New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பயங்கர இரகசிய சமுதாயம் பாகம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பயங்கர இரகசிய சமுதாயம் பாகம்
Permalink  
 


THE KABBALAH - பண்டைய யூத சூனியக் கலை.

 
பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 2

basm001.gif

Hiram_key.jpg
The Hiram Key: Pharaohs, Freemasons, and the Discovery of the Secret Scrolls of Jesus

கிறிஸ்தோபர் நைட் மற்றும் ரோபர்ட் லோமஸ் என்ற இரு பிரீமேசன்களால் எழுதப்பட்ட The Hiram Key என்ற நூல் பிரீமேசன் பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாறு பற்றியும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.இந்த இரு ஆசிரியர்களினதும் கூற்றுப்படிFREEMASONARY என்பது KNIGHT TEMPLARS இன்
அடிச்சுவடுகளை பின்பற்றி தொடர்ந்து வரும் ஒரு அமைப்பாகும்.மேலும் இவர்கள் இந்த நூல் மூலம் KNIGHT TEMPLARS இன் ஆரம்ப வரலாற்றையும் அதன் கொள்கைகளில் தாக்கம் செலுத்திய ஏனைய நம்பிக்கைகளையும் விலாவாரியாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
இவ்விருவரின் ஆய்வுப்படி கிருஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மதத்தைக் காக்க என உருவான இயக்கம் அது ஜெருசலத்தில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது  அது அதன் அடிப்படை கொள்கைகளிலிருந்து தடம்புறலத் துவங்கியது.ஜெருசல நகரில் இருந்த TEMPLE OF SOLOMAN என்ற ஆலயத்தை  இவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படும் விடயமே இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.மேல் கூறப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு அமைய புனித ஜெருசல நகருக்கு வரும் கிருஸ்தவ யாத்ரீகர்களின் பாதுகாப்பாளர்கள் என்ற போர்வையில்  அவர்கள் ஈடுபட்ட விடயங்கள் கிருஸ்தவ மதத்துக்கு முற்றிலும் மாற்றமான விடயங்களாகும்.

".......அவர்கள் ஜெருசலம் வரும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.ஆனால் அவர்கள் இரண்டாம் ஆலயத்தில் அதாவது Herods Temple இன் இடிபாடுகளுக்கு கீழே பரவலான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன."
(REF : Hiram Key Page 37)
320px-Second_Temple.jpg
இரண்டாம் ஆலயத்தின் மாதிரி படம்.
Hiram Key நூலின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல Gaetan Delaforge என்ற புகழ்பெற்ற பிரஞ்சு வரலாற்றாசியரும் இது பற்றி பல ஆதாரங்களை முன்வைக்கிறார்.
Knight Templar இயக்க உறுப்பினர்கள் இரண்டாம் ஆலயத்தின் இடிபாடுகளுக்கிடையில் சில நினைவுச் சின்னங்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் தேடி பாரிய அளவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் அவற்றை தேட ஒரு காரணமும் இருந்தது.அவற்றில் பண்டைய யூத மற்றும் எகிப்திய கலாச்சாரங்களின் இரகசியமான மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறைகள் அடங்கி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
(REF : Templar Tradition In The Age Of Aquarius - Gaetan Delaforge)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Royal Engineers சார்பாக Charles Wilson என்பவர் ஜெருசல நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.அவரின் கருத்துப்படி ரோம ஆக்கிரமிப்பின் போது அழிந்து போன Soloman Templeபற்றி ஆராய்ச்சி செய்யவே Knight Templar குழுவினர் ஜெருசலத்துக்கு வந்தார்கள் எனவும்,தான்  அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் போது Knight Templar களால் பயன்படுத்திய கருவிகளையும் அவர்கள் அந்த இடத்தில் ஆராய்ச்சி செய்ததற்கான தடயங்களையும் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
Knight Templar இயக்கத்தினர் ஜெருசல நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் அவர்களுக்கு பயனளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் உலகை பார்க்கும் போக்கை மாற்றிக் கொண்டார்கள் என Hiram Key இன் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய கிருஸ்தவ உலகத்திலிருந்து கிறிஸ்தவத்தை தாங்கி ஜெருசல நகருக்கு வந்தவர்கள் கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் மாற்றமான சடங்குகளில் இடுபட ஒரு பலமான காரணம் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

பல ஆராய்ச்சியாளர்களின் பொதுவான கருத்துக்கு அமைய "அந்த பலமான காரணம்" தான்  "THE KABBALAH "  என்ற பண்டைய யூத சூனியக் கலை.
KABBALAH என்பது யூத மதத்தின் ஒரு விசித்திரமான ஒரு கிளை என்கிறதுஅகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்.ஆனால் நாம் இந்த விடயத்தைப் பற்றி இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும் போது இந்த விசித்திரமான சடங்கு முறைகளில் யூதர்களின் தவ்ராத் வேதம் அருளப்பட முன் நடைமுறையில் இருந்த உருவ வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நாட்டின் பிரீமேசன்களில் ஒருவரான Murat Ozgen என்பவர் எழுதிய What Is Freemasonry ? What Is It Like ?  என்ற நூலில் KABBALAH பற்றி இவ்வாறு கூறுகிறார்.
" KABBALAH எப்போது எங்கிருந்து எப்படி உருவானதென்பது பற்றி எங்களுக்கு அவ்வளவு தெரியாது.ஆனால் அது தனித்துவமான வாழ்வின் மெய்ப்பொருளை அறியக் கூடிய யூத மதத்துடன் தொடர்புள்ள ஒரு விசித்திரமான வாழ்வியல் தத்துவம்.இத் தத்துவம் யூத மதத்தில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒரு விடயம்.ஆனால் இந்த KABBALAH வில் யூத மதத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளன."
(REF: What Is Freemasonry ? What Is It Like ? P: 298,299 )
பிரஞ்சு வரலாற்றாசிரியர் Gogenot Des Mousseaux என்பவரின் விளக்கத்துக்கு அமைய KABBALAH கலையில் யூத மதத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட சில முக்கியமான சடங்குகளும் அடங்கியுள்ளன.
Presentation1.jpgll.jpg


யூத வரலாற்றாசிரியரான Theodore Reinach என்பவற்றின் கருத்துக்கு அமைய KABBALAH என்பது யூத மதத்தில் மிக நுட்பமாக புகுந்த ஒரு கொடிய விஷம்.அது முழு யூத மதத்தையும் நாசப்படுத்தி விட்டது என்கிறார்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவரும் பல மந்திர சடங்குகளில் KABBALAH என்ற இந்த கலையே அடித்தாலமாக விளங்குகிறது.சில யூத ரப்பிகள் கூட இந்தக் கலை மந்திர சக்திகளைக் கொடுக்கும் என நம்பி கற்றும் உள்ளார்கள்.யூத மதம் சாராத இன்னும் பலரும் இந்த கலையை கற்றார்கள்.வரலாற்றின் மத்திய காலப் பகுதியின் இறுதிக் கால கட்டங்களில் இந்த ரகசிய போக்குடைய கொள்கைகள் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்தது.

ஓரிறைக் கொள்கையை சுமந்து கொண்டு தவ்ராத் வேதம் அருளப்பட்டு மூஸா (அலை) அவர்களால்  வழிநடத்தப்பட்ட யூத மதம் இந்த கலையின் ஆரம்ப அச்சாணி என்பது ஆச்சரியமான விடயம்.உண்மையில் KABBALAHஎனும் இந்தக் கலையில் யூத மதத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பல சடங்குகள் உள்வாங்கப்பட்டு அது யூத மார்க்கம் ஆக்கப்பட்டதே உண்மை. 


அப்படியெனில் இந்த கலையின் ஆரம்பப் புள்ளி எங்கே உள்ளது ???


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

THE KABBALAH வும் பண்டைய எகிப்தும்.

 
பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 3 
 
Egyptian20Magic.jpg



பண்டைய எகிப்தின் மாய மந்திரக்காரர்கள்.

 
 
பண்டைய எகிப்து உலகின் மிக பழமைவாய்ந்த நாகரீகங்களில் ஒன்றாகும்.அதிக கெடுபிடிகள் அடக்குமுறைகள் நிறைந்த இந்த நாகரீகம் பாரோக்களால் ஆளப்பட்டு வந்தது.இன்றும் பண்டைய எகிப்தியர்களால் அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்ட பிரமிட்டுகள் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னங்கலாக பிரம்மாண்டமாக காட்சிதருகிறது.அன்றைய எகிப்தை ஆண்ட பாரோக்கள் தங்களை கடவுளின் பிரதிநிதிகள்  என அழைத்து கொண்டு மக்களுக்கு தங்களை வணங்கும்படி ஆணையும் பிறப்பித்தார்கள். 
 
பண்டைய எகிப்து பற்றிய தகவல்களைப் பெற எமக்கு அவர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உதவியாக இருந்தாலும் அவை அந்நாட்டின் அதிகாரபூர்வமான வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டதால் அவற்றின் உண்மைத் தன்மை கேள்விக்குரியாதாக உள்ளது.முஸ்லிகளாகிய எங்களுக்கு நம் திருக் குரான் இந்த சமுதாயம் பற்றி நிறைய தகவல்களைக் கூறுகிறது. 

மூஸா நபியவர்களின் வரலாற்றைக் கூறும் திருமறை எகிப்தின் ஆட்சி பற்றியும் அதன் நடைமுறைகளையும் பேசுகிறது.திருக் குரானின் வசனங்கள் மூலம் எகிப்தின் ஆட்சியில் இரு முக்கியமான கூறுகள் காணப்பட்டதாக நமக்கு தெரிய வருகிறது.
  1. பாரோக்கள் 
  2. பரோக்களின் ஆலோசனை சபை 
பரோக்களின் ஆலோசனை சபை எகிப்திய பாரோக்களின் ஆட்சியில் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பாரோக்கள் ஒரு விடயத்தை செய்ய முன் அவர்களின் ஆலோசனை சபையின் ஆலோசனைகளை செவிமடுத்தே செயற்பட்டு வந்துள்ளனர்.


 
திருக் குரானின் 7 வது அத்தியாயம் இப்படிக் கூறுகிறது
   
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்."
 
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்)."

அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
 ( 7 அத்தியாயம் 104 முதல் 114 வரை )


 திருக் குரானின் இந்த வசனங்களை நாம் கவனிக்கும் போது அங்கு பிரவ்ன் மூஸா (அலை ) அவர்களுக்கு சவால் விட தனது ஆலோசனை சபையிடம் ஆலோசனை கேட்பதையும் அதற்கு அந்த சபை சில ஆலோசனைகளை வழங்குவதையும் நம்மால் கவனிக்க முடியும்.இந்த ஆலோசனை சபை பற்றி நாம் எகிப்திய கல்வெட்டு ஆதாரங்களில் தேடும் போது அதில் இந்த சபை இரு கூறுகளைக் கொண்டதாக அவை குறிப்பிடுகிறது.
  1. பாரோக்களின் படைகளின் உயர் அதிகாரிகள்.
  2. மதகுருக்கள் 
இந்த இரு கூறுகளில் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் மதகுருக்களுக்கு ஒரு அதி உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விடயம் பற்றி நாம் இன்னும் ஆழமாக ஆராயும் போது,திருக் குர்ஆன்  இந்த மதகுருக்களை மந்திரவாதிகள் என அழைக்கிறது.பண்டைய எகிப்து மக்களிடையே மதகுருமார்களுக்கு இரகசிய சக்தி காணப்படுவதாக ஒரு நம்பிக்கை காணப்பட்டது.மக்களிடையே காணப்பட்ட இந்த நம்பிக்கை அவர்களுக்கு எகிப்திய சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்தையும் ஆட்சியில் தாக்கம் செலுத்தவும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தது.எகிப்திய கல்வெட்டுகள் இவர்களை "Priests of Amon" என அழைக்கிறது.இவர்கள் மாயமந்திர தந்திரங்களை கற்பதில் அதிகளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள்.அதுபோல் வானியல் கணிதவியல் மற்றும் புவியியல் போன்ற அறிவியல்துறை சார்ந்த விடயங்களிலும் இவர்களின் கவனம் இருந்ததாக பண்டைய எகிப்திய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
400px-Karnak_temple,_Gro%C3%9Fer_S%C3%A4ulensaal_9512.JPG
Amon  
 பண்டைய எகிப்திய மதகுருமார்களின் கொள்கைக்கும் இன்றைய பயங்கர இரகசிய சமுதாயமான பிரீமேசனரிக்கும் இடையேயான தொடர்பு என்ன ???
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு இரகசிய கொள்கைகள் இன்றும் தாக்கம் செலுத்த முடியுமா ???  


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சாமிரியின் தங்கக் காளையும் பண்டைய எகிப்தும்.

 
பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 4 
besmele.png

Exodus என்பது யூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் இரண்டாவது  நூலாகும்.இந்த நூலே அவர்கள் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி கூறுகிறது.எகிப்தை ஆண்ட பாரோக்கள் இஸ்ரவேலர்களை அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.அப்படிப்பட்ட சமூகத்துக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அல்லாவின் புறத்திலிருந்து வந்தவரே ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மூஸா நபியவர்கள் தனது சமூகத்தை பரோக்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
சாமிரியின் தங்கக் காளை
Worshiping_the_golden_calf.jpg
யூதர்களின் இரண்டாவது நூலான Exodus இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் இஸ்லாமியர்களின் திருக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மிக முக்கியமான சம்பவமே சாமிரியின் தங்கக் காளை  பற்றிய சம்பவமாகும்.அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் எகிப்திய ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மூஸா (அலை) அவர்களின் கட்டளைக்கு அச்சமூகம் காது கொடுக்காமல் சாமிரியின் பேச்சில் மயங்கி காளை ஒன்றை   வணங்கினர்.இப்படிப்பட்ட ஒரு நிலைமை உருவாக மிக முக்கியமான காரணம் மூஸா நபியவர்கள் அவர்களுக்கு போதித்த ஒரு கடவுட் கொள்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் அவர்கள் உருவ  வழிபாட்டின் பக்கம் மிக இலகுவாக சாய்ந்தனர்.

இது பற்றி திருக் குர்ஆன் இப்படி கூறுகிறது.
"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்." 
''நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே'' (என்றும் கூறினார்)."
''அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்'' என்றும் அவர் கூறினார்."
சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
(138-140)

ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள்  அவ்வளவு எச்சரித்தும் அறிவுரை வழங்கிய போதிலும் அவரின் பேச்சைக் கேட்காத இஸ்ரவேலர்கள் தொடர்ந்தும் அவரின் பேச்சை புறக்கணித்து வந்தனர்.ஹஸ்ரத் மூசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க தூர் சினை மலைக்கு சென்ற நேரம் பார்த்து அந்த சமுகத்தில் இருந்த சாமிரி என்பவன் அவர்களை வழிகெடுத்து விடுகிறான்.அவன் ஒரு காளை ஒன்றின்  சிலையை செய்து அதை இஸ்ரவேலர்களுக்கு வணங்குமாறு கூற,அவர்களும் அதை வணங்க துவங்குகின்றனர்.

இது பற்றி திருமறையின் சூரதுத் தாஹா இப்படி கூறுகிறது.
''நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்'' என்று (அல்லாஹ்) கூறினான்.
"ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து ''என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?'' (என்றார்).

 ''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".
"பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் ''இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்'' என்று சொன்னார்கள். 

( ஸூரத்துத் தாஹா 85 - 88 )



ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த ஒரு சில இஸ்ரவேலர்களின் இந்த மாறுபட்ட போக்குக்கு காரணம் என்ன ? ஒரு சிலையின் முன் தம் சிரத்தை பணியவைத்து வணங்க அவர்களை தூண்டியது என்ன ? அதற்கு வழியமைத்துக் கொடுத்த காரணம் என்ன ?
உருவ வழிபாட்டில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்ற ஒரே ஒரு இறைவனை மட்டும் வணங்கும் ஒரு சமூகம் திடீரென உருவ வழிபாட்டை எப்படி ஏற்றுக் கொண்டது ?


இஸ்ரவேலர்கள் என்பது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலம் முதல் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்த ஒரு சமூகமாகும்.இவர்களுக்கு " இஸ்ரவேலர்கள் " அல்லது " இஸ்ரேலின் குழந்தைகள் " என்று பெயர் வரக் காரணம் ஹஸ்ரத் யஹ்கூப் (அலை ) அவர்களாகும்.இவர் ஹஸ்ரத் இப்ராஹீம் அவர்களின் பேரராவார்.ஹஸ்ரத் இப்ராஹீம்,ஹஸ்ரத் இஸ்ஹாக் மற்றும் ஹஸ்ரத் யஹ்கூப்  போன்ற நபிமார்களிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்கள் பாதுகாத்து வந்தனர்.ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களின் காலப்பகுதியில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தில் பெருமளவில் குடியேறினர்.அப்ப்தும் அவர்கள் ஓரிறைக் கொள்கையை பற்றிப் பிடித்தவர்களாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர்.இஸ்ரவேலர்கள் ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய போது அப்போதைய எகிப்து சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

800px-GD-EG-Caire-Mus%C3%A9e091.JPG
Sculpture of Hathor as a cow, with all of her symbols, the sun disk, the cobra, as well as her necklace and crown.
 சில இஸ்ரேலியர்கள் பசு வணக்கத்தில் ஈடுபட தாக்கம் செலுத்திய மிக முக்கியமான விடயம் அவர்கள் வாழ்ந்த பண்டைய எகிப்திய சமூகமாகும்.நபி மூஸா (அலை) தூர்சினாய் மலைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க போனபோது இஸ்ரேலியர்கள் வணங்கிய தங்கக் காளை  பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய HATHOR என்ற பெண் தேவதையின் நகலாகும்.எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி அன்பு இசை சந்தோசம் அழகு மற்றும் தாய்மை என்பவற்றுக்கு பொறுப்பான கடவுள்தான் இந்த HATHOR ஆகும்." Too Long In The Sun " என்ற நூலின் ஆசிரியரான Richard Rives என்பவரின் கருத்துப்படி,
HATHOR மற்றும் APHIS எகிப்தியர்களின் பசு மற்றும் காளைக் கடவுள் என்பவை சூரிய வணக்கத்தின் பிரதிநிதிகளாவர்.

254px-Hathor.svg.png
The goddess Hathor wearing her headdress, a pair of cow horns with a sun disk.

450px-Louvres-antiquites-egyptiennes-p1020068.jpg
Apis

சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.

"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
(சூரத்துல் அஃராஃப் : 138)
 
 
இப்படி கேட்ட அந்த இஸ்ரேலிய சமூகம் இன்னுமொரு படி மேலே சென்று மூஸா நபியவர்களின் இப்படியொரு முட்டாள்தனமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.அந்த கோரிக்கை பற்றி திருமறையின் சூரத்துல் பகரா (பசுமாடு) இப்படி கூறுகிறது.
 
"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர்  இடி முழக்கம் பற்றிக்கொண்டது."
(சூரத்துல் பகரா : 55)
 
 
திருமறையின் இந்த வசனத்தை நாம் நன்றாக ஆய்வு செய்யும் போது,இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அதனை விளங்கிக் கொள்ளகூடிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை அதனாலே அவர்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமான பண்டைய எகிப்தியர்களின் தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.

பழைய ஏற்பாட்டிலும் திருக் குரானிலும் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நபி மூஸா (அலை) அவர்கள் தூர் சினாய் மலைக்கு அல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த சமயம் இடம்பெற்றது.தவ்ராத்தில் இந்த தங்கக் காளை  நபி ஹாரூன் (அலை) செதுக்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருக்குர்ஆன் இதனை மறுக்கிறது.திருக்குர்ஆன் இந்த சிலை சாமிரி என்பவனால் செதுக்கப்பட்டதாக கூறுகிறது.அல்லாஹ்வை சந்திக்கச் சென்ற மூஸா (அலை) அவர்கள் நீண்ட நாட்களாக (40 நாட்கள்) திரும்பாத நிலையில் சாமிரி என்பவன் முன் வந்து மூஸா காணாமல் போய்விட்டார் அவர் திரும்பி வரமாட்டார் எனக் கூறிய அவன் பிரவ்னின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று வரும் போது கொண்டு வந்த தங்க நகைகளையும் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சில தங்க நகைகளையும் சேர்த்து உருக்கி ஒரு தங்க காளைக்கன்றுச் சிலை ஒன்றை உருவாக்கி இது தான் நம் கடவுள் இதை வணங்குங்கள் என்றான்.மேலும் இதுதான் மூஸாவின் கடவுளும் கூட இதை அவர் மறந்து விட்டார் என இஸ்ரவேலர்களிடம் கூறினான்.அதை மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன்(அலை) எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து செய்து வந்தனர்.ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை தடுத்தது பற்றியும் அவர்கள் அதை மறுத்தது பற்றியும் திருக்குர்ஆன் சூரத்துல் தாஹாவில் இப்படி கூறுகிறது.


இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி''என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று கூறினார்.
''மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
(சூரத்துல் தாஹா 90-91)



தூர் சினாய் மலையிலிருந்து அவசரமாக திரும்பி வந்த நபி மூஸா (அலை) அவர்கள் தம் சமூகம் வழிகேட்டில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு தம் சகோதரரான நபி ஹாரூன் (அலை) அவர்களிடம் கோபம் கொண்டு இவ்வாறு கேட்கிறார்கள்.
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) ''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
''நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?
''(இதற்கு ஹாரூன்;) ''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்'' என்று கூறினார். 
(சூரத்துல் தாஹா 92-94)
பிறகு இதற்கேல்லாம் காரணமாக இருந்த சாமிரியைப் பார்த்து நபி மூஸா (அலை) அவர்கள் 
 
 
''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?'' என்று மூஸா அவனிடம் கேட்டார்.
(சூரத்துல் தாஹா - 95 )
 
 
நபி மூஸா (அலை) அவர்களின் கேள்விக்கு சாமிரி இவ்வாறு பதிலளிக்கிறான்.
''அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்;அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று'' என (ஸாமிரீ பதில்) சொன்னான். 
(சூரத்துல் தாஹா - 96 )
 
 
 "பனு இஸ்ராயில்களில் மற்றவர்கள் பார்க்காத ஒரு விடயத்தை நான் பார்த்தேன்.அத்தூதர் (ஜிப்ரயீல்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்துதங்கக் காளைச் சிலை மீது போட்டேன்.ஏனென்றால் அந்த தூதர் காலடி பட்ட இடமெல்லாம் புற்பூண்டுகள் பசுமையாக வளர்வதைப் பார்த்தேன்."என்று தான் அச்சிலையை இயங்கச்செய்த விதத்தை விளக்கினான்.மற்றவர்கள் பார்க்க இயலாத அதாவது ஜிப்ரயீல் (அலை) அவர்களை சாமிரி எப்படி பார்த்தான்.யார் இந்த சாமிரி ? 
இந்த சாமிரி என்பவனின் இயற்பெயர் மூசா பின் சபர் ஆகும்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவன் மூஸா (அலை ) அவர்களின் ஒன்று விட்ட சகோதரன் என்றும் கூறப்படுகிறது.இவன் காளை மாட்டை வணங்கும் மக்களான பஜர்மா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் இவன் ஸமாரா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்றும் தப்சீர் இப்னு கசீர் கூறுகிறது.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard