
தமிழக காங்கிரஸில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இல்லாத கார்த்தி சிதம்பரம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தனது தந்தைக்கென (ப.சிதம் பரம்) ஒரு வலிமையான ஆதரவு தளத்தை காங்கிரஸில் உருவாக்குவதே இவரது நோக்கம். சமீபகாலமாக இவர் பேசும் பேச்சுக்கள் சர்ச்சைகளை உருவாக்கி வருவதுடன், இளைஞர் காங்கிரஸில் அதிகம் தலையிடுவதாகவும் கோஷ்டி அரசியலை வளர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.
தமிழகத்திற்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் இல்லை என்று உங்கள் கட்சி மீதே குற்றச்சாட்டு வைக்கிறீர்களே?
ஆமாம்... உண்மைதான். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கட்சிகள் மட்டும்தான் இருக்கின்றன. ஏன், இவை இரண்டு மட்டும்தான் இருக்க வேண்டுமா? அந்த ஸ்தானத்திற்கு காங்கிரஸ் வரக்கூடாதா? என்பது என் கேள்வி. பிரதான அந்தஸ்து தவிர, அந்த இரண்டு கட்சிகளுக்கும் பத்திரி கை, தொலைக்காட்சி என மீடியா பவர் இருக்கிறது. இவைகள் அனைத்தும் இருந்தும்கூட அந்த கட்சிகள் பொதுக்கூட்டங் கள் போட்டு மேடைகளில் முழங்குகிறார்கள். போட்டிக் கூட்டம் நடத்துகின்றனர். இது கட்சியை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் காங்கிரஸில் அந்த நிலை இல்லை. திராவிட கட்சி களின் ஸ்டைலை காங்கிரஸ் பின்பற்ற வேண்டும். திராவிட கட்சிகளைப்போல மக்களை நெருங்க பொதுக்கூட்டங்கள் போடவேண்டும். அதனைப் போடுவதற்கு கட்சி தவறினால் காங்கிரஸ் எப்படி வளர்ச்சி அடையும்? அதனால்தான் தமி ழகத்திற்கு உகந்த கட்சியாக காங் கிரஸ் இல்லை என்று பேசு கிறேன். இதில் தவறு இருப்ப தாக நான் நினைக்கவில்லை.
கூட்டணி உறவை உரசிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய நாயக னாக நீங்களும் இருக்கிறீர்களே?
அரசியலில் மௌனம் ஒரு யுக்தி அல்ல. கட்சியின் அபிலாசைகளை தலைவர்களும் தொண்டர்களும் வெளிப்படுத்த வேண்டும். அப்பொதுதான் கட்சி வலிமை அடையும். ஒரு பாராளு மன்றத் தொகுதிக்கு 2 சட்ட மன்ற தொகுதி என 78 இடங் களை காங்கிரஸ் பெறவேண் டும் என்றும் மத்திய அரசின் நிதிகளில்தான் மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படு கிறது என்றும் நான் பேசு கிறேன். இது சர்ச்சையாகிறது. ஆனால் இப்படி நான் பேசு வது எந்த வகையில் அநியா யம்? அநாகரிகம்? எங்கள் கட்சியின் விருப்பத்தை தெரி விப்பது எப்படி உறவை உரசிப்பார்ப்பதாக நினைக்க முடியும்? என்னைப் பொ றுத்தவரை சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பேசவேண் டும், அப்போதுதான் அந்த சர்ச்சைகள் விவாதமாக மாறும். அப்படி விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும். அந்த வகையில் சர்ச்சைக் குரிய நாயகன்தான் நான்.
நீங்கள் பேசும் சர்ச் சைக்குரிய பேச்சுக்களில் உங்கள் தந்தை ப.சிதம்பரத் திற்கு உடன்பாடு உண்டா? அவர் சொல்லித்தான் நீங் கள் பேசுகிறீர்களா?
மத்திய உள்துறை அமைச்சர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார் அவர். அவரிடம் ஆலோசித்துவிட்டுப் பேசுவதற்கு நான் ஒன்றும் அவரது ஸ்போக்ஸ் மேன் கிடையாது.
இளைஞர் காங்கிரசில் கோஷ்டி அர சியல் கூடாதுங் கிறது ராகுல் காந்தியின் கட் டளை. அந்த கட்டளையை மீறுகிற வகையில் கோஷ்டி அரசிய லை நீங்கள் புகுத்துவ தாக இளைஞர் காங் கிரசின் மாநில தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
ராகுல்காந்தியின் கட்டளையை எந்த விதத்திலும் நான் மீறவில்லை. இளைஞர் காங்கிரசில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழைக்கிற கூட்டங்களில் நான் கலந்து கொள்கிறேன். அது பேரண்ட் பாடி மீட்டிங்காக இருந்தாலும் சரி... இளைஞர் காங்கிரஸ் மீட்டிங்காக இருந்தாலும் சரி..! அவ்வளவுதான். மற்றபடி யுவராஜ் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாரில்லை.
காங்கிரசில் 85 சதவீத ஆதரவும் வலிமையும் உள்ள வாசன் இளைஞர் காங்கிரசில் தலையிடுவதில்லை. ஆனால் ப.சி.யின் மகன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லாத இவர் அதிகம் தலையிடுகிறார் என்று உங்கள் மீது விமர்சனம் வருகிறதே?
வலிமை அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறானது. வலிமை இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யார், யாருக்கு என்ன வலிமை என்பதை ஆராய்ந்து பாருங்களேன். அடுத்து ப.சி.யின் மகன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வதே அபத்தம். ஏன்னா... நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். விமர்சிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்... என்னை அழைக்கும் கூட்டங்களில் கலந்து கொள்கிறேனே தவிர இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை.
தி.மு.க.வைப்பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் விமர்சனங்களில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
தனி மனித விமர்சனத்தைத் தவிர மற்றபடி அவரது விமர்சனங்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவரது விமர்சனம் சரியானதுதான். அதில் உண்மை இருக்கிறது.
காங்கிரசில் தலைவர்கள் இருக்கிறார்கள்; தொண்டர் கள் இல்லை என்பதால்தான் தமிழகத்தில் 43 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளர்ச்சி அடையாமைக்கு காரணம் என்கிறார்களே?
திராவிட கட்சிகளுக்கு இல்லாத இளைஞர்கள் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.எங்கள் கட்சியில் 13 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.இந்த பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட தயார். திராவிட கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்... காங்கிரஸைப் போல தங்களின் இளைஞர்கள் பட்டியலை திராவிட கட்சிகள் வெளியிட தயாரா? தொண் டர்கள் இல்லை என்பதெல் லாம் திராவிட கட்சிகளின் கற்பனை











இதன் பின்னணியை விசாரிக்க முனைந்தபோது, ரயில் மேட்டரை சொல்லி தடதடக்கின்றனர் சிவகங்கை நகர பிரமுகர்கள்.
‘‘நாங்கள் நியாயம் கேட்டு நடத்திய உண்ணாவிரதத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் மாவட்டத் தலைவரான ராஜரத்தினம், இவ்விரு ரயில்களையும் சிவகங்கையில் நின்று செல்ல உத்தரவிடக்கோரி தென்கை ரெயில்வே பொது மேலாளருக்கு கடந்த 29.06.2010&-ல் சிதம்பரம் கடிதம் எழுதியதாக கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டார்.
ரயில்களை நிறுத்தும் விஷயத்தில் ப.சிதம்பரத்தால் ஒன்றும் ஆகாது என முடிவு செய்தார்களோ என்னவோ, சிவகங்கை காங்கிரஸ்காரர்கள் சிலரே இந்த விஷயத்தை சிவகங்கை மண்ணின் மைந்தரான விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர் காதில் போட்டிருக்கிறார்கள்.
‘‘மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எந்த ஒரு விஷயத்தையும் மதிநுட்பத்-தோடுதான் கையாண்டு காரியம் சாதிப்பார். அந்த வகையில்தான் இந்த விஷயத்தையும் உரியமுறையில் கடிதம் மூலமாக கையாண்டு வருகிறார். தேவைப்பட்டால் மம்தாவிடமும் நேரிலேயே வலியுறுத்துவார். சிலர் நினைப்பது மாதிரியெல்லாம் ‘ஜீ பூம்பா’ வேலை செய்தெல்லாம் ரெயிலை நிறுத்திவிட முடியாது. ப.சி.யின் கடிதத்துக்குக்கான பவர் இவ்விரு ரயில்களும் விரைவில் சிவகங்கையில் நிற்கும் போது தெரியும்’’ என்றார்.
காடுவெட்டி குரு மீது சமீபத்தில் வழக்கு போடப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதாலும் இந்தக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அதிகமானது. ஆனால், கடைசிவரை காடுவெட்டி குரு வரவே இல்லை.
இப்படி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூரைப் பற்றி காங்கிரஸ் கட்சியினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
இதுபற்றி மாணிக்க தாகூர் எம்.பி.யுடன் பேசினோம்.
குமரி மேற்கு மாவட்டத்தில் இன்றும் கூட காங்கிரசும், கம்யூனிஸ்டுகளுமே கோலோச்சி வருகிற சூழ்நிலையில், வெற்றிக் கனியைப் பறிக்க அமைச்சர் சுரேஷ்ராஜன் தொகுதி மாறுகிறார் என மாவட்ட தி.மு.க.வின் சீனியர்களும் படபடக்கிறார்கள். ஏன்?
இதுபற்றி தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த குளச்சல் எம்.எல்.ஏ., ஜெயபால் மரணமடைந்த பிறகு, மாவட்டத் தலைவர் பதவிக்கு காங்கிரஸின் அனைத்து கோஷ்டிகளும் உச்சகட்ட குடுமிப்பிடி சண்டையில் இறங்கியுள்ளன. இதனால் காங்கிரஸ் சார்பில் அங்கு யார் போட்டியிட்டாலும் எதிர்கோஷ்டிகள் எதிர்த்து வேலை பார்ப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸின் இந்த கோஷ்டிச் சண்டையைப் பயன்படுத்தி குளச்சலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார் சுரேஷ்ராஜன். 
இந்த நிலையில்தான் துணைவேந்தர் காளியப்பன் கடந்த ஞாயிறன்று, ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ தனது மனைவியுடன் சந்தித்ததாக புகைப்படத்துடன் செய்தி வந்தது.
நேருவின் அமைச்சரவையில் பங்குபெற்றவர், காமராஜர் ஆட்சியில் பங்கு-பெற்றிருந்தவர்,பசுமை புரட்சியை முதலில் ஏற்படுத்தியவர், நேருவின் நெருங்கிய நண்பர், என்று பல பெருமைகளுக்கு உரியவர் சி.எஸ்.
ஆனால் இந்த விழாவிலும், பொதுக்-கூட்டத்திலும் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர், கோவை மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ் என்பவர் கோவை வருகை தரும் தங்கபாலுவிற்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரும் மற்றும் ஐந்து காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘எந்தக் கட்சியில் பூசல்கள், கோஷ்டிகள் இல்லை? காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே கோஷ்டிப் பூசல்கள் இருந்து தான் வருகிறது. காமராஜர் முதல்வரான போது, சி.சுப்பிரமணியம் இருந்தால் தான் அமைச்சரவைக்கு அழகு என்று கூறி ராஜாஜி அணியில் இருந்த சி.எஸ். க்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அன்று காமராஜர் கோஷ்டிகளைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. நானும் காங்கிரசில் இந்த கோஷ்டி வளர வேண்டும்... அந்த கோஷ்டி தேய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.
கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம், ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் விரும்பும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மட்டும் இன்றும் தி.மு.க.வின் வாலை பிடித்துக்கொண்டே திரிகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் எந்த தொண்டனையும் தி.மு.க.வினர் மதிப்பதில்லை. ஆட்சியில் பங்கு கேட்டாலும் வாயைத் திறப்பதில்லை. எத்தனை காலம் தான் இவர்கள் பின்னாலேயே செல்வது என்று தெரியவில்லை’ என்றனர்.
ஆனால் தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களில் மது வியாபாரம்தான் பட்ஜெட்டையே நிர்ணயம் செய்கிறது. குறிப்பாக தமிழகத்தில் மதுபானங்கள் தரும் வருட வருவாய் 15,000 கோடி ரூபாயை நெருங்குகிற நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் செய்ய வேண்டும் என உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளனர் காந்தி-யவாதிகள்.
இதில் பங்கேற்ற அகில இந்திய சர்வோதய மண்டல தலைவர் சுகன் பரந்த்ஜியிடம் பேசினோம்.
“எங்களுடைய நோக்கம் பூரணமான மதுவிலக்குதான். மதுவிலக்கு அரசுக்கு வருமான இழப்பு என்று சொல்லப்படுகிறது. இலவசங்களையும், ஆடம்பரச் செலவுகளையும் குறைத்தாலே, பல ஆயிரம் கோடி பணம் மிச்சப்படும். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை, உற்பத்தி வரித்துறை, சேவை வரித்துறையிலுள்ள ஊழல்களை களைந்தாலே, அரசின் வருமானம் கூடும். தமிழகத்தில் மட்டும் மதுவை நிறுத்தினால், பக்கத்து மாநிலங்-களிலிருந்து மது இங்கே வந்து விடும் என்கிறார் தமிழக முதல்வர். நீங்கள் நிறுத்தினால் உங்களை முன் உதாரணமாக கொண்டு அவர்களும் நிறுத்தக் கூடுமல்லவா? 15 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்று சொன்னாலும், 9 ஆயிரம் கோடி வரை மதுவால் மக்களுக்கு இழப்பு என்றும் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.
எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிமையையும், அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என்று புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதை அடையாளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கூட்டப்படும் சுதந்திர தின பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டாமல், கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். உடனே, இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று சொல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்தனர். இதையடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சரான நமச்சிவாயத்தை முதல்வர் கடிந்துகொள்ள... ஆத்திரம் கொண்ட அமைச்சர் ‘கிராம பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டாத அனைத்து பஞ்சாயத்துகளையும் கலைத்துவிடுவேன்’ என்று அதிரடியாக அறிவித்தார். பஞ்சாயத்துகளைக் கலைப்பதற்கு இவர் யார்?
இது குறித்து உள்ளாட்சி இயக்குநர் பாலசுப்ர-மணியத்திடம் பேசினோம். 
இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்...கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,
அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.
மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்திய நிகழ்வு... தமிழர்களின் நெஞ்சங்களில் மாறாத சோகச்சுவட்டை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பில், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சம்பவம் நடந்து பத்தாண்டுகளை கடந்து விட்டாலும், பஸ்ஸிலேயே கருகிய மூன்று உயிர்களின் ஆன்மாவும் இன்னும் தர்மபுரியிலேயே உலா வருவது போன்ற ஒரு பிரம்மை அந்த பகுதி மக்களுக்கு இருக்கிறது. தீர்ப்புக்கு பின்னர் ஏதோ ஒருவித அமானுஷ்ய அமைதி அந்தப் பகுதியில் நிலவுகிறது.
குடிபோதையில செஞ்சிட்டாங்கன்னு சப்பையா காரணம் சொல்லி, சிலபேரு அ.தி.மு.க.காரங்களுக்காக ஆதரவு தேடப் பார்க்குறாங்க. அதையெல்லாம் ஏத்துக்க முடியாது. உப்புத் திண்ணவங்க யாரா இருந்தாலும் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும். என்னைப் பொறுத்த வரையில், வழக்கம் போல காலம் கடத்தாம உடனே தண்டனையை நிறைவேத்தணும். அப்பத்தான் இனிமேல இந்த மாதிரி தவறுகள் நடக்காது’’ என்றார்.
மகாராஷ்டிர மாநிலம் நொய்டாவுல பல குழந்தைகள கற்பழிச்சு கொன்னு மண்ணுல புதைச்சவனையெல்லாம் ஜாமீனில் விட்டுட்டாங்க. ஆனா, இவங்களுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை கொடுக்கணுமாங்கற கேள்வி எழுந்திருக்கு. இருந்தாலும், தீர்ப்பை நாங்க விமர்சிக்க முடியாது...’’என்றார் ஆதங்கத்தோடும் இயலாமையோடும்.
‘‘விரோதியா இருந்தாக் கூட உதவின்னு வந்துட்டா, தலையை அடமானம் வெச்சாவது உதவி செஞ்சுடுவாரு ரவீந்திரன். வம்பு, தும்புக்குப் போக மாட்டாரு. ரவீந்திரனை வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போனாங்க. அவருக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்ட பிறகு, கோயில் திருவிழாவைக்கூட எடுத்துச் செய்ய ஆளில்லாம போயிடுச்சு. இனிமே எல்லாம் கடவுள் விட்ட வழிதான்...’’ என்றார்.
சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காளையார்கோயில் யூனியனில் ஆ.கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர்தான் மல்லிகா கண்ணன். வித்தியாசமான மக்கள் பணி மூலமாக தொகுதிக்குள் நன்கு அறிமுகமாகி இருக்கிறார். 







திருச்சி தீன்நகர் மக்கள் பாதுகாப்பு நலக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் இதுபற்றி நம்மிடம் பேசினார்.
‘‘அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றது நான்தான். 1984&-ம் வருடம் சதுரஅடி ரூ.5 என்ற விலையில் ரூ. 3 ஆயிரத்துக்கு ஒரு பிளாட்டை விற்றேன். இடம் வாங்கிய பலரும் ரூ.100, 200 என்ற அளவிலேயே சிறுக, சிறுக கொடுத்து வாங்கினார்கள். இதனால் அங்கு இடம் வாங்கியவர்கள் அனைவரையும் எனக்கு நன்கு தெரியும். எனவே, யாரிடம் நீங்கள் இடம் வாங்கினீர்கள் என்று மரியம்பிச்சையிடம் கேட்டபோது, ‘நான் யாரிடமோ வாங்கினேன். அது உனக்கு எதுக்கு? தீன்நகர் முழுவதும் என் இடம், விட்டுவிட்டுப் போ’ என்று கோபப்பட்டார்.
தீன்நகரின் நிலை குறித்து வருவாய்த்துறையில் விசாரித்தபோது, ‘‘இந்த இடம் முழுக்க கூட்டுப் பட்டாவாக உள்ளது. தீன்நகர் மக்கள் பாதுகாப்பு நலக்குழும உறுப்பினர்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம். இவர்களுக்கு பட்டா வழங்கும் வேலைகள் நடந்து வருகிறது’’ என்றனர்.
இது தொடர்பாக ரகசியமாக ஒரு குழுவை மதுரைக்கு அனுப்பி விசாரணை அறிக்கையும் பெற்று விட்டார் விஜயகாந்த். இதையடுத்து மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அரவிந்தன் எந்த நேரத்திலும் கழற்றிவிடப்படுவார் என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.
செப்-&15 அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேப்டன் உத்தரவு போட்டார். ஆனால், மதுரையில் ஒரு நிகழ்ச்சி கூட விமரிசையாக நடக்கவில்லை. அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மாவட்டச் செயலாளர் பத்து பேரோடு தான் போனார். போட்டோவுக்கு கூட்டம் காட்ட கார் டிரைவர்களையும் அழைத்து போட்டோ எடுத்தார்கள். 
மீனவர்களில் கணிசமானோர் கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையில், இந்த மாநாடு ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புகள் குறித்து இந்து மக்கள் கட்சியின் பொது தொழிற்சங்க மாநில அமைப்பாளர் திருப்பதியிடம் பேசினோம்.
நம் மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை ராணுவத்தினரை ஐ.நா. சபை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்படவுள்ள சுனாமி வீடுகள் தரமற்றதாக உள்ளது. தமிழகத்தின் மீனவளத்துறை செயல்படாமல் முடங்கிவிட்டது.
இப்படி உத்தரவாதம் இல்லாமல் பணிக்கு அமர்த்தப்-பட்ட இளைஞர்களின் எண்-ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும் என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைக்க, அதுபற்றி மேலும் விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஆனால், அதே பார்முலாவைப் பயன்படுத்தி இப்போதும் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதுதான் வேதனை. ஷாஜஹான், கந்தசாமி, நமசிவாயம் உள்ளிட்ட பல அமைச்சர்களும் இப்படி இளைஞர்களை பணியமர்த்தி-யிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்தத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்ன வேலை கொடுக்கப்படும்? என்கிற எந்த விவரமும் கிடையாது. வருகைப்பதிவும் கிடையாது. கேட்டால், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த நபர் ஒருவரையே ஏரியை தூர்வாரும் மஸ்தூர் பணிக்கு அமர்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்து 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று இருக்கிறார்கள். இதில் ஏதேனும் பிரச்னை என்றால், அதிகாரிகள் தலையை உருட்ட ஆரம்பித்து விடுவார்கள் அமைச்சர்கள். பாவம், இளைஞர்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், பஞ்சாயத்து கூட்ட-மைப்பு தலைவருமான ஜெகனாதனிடம் பேசினோம். “புதுச்சேரி அரசுக்கு என்று எந்த கொள்கை முடிவும் கிடையாது. புதுவையில் 6975 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் உள்ளூர் இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்-படுவதில்லை. அரசாங்கம் முறையாக ஏற்பாடு செய்தாலே, 72 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும். மாறாக, குறுக்கு வழியில் வேலைவாய்ப்பை வழங்கி, முறைகேட்டுக்கும் வழிவகுக்க வேண்டியதில்லை” என்றார்.
ஆம். அப்படியொரு சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகிறது. எங்கு? பீகாரில். அங்கு அடுத்த மாதம் தேர்தல். இதன் முடிவுகள்தான் பல்வேறு அதிர்வுகளையும் ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தப் போகிறது.
பீகார் தேர்தலுக்கு பிறகுதான் வெகு-சீக்கிரத்தில் தமிழ்நாடும், மேற்குவங்கமும் தேர்தலை சந்திக்கப் போகின்றன. இந்த இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் ஜுனியர் பார்ட்னராக உள்ளது. பெரியண்ணன்களாக இருக்கும் தி.மு.க.வையும், திரிணாமுல் காங்கிரஸையும் மீறி இம்மாநில சட்டசபை தேர்தல் பேச்சுவார்த்தையின்போது திமிறி எழலாமா? வேண்டமா? என்பதை பீகார் தேர்தல் முடிந்த பிறகுதான் காங்கிரஸ் முடிவு செய்யப்போகிறது. அந்த வகையில் மத்திய ஆட்சியின் கூட்டணிகளான திரிணாமுலுக்கும் தி.மு.க.வுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல் இது என்பதே உண்மை. இந்த இரு கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான எதிர்கால தேர்தல் உறவை இந்த பீகார் தேர்தலே நிர்ணயிக்கப்போகிறது.
தி.மு.க.வின் 18 எம்.பி.க்-களின் தயவு இல்லையெனில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசின் அச்சாணி கழன்றுவிடும். இந்த ‘18’ தான் இரு கட்சிகளுக்கும் இடையிலான பெவிகால். இதற்கு மாற்று கிடைத்துவிட்டால் தி.மு.க.விடம் இருந்து புட்டுக் கொள்ள காங்கிரஸ் தயாராவது நிச்சயம். அந்த ‘மாற்றாக’ பீகாரில் நிதீஷ் கிடைக்க வாய்ப்புள்ளது.
‘உங்களை விமர்சித்தேன் என்பதற்காக எங்களை வீணர்கள்... வெறிக் கூச்சல் போடுகிறோம்... என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறீர்கள். கலைஞரே உங்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க. என்று சொல்ல வேண்டியதுதானே? ‘காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி? கக்கன்ஜி அண்ணாச்சி கடலை விலை என்னாச்சி?’ என்று நீங்கள் மட்டும் கேட்கலாம். ஆனால், இந்த விஜயகாந்த் கேட்டால் தப்பா? ‘எதையும் தாங்கும் இதயம் உண்டு’ என்று அண்ணா சொன்னார். நான் சொன்ன சொல்லைக்கூட தாங்க முடியாமல் என்னைத் திட்டித் தீர்க்கிறீங்களே, இதற்கு பெயரா எதையும் தாங்கும் இதயம்? அண்ணா இதயத்தை இரவலா கொடுத்ததா சொல்றீங்க, அப்படி கொடுத்திருந்தா... இந்த விஜயகாந்த் சொன்னதுக்கு சரியா பதில் சொல்லியிருப்பீங்க. அண்ணா எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வாரு. ஏன் உங்களுக்கு ஆத்திரம் வருது?
விஜய-காந்த்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் அழகிரி. உங்களையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் மதுரைக்கு வந்தவர்கள். நான் மதுரை மண்ணில் பிறந்தவன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கலைஞரே... உங்களுக்கு இத்தனை பிள்ளைகள், பேரன்கள், இத்தனை உறவினர்கள் என்பதைக் காட்டவா செம்மொழி மாநாட்டில் முதல் வரிசையில் உட்கார வைத்தீர்கள்? எல்லா மந்திரி-களும் வாயில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி, ‘இதுவா சுயமரியாதை?’ என்று என்னைப் பார்த்து மலேசி-யாவில் கேட்கிறார்கள்.










இதற்கு பா.ம.க.வினரின் ரியாக்ஷன் கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரியவந்தது. பொதுக்குழு என்றால் கட்சி நிர்வாகிகள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், இந்த பொதுக் குழுவோ பெரியார் திடலில் பொதுக் கூட்ட ரேஞ்சுக்கு நடந்தது.
இதற்கெல்லாம் அனந்தராமனிடமே விளக்கம் கேட்டோம். 

அரசியல் அரங்கில் ஒவ்வொரு கட்சிகளும் இந்தத் தீர்ப்புக்கு பிறகு புதிதாக நெளிவு சுளிவுகளுடன் ஆட துவங்கிருப்பதுதான் ‘அய்யோ பாவம்’ என உச்சு கொட்ட வைக்கிறது. முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டாலும், அரசியல் எதிர்காலம் கருதி சர்வ ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்கிறது பி.ஜே.பி.
மசூதி இடிக்கப்பட்ட 1992-லும் மத்தியில் ஆண்டது காங்கிரஸ் ஆட்சி. ‘பாகப்பிரிவினை தீர்ப்பு’ வரும் நிகழ்காலமான இப்போதும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் எதையுமே தடுக்க முடியவில்லையே என முஸ்லிம்கள் நினைத்து தங்களை கைகழுவ ஆரம்பித்தால்? அதனால் ‘இப்போது வந்துள்ள தீர்ப்பால், மசூதியை இடித்த குற்றம் நியாயமாகிவிடாது. அது மன்னிக்க முடியாத குற்றம். அதை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்று காரியக் கமிட்டியில் தீர்மானத்தை போட்டுவிட்டு கவலையில் உட்கார்ந்-துள்ளது காங்கிரஸ்.
2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ரொம்பவும் மும்முரமாக இருந்த சமயம். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘வரலாற்றுப் பூர்வமாகவோ அல்லது விஞ்ஞானப் பூர்வமாகவோ ராமர் மற்றும் ராமர் பாலம் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் இல்லை. ராமர் பாலம் என கூறப்படும் அது மனிதனால் கட்டப்பட்ட பாலம் அல்ல; இயற்கையாகவே ஏற்பட்ட மணற்படிமானம் அது என தொல்பொருள் ஆய்வு துறையான ஏ.எஸ்.ஐ. கூறுகிறது’ என்றிருந்தது. இது பெரும் அரசியல் புயலை கிளப்பவே, ஏ.எஸ்.ஐ.யின் இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போகும் அளவுக்கு நிலைமை இருந்தது. கடைசியில் மன்னிப்புக் கோரிய மத்திய அரசு, சுப்ரீம்கோர்ட்டில் வேறொரு புதிய மனுவை தாக்கல் செய்யுமளவுக்கு நிலைமை மாறியது. 
எனது தொடர் முயற்சிகளால், கடந்த செப். 24-ம் தேதி ஒப்பந்தப் புள்ளிகளை மதுரை நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் திறப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அன்று நானும் போனேன். அப்போதும், கண்காணிப்புப் பொறியாளர் நமச்சிவாயமும் கோட்டப் பொறியாளர் மீனாட்சி சுந்தரமும், ‘ஆளுங்-கட்சியைப் பகைச்சுக்காதே... பேசாம ஒப்பந்தப் புள்ளிகளை வாபஸ் வாங்கிடு’ என்று என்னை மிரட்டினார்கள்.
அப்போது திடீரென்று அந்த அலுவலகத்துக்குள் நுழைந்த முது-குளத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ., முருக-வேலின் அண்ணன் மோகன்தாஸ், அவருடைய டிரைவர் மற்றும் சிலர் எடுத்த எடுப்பிலேயே, ‘கொசப் பயலான (குயவர்) உனக்கெல்லாம் கான்ட்ராக்ட் வேணுமாக்கும்?’ எனக் கேட்டு சரமாரியாக என் முகத்தில் குத்த ஆரம்பித்தார்கள். வாசலில் நின்ற போலீஸாரும் பார்த்துக்கொண்டே நின்றதால் உயிர்பிழைத்தால் போதுமென்று ஓடி வந்துவிட்டேன். 
இதில் ராஜா செந்தூர் பாண்டியன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பாப்புலர் முத்தையா அனைவரும் நயினாரின் தீவிர எதிர்ப்பாளார்களாகவே செயல்பட்டு வருகிறார்கள். மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ஒரு காலத்தில் நயினாரின் ஆதரவாளராக இருந்து இப்போது தீவிர எதிர்ப்பாளராக மாறியவர்.
அதே போன்ற கூட்டம் நெல்லையிலும் அக்.2 ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று பேசிய பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னவர், நயினாரின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட, நயினாரின் ஆதரவாளர்கள் மேடையில் ஏறி, நயினார் நாகேந்திரனின் பெயரை ஏன் சொல்லவில்லை? என்று சண்டையிட... ஏக பரபரப்பு. மேடையில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய பாப்புலர் முத்தையா, ‘நயினாரின் பெயரை கடைசியில் சொல்லலாம் என்றிருந்தேன்’ என்று சமாளிக்க, கூட்டம் தொடர்ந்தது.
கழகம் ஒரு குடும்பம். நயினார் நாகேந்தினும் நெல்லை அ.தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர் என்று நினைக்கிறோம். அதனால்தான் நெல்லைக்கு வருகை தந்த விருந்தினர்ளை மட்டும் வரவேற்று ப்ளக்ஸ் போர்டுகளை வைத்திருக்கிறோம். தொடர்ச்சியாக 178 தெருமுனை கூட்டம் நடத்தியுள்ளேன். சிரமத்தில் இருந்த ஒன்றியச் செயலாளர் ஒருவருக்கு டூ வீலர் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துதான் வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் என் மீது சிலர் அவதூறு கிளப்பி வருகிறார்கள். நெல்லை மாநகர பகுதியில் நடைபெறும் பல கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’’ என்று தன் பங்குக்கு புலம்பித் தள்ளினார்.




