New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரத்துவின் ஆபாச வரிகள்: பெண் கவிஞர் வேதனை -பெண் கவிஞர் நிர்மலா சுரேஷ்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வைரத்துவின் ஆபாச வரிகள்: பெண் கவிஞர் வேதனை -பெண் கவிஞர் நிர்மலா சுரேஷ்
Permalink  
 


 

வைரத்துவின் ஆபாச வரிகள்: பெண் கவிஞர் வேதனை

 
Published: Wednesday, January 11, 2006, 5:30 [IST]
பாண்டிச்சேரி: திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் படத்தில் கவிஞர் வைரமுத்து ஆபாசமானவார்த்தைகளுடன் பாடலை எழுதியிருப்பது வேதனையைத் தருவதாக கவிஞர் நிர்மலா சுரேஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராமநாராயணன் தயாரிப்பில், கருணாநிதியின் கதை வசனம், முரளி, பிரபு, நவ்யா நாயர் ஆகியோரது நடிப்பில்உருவாகியுள்ள படம் பாசக்கிளிகள். பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும்ஆபாசமான ஒரு பாடலை எழுதியுள்ளதாக நிர்மலா சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார். திமுகவைச் சேர்ந்தவரான நிர்மலா சுரேஷ், திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், இப்போதெல்லாம் நான் தமிழ்ப் படத்தைத் தணிக்கை செய்யும் குழுவில் இடம்பெறுவதையே தவிர்க்கிறேன்.காரணம் அந்த அளவுக்கு ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகியுள்ள படம் பாசக்கிளிகள். அப்படத்தில் வைரமுத்து மிகவும் ஆபாசமாகஒரு பாடலை எழுதியுள்ளார். இதனால் தான் அந்தப் படத்தின் தணிக்கைக் காட்சிக்கு நான் போகவில்லை. கருணாநிதியின் படத்திலேயே ஆபாசப் பாடல் இடம் பெறும் அளவுக்கு சினிமா தரமிழந்து போயுள்ளது வேதனையைத் தருகிறது. தமிழ் சினிமாக்களில் ஆபாசம் மித மிஞ்சி நிற்கிறது. இதனால் தான் நான் சமீப காலமாக தணிக்கை குழுவில் இடம் பெறுவதைதவிர்த்து வருகிறேன். இப்போதுள்ள தணிக்கை குழு உறுப்பினர்களில் பலருக்கு சினிமாவின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை. எது ஆபாசம், எதுவன்முறை என்பது அவர்களுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் தான் பல ஆபாசக் காட்சிகள் படங்களில் இடம்பெற்று விடக் கூடிய நிலை உள்ளது. சில பெண் கவிஞர்கள் விரைவில் புகழ் பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள். அப்படிப்பட்டகவிஞர்களின் கவிதைத் தலைப்புகள் கூட படு ஆபாசமாக உள்ளது. அதைப் படிக்கவே முடியவில்லை என்றார் நிர்மலா சுரேஷ்.

Read more at: https://tamil.oneindia.com/news/2006/01/11/vairamuthu.html
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

வைரமுத்து எழுதி, தமிழை உலகின் உச்சத்துக்கு கொண்டு சென்ற தமிழ் இலக்கியப் பாடல்...

’குஷி’நானூற்றில் இடம் பெற்ற பாடலில் சில வரிகள்...

’எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

எவ்விடத்தில் கண்முழிச்சோம்
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு

சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு’

தமிழை உலகின் உச்சத்துக்கு கொண்டு சென்ற இந்த பாடலின் பொருளை உங்க வீட்டு பெண்களிடம் விளக்கமா சொல்லித்தான் பாருங்களேன்.... பாரதிராஜா...

சத்தியமா இப்படியெல்லாம் எச்.ராஜா அவர்களால் எழுத முடியாதுதான். ஒத்துக்கறோம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard