New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
காபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்!
Permalink  
 



காபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்!MONDAY, SEPTEMBER 5, 2011= IBNU SHAKIRbeemovie_l-300x225.jpg

காபிர்கள் தங்களை காபிர்கள் என்று அல்லாஹ் திட்டுவதையும், (ஆமா காபிர்களை காபிர்கள் என்று திட்டாமல் பின்னே எப்படி திட்டமுடியும?), காபிர்கள் கண்ட மேனிக்கு அல்லாஹ் ஏசுவதையும் பார்த்து மனம் வருந்துகிறார்கள் என்று தெரிகிறது. (சார்வாகன், தருமி, நரேன் மாதிரி காபிர்னு சொல்லிக்கிட்டு கொஞ்சம் பேர் சந்தோஷமா இருக்காங்க என்பதை கேட்டால் நமக்கே மனம் வருத்தம்தான் வருகிறது.)

ஆகவே காபிர்களை தேற்றுவதற்காக இந்த பதிவு எழுதுகிறேன்.

மனம் வருந்த வேண்டாம். உங்களை மாதிரியே நிறைய உயிரினங்கள் காபிர்களாகத்தான் இருக்கின்றன.

காபிர்கள் என்று அல்லாஹ் ஏன் உங்களை திட்டுகிறான் என்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ் ஆறு நாளில் இந்த வானம், பூமி, கடல், ஆறு மலை, விலங்குகள், செடிகொடிகள், ஆண் பெண் என்று எல்லாம் படைத்தான். பிறகு என்ன சொன்னான்? என்னை கும்பிடு என்று சொன்னான். அப்புறம் கொஞ்சம் ரூல்ஸ் போட்டான். கேட்டார்களா? இல்லையே. அல்லாஹ் சொன்னதை கேட்டிருந்தால் உங்களை ஏன் காபிர் என்று திட்டப்போகிறான்?

சரி கடைசி கடைசியாக ஒரு சான்ஸ் கொடுத்தான். அதற்காக அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காதில் குசு குசு என்று சொன்னதை அவர் அப்படியே எறக்கினார். அந்த பேச்சையாவது கேட்கலாமில்லையா? இந்த காபிர்கள் என்ன செய்கிறார்கள்? அவர் காதில் அல்லாஹ் சொன்னதற்கு என்ன அத்தாட்சி என்கிறார்கள்? அவரை அல்லாஹ் இறைதூதராக நியமித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கிறார்கள். அவர் எறக்கிய திருமறையில் எல்லாம் பொய் புளுகும் வன்முறையும், அறிவுக்கு பொருந்தாத உயிரியலும், வானவியலும் இருக்கிறதே என்று கேட்கிறார்கள். இதற்குத்தான் பகுத்தறிவு பகுத்தறிவு என்ற ஒன்றை அல்லாஹ்வின் அடியார்கள் வலியுறுத்துகிறார்கள். பகுத்தறிவு என்றால் என்ன என்பதை முஹம்மது ஆஷிக் உரையின் விளக்க உரையை பார்க்கவும். காபிர்களுக்கு மடத்தனம் அதிகமாக இருப்பதால் திரும்பச் சொல்கிறேன். ஒருவர் வந்து நான் தான் இறுதி இறைதூதர் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்புவதன் பெயர்தான் பகுத்தறிவு.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அல்லாஹ் என்ன சொன்னான்? ரொம்ப சிம்பிளாக ஒரு விஷயம் சொன்னான். கலிமா சொல் என்று சொன்னான்.

(ம்ம்.. கலிமா சொல்லவேண்டும் என்று எந்த இடத்திலாவது அல்குரான் கூறுகிறதா என்று பிஜே விளக்கலாம். (3:18, 37:35 இல் மட்டுமே லா இலாஹா இல் அல்லாஹ் என்ற வார்த்தை வருகிறது. அது மட்டுமே கலிமா. எந்த இடத்திலும் முஹம்மதுல்லாஹ் ரஸூலல்லா என்ற வரியும் இதுவும் சேர்ந்து வருவதில்லை. லா இலாஹா இல் அல்லாஹ் சொன்னால் மட்டுமே போதுமானது என்று அல்குரானே பல இடங்களில் சொல்கிறது. கலிமா பற்றி தனி பதிவு எழுதி விளக்குகிறேன். சுன்னி கலிமா வேறு ஷியா கலிமா வேறு. ஷியா கலிமாவில் அலி(றலி)யை பற்றியும் ஒரு வார்த்தை சேர்த்துகொள்ளப்படும்)

ஓகே கலிமா சொல்லவேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார். அப்புறம் ஒரு பெரிய லிஸ்டு கொடுத்தார். அதையெல்லாம் பின்பற்றனும். அவ்வளவுதானே? ஓகே இன்னொரு பெரிய லிஸ்டு ஹதீஸ்ல இருக்கு, அதனையும் பின்பற்றணும். நீங்க ஷியாவா இருந்தா வேறொரு ஹதீஸ் லிஸ்டு இருக்கு. அதனை பின்பற்றணும். (புர்யுதா? இதனாலதான் ஷ்யாவுக்கு சுன்னி காபிர் சுன்னிக்கு ஷியா காபிர். அதே மாதிரி சுன்னத் வல் ஜமாத்துக்கு தவ்ஹீத் ஜமாத் காபிர். தவ்ஹீத் ஜமாத்துக்கு சுன்னத் வல் ஜமாத் காபிர். காபிர்னா கல்யாணம் பண்ணியிருந்தாலும் தலாக் சொல்லி பிரியணும்னு அர்த்தம்.)

உள்ள போயி காபிர்னு பெயர் வாங்குறதுக்கும், அங்க நடக்குற வெட்டு குத்து கொலைக்கும் பேசாம வெளியிலயே காபிராவே இருக்கலாம்னு எல்லா காபிர்களும் சில முஸ்லீம்களும் முடிவு பண்ணியிருக்கலாம். நம்ம ஈமான் தாரிகள் ஏன் மசூதியா பாத்து குண்டு வைக்கிறார்கள் என்று கூட ஒரு அசிங்கம் பிடித்த அழுக்கு நஜஸ் காபிர் ஒருத்தர் என்னை கேட்டார். அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்றாவது அருட்கொடையை பத்தி பதிவே எழுதியிருக்கேன். கேட்கற கேள்வியைப் பாரு!

ஸோ, அல்லாஹ் பேச்சை கேட்காதவன் காபிர். (தவ்ஹீத் அண்ணன் பேச்சை கேக்காதவனும் காபிர்தான். அத அப்பறம் பாப்பம்)

மனிதர்கள் மட்டுமா அல்லாஹ் பேச்சை கேட்பதில்லை? புல் பூண்டு, தாவரங்களிலிருந்து மரம் செடி கொடி, மலை பூமி சூரியன் என்று யாருமே கேட்பதில்லை. கேவலம் ஒரு தேனீ கூட கேட்பதில்லை. ஓகே..ஓகே. ஒரு தேனியும் கேட்பதில்லை.

மத்ததை அப்புறம் பாப்பம். இப்ப தேனியை பாப்பம்

பாருங்களேன்.

அல்லாஹ் தேனிக்கள் கிட்ட ரெண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தார். கலிமா கொடுக்கலை, அல்குரான் மாதிரி எதுவும் அந்த தேனீ கூட்டத்து தலை மேல எறக்கலை. ஹஜ் யாத்திரை போகணும், கொள்ளையடிச்சதில ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வோட இறைதூதருக்கு கொடுக்கணும், அவுஹ பொண்டாட்டிமேல கண்ணு போடக்கூடாது, உக்காந்துகிட்டு உச்சா போகணும், நின்னுக்கிட்டு தண்ணீ குடிக்கணும், தாடி வளக்கணும், இடது பக்கம் துப்பணும் மாதிரி எந்த பெரிய லிஸ்டும் அந்த தேனீக்களுக்கு கொடுக்கலை. சும்மா ரெண்டு சின்ன கட்டளைகள்தான். (ஒருவேளை தேனீக்களுக்கும் இது மாதிரி இறைதூதர் அனுப்பி அனுப்பி எந்த தேனியும் கேக்கறமாதிரி தெரியலைன்னு அலுத்து போய் போங்கடான்னு உட்டுட்டாரோ தெரியலை. ஒருவேளை தேனீ இறைதூதர் நம்ம இறைதூதரை விட ரொம்ப அலும்பு பண்ணியிருப்பாரோ என்னவோ? அது கெடக்கட்டும். அங்க இறைதூதர் இல்லாததனால அங்க நல்ல வேளையா ஹதீஸும் இல்லை, அங்க நம்ம தவ்ஹீத் அண்ணன் மாதிரி தேனீக்கள் இல்லாததினால் அங்க, ஷியா, சுன்னி, இருநூறு தவ்ஹீத் ஜமாத்துகளோ சுன்னத் வல் ஜமாத்துகளோ இல்லை. கொடுத்து வைத்த தேனீக்கள்

ஆமா இரண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தான். அவை என்ன?

16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
16:68. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
16:69. “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும்) உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

இந்த பக்கம் இப்படி மொழிபெயர்க்கிறது

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

(சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் என்ன சான்று இருக்கிறது என்றும் பார்ப்போம்) 

நம் மக்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கே பிராக்கெட்டெல்லாம் போட்டு இதைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையெல்லாம் அறிந்து விளையாடிவிடுவார்கள். கனிகள் என்பது மலர்கள் ஆகிவிடும். ”உள்ளுணர்வை அளித்தான்” என்பதெல்லாம் ஒரு உட்டாலக்கடி. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் revealed அதாவது தன் இறைதூதர்களுக்கு செய்திகளை கொடுப்பதற்கும் revealed தான். ஆகையால், இந்த தேனிக்களுக்கும் வஹிவஹியாக கொடுத்து இந்த ரூல்களை இறக்கியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். (வஹி வந்தாலே ஜிகாத் தானோ என்னமோ? பக்கத்தில போனா குத்தி கொதறி புடுதுங்கள்).

ஆகையால் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்திருக்கிறேன். 
Your Lord revealed to the bees: "Build dwellings in the mountains and the trees, and also in the structures which men erect. Then eat from every kind of fruit and travel the paths of your Lord, which have been made easy for you to follow." From inside them comes a drink of varying colours, containing healing for mankind. There is certainly a Sign in that for people who reflect. (Qur'an, 16:68-69)

”மலை, மரம் மற்றும் மனிதன் உருவாக்கும் கட்டடங்களில் கூடுகளை கட்டு” என்று ஒரு ரூல்.

ஒவ்வொரு வகை கனியையும் புசித்து அல்லாஹ் சொல்லும் எளிதான பாதையில் செல்”  இது இன்னொரு ரூல்.

முதல் ரூலை ஒன்னும் பண்ணமுடியாது. கூடுகளை கட்டினால், மலையில் கட்ட வேண்டும். இல்லையேல் மரத்தில் கட்டவேண்டும். இல்லையேல் மனிதன் கட்டிய கட்டடங்களில் கட்ட வேண்டும்.

http://www.harunyahya.com/miracles_of_the_quran_p1_08.php#9 என்ற ஹாரூன் யாஹ்யாதளத்தில்  ந்த தேனீக்கள் பெண் தேனீக்கள் என்பதை இந்த அரபிய வசனம் குறிக்கிறது என்று கண்டபடி புல்லரிக்கிறார். நாமும் நன்றாக அரித்துகொள்வோம். இதோ இங்கே ஒருத்தர் கண்டபடி அரிக்கிறார். (ஆனால், இந்த விஷயத்தை அரிஸ்டாட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டார் என்பதை நாம் காபிர்களிடம் சொல்லிவிடக்கூடாது. இந்த லிங்கை ரகசியமாக வைத்துகொள்ளவும். http://www.beeclass.com/DTS/aristotle_on_bees.htm)

மொத ரூலாவது ஓரளவுக்கு பரவாயில்லை. செடிகொடியில் கட்டினால்கூட, அல்லாவின் பார்வையில் இந்த செடி ஒரு மரம்தான் என்று ஒரேயடியாக சாதித்துவிடலாம்

ஆனால் இரண்டாவது ரூலைத்தான் சுத்தமாக கேட்பதே இல்லை இந்த தேனீக்கள்.  கனிகளிலிருந்து சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவரை கனிகளிலிருந்து சாப்பிடும் ஒரு தேனீ கூட இல்லை. என்ன காபிர்தனம் பாருங்கள். அல்லாஹ் வேலைமினக்கெட்டு ரெண்டே ரெண்டு ரூல்ஸ் போடறான். அதில ஒரு ரூலை சுத்தமா கேட்பதே இல்லை இந்த தேனீக்கள். எப்போதுமே மலர்களில் உள்ள இனிப்பையும் மகரந்தத்தையுமே இந்த தேனீக்கள் சாப்பிடுகின்றன. அந்த இனிப்பைத்தான் தேனாக மாற்றி சேமிக்கின்றன.  கனியை சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டும் கனியை தொட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இந்த தேனீக்களை காபிர் தேனிக்கள் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?

(தேனீக்கள் கனிகளை சாப்பிடுவதில்லை. மலர்களிடம் உள்ள மகரந்தத்தையும் தேனையும்தான் சாப்பிடுகின்றன என்பதை வைத்து நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் நபிஹள் நாயகம் அவர்களாக விடும் டுபாக்கூர் என்று காபிர்கள் சொல்லுகிறார்கள். 
bumblebee-honeybee-wasp-300x163.jpg

wasp என்ற குளவியும் தேனீ மாதிரியே இருக்கும். அவற்றை பலர் தேனீ என்று நினைத்து ஏமாந்துவிடுகிறார்கள். ஆனால், குளவி பழத்தை சாப்பிடும். பூவில் இருக்கும் தேனையும் சாப்பிடும். ஆனால், கூடு கட்டி தேனை சேமிக்காது. குளவியை தேனீ என்று நினைத்து நமது அல்லாஹ் தப்பு தப்பாக எறக்கிவிட்டார் என்றும் காஃபிர்கள் சொல்லுவார்கள். ஆனால், மனிதர்களை போலவே தேனீக்களிலும் காபிர்கள் இருக்கலாம் என்பதை ஏனோ அவர்கள் கவனிப்பதில்லை. அல்லாஹ் தேனீக்களுக்குத்தான் ரூல்ஸ் போட்டார். அவை கேக்கலை. ஆகையால் அவை காபிர் தேனீக்கள்தான். எப்படி நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லத்தை தப்பிக்க வைச்சிட்டேன் பாத்தீயளா? இல்லன்னா ஒரு தேனீயை புடிச்சி அத ஒரு பழத்தை சாப்பிட வைச்சி அல்குரானை அல்லாஹ் எறக்கியது என்றும் நிரூபிக்கலாம். நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் முடியாதது எதுவுமில்லை. அல்லாஹ்வால் முடியாதது கூட நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் சாத்தியப்பட்டுவிடும்.)

மார்க்க சகோ சிட்டிஜன் இந்தபடத்தை போட்டு திராட்சை சாப்பிடும் தேனீ என்று விவரித்திருக்கிறார்.

இப்படித்தான் ஒரு மூமின் குளவி படத்தை போட்டு தேனீ என்று சொல்வதா? இதுவா மார்க்கத்தை பரப்பும் வழிமுறை?

ஒரு திராட்சை மீது ஒரு தேனி போட்டிருப்பதாக போட்டாஷாப் படத்தையாவது போட்டு நமது மார்க்கத்தை பரப்பவேண்டாமா?
கழுத்துக்கு பின்னால் கம்பளி ஜாக்கெட் போடாமல் கருப்பு தெரிவதை பாருங்கள். 
Grape-Eating-Bee-300x225.jpg


இது தேனீ, கம்பளி ஜாக்கெட் போட்டிருப்பதை பாருங்கள்
Grape-Eating-Bee-300x225.jpg

ஆகவே இந்த தேனீக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகி காபிர்களாகிவிட்டன என்றுதான் குரான் ஒளியில் தெரிகிறது.
Honey-bee-asleep-during-cold-weather-300x199.jpg 
மேலும் ஆதாரத்துக்கு இந்த படத்தை பாருங்கள். ஒரு பர்தா போடாத அந்நிய பெண்ணோடு ஒரு தேனி பேசிக்கொண்டிருக்கிறது. இதுவே இந்த தேனீக்கள் எல்லாம் காபிர்கள் என்பதற்கு ஆதாரமாக இல்லையா?
Bee-Movie-35669-264x300.jpg


ஆகவே நமது இஸ்லாமிய போராளிகள் ஒருவேளை இந்த காபிர் தேனீக்கள் மீதும் ஜிகாத் தொடுத்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது. சமீபகாலமாக பல தேனீ கூட்டங்களின் காலனிகள் அழிந்து வருகின்றன. இதனால் எதிர்கால தாவரஙகளின் உற்பத்தியே தடை பட்டுவிடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், மனிதர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக ஆகிவருகிறது என்றும் அஞ்சுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Honey_bee#Colony_Collapse_Disorder_.28CCD.29

ஆனால் நாம் நன்றாக சாப்பிட்டு நன்றாக இருப்பது முக்கியமா? அல்லது அல்லாஹ்வின் சொல் பேச்சை கேட்காத காபிர் தேனீக்கூட்டம் அழிக்கப்படுவது முக்கியமா என்று சிந்திக்க வேண்டும்.

1400 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வேளை அல்லாஹ்வுக்கு நாம் சொன்ன பேச்சை இந்த தேனீக்கள் கேட்கவில்லை என்று தெரியவந்திருக்கலாம். அதனால் அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்கவும் முடிவு செய்திருக்கலாம்.

என்ன லாம் ?

நமக்குத்தான் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கை எல்லாம் அத்துப்படி ஆயிற்றே. ஒரே போடா போடுவோம். அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்க முடிவு செய்துவிட்டான். டான் டான்.



உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 25:04)


யா அல்லாஹ்

இன்ஷா அல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: காபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்!
Permalink  
 


naren said...
September 5, 2011 5:12 PM

அஸ்ரத்து இ.சா, காஃபீரின் காலை வணக்கங்கள் (தலையை வெட்டாதீர்கள்)

================================================
முஸ்லிம்

அத்தியாயம்: 1, பாடம்: 1.26, எண் 91
"ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை 'இறைமறுப்பாளர்' (காஃபிர் என்று குறிப்பதன் மூலம் அவரை இறைமறுப்பாளர்) ஆக்கினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராக மாறி விடுவர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி).
================================================

அதனால், நமக்கு தேனீக்கள் சகோதரர்களா? தேனீக்களை காஃபிர் என்றால் சொன்னவரும் காஃபிர் ஆகிவிடுவாரா? தேனீக்கள் கியாமத் நாட்களில் எப்படி பேசும்?(ஊய்ங்ங்ங்ங்ங் என்றா)

மொழிப்பெயர்ப்பில் ஏன் bracket போடுகிறார்கள், காஃபிர்களை bracket போடவா? 

================================================
புகாரி

6972. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இனிப்பு தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது....................... நான், 'அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)' என்று சொன்னேன். 
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், 'இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அது எனக்குத் தேவையில்லை' என்று கூறினார்கள். 
(இது குறித்து) சவ்தா(ரலி) அவர்கள், 'அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், 'சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)' என்று சொல்வேன்.26 
Volume :7 Book :90
================================================

தேனீக்கள் கருவேல மரத்தில் இருந்து தேன் அருந்துமா??? இந்த சம்பவதிற்கு பிறகுதான் வஹி வந்து மேற்படி தேனீக்கள் வசனம் இறங்கியதா???

சரி இதை வைத்து குரானில் biology பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது என்று அறவியல் கூறாதீர்கள். பாவம் மாணவர்கள்...சமச்சீர் கல்வியில் அதனையும் ஒரு பாடமாக ஆக்கிவிடுவார்கள் (குரானை அறிவியல் பாடமாக வைக்கவேண்டும் என்று பி.ஜெ, போராட்டம் நடத்தலாம்.)

இப்படிக்கு உங்களிடம் தலைதெறிக்க ஓடும் காஃபீரின் வணக்கங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சார்வாகன் said...
September 5, 2011 5:49 PM

ஸலாம் ஜனாஃப் இ.சா 
சரியான பதிவு,

தேனீக்கள் காஃபிராக இருக்க முடியாது என்பது இந்த காஃபிரின் கருத்து

/16:49. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை/

வணங்குவதை உறுதி செய்ய முடியவில்லை என்றாலும் குரானில் இருப்பதால் நம்ப வேண்டும்.ஏனெனில் அதுதான் பகுத்தறிவு.(பழக்க தோஷம் இந்த காஃபிரை எப்படி மாற்றி விட்டது பார்த்தீர்களா!!!!!)

________
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).

55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

வனம் பூமியில் உள்ள அனித்தும் ஸ்ஜூது செய்வதால் அப்படி செய்யாத காஃபிர்கள் பூமியிலோ ,வானத்திலோ இருக்க முடியாது.அவர்கள் மிதந்து கொண்டே இருக்க வேண்டும்.முமின்கள் வணங்கினால் நிழலும் வணங்கும் என்று 1400+ வருடத்திற்கு முன்பே கூறியதும் ஒரு அறிவியலே

குழப்பமாக உள்ளது.

1.தேனீ காஃபிரா,இல்லையா?

2. விரும்பாமல் ஸுஜூது செய்வது எப்படி?

3. காஃஃபிர்கள் எங்கே இருக்கிறார்கள்.நானும் இதர காஃபிர்களும் பூமியில் இருப்பது போலவே இருக்கிறது.

நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சார்வாகன் said...
September 5, 2011 6:36 PM

(16:69:5)
l-thamarāti
the fruits
_________
ஜனாஃப் இ.சா
பாருங்கள் இந்த 16:69 ல் மல்ர்(பூ) என்பதே கிடையாது .அனைத்து ஆங்கில மொழி பெயர்ப்புகளை.இந்த யூசுஃப் அலியும் கொஞ்சம் (ஏ)மாற்றுவதும் தெரியும்.
_____________

Sahih International: Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.
*************
Pickthall: Then eat of all fruits, and follow the ways of thy Lord, made smooth (for thee). There cometh forth from their bellies a drink divers of hues, wherein is healing for mankind. Lo! herein is indeed a portent for people who reflect.
****************
Yusuf Ali: Then to eat of all the produce (of the earth), and find with skill the spacious paths of its Lord: there issues from within their bodies a drink of varying colours, wherein is healing for men: verily in this is a Sign for those who give thought.
******************
Shakir: Then eat of all the fruits and walk in the ways of your Lord submissively. There comes forth from within it a beverage of many colours, in which there is healing for men; most surely there is a sign in this for a people who reflect.
*****************
Muhammad Sarwar: then eat of every fruit and follow the path of your Lord submissively." From out of their bellies comes a drink of different color in which there is a cure for the human being. In this there is evidence (of the truth) for the people of understanding.
***************
Mohsin Khan: "Then, eat of all fruits, and follow the ways of your Lord made easy (for you)." There comes forth from their bellies, a drink of varying colour wherein is healing for men. Verily, in this is indeed a sign for people who think.
*****************
Arberry: Then eat of all manner of fruit, and follow the ways of your Lord easy to go upon.' Then comes there forth out of their bellies a drink of diverse hues wherein is healing for men. Surely in that is a sign for a people who reflect.
**************
இதற்கு அண்ணன் பி.ஜே வின் விளக்கம் 
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/259/

தேனீ மட்டும் எவ்வளவு தூரம் போனாலும் திரும்பும் ஏனெனில் இறைவன் கொடுத்த உள்ளுனர்வு.

பறவைகள் கண்டம் விட்டு கண்டமே சென்று திரும்புவது யார் கொடுத்த உள்ளுனர்வு?
மழுப்பல் திலகம் பி.ஜே வால்க!!!!!!!!!!!!!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Ibnu Shakir said...
September 5, 2011 7:57 PM

வாருங்கள் சார்வாகன்,

நம்ம நபிஹள் நாயகத்தையும் அல்லாஹ்வையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நிழலுக்கு ஒரு தனி மூளை இருக்கு என்று வைத்து அது ஸுஜூது செய்கிறது என்று அவிழ்த்துவிடும் அழகே அழகு! சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று மனிதர்களிடம் கெஞ்சுகிறான்?


தவ்ஹீத் அண்ணனின் பக்கத்தை காட்டியதற்கு மிக்க நன்றி. முன்னரே பார்த்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது!

தவ்ஹீத் அண்ணன் தைரியமா அள்ளிவிடுவதை பார்த்தால், நம்ம கண்ணே பட்டுடும் போல இக்கு.

நான்கு அறிவியல் உண்மைகள்னு அவிழ்த்துவிடுவதை முன்னரே பார்த்திருந்தால், பதிவையே அண்ணனின் புகழ்பாடியே எழுதித்தள்ளியிருப்பேன்.
1) செல் என்றுதானே இருக்கிறது? சென்றுதிரும்பு என்று எங்கே இருக்கிறது?
2) வயிற்றிலிருந்து தேன் உருவாகிறது என்று யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்.
அரிஸ்டாட்டில் எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.
http://www.google.com/search?sourceid=chrome&ie=UTF-8&q=but+honey+is+a+liquid+that+cometh+from+the+stomach+and+belly+of+the+bee
3)இன்னொரு துவாரத்தின் வழியாகத்தான் தேன் வருகிறது என்று குரான் சொல்கிறது என்கிறார். அவருக்கு தனியாக வஹி வந்து அந்த எழுத்து மாறி தெரிந்ததோ என்னமோ. எனக்கு தெரியவில்லை.
4) தேனில் மருத்துவ குணத்தை எல்லா விஞ்ஞானிகளும் ஒப்புகொள்கின்றனர். அரிஸ்டாட்டில் எழுதிய மருந்து புத்தகத்தில் எல்லா மருந்துகளிலும் தேனை குழைக்கிறார். அப்பவே அரிஸ்டாட்டில் அறிந்ததை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு நம்ம அல்லாஹ்வுக்கும் தெரிந்துவிட்டது அற்புதம்தானே? 

இந்த நான்கு உண்மைகளையும் அல்லாஹ் அரிஸ்டாட்டிலுக்கு பிறகு ஆயிரம் வருடங்கள் கழித்து புத்தம்புதுசா எறக்கியிருக்கார்னா அவரோட அறிவென்ன தெறமெயென்ன! அடேங்கப்பா...

ஆஹா 

அல்லாஹ்வின் அருமை பெருமையை கடைசிவரியில் வழக்கம்போல போட்டுவிட்டார்.

குரான் ஒரு சாதாரண நேர்மையான மனிதனது வார்த்தை இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக இந்த வசனம் மெய்ப்பித்துவிட்டது.

அல்லாஹூ அக்பர்
யா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...
September 7, 2011 9:34 AM

முல்லா….முல்லா..முல்லா…முல்லா..ஈஸா சீ இ.சாஆஆஆஅ.

இங்கே பாருங்க இந்த “ரித்த்தா” என்ன சொல்கிறார் என்று.

http://senkodi.wordpress.com/2010/02/05/milk-honey/#comment-5796

//இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.//

உடனே செங்கோடி மீது ஜிஹாத் அறிவியுங்கள்ள்ள்.
இந்த வசனப்படி
================================================ 
புகாரி

6922. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
அலீ(ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ(ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். 7 இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். மாறாக, நபி(ஸல்) அவர்கள், 'தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள்' என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன்' என்றார்கள்.8 
Volume :7 Book :88
================================================

உடனேயே இந்த செங்கோடி மீது பட்வா இடுங்கள்..
சல்மான் ரூஷ்டி பட்வாவை விட பயங்கரமாக இருக்க வேண்டும்.

இந்த நல்ல காஃபிரின் வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக. அல்லது பாயான்களில் இதைப்பற்றி வெறிக்கொண்டு பேசவேண்டு.

செங்கொடி யூத, கிருத்துவ, சங்க் பரிவார்களின் கைக்கூலி. விடாதீர்கள் முல்லா.....

நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பின்குறிப்பு

நம்ம ஆஷிக் போட்ட படத்தை விட உருப்படியான படத்தை போட்டு நம்ம தவ்ஹீத் அண்ணன் சான் அண்ணாச்சிகளுடன் தேனீ பத்தி பேசும்போது போட்டிருக்கிறார்

கூகுளில் honey bee on fruit என்று போட்டால் வரக்கூடிய முதல் படத்தை போட்டிருக்கிறார்

அந்த படம் இதுதான்

சேச்சே இது இல்லை. இது ஒருவேளை நம்ம காககககே கண்டுபிடித்த அல்லாஹ் அல்குரானில் தேனீக்கள் தரையில் ஊற்றிய ஜூஸை குடித்து வாழச் சொல்லியிருந்தால் போட்டிருக்க வேண்டிய படம்.

சேச்சே இதுவுமில்லை.. மரத்திலிருந்து ஒழுகும் tree sapஐ குடித்து வாழச்சொல்லியிருந்தால் போட்டிருக்க வேண்டிய படம்.

ஓக்கே இதுதான்

இந்த படத்திலுள்ள தேனீ மட்டுமே மூமின் தேனீ.

ஸா பால்மிட்டோ என்ற மரத்தின் பூக்களிலிருந்து தேனை எடுத்துகொண்டு அப்படியே அதன் பழங்களில் உட்கார்ந்திருக்கும்போது படேலென்று அமுக்கிய போட்டோ.. அப்பாடா ஒருவழியா மூமின் தேனீயை கண்டுபிடித்தாயிற்று.

தேனீக்களிடம்  மலத்தை சாப்பிடு என்று என்று அல்லாஹ் சொல்லியிருந்தால், மலத்தில் உட்கார்ந்திருக்கும் தேனீயையும் போட்டு அதனை நிரூபிப்பீர்களா என்று காபிர்கள் கேட்கலாம்.

பொதுவா தேனீ என்ன சாப்பிடுமோ அதனைத்தானே சொல்லணும். டீ குடிக்கிற தேனீ, காபி குடிக்கிற தேனீ என்று எத வேணாலும் சொல்லுவீங்களா..  அல்லாஹ்தேனீக்கள் கிட்ட பழத்தைதானே சாப்பிடச்சொன்னார்? அப்ப பழம்தானே அதோட முதல் உணவா இருக்கணும்? அப்புறம் ஏன் அது பழத்தை முதல் உணவா வச்சிக்காம, பூவோட தேனை முதல் உணவ வச்சிக்குது என்று காபிர்கள் கேட்கலாம்.

அதற்காகத்தான் நான் அப்போதே சொன்னேன். இவையெல்லாம் காபிர் தேனீக்கள். பழம் சாப்பிடும் தேனீ மட்டுமே சரியான மூமின் தேனீ.  இப்ப அல்லாஹ் அல்குரான்ல் காபிரை கண்ட எடத்திலெல்லாம் கழுத்தை வெட்டுன்னு சொல்லியிருக்கார். எல்லா முஸ்லீம்களும் கேக்கறாங்களா? இல்லையே. ஏதோ ஒரு சில முஸ்லீம்கள் மட்டுந்தேன் கேக்கறாங்க. அதனால அவங்க மட்டும் தான் மூமின். காபிரை பாக்கிற எடத்திலெல்லாம் கழுத்டை வெட்டாத மத்த முஸ்லீமெல்லாம் பெயர்தாங்கி முஸ்லீம்னு சொல்றோம்ல? அது மாதிரி பழத்தை சாப்பிடுற இந்த தேனீ மட்டும்ந்தான் மூமின் தேனீ. மத்ததெல்லாம் காபிர் தேனீ. ஆனால் இந்த மூமின் தேனீயும் பூவில இருக்கிற தேனை குடிச்சிதின்னா அப்ப காபிர் தேனீயா ஆயிடும்.

சரியா…

ஆகவே வளைகுடாவில் தண்ணீர் தொட்டி கழுவி அரபுகளிடமிருந்து காசு வாங்கி வீட்டுக்கு அனுப்புவதை விட முக்கியமாக, இந்த காபிர் தேனீக்களை அழிக்க வேண்டியது முக்கியம் என்பதை வளைகுடா அன்பர்கள் உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே தேனீ தவ்ஹீத் ஜமாத் என்ற ஒன்றை ஆரம்பித்து இந்த காபிர் தேனீக்களின் கழுத்தை கண்ட இடத்திலெல்லாம் வெட்ட மனமுவந்து நன்கொடை அளித்து காககககே கண்டுபிடித்து சொன்ன அல்லாஹ்வின் அருளை பெற அழைக்கிறோம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard