கீழ்கண்ட அடிப்படையில் இனம்பிரித்துப் பார்ப்போம்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அதி சூத்திரர்கள் (வண்ணார், நாவிதர், ஓடர், பறவர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்), இந்து புராணக் கதை - கற்பனைக் கடவுள்களுக்கு அப்பால் மூதாதையரின் வீரக் கதை நிஜ மாந்தர்களை - நாட்டுப்புற தெய்வங்களை வழிபடுவதால் அவர்களுக்கு ஆண்டாள் சர்ச்சை தொடர்பில்லாத ஒன்று.

பிற சூத்திர - ஆதிக்க சாதி இந்துக்களிடையே (குறிப்பிட்ட செட்டியார், குறிப்பிட்ட வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், முதலியார், மூப்பனார், முத்துராஜா போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள்) இருக்கும் ஆண்டாள் பற்றிய பக்தி ஈர்ப்பு என்னவோ மூன்றாம் அல்லது நான்காம் இடத்தில்தான் உள்ளது. இவர்களிடையே மூதாதையர்களின் வீரக் கதை மாந்தர்களும் கற்பனை உருவேற்றங்களும் நிறைந்த குலதெய்வங்கள் முதலிடத்திலும், பார்ப்பனியமயமாக்கிய ஊர் பெருமை அடிப்படையில் உள்ள பிரபல "ஶ்ரீ" வகையறா கடவுள்கள் இரண்டாம் இடத்திலும் வழிபாட்டுக்குரியவையாக உள்ளன. எனவே ஆண்டாள் நமது கடவுளல்ல என்ற புரிதலோடு, பொதுவில் கடவுள் என்றடிப்படையில் பார்ப்பதால், விலகிய கரிசனை மட்டுமே இச்சர்ச்சையில் இவர்களுக்கு இருக்கிறது.

வைணவ, சிவ மத உடன்பாட்டிற்குப் பிறகு சிவனை வழிபடும் சைவப் பிள்ளை - வெள்ளாளர்கள் பிரிவு (பிராமணர் அல்லாத முற்படுத்திக்கொண்ட சாதியினர்) ஆண்டாளை தம் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்தே பார்க்கின்றனர். முரண்படும் சித்தர் மடம், ஆதீனம் போன்ற உட்பிரிவு சிவ சைவர்கள் ஆண்டாளை வணங்குவதில்லை. இன்றைய ஆண்டாள் சர்ச்சையில் விலகியே நிற்கிறார்கள்.

அடுத்து சைவ, வைணவ பார்ப்பனர்கள் (முற்படுத்திக் கொண்ட பிராமணர்கள்) ஆண்டாளை ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிலையில் இருந்து வழிபடுவதில்லை.

வடகலை அய்யங்கார் இப்போதைய ஆண்டாள் சர்ச்சையில் ஒதுங்கி இருப்பதாகவே தெரிகிறது. தனிப்பட்ட ஒருசிலர் வைரமுத்துவிற்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம்.

தென்கலை அய்யங்கார் மட்டுமே வைரமுத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போராடுகிறவர்கள் நெற்றிகளில் எல்லாம் தென்கலை நாமம் (y-namam) உள்ளதைப் பார்க்கலாம்.

அடுத்து, நெற்றியில் பட்டை போடும் சிவனை வழிபடும் அய்யர் என்கிற சைவப் பிராமணர் அதாவது காஞ்சி சங்கரமடம் வகையறாக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு சில உட்பிரிவு அய்யர்கள் வைணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். (நித்தியானந்தா, சங்பரிவாரங்களுடன் கைகோர்த்திருக்கிறார் என்பதை வைரமுத்து மீதான அவரது சிஷ்ய தருதலைகளின் நாக்கூசும் பேச்சுகள் காட்டுகின்றன).

பல சைவப் பார்ப்பன பிரிவினர் ஆண்டாள் சர்ச்சையில் விலகி நிற்கிறார்கள். இவர்கள் (பாஜக சாராதவர்கள்) ஆண்டாளுக்கு ஆதரவாக வீதிக்கு வரவில்லை. இவர்கள் தென்கலை பிராமணர்களுக்கு கீழாக மதிக்கப்படுபவர்கள்தான்; இவர்களும் சிவனுக்கு கீழாகத்தான் பெருமாள் -ஆண்டாளை பார்க்கிறார்கள்.

எனவே ஆண்டாள் வைணவ - தென்கலை கடவுளே அன்றி இந்துக்கள், தமிழர்கள் அனைவருக்குமான கடவுளல்ல. வைரமுத்து விட்டெறிந்த கல், பார்ப்பனிய சாதிய முறைகளில் ஆண்டாளை தனியே பிரித்து அடையாளமிட்டுள்ளது. இந்துத்துவா கும்பலோ இதை மூடி மறைத்து இந்துக்களின் தெய்வமாக ஆண்டாளைக் காட்டி ஆதாயம் தேட முற்படுகின்றனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.

- ஞாலன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தினம் ஓசியில் புளியோதரையும் பொங்கச்சோற்றையும் தின்றுவிட்டு ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களைப் பாடி பக்தகோடிகளிடம் சில்லரையைத் தேத்தி, தன்னுடைய பிள்ளையாண்டாக்களை ஐஐடியிலும், ஐஐஎம்மிலும் படிக்க வைத்து, மிலேச்ச தேசத்தில் டாலருக்கும், யூரோவுக்கும் மாரடிக்க அனுப்பிவிட்டு, கிருஸ்தவ, முஸ்லிம் வந்தேறிகளை எப்படி நாட்டைவிட்டு விரட்டுவது என்பதையும், தேசியத்தையும், சனாதன தர்மத்தையும் பாரத தேசத்தில் எப்படி அழியாமல் காப்பது என்பதையும், மோடி ஆட்சியில் எப்படி தங்களின் மனக் குறைகள் எல்லாம் சீறும் சிறப்புமாக நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதையும் சதா சிந்தித்திக் கொண்டும், பேசிக்கொண்டும் மீதமிருக்கும் ஓய்வு நேரத்தில் நாமம் போடுவதையும், விட்டை போடுவதையும் மட்டுமே தனது வாழ்வின் பிறவிப்பேறாக கருதி, வைகுண்ட பதவி அடைவதற்காக பகவானை சேவித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கிரகாரத்து வைணவப் பார்ப்பான்களை இன்று வீதிக்கு இழுத்துவந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்ற மாபெரும் அகிம்சைப் புரட்சியை உலகிலேயே அதிக நேரமாக ஒருநாள் முழுவதும் இருக்க வைத்து, ஆண்டாளின் வாரிசுகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த பெரும் பேறை செய்திருக்கின்றார் வைரமுத்து அவர்கள்.

vairamuthu aandaal

வெளிக்கி இருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக தமிழகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டு, அதன் மூலம் ஊடக கவனத்தையும் தங்களின் பிரதாபத்தையும் எப்படியும் காட்டிவிட வேண்டும் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்துகொண்டிருந்த பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆண்டாள் பிரச்சினை கிடைத்திருக்கின்றது. வைரமுத்து செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்தாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு நிறுத்திக் கொண்டால் மீண்டும் இது போன்றதொரு பிரச்சினை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற ஏக்கத்தில், அதை விட மனமில்லாமல் இதை வைத்து எப்படியும் ஒரு மூன்று, நாலு மாதத்திற்கு அரசியல் செய்துவிட வேண்டும் என்ற அபிலாசையில் தினம் தினம் தினுசு தினுசாக ஆட்களை களத்தில் இறக்கிவிட்டு, வைரமுத்துவை பீதியாக்கி பேதி போக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எச்சிகலை ராஜாவில் தொடங்கி உடுமலைப்பேட்டை உலகானந்தாவிற்கு ‘ஆன்மீக’ சேவை புரியும் அவரது பணிப்பெண்கள் வரை இந்து தர்மத்தைப் பற்றி வைரமுத்துவிற்கு வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருபக்கம் வைரமுத்துவிற்கு எதிராக பார்ப்பான்களும், அவர்களின் வைப்பாட்டி மகன்களும் (சூத்திரர்களும்) களமாட, இன்னொரு பக்கம் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரியத் தோழர்கள் பொதுவெளிகளிலும், சமூக வலைத் தளங்களிலும் காவிப் பயங்கரவாதிகளை ரத்தவாந்தி எடுத்து சாகும்வரை கதற, கதற அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பிரச்சினையில் நேரடியாக சம்மந்தப்பட்ட கைப்பிள்ளை வைரமுத்து அவர்கள், ஆண்டாள் எனக்கு இரண்டாவது தாய் என்று திரும்பவும் பார்ப்பனியத்தின் கைக்கூலிதான் தான் என்பதை மெய்ப்பிக்க வீடியோ வெளியிடுகின்றார். தான் தேவதாசி என்று சொன்னதை வேண்டுமென்றே சிலபேர் தாசி என்று மாற்றி, பிறகு அதையும் திரித்து வேசி என்று சொல்லிவிட்டதாக பிதற்றுகின்றார். பார்ப்பன எச்சிகலை ராஜாவே தேவதாசி என்பது விபச்சாரிகளை குறிக்கும் சொல் என்று ஒப்புக்கொண்டுதான் அப்படி பேசிய வைரமுத்துவை தாசிமகன் என்று திட்டியதை வைரமுத்து மறந்துவிட்டு திரும்பவும் உளறிக்கொண்டு இருக்கின்றார்.

தமிழ்ச்சமூகத்தை முட்டாள்களாக, மடையர்களாக, மானமற்றவர்களாக மாற்றியதில் இந்த மானங்கெட்ட சைவ, வைணவ பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரியாதாகும். அன்றில் இருந்து இன்றுவரை எவன் எவன் எல்லாம் பார்ப்பனியத்தின் கைக்கூலிகளாக, ஊதுகுழல்களாக இருந்தார்களோ அவர்கள்தான் இந்தக் கேடுகெட்ட ஆபாச தமிழர் விரோத இலக்கியங்களை தூக்கிப் பிடித்தவர்கள். ஆனால் மானமுள்ள எந்தத் தமிழனும் இந்த கேடுகெட்ட ஆபாசக் குப்பையை வீட்டில் வைத்திருப்பதைக்கூட இழிவாகவே எண்ணுவார்கள்.

திராவிட பாரம்பரியத்தில் வந்ததாக பிதற்றிக்கொண்டு திரியும் வைரமுத்து, உண்மையிலேயே தேவதாசி என்பதை ஏதோ பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட உயரிய பதவிபோல எண்ணிக்கொண்டு பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்குகின்றார். ஆனால் பெரியார் அன்றே தெளிவாக சொல்லியிருக்கின்றார் தேவதாசி (தேவரடியார்கள்) என்பவர்கள் யார் என்று.

“கோயில்களின் ஆடல் பாடல்களைச் செய்து கொண்டும், ‘சாமி’யையே கல்யாணம் செய்து கொள்ளப்பட்டது என்னும் அர்த்தத்தில் பொட்டு கட்டிக்கொண்டும், ‘தேவரடியார்’ எனப் பெயர் பூண்டும் வாழும் கூட்டத்தினரும், விபசாரத்திற்குக் காரணமாக இருப்பதும் நாடறிந்த செய்தியாகும். இத்தகைய 'தேவரடியார்'களைப் பற்றியும், அவர்கள் கோயில்களிலுள்ள கல்லுச்சாமிகளுக்குப் ( அவைகளை உண்டாக்கி வைத்திருக்கும் புரோகித ஆசாமிகளுக்கும்) பெண்சாதிகளாக இருந்து கொண்டு புரிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சமஸ்கிருத நூல்களில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்”. (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் நான்கு-ப.எண்:74)

எங்கேயோ ஒரு பல்கலைக்கழகத்தில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளரின் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டியதற்கே இந்தச் சொம்பைகள் இப்படி குதிக்கின்றார்களே, உண்மையில் இவர்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் முழுவதுமாகப் படித்தால் படிக்கும் போதே சிறுநீர் அல்லவா கழித்துவிடுவார்கள். வைரமுத்து சொன்னால் அது தவறு என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ஜீயர் காஞ்சி புராணத்தில் சைவர்கள், விஷ்ணுவை மிகக் கேவலமாக எழுதியுள்ளதற்கு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வாரா? என்று அன்புடனும் ஆசையுடனும் கேட்கின்றேன்.

காஞ்சிப் புராணம் சுகசரீரப் படலம் பாட்டு-27

“……..கந்தனை நல்கவேண்டி சீர் இயமத்து மடப்பிடியைத் திருமணஞ் செய்த பின்….. இன்பக் கலவி நடத்துலுற்றான்”

பாட்டு-28

இமயவல்லி வனமுலைதாக்க மகிழ்ந்து…..பல நாள் கலவி பெருநலம் துய்க்கும் காலை, அண்டர் உணர்ந்து,வெறுவி,அஞ்சி, அம்பிகை தன்பால் கருப்ப வீறுகொண்டிடு முன்னம் சிதைவு செய்யும் கொள்கையின் அங்கியை ஏவினார்கள்.

அங்கி=அக்கினி

அக்கினி பகவான் அதை மறுத்து அந்த வேலை எனக்கு வேண்டாம்.

பாட்டு-29

“நீவிர்களே அவணெய்தி ஊறு நிகழ்த்திடுமின்களெனக் கரைந்தான்”

உடனே விஷ்ணு பிரம்மா தேவர்கள் மந்தர மலை சென்று நேரில் அந்த நிலையில் சிவனைக் கண்டு கும்பிட்டு, நிறுத்து! நிறுத்து! என்று கதறினார்கள். சிவன் என்ன செய்தார்? கலவியில் இருந்து திமிறிக் கொண்டு அம்மணத்தோடு வந்துவிட்டார்.

பாட்டு-30

“தெரிவையோடு ஆடும் புணர்ச்சி நாப்பண் சென்றனன் வெற்றரையோடும் அங்கண்” அப்படி அம்மணத்தோடு வந்த சிவன், விஷ்ணு முதலிய தேவர்களை உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பாட்டு-35

“வேண்டும் கூறுமின் உங்களுக்கு இன்னே மேவர நல்குதும்” என்று அருள, ஈண்டிய மாயனை உள்ளிட்டோர் தன் ஏவலினால் முகன் ஏத்தி, எந்தாய்! மாண்ட மலைமகள் பால் கர்ப்பம் வாய்ப்பது வேண்டிவர்மால் முதலோர்…….

இதற்கு சிவன் சொல்லுகின்றார். ஓ தேவர்களே! அந்தக் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்பீர்களாகில்,அந்த குளிர்ந்த முத்தை உருக்கினால் போல் வெண்மையாக (வெளியாகப் போகும்) நீரைக் குடியுங்கள் என்றார். உடனே அக்கினி பகவான் கையேந்தி வாங்கினான், அப்புறம் என்ன ஆயிற்று என்றால்,

பாட்டு-36

“பனித்த முத்துருக்கியன்ன வெண்புனல் பருகுமின்கள் எனப் புகன்று அருள வல்லே எரி இரை அங்கை ஏற்றான்”

பாட்டு-37

“…….அதனை…...உண்ண விண்ணவர் எவர்க்கும் அந்நாள் மேவருங் கர்ப்பம் நீட்டி…...வெப்பு நோயினால் தொடக்குண்டார்கள்”

அப்புறம் என்ன நடந்தது என்றால், பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் கர்ப்பமடைந்து விட்டார்கள். அந்தக் கர்ப்பத்தோடு சிவனை அணுகி வேண்ட, அவர் காஞ்சீபுரத்தில் உள்ள சுதகரி தீர்த்தத்தில் குளியுங்கள். உங்கள் கர்ப்பம் அழிந்துபோகும் என்றார். அந்த படி அவர்கள் அத்தீர்த்தத்தில் குளித்து, தங்கள் கர்ப்பங்களை அழித்துக் கொண்டார்கள்.( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் மூன்று பக்கம் 347)

வைரமுத்து ஆண்டாளை தவறாக சித்தரித்துவிட்டார், அவர் கோயிலுகே வந்து மன்னிப்பு கோரவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொன்ன ஜீயர் இப்படி சிவனின் விந்துவை விஷ்ணு குடித்து கர்ப்பம் ஆனான் என்று காஞ்சி புராணத்தில் எழுதியிருப்பதற்கு என்ன சொல்லப் போகின்றார்? அதுமட்டுமா இராமாயணக் கதை தோற்றதிற்கான காரணமாக இராமாயணத்தில் வால்மீகியால் கூறப்படும் காரணம், திருமால் ஒரு ஒன்னா நெம்பர் பொம்பளப் பொறுக்கி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா, வைணவ வீரர்களே!

“விஷ்ணு ஏன் இராமனாக, அதுவும் மனிதனாக அவதரிக்க வேண்டும் என்பதற்கு காரணம் கூறப்படுகின்றது. ஜலந்தாசூரன் மனைவி பிருந்தா என்பவள் அழகுடையவளாகவும் பதிவிரதையாகவும் இருந்தாள். நாரதன் மூலமாக அவளை அடைய முற்பட்ட விஷ்ணு முயன்று தன்னால் முடியாமல் போகவே, சிவனிடம் போய் முறையிட, சிவன் அதற்கு நான் என்ன பண்ண வேண்டுமென்று குறை கேட்க, விஷ்ணு நீ எப்படியாவது ஜலந்தராசூரனைக் கொன்றுபோடு. பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்றான். அப்படி சிவன் ஜலந்திரா சூரனைக் கொன்றான். பிறகு விஷ்ணு ஜலந்திரா சூரனுடைய உடலில் புகுந்து கொள்ளப் போய், பிருந்தயை அனுபவித்தான். அவனுடைய செய்கையில் மாற்றம் கண்ட பிருந்தை சந்தேகப்பட்டுக் கொண்டு, அவன் குடுமியைப் பிடித்துக்கொண்டு அயோக்கியப் பயலே நீ யார் என்று கேட்டாள்? அவன் உளறிக்கொண்டு உண்மையினைக் கூறினான்.

உடனே அவள் ஆத்திரப்பட்டு “அடா அயோக்கியா! உன்னுடைய மனைவியை வேறு ஒருவன் இதுபோல அனுபவிக்க நீ ஏங்கித் தவிக்கக் கடவது” என்று சாபம் இட்டாள்.

இதன்படிதான் இராமன் பூலோகத்தில் இராமனாகப் பிறந்ததும், அவன் மனைவியை இராவணன் 'அடித்துக்கொண்டு; போனதுமாகும். (மேற்படி நூல் பக்கம் எண்:722).

சரி புருஷன் தான் பெண்பித்தனாய், ஊர் மேயும் காலிப் பயலாய் இருக்கின்றான் என்றால், அவரின் மனைவி யோக்கியதை எப்படி இருக்கின்றது என்பதையும் இந்து பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

லட்சுமி யோக்கியதை?

லட்சுமி இமயமலைச்சாரலில் உலாவிக் கொண்டிருந்தாள். அவ்வழியே ஒரு ரிஷி போனார். அவரைக் கண்டு லட்சுமி மோகித்தாள். உடனே லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இது விஷ்ணுவிற்குத் தெரிந்து, சண்டாள ஸ்திரியாக போகக் கடவதென்று லட்சுமியைச் சபித்தார். அப்படி லட்சுமி சண்டாளச்சியாகி விட்ட காவியமே காதம்பரி என்னும் நூல். இது பாணபட்டர் என்னும் பண்டிதரால் எழுதப்பட்டது. காதம்பரி என்னும் நூல் வடமொழி படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக பள்ளியில் வைக்கப்பட்டிருக்கின்றது. கண்டவுடன் மோகித்த உடன் குழந்தை பிறந்து விடுமா? சீதை லட்சுமியின் அம்சமென்று சிலரும், ராவணன் கொண்டுபோனது மாயா சீதை என்றும், ராமனைப் போலவே மாயா சம்பந்தம் சீதைக்கும் உண்டென்று சிலரும் சொல்லுவார்கள். சாட்சாத் லட்சுமியே ரிஷியைக் கண்டு மோகித்து, பெண் குழந்தையைப் பிரசவித்து விஷ்ணுவால் சண்டாள ஸ்திரியானாள் என்று பண்டிதர்களே சொல்லியிருக்கிறார்கள். காதம்பரி செய்த பாணபட்டர் கூரத்தாழ்வாரின் மகனாகவிருந்தாலும், போஜராஜாவின் பட்டராவிருந்தாலும், இந்தப் பண்டிதர்களைவிட மேலானவரே. ( மேற்படி நூல் பக்கம் எண்:412).

இப்படி படிப்பதற்கே சரோஜாதேவி புத்தகத்தைப் போன்று இருக்கும் இந்த ஆபாச குப்பைகள்தான் இந்துக்களின் புனித நூல்களாம்! உண்மையில் இதை எல்லாம் ஒருவன் ஏற்றுக்கொண்டு, தன்னை ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவானேயானால், இந்த கடவுள்களை புனிதமானவை என்று கருதுவானேயானால், அவன் பார்ப்பானின் அடிமையாகவே இருப்பான். இதை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் பெரியார் அவர்கள் தன்னுடைய 95 வயதிலும் கூட களமாடினார். ஆனால், புலவர் கூட்டம் அப்போதும் பெரியாரை 'தமிழ் தெரியாதவர், இலக்கணம் தெரியாவர்' என்று ஏசி வெட்கம் கெட்ட ஆபாசக் குப்பைகளை மக்களிடம் பரப்பினார்கள். அதனால்தான் பெரியார் மனம் வெறுத்துச் சொன்னார்

“பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகின்றீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதவர்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றி கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்” (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் இரண்டு ப.எண்: 585).

இன்று வைணவத் தொந்திகளுக்கு ஆதரவாக சைவத் தொந்திகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் சைவக் கடவுள்களைப் பற்றி வைணவன் அவனது நூல்களில் பாகவதம், இராமாயணம், பாரதம் போன்றவற்றில் கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றான். அதே போல வைணவனைப் பற்றி சைவன் அவனது கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் போன்றவற்றில் அதே போல கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றான். அது தெரியாத கூமுட்டைகள், பார்ப்பன அடிமைகள் இன்று இரண்டையும் வணங்குகின்றார்கள். உண்மையிலேயே இதை எல்லாம் படித்துவிட்டு ஒருவன் வந்தான் என்றால், சிவனையும் விஷ்ணுவையும் கடவுளாக அல்ல, ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், காறித் துப்பிவிடுவார்கள். ஆனால் நம் மக்களிடம் உள்ள ஒரு குறை என்னவென்றால், இந்த குப்பைகளைப் பற்றி தெரியாமல், இந்த ஆபாசப் புராணங்களையும் கடவுள்களையும் புனிதமானது என எண்ணி வணங்குவதுதான்.

வைரமுத்துக்காக குரல்கொடுக்கும் நபர்கள் அவரின் பார்ப்பன சார்பை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ளமெளனம் காப்பது, திரும்பவும் வைரமுத்து கண்ட கருமாந்திரங்களை எல்லாம் புனிதம் என்ற பெயரில் தமிழன் மீது திணிக்கவே பயன்படும். வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்கின்றார். நாமோ ‘ஆபாசத்தை ஆண்டாள்’ என்கின்றோம். வைரமுத்துவை இன்னும் கொஞ்சம் பார்ப்பனக் கும்பல் நெருக்கினால் ஆண்டாளை மட்டுமல்ல, பாஞ்சாலியையும் தன்னுடைய தாய் என்பார். ஆண்டாளிடம் தமிழ்ப்பால் குடித்தேன், பாஞ்சாலியிடம் ஞானப் பால் குடித்தேன் என்பார். என்னைக் கேட்டால் வைரமுத்து இப்படியொரு வீடியோவை வெளியிட்டதற்கு அந்த தொந்திப் பார்ப்பானின் பாதாரவிந்தங்களில் விழுந்து கதிமோட்சம் அடைந்திருக்கலாம்.

- செ.கார்கி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தேவதாசிகள் என்றால் யார்?

தேவ-தேவர்கள், தாசிகள்-அடியாள்கள்.

thevaradiyarகோவில்களில் கலை, இலக்கிய சேவை செய்தவர்கள். தெய்வத்திற்கு இணையாக அக்காலத்தில் மதிக்கப்பட்டவர்கள் என்பது பல தேவதாசிகள் பற்றிய புத்தகங்களிலும், செய்திகள் வழியாகவும் தெரிகிறது. இதை எழுதியவர்கள் யார்? வைணவர்களாகவும், பார்ப்பனவழிப் பெண்களாகவும் இருந்தனர். ஆய்வுகள் ஒரு சார்பாகத் தோன்றின.

எங்கிருந்து திடீரென்று இப்பெண்கள் இறைவனை கணவனாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்? மரத்தடி கோவில் வரலாறில் ஏன் இந்த பக்தைகள் இல்லை?

இவர்கள் தொடக்க காலம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின், பல்லவர் காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டவுடன் தொடங்குகிறது. புத்த, சமண வீழ்ச்சிக்குப்பின் ஆண்களை கழுவேற்றிக் கொலை செய்த சைவ –வைணவர்கள் பெண்களை என்ன செய்தார்கள்? கொலை செய்ததாக எங்கும் பதிவில்லை.

பார்ப்பனப் பெண்கள் தேவதாசிகளாக இருந்த வரலாற்றுக்குறிப்புகளே இல்லை. பார்ப்பன இனப் பெண்கள் இந்த சேவைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதால் பிற பெண்களையே தேவதாசிப் பெண்களாக கோவில்களில் வைத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் விடாத கால கட்டம் என்பதால் சூத்திரர்களாகவே இருக்க முடியும். கலை, இலக்கியம் வளர்த்த பெண்கள் என்று சொல்லப்படுவது உண்மையானால் ஏன் அது கெட்ட வார்த்தையாகத் திரிந்தது?

மனுதர்மம், மூடத்தனங்கள் திராவிட மண்ணில் வேரூன்றிய கால கட்டம் இது என்பதால் பெண்கள் கடவுள் பெயரால், பக்தியின் பெயரால் உள்ளிழுக்கப்பட்டு நடனக்கலை, இசை, ஓவியம் என்று கலை வளர்க்கும் பணியை செய்தார்கள் என்கிறார்களா? என்பது நமக்குள் எழும் கேள்வி. பல்லவர் கால சிற்பங்களில் தேவதாசிப் பெண்களின் சிற்பம் இடம் பெற்றிருப்பதே இதற்கு சான்று. இந்த சிற்பங்கள் கலை ஓவியம் வளர்த்ததை மட்டும் சொல்வதில்லை.

இன்று கோவிலில் செல்லும் பெண்ணோ, ஆணோ காமத்தைப்பற்றி பேசுவது தவறு என்கிறோம். ஆனால் சிற்பங்களோ காமத்தை வெளிப்படையாக பிரதிபலிக்கும் ரீதியில் அமைந்துள்ளது. இதை வரவேற்றவர்கள் தான் மன்னர்கள், புலவர்கள் என்பது உண்மைதானே. அப்போது தேவதாசிகள் என்பவர்களை மட்டும் புனித வாழ்க்கையை நடத்த மன்னர்களும், நிலபிரபுக்களும் விட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. அப்படி நாகரீகமாக நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை.

ராஜதாசி என மன்னருக்கு வேண்டிய தாசிகளும், சமூக தாசி எனும் பெயரில் ஊரில் பணக்காரர்களுக்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆக தேவ தாசி முதலில் கெட்ட வார்த்தையாக இல்லை. கெட்டவை பின்பு நடந்ததால் அது கெட்ட வார்த்தையானது. கோவிலில் பெண் இல்லாக் குறை தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இதற்கிடையே கலைகளும் வளர்ந்தன எனலாம். ஆம். அப்பெண்கள் இன்னல்களுக்கு நடுவே கலை வளர்த்தனர். அவர்கள் குழந்தைகள் கோவில்களில் நாதஸ்வரம், மேளம் அடிக்கும் பணி செய்திருக்க வேண்டும்.

தலை நிமிர்ந்து வரும் தருவாயில் மீண்டும் வீழ்த்தப்பட்டனர். சோழர்கள் படையெடுத்து ஆக்ரமித்ததும் பெண்களை விற்கவும், போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையும் இருந்தது. பார்ப்பனர்கள் நிலம் பெற பெண்களை சோழர்களிடம் விற்ற வரலாறும் இருக்கிறது.

1848 முதல் எதிர்ப்புகள் தொடங்கப்பட்டாலும், 1925 வரை இங்கே இந்தக் கொடுமை நடைமுறையில் பொட்டுக்கட்டுதல் எனும் பெயரில் இருந்தது. வீட்டில் மூத்த பெண்ணை இந்த வழி வந்த பெண்கள் கோவிலுக்கு நேர்தல் எனும் பெயரில் சடங்குகள் செய்து கோவிலில் விட்டனர். டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் போன்றோர் முயற்சியாலும், பெரியாரின் விமர்சன நடவடிக்கைகளாலும் சீர்திருத்தத்தை நோக்கி நகர்த்தப்பட்டது தேவதாசிகள் வாழ்க்கை.

சீர்திருத்தங்கள் வரும்போது அதை எதிர்த்தவர்களும், அவர்கள் சொன்ன காரணங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணியே இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே என்பதும், எதிர்ப்புக்கான காரணம் இந்து மனுதர்மம் என்றும், பெரியாரின் 'பெண்விடுதலைச் சட்டங்களும், பார்ப்பனர்களும்' புத்தகம் மூலம் அறிய முடிகிறது.

இவர்களுடன் போராடி 1925 இல் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பால்ய விவாகத் தடுப்புச் சட்டம், இருதாரமுறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை அனைத்தும் உருவாக்கிய இவரே இந்தியப் பெண்களுக்கான பெண் தெய்வம் என்றால் அது மிகையல்ல. இவருடன், இந்த சட்டங்களைக் கொண்டுவரும் முன்பே அதைப் பரிந்துரை செய்து குடிஅரசில் எழுதியும், அரசை வற்புறுத்தியும் பெண் விடுதலையை முன்னெடுத்த பெரியாருமே போற்றுவதற்குரியவர்கள்.

2003, 2012 வரை கூட இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் சிறுமிகள் இந்துத்துவ நம்பிக்கைகளாலும் வறுமையாலும் பொட்டுக்கட்டும் வழக்கத்தில் இருந்துள்ளனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் இணையப்பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

நெஞ்சை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த நூற்றாண்டிலும் ஆளாவதன் காரணம் சட்டங்கள் வந்தாலும், அதை நடைமுறைப்படுத்த இந்துத்துவ மூடநம்பிக்கைகளை வைத்து தடை போடும் மூடர்கள் தான் என்பதை உணர்ந்து விழித்தெழுவோம். பக்தியை குறைக்க வாதாடவில்லை. மூடத்தனங்களை ஒழிப்பதும் பக்தியின் கடமை தான். நம் இனத்தின் மீதுள்ள பக்தியின் கடமை.

- லோனா வெங்கட்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இது போன்ற இழிநிகழ்வு உலக வரலாற்றில் எங்கேயாவது நடந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. ஒட்டு மொத்த பத்திரிகை உலகையும் தலைகுனிய வைத்திருக்கின்றார் தினமணி வைத்தியநாதன். எத்தனையோ பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து, மக்களுக்கு எதிராக ஆதிக்க சக்திகள் செய்யும் அநீதிகளை அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள். குஜராத் இனப் படுகொலையை நடத்திய இந்துமத வெறியர்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய தெகல்கா பத்திரிகை நிருபர்களும், குஜராத் கோப்புகளை வெளியிட்ட ரானா அயூப் அவர்களும், உலக ரவுடியான அமெரிக்காவின் கொடூர முகத்தையும், மோசடித்தனத்தையும் உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சேவும் , இன்னும் பத்திரிகைத் துறையை சாராமல் அமெரிக்க சி.ஐ.ஏ.வில் பணிபுரிந்தாலும் தன்னுடைய நாடு எப்படி மற்ற நாடுகளை உளவு பார்க்கின்றது என்ற ரகசியத்தை வெளியிட்டு உலக அரங்கில் அமெரிக்காவை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனும் நம் மனதில் உயர்ந்த இடத்தில் இன்னும் இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.

vaidyanatha jeeyar

ஒரு நேர்மையான பத்திரிகையாளன் எப்போதுமே யாருக்கும் அஞ்சி தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது கிடையாது. இன்றும் நாட்டில் நடக்கும் பல அநீதிகள் மக்களுக்குத் தெரிகின்றது என்று சொன்னால், அதற்குப் பின்னால் பத்திரிகையாளர்களின் கடும் உழைப்பு உள்ளது. சம்பவங்களை வெறும் செய்தியாகத் தரும் பத்திரிகையாளர்களும் உண்டு. அதே போல செய்தியின் அடி ஆழம் வரை சென்று, அதன் மூலத்தைக் கண்டறிந்து மக்கள் முன் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களும் உண்டு. முன்னவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகைத் தொழிலை தேர்வு செய்தவர்கள். பின்னவர்கள் அதை ஒரு லட்சிய நோக்கத்தோடு சாமானிய மக்கள் மீது அதிகார வர்க்கம் இழைக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும், அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பத்திரிகைத் தொழிலை தேர்வு செய்தவர்கள். அது போன்ற நபர்கள்தான் இன்றளவும் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டு இருப்பவர்கள். ஆளும்வர்க்கத்தால் அதிகம் பழிவாங்கப்படுவர்களும் இவர்கள்தான்.

ஆனால் இப்படி நேர்மையாக, அஞ்சாமல் மக்களுக்காகப் பாடுபடும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அளவில் பார்த்தால் மிகக் குறைவாகவே இருப்பார்கள். வைத்தியநாதன் போன்ற மானங்கெட்ட பேர்வழிகளே அதிகம் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம், எழுத்தை வைத்து எப்படி ஆளும்வர்க்கத்தை நக்கிப் பிழைத்து, பணம் ஈட்டுவது என்பதுதான். பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் விபச்சார தரகனுக்கும், பத்திரிக்கையை வைத்து மதத்தையும், சாதியையும் வளர்க்கும் நபர்களுக்கும் எப்போதுமே பெரிய வேறுபாடு இருந்தது இல்லை. அந்த வகையில் தமிழில் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கென்றே நடக்கும் விபச்சாரப் பத்திரிகைகளில் முதன்மையானது தினமணி, தினமலர், தமிழ் இந்து போன்றவை. இந்தப் பத்திரிகைகளுக்கும் இதன் ஆசியர்களுக்கும் மானம், வெட்கம் என்பதெல்லாம் எதுவுமே கிடையாது. இவர்களின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை சீரும் சிறப்புமாக வளர்ப்பதுதான். இந்தப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அதுவேதான்.

அதனால் தான் கொஞ்சம் கூட சூடு, சுரணை இல்லாமல் நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாக தினமணி வைத்தியநாதனால் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் போய் உஞ்சவிருத்தி பார்ப்பான்களின் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோர முடிந்தது. மானமுள்ள பத்திரிகையாளனாக இருந்திருந்தால் நாண்டுகொண்டு செத்திருப்பான் இப்படி சராணகதி அடைவதற்குப் பதில். ஒட்டுமொத்த பத்திரிகை உலகிற்கே மிகப் பெரிய அவமானத்தையும், இழிவையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தி இருக்கின்றான் வைத்தியநாதன். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்துத்துவப் பயங்கரவாதிகளால் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்போது, பெரியார் மண் அதற்கு எப்போதுமே விதிவிலக்காக இருந்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணில் வேர்விட்டு விழுதுகள் இறக்கி, ஆகாயமாய்ப் பரவி இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்கள். இந்துத்துவ பயங்கரவாதிகளை தீரத்துடன் எதிர்த்து நிற்கும் நெஞ்சுரமும், விதைக்கப்படும் விஷ வித்துக்களை மண்ணிலேயே மரித்துப்போகச் செய்யும் கருத்தியல் ஆயுதங்களையும் எண்ணிலடங்காமல் இந்த மண் தன்னிடம் வைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட மண் ஒவ்வொரு பத்திரிகையாளனும் துணிவுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்தி இருக்கின்றது.

ஆனால் முதன் முறையாக அதற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்திருக்கின்றான் தினமணி வைத்தியநாதன். வைரமுத்து வருத்தம் தெரிவித்தும், கருத்துச் சுதந்திரத்தை பார்ப்பனியத்தின் காலடியில் போட்டு நசுக்காமல் விடமாட்டோம் எனக் கொக்கரித்த பார்ப்பனக் கூட்டம் அவரை தேவதாசி ஆண்டாள் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மிரட்டியது. வைரமுத்துவோ மன்னிப்பைவிட கேவலமான வீடியோவை வெளியிட்டு சராணகதி அடைந்தாலும், அடங்காத உஞ்சவிருத்தி பார்ப்பான்கள் அவரைப் பகிரங்கமாக வந்து மன்னிப்புக் கேட்டால்தான் விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ஆனால் வைரமுத்துவின் மீது என்னதான் விமர்சனம் இருந்தாலும், அவருக்காக ஒட்டுமொத்த முற்போக்கு இயக்கங்களும், இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடி அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அனைத்திற்கும் வேட்டுவைக்கும் விதமாக, போராடிய அனைவரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாமாப் பயல் வைத்தி, வேண்டுமென்றே ஆண்டாள் சன்னதிக்கு சென்று சாஸ்டாங்கமாக விழுந்து, மன்னிப்பு கோரியுள்ளான். இதன் மூலம் பத்திரிகை உலக வரலாற்றில் ஒரு புதிய இழிவான அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கின்றான் வைத்தி மாமா.

தினமணிப் பத்திரிகையின் பார்ப்பன சார்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதன் தொடக்கமே மிகத் தீவிரமாக பார்ப்பனியத்தை பரப்புவதில்தான் இருந்தது. பெரியார் அவர்கள் அன்றே தினமணியின் தமிழர் விரோத, பார்ப்பன சார்பை வெளிச்சம் போட்டுக் காட்டினார். 1938 இல் தமிழகமே இந்தி திணிப்புக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்த போது தினமணிப் பத்திரிகை, இந்திக்கு ஆதரவாக போராடுபவர்களை காட்டிக் கொடுக்கும் வேலையிலும், இந்தி எதிர்ப்பாளர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் வேலையையும் செய்தது. "இந்தி எதிர்ப்புக் கூட்ட நடவடிக்கைகளை தேசியப் பத்திரிகைகள் பிரசுரம் செய்வதே இல்லை. ஒருகால் பிரசுரம் செய்தாலும் திருத்தி, சுருக்கி மழுக்கிப் பிரசுரிப்பதே வாடிக்கையாகவும் இருந்து வருகின்றது. இந்தத் திருப்பணியில் முன்னணியில் நிற்பது 'தமிழர் நன்மைக்காக தமிழரால் நடத்தப்படும்' தமிழ் தினசரியான 'தினமணியே'.இந்தி எதிர்ப்பாளரைக் கேலி செய்வதிலும், விகடப் படங்கள் பிரசுரித்து இழிவுபடுத்துவதிலும் தலை சிறந்து விளங்குவது 'ஆனந்த விகடன்'.காங்கிரஸ் பத்திரிக்கைகளும் தேசியப் பத்திரிகைகளும் இந்தி எதிர்ப்பாளரை தாக்கிவந்தாலும் 'தினமணி’யையும், 'ஆனந்த விகடனையும்' போல் விஷமத்தனமாகவும், இழிவாகவும் எந்தப் பத்திரிகையும் தாக்குவதில்லை. தினமணி ஆசிரியர் சட்டசபை மெம்பர்.கனம் ஆச்சாரியார் தயவினால் மாதம் தோறும் 75 ரூபாய் சம்பளம் பெறுபவர்…..” “...தினமணி இந்தி எதிர்ப்பு ஆரம்பமானது முதற்கொண்டே இந்தி எதிர்ப்பாளரை ஒடுக்க சர்க்காரைத் தூண்டிக்கொண்டே வந்திருக்கிறது. சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் உண்டான கலவரங்களுக்கு இந்தி எதிர்ப்பாளரே காரணம் என்று ஒரு கதை கட்டிவிட்டு தற்காப்புக்காக எவரையும் கொல்லலாமென்றும், அவ்வாறு கொலை புரிவது குற்றமாகாதென யாரோ ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதாகவும் 'தினமணி' எடுத்துக்காட்டி இந்தி எதிர்ப்பாளரை கொல்லவும் பாமர மக்களுக்கு மறைமுகமாக உபதேசம் செய்தது…"( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் தொகுதி 1 ப.எண்:310)

இப்படி இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிய தினமணி, பெரியார் அவர்கள் காந்தியின் ராமராஜ்ஜிய மோசடியை அம்பலப்படுத்திய போதும், அதற்கு எதிராக தனது பார்ப்பன சதி வேலையை அரங்கேற்றியது. "ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியாகி 13 ஆம் தேதி வெளியூர்களுக்கு வந்த 'தினமணி' பத்திரிகையில் 'ராமராஜ்ஜியம்' என்னும் தலையங்கத்தில் துவக்கத்திலேயே அதன் ஆசிரியர் 'இந்தியாவில் இராமராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்று காந்திஜி கூறினால் இந்துமத ஆதிக்கத்தை முஸ்லிம்களின் மீது திணிக்கக் காந்திஜி விரும்புகிறார் என்று கயவர்கள் சொல்லித் திரிந்தார்கள்' என்று எழுதி இருக்கிறார். ஆகவே, இராம இராஜ்ஜியம் அல்லது இராமராஜ்ஜியக் கொள்ளைகள் என்பவைகள் இந்துமத சம்பந்தமானது என்று யாராவது சொன்னால் அப்படிச் சொல்லுகிறவர்கள் கயவர்கள் என்பது ‘தினமணி’ ஆசிரியர் கருத்து, அல்லது இந்தியக் காங்கிரஸ் தேசியவாதிகளின் கருத்து அல்லது காந்தி கும்பலின் கருத்து என்றுதான் கொள்ளவேண்டி இருக்கின்றது” ( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் தொகுதி 3 ப.எண்; 402). இப்படித்தான் தினமணி அன்றில் இருந்து இன்றுவரை தமிழர்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பங்கம் விளைவிப்பதை, அவர்களை பார்ப்பன அடிமைகளாக கருத்தியல் ரீதியாக வளர்தெடுப்பதை மட்டுமே தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றது. அதன் வெட்கம்கெட்ட செயலின் உச்சம்தான் வைத்தியநாதன் மன்னிப்பு கேட்டது.

முழு அம்மணமாக தனது பார்ப்பனியத்தை இன்று வைத்தியநாதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு வெளிக்காட்டி இருக்கின்றது தினமணி. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தினமணிப் பத்திரிகையை வாங்குவதை உடனே நிறுத்த வேண்டும். பத்திரிகைத் துறையை சேர்ந்த தன்மானமும், சுயமரியாதையும் உள்ள நண்பர்கள் தினமணிப் பத்திரிகையை நெருப்பிட்டு கொளுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும். தினமணி தமிழ்ச் சமூகத்தின், பத்திரிகை உலகின் அவமானச்சின்னம் என்பதையும், வைத்தியநாதன் பத்திரிகை உலகின் விபச்சாரத் தரகன் என்பதையும், தமிழினத் துரோகி என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் இந்தச் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றால், தமிழ்ச் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்றால் உடனடியாக இதை நாம் செய்யவேண்டும்.

- செ.கார்கி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard