New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈராக்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஈராக்
Permalink  
 


 ஈராக் எனும் குருக்ஷேத்திரம்

எங்கே செல்லும் இந்தப்பாதை… ஐ எஸ் ஸை முன்வைத்து

iraq-5.ISIS_ISIL_Islamic_State_Flags_Caliphate

முதலில் சிலநூறுபேர் கொடியுடன் வந்தனர். மாலைக்குள் ஆயிரக்கணக்கில். முதலில் சொல்லப்பட்ட எண்ணிக்கை 1500 பேர். ஒரு மாதத்துக்குள் 5000 பேர். தற்போது 15 ஆயிரத்துக்கும் மேல் என நம்பப்படுகிறது.

தாஷ் என்றும், ஐ எஸ் ஐ எஸ், ஐ எஸ், ஐ எஸ் ஐ எல் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஐ எஸ் ஐ எஸ் என்பதே எல்லோருக்கும் தெரிந்த பெயராய் இருக்கிறது. இந்த ‘தெரிந்த பெயர்’ பெரிய சாதனைகளைச் செய்ததாலோ அல்லது ஈராக்கின் ஒரு பகுதியை வளமான ஒன்றாக மாற்றியதாலோ வந்ததல்ல.

குரூரம் மூலமும், காட்டுமிராண்டித்தனத்தின் மூலமும் மக்களை மிரட்டிப் பணிய வைத்து இவர்கள் தங்களுக்கென அரசாங்கம் போன்ற ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். ஈராக்கின் வடக்கில் கொஞ்சமும், சிரியாவின் ஒரு பகுதியையும் சேர்த்து இப்படி உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

ஜி எம் ஸி வண்டியின் ஜன்னலைத் திறந்துகொண்டு, இரு பக்கமும் துப்பாக்கியால் சாலையில் போவோர் வருவோரையெல்லாம் சுட்டுக்கொண்டே செல்வதும், சுடப்பட்டவன் இறந்துவிட்டானா என அருகில் சென்று பார்த்துவிட்டு, சாகவில்லை எனில் இன்னும் இரண்டு தோட்டாக்களைப் பாய்ச்சிச் செல்வதும், எதிரே வரும் காரை நோக்கிச் சுடுவதும் அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்களா என அருகில் சென்று பார்ப்பதும் போன்ற காட்சிகள் இருந்த ஒரு வீடியோவை முதன்முதலில் பார்த்தபோது இதைவிடக் கொடூரம் இனி நடக்கப்போவதில்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்தடுத்து அவர்களின் கொடூரத்தின் எல்லைகள் விரிந்துகொண்டே போனது. ஒரே நாளில் 2000 பேரை பின் மண்டையில் சுட்டு ஓடையில் தள்ளிவிட்டனர். மக்கள் பலியாடுகள் போல கூட்டம் கூட்டமாக வரிசையாக நடத்திச் சென்று ஐ எஸ் ஐ எஸ்ஸால் கொல்லப்பட்டனர். அதில் ஈராக்கிய போலிஸ், ஷியாக்களாகப் பிறந்துவிட்ட பொதுமக்கள், ராணுவ வீரர்கள், கிறிஸ்தவர்கள் எனப் பலருண்டு.

அடுத்த கட்டக் கொடூரமாக ஸுன்னி இனத்தைச் சாராத இஸ்லாமியர்கள் முதல் கிறிஸ்தவர்கள், யசிதிகள் என, தன்னைத்தவிர பிற ஜாதியை சேர்ந்த அனைவரையும் கூட்டம் கூட்டமாகக் கொன்றழித்தனர். இஸ்லாம் தோன்றிய காலத்தில் எப்படி இஸ்லாமிய ஆட்சி நடந்ததோ அதைப் போன்றதொரு ஒரு ஆட்சியை உருவாக்கப்போவதாகச் சொல்லி, குரானின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களுக்கு எப்படி சரியெனப்படுகிறதோ அப்படி ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை ஆரம்பித்தனர்.

கை தெரியும்படி உடையணிந்த பெண்ணுக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை…

இரு ஆண்கள் நடந்து சென்றால் நீங்கள் ஹோமோ எனச் சொல்லி சுட்டுக்கொல்வது.

ஹோமோக்கள் என சந்தேகப்படுவோரை உயரமான கட்டடங்களுக்குக் கொண்டு சென்று மேலிருந்து கீழே தள்ளிக் கொல்வது.

எல்லா மரண தண்டனைகளையும் பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று பார்க்க நிறைவேற்றுவது.

கிறிஸ்தவர்களைச் சிலுவையில் அறைந்து கொல்வது, அதுவும் மிகக் கொடூரமாக கொஞ்சம் கொஞ்சமாக ரத்தமெல்லாம் வடிந்து சாகவைப்பது. அவர்கள் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் கல்லெறியலாம் என்பது. இது அத்தனையும் மொசுல் நகரத்திலும், சிரியாவின் ரக்கா நகரிலுமாக அரங்கேற்றினர்.

ஷியாக்களை குடும்பம் குடும்பமாக கொன்றழித்தது, கல்யாணம் ஆகாத பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்வது.

ஸுன்னி மற்றும் வஹாபி இனத்தைச் சாராத பிற மதப் பெண்களைக் கவர்ந்துசென்று அடிமைச் சந்தையை உருவாக்கி, அந்தப் பெண்களை அடிமைகள் எனச் சொல்லி 10 டாலருக்கு விற்பனை செய்வது, ஐ எஸ்ஸின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பது என மோசுல் நகரத்தில் நுழைந்ததும் ஆரம்பித்த வெறியாட்டம் முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்தது.

மோசுல் நகரத்தின் மத்திய வங்கியைக் கொள்ளையடித்து தங்களுக்கென ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக்கொண்டு இனிமேல் இது இஸ்லாமிய நாடு என்ற பெயரில் அழைக்கப்படும் எனச் சொல்லியது, ஐ எஸ் ஐ எஸ்ஸின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியை உலக இஸ்லாமியர்களின் தலைவனாக அறிவித்துக்கொண்டது எனத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது இந்தக் கூட்டம்.

Abu-Bakr-al-Baghdadi_Iraq_Caliphate_IS_Islamic_State_ISIL_Leaders_ISIS

முறையான பயிற்சிகளுடன் இருந்த ஈராக்கிய ராணுவமும், அதிரடிப்படையினரும் இவர்களை எப்படி எதிர்கொள்வது என யோசிப்பதற்குள் சில ஆயிரம் பேரை இழந்துவிட்டது.

அப்போது பிரதமராக இருந்த நூர் அல் மாலிக்கி யார் உதவியைக் கேட்போம் என நினைத்துக்கொண்டே இருந்துவிட்டாரே தவிர அமெரிக்கா தவிர வேறெங்கும் உதவி கேட்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஐ எஸ் ஐ எஸ், பாக்தாதின் எல்லைக்கு 40 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வந்து பாக்தாத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது. இனிமேலும் நூர் அல் மாலிக்கியை நம்பினால் இமாம் ஹுசைனையும், (கெர்பலா) நஜஃப் போன்ற ஷியாக்களின் வழிபாட்டுத்தலங்களையும் இந்த மத வெறியர்கள் தகர்ப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு ஷியா மிலிட்டரி என்ற ஒரு படையும், ஈராக்கிய ராணுவமும் சேர்ந்து ஐ எஸ் ஐ எஸெஸுக்கு எதிராக ஆயுதங்களை முழுவீச்சில் எடுத்தனர். அதன் பின்னரே பிடித்த இடங்களை விரிவு செய்யாமல், இருப்பதைக் காப்பாற்றப் போராட ஆரம்பித்தது ஐ எஸ் ஐ எஸ்.

தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் குறுக்கு வழியாக பாக்தாத் நகரம் முழுக்க தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி மக்களுக்கு பயங்கரத்தை தினமும் கொடுத்துக்கொண்டிருந்தது. கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தும் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள், சவுதி, ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து உதவுவதாகச் சொல்லி தாக்குதலைத் தொடர்ந்தாலும் ஐ எஸ் ஐ எஸ் கையில் இருக்கும் ஆயுதங்களில் பெரும்பாலானவை சவுதி அரேபியா வழங்கியதாகத் தெரிகிறது. ஈராக்கியப் படைகள் கைப்பற்றிய இடங்களில் கிடைத்த ஆயுதங்கள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் சவுதியிலிருந்தே வந்திருப்பதை ஈராக்கிய தொலைக்காட்சி காட்டியது. இத்தனைக்கும் தற்போதைய பிரதமரான லப்பாதி சவுதிக்கு சென்று நட்பு அழைப்பும், உதவியும் கோரினார். ஈராக்கியர்களுக்கு ஆதரவாக ஐ எஸ் மீதான வான்வழித்தாக்குதலும், ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புவதுமாக இரட்டை நிலையை எடுத்துக்கொண்டுள்ளது சவுதி அரேபியா.

ஜோர்டான் படைகளும் ஐ எஸ் ஐ எஸ் மீதான தாக்குதலுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியது. ஒரு விமானப்படை பைலட் ஐ எஸ் ஐ எஸ் கட்டுப்பாட்டின் இருக்கும் பகுதியில் தெரியாத்தனமாக இறங்கிவிட அவரை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி கொடுமைப்படுத்தியது என்பதையும் கடைசியில் அந்த விமானியைக் கூண்டுக்குள் அடைத்து உயிரோடு எரித்துக்கொன்றது என்பதையும் உலகம் பார்த்தது.

இந்தச் சிறிய படையை அழிக்க முடியாதவர்களா நம் உலக நாடுகள்? மனித நாகரீகத்துக்கே சவால்விடும் இவர்களை அழிக்க ஏன் உலக நாடுகள் ஈராக்குக்கு முழு ஆதரவும் தரவில்லை என்பதும், இன்னும் எதற்காக உலகம் காத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.

ஐ எஸ் ஐ எஸ்ஸின் கிறுக்குத்தனத்தின் உச்சமாக மோசுல் நகரத்தில் இருக்கும் மனித நாகரீகத்தின் வரலாற்றைச் சொல்லும் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை உடைத்துத் தள்ளியது

உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் அங்கு நடக்கும் அக்கிரமங்களைக் காணச் சகியாமல் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியிருக்கிறார்.

சிறு சிறு முனகல்களை வெளியிட்டு விட்டு,  உலகம் இதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டு வேறு வேலையை பார்க்கப்போய்விட்டது. இன்று உலகின் தாதாவான அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவு வளர்ந்திருக்கிறது இந்த ஐஎஸ் ஐஎஸ். ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் கிடைத்துக்கொண்டிருந்தாலும், அவர்களை வேரோடு அழிப்பது மட்டுமே உலகுக்கும், ஈராக்குக்கும் நலம் பயக்கும். மனிதகுல விரோதிகளான இவர்களின் செய்கைகள், வன்முறை மற்றும் கொடூரம் எல்லாம் வெறும் செய்திகள் என்ற அளவுக்கு மரத்துப்போகச் செய்துவிட்டன.

இந்தப் பயங்கரவாதிகளால் இன்றுவரை ஈராக்கின் பொருளாதாரம் எழ முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையாக ஈராக்கில் போர் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் ஈரான் x ஈராக் போரில் ஆரம்பித்து, குவைத் போர், பின்னர் அமெரிக்கர்களின் வருகை, பின்னர் அமெரிக்கர்களை வெளியேற்றப் போர், பின்னர் ஷியா மற்றும் ஸுன்னிகளுக்கு இடையேயான போர், தற்போது ஐ எஸ் ஐ எஸ்ஸுடன் போர் என விடாமல் போர் மட்டுமே செய்துகொண்டிருப்பதால் வருமானத்தின் பெரும்பகுதி சண்டைக்கே செல்கிறது. சதாம் இறக்கும் முன்னர்வரைகூட ஒரு ஈராக்கிய தினாருக்கு 10 ரூபாய் என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் இன்றைக்கு ஒரு இந்திய ரூபாய்க்கு 25 ஈராக்கிய தினார் என்ற அளவில் போய் நிற்கிறது. ஒரு டாலருக்கு 1200 ஈராக்கிய தினார்.

இந்தப் பொருளாதார வீழ்ச்சியும், போருக்கென வாங்கிய கடன்களும், கிடைக்கும் எண்ணெய் வளத்தையெல்லாம் கடன் கொடுத்தவர்கள் கொண்டு செல்லும் நிலையில்தான் இருக்கிறது. மொத்த உற்பத்தியில் 30 சதவீதம்கூட ஈராக்கிய அரசாங்கத்துக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாக சாதாரண ஈராக்கிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் போன்ற எதுவுமே கால்வாசிகூட ஈராக்கிகளுக்கு போய்ச் சேரவில்லை. பயங்கரவாதத்தை முழுதும் வேரறுக்காமல் ஈராக் இனி எப்போதும் மேலெழ வாய்ப்பில்லை. அத்தனைக்கு அவர்கள் பயங்கரவாதத்துக்கும், அடிப்படைவாதத்துக்கும் தங்கள் மக்களை பலிகொண்டாயிற்று / கொடுத்தாயிற்று.
ஈராக் தற்போது ஐ ஸ் ஐ எஸ்ஸை முழுவீச்சில் அழிக்கத் திட்டமிட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி திக்ரித் நகரை மீட்டுள்ளது. இன்னும் முழுதாக திக்ரித் நகரைச் சுத்தம் செய்துவிட்டு முழுபலத்துடன் மோசுல் நகரையும் விடுவிப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த வெற்றியால், ஈராக்கியர்களுக்கு தங்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கையும், ஐ எஸ் ஐ எஸ் ஒழிவதற்கான வாய்ப்பு உண்டு என்ற எண்ணமும், கொஞ்சம் நிமிர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கின்றன. இது தொடருமா, இல்லை மீண்டும் முதல் கட்டத்துக்கே வருவார்களா என்பது அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்.

அதிகமாக ஈரானைச் சார்ந்திருப்பதும், உள்நாட்டில் முனகல்களையும், ஈரானின் கிண்டலுடன் கூடிய சில கமெண்ட்டுகளும் ஈராக்கைக் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு நம்பக்கூடிய அளவு இருக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே. ஈரானும் ஈராக்கும் மத அடிப்படையில் ஷியா பிரிவு இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த முனகல்கள் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிரான போரின் வேகத்தைக் குறைக்காது என நம்பலாம்.

இதே வேகமும், தாக்குதலும் தொடருமானால் எனது கணிப்பில் இன்னும் 6 மாதங்களுக்குள் மொசுல் நகரத்தையும் ஈராக்கிய ராணுவம் கைப்பற்றும் என்றே நம்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈராக்கில் ஜனநாயகம்

Iraq_Democracy_Freedom

எங்கள் கம்பெனியின் பாக்தாத் கிளையை கவனித்துக்கொள்ளும் லூவாயி இப்ரஹீம் என்ற ஓர் ஈராக்கியுடன் காரில் கடந்த மூன்று தினங்களாக அலுவல் வேலையாக பாக்தாத் நகரத்திற்குள் சுற்றவேண்டியிருந்தது. பாக்தாத்தின் போக்குவரத்து என்பது எப்போதும் ட்ராஃபிக் ஜாம்தான் என்பதால், கார் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது
பேசுவதற்கு நிறையவே நேரமிருந்தது.

எப்படி இருக்கு ஈராக் நிலவரமெல்லாம், இந்த புதிதாய் கிடைத்த ஜனநாயகம் உங்களுக்கு நிச்சயம் நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்குமே எனக் கேட்டேன். மிக நாகரிகமான வார்த்தைகளில் பொங்கிவிட்டார்.

“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் (துர்க்மெனிஸ்தானில் இருந்து வந்தவர்கள்) இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள் (எகிப்தியர்கள் மற்றும் ஈரானியர்கள்) எங்கள் சமூகத்தில் புகுத்தாதவரை, ஒருவருக்கொருவர் உதவியாகவும், இறைவனுக்குப் பயந்தவர்களாகவும் இருந்தோம், வழிகாட்ட ஊரில் பெரியவர்களும், நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களும் யாருக்கும் எந்தப் பிரிவினையையும் போதிக்கவில்லை.

”ஆனால், இன்றைக்கு எந்த ஈராக்கியும் சக ஈராக்கியை நம்பத் தயாராயில்லை. சமூகம் சீரழிவதை, மதச் சண்டையால் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் கொன்றுகொள்வதை பார்த்த நல்லவர்களெல்லாம் வெளிநாடுகளில், நாகரிகமான இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

”இன்றைக்கு ஈராக்கில் இருக்கும் கூட்டத்தில் 99 சதவீதத்தினர் சுயநலமிகள். காசுக்காக நாட்டையும், தன் இனத்தையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள், என்னையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவ்வளவு கொடுமைகளையும் கண்டபின்னரும் ஏதும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டுதானே இருக்க முடிகிறது” என்றார்.

”சரி, சதாம் காலத்தில் எப்படி இருந்தது என்றால், தொழுகையோ, பிரார்த்தனையோ, சர்ச்சிற்கு செல்வதோ, அவரவர்களுக்குப் பிடித்த வகையில் அவரவர் வழியில் போய்க்கொண்டிருந்தனர். இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் சென்றுவரும் அளவு நட்பு இருந்தது. கொடுக்கல், வாங்கல் இருந்தது. சில கலப்புத் திருமணங்கள்கூட நடந்திருக்கிறது. எல்லோரும் அவர்களை ஆச்சரியமாக பார்த்தார்களேயன்றி கொல்ல வேண்டும் எனத் துடித்ததில்லை.

”பொழுதுபோக்குக்கென இடங்கள் இருந்தன, மக்கள் பொது இடங்களில் கூடினார்கள். பார்கள், நடன அரங்குகள், நாடக அரங்குகள் இருந்தன. கலையையோ, இசையையோ யாரும் ஹராம் எனச் சொன்னதில்லை. இன்றைக்குப் பாருங்கள், சதாம் ஹுசைன் ஆட்சி போய் இன்றைய ஜனநாயகம் என ஒன்று வருவதற்குள் எங்களின் இரு பிரிவுகளுக்குள்ளேயே அடித்துக்கொண்டு லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருக்கிறோம்.”

இதில் ஷியா, ஸுன்னி இருவருக்கும் பொதுவான இலக்கு, கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா, ஸுன்னி அல்லாத எவரும். சதாம் ஆட்சி நீங்கியவுடன் அமெரிக்கர்கள் நுழைந்ததும் அவர்கள் செய்த அநியாயங்களால் வெறுப்பிலிருந்த ஈராக்கியர்கள் அமெரிக்கப் படைகள்மீது காட்ட முடியாத கோபத்தையெல்லாம் கிறிஸ்தவர்கள் மீதுதான் காண்பித்தார்கள். கற்பழிப்புகளும், தனியாக சிக்கினால் கொல்வதும், கூட்டமாகச் சென்று குடும்பத்தோடு அழித்துவிட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடுவதும் என அராஜகங்கள் நிகழ்ந்தன. இதையெல்லாம் செய்தது முதல்நாள்வரை அருகருகே வாழ்ந்தவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கிறிஸ்தவர்களைக் குறிவைப்பது குறைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் முன்னாள் பிரதமர் நூர் அல் மாலிக்கி. அனைத்துத் தரப்பும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதும், அதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல் கிறித்தவத் தலைவர்களைச் சென்று சந்திப்பதும், அவர்களை அழைத்துக் குறைகளை கேட்டபடியும் இருந்தார். ஒருங்கிணைந்த ஈராக் என்பதை முன்வைத்தார். மேலும், தேவாலயங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்தார். இன்றும் ஆயுதம் தாங்கிய போலிஸ் பட்டாலியன் எல்லா தேவாலயங்களின் வாசலிலும் நிற்பதைப் பார்க்கலாம். தற்போதைய பிரதமர் ஹைதர் லப்பாதி இன்றுவரை இதுவிஷயமாக ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஆனால், தேவாலயப் பாதுகாப்பு அப்படியேதான் இருக்கிறது.

கண்டிஷன்ஸ் அப்ளை என்பதுபோல தனக்கேற்ற வகையில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார் சதாம் ஹுசைன். ஷியாக்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தார். தீவிர ஸுன்னி இஸ்லாமியரான அவர், நாட்டின் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்களை அசிங்கம் பிடித்தவர்கள், இஸ்லாத்தைக் களங்கப்படுத்த வந்தவர்கள் என்பதாகத்தான் கருதினார். அதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் காண்பித்துக்கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாக அரபயின் (இமாம் ஹுசைன் இறந்த தினத்திலிருந்து அடுத்து வரும் 40 நாட்கள்) வரும் காலங்களில் அவர்களை (ஷியா பிரிவு இஸ்லாமியர்களை) கெர்பலாவுக்குச் செல்ல ஏகப்பட்ட தடைகளை விதித்தார். சைத்தானை வணங்கச் செல்லும் வழிதவறியவர்கள் என்பது ஷியாக்கள் குறித்த அவரது கருத்து. ’உங்கள் இமாம் ஹுசைனை வணங்குவதைவிட என்னை நீங்கள் வணங்க வேண்டும், அதுவே உங்களுக்கு நல்லது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது தவறெனச் சொன்ன ஷியா மதத்தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் கொன்றழித்தார்.

இவ்வளவு கொடுமையிலும் பழைய சர்ச்சுகளையெல்லாம் இன்றுவரை அப்படியேதான் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றார். வாராவாரம் என்றில்லாமல் அவ்வப்போது விசேஷங்களுக்கு கிறித்துவர்கள் கூடுகிறார்கள், திருமணம் நடத்த சர்ச்சுக்கு வருகிறார்கள், அரசாங்கமும், ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்கிறது.

இனி ஈராக் அதன் பழைய பெருமையை எப்போது மீட்டெடுக்குமென நினைக்கிறீர்கள் என அந்த ஈராக்கியைக் கேட்டேன், ஒழுங்கான தலைமை அமைந்து, மக்கள் எல்லோரும் முறையான, தரமான கல்வி கற்றால் இப்போதிருந்து மூன்றாம் தலைமுறை அந்தப் பழைய பெருமையை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் என்றார். இன்னும் இரு தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமா என்ற எனது ஆச்சரியத்திற்கு, ’இன்றைக்கு இருக்கும் ஈராக்கிய சமூகம் அழுகிப்போன ஒன்று. நியாயம், நேர்மை, சக மனிதனை மதித்தல், உயிரை மதித்தல் என்ற எந்த அடிப்படை மனித குனங்களும் இன்றி மிருகமாக அலைகிறார்கள். எங்கு பார்த்தாலும் காச. பார்த்தீர்கள்தானே, கடந்த இரு நாட்களாக எந்த அலுவலகத்திலாவது ஏதாவது நம்மால் சாதிக்க முடிந்ததா’ எனத் திருப்பிக் கேட்கிறார். (எங்களின் கம்பெனியின் பாலிஸிப்படி லஞ்சம் கொடுக்கக்கூடாது.)

”இன்றைக்கு தாஷ் (ஐ எஸ் ஐ எஸ்) வந்ததும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வது அடியோடு நின்று போயிருக்கிறது எனச் சொல்ல முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம்வரை தீவிரவாதம் குறைந்திருக்கிறது, நம்மைவிட பெரிய பூதம் ஒன்று வந்திருக்கிறது என அரண்டு போயிருக்கின்றனர். இருந்தாலும், இந்தக் கூட்டத்தில் தாஷுக்கு ஆதரவளிக்கும் கூட்டமும் இருக்கிறது என்பது இவர்கள் இஸ்லாத்தை புரிந்துகொண்ட விதத்திற்கும், மனிதத்தன்மை என்பது ஈராக்கில் எவ்வளவு இழிநிலையை அடைந்திருக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டு” என்றார்.

கடந்த ஏப்ரல் 12, 2015ல் எங்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அன்று பாக்தாத் பல்கலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 10 பேர் மரணமடைந்திருந்தனர். அதற்கு அருகில்தான் எங்களுக்கான ஹோட்டல். புறப்படும் அன்று 14ம் தேதி காலையில் யார்முக் என்ற இடத்திலுள்ள அரசு மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 15 பேர் பலி. 30 முதல் 40 பேருக்கு படுகாயம்.

அரசாங்கம் இதில் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள் எனக்கேட்டால், ’அரசாங்கம் என்பது முழுதாய் செயல்படும்போதுதான் அவர்களால் ஏதும் செய்ய இயலும். 5 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அரசாங்கம் என ஒன்றிருப்பதை நாங்கள் உணர்கிறோம். மருத்துவம் செய்துகொள்ள வெளிநாட்டுக்குச் செல்ல உதவி கேட்டால் கிடைக்கிறது. ரேஷன் ஓரளவு நேரத்துக்கு வருகிறது. தீவிரவாதத்தையும் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். தாஷை ஈராக்கிய மிலிட்டரி வெல்லும் என நம்பிக்கை வந்திருக்கிறது. இனி அவர்கள் (அரசாங்கம்) மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவோரை அடக்கினாலே பழைய சுமுக நிலை திரும்பலாம் என நம்புகிறேன்’ என்றார். யார் யாரெல்லாம் தூண்டுகிறார்கள் என நினைக்கிறீர்கள் என்ற எனது கேள்விக்கு ’யாரை எனச் சொல்வது? எல்லாம் சுமுகமாகப் போகிறது என நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒருநாள் மசூதியில் குண்டு வைக்கிறார்கள். பிடிபடுபவன் பெரும்பாலும் ஈராக்கியனாகவே இருப்பதில்லை. பாக்கிஸ்தானிகளும், பெங்காலிகளும்கூட சிக்குகிறார்கள். மதவெறியைக் கணக்கில் அடங்காத தொலைக்காட்சி சேனல்கள் தூண்டுகின்றன, மதத்தைப் பற்றி பேசுகிறோம் என்ற போர்வையில். ஆளுக்கொரு சேனல். என்ன பேசுகிறார்கள் என்பதை யார் கவனிக்கிறார்கள்? இண்டர்நெட்டிலும் தலையை வெட்டி அதன் மீது பயங்கரவாதிகள் ஏறி நிற்பதை பெருமையுடன் பகிர்ந்துகொண்டு, கொடூரமான அந்த தீவிரவாதிக்கு அல்லா துணை நிற்க வேண்டும் என எழுதுகிறார்கள். அதையெல்லாம் கேட்க, கட்டுப்படுத்த இங்கு ஏதுமில்லை. இதையெல்லாம்தான் அரசாங்கம் கவனிக்க வேண்டும். நாங்களெல்லாம் வளர்ந்துவிட்டோம், இனி அடுத்த தலைமுறையையாவது நல்ல கல்வியுடன் நல்ல குடிமக்களாய் மாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கு பள்ளிக்கூடங்களும், நல்ல கல்வி கற்ற ஆசிரியர்களும் வேண்டும். கிராமங்களில் போய்ப்பாருங்கள், ஒரு வாக்கியம்கூட ஆங்கிலத்தில் பேசத்தெரியாதவர் ஆங்கில ஆசிரியராக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இன்னும் மதக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் வீட்டில் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக இவர்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இன்னும் நிறைய மாற்றங்கள் வேண்டும். மாற்றம் நிச்சயம் வரும் என நம்புகிறேன்’ என்றார்.

அவருடன் இருந்த மூன்று நாட்களும் அராபிய விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. தேர்ந்தெடுத்த உணவகங்களில் உணவு வாங்கிக்கொடுத்து, எனக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து, போக வேண்டிய இடங்களுக்குக் கூடவே வந்திருந்து, விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைப்பதுவரை அனைத்தையும் செய்தார்.

மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே பழக்கமாய் இருந்தவர் இன்றைக்கு நல்ல நண்பராகி இருக்கிறார்.

இத்தனை கொலைகள், கொடூரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லா திடீரென்று ஜனநாயகத்தின் மீது எங்கிருந்து கருணை கொண்டுவிடப் போகிறார் என்ற அவநம்பிக்கை வெளியில் இருந்து பார்க்கும் நமக்கிருந்தாலும், விரைவில் ஈராக் அதன் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நல்ல ஒரு ஜனநாயக நாடாக மாற அந்த அல்லா அருள் புரியட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஈராக் விவசாயம் – போருக்குப் பின்

பாஸ்ரா – சீபா (Seeba)

iraq

பாஸ்ரா நகரம் ஈராக்கின் தென்கோடியில் இருக்கிறது, குவைத்தின் கடல் மற்றும் நில எல்லைகளை ஒட்டி அமைந்திருக்கிறது. பாஸ்ரா நகரிலிருந்து தெற்காகச் சென்றால் இடதுகைப் பக்கம் முழுக்க டைக்ரிஸ் நதியும், நதிக்கரையோர கிராமங்களும், சிறு நகரங்களும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். நதியின் அக்கரையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஈரானின் கிராமங்களையும், நதிக்கரையோர சிறு சிறு மீன்பிடித் துறைகளையும், மிகப் பெரிய ஈரானிய கொடியையும் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

ஈராக்கின் எல்லை ஃபாவ் (FAO or Faw) என்ற கிராமத்தில் முடியும். அதன் பின்னர் டைக்ரிஸ் நதியில் பாதி ஈரானுக்குச் சொந்தம். பாஸ்ராவுக்கும் ஃபாவ் கிராமத்துக்கும் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம். நடுவில் இருக்கிறது சீபா (Seeba) எனும் டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்த ஒரு கிராமம். துனிசியா நாடு அன்பளிப்பாய் அளித்த ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் (ஒரு படகையே மின் உற்பத்தி நிலையமாக மாற்றி இருக்கின்றனர்) இருந்து அந்தக் கிராமத்துக்கான மின்சாரம் கிடைக்கிறது. நம்மூரில் மாலையில் ஆற்றங்கரையில் சென்று அமர்வோமே, அப்படி அமர்ந்துவிட்டு வருவது இங்கிருப்பவர்களின் பொழுதுபோக்கு.

ஈரான் – ஈராக் போர் நடந்த எட்டு ஆண்டுகளும் இரு தரப்பிலும் மிக மோசமான சேதம். தினமும் யார் வீட்டிலாவது குண்டு வந்து விழும். தினமும் குறைந்தது இரணடு முதல் மூன்று மரணங்கள். சதாமின் பிடியில் இருந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர அனுமதிக்கப் படவில்லை. மக்கள் குடியிருப்புமீது குண்டு வீசுகிறது என ஈரானைக் குற்றம் சாட்ட வசதியாக மக்களை இடம்பெயர அனுமதிக்கவில்லையாம்.

எனது வாகன ஓட்டுநரின் குடும்பமும் இந்த எல்லையை ஒட்டிய அபுல் கசீஃப் என்ற கிராமத்தில் இன்று இருக்கிறது. சீபாவுக்கும் இந்த கிராமத்துக்கும் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர். எனது ஓட்டுநரின் அப்பா பாஸ்ரா உரத் தொழிற்சாலையில் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். லேசான பக்கவாதம் வந்து படுக்கையில் இருக்கிறார். ஆனாலும் இன்னும் வயது இருப்பதால் பெயருக்கு வேலை பார்க்கிறார். அவருக்கும் இந்த சீபா கிராமத்துக்கும் உள்ள தொடர்புதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

போர் இறுதிக்கட்டத்தை அடைந்த நேரம் சீபாவின் கம்பெனி கொடுத்த குடியிருப்பில் 3 குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். மூத்தவன் பையன், இளையவர்கள் ஒரு பெண்ணும், ஆணும். காலை வேலைக்கு கிளம்பும் முன்னர் எங்கோ ராக்கெட் வெடிக்கும் சப்தம். மீண்டும் கொஞ்ச நேரத்தில் இன்னொரு ராக்கெட் இவர்கள் வீட்டருகில் வந்து விழுந்து வெடிக்கிறது. யாருக்குமே காயம் இல்லை. ஆனால், அந்த வெடிச்சத்தம் தந்த அதிர்ச்சியில் இளைய மகனும், மகளும் இறந்துவிட்டனர். கண்முன்னாலேயே இரு குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்த அவரால் இன்றுவரை அந்தக் கிராமம் பக்கமே போக முடியவில்லை. இப்போது இருக்கும் அபுல் கசீஃப் கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அந்த சீபா கிராமத்துக்கு இந்த 10 ஆண்டுகளில் மகனின் வற்புறுத்தலுக்காக ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறார். ஆனால், அன்று அப்பா அழுத அழுகையையும், அதைப்பார்த்து அம்மா அழுத அழுகையையும் கண்டு மிரண்டுபோன மூத்த பையன் (எனது ஓட்டுநர்) இன்றுவரை அந்தக் கிராமத்துக்குச் செல்லவே இல்லை. உறவினர்கள் இவர்களை வந்து பாக்கின்றனரே ஒழிய இவர் அந்தக் கிராமத்தில் அடியெடுத்தும் வைப்பதில்லை.

Iraq

உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை. ஈராக்கின் வடபகுதி முழுக்க நல்ல விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் குறிப்பாக இன்றைய தேதிக்கு ஈராக்கில் குர்திஸ்தானில்தான் தரமான விவசாயம் செய்யப்படுகிறது. கால்நடை வளர்ப்பும் மிக முக்கியமான தொழிலாக உருவெடுத்துள்ளது.

1980க்கு முன்னர்வரை அதாவது ஈரான் – ஈராக் போருக்கு முன்னர்வரை விவசாயம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. இப்போதும் ஈராக்கிய தூதரகங்களில் இவற்றைச் சித்திரிக்கும் நிழற்படங்களைப் வைத்திருக்கிறார்கள், கவனமாக சதாம் ஹுசைன் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். போர் ஆரம்பித்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயம் நலிவடைய ஆரம்பித்தது. அடுத்து வந்த ஈராக் – குவைத் போர், அமெரிக்க ஊடுருவுதல், அதன்பின்னர் அமெரிக்கர்கள் வெளியேறியதுவரை ஈராக் விவசாயத்தில் கவனமே செலுத்தவில்லை. இதற்கு நடுவில் இந்த இரு நதிகளும் (யூஃப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ்) பாய்ந்துவரும் துருக்கி, இந்த நதிகளின் குறுக்கே ஏராளமான அணைகளைக் கட்டியதும் நதியின் நீர்வரத்து பெருவாரியாக குறைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சொல்வதானால் அறுபதுகளில் இந்த நதிகளில் வந்த நீர்வரத்தில் ஐந்தில் ஒருபகுதியே இன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவும் கச்சா எண்ணெயை வங்கிக்கொண்டு நிறைய உணவுப்பொருட்களைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நமது முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நட்வர்சிங்கும், அவரது மகனும்கூட இந்த Food for Oil திட்டத்தில் ஊழல் செய்து மாட்டினர். போரினால் விவசாயம் படுத்ததும், வேகமான மக்கள்தொகைப்பெருக்கமும் உணவை வெளியே இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு ஈராக்கைக் கொண்டுவந்துவிட்டன. ஈராக்கின் கர்நாடகாவான துருக்கி ஏகப்பட்ட அணைகளை யூஃப்ரடிஸ், டைக்ரிஸ் நதியின் குறுக்கே கட்டியதும், நதியின் நீர்வரத்து குறைந்து கடலில் உள்ள உப்பு நதியில் கலந்து உவர் நீராக மாறியதும் பாஸ்ரா மாநிலத்தின் நிலமெல்லாம் உப்பரிந்து போனதற்கும், விவசாயம் குறைந்ததற்கும் காரணம் என்கிறது ஓர் அறிக்கை.

கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் கொண்ட நதிக்கரையை ஒட்டி, போர் நடக்கும்போதும், அதற்கு முன்னரும் மிக அருமையான விவசாயம் நடந்திருக்கிறது. நெல், காய்கறிகள், பழங்கள், கீரைகள் என கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அந்த சுற்றுவட்டாரமே இருந்திருக்கிறது. பாஸ்ரா நகரத்துக்கு விவசாய விளைபொருட்களை அனுப்பி வைக்கும் மையமாக இருந்திருக்கிறது. தொடர்ச்சியான போர்கள் இன்றைக்கு விவசாயத்தை அடியோடு ஒழித்திருக்கின்றன. விவசாயம் செய்யத்தெரியாத தலைமுறைதான் இன்றைக்கு இருப்பது. மிக சொற்பமான மக்களே தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், கீரைகள் எனப் பயிரிடுகின்றனர். மீதமுள்ள நிலமெல்லாம் தரிசாகவே கிடக்கிறது. கலப்பினப் பசுக்கள் நிறைய தென்படுகின்றன. இரு மாட்டுப் பண்ணைகளுக்குச் சென்று வந்தேன். எல்லாப் பாலும் பாஸ்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாலையோரத்தில் பழைய தண்ணீர்ப்பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பால் ஐந்து டாலர். உள்ளூர் மக்கள் குழந்தைகளுக்காக அன்றி பால் வாங்குவதில்லை என்பதால் நகரத்தில்தான் விற்றாக வேண்டும். குவைத் டேனிஷ் டெய்ரி எனப்படும் கேடிடி பிராண்ட் பால் பொருட்கள்தான் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பால் பொருட்கள்.

பாஸ்ரா நகரத்தைச் சுற்றி நிறைய விளையும் பொருட்கள் என்றால், தக்காளியும், கலப்பின வெங்காயமும், உருளையும், கொஞ்சம் இதர காய்கறிகளுமே. நெல்லும் கொஞ்சம் விளைகிறது. இங்கும் நம்மூரைப் போன்றே ’நீ கத்தரிக்கா போடுறியா, நானும் கத்தரிக்கா போடுவேன், நீ தக்காளி போடுறியா, நானும் தக்காளி போடுவேன்’ என ஒரே சமயத்தில் எல்லா விவசாயிகளும் ஒரே விளைபொருள்களை பயிரிடுகிறார்கள். கடைசியில் எல்லாம் ஒரே சமயத்தில் அறுவடையாகி நம்மூர் காசில் கிலோ 5 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நல்ல சீசனில் 15 கிலோ கொண்ட கூடை நம்மூர் பணத்தில் 120 ரூபாய்க்கு கிடைக்கும். சீசனில்லா நேரங்களில் கிலோ 300 ரூபாய்க்குக் கிடைக்கும்.

iraqAMHameedFarmer08

இதேதான் வெங்காயத்துக்கும், உருளைக்கிழங்குக்கும். கொஞ்சம் நெல்லும் பயிரிடுகிறார்கள். எப்போதோ ஈராக்கின் விவசாயப் பல்கலை கண்டுபிடித்த ரகம் மற்றும் உள்ளூர் ரகமும் பயிர் செய்யப்படுகிறது. ஆனால், நெல் விவசாயம் என்பது பாக்தாத் முதல் பாஸ்ராவரை கிட்டத்தட்ட 600 கிலோமீட்டரில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் பயிர் செய்யப்படுகிறது. பாஸ்ராவில் இருந்து பாக்தாத் செல்லும்போது விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் பெரும்பாலும் பசுமையாக இருக்கும். ஆனாலும் உணவுப்பொருட்கள் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. சதாமின் காலகட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்புகள் தவிர்த்து இதர பொருட்களில் தன்னிறைவு அடைந்திருந்தது. இன்றைக்கு ஈரானும், குவைத்தும் இதர நாடுகளும் அனுப்பினால்தான் உணவுப்பொருட்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.

பாஸ்ரா மாநிலம் தவிர்த்த இதர பகுதிகளில் விவசாயம் செய்யமுடியாமைக்கு காரணம், நிலம் முழுக்க உப்பரிந்து போயுள்ளது, கிட்டத்தட்ட களர் நிலங்கள் போல. இதற்கு முக்கியக் காரணம், நிலத்தை உழுவதே இல்லை. மழைத்தண்ணீரோ, ஓடைத்தண்ணீரோ வெளியேற வாய்ப்பே இல்லை. இதனால் தரையின் கீழிருக்கும் உப்பு தண்ணிரில் கரைந்து மேல்மண்ணுடன் கலந்துவிடுகிறது. அதை சரிசெய்யும் அளவு தொழில்நுட்பமோ, களர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற செலவழிக்கும் அளவு வசதியோ இல்லை. நம்மூரில் இத்தனை தண்ணீர் இருந்தால் நிச்சயம் முப்போகம் விளைவித்துவிடுவார்கள் நம் விவசாயிகள்.

salinization in iraq

பெரும்பாலான இளைஞர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. செக்யூரிட்டி வேலைக்கும், வாகன ஓட்டுநர் வேலைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை. சும்மா வீட்டில் இருந்தாலும் இருப்பார்களே தவிர விவசாயத்துக்கு வரமாட்டார்கள். ஆனால், இந்தக் கிராமங்களில் இருக்கும் பெரியோர்கள் நம்மூரைப்போல புலம்புவதில்லை. ’அவனுகளுக்கு என்ன தெரியும், வேலையும் செய்யாம, சிகரெட்டை பிடிச்சிகிட்டு, மொபைலை நோண்டிட்டு 30 ஆயிரம் ஈராக்கி தினார் (20 டாலர் கிட்டத்தட்ட) சம்பளத்தையும் வாங்கிட்டு போயிருவான், அவனுக்கெதுக்கு கொடுக்கணும்’ என்பதே அவர்கள் கொள்கை.

ஈராக்கின் நண்பனான இந்தியா விவசாயத்தில் நிறைய உதவ முடியும். ஏகப்பட்ட விளைநிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன, பயன்படுத்த முடியாமலும், பயன்படுத்தக்கூடிய நிலங்கள் ‘என்னத்த விவசாயம் செய்றது’ என்ற எண்ணத்தாலும் தரிசாகக் கிடக்கின்றன. அவர்களுக்கு மாற்றுப்பயிரும், உப்பு நிலத்தில் விளையும் பயிர் ரகங்களும், நெல் ரகங்களும், விவசாயத் தொழில்நுட்பமும் கொடுக்கலாம். நீண்டகாலத் திட்டங்களை வகுத்துக்கொடுத்து செய்ய வைக்கலாம். குறைந்தது சாப்பாட்டுக்காவது அவர்கள் சம்பாதித்துக்கொள்வார்கள். இன்றைய நிலவரப்படி ஒருகிலோ பாஸ்மதி அரிசியின் விலை 4 முதல் 6 டாலர். 15 டாலர் வரையும் அரிசி இருக்கிறது. உள்ளூர் அரிசி கிலோவுக்கு 2 முதல் 3 டாலர் வரை போகிறது. அதற்கு சரியான மார்கெட்டோ, அரசு கொள்முதலோ இல்லை. அவரவர்கள் விளைவித்ததை பையில் கட்டி (5 கிலோ பொதிகளாக) சாலையில் வைத்து விற்கின்றனர். அதுதான் இவர்கள் விற்க இருக்கும் வாய்ப்பு. சில கடைகள் தவிர்த்து வேறு கடைகளில் ஈராக்கிய அரிசியை விற்பனைக்கு எடுத்துக்கொள்வதில்லை.

பருப்பு வகைகள், மசாலாப்பொருட்கள், எண்ணெய் வகைகள் எல்லாம் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷிலிருந்தும், எகிப்திலிருந்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பருப்பு வகைகள் எல்லாம் நம் நாடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்து மத்திய கிழக்குக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு பாக்கெட்டில் அடைத்து ஈராக்கிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

ஈராக்கில் கிடைக்கும் இன்னொரு சுத்தமான உணவுப்பொருள் எனில் மீன்கள் மட்டுமே. டைக்ரிஸ் நதியும், யூஃப்ரடிஸ் நதியும், ஃபராத் நதியும் அள்ள அள்ளக்குறையாத மீன்களைக் கொண்டிருக்கின்றன. எனவே ஈராக் முழுக்க எங்கு சென்றாலும் மீன்தான் முதன்மையான உணவு. மீனுக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன. வான்கோழி, கின்னிக்கோழி, புறாக்கள் போன்றவை சாலைகளில் விற்கப்படுகின்றன. நம் ஊர் போல வாரச்சந்தைகள் கண்ணில் படவில்லை. சூக்குகள் என்ற பெயரில் மிகப்பெரிய வளாகத்தில் நிரந்தர விற்பனை நிலையங்கள் உள்ளன. சிறிய, பெரிய, நடுத்தரக்கடைகளில் பலசரக்கு, துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், சீருடைகள், எலக்ட்ரானிக்ஸ் என கலந்துகட்டி அங்கே விற்பனை செய்யப்படும். சில கடைகளில் பேரமும் பேசி வாங்கலாம். இந்திய மசாலாக்களை நாம் சொல்லும் பதத்தில் அரைத்தும் தருவார்கள். இவ்வளவுதான் இவர்களால் முடியும்.

சரியான தொழில்நுட்பமும் ஆலோசனையும் இருந்தால் ஈராக் விவசாயத்தில் பெரிய அளவில் சாதிக்கமுடியும். தங்கள் இயற்கை வளத்தைப் பாதுக்காக்கத் தெரியாதவர்களாகவும் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

AnandG said:

ஈராக்கின் தென்பகுதியில் விவசாயம் நடக்கவில்லை, இந்தியா உதவவேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் ஆசைப்படுகிறார். நியாயமான ஆசைதான். வைதீக நூல்களில் சுமேரியாவில் பயிலப்பட்ட மதம் ஹிந்து மதங்கள் என்று சொல்லும்படியான தகவல்கள் இருக்கின்றன. மௌரிய அசோகனின் பேரரசு ஈரான் வரை பரவி இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலங்களில் வைதீக தர்மம் சார்ந்த மதங்கள் இருந்ததை மறுப்பது கடினம். எனவே, ஒரு சக மானுடனாக ஆசிரியரின் குரல் ஒலிப்பது எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து எழும் பந்தத்தின் விளைவு.

இரு கேள்விகள்: வடக்கு ஈராக்கில் விவசாயம் நடக்கும்போது, தெற்கு ஈராக்கில் விவசாயம் நடக்க அந்த நாட்டு (தற்போதைய) அரசு ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? அந்த நாட்டு அரசே ஆர்வம் காட்டாதபோது இந்தியாவின் தன்னார்வ ஆதரவு என்ன பலனைத் தந்துவிட முடியும்?

சுமேரியர்களுடன் உள்ள கலாச்சாரத் தொடர்புகளைப் பற்றி (மட்டும்) கோன்ராட் எல்ஸ்ட் சொல்வது:

Indian-Mesopotamian connections relevant to the Urheimat question have to be sought in a much earlier period. Whether the country Aratta of the Sumerian sources is really to be identified with a part of the Harappan area, is uncertain; the Sumerian legend Enmerkar and the Lord of Aratta (late 3rd millennium BC) mentions that Aratta was the source of silver, gold and lapis lazuli, in exchange for grain which was transported not by ship but over land by donkeys; this would rather point to the mining centres in mountainous Afghanistan, arguably Harappan colonies but not the Harappan area itself. However, if this Aratta is the same as the Indian AraTTa (in West Panjab) after all, it has far-reaching implications. AraTTa is Prakrit for A-rASTra, �without kingdom�. The point here is not its meaning, but its almost Middle-Indo-Aryan shape. Like sapta becoming satta in the Mitannic text, it suggest that this stage of Indo-Aryan is much older than hitherto assumed, viz. earlier than 2000 BC.

4.5.2. The Sumerian connection

At the material high tide of the Harappan culture, Mesopotamia had trade contacts with Magan, the Makran coast west of the Indus delta, with Bad Imin, �the seven cities�, and with Meluhha, the Indus valley. The name Meluhha is probably of Dravidian origin: Asko Parpola derives Meluhha, �to be read in the early documents with the alternative value as Me-lah-ha�, from Dravidian Met-akam, �high abode/country� (with mel/melu, ‘high’, being the etymon of Sanskrit Meru, the cosmic mountain).38 Meluhha is the origin of Sanskrit Mleccha, Pali Milakkhu, ‘barbarian’39: because of the unrefined sounds of their Prakrit and because of their cultural impurity (whether by borrowing foreign elements or simply by an indigenous decay of existing cultural standards), the people of Sindh/Meluhha were considered barbarian by the elites of Madhyadesh (the Ganga-Yamuna doab) during the Sutra period, which non-invasionists date to the late 3rd millennium BC, precisely the period when Mesopotamia had a flourishing trade with Meluhha.

The search is on for common cultural motifs between the Harappan culture and Sumer. One element in literature which strikes the observer as meaningful, is this: according to the account given by the Babylonian priest Berosus, the Sumerians believed their civilization (writing and astronomy) had been brought to the Mesopotamian coast by s sages, the first of whom was one Uana-Adapa, better known through his Greek name Oannes. He was a messenger of Enki, god of the Abyss, who was worshipped at the oldest Mesopotamian city of Eridu. Like the Vedic ‘seven sages’, meaning both the seven clans of Vedic seers as well as the seven major stars of Ursa Maior, these seven sages are associated with the starry sky; like the Matsya incarnation of Vishnu, Oanness’ body is that of a fish. The myth of the Flood, wherein divine guidance helps the leader of mankind (Sumerian Ziusudra, Sanskrit Manu, Akkadian Utnapishtim, Hebrew Noah) to survive, is another well-known common cultural motif.

The antediluvian kings in Sumer are said by Berosus to have ruled for 120 periods of 3,600 years, or 432,000 years; epochs of 3600 years were in use among Indian astronomers, and the mega-era of 432,000 is equally familiar in India as the scripturally estimated (inexact) number of syllables in the Rg Veda, and as the �high� interpretation of the length of the Kali-Yuga .40 Rather than being a late borrowing, this number 432,000 may well be part of the common IE heritage. At least implicitly, it was present in Germanic mythology, which developed separately from Hindu mythology for several millennia before Berosus (ca. 300 BC): 800 men at each of the 540 gates of Wodan�s palace makes for a total of 432,000. This does not prove any far-fetched claim that �the gods were cosmonauts� or so, but it does show that early Indo-European had a world view involving advanced arithmetic (Sanskrit being the first and for many centuries the only language with terms for �astronomical� numbers), and that they shared some of it with neighbouring cultures.

We may be confident that a deeper search, more alert to specifically Indian contributions than is now common among sumerologists, will reveal more connections. Through the Hittites, Philistines (i.e. the �Sea Peoples� originating on the Aegean coasts and settling on the Egyptian and Gaza coasts in ca. 1200 BC), Mitannians and Kassites, elements of IE culture were known throughout West Asia. Even ancient Israelite culture was culturally much more Indo-European than certain race theorists would like to believe.

http://koenraadelst.bharatvani.org/books/ait/ch45.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈராக் – ஓர் அறிமுகம்

உலக நாகரிகத்தின் தொட்டில்கள் என அறியப்படும் யூஃப்ரடிஸ் (பாபிலோன் அருகில் ஓடும்போது இதன் பெயர் ஃபராத்) மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா அல்லது இன்றைய ஈராக். மெசபடோமியா என்ற வார்த்தைக்கு ‘இரு நதிகளின் நாடு ‘எனப்பொருள். உலகின் முதல் மனிதன் குடியேறி, நாகரிகங்களை வளர்த்ததும், எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டதும், உலகின் முதல் சட்டங்களை இயற்றியதும், ஒரு முழுமையான மக்கள் சமுதாயமாக இருந்ததும், விவசாயம், மீன்பிடித்தொழில், கைத்தொழில்கள் என எல்லாம் வளர்ந்ததும் இங்கேதான். இதன் தொன்மம் கிறிஸ்து பிறப்பதற்கு 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

ஈராக்கின் முதல் குடிகளாக அறியப்பட்டவர்கள் அக்காடியர்கள் என்போர், அதன் பின்னர் வந்தவர்கள் சுமேரியர்கள். இவர்களின் காலத்து நாகரிகம் சுமேரிய நாகரிகம் என்று அறியப்படுகிறது. அதன் பின்னர் வந்தவர்கள் அசிரியர்கள். அசிரியர்களுக்குப் பின்னர் பாபிலோனியர்கள். இதன் தொடர்ச்சி பல்வேறு ஆட்சிகளுக்கு மாறி ஒட்டோமன் காலம்வரை வந்து அதன் பின்னர் பிரித்தானியர்கள் கையிலிருந்து இன்றைய ஈராக் வரை வந்துள்ளது.

மன்னராட்சியில் இருந்த ஈராக் 1932ல்தான் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1958 வரை மன்னராட்சியே நீடித்தது. மக்கள் புரட்சியால் மன்னராட்சி அகற்றப்பட்டு சுதந்திர ஈராக்காக தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை கிட்டதட்ட 60 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு ஆட்சியாளர்களின் கையில் ஈராக் சிக்கி, ஜனநாயகம் என்ற ஒன்று மலர்வதற்குமுன் சதாம் ஹுசைன் கையில் மாட்டி, கொடுங்கோல் ஆட்சியில் சின்னாபின்னமாகியது. ஈராக்கிய மக்கள் இப்போதுதான் சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். ஈராக் குடியரசு என்ற பொருளில் இன்றைய ஈராக் ‘ரிபப்ளிக் ஆஃப் ஈராக்’ என்றழைக்கப்படுகிறது. இன்றைய ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல் லப்பாதி. இவருக்கு முன்புவரை இருந்த பிரதமர் நூர் அல் மாலிக்கி. அவரது ஆட்சிக்காலத்தில்தான் ஐ.எஸ் என்றும் இஸ்லாமிய நாடு என்றும் தன்னை அழைத்துக்கொள்ளும் இஸ்லாமியக் கொடூரர்கள் ஈராக்கின் மீதும், சிரியாவின் பகுதிகள் மீதும் படையெடுத்து இரு நாடுகளிலும் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமதாக்கிக்கொண்டு ஆண்டு வருகின்றனர். அந்தக் காரணத்தைச் சொல்லி அவரை ஆட்சியிலிருந்து அகற்றி ஹைதர் அல் லப்பாதியை பிரதமராக்கினார்கள்.

இன்றைய சுதந்திர ஈராக்காவது முழுமையானதா என்றால் அதுதான் இல்லை. வெளியே தெரியாவிட்டாலும், சட்டபூர்வ அனுமதி இல்லாவிட்டாலும் ஈராக் இன்றைய தேதியில் மூன்று பகுதிகளாகி உள்ளது. ஒன்று மெயின்லாண்ட் ஈராக் எனப்படும் பகுதிகள், குர்திஸ்தான் எனப்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பகுதி. எர்பில் என்ற நகரை தலைநகராகக் கொண்டுள்ளது. ஈராக்கில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக ஆவதே இவர்களின் லட்சியம்.  மூன்றாவது, இவற்றைத்தவிர ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஐஎஸ் என்ற பயங்கரவாதக் குழு பிடித்து வைத்துள்ள பகுதிகள்.

ஈராக்கின் பொருளாதாரம் இன்றைய நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை நம்பியே உள்ளது. ஈராக்கின் மொத்த எண்ணெய் வளத்தின் எழுபது சதவிகிதம் ஈராக்கின் தென் மாகாணமான பாஸ்ராவில் உள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தின் ஆட்சியாளர்கள் இத்தனை எண்ணெய் வளம் உள்ள பாஸ்ராவை கண்டுகொள்வதில்லை என்ற எரிச்சல் பலகாலமாய் இருந்து வருகிறது. அதன் முற்றிய நிலைக்குச் சென்று பாஸ்ரா நாடு என்ற தனிநாடு கோரிக்கையும் கிளம்பி இருக்கிறது. இன்றைய நிலையில் இது வெறும் கவன ஈர்ப்பு போலத் தென்பட்டாலும், பாஸ்ராவிகளுக்கு (பாஸ்ரா வாழ் மக்கள் பாஸ்ராவிகள், பாக்தாத் வாழ் மக்கள் பாக்தாதிகள்) கிடைக்க வேண்டிய வசதிகளை காலாகாலத்தில் செய்துகொடுக்கவில்லையெனில் நிச்சயம் இது மிகப்பெரிய தலைவலியை பாக்தாத்திற்குக் கொண்டுவரும்.

ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுருக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும்.

ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்.

history_Iraq_Persia

பாக்தாத் – ஈராக்கின் தலைநகர்

பாக்தாத் நகரம் ஈராக்கின் மையப்பகுதியில் டைகிரிஸ் நதிபாயும் கரையில் அமைந்துள்ளது. ஈராக்கின் பெரும்பான்மை ஷியா பிரிவு (60%) இஸ்லாமியர்கள். தலைநகரான பாக்தாத்திலும் ஷியாக்களே அதிகம். 1980க்கு பிறகு எந்தவித வளர்ச்சியும் இன்றி காலத்தால் உறைந்துபோன நகரமாகக் காட்சியளிக்கிறது பாக்தாத்.

பெரும்பாலான கட்டடங்களில் வளைகுடா போர்க்காலத்தில் பாய்ந்த குண்டுகளின் தாக்குதல்களை இப்போதும் காணமுடியும்.

ஷியாக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், ஸுன்னி பிரிவு இஸ்லாமியர்களும், அசிரியர்கள் என்றழைக்கப்படுவோரும், துர்க்மானியர்களும், குறைந்த சதவீதத்தில் கிறிஸ்தவர்களும், இதர சில பிரிவினரும் வாழ்ந்து வருகின்றனர். சதாம் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் வந்த அமெரிக்கர்களின் கொடூரச் செயல்களால் ஏற்பட்ட கோபத்தை ஈராக்கியர்கள் சக கிறிஸ்தவ ஈராக்கிகளிடம் காண்பிக்க, அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பித்துச் சென்றனர். இப்போது இருக்கும் கிறிஸ்தவர்களும் எப்போதும் ஒரு பயத்துடனேயே வாழ்கின்றனர். ஈராக்கியர்களுக்குள்ளும் ஷியாவா, ஸுன்னியா என்ற சண்டையில் அவர்களும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.

Iraq water

குடிதண்ணீர், மின்சாரம்

பாக்தாத்தின் குடிநீர் தேவையை டைகிரிஸ் நதி பூர்த்தி செய்கிறது. அந்த நதிநீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்குகிறது அரசு. டைகிரிஸ் நதியில் படகுப் போக்குவரத்தும் உண்டு. டைகிரிஸ் நதியின் நீர் நன்னீர் என்பதால் நன்னீர் மீன்பிடிப்பும் உண்டு. இதனால் பாக்தாத்தின் பெரும்பாலான உணவகங்களில் மீன் உணவு பிரசித்தமாய் உள்ளது.

தண்ணீரும் தடையின்றிக் கிடைப்பதில்லை. அதேசமயம், மிக மோசமாக தண்ணீர்ப்பஞ்சம் என்ற அளவிலும் இல்லை. அரசாங்கம் குழாய்களில் வழங்கும் தண்ணீர் குடிப்பதற்கு உபயோகப்படுவதில்லை. அவ்வளவு உப்புச்சுவை. முறையாக சுத்திகரிக்கப்படாததும் கூட. இதனால் ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் கேன்களிலும், சிறிய பாட்டில்களிலும் நல்ல குடிநீர் வாங்கி பயன்படுத்தவேண்டிய சூழல். ஈராக்கியர்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி குடிதண்ணீருக்குப் போவது அவர்களின் சாபங்களில் ஒன்று.

பாக்தாத்தை ஒப்பிடும்போது பாஸ்ராவில் தண்ணீர் இன்னும் மோசம். கிட்டத்தட்ட கடல்நீரை ஒத்த உப்புச்சுவையுடனே தண்ணீர் குழாய்களில் வருகிறது. அதுவே குளிக்கவும், துணிதுவைக்கவும், இதர வீட்டுத்தேவைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நஜஃப், கெர்பலா பகுதிகளிலும் இதே நிலை. ஆனால், நிலத்தடிநீரும் இந்தப் பகுதிகளில் கிடைக்கிறது.

சதாம் மறைவுக்குப் பின்னர் புதிய மின்சாரத் திட்டங்கள் ஏதுமின்றியே நாடு இருந்திருக்கிறது. இருக்கும் வசதிகளைக் கொண்டு மின்சாரத்தைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தனர். 2014 முதல் போர்க்கால அடிப்படையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டிக்கொண்டுள்ளனர். இவை வேலை முடிந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் 2017 வரை ஆகலாம். பொதுமக்கள் மின்சாரத் தேவையைச் சமாளிக்க அவரவர்கள் வீட்டில் தனியாகவோ அல்லது தெருவுக்கு ஒன்றுவீதம் ஜெனரேட்டர்கள் அமைத்தோ மின்சாரம் இல்லாத நேரங்களில் மின்சாரத்தைப் பெறுகின்றனர். ஆகும் செலவை அவர்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றனர். பலருக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு விஷயமாக இந்தத் தனியார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளது. இவர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என்பதால் அரசாங்க மின்சாரக் கம்பத்தையே தங்களின் வயர்களைக் கொண்டுசெல்லப் பயன்படுத்துகின்றனர். முறையான வயரிங் ஏதுமின்றி கொத்து கொத்தாய் வயர்கள் அபாயகரமாய் ஒவ்வொரு தெருவிலும் தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

iraq-electricity-wires-Power

போக்குவரத்து

ஈராக்கில் தொழில்துறை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் அல்லது தொழில்துறை என்ற ஒன்று இல்லாததால் பெரும்பாலான இளைஞர்களுக்கு டாக்ஸி ஓட்டுதலே மிக முக்கிய தொழில்.

ஈரானிலும்  சீனாவிலும் தயாரிக்கப்பட்ட கார்கள் 10,000 டாலர்களுக்கு கிடைக்கின்றன. அதை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகின்றனர். பாக்தாத் மட்டுமல்ல, ஈராக்கின் பெரும்பான்மையான நகரங்களில் டாக்ஸிகள் மூலமே பெருவாரியான போக்குவரத்து நடக்கின்றது. ஈராக்கின் போக்குவரத்துத்துறை இப்போதுதான் சீன அரசிடமிருந்தும், கொரிய அரசிடமிருந்தும் வாங்கிய அடுக்குமாடிப் பேருந்துகளைப் புழக்கத்தில் விட்டிருக்கிறது. ஆனால், எந்தக் குறிப்பிட்ட கால அட்டவணையையும் பின்பற்றாது, எப்போதாவது வரும் என்ற அளவிலேயே உள்ளது.

இந்த சிறு சிறு டாக்ஸிகள் தவிர இரு சக்கர வாகனத்தைக் கொஞ்சம் மாற்றி வடிவமைத்து மூன்று சக்கர வாகனமாக்கி அதில் கிட்டத்தட்ட 10 பேர்கள் அமர்ந்துசெல்லும் அளவுக்கு இருக்கைகள் அமைத்து, நம் சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் போல ஓட்டுகின்றனர். இரு கிலோமீட்டர் பயணம் செய்ய 500 ஈராக்கிய தினார். அதாவது நம்மூர் மதிப்பில் 30 ரூபாய்.

இவை தவிர 20 பேர்கள் அமரும் வேன்களும், நீண்ட தூரங்களுக்கும் பாக்தாத் நகருக்குள்ளும் சிறு பேருந்துகள் போல செயல்படுகின்றன. எங்கே ஏறினாலும், இறங்கினாலும் 30 ரூபாய் என்ற அளவிலும், குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் இரு மடங்காகவும் வசூலிக்கின்றனர்.

வெளியூர்களுக்குச் செல்ல டாக்ஸிகளும், மினி வேன்களும் அரசுப் பேருந்துகளும் உள்ளன. பொதுமக்கள் தனியார் வேன்களையே அதிகம் நம்புகின்றனர். நம்மூரில் தனியார் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர். பயண நேரம் கிட்டத்தட்ட 6 மணி நேரம். இரு இடங்களில், உணவுக்காகவும் நிறுத்துவார்கள்.

ரயில்வண்டிகள்

ஈராக்கின் இருப்புப்பாதை மற்றும் ரயில் வண்டிகள் சதாம் காலத்தில் இந்தியாவால் அமைக்கப்பட்டவை. மீட்டர்கேஜ்களாக இருந்தன. தொடர் போரினாலும், இருப்புப்பாதைகள் பெருமளவு சேதமடைந்ததாலும் 25 ஆண்டுகளாக ரயில்சேவை என்ற ஒன்று இல்லாமலிருந்தது. தற்போது பாக்தாத் – பாஸ்ரா ரயில் சேவை சீன ரயில் பெட்டிகளுடன் இயங்கிக்கொண்டுள்ளது. மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றி இயக்கிக்கொண்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்கள் மிதமான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. அதனால் ஷேர் டாக்ஸியில் 6 மணி நேரத்தில் பாஸ்ரா செல்ல முடியும்போது இந்த ரயில்கள் 12 மணி நேரத்துக்குக் குறையாமல் எடுத்துக்கொள்கின்றன.

Iraq_Tour_Travels_Wiki_Baghdad_International_Airport

விமான சேவைகள்

வளைகுடா போருக்கு முன் கொடிகட்டிப்பறந்த ஈராக்கி ஏர்வேஸ் எனும் அரசாங்க நிறுவனம் போருக்குப்பின்னர் பல விமானங்களை இழந்து, பலநாடுகளால் திருடப்பட்டு கிட்டத்தட்ட அழிந்த நிலையில் இருந்தது. அது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளூர் விமான சேவைகளை பாஸ்ரா, மொசுல், எர்பில், நஜஃப், சுலைமானியா ஆகிய நகரங்களுக்கும், துபாய், அங்காரா, லெபனான், அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய வெளிநாடுகளுக்கும் தன் சேவையை நடத்துகிறது. எமிரேட்ஸ், இதிஹாத், கத்தார் ஏர்வேய்ஸ் போன்ற விமான சேவையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே அதன் சேவைகள் உள்ளன. மிகப்பழமையான விமானங்களே கடந்த ஆண்டுவரை இயக்கப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 100 புதுவிமானங்களுக்கு ஈராக்கி ஏர்வேய்ஸ் ஆர்டர்கள் கொடுத்துள்ளது. அவைகள் வந்தால் நிலைமை சீரடைந்து விமான சேவையில் கௌரவமான இடத்தைப்பெறும்.

விமான நிலையத்திற்குள் செல்வதற்குள் கிட்டத்தட்ட ஏழு கடல்தாண்டி, ஏழு மலைதாண்டி செல்வதைப்போன்ற பிரமை ஏற்படும். அது ஏன் என்பது கீழே.

பறப்பதென்னவோ ஒரு மணி நேரம். ஆனால், 4 மணி நேரம் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்கும்படி வேண்டுகின்றனர் பாக்தாத் விமான நிலையத்தார்.

ஏர்போர்ட்டுக்கு 4 கிலோமீட்டர் முன்னதாகவே நாம் இறங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விமான நிலையமே வைத்திருக்கும் ஜி எம் சி அல்லது செவர்லேயில் ஷேரிங் டாக்ஸியில் விமான நிலையம் நோக்கிப் பயணம். தற்போது ஏர்போர்ட் டாக்ஸி என்ற கம்பெனியிடம் முழுக்காண்ட்ராக்டுகளையும் அளித்திருக்கின்றனர். ஒரு பயணத்திற்கு 31 அமெரிக்க டாலர் அல்லது 40,000 ஈராக்கிய தினார். இதுதவிர விமான நிலையமே இலவசமாய் இயக்கும் பேருந்துகளும், குறைந்தகட்டணத்தில் ( 10,000 தினார் = 8 டாலர்) இயங்கும் பேருந்துகளும் உண்டு.

முதலில் ஒரு செக்போஸ்ட். பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் இருக்கிறதா என சோதிக்க.

அடுத்தது மோப்ப நாய்கள் வந்து செக் செய்யும் செக் போஸ்ட். வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கி தூரமாய்ப் போய் நிற்க வேண்டும்.

அதற்கு அடுத்த செக் போஸ்ட்டில் மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் பரிசோதனை மற்றும் லக்கேஜ் செக்கிங். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கீழே எடுத்துப்போட்டு செக்கிங். ஈராக்கியர்களுக்கு தாவு தீர்ந்து விடும். இந்தியன் என்பதால் கொஞ்சம் விடுதலை.

அதன் பின்னர் மீண்டும் எக்ஸ்ரே ஸ்கேனிங். நமக்கும் ஸ்கேனிங்.

ஏர்போர்ட் வந்தாயிற்று. மீண்டும் சாமான்களுக்கு எக்ஸ்ரே ஸ்கேனிங் மற்றும் நமக்கு ஸ்கேனிங்.

அடுத்து ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தாயிற்று. இப்போது உங்கள் விமானம் புறப்பட 1 மணி நேரம் முன்பு மட்டுமே செக்-இன் கௌன்டருக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

அனுமதித்த பின்னர் மீண்டும் ஸ்கேனிங். லாப்டாப்பை வெளியே எடுத்து எல்லா சாமக்கிரியைகளும் மீண்டும்.

அடுத்து போலிஸின் உடல் சோதனை. அப்பாடா என செக்-இன் கௌன்டர் வந்து பெட்டியைப் போட்ட பின்னர்தான் நிம்மதி.

இப்போது இமிக்ரேஷன். பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். அரைவலில் போட்டோவும் எடுப்பார்கள்.

இதைத் தாண்டியபின்னர்தான். பெல்ட், வாட்ச் எல்லாம் எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

ஒருவகையில் இத்தனை செக்கிங் இருப்பதால்தான், பாக்தாதே பற்றி எரிந்தாலும் இன்றுவரை ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பொழுதுபோக்குகள்

சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில் பாக்தாத் நகரத்தில் மேலை நாகரிகமும், பார்களும், நைட் கிளப்புகளுமாக உல்லாச வாழ்வு கொடிகட்டிப் பறந்தது. மேலும், மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தமையால் மக்கள் எளிதாக வெளியே வரமுடிந்திருக்கின்றது. ஆனால், இன்றைய பாதுகாப்பற்ற சூழலில் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கே அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதுவேண்டுமானாலும், எங்குவேண்டுமானாலும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்ற நிலை இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுகை குறைவே. இருப்பினும், டைகிரிஸ் நதியை ஒட்டியுள்ள ஹோட்டல்களிலும், பார்க்குகளிலும் மக்கள் கூட்டம் மாலை வேலைகளில் அலைமோதுகிறது.

கூட்டமாக அமர்ந்து ஹூக்கா அருந்தியபடியே, ஈராக்கிய தேநீர் அருந்துவதும், நம்மூர் தாயக்கட்டைகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டும், பில்லியர்ட்ஸ், சீட்டுக்கட்டு போன்றவைகளை சிறுசிறு கிளப்களில் சென்று விளையாடுவதும் இங்கே முக்கியமான பொழுதுபோக்கு.

சட்ட அனுமதி இல்லாமல் இயங்கும் இரவுநேர கிளப்களும் உண்டு.

ஈராக்கிய சினிமா

ஒருகாலத்தில் சினிமா எடுக்கும் கேந்திரமாக விளங்கிய ஈராக் சதாம் காலத்திற்குப் பின்னர் அப்படியே இருண்ட காலத்திற்குச் சென்றுவிட்டது. இரவு நேர நடனங்களும், நாடகங்களும், சினிமாக்களும் ஈராக்கிய மக்களின் மாலைநேரப் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்று பாழடைந்த சினிமா கொட்டகைகளையும்  நாடக அரங்குகளையுமே பார்க்கக் கிடைக்கிறது. பழைய ஈராக்கிய சினிமாக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்குமா என்பதே தெரியவில்லை.

தற்போது பாக்தாத்தில் கராடா என்ற இடத்தில் ஒரு நாடக அரங்கு செயல்படுகிறது. அதில் அரசாங்கத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் நாடகங்களும், மதரீதியான நாடகங்களுமே பெரும்பாலும் போடப்படுகின்றன. மாதம் இரண்டு முதல் 3 நாடகங்கள் நடந்தாலே அதிகம். உச்சநிலைப் பாதுகாப்புடன் இயங்குகின்றது இந்த நாடக அரங்கு.

Iraqis celebrate in Basra, Iraq's second-largest city, 550 kilometers (340 miles) southeast of Baghdad, Iraq, Tuesday, June 30, 2009. U.S. troops pulled out of Iraqi cities on Tuesday in the first step toward winding down the American war effort by the end of 2011. (AP Photo/Nabil al-Jurani)

உணவு மற்றும் உணவகங்கள்.

ஈராக்கின் உணவில் பெரும்பகுதி மீன் உணவு மட்டுமே. டைகிரிஸ் நதியும், யூப்ரடிஸ் நதியும் வழங்கும் அபரிமிதமான மீன்களால் உணவில் மீன் அதிகம் உண்டு. ஆடு, மாடும், கோழியும் பிரதான உணவுகளாய் இருக்கின்றன. நம் நாட்டைப்போல மசாலாக்கள் சேர்த்து உண்பதில்லை ஈராக்கியர்கள். மாமிசத்தை அடுப்புக்கரியில் சுட்டு அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு மற்றும் வினெகரில் ஊறவைத்த காய்கறிகளைச் சேர்த்து உண்கின்றனர். பெரும்பாலான ஈராக்கிகளுக்கு காரம் பிடிப்பதில்லை. இந்தியர்களைக் கண்டாலே காரம் சாப்பிட்டதுபோல ‘ஆ, காரம்’ எனச் சொல்லி சிரிப்பார்கள். நான் பச்சை மிளகாயை ஈராக்கிய ரொட்டிக்கு தொட்டுக்கொண்டு உண்பதை வேடிக்கை பார்க்கக் கூடும் அளவுக்கு அவர்களுக்குக் காரம் என்பது ஒவ்வாது.

சாலையோர உணவகங்களில் பெரும்பாலும் மேலே சொன்ன ஆடு மாட்டு மாமிசத்தைச் சுட்டு வைர வடிவில் இருக்கும் ஈராக்கிய ரொட்டியினுள் வைத்து உண்கிறார்கள். தொட்டுக்கொள்ள வினிகரில் ஊறிய காய்கறிகளும், பச்சையாக வெட்டிவைத்த வெங்காயம், தக்காளி மற்றும் கீரைகளும்.

லபான் எனப்படும் மோர் உணவுக்குப்பின்னர். அதை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் உண்டு. உணவு அருந்திய பின்னர் ஈராக்கிய தேநீர்.

ஈராக்கியர்கள் தேநீரில் சர்க்கரையை நாம் சேர்ப்பதைவிட மும்மடங்கு சேர்த்து அருந்துகின்றனர். அது தேநீரா அல்லது சர்க்கரைப்பாகா என்ற சந்தேகம் வரும் அளவில் இருக்கும்.

ஹோட்டல்கள் எல்லாம் அரபுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. அரபு உணவு வகைகளே அதிகம். மாமிசத் துண்டுகள் கலந்த ரொட்டியை நம்மூரில் ஸ்டார்ட்டர் என வழங்கப்படும் உணவுகள் போல வழங்கின்றனர். தயிரில் ஊறவைத்த வெள்ளரிக்காய், ஸ்பகட்டி, கீரைவகைகள், ஹமூஸ் எனப்படும் கொள்ளுப்பயிரை அரைத்து தண்ணீர் சேர்த்து செய்யப்படும் ஒரு பதார்த்தம் ஆகியவை அவர்களின் உணவில் பங்கு வகிக்கின்றன. மேலை நாகரிக வளர்ச்சி அங்கேயும் தென்படுகிறது. பர்கர்கள், சாண்ட்விச்கள், பீட்சாக்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அவை உலக நாடுகளின் ப்ராண்டுகளாக இல்லாமல் (பீட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி போன்றவை) உள்ளூர்த் தயாரிப்புகளாக இருக்கின்றன.

நல்ல ஹோட்டலில் மிதமாக உணவு உண்ண சராசரியாக 20 அமெரிக்க டாலர் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான ஈராக்கியர்கள் 1 டாலருக்கு கிடைக்கும் சாண்ட்விச்சுகளை சாப்பிட்டு ஈராக்கியத் தேநீரை உண்டு மதிய உணவையோ, இரவு உணவையோ நிறைவு செய்கின்றனர்.

சாலையோரக் கடைகளில் லப்லபி என்றழைக்கப்படும் வேகவைத்த கொண்டைக்கடலையை விற்கின்றனர். அதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுப்பொடி அல்லது சிவப்பு மிளகாய்பொடி, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிடுகின்றனர். ஒரு கப் 750 ஈராக்கி தினார் அல்லது முக்கால் அமெரிக்க டாலர். இதே சாலையோரக்கடைகள் வெயில் காலங்களில் பழரசக் கடைகளாக மாறிவிடும். வெள்ளரி விதையை வறுத்து விற்பார்கள்.

பெரும்பாலான ஈராக்கியர்களின் தினசரி வருமானம் 20 டாலர்களுக்கும் குறைவு என்பதால் அவர்களின் வாழ்க்கை இந்தச் சிறிய சாலையோரக் கடைகளை நம்பியே உள்ளது.

பாக்தாத்தில் ஆல்கஹால் தடையின்றிக் கிடைக்கிறது. குர்திஸ்தானிலும் ஆல்கஹால் கிடைப்பதுடன், இரவு நேர பார்களும் உண்டு. பாக்தாத்தில் பார்கள் கிடையாது. ஆனால், நம்மூர் டாஸ்மாக் போல சுகாதாரமற்ற இடத்தில் நின்றுகொண்டு குடிக்கின்றனர். இஸ்லாமில் ஆல்கஹால் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இளைஞர்களும் பெரியவர்களும் குடிக்கின்றனர். பாஸ்ராவில் பாக்தாத் போல ஆல்கஹால் பொருட்கள் விற்கும் கடைகள் கிடையாது. ஆனால், கள்ள மார்க்கெட்டில் வேண்டிய எந்தச் சரக்கும் கிடைக்கும். விலை பாக்தாத்தைவிட இருமடங்கு. இதர அரபு நாடுகளை ஒப்பிடுகையில் மும்மடங்கு.

வாழ்க்கைத்தரம் மற்றும் குடும்ப அமைப்புகள்

ஈராக்கியர்களில் பெரும் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கமும், ஏழை வர்க்கமும், பரம ஏழை வர்க்கமும் உண்டு. பெரும்பணக்காரர்கள் என்போர் ஏக்கர்கணக்கில் உள்ள பங்களாக்களில் வசிப்போர். இவர்கள் ஈராக்கிய சமுதாயத்தில் ஐந்து சதவீதம் இருக்கலாம். இதில் பூர்வ பணக்காரர்களும், சதாம் மறைவுக்குப்பின்னர் லஞ்ச லாவண்யம் மூலம் பெரும் பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு. ஒரு சாதாரண போலிஸ் கான்ஸ்டபிளின் மாதச்சம்பளம் 1500 டாலர். ஈராக்கில் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாகவே உள்ளதால் இந்த ஒரு சம்பாத்தியத்தில் குறைந்தது 10 பேராவது சாப்பிடுவார்கள்.

நாலுபேர் கொண்ட குடும்பத்திற்கு வீட்டு வாடகையின்றி மாதம் 750 டாலர்கள் தேவைப்படும். அரிசி, பலசரக்கு, குடிதண்ணீர், காஸ், அரசு மின்சாரம், தனியார் மின்சாரம், பள்ளிக் கல்விக்கட்டணம், மருத்துவம் எல்லாம் சேர்த்து.

10 பேர் கொண்ட குடும்பத்தில் 1500 டாலர் என்பது கடலில் கரைத்த பெருங்காயம். இதனால் லஞ்சம், ஊழல் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக இங்குள்ளது. ஈராக் நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் லஞ்சம் வாங்கினால் கைது செய்யப்படுவீர்கள் என்ற வாசகம் அடங்கிய படம் இருக்கும். கைவிலங்கு இட்ட ஒரு கை படத்துடன். ஆனால் பணம் கொடுக்காமல் ஒருவேலையும் ஒருபோதும் நடப்பதில்லை. அரசாங்க அதிகாரிகளை அணுக என்றே ஒரு ஏஜெண்ட் கூட்டம் இருக்கும். அவர்கள் மூலமே நமக்கு வேண்டிய காரியங்களை சாதிக்க இயலும். இவர்களை நாம் அலுவலகத்தில் சந்திக்க முடியாது என்பதால் பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த சந்திப்புகள் நடக்கும். பெரிய பெரிய உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்த ஏஜெண்டுகளை அழைத்துவருவோரும், மிகப்பெரும் பணக்கார குடும்பங்களுமே.

குடும்ப அமைப்பு

இஸ்லாத்தில் நான்கு மனைவியரை மணந்துகொள்ளுதல் தவறில்லை என்றாலும், நான் பார்த்தவரையில் அனேகருக்கும் ஒரு மனைவிக்கு மேல் இல்லை. நான்கு மனைவியை மணந்தவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர் மனதுக்கு பிடித்த பெண்ணைத்தவிர இதர மனைவியருக்கு உயிர்வாழ எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு பணம் மட்டுமே கொடுக்கிறார்.

தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் என்ற கூட்டுக்குடும்பமாகவே பெரும்பாலும் இருக்கிறது. நம்மூரைப்போலவே திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் செல்கின்றனர். மூத்த அண்ணனே அப்பாவின் ஸ்தானத்தில். தங்கைகளுக்கு மணம் செய்விப்பதும் அவரே. பெண் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்கும் (நம்மூர் வரதட்சிணைபோல) முறை இங்குள்ளது. அந்தந்த குடும்பத்தின் வசதிநிலை, குடும்ப கௌரவத்தைப் பொருத்து அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டிய தட்சணையின் அளவு மாறுபடும். திருமணத்திற்குப் பின்னரும் பெற்றோர் குடும்பத்துடன் எப்போதும் தொடர்பு உண்டு. தம்பிக்கு நல்ல வேலை கிடைத்து அமரும்வரை அவனை, அவர்களைக் தாக்க வேண்டியது அண்ணனின் கடமை. குடும்ப கௌரவம் மிக முக்கியம். தங்கையோ, அக்காளோ தவறு செய்தால் அது குடும்ப கௌரவத்தைப் பாதித்தால் சுட்டுக்கொல்லவும் தயங்குவதில்லை. தைரியமாக போலிஸ் ஸ்டேஷன் சென்று ஆமாம், நான்தான் கொன்றேன் என வாக்குமூலம் கொடுக்கின்றனர்.

குடும்பச் சண்டைகளில் துப்பாக்கிகள் பேசுவதே அதிகம். உள்ளூர் போலிஸுக்கும் அது தெரியுமென்பதால் அவர்களுக்குள் சண்டைபோட்டு பிணம் விழுந்தபின்னர் சென்று சுட்டவனைக் கைது செய்வது மட்டுமே வழமை.

ஒவ்வொருவீட்டிலும் சராசரியாக இரு துப்பாக்கிகள் உண்டு. அரசாங்கம் எல்லாத் துப்பாக்கிகளையும் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் எல்லோரும் நான்கு துப்பாக்கிகள் வைத்திருந்தால் இரு துப்பாக்கிகளை மட்டுமே அரசிடம் கொடுத்திருக்கின்றனர். சதாம் ஹுசைன் ஆட்சி தூக்கி எறியப்பட்டபோது எல்லா போலிஸும் ராணுவமும் போட்டது போட்டபடி ஓடிவிட்டனர். இந்தத் துப்பாகிகள் எல்லாம்  மக்கள் போலிஸ் ஸ்டேஷனையும், ராணுவ பேரக்குகளையும் கொள்ளையடித்துச் சேர்த்தது. அப்படி கொள்ளையடித்தவர்கள் விற்றதை வாங்கியது. மேலும், அமெரிக்க ராணுவத்தை எதிர்க்க ஈரான் நாடு ஈராக்கிய மக்களுக்கு வழங்கிய துப்பாக்கிகளும் அடங்கும். எனவே ஊருக்குள் சண்டை எனில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு சாவது என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது.

ஊர்த்தலைவர்கள் உண்டு. ஆனால் நம்நாட்டில் இருந்த கிராம முன்சீப்புகள்போல இருந்தவர்கள் இன்றைக்கு நம்மூர் வி.ஏ.ஓ அளவுக்குக் கூட மதிக்கப்படுவதில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன். பணம் படைத்தவன் வைத்ததே சட்டம்.

நாகரிகம்

நாகரிகத்தைப் பொருத்தவரை பாக்தாத் இதர நகரங்களுடன் ஒப்பிடும்போது மிக ’முன்னேறிய’ நிலையில் உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு இளம் தலைமுறையினரிடம் அதிகம் தென்படுகிறது. மினி ஸ்கர்ட்டுகள் முதல், மைக்ரோ ஸ்கர்ட்டுகள் வரை அணிந்த பெண்களையும், ஹிஜாப் அணியாத பெண்களையும் கல்லூரி வாசல்களிலும் பெரிய பெரிய ஹோட்டல்களிலும் காணலாம். பெரியவர்களைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மேற்கத்திய உடையை அணிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். சதாம் காலத்தில் இப்படி உடையணிவது இயல்பாய் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படைவாதிகளின் கையில் நாடு சென்றதால் மீண்டும் இஸ்லாமிய கலாசாரம் வந்திருந்தது. இப்போது மீண்டும் நாகரிக கலாசாரம் தொடங்கி இருக்கிறது.

ஒருவருக்கொருவர் முகமன் கூறுவதில் பெரும் அன்பைப் பொழிகின்றனர். சலாம் அலைக்கும் என ஆரம்பித்து குடும்பம், தொழில் எல்லாம் நலமா எனக்கேட்டு, கன்னத்தோட கன்னம்வைத்து முத்தமிட்டு அன்பைத் தெரிவிக்கின்றனர். ஈராக்கியர்கள் தங்கள் மனைவியரை பிற ஆடவருக்கு அறிமுகம் செய்து வைப்பதில்லை.. சாலையில் சந்திக்க நேர்ந்தாலும் பெண்கள் கொஞ்சம் தூரமாக சென்று நின்றுகொள்ளுதலே மரபாக இருக்கிறது. வீடுகளுக்கு அழைத்து உணவிட்டாலும் ஆண்களே பரிமாறுவர். ஆண்கள் இருக்கும் இடத்திற்குப் பெண்கள் வருவது இல்லை. திரை மறைவில் இருந்து சலாம் அலைக்கும் மட்டும் குரலாக எழும்.

‘மெஸ்ஸையா’ என ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அழைக்கின்றனர். அவர்களின் கலாசாரமெல்லாம் கிட்டத்தட்ட மேற்குலகின் கலாசாரமே. கைகொடுத்தல், அருகில் அமர்ந்து பேசுதல், அவர்களே நமக்கு உணவு அளித்தல் என இயல்பாய் இருப்பர்.

பாக்தாத் குறித்து மேலும் சில தகவல்களை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்

isis-controlled-area

ராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியாக்கள் என்ற ஒரு சமூகத்தைக் குறிவைத்துத் திட்டமிட்ட இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. உலகம் அதைக் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்காக, கொல்லப்படும் கூட்டம் காந்தியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டே வாழ்ந்துகொண்டிருக்கும் ஈராக்கிய ஷியாக்களுக்கு, மதத்தின் பெயரால் இன்னொரு மூர்க்க கும்பலால் வாழும் உரிமையை இழந்துகொண்டிருக்கும் ஓர் இனத்திற்கு, இன்றைய தேதியில் உதவிக்கு சக இனத்தவர் தவிர யாருமில்லை.

இஸ்லாமின் ஷியா, ஸுன்னி பிரிவு சண்டையின் உச்சமே இன்று ஈராக் மற்றும் சிரியாவை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நடந்துகொண்டுள்ளது. தினமும் ஈராக்கின் (குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் குர்திஸ்தான் நீங்கலாக) அரசுக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு நகரை வன்முறைக் கும்பல் கைப்பற்றுகிறது. பின்னர் அந்த நகரத்தில் இருக்கும் ஷியாக்களில் ஆண்களைக் கொல்லுதல், பெண்களை அடிமையாக்குதல், பாலியல் வன்முறை, கூட்டுவன்புணர்வு செய்து கொடூரமாகக் கொல்லுதல் என நாகரிக உலகம் காண விரும்பாத, சரித்திரத்தில் எப்போதோ நடந்ததாக படித்த விஷயங்களை உலகம் இன்றைக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

சில மாதங்கள் முன்புவரை ஈராக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த ராணுவ முன்னேற்றங்களைக் கண்டு கொண்டிருந்தது. ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பைஜி ரிஃபைனரியை ஐஎஸ்-ஸிடமிருந்து மீட்டது. ஆனால், அது ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை. உள்ளூர் ஸுன்னிகளின் துணையுடன் மீண்டும் பைஜி ரிஃபைனரியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது ஐஎஸ். மீண்டும் ஈராக்கிய ராணுவம், மீண்டும் ஐஎஸ் எனக் கண்ணாமூச்சி விளையாட்டு நடந்துகொண்டுள்ளது. இன்றைய தேதியில் பைஜி ரிஃபைனரி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மை வேறாக இருக்கலாம்.

இதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த முன்னாளைய சதாம் ஹுசைன் படையின் வீரர்களும், படையில் முக்கியப் பொறுப்பில் இருந்து தலைமறைவாக இருந்தவர்களும் ஐஎஸ்-உடன் கைக்கோர்த்துக்கொண்டுள்ளனர். இதுதவிர ஸுன்னி அரபுகள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளையே இதுவரை ஐஎஸ் பிடித்து வருகிறது. ஸ்லீப்பர் செல்களின் உதவியைக் கொண்டுதான் நகரங்களை எளிதாகப் பிடிப்பதாக ஈராக்கிய ராணுவமும், பிரதமரும் சொல்கிறார்கள். ஐஎஸ் மற்றும் ஸுன்னி அரபுகளுக்கு ‘ஸுன்னி இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை ஷியா அரசாங்கம் ஆள்வதா’ என்ற எண்ணம். ஈராக்கை மீண்டும் ஸுன்னி இனத்தவர் ஆளும் நாடாக மாற்ற ஐஎஸ் உடன் அவர்கள் கைக்கோர்த்துள்ளனர். முழு ஈராக்கை இப்போதைக்கு கைப்பற்ற முடியாவிட்டாலும், ஸுன்னி இனத்தவர்கள் அதிகமிருக்கும் வடக்கு பிராந்தியத்தை முழுதாகக் கைப்பற்றுவதே நோக்கம்.

ஷியாக்கள் 60%க்கும் மேலிருக்கும் ஈராக்கில் நாட்டை ஐஎஸ்-ஸிடமிருந்தும் ஸுன்னிகளிடமிருந்தும் காப்பாற்ற இப்போதிருக்கும் ஒரே நண்பன் ஈரான் மட்டுமே. ஈரானும், ஷியா மிலிஷியாவும், ஓரளவுக்கு ஈராக்கியப் படைகளுமே இப்போது களத்தில்.

அமெரிக்கா ஈராக்குக்கு நிறைய உதவிகள் அளிக்கிறது. ஆனால். ஐஎஸ்-ஸிடமும் அமெரிக்கத் துப்பாக்கிகளும், ஆயுதங்களும் இருப்பது ஈராக்கிய ராணுவத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எப்படி அவர்கள் கைக்கு வந்து சேர்கிறதோ அமெரிக்க ஆயுதங்கள்! இதற்கு முன்னர் சவுதி அரேபிய நாட்டின் ஆயுதக்குவியல்கள், ஐஎஸ் கைவிட்டு ஓடிய இடங்களில் கிடைத்தன. இப்போது அமெரிக்காவின் தயாரிப்புகளும் கிடைக்கின்றன.

ஈராக் பிரதமரும் அமெரிக்கா, ரஷ்யா எனப் பயணம் செய்து ராணுவத் தளவாடங்களுக்கான சப்ளைகளுக்காக கையேந்திக்கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகள் கையில் லேட்டஸ்ட் தயாரிப்புகள். ஈராக்கிய ராணுவம் போதிய ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இல்லாமல் தவிக்கிறது.

சமீபத்திய நிலவரம் அன்பார் மாநிலத்தின் ரம்மாதி என்ற நகரத்தையும் சிலநாட்களுக்கு முன்னர் ஐஎஸ் பிடித்துள்ளது.  ரம்மாதியிலிருந்து பாக்தாத்தின் முக்கியச் சாலையை அடைய ஒருமணி நேரம் போதும். அதன்பின்னர் பாக்தாத்தை ஒருபக்கத்திலிருந்து தனிமைப்படுத்தி விடலாம். ரம்மாதியின் எல்லையில் இருந்து பாக்தாத் மீது தாக்குதல் தொடுக்கலாம். இதையெல்லாம் தடுக்க இயலாமல்தான் ஈராக்கிய ராணுவம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஷியா மிலிஷியா என்ற ஷியா இனப்பிரிவின் உதிரி ராணுவப்பிரிவுதான் இன்றைய தேதிக்கு உண்மையில் ராணுவத்தின் வேலையை செய்துகொண்டிருக்கிறது.

ரம்மாதி நகரம் வீழ்ந்தது ஈராக்கிய ராணுவத்தின் வரலாற்றில் மிகமோசமான பக்கமாக இருக்கும். ஐஎஸ் படைகள் வந்ததும் ஒரு சிறு சண்டைகூட நிகழாமல் ரம்மாதி வீழ்ந்திருக்கிறது.  ஈராக்கிய ராணுவம் எந்த அளவுக்குப் பயந்திருக்கிறார்கள் என்றால், கையில் சிவில் ட்ரெஸ் ஒன்று வைத்துக்கொண்டு சுற்றும் அளவுக்குப் பயந்திருக்கிறார்கள். ஐஎஸ் படையை எதிர்கொள்ள நேர்ந்தால் அப்படியே ஈராக்கிய ராணுவ உடையைக் கழற்றிவிட்டு சிவில் உடைக்கு மாறித் தப்பித்துக்கொள்ள வசதியாகக் கையில் சிவில் துணியுடன் திரிகிறார்கள்.

பாக்தாத் வீழ்ந்தால் அதன் பின்னர் மொத்த ஈராக்கும் ஐஎஸ் கையில் விழ அதிக நாட்களாகாது. அதை மீட்க நடக்கும்போரில் இன்னும் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள். சதாம் செய்ததைவிட மிக மோசமான இன அழிப்பு ஐஎஸ்-ஸால் செய்யப்படும்.

கடந்த சில நாட்களாக தீவிரச் சண்டை நடந்து வருகிறது, ரம்மாதி நகரத்தை மீட்க. ஆரம்பத்தில், அதாவது அன்பார் மாநிலத்தின் பகுதிகள் கைவிட்டுப் போக ஆரம்பித்தபோது, அன்பார் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுதல் என்பதே இலக்காக இருந்தது. இன்றைக்கோ ரம்மாதி நகரத்தை மீட்பதே இலக்காகச் சுருங்கியுள்ளது.

ஏற்கெனவே ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மோசுல் மற்றும் அதைச் சுற்றியுள்ள  நகரங்களை மீட்பதெல்லாம், இனி புதிதாய் தளவாடங்களும், வெடிமருந்துகளும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பிய பின்னரே சாத்தியம்.

ரம்மாதி நகரத்திலிருந்து இரு நாட்களுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகள் 200 பேரை ஈராக்கியப் படைகள் சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றன. ரம்மாதி நகரமீட்பில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.

நகரத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது 200 பேர்களுக்குள்தான். கிட்டத்தட்ட 2000 ராணுவ வீரர்களுக்கும் அதிகமாக இருந்தபோதிலும் ஐஎஸ்-ஸால் ரம்மாதியைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் உள்ளூரிலிருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்கள்.

பொதுஜன ஈராக்கியர்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்வதும், இழப்பதுமாக இருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு எங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அரசாங்கம் தரைவழி மற்றும் வான்வழித்தாக்குதல் நடத்திய வீடியோக்களை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறது.

இதுவரை ஒரு சில பகுதி ஸுன்னி இஸ்லாமியர்கள் தவிர எல்லோரும் ஈராக் நாட்டுக்கே தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்ற நிலை மாறி, நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. அதெப்படி, உள்ளூர் ஸுன்னி இஸ்லாமியர்களின் ஆதரவின்றி இவர்கள் இப்படி உள்ளே நுழைய முடியும் என்ற குரல் இன்னும் பலமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. உண்மையில், ஐஎஸ் இதுவரை நுழைந்து பிடித்த நகரங்களெல்லாம் ஸுன்னி இனத்தவர்கள் அதிகம் இருக்கும் நகரங்களும் பகுதிகளுமே. நியாயமாகப் பார்த்தால் ஐஎஸ் நுழைந்ததும் ஸுன்னி மக்கள்தான் மகிழ்சியுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால்,  ஐஎஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான ஸுன்னி குடும்பங்கள் கிடைத்ததை அள்ளிக்கொண்டு, அரசாங்கப்படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கும் ஓடி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம்  ஐ எஸ் பயங்கரவாதிகளை அரசாங்கத்திற்காக எதிர்த்தோம். ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள், எங்களைக் கைவிட்டு விட்டார்கள். எங்கள் நிலப்பகுதிகளில் ஐஎஸ் தாக்குதல் நடத்த வந்தபோது அரசாங்கப் படைகளை அனுப்பி வைக்க வேண்டியும் ஒரு படையும் வரவில்லை. நாங்களே எதிர்த்து நின்று உயிர்களைப் பலிகொடுத்ததுதான் மிச்சம் எனவும் ஒரு குழு புலம்புகிறது. இதன் விளைவு, ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்த இனக்குழுக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கின்றனர். இவர்களைக் குறித்த கணக்கு ஏதும் இருக்குமா எனத்தெரியவில்லை.

ஈராக்கிய மிலிட்டரியும், ஷியா மிலிஷியாவும் சேர்ந்து எத்தனைதூரம் காப்பாற்ற முடியும் எனத் தெரியவில்லை. உண்மையில் 2 மாதங்களுக்கு முன்பு இருந்த நேர்மறை எண்ணங்கள் ராணுவத்திடமோ, பொதுமக்களிடமோ இருப்பதாக தெரியவில்லை. ஹைதர் அல் லப்பாதியும் அமெரிக்காவிற்குச் சென்று வான்வழித்தாக்குதலைத் தீவிரப்படுத்தக் கோருகிறார். வான்வழித்தாக்குதல் கொண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளைத் தடுத்த நிறுத்தவில்லையெனில் எந்த ராணுவத்தாலும் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார். திக்ரித் நகரை மீட்டபோது இருந்த நம்பிக்கை இன்றைக்கு ரம்மாதி நகரம் வீழ்ந்ததில் கலைந்துவிட்டிருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை ஊட்டும் செயலென்றால், ரம்மாதியை மீட்க முழுவீச்சில் போர் நடைபெறுகிறது என்பதுதான்.

ஈராக் ராணுவம் இப்படியே ஒவ்வொரு நிலமாகப் பறிகொடுத்துக்கொண்டிருந்தால் ஷியா மிலிஷியாவும், ஈராக்கிய ராணுவமும் போரிடுவதே கெர்பலாவையும், நஜஃபையும் காப்பதற்காகத்தான் என்ற அளவில் வந்து நிற்கும். கெர்பலாவும், நஜஃபும் அழிக்கப்படுவது ஷியாப்பிரிவின் இஸ்லாத்தையே அழிப்பதுபோல. அதைக்காக்க உயிரையும் கொடுப்பார்கள்.

கடந்த மூன்று நாட்களாக (மே 25 முதல் 27 வரை) வேலை விஷயமாக பாக்தாத்தில் இருந்தேன். ஒவ்வொரு அரசு அலுவலகம், விமான நிலையம், ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் ஈராக்கிய சேனலே ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்களின் போர்க்கால பாடல்போன்ற ஒன்றை பின்னணியில் ஓடவிட்டு ஈராக்கிய ராணுவத்தினரின் சாகசங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அணிஅணியாக ராணுவ கவச வண்டிகள் புழுதி பறக்கச் செல்வதையும், ஐஎஸ் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி பீரங்கிகளால் தாக்குவதையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.

இனி யார் வந்து எப்படி இந்தப் போரை மடைமாற்றுவார்கள், யாருக்குச் சாதகமாக முடியும் என்பது சொல்லுக்கு லட்ச ரூபாய் பெறும் கேள்வி. உண்மையில் இது ஓர் இழுபறி போராகவே நீண்டு செல்ல வாய்ப்புகள் அதிகம். போரை விரும்பும் நாடுகளும், ஆயுதம் விற்க விரும்பும் நாடுகளும்கூட இந்த சதியில் இருக்கலாம். இல்லையெனில் உலகநாடுகளால் ஐஎஸ்ஸை ஆரம்பத்திலேயே அழித்திருக்க முடியும்.  அதைச் செய்யாமல் வளர விட்டுவிட்டு இன்றைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா “ஐஎஸ் குறித்து தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்” என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதையும் நம்பும் அப்பாவி அமெரிக்கர்களும் இருக்கக்கூடும்.

உலக நாடுகளின் விளையாட்டில் ஈராக் இன்னொருமுறை பகடைக்காயாகி இருக்கிறது. சாதாரண ஈராக்கியன்தான் பாவம். பார்க்கலாம், உலகம் இந்தக் கொடூரத்தைத் தடுத்து நிறுத்த முயல்கிறதா, இல்லை, முழுவதும் அழிய விட்டுவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கப்போகிறதா என.

போர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் எவ்வளவு சீரழிக்க முடியும் என்பதற்கு நாம் இன்று காணும் ஒரு சாட்சி ஈராக்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

முகப்பு » உலக அரசியல்தீவிரவாதம்

குர்திஸ்தான் – ஈராக்கின் காஷ்மீர்

ஈராக்கின் வடஎல்லையில் இருக்கும் மாகாணம் என ஈராக்கும் குர்திஸ்தானின் ஆவணங்களும் சொன்னாலும், தனிக்கொடி, தனி பார்லிமெண்ட், தனி பிரதமர், ஜனாதிபதி என தனி ராஜாங்கத்தை நடத்துகிறது குர்திஸ்தான் மாநிலம். அதன் தலைநகர் எர்பில். குர்திஸ்தானத்து மக்கள் குர்திகள் என்றழைக்கப்படுகின்றனர்.

சுலைமானியா மற்றும் எர்பில் – இவை குர்திஸ்தானின் இரு முக்கிய நகரங்கள். குர்திகளுக்குள் இருக்கும் பிளவின் எடுத்துக்காட்டும் இதுவே. ஒரு பிரிவினர் சுலைமானியா நகரில் இருப்போரே குர்திஸ்தானத்தை ஆளத்தகுதியடையவர் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எர்பிலில் இருப்பவர்களோ இதுவே குர்திஸ்தானத்தின் தலைநகர் எனச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் குர்திஸ்தான் என்பது தனிநாடாகப் பிரியவேண்டும் என்பதில் மட்டும் இருவருக்குமே ஒற்றுமை.

வலிமையான ஜனநாயகமே இதன் அடிப்படை. நம் நாட்டைப்போல சில ஊழல்கள் தேர்தலில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், தேர்தல்கள் முடிந்தவரை நேர்மையாகவே நடத்தப்படுகின்றன. சதாம்ஹுசைன் ஆட்சி அகற்றப்பட்ட நாளையே சுதந்திர நாளாகக் கருதுகின்றனர் குர்திகள். 1982ல் இருந்து சுதந்திரம் பெற்றதாகக் கருதுகின்றனர்.

 

kurdistan3

 

எண்பதுகளில் சதாம்ஹுசைன் காலத்தில் தனிநாடு கேட்டு போராடியதற்காக ரசாயன குண்டுகள் எல்லாம் வீசப்பட்டன. பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் அடைந்தனர் குர்திகள். 2006 வரைகூட சதாம் ஹுசைன், இப்படிக் கொடூரமாக குர்திகளைக் கொன்றழித்ததற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ளத்தேவையில்லை எனப் பேசி இருக்கிறார்.

அமெரிக்கப் படைகள் சதாம் ஹுசைனைக் கைது செய்து நீதிமன்ற விசாரணை நடத்தியபோது, புரட்சிப் படையைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்தில் சொன்ன வாக்குமூலம் கீழே.

அந்தப் புரட்சிப்படைதான் பெஷ்மெர்கா என்ற குர்திஸ்தானின் இன்றைய ராணுவம்.

இலியாஸ் மிகைல் என்ற முன்னாள் போராளி சதாம் ஹுசைனின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரனையின்போது அளித்த சாட்சியத்தில்  சொன்ன விஷயங்கள் :

1987ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி மாலையில் 4 போர் விமானங்கள் காலிஸிவா என்ற நகரின் மீது குண்டு மழை பொழிந்தது

ஏதோ விநோதமான வாடை வீசியது,

குண்டு வீசப்பட்டபோது பதுங்குகுழியில் தனது நண்பர் உம் அலி மற்றும் பன்னிரண்டு நண்பர்களுடன் பதுங்கிக்கொண்டிருந்ததாக மிகைல் என்ற பெண் சொன்னார்.

பின்னர் தோழர் அபு இலியாசின் சத்தம் கேட்டது, “இங்கே டாக்டர் யாராச்சும் இருக்கீங்களா?’

அவர்கள் வாந்தி எடுத்தார்கள், கண் தெரியவில்லை. அவர்களால் எதையும் பார்க்க இயலவில்லை.

ஒட்டுமொத்த நகரமும் ரசாயன குண்டுகளால் தாக்கப்பட்டிருப்பதாக தனது நண்பர் நஷ்மே தன்னிடம் சொன்னதாக சாட்சிக்கூண்டில் அமர்ந்தபடி மிகைல் கூறினார்.

குர்திய போராளிகளை விஷவாயு இட்டு கொல்ல சதாமின் படைகளுக்கு ரசாயன குண்டுகளை சப்ளை செய்த வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து மிகைல் பிற்பாடு இழப்பீடு கேட்டதாக அவர் சொன்னார்

இந்தக் காலகட்டத்தில் சதாமின் படைகளால் கொல்லப்பட்ட குர்திகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம்.

அன்று ரகசியமாய் சுதந்திரத்திற்காகப் போராடிய படையே பெஷ்மெர்கா என்றழைக்கப்படும் குர்திஸ்தானின் ராணுவம்.

இன்றைய தேதியில் ஈராக்கில் இருக்கும் மிக வலிமையான, தைரியமான ராணுவப்பிரிவு பெஷ்மெர்கா ஒன்றே. பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு களத்தில் ஆண்களுடன் சேர்ந்தே போரிடுகின்றனர். ஐஎஸ் கும்பல் மீது ஒரு குண்டுகூட சுடாமல் கிர்குக்கை மீட்டதும் பெஷ்மெர்கா படைகளே. பெஷ்மெர்கா படைகள் வருவதைக் கேள்விப்பட்டதும் ஐஎஸ் படைகள் இடத்தை காலி செய்துவிட்டு ஓடியதே பெஷ்மெர்காவின் வலிமையைச் சொல்லும்.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் நம்பிக்கையின்படி பெண்களால் கொல்லப்பட்டால் சுவர்க்கம் கிடைக்காது என்பதால், பெண்களும் உள்ள பெஷ்மெர்கா படைகளால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஓடுகின்றனர்.

எர்பில் விமான நிலையம்

துபாயின் டனாட்டாவிடம் (Dnata) விமான நிலையத்தை (பாதுகாப்பு தவிர இதர அனைத்திற்கும்) ஒப்படைத்திருக்கிறார்கள். எனவே துபாயின் குட்டி விமான நிலையத்தைப் பார்த்ததுபோல இருக்கிறது எர்பில் விமான நிலையம். அதே சுத்தம், அதே குழப்பமற்ற அறிவிப்புப் பலகைகள், மிக சுத்தமான டாய்லட்டுகள் – இப்படி எல்லாமே தரமாக.

அதேபோல போலிஸ் இமிக்ரேஷனில் நட்புடன் பேசி முத்திரை குத்தி ‘வெல்கம் டு குர்திஸ்தான்’ என முகமன் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். இராக்கில் இந்த ஒரு விமான நிலையத்தில் மட்டுமே இந்தியர்களுக்கு ‘ஆன் அரைவல் விசா’ 15 நாட்களுக்குத் தருகிறார்கள். மேலும் 15 நாட்கள் நீட்டித்தும் கொள்ளலாம். ஆனால் இந்த விசாவை வைத்துக்கொண்டு மெயின்லேண்ட் ஈராக் எனப்படும் குர்திஸ்தான் மாகாணம் தவிர இதரப் பகுதிகளுக்குச் செல்ல இயலாது. திருப்பி குர்திஸ்தானுக்கே அனுப்பி வைத்துவிடுவார்கள். இது கிட்டத்தட்ட சீனா வழங்கும் காகித விசா போன்ற செயல். ஈராக்கிற்கு தன் வலிமையைக் காட்டவும் எரிச்சலூட்டவும் இம்முறையைக் கையாள்கிறது குர்திஸ்தான்.

kurdistan1

ஈராக்கில் குர்திஸ்தானில்தான் முதன்முதலில் ஏ.டி.எம் எந்திரங்களையும் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் கடைகளையும் பார்த்தேன். 2013 முதலே அங்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன். மெய்ன்லேண்ட் ஈராக்கிற்கும், குர்திஸ்தானத்திற்கும் வசதிகளில் பெரிய வித்தியாசம். பாக்தாத் விமான நிலையத்தில் ஏ.டி.எம் எந்திரம் 2014 இறுதியில்தான் செயல்பட ஆரம்பித்தது. பாஸ்ராவில் 2015 மத்தியில் ஏ.டி.எம் எந்திரம் வந்தது. இப்போதும் மொத்த பாஸ்ராவில் 10 ஏ.டி.எம் எந்திரங்கள் இருந்தாலே அதிகம்.

டாக்ஸி கிடைத்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ஒரு திருப்பமாக வாகன ஓட்டுனரே 70 அமெரிக்க டாலருக்கு அருமையான ஹோட்டல் இருக்கிறது, பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையெனில் எயின்காவா என்ற இடத்தில் முன்னரே நீங்கள் சொல்லி வைத்திருந்த ஹோட்டலுக்கே கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார். அல் ஜவாஹிரி என்ற ஹோட்டல். 70 டாலருக்கு அருமை. இலவச காஃபி எப்போதும். காலையில் இலவச பிரேக்ஃபாஸ்ட். வைஃபை பட்டையைக் கிளப்புகிறது

இதே ஹோட்டல் பாஸ்ராவில் இருந்திருந்தால் 5 ஸ்டார் ஹோட்டல் என நாமகரணம் சூட்டி 250 டாலரும், 15 டாலர் வைஃபை வசதிக்கும் வாங்கி இருப்பார்கள். வைஃபை தொங்கும்.

எர்பில் நகரம் முழுதும் சுத்தமாய் இருக்கிறது. மீண்டும் துபாயுடன்தான் ஒப்பிட வேண்டியிருக்கிறது. சாலைகள் அனைத்தும் அடையாளங்களுடன், வேகத்தை கண்காணிக்கும் ரேடார்களுடன் இருக்கின்றன. வானுயர்ந்த கட்டடங்கள் ஒரே இடத்தில் குவியாமல் நகர் முழுக்கப் பரவி இருக்கின்றன. இந்தியர்களுக்கான மரியாதை இங்கும் இருக்கிறது.

நான் முதலில் சந்தித்தது இலங்கைத் தமிழர் ஒருவரை. எர்பில் விமான நிலையத்தில் கிளீனராக இருக்கிறார். இலங்கைப் பணம் 4 லட்சம் கொடுத்து 400 அமெரிக்க டாலர் மாதம் கிடைக்கும் வேலைக்கு வந்திருக்கிறார். மொபைல் போன் வாங்கினால் காசு செலவாகும் என இன்னும் நம்பர்கூட வாங்கவில்லையாம். எனக்கு டாக்ஸி கிடைக்கும்வரை என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பெயர் தினேஷ்.

 

 

kurdistan2

 

இந்தியா கேட் உணவகத்திற்கு உணவு அருந்தச் சென்றோம். ட்ரிப் அட்வைசர் டாட் காமில் ‘அந்த ஹோட்டலில் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பார்கள்’ என கமெண்ட் போட்டிருந்தார்கள். ஆனால் இன்று நான் சென்றிருந்தபோது அருமையான சூழலில் நல்ல இடத்தில் நல்ல சுவையில் இந்திய உணவுகள் கிடைத்தன. என்னுடன் ஒரு குர்தி, ஒரு துருக்கியர் மற்றும் ஒரு பாக்தாதியும் வந்திருந்தனர். அவர்களும் எனக்காக இன்று இந்திய உணவு வகைகளையே சாப்பிட்டனர். நல்லா இருக்கு என்றுதான் சொன்னார்கள் மூவரும். ஆனால் குர்திக்கும் துருக்கியருக்கும் நம்மூரின் காரம் சுத்தமாய் வாயில் வைக்க முடியவில்லை. அந்த ஹோட்டலில் முழுக்க முழுக்க ஆந்திரா மக்கள். சர்வர் முதல் கிளீனர்கள் வரை. சாப்பிட வந்தவர்களில் நிறைய இந்திய முகங்களைப் பார்க்க முடிந்தது.

உண்டபின்னர் காரிலேயே மீண்டும் ஒரு நகர் உலா. பார்லிமெண்ட் கட்டடம், புதிதாய் உருவாகும் கேட்டட் கம்யூனிட்டிகள், பலமாடிக் கட்டடங்கள் எல்லாவற்றையும் காண்பித்தார்.

எர்பில் நகரம் முழுக்க வட்ட வடிவ சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கு சாலையும் கிளைச்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது, எர்பில் நகரின் சுத்தம்.

அதேபோல பிரம்மாண்டமான மால்கள் எங்கெங்கு காணினும். ராயல் மால், ஃபேமிலி மால் என எல்லாம் பெரிய வடிவில். உலகத்தின் அனைத்து முன்னணி பிராண்டுகளின் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.

இந்த இரு மால்களைத்தான் உள்ளே சென்று பார்த்தேன். மத்தியக் கிழக்கின் மால்கள் போல இங்கும் முழுக்க முழுக்க இந்தியர்களே கிளீனர்கள், சர்வர்கள் எல்லாம். 100 பேர் கொண்ட டீம் ஆந்திராவின் கரீம் நகரில் இருந்தும், நிஜாமாபாத்திலிருந்தும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கும் 400 அமெரிக்க டாலர்கள்தான் சம்பளம். எவ்வளவு கொடுத்து வந்தீங்க எனக் கேட்டு அவரையும், அவர் பதிலைக் கேட்டு என்னையும் வருத்தம் கொள்ளவைக்க வேண்டாம் என அதைக் கேட்கவில்லை.

ராயல் மாலின் ஃபுட் கோர்ட்டில் இந்திய உணவு வகைகள் எல்லாம் கிடைக்கின்றன. நான் நெய் தோசை சாப்பிட்டேன். இராக்கில் இது கிடைப்பதே பெரிய விஷயம் என்பதால் சுவை பற்றிப் பேசப்போவதில்லை..

விலைவாசியைப் பொருத்தவரை கிட்டத்தட்ட பாக்தாத் மற்றும் பாஸ்ராவைப் போலத்தான். ஆனால், இங்கு எல்லாமே தரமாக.

பாஸ்ரா மற்றும் பாக்தாத்தைப் பொருத்தவரை டாக்ஸிக்கள் என்றாலே சீனா அல்லது ஈரானில் தயாரிக்கப்பட்ட டப்பா கார்கள்தான். இங்கு ஒரு சீன காரோ அல்லது ஈரானிய காரோ காணக் கிடைக்கவில்லை.

அதேபோல டீக்கடைமுதல் எந்த உணவகம் சென்றாலும் மிக சுத்தமாய் வைத்திருக்கின்றனர். யாரும் குப்பையைத் தெருவில் போடுவதில்லை. சாலைகள் பளிச்சென இருப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

குர்திஸ்தான்… குர்திஸ்தான்… குர்திஸ்தான்… இதுதான் எங்கும் எதிலும் காணக்கிடைப்பது.

ஈராக்கை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டால் நாளை படையெடுத்து குர்திஸ்தானை அழித்து விடுவார்கள் என்பதால் அரசு அலுவலகங்களில் ஈராக்கியக் கொடியும் உப்புக்குச் சப்பாணியாக உண்டு. ஆனால் எந்த அரசு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகைகளிலும் அரபி கிடையாது. எல்லாம் குர்தி எழுத்துக்கள். குர்திஸ்தானத்துக் கொடியை தூரத்திலிருந்து பார்த்தால் நம் நாட்டுக் கொடிபோலவே இருக்கிறது.

அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்த பின்னர் சதாமின் கோபத்தின் வடிகாலாக குர்திஸ்தான் இருந்திருக்கிறது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அழித்திருக்கிறார். இப்போது நான் பார்க்கும் இந்த வளர்ச்சியை வெறும் பத்தாண்டுகளில் அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. ஈராக்கில் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்ட இனம் குர்திகளே.

எர்பில் வந்ததுமே புத்துணர்ச்சியும் வந்து விடுகிறது. அதன் அழகான தெருக்கள், தடையற்ற மின்சாரம், சுவையான நீர், பயமில்லாச் சூழல் எல்லாம் அப்பாடா என்ற நிம்மதியைத் தருகிறது.

 

 

kurdistan4

 

ஈராக்கின் காஷ்மீர் என ஏன் சொன்னேன் என்றால், குர்திஸ்தானின் மலை முகடுகளும் எர்பில் நகரமும் பனிப்பொழிவுடன் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். மலைவாழிடங்களின் தொழில்களான மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கார்பெட்டுகள் செய்தல் என குளிர்காலத்தில் எர்பில் நகரமும் அதன் சுற்றுவட்டாரங்களும் அழகாகி விடுகின்றன. மேலும் குளிர்காலச் சுற்றுலா நடத்தும் அளவுக்கு சுற்றுலாத் துறையையும் வலிமையாக வைத்திருக்கின்றனர்.

டூரிஸ்ட்டுகள் வருவதற்கு முக்கியக் காரணம் தட்பவெப்பம். மேலும் ரம்மியமான இயற்கைச் சூழல். மெயின்லேண்ட் ஈராக்கில் தங்குவதற்குப் பயப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான வசதியான இடமாக இருப்பதால் எர்பிலுக்கு எப்போதும் கூட்டம் உண்டு.

மேலும் காலா (Ghala) என்றழைக்கப்படும் உலகின் மிகப்பழமையான மனிதன் வாழிடமும் இங்கிருக்கிறது. கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகள் பழமையானது. இப்போது யுனெஸ்கோவும் குர்திஸ்தான் அரசாங்கமும் இணைந்து அதை சீர் செய்துகொண்டு இருக்கின்றனர்.

உலகின் முன்னணி மருத்துவமனைகள் எர்பிலில் கிளைகள் திறந்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் குர்திஸ்தானத்தில் கிடைப்பதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள், சேவைகள்.

இரவு வாழ்க்கையும் எர்பில் நகரத்தில் பிரசித்தி வாய்ந்தது. மிக அழகான பார்களும் பப்புகளும் நைட் கிளப்புகளும் நிறைந்த ஊர். மிகச்சுதந்திரமாக மக்கள் எந்தவித பயமும் இன்றி எத்தனை மணியானாலும் சுற்றி வரும் ஊர்.

குர்திஸ்தானத்து பெண்களும் மிக அழகு. மேற்கத்திய நாகரிகத்தையே பெரிதும் விரும்பும், சுதந்திரமாக இயங்கும், அமெரிக்கர்களுடன் நெருக்கத்தில் இருக்கும் குர்திகளைக் கண்டாலே மெயின்லேண்ட் ஈராக்கில் இருக்கும் ஷியா, ஸுன்னி இருவருக்குமே பிடிப்பதில்லை. மேலும் குர்திஸ்தானில் யூதர்களும், இஸ்ரேலில் குர்திகளும் உண்டு என்பதும் அவர்களுக்கு எரிச்சல். இதை நேரடியாகச் சொல்லாமல் ‘அவர்கள் (குர்திகள்) எப்போதும் ஈராக்கின் துரோகிகள்’ என்பதே பெரும்பாலான ஈராக்கியர்களின் நம்பிக்கை. சதாம் ஹுசைன் காலத்தில் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்ட பொய் – ‘ஈரான் ஈராக் போரில் குர்திகள் ஈரானுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, அவர்களை துரோகிகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.’

ஒருகாலத்தில் மத்திய அரசாங்கத்தின் பார்வையில் துரோகிகளாகவும், ஐந்தாம் படையாகவும் குர்திகள் கருதப்பட்டதாலும், இன்றும் தனிநாடு கேட்டுப் போராடிக்கொண்டிருப்பதாலும், பனிப்பொழிவு இருக்கும் அழகிய மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதாலும் குர்திஸ்தானம் ஈராக்கின் காஷ்மீரேதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஷியாவா? ஸுன்னியா??

Time_Islam_Muslim_Covers_Books_Magazines_SunniShia

உலகில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஷியாக்கள் என்றும் ஸுன்னிகள் என்றும் இருபிரிவாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த பிரிவு முகமது நபியின் இறப்புக்குப்பின்னர் இஸ்லாமியர்களை யார் வழிநடத்துவது என்ற பிரச்சினையில் ஆரம்பமானது.

உலகின் இஸ்லாமிய மக்கள்தொகையில் பெருவாரியோனோர் ஸுன்னி இன மக்கள், அவர்கள் உலக இஸ்லாமிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் பேர். மீதமுள்ளோர் ஷியாக்கள் மற்றும் இன்ன பிற பிரிவுகளான அகமதியாக்கள் போன்றோர்.

இந்த இருபிரிவினரும் பல நூற்றாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து இருந்ததுடன் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

பொது இடங்களில் ஒருவருக்கொருவர் சேர்ந்திருப்பதில்லை என்றாலும் ஈராக்கின் நகரப்பகுதிகளில் சமீபகாலம்வரை ஷியா – ஸுன்னி கலப்புத்திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவர்களுக்குள்ளான பிரிவு மதக்கொள்கை, சம்பிரதாயங்கள், சட்டங்கள், மற்றும் மத அமைப்புகளில் உள்ளது. இரு பிரிவுகளின் மதத்தலைவர்களும் எப்போதும் யார் சரி என்ற போட்டியிலேயே இருப்பார்கள்.

லெபனான், சிரியா,ஈராக், பாக்கிஸ்தான் நாடுகளில் இந்த இருபிரிவினருக்குள் ஏற்படும்சண்டைகளால் சமூகங்கள் பிரிந்து கிடக்கின்றன.

ஸுன்னிகள் என்போர் யார்?

ஸுன்னிகள் தங்களை பழமைவாத, பாரம்பரிய இஸ்லாமியர்கள் என அழைத்துக்கொள்கின்றனர்.

ஸுன்னி என்ற வார்த்தை ”அஹ்ல் அல் சுன்னா” என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்தது. அதாவது, பாரம்பரியத்தின் மக்கள் என்ற பொருள்படும். ஸுன்னிகள் குரானில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தீர்க்கதிரிசிகளையும் ஏற்றுக்கொள்வோர், ஆனால், முகமது நம்பியே இறுதித்தூதர் என்பது அவர்கள் நம்பிக்கை. முகமது நபிக்கு பின்வந்தோரெல்லாம் தற்காலிக நபர்களே என்பதும் அவர்கள் கொள்கை.

ஷியா பிரிவினருக்கு மாற்றாக ஸுன்னி மதகுருமார்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வருகின்றனர். ஸுன்னி பாரம்பரியம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இஸ்லாமிய சட்டத்தி உறுதியாக பின்பற்றுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஷியாக்கள் என்போர் யார்?

இஸ்லாமிய சரித்திரத்தின் ஆரம்பத்தில் ஷியாக்கள் ஒரு அரசியல் கட்சிபோல செயல்பட்டவர்கள். அலியின் கட்சி என்ற பொருளில்.

முகமது நபியின் மறைவுக்கு பின்னர் நபியின் மருமகனான அலி மற்றும் அவரது வழித்தோன்றல்களே இஸ்லாமியர்களை வழிநடத்த வேண்டும் என்ற உரிமையைக்கோரினர். குடும்பச்சண்டைகளாலும், வன்முறைகளாலும், அலியும் கொல்லப்பட்டு மக்கள் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து அவரது காலிஃபேட் ( அவர் நடத்திய அரசாங்கம்) முழுதும் அழிந்தது

அலியின் சகோதரரான ஹுஸ்ஸைன் அவரது குடும்பத்துடன் அலி கலிஃபாவாக இருந்த குஃபாவுக்கு அழைக்கப்பட்டு (ஹுஸ்ஸைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக அழைப்பதாக கூறி அழைத்திருந்தனர்) அங்கு நடந்த போரில் ஹுஸ்ஸைனும்,அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். கூஃபாஎன்பது அலி நடத்திய காலிஃபேட்டின் தலைநகரம். இது இன்றைய நஜஃப் நகரத்திற்கு அருகில் உள்ளது.

இந்த நிகழ்ச்சிதான் ஷியா பிரிவு மக்களுக்கு வீரமரணம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் பழக்கத்திற்கான ஆரம்பம். அரபயின் என இன்று ஈராக்கில் 40 நாட்கள் அனுபவிக்கப்படும் துக்கம் இமாம் ஹுசைன் இறப்பின் துக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறவே.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 முதல் 170 மில்லியன் ஷியாப்பிரிவு இஸ்லாமியர் இருக்க வாய்ப்புண்டு. வேறுவகையில் சொல்வதானால், உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களில் இவர்கள் 10 சதவீதம்.
ஷியாப்பிரிவு மக்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகள் ஈரான், ஈராக், பஹ்ரெய்ன், அஜெர்பெய்ஜான், ஏமென்.

ஷியா மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், கத்தார், சிரியா, துருக்கி, சவுதி அரேபியா, மற்றும் அமீரகம். ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும்.

ஈரானில் 1979ல்நடந்த ஷியா இஸ்லாமிய புரட்சி ஸுன்னி பிரிவினர் ஆளும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் சவால் விடுவதாக இருந்தது. மேலும், ஷியா ஈரானின் கொள்கையான ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் பயங்கரவாத குழுக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு ஈரானில் மட்டுமின்றி ஈரானுக்கு வெளியேயும் ஆதரவளிப்பது ஸுன்னி பிரிவு ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளை ஒன்றிணைக்க வைத்தது.

லெபனானில் நடந்த உள்நாட்டுப்போரில் ஷியாக்களின் குரல் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தது. இதற்கு காரனம், ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகள். பாக்கிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அடிப்படைவாத ஸுன்னி பயஙகரவாத குழுக்களான தாலிபான் போன்றவைகள் ஷியாப்பிரிவு மத வழிபாட்டுத்தலங்கள்மீது தாக்குதல் நடத்தியது, நடத்துகிறது.

ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் உள்நாட்டுப்போர் ஷியா, ஸுன்னி பிரச்சினையாக பார்க்கப்பட்டு இளம் தலைமுறை ஸுன்னி மக்கள் பயங்கரவாத குழுக்களுடன் சேர்கின்றனர். இதற்கிடையில், ஷியாப்பிரிவு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக அல்லது அரசாங்கப்படையுடன் சேர்ந்துகொண்டு சண்டையில் ஈடுபடுகின்றனர்.

இஸ்லாத்தில் இருக்கும் இந்த இரு பிரிவினரின் பகையால்தான் உலகெங்கும் ரத்த ஆறும், பல லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து அந்நிய நாட்டில் வாழ வகையில்லாமல் தஞம் புக நேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பிரிவினையின் மூலத்தை தேடினால் இஸ்லாத்தின் இறைத்தூதர் எனக்கருதப்படும் முகமது நபியின் இறப்பிற்கு பின்னர்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பு வரை குலக்குழுக்கள் இருந்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற குடையின் கீழேயே வருகின்றனர்.

இறைவன் ஒருவனே, முகமது நபியே அவரின் தூதர் என்பதைச் சொல்லும் குரான் வசனம்தான் ”லா இலாஹா இல்லல்லாஹா, முஹம்மது ரசூலுல்லாஹா” என்பது.

இதை வார்த்தைக்கு வார்த்தை கடைப்பிடிப்போரே இஸ்லாத்தின் சன்னிகள் ,பிரிவை சேர்ந்தவர்கள். இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை என்றும் முகமது நபிக்குபின்னர் இஸ்லாத்தில் வணங்கத்தக்க நபியோ, இமாமோ இல்லை என்பது இவர்கள் கட்சி. இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்தான் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன்.

இறைவன் ஒருவனே, அவனே அல்லா, முகமது நபியே இறைத்தூதர் என்பதை நம்புவதுடன் முகமது நபிக்குப் பின்னர் 12 இமாம்கள் முகமது நபியின் போதனைகளை கொண்டு சென்றனர். அவர்களும் வணங்கத்தக்கவர்களே என்பது ஷியாப்பிரிவினரின் நம்பிக்கை.

அல்லா ஒருவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதென்பது இறைவனுக்கு இணைவைப்பதாக கருதுகிறார்கள் சன்னிகள். அவர்களால் இஸ்லாம் தூய தன்மையிலிருந்து விலகி நீர்த்துப்போவதாக கருதுகின்றனர். அதை தடுத்து நிறுத்த சன்னிகளின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்குபவர்களை, குறிப்பாய் இறைவனுக்கு இனை வைப்பவர்களை இஸ்லாமியர்கள் அல்ல என அறிவித்து அவர்களை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

சன்னி பிரிவு இஸ்லாமின் வன்முறை நிரம்பிய பிரிவாக முதலில் வஹாபியிஸம் வந்தது. அதன் பின்னர் வந்த ஐஎஸ் என்ற பயங்கரவாத குழு வஹாபியர்களை நல்லவர்களாக்கிவிட்டது.

இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம், அதேபோல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு.

ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவதுபோல இமாம்களையும் வணங்குவது சன்னிகளுக்கு எரிச்சலை தருகிறது. அவர்கள் அப்படி வணங்குவதை தடுத்து நிறுத்த அவர்கள் வணங்கும் கல்லறைகளை அடித்து நொறுக்குவது. ஷியாக்கள் வாழும் பகுதிகளில், மசூதிகளில், வெடிகுண்டுகள் மூலமும், கொத்து கொத்தாய் கொல்வதன் மூலமும் ஷியாப்பிரிவு இஸ்லாத்தை அழிக்கப்பார்க்கின்றனர். மேலும் எண்ணெய் வளமிக்க நாடுகளான சவுதியும், குவைத்தும், கத்தாரும் போல பல நாடுகள் சன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்தவைகள் என்பதால் அவர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தைக் கொண்டு வஹாபியிஸம் என்றழைக்கப்படும் சன்னி பிரிவு இஸ்லாத்தைப் பரப்ப ஆயிரக்கணக்கான மதரசாக்களையும், மசூதிகளையும் இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் நாடுகளில் கட்டுவதன் மூலம் ஷியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதுடன் அவர்களை இல்லாமல் ஆக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

க்ருஷ்ணகுமார் said:

ஜெயகுமார். நல்ல முயற்சி. வ்யாசத்தில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் சில இடங்களில் தெளிவாக இல்லை. நாலாவது கலீஃபாவான அலி அவர்களுக்கும் பைகம்பர் முஹம்மது அவர்களுடைய மகளான ஃபாத்திமாவுக்கும் பிறந்தவர் ஹுஸைன். அலிக்குப் பிறகு யார் தலைமையேற்கவேண்டும் என்பதில் பிளவு.

கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் கொல்லப்பட்டார். முஹம்மது நபி அவர்கள் தனக்குப் பின் அலியின் வம்சத்தவர்கள் இஸ்லாமியர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஷியாக்கள் சொல்லுகிறார்கள். முஹம்மதுநபிக்கு பின் வந்த இமாம்கள் அனைவரும் வணங்கத்தக்கவர்கள் என்பதும் இவர்களது தரப்பு.

வ்யாசம் முழுதும் சன்னி என்று எழுதியிருக்கிறீர்கள். சரியான உச்சரிப்பு சுன்னி.

உங்களுடைய வ்யாசம் ஷியாக்கள் மற்றும் சுன்னி முஸ்லீம்களிடையே உள்ள சச்சரவை மட்டிலும் பேச விழைகிறது.

பரேல்வி சுன்னி இஸ்லாம் மற்றும் தேவ் பந்தி சுன்னி இஸ்லாம் இடையேயும் மிகப்பெரும் பிளவு உண்டு. முன்னது ஸூஃபி இஸ்லாம் என்ற வழிமுறையைப் பின்பற்றி அவுலியாக்களை வணங்குகிறது. முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ளாத தேவ்பந்தி சுன்னி முஸல்மாணியர் பரேல்விகளின் நபி பிறந்த நாள் கொண்டாட்ட ஊர்வலங்களில் குண்டு வெடிக்கச்செய்து கொத்துக் கொத்தாக பரேல்வி சுன்னி முஸல்மாணியரைக் கொலை செய்திருக்கிறது.

ஆக ப்ரச்சினை ஷியா மற்றும் சுன்னி முஸல்மாணியருக்கு இடையே மட்டிலுமல்ல. மாறாக சுன்னிகளிலும் கூட பரேல்வி சுன்னி மற்றும் தேவ்பந்தி சுன்னி இஸ்லாமியிருக்கு இடையேயும் கடும் பிளவும் சச்சரவும் இருக்கின்றது.

http://herald.dawn.com/news/1153276

பாக்கி ஸ்தானத்து டான் பத்திரிக்கையில் வெளிவந்த மேற்கண்ட வ்யாசம் தங்களது முயற்சிக்கு மேலும் தகவல்களைத் தரும்.

# 27 January 2016 at 8:52 am



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

[குர்திஸ்தானின் ஒரு பகுதியில் இந்த யஸிதி இன மக்கள் வாழ்கின்றனர். ஐ எஸ் பயங்கரவாதிகளின் முதல் இலக்காக பாதுகாப்பு ஏதுமற்ற, தற்காத்துக்கொள்ள முடியாத இந்த எளிய யஸிதி இன மக்கள் இருந்தனர். . ஐ எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் தப்பிப்பிழைத்த நாடியா முராத் எனும் யஸிதி இனப்பெண் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய உரை கீழே.]

***

நாடியா முராத் எனும் யஸிதி இனப்பெண் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய மனஉரம் மிக்க உரை.

நாடியா பங்குபெற்ற இந்த முக்கிய நிகழ்வை யஸ்தா (யஸிதீன மக்களின் அமைப்பு) ஒருங்கிணைத்தது.

Nadia_Murad_Basee_Taha_Yazidi_Woman_UN_Security_Council_IS_ISlamic_State_ISIS_Muslim

தலைவர், மற்றும் அவையில் கூடியுள்ள முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

என்னை இங்கு பேச அழைத்ததற்கும், இந்த விவாதமேடையை அமைத்துக்கொடுத்ததற்கும் அமெரிக்க நாட்டிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பேரச்சத்துடன் அழிவை எதிர்நோக்கியிருக்கும் உலகின் மிகப்பழமையான இனம் மற்றும் மதக்குழுவனரில் தப்பிப்பிழைத்த மிகச்சிலரில் ஒருத்தியாக, பெரும் சோகத்துடனும், நன்றியுடனும் மற்றும் எதிர்பார்ப்புடனும் உங்கள்முன் நிற்கிறேன்.

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) என்றழைக்கப்படும் ஒரு கூட்டம் எப்படி யஸிதி இனத்துப் பெண்களான எங்களைக் கடத்தியது, வன்பாலுறவுக்கு ஆட்படுத்தப்படும் அடிமைகளாக மாற்றியது, தவிர எங்களின் இனக்குழுவினரை எப்படிக் கொடூரமாக் கொன்று குவித்து ஒரு இன அழிப்பைச் செய்தது என்பதைக் குறித்து பேசவிருக்கிறேன்.எல்லா நம்பிக்கையும் இழந்து, ஏதும் தெரியாத ஒரு எதிர்காலத்தை நோக்கியிருக்கும் யஸிதி இன மக்கள் குறித்தும், எனக்கும், என் இன மக்களுக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்தும் சொல்ல இருக்கிறேன். (ஐ எஸ் ஸிடம்) சிறைப்பட்டு இருக்கும் யஸிதி இன மக்களின் சார்பாகவும் பேச இருக்கிறேன்.

எங்களின் இருப்பை, கலாச்சாரத்தை, சுதந்திரத்தை அழிக்க வந்த ஒரு உலகப் பயங்கரவாத இயக்கம் குறித்தும், எங்கள் இனத்தின் வாழ்க்கையையே ஒரே இரவில் அது எப்படி மாற்றியது என்பதையும் பற்றிப் பேச இருக்கிறேன்.

ஆகஸ்ட் 3, 2014 க்கு முன்புவரை கோச்சோ என்ற கிராமத்தில் நான் எனது தாயாருடனும், சகோதர சகோதரிகளுடனும் வசித்து வந்தேன். அழகான எங்கள் கிராமத்தில் அமைதியாக வசித்து வந்தோம். ஆனால், ஆகஸ்ட் மூன்றாம்தேதி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பயங்கரவாத கூட்டம் எங்கள் கிராமத்தைத் தாக்கியபோது, நாங்கள் ஒரு கொடூர இன அழிப்புக்கு ஆட்பட்டதைப் புரிந்துகொண்டோம். ஆயுதம் தாங்கிய, சீருடையணிந்த பலநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் யஸிதிகளை இஸ்லாமிய நம்பிக்கை அற்றவர்கள் எனத் தீர்மானித்து அப்படிப்பட்டவர்கள் அழிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு வந்திருந்தனர். இந்த இஸ்லாமிக் ஸ்டேட் யஸிதி இனப் பெண்களையோ, சிறுமிகளையோ கொல்லவரவில்லை, மாறாக, எங்களைப் போரின் கொள்ளைப் பொருட்களாக, குறைந்த விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுக்கப்பட வேண்டிய வெறும் பொருட்களாய் எடுத்துச் செல்ல வந்திருந்தனர்.

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

ஆகஸ்ட் 15 நாள் பயங்கரவாதிகள் எங்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து ஆண்களை எங்களிடமிருந்து பிரித்தனர். அந்த பள்ளியின் இரண்டாம் மாடியிலிருந்து நான் பார்த்தேன். அவர்கள் ஆண்களைத் தனியாக பிரித்துச் சென்று கொன்றனர். அதில் எனது உடன் பிறந்த மற்றும் மாற்றாந்தாய்க்குப் பிறந்த ஆறு சகோதரர்களும் அடங்குவர். மேலும் மூவர் கடவுளின் கிருபையால் அவர்களிடமிருந்து தப்பினர்.

பென்களும், குழந்தைகளுமாக எங்களை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். போகும் வழியெங்கும் எங்களை அவமதித்துக்கொண்டும், வலுக்கட்டாயமாக பெண்களையும், குழந்தைகளையும் தகாத முறையில் தொடுவதுமாக இருந்தனர்.

என்னுடன் நூற்றைம்பது பெண்கள் மொசுல் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஏற்கனவே ஆயிரக்கணக்கான யஸிதி இனப்பெண்களும் குழந்தைகளும் ஏற்கனவே ஐஎஸ்ஸால் பிடிக்கப்பட்டு அங்கு பிற ஐ எஸ் படையினருக்கு அன்பளிப்பாக அளிப்பதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு ஐ எஸ் படையின் ஆள் என்னை நெருங்கி என்னை எடுத்துச் செல்ல போவதாக சொன்னான், நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன், நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தேன். நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு மிகப்பெரிய ஆள் நின்றுகொண்டிருந்தான். நான் அழுதேன், எனக்கு நீ வேண்டாம் எனச் சொன்னேன், என் உருவளவுக்கு நீ மிகப்பெரிய ஆள், நான் சிறுமி என்றேன். இன்னொருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். நான் இப்போதும் தரையை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அவனது கால்களை பார்த்தேன். மிகச் சிறியதாக இருந்தது, நான் அவனிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கெஞ்சினேன். நான் மிகப்பெரிய உடலுடன் இருந்தவனைக் கண்டு அஞ்சினேன்.

என்னை அழைத்துச் சென்றவன் என்னை மதம் மாறச்சொன்னான். நான் மறுத்தேன். இன்னொரு நாள் அவனை ”திருமணம்” செய்துகொள்ளச் சொன்னான். நான் உடல்நிலை சரியில்லை எனச் சொன்னேன். அங்கிருந்த பெரும்பாலான பெண்களுக்கு பயத்தினால் மாதவிடாய் ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. பின்னர் ஒருநாள், அவனுக்காக என்னை அலங்காரம் செய்துகொள்ளச் சொன்னான். நானும் அலங்காரம் செய்துகொண்டேன். அந்த கருப்பு இரவில் அவன் “அதை” செய்தான்.

அவனது குழுவில் இருந்த இதர பயங்கரவாதிகளுக்கும் என்னை இணங்கும்படி செய்தான்… என்னை முறையற்ற முறையில் உடையணியச் செய்து தொடர்ந்து அவமதித்துக்கொண்டே இருந்தான், என்னால் தொடர்ந்த கொடுமைகளையும், கற்பழிப்புகளையும் தாங்க முடியவில்லை.நான் தப்பிச்செல்ல தீர்மானித்தேன், ஆனால், எனது முயற்சி தோல்வியடைந்தது.. பாதுகாப்புக்காக நின்ற ஒருவன் என்னை பிடித்துவிட்டான்.

அந்த இரவில் என்னை அடித்தான், கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கினான், பின்னர் ஆறு பயங்கரவாதிகளுடன் என்னை ஒரு அறையில் அடைத்தான். நான் மூர்ச்சையாகி விழும்வரையில் என்னை கற்பழித்தனர்.

கடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு இறுதியாக என்னால் தப்ப முடிந்தது. நான் இப்போது ஜெர்மனியில் இருக்கிறேன். மருத்துவம் செய்வதற்காக என்னை ஏற்றுக்கொண்ட ஜெர்மனிக்கு நன்றி.

ஆனால், நான் மட்டும் இந்தத்துயரத்தை அனுபவிக்கவில்லை. (எங்கள் இனத்தின்) கூட்டு துயரம் இது. இஸ்லாமிக் ஸ்டேட் எங்களுக்கு இரு வாய்ப்புகளை மட்டுமே வழங்கியது. மதம் மாறுங்கள் அல்லது சாவுங்கள் என்பதே அது. பயத்தினால் மதம் மாற ஒத்துக்கொண்ட பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர், அவர்களின் குழந்தைகள் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர்.

இன்றைய தேதிவரையில், கூட்டமாகப் பலரைப் புதைத்த 16 குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழியில் எண்பது பெண்கள் புதைக்கப்பட்டிருந்தனர்., அதில் ஐ எஸ்ஸால் விரும்பப்படாததால் கொல்லப்பட்ட எனது தாயாரும் அடக்கம். நான்குலட்சத்திற்கும் மேலானோர் இடம்பெயர்ந்துள்ளனர், நாற்பது சதவீதத்திற்கும் மேலான எங்களின் நிலப்பகுதி ஐஎஸ் கூட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எங்கள் இடங்கள் எல்லாம் வாழத்தகுதியற்ற இடங்களாக அழிவுகளுடன் காணப்படுகிறது. மேலும் யஸிதிகள் அந்த இடங்களுக்கு திரும்ப் பயப்படுவதுடன் அவர்களின் வீடுகளில் நிம்மதியாக வாழமுடியுமா என அஞ்சுகின்றனர்.

கடந்த வாரம் 70 யஸிதி இன பெண்களும், குழந்தைகளும் ஐரோப்பாவுக்கு செல்லும் பயங்கரமான பாதையில் செல்லும் வழியில் நீரில் மூழ்கி இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வுக்கு காத்திருக்கின்றனர், அதில் பெரும்பாலானோர் வேறு நாடுகளுக்கு குடி பெயர்வதே வழி என நினைக்கின்றனர்.
தலைவர் மற்றும் கூடி இருக்கும் முக்கியஸ்தர்களே,

ஐ எஸ் யஸிதி இனப்பெண்களை மனிதர்களைக் கடத்தி விற்கும் தொழிலின் வியாபாரப் பொருளாக்கியிருக்கிறது. உங்களிடம் என் மக்களின் கீழ்க்கண்ட வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதுடன் மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதையும் நம்புகிறேன்.

ஈவிரக்கம் இல்லாத பயங்கரக் கூட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கும் 3400 பெண்களையும், சிறுமிகளையும் மீட்க வழி செய்யுங்கள்.

ஒட்டு மொத்தமாக கொலை செய்தல், அடிமைப்படுத்தல், ஆள் கடத்தல்களை எல்லாம் இன அழிப்பாக கருதுங்கள். உலக கிரிமினல் கோர்ட்டிற்கு இதை ஒரு பெரும் குற்றச் செயலாக எடுத்து வழக்காட வழியைக் காணுமாறு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

எங்கள் நிலங்களை மீட்டுத்தாருங்கள், கோச்சோ கிராமத்தையும் மீட்டுத்தாருங்கள். இதன் மூலம் ஐ எஸ் எஸின் கொடூரத்தால் இறந்தவர்களை அவர்களின் பூமியில் கௌரவமாக அடக்கம் செய்ய இயலும். மிரட்டலுக்கு உள்ளாகியுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் அவர்களின் பூர்வீக இடங்களில் மீளக்குடியேறவும், நிம்மதியாக வாழவும் முடியும். நான் மேலும் உங்களை உலக நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கி இழப்பீடும், இடிபாடுகளில் உள்ள வீடுகளை மீளக்கட்டவும் நிதி தாருங்கள் என வேண்டுகிறேன்.

உங்கள் நாடுகளின் கதவுகளை இன அழிப்பிற்கு ஆளான எங்கள் மக்களுக்குத் திறந்துவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து வாழவும் எங்களின்கௌரவத்தைக் காத்துக் கொள்ளவும் எங்களுக்கு உரிமையுள்ளது. யஸிதி இன மக்களுக்கும், எங்களைப்போல அச்சுறுத்தலுக்கு ஆளான இதர சிறுபான்மை இனமக்களுக்கும் தங்குவதற்கான வாய்ப்பைக்கொடுங்கள், இன்னும் குறிப்பாய் ஆட்கடத்தல் கூட்டங்களில் சிக்கி அவதியுறும் மக்களுக்குஅகதிகளாக நுழைய ஜெர்மனி ஏற்கனவே முன்னுரிமை கொடுத்தது போல இதர நாடுகளிலும் முன்னுரிமை கொடுங்கள். , .

ஐ எஸ் ஸுக்கு முடிவு கட்டுங்கள். நான் அவர்களை (கொடூரங்களை) பார்த்திருக்கிறேன். அவர்களால் நான் சொல்லொணாத்துயரத்தையும், வலியையும் அடைந்திருக்கிறேன். பயங்கரவாதிகளையும், மனிதர்களைக் கடத்துவோர்களையும், இன அழிப்பு செய்தோரையும் நீதிக்கு முன் கொண்டுவாருங்கள். இதனால், நைஜீரியா, சிரியா, சோமாலியாவில் வாழும் பெண்களும், உலகின் எல்லாப்பகுதியில் வாழும் மக்களும் அமைதியாய் வாழ இயலும். பெண்களுக்கு எதிரான இந்தக்குற்றங்கள், மற்றும் அவர்களின் சுதந்திரப்பறிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard