சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியது, இலவச கலர் டிவி விநியோகம், மின்சாரம் வாங்கியது என பல வழிகளில் ஏராளமான கோடி பணத்தை திமுக அரசு வீணடித்துவிட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) ஒவ்வொரு மாநில அரசின் திட்ட செலவுகளை தணிக்கை செய்து அறிக்கையாக சமர்ப்பிக்கிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான வரவு -செலவு கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது.
அதன் அறிக்கை தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் புதிய தலைமை செயலகத்துக்கான கூம்பு அமைப்பது, இலவச கலர் டி.வி., மின்சார விநியோகம் உள்பட பல திட்டங்களில் பல கோடி வீணடிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.
தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
அரசு செய்த முதலீட்டில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 0.43 சதவிகிதம் வருமானமே கிடைத்துள்ளது. ஆனால் அதே காலக் கட்டத்தில் அரசு வாங்கிய கடன்கள் மீது சராசரியாக 7.97 சதவிகிதம் வட்டி செலுத்தப்பட்டு இருக்கிறது.
மாநிலத்தில் பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதம் செய்யப்பட்டதால் மூலதனம் முடங்கியது. கடந்த 2009-10-ம் ஆண்டில் பல நேர்வுகளில் ஒப்படைக்கப்பட்ட நிதியானது மீதத்தை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது வரவு-செலவு திட்டக்கட்டுப்பாடு அறவே இல்லாத நிலையை காட்டுகிறது.
நிதிநிலை மேலாண்மையில் இது போன்ற குறைபாடுகளை தவிர்க்க வரவு- செலவு திட்டக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமை செயலக கட்டிட விவகாரத்தில் பல கோடி ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக கட்டிட பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டதில் வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. டெண்டர்கள் விட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை வழங்க விண்ணப்பித்தவர்களில் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டு குழுவால் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மனி நிறுவனத்தை இந்த குழு தேர்வு செய்தது. ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிறுவனத்துக்கு மொத்த செலவில் 5 சதவீதம் கட்டணமாக வழங்க ஒப்பந்தம் முடியானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை தாண்டி அதிகமாக தொகை வழங்கப்பட்டுள்ளது.
கூம்புக்காக வீணடிக்கப்பட்ட ரூ 3.28 கோடி
புதிய தலைமை செயலக கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்பே திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்காலிக கூம்பு அமைத்ததில் தேவை இல்லாத வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கூம்பு அமைக்கப்பட்டதில் ரூ.3.28 கோடி வீணடிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூம்பு வடிவ கூரை அமைத்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் கூம்பு அமைக்கப்படவில்லை. இதற்கு எந்தவித டெண்டரும் கோராமல் திறப்பு விழாவுக்காக அவசர அவசரமாக கூம்பு அமைக்கப்பட்டது. இதனால் உண்மையில் அதற்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூ.2.46 கோடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு கட்டிட பணியின் போதும் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பணியை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம், சிலவற்றின் வடிவமைப்பை மாற்றிய விவகாரத்திலும் செலவுகள் அதிகரித்துள்ளன. ஒப்பந்தத்தை மீறி முன்தொகை வழங்கப்பட்ட விவகாரத்தில் கட்டுமானப் பொருள்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டர் சட்ட விரோதமாக ரூ.10.85 லட்சம் நிதி ஆதாயம் அடைந்துள்ளார்.
இப்படி, தலைமை செயலகம் கட்டிய விவகாரத்தில் விதிமீறல்கள் நிதி வீணடிப்புகள் செலவை அதிகரிக்க தேவையற்ற காலதாமதம் போன்ற நேர்மையற்ற செயல்கள் நடைபெற்று இருக்கிறது.
மின் வசதி இல்லாத வீடுகளுக்கு இலவச தொலைக்காட்சி
இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.க. ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரை ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டும் 5 லட்சத்து 45 ஆயி ரத்து 847 டி.வி.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், 11 ஆயிரத்து 354 டி.வி.க்கள் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.க்கள் கொள்முதல் செய்ய ஆன செலவு ரூ.2.71 கோடி. 2010-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டி.வி.க்களின் விபரங்கள் இந்த அறிக்கை தயாரிக்கப்படும் வரை இந்த மாவட்டங்களில் இருந்து கிடைக்கப் பெறவில்லை.
கேபிள் கார்ப்பொரேஷனுக்காக வீணடிக்கப்பட்ட ரூ 28 கோடி
தி.மு.க. ஆட்சியில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ. 28.28 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இந்த திட்டம் எதிர்ப்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று கூறி அதன் நடவடிக்கையை முடக்கியதால் 2010 நவம்பர் வரை அதாவது 3 ஆண்டுகளில் ரூ.8.11 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது அரசு கொண்டிருந்த நோக்கம், பின்னர் செயல்படாமல் போனது. தீவிரமாக செயல்படுத்தாததால் தான் இந்த நிதி இழப்பு ஏற்பட்டது.
நவக்கிரக தலங்களில் ஒன்றான தேவிபட்டிணம் முதல் ராமநாதபுரம் வரையிலான 11.05 கி.மீ. தூர சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, உலக வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்த தமிழக அரசு (தி.மு.க. அரசு) முடிவு செய்தது. இந்த சாலை மேம்பாட்டு திட்டம் ஏப்ரல் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், 2009-ல் தான் முடிக்கப்பட்டது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே இந்த சாலை திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் மாநில அரசு முந்திக் கொண்டு இந்த பணியை தானே எடுத்துச் செய்ததால் ரூ.28 கோடி தமிழக அரசு கொடுக்க வேண்டியதாயிற்று. இது தவிர்க்கப்பட வேண்டிய செலவு ஆகும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்பட்டு இருக்கிறது.
காவல்துறை நவீனமாக்கப்படவில்லை
இதே போல் தமிழக காவல் துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.191.56 கோடி செலவழிக்கப்படவில்லை. தேவைக்கு ஏற்றவாறு, ஆண்டு செயலாக்க திட்டங்கள் தயார்படுத்தப்படவில்லை. 2006-2009-ம் ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.2.52 கோடி மதிப்பிலான கருவிகள் ஆண்டு செயலாக்க திட்டத்தில் இருந்து மாறுபட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒப்பளிக்காமை, பணிகள் மற்றும் பணிகளை செயல் படுத்துவதில் தாமதம் ஆகியவை காரணமாக காவல் படையை நவீனமயமாக்கல் திட்டத்தில் தேவைக்கு குறைவாகவே நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
New Delhi: Inflation and food prices are unlikely to affect their monthly household budget.At least 77% of the Union council of ministers are crorepatis,whose average asset value is pegged at Rs 10.3 crore Rs 3 crore higher than their declaration two years ago. Heavy industry minister Praful Patel (assets worth Rs 122 crore) tops the rich list,followed by minister of state for information and broadcasting S Jagathrakshakan (Rs 70 crore) and urban development minister Kamal Nath (Rs 41 crore). The data,analyzed by the Association for Democratic Reforms (ADR),shows that the highest asset increase has been for the DMKs Jagathrakshakan,whose worth shows a rise of Rs 64.5 crore in only two years (from Rs 5.9 crore in 2009 to Rs 70 crore in 2011).Patel is second in line,with an increase of Rs 42 crore (from Rs 79.8 crore in 2009 to Rs 122 crores in 2011),followed by Kamal Nath,whose assets rose by Rs 26 crore (from Rs 14 crore in 2009 to Rs 41 crore in 2011). Jagathrakshakan also tops the list for highest asset increase percentage wise.His assets have shot up by 1,092%.Congresss MoS for textiles Panabaka Lakshmi is in the second spot,with a growth of 828% while MoS (road transport and highways) Tusharbhai Chaudhary recorded 705% growth. As many as 15 ministers have shown a dip in assets as compared to their declared wealth in 2009.Agatha Sangma,Prateek P Patil,Virbhadra Singh,R P N Singh,D Napoleon,Vincent Pala,Jitin Prasada,M Veerappa Moily,P Chidambaram,S Jaipal Reddy,Farooq Abdullah,Preneet Kaur,Jairam Ramesh,S M Krishna and G K Vasan are part of the diminishing assets club. ADRs Anil Bairwal said vital information like income tax returns and present market value of assets was missing in most of the declarations.While it is laudable that the PMO is trying to set a meaningful precedence towards greater transparency,we recommend that declarations be made with all the details that are expected in the affidavits outlined by the Election Commission of India so that crucial information can be disclosed in public interest, he said.
RICH & RISING
Jagathrakshakan | DMK MoS for Information and Broadcasting Assets: 5.9cr in 2009 70cr in 2011
Praful Patel | NCP Heavy industry Assets: 79.8cr | 2009 122cr | 2011
Kamal Nath | CONG Urban development Assets: 14cr | 2009 41cr | 2011
வாசகர்கள் மன்னிக்கவேண்டும். நான் என் பேரையும் சொல்லமுடியாது. நான் கிளினிக் வைத்திருந்த ஊரையும் சொல்லமுடியாது. காரணம் அந்த ஊரில் என் பேரும், என் பேரில் அந்த ஊரும் பிணைந்து கிடக்கிறது. எனக்கும், அரசியலுக்கும் ஆரம்பத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. எனது குடும்பமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான். ஆனாலும் விதி என்னை அரசியல் ஆற்றில் இழுத்துக்கொண்டு விட்டது. அதிலும் ஆட்சியாளரின் நிழலாகவே என்னை அமர வைத்துவிட்டது.
இதற்கு என்ன தகுதி என்றால் சிறப்பாக எதுவுமில்லை என்பதுதான் பதில். நாட்டை ஆண்ட முக்கிய நபரின் வீடு இருந்த என் பெயர்புரத்தில்தான் நான் கிளினிக் வை த்திருந்தேன். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரச்னை மூலம் அவரைச் சந்தித்து மருத்துவ உதவியும், அறிவுரையும் வழங்கவேண்டிய வாய்ப்பு எனக்கு ஏற்ப ட்டது. அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். பாறாங்கல்லில் போடப்பட்ட பைல் ஃபவுன்டேஷனாக அந்த முக்கியப் புள்ளியை நான் பிடித் துக்கொண்டேன். அதன்பிறகு அவ்வப்போது வைத்தியத்திற்காக என்னை அழைத்தவர்கள், அவரின் உடல்நிலை கருதி என்னை தொடர்ந்து அருகில் இருக்கும்படி கூறிவிடவே, அதுவே எனக்கு முழுநேர வேலையாகிவிட்டது. ஒருவருக்கு அருகிலிருந்து மருத்துவம் செய்வது தொழில் தர்மப்படி மிகவும் நல்ல விஷயம்தான். ஆனால், அவரை முழுமையாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது கெட்ட விஷயம். நான் கெட்ட விஷயத்தைத்தான் அதிகமாக செய்தேன். காரணம், நான் என் மருத் துவத் தொழிலில் சிறப்பாக எதையும் படித்துவிடவில்லை. பயிற்சியிலும் பெரிய அளவில் பெயர் எடுத்துவிடவில்லை. எனவே எனக்கு தொழில்ரீதியான வருமானம் என்பது அவ்வளவாக இல்லை. அதே நேரத்தில் எனக்கு தொழில்ரீதியாக ஏற்பட்டுவந்த முக்கிய புள்ளியின் தொடர்பை வருமானமாக்கிக்கொண்டேன்.
பல நேரங்களில் அவரின் உறவினர்கள்கூட என்னிடம் அனுமதி பெற்றபிறகே அவரைச் சந்திக்கின்ற சூழ்நிலை உருவாகிவிடும். அவரின் உடல்நிலை அப்படி இருக்கும். இதையெல்லாம் என் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் நினைத்துக்கொண்டு அதை அதிகாரமாக மாற்றிக்கொண்டேன். ஏற்கெனவே நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரைச் சந்தித்தபிறகே என் வாழ்க்கை வளர்ச்சியடையத் தொடங்கியது. பெரியவரைச் சந்திக்க வருபவர்களைப் போல உணர்வாலும், செயலாலும் நானும் ஒரு அரசியல்வாதியாகவே உருமாறத் தொடங்கினேன். அவர்கள் வெள்ளைச் சட்டையில் இருப்பார்கள். நானும் வெள்ளைக்கோட்டைப் போட்டுக்கொண்டிருப்பேன். அவர்கள் கழுத்தில் துண்டு இருக்கும். என் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் இருக்கும். வித்தியாசம் இவ்வளவுதான்.
இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி நான் அடைந்த பயன்களுக்கு அளவே இல்லை. நந்தனத்திற்கு அருகில் இருந்த கோபுரப் பகுதியில் எனக்காக இடத்தை வாங்கி, வீட் டையும் கட்டிக் கொடுத்தார். இங்கு ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ‘கிரி’ திரைப்படத்தில் வடிவேலு அர்ஜுனிடம் ‘‘எங்கக்கா சூப்பர் ஃபிகரு’’ என்று கூற ‘‘அக்காவ சூப்பர் ஃபிகருன்னு சொன்ன முதல் ஆள் நீதாண்டா’’ என்று கூறி காறித் துப்புவார். அப்படி யாரும் என்மீது எச்சில் துப்பிவிடாதீர்கள். என் துணை மிக வும் அழகாக இருப்பார். சினிமா நடிகைகளும் தோற்கும் அழகும், வாளிப்பும் உடையவர். மேக்கப் இல்லாமல் வெளியில் வரமாட்டார். என்மீது பார்வையைப் பதித்த அரசியல் புள்ளிகள் என் துணைவியின் பக்கமும் திருப்பிவிட்டனர். இதனால் வீட்டில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. வேறு வழியின்றி ஒருகட்டத்தில் நாங்கள் பிரிந்துவி ட்டோம். கொஞ்ச நாட்களில் நானும் மறுமணம் செய்துகொள்ள, அவரும் வேறொரு துணையின் கரம் பிடித்துக்கொண்டார்.
அரசியல் வட்டாரத்திலும் சரி, டாக்டர்கள் வட்டாரத்திலும் சரி சபலப் பேர்வழி என்றே என்னைக் குறிப்பிடுவார்கள். என் பெயரின் புரத்தில் நான் வைத்திருந்த கிளினிக்கில் பெருக்குவதற்கு வந்த பெண்கள் முதல், சுத்தம் செய்ய வந்த ஆயா வரை ஒருவரையும் நான் விட்டு வைத்ததில்லை. நான் பெரிய வைத்தியன் இல்லை என்பதால் என் னைத் தேடிவரும் நோயாளிகள் குறைவுதான். அப்படி எப்போதாவது வரும் நோயாளிகளிலும் பெண்கள் யாராவது வந்துவிட்டால் முதலில் என் பார்வை ஊசிகளால் அவர்களைப் பதம் பார்த்துவிடுவேன். அவர்களுக்கு கால் விரலில் பட்ட காயத்திற்காக என்னிடம் வந்தாலும் என் கை விரல்கள் அவர்களின் முந்தானைப் பக்கம் நோக்கியே முன்னேறும். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதிக்கும்போது என் நாடித்துடிப்பே அதிகரித்துவிடும். மூச்சை இழுத்து அவர்களை விடச் சொல்லும்போது எனக்கே அதிகமாக மூச்சிரைக்கும். என் வைத்திய வேலைகளில் பலரை நான் கரெக்ட் செய்ததுண்டு. சிலரிடம் அசிங்கப்பட்டதுமுண்டு. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவேன்.
அந்த முக்கிய இடத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட நட்சத்திரப் பெயர் பாடும் மல்லிகை. அவர் என்னிடமும் சகஜமாக இருப்பார். ஒருமுறை அவரிடம் என் சபலப்புத்தி வெளிப்பட்டுவிட ‘பளார்’ என்று கன்னத்தைச் சுட்டுக்கொண்டேன்.
எனது இந்த போக்கிரித்தனத்தால் தொழிலில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. கிளினிக்கை பராமரிக்கவும் ஆட்கள் வர அச்சப்பட்டார்கள். எனவே அதை மு ழுவதுமாக மூடவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பின்னர் முழுநேர வியாபாரியாக அரசியலில் களம் இறங்கினேன்.
ஒவ்வொரு பகுதியிலும் எனக்கு வேண்டியவர்கள் மூலம் வேலைகளை எடுத்து அதை முடித்துக் கொடுத்தேன். இதற்காக புரோக்கர்கள் போல சுமார் ஏழெட்டுப் பேர் எனக்காக செயல்பட்டு வந்தார்கள். வந்த வருமானத்தில் ஒரு பகுதியை இந்த ஏஜெண்ட்டுகளுக்காக ஒதுக்கிக் கொடுத்தேன். அதில் திண்டுக்கல், நதியூரில் உள்ள தொலைக்காட்சி கேசமுருகன் மற்றும் அவரின் வாரிசுதான் தலைமை ஏஜெண்ட்டுகள்.
நான் எந்த வேலையைக் கொண்டு வந்தாலும் முடித்துக்கொடுக்கும்படி பெரியவரே உத்தரவிட்டிருந்ததால் என் காரியங்கள் எல்லாம் கஷ்டப்படாமல் நடந்து முடிந்தது. அதே நேரத்தில் சில நில விவகாரங்களும் என்மீது விழுந்திருக்கின்றன. அதாவது தென்சென்னையில் கடற்கரை நகரில் எனக்கு அரசு அலாட்மெண்டில் கிடைத்த ஒரு இடம். அதை முதலில் ஒருவருக்கு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, அக்ரிமெண்ட் போட்டு, அடுத்து ஒருவருக்கு விற்க முடிவு செய்து, பணம் வாங்கிக்கொண்டு, அதன்பிறகு அதிக விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டேன். இதனால், அந்த லேண்ட் செட்டில்மெண்டில் ஏற்பட்ட சிக்கல் இன்னமும் முடிந்தபாடில்லை. அதேபோல் நொளம்பூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இரண்டு அலாட்மெண்டுகளை வாங்கி வைத்திருக்கிறேன்.
இது அரசாங்கத்திலிருந்து கிடைத்தவை என்றாலும் நான் சேர்த்திருக்கும் சொத்திற்கு கணக்கே இல்லை. அண்மையில் நடந்த எனது வாரிசின் திருமணத்தை பிரமாண் டமாக நடத்தியதுடன், பாதிக்கும் மேற்பட்ட சொத்துக்களை அவரின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டேன்.
கடந்த ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு விவகாரங்களில் அரசியல் புள்ளிகள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. காரணம் நான் அவ்வளவாக வெளிச்சத்தில் வந்ததில்லை. என் பெயர் அவ்வளவாக அடிபட்டதுமில்லை. இருந்தாலும் இரண்டொரு நிலப் பஞ்சாயத்துகள் இன்னும் முடியாமல் இருப்பதால் ஏதாவது சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன்.
ஆனாலும் பள்ளித் தோழர்களுக்காகவும், கல்லூரி நண்பர்களின் ஆதாயத்துக்காகவும் எத்தனையோ அப்பாவிகளை அல்லாட வைத்திருக்கும் எனக்கு ஆண்டவன் எந்த வழியில் கூலி கொடுப்பான் என்பதுதான் தெரியவில்லை.
சாதாரண கான்ஸ்டபிளாகச் சேர்ந்து கண்காணிப்புத் துணையாக அதிரடி வளர்ச்சி கண்டவர். இவருடன் சேர்ந்தவர்களில் பலர் இன்னும் எஸ்.ஐ. பதவியைக் கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. இவரின் கடைக்கண் பார்வை பட்டால்தான் காவல்துறை உயரதிகாரிகளும் சரி, கட்சியினரும் சரி தலைமையிடம் தங்களின் முகம் காட்ட முடியும். அவ்வளவு உச்சத்திலிருந்தவர் இப்போது சற்றே ஓய்விலிருக்கிறார். ஆனாலும் இவரைப் பற்றி ஏற்கெனவே வாய்மொழியாகக் கூறப்பட்ட புகார்கள் பலவும் இப்போது வழக்காக தயாராகி வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அவரின் மனசாட்சியுடன் பேசினோம். அவரின் வாக்குமூலம்:
தஞ்சை வளநாடு சோறுடைத்து என்பார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் பஞ்சம்தான் வந்து தஞ்சமடைந்திருந்தது. வறுமையின் பிடியில் படிப்பைத் தொடர முடியவில் லை. ஆனாலும் என் வாட்டசாட்டமான உடல் காக்கிச் சட்டையை போட்டுக் கொள்ள எனக்குக் கைகொடுத்தது. எண்பத்துநான்கில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன்; ட்ரெயினிங் முடிந்ததும் ஆயுதப்படையில் போட்டு கமிஷனர் அலுவலகத்தில்தான் பணியாற்றச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அதிகாரிகளின் அறையில் மண்பானை இருக்கும். அதில் தண்ணீர் தூக்கி வந்து நிரப்ப வேண்டும். இதான் எனது ஆரம்பகாலப் பணி. எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்வதுதான் என் பிளஸ் பாயிண்ட். எல்லா அதிகாரிகளிடமும் பணிவாக நடந்து கொள்வேன். எண்பத்தொன்பதில் அரியாசனத்தின் மீது கதிரொளி விழுந்தது. அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை. ஆட்சித் தலைமைக்கு காவல்துறையிலிருந்து பாதுகாப்புப் பணிக்கு ஆட்களை அனுப்புவார்கள். நான் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொண்டவிதம் பலருக்கும் பிடித்திருந்ததால் அந்தத் திருப்பணிக்கு எனது பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. விவரம் அறியாத வேலைக்காரனாக நான் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். அதன்பிறகு ஏறக்குறைய இருப த்திரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். அந்த வீட்டிலிருப்பவர்கள் எல்லாரையும்விட, அவரின் வாரிசுகளைவிடவும் தலைமையின் நெருக்கம் எனக்குத்தான் அதிகம். எனது பணிவும், வேலைகளை சலிக்காமல் செய்யும் அணுகு முறையும் தலைமையைக் கவர்ந்துவிட்டது. அதையே முதலீடாக வைத்து நான் அவரின் வளர்ப்பு மகனாக உருவெடுத்துவிட்டேன்.
அடுத்து 91-ல் ஆட்சி மாற்றம் வந்த பிறகும் முக்கிய தலைவர் என்பதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆட்கள் அப்படியே, அதே பணியில் தொடர அனுமதிக்கப்பட்டனர். அதில் எனது நெருக்கம் கொஞ்சம் அதிகமானது. அடுத்து 96-ல் மீண்டும் கதிரொளி கைவிரிக்க, நான் கொஞ்சம் முக்கிய புள்ளியாக உருவெடுத்தேன். முக்கியமானவரின் பாதுகாப்பு அதிகாரியாக வந்த பின்னர் உளவுக்கும், எனக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. எனக்கு இரண்டு நட்சத்திரங்கள் வழங்கப்பட்டது. எனவே எனக்கு உதவியாளராக விநோதமானவரையும், விநாயகரையும் கொண்டுவந்து விட்டார் பழைய உளவு. அடுத்துவந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தலைமைக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் எனது முக்கியத்துவம் அதிகமாகிப்போனது. உளவும் செங்கல்பட்டு பக்கம் பிழைப்பைப் பார்க்க போய்விட, எனது பவர் அதிகரித்து விட்டது. நான் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கு சாரதியாக இருந்த பெல்லைப் பார்த்தாலே எனக்கு பொறாமையாக இருக்கும். பவர்ஃபுல் ஜாம்பவானாக இருந்தார் அவர். நான் அவரிடம் போகும்போதெல்லாம் வெளியே போடா என்று விரட்டிவிடுவார். தலைமைச் செயலகத்தில், முக்கிய புள்ளியின் காரின் அருகில் நின் றுகொண்டே, தலைமை வருவதற்கு ஐந்து நிமிடம் வரை சிகரெட் பிடிக்கும் அளவிற்கு தைரியமானவர். அவருக்குப் பிறகு நான் அந்த இடத்தை கெட்டியாகப் பிடித் துக்கொண்டேன். ஆரம்பத்தில் எழும்பூர் குடியிருப்பில் சின்னவீடு. அப்போதெல்லாம் பஜாஜ் செட்டாக் ஸ்கூட்டர்தான் என் வாகனம். பின்னர் ஹீரோவாக உருவெடுக்கத் தொடங்கியதும் ஹீரோ ஹோண்டா பைக் வந்தது. பின்னர் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. என பதவி உயர்வு கிடைத்ததும் அம்பாஸிடர் கார் கொடுக்கப்பட்டது. நான் தலைமைக்கு எதிரிலும், மற்றவர்கள் எதிரிலும் பணமோ, வசதியோ இருப்பதாகக் காட்டிக்கொள்ள மாட்டேன். அவர் வீட்டில் ஓய்விலிருக்கும் நேரங்களில் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு கிழிந்த பனியனுடன் தோட்ட வேலைகளை கவனிப்பேன். இதெல்லாம் எனது எளிமையின் வெளிப்பாடுகளாக அவர் நம்பினார். ஆனால் நானோ மதுரை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிக் குவித்திருப்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. என் பிஸினஸ்களுக்கெல்லாம் பழைய ஹீரோவின் பெயர் கொண்ட என் அண்ணன் மகனை பொறுப்பாளராகப் போட்டு வைத்துள்ளேன். எல்லாவிதமான சொகுசு கார்களில் ஏழெட்டு ரகங்கள் அவன் வீட்டில் அணிவகுத்து நிற்கும்.
கடந்த 2006-ல் மீண்டும் சூரியஒளி கோட்டை மீது விழுந்தது. அப்போது அனைத்து காக்கிகளும் முக்கியபுள்ளியின் வீட்டைத் தேடி வரத் தொடங்கினர். அந்நேரத்தில் முக்கியபுள்ளி போட்ட முதல் கையெழுத்தே தேசத் தந்தையின் பெயர் கொண்டவரை உளவுக்காக நியமித்ததுதான். காரணம், தேசத் தந்தையைத் தேர்வு செய்தது நான்தான் என்று அனைவருக்கும் தெரியும். அவரை மூன்று மாதத்தில் கழற்றிவிட, ஒரிஜினல் உளவு உள்ளே வந்தார். உளவைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்த அவ ரும், நானும் ஏற்கெனவே நெருக்கம் என்பதால் எங்களின் கூட்டணி பிரச்னை இல்லாமல் தொடர்ந்தது. அதிலும் நானே தலைமைக்கு நெருக்கமான இடத்தில் இருந்ததால் பல முக்கிய பிரச்னைகளை என் மூலமாகவே காய் நகர்த்தினார் உளவு.
எனவே எவ்வளவு உயர் பதவியில் உள்ள அதிகாரியானாலும் எனது மயிலாப்பூர் வீட்டிற்கு வந்தாக வேண்டும் என்ற நிலை. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் என் கட்டுப்பாட்டில் இயங்கியது. காவல்துறையில் உண்மையானவர்கள்,ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள் என்ற வாசகங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. வேண் டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வார்த்தைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிலும் எனக்கும், உளவுக்கும் வேண்டியவர்களால் மட்டுமே காவல்துறையில் குப்பை கொட்ட முடியும் என்ற நிலை.
அதேபோல் சுழல்விளக்குகளும் கூட என் மூலமாகவே தலைமையை அணுகமுடியும். அவர்களைப் பற்றியும் என்னிடமும், உளவிடமும்தான் அதிகமாக கருத்துக் கேட் கப்படும். என்னோடு வந்த இரண்டு உதவியாளர்களையும்கூட எனது நிழல்களாக கையிலேயே வைத்துக்கொள்வேன். அவர்களுக்கும் வேண்டிய வேலைகளைச் செய்து கொடுப்பேன். எனக்கு வேண்டியவர்கள் எங்களை ரொம்பவும் பெருமையாகப் பேசுவார்கள். வேண்டாதவர்களோ நாங்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதால் ‘ட்ராலி பாய்ஸ்’ என்று கிண்டலடிப்பார்கள். நானோ எனது உதவியாளர்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எங்களின் ஒரே குறி பணம்தான். அதிகாரத்தில் இ ருக்கும்போதே ஒரு அமைச்சருக்கு சமமாக செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான். காரணம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பங்களுக்காக உழைத்தி ருக்கிறேன். துணையின் வாரிசை நான் சின்ன வயசிலிருந்தே எடுத்து வளர்த்தேன். அவர்மீது எனக்கு அதிக அளவில் பாசம் உண்டு. அதே நேரத்தில் இரண்டு கு டும்பங்களுக்குமே நான் வேண்டியவன்தான்.
அந்த ஐந்து வருடத்தில் நான் நினைத்ததெல்லாம் நடந்தது. எதுவேண்டுமோ அதை என்னால் அடைய முடிந்தது. வாரிசுகளால் முடியாதவைகூட என்னால் முடிக்க முடியும் என்ற நிலை. எனவே கட்டப்பஞ்சாயத்துகள், அதிரடி, அடிதடி என களம் இறங்கினேன்.
முருகசாமியின் பெயர் கொண்டவரிடம், மணல் குவாரி எடுத்து என்னிடம் கொடுக்கக் கூறினார் முக்கியபுள்ளி. என் விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு அது. அதை எடுத்து நடத்த ஆள் கேட்டு துணையிடம் போனேன். அரசருக்கு அப்பாவிடம் அவர் கொடுக்கச் சொன்னார். மாதம் மூன்று கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். அவரோ கள்ளக்கணக்கு எழுதத் தொடங்கினார். எனவே ஒரு வருடத்தில் அவரைத் தூக்கிவிட்டு புலித்தலைவரின் பெயர் கொண்டவருக்குக் கொடுத்தேன். அதில் எனக்கும் துணைக் குடும்பத்திற்கும் இடையே லேசான உரசல் ஏற்பட்டது. அந்த புலித் தலைவரின் பெயர் கொண்டவரோ பேரனை வைத்துப் படம் எ டுக்கப்போய்விட்டார். இதனால் பல்வேறு குழப்பங்கள் உருவானது.
இதற்கிடையில் மாறன் நெடு என்பவர் பலான தொழிலை பக்குவமாகச் செய்து வந்தவர். சூரிய ஒளியில் அவ்வப்போது குளிர் காய்ந்துகொள்வார். வக்ஃப்போர்டு நிலத்தை சுருட்டிவிட்டார் அவர். அந்த வழக்கு நடந்துகொண்டிருக்க, அதே இடத்தை பதினொரு கோடிக்கு மார்வாடி பில்டர்ஸுக்கு விற்றுவிட்டார். அதில் பிரச்னை ஏற்பட, பஞ் சாயத்து என்னிடம் வந்தது. நான் சீட்டிங் பார்ட்டியான நெடுவுக்கு சாதகமாகப் பேசப் போனேன். பதினொரு கோடியை மிரட்டிப் பேசி இரண்டு கோடி மட்டுமே கொடுத்து அனுப்பிவிட்டேன். இதில் எனக்கு இரண்டு கோடி கட்டிங்.
ஏற்கெனவே பூனைக் கண் விஷயம் உட்பட எதிர்க்கட்சியின் ஆட்சியல் இந்த நெடு மூன்றுமுறை கைது செய்யப்பட்டவர். ஆனாலும், இப்போது கூட்டத்தோடு தோட்டம் சென்று எடுத்த போட்டோவை வைத்து தப்பித்துக்கொள்ள கணக்குப் போட்டுள்ளார் என்பதெல்லாம் தனிக்கதை.
அதேபோல் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து திடீரென முளைத்த சூரிய நட்சத்திரம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. அதுபோகும் வழியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு நிலப் பஞ்சாயத்து. அதில் நானும், அவரும் நேருக்குநேர் மோதினோம். வாடா, போடா என பேசவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் வழக்கம்போல் அடிமாட்டு விலைக்கு பிரச்னையை முடித்தேன். பல கோடிகள் கட்டிங்காக கிடைத்தது. ஆனாலும், அந்த சூரிய நட்சத்திரத்தை பல்வேறு விதத்தில் போட்டுக் கொடுத்து டம்மியாக்கிவிட்டேன்.
அதேபோல் ஏ.சி.யில் கூட்டு சேர்ந்து ஃபைனான்ஸ் கொடுத்தேன். சொத்துக்களை எழுதி வாங்கும் வேலை அவருக்கு. அந்தச் சொத்தைப் பிடுங்கிவரும் வேலை எனக்கு.
இப்படி எல்லா விதத்திலும் வெற்றிக்கூட்டணி அமைத்திருந்த எனக்கு இப்போது குழப்பமான சூழ்நிலைதான். காரணம் என்மீது யாராவது ஒருவர் புகார் கொடுத்தால் போதும், சர்...சர்ரென்று புகார்கள் பறந்துவரும். எனவே சமுதாயத்துப் பெயரைச் சொல்லி தோட்டத்துக்கும் மறைமுகமாக தூது அனுப்பியுள்ளேன். அதேபோல் எங்கள் ஆட்சியில் எனது கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் பலர் இப்போதும் பவரில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் எனக்கு விசுவாசமாக இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
ஆனாலும் ஹவுசிங் போர்டில் நான் வாங்கிய இடம் சட்டவிரோதமானது என்று சிலர் பேசி வருகின்றனர். காரணம், ஏற்கெனவே ஒரு சார்ஜ் மெமோ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது முடிக்கப்பட்டாலும் அப்பழுக்கற்ற அதிகாரியாக என்னைக் கருதமுடியாது. அதுபோன்ற அதிகாரிகளுக்கே அலாட்மெண்ட்டெல்லாம் தரமுடியும் என்பதால் எங்கிருந்து நடவடிக்கை எப்படி வரும் என்று தெரியவில்லை. எனவே, பயம் என்னை வாட்டுகிறது. அடுத்து ஆட்சி வந்தால் கண்காணிப்பாகிவிட வேண்டும் என்பதுதான் என் கனவு. அந்தக் கனவு நிறைவேறுமா என்பதுதான் தெரியவில்லை.
Says Utility Failed To Add Capacity As Per Requirement,5 Projects Missed Deadline
TIMES NEWS NETWORK
Chennai: The Comptroller and Auditor General of India has pulled up the Tamil Nadu Electricity Board for gross mismanagement,resulting in losses running into several hundred crores. The audit report for 2009-2010,which was tabled in the assembly on Wednesday,pointed out that as against a required capacity addition of 3,977MW between 2005 and 2010,the state added a meagre 290MW.Five projects missed their time schedule during the period owing to improper project management.It resulted in a cost overrun of Rs 392.37 crore. Projects that failed to meet the deadlines include Bhavani Kattalai barrages II and III,which missed the target due to delay in award of work and delay in execution.The upgradation of Sholayar and Periyar power houses,which were included in the National Electricity Plan for completion in 2008-2009,were not included in the state plan and were not taken up for implementation. Out of the 16 hydro-power stations that had completed the normative life of 35 years,only two projects were taken up for a life extension programme.Others were not touched citing shortage of funds and the need to maintain grid discipline as reasons. Between 2005 and 2010,the board was able to generate only 34% to 45% of the average power demand.It was the least in 2009-2010.The performance was still worseat 26% to 35%when rated against the peak power demand during the same period. Speaking volumes about the mismanagement in the Tamil Nadu Electricity Board,the CAG report said the board became ineligible for Rs 133.26 crore duty exemption because of its decision to award works worth Rs 2,175 crore on nomination basis. The board suffered a loss of generation of 812 million units between 2008 and 2010 owing to short receipt of coal.Deficiencies in handling of coal at North Chennai Thermal Power Station (NCTPS) and Tuticorin Thermal Power Station (TTPS) resulted in an extra expenditure of Rs 20.58 crore.A comparison of rates for purchase of imported coal between TNEB and other state public sector undertakings show that the board spent Rs 338 crore in excess between 2008 and 2010. The TTPS caused additional expenditure of Rs 1,103 crore by consuming 45.25 lakh metric tonnes of coal in excess of the norms prescribed by the Tamil Nadu Electricity Regulatory Commission.Similarly,excessive manpower in thermal and gas stations caused losses to the tune of Rs 280 crore. The boards dependency on borrowings increased from Rs 9,583 crore in 2005-2006 to Rs 32,039 crore in 2009-2010. The report lists out seven recommendations taking up capacity additions to meet the demand,avoiding project delays,providing adequate coal,improving coal handling systems and minimizing forced outages to improve the functioning of the board.
POWER LOSS
Between 2005 and 2010,against a required capacity addition of 3,977MW,only 290 MW was added Out of 16 hydro-power stations which had completed their life of 35 years,only two were taken up for life extension programme The board suffered a loss of generation of 812 million units between 2008 and 2010 owing to shortage of coal
கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்கும் சமரச சமாதான படலம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும் கருணாநிதிக்கு... பற்றாக்குறைக்கு நில அபகரிப்பு கைதுகள்., குண்டர் கைதுகள், பொதுக்கூட்டங்கள் என கழக அரசியல் நடத்தவும் இடையில் நேரம் இருக்கிறது.
இதற்கும் இடையே, ’கள்ள’ கவிதை எழுதவும் கருணாநிதிக்கும் நேரம் இருக்கிறது என்பதை அவ்வப்போது முரசொலி நிரூபித்துவருகிறது.
ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை முரசொலியில்... ‘விரைவில் நாள் குறிக்கப்படும்’ என்ற வீராப்புத் தலைப்புடன் மு.க. ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
அந்த கவிதை இதுதான்...
‘‘கற்கண்டுத் தமிழ்க் கவிதைகள் கசக்குதென
அவற்றின் மீது கரிபூசி மறைக்கும்
கர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி
கொடுத்தது போல் வந்தது தீர்ப்பு!
தமிழர்களின் தொடர்ந்துவரும் தூய
வரலாற்றை
தடுத்து நிறுத்தலாம் என்ற
தீய எண்ணத்தோடு
பக்கங்களைக் கிழிக்கும் பாவிகளே!
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல்
வந்துள்ள நெருப்புத் தீர்ப்பை
பஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம்
என்று
பகற்கனவு காணாதீர்...’’ --
என்று
தொடரும் இந்த மு.க. கவிதை....
‘‘இன்று எமக்கு கிடைத்த வெற்றி....
மறைக்கப் பார்க்கும் திறமையினால்
அழிவதில்லை...
இளையை தலைமுறையினர் எக்காள
முழக்கமிடுமோம்
எல்லாரும் வாருங்கள் என்று அழைக்கின்ற
தன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்...
விரைவில் நாள் குறிக்கப்படும்
விரிவுரையாற்றுவோர் பெயர்களும்
அறிவிக்கப்படும்....’’
என்று தன் எழுத்தால் எக்காள ஏலமிட்டிருக்கிறார் கருணாநிதி.
இந்த கவிதை வரிகளில் இரண்டு வரலாற்றுப் பொய்களை வசதியாக எழுதி முழு பூசணிக்காயை தன் மொழியில் மறைத்திருக்கிறார் கருணாநிதி.
மறைக்கப்பட்ட பூசணி 1 :
‘‘தீய எண்ணத்தோடு பக்கங்களைக்
கிழிக்கும் பாவிகளே...
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல
வந்த நெருப்புத் தீர்ப்பு.....’’
என்பது கருணாநிதி எழுதிய முதல் பொய்!
தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ள கருணாநிதி, கனிமொழி ஆகியோரின் சுயபுராணத்தைக் கண்டித்ததோடு அவற்றை நீக்குவதற்கும் புதிய் அரசுக்கு தடை இல்லை என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதாவது இந்த விஷயத்தில் கருணாநிதியின் கன்னத்தில்தான் பளார் பளார் என அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் மிஸ்ரா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அளித்துள்ள அந்தத் தீர்ப்பில் கருணாநிதியின் இடைச் செருகல்கள் பற்றி குறிப்பிடும்போது...
‘‘சமச்சீர் கல்வி தொடர்பான பாடப் புத்தகங்களில் முந்தைய ஆளுங்கட்சித் தலைவர் (கருணாநிதி) பற்றிய தனிநபர் துதி இடம் பெற்றுள்ளது. தற்புகழ்ச்சி மற்றும் சுயவிளம்பரமும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. முந்தைய ஆளுங்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளும் பாடப்புத்தகங்களில் திணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொடக்கப் பள்ளி கூட மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இவை திணிக்கப்பட்டுள்ளதால்... குறிப்பிட்ட கட்சி பற்றிய பிரசாரமும் பிஞ்சு நெஞ்சங்களில் பதியவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் நற்கல்விக்கு எந்த வகையிலும தொடர்பில்லாதவற்றை நீக்கிவிடவேண்டும். இந்தத் திருத்தங்களை செய்வதற்கு புதிய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை...’’
என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இப்போது சொல்லுங்கள்... இது கருணாநிதிக்கு விழுந்த பளார் அறையா? ஜெயலலிதாவுக்கு விழுந்த அறையா?
தன் மேல் விழும் ஒவ்வொரு அடிகளால் வலிக்கும்போது அழுகையை வெளிக்காட்டாமல் முக சேஷ்டைகள் பண்ணும் வடிவேலு கூட இந்த கவிதைக் காமெடிக் கருணாநிதியிடம் தோற்றார் போங்கள்!
‘தலைவரே உச்சநீதிமன்றம் உங்க கன்னத்துலயும் பழுக்க ரெண்டு பளார் கொடுத்திருக்காங்க’ என்று அவருக்கு அருகே இருக்கும் ஆற்காடுகளும், காட்பாடிகளும் கருணாநிதிக்கு புத்தி சொன்னால் நல்லது!
கருணாநிதி மறைத்த பூசணி 2 :
கருணாநிதி தனது கவிதையில் குறிப்பிடும் இரண்டாவது பொய்... சமச்சீர் கல்வி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதற்காக எக்காள முழக்கமிட தமிழ்நாடு எங்கும் விரிவுரைப் பொதுக்கூட்டங்கள் நடத்த நாள் குறிக்கபப்டும் என்றும் சொல்லியிருப்பதே!
என்ற கிராமத்துப் பழமொழிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியைப் பற்றி யோசித்த கருணாநிதி அதற்காக கம்யூனிஸ்டுகள் கொடுத்த அழுத்ததின் பேரில்முத்துக்குமரன் கமிட்டியை அறிவித்தார்.
அதன் பேரில் முத்துக்குமரன் கமிட்டி ஆராய்ந்து பொதுப் பாடத்திட்டம் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் கொண்ட சமச்சீர் கல்வி முறையை பரிந்துரை செய்தார்.
ஆனால் கருணாநிதி அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் பொதுப் பாடத் திட்டம் என்ற ஒற்றை அம்சத்தையும் மட்டும் முன்னிறுத்தி சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். இதை முத்துக்குமரனே சில பத்திரிகைகளில் குறை கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி அதைப் பொருட்படுத்தாமல்... தனது சுய தம்பட்டங்களை பாடப் புத்தகங்களில் அச்சிட்டு முடித்துவிட்டார்.
எனவே இது சமச்சீர் கல்வி அல்ல... சமரசக் கல்வி என்று டாக்டர் ராமதாஸ் கூட குறிப்பிட்டார்.
இத்தகையை சமச்சீர் கல்வியைத்தான் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அ.தி.மு.க. அரசு அறிவித்ததும் கருணாநிதி வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்தார். இந்த குறைந்த பட்ச சமச்சீர் கல்வியையாவது தமிழகத்தில் அமல்படுத்திடவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அபிமானியான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும், மேலும் சில பெற்றோர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினார்கள்.
அவர்கள் டெல்லி சென்று தங்கியது, வக்கீல் வைத்தது, சட்ட பாயின்டுகளை எடுத்துக் கொடுத்தது என எதிலாவது தி.மு.க. உதவி செய்ததுண்டா?
கனிமொழிக்காக ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் ராம்ஜெத்மலானியை புக் செய்த தி.மு.க.... சமச்சீர் கல்விக்காக ஒரு ‘வண்டுமுருகன் வக்கீலை’யாவது அனுப்பியதா? கப்பல் முதலாளிகளையும், மத்திய அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தி.மு.க. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்திருக்குமா?
கொரடாச்சேரியில் ஆர்பாட்டம் நடத்தி ஒரு மாணவனின் உயிரை அநியாயமாக பலிகொடுத்ததுதான் தி.மு.க. சமச்சீர் கல்விக்கான சட்டப்போராட்டத்தில் செய்த ஒரே தொண்டு!
உண்மைகள் இப்படி இருக்கையில்... பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றியை தனது வெற்றியாக உருமாற்றி திசைமாற்றி திரித்துக் கொள்ள முற்படுகிறார் கருணாநிதி?
சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் பளார் வாங்கியும்... ஏதோ தாங்கள்தான் போராட்டம் நடத்தி வெற்றிகண்டோம் என எக்காள முழக்கமிட தி.மு.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இதை இந்த விஷயத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் கூட்டம் போட்டு பேசவேண்டும். கருணாநிதி பேசக் கூடாது!
நில அபகரிப்பு வழக்கு விசாரிப்பது குறித்த அரசாணையை ,டிஸ்மிஸ் செய்யக்கோரி தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தர்மபுரிதொகுதியின் தி.மு.க. எம்.பி.யுமான தாமரைச்செல்வன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், குற்ற நடவடிக்கைக்காக குறிப்பிட்ட காலவரையறையை நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்க முடியாது. அது சட்ட விரோதமானது. இது முழுக்க முழுக்க தி.மு.க.வினரை இலக்காக வைத்து எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனுவில், நில அபகரிப்பு தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்கென்று தனி விசாரணை முறைச்சட்டங்கள் உள்ளன. அவையெல்லாம் இருக்கும் போது, இப்படிப்பட்ட அரசாணையை குறிப்பிட்ட காலகட்டத்துக்கென்று பிறப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையே தவிர வேறல்ல. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐயா... நீங்கள் இருவரும் கொஞ்சம் யோசித்து இந்த மனுவை தாக்கல் செய்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்திருந்தால், இந்த மனுவை தாக்கல் செய்திருக்க மாட்டீர்கள். அல்லது உங்கள் ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு விவகாரங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று உங்களுக்கு இந்த அவல நிலை வந்திருக்காது.
நீங்கள் இருவரும் தி.மு.க. உறுப்பினர் பதவி(!)யை கழற்றி வைத்துவிட்டு, சராசரி மனிதனாக, தமிழ்நாட்டில் சாமான்ய மனிதனாக இருந்து சில விஷயங்களை அணுகிப் பார்த்திருந்தால், இந்த சட்ட அரசாணை நல்லதா கெட்டதா என்று புரிந்திருக்கும்.
திமுக ஆட்சியில் உங்கள் கட்சியினர் நிலங்களை அபகரிக்கவில்லை, என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?.
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சத்தியம் செய்ய முடியுமா. இது போல உங்கள் நிலங்களை யாரவது அபகாரிப்பு செய்து இருந்தால், உங்களுடைய வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும். சேலம் அங்கம்மாள் காலனி குடியிருப்போரை விரட்டி அடித்து விட்டு, சொத்துக்களை கைப்பற்றிய திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது, நீங்கள் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே, புகார் வந்ததே. பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதி தள்ளியதே.அதுவும், தமிழ்நாட்டின் அதிகார மிக்க, இன்னும் சொல்லப்போனால் முதல்வராக இருந்த கலைஞரை விட பவர்புல் மந்திரியாக வலம் வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து, உங்கள் ஆட்சியிலே புகார் கொடுத்தார்களே, அந்த அப்பாவி மக்கள். அவர்கள் என்ன பையத்திமா? அவர்களது துணிச்சலை பார்த்தாவது, இழந்த நிலத்தை முதல்வர் மீட்டு கொடுத்திருக்கலாமே. அன்று வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது உங்கள் ஆட்சியில் நடைவடிக்கை எடுந்து இருந்தால், ஏன் இன்று இது போன்ற சட்டம் வந்து இருக்கப் போகிறது.
சரி போகட்டும். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வீரம் சேலம் போலீஸூக்கும் இல்லை. அன்றைய முதல்வர் கலைஞருக்கும் இல்லை.
ஈரோடு என்.கே,.கே.பி.ராஜா என்பவர் அமைச்சராகவும் இருந்தார். மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அவர் மீது நில அபகரிப்புப் புகாருடன், கடத்தல், ஆளை கட்டிப் போட்டு அடித்தல் என்று செய்தி வந்தது. அவரை ஏன் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிவிட்டீர்கள். மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இறக்கிவிட்டீர்கள். அவர் தி.மு.க.வின் இளிச்சவாயனாக இருந்தார் என்பதாலா? அல்லது கடத்தப்பட்ட நபர் துணிச்சலாக கோர்ட் படியேறி உயிருடன் இருந்ததாலா?
அவரை இந்த ஆட்சியில் பிடித்து சிறைக்குள் தள்ளாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்.
அடுத்து, வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பற்றி ஏதாவது தெரியுமா? 40 வருடத்துக்கு முன்பு வாங்கப்பட்ட நிலத்தை காலி செய்ய போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் துணையோடு வந்த நபர் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்த வேலையை செய்வீர்களா? இவர் செய்த அக்கிரமங்களை பட்டியல் போட்டால், முரசொலியில் 365 நாட்களுக்கு பக்கமே இருக்காது.
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்.ஆர். கோபி இவர்களை போன்று ரவடிகளை, மோசடிகரார்களை காப்பாற்றி திமுக என்ற கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பினால், அதன் பிறகு உங்கள் இஷ்டம்.
இச்சட்டத்தால், பத்து சதவிகிதம் பேருக்கு சில சிக்கல்கள் வரலாம். அதுவும் இந்த ஆட்சியில், அந்த பத்து பேருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையாவது இருக்கும்.
உங்கள் ஆட்சியே தொடர்ந்து வந்திருந்தால், இந்த பத்து பேரின் நிலம் பறி போவது மட்டுமின்றி யாருக்குமே நீதி கிடைத்திருக்காதே?
அதற்காவது இச்சட்டத்தை ரத்து செய்யும் மனுவை வாபஸ் வாங்கினால், உங்கள் வாரிசுகளுக்கு புண்ணியமாவது மிஞ்சும்!