New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம் -முருகேசு பாக்கியநாதன். B.A


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம் -முருகேசு பாக்கியநாதன். B.A
Permalink  
 


பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம்

 

பல மொழிகளுக்கு தமிழே மூல வரிவடிவம்

முருகேசு பாக்கியநாதன். B.A


நோக்கம்
தமிழ் மொழியின் சொல் வளத்தினாலும்; அதன் வரிவடிவத்தினாலும் தோற்றம் பெற்றதுமான பல இந்திய மொழிகளுக்கும், அண்டை நாடான இலங்கையின் பெரும்பான்மை இன மொழியான சிங்கள மொழியினுக்கும்;;, தமிழ் வரிவடிவமே அம்மொழிகளின் தோற்றத்திற்கு ஆதாரமாகவும் மூல வரிவடிவமாகவும் இருந்தது என்பதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனை ஆராயும்போது தமிழின் தொன்மை, அதன் வரலாறு அதன் மொழி வரிவடிவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அத்தோடு அம்மொழி வரிவடிவம் ஏனைய மொழிகளின் வரிவடிவத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது என்பதனை நோக்குவதே இக்கட்டுரையாகும்;;.


தமிழின் வரலாறு இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெமூரியா தொடங்கி சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்து முழு இந்தியாவிலும் மற்றும் முழு இலங்கையிலும்; செழித்தோங்கிய மொழியாகவே இருந்துள்ளது. லெமூரியா இன்று எம் முன் இல்லாமல்; மறைந்து போயிருந்தாலும் தமிழ்மொழி பற்றிய உண்மையான வரலாறு 6000 ஆண்டுகளிலிருந்து சி;ந்துவெளியிருந்து எமக்குக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த வகையான தொன்மையும், வரலாறும், ஆதாரமும் கொண்டதான மொழிகள் உலகில் மிகச் சிலவே.


தமிழும் திராவிடமும்
தமிழும் திராவிடமும் என்ற இரு பதங்கள் ஒரு கருத்தையே பிரதிபலிக்கின்றன. தமிழ் என்பதன் உச்சரிப்பே காலப்போக்கில்; திரிபடைந்து திராவிட என்று மாறியதாக அறிஞர் பெருமக்கள் கொள்ளுவர்;.
திராவிடம் என்ற சொற்பதத்தினை றெபேட் கால்டுவெல் அவர்களே 1856ல் திராவிட மொழிகளுக்கான ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலில் முதன் முதலில் பயன்படுததினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, கொடகு, துத, தோத, கோந்தி, கூய், ஓரான், ராஜ்மஹால் ஆகிய 12 மொழிகளைத் தெரியப்படுத்தினார். இக்குடும்பத்திற்கு தாய் மொழியாக தமிழேயென அறிய முற்பட்டுள்ளார்.
இதன்பின்பு நடைபெற்ற ஆராச்சிகளின்போது பின்வரும் மொழிகளும் அதனுள் அடக்கப் பெற்றன. அவையாவன பிரகூய், கொலாமி, நாய்க்கி, குவி, கோண்டா, கட்பா, குரூக், ஒல்லாரி, கோயா, மோல்டா, பார்ஜி, கதபா, பெங்கோ, இருளா, கொடகு, குறவா, தோடா, படகா, ஆகியனவாகும். இதில் காட்டப்பட்ட பிரகூய் மொழியானது இந்தியாவிற்கு வடக்கேயுள்ள பலுகிஸ்தானினும் ஆப்கானிஸ்தனிலும் பாகிஸ்தானின் ஒரு சிறுபகுதியில் பேசப்படும் மொழியாகும். அத்தோடு பாகிஸ்தானிய பல்கலைக் கழகத்தில் பயிலுவதற்கான விருப்புப் பாடமாகவுள்ளது. இம்மொழிகள்; தாய்த் திராவிட மொழியிலிருந்து பேசப்பட்ட பிராந்திய மற்றும் இனக்குழுமங்களின் மொழிகளாக அறியப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளின் இலக்கண ஓப்புமைகள், சொல் ஒப்புமைகள் பற்றி ஏராளமான தரவுகளை கால்டுவெல் அவர்கள் தந்துள்ளார்.
கால்டுவல் கோடிட்டுக் காட்டியதை மேலும் ஆராந்து மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் எனவும், மிகு தொன்மை வாய்ந்த தமிழே அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மாறல் கார்த்திகேய முதலியார் 1913இலும், கா.சுப்பிரமணியபிள்ளை 1920களிலும், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1930, 1940 களிலும், ஞா. தேவநேய பாவாணர் 1940- 1980 களிலும் மிக விரிவாக ஆராந்து நிறுவியுள்ளனர்;. ஆதாரம் 1.


லெமூறியாவில் திராவிடன்
இன்றை ஸ்ரீ லங்கா அடங்கலாக பாண்டியத் தமிழ் பேரரசே கோலோச்சி தமிழர்களே ஆதிக்குடிகளாக இருந்துள்ளனர். இதற்கு முந்திய காலப்பகுதியிலேயே நாகர்கள் என்றழைக்கப்பட்ட மனிதஇனம் வாழ்ந்துள்ளதாக லெமூறியா பற்றி ஆராந்த அறிஞர்கள்; ஆராச்சிக் கட்டுரைகளின் மூலம் தெரிவித்துள்ளார்கள். இவர்களைப் பாம்பு மனிதர்கள் (Snake People) என அழைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி அவர்கள் கூறும்போது பாம்பு மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மிக மிக ஆதிகாலத்தில் எறத்தாள 10000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர். அவர்களே லெமூறியாவின் தொன்மையான குடிகள். பாம்பு மனிதர்களே உலகில் பதிவுகள் பற்றிய அறிதலை விட்டுச் சென்றவராவர். பாம்பு என்பது ஒரு குறியீடே இது உலகியலில் அதி விவேகத்தினைக் குறிக்கும் குறியீடென அறியப்பட்டுள்ளது. ஆகவே பாம்பு மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது நாகர்களையே ஆகும். அவர்களே தமிழனின் பரம்பரையினர். அன்றே அவன் எழுத்தை அறிந்து வைத்து அதனைத் தமது பதிவுகளுக்குப் பயன் படுத்தியிருக்கிறான் என்ற ஒரு செய்தி இங்கிருந்து கிடைக்கின்றது.
லெமூறியாவின் எஞ்சிய பகுதிகளான தென்இந்தியா, இலங்கை, வடமேற்கு அவுஸ்ரேலியா ஆகிய இடங்களில் திராவிடர்களின் பரம்பரையினரே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வடமேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் ஆதிக்குடிகள் பற்றி ஆய்ந்தபோது பெறப்பட்ட உண்மைகள் அதிசயிக்க வைத்தன.

அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா என்னும் ஆதிக்குடிகள் ஆதித் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு அவர்களது உருவத் தோற்றப்பாடு; ஆதாரமாயுள்ளது. அத்தோடு அவர்களது மொழியிலும் திராவிட மொழியின் சாயலும் இலக்கண, ஒலியன் ஒற்றுமைகள் உள்ளதாக கு.அரசேந்திரன் குறிப்பிடுகின்றார். ஆதாரம்;: தமிழ்க்கப்பல் பக்3. குமரிக் கண்ட நிலத்தொடர்பு இருந்த காலத்திலேயே ஆதித் திராவிடர் குமரிக் கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உணவு தேடி வேட்டையாடும் நோக்கோடு வேறொறு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்கள்.


மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதனையும் வலியுறுத்துகின்றது. அவையாவான குவினி இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்; மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்களான நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்ற பெயர்களை நோக்கும போது நாகர் என்ற பெயருடன் தொடர்பட்டது போன்றும் ஏதொவொரு அறிந்த பெயரான தமிழ்ப் பெயர்கள் போலவும் இருக்கின்றது. – ஆதாரம்: விக்கிப்பிடியா தேடுதளம். இக்காரணத்தினாலும்;; லெமூறியாவில் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குரிய ஒரு ஆதாரமாகக் கொள்ள முடியும். குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவனின் இறுதிக் குடிகளே அதன் எஞ்சிய பகுதிகளான இலங்கையிலும் இந்தியாவிலும் வடமேற்கு அவுஸ்ரேலியாவிலும் 10,000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதிக்குடிகளாவர்.


அவுஸ்ரேலியாவின் சில ஆதி இனக்குழுமங்களின் மரபணுக்கூறுகள் (டீ.என்.ஏ) ஐ.நா சபையினால் ஆராயப்பட்டுள்ளன. திரவிட இனத்தொடர்பு இருப்பதாக நாம் கருதும் இனங்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு தமிழ்நாட்டு அரசு நிதியொதுக்கி இச்செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.





மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட ஆதிக்குடிகள்


திராவிடனின் மூதாதையர்கள் - நாகர்களும் இயக்கர்களும்
இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்த ஆதிமக்களை நாகர்கள் மற்றும்; இயக்கர்கள் என மகாவம்சம் என்ற பௌத்த நூல் கூறுகின்றது. இந்த இரண்டு இனங்களும் திராவிடரின் மூதாதையராவேயிருக்க முடியும். நாகர் என்ற இனம்; வாழ்ந்த வாழ்க்கை நாகரிகம் என்றும், அவர்கள் வாழ்ந்த இடம் நகரம் என்றும் அவர்கள் பேசிய மொழி நகரி என்றும் உருப்பெற்றது. இதனை ஒத்த தமிழ் பெயர்களே நாகராசா, நாககன்னி, நாகதுவீபம் அல்லது நாகதீபம், நாகவிகாரை, நாகர்கோவில், நாகபட்டினம், நாகர்லாந்து என்ற பெயர்களாகும். நாகர் இனத்திலிருந்தே இப்பெயர்கள் தோன்றியருக்க வேண்டும். ஆரியர் இந்தியாவை ஆக்கிரமித்தபோது நாகர்களிடமிருந்தே எழுத்து முறையினைக் கற்றிருக்க வேண்டும். இதனாலேயே அங்கு வாழ்ந்த மூதாதையராகிய நாகர்களின் மொழியாகிய நகரியை தங்கள் மொழிப் பெயராக தேவ என்னும் இறைவன் பெயர் சார்ந்த அடைமொழியினைச் சேர்த்து தேவநகரி என பெயர் சூட்டிக்கொண்டனர்.


சிந்துவெளித் தமிழ்
தமிழ் இனமானது மிகவும் தொன்மையான இனமாக ஆசியாவின் நாகரீகத்திற்கே தோற்றுவாயாக அமைந்த சிந்துவெளியின் மொஹஞ்சதாரோ ஹறப்பா நாகரீத்தின் பிதாமகராகத் திகழ்ந்த திராவிடரின் மூலவேராக இருந்தது. இந்த இனம்; கிறிஸ்துவக்கு முன்பு 6000 ஆண்டுகளுக்கு முன்பு செழுமையுடன் வாழ்ந்த ஒரு இனமாகும். தமிழ் மொழியின்; பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மொழி வரிவடிவாகிய தமிழ்பிராமியின் வழிவந்ததே தமிழ் என்பதாகும். மேற்கொண்டு தமிழ்பிராமி என்பதனை விடுத்து தமிழி என அழைப்போம்.


இன்று உள்ள தமிழ்மொழித் தோற்ற வரிவடிவம் அப்போது இல்லததிருந்தாலும் அப்போது அறியப்பட்ட திராவிடர் பாவித்த மொழியின் பரிணாம வளர்ச்சியே தற்போது பாவனையில் உள்ள தமிழ் மொழியாகும்;. அவர்கள் பாவித்த மொழி திராவிட தமிழ் மொழியென அறிய பலவித ஆராச்சிகள் உதவியுள்ளன. சிந்துவெளியில் நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது பெறப்பட்ட சில உலோக முத்திரைகளில் பதிக்கப் பெற்ற பெயர்கள் இன்றும் தமிழில் வழங்கப்படும் தமிழ் பெயராக இருப்பது குறிப்பிடக் கூடியது. உதாரணமாக கூத்தன், தக்கன், அண்ணி, அரட்டன், அப்பன், ஐயன், சாத்தன,; ஐயாவு, கக்கன், கந்தன் - கந்தப்பன், குப்பன் ஆகிய பெயர்கள் சிந்துவெளி நாகரீக புதைபொருள் ஆராச்சியாளர்களின் முறையே 232, 3762, 2190, 157, 2626, 6074, 4195, 7513, 4323, 6120, 2719, 2025 என்;ற இலக்கங்கள் கொண்ட உலோக முத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பம்பாய் வரலாற்று ஆராச்சி நிலையத்தில் சிந்துவெளி ஆய்வினை முன்னெடுத்துச் சென்று ஆய்வு செய்த ( Fr Heras ) ஹெராஸ் பாதிரியார் அவர்களே முதன் முதலில் இது தமிழர்களின் நாகரீகமெனவும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் உலகுககுக் கூறியவர். இவர் சீன நாகரீகத்தினையே சிந்து வெளியின் கிளை நாகரீகம் என்று வெளிப்படுத்தினார். பல சிந்து வெளி எழுத்துக்கள் சீன எழுத்துகளுக்கு வழிகாட்டியாகும் எனவும். தமிழுக்கும் சீனத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றி “ சீனம் என்ற செந்தமிழ்” என்ற கட்டுரையில் விரிவுபடக் கூறியுள்ளார்.

பிரகிருதம்
பிரகிருதம் என்பது வடஇந்தியாவிலே ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்த மொழியாகும். பிரகிருதத்திலேயே அசோகன் பிராமி எழுதப்பட்டிருந்தது. அத்துடன் தேவநகரி பிரகிருதத்திலேயே எழுதப்பட்டது. பிரகிருத மொழிப் பிறப்பினையும் அதன் வழக்கத்தினையும் தேவநேயப்பாவணர் மறுத்துரைத்து பிரகிருதம் என்பது வடக்கில் பயன்படுத்திய வடதிராவிடம் என்றே கொள்ளப்பட வேண்டும் என தனது ஆராச்சியின் போது குறிப்பிடுகின்றார். தேவநேயப்பாவணர் அவர்கள் கால்டுவெல் வழியிலே தொடர்ந்து ஆராச்சிகளைச் செய்து இந்திய மொழிகளில் தமிழே சகல மொழிகளுக்கும் தாய் மொழியென 1900-81 காலப்பகுதியில் நிறுவினார்.


மேலும் சிந்துவெளி முத்திரைகளைவிட அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பெற்ற அசோகன் கல்வெட்டு பிரகிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பிரகிருதம் என்பது வடதிராவிடம் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அடித்துக் கூறுகிறார் பாவாணர். ஆதாரம்: தமிழ்க்கப்பல், கு.அரசேந்திரன் பக் 46
தென்இந்திய குகைக் கல்வெட்டுக்கள்


தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிந்துவெளியின் சித்திர வரி வடிவத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்; பின்பு தொடர்ந்து வந்த வரிவடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்று காணப்படும் வரிவடிவமாகும். இதனை மறுப்பவர்களும் உண்டு. சிந்துவெளி நாகரீக காலத்தே பதிக்கப்பெற்ற சித்திரவடிவங்களும் இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப் பெற்ற கடலூர், சானூர், கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் தமிழ் வரிவடிவம் எப்படியாக வளர்ச்சி பெற்றன என்பதற்குச் சான்றாக அமைகின்றன.


இதனைவிட திருநாதன் குன்றத்து கல்வெட்டின் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட எழுத்துக்கள் உண்மையான தமிழ் வரிவடிவத்தினைப் பிரதிபலித்தது . பிரம்மகிரி அகழ்வாராச்சிகளானது பெருங்கற்காலத்து மக்கள் கி.மு 5ம் நூற்றாண்டளவில் தென் நாட்டில் வாழ்ந்தாகவும் அவர்கள் திராவிடரகள் எனவும்;, அப்பண்பாட்டின் பண்புகளை சங்க இலக்கியத்தில் காணக்கூடியதாக உள்ளதாக குருராஜராவ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.


தெ.பொ.மீனாட்ச்சிசுந்தரனாரின் கருத்துப்படி தமிழகத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்களின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என்பதாகும். இவை தென் பிராமியில் எழுதப்பட்டிருப்பதாகவும் இதே வகையான தென் பிராமி எழுத்து வகையான எழுத்துக்களே இலங்கையில் கண்டுபிடிக்கப் பெற்ற குகைக் கல்வெட்டுக்களாகும்.


இந்திய வரலாற்று நூலை எழுதிய சத்தியநாதையர் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு எழுதும் பழக்கம் கி.மு 2ம் நூற்றாண்டளவில் தொடக்கம் பெற்றாகவே குறிப்பிடுவர். History of India Vol. 1 – P-209. தமிழகத்திலே சமஸ்கிருதத்தில் கல்வெட்டெழுதப் பெற்றது பல்லவ அரசன் வி;ட்டுணுவர்த்தனன் காலமான கி.பி 6ம் நூற்றாண்டிலிருந்து என்கிறார் ஐராவதம் மகாதேவன். – Early History Epigraphy from the times to the Sixth Century AD P-114




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம் -முருகேசு பாக்கியநாதன். B.A
Permalink  
 


தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி
தமிழ் அரிச்சுவடி பற்றி கி.மு 3ம் நூற்றாண்டின் எழுதப்பெற்ற தொல்காப்பியம் பின் வருமாறு கூறுகின்றது.
எழுத் தெனப் படுப
அகர முதல
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
என அ முதல் ன வரையான தமிழ் உயிரெழுத்து பன்னிரண்டுடன் மெய்யெழுத்துமாக முப்பது என இங்கு காட்டுகின்றார். அத்தோடு குற்றியலிகரம், குற்றியலுகரம் அத்துடன் முப்புள்ளியுடைய ஆய்த எழுத்தெனவும் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியர் ஒரு கருத்தினைச் சொல்ல விளையும்போது அதனை தனக்கு முந்திய புலவர்கள் சொல்வார்கள் என்றும் அதனை என்மனார் புலவர் என்று பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். அப்படியாயின் கி.மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பு பல காலத்திற்கு முன்பே தமிழில் தொல்காப்பியத்திற்கு முந்திய ஒரு இலக்கணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு செழித்து வளர்ந்த மொழிக்கோ அன்றி செழித்த இலக்கியங்கள் உள்ள மொழிக்கோ மட்டுமே இலக்கணத்தினைப் படைக்க முடியும். ஆகவே கி.மு 500 ஆணடிற்கு முன்பும்; தமிழ் மிகச் சொழிப்புற்று இருந்த ஒரு மொழியாகவே இருநதுள்ளது என கொள்ளமுடியும். அதுவே தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி என்பதாகும்.

சித்திர முத்திரைகளின் வரிவடிவம்
சித்திர முத்திரைகளினால் எழுத்துக்கள் எழுதும்போது சில தனியாகவும் சில ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட முத்திரைகள் சேர்ந்தோ ஒரு எழுத்தை அமைப்பதாக கொள்ள முடியும். அதேபோலவே தமிழ் வரிவடிவம் தனிக் கோடுகளாலும், தனி வட்டங்களாலும், பல கோடுகளாலும், பல வட்டங்களாலும் எழுதப்படும் எழுத்துக்களாகும் அந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே சிந்துவெளி முத்திரைகள் தனியாகவோ அன்றி ஒன்றாகவோ அன்றி ஒன்றிற்கு மேற்பட்டனவாகவோ சேர்ந்து வரிவடிவங்களை அமைக்கிறதென்று கொள்ள முடியும்.

கி.மு.1500 இன் இறுதியிலிருந்த சித்திரவெழுத்து கி.மு 500 ஆண்டுகளில் தமிழியாக வளர்ச்சி பெற்று தொடர்ந்து கி.பி 200 லிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிபி400 ஆண்டளவில் வட்டெழுத்தாக மாற்றம் பெற்று மேலும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இன்றைய வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் பெற்றது.

சிந்துவெளி சித்திர எழுத்திலிருந்து தற்காலம் வரையான தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சி
சிந்துவெளி சிந்திர வரிவடிவிலிருந்து தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சியும் அசோகன் பிராமிக்கு அது எவ்வாறாக வித்திட்டது என்பதனை கீழே நோக்கவும். மனித உருவத்திலிருந்தே சிந்துவெளித் தமிழன் தனது அகரத்தினைத் தோற்றுவித்தான். அதன் அவையவங்களை வைத்தே அகரத்தின் பரிணாமவளர்ச்சி வளர்ந்துள்ளது.




1. கிமு 6000 – கிமு1500 வரையான சிந்துவெளி அகரத்தின் சித்திர வரிவடிவம்
2. சித்திர வரிவடிவத்தின் தொடர்ச்சியான அகர பரிணாம வளர்ச்சி
3. கிமு.5ம் நூற்றாண்டிற்கு முந்திய அகரத்தின் பரிணாமம்
4. கி.மு.5ம் நூற்றாண்டின் தமிழி
5. அகரத்தின் அடுத்ததான பரிணாமம்;.
6. தற்போதைய அகரத்தினை அண்டிவிட்ட அ
7. தற்போதைய நவீன அகரத்திற்கு முந்திய அகர தோற்றம்
8. கி.பி 4ஆம் நூற்றாண்டிகத் தோன்றம் பெற்ற வட்டெழுத்தான நவீன அகரம்
அசோகன் பிராமி
பிரகிருதத்தில் எழுதப்பெற்ற அசோகன் பிராமியினை அடியொற்றியே தேவநகரியும் அதனை அடியொற்றிப் பிறந்த வடஇந்திய மொழிகளும் பிறந்ததாகக் பல அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள். இம்மொழிகளை இந்தோ-ஆரிய மொழிகள் என்ற பெயரினால் அழைக்கத் தலைப்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறு குடிகளாவர். அவர்கள் மத்தியசியாவிலிருந்தும் குறிபாக றஷ்யா, பாரசீகம், கிழக்கு ஐரோப்பா ஆகிய பிரதேசங்களிலிருந்து குடியேறியோராவர். இதன் காரணமாக பல மொழிகளினைப் பேசும் ஒரு கூட்டமாகவே வந்து ஆக்கிரமிப்புச் செய்திருந்தார்கள். ஆகவே இப்பல மொழி பேசுவோர் இந்தியாவில் ஏற்கனவே வாழ்ந்த சுதேசிகளுடன் கலந்தபோது அந்த சுதேசிகள் பாவித்த மொழியினையொட்டிய ஒரு மொழி பாவனையில் இருப்பின் அவர்களுடன் ஒன்றிணைவதற்கு ஒரு பாலமாக அமையும் என்று கருதியதனால் ஒரு பொது மொழி தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். இதனாலேயே அப்போது வடநாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதத்தினைத் தங்கள் மொழித் தோற்றத்திற்குப் பாவித்திருக்கலாம். இக்காலத்தே அசோகன் பிராமியானது சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தோன்றிய தமிழியில் இருந்து தனக்கு வேண்டிய வரிவடிவங்களை அமைத்துள்ளது என்றே கொள்ள வேண்டும். அதற்கான காரணங்களைப் பின்வருவனவற்றினைக் கொண்டு அறிய முடியும்
1. தமிழி வரிவடிவம் தோன்றுவதற்கு சிந்துவெளியின் சித்திரவெழுத்துக்கள் ஆதாரமாகவிருந்தது. இது முழுக்க முழுக்க திராவிட வரிவடிவமென ஐயம்திரிபற ஏற்கப்பட்டுவிட்டது.
2. அசோகன் பிராமியிலிருந்து ஏனைய மொழிகளின் வரிவடிவம் தோன்றியதாயின் அதற்கான மூல வரிவடிவம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது. சிந்துவெளி நாகரிக முத்திரைகளை விட வேறெந்த முத்திரைகளோ அன்றி சித்திர வரிவடிவங்ளோ கிடைக்காதபோது அசோகன் பிராமியின் மூல வரிவடிவ ஆதாரத்தினை நிறுவுவதற்று எந்தச்சான்றுகளும் இல்லை.
3. சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தமிழியும், தமிழியிலிருந்து அசோகன் பிராமியும் தோன்றியதனை மேலே நோக்கினோம்.
4. ஆரியர்கள் இந்திய சுதேசிகளுடன் கலந்தபோது அங்கு திராவிடர்களே ஏற்கனவே அதிஉச்ச நாகரிகத்தில் வாழ்ந்துள்ளார்கள். ஒரு இடத்தினை ஆக்கிரமிப்போர் அங்குள்ள செல்வம், கலை கலாசாரம் போன்றவற்றினை அபகரிக்கவே முயன்றிருப்பர். இதனைச் செய்ய அவர்களுக்கு அங்கு பாவனையில் இருந்த சுதேச மொழியில் அறிவு தேவைப்பட்டது. ஆகவேதான் ஏற்கவே பாவனையில் இருந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தேவநேயப் பாவாணர் அவர்களது கருத்துப் போல் வடதிரவிடர்கள் பாவித்த வடதிராவிடமாகிய பிரகிருதமே அசோகன் பிராமியின் பிறப்பிற்கும் தேவநகரியின் பிறப்பிற்கும் ஆதாரமாயின.
5. மேலேயுள்ள ஆதாரங்களை நோக்கின் சகல வடமொழிகளின் பிறப்பிற்கு திராவிடமே ஆதாரமாகவிருந்தது என்ற உண்மை இங்கு வெளியே தெரிகின்றது.


அசோகன் பிராமியின் அகரம்

மேலே காணப்படுவதே அசோகன் பிராமியின் அகரம். இதன் தோற்றம் கிமு.3ஆம் நூற்றாண்டாகும். தமிழியின் காலம் கிமு.5ஆம் நூற்றாண்டாகும். ஆகவே தமிழ் பிராமியிலிருந்தே தோற்றத்தின் அடிப்படையிலும் காலத்தின் அடிப்படையிலும் வரிவடிவத்தின் அடிப்படையிலும் தமிழியே அசேகன் பிராமிக்கு முந்தியது மட்டுமல்லாது அது தோன்றுவதற்கும் ஆதாரமாய் அமைந்து அதன் பிரதிமையே அசோகன் பிராமியென உறுதியாகக் கூறமுடியும். ஆகவே அதன் வழிவந்த வட மொழிகள் அத்தனையும் தமிழ் பிராமி வழிவந்ததெனறே கொள்ளவேண்டும். தமிழிக்கு அதன் வரிவடிவத்தினை அமைக்க அதன்பின்புலமாக சிந்துவெளியின் சித்திர எழுத்துக்கள் இருந்துள்ளன. சிந்துவெளி வரிவடிவங்களும் அக்காலத்தே பாவிக்கப்பட்ட மொழி திராவிடம் என்பதும் ஐயம்திரிபற சகல ஆராச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அசோன் பிராமி எங்கிருந்து தனது மூலவரிவடிவத்தினைப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கம் என்ன? சிந்துவெளி நாகரிகத்தினை விட வேறு எங்கிருந்தும் வரிவடிவங்களினை அசோகன்பிராமி பெற்றுக் கொள்ளுவதற்கு வேறு ஏதும் வரிவடிவங்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்ததா என்று நோக்கின் அதற்குரிய விடை அப்படியேதும் இருந்ததில்லையென்பதாகும். ஆகவே இதனையொற்றிப் பிறந்த பிரகிருதமும் அதிலிலிருந்து பிறந்த ஆரிய மொழிகளினதும்; மற்றும் வடஇந்திய மொழிகளின் வரிவடிவத்திற்கும் திராவிடமே மொழிவரிவடித்தினைக் கொடுத்தததென்றே கூறமுடியும்.

அகரவரிசைகளின் ஒப்பீடு
கீழே காணப்படும் அட்டமவணையில் தமிழ் அகர வரிசையில் உள்ள அ வும் ஆ என்ற வரிவடிவத்தினைப் போன்ற சாயலுடனேயே சமஸ்கிருத அ, ஆ ஆகிய இரண்டு எழுத்துக்களும் அமைந்தன. அ விற்கு மேலே சுழியிட்டு பின்பு அதற்குக் கீழே ஒரு வண்டியிட்டு பிற்பகுதியில் ஒரு கோட்டினை இட்டு முடிப்பதே தமிழ் அகரமாகும். இதே எழுத்து முறையினைப் பின்பற்றியே கீழே குறிப்பிட்ட கால வரிசைப்படி தோன்றிய பல இந்திய மொழிகளின் எழுத்து வரிவடிவங்கள் தோற்றம் பெற்றன., திராவிட மொழிகளிலோ அன்றி; ஆரிய மொழிகளிலோ அந்ததந்த மொழிகளின் வரிவடிவங்கள் தமிழ் வரிவடிவத்தின் சாயலை அடியொற்றியே அமைக்கப் பெற்றன.. தெலுங்கும் கன்னடமும் தமிழ் அ வரிவடிவத்தை தலை கீழாக போட்டு எழுதியிருப்பதனை அவதானிக்க முடியும்;. அதிலும் ஒரு வட்டம், ஒரு வண்டி மற்றும் ஒரு கோட்டுடனேயே அகரம் அமைக்கப்பட்டுள்ளது. கீழே காணப்படும் பட்டியலின் வரிவடிவங்களை நோக்கின் உயிர் எழுத்துக்களின்; தொடர்பு பற்றி ஒரு முடிவிற்கு வர முடியும்.
கீழே காணப்படும் அட்டவணையில் மொழிகளின் அகரவரிசை வரிவடிவங்களும் அவை தோன்றிய காலவரிசையின் அடிப்படையிலும் எழுத்து வரிவடிவங்களின் ஒப்பீட்டடிப்படையிலும் தரப்பட்டுள்ளன. இவ்வட்டவணையிலிருந்து சிந்து சித்தரவெழுத்திலிருந்து தமிழியும் தமிழியிலிருந்து தற்கால தமிழ் அகரவரிசையும் தமிழியைப் பின்பற்றி ஏனைய எழுத்துக்களின் வரிவடிவங்களும் எவ்வாறாகத் தோன்றியதென்பதை ஐயம்தெளிவுற அறிந்துகொள்ள முடிகின்றது. அகரவரிசையின் ஏனைய எழுத்துகளாக இ, ஈ, உ, ஊ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ ஆகிய எழுத்துக்ளை பட்டியலில் காட்டப்பட்ட ஏனைய எழுத்துக்களுடன் நோக்கின் தமிழ் எழுத்துக்களுக்கும் மற்ற மொழிகளின் அதே எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ள முடியும்.
சிந்துவின் சித்திரவரிவடிவம் - தமிழி – அசோகன் பிராமி – ஏனைய மொழிவடிவங்களின் ஒப்பீடு
 
 
 

தமிழின் தொன்மையும் அதன் நீண்ட வரலாறும், சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளும்; தென்னாட்டில் கிடைக்கப்பெற்ற குகைக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட மட்பாணடங்களில் காணப்படும்; வரிவடிவங்களும், தொல்காப்பியத்தின் தொன்மையான வரலாறும் ஏனைய மொழிவரிவடிவங்களில் எவ்வாறான தாக்கத்தினையும்; செல்வாக்கினையும் செலுத்தியது என்பதனை அறிய முடியும்.
• மேலேயுள்ள அட்டவனையில் காணப்படும் தமிழின் எழுத்துக்கள் கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக வட்டெழுத்தாக மாற்றம் பெறுகின்றன.
• வடமொழி தமிழியின்; வடிவத்தினின்றும் தனது சொந்த வரிவடிவத்திலிருந்து மாற்றம் பெற்று வட்டெழுத்தாக கிரந்தம் என்ற பெயருடன் கிபி500 ஆண்டளவில் தென்நாடடிற்கு அறிமுகமாயிற்று. இக்காலத்தேதான் பல்லவப் பேரரசர்கள் ஆரியச் செலவாக்கினைத் தென்நாட்டில் வேரூன்றச் செய்யும் நோக்கோடு தமிழோடு இணைந்த ஒரு வரிவடிவத்தினை கிரந்தமாகத் தோற்றுவித்து தென்நாட்டில் புகுத்தினார்கள். முதன் முதலில் கிரந்தமே தமிழ் வரிவடிவத்தினையொற்றிப் பிறந்த மொழியாகும். தேவநகரி எழுத்துகள் நேர் கோட்டு வரிகளைக் கொண்ட எழுத்து வடிவத்தால் அமைந்தது. ஆனால் அதன் அ மற்றும் ஆவன்னாவிலும் தமிழ் அ, ஆ வன்னாவின் வட்டெழுத்துச் சாயல் காணப்படுகின்றது அதனை ஆரியர்களால் மறைக்க முடியவில்லை..
• சிந்துவெளியில் வாழ்ந்த திரவிடர்களே இந்தியாவின் ஆதிக் குடிகளாகளாவும் சிறப்புடன் கட்டிடக்கலை, சிற்பக்கலை, உலோக பயன்பாட்டுக்கலை, நகர நிர்மாணம், மண்பாண்ட பாவனையில் தங்கள் மொழியினைப் பதிவு செய்யும் கலை போன்றவற்றை அங்கு வாழ்ந்தவர்களே இந்திய நாட்டிற்கு அறிமுகம் செய்தார்கள்;. அவர்கள் எழுதி வைத்த சித்திர எழுத்து வடிவங்களே இந்தியாவின் முதல் எழுத்து வடிவங்களாகும்;. இதற்கு முன்பு இந்தியாவில் எந்தவிதமான சித்திரவரிவடிவங்களோ அல்லது எழுத்து வடிவங்களோ இருந்ததேயில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை. இந்த சித்திர வடிவங்களே முதலில் இந்திய துணைக்கண்ட மனிதன் பேசும் மொழியின் கருத்தினை எழுத்தில் வடிக்க படைக்கப்பெற்ற வரிவடிவமாகும். இதிலிருந்து பிறந்த தமிழிலில் இருந்தே ஏனைய மொழிகளும் அடியொற்றி பின்பற்றியிருக்க முடியுமேயல்லாமல் வேறு எக்காரணிகளும்; அந்தந்த மொழிகளின் வரிவடிவம் தோன்றக் காரணமாவிருக்க முடியுhது.
• தமிழில் முதல் தோன்றிய இலக்கண நூல், தொல்காப்பியமாகும். இதன் காலம் கிமு 300 என்று பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழில் தொல்காப்பியம் எழுதப்பட முன்னர் ஒரு சில இலக்கிய வடிவங்கள் இருந்திருக்க வேண்டும் என சிந்திக்கும் எவருக்கும் உதிக்கும் ஒரு உண்மையாகும்;. காரணம் அதில் படைக்கப் பெற்ற எழுத்ததிகாரம்;, சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பனவற்றிக்கான இலக்கணவடிவம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கோ அன்றி ஒரு திருந்திய மொழிக்கோ எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லாது விட்டால் வெறும் வெறுமையிலிருந்து ஒரு மொழியின் இலக்கணத்தைப் படைக்க முடியாது. ஆகவே தமிழ் எழுத்து வரிவடிவம் கி.மு விற்கு முற்பட்ட கி.மு 500 ஆகக் கருதப்பட முடியும்.
• திராவிட மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்களுக்கோ அன்றி சிங்களத்திற்கோ எந்தவொரு தெலுங்கு பிராமியோ அன்றி கன்னட பிராமியோ அல்லது சிங்கள பிராமியோ இதுவரை ஆந்திராவிலோ அல்லது கன்னடத்திலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அதற்கான வரிவடிவம் நேரடியாகத் தமிழில் இருந்தும் அம்மொழிகளின் சில அம்சங்கள் பிரகிருதத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு வரிவடிவங்களுக்கும்; மேலே அட்டவணையிலுள்ள ஏனைய திராவிட மற்றும் ஆரிய மொழிகளெனக் கூறப்படும் மொழிகளுக்கும் வரிவடிவத்தில் வேறுபாடுகள் தெரிந்தாலும் அ எழுத்தையும் ஆ வன்னா எழுத்தையும் தொடர்ந்து ஏனைய எழுத்துக்களையும் நோக்கும் போது சகல மொழிகளின் அ, ஆ எழுத்து இரண்டும் தமிழுக்கேயுரியதான ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.
• ஆரிய மொழிகள் என்று கூறப்படுகின்ற ஒரியா, சிங்களம், குஜராத்தி ஆகிய மொழிகளுக்கும் அ, ஆ அகிய இரண்டு எழுத்துக்கள் ; தமிழுக்கென விசேடமாக அமைந்த ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. ஏனைய உயிர் மெய் எழுத்துக்கும் தமிழ் வரிவடிவத்தினையொற்றியே எழுதுப்பட்டு இருப்பதனைக் காணமுடியும். இந்த மொழிகள் ஆரிய மாயைக்கு உட்பட்டே ஆரிய மொழிகளாக தங்களை ஆக்கிக் கொண்டன. அதனை தங்கள் மேன்மையென்றும் கருதிக் கொண்டனர். அண்மைய ஆராச்சிகள் ஒரிய மொழியும் திராவிடம் என்ற முடிவிற்கு ஒரு சில அறிஞாகள் வந்துள்ளனர்.
• சேர் கியேசன் என்னும் அறிஞர் கூறும் போது தமிழ் மிகவும் அனாதியானது மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழியாகும். தமிழ் ஆரம்ப காலத்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மொழியாகவேயிருந்தது. பின்பு கி.பி 10ம் நூற்றாண்டில் தெலுங்கும், கிபி. 850ஆம் ஆண்டுகளில் கன்னடமும், கி.பி. 1400ல் மலையாளமும் தனித் தனி மொழிகளாயின. ஆதாரம்: Concise History of Ceylon. P40
• கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு மொழியே இருந்துள்ளது. அதுபற்றி இன்னொரிடத்தில் கிரியேசன் குறிப்பிடும்போது இலங்கையில் தமிழோ அன்றி அதனையொட்டிய ஒரு மொழியோ வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தேயிருந்திருக்க வேண்டும். ஆதாரம் Concise History of Ceylon. P42 பௌத்த சமயம் இலங்கையில் பரவியதனைத் தொடர்ந்தும் விஜயனின் வருகையோடும் அதனைத் தொடர்ந்துமே ஆரியச் செல்வாக்கு இலங்கையில் பரவியது.
முடிவுரை
மேலே கூறப்பட்ட தமிழின் வரலாறும் அதன் தொன்மையும் அதன் மொழிச் செழிப்பும் சிந்துவெளியிலிருந்து வளர்ந்த மொழிவரிவடிவ பரிணாம வளர்ச்சியும் ஆரிய ஆக்கிரமிப்பின் போதுகூட தனது தனித்தன்மையுடன் வளர்ந்து அதன் வரிவடிவத்தனை ஏனைய மொழிகளுக்கும் கொடுத்து அந்தந்த மொழிகளும் வளர வழிசமைத்ததென்றே கூறமுடியம்.
உசாத்துணை நூல்கள்:
1 கு. அரசநாதனின் தமிழ்க்கப்பல் நூலில் என்ற நூலின் முகவுரையில் பி.இராமநாதன்,)
2. விக்கிப்பீடியா தேடுதளம் -
3. கு.அரசேந்திரனின் தமிழ்க்கப்பல்.
4. மொழி வரலாறு தெ.பொ.மீ களஞ்சியம் 1
5. Concise History of Ceylon 19616. என் மொழியின் கதை – ச.வீ.துருவசங்கரி canada


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard