New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்
Permalink  
 


அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தவிர்க்கவியலாமல் ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அன்றைய நிலையில் வேறு வழியில்லை என்று கதைகளையும் காரணங்களையும் அடுக்குவார்கள். 1. போர்களில் பிடித்து வரப்படும் கைதிகள் தான் அடிமைகள். அந்தக் காலத்தில் சிறைகள் இல்லை, அதனால் அடிமைகளை பகிர்ந்தளிப்பது தவிர்க்க முடியாயதது. 2. எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால் ஒரு நாட்டில் மட்டும் அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது. 3. ஏற்கனவே அடிமை முறை நடப்பில் இருந்ததால் திடீரென தடுக்கும் போது அதிக அளவில் அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இது போன்ற பல காரணங்களினால் இஸ்லாம் அடிமை முறையை அங்கீகரிக்கிறது என்று நீண்ட விளக்கமளிப்பார்கள். இனிவரும் மனித குலம் முழுமைக்கும் இது தான் குரான் அதில் எந்த திருத்தமும் தேவைப்படாது என புளகமடைபவர்கள், இன்று மனிதர்களால் ஒழிக்கப்பட்டுவிட்ட னேரடி அடிமை முறை, அல்லாவினால் ஒழிக்கப்பட முடியாமல் போன அடிமை முறை குறித்த வசனங்கள் இன்றும் குரானில் இருப்பது காலத்திற்கு பொருத்தமானதா? என்பதை நேர்மையான இஸ்லாமியர்கள் மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்.

 

வரலாற்றில் அடிமைகள் எப்படி தோன்றினர்? உற்பத்தியில் உபரி தோன்றிய போது, அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் தோன்றிய போது, மக்கள் அடிமைப் படுத்தப்படுவதற்கான விதை ஊன்றப்பட்டது. புராதன பொதுவுடமைச் சமுதாயத்தில் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிப் போக்கினாலும், விவசாய உற்பத்தி முறை அறியப்பட்டதாலும் உற்பத்தியில் உபரி தோன்றியது. அரசு வடிவம் தோன்றாத ஆனால் இனக் குழுக்களின் ஏற்றத்தாழ்வில் உபரியைக் கைப்பற்றும் போட்டியில் அடிமைகள் தோன்றினர். அடிமைத்தனம் என்பது தனிப்பட்ட மனித ஒழுக்கத்தின் பாற்பட்டது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது விரிந்த பொருளுடையது. இன்று எப்படி மக்களின் சிந்தனை, பொழுது போக்கு, கலை, அனைத்தும் முதலாளித்துவ வடிவத்தில் இருக்கிறதோ அதுபோன்று அன்று சமூகமே ஆண்டான் அடிமை சமூகமாக இருந்தது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் உற்பத்தி உறவுகளால் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தி முடங்கும் போது அதை உடைத்துக் கிளம்புவது தான் சமூக மாற்றம், உற்பத்தி உறவுகளின் மாற்றம். இது தான் அறிவியல், இது தான் மார்க்சியம். ஆனால் இஸ்லாம் இதை தனி மனித ஒழுங்கு எனும் அளவில் தான் அணுகுகிறது. இஸ்லாம் பேசும் அடிமைத்தளைக்கான அங்கீகாரமும், விடுதலை என்று கூறுவதும் தனி மனித தீர்வுகளாகத்தான் இருக்கிறது. இந்த பேதத்தை புரிந்து கொள்ளாதவரை அறிவியலுக்கும் மதத்துக்குமான இடைவெளியை புரிந்து கொள்வது கடினம்.

 

எளிமையாக சொல்வதானால், ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டும் முதல் வடிவம் அடிமைமுறை. இந்த அடிமைமுறை தனி மனித விருப்பத்தினால் ஏற்பட்டதல்ல, சமூகப் போக்கில் ஏற்பட்ட மாற்றம். ஆதிநாட்களில் எல்லோரும் உழைத்து, எல்லோரும் உண்டு, கிடைக்காவிடின் எல்லோரும் பட்டினி கிடந்த உற்பத்தி முறையிலிருந்து ஏற்பட்ட சமூக ரீதியிலான மாற்றம். அந்த அடிமை முறையின் தொடர்ச்சி இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டுவது இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சுரண்டலின் வடிவங்கள் மாறிவிட்டன. எந்த வடிவில் இருந்தாலும் சுரண்டல் அநீதியானது தான். எதிர்க்க வேண்டியது தான். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இதை தனி மனித தீர்வுகள் மூலம் செய்ய முடியுமா? என்பது தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மதவாதிகளின் சமாளிப்புகளுக்கு திரும்புவோம். முதலில் அடிமை முறையை ஏன் முற்றாக ஒழிக்க முடியவில்லை என்பதற்கு இன்றைய மதவாதிகள் கூறும் காரணங்கள் அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்துகளே, இஸ்லாமிய இறையியலில் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அல்லாவும் அவனது தூதரும் கூறாத எதுவும் இஸ்லாத்துக்கு புறம்பானது தான் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு. அடிமை முறையை ஒழிப்பது அல்லது அடிமை முறை ஏற்கத் தகாதது என்று முகம்மது கூறவே இல்லை. அடிமை விடுதலை என்று முகம்மது கூறுவதெல்லாம் குற்றங்களுக்கான பரிகார நடவடிக்கைகளேயன்றி அடிமை முறை தவறு அது களையப்பட வேண்டியது எனும் நோக்கில் அல்ல. அதாவது அடிமை என்பது தனிப்பட்ட ஒருவனின் சொத்து. தான் கூறும் மதக் கடமைகளை நிறைவேற்றத் தவறுபவன் இழப்பை சந்தித்தாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம், அந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தத்தில் – தெளிவாகச் சொன்னால் தமக்கு அடிமை இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும் எனும் பயத்திலேனும் – மதக் கடமைகளை நிறைவேற்றட்டும் என்பது தான் முகம்மதின் திட்டம். இதையும் சமூகத்தின் அநீதியான சுரண்டலின் வடிவத்தை ஒழிப்பதையும் முடிச்சுப் போடுவது வழக்கமான மதவாதிகளின் உட்டாலக்கடி வேலை தானேயன்றி வேறொன்றுமில்லை.

 

போர்களில் தோற்றவர்கள் தான் அடிமைகள் என்பது கருத்தியல் ரீதியில் பிழையில்லாத கூற்றுதான், முழுமையான கூற்றல்ல. முகம்மதுக்கு ஒரு அரசமைப்பு இருந்தது, அவர் பல போர்களை நடத்தியிருக்கிறார் எனும் அடிப்படையில் இருந்து தான் போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கினர் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசு எனும் அமைப்பு ஏற்படுவதற்கு முன்பே அடிமைகள் தோன்றி விட்டனர். மேலும் அக்காலத்தில் சிறைகள் இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். சிறை என்றால் என்ன? உயரமான சுற்றுச் சுவர், அதன் மேல் துப்பாக்கியுடன் காவலர்கள், நீதி மன்றம், காவல்துறை இப்படியான காட்சி தான் சிறையா? இது சிறையின் இன்றைய நவீன வடிவம். சிறை என்றால் தப்பிவிடாமல் பாதுகாப்பது. எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதற்கு அடிமைகளை பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு. அந்த அடிமைகளை எங்காவது உங்களுக்கு பிடித்த இடங்களில் தங்கியிருங்கள் என்று விட்டு விட்டார்களா? ஒரு இடத்தில் கூட்டி வைத்து தப்பிவிடாமல் பாதுகாத்தார்கள். கிபி முதல் நூற்றாண்டில் ரோமில் ஸ்பார்டகஸ் தலைமையில் அடிமைகள் அரசுக்கெதிராக புரட்சி செய்தார்கள். அவர்கள் தனித்தனி வீடுகளில் அடிமைகளாக இருந்தார்களா? ஒரே இடத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்களா? ஆகவே, அக்காலத்தில் சிறைகள் இல்லை அதனால் தான் தனி ஆட்களிடம் அடிமைகள் இருந்தார்கள் என்பது மதவாதப் பொய்.

 

சட்டம் போட்டு ஏன் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பதற்கு மதவாதிகள் கூறும் பதில் தான் எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால், இஸ்லாமிய நாட்டில் அடிமைகளை விடுவித்தால் அது நட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் அடிமைகள் பிற நாட்டிடம் சிக்கியிருக்க, முஸ்லீமல்லாத அடிமைகளை விடுவித்துக் கொண்டிருந்தால் அது பலவீனத்தையும் ஏற்படுத்தும். ஆகவே தான் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பது. இந்தக் காரணத்திற்காகத் தான் முகம்மது அடிமை முறையை ஒழிக்கவில்லை என்று கூறினால் அது முகம்மதின் வாக்கை மீறிய அல்லது முகம்மதின் வார்த்தைகளுக்கு முகம்மதை விலக்கி வைத்துவிட்டு பொருள் கூறிய, முகம்மதுக்கு மேம்பட்ட தலைவர்களாக அவர்கள் காணப்படுவார்கள். எப்படியென்றால், முகம்மதின் முதன்மையான எதிரிகளாக இருந்த முகம்மதின் சொந்த குலத்தை சேர்ந்த குரைஷி குல சொந்தக்கார அடிமைகளை முகம்மது உடனடியாக விடுவித்திருக்கிறார். மேலும் நோன்பு நோற்காமலிப்பது போன்ற குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுவிப்பதை ஊக்குவித்திருக்கிறார். பிற நாடுகளில் இப்படியானதொரு ஏற்பாடு இல்லாத போது முகம்மது இதைச் செய்திருக்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, இன்று மதவாதிகள் கூறும் இஸ்லாமிய நாடு பலவீனப்படும் என்பது முகம்மதுவுக்கு தெரிந்திருக்கவில்லை. இரண்டு, முகம்மது அடிமை முறையை ஒழிக்காததற்கு இன்று மதவாதிகள் கூறும் காரணம் தவறானது, பொய்யானது, முகம்மதின் சிந்தனையை மீறியது. இரண்டில் எது சரி?

 

ஏற்கனவே அடிமைகளை வைத்திருந்தவர்கள் பெருமளவில் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள், மட்டுமல்லாது, தவறில்லை என்ற நிலை இருக்கும் போது செய்யப்பட்ட அடிமை வியாபரத்தை பின்னாளில் தவறு என்று கூறுவது நியாயமற்றது அதனால் தான் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்கிறார்கள். ஆடுமாடுகளைப் போல் சந்தைகளில் விற்கப்படுவதும், அதுவரை கணவன் மனைவியாய், பெற்றோர் குழந்தைகளாய், உற்றோராய்,உறவினர்களாய் இருந்தவர்கள்  எல்லா உறவுகளையும் மறுத்து அவர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுப்பது இழப்பாய் தெரியவில்லை. ஆனால் அண்டைகள் வைத்திருக்கும் அடிமைகளை செல்லாது என்று அறிவித்தால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுமாம். என்னே உயரிய சிந்தனை. இந்த உயரிய சிந்தனைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்பார்டகஸ் அடிமைகளின் விடுதலை குறித்து சிந்தித்தான் என்றால் முகம்மதின் சிந்தனை மனித குலத்தின் முழுமைக்குமான சிந்தனையாக இருக்க முடியுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அடிமை குறித்து இன்று மதவாதிகள் பிதற்றித் திரிவதெல்லாம் அவர்களின் சொந்தக் கற்பனைகள் தானேயன்றி, இஸ்லாம் தெளிவாக அடிமை முறையை அங்கீகரிக்கிறது. நேரடியான அடிமை முறை கொடூரமானது, கொடுமையானது என்று சராசரி மனித மனம் கூறும் போது காலாகலத்துக்கும் இதுவே உண்மை எனக் கூறும் வேதம் அடிமைமுறையை ஆதரிக்கிறது என்றால் அது எல்லாம் தெரிந்த இறைவனின் கூற்றா? ஆண்டான் அடிமைக் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் கூற்றா? இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும்.

 

செங்கோடியே இஸ்லாத்திற்கு எதிராகவும் குர் ஆனுக்கு எதிராகவும் உனது புலமபல்கள் மக்களை சென்றடைய போவதில்லை .ஆனால அல்லாஹ்வின் கருணையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சான் என்ற கிறிஸ்தவ அமைப்போடு விவாதம் செய்து குர் ஆன் இறை வேதமே
என்று அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளது .இன்ஷா அல்லாஹ் இந்த விவாத டி.வி.டி.கேசட்டுகளை தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டியில் உள்ள
முஸ்லிமல்லாதவர்கள் முதல் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் வரை கொண்டு சேர்ப்போம் .எப்படி பைபிள் இறைவேதமா ? என்ற விவாத கேசட்டுகளை பார்த்துவிட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வந்தார்களோ இன்ஷா அல்லாஹ் இந்த
விவாத கேசட்டையும் பார்த்து விட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருவார்கள் …அதனால் இஸ்லாத்திற்கு எதிராக
முகத்தை காட்டமால் முக்காடு போட்டு நீ எழுதுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லை .உனது நேரத்தைத்தான் வீணடிக்கிறாய் என்பதை புரிந்து கொள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. ஸனாதிக்கா செங்கொடி
    //இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள்.// அப்படியெல்லாம்சொல்லியிருக்கிறீர்கள். அது தமிழ்நாட்டு தவ்ஹீத் அண்ணனும் அவரது தொண்டரடிப்பொடிகளும் மட்டுமே. ஆங்கிலத்தில் தாவா செய்யும் சிலரும் இவ்வாறு செய்து வருகிறார்கள். ஆனால், ஒரிஜினல் அரபு புனித பூமியின் இமாம்கள் அப்படி சொல்வதே இல்லை. அடிமை முறை இஸ்லாத்தின் புனித நிலைப்பாடுகளில் ஒன்று என்பதே அவர்களது நிலை.

    http://www.wnd.com/2003/11/21700/
    SAUDI SHEIK: ‘SLAVERY IS A PART OF ISLAM’
    Leading government cleric, author of country’s religious curriculum
    Published: 11/10/2003 at 5:00 PM
    As Saudi Sheikh Saleh Al-Fawzan, a member of the Senior Council of Clerics had said in 2003, those who argue that slavery is abolished are “ignorant, not scholars. They are merely writers. Whoever says such things is an infidel.”[

    அங்கே இங்கே படித்ததிலிருந்து இவை.
    தன் மனைவி ஒரு அடிமையை விடுவித்ததை காககககே எதிர்க்கிறார்.

    http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/047-sbt.php#003.047.765
    Maimuna should not have freed her slave
    Narrated Kurib:
    the freed slave of Ibn ‘Abbas, that Maimuna bint Al-Harith told him that she manumitted a slave-girl without taking the permission of the Prophet. On the day when it was her turn to be with the Prophet, she said, “Do you know, O Allah’s Apostle, that I have manumitted my slave-girl?” He said, “Have you really?” She replied in the affirmative. He said, “You would have got more reward if you had given her (i.e. the slave-girl) to one of your maternal uncles.”

    விடுவிக்கப்பட்ட ஒரு அடிமையை (முடாப்பர்) நம்ம காககககே வித்து காசு பண்ணுகிறார்.

    http://www.sahihmuslim.com/sps/smm/sahihmuslim.cfm?scn=dspchaptersfull&ChapterID=674&BookID=15

    CHAPTER: THE PERMISSIBILITY OF BUYING A MUDABBAR SLAVE
    No. 4115
    Jabir b. ‘Abdullah said that a person among the Ansar declared his slave free after his death, as he had no other property. This news reached the Prophet of Allaah (sallAllaahu alayhi wa sallam) and he said: Who will buy him from me? And Nu’aim b. al-Nahham bought him for eight hundred dirhams and he handed them over to him, ‘Amr (one of the narrators) said: I heard Jabir b. ‘Abdullah as saying: He was a Coptic slave, and he died in the first year (of the Caliphate of ‘Abdullah b. Zubair).
    No. 4116
    Jabir is reported to have said: A person amongst the Ansar who had no other property declared a slave free after his death. Allaah’s Messenger (sallAllaahu alayhi wa sallam) sold him, and Ibn al-Nahham bought him and he was a Coptic slave (who) died in the first year of the Caliphate of Ibn Zubair.

    நல்லவேளையாக சவுதி ஷேக் இந்த மாதிரி பெயர்தாங்கி முஸ்லீம்களால் கெட்டுப்போகாமல், ஒரிஜினல் இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டுவார். இப்போதைக்கு தக்கியா பண்ணி ஏமாத்தி நெறைய முஸ்லீம்களை சேர்த்துகிட்டு அப்புறம் அடிமைமுறை அல்லாஹ் மூமின்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் என்று அடித்துவிட்டுட மாட்டோமா?

     
  2. எனது அடிமை ,எனது அடிமைப்பெண் என்று யாரும் கூற வேண்டாம் .எனது பணிஆள் ,எனது பணிப்பெண் ,எனது பையன் என்று கூறட்டும் என்று நபி[ஸல்]அவர்கள் கூறியதாக அபூமூஸா அறிவிக்கிரார்.[புகாரி 2552]
    உங்களில் ஒருவரிடம் அவரது பணிஆள் அவரது உணவை கொண்டு வந்தால் ,அவரை தன்னுடன் அமர்ந்து உண்ணச் சொல்லட்டும் .அல்லது அந்த உணவிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவை அவருக்கு அளிக்கட்டும் .ஏனெனில்,அந்த உணவை தயாரிக்கக் அவர் பாடுபட்டார்.புகாரி 2557
    ஒரு மனிதனிடம் அடிமைப் பெண் இருந்து அவளுக்கு அவன் ஒழுக்கம் கற்பித்து ,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து ,அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைத்தால் ,அவருக்கு இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்.என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூமூஸா[ரலி]அவர்கள் அறிவிக்கிரரர்கள் புகாரி 2547

     
  3. செங்கொடி ////ஒருபோதும் இஸ்லாம் அடிமைத்தனத்தை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை தெளிவாகக் கூறமாட்டார்கள்.///
    அன்றைய சூழ் நிலையில் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிமைத்தனத்தை மருப்பதாலே ,இஸ்லாம் விடுதலை செய்யச் சொல்லுகிறது.இப்போது பழைய காலத்து போர் முறைகள் இருக்கின்றனவா? இப்போது போர்கைதிகள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.அவர்களை கவனிக்க அரசு உள்ளது அவர்கள்பற்றி தீர்வு காண சம்பந்தப்பட்ட அரசுகள் உள்ளன.ஆதலால் நபி[ஸல்] காலத்தைப் போன்று போர்க்கைதிகளின் நிலை இப்போது இல்லை .இல்லாத ஒன்றைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.பத்து பைசா நாணயத்தின் நிலை என்னவோ அது போன்றுதான் அடிமைத்தனம்
    இருப்பினும் கவுதிமாலவிலுள்ள கைதிகள் அடிமைகளை விட கொடூரமாக நடத்தப்படுகிறார்கள்.குற்ற வழக்குகளில் கைதாகியுள்ள பல பெண்கைதிகள் நிலை பற்றி அங்கு போலிசாரால் பலர் கற்பழிக்கப்பட்ட செய்திகள் அப்போதைக்கு அப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

    //// இன்று மனிதர்களால் ஒழிக்கப்பட்டுவிட்ட னேரடி அடிமை முறை, அல்லாவினால் ஒழிக்கப்பட முடியாமல் போன அடிமை முறை குறித்த வசனங்கள் இன்றும் குரானில் இருப்பது காலத்திற்கு பொருத்தமானதா? என்பதை நேர்மையான இஸ்லாமியர்கள் மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்.////
    ஒரு மனிதனிடம் அடிமைப் பெண் இருந்து அவளுக்கு அவன் ஒழுக்கம் கற்பித்து ,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து ,அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைத்தால் ,அவருக்கு இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்.என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூமூஸா[ரலி]அவர்கள் அறிவிக்கிரரர்கள் புகாரி 2547
    மனிதர்கள் அடிமையை எப்படி ஒழித்தார்கள்? முஹம்மது நபி[ஸல்] மேற்கண்ட ஹதிதில் கூறியவாறு நபித்தோழர்கள் செயல்பட்டார்கள் .அதன் பின்னர் வந்த சமுதாயம் செயல்பட்டது.அது நாளடைவில் புரட்சி ஏற்பட்டு உலக முழுவதும் வியாபித்தது .இங்ஙனம் இஸ்லாமே அடிமை முறைகளை ஒழிக்க முன்மாதிரியாக இருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. @இப்ராஹீம்
    //இல்லாத ஒன்றைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.பத்து பைசா நாணயத்தின் நிலை என்னவோ அது போன்றுதான் அடிமைத்தனம்// குர்ஆன் 4:24, 23:6, 30:50, 70:30….. இவைகளுக்கும் பத்து பைசா நாணயத்தின் நிலைதானா?

     
  2. முஹம்மது அடிமை முறையை ஒழித்தவரா?
    புஹாரி ஹதீஸ்: 2534
    ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2

zanzibar-e1341314870375.jpg?w=468

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? அடிமை முறையை ஒழித்துக் கட்டும் அவசியமோ தேவையோ முகம்மதுவுக்கு இருக்கவில்லை. மட்டுமல்லாது அடிமை முறையின் வரலாற்றுப் பார்வையோ, அது பின்வரும் காலங்களில் நீக்கப்பட்டு மாறுபாடடையும் என்றோ முகம்மது அறிந்திருக்கவில்லை. ஆனால் சில போதுகளில் தன்னால் போதிக்கப்படும் கட்டளைகளை மீறுபவர்களுக்கான தண்டனையாக, பரிகாரமாக அடிமையை விடுவிப்பது குறித்து பேசியிருக்கிறார். இந்த விடுவிப்பு என்பது அடிமை முறையை நீக்குவதோடு தொடர்புடையதா? முகம்மதோ அல்லது அவரால் இயம்பப்படும் அல்லாவோ அடிமை முறை மனித குலத்திற்கு எதிரானது அநீதியானது என்று எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே அடிமை முறை நீக்கப்பட வேண்டும் எனும் சிந்தனை அவருக்கு எழுந்திருக்க முடியாது. அடிமைகள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து அவர் கூறியிருப்பவைகளும் தன்மை மீறி அவர்கள் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்ட இரக்க உணர்ச்சியின் எதிரொலிப்பு தானேயன்றி வேறொன்றுமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். 1. அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா? 2. ஒரு மனிதன் அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்?

 

அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா?: கீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்

 

அடிமையாக இருந்த பரீரா என்ற பெண்மணி விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என உதவியை நாடினார். நீ விரும்பினால் உனக்குறியதை நானே கொடுத்து விடுகிறேன், உரிமை எனக்கு வர வேண்டும் என்று கூறினேன். ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம் நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதை தந்து கொள்ளலாம், ஆனால் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி நபி அவர்களிடம் நான் கூறிய போது, நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு. விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு, என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி.. .. .. புஹாரி 456

 

முகம்மதின் பிரியத்துக்குறிய மனைவியாகிய ஆய்ஷா அறிவிக்கும் இந்த ஹதீஸில் வரும் உரிமை என்பது என்ன? எஜமானரிடமிருந்து விடுபட விரும்பும் பெண்ணாகிய பரீராவுக்கு அவரின் எஜமானர்கள் குறிப்பிட்ட தொகையை தந்து விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த தொகைக்காக ஆய்ஷாவின் உதவியை நாடுகிறார். இந்த உதவிக்கு முகம்மதின் மனைவி போடும் நிபந்தனை உரிமை தனக்கு வேண்டும் என்பது. அதாவது விடுதலை பெற்ற பெண் தன் உழைப்பிலிருந்து சேமிக்கும் பணத்துக்கு வாரிசாக தானே இருக்க வேண்டும் என்பது தான் அந்த உரிமை என்பது. இதை பரீராவின் எஜமானர்கள் மறுக்கவே, வழக்கு முகம்மதிடம் வருகிறது முகம்மது நாட்டாமையாக இருந்து கொடுக்கும் தீர்ப்பு தான் வாங்கியவருக்கே உரிமை என்பது. ஒரு பெண் உழைப்பதின் மூலம் ஈட்டும் பணம் விலை கொடுத்து வாங்கிய முகம்மதின் மனைவிக்கு வர வேண்டும். இது தான் முகம்மதின் அகராதியில் விடுதலை என்பதன் பொருள். அடிமைகளின் விடுதலை என்பது நடப்பு எஜமானரிடம் இருந்து வேறொரு எஜமானரை ஏற்படுத்திக் கொள்ளுதல் எனும் பொருளில் தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதை இன்னோரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

.. .. .. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்னை விடுதலை செய்த எஜமானர்களான காப்பாளர்களின் அனுமதியின்றி பிறரை தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீது அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. புஹாரி 1870



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகம்மதிற்குப் பிறகு நான்காவது கலிபாவாக இருந்த முகம்மதின் மகள் பாத்திமாவின் கணவரான அலி அறிவிக்கும் ஹதீஸ் இது. தன்னுடைய காப்பாளரை மாற்றிக் கொள்ள யார் பணம் கொடுக்கிறாரோ அவரே புதிய காப்பாளர். அவர் அனுமதியின்றி எதுவும் செய்யக் கூடாது. என்றால் இது என்ன பொருளிலான விடுதலை? முகம்மது கூறும் இன்னொரு வகையான விடுதலையான பரிகார விடுதலையும் அடிமை முறை விடுதலையாக இல்லாமல் மதக்குற்றம் செய்த ஒருவனுக்கு ஏற்படுத்தப்படும் பொருளதார இழப்பு எனும் அடிப்படையிலேயே இருக்கிறது.

 

அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்? குரானில் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்றொரு தொடர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெண் அடிமைகளைக் குறிக்கும் சொல் இது. திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த அனுமதியை இன்னும் விரிவாக முகம்மது தன் சீடர்களுக்கு வழங்குகிறார்.

 

.. .. .. இறைத்தூதர் அவர்களே, எங்களுக்கு போர்க்கைதிகள் கிடைக்கிறார்கள். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், நாங்கள் அஸ்ல் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அப்படி செய்யாமலிருப்பது உங்களுக்கு கடமையல்ல. ஏனெனில் உருவாக வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை. என்று கூறினார்கள். புஹாரி 2229

 

அஸ்ல் என்ற சொல்லுக்கு கலவியின் உச்சநிலையில் ஆணுக்கு வெளிப்படும் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியில் வீணாக்குதல் என்பது பொருள். போரில் தோல்வியடைந்த குழுவினரின் சொந்தங்களான பெண்களை அடிமைகளாக வென்றவர்கள் பிடித்து வருகிறார்கள். அவர்களை போரில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கிட்டு வழங்குகிறார் தலைவர். அப்படி கிடைத்த அடிமைகளை வேண்டியவர்கள் வைத்துக் கொள்வார்கள்: வேண்டாதவர்கள் விற்று பொருளீட்டிக் கொள்வார்கள். அப்படி விற்பனை செய்வதற்கு முன் தங்களின் வெறியை தணித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். வழமையான கலவியில் ஈடுபட்டு கருத்தரித்து விட்டால் போதிய விலை கிடைக்காது என்பதால் கருத்தரிக்காமல் இருப்பதற்காக இவ்வாறு செய்ய அனுமதி கேட்கிறார்கள். அதற்கு முகம்மது அனுமதி வழங்குகிறார், இது தான் இந்த ஹதீஸின் முழுமையான பொருள். அடிமை முறை தவறு எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஒருவரால் இப்படியான அனுமதியை வழங்க முடியுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அடிமைகளின் விடுதலை குறித்து முகம்மது என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், நீ விடுதலை செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், என்று கூறினேன். நபி அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். புஹாரி 2592

 

ஆதாவது முகம்மதின் மனைவியர்களில் ஒருவர் தன்னிடமுள்ள ஒரு அடிமையை விடுதலை செய்ததை (யாரிடம் விற்று ஈடாக எவ்வளவு பணம் வாங்கினார் என்ற விபரம் இல்லை) விட உன்னுடைய உறவினர்களுக்கு அடிமையாக கொடுத்திருக்கலாமே என்று ஆதங்கப் படுகிறார். அடிமைகள் விடுதலை குறித்து முகம்மது பேசுவதன் உள்ளடக்கம் என்ன என்பது தெரிகிறதா? இப்படிப்பட்டவர் அடிமைகளின் விடுதலைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தார் என்று மதவாதிகள் கூசாமல் புழுகிக் கொண்டிருக்கும் போது நாம் நகைத்தால் மட்டும் போதுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


அடிமை முறை என்பது ஆண்டைகளின் உற்பத்திக் கருவி போன்றது. தங்களுக்கு உற்பத்தியை குவித்துத் தரும் கருவிகளின் மீது ஆண்டைகள் கரிசனம் கொள்வது இயல்பானது தான். ஆனால் அது எல்லைக்கு உட்பட்டது. இந்த அடிப்படையில் முகம்மது கூறியவைகளைத் தான் அடிமைத்தளையை நீக்குதல் என்று நீட்டி முழக்குகிறார்கள் மதவாதிகள். எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். புஹாரியில் 2552ம் ஹதீஸ் இப்படி கூறுகிறது,

 

உங்களில் எவரும் உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு ஒலுச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு என்று கூற வேண்டாம். என் எஜமானன் என் உரிமையாளன் என்று கூறட்டும். என் அடிமை, என அடிமைப் பெண் என்று யாரும் கூற வேண்டாம் பணிப்பெண், என் பணியாள் என்றே கூறட்டும்

 

அதாவது, அடிமைகள் தங்கள் ஆண்டைகளை ரப்பு கடவுள் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதை தடுக்க எண்ணும் முகம்மது அதனுடன் அடிமை என்ற பதத்திற்கு பதிலாக வேலையாள் எனும் பதத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். பூ என்றால் என்ன புய்ப்பம் என்றால் என்ன? வேலை நடந்தால் சரி என்பது தான் முகம்மதின் பாலிசியாக இருந்திருக்கிறது. அதையே இன்று மதவாதிகள் அந்த ஹதீஸின் பின்பாதியை மட்டும் பிய்த்துப் போட்டு அஹா.. .. விடுதலை விடுதலை என்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பிறந்தது முதலின்றுவரை இஸ்லாமியர்களே ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் புனித பூமியான சௌதியில் 1960 வரை அடிமை முறை இருந்தது, அதன் பின்னர் தான் சட்டம் போட்டு மாற்றியிருக்கிறார்கள் என்பதும் மதவாதிகளுக்கு புரிவதே இல்லை, அல்லது புரியாதது போல் நடிக்க விரும்புகிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard