New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே


Guru

Status: Offline
Posts: 24601
Date:
புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே
Permalink  
 


குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

94bb8-buddh2bbrass.jpg?w=600

 

குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

 

Research article written by London Swaminathan

 

Date: 24 May 2017

 

Time uploaded in London: 21-15

 

Post No. 3938

 

Pictures are taken from various sources such as Face book, google and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

வள்ளுவர் சொன்னார்,

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்றமாகும் இறைக்கு (திருக்குறள் 436)

முதலில் தன் குற்றம் என்ன என்பதை உணர்ந்து, பின்னர் பிறர் குற்றத்தை ஆராய்ந்து காணக்கூடியவனாக ஒருவன் இருந்தால் அவருக்கு என்ன குற்றம் வரும்?

புத்தர் சொன்னார்

மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (தம்மபதம் 50)

 

xxx

 

வாசம் இல்லா மலர்

வள்ளுவர் சொன்னார்,

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் (திருக்குறள் 650)

 

தான் கற்ற கல்வியின் நறுமணத்தைப் பிறர் அறியாவண்ணம்

எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்,  மலர்ந்து இருந்தும் வாசனை இல்லாத பூங்கொத்து போன்றவர்களே

புத்தர் சொன்னார்

ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)

 

xxx

c1339-valluvar2biyengar.jpg?w=600

வெறுப்பு (இகல்)

வள்ளுவர் சொன்னார்,

 

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள் 851)

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு ((குறள் 859)

 

பொருள்-

வெறுப்பு என்பது, எல்லா உயிர்களையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க அனுமதிக்காது. அவைகளை வேறுபடுத்தும் கொடிய நோய் ஆகும்.

 

ஒருவனுக்கு வெறுப்பு இல்லாத போது செல்வம் இருக்கும்; அந்த செல்வம் போவதற்கு அவன் வெறுப்பை மேற்கொள்வான் (விநாச காலே விபரீத புத்தி)

புத்தர் சொன்னார்

 

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)

 

xxx

உண்ணா நோன்பும் பொறுமையும்

வள்ளுவர் சொன்னார்,

 

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

இன்னச்சொல் நோற்பாரின் பின் (திருக்குறள் 160)

 

உணவு உண்ணாமலேயே நோன்பு இருப்பவர்கள் பெரியவர்களே. ஆனால் ஒருவன் சொல்லும் கடும் சொல்லையும் பொறுத்துக் கொள்பவன் அந்த நோன்புடைய பெரியோருக்கும் மேலானவன்

புத்தர் சொன்னார்,

 

தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் தம்மபதம்-70

XXX

நாத்திகவாதிகள் பேய்கள்!

 

வள்ளுவர் சொன்னார்,

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் உண்டு என்று ஒப்புக்கொள்வதை இல்லை என்று மறுத்துக்கூறும் அறிவற்றவர்கள் மனித வடிவில் வந்த பேய் என்று இகழப்படத் தக்கவர்கள்

புத்தர் சொன்னார்

உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

 

xxx

ஒன்றே செய்கநன்றே செய்கஇன்றே செய்க

வள்ளுவர் சொன்னார்,

 

அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36)

 

நாளை செய்வோம், நாளை செய்வோம் என்று ஒத்திப்போடாது, அறஞ்செய்தலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் உயிருக்குத் துணையாக வரும்

 

புத்தர் சொன்னார்

காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

 

வள்ளுவர் சொன்னார்,

 

 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போஅலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்

புத்தர் சொன்னார்

நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-5 (3928) 21 May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

த்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே! (Post No.3896)

a221d-valluvar2ba252c2baa252c2bi2bii.jpg


Written by London Swaminathan

 

Date: 10 May 2017

 

Time uploaded in London: 21-34

 

Post No. 3896

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

புத்தர் பெருமான் கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இன்று அவருடைய 2561-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. வள்ளுவர் கி.மு. 31 என்று பலர் பகர்ந்தாலும் மொழியியல் ரீதியில் அவரை கி.பி 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில்தான் வைக்க முடியும். ஏனெனில் வள்ளுவனின் குறளில் சம்ஸ்கிருதச் சொல் இல்லாத அதிகாரமே இல்லை. இருவருக்கும் இடையே ஆயிரம் ஆண்டு இடைவெளி. அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்தால் என்ன? அவர்களுடைய அரிய பெரிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்பவை.

 

 

வள்ளுவன் மொழிந்தது 1330 அருங் குறட் பாக்களில் அடக்கம். அவர் யாத்த நூல் திருக்குறள்.

87b17-valluvar.jpg?w=600

புத்தர் சொன்னது தம்மபதம் (அற வழி=தர்ம பாதை) என்னும் நூலில் 423 பாக்களில் அடக்கம்.

 

இருவர் கருத்துக்களும் பல இடங்களில் ஒரே மாதிரி இருப்பது படித்து இன்புறத் தக்கது. இதோ சில ஒப்பீடுகள்:-

 

உரனெனும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து -குறள் 24

அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, சிறந்தது எனப்படும் மேல் உலகத்துக்கு விதை ஆவான்.

 

இதே கருத்து திருமந்திரம், தேவாரம், பகவத் கீதை முதலிய எல்லா நூல்களிலும் வருகிறது. புத்தரும் தம்மபதத்தில் 321-324ல் சொல்லுவது இதேதான்:

 

பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.

பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும்  பயிற்சி பெற்றவுடனேயே  நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.

நிர்வாணம் (மோக்ஷம்) என்பது புத்திசாலியாக, தைரியமாக

பயிற்சி செய்பவனுக்கே கிட்டும்.

(பயிற்சி- ஆன்மீக சாதனை)

xxxx

727c1-buddha2bwith2bbikshus.jpg?w=600

 

இன்னொரு குறளையும் காண்போம்.

 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழல் (குறள் 428)

 

பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும்.

 

இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:

பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

187c3-washing2bbuddha.jpg?w=600

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

 

Written by London Swaminathan

 

Date: 21 May 2017

 

Time uploaded in London: 7-42 am

 

Post No. 3928

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

தீயவை

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.

தம்மபதம் 1,2

 

xxx

 

c8870-dollvalluvar2bvasuki.jpg?w=600

வள்ளுவர் சொன்னார்,

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (குறள்-314)

 

ஒருவர் யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர் வெட்கப்படும்படி நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும்; பின்னர் அவர் செய்த தீமையையும் நாம் செய்த நல்லதையும் மறந்து விட வேண்டும்.

புத்தர் சொன்னார்,

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை தம்மபதம் (5)

xxx

 

மலையின் மீது இருந்து காணும் காட்சி

வள்ளுவர் சொன்னார்,

 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (திருக்குறள் 758)

 

தன் கையில் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு கவலையில்லாமல், காரியத்தினைத் தொடங்குவது, மலையின் மீது நின்று கொண்டு கீழே நடக்கும் யானைகளின் சண்டையைக் காண்பது போன்றது.

புத்தர் சொன்னார்

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.

தம்மபதம் 28

xxx

 ed80f-valluvar2bon2bflesh.jpg?w=600

இந்திரனே சான்று

வள்ளுவர் சொன்னார்,

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் 25)

 

ஐம்புல ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதற்கு இந்திரனே சாட்சி.

((இந்தக் குறளுக்குப் பொருள் தருவதில் பரிமேல் அழகர்கூட தவறு செய்துவிட்டதை எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். அவர், இது இந்திரனைக் கிண்டல் செய்வது என்று நினைத்து விட்டார். உண்மையில் இந்திரன் புலனடக்கம் மிக்கவன். அகல்யை சம்பவம் உதாரணம் ஆகாது))

புத்தர் சொன்னார்

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.

தம்மபதம் 30

அதர்வண வேதத்திலும் (11-5-19) இக் கருத்து உளது.

 

xxx

 

அருள் புரிக

வள்ளுவர் சொன்னார்,

 

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து (திருக்குறள் 250)

 

ஒருவன் தான் பலசாலியாக இருக்கும்போது மற்றவனைத் துன்புறுத்துவது சரியல்ல. அவன், தன்னைவிட பலசாலியான ஒருவன் தன்னை இப்படித் துன்புறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் ( திருக்குறள் 318)

 

ஒருவன் தனக்குத் துன்பம் இழைக்கும்போது அதனால் ஏற்படும் கஷ்டத்தை அறிந்த மனிதன், பிற உயிர்களுக்கு துன்பம் இழைப்பது யாது கருதியோ?

புத்தர் சொன்னார்

 

பிறருடைய குற்றத்தைப் பற்றியோ, அவர்கள் என்ன செய்தார்கள் , என்ன செய்யவில்லை என்றோ எண்ணாதீர்கள். உங்களுடைய தவறுகளையும் நீங்கள் எதைச் செய்தீர்கள், எதைச் செய்யத் தவறினீர்கள் என்று சிந்தியுங்கள்

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் தம்மபதம்-119

 

-Subaham-

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தராசு உவமை: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (Post No.3901)

8dbcf-tharasu2bbalance.jpg?w=600

Written by London Swaminathan

 

Date: 12 May 2017

 

Time uploaded in London: 17-07

 

Post No. 3901

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

முதலிரண்டு பகுதிகள் நேற்றும் அதற்கு முந்தைய தினமும் வெளியாகின.

29af2-valluvar-4.jpg?w=600

 

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 118)

பொருள்:-

 

முதலில் சமமாக நின்று, பின்னர் பொருளின் எடைக்குத் தக்கபடி சீர்தூக்கும் தராசு போல ஒரு பக்கம் சாயாமல் இருப்பதே சன்றோர்க்கு அணியாகும்.

 

கண்ணனும் கீதையில் (5-18) மொழிவது இஃதே.

 

ஆத்ம ஞானம் பெற்றவர்கள் கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்தும் பசுவினிடத்தும் யானையினிடத்தும் நாயினிடத்தும்  நாயை உண்ணும் புலையனிடத்தும் சமதர்சனம் உடையவர்களாவர்.

 

 

புத்தனும் தம்மபதத்தில்(269) கூறுவது இதைத்தான்:-

“ஒரு மனிதன் அறியாமையாலோ, மூடத்தனத்தாலோ பேசாமல் இருந்தால் அவன சிந்தனைச் சிற்பி அல்ல. ஒரு முனிவர் சிந்தனையாளர் ஆவார். ஒரு தராசுத் தட்டில் நல்லதையும் கெட்டதையும் தனித்தனியே வைத்து சீர்தூக்கிப் பார்ப்பவன் முனிவன், சிந்தனையாளன் ஆவான்.

 3cde7-valluvar2bred.jpg?w=600

மனுவள்ளுவன் புத்தன்!

 

அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் சொகுத்துண்ணாமை நன்று (259)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (260)

 

ஒரு உயிய்ரைக்கொல்லாமல் இருப்பது டீதீயில் நெய் சோறு இட்டு ஆஇயிரம் வேள்விகளைச் செய்வதைவிடப் புண்ணியமாகும்

 

 

ஒர்ரு உயிரைக் கொல்லாமலும் மாமிசத்தைச் சாப்பிடாமலும் இருப்பவனை உலகில் வாழும் எல்லா உயிய்ரினங்களும் இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு வணங்கும்.

 

 

36,500 அஸ்வமேத யாகம் = சைவ உணவு

 

தினமும் ஒரு அஸ்வமேதயாகம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு யாகம் செய்து கிடைக்கும் புண்ணியமும் மாமிசம் சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் புண்ணியமும் சமம் ஆகும்.

a6685-buddha2bkolkata252c2bht1.jpg?w=600

புத்தர் உரைப்பதும் அஃதே

தம்மபதம் 266, 270):– ஒருவர் மஞ்சள் உடை தரித்து யாசகம் செய்து வாழ்வதால் புத்த பிட்சு ஆகிவிடமாட்டார். நேர்மையான பாதையை ஏற்று மாமிச உண்வைத் தவிர்ப்ப்வரே புத்த பிட்சு எனப்படுவார்.

 

ஒருவர் நிறைய பேரைக் கொன்ற வீரன் என்பதால் பெரியவன் அல்ல; யார் ஒருவன் ஒரு உயிருக்கும் தீங்கு செய்ய்தவனோ அவனே பெரியவன்; மா மனிதன்.

மொட்டையும் குடுமியும்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

 

faedf-tonsure-swastik_on_head.jpg?w=600

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்கரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)
வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

 b8e99-sadhus2bvaranasi.jpg?w=600

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

சங்கரரும் சாடுகிறார்

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

 

1d2a1-tuft.jpg?w=600

திருமூலரின் திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.

f9c2b-2buddha2blotus.jpg?w=600

 

புத்தர் பேருரை

உச்சுக்குடுமி, மொட்டை, ஜடாமுடி, காவித்துணி, மஞ்சள் உடை, நிர்வாண கோலம் இவைகளால் ஒருவன் துறவி ஆகிவிட முடியாது என்று புத்தர், வள்ளுவர், திருமூலர், ஆதிசங்கரர் முதலிய பல தீர்கதரிசிகள் எடுத்துரைத்துள்ளனர்.

 

புத்தர் தம்மபதத்தில்,  மூன்று இடங்களில் இக்கருத்தை வலியுறுத்துகிறார் (தம்மபதம் 141, 264, 393)

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான். இது பற்றிய விரிவான விளக்கத்தை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க: Two Interesting Conversations about Women, posted on 5th February 2014.

Contact swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செய்தக்க அல்ல செயக்கெடும் –புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (Post 3899)

2b1bd-brahmin2bvalluvar.png?w=600

Written by London Swaminathan

 

Date: 11 May 2017

 

Time uploaded in London: 21-58

 

Post No. 3899

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(முதல் பகுதி நேற்று வெளியாகியது)

 

செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும் கெடும் (குறள் 466)

பொருள்:

ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய  வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.

 

இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.

 

புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:

“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு.

3de0e-2buddha2blotus.jpg?w=600

கண்ணனும் பகவத் கீதையில் “ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40)-

“நல்லது செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான்” என்பது கண்ணன் வாக்கு.

 

ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டிய தருணத்தில் ஜீவகாருண்யம் பற்றிப் பேசிவிட்டு கடமையைச் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவர் கொலை செய்தவராகக்  கருதப்பட மாட்டார்.

 

இது போல போர் வீரர் ஜாதியில் பிறந்த அர்ஜுனன் போர் செய்யாமல் தப்பிக்க முயன்றபோது கிருஷ்ணன் கண்டிக்கிறான்

 

ச்ரேயான் ஸ்வதர்மஹ– அவனவன் தொழிலே சிறந்தது (3-36)  என்றும் கண்ணன்  மொழிகிறான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)

c2988-buddha2bpurnima252c2bkolkata252cpt

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)


Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 15-53

 

Post No. 3970

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று (குறள் 197)

 

பொருள்-

அறத்தோடு பொருந்தாத  சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் தராத வெறும் சொற்களை சான்றோர் சொல்லாதிருப்பது நல்லது

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்  (குறள் 198)

பொருள்-

அரிய பொருளை ஆராயும் அறிவினை உடையோர், வாழ்க்கைக்கு பெரும்பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்

 

1.கொலை செய்தல்

2.பொய் பேசுதல்,

3.திருடுதல்,

4.பிறன் மனைவியிடம்  போதல்

5.கள் குடித்தல் – இந்த ஐந்து செயல்களும் தன்னுடைய வேரை தானே தோண்டிக் கொள்வதற்குச் சமம் தம்மபதம் 246/247

யானை தனக்குக்குத் தானே மண்ணைவாரி தன்  தலையில் போட்டது போல.

3514e-valluvar2bwithout2bkural2b2009.jpg

பிறருடைய மனைவி

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- (குறள் 147)

 

பிறருடைய மனவியை நாடுபவனுக்கு

1.பகைமை (முதல் கணவனுடன் மோதல்)

2.பாவம் (மறு ஜன்மத்தில் பாவத்தின் பலன்)

3.அச்சம் (எந்த நேரத்தில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்)

4.பழி (ஊரே தூற்றும் கெட்ட பெயர்)– இந்த நான்கும் எப்போதும் நீங்காது-

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற  ஒழுக்கு – (குறள் 148)

பிறருடைய மனைவியை தவறான எண்ணத்துடன் கண் எடுத்தும்

பார்க்காத  பேராண்மை என்னும் பண்பு சான்றோர்க்கு அறமாக மட்டும் அமைவதில்லை; பொருந்திய ஒழுக்கமும் ஆகும்.

 

மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

வெறுப்பு

பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி

இன்னா செய்யாமை தலை  ( குறள் 852)

 

பொருள்

கருத்து மாறுபட்டு ஒருவன் அன்பில்லாத செயலைச் செய்யினும் , வெறுப்பினால் அவனுக்கு கெடுதல் செய்யாது இருப்பது சிறந்தது.

 

நம்மை வெறுப்போருக்கு இடையே நாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம் (தம்மபதம் 197)

 

இகலானாம் இன்னாத எல்லாம்  நகலானாம்

நன்னயம் என்னும் செறுக்கு (குறள் 860)

 

ஒருவனுக்கு வெறுப்பினாலேயே துன்பம் உண்டாகும்; நட்பினால் நல்லவன் என்ற மதிப்பு கிடைக்கும்.

effae-buddha2bkolkata252c2bht1.jpg?w=600

நற்குணங்கள்

 

உள்ளத்தால் பொய்யாதொழுகின்  உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்லாதிருக்கக் கற்றுக் கொண்டால் அவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் நிலைபெற்று இருப்பான் (அரிச்சந்திரன், ராமன், தர்மன், காந்தி அடிகள் போல)

 

பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)

 

ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263

 

இதே கருத்து பகவத் கீதை 16-21லும் உளது மூன்று நரக வாசல்கள் என்று கீதை சித்தரிக்கும்.

வள்ளுவன் குறளில்

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கூடும் நோய் (குறள் 360)

காமம், க்ரோதம், மோகம் ஆகிய மூன்றின் பெயர்கூட மனத்தில் தோன்றாதவாறு ஒருவன் வாழ்ந்தால் அவன் உள்ளத்தில் ஞானம் பிறக்கும்; கர்ம வினை அறுபட்டுப்போகும்; பிறவ்தி தளை அறுபடும்;  மோட்சம் கிட்டும்

 

–சுபம்-



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (Post No.3914

d6d4d-buddha252ctawang252c2barunachal252

Written by London Swaminathan

 

Date: 16 May 2017

 

Time uploaded in London: 17-58

 

Post No. 3914

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

தம்மபதம் என்பது புத்தமதத்தினரின் வேதப் புத்தகம்

திருக்குறள் என்பது தமிழர்களின் வேதப் புத்தகம்

 

 

பசிப்பிணி என்னும் பாவி

 

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225)

பசியைப் பொறுத்துக் கொள்வது தவசிகளின் வலிமை; ஆனால் அவர்களுக்கு உணவு கொடுக்கும் இல்லறத்தான் வலிமை அதைவிடப் பெரியது

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

நல்ல குணங்களை மறக்கச்செய்யும் பசியைத் தீர்ப்பது பெரிய புண்ணியம்; அதாவது பிற்காலத்துக்குச் சேர்த்துவைக்கும் வங்கிக் கணக்கு போன்றது

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் (228)

செல்வத்தைச் சேர்த்துவைத்து பிறருக்கும் கொடுக்காமல், தாமும் அனுபவிக்காமல் இருப்பவர்களுக்கு, தானம் செய்வதிலுள்ள இன்பம் என்ன என்றே தெரியாது.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்லுவார்:

உண்மையே பேசு

கோபப் படாதே

கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு

இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (தம்ம.224)

xxxx

30643-buddha2bface.jpg?w=600

வாய்மை

உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்

உள்ளத்துளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்ல நினைக்காமல் இருந்தால் அவன் உலக மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பான்.

 

புத்தர் சொல்கிறார்:

நல்ல குணம் உள்ளவனாக இருந்து, யார் அறவழியைப் பின்பற்றுகிறானோ, யார் உண்மை பேசுகிறானோ,  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறானோ அவனை உலக மக்கள் அனைவரும் விரும்புவர் (தம்ம. 217)

 

xxx

பிறன் மனை நோக்கா பேராண்மை

 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண் ( 146)

பொருள்:

பிறருடைய மனைவியை விரும்பி நெறி தவறி நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழிச்சொல் என்ற நான்கும் எப்போதும் நீங்காது.

 

புத்தரும் இதையே மொழிகிறார்:

மற்றவனுடைய மனைவியை அபகரிப்பவனுக்கு நான்கு விஷயங்கள் நடக்கும்:-

அவன் மதிப்பையும் மரியாதையையும் இழப்பான்;

அவன் மன சஞ்சலத்துன் வாழ்வான்;

எல்லோரும் அவனைத் தூற்றுவர்;

அவன் நரகத்தில் வீழ்வான் (தம்மபதம்-309)

 

xxx

11988-valluvar2bwithout2bthirukkural.jpg

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

 

இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் (குறள் 369)

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் (370)

 

பொருள்

ஒருவன் ஆசையெனும் துன்பத்தைக் கைவிட்டால் அவனுக்கு இன்பம் வந்து குவியும்.

ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது அதனை விடக் கற்றுக்கொண்

டால், அழியாத இன்பத்தைப் பெறலாம்.

 

ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)

 

கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)

 

–சுபம்–



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்புவது ஒன்றே!- பகுதி 7 (Post No.3947)

39067-book2bkural.jpg?w=600

Written by London Swaminathan

 

Date: 27 May 2017

 

Time uploaded in London: 21-26

 

Post No. 3947

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

(This is already posted in English a few days ago)

 

10588-amavadai2bsales.jpg?w=600

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

 

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் உரை. இதற்கு எதிர் மாறாராக எழுதப்படும் உரை தவறானவை. நூறு ஆண்டுக்கு முந்தைய புத்தகங்களில் எல்லாம் இந்த உரையே இருக்கும் புத்தரின் தம்ம பத உரையும் இதை ஆதரிக்கும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)

பொருள்

உலகத்தில் அழிவும் ஆக்கமும் இல்லாமல் இல்லை. இது ஒருவருக்கு வருவதற்கு பழ வினையே காரணம். ஆகையால் எது வந்தபோதிலும் நடுவு நிலைமை தவறாது இருப்பதே பெரியார்களுக்கு அணிகலன் ஆகும்

 

கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 115)

 

52c66-alagar2bpallakku.jpg?w=600

ஒருவன் நடுவுநிலைமை தவறி தவறானவற்றைச் செய்யப் போனால், தான் கெட்டுப் போனதற்கு அறிகுறி அதுதான் என்பதை அவன் உணர வேண்டும். அதாவது அவன் கெட்டழிவது உறுதி

 

விநாச காலே விபரீத புத்தி என்று சம்ஸ்கிருதத்தில் பழமொழி உண்டு.

quosdeus vult perdere prius dementat – Napoleon

Whom God wishes to destroy He first deprives sanity

 

நெப்போலியனும் சொல்கிறார்: கடவுள் யாரை விழுத்தாட்ட நினைக்கிறானோ அவனுக்கு முதலில் புத்தியைத் தடுமாற வைப்பார்.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

 

கெட்டதும் நல்லதும் நம்மால் வருவதுதான்; தானே தீங்கு

செய்து கொள்கிறான்; தானே தீமையை அகற்றவும் செய்கிறான். தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான்.        இது எல்லாம் வேறு ஒருவர் செய்வதல்ல (தம்மபதம் 165)

தனக்குத் தானே எஜமானன் என்றும் சொல்லுவார் (160)

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றன் கருத்து இங்கே தொனிக்கிறது:-

10d0e-buddha2bbeauty.jpg?w=600

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

 

 

 

புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கத்துத் தான்பிறிது ஊனுண்பான்

எங்கனம் ஆளும் அருள் (குறள் 251)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

 

பொருள்:-

தன்னுடைய சதையைப் பெருக்க வைப்பதற்காக இரக்கமின்றி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிடுபவன் எப்படி கருணை உடையவனாக இருக்க முடியும்?

 

ஒரு உயிரையும் கொல்லாமலும், மற்றவர் விற்கும் புலாலை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரினங்களும் இருகரம் குவித்து தொழுது ஏத்தும்.

 

புத்தர் சொல்கிறார்:

எல்லா மனிதர்களும் தண்டனை என்றால் நடுங்குகின்றனர்; எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்வதற்க்குக் காரணமாக இருக்கக்கூடாது.–தம்மபதம் 129



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிராமணர்கள்: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- பகுதி-7 (Post No.3958)

 

3299c-buddha2bsl252cdevraj.jpg?w=600

Research Article Written by London Swaminathan

 

Date: 31 May 2017

 

Time uploaded in London- 15-18

 

Post No. 3958

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

01427-bhakti2bmylapore.jpg?w=600

பிராமணர்களை புத்தரும் வள்ளுவரும் வானளாவ புகழ்ந்துள்ளனர். ஏன்? அவர்கள் அந்தக் காலத்தில் துறவிகள் போல வாழ்ந்தனர்.

புத்தர் தம்ம பதத்தில் மட்டும் சுமார் 45 ஸ்லோகங்களில் பிராமணர்களைப் பற்றி பாடியுள்ளார்.

தம்ம பதம் என்பது புத்த மதத்தினரின் வேதப்புத்தகம்.

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறளில் திருவள்ளுவர் குறைந்தது பத்து இ டங்களில் பிராமணர்களைப் பற்றியும், வேதம்- மந்திரம் – வேள்வி பற்றியும் பாடியுள்ளார்.

 

புத்தருக்கும் வள்ளுவருக்கும் உள்ள அதிசயமான ஒற்றுமை: பிராமணன் என்பவன் யார் என்று இலக்கணம் வகுத்தது; மற்றும் பிராமணன் என்றாலும் துறவி என்றாலும் ஒன்றே என்று பாடியது.

 

அந்தத்தை அணவுவோர்= அந்தணர்கள்; அதாவது வேப்ப மரத்தில் எத்தனை இலைகள், கிரஹணம் ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்வதை விட உள்முக ஆராய்ச்சி செய்து இறைவனை நாடுவதே தலையாய பணி என்று கருதினர்.

 

பிராமணன் என்றால் பிரம்மத்தை (இறைவனை) நாடுவோன் என்று பொருள்.

 

பார்ப்பான் என்றால் நெடுநோக்கு பார்வை உடையவன்; எந்த உயிரினமும் துன்புறாதவாறு நான் என்ன செயலாம் என்று சதா சர்வகாலமும் சிந்திப்பவன்; அன்பே உருவானவன்.

இந்தக் கருத்து தம்ம பதத்திலும் அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவள்ளுவன் பாடிய திருக்குறளிலும் இருப்பது பெரிய ஒற்றுமை!

 

புத்தர் , தனது அடியார்களுக்காக புத்த பிட்சுக்கள் பற்றி 25-ஆவது அத்தியாயத்தில் பாடிவிட்டு கடைசியில் 26-ஆவது அத்தியாயத்தில் பிராமண வக்கோ (வர்க) என்று தனியாகப் பாடியதிலிருந்து இது பிராமணர்கள் பற்றியதே என்பது உறுதியாகிறது.

 

அதே போல அந்தணர், பார்ப்பான், பிராமணன் என்பன துறவியருக்கும் பொருந்தும் என்ற போதிலும் துறவியரைப் பற்றி பாட வந்த தமிழ்ப் புலவர்கள் அதற்காக உள்ள பிரத்யேகச் சொற்களையே –  அதாவது முனிவர், இருடி= ரிஷி, துறவி, சந்யாசி என்றே — பயன்படுத்தினர்.

 

ஆக சுருக்கமாகச் சொன்னால் பிராமணர் துறவியரே; துறவியர் பிராமணரே.

 

விஸ்வாமித்திரர், எவ்வளவோ கஷ்டப்பட்டு தவம் செய்து, கடைசியில் வசிஷ்டரே அவரை “நீ ஒரு பிராமணன் (பிரம்மரிஷி)” என்று பகழ்ந்த கதை மிகவும் பிரசித்தம்

 

 

நிற்க; ஒரு சில குறட் பாக்களையும் அதற்கு இணையான தம்மபத ஸ்லோகங்களையும் தருவன்:

cd933-brahmin252c2bgurukula.jpg?w=600

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் 30)

 

அந்தணர் என்போர்  எல்லா உயிர்களிடத்திலும் அருள்பூண்டு வாழ்பவர்கள்

 

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் (குறள் 134)

 

பிராமணன் வேதத்தை மறந்தாலும் பின்னர் நினைவுபடுத்திக் கொள்ளலாம்; ஆனால் அவன் ஒழுக்கம் கெட்டுப்போனால் மீண்டும் அவனது மதிப்பிற்குரிய முதல் நிலையை அடையவே முடியாது

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல் (543)

 

பிராமணர்கள் போற்றும் வேதங்கள் நிலைபெற மன்னவனின் நேர்மையான ஆட்சி அவசியம்; அதுதான் அடிப்படை.

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (560)

 

மன்னன் முறையான ஆட்சி செய்யாவிடில் பசுமாடுகள் பால் தராது; ஐயர்கள் வேதங்களைக்கூட மறந்து விடுவார்கள்.

 

பிராமணர்களையும் பசுக்களையும் இணைத்தே பேசுவதை புற நானூற்றிலும் தேவாரத்திலும் பகவத் கீதையிலும் காணலாம்.

 

அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்துண்ணாமை நன்று (259)

 

ஆயிரம் யாக யக்ஞங்கள் செய்வதற்கு சமம் ஒருவன் புலாலை மறுப்பது.

 

இதை மனுவும் (5-53) சொல்கிறார்; ஒருவன் தினமும் ஒரு அஸ்வமேத யாகம் வீதம் 100 ஆண்டுகளுக்கு அஸ்வமேதம் செய்தால் கிடைக்கும் புண்ணீயம் சைவ உணவு சாப்பிடுவோருக்குக் கிடைக்கும்.

 

பிராமணர்களை பூலோக தேவர்கள் (பூ சுரர்) என்று தேவாரம் முதலிய பாடல்களில் போற்றுவர். சதபத பிராமணம் முதலிய நூல்களும் பிராமணர்களை நடமாடும் தேவர்கள்  என்று போற்றும். இதை வள்ளுவனும் எதிரொலிக்கிறான்:

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோடொப்பர் நிலத்து (413)

 

செவிக்கு உணவாகிய கேள்வியினை (ச்ருதி=வேதம் =கேள்வி) உடையோர், இந்தப் பூவுலகில் , ஹவிஸை உண்ணும் தேவர்களுக்கு சமமாகக் கருதுவர்.

அவி= ஹவிஸ் என்னும் நெய்ச் சோற்றை வள்ளுவன் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறான்; ஐயர்கள் செய்யும் வேள்வியினை சில குறள்களில் சொல்லுகிறான். மந்திரம் பற்றியும் (28) பேசுகிறான்.

 

71952-buddha252c2blight.jpg?w=600

தம்ம பதத்தில் புத்தன் சொன்னது என்ன என்பதைக் கீழே படியுங்கள்:–

 

 

சொல் செயல் சிந்தனை மூன்றினாலும் யார் ஒருவன் தீங்கு செய்யவில்லையோ – அவனைத்தான் நான் பிராமணன் என்பேன் (தம்மபதம் 391)

 

ஒரு பிராமணனும், முனிவனும் கடந்த கால பாபத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆவர்; அவர்கள் தாய் தந்தையரைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களையே கொலை செய்திருந்தாலும், ஒரு நாட்டைச் சீரழித்து அந்த நாட்டு மக்கலை அழித்திருந்தாலும் சரி.

(தம்மபதம் 294)

 

 

பிராமணனுக்கு எவரும் தீங்கு இழைக்கக் கூடாது; பிராமணனனும் பதிலுக்குப் பதில் தாக்கக்க்டாது. இப்படிச் செய்தால் அவர்கள் பரிகசிக்கவே செய்வார்கள். அந்தோ பரிதாபம். (389)

 

நீண்ட முடியாலோ (குடுமி), பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் என்ற நிலை வராது; புனிதமும் சத்தியமும் எங்கு இருக்கிறதோ அவ ன்தான் பிராமணன்; அவன் ஆனந்தத்தில் திளைப்பான் (393)

 

ஏ மூடனே! நீண்ட முடியினால் என்ன பிரயோஜனம்? மான்தோலினால் என்ன பயன்? மனதில் சிக்கல் இருக்கும் வரை, துறவிக்கான அணிகலன்கள் இல்லாவிடில் என்ன பயன்?

 

 

இந்த உலகில் அன்னையாக இருப்பது இனிமையானது; தந்தையாக இருப்பது இனிமையானது; துறவியாக இருப்பது இனிமையானது; பிராமணனாக இருப்பது இனிமையானது (332)

 

யார் ஒருவர் புலன் இன்பத்தை நாடவில்லையோ- தாமரை இலைத் தண்ணீர் போல – ஊசி முனையில் கடுகு போல – வாழ்கின்றனரோ அவர்களைத்தான் நான் பிராமணன் என்பேன் (401)

 

யார் ஒருவன் பிற உயிர்களுக்கு– வலிதானாலும், மெலிதானாலும் – தீங்கு செய்யவில்லையோ பிற உயிர்களை கொல்லவில்லையோ – கொல்லச் செய்யவில்லையோ – அவனைத்தான் நான் பிராமணன் என்பேன் (405)

 

ஒரு மனிதன் நல்ல ஆடைகள் உடுத்திக்கொள்ளட்டும்; ஆயினும் அவன் அமைதியாக, நல்லவனாக, தன்னடக்கத்துடன் , நம்பிக்கையுடன், தூய்மையுடன் இருக்கட்டும்; அவன் வேறு எவருக்கும் தீங்கு செய்யவில்லையானால் அவனே புனித பிராமணன், சந்யாசி, பிட்சு (142)

 

–சுபம்—



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard