எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!
கிரேக்க-எடிஸ்ஸாவும், துருக்கி-எடிஸ்ஸாவும்: கிரீஸில் ஒரு எடிஸ்ஸா மற்றும் துருக்கி / மெசபடோமியாயில் ஒரு எடிஸ்ஸா என்று இரண்டு இடங்கள் உள்ளன. துருக்கி எடிஸ்ஸாவை தாமஸுடன் தொடர்பு படுத்துவதில் எந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவ எழுத்தாளர்கள், எசூபியஸ் என்பவரின் கதையை வைத்துக் கொண்டு ஆர்மீனிய அரசன் அப்கர் உகாமா (5), அட்டை என்பவரால் கிருத்துவராக்கப்பட்டார் என்கின்றனர். ஆனால், கிருத்துவரானது அப்கார் (9) என்று மற்றவர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும் வேடிக்கையென்னவென்றால், கிருத்துவக்கதையின் படி அட்டை, தாமஸின் 72 சீடர்களில் ஒருவராம். ஆனால் உண்மையில் அட்டை அவ்வாறு 72 சீடர்களில் ஒருவரும் இல்லை, தாமஸால் அனுப்பப்படவும் இல்லையாம். மேலும் வேடிக்கையென்னவென்றால், 201ல் இந்த எடிஸ்ஸா நகரமே, பெரிய வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டதாம். ஆனால், 232ல் மைலாப்பூரிலிருந்து, தாமஸின் எலும்புகள் இங்கு எடுத்துவரப்பட்டன என்று கதையளக்கிறார்கள். அதற்குள் ஏற்பட்ட ரோமானிய படையெடுப்பில் நிறையப்பேர்கள் கொல்லப்படுகிறார்களாம். இந்த நிலையில், கிரேக்கத்தில் உள்ள எடிஸ்ஸாவிற்கும் தாமஸுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். இருப்பினும், பாட்மாஸில் தாமஸின் மண்டையோடு இருக்கிறது!
எங்கெங்கு காணினும் தாமஸாடா! கிருத்துவர்களின் தயாரிக்கப் பட்ட கள்ள ஆவணங்களின் மூலம் தெரியவருவது என்னவென்றால், தாமஸ் உலகத்தில் பல இடங்களில் இருந்துள்ளதாகவும், அங்கெல்லாம் ஒவ்வொரு கல்லறை உள்ளதாகவும் கதைகள் புனையப்பட்டுள்ளன. சோகோட்ரா (Socotra), எடிஸ்ஸா (Edessa), சைனா (China), இலங்கை (Ceylon), மலாக்கா (Malacca), ஜப்பான் (Japan), பிரேசில் (Brazil) என்று உலகமுழுவதும் கல்லறைகள், கட்டுக்கதைகள் காணப்படுகின்றன. ஆனால், இவையெல்லாமே, இடைக்காலத்தில் குறிப்பாக 16-19 நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவை ஆகும். 1552ல் தாமஸ் கல்லறை பிரேசில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜான் கிரிஸோஸ்தோம் (St. John Chrysostom) என்ற பாதிரியும் தாமஸ் உலகம் முழுவதும் சுற்றிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதாவது சிரிய மொழியில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்க்கும் சாக்கில், ஒவ்வொரு பிரதியிலும் ஒவ்வோரு இடத்தை / நாட்டை சேர்த்து வந்தனராம். அதாவது எந்த இரண்டு சிரியப் பிரதியிலும், இந்த பட்டியல் ஒன்றாக இல்லை. ஆகவே, மூலப்பிரதி இல்லை எனும் போது, பிரதி, பிரதியின் பிரதி என்று எடுத்துவரும்போது, அவற்றில் இத்தகைய இடைச்செருகல்கள் செய்வது இவர்களுக்கு ஒன்றும் புதியதான விஷயமில்லை.