என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?
நரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.