New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி
Permalink  
 


ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

ஜூலை 13, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா?

Hebron Castle chuch - front

தனியார் வீடு என்று அனுமதி பெற்று ஹெபரான் சர்ச் கட்டியது: ஹெபரான் சர்ச் என்று இரு கிருத்துவ சர்ச்சை கே. பி. எடிசன் என்பவர் நடத்தி வருகிறார் [Dr. K.B. Edison,. Hebron Castle Church,. Kings Highway, No: 4, 7th Cross, Lake Area,.Nungambakkam,. Chennai – 600034, India. Phone: 044-28170007]. முதலில் சிறியதாக ஆரம்பித்தது, நாளடைவில் பெரிய கட்டடமாக மாறியது. அதுமட்டுமல்லாது, தனியார் வீடு என்று தான் சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால் பணம் வரவர, அடுக்கு மடி கட்ட ஆரம்பித்தார். பிறகு, வெளீப்படையாக சர்ச், ஊழியம், என்று கூட்டம் கூடியதால், அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. மூன்று மாடி கட்டடம் என்று ஆரம்பித்து, ஏழு மாடிகள் கட்ட ஆரம்பித்தார். மேலும், கல்யாண மண்டபம் எனவும் வாடகைக்கு விட ஆரம்பிக்கப் பட்டது. இதனால், வருபவர்களின் எண்ணிக்கை பெருக, கார்கள், வேன்கள் என்று வந்த வாகனங்கள் சுற்றியுள்ள தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால், அப்பகுதி மக்களுக்கு பெருத்த தொந்தரவு ஏற்பட்டது. இதனால், லேக் ஏரியா குடியிருப்பு சங்கம் என்ற அமைப்பு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வீடு என்று அனுமதி வாங்கிக் கொண்டு, பிறகு, சர்ச், கல்யாண மண்டபம் என்று மதம் மற்றும் வணிக ரீதியில் உபயோகப்படுத்தப்படுவதால், அங்கு உடியிருக்கும் அக்களுக்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன, அதனால், விதிமீறல் முறையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செப்டம்பர் 2016ல் முறையிட்டனர்[1]. முன்னர் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எடிசனும் முறையிட்டார்[2].

Hebron Castle chuch - owners

வீடு சர்ச் ஆகிகல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர், தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Hebron Castle chuch - CMDA Notice

சி.எம்.டி. மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் நிராகரித்து தீர்ப்புவழங்கியது: இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது[3]: “கட்டட உரிமையாளர்தரப்பு விளக்கத்தை கேட்கஉரிய கால அவகாசம் வழங்க வேண்டும்என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படிஅவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டதுஅதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதுஉறுதி செய்யப்பட்டு, ‘சீல்‘ வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவேவழங்கப்பட்டதுஆனால்உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்றுநடவடிக்கையை முடக்கினார்இந்நிலையில்கட்டட உரிமையாளர்குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின்கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கசி.எம்.டி.., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது”, இவ்வாறு அவர் கூறினார்[4]. பிப்ரவரி 2017லேயே, சென்னை உயர்நீதி மன்றம் இந்த ஆணையை, “மூன்று மாடிகளுக்கு பதிலாக, ஆறு மாடிகள் மனுதாரர் கட்டியுள்ளார். அதனால், அவரது சீரமைப்பு மனு சி.எம்.டி.ஏ.வால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் அவர் விதிமீறலை சரிசெய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால், சி.எம்.டி.ஏ சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று, வெளியிட்டது[5].

Church sealed, Nungambakkam - 12-07-2017

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி
Permalink  
 


நடவடிக்கை எடுக்க வந்த போது  பெண்களை வைத்து போராட்டம்நடத்தியது: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சி.எம்.டி.ஏ ஆணைகளையும் மீறி, சீல் வைக்க வந்த அதிகாரிகளின் மீது, பெண்களை வைத்து தாக்குதல் நடத்தும் விதத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. 10-07-2017 அன்று சென்றபோது, வாக்குவாதம் நடந்தது, அதிகாரிகளையும் அவர்கள் மிரட்டினர். இதனால், 12-07-2017 அன்று போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். அதனால், அங்கிருந்த கும்பல், சீல் மற்றும் நோட்டீஸை கிழித்து எரிந்தனர், எரிக்கவும் செய்தனர். மாநகராட்சி அதிகாரிகளைத் தாக்கவும் செய்தனர். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மறுபடியும் அவர்கள் போலீஸாரிடம் சென்று முறையிட்டனர். அதனால், போலீஸார் அங்கு வந்தனர். அக்கூட்டமும் கலைந்து சென்றது. பிறகு, மாநகர அதிகாரிகள் தங்களது ஊழியர்களுடன், விதிமுறைகளுக்கு மீறி கட்டிய பகுதியை இடிக்க ஆரம்பித்தனர். ஆக, சிறிய விசயம் பெரிதாக்க்கப் பட்டது போல காணப்படுகிறது. ஆனால், எடிசன் இங்கு மைனாரிடி கார்டை உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.

Church sealed, unauthorised building - Nungambakkam - 12-07-2017

நம்பிக்கையாளர்களுக்கு சமவுரிமை உள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுகின்றது: எடிசன் ஆரம்பத்திலிருந்தே, தாங்கள் கிருத்துவர்கள், மைனாரிட்டி, அதனால், தங்கள் மீது ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் செயல்பட்டு வந்தார். அதனால் தான், வீடு சர்ச்சாகி, ஜெபகூடம், கல்யாண மண்டபம் ஆகியது. கூட அயல்நாட்டு நிதியுதவியு,ம் கிடைக்க, புத்தகங்கள், சிடி வெளியீடு, ஜெப கூட்டங்கள், வீடியோ நிகழ்ச்சிகள் என்று அதிகமாகின. இணைதளங்களில் அதிரடியாக தன்னைப் பற்றி விளம்பரம் செய்து கொள்ள ஆரம்பித்தார்[6]. சர்ச் உண்டாக்குதல் [Church planting], அறுவடை செய்தல் [harvest], 2017ல் பாவம் செய்த விக்கிர ஆராதனையாளர்களுக்கு ஒளி காட்டுதல் [“The Gentiles shall come to your light, And kings to the brightness of your rising] என்றெல்லாம், வெளிப்படையாக இருக்கின்றன. ஆக, மறுபடியும், செக்யூலரிஸ நாட்டில், இவ்வாறெல்லாம், கிருத்துவர்கள் செய்ய முடியுமா என்ற கேள்விதான் எழுகின்றது. உரிமைகள் என்றால், எல்லோருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அப்பொழுது எடிசன் போன்றோர், இவ்வாறு வரம்பு மீறி செய்ய முடியாது. நம்பிக்கையாளர்களுக்கு சமவுரிமை உள்ளதா இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், செக்யூலரிஸ நாட்டில் அத்தகைய உரிமைகள் சமமாகத்தான், இருக்க வேண்டும். ஆனால், சமமாக இல்லாமல், நீதியின் தராசின் தட்டு, ஒன்று மட்டும் உயர்ந்தால், அடுத்த தட்டு தாழ்கிறது, சமநிலை பாதிக்கின்றது என்றாகிறது.

©  வேதபிரகாஷ்

13-07-2017
Hebron Castle chuch - church planting-conversion

[1] It is the case of the petitioner that the fourth respondent had obtained permission to put up a residential house but, however, is using the building for commercial activities by running a Church cum Kalyana Mandapam. Since the same is causing lot of inconvenience to the members of the petitioner Association and in view of the violation of the planning permission granted, the petitioner is before this Court to execute the order passed by the 1st respondent.

Madras High Court, Lake Area Residents Assocation vs The State Of Tamil Nadu on 28 September, 2016; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 28.09.2016

https://indiankanoon.org/doc/144176701/

[2]  Madras High Court, K.B.Edison vs The State Of Tamil Nadu on 6 June, 2016

 IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED:  06.06.2016, CORAM, THE HONOURABLE MR.JUSTICE HALUVADI G.RAMESH; AND THE HONOURABLE MR.JUSTICE M.V.MURALIDARAN; W.P.No.14921 of 2015.https://indiankanoon.org/doc/188099465/

[3] தினமலர், தேவாலய கட்டடத்துக்கு ‘சீல்‘ வைக்க உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.10, 2016. 22.54.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582840&Print=1

[5] Para. 7. Coming to the case on hand, it transpires that instead of three floors, the petitioner has put up six floors, for which he has sought for regularization and the same was rejected. Therefore, we do not find any reason to interfere with the impugned order rejecting the review petition filed by the petitioner. However, considering the facts and circumstances of the present case, we grant two months time to the petitioner to bring the construction in conformity with the approved plan. If the petitioner fails to comply with the said direction within the stipulated time, the respondent/authorities are at liberty to proceed in accordance with law.

https://indiankanoon.org/doc/68825862/

[6]  http://www.hebroncastlechurch.org/ ; http://www.hebroncastlechurch.org/contact.php

சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகரகுருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும் சி.எஸ்.ஐ சர்ச்சுகள்!

ஜூன் 27, 2017

சர்ச்சில் காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சேகரகுருக்கள் இடையே சண்டை – அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும் சி.எஸ்.சர்ச்சுகள்!

CSI Church fight for money share - 26-06-2017.Kumari online-1

அடிக்கடி வழக்குகளில் சிக்கி வரும் சி.எஸ். சர்ச்சுகள்: சி.எஸ்.ஐ [Church of South India] அடிக்கடி வழக்குகளில் சிக்கி வருகின்றது. சென்ற பிப்ரவரி-மார்ச் 2017ல் மோசடி வழக்கில் பன்னிரென்டு பேர் மேல் வழக்குத் தொடரப்பட்டது. திருப்பூர் அவினாசி ரோட்டில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயம் [ St Paul’s Church] அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆயராக பாதிரியார் விஜயன் (வயது 58) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்த திலீப்குமார், திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்[1]. அதில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.15 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்றும் மேலும் தான் நன்கொடையாக வழங்கிய ரூ.10 ஆயிரத்தை தேவாலய கணக்கில் வரவு வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்[2]. மேலும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்த கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர், திருப்பூர் ஆயர் விஜயன் உள்பட 12 பேர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது[3].

CSI Church fight for money share - 26-06-2017.Kumari online-2

பன்னிரென்டு பேர் மீது வழக்குத் தொடரப் பட்டது[மார்ச்.2017]: வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்[4]. அதன்படி –

  1. கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர்,
  2. செயலாளர் பிரின்ஸ் கால்வின்,
  3. பொருளாளர் சாமுவேல் டேவிட்
  4. மங்கல் தாஸ்,
  5. திருப்பூர் பகுதி தலைவர் பாதிரியார் வில்சன் குமார்,
  6. திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய ஆயர் விஜயன்,
  7. செயலாளர் ஜான் சந்திர ராஜ்,
  8. பொருளாளர் தாய் மணி ஜோசப்,
  9. சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய முன்னாள் ஆயர் வில்சன் பிரேம்குமார்,
  10. முன்னாள் செயலாளர் மற்றும் பொருளாளர் பிராங்கின் பரிமளராஜ்,
  11. ஆலோசகர் ஜெய ரூபன் ஜான்சன், அவரது மனைவி பெர்சியா லிடியா ,
  12. கமிட்டி உறுப்பினர் வில்சன் ஆகிய 12 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்குள், பாளையங்கோட்டை சர்ச்சுகளில் காணிக்கைப் பணம் வசூலிப்பு மற்றும் பிரிப்பு போன்றவற்றில், இரு சர்ச்-பிரிவினர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

CSI Church A. Jebaratnam- 26-06-2017

சேகரகுரு இடம் மாற்றமும்சண்டையும்: நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ ஆலயங்களில் இருதரப்பு பாதிரியார்களிடையே நடந்துவரும் மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருநெல்வேலி மாவட்ட சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ அமைப்பின் லே செசயலர் [Parish priest] பதவிக்கு நடந்த தேர்தலில் வேதநாயகம் அணியினர் வெற்றிபெற்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் பாதிரியார்கள் வெளியிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். ஆனால் அங்கு ஏற்கெனவே பணியாற்றிவரும் பாதிரியார்களுக்கும் புதிதாக மாற்றப்பட்ட பாதிரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு அடிதடி மோதல்கள் நடந்துவருகின்றன.  பாளையங்கோட்டை மகாராஜநகர் தூய திரித்துவ ஆலயத்தில் காந்திய நல்லபாண்டி [Kanthaiah Nallapandi] என்பவர் சேகரகுருவாக [Parish priest] இருந்தார்[5]. இவர் ராயகிரி சர்ச்சிற்கு மாற்றப்பட்டு, ஜெபரத்தினம் என்பவர் புதிய சேகரகுருவாக நியமிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை [25-06-2017] அன்று இவர் இருந்தார்[6].

 CSI Church Jesu Nesa Pandian - 26-06-2017

ஞாயிற்றுக்கிழமை [25-06-2017] அன்று ஜெப ஆராதனையில்சண்டை ஆரம்பம்; மகராஜநகரில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் புதிய பாதிரியார் ஜெபரத்தினம் [Jebaratnam] வழிபாடு நடத்தினார். அங்கு பொதுமக்கள் வழங்கிய காணிக்கை பணத்தை முந்தைய பாதிரியார் நல்லபாண்டிய தரப்பினர் தராமல் பறித்துச்சென்றனர்[7]. இதனால் இருதரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அங்கு போலீசார் வந்த இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல ரஹ்மத்நகரில் உள்ள நல்மேய்ப்பர் ஆலயத்தில் புதிய பாதிரியார் ஆபிரகாம் செல்வராஜ் [Abraham Selvaraj] பொறுப்பேற்க சென்றார். ஆனால் முந்தைய பாதிரியார் இயேசுநேசப்பாண்டி [Yesu Nesapandi], புதிய பாதிரியாரை உள்ளே விடாமல் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் அவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்தும் காயமுற்ற பாதிரியார் ஆபிரகாம் செல்வராஜ் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[8]. பொறுப்புள்ளவர்கள், ஆண்டவரின் பிரதிநிதிகள், கர்த்தரிடம் பக்தர்களின் குறைகளை எடுத்துச் செல்வர்கள் இவ்வாறு செய்தால், விசுவாசிகள் எங்கே செல்ல முடியும்.

CSI Church S. Abraham Selvaraj - 26-06-2017

காணிக்கை வசூலைப் பிரிப்பதில் சண்டை: நெல்லையில் சர்ச்சில் காணிக்கை பிரிப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது[9]. திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள தென்னிந்திய திருச்சபையின்  மாறுதலாகிச் சென்றார். புதிய சேகரகுரு நேற்று ஆலய வழிபாட்டை நடத்தினார். அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்தவர்களிடம் இருந்து பெறப்படும் காணிக்கையை பிரித்துக்கொள்வதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் கை கலப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் சென்று அமைதி ஏற்படுத்தினர்.  இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. பொதுவாக பணம் எங்கு வருகிறதோ, அங்கியிருப்பவர்கள் கடைசி நிமிடம் வரை உட்கார்ந்து கொண்டு வசூல் செய்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். இப்ப்ழக்கம் அரசு-தனியார் அலுவலகங்களில் கூட இருக்கிறது. ஆனால், கடவுளின் பெயரால், ஊழியம், சேவை செய்கிறோம் என்ற நிலையில் இத்தகைய சேகரகுரு, குரு, பாஸ்டர், பிஷப் என்றெல்லாம் இருப்பவர்கள், சர்ச்சிற்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது, அவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை…..என்று எதுவுமே இல்லை என்றாகிறது.

CSI Church V. Kanthhiah Nallapandi - 26-06-2017

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் பிரதமப்பேராயராக ஆவது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம்செய்வது: சி.எஸ்.ஐ சர்ச்சுகள் தொடர்ந்து இப்படி வழக்குகளில் சிக்குவது, குற்றங்களை செய்யும், செய்து தப்பித்துக் கொள்ளும், நீதி மன்றத்தில் இழுத்தடிக்கும் போக்கைக் காட்டுகிறது. இதுகுறித்து தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறியதாவது: “சினாடு  நிர்வாகம் மிகப்பரந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில்பொறுப்பில் உள்ளவர்கள் குட்டிஅரசு நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பிற்கு இந்தியாவில்    பேரழிவுகள், பேரிடர்கள்நடந்தால் வெளிநாட்டு உதவிகள் கணக்கில்லாமல் வருகிறது இந்த

உதவிகளை வைத்துக் கொண்டு பதவியில்இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே

இல்லை. இவர்களை எதிர்க்கும், தவறுகளை சுட்டிக்காட்டும்பேராயர்களை சஸ்பென்ட் செய்வது பதவியில் இருப்பவர்கள்செய்துவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் சி.எஸ்.. சினாடு அமைப்பிற்கு சென்னை

ராயப்பேட்டையில் தான்தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு பலகோடிமதிப்பிலான சொத்துக்கள் உள்ளதுஆனால்

தமிழர்கள்எவரும் சினாடு அமைப்பின் உயர் பதவிக்கு வருவது என்றால்மிகவும் கடினம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச்சேர்ந்தவர்களே பிரதமப் பேராயராக வந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தைதலைமையிடமாகக் கொண்டு வெளிநாட்டு உதவிகளையும், சி. எஸ். . கிறிஸ்தவர்களின்

காணிக்கை பணத்தையும்கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுவருகின்றனர்எனவே தமிழக முதல்வர்

 தலையிட்டுதமிழகத்தை மதத்தின் பெயரால் சுரண்டி வருபவர்களையும், பெண்ணின் கற்பைசூறையாடி வருபவருமான பிரதமப் பேராயர் மற்றும் அவரதுகும்பல்களையும் அடையாளம்கண்டு அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், அவருக்கு உதவிகள் செய்துவரும் தமிழக மாபியாகும்பல்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்”, இவ்வாறு அவர்கூறினார்[11].

© வேதபிரகாஷ்

27-06-2017

CSI Church fight for money share - Dinamalar- 26-06-2017

[1] மாலைமலர், ரூ.15 கோடி மோசடிகோவை பேராயர் மீதுவழக்குபதிவு, பதிவு: பிப்ரவரி 25, 2017 10:33.

[2]http://www.maalaimalar.com/News/State/2017/02/25103315/1070325/Rs-15-crore-fraud-in-Coimbatore-on-the-case-of-Archbishop.vpf

[3] Times of india, 12, including CSI Bishop, booked for misappropriation of church funds, TNN | Feb 26, 2017, 11.38 AM IST.

[4] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/12-including-csi-bishop-booked-for-misappropriation-of-church-funds/articleshow/57351345.cms

[5] குமரி ஆன்லைன், பாளை மகாராஜநகர் இறிஸ்தவ ஆலயத்தில்கோஷ்டி மோதல்இரு தரப்பினர் மீது வழக்கு, ஜூன் ஞாயிறு.25, 2017. 6.38.03 PM (IST).

[6]http://www.kumarionline.com/view/31_140890/20170625183803.html

[7] தினமலர், சி.எஸ்..,சர்ச்களில் மோதல்:பாதிரியார்கள் மீதுவழக்கு, பதிவு செய்த நாள். ஜூன்.27, 2017. 00.30

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1799213

[9] தினமலர், சர்ச் காணிக்கை பிரிப்பதில் மோதல்:இருதரப்பினர்மீதும் வழக்கு, பதிவு செய்த நாள். ஜூன்.26, 2017. 00.24.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1798575

[11] https://christianityindia.wordpress.com/2016/05/05/csi-bishop-dyvasivadam-involved-in-sexual-harassment-case/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

ஜூலை 14, 2017

ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன?

Hebron church dedmilition stayed by SC - CHN_2017-07-14_maip1_23

வீடு சர்ச் ஆகிகல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், கே.பி. எடிசன், தேவாலயம் – ஹெப்ரான் காஸ்டில் சர்ச் – மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டினார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி வீடு கட்டுவதற்காகத் தான் பெற்றார். ஆனால், வ்வறு செய்யாதலால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.  இந்நிலையில் தான், சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. அதற்குள் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைந்தேறின.

Hebron church dedmilition stayed by SC - TOI, chennai

உச்சநீதி மன்றத்தில் முறையீடு: சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. இதனால், கே.பி. எடிசன் அதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் அரியமா சுந்தரம் மற்றும் வி. பாலாஜி மூலம் முறையீடு செய்தார். 13-07-2017 வியாழக்கிழமை அன்று உச்சநீதி மன்றம் அந்த ஆணையை நிறுத்தியது[1].  2006லிருந்தே சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடித்தது தெரிகிறது. இது வெறும் சென்னை பெருநகர் அபிவிருத்தி அணையத்தின் வரைமுறைகளை மீறியதற்கான வழக்கு என்பது போலில்லாமல், ஏதோ சர்ச் இடிப்பு என்ற தோரணையில் மாற்றியிருப்பதும் தெரிகிறது, ஏனெனில், டெக்கான் ஹெரால்டு, அவ்வாறுதான் தலைப்பிட்டு, “SC stays demolition of N’bakkam Hebron church” செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் தேவாலயம் என்று குறிப்பிட்டது, புரியாமல் இருக்கலாம், ஆனால், இதில் சர்ச், அதிலு ஹெப்ரான் சர்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளராகவும் பாஸ்டர் கே.பி. எடிசன் பொறுப்பாளராக இருக்கிறார். அரசியல் பின்னணியும் இருப்பதால், போராட்டத்தையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

hebron - protest - CHN_2017-07-13_maip5_12

சர்ச் முன்பு போராட்டம்: 12-07-2017 அன்று அந்த சர்ச் முன்பாக உறுப்பினர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். சத்தியம் டிவி, கிருத்துவ செனல் ஆதலால், பிரச்சார ரீதியில் செய்தி வெளியிட்டது. கே.பி. எடிசன் ஒன்றுமே தெரியாதது போல, பத்தாம் தேதி தான் தனக்கு ஆணை கிடைத்தது, அதைத்தவிர ஒன்றும் தெரியாது என்று பேசியது வேடிக்கையாக இருந்தது. மேலும் நான்கைந்து பெண்களிடம், ஒருவர் வீடுகள் இருக்கும் இடத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்பதைப் போலவும், அப்பெண்கள், இல்லை என்பது போலவும் காட்டியது. வேடிக்கை என்னவென்றால் அப்பெண்கள் எல்லோரும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தது தான். சர்ச்சிற்குள் ஆர்பாட்டம் செய்த பெண்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டிருந்த போது, இவர்கள் ஏன் இந்துக்கள் போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இருப்பினும் எவ்வாறு செக்யூலரிஸ ஆட்டில் தனிப்பட்ட பிரச்சினையை, பொதுப்பிரச்சினையாக ஆக்கலாம், உள்மத பிரச்சினையை, மதங்களூக்கு இடையேயுள்ள பிரச்சினையாக்கலாம் என்றெல்லாம் எப்படி திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளல்லாம். அந்த பேட்டி எடுத்தவர், வீடுகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் இருக்கலாம், சர்ச் இருக்கக் கூடாது என்றும், ஏன் விபச்சாரமே நடக்கிறதே, அதெல்லாம் தொந்தரவாக இல்லை, சர்ச் இருப்பது தான் தொல்லையாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்[2].

Hebron Castle chruch - protest-demo-politicizing issue

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்: போதாகுறைக்கு, இன்னொரு வீடியோவில், வள்ளுவர் கோட்டத்தில் சீல் வைத்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியது, அரசியல்கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசியது முதலியவை காட்டப்பட்டது. ஜவாஹிருல்லா ஆதரித்து பேசுகிறார். இனிகோ இருதயராஜ், வன்னியரசு, விடுதலை சிறுத்தை கட்சி என்றெல்லாம் பேசுவதை காட்டியது. இதிலும், தமாஷா என்னவென்றால், ஜவாஹிருல்லா ஏற்கனவே கைது செய்யப்படாமல், பிணையில் இருக்கும் குற்றவாளி ஆவார். பிறகு, அவர் எப்படி எடிசனை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அதாவது, சட்டமீறலைப் பற்றி கவலைப் படாமல், இதனை அரசியலாக்கி, பிரச்சினையை பெரிது படுத்த முயன்றது நன்றாகவே தெரிகிறது. மேலும், மதரீதியில் மற்றும் சிறுபான்மை கோணத்திலும் திசைத் திருப்ப முயற்சிகள் நடக்கின்றன.  இதற்கான பின்னணியும் கடந்த கால அரசியல் திட்டங்களில் வெளிப்படுகிறது.

Hebron Castle chuch - protest

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு [அக்டோபர் 2016]: இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் சட்ட ஆணையம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பாஜக அரசின் இத்தகைய முயற்சிக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், எஸ்.டி.பி.ஐ உட்பட பலவேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவும் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் –

  1. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,
  2. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,
  3. திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,
  4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
  6. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
  7. தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
  8. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளர் பாஸ்டர் கே.பி. எடிசன்,
  9. கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ்,
  10. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்,
  11. இந்திய சுவிஷேச திருச்சபை தலைமை பேராயர் எஸ்றா. சற்குணம்

ஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருமாறும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணி திரளவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Hebron Castle chruch - protest-demo

கேபிஎடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[3]கலைஞர் டிவிநடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது.  அதில், கேபிஎடிசன் பேசியது, “மதம் மாற்றச்சட்டம் இருந்தபோதுபல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[4]அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனைசெய்தோம்மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறதுநான்கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோதுநெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போதுநிருபர் குறிப்பிட்டவிஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதிவேண்டும் என்றமுறை இருக்கிறதுஇது ஏன் என்று எங்களுக்குத்தெரியவில்லைபுரியவில்லைஆனால்சமீபத்தில் அவ்வாறுதேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார்அதுமட்டுமல்லாதுஅரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்துஅதில்சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார்இந்துக்கள் காஷ்மீரத்தில்மைனாரிட்டியாக இருக்கிறார்கள்பஞ்சாபில் மைனாரிட்டியாகஇருக்கிறார்கள்அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப்பட்டால்என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்[5].

©  வேதபிரகாஷ்

14-07-2017

Hebron Castle chruch - Iniko - Jawahirullah--politicizing issue

[1]  Deccan Herald, SC stays demolition of N’bakkam Hebron church, J. Venkatesan, New Delhi, July 13, 2017.

[2]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater

[3] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/

[4] https://christianityindia.wordpress.com/2010/12/29/revocation-of-anti-conversion-act-appeasing-christians/

[5] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard