பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.
திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.
இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.
வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.
தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.
டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.


“நாம் மொழியால் தமிழர்கள்; இனத்தால் திராவிடர்கள்; நாட்டால் இந்தியர்கள்; உலகத்தால் மனிதர்கள்’’ என்று கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திராவிட இயக்கத்தின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசினார் கலைஞர் மு.கருணாநிதி. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு என்றதும் ஒரு பக்கம் அந்த இயக்கத்தினர் சுறுசுறுப்பானதும் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் சுறுசுறுப்பாகி விட்டார்கள். இவ்வளவு காலமும் திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் செய்த மருத்துவர் ராமதாஸ் திராவிட மாயை என்று கருத்தரங்கம் நடத்துகிறார். நேருக்கு நேராக திராவிடம் பற்றி விவாதிக்கத் தயாரா என்று கேட்ட மதிமுகவின் நாஞ்சில் சம்பத்திடம், உங்கள் தலைவர் வைகோவிடம் வேண்டுமானால் நான் விவாதம் செய்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்சவால் விடுகிறார். மக்கள் மாநாட்டுக் கட்சி போன்ற சிறு அமைப்பை வைத்திருக் கும் வழக்கறிஞர் சக்திவேல் போன்றவர் கள் சீற்றமாக திராவிடத்தை எதிர்த்து அறிக்கை விடுகிறார்கள். புத்தகம் எழுதுகிறார்கள்; குறுந்தகடு வெளியிடுகிறார்கள். இவர்கள் நடத்தும் கூட்டங்களில் திராவிட இயக்கமே பிறமொழிக்காரர்களுக்கான இயக்கமாக முன்வைக்கப்படுகிறது. அதன் சாதனைகள் என்று நம் முன்னால் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கருதுகோள்களை இவர்கள்
சிதைக்கிறார்கள். ஒளிவட்டங்களை அழிக்கிறார்கள். இலங்கை இனப்படுகொலை இவர்களை ஒன்று திரட்டும் பசை ஆகிறது.
என்பது ஆரியர்கள் தமிழர்களுக்கு வைத்த பெயர். அதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்? தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையாது. திராவிடன் என்று ஓர் இனம் எந்தக்காலத்திலும் கிடையாது. தமிழன் என்றுதான் இருக்கவேண்டும். திராவிட மொழிக்குடும்பம் என்று ஆய்வுசெய்த கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை மனுஸ்மிருதியில் இருந்துதான் எடுத்ததாக எழுதுகிறார்’’ என்றார். பின்னர் அவரிடம் இதுகுறித்துப் பேசியபோது,‘‘ திராவிடம்தான் தமிழ் என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினால் இப்போது தமிழினத் தலைவர் என்று எழுதுபவர்கள் திராவிட இனத் தலைவர் என்று கலைஞரை அழைக்கத் தயாரா?’’ என்றும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஆனால் இந்த எல்லா கட்சிகளின் கொள்கைகளிலும் சிறியது முதல் பெரியது வரை வேறுபாடுகள் இருந்தாலும் திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை எதிர்ப்பதில் ஒற்றுமை உள்ளது.
ரவிக்குமார்,
திராவிடம், தமிழ்த்தேசியம் பற்றிய தனது கருத்துக்களை மூத்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன், தசஇ-யிடம் பகிர்ந்துகொள்கிறார்
சக்திவேல்: திராவிடம் என்பது மாயையான ஒன்று. ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும். திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது. திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும். 1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது;. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.
விடுதலை ராசேந்திரன்: ஒரு சமூக வரலாற்றைப் பார்ப்பதற்கு அந்த சமூகத்தின் பண்பு என்னவாக அப்போது இருந்தது என்பதிலிருந்து பார்ப்பதுதான் முறை. அப்போது அடையாளம் தேவைப்படுகிறது. மனிதர்கள் என்பது ஒரு அடையாளம். மொழி என்பது ஒரு அடையாளம். மேற்கத்திய நாடுகளில் மொழி, மனிதன் இரண்டுமே ஒன்றுதான். தமிழர் சமுதாயத்தில் பார்த்தீர்கள் எனில், மனிதனாக தமிழன் இருந்தானா என்ற கேள்வி முதலில் எழுகிறது. 1930களில் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அவனது பெயரில், அவனது தொழிலில், அவன் வாழும் இடத்தில் சாதி ஒன்றுதான் பிரதான அடையாளமாக, இருந்திருக்கிறது. ஒரு தமிழன் இன்னொரு சாதித் தமிழன் தெருவில் நடக்கமுடியாது. இவர்களுக்குள் ஒரு பரிமாற்றமும், கலப்பும் இல்லாமல் எனக்குக் கீழே, எனக்குக் கீழே என்று செங்குத்தாய் இருந்த சமூக அடுக்கைத் தமிழன் பராமரித்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழன்... தமிழன் என்று பேசுவதற்கான நியாயமே கிடையாது.
வெங்கட் சாமிநாதன்,



