New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூடநம்பிக்கையின் முழுவடிவமே அற்புதக் கதைகள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
மூடநம்பிக்கையின் முழுவடிவமே அற்புதக் கதைகள்
Permalink  
 


மூடநம்பிக்கையின் முழுவடிவமே அற்புதக் கதைகள்

 
jsintha.jpg1917 மே மாதம் 13-ம் நாள் போர்ச்சுகல் நாட்டின்  ஃபாத்திமாவிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் லூஸியா ஸாண்டோஸ், ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோ, ஜெஸிந்தா என்ற பத்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மின்னல் போல தோன்றிய பேரொளியில் ஓர் அழகிய பெண்ணைக் கண்டனர். அவர்களில் லூஸியா மட்டும் அப்பெண்ணுடன் பேசினாள். மற்ற இருவரில் ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோவினால் ஒளியாகத் தோன்றிய அப்பெண்ணைக் காண இயலவில்லை. சிறுவனால் அப்பெண்ணைக் காண முடிந்தது ஆனால் அவள் பேசுவதைக் கேட்க இயலவில்லை. ஆறாவது மாத முடிவில் வந்து மூவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் வாக்களித்து மறைந்து போனாள்.மூவரும் இச் செய்தியை ரகசியமாக வைதிருந்தனர். அவர்களில்  சிறியவளான ஜெஸிந்தா தனது பெற்றோர்களிடம் உளறிவைக்க, செய்தி அந்த நகரம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. ஒளியாகத் தோன்றிய அப்பெண் கன்னி மரியாள் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
அன்றிலிருந்து மூவரும் ஒவ்வொரு மாதமும் 13-ம் நாள் அவ்விடத்திற்கு வருகை தந்தனர். ஜூன் 13-ம் நாள் அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருடன் மரியாள் காட்சியளித்த இடத்தில் கூடி வழிபாடுகளையும் புகழ்மாலைகளையும் இசைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுதும் மூன்று சிறார்களும் வானிலிருந்து ஆலிவ் இலைகளை ஏந்தியவாறு அப்பெண் இறங்கி வருவதைக் காண்பதாக கூறி கூட்டத்தினரை புல்லரிக்கச் செய்தனர். இது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்தது
வாக்களிக்கப்பட்ட அக்டோபர் 13-ம் நாளும் வந்தது.  சுமார் 70,000 பேர் மரியாள் காட்சியளிக்கப் போகும் அற்புதத்தைக் காண குழுமியிருந்தனர். வானம் இருண்டு மழை பொழிந்து அற்புதத்தை காண வந்திருந்தவர்களையும், அப்பகுதியையும் நனைத்தது. கூட்டத்தினர் பக்தியில் மூழ்கியிருந்தனர், மீண்டும் அப்பெண் சிறார்களுக்கு மட்டும் காட்சியளித்தாள். அப்பெண் வானத்தை நோக்கி தனது கைகளை மெல்ல உயர்த்தினாள். அப்பொழுது, லூஸியா, “சூரியன்” என்று கூச்சலிட, எல்லோரும் சூரியனை நோக்கி பார்வையைத் திருப்பினர்.
சூரியன், வர்ணஜாலங்களை உருவாக்கியவாறு, கூட்டத்தினரின் இசைக்கேற்ப மெல்ல அசைந்து, தவழ்ந்து கூட்டத்தினரை நெருங்கியது. அதன் நெருக்கத்தினால் தங்களது ஆடைகளும், நிலமும் உலர்ந்து விட்டதாக கூறி தங்களைத் தங்களே புல்லரித்துக் கொண்டனர்.

 
arpu+1.jpg

  arpu+2.jpg
சில புகைப்படங்களையும் இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நாம் மட்டுமல்ல உலகில் மிகப்பெரும்பாமையோர் கண்டதில்லை. பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட முடியாது. ஆனால் இப்படியொரு கதையை வரலாற்றில் பதிந்துள்ளனர். இராமாயணத்தின் அனுமன் குழந்தையாக இருந்தபோது அவரால் சூரியன் விழுங்கப்பட்டிருக்கிறது; மகாபாரதக் குந்தி, சூரியனுடன் கூடி குழந்தையைப் பெற்றிருக்கிறாள் எனும் பொழுது இந்து மதத்தினருக்கும் சூரியனின் குத்தாட்டத்தை ஏற்பதில் சிரமம் இருக்காது என்று நம்பலாம். முஸ்லீம்களின் நிலையைப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: மூடநம்பிக்கையின் முழுவடிவமே அற்புதக் கதைகள்
Permalink  
 


(நியாயத் தீர்ப்புக்குரிய அந்தநாள் நெருங்கிவிட்டதுசந்திரனும் பிளந்துவிட்டது
(குர்ஆன்   54: 1)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைதூதர்தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாகக் (பிளந்திருக்கக்) காட்டினார்கள் எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.
arpu+3.jpg
அந்தக் காட்சி இப்படியிருக்குமோ?
(நன்றி:Faithfreedom international.com)
சந்திரனை இரு கூறுகளாக துண்டாடிய முஹம்மதின் அற்புதத்தைப் பற்றிபலரும் விவாதித்துள்ளனர். நான் மீண்டும் இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. இதைபற்றி தோழர் செங்கொடி எழுதிய இடுகையைஇங்கே(  நிலவை உடைத்து ஒட்டிய அல்லா ) காணலாம். முஹம்மது நிகழ்த்திய இவ்வற்புதத்தையும் மெக்காவிலிருந்த ஒரு சிலரைத்தவிர உலகில் எவரும் காணவில்லை. முஸ்லீம்களில் பலருக்கும் இந்த கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை உண்மையான நிகழ்வென்று கூறி புகைப்பட ஆதரங்களையும் முஸ்லீம் அறிவியளாலர்கள் முன்வைக்கின்றனர்.  
இதுபோன்ற தலைமுறைகள் கடந்த செய்திகளை ஆய்வு செய்வதற்கென்று ஹதீஸ் கலையில் சில விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
v  செய்தி எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
v  அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
v  அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்கவேண்டும்.
v  அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இத்தன்மை ஒருங்கே அமையப்பெற்றால் அது ஸஹீஹான ஹதீஸ். அத்துடன் குர்ஆனுக்கும் முரண்படக்கூடாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இதே விதிமுறைகளை குழந்தைகள் கூறிய சூரிய அற்புதத்திற்கும் பொருத்திப் பார்ப்போம்
Ø  ஹதீஸ்களைப் போன்று பல 250 ஆண்டுகளுக்குப் பின் தொகுக்கப்பட்ட செய்தி அல்ல. இச்சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறுபவர்களின் அடுத்த தலைமுறையினர் நம்மிடையே இருக்கின்றனர்.
Ø  சந்திரன் இருகூறுகளாக பிளக்கப்பட்டதை கண்டதாக ஒரு சிலரது சாட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சூரியன் கீழிறங்கிவந்து நடனமாடியதை ஒரு பெரும் கூட்டமே கண்டதாக சாட்சியம் உள்ளது.
Ø  நேரில் கண்டவர்களது புகைபடங்களும் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது
எனவே, சூரியன் இறங்கிவந்து நடனமாடிய இந்த செய்தி, ஸஹீஹ் என்ற தகுதியைவிட உயர்ந்த நிலைக்கு பொருந்தக்கூடியது. குர்ஆன் ஹதீஸ்களுக்கும் முரண்படவில்லை. ஏனெனில் சூரியன் தினமும் அல்லாஹ்வின் அர்ஷை நோக்கிப் பயணிக்கிறது, மறுமையில் நெருங்கி வரக் கூடிய ஒன்றுதான் என்கிறது குர்ஆன்.  உதாரணத்திற்கு சூரியன் நிறுத்தப்பட்டதை(!) பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து, அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார்... சூரியனை நோக்கி, "நீஇறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்'' என்று கூறிவிட்டு, "இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு'' என்று பிரார்த்தித்தார். எனவே,அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது...
 (முஸ்லீம்)
சந்திரன் இரண்டாக பிளந்து ஒட்ட முடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும் பொழுது, சூரியன் கீழிறங்கிவந்து நடனமாடியதை புறக்கணிப்பது முறையல்ல!  முஸ்லீம்கள் இந்த அற்புதக்கதையையும் ஏற்பதுதான் நியாயம்.
தஜ்ஜால்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மூடநம்பிக்கையில் முன்னணியில் நிற்பது கல்லா? மரமா?

செப்டம்பர் 21, 1995-ல் விநாயகர் சிலைகள் பால்குடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அன்று குழந்தைகளுக்கு அருந்த பால் கிடைக்காமல் செய்தன. கடந்த 2010-ல் கேரளாவிலுள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த, flex-Printசெய்யப்பட்ட, குழந்தை ஏசுவைக் அணத்துக்கொண்டிருக்கும் மேரியின்படத்திலிருந்து கண்களில் நீர்வழிவதாகக் கூறி கிருஸ்துவர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர். மதநம்பிக்கையாளர்களிடையே தினமும் இதுபோன்று ஏதாவது ஒரு அற்புதக் கதைகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவைகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகும் பொழுதெல்லாம் மாற்று நம்பிக்கையிலிருப்பவர்கள் மறுப்பதும், எள்ளிநகையாடுவதும் வாடிக்கையானது.
       உண்மையைச் சொல்வதென்றால் குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்த அனைவருமே இத்தகைய செய்திகளை நம்புவதில்லை. அவர்களில் வெகுசிலர் பகுத்தறிவுடன் இவைகளை அணுகுகின்றனர். இதைப்போன்ற பிறமத நம்பிக்கைகளிலிருந்து வெளியேறியவர்களை இஸ்லாமியர்கள் மிகவும் விரும்புவார்கள் (இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து வெளியேறியவர்களையல்ல) அத்தகையவர்களை காணும்பொழுது அவர்களது மனம் தாவா (Dawa-அழைப்பு) செய்வதற்காகத் தாவிக் குதிக்கும்.
       அழைப்புப் பணி, இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று பீற்றிக்கொள்வதோடு, இதைப் போன்ற மூடக்கதைகளுக்கு இஸ்லாமில் துளியும் இடமில்லை என்று துவங்கும். பொதுவாகச் சொல்வதென்றால், இஸ்லாமியர்களின் ‘தாவா பணி, இத்தகைய பகுத்தறிவு வாதங்களுடன்தான் ஆரம்பமாகின்றன. தாவா செய்பவர்களை தாயீ’(Dayeeஎன்பார்கள். தாயீக்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளெல்லம் உண்டு. இஸ்லாம் மட்டுமே சரியாதென்று நம்பவைக்கப்பட்ட நானும், என் நண்பர்கள் பலரிடம் ‘தாவாசெய்திருக்கிறேன். ஏர்வாடி, நாகூர் போன்ற கல்லறைகளைச் சுற்றி பின்னப்பட்ட கதைகள் பதிலாகக் கிடைக்கும். அதற்கு, இஸ்லாமிற்கும் தர்காக்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று ஒரே அடி, அவ்வளவுதான் முடிந்ததுகதை. அவர்களுக்குப் பேசுவதற்கு இடமிருக்காது அதன் பிறகு மைதானம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
இஸ்லாமிற்கும் மூடத்தனத்திற்கும் சம்பந்தமில்லையா? இஸ்லாமிய போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா?
       கடந்த பகுதியில் நிவைப்பிளந்த கதையைக் கூறிய பிறகும் இப்படியொரு கேள்வி பொருளற்றதுதான். ஆனாலும் அதன் தொடர்ச்சியாக, முஹம்மதின் மூடத்தனமான செயல்கள், போதனைகள் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
       ஓஷோவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அவர் சற்று அல்ல மிகவுமே விநோதமான ஆசாமி. அவர் தன்னைபற்றிக் கூறும்பொழுது, அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்திலிருந்த பிற ஆசிரியர்களுடன் பழகியதைவிட, அங்கிருந்த ஒரு குல்மோஹர் (Gulmohar)மரத்திடம் பழகியதுதான் அதிகம் என்கிறார். அவர், அதற்கு வணக்கம் சொல்வது, பேசுவது, கட்டித் தழுவுவது என்றிருந்திருக்கிறார். பிறரையும் அவ்வாறு செய்யுமாறு கூறியதால் பைத்தியக்காரப் பட்டம் பெற்றதாகவும் கூறுகிறார். அவரது பிரிவிற்குப் பிறகு அம்மரம் பட்டுப்போனதாக அறிந்தவுடன் மீண்டும் வந்து கட்டித்தழுவிய பொழுது இறந்த அம்மரத்திலிருந்து நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக கூறிக்கொண்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இது பரவாயில்லை பின்வரும் ஹதீஸைப்பாருங்கள்,
அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம்ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, மரம் பேசுவதோடுமட்டுமல்லாமல், ஜின்களைப்பற்றி முஹம்மதிடம் உளவுப் பணியையும் செய்திருக்கின்றன. ஜின்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கே பதிலில்லை. இந்த லட்சணத்தில் ஜின்களைப் பார்த்து உளவு சொன்ன மரத்தைப்பற்றி கேட்டால் என்ன சொல்வது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
தனது பிரிவினால் பட்டுப்போனதாக ஓஷோ கூறியது உயிருள்ள மரத்தைதான். இங்கு பாருங்கள், முஹம்மதின் பிரிவைத் தாங்கமுடியாமல் வெட்டப்பட்ட பேரிச்சமரத்தின் அடிமரக்கட்டை அழுகிறது. அது ஓலமிட்டதை அவர்களது தோழர்களும் கேட்டிருக்கின்றனர்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும் போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்ட போது அந்தக் கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியேற்றோம். ஆகவேநபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்து கொண்டேயிருந்தது.)
(புகாரி)
முஹம்மது வந்து கைவைத்து சமாதானம் செய்யும்வரை ஓலமிட்டுள்ளது. ஓஷோ செய்தது பைத்தியக்காரத்தனமா? இதைத்தான் அல்லாஹ், சிந்திக்கமாட்டீர்களா, சிந்திக்கமாட்டீர்களா  என்று பலமுறை கெஞ்சாதகுறையாக கேட்கிறான். இது இந்த மடையர்களுக்கு எங்கே புரியப்போகிறது?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நம்ம ஓஷோ, தான் விரும்பிய உயிருள்ள மரத்திற்கு வணக்கம் சொன்னதாகக் கூறினார். ஆனால், உயிரற்ற ஒரு கல் முஹம்மதிற்கு “அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)” என்று கூறி வந்துள்ளது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
(முஸ்லீம்)
                என்ன அறிவுகெட்டத்தனமாக இருக்கிறது கல் எங்காவது பேசுமா? என்று நினைத்தாலே உங்களது ஈமாந்தாரித்தனம் கோவிந்தாதான். இஸ்லாம் மதமல்ல மார்க்கம். இது பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம்.  (என்ன?   உங்களுக்கு ஹூருலீன்கள் வேண்டுமா? வேண்டாமா? கண்ணை மூடிக்கொண்டு நம்பினால்தான் ஹூருலீன்கள் என்ற அழகிய கன்னிகைகள் கிடைக்கும்.)
hajar_aswad.jpg
                நாளை மறுமையில்(?) கஅபாவிலுள்ள அஸ்வத் கல், பார்ப்பதற்கு இரண்டு கண்களுடனும், சாட்சி கூறி பேசுவதற்கு ஒரு நாவுடனும் வரும் என்கிறது இப்ன் மாஜாவிலுள்ள ஹதீஸ். ஆனால் இந்த முட்டாள் உமருக்கு இது புரியாமல், அஸ்வத்தை வெறும் கல் என்று உளறினாலும், போனால் போகிறதென்று ஒரு முத்தமிட்டு சமாளித்து, முஹம்மதின் மரபைக் காப்பாறிவிட்டார். இன்றும் இந்த மரபு தொடர்கிறது. அது வெறும் கல்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், எங்களுக்கா பகுத்தறிவில்லை? என்று கேட்டவாறு, கல்லை முத்தமிடுகின்றேன் என்று பாய்கின்ற பேர்வழிகளெல்லாம் மூக்கு, உதடு கிழிந்து தொங்கியவாறு வெளியில் வருகின்றனர். முத்தப் போராட்டத்தில் மரணங்களும் நிகழ்ந்துவிடுகிறது. ஆனாலும் விடுவதாகயில்லை. நெரிசலில் சிக்கி, பிதுங்கி மரணத்தருவாயிலும், கல்லை வணங்குகிறான், கட்டையை வணங்குகிறான் என்று மற்றவர்களை ஏளனம் செய்வதை மட்டும் கைவிடுவதாகயில்லை. ஏனெனில் இது மதமல்ல மார்க்கம்!
                மரம் பேசுகிறது, அழுகிறது, கல் முகமன் கூறுகிறது இவைகளெல்லாம் அறிவியல் பூர்வமானாதாகவும், பகுத்தறிவிற்கு ஏற்புடையதாகவும் இருக்கும் பொழுது, விநாயகர் பால் மட்டுமல்ல, பட்டை சாராயம் குடித்ததாகக் கூறினாலும், மேரி கண்ணில் நீர் வழிந்ததாகவோ, பீர் வழிந்ததாகவோ கூறனாலும் நம்பித்தொலைத்து விடுங்கள்!
நினைவில் கொள்ளுங்கள் இஸ்லாம் மதமல்ல மார்க்கம்!
தஜ்ஜால்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அற்புதக்கதைகள் : 3 -மூடநம்பிக்கையின் முன்னோடி பாதபூஜை செய்த தண்ணீரா? எச்சில் துப்பிய தண்ணீரா?

 

ஒரு முறை தருமி அய்யா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, வாய்ப்புகள் இருந்தும், முஹம்மது ஏன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று தன்னிடம் ஒருவர் கேட்டதாக ஒரு கேள்வியை எழுப்பினார். அப்பொழுது அவருக்கு மிகச் சுருக்கமான முறையில்தான் பதிலைக் கூறினேன். அதைத்தான் இப்பொழுது சற்று விரிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தாவாப் பணி செய்பவர்கள், முஹம்மதுவைப்பற்றி கூறும் பொழுது முதலில் கூறுவது அவரது எளிமையைப் பற்றியதாகத்தான் இருக்கும். அவரும், அவரது குடும்பத்தினரும் மூன்று வேளை உணவைக்கூட சரிவர உண்டதில்லை, பகட்டான ஆடைகள் அணிந்ததில்லை, அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்பதாக துவங்குவார்கள்.
த.த.ஜ-வின் தலைமைப் பேச்சாளர்களில் ஒருவரான கே.எஸ். அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் உரைகளில் மவ்லீது என்ற புகழ்மாலைப் பாடல்களைப் பற்றி உரை மிகப்பிரபலமானது. இசுலாமியனாக இருந்தபொழுதுஒருமுறை குறுந்தகட்டில் பதிவுசெய்யப்பட்ட அவரது அந்த சொற்பொழிவைக் (பயான்) கேட்கிற மும்முரத்தில் தொழுகையைத் தவறவிட்டிருக்கிறேன்.  நமது கவனத்தைக் கட்டிப்போடுமளவிற்கு கிண்டலும் கேலியுமாக பேசக்கூடியவர்அவர்.
குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் முஹம்மதின் எளிமையை, வழியும் வியர்வையைத் துடைத்தவராக எச்சில் தெரிக்க ஆவேசமாக பேசினார். என்ன பேசினார்? முஹம்மது அராபிய தீபகத்திற்கே சக்கரவர்த்தியாக இருந்தபோதிலும் தன்னைத் தலைவர் என்று பொருள்படும் செய்யது” என்றஅடைமொழியிட்டு அழைப்பதைக்கூட விரும்பாதவராக இருந்தார். தனக்கு தனிப்பட்ட மரியாதைத் தருவதைகூட முஹம்மது அறவே வெறுத்தார் என்பதாகஹதீஸ்கள் வாயிலாக கூறினார்.
உண்மையென்னவெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மற்றொரு பகுதி கே.எஸ். அப்துர் ரஹ்மான் ஃபிர்த்வ்ஸி அவர்களின் சொற்பொழிவிற்கு எதிராக இருப்பதுதான். இதென்ன கலாட்டா என்கிறீர்களா? அதுதான் இஸ்லாம்! அதுதான் எளிய மார்க்கம் !!
முஹம்மது எப்பொழுதுமே மற்றவர்களைவிட தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்தார். அது அவரது செயல்களில் வெளிப்பட்டது என்பதுதான் உண்மை.
உம்முடைய ரப்பு உம்மை புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்த போதுமானவன்
(குர்ஆன் 17:79)
அபுஹூரைரா (ரலி)  அறிவிப்பதாவது:
"என்னைப் பற்றிக் கூறப்படும் போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையே அவன் நாசமாகட்டும்"   என்று நபி (ஸல்)கூறியுள்ளார்
 (திர்மிதீ)
ஸலவாத் என்பது பிரார்த்தனை அல்லது வாழ்த்துப்பாடல் எனலாம். மற்றவர்கள் தன்மீது அளவற்ற அன்பைப்  பொழிய வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் அதை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).
"ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மனிதர்கள் அனைவைரையும்விட நான் அன்புக்குரியவனாக ஆகாதவரை 'எந்த அடியாரும்' அல்லது 'எந்த மனிதரும்' இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லீம்)
 (நபியேநீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்
(குர்ஆன் 3:31)
வேறொன்றுமில்லை, அன்பில் துவங்கி அடிபணிதலில் முடித்துவிட்டார் அவ்வளவுதான். வெறும் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் அடிபணிதல் என்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது என்பதை முஹம்மது நன்றாகவேஅறிந்திருந்தார்.
எவர் (அல்லாஹ்வின்ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இவைகள் முஹம்மது, தன்னைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்ட அவரது அரசியல் தந்திரங்கள் என்று விட்டுவிடலாம். மரணத்தருவாயில் அவர் எழுதித்தர  நினைத்த கட்டளைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டதை நாம் அறிவோம் இவைகளின் முடிவு இப்படித்தான் இருக்கும். நாம் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பிற்கு இது சற்றும் பொருந்தவில்லை என்று நீங்கள் கோபப்படுவது தெரிகிறது. சற்று பொறுங்கள். தொடர்பில்லாமல் இல்லை. நாம் அற்புதங்களில்தொடர்ந்து பார்க்கலாம். அவர் தன்னை ஒரு புனிதப்பிறவியாக எண்ணிக்கொண்டு செயல்பட்டதை இந்த மதவாதிகள் வெளிப்படையாக பேசுவதில்லை. ஏனெனில் இவர்கள் முஹம்மதின் மீது சுமத்துகின்ற பிம்பங்களுக்கு அவைகள் எதிரானாவை என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும்.
நமது ஊரில் அப்பாவாக இருந்தும் அம்மா’ என்றழைக்கப்படும் ஒரு சாமியாரின் காலைக் கழுவி பாதபூஜை செய்வதற்காக பணத்தையும் கொடுத்துவிட்டு வரிசையில் காத்து நிற்கும் மடையர்களை நாம் அறிவோம். இங்கு அதுவே வேறுமுறையில் உங்களில் எவருக்கும் அப்பாவாக இல்லாதவர் ஆனால் உங்களின் அம்மாவின் கணவர்....
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக்கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். ..
(முஸ்லீம்)
தனது தோழர்களின் மடத்தனமான இந்த செயலை முஹம்மது தடுக்கவில்லையே ஏன்?
அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
...இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும்,நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லிஅதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவிஅதில் உமிழ்ந்தார்கள். பிறகு (எங்களிடம்)இதிலிருந்து சிறிது அருந்தி விட்டுஉங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்நற் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவேநாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, (இறை நம்பிக்கையாளர் களான) உங்களின் அன்னை(யான என)க்காக வும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
(புகாரி)


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இது சற்று நீளமான ஹதீஸ் எனவே நமக்கு தேவையான பகுதியை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)மர்வான் பின் ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில்...அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும்உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர்தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும்மேனியிலும் தேய்த்துக் கொள்வார்...
(புகாரி)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா'வில் கற்களை எறிந்துதமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோதுஅவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்துஅவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி "மழிஎன்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!'' என்றார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது, சிரைக்கப்பட்ட தனது முடியும் புனிதமானது என்று அவர் கொண்டிருந்த எண்ணத்தையே இது காட்டுகிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 … உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்தி ருந்தது. அவர்களது வியர்வைபடுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம்தமது நறுமணப் பெட்டியைத் திறந்துஅந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக் கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டவரல்ல, மிக எளிமையானவர் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகளாகத் தோன்றவில்லையா?
இத்தனை மடத்தனங்களையும் முஹம்மது தடுக்கவில்லை மாறாக முன்னின்று வழிநடத்திச் செல்கிறார். முஹம்மதுவே ஒரு அற்புதம்தான் என்பது முஸ்லீம்களின் நம்ம்பிக்கை. அவரது உடல் வெளியேற்றும் கழிவுகள்கூட அற்புதம்தான்.
மேலும் தொடர்கிறேன்
தஜ்ஜால்


__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

Reaalyu good article.

 

If your religion says- then divine otherwise superstition.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அற்புதக் கதைகள்-4, அமுதசுரபியாக மாறிய எச்சில்

 


நண்பர் ஒருவரின் இம்சை தாங்க முடியாமல், சில நாட்களுக்கு முன் சொற்பொழிவு கூட்டம் (பயான்) ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து ஒரு கதையைமட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒரு முறை முஹம்மதிற்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது, மறைவான இடம் கிடைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாராம். இதைக்கண்ட முஹம்மதின் தோழர், சற்று தொலைவிருந்த ஒரு மரத்திடம் சென்று, “ஏய் மரமே, அல்லாஹ்வின் தூதர் சிறுநீர் கழிக்க மறைவான இடம் தேடிக்கொண்டிருக்கிறார், உன்னால் அவருக்கு ஒரு மறைவிடம் உருவாக்கித்தர வேண்டும். இதை அல்லாஹ்வின் தூதர் பெயரால் ஆணையிடுகிறேன்” என்றாரம்.
உடனே, அந்த மரம் வேறுடன் பெயர்ந்து, நகர்ந்துவந்து, முஹம்மதிற்கு தோதாக, மறைவிடமாக நின்றுகொண்டதாம். முஹம்மது தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டதும், அந்த மரம் மீண்டும் நகர்ந்து சென்று தனது பழைய இடத்திலேயே நின்றுகொண்டதாம்.
சொற்பொழிவாளரோ, மேலும் சில கதைகளையும் கூறி, சிறிதுகூட வெட்கமில்லாமல் பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று முடித்தார் நான் எனது நண்பரைப் பார்த்தேன் அவர் முகத்தில் அசடுவழிய சிரித்தார். கல் பேசுகிறது, மரக்கட்டை அழுகிறது, உயிருள்ள மரம் நடந்துவருகிறது எனும்பொழுது உருவழிபாடு செய்கிறவர்களின் கல், மரக்கட்டைகளில் உள்ள உருவங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று கூறுவது இவர்களின் மதவெறிக்கு ஒரு சான்று. நாம் இவர்களின் உளறல்களைச் சுட்டிக்காட்டினால் மதநம்பிக்கை புண்பட்டுவிட்டதாக ஓலமிடுவார்கள், பத்தவாக்களை தூக்கிக்கொண்டு வெறிபிடித்து அலைவார்கள். ஆனால் பிறநம்பிக்கைகளை எள்ளிநகையாடுவார்கள்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும்,தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(குர்ஆன் 22:73)
தெய்வங்கள் என்று கூறப்படும் பிறவைகள் எந்த சக்தியும் அற்ற ஜடங்கள், அவைகள் சைத்தானால் உருவாக்கப்பட்டவைகள் என்று குர்ஆன் கூறுகிறது. இதுதான் குர்ஆன் மூலம் அல்லாஹ்(முஹம்மது) கற்பிக்கும், மதங்களுக்கிடையே ஆன நல்லிணக்கம், அன்பு, அமைதி, சகோதரத்துவம், பகுத்தறிவு(?).
கடந்த பகுதியில் முடி மற்றும் எச்சிலைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். முஹம்மது தனது எச்சிலைக் காறி உமிழ்ந்தபொழுது அவரது கைத்தடிகள், அதைக் கையில் பிடித்து முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொண்டதற்கான காரணம், அது புனிதமானவைகள் மட்டுமல்ல, அற்புதங்களின் பிறப்பிடமாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும், அவர் காண்பித்துக் கொண்டதுதான். அவரது எச்சில் செய்த மற்றொரு அற்புதத்தையும் பார்க்கலாம். 
உணவைப் பெருகச் செய்த அற்புத எச்சில்,
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன்…..
அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில்அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவேவிரைந்து வாருங்கள் என்று கூறினார்கள்..... பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும்மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகுஎங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி)ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுஅந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும்,எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.
(புகாரி)
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் உணவு, ஆயிரம் நபர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தும், முன்பிருந்ததைப் போல நிறைவாகவே இருப்பது எப்படி? நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதனின் எச்சில் எப்படி உணவைப் பெருகச் செய்யமுடியும்? அதற்கான வேதிவினை என்னவோ?
நாம் இன்று உணவுத்தேவையில் தன்னிறைவடைந்துவிட்டதாக பீற்றிக்கொண்டிருந்தாலும் பட்டினிச்சாவு என்னவோ தொடர்கதையாகத்தான் இருக்கிறது. உணவைப் பெருகச் செய்யும் எச்சில் மூலமாவது பட்டினிசாவைக் குறைக்கலாமல்லவா? இஸ்லாம் பகுத்தறிவும், அறிவியலும் நிறைந்த பூர்வமான மார்க்கமல்லவா? எனவே வேதியியல் தெரிந்த ஈமாந்தாரிகள் விளக்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எச்சில் மற்றும் முடியை பொருத்தவரையில் அவைகள் இருக்குமிடத்தில் இருக்கும்வரைதான் வெளியேற்றப்பட்டுவிட்டால் அது அசுத்தமானதுதான். ஆனால் தன்னை ஒரு புனிதப் பிறவியாகத்தான் முஹம்மது எண்ணிக் கொண்டிருந்தார்.  மருத்துவ குணம் கொண்ட எச்சில்,
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன்…
நபி (ஸல்) அவர்கள்அலீ பின் அபீதாலிப் எங்கேஎன்று கேட்டார்கள். மக்கள்அவருக்குக் கண்வலி  அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள்அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள்.
(புகாரி)
அடுத்தது விரல்களிலிருந்து நீர் சுரந்த அற்புதம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள்,உங்களுக்கென்ன ஆயிற்றுஎன்று கேட்டார்கள். மக்கள்தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூ செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்று பதிலளித்தனர். உடனேநபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனேஅவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்மேலும்உளூ செய்தோம்.
அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) கூறுகிறார்கள்:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம்நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்என்று கேட்டேன். அவர்கள்நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம் என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
ஒருவர் ஒளுச் செய்ய குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். அப்படியானால் அன்று முஹம்மது ஆயிரத்து ஐநூறு லிட்டர்கள் தண்ணீர் சுரந்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளை அறியாத அல்லாஹ்  தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தயமும் செய்து கொள்ளுங்கள் என்று அப்பாவியாக கூறுகிறான்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும்,கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
(குர்ஆன் 5:06)
எந்த ஒரு மனிதனையும் கசக்கிப் பிழிந்தாலும் இத்தனை திரவம் சுரக்க வழியே இல்லை. நாமறிந்த வரையில் தாய்ப்பால், இரத்தம், எச்சில், வியர்வை, சிறுநீர், விந்து போன்றவைகள் மனித உடலிலிருந்து நீர்ம  வடிவில் வெளியேறுவதைக் காண்கிறோம். முஹம்மதிற்கு பீறிட்டு சுரந்து, அவரது கைத்தடிகள் ஒளு செய்யப் பயன்படுத்தியது இவற்றில் எதுவோ?
ஒருவேளை முஹம்மதிற்கு நீர் சுரப்பதை அல்லாஹ் முன்பே அறிந்திருந்தால் இப்படி ஒரு வசனத்தை இறக்கியிருக்கக் கூடும்.
தண்ணீர் கிடைக்காத போது முஹம்மதின் ’உறுப்பு’களிலிருந்து நாம் தண்ணீரை சுரக்கச்செய்வோம் அதில் உங்கள் முகங்களையும்கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்!
முஹம்மதின் உடலிலிருந்து சுரக்கும் நீரின் பயன்பாடு ஒளுவுடன் நிற்கவில்லை
Imam Jalal al-Din Suyuti reports from Abu Ya’la, Hakim, Dar Qutni, Tabarani, Abu Nu’aym from Umm Ayman (also known as Barakah)
May Allah be pleased with her, who said, ‘the Prophet got up one night and urinated in a bowl. During that night, I rose in the state of thirst so I drank whatever was in the bowl. In the morning I told Him what I done and He smiled and said, ‘surely you will never have pain in your stomach’’. Abu Ya’ala’s wordings are as follows, ‘you will never feel stomach pain as of today’
Tabarani said: Hussain bin Is’haq al-Tustari informed us, who was informed by Uthman bin Abi Shaybah, who was informed by Shababah bin Sawwar, who was informed by Abu Malik al-Nakha’i who narrated from Aswad bin Qays, who narrated from Nubayh al-Anazi, who narrated from Umm Ayman, who said: ‘‘One night the Prophet got up and went to a side to urinate in the bowl. During the night, I rose and was thirsty so I drank whatever was in it and I did not even realize what it was. In the morning, He said, ‘Oh Umm Ayman! Throw away whatever is in the bowl’. I replied, ‘I drank what was in the bowl’. He thereafter smiled as such that His teeth appeared and said, ‘Beware! You will never have stomach pain’’.  
(உம்மு அய்மன் கூறுகிறார், ஒரு நாள் இரவில் எழுந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்திருந்தார். தாகத்தின் காரணமாக இரவில் எழுந்த நான் கிண்ணத்திலிருந்ததைக் குடித்துவிட்டேன். அதிலிருந்தது என்னவென்றும் என்னால் அறியமுடியவில்லை. காலையில், ”ஓ உம்மு அய்மன், கிண்ணத்திலிருப்பதை  தூரமாக எறிந்துவிடு என்று அவர் கூறினார். “கிண்ணத்திலிருப்பதை நான் குடித்துவிட்டேன்” என்றேன். உனக்கு ஒருபொழுதும் வயிற்றுவலியே வராது என்று அவர் பற்கள் தெரிய சிரித்தவாறு கூறினார்.)
இந்த செய்தி தொடர்பாக வரும் மற்றொரு ஹதீஸ், “உனது வயிற்றை நரக நெருப்பு தீண்டாது” என்றும் முஹம்மது கூறினார் என்று போகிறது.
முஹம்மது சிறுநீர் கழித்ததும், உம்மு அய்மன் என்னவென்று அறியாமல் அதைக் குடித்ததும் தற்செயலான நிகழ்வுகளே. ஆனால் அதற்கு முஹம்மது கூறும் மருத்துவ விளக்கம் சகிக்க முடியாதவைகளாக உள்ளன. ஜூலை 13, 2007-ம் ஆண்டு எகிப்திலுள்ள The Middle East Media Research Institute என்ற நிறுவனம் முஹம்மதின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்துமே புனிதமானவைகளே என்றொரு ஃபத்வாவை வழங்கி, பெயர்தாங்கி முஸ்லீம்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டு. சாதரண கால்நடையான ஒட்டகத்தின் சிறுநீருக்கே மருத்துவகுணம் இருப்பதாகக் கூறுவதை ஏற்பவர்களுக்கு, இப்பிரபஞ்சத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த படைப்பான முஹம்மதின் சிறுநீரின் மீது சந்தேகம் தோன்றலாமா? நிச்சயமாகத் தோன்றியிருக்கக் கூடாது!
உண்மை என்னவெனில், முஹம்மது தனக்கு வஹீ மூலம் வழங்கப்பட்ட குர்ஆனை மட்டுமே தனது அற்புதமாகக் கூறுகிறார். அதனால்தான் குர்ஆனைப்போல ஒரு அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? பத்து அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? என்று பீற்றிக்கொண்டிருந்தார். முஹம்மதின் இந்த உளறல்களை மக்காவாசிகள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் முஹம்மதிடம், நீர் அல்லாவின் தூதரே என்பதற்கு சாட்சியாக,
"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்ய வேண்டும், பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்அல்லாஹ்வையும்வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும்வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்க வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும்,
(குர்ஆன் 17:90 – 93)
என்று ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது காண்பிக்கவேண்டும் என்றனர். என்ன பதிலைக் கூறுவதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு முஹம்மதின் கைத்தடி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
.."என் இறைவன் தூயவன்நான் மனிதனாகவும்தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
 (குர்ஆன் 17:93)
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது...
(குர்ஆன் 18:110)
குர்ஆனின் கூற்றுபடி முஹம்மது நம்மைப்போன்ற உண்ணுகின்ற, உறங்குகின்ற, கடைத்தெருவில் நடமாடுகிற, ஒரு சராசரி மனிதரே. அவரால் ஆனால் ஹதீஸ்களோ அற்புதங்களை அள்ளிவிடுகிறது. இவற்றில் எதை ஏற்பது?
இந்த அற்புதக்கதைகளில் இவர்கள் எதைக்கூற முயற்சிக்கின்றனர்? பகுத்தறிவையா?
நிலவு பிளந்து மீண்டும் இணைகிறது
மரக்கட்டை ஓலமிட்டு அழுகிறது
கல் முகமன் கூறுகிறது
தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்த எச்சிலை முகத்தில் தேய்த்துகொள்கின்றனர்
எச்சில் நீருக்காக முண்டியடித்துக் கொள்கின்றனர்
சிரைக்கப்பட்ட தலைமுடி விநியோகம் செய்யப்படுகிறது
வியர்வை சேகரிக்கப்படுகிறது
நீரில் மூழ்கிய தலைமுடி நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
மரம் நடந்து செல்கிறது
எச்சில் கண்வலியை குணமாக்குகிறது, உணவைப் பெருகச் செய்கிறது
விரல்களிடையே இருந்து அளவற்ற நீர்சுரக்கிறது
சிறுநீர் வயிற்று வலியைப் போக்குகிறது
எலும்புமுறிவை சரி செய்தது, கிணற்றில் நீரைப் பெருகச் செய்தது, இரவில் வழிகாட்ட ஒளியை அனுப்பிவைத்தது இவற்றிகெல்லாம் முதன்மையான விண்வெளிப்பயணம் என்று பட்டியல் நீளுகிறது. வேடிக்கை என்னவென்றால் உஹுது களத்தில் உத்பா அபீ இப்ன் வாக்கஸ், அப்துல்லாஹ் இப்ன் ஷிஹாப் ஜூஹ் ஆகியோரிடம் அடிவாங்கி நொந்துபோன முஹம்மதிற்கு அவரது எச்சில் ஏனோ உதவவில்லை.
இஸ்லாமின் இண்டுஇடுக்குகளிலிருந்தெல்லாம் அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் இஸ்லாமிய விஞ்ஞானிகள், மேற்கண்டவைகளுக்கும் அறிவியல் விளக்கம் கொடுப்பார்களா?
முஹம்மதின்  மீது இஸ்லாமியர்கள் சுமத்தியுள்ள பிம்பத்தைக் கிழித்தெறிய, இவர்களின் மூலநூல்களே போதுமானது நாம் எதையும் மிகைப்படுத்திக் கூறவேண்டியதில்லை
தஜ்ஜால்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard