New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா வளவன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா வளவன்
Permalink  
 


மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா வளவன்

 

மதமும் மனித உரிமை மீறலும் என்ற இந்த கட்டுரை தொகுப்பு திரு .அரிமாவளவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான இந்த கட்டுரை தொகுப்பு இப்போது நம் வலைப்பூவில் தொடராக மீண்டும் வெளியாகிறது.
மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் பாதிகபட்டவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்பிகிறோம் .

''கடவுளுக்கு எல்லாம் தெரியும் . கடவுள் மனிதனுக்கு அடக்கம் . ஆகவே மதத்திற்குள் எல்லாம் அடங்கும் . மதத் தலைமைக்கு எல்லாம் தெரியும்.'' இது ஒரு ஆபத்தான கருத்து. இதைவிட ஆபத்தானது இக்கருத்தை நடைமுறைபடுத்தும் எதார்த்தம். அதாவது , மதத் தலைவர்கள் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பம் அவரின் செயல்கள். அவர்கள் வழியாகத்தான் கடவுள் பேசுகிறார் அல்லது செயல்படுகிறார்.''

மதத்துக்கு தெரிந்தது ''உலகம் தட்டையானது '' என்று. கலிலியோ , உலகம் உருண்டையானது என்றான் . கலிலியோவை கொலை செய்தது திருச்சவை . கலிலியோ சொல்வது பொய் . இனி யாரும் அவர் சொல்வதை கேட்காதீர்கள். என்றுகூட சொல்லியிருக்கலாம் . உலகத்தின் உருவம் பற்றிய கருத்துகளை எடுத்துரைப்பது ஒன்றும் உயிர் போகிற காரியம் அல்ல . ஆனாலும் அவருக்கு கிடைத்தது கொலைத்தண்டனை. அறிவியல் தளத்தை அறியாத திருச்சவை அதிலும் தன் மூர்கதனத்தை காட்டியது. ஒரு அறிவாளி கோழையாகி விடுவதால் கவலயில்லை .ஆனால் ஒருமுட்டாள் மூர்கனவது பெரும் பேரிடரை வருவிக்கும்!

வங்காள பெண் எழுத்தாளர் தசுலிமா நசுரின் பெண்ணின விடுதலையை முன்னிறுத்தி குரானை எதிர்த்து எழுதினார் என்பது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே! வாங்க தேச மதத்தலைவர்கள் அவருக்கு கொலைத்தண்டனை விதித்தார்கள், அவர் தப்பித்து வாழ்ந்து வருகிறார் .
சல்மான் ருஷ்டிக்கு ''சட்டனிக் வெர்ச்'' எனும் நூலை எழுதியதற்காக அயதுல்லா கொமனியும் அவரது ஆதரவளர்களும் கொலைத்தண்டனை விதித்தார்கள் . அவரும் மறைந்து ஒளிந்து வாழ்கிறார்.

அயோத்தி பிரச்னையில் பார்பனத் தலைவர்கள் , ஆர்.எஸ் .எஸ். போன்ற அமைப்புகள் சட்டம், நீதிமன்றம், ஒழுங்கு, மனித உரிமைகள் , மாந்த உணர்வுகளை அறவே புறக்கணித்து ஒன்றுமறியா இசுலாமியத் தோழர்களை வெட்டி சாய்த்தனர் . எல்லாம் ராமருக்காக!

சிலுவை போரில் நடந்த கொலைகள் எல்லாம் இயேசுவுக்காக !

''உயிரை கொடுத்தவன் கடவுள். அவரே திரும்ப எடுத்துக்கொண்டார்.'' இறுதி சடங்கில் சாமியார் பிரசங்கம் வைத்தார். ''உயிரை எடுக்க கடவுள் ஒருவருக்கே அதிகாரம் உண்டு.தற்கொலை செய்து கொண்டவனுக்கு கோவில் அடக்கம் கிடையாது போ !'' அதட்டினர் சாமியார். கடவுளுக்கே எல்ல அதிகாரமும் ! அடுத்து , 'கடவுள்களாகிய' மதத் தலைவர்களுக்கே அந்த அதிகாரமெல்லாம் உண்டு. கலிலியோவை கொல்ல கடவுளுக்கே அதிகாரம். மதத் தலைவர்களும் 'கடவுள்கள்' ஆனதால் அவர்களே அவதிகரத்தை எடுத்து கொண்டனர்.

குமுகவியலாளர் ( சமூகவியலாளர்) தெய்வீக போர்வை என்று அழைக்கிறார்கள் . அதாவது , சில நடைமுறைகளை ஞாயபடுத்த அல்லது தங்களுக்கு சாதகமாக்க மதத் தலைமை பலவேளைகளில் ஒரு புனித போர்வையை அவ்வெதார்த்ததின் மீது போர்த்தும் . எடுத்துகாட்டாக , நாலு வருணங்கள் என்கிற சாதிபிரிவு பார்ப்பானின் கைங்கர்யம் . ஆனால் இவர்கள் பிரம்மனின் தலை, கை, தொடை, கால்களிலிருந்து, பிறந்தவர்கள், என ஒரு அக்கிரமச் செயலை தெய்வ செயலாக திரித்து , நடைமுறைகளை வினாக்களுக்கு அப்பற்பட்டதாக்கி விடுகின்றனர். இந்த புரட்டினால் பார்ப்பான் தன் ஆதிக்கத்தை குமுகத்தில் நிலைநிறுத்தி , நன்மைகளை பெற்றுகொள்கின்றான். ஒரு நல்லவரை பழிவாங்க ஆயரோருவர் அவரை பதவி நீக்கம் செய்கிறார் . ''தண்ணியில்லா காட்டுக்கு'' அனுப்ப முயற்சிக்கிறார். ''கடவுளின் விருப்பம் என்று இதை எடுத்துகொள் '' என ஒரே போடாக போட்டுவிடுகிறார் . இது யாருடைய விருப்பம் ? கடவுளுடைய விருப்பத்தை இவர் எப்படி கண்டறிந்தார் என்பதெல்லாம் வியப்பானது, வேடிக்கையானது .

கிரோசிமா , நாகசாகி எனும் யப்பான் நாட்டு நகரங்களின் மீது அணுகுண்டை வீச அமெரிக்க விமானம் குண்டு பொருத்தப்பட்டு தயாராய் நின்றது. இறுதி நேர அறிவுரை விமானிகளுக்கு வழங்கபடுகிறது . ''குண்டை போட்டபின் திரும்பிகூட பார்க்க கூடாது . பார்த்தால் நீங்களும் அழிந்து போவீர்கள் . குண்டு வீச்சு வெற்றி பெற்றதும் கொடுக்க வேண்டிய குறிப்பு சொல் - புத்தர் சிரித்தார் !'' என்பது . அறிவுரை முடிந்தது . விமானிகள் விமானத்தில் ஏற தயாரானார்கள் . போதகர் ஒருவர் திருவிவிலியதோடு அருகில் வந்தார் . வானகத் தந்தையை நோக்கி செபித்தார், ''தந்தையே இந்த விமானிகளை பாதுகாப்பாய் திரும்பி கொண்டு வந்து சேரும் '' என்றார் . பின்பு அவர்களை ஆசிர்வதித்தார் . சிலமணி நேரங்களில் யப்பான் நாட்டு நகரம் ஒரு சுடுகாடானது . பல ஆயிரம் பேர்கள் துடித்து மாண்டனர். 'கொலைகாரனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் கொலையுண்டவர்களுக்கு கிடைக்கவில்லை'. ஒரு மிருகச் செயலுக்கு தெய்வீக போர்வை கிடைத்தது.

ஈராக்கில் அமெரிக்கா குண்டுமழையை பொழிந்தது . பல ஆயிரம் ஈராக்கிய படைவீரர்கள் சரணடைய வந்தபோது , அமெரிக்க கொலைஞர்கள் அவர்களை பெரு மணற்பரப்பில் உழுது கொன்றனர். அரக்கன் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபனாய் இருந்து அக்கொலைவெறி போரை நடத்தி கொண்டிருந்தான் . பில்லி கிரகாம் எனும் நற்செய்தி போதகர் அவனுக்கு அருகில் இருந்து ஆன்மிக சக்தி அளித்துவந்தராம் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத மதத்துக்குள் ''ஒரு புயல் '' எழுந்தது. சொல்லில் நேர்மை . செயலில் தீர்க்கம். அவரே இயேசு எனும் யூத இன போராளி .மதத் தலைமையை கடுமையாக சாடினார். அவருக்கும் கொலைதண்டனைதான் கொடுத்தனர். அந்நிய ஆச்சியலர்களான உரோமையர்களுடன் சேர்ந்து அக்கொலையை நிறைவேற்றினார்கள்.

கருத்துகளை எதிர்கொள்ள இயலாதபோது , அல்லது நேர்மையானவர்களின் செயல்பட்டு தீவிரம் , இறுக்கமான அல்லது சொகுசான வாழ்வை , அல்லது அமைப்பை வினாவுகுள்ளாகும் போது . அல்லது அதை உடைக்க முற்படும்போது , 'பாதிக்கபடுபவர்கள்' எதிர்தாக்குதல் நடத்துகிறார்கள்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே . கருத்தை தாக்கும் போதும் இவர்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . நிறுவனம் ஆட்டம் காணும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . தங்களது ஊழல் அம்பலமாகும் போது தற்காப்பில் இறங்குகிறார்கள் . தங்களது பணம் அல்லது சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . காரணம் , நிறுவனத்தோடு ஒன்றித்து விடுகிறார்கள் . பணத்தோடும், ஊழலோடும், கருத்துகளோடும், ஒன்றித்து விடுகிறார்கள் . ஆகவே இதுவெல்லாம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்போது தாங்களே பாதிகபடுவதாக எண்ணி , ஒரு மன நோயாளி போல தங்களது 'எதிரிகளை ' கண் மண் தெரியாமல் தாக்குகிறார்கள். தங்களிடம் இருக்கிற அல்லது இருப்பதை நினைக்கிற , எல்லா அதிகாரங்களையும் இதற்காக பயன்படுத்த இவர்கள் தயங்குவதில்லை.

சிவகங்கை ஆயர் தனது மறைமவட்டதிலிருந்து பெண் துறவி ஒருவரை விரட்ட படாத பாடுபடுகிறார் . அதுறவியின் சபைதலைவர்களையும் நெருங்கி அவரை வெளியேற்ற கூறி வருகிறாராம் . ''நாடு கடத்தல் '' எனும் தண்டனையை அரசே கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன . ஆயர்கள் விடவில்லை . மறை மாவட்டம் என்பது என்ன ? மறை மாவட்ட ஆயருக்கு அம்மாவட்ட எல்லையிலிருந்து ஒருவரை விரட்ட அல்லது அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரம் உள்ளதா? நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட செய்யத்துணியாத இம்மாதிரி செயல்களை எப்படி இவர்கள் செய்ய துணிந்தனர் ? ஒரு சிற்றூரில் அவ்வூர் ஊராட்சி கூடுகிறது. ஊர் நாட்டாண்மையும் மற்றவர்களும் கூடுகிறார்கள் .ஒரு வழக்கு உசாவபடுகிறது. குற்றம் உறுதிபடுத்த படுகிறது . ஊர்த்தலைவர் குற்றவாளியை ஊரை விட்டு விரட்டி விடலாமா ? கை கால்களை வெட்ட சொல்லலாமா? சில இடங்களில் செய்யவும் செய்கிறார்கள். பீகார் மாநில சிற்றூர் ஒன்றில் பெண் ஒருத்தி செய்த பாலியல் குற்றத்திற்காக அறை ஒன்றில் அடைத்து உடலூறு ( சித்திரவதை) செய்து பின்பு யார் வேண்டும் என்றாலும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என இசைவு கொடுத்துவிட்டனர். பதினெட்டு காடு மிராண்டிகள் அதை செய்தனர். சட்டத்தை தன் கையில் எடுத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான செயல்களே . கடவுள் பெயரால் அதை செய்தாலும் அதற்கும் காடுமிரண்டிதனம் என்பதுவே பொருத்தம் . ''கடவுள் பெயரால் மதத்திற்குள் நடக்கும் அட்டூழியம் ஏராளம் .''


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனிதஉரிமை மீறலும் - அரிமா - 2

 

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

''மதம் என்பது , இம்மை , மறுமை , கடவுள் என்னும் மூன்றையும் பற்றி , ஒருவன் மதித்துக்கொள்ளும் கருத்தேயன்றி வேறன்று '' (1) என்கிறார் பாவாணர் . '' பலர் தீய ஒழுக்கத்தை விட்டு நல்ல ஒழுக்கத்தை மேற்கொண்டிருந்ததற்கும் மறுமையில் இறைவன் எரி நரகிலிட்டு தண்டிப்பான் எனும் அச்சமே கரணியமாகும் . பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால் , மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிபடையாகும் '' என்று தொடருகிறார் பாவாணர் . ( 2 ) பாவாணர் மேலோட்டமாக இப்படிச் சொல்லிச் செல்கிறார் . ஆனால் , ''சமயத்தையும் மதத்தையும் நுட்பமாக வேறுபடுத்திய மரபு தமிழருக்குண்டு''. ( 3 ) இயற்கை , அதற்கு புறம்பான புற ஆற்றல்கள் பற்றிய இறையியல் விளக்கம் , மக்களின் அன்றாட வாழ்க்கை வழிமுறைகளையும் , வழிபாட்டு முறைமைகளையும் இணைத்திடும் ஒரு கருத்தியலே சமயம் . அக்கருத்தியலை அல்லது கோட்பாட்டை தற்காத்துகொள்ளும் அமைப்பியல் கட்டுமானமே மதம் என தெளிவு படுத்துகிறார் குணா . ( 4 ) ஆக , பாவாணர் மேலோட்டமாக மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சமயத்தையே குறிக்கும் .

கருத்தியல் எல்லோருக்கும் பொதுவானதாக அல்லது ஒன்றாக இருக்கமுடியாது . சமயம் என்பது குமுக , அரசியல் சூழலை உள்வாங்கி வெளிபடுத்தும் கருத்தியல் என்றால் , அது பல்வேறு சூழலுக்கு தகுந்தாற்போல் மாறுவதும் , வேறுபடுவதும் இயற்கையே . முகமது நபியின் சமயம் இயேசுவின் கோட்பாடுகளுக்கு வேறுபட்டது. வானில் வேர்கள் தோன்றாது. மண்ணிலேய அவை வளரும் . இயேசு வாழ்ந்த சூழலில்தான் அவர் கொண்ட கருத்தியல் விளைந்தது . பல எதார்த்தங்களோடு ஏற்பட்ட உராய்வினாலும் பட்டறிவாலுமே அது உருவாகி இருக்ககூடும் . கருத்தியலை காப்பாற்ற அமைப்பியல் வளர்ந்தது. திருச்சவை உருவானது. பின்பு அக்கருத்தியல் பல தேசங்களுக்கு பரவியபோது அந்தந்த சூழலுக்கேற்ப அக்கருத்தியல் பொலிவு பெற்று வளர்ந்திருக்கவேண்டும் . ஆனால் கருத்தைவிட அமைப்பே அழுத்தம் பெற ஆரம்பித்தது. யூத மதத்தின் இருக்கதிற்கெதிராக உரோமை வல்லாட்சியலர்களுக்கு எதிராக உருவெடுத்த கிறித்துவ கருத்தியல் , ஒடுக்கப்பட்ட யூத இனத்தின் விடுதலையை கனவு கண்டது. இன்று பல இடங்களில் ஒடுக்குகிறவர்களின் சார்பாகவே கிறித்துவம் திசை மாறி கிடக்கிறது.

தமிழகத்தில் செயல்பட்டுவரும் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் , வடபகுதியில் செயல்பட்டு வந்த மண்ணின் மைந்தர் இயக்கம், தொல் தமிழ் ( தலித் ) கிறித்துவர் விடுதலை இயக்கம் , தமிழ் இறையியல் மன்றம் போன்ற அமைப்புகளும் இயக்கங்களும் தமிழ் மண்ணில் கிறித்துவ கருத்தியலுக்கு உண்மையான உரு கொடுக்க அரும்பாடு பட்டு வருகின்றன . ஆனால் கிறித்துவ அமைப்பியலை கட்டிபாதுகாக்கும் பொறுப்பை தங்கள் சிரமேற்கொண்டு அலையும் ஆதிக்க திருச்சவை , அடக்குவதும், எதிர்பதுமாய் செயல்பட்டு வந்திருக்கின்றன . ( ஆதிக்க திருச்சவை என்று நாம் குறிப்பிடும்போது ஆயர்கள் என்று மட்டும் கணக்கில் எடுக்ககூடாது . 'கனமான' பொதுநிலையினர் , துறவற சபையின் தலைமைகள் , திருச்சவையின் பல ஏடுகள் , என்கின்ற அவ்வதிகார இனத்தையே ஒட்டுமொத்தமாக கணக்கிலெடுக்க வேண்டும்.)

''பெர்மகோ'' எனும் ஒரு பாதிரியார் புனேயிலுள்ள குருதவக் கல்லூரியில் பாடம் கற்பித்து வந்தார். ரொம்ப கெடுபிடியான ஆள். தேர்வு நேரங்களில் மாணவர்களிடம் ஈவு இரக்கம் காட்டமாட்டார் . இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் . திருச்சவைகளுக்கு மத்தியில் ஒற்றுமை பற்றிய ஆய்வு அடங்கிய புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். அச்சிடலாம் என புனே மறைமாவட்ட ஆயர் அப்புத்தகத்திற்கு இசைவும் கொடுத்திருந்தார். இப்புத்தகத்தின் ஒரு பகுதியில் பாப்பனவருக்கு தவறாவரம் அளிக்கும் திரு அவை சட்டங்கள் எந்த அளவுக்கு சரியான மரபு சார்ந்தது அல்லது சட்ட பூர்வமாக இயற்றப்பட்டது என்பது பற்றிய வினாக்களை அப்புத்தகத்தில் எழுப்பி இருந்தார். இவரொன்றும் இவரது தனிப்பட்ட கருத்துகளை அதில் சொல்லவில்லை. திருச்சவையின் ஆவணங்களையே இதற்கு ஆதாரமாக்கி இருந்தார்.

உரோமே வெகுண்டு எழுந்தது . எடுத்த எடுப்பிலேயே , ''இவர் இனி கற்று கொடுக்க கூடாது '' என தடை போட்டது. உசாவல் , நடுநிலை நோக்கு , நேர்மையான பார்வை, நல்லது கெட்டதுகளை ஆராய்வது , உண்மைகளை மனத் துணிவோடு ஏற்கும் பொறுப்புணர்வு திருஅவைக்கு எள்ளளவும் இருந்தது கிடையாது என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியது. கடந்த காலங்களில் பலியாக்கப்பட்ட பல நூறு ஆட்களுள் பெர்மகொவும் ஒருவர் .


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா - 3

 

சென்ற கட்டுரை தொடர்ச்சி ...

இன்று இலங்கையின் பாலசூரியா பற்றி கேட்க ஆரம்பிக்கிறோம் . மரியாளை , புரட்சிகரமான பெண்ணாக இவர் பார்த்தாராம் . அதோடு நின்றிருந்தால் பிரச்சனை ஒன்றுமிருந்திருக்காது . ஆனால் , அப்படி பார்ப்பதன் விளைவாக திருசவையின் இன்றய போக்குகளில் சில அடிபடையான மாற்றங்களை கொணர வேண்டும் எனும் கருத்தியலை உள்ளடக்கியதாக அப்பார்வை உருவெடுக்கும்போது திருச்சவையின் அதிகாரிகள் வெகுண்டு எழுகிறார்கள் . மனித உரிமை மீறல்கள் மிக இயல்பாக நடக்கிறது . உளச்சான்று அறவே இன்றி ஆட்களையும் அவர்தம் உரிமைகளையும் , உணர்வுகளையும் காலிலிட்டு நசுக்குகிறார்கள். இவ்வெதார்தங்களை காணும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது . இவர்கள் தூக்கிபிடிக்கும் கோட்பாடுகள் இவர்களது தன்னலத்தை வளர்த்தெடுக்க , ஆட்சி அதிகாரத்தை , தக்க வைத்துகொள்ள ஒரு ஏதுவான கருவியாக இருக்கிறது. ஆகவே தவறான கோட்பாடுகளையும் கூட தங்களை காத்துக் கொள்ளும் குறுகிய நோக்கங்களுக்காக கட்டி அழுகிறார்கள் . எலும்புகூட்டுக்கு சுகமில்லை என்று கட்டி அழுகிறவர்களிடம் , ''சடம் அது '' என்று சுட்டிக் காட்டினால் , எழுந்து உதைகிறார்கள் . வைக்கோல் திணித்து பொய் கன்றுகளை உருவாக்கி மாட்டிலிருந்து பாலை கறப்பார்கள். அதாவது சரி போகட்டும் எனலாம் , ஆனால் பொய் மாட்டையே உருவாக்கி மடியை இழுத்தால் பாலா வரும்? திருச்சவையின் பல கோட்பாடுகள் 'வைக்கோல் பொம்மைகளே !'

திருச்சி இறையியல் கல்லூரியில் 18 ஆண்டுகளாக செல்வராசு எனும் ஒரு பேராசிரியர் பணிபுரிந்து வந்திருக்கிறார் , அவர் கல்லூரியில் இருந்துகொண்டே எதை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அதற்கு மெல்ல மெல்ல உரு கொடுக்க துவங்கியிருக்கிறார். அதாவது , மக்களுக்கான நியாயமான போரட்டங்களில் ஈடுபடுவது , தொல் தமிழருக்கான சீரிய நிலைபாடுகள் எடுப்பது , தொழிலாளர்கள் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திகொள்வது என செல்ல ஆரம்பித்தார். ஆயர்கள் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். இனி 'விட்டுவைக்கலாகாது ' என நினைத்தனர். ''பேராசிரியர்களை களப்பணிக்கு அனுப்ப வேண்டும் '' என்று பொதுவாக அறிக்கை ஒன்றை ஒன்றும் அறியாதவர்கள் போல முதலில் வெளியிட்டனர். பின்பு , ''கட்டிலுக்கு ஏற்றார்போல காலை வெட்டினார்கள் '' இவருக்கு களப்பணி பட்டறிவு தேவை என்று காரணம் கூறி ஒப்பந்தங்களை உடைத்து , பனி நீக்கம் செய்தனர். இவரது களப்பணிதானே இவரை காலி செய்வதற்கே காரணமானது ! ஆனால், அழுகிய முட்டைகளுக்கு சந்தனம் தேய்த்தார்கள் . ''கடவுளின் திட்டமிது.... ஏற்றுக்கொள்ளுங்கள் '' என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்கள் . கடவுளையே தங்களின் மட்டமான செயல்களுக்கு துணைக்கு அழைத்தார்கள் .18 ஆண்டுகாலம் சொந்த பிள்ளையை போல வளர்த்தெடுத்த மாணவர்களிடம் ''போய் வருகிறேன் '' என்றுகூட சொல்ல வாய்ப்பு தரவில்லை. உடன் பணியாற்றிய தோழர்களிடம் கூட 'நன்றி' சொல்லவும் விடவில்லை. ஆக ,அங்கே மனிதம் கொலையுண்டது .உளச்சான்று நெரிக்கபட்டது. தூக்கு தண்டனை பெற்றவன்கூட இறுதிவிருப்பத்தை நிறைவேற்றிகொள்கிறான். ஆனால் திருச்சவையின் தண்டனை பெற்றவர்களுக்கு அதுவெல்லாம் சாத்தியமில்லை.

சாமானியனுக்கும் தெரியும் இது ஒரு சதி என்று. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்றால் உலகமே நம்பிவிடுமா என்ன? ஆனால் பூனைகள் கண்ணை மூடிவிட்டால் உலகமே இங்கு இருண்டு விடுகிறது.! குற்றம் , குற்றமில்லை , வழக்கு, உசாவல் , எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . மனிதம் எங்கே போனது.? உளச்சான்று அறவே கிடையாதா? மனித உணர்வுகளை இப்படி நடுங்கும்படி திடுதிப்பென செய்கிறோமே என மனிதபண்பு ஒரு மயிரளவும் இவர்களுக்குள் இழையோடாதா? திருச்சவையின் சர்வாதிகரத்திற்கு பெயர்தான் கடவுளின் விருப்பமா? இப்படி பலர் வினா எழுப்ப துவங்கினர்.

மற்றொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . திருச்சவையில் ஊழல், ஒழுக்ககேடு, சாய்க்கடை அரசியல் , சாதிவெறி , இதுவெல்லாம் பிரச்சனைக்குரிய செயல்பாடுகளே அல்ல . இவைகள் நடைமுறையில் மிக எளிதாக நடைபெற்று வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை கண்டுகொள்வதில்லை. காரணம் ; ஒன்று ,எதிர்க்க திராணி இல்லாமை . மற்றொன்று , எதிர்க்கும் தகுதி இல்லாமை. ( ஏனெனில் இவர்களே இம்மட்டச் செயல்பாடுகளை மடைதிறந்து விடுகிறவர்கள்)

பள்ளி ஆண்டு துவங்கும்போது , ஆயர்கள் அறிக்கை விடுவார்கள் . ''நன்கொடை வாங்காதீர்கள் , கிருத்துவருக்கு நம் நிறுவனங்களில் முதலிடம் கொடுங்கள் '' என்று. ' எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கும் அவைகள் , புரட்சிகர 'கராத்தே' கன்னியர்கள் அவை இப்படி . ''ஏழைகளுக்காகவே ஏங்கி ஏங்கி வாழுகின்ற அவைகள்'' இந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உண்டு. இவர்களின் ஆலயங்களில் , இல்லங்களில் எல்லாம் அறிக்கை வாசிக்கப்படும் , பின்பு ......துடைத்து தூர வீசப்படும். 50,000 உருவாவை கேட்டுப் பெற்று ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியில் இடம் கொடுகிறார்கள். கட்டிட நிதி வேண்டும் என்கிறார்கள் . கருவிகள் வாங்கவேண்டும் என்கிறார்கள் . ' எங்கள் அவையின் நிறுவனங்கள் நன்கொடை வாங்குவதில்லை ' என்று ரோமில் போய் பொய் பேசுகிறார்கள் . ஆனால் தங்கள் பள்ளிகள் முன் , அல்லது அவர்களது நிறுவனங்களின் முன் இதை கொட்டை எழுத்துகளில் எழுதி வைப்பார்களா? சொல்லுக்கும் செயலுக்கும் தெரிந்தே முரண்பட்ட ஒரு கும்பலை ' விபசார தலைமுறை ' என்று இயேசு கரித்துக்கொட்டினார் !!

நடைமுறையில் இப்படி அநியாயமாக நடந்து கொள்ளும் துறவியரை , கிருத்துவர்களை, ஆயர்கள் கண்டித்துள்ளனரா? பணி நீக்கம் செய்கின்றனரா? மறைமாவட்டத்தை விட்டுஒடிவிடு என்கின்றனரா? யார்மீது சட்டம் பாய வேண்டுமோ அவர்கள் மீது அதை பாய விடுவதில்லை . ''நன்கொடைகள் '' என்ற பெயரால் நடக்கும் இக்கொடுமைகளுக்கு இவர்களும் ஒத்துபோகிறர்கள். ஏழைகள் 50,000 உருவாவை இப்படி வாய்கரிசியாக போடா முடியுமா? எத்தனை ஏழைகளின் கண்ணீருக்கு இவர்கள் விடை சொல்லியாக வேண்டும் . எப்படி எளியோருக்கு நற்செய்தி அறிவிப்பார்கள் ?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 4

 

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி ....


ரேரும் நொவரும் என்று திருச்சவை , ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய மடல் ஒன்றினை தயாரித்து வெளியிட்டது. ( அறிக்கைகளை மட்டும் வைத்து திருச்சவையை எடை போட்டால் போராளி இயக்கங்களை விட புரட்சிகரமானது இத்திருச்சவை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுவோம் கவனம் !) கூட்டுடமைக் (கம்யுனிசம்) கொள்கை உலகின் பல நாடுகளில் வேரூன்ற ஆரம்பித்துவிடும் .அதை கருத்தளவில் எதிர்கொள்ளவே ரேரும் நொவரும் எழுதப்பட்டது . அதன்பின்பு திருச்சவை அதுபோன்ற பல அறிக்கைகளை வெளியிட்டது . தொழிலாளர் நலன் பற்றியும் , தொழிலாளர் சங்கங்கள் பற்றியும் புரட்சிகரமாய் இவை உரையாற்றின . ஆனால் நடைமுறையில் , சங்கங்கள் என்றாலே திருச்சவைக்கு எட்டிகாயாயை போல கசக்கும் . தொழிலாளர் ஒற்றுமை , அவர்தம் உரிமைகள் என்ற சொற்களை கேட்டாலே கோபமும் , சோகமும் , திருச்சவை ' முதலாளிகளை ' கவ்விக் கொள்கிறது .

துணைவியாரை இழந்த பெரியவர் ஒருவருக்கு வயதுவந்த இரண்டு பெண் குழந்தைகள் . ஒருநாள் என்னிடம் வந்து , 'எதாவது வேலை பார்த்துக் கொடுங்கள் , வாழ்க்கையைத் தள்ளி விடுகிறேன் ' என்றார் . தமிழகத்தின் வடபகுதிகளில் வலுவாக காலுன்றி வளர்ந்திருக்கும் ஒரு அவையின் தலைவியை எனக்கு தெரியும். இவருக்காக அவர்களிடம் கேட்டேன் . ''மனமுவந்து'' சரிஎன்றனர். வெங்காலூரில் உள்ள ஒரு இல்லத்தை சொல்லி அவ்வில்லத்தின் தலைவியை போய் பார்க்கச் சொன்னார்கள் . நானும் போய் பார்த்தேன் . ஆளை வேலைக்கும் சேர்த்துவிட்டேன் . இரவுக் காவலர் பணி அவருக்கு . இரவில் கண் விழிப்பார். காலையில் சற்று ஓய்வு எடுப்பார் . ஒரு கிழமை கழித்துப் போய் அவரை பார்த்தேன். சோகமாய் இருந்தார் . பகலிலும் தோட்ட வேலை பார்க்கச் சொல்கின்றனர் என்றார் . நானும் செய்கிறேன் என்ன செய்வது ... என்றார் . எனக்கு தூக்கி வாரிபோட்டது . இல்லத்தலைவியை போய் பார்த்தேன் . அவர் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் உழைத்து மாதம் வெறும் ஐந்நூறு உருவா மட்டும் சம்பளம் கொடுகிறார்கள் . இம்மாதிரி லச்சகணக்கான தொழிலாளர்கள் கிருத்துவ நிறுவனங்களுக்குள் சிதறி கிடக்கிறார்கள் . ஒருங்கினைக்கபடாத தொழிலாளர்கள் என்று இவர்களுக்கு பெயர். குடும்ப சோகங்களை தாளாது இந்த வெம்மையை வாழ்நாளெல்லாம் சுமக்கும் வேதனை மனிதர்கள் , இல்லப் பணியாளர்கள் என்று எல்லா கிருத்துவ நிருவனங்களுக்குள்ளும் வைத்திருகிறார்கள் , சமைக்க , இல்லத்தை தூய்மை படுத்த , காவல் காக்க, என்று பல்வேறு பணிகளை கொடுகின்றனர் . இவர்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட பணி நேரம் இதுதான் என்று கிடையாது. ஆண்டு விடுமுறை கிடையாது. உழைக்க வேண்டும் . மாடு மாதிரி உழைக்க வேண்டும் . தொழிலாளர்களுக்கு விடுப்பு நாட்கள் இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது . நடைமுறை இப்படியிருக்க ,

இந்த திருச்சவையின் புரட்சிகர அறிவிப்புகள் எல்லாம் இந்த உழைப்பு பற்றி , சம்பளம் பற்றி, எதாவது சொல்கிறது என்றால் 'ஆம் ' . வாய் கிழிய பேசுகிறது . ஒரு தொழிலாளியின் மாத சம்பளமானது , அவரது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்கு . குடும்பத் தலைவியும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கும் அளவிற்கு சம்பளம், ( வீட்டுத் தலைவி வீட்டிலிருந்து பிள்ளைகளை கவனிக்க வேண்டுமாம் ) , ஆண்டிலோருமுறை மகிழ்ச்சி பயணம் திருப்பயணம் செல்ல பணம், மருத்துவசெலவுக்கு பணம் , எதிர்கலத்திற்காக சேமித்து வைக்க பணம் , ஒரு இல்லம் அமைத்துக்கொள்ள பணம் , என்று நீண்டு கொண்டே போகிறது . துறவியர் பேரவை கூட்டங்கள் , மறை மாவட்ட அறிக்கைகள் சில நேரங்களில் இச்சம்பளம் பற்றி பேசும்போது மாதத்திற்கு 500 அல்லது 600 என்று குத்துமதிப்பாக சொல்லுவார்கள் . இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுவார்கள் . ( இந்த சம்பளத்தை வைத்து நாக்கு வழிக்கவா?) அதாவது பல இடங்களில் இது கூட கொடுப்பதில்லை என்று தானே அர்த்தம் . ஆகவே இந்த தொகையே பெரிய கருணை செய்து கொடுக்கும் தொகையாம். இதை செயல்படுத்கிற பெரிய பாக்கியவான்களும் புன்னியவதிகளும் என்ன செய்வார்கள் என்றால் , சம்பளத்தை கையில் கொடுத்துவிட்டு தங்கியிருக்கிற இடத்துக்கு வாடகையாக 150 கொடு , உனக்கு போடுகிற உணவுக்கு ஒரு 200 கொடு என்று பிடுங்கிவிட்டு மிச்ச மீதியை கையில் திணித்துவிட்டு போய்விடுவார்கள் . தொழிலாளர்கள் தங்குவதற்கு கோழிக்கூண்டு போல் சின்ன ஒரு குகையை கொடுப்பார்கள் . பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த இருட்டறையை கொடுப்பார்கள் . செத்தொழிய வேண்டிய தலைமுறை இது.

கேரளாவில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன , அங்கே இப்படி வாலாட்ட முடியாது . ஆகவே கேரளாவிலுள்ள துறவற இல்லங்களுக்கு தமிழக இளைஞர்களையும் , இளம் பெண்களையும் வேலைக்கு அனுப்பும் முகவர் வேலைகளை இங்குள்ள ''துறவற முதலாளிகள் '' இப்போது செய்கின்றனர்.

வறுமையும் , பசியும் , பிணியும் , வாட்டும் உலகமிது . தொழிலாளர்கள் , தங்கள் குடும்பத்தையும் , தங்களையும் எப்பாடு பட்டாவது இவற்றிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் .என்று இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் . நீதி , சமத்துவம், பற்றி ஊருக்கு கதை அளக்கிற கும்பல் இப்படி தங்களிடம் வந்து மாட்டிகொள்ளும் உழைப்பாளர்களை ஈவு இரக்கமின்றி கசக்கிப் பிழிவதும், அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை சுரண்டுவதும் கலப்படமற்ற மனித உரிமை மீறல்களே!

திண்டிவனம் தொழிலாளர்கள் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் ஒரு பிரச்சினை . ( இன்று வரை தீர்கபடாத பிரச்சினை ) 32 தொழிலாளர்கள் திடுதிப்பென வேலை நீக்கம் செய்யபடுகின்றனர் . ஊதிய உயர்வு கேட்டார்கள், அதை அடைய தங்களுக்குள் சங்கம் அமைக்க முயன்றனர் , இதுதான் காரணம். போராட்டம் மூண்டது. திருச்சவையின் துறவிகளே சிலர் இந்த நியாயமான தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சிறை சென்றனர், ஆனால் வேலை நீக்கம் செய்த நிறுவனம் பொய் பிரச்சாரத்திற்கு , சுவரொட்டிகளுக்கு , காவல் துறையினருக்கு கையூட்டு , வன்முறைக்கு , என ஏராளமாய் செலவு செய்தது. ஒடுக்குவதற்கு செய்த செலவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் கேட்ட தொகையை விட அதிகம் கொடுத்திருக்கலாம் .

அதே நேரத்தில் , ஆயர்களும் , துறவற அவைத்தலைவரும் நீதி , நியாயம், எங்கிருக்கிறது என்று பார்கவில்லை . திருச்சவையின் நிறுவனம் ஒன்றை தெருவுக்கு இழுக்கலாமா? என்று அழுகிய புண்ணை மூடி மறைத்தனர் . இவர்களுக்கு 32 தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, அழுகி , நாறிப்போன நரகல் இருப்பது தெரியகூடாது .அவ்வளவுதான் , உள்ளே நரகல் இருக்கிறது என விளம்பரபலகை போட
தேவையில்லை . அதுவே தனது வாடையால் விளம்பரம் தேடிக்கொள்ளும் .

இயேசு புரட்சியாளராகவும் , நீதி உணர்வு நிறைந்தவராகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலைப்பாடு எடுதவருமாய் இருந்தார் . அவர் அப்படியிருக்க அவரை மிக அருகில் பின் பற்றுவதாயும் அவராலேயே அழைக்கபட்டவராயும் கூறும் துறவிகள் மட்டும் என் இப்படி மனிதத்தன்மை இழந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள் ? எனும் வினா எழுகிறது. இயேசுவை விட்டுவிடுங்கள் துறவிகளாய் ஆகிறவர்கள் , நிறுவனங்களுக்குள் அதிகாரத்தை சுவைப்பவர்கள் எல்லாம் வனத்தில் இருந்து வந்தவர்களா? அவர்களும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு அறிந்தவர்கள்தானே. எப்படி இப்படி மாறிபோகிறார்கள்? எப்படி கடந்தவைகளை மறந்து விடுகிறார்கள் ? மறக்கடிக்கிற ஒரு உருவாக்கம் அவர்களுக்கு 'ஏற்படுகிறது '. அவ்வுருவாக்கத்தில் நடப்பதுதான் என்ன? .....


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 4

 

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி ....


ரேரும் நொவரும் என்று திருச்சவை , ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய மடல் ஒன்றினை தயாரித்து வெளியிட்டது. ( அறிக்கைகளை மட்டும் வைத்து திருச்சவையை எடை போட்டால் போராளி இயக்கங்களை விட புரட்சிகரமானது இத்திருச்சவை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுவோம் கவனம் !) கூட்டுடமைக் (கம்யுனிசம்) கொள்கை உலகின் பல நாடுகளில் வேரூன்ற ஆரம்பித்துவிடும் .அதை கருத்தளவில் எதிர்கொள்ளவே ரேரும் நொவரும் எழுதப்பட்டது . அதன்பின்பு திருச்சவை அதுபோன்ற பல அறிக்கைகளை வெளியிட்டது . தொழிலாளர் நலன் பற்றியும் , தொழிலாளர் சங்கங்கள் பற்றியும் புரட்சிகரமாய் இவை உரையாற்றின . ஆனால் நடைமுறையில் , சங்கங்கள் என்றாலே திருச்சவைக்கு எட்டிகாயாயை போல கசக்கும் . தொழிலாளர் ஒற்றுமை , அவர்தம் உரிமைகள் என்ற சொற்களை கேட்டாலே கோபமும் , சோகமும் , திருச்சவை ' முதலாளிகளை ' கவ்விக் கொள்கிறது .

துணைவியாரை இழந்த பெரியவர் ஒருவருக்கு வயதுவந்த இரண்டு பெண் குழந்தைகள் . ஒருநாள் என்னிடம் வந்து , 'எதாவது வேலை பார்த்துக் கொடுங்கள் , வாழ்க்கையைத் தள்ளி விடுகிறேன் ' என்றார் . தமிழகத்தின் வடபகுதிகளில் வலுவாக காலுன்றி வளர்ந்திருக்கும் ஒரு அவையின் தலைவியை எனக்கு தெரியும். இவருக்காக அவர்களிடம் கேட்டேன் . ''மனமுவந்து'' சரிஎன்றனர். வெங்காலூரில் உள்ள ஒரு இல்லத்தை சொல்லி அவ்வில்லத்தின் தலைவியை போய் பார்க்கச் சொன்னார்கள் . நானும் போய் பார்த்தேன் . ஆளை வேலைக்கும் சேர்த்துவிட்டேன் . இரவுக் காவலர் பணி அவருக்கு . இரவில் கண் விழிப்பார். காலையில் சற்று ஓய்வு எடுப்பார் . ஒரு கிழமை கழித்துப் போய் அவரை பார்த்தேன். சோகமாய் இருந்தார் . பகலிலும் தோட்ட வேலை பார்க்கச் சொல்கின்றனர் என்றார் . நானும் செய்கிறேன் என்ன செய்வது ... என்றார் . எனக்கு தூக்கி வாரிபோட்டது . இல்லத்தலைவியை போய் பார்த்தேன் . அவர் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் உழைத்து மாதம் வெறும் ஐந்நூறு உருவா மட்டும் சம்பளம் கொடுகிறார்கள் . இம்மாதிரி லச்சகணக்கான தொழிலாளர்கள் கிருத்துவ நிறுவனங்களுக்குள் சிதறி கிடக்கிறார்கள் . ஒருங்கினைக்கபடாத தொழிலாளர்கள் என்று இவர்களுக்கு பெயர். குடும்ப சோகங்களை தாளாது இந்த வெம்மையை வாழ்நாளெல்லாம் சுமக்கும் வேதனை மனிதர்கள் , இல்லப் பணியாளர்கள் என்று எல்லா கிருத்துவ நிருவனங்களுக்குள்ளும் வைத்திருகிறார்கள் , சமைக்க , இல்லத்தை தூய்மை படுத்த , காவல் காக்க, என்று பல்வேறு பணிகளை கொடுகின்றனர் . இவர்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட பணி நேரம் இதுதான் என்று கிடையாது. ஆண்டு விடுமுறை கிடையாது. உழைக்க வேண்டும் . மாடு மாதிரி உழைக்க வேண்டும் . தொழிலாளர்களுக்கு விடுப்பு நாட்கள் இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது . நடைமுறை இப்படியிருக்க ,

இந்த திருச்சவையின் புரட்சிகர அறிவிப்புகள் எல்லாம் இந்த உழைப்பு பற்றி , சம்பளம் பற்றி, எதாவது சொல்கிறது என்றால் 'ஆம் ' . வாய் கிழிய பேசுகிறது . ஒரு தொழிலாளியின் மாத சம்பளமானது , அவரது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்கு . குடும்பத் தலைவியும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கும் அளவிற்கு சம்பளம், ( வீட்டுத் தலைவி வீட்டிலிருந்து பிள்ளைகளை கவனிக்க வேண்டுமாம் ) , ஆண்டிலோருமுறை மகிழ்ச்சி பயணம் திருப்பயணம் செல்ல பணம், மருத்துவசெலவுக்கு பணம் , எதிர்கலத்திற்காக சேமித்து வைக்க பணம் , ஒரு இல்லம் அமைத்துக்கொள்ள பணம் , என்று நீண்டு கொண்டே போகிறது . துறவியர் பேரவை கூட்டங்கள் , மறை மாவட்ட அறிக்கைகள் சில நேரங்களில் இச்சம்பளம் பற்றி பேசும்போது மாதத்திற்கு 500 அல்லது 600 என்று குத்துமதிப்பாக சொல்லுவார்கள் . இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுவார்கள் . ( இந்த சம்பளத்தை வைத்து நாக்கு வழிக்கவா?) அதாவது பல இடங்களில் இது கூட கொடுப்பதில்லை என்று தானே அர்த்தம் . ஆகவே இந்த தொகையே பெரிய கருணை செய்து கொடுக்கும் தொகையாம். இதை செயல்படுத்கிற பெரிய பாக்கியவான்களும் புன்னியவதிகளும் என்ன செய்வார்கள் என்றால் , சம்பளத்தை கையில் கொடுத்துவிட்டு தங்கியிருக்கிற இடத்துக்கு வாடகையாக 150 கொடு , உனக்கு போடுகிற உணவுக்கு ஒரு 200 கொடு என்று பிடுங்கிவிட்டு மிச்ச மீதியை கையில் திணித்துவிட்டு போய்விடுவார்கள் . தொழிலாளர்கள் தங்குவதற்கு கோழிக்கூண்டு போல் சின்ன ஒரு குகையை கொடுப்பார்கள் . பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த இருட்டறையை கொடுப்பார்கள் . செத்தொழிய வேண்டிய தலைமுறை இது.

கேரளாவில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன , அங்கே இப்படி வாலாட்ட முடியாது . ஆகவே கேரளாவிலுள்ள துறவற இல்லங்களுக்கு தமிழக இளைஞர்களையும் , இளம் பெண்களையும் வேலைக்கு அனுப்பும் முகவர் வேலைகளை இங்குள்ள ''துறவற முதலாளிகள் '' இப்போது செய்கின்றனர்.

வறுமையும் , பசியும் , பிணியும் , வாட்டும் உலகமிது . தொழிலாளர்கள் , தங்கள் குடும்பத்தையும் , தங்களையும் எப்பாடு பட்டாவது இவற்றிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் .என்று இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் . நீதி , சமத்துவம், பற்றி ஊருக்கு கதை அளக்கிற கும்பல் இப்படி தங்களிடம் வந்து மாட்டிகொள்ளும் உழைப்பாளர்களை ஈவு இரக்கமின்றி கசக்கிப் பிழிவதும், அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை சுரண்டுவதும் கலப்படமற்ற மனித உரிமை மீறல்களே!

திண்டிவனம் தொழிலாளர்கள் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் ஒரு பிரச்சினை . ( இன்று வரை தீர்கபடாத பிரச்சினை ) 32 தொழிலாளர்கள் திடுதிப்பென வேலை நீக்கம் செய்யபடுகின்றனர் . ஊதிய உயர்வு கேட்டார்கள், அதை அடைய தங்களுக்குள் சங்கம் அமைக்க முயன்றனர் , இதுதான் காரணம். போராட்டம் மூண்டது. திருச்சவையின் துறவிகளே சிலர் இந்த நியாயமான தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சிறை சென்றனர், ஆனால் வேலை நீக்கம் செய்த நிறுவனம் பொய் பிரச்சாரத்திற்கு , சுவரொட்டிகளுக்கு , காவல் துறையினருக்கு கையூட்டு , வன்முறைக்கு , என ஏராளமாய் செலவு செய்தது. ஒடுக்குவதற்கு செய்த செலவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் கேட்ட தொகையை விட அதிகம் கொடுத்திருக்கலாம் .

அதே நேரத்தில் , ஆயர்களும் , துறவற அவைத்தலைவரும் நீதி , நியாயம், எங்கிருக்கிறது என்று பார்கவில்லை . திருச்சவையின் நிறுவனம் ஒன்றை தெருவுக்கு இழுக்கலாமா? என்று அழுகிய புண்ணை மூடி மறைத்தனர் . இவர்களுக்கு 32 தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, அழுகி , நாறிப்போன நரகல் இருப்பது தெரியகூடாது .அவ்வளவுதான் , உள்ளே நரகல் இருக்கிறது என விளம்பரபலகை போட
தேவையில்லை . அதுவே தனது வாடையால் விளம்பரம் தேடிக்கொள்ளும் .

இயேசு புரட்சியாளராகவும் , நீதி உணர்வு நிறைந்தவராகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலைப்பாடு எடுதவருமாய் இருந்தார் . அவர் அப்படியிருக்க அவரை மிக அருகில் பின் பற்றுவதாயும் அவராலேயே அழைக்கபட்டவராயும் கூறும் துறவிகள் மட்டும் என் இப்படி மனிதத்தன்மை இழந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள் ? எனும் வினா எழுகிறது. இயேசுவை விட்டுவிடுங்கள் துறவிகளாய் ஆகிறவர்கள் , நிறுவனங்களுக்குள் அதிகாரத்தை சுவைப்பவர்கள் எல்லாம் வனத்தில் இருந்து வந்தவர்களா? அவர்களும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு அறிந்தவர்கள்தானே. எப்படி இப்படி மாறிபோகிறார்கள்? எப்படி கடந்தவைகளை மறந்து விடுகிறார்கள் ? மறக்கடிக்கிற ஒரு உருவாக்கம் அவர்களுக்கு 'ஏற்படுகிறது '. அவ்வுருவாக்கத்தில் நடப்பதுதான் என்ன? .....


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 5

 

சென்ற கட்டுரை தொடர்ச்சி .....

துறவற அவைகள் ஏடுகளில் விதவிதமாக விளம்பரம் செய்து இளைஞர்களையும் , இளம் பெண்களையும் தத்தம் அவைகளில் சேர அழைக்கும் . இயேசுவை ஏழைகளில் காண .... சபை உன்னை உருக்கமாய் அழைக்கிறது. - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கிட - நலிவுற்றோருக்கு நற்செய்தி அறிவித்திட ,- என நடைமுறையோடு தொடர்பில்லாத சொல்லடைகளை வைத்து மயக்குற அழைப்பார்கள் . ஒவ்வொரு அவையும் இம்மாதிரி ஆள்பிடிப்பதர்க்கு என்றே ஆட்களையும் , தொடர்பாளர்களையும் நிரம்ப வைத்திருப்பார்கள் . ஆதிக் கிறுத்துவரின் வாழ்வைக் கண்டு ஆண்டவன் அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினானாம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத தூரம் வந்துவிட்ட இக்காலத்தில் கடவுளுக்கே இவர்களால் நெருக்கடிதனே !

சின்ன அகவையிலேயே பிள்ளைகளைப் பிடிக்க அவைகளுக்குள் போட்டி நடக்கிறது . தமிழகச் சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைச் சார்ந்து வாழப் பழக்கப்பட்டவர்கள் . தாங்களாக தங்களது வாழ்வு பற்றி முடிவு எடுக்க திராணியற்றவர்கள். ஆக இம்மாதிரி துறவற அவைகளில் சேருவது பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு எனும் அடிப்படியிலேயன்றி வேறொன்றுமில்லை . அவர் தற்சார்போடு முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவரானால் ஒருவேளை நம்மோடு சேரமட்டாரோ என்கிற அச்சம் அவையருக்கு உண்டு . எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் கொத்திக்கொண்டு போகிற அவைகளும் உண்டு . கவர்சிகரமான விளம்பரங்களும் பசப்புச் சொற்களும் கூறி அழைத்துக்கொண்டு செல்வாரும் உண்டு.

உருவாக்கத்திற்கும் பயிற்சியளித்தலுக்கும் வேறுபாடு உண்டு. இயல்பும் , பட்டறிவும், துணைகொண்டு தங்களது வாழ்க்கைக்கும் , வளர்ச்சிக்கும் , பொறுப்பைத் தாங்களே எடுத்துக்கொண்டு பிறரின் வழிகாட்டுதலோடு வளர்வது உருவாக்கம். குதிரை, நாய், கிளி, போன்ற உயிரினங்களுக்கு அளிப்பது பயிற்சி . இதில் தனிச் சிந்தனைக்கு , பொறுப்பெடுத்து செய்தல் போன்றவற்றிற்கு இடம் கிடையாது . கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் . சொன்னதை செய்ய வேண்டும் . செய்தால் பாராட்டு கிடைக்கும் . தட்டிக் கொடுப்பார்கள் . குருட்டுத்தனமாய் பணிந்து வாழ்ந்தால் துறவற வாழ்வில் கிடைப்பதும் அதுவே . சிந்திப்பது , வினா எழுப்புவது, எதார்த்தத்தில் பெரும் குற்றங்களாகும் . ஆகவே பெரும்பாலான துறவியருக்கு சொல்லிக் கொடுத்ததே தெரியுமேயன்றி, தற்சார்பு, தனிச்சிந்தனை என்பதெல்லாம் கிடையாது . வினாக்கள் கேட்டதற்காக துறவறச்சவையிலிருந்து , குருமடங்களில் இருந்தும் வெளியே வீசி எறியப்பட்டவர்களின் சோகக் கதைகள் ஏராளம் . தேவ அழைத்தல் உனக்கு இல்லையென்று காரணம் சொல்லுவார்கள் . ஏதோ கடவுளுக்கு சித்திரகுப்தன் வேலை பார்பதுபோல ! நல்லவர்களை, நேர்மையானவர்களை துறவறமும், கிறுதுவச்சமயமும் நிறையவே இழந்துள்ளன .

உருவாக்க நேரத்தில் நாள் அட்டவணை ஒன்று பின்பற்றப்பட வேண்டும் . பசித்தாலும் பசியாவிட்டலும் , மணியடித்தால் தீனியின் முன்னால் போய் நிற்க வேண்டும் . ஒர்மையில்லா ஒரு மன்றாட்டை படிப்பார். பின்பு தீவனம் போடப்படும். சட்டம் , ஒழுங்கு, எனும் பெயரில் ஒரு போலித்தனமான , மனித உணர்வற்ற கடமைகள் ஆற்றப்படும்.

ஒருநாள் அது மாலை நேரத்து வேலை நேரம். கையில் வாளியைத் தூக்கிக்கொண்டு செடிகளுக்கு தம்பியொருவன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான், இடது கையில் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ! மழை கொட்டுகிறது. அவனோ கடமையைச் செய்துகொண்டிருந்தான் . அருகிலிருந்த பெரிய சாமியார் கேட்டார் . என்னடா முட்டாள்தனமான செயலென்று. அவனாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அவனுக்கு கொடுத்திருந்தால் அவன் அங்கு வாழவும் முடியாது.

விதவிதமான தியானங்களை அவர்களுக்கு நடத்துவார்கள் . கண்ணை மூடி நிலவைக் காண சொல்லுவார்கள் . கண்ணை மூடி மென்மையான உணர்வுகளை உணர அழைப்பார்கள். மெல்லிய ஒளியில் அமர்ந்து பாடல்களை இசைத்து கடவுளைக் காண முயலுவார்கள் . பின்பு சில நிமிடங்களில் கிடைத்த உணர்வுகளை மற்றவர்களோடு பகிரச் சொல்லுவார்கள் . இந்நேரத்தில் பெரும்பாலும் கதையளப்பார்கள் .தியானத்தின் போது தூங்கியவன் கூட கடவுளைக் கண்டதாக நாம் நம்பும்படி பகிர்ந்துகொள்வான். வயிறு புடைக்க உண்டு களித்துவிட்டு ஏழைகளுக்காக உருக்கமாக வேண்டுவர் . மழைக்காக செபிப்பர். அதே நாளில் மாலை நேர விளையாட்டைக் கெடுப்பதுபோல மழை வந்துவிட்டால் கடவுளைக் கரித்துக்கொட்டுவர்.

ஈராக்கின் மீது அமெரிக்க வல்லட்சிப் படைகள் குண்டுமாரி பொழிந்து வந்தநேரம். ஒவ்வொருநாளும் தொலைக் காட்சியின் மாலை செய்தியிலும் போர் பற்றிய செய்தித் தொகுப்பு காட்டப்பட்டது. அதை காண முண்டியடுத்துகொண்டு பலர் ஓடுவர். ஆர்வமாய் அதை காண்பர். பின்பு அந்த ஈராக்கிய மக்களுக்காக கண்ணீர் சிந்தி மன்றாடுவர். ஒரு நாள் போர் நிறுத்தம் செய்தியாக வாசிக்கப்பட்டது . - அய்யய்யோ போர் நின்னுடுச்சா ! - என மிக இயல்பாக அக்கநீர்த்துளி மகான்கள் உச் கொட்டி வருத்தப்பட்டுக் கொண்டனர்.

உருவாக்கத் தளங்களில் போய் பார்த்தால் வானுலகில் உள்ளது போன்ற காட்சியை காணலாம் . அமைதி! கண் மூடிச் செபிக்கும் இளைஞர்கள் , கடமைகளை இயந்திரம் போல ஆற்றும் உயிர்கள் ! இப்படி பலப் பல காட்சிகளை காணலாம். இது ஒரு சுடுகாட்டு அமைதி. வாழ்வோடு தொடர்பில்லாத செபங்கள். அன்னியபடுக்கிடக்கும் ஒரு வாழ்வு . உழைப்போடு தொடர்பில்லாத உணவு. மக்களின் அன்றாட பிரச்சினைகளை , வாழ்வை, பொழுது போக்குகளை , உறவுகளை , அறியாத குமுக ஆய்வாளர்களாம் இவர்கள் !

மனித ஒர்மயைதான் அம்மானாக்கரில் முதன்முதலாக மழுங்கடிக்கிறார்கள் . ஆகவே முதலில் பிற மனிதரிடமிருந்து அவர்களை அப்புறப் படுத்திவிடுவார்கள். மக்களோடு மக்களாக வாழ்கிறவனுக்கு இருக்கிற பட்டறிவு உள்ளே பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இருப்பதில்லை . நான்கு சுவற்றுக்குள் உலகமே இருப்பதாய் நினைக்கும் கிணற்றுத் தவளைகள் இவர்கள் . இதை நியாயப் படுத்துகிற ஒரு கருத்தியலையும் எண்ணத்தில் ஏற்றி வைத்திருப்பார்கள் . '' செபித்தால் எல்லாம் மாறிவிடும்'' என்று சொல்லுவார்கள் . செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள் . தங்களது சோம்பேறித்தனத்தை , ஈடுபாட்டை நோக்கிய அச்சத்தை , நம்பிக்கையற்ற தனத்தை இப்படி புனிதப்புனுகு போட்டு மறைப்பார்கள்.

சின்ன கயிறு பின்னி வைத்துகொண்டு வெள்ளிக் கிழமை இரவுகளில் விளக்கை அணைத்துவிட்டு தங்களுக்கு தாங்களே கசையடி கொடுத்துக் கொள்கிறார்கள் . இயேசுவின் கசயடியை தாங்களே பெற்றுக் கொள்கிறார்களாம் . இது ஒரு நாடகம் . நசுக்கப்பட்ட மக்களின் சார்பாக இயேசு எடுத்த உறுதியான சில நிலைபாடுகளுக்காக கிடைத்த தண்டனை அக்கசயடி . அவர் தான் யூத இன மக்களுக்காக போராடி மாண்ட ஒரு வீரப் போராளி. கோழைகள் எப்படி இதில் பங்கேற்க முடியும் ? ஏழைக்காக ஒரு நேர உணவை ஒதுக்க மாட்டார்கள் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் இணைய மாட்டார்கள் . தவறை தவறு என சுட்டிக்காட்ட திராணியற்றவர்களாக இருப்பார்கள் . ஆயரை எதிர்த்தால் எதிர்காலம் கிடையாது என எண்ணுவார்கள். அதிபரை எதிர்த்தால் அழிந்தோம் என்பார்கள் . இவர்கள் இயேசுவின் மாணவர்களாம் !

உருவாக்க காலம் என்பது அவைக்கு அவை மாறுபடுகிறது . பெரும்பாலான அவைகள் பொன்னான இளமைக் காலத்தை நீண்ட கால பயிற்சி எனும் உருளையை ஏற்றி சிதறிடித்து விடுகிறார்கள் . 16 ஆண்டு கால பயிற்சி கொடுப்போரும் உண்டு. பலருக்கு பயிற்சியின் நிறைவில் அஞ்சலகம் சென்று ஒரு தொலைவரி ( தந்தி ) விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி அனுப்பத் தெரியாது. ஒரு மக்கள் கழகம் ( சங்கம் ) அமைப்பது எப்படி என்று தெரியாது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடவோ , வழிநடத்தவோ தெரியாது . தமிழ் பேச தெரியாது. ஆனால் கத்தி கரண்டி , முள் வைத்து உண்ணத் தெரியும் , பார்பதற்கு கொழுகொழுவென இருக்கும் பலருக்குள் ஆன்மா இருக்காது. மனித பண்புகள் இருக்காது. வெயிலில் நடக்க முடியாது. நகரப் பேருந்தில் பயணம் செய்ய முடியாது. மக்களுக்காக தெருவில் இறங்கி கூக்குரலிட முடியாது. புரட்சிக்குப் பூபாளம் பாடும் புத்துலகச் சிற்பிகலாம் இவர்கள்!

குருமடத்திலோ, துறவற வாழ்விலோ ,நுழைந்துவிட்டால் , அது ஒரு புனிதமான வாழ்வு. போய்விட்டு திரும்பக்கூடாது என எளிய மக்கள் பலர் நினைக்கின்றனர். ஆகவே ஒன்றுமறியாமல் உள்ளே நுழைந்த இளையோருக்கு உள்ளே போனபின்தான் உள்ள நிலைமை புரிகிறது. வெளியேறிவிட வேண்டும் என நினைத்தால் குமுகாயம் ஏற்றுக்கொள்ளது எனும் பெருங்கவலை வாட்டுகிறது.
உள்ளேயோ அதைவிட பெருங்கொடுமை! ஆக மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் வாழ்வில் பிடிப்பிழந்து நடைபிணங்களாக அலைவோரே பலர்.

இவ்வக்கட்டைச் சிறப்பாக பயன்படுத்தி கொள்வர் அவை உயர் அதிகாரிகள் . பிடித்த எலியை எப்படி பூனை அணு அணுவாகச் சாகடிக்குமோ அப்படி கொல்லுவர் . வெளியே அனுப்பி விடுவோம் என மிரட்டுவார். இளம் உள்ளங்கள் பயந்து நடுங்கி சாகும். இயேசு ஏழைகளை நேசித்தார் என்று தொண்டைகிழியப் பேசும் இவர்கள் ஏழை மாணவர்களை தம் அவைக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் .
சாமானியரை நேசித்த இறைவன் என முழங்குவார்கள் . தொல் தமிழ் மாணவர்களை எப்படியாவது பயிற்சிக்காலத்தில் ஒழித்துக்கட்ட முயல்வார்கள். தாய் தகப்பனை அண்ட விடமாட்டார்கள். அதுவும் மலையாளிகள் வாழும் அவைஎன்றால் தமிழ் மாணவ, மாணவியருக்கு கொடுமையான வாழ்வு வேறெங்கும் அமையாது.

இப்பயிற்சிக்காலத்தில் ஒட்டு மொத்தத்தில் வழிநெடுக பொறிகள் வைத்திருப்பார். தப்பிப்பது மிக கடினம் . அதிபர்களுக்கு சிங்கி தட்டவேண்டும் . அப்போது தப்பிக்கலாம் . தப்பித் தவறி மனித உரிமை , வினா எழுப்புதல் , தற்சார்பு , என மனிதப் பண்பில் உயர்ந்தால் அந்தோ பரிதாபம் ! கோடரி அவர் வாழ்வைத் தாக்கும் , எனவே , பயிற்சிக்காலம் முடியும் வரை ஒரு போலி வேடம் தரிப்பார் மாணவர். கூழைக்கும்பிடு போடுவார். குருட்டுப் பணிவை வெளிச்சம் போட்டுக்காட்டுவார் . பயிற்சியின் இறுதியில் மனித பண்பு கொஞ்ச நஞ்சம் மீதமிருந்தால் அவருக்கு மேலும் சில ஆண்டுகள் பயிற்சியாக ( தண்டனையாக ) கொடுத்து முழுமையான மனிதபண்பு அவரில் மறைந்து ஒழிந்த பின்னரே இறுதி உறுதிப்பாடு. குருப்பட்டம் போன்ற நிலைகளை அவர்களுக்கு கொடுப்பர். நெருஞ்சி முல்லை விதைத்துவிட்டு நேந்திரம் பழத்தையா தேட முடியும் ? விதைத்ததை தானே அறுக்க முடியும்!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 6

 
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .....

ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) முன்பாக நண்பரொருவர் வேர்களின் மூன்றாம் இதழில் இதே கட்டுரையின் ஒரு பகுதியில் நான் கராத்தே கன்னியர்கள் என்று குறிப்பிட்டது பற்றி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார் . அதாவது , ''நாங்களே ஒரு சிலர்தான் இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றோம் , நாங்களும் கூட கராத்தே கற்பது தவறாகுமா ? '' என்று . முதலில் கட்டுரையில் கராத்தே கற்பது பற்றிய கருத்தையே நான் குறிப்பிடவில்லை . முற்போக்கு வேடம் கட்டிய அவைகளுக்குள் உள்ள ஊத்த நாறிய நடைமுறைகளையே குறிப்பிட்டு இருந்தேன் . குறிப்பாக நன்கொடை வாங்குவது குறித்து மட்டுமே கட்டுரயின் அவ்விடத்தில் எழுதியிருந்தேன் . மீண்டுமொருமுறை வாசித்து தெளிக . கராத்தே கற்றோ கற்காமலோ இன்று இயக்கங்களில் இணைந்து குமுக மாற்றுப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தலை வணங்குகிறேன் !

கராத்தே கற்பது பற்றிய வினாவை எழுப்பியிருப்பதால் அது குறித்த என் கருத்தையும் இங்கே சொல்லிவிடுகிறேன் . கராத்தே கற்பதை ஆதரிக்கிறேன் , அதே நேரத்தில் வேற்று விளம்பரத்திற்காக மட்டும் பயன்பட்டால் அது போக்கிரித்தனமாகும் . குமுக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அது அமையும் போதுதான் லட்சியப் பாதையின் கனவுகள் நனவாகும் .
''சமுதாய மாற்றத்திற்காக தீவிரவாதிகள் படையில் முன்னணி வீரர்களாய் , முன்னோடிகளாய் தம்மை இழப்பதற்கு தயார்நிலையில் இருப்பவர்கள் அற்பனத்தை மேற்கொண்ட துறவிகள் ! இப்படிப்பட்ட தீவிர நிலைக்கு நம்மை ஆயத்தப்படுத்தி எதிர்கொள்ளும் சவாலை எற்றுவாழ வழிகாட்டுவதன் வார்தைப்பாடுகள் '' ( ௧)

( தீவிரவாதிகள் என்று தவறான சொல் இங்கு பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தங்களை போராளிகள் என்று குறிப்பிடுவதாக நினைக்கிறன் ) இப்படி , ஒரு புரட்சியை எழுத்தளவில் திருச்சவை நிறுவனங்கள் தங்களின் ஏடுகளில் எழுதி நிறைத்து வைத்துள்ளன . எதார்த்தத்தில் இவற்றில் எதை நடைமுறையாக்கி இருக்கின்றார்கள் . கூட்டுடமைத் தத்துவத்தின் எழுச்சியின் போது அதை மிஞ்சுகிற ரேரும் நோவரும் என்ற புரட்சிக் கட்டுரையை எழுதித் தள்ளியது திருச்சவை . ஆனால் செயல்பாட்டில் முதலாளித்துவத்திற்கு சோரம் போனது.

1. தெலுங்கர்களும் , மலையாளிகளும் உள்ள அவைகளில் எத்தனை தமிழர்களுக்கு பதவி கொடுத்துள்ளனர் ? உயர்பதவிகளை இன்று யார் வைத்துள்ளார்கள் ? பட்டியலிட்டால் முகத்திரை கிழிந்துபோகும்!
2. சாதிவெறி கொண்டு அலையும் நிறுவனத் தலைமை எங்கு தொல் தமிழருக்கு உரித்தான இடத்தை கொடுத்துள்ளது ? அவர்களது இடங்களைப் பிடித்து வைத்துகொண்டு ''பறையனும் பள்ளனும் இப்படிதான் ''என்றுதானே திமிர் கொண்டு பேசித்திரிகின்றனர்?
3. சேலம் ஆயர் இல்லத்தில் ஒரு பெண் குழந்தை தொழிலாளி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி சீரழிக்க பட்டபோது , புரட்சி வேடம் கட்டிய பெண் விடுதலை பற்றி வெடித்துப் பேசும் அவைகளெல்லாம் சொரிந்துகொண்டா இருந்தன ?
4. புதுபட்டிச் சிற்றூரில் அங்கி போட்ட வெரிநாயோன்று கன்னியர் இல்லம் புகுந்து வேலைகாரப் பெண்ணை நாசம் செய்து வந்தபோது உருட்டிமிரட்டி அமுக்கிவிட்டது துறவிகள் இல்லையா ?

போர்கலைகள் இங்கெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்கிறதா ? தற்காப்புக்காக கற்கும் போர்கலைகளுக்கு ஒரு வரம்பு உண்டு. தற்காப்பு என்பது போர்கலையின் ஒரு சிறு பகுதியே ! அநீதியை எதிர்த்துப் போராட தன்னை அர்பனிப்பவந்தான் போராளி . தன்னை தற்காத்துக் கொள்பவன் மட்டுமல்ல . தற்காப்பு அம்மாதிரி அநீதிக்கெல்லாம் எதிரான போரின் ஒரு பகுதியாக அமையும் போது பாராட்டாது இருக்க முடியுமா?
பணிசெயும் இடங்களில் ஏற்படும் இடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ளத்தான் இக்கலையை பயன்படுத்துகிறோம் என்கிறார்கள் சிலர் ,சரி .

1. எத்தனை பேர் இக்கட்டுகளும் , இடர்பாடுகளும் , எதிரிகளும் நிறைந்துள்ள இடங்களில் இன்று பணியாற்றுகின்றனர்.?
2. அப்படி ஈடுபடுகின்ற தோழர்களுக்கு உயர்நுட்ப தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படுகிறதா ?
3. இதுவரை கற்றுள்ளது நடைமுறைப் படுத்தக்கூடிய கலைகளா அல்லது உடற்பயிற்சிக்காக அளிக்கப் படுபவைகளா ?
4. தற்காப்புக் கலைகளும் சரி , போர்கலைகளும் சரி கற்கிரவர்கள் போராளிகளாக அல்லது குமுக மாற்றுப் பணியில் ஈடுபடுபவர்களாக இருந்தால் முதன் முதலாக ,தங்களுக்கு இதுவெல்லாம் தெரியும் என விளம்பரப் படுத்துவார்களா ? விளம்பரப்படுத்தினால் அவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன ?
5. ஒன்றை புரிந்துகொள்க , இயக்கங்கள் நிறுவனங்களாக மாறுவது இயல்பு. நிறுவனங்கள் ஒருபோதும் இயக்கங்களாக மாறாது. இறுக்கமான நிறுவனகள் உடைக்கப்பட்டு புதிய மக்களியக்கங்களுக்கு அவற்றை நல்ல உரமாக்க வேண்டும் . செத்துப்போன நிறுவனங்களை கட்டியளுவதைவிட்டு மக்களியக்கங்கள் துளிர்த்து எழட்டும் .
கறந்த பால் முலை புகா , கடைந்த வெண்ணை மோர்புகா. உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா , விரிந்த பூ உதிர்ந்தகாய் மீண்டும் போய் மரம்புகா , இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! ( 2)

உள்ள நேர்மையோடு தங்களைத் தாங்களே வினவுக்குட்படுதுவதே சரியானது. வினா ஒன்றை எழுப்பியதால் எம் கருத்தை இங்கு எடுத்துரைப்பது சரி என்றே இவ்வாறு விடையருத்தோம். இனி கட்டுரையைத் தொடர்வோம்...

தினமலரின் வாரமலரில் இரு திங்களுக்கு முன் ஒருவர் கடிதமொன்றை எளிதியிருந்தார். ( 3) திருச்சி மதுரை சாலையிலுள்ள பஞ்சப்பூர் மக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அது தேவையற்றது எனவும் குறிப்பிட்டு இருந்தார் . உண்ணாதிருந்து போராடினால் அதிகாரிகள் வருவதில்லை . மனு கொடுத்தால் தூர தூக்கிப் போட்டுவிடுகிறார்கள் . சாலை மறியல் செய்தால் ஓடி வருகிறார்கள் . பிரச்சனை தீர்கிறது. மக்களுக்கு வேறு வழியில்லாமல் அடைப்பது யார்? சரி மக்கள் தாங்கள் உரிமைக்காக போராடும் போது அதை எதிர்கின்ற ஒரு பிரிவினர் மற்றொன்றையும் நோக்க வேண்டும் .


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 7

 

சென்ற கட்டுரை தொடர்ச்சி....

பாத்திமா மாதா கோயில் திருவிழா என்று வைத்துக் கொள்ளுங்கள் சுமார் இருநூறு பேர் தேர்பவனிக்கு வருவார்கள் . நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக இக்கூட்டம் செல்ல வேண்டும் , பவனியில் இரண்டிரண்டு பேராக செல்வார்கள். மெதுவாக செபமாலை உருட்டிக்கொண்டு நத்தை போல் நகர்வார்கள் . நகரப் பேருந்துகள் , வெளியூர் பேருந்துகள் , நடுச் சாலையில் காத்துக் கிடக்க வேண்டும் . இதுதான் அநீதமான சாலை மறியல் . இருக்கிற உரிமைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டு மனித மாண்புகளை காலில் இட்டு நசுக்குவது ! வெத்து வீராப்பை வெளிச்சம் போட்டு காட்டுவது!!

அதிகாலையில் மசூதியில் ஒலிபெருக்கி வழியாக ஓதுகிறார்கள் . ஒலி காதை கிழிக்கிறது. தூக்கம் கெடுகிறது. இரவு நெடுநேரம் உழைத்துவிட்டு தூங்குகிற உழைப்பாளியும் அச்சத்தம் கேட்டு அதிர்ச்சி கொண்டு எழ வேண்டும். மார்கழித் திங்களில் இனி அய்யப்பசாமிக்கு ஒலி பெருக்கிகள் அலறும் . தேவாலயங்களில் அவரவர் விருப்பம்போல் நள்ளிரவு வழிபாடுகள் என்றும் , அதிகாலை வழிபாடுகள் என்றும் ஒலிபெருக்கிகள் அலறும். மனிதத் தன்மை இல்லா இச்செயல்களை மதச் சகிப்புத் தன்மை எனும் அழுகிப்போன கொள்கையை மக்களிடையே திணிக்கிறார்கள் .

உசேன் இருவது ஆண்டுகளுக்கு முன் வரைந்த சரஸ்வதி ஓவியத்திற்காக அவரது ஓவியக் கூடத்தை தகர்த்து நொறுக்குகிறது பஜ்ராங்க்தல் எனும் பார்பனிய அமைப்பு . அருண் சவுரி போன்ற பார்பனிய பற்றாளர்கள் எரிகிற தீயில் என்னை விடுவது போல் மத உணர்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்கிறார்கள் . ஆக மதத்தின் பெயரால் மனிதபண்பை இழந்தால் , மனித உரிமைகளை மீறினால் , பொது நலனை காலில் இட்டு நசுக்கினால் அதற்கெல்லாம் மதவாதிகள் ( அவர்கள் கிருத்துவரானாலும் , இசுலாமியரனாலும் , பார்பனரனாலும் ) புனித புனுகு பூசிவிடுவர் .

இன்று தாழ்த்தப் பட்டோர் உரிமைக்காக ஆயர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் . சண்முகநாதன் போன்ற ஆர் .எஸ் .எஸ் தலைமையும் தாழ்த்தப் பட்டோர் நலனுக்காக விக்கி விக்கி அழுகிறது. அரசோடு சலுகைக்காக போராடும் திருச்சவை தான் வழங்கவேண்டிய உரிமைகளை தன் மக்களுக்காக வழங்கி இருக்கிறதா? தாழ்த்தபட்டோருக்கு தனி கல்லறைகள் உண்டா ? இல்லையா? சாமியார்கள் மத்தியில் சாதி சங்கங்கள் உண்டா? இல்லையா ? ஆயர்களில் சாதி வெறியர்களும் பற்றாளர்களும் உண்டா? இல்லையா? தாழ்த்தப்பட்ட தொல்குடியினர் திருச்சவைக்குள் போராடிய போதெல்லாம் வன்முறையும், வசைமொழியும் கிருத்துவத் தலைமைகளால் அள்ளித் தெளிக்கபட்டதா இல்லையா? பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்ட சில துறவற அவைகள் வெளிபடையாகவே சில சாதிக் காரர்களுக்கவும் , தாழ்த்தபட்டவர்களுக்ககவும் தனித் தனியாக நடத்தப் படுகிறதா இல்லையா? தொல்குடியினரின் போராட்டங்களை பிற பொது நிகழ்சிகளில் ஆயர்கள் கொச்சை படுத்தி பேசியதில்லையா? தெலுங்கர்கள் அதிகமாக வாழும் அவைகளில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கபடுவதும் நசுக்கபடுவதும் உண்டா இல்லையா? இதெற்கெல்லாம் கிருத்துவத் தலைமை என்ன செய்துகொண்டிருகிறது ? பூசை மந்திரத்தை திருத்துவது , பீடத்தில் பூ வைக்கதிருக்க சட்டம் போடுவது என்று நேரத்தையும் காலத்தையும் போக்குகிறார்கள்.

இன்று தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக போராட சட்டபடியான உரிமை இன்றைய கிருத்துவத் தலைமைக்கு இருக்கலாம் .ஆனால் நன்னெறி அடிப்படையில் பலருக்கு அத்தகுதி கிடையாது . எப்படி ஆர் எஸ் எஸ் இன்று நீலிகண்ணீர் வடிக்கிறதோ அதற்கும் கிருத்துவ தலைமை தாழ்த்தப்பட்டோருக்கு இன்று வடிக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லை . பார்ப்பனீயம் அல்லது பாசிசம் என்பது பார்பனருக்குள் மட்டும் இல்லை . ஆர் எஸ் எஸ் போன்ற தீவிர அமைப்புக்குள் மட்டும் இல்லை கிருத்துவ , இசுலாமிய சாதியத் தலைமைக்குள்ளும் புதைந்து ஊறிக் கிடக்கிறது . மதங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் , மொழி அடிப்படையிலும் , பாலியல் அடிப்படையிலும் ஒடுக்கபடுகிற எல்லோரும் ஒன்றிணைந்து போரிட்டாலேயே கபடர்களின் வேடங்களைக் கிழிக்க முடியும் .


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கேஜிபி மூலம் விதைக்கப்பட்ட விடுதலை இறையி

1431666360-kgb.jpg
படம்: தினம்.

«கேஜிபி டபிள்யுசிசி ஊடுருவி ப்ராக் தலைமையிடமாக சர்வதேச கிரிஸ்துவர் அமைதி மாநாடு (CPC) ஆகியவற்றில் வரை கட்டப்பட்டது."

கிரிஸ்துவர் செய்தித்தாள் இன்று கத்தோலிக்க திருச்சபைக்குள் விடுதலை இறையியல் அண்ணா Bieniaszewski Sandberg மூலம் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை உள்ளது. சோவியத் பாதுகாப்பு - முன்னாள் உளவு விடுதலை இறையியல் கேஜிபி மூலம் நடப்படுகிறது என்று வெளிப்படுத்துகிறது.

- கேஜிபி டபிள்யுசிசி ஊடுருவி ப்ராக் தலைமையிடமாக சர்வதேச கிரிஸ்துவர் அமைதி மாநாடு (CPC) ஆகியவற்றில் வரை கட்டப்பட்டது. அதன் முக்கிய பணி உலகத்தில் விடுதலை இறையியல் வெளியே கொண்டு வர இன் முன்னாள் உளவு மிஹாய் Pacepa கூறுகிறது.

விடுதலை இறையியல் தந்தை வத்திக்கான் பெற்றார்

இந்த வாரம் விடுதலை இறையியல் தந்தை வத்திக்கான் பெற்றார் எனக் கருதப்படும் பூசாரி குஸ்டாவோ கூடிரர்ஸ், உள்ளது.பிரான்சிஸ் போப் பதவியேற்ற பின்னர், வருகை இரண்டாவது.

இப்போது அவர் மீண்டும் அழைப்பு தான் தற்போதைய பங்கேற்கவுள்ளனர் நிர்வாக அலுவலர் கார்டினல் முல்லர் ஒரு புத்தகம் வெளியிட்டார் என்று, கத்தோலிக்க திருச்சபை தலைமை இதுவரை வரவேற்கப்படாத கோட்பாட்டை ஏற்க முடியாது என்று காட்டுகிறது.

லத்தீன் அமெரிக்காவில் பிஷப் காலத்தில் தமது இல்லை திருத்தந்தை பிரான்சிஸ் விடுதலை சித்தாந்தத்தின் ஆதரவாளர் ஆவார். ஆனால் அவர் தன்னை நிகழ்ச்சி நிரலில் உயர் வறுமைக் குறைப்பு மற்றும் சமத்துவமான பிரச்சினை உட்கார்ந்து என்று உண்மையில் கத்தோலிக்க சுதந்திரம் நாடும் இறையியல்வாதிகள் ஒரு புதிய விடியல் ஏற்படும்.

இயேசு நேரடி நெருங்கிய

உங்கள் சொந்த இரட்சகராக கர்த்தர் இயேசு கிறிஸ்து விவிலிய நற்செய்தி நம்பிக்கை இருந்து நீங்கள் எடுக்கும் என்று எதிபாராத படைகள் மற்றும் நட்சத்திரங்களின் இருக்கலாம், ஏனெனில் அது உண்மையில் இயேசு வாழ நெருங்கிய பொருந்தும்.

இயேசு இறைவன் மற்றும் இரட்சகராக என்று அறிவித்தார் அல்லது வேறு ஏதாவது கலந்து போதிக்கும்?

நான் இன்னும் நம்பிக்கை நாம் இயேசு எப்படி சேமிக்க வேண்டும் பற்றி போதிக்க வேண்டும் என்று வருகிறது நான். நாங்கள் இயேசு எங்களுக்கு செயல்படுத்தும் என்று, தவறுகளை, ராஜத்துரோகம், மற்றும் நீரோட்டங்கள் எதிராக நிற்க முடியும் போது தான்.

நீங்கள் இயேசு வந்துள்ளதா? நீங்கள் சேமித்த? அதை நீங்கள் இப்போது அதை பெற அதிக நேரம் ஆகும்.

உண்மை: கத்தோலிக்க திருச்சபை விடுதலை இறையியல்

அது குஸ்டாவோ கூடிரர்ஸ் (படம்) "விடுதலை இறையியல்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது பெருவியன் பூசாரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் 1960 களில் வெளிப்பட்டது.

இயக்கம் இடதுசாரி பாதுகாப்பதிலும் மனித கண்ணியம், சுற்று சூழல் பொறுப்பை சமத்துவமான சமூக வளர்ச்சி காணப்படுகிறது வர்க்கப் போராட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.

அது ஒடுக்குமுறை ஒதுக்கி எதிர்த்து ஒரு சமூக விடுதலையாளனாக இயேசுவைக் காண. ஏழை ஒற்றுமை மற்றும் அடையாள நம்பிக்கை முதன்மை வெளிப்பாடுகள் மற்றும் திருச்சபையின் முக்கிய செயலாகக் கருதப்படுகிறது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard