சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை 16.12.2012 இரவு சத்தியம் டிவியில் காண நேர்ந்தது. அது வாலிப பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி. அதில் காட்டப்பட்ட சின்னத்திரையில் சினிமாவில் காட்டப்பட்டது. கல்லூரியில் படிக்க டொனேஷன் வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ் முதலாளியைப் பற்றிய கதை ஆகும். ஒரு ஏழை தகப்பன் தன் மகளுக்காக டொனேஷன் கொடுக்க வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கியதால் இந்த கல்லூரியில் படிக்கும் அந்த ஏழை சிறுமி கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத மனவேதனையை அந்த சினிமாவில் காட்டினார்கள். இந்த விவரம் அந்த அந்த கல்லூரி முதலாளி மகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு அந்த முதலாளி மனந்திரும்பி டொனேஷன் பணத்தை திரும்ப கொடுத்து அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சந்தோஷத்தில் பங்குக்கொண்ட சம்பவமும் அந்த சினிமாவில் நல்ல விதத்தில் சித்தரித்திருந்தது.
அதன்பின் பிரசங்கம் செய்த மோகன் சி.லாசரஸ் அவர்கள் சிறு வாலிப பிள்ளைகளை தங்கள் பெற்றோரின் வருமான விவரத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க சொல்கிறார். அவரவர்களின் பெற்றோர் நியாயமான முறையில் பணம் சம்பாதிக்கிறார்களா? அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது? லஞ்சம் மூலமாகவா? என்பதையெல்லாம் விசாரித்து பெற்றோரை பிள்ளைகளை திருத்தும்படி கேட்டுக்கொள்கிறார். அந்த சின்னதிரைகதை கூறும் நற்போதனையும், சகோதரன் மோகன் சி.லாசரஸ் கூறிய நியாயமான அப்படிப்பட்ட ஆலோசனை அந்த டிவியில் பிரயோஜனமுள்ளதாக கண்டேன். அப்படியே, ஏழைகளுக்கென்றுகர்த்தர் காருண்யா கல்லூரியை கட்ட சொன்னார் என்று பொய் சொல்லி லட்சக்கணக்கான டொனேஷன்ஏழைகளிடத்திலிருந்து வாங்கி கல்லூரி நடத்தும் தொழிலதிபர் சகோ.பால்தினகரன் அவர்களையும் இந்த டிவி சினிமா கல்லூரி முதலாளியுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.
பொய் செய்தி: இயேசுவை கேட்டேன்:
16.12.2012 சகோ.ஆனந்தஸ்ரா டிவி செய்தியை பார்த்தேன். அவர் பேசியதாவது: இயேசு பிறப்பின்போது சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரத்தைக்குறித்து உலகில் பலர் பலவாராக கூறுகிறார்கள். பலர் வால் நட்சத்திரம் என்கிறார்கள்!. உண்மை என்ன என்று அறிய நானே இயேசுவிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: அது வால் நட்சத்திரம் அல்ல. அது ஒரு புதுமையான விசேஷ நட்சத்திரம் என்றார். இதன்மூலம் அவர் அன்று செய்த பிரசங்கத்தில் மக்களுக்கு கூற விரும்பவதென்னவென்றால் எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மிக நெருக்கம் அதிகம்-சாதாரண விஷயமானால்கூட அவரிடம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார் என்பதாகும். நட்சத்திரம் விஷயம் அத்தனை முக்கியமான ஆவிக்குரிய விஷயமா? வேதமே அது வால் நட்சத்திரம் என்று கூறவில்லையே!. இவர் ஏன் இத்தனை பாடுபட்டு அதை இயேசுகிறிஸ்துவிடம் விசாரிக்கிறார்.
ஒரு மனுஷன் சர்வசாதாரணமாக ஒருவனிடம் டைம் என்ன ஆச்சு என்று கேட்பதுபோல், இவர்களுக்கு இயேசுகிறிஸ்து அவ்வளவு மதிப்பு குறைந்த தெருவில் போகும் சாதாரண மனுஷனாக இயேசுவை மாற்றிவிட்டார்கள்.
மிகைப்படுத்திய சாட்சி - இமயம் டிவியில் 4.5.2013 காலை
சகோ.மோகன் சி.லாசரஸ் செய்தியில் சகோ.ஜாஷ்வா என்பவரின் (ஆஸ்ட்ரேலியா) சாட்சி: எனக்கு தேவையான தொகை 2000$ டாலர் அன்று காலை எனக்கு வந்த தபாலில் ஆழு மணிஆர்டர் மூலமாக கிடைத்தது. யார் அனுப்பினார்கள், என்னை எப்படி தெரியும், எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தேவன் அற்புதம் செய்தார். கேள்வி என்ன? ஒருவர் மணிஆர்டர் அனுப்பினால் அனுப்பியவரின் பெயர் விலாசம் குறிப்பிடாமல் உலகில் எங்கும் யாரும் அனுப்ப முடியாது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அற்புதத்தில் சாட்சி கூறியவர் யார் அனுப்பியது, எங்கிருந்து வந்தது என்பது அதியசயமாக இருந்தது. நம்பமுடிகிறதா?. இவர்கள் ஆண்டவருக்கு தங்கள் சாட்சிமூலம் உதவுபவர்கள்.
ஆண்டவர்தான் நமக்கு உதவவேண்டும். நம் உதவி ஆண்டவருக்கு தேவை இல்லை.
கேரளா AOG சபை கமிட்டி கூடுகையில் பாதுகாப்புக்கு போலீஸ் வந்தது
CSI, லூத்தரன் சபையைவிட AOG சபையில் பதவி ஆசையும், பதவி போட்டியும் - சண்டையும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டேயிருப்பதை நான் எழுதியிருக்கிறேன்.
2013 பிப்ரவரி மாதம் புனாலூரில் கேரள AOG சபை நிர்வாக கூட்டம் நடந்தபோது பாஸ்டர்கள் இடம்மாற்றம் பெற பெரும் போட்டி நடந்தது. அதிக தசமபாகம் வரும் சபைக்கு தாங்கள் பாஸ்டராக பொருப்பெடுக்க கடும்போட்டி AOG சபையில் ஏற்பட்டது. கேரளா AOG சபைகளுக்கு பாஸ்டர்.சாமுவேல்பொதுசெயலாளராக இருக்கிறார். அவருக்கு பிடித்தமானவர்களை பெரிய சபைக்கு பாஸ்டராக நியமிக்கிறார், அவருக்கு பிடிக்காதவரை சாதாரண சபைக்கு மாற்றல் கொடுக்கிறார் என்று கூறி பல பாஸ்டர்கள் பொருமுகிறார்கள்.
இந்தமுறை நிர்வாக கூட்டத்தில் கடும் போட்டி உண்டு. நிச்சயம் அடிதடி உண்டாகலாம் என்று எதிர்பார்த்து பாதுகாப்புக்கு போலீஸ் வரவழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. உள்ளே நடக்கும் பதவி சண்டைகளை புகைப்படம் எடுக்க கிறிஸ்தவ சிந்தா பத்திரிக்கையின் புகைப்படம் எடுக்கும் நிருபர்களை AOG பாஸ்டர்கள் போலீஸில் பிடித்துகொடுத்து கேஸ் பைல் செய்ததாக கூறப்படுகிறது. பதவி சண்டை போடுவதில் செத்த சபை என்று வர்ணிக்கும் CSI, லூத்தரன் சபைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ஒவ்வொருமுறையும் அந்நியபாஷையின் பெலம் AOG சபையில் பெரும் பிரச்சனை உண்டாகும். இந்தமுறை அப்படி ஏதாவது நடக்கலாம் என்று முன்கூட்டியே அறிந்து போலீஸ்ஸை நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் மத்தியிலும் பாஸ்டர் ஜிப்பாவுக்குள்ளே புகுந்த சில ரௌடிகள் உண்டு. அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே பாதுகாப்புக்காக நின்றுக் கொண்டிருப்பதை காணமுடிந்தது என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கூறினார்.
இவர்களின் ஒழுங்கு என்னவென்றால் கூட்டம் ஆரம்பிக்கும்முன் ஜெபித்து கொஞ்சநேரம் அந்நியபாஷை பேசி வல்லமைபெற்று பிறகு சண்டையை ஆரம்பிப்பார்கள். ஒரு பாஸ்டர் சொல்கிறார். இந்த பதவி சண்டை IPC சபையில் மிக அதிகம். AOG பாஸ்டர் இடமாற்றத்துக்கு அல்லது பதவிக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுத்து பதவி பெருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதைவிட பெரும்தொகைகளை IPC பாஸ்டர்கள் பணத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு நிர்வாக கமிட்டியில் உயர்ந்த பதவி வேண்டும் என்று பண விளையாட்டு நடத்துவார்கள். அத்தனையம் மக்களின் தசமபாகமாக செலுத்திய காணிக்கையாகும். ஏறக்குறைய அவர்களைவிட மோசமாக AOG சபையில் இம்முறை பதவி இடமாற்றம் நிர்வாக கமிட்டி கூட்டத்தில் நடக்கும் போல் இருக்கிறது என்று புனாலூர் நிர்வாக கூட்டத்துக்கு வந்த ஒரு பாஸ்டர் மனவேதனையுடன் கூறியதாக கூறப்படுகிறது.
(படத்தில் AOG நிர்வாக கூட்டம் நடக்கும் புனாலூர் மண்டபத்தில் பாதுகாப்பு அரணாக நிற்கும் பாஸ்டர்கள்)
தமிழ்நாடு AOG பாஸ்டர்கள் P.S.ராஜாமணி, J.J.Y.அருள் பற்றிய பழைய வால்போஸ்ட்
AOG யில் இந்த பதவி போட்டியும் சண்டையும் இப்போதுதான் புதிதாக தோன்றியதல்ல. காலாகாலமாக இருக்கிறது.
தமிழ்நாட்டு AOG சபை சண்டையின் உச்சக்கட்டநிலை வால்போஸ்ட் சண்டையாக பழைய வால்போஸ்;டிங் படங்கள் என்னிடம் உள்ள பழைய AOG Fileலில் அன்றைக்கு சேமித்த பேப்பர் கட்டிங்கில் தேடியபோது கிடைத்தது. அதைத்தான் நீங்கள் இடது பக்கத்தில் காண்கிறீர்கள். பொறாமை உள்ளவர்களும், போட்டியில் தோற்றவர்களும், சில உதவி பாஸ்டர்களை பல வருடங்களாக முன்னுக்கு கொண்டுவராததால் தன் பிற்கால நிலையை குறித்து பயந்த அவர்கள் AOG தலைமையிடம் பேசி ஒரு நன்மையும் பெற முடியவில்லை என்று வெளி உலகில் அவி சுவாசிகள் அறிய அரசியல்வாதிகளைப் போல் மற்ற CSI, லூத்தரன் சபை அவிசுவாசிகள் வெளியிடுவதைப்போல வால்போஸ்ட், துண்டுபிரதி, மொட்டை கடிதங்கள் போன்ற முறைகளை AOG சபையினரும் பின்பற்றினார்.
அபிஷேகம் பெற்றேன், அந்நியபாஷைபேசுகிறேன். தரிசனம் பார்க்கிறேன், தீர்க்கதரிசன வரமும் எங்களுக்கு உண்டு என்று கூறுபவர்கள்.அந்நியபாஷை பேசிக் கொண்டே வீதிகளில் ஒட்டிய வால்போஸ்டைத்தான் இங்கு நீங்கள் காண்கிறீர்கள். வாசகர்கள் AOG சபை பாஸ்டர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தங்கள் பதவி சண்டையை நிறுத்திஅந்நியபாஷை ஏதும் பேசாமல் கர்த்தர் தனக்கு எந்த சபைக்கு மேய்ப்பனாக ஊழியம் செய்ய வாய்ப்பளிக்கிறாரோ அந்த இடம் செல்லும் மனபக்குவம் பாஸ்டர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். உதவிபாஸ்டர்கள் பழிவாங்கப்பட்டாலும் இடமாற்றம் வேதசித்தம் என்று ஏற்றுக் கொண்டு ஊழியம் செய்வார்களாக. அப்படி பழிவாங்கப்பட்ட பாஸ்டர்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக, ஒவ்வொரு வாரமும் புதுபுது ஆத்துமாக்களை சபையில் சேர்க்கும் மனபாரம் அவர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். AOG ஒரு நல்ல சபையாகும். ஆனால் பல வருடமாக பாஸ்டர்மார்களுக்குள் சமாதானம் இல்லை. இவர்கள் எப்படி சபை மக்களை இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துவார்கள். ஜெபிப்போம்.
ஜாமக்காரன்: மேலே வாசித்த குடிகாரனின் சங்கீதத்தை வெளியிட எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. வேதத்திலேயே அது மிக நல்ல சங்கீதம் ஆகும். நம் சபையில், விசுவாசிகள் முதல் நம் குழந்தைகள்வரை மனப்பாடமாக பயபக்தியோடு சொல்லும் சங்கீதம் 23 அல்லாமல் வேறு எந்த சங்கீதத்தையும் நாம் இந்த அளவு நேசித்ததில்லை. அப்படிப்பட்ட தாவீது பாடிய இந்த நல்ல அர்த்தமுள்ள சங்கீதத்தை நான் கொச்சைப்படுத்தியதுபோல் என் உள்உணர்வு குத்துகிறது.
ஆனால் இன்று பல CSI, லூத்தரன் டையோசிஸ் நிர்வாக கமிட்டி அங்கங்கள் மீட்டிங்க்காக அழைக்கப்பட்டு ஸ்டார் லாட்ஜ்களில் தங்கவைக்கப்படும்போது அவர்களுக்கு கொடுக்கும் விருந்தில் பிரதான இடம்வகிப்பது இந்த மதுபான பாட்டில்கள்தான். சினாட் கூட்டங்களுக்கு கலந்துக்கொள்ள வருபவர்களுக்கு கொடுக்கப்படுவதும் இந்த மதுபானம்தான். இதில் ஆயர்களில் பெரும்பாலானவர்கள் குடிகாரர்கள் என்பதை கண்டுபிடித்ததும் இப்படிப்பட்ட டையோசிஸ் - சினாட் கமிட்டி கூட்டங்களுக்கு கலந்துகொள்ள வந்தபோதுதான் அதை அறியமுடிந்தது. ஒவ்வொரு டையோசிஸ்ஸிலும் குடிகார ஆயர்கள் எண்ணிக்கை வரவர அதிகமாகிக்கொண்டேபோனதால் அவர்கள் இதை வாசித்து உணர்த்தப்பட வழி உண்டாகாதா என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இதை வெளியிட்டேன். இதை வெளியிட்டத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
CSI டையோசிஸின் சரித்திரத்தில் கேட்டிராத வேதனையுள்ள செய்தி
CSI சினாட் பொது செயலர் திரு.பிலிப் அவர்கள் தாக்கப்பட்டார்.
CSI உருவாகியது 1947ம் ஆண்டு ஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள் இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு,(இலங்கை) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து CSI சபைகள் அடங்கிய டையோசிஸ்ஸின் தலைமை ஸ்தாபனம் CSI சினாட் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 66 ஆண்டு கால வரலாற்றில் நடந்திராத அவமானகரமான சம்பவம் கடந்த 2013 பிப்ரவரி மாதம் CSI சினாட் கமிட்டியில் நடந்தது.
தமிழ்நாடு தூத்துக்குடி - நாசரேத் டையோசிஸ்ஸின் பிஷப்.Rt.Rev.Dr.ஜெபசந்திரன் அவர்கள் மேல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியது. ஆனால் சினாட் வழக்கம் போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றசாட்டுகளை ஊறப்போட்டது. அதன்பிறகு அவர் மேல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாகவே CSI சினாட் செயற்குழு பிஷப்மீது நடவடிக்கை எடுத்தது.
ஊளுஐ சினாட் செயற்குழு கூட்டத்தில் தர்ணா செய்த பிஷப்.ஜெபசந்திரன் தரையில் அமர்ந்துள்ளார்.
பிஷப்.ஜெபசந்திரன் அவர்களை பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்கிறது என்ற சினாட் நிர்வாக கமிட்டி எடுத்ததீர்மானத்தை மாடரேட்டர்.தேவகடாட்சம் அவர்கள் முன்னிலையிலும மற்றும் சினாட் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பாஷைகள் பேசும் நான்கு மாநில பிஷப்மார்கள், மெம்பர்கள் கூடிய அக்கூட்டத்தில் CSI சினாட் செயலர் திரு.பிலிப் அவர்கள் சஸ்பெண்ட் அறிக்கையை வாசித்தார். உடனே தூத்துக்குடி பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் பிலிப் அவர்களின் சட்டையைப்பிடித்து இழுத்து அவரை தாக்கி, அறிக்கையை படிக்கவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் MLA, MP அரசியல்வாதிகள் கூட்டத்தில் வழக்கமாக நடப்பதைப்போல் மைக்கை பிடித்து எடுத்து எறிந்தார். இந்த சண்டையில் தூத்துக்குடி பிஷப்புக்கு உதவியாக சினாட் செயற்குழு உறுப்பினர் கோயமுத்தூர் டையோசிஸ்ஸை சேர்ந்த திரு.அமிர்தம் அவர்களும் பிஷப் அவர்களுக்கு உதவியாக பிஷப்புடன் சேர்ந்து திரு.பிலிப்பை தாக்கி அவை நாகரீகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து ஏசினார். இவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி பிஷப்புடன் சேர்ந்து பிலிப் அவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்ட சகோ.அமிர்தம் அவர்கள் உடனே அங்கேயே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் சினாட் அவருக்கு உடனே மன்னிப்பு கொடுத்தாக அறிவித்தது. ஆனால் பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எழுத்து மூலமாகவும் மன்னிப்பு கேட்க ஆலோசனை அளிக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. ஆகவே அவர் பிஷப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக சினாட்டில் அறிவிக்கப்பட்டது. பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் சண்டைப்போட்டு கெட்ட வார்த்தைகளை உபயோகித்தது (சினாடில்) இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மாநில பிஷப்மார்கள் முன்னிலையில் நடந்ததால் தமிழ்நாட்டு CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது.
CSI டையோசிஸ்ஸில் நடக்கும் அநியாயங்களின் பட்டியல்:
மிஷனரிமார்கள், ஆயர்மார்கள், உபதேசியார் ஆகியவர்களின் பிராவிடன்ட் ஃபண்ட், பணம், பென்ஷன் பணம் ஆகியவற்றை டையோசிஸ் நிர்வாகம் அரசாங்க வங்கியில் இதுவரை சேர்க்காமலும் டையோசிஸ்சார்பில் இவர்கள் பணத்துடன் சேர்த்து மேலே கூறப்பட்ட ஊழியர்களுக்காக சேர்த்து அடைக்க வேண்டிய பணமும் இதுவரை அரசாங்க வங்கியில் சேர்க்கப்படாமல், பணம் பேங்க்கில் அடைக்காததால் ஆரம்ப காலத்திலிருந்து ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படவேண்டிய வட்டி பணம் பல கோடிகள் ஊழியர்கள் கணக்கில் வங்கியில் இல்லை என்பதாக CSI சினாடுக்கும், பிராவிடன் ஃபண்ட், பென்ஷன் அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் சிலராக புகார் எழுதி அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. இது உண்மையானால் இது பெரும் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு டையோசிஸ் அதிகாரிகள் முதல் பிஷப்மார்வரை ஜெயிலுக்கு போகவேண்டி வரும். இவர்களுக்கு பெரும் ஆபத்தும், அவமானமும் காத்துக்கொண்டிருக்கிறது. இது டையோசிஸ் நிர்வாகிகளும், பிஷப்மாரும் டையோசிஸ் ஊழியர்களுக்கு செய்யும் பெருத்த துரோகம் ஆகும்.
வேலை நியமனத்திலும் ஊழல்:
டையோசிஸ் வேலை நியமனத்தில் குறிப்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரின் வேலை நியமனத்தில் பல வருடமாக வரிசையில் காத்துக்கிடக்கும் எத்தனையோ CSI டையோசிஸ்ஸில் CSI சபை அங்கத்தினரின் பிள்ளைகள், மனைவிமார்கள் வரிசைப்படி காத்துக்கிடக்க வேலை நியமான லிஸ்டில் இல்லாத நபருக்கு பணிநியமனம் கொடுத்த துரோக குற்றச்சாட்டில் டையோசிஸ் நிர்வாகத்தினருடன் பிஷப்அவர்களும் குற்றவாளியாகிறார். இந்தவிதமான அநியாயத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம்போக ஏழைகளுக்கு பண வசதியில்லை. ஆனால் அவர்களின் ஏமாற்றம் கண்ணீராகமாறி தேவசமூகத்தில் சென்றால் கர்த்தரே இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பார் என்பது நிச்சயம். இந்த சம்பவங்களும் சினாட்டில் குற்றச்சாட்டாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நியாயம் தீர்க்கவேண்டிய தலைவரின் டையோசிஸ்ஸிலேயே இதே நியமனம் குறித்த குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அப்படியானால் சினாடின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடிகிறதே!.
எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் தெய்வபயம் ஒழிந்துப்போனது.
இப்போதுதான் CSI சினாட்டுக்கு பிஷப்மார்கள்மீது நடவடிக்கை எடுக்கும் புது தைரியம்உண்டாகியிருக்கிறது அதற்காக பாராட்டுகிறோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய CSIபிஷப்மார்கள் பட்டியல் நீண்டுள்ளது. சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் CSI சபைகள் நல்ல ஒழுங்குக்கு வரும். நடவடிக்கை CSI சினாட் தலைமையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும். ஜெபிப்போம்.
சில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது. சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது. சுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதமமந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது. நீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள். இப்போதுள்ள சினாட் புதிய கமிட்டி சுனாமி நிதி கணக்கை சம்பந்தப்பட்ட பிஷப்மார்களிடத்தில் கேட்டு வாங்குவார்களா?
தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்: தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிப்பதற்காக பிரதம பேராயர் பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த CSI குருவானவர்.ஜேசுசகாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர்.தேவகடாசம் அவர்கள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல குருவானவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சென்னையில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த தென்னிந்திய திருச்சபையின் தலைமை செயலக (சினாடு) நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்திய நாட்டில் பல ஏமாற்று தொழில்கள் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக இடம் பெறுவதுசிட்பண்ட் தொழிலாகும். இந்த தொழில் நடத்துபவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். 1000 கொடுத்தால் 2000. 2000 கொடுத்தால் 4000 அதுவும் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் என்று அறிவிக்கும் இப்படிப்பட்ட கவர்ச்சி விளம்பரத்தை மக்கள் நம்பிவிடுவார்கள்.
முன்பெல்லாம் இப்படி ஏமாறுபவர்கள் பாமர மக்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்றுதான் நாம் நினைத்தோம். இப்போது பெரிய பெரிய பட்டதாரிகள், பெரும் பணக்காரர்கள்கூட இப்படிப்பட்ட பொய் விளம்பர இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இவர்களிடம் கொடுத்து ஏமாற்றப்பட்டு பல கோடிகள் இழந்து பாதிக்கப்பட்ட இவர்கள் இப்போது போலீசுக்கு புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்ற அந்த கம்பெனியும் இப்போது அங்கு இல்லை - அந்த சிட்டு கம்பெனி நடத்திய ஆட்களும் தலைமறைவாகிபோனதால் போலீஸ் அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளில் தினந்தோறும் இவைகளை வாசிக்கிறோம். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் பணம் கொடுத்து பணம் திரும்ப பெறமுடியாமல் ஏராளமானவர்கள் கண்ணீர்விட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் காட்சியை தினம் டிவியிலும் பார்க்கிறோம்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை - ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக பெருகிக்கொண்டே போவார்கள் என்பது எத்தனை உண்மை!.
இன்றைக்கு கிறிஸ்தவ உலகிலும், கிறிஸ்தவ சபைகளிலும் கவர்ச்சி வசனங்களைக்கூறி கிறிஸ்வர்களின் காணிக்கையை பிடுங்கும் ஏமாற்றும் ஊழியர்கள் பெருவிட்டனர். கர்த்தர் சொன்னார் என்று கூறியும், தசமபாகம் என்ற பெயரிலும் பணம் சேர்க்கும் ஏமாற்று பிரசங்கங்கள் ஏராளமாக பெருகிவிட்டன. அப்படி அவர்கள் ஆராதனையில் செய்த பொய் பிரசங்கங்களை பெந்தேகோஸ்தே சபைகளில் அங்கத்தினர்களாக உள்ள விசுவாசிகள் தங்கள் மொபைல்களில் ரிகார்ட் செய்து அப்படிப்பட்ட பிரசங்கங்களை எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பொய் சொல்லும் இவர்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுப்பாரா? என்று கேட்கிறார்கள் அல்லது நம்நீதிமன்றங்களாவது இவர்களை தண்டிக்க அல்லது இவர்களின் ஏமாற்றை தடுக்க இயலுமா? என்று கேட்டு பெந்தேகோஸ்தே சபை வாசகர்கள் பல வருடங்களாக எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்து நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் வந்த செய்தியை வாசித்த ஜாமக்காரன் வாசகர்களும் இரட்சிக்கப்பட்ட வக்கீல் தொழில் செய்பவர்களில் பலரும் இவைகளை நீதிமன்றம் நிச்சயமாக விசாரிக்க முடியும் என்றார்கள்.
இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை நீதிமன்றம் விசாரிக்கவும், இவர்கள் செயல்களை தடைசெய்யவும் முடியும் என்று கூறி சட்டம் எண் 420 போல இன்னும் சில சட்ட எண்களை இவர்கள் குறிப்பிட்டு எனக்கு எழுதியுள்ளார்கள். இப்படி பலவிதமாக சபை விசுவாசிகளை ஏமாற்றும் பாஸ்டர்களை தண்டிக்கவும் முடியும் என்றார்கள்.
இப்போது டிவியிலும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும், சில ஊழியர்கள் தாங்கள் கட்டும்கட்டிடத்துக்கு அல்லது கட்டபோகும் கட்டிடத்துக்கு ஒருவன் பணம் கொடுத்தவுடன் கடவுள்தாமதமில்லாமல் அந்த நபரின் கதவைத்தட்டி கொடுத்த காணிக்கையைப்போல் 10 மடங்கு பணமாக கர்த்தர் முன்பின்தெரியாத யார் மூலமாகவோ அந்த பெரும் தொகையை கொடுத்து அனுப்பினார் என்றுதுணிகரமான பொய்யுடன்கூடிய புகைப்படத்தோடு பொய் சாட்சிகளை உருவாக்கி அதை டிவியிலும், பத்திரிக்கையிலும் வெளியிட்டு ஜனங்களை காணிக்கை போடும்படி தூண்டி வஞ்சிக்கிறார்கள் தெரியுமா?.
சென்னையில் பிரபல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் காணிக்கை வேளையில் தன் கையில் உள்ள வாட்ச்சை (கைக்கடிகாரத்தை) கழற்றி முதல் காணிக்கையாக நான் போடுகிறேன் ஆவியானவரால் ஏவப்படுகிறவர்கள் அவரவர்களிடம் உள்ள ஆபரணங்களை காணிக்கை பையில் போடலாம். இன்று காணிக்கை பையில் பணம் போடக்கூடாது கையில் என்ன ஆபரணம் உண்டோ அதை போடலாம். கர்த்தர் இரட்டிப்பாக அதை உங்களுக்கு திருப்பி சீக்கிரமாகவே கொடுப்பதாக இன்று காலை ஜெபத்தில் என்னிடம் அறிவித்தார் என்றார். ஏமார்ந்த ஜென்மங்கள் பெண்கள்தானே!. மேலும் ஆண்களைவிட ஆபரணம் அணிவது பெண்கள்தானே? ஆனால் பலர் தயங்கினார்கள். ஆனால் பெண்களில் ஒருவர் மோதிரத்தை மட்டும் கழற்றிபோட்டார், மற்ற பெண் கழுத்தில் உள்ள மூன்று மாலையில் மெல்லிய மாலையை கையில் வருட்டி தேடி கண்டுபிடித்து அதை கழற்றிபோட்டுவிட்டார். காணிக்கை வாங்குபவர் அவள் கழற்றும்வரை பொறுமையோடு அந்த சகோதரியை பார்த்துக்கொண்டு நிற்கிறார். வரிசையில் நின்றுக்கொண்டிருந்த அடுத்த பெண்கள் அதை கவனித்துக்கொண்டே திகைத்து நின்றுவிட்டார்கள். ஒரு சகோதரி தன் கழுத்தில் இருந்தவடகயிறு போல் மொத்தமாக இருந்த செயினை கழற்றிபோட்டுவிட்டு அல்லேலுயா என்று சத்தமிட்டு கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். அது சந்தோஷ அழுகை அல்ல என்று அன்று மதியமே அறிய முடிந்தது. அந்த சகோதரி மதியம் வீட்டுக்கு சென்றதும் சபையில் நடந்த ஆபரண காணிக்கைப்பற்றியும் ஆலயம் கட்ட பழைய ஏற்பாடு காலத்தில் நகைகளை இஸ்ரவேல் ஜனங்கள் கொடுத்ததுப்போல இன்று ஆலயத்தில் நடத்தப்பட்டது. ஆகவே நம் ஆலயம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் அல்லேலுயா என்றார். புருஷன் தன் மனைவி கழுத்தை பார்த்து தாலி செயினையா கழற்றி போட்டாய்? ஆம். இன்று மற்ற மெல்லிய செயின்களை போடாமல் போய்விட்டேன். ஆகவே வேறு வழியில்லாமல் இருந்த அந்த ஒரே செயினை ஆலய கட்டுமான பணிக்காக போட்டுவிட்டேன். உடனே கணவன் பளார் என்று ஒரு அறை அறைந்து நான் கட்டியதாலி செயினை கழற்றிபோட உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? போ - மதிய சாப்பாடு நானே போட்டு சாப்பிட்டுகொள்கிறேன். திருடர்களாகிய அந்த பாஸ்டர்கள் அதை அழித்து பணமாக்கும் முன் அந்த செயினை திரும்ப வாங்கி வா? என்றார். வேண்டாங்க, தெய்வ குத்தம் உண்டாகிவிடும் என்று அழுதாள். அந்த செயினை கொண்டு வராமல் வீட்டு வாசல்படி ஏறாதே என்று தயவுதாட்சண்யம் பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தினார்.
அந்த சகோதரி ஆட்டோ பிடித்து அந்த பெந்தேகோஸ்தே சபைக்கு போனார். பாஸ்டர் அம்மாவிடம் விவரம் கூறியவுடன் பாஸ்டர் வெளியே போய்விட்டார். அவர் வந்தால்தான் காணிக்கை பை தொட முடியும் என்றார். மாலை 5 மணி ஆகும்போதுதான் அந்த பாஸ்டர் வந்தார். விவரம் அறிவித்தபோது காணிக்கை போட்டது திருப்ப எடுக்ககூடாது என்று பாஸ்டர் கூறினார். ஆனால் அந்த சகோதரி பாஸ்டர் ஐயா, என் கணவர் உங்கள் பேரில் போலீஸ் புகார் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். என் கணவரும் இந்த சபையில் பல வருடமாக வருகிறவர். தசமபாகம் தவறாமல் கொடுப்பவர். ஆனால் தாலி செயினை போட்டதால்தான் உங்கள்மேல் மிகவும் கோபமாக இருக்கிறார். தயவுசெய்து கொடுத்துவிடுங்கள். அதன்பின் அந்த பாஸ்டர்வேறுவழியில்லாமல் உதவி பாஸ்டர்களை அழைத்து அந்த இரும்பு பெட்டியை திறந்து அந்த சகோதரியின் ஜெயினை அவளைக்கொண்டே கண்டுபிடித்து எடுத்து கொடுத்துவிட்டு ஒரு பேப்பரில் எழுதி வாங்கி அனுப்பி விடுங்கள் என்றார். எப்படியோ தாலி செயின் திரும்ப கிடைத்தது. இப்போது அந்த குடும்பம் பாஸ்டர்.வாசுஅவர்களின் சபைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.
இது குரங்கும் - தொப்பி வியாபாரியும் என்ற கதை மாதிரி இல்லை!. மறுவாரம் இந்த சகோதரியின் புருஷன் கோபம் தனியாமல் வேறுசில கிறிஸ்தவ வியாபாரிகளைகூட கூட்டிக்கொண்டு பாஸ்டரை அடிக்க கிளம்பினார். மனைவி காலை பிடித்து கெஞ்சி அழுததால் அந்த பாஸ்டர் அன்று அடி வாங்காமல் தப்பினார்.
நான் 15 வருடமாக ஆராதனைக்கு போய்வரும் என் சபை பாஸ்டர் தசமபாகத்தில் பொய் சொன்னவர்கள் எல்லாரும் கர்த்தரிடம் இப்போது மன்னிப்பு கேட்கலாம் என்று 10 நிமிடம் ஜெபிக்க நேரம் கொடுத்துவிட்டு இப்போது தீர்மானம் எடுங்கள். தசமபாகத்தில் இதுவரை மறைத்த பணத்தை எத்தனை தவணைகளில் செலுத்தபோகிறீர்கள் என்பதை ஆவியானவரிடம் சொல்லிவிடுங்கள். ஏன் என்றால்அனனியா-சப்பிராளுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் உண்டாகக் கூடாது. உங்கள் பிள்ளைகள்அனாதைகளாகிவிடுவார்கள். இப்படி பயமுறுத்தி பேசுகிறார். அன்று இரவு எங்களுக்கு தூக்கமே வராமல் எங்கள் குடும்பமே பயத்தில் படுத்துகிடந்தோம். அந்த பாஸ்டர் எப்பேர்ப்பட்ட தசமபாக கள்ளனாகஇருக்கிறார் பாருங்கள். ஒரு குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்துவிட்டாரே!.
தனக்குரிய எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் சொல்லுகிறது. உன்னுடைய பி.எப் (பிராவிடன்ட் ஃபண்ட்) எவ்வளவு, உன் மகளுக்கு திருமணம் செய்தபோது கொடுத்த டவுரி பணத்தில் நீ தசமபாகம் கொடுக்கவில்லை. தனக்குறிய எல்லாவற்றிலுமிருந்து தசமபாகம் கொடுத்தான் என்று வேதம் நமக்கு போதிக்கிறதை கவனியுங்கள். உன் சம்பளத்திலிருந்து மட்டுமல்ல,வியாபாரிகள் உங்கள் வருமானங்களிலிருந்து மட்டுமல்ல, மகள் திருமணத்துக்கு நீ கொடுத்த நகைகள், ரொக்கம் (டவுரி) ஆகிய எல்லாவற்றிலும் தேவனுக்கு பங்கு இருக்கிறது. உன் வீட்டில் இரண்டு கல்யாணம்கடந்த வருடம் நடந்தது. உன் பிள்ளைகளின் திருமணத்தை நீ வேறு சபையில் வைத்து நீங்கள் நடத்தினாலும் அந்த திருமண செலவின் தசமபாகம் உன் மேய்ப்பனாகிய நான் ஊழியம் செய்யும் இந்த சபைக்கு உரியது ஆகும். அதை நீ கொடுத்து தீர்க்கும்வரை நீ கர்த்தருக்கு கடன்காரனாக இருக்கிறாய் என்பதை உணரவேண்டும். அதனால் உங்களை மறுபடியும் எச்சரிக்கிறேன். நீங்கள் எதை மறைத்தாலும்கர்த்தருக்கு கோபம் வராது. ஆனால் தசமபாகத்தில் சபையை ஏமாற்றினால் தெரியுமல்லவா? அனனியா-சப்பிராள் தம்பதியினருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அடிக்கடி எங்களை பயப்படுத்தி எங்கள் பாஸ்டர் பிரசங்கத்தில் பேசுகிறார். சிலமுறை பாஸ்டர் சாபமிடுகிறார். நாங்கள் என்ன செய்ய? என்று எழுதினார்கள். நான் எழுதினேன். இது ஒருவகை பிளாக் மெயில் ஆகும். உன் பாஸ்டர் உங்களை பயமுத்துகிறார் என்பது மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் அப்படிப்பட்ட திருட்டு பாஸ்டர் நடத்தும் ஆராதனையில் எப்படி நீங்கள் எல்லாம் தொடர்ந்து கலந்துக்கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சியாவது பாஸ்டர் பேசுவது பொய் என்று உணர்த்தவில்லையா? இவர்கள் எல்லாம் ஆவியின் வல்லமை பெற்றவர்கள், அந்நியபாஷை சரளமாக பேசுகிறவர்கள். இவர்கள் இந்த அளவு முட்டாளாகவா இருப்பார்கள். இதை எழுதும்போது எனக்கே கோபம் வருகிறது. கர்த்தருக்கு எவ்வளவு கோபம் வரும்.
செங்கல் அற்புதம்
2012 ஜனவரி மாதம் கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஐக்கிய சங்கத்தின் உதவி செயலாளராகவும், கோயமுத்தூரில் (சர்ச் ஆப் குளோரி) மகிமையின் ஆலயம் என்ற பெயரில் பெரிய சபையை நடத்தும் பாஸ்டர்.இஸ்ரவேல் பொன்னப்பா என்பவர் தன் சபையில் திடீரென்று ஒரு அறிவிப்பை அறிவித்தார். தேவன் தனக்கு அளித்த அபிஷேகத்தின்படி ஒரு செங்கல்லை சபை மக்களிடம் காண்பித்து இது சாதாரண செங்கல் அல்ல, ஜெபித்து அபிஷேகிக்கப்பட்ட செங்கல் ஆகும். இது கட்டிடம் கட்டுவதற்காக அல்ல. இந்த செங்கல் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் உள்ள அனைத்து விக்கிரகங்களும் நீங்கிபோகும். அசுத்த ஆவிகள் வீட்டுக்குள் வராது. இதற்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அன்று யாக்கோபு தன் பிராயணத்தின் இடையே ஒரு கல்லை தலையில் வைத்து படுத்துக்கொண்டபோது இரவில் பரலோக தரிசனம் கண்டான். தூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்ததை கண்டான் என்று எழுதியிருக்கிறது. அதுபோல இந்த செங்கல் எந்த வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அந்த வீட்டுக்கு ஆசீர்வாதம் உண்டாகும் தூதர்களை காண்பீர்கள். ஆவியானவர்சொல்ல சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்த செங்கலை விலை கொடுத்து நீங்கள் வாங்கினால் அந்த பணம் இந்த ஆலய பணிக்கு பயன்படும். ஆகவே இந்த ஆசீர்வாத திட்டத்தில் பங்குகொள்ள விரும்புவர்கள் ஒரு செங்கலை 10,000 - பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றார். இந்த கல்லை உங்கள் படுக்கையில் வைத்து தலையணையாக அதன்மீது வைத்து படுத்தால் பரலோக தரிசனங்களையும் காணலாம் என்றார். முதல் கல்லை சபை மக்கள் முன்வைத்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து அபிஷேகத்தை அதில் இறக்கி ஜெபிக்கிறேன் என்று கூறிஅந்நியபாஷையும் பேசி முடித்தார். உடனே சபை விசுவாசிகள் எனக்கு-உனக்கு என்று போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள். அரை லாரி லோடு உடனே விற்று தீர்ந்தது. அரை லோடு என்பது 1500 செங்கல்கள். கணக்குபோட்டு பாருங்கள். ஒரு செங்கல் 10000 ரூபாய் 1500 செங்கல்களுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய்கள் சுளையாக அந்த பாஸ்டருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட வியாபாரத்தை செங்கல் சூளை வைத்தவர்கள்கூட செய்து இருக்கமாட்டார்.
இப்போது வாசகர்கள் சிந்தித்துப்பாருங்கள். முதலில் செங்கல் விற்ற அந்த பாஸ்டரைப்பற்றி யோசிக்கவேண்டாம். அந்த செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கின அந்த அபிஷேகம் பெற்றவர்கள், அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைந்தவர்கள், தரிசனம் காண்பவர்கள் ஆகிய அந்த சபை விசுவாசிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த சபை விசுவாசிகளில் ஒருவராவது இப்படி ஒரு செங்கல் வியாபாரத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா? செங்கலில் அபிஷேகம் இறங்குமா? வல்லமை இறங்குமா?கல்லை வைத்து படுத்தால் பரலோகம் தெரியுமா? கொஞ்சமாவது யோசிக்ககூடாது.
சகோ.மோகன் சி.லாசரஸ் கம்பெனியின் போர்டு மெம்பராக மெத்தபடித்த டாக்டர் ஒருவர் உண்டு. அந்த டாக்டர் எயிட்ஸ் வியாதி சுகமானது என்று மோகன் சி.லாசரஸ் அறிவித்ததற்கு சாட்சியாக நின்றதுபோல, இந்த சபையிலும் ஒரு டாக்டர் செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்று கேள்விபடும்போது பெந்தேகோஸ்தே சபை எங்கு போகிறது? என்று புரிகிறதா?.
அடுத்து அந்த அனுபவம் உள்ள பாஸ்டருக்கு செங்கலை அபிஷேகம் செய்து நாம் விற்றால் நம் சபை விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகள் முட்டாள்கள் நிச்சயம் ஏமார்ந்து செங்கலை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அந்த பாஸ்டரின் விசுவாசம் பிரம்மிக்க வைக்கிறது. அவர் சபை மக்களை அந்த அளவு வசனத்தில் வளரவிடாமல், யோசிக்கவிடாமல் சபையை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கள்ள நோட்டு வியாபாரிகள் ரூபாய் கட்டுகளில் மேலே நல்ல நோட்டுகளை வைத்து உள்ளே வெள்ளை பேப்பர்களை கட்டுகட்டாக வைத்து பெரியபெரிய பணக்காரர்களை ஏமாற்றியிருக்கிறார்களோ. அதுபோலதானே? இதுவும் மிகப் பெரிய (சீட்டிங்ஸ்) ஏமாற்றுதனமாயிற்றே! அந்த கள்ளநோட்டு வியாபாரியாவது ஒரு கட்டில் 10 நல்ல ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றினார். ஆனால் இந்தபெந்கோகேஸ்தே சபை பாஸ்டரோ முழு செங்கல்களை மூடாமல் மறைக்காமல் அப்படியே சுளையாக 10000 ரூபாய்ககு ஒரு கல்லை அனாவசியமாக விற்றிருக்கிறார்.
ஒருவர் கேட்டார் சகோ.பால்தினகரன் மீது ஒருவர் பொதுநல வழக்கு போட்டாராமே அப்படி செங்கலை வைத்து அபிஷேகம் இறக்கும் இப்படிப்பட்ட பாஸ்டர்கள்மேலே ஏன் பொது நல வழக்கு போடக்கூடாது என்று கேட்டார்.
CSI சபையில் ஜீவன் இல்லை - செத்த சபை, வல்லமை இல்லை. அதனால் CSI சபை மக்களோ ஆராதனை முடிந்த கையோடு இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளுக்கு ஓடும் விசுவாசிகள் இனியாவது எச்சரியக்கையாக இருப்பீர்களாக.
இப்படி ஏமாற்றுகிற பாஸ்டர்களை நம் நீதிமன்றம் தண்டிக்காதா? என்று ஏராளமானவர்கள் கேட்கிறார்கள்.
D.G.S - மகனின் ஏமாற்று 420 - CHEATING இயேசு அழைக்கிறார் (ஆகஸ்ட் 2009: பக்கம் 8)
சகோ.DGS.தினகரன் அடிக்கடி பரலோகம் போய்வருவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரை பின்பற்றிதான் ஏஞ்சல் டிவி.சாதுசந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்குமார், ஆலன் பால் ஆகியோர் தாங்களும் தினகரனுக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் தினம்இரண்டுவேளை பரலோகம் போய் வருகிறோம் என்று போட்டியிட்டு பரலோகம் போய் வருவது செய்தியாக நாம் கேட்டிருக்கிறோம்.
சகோ.தினகரன் அவர்களைவிட மகன்.பால்தினகரன்அதிகம் கற்பனை தரிசனம் பார்ப்பதை அவர் எழுதிய செய்தியில் நீங்கள் அறியலாம்.
என் தந்தை.தினகரன் ஒருமுறை பரலோகத்திற்குசென்றபோது இயேசு என் தந்தையை வரவேற்றார். இயேசுவுக்கு முன் இருந்த ஒரு மேஜையின் மீது ஒருதங்கத்தால் ஆன அழகிய தங்க கை கடிகாரத்தைவைத்திருந்தார்.
அதன் பக்கத்தில் ஒரு தங்க கோப்பை, தங்க மை(Ink), முன்னோர்கள் அந்த காலத்தில் எழுத உபயோகிக்கும் தங்க இறகுமிருந்தது.
அப்போது ஆண்டவர் என் தந்தையைப்பார்த்து என் மகனே என் ஊழியத்தை செய்ய நீ வருவாயா? என்றார்.
அதைக்கேட்டபோது என் அப்பா.தினகரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவர் State Bank of India என்ற வங்கியில் நிம்மதியாக ஒரு குறையும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார். அதனால் இயேசுவை நோக்கி என் அப்பா சொன்னார். ஆண்டவரே, என் பேங்க் வேலையில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். கூடவே ஊழியமும் செய்துவருகிறேன். எனக்கு அதுபோதும் என்னை விட்டுவிடும் என்றார். ஆனால் ஆண்டவர் சொன்னார், என் மகனே நீ வேலையை விட்டுவிட்டால் உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் என்று, இப்படி நான் வாக்குகொடுத்தால் என் ஊழியத்துக்கு வருவாயா? என்று இயேசு கேட்டார். அதற்குமேல் என் அப்பாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சகோ.தினகரன் சொன்னார்: ஆண்டவரே நான் எங்கெங்கு போகிறேனோ நீரும் என்னோடு வருவீரானால் அப்போதுதான் நான் உம் ஊழியத்துக்கு வருவேன். ஆண்டவர் சொன்னார். நான் நிச்சயமாக உன்னோடு வருவேன். நான் உன்னை அழைத்திருப்பதை உன் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளின் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்துவேன். நீ என் ஊழியத்தை செய்வாயாக என்றார். உடனே என் தந்தை ஊழியத்துக்கு வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
அதன்பின் இயேசு தங்க மையினால் (இங்க்) எழுதி அதன்கீழே இயேசுகிறிஸ்து என்றுகையெழுத்திட்டு ஒரு உடன்படிக்கையை பண்ணிக்கொண்டார். இந்த உடன்படிக்கை கடிதத்தை என் தந்தையிடம் கொடுத்து(நான் மட்டும் கையெழுத்திட்டால் போதாது) நீயும் உன் கையெழுத்தை போடு என்றார். அந்த நாள் 1967ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி ஆகும். அந்த குறிப்பிட்ட வருடத்திலிருந்து என் தந்தை தினகரன் அவர்கள் எப்போதெல்லாம் பரலோகம் போகிறாரோ அப்போதெல்லாம் இயேசு கையெழுத்துபோட்ட அந்த உடன்படிக்கை கடிதத்தை இயேசுவிடம் காண்பிப்பார்.
ஒவ்வொருமுறை பரலோகம் போகும்போதும் ஒவ்வொரு திட்டத்தை இயேசு கூறுவார். மகனே, இந்த வருடத்தில் உன் ஊழியத்தில் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று அவர் சொல்வார். என் தந்தையும் அவர் சொல்வதை கேட்டு ஆமென் என்று கூறி ஆமோதிப்பார். இப்படித்தான் என் தந்தையின் ஊழியம் வெற்றிகரமாக நடந்தது.
நாம் இதுவரை புளு இங்க், கருப்பு, சிவப்பு இங்க் இப்படி பல கலரில் பார்த்திருப்போம். ஆனால் சகோ.தினகரனின் பரலோகத்தில் இந்த கலர் இங்க் எல்லாம் கிடைக்காது. எல்லாம் தங்க இங்க், தங்கபோனா, தங்க கோப்பை, தங்க மேஜை இதை எழுதும் தங்க ஊழியரான தம்பி.பால்தினகரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தினர் எல்லாம் உபயோகிப்பது, அணிவது எல்லாம் தங்கம்தான் என்பதை நாம் டிவியிலும் மேடையிலும் காண்பித்து நிரூபித்திருக்கிறோரே?.
தங்க இங்க், தங்க கோப்பை, தங்க பேனா, தங்கத்தில் இயேசுவின் கையெழுத்து தினம் பரலோக விசிட் இவைகளைக்குறித்து யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படிப்பட்ட அம்புலிமாமா கதைகளை கேட்டு கிறிஸ்தவ மக்கள், பிஷப்மார், மாடரேட்டர் எல்லாரும் கேள்வி எழுப்பாமல் ரசித்து கொண்டிருக்கிறார்களே தவிர கேள்விகேட்க யாருக்கும் தைரியம் இல்லை.
ஒருவர் இயேசு அழைக்கிறார் குடும்பம் சேர்க்கும் கோடிகள், சொல்லும் பொய் கதைகள், பொய்யானஅற்புத சாட்சி, கோபுரங்கள் பணிவது மக்களிடம் பொய்யான காரணங்களைக்கூறி காணிக்கை பெறுவது, ஒரு குழந்தைக்கு 2000 ரூபாய் வாங்கி ஜெபிக்க கர்த்தர் சொன்னார். அதற்கு இளம் பங்காளர் திட்டம்என்று பெயர் வைத்து கோடிகோடியாக பணம் சேகரிக்கப்பட்டது. ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரிகட்ட சொன்னார் என்று கூறி ஒவ்வொரு மாணவனிடம் லட்சக்கணக்கில் கேப்பிடல் பீஸ்வாங்கப்பட்டதையெல்லாம் குறிப்பிட்டு சிலர் பொதுநல வழக்கு போட்டதாக செய்திதாளில் செய்திகள் வந்தது. பாறையோடு பானை மோதியதுபோல அந்த கேஸ் தொடர்ந்து நடத்தமுடியாமல் வழக்கு பாதியிலேயே நின்றுப்போனது. கிறிஸ்தவ ஊழியர்கள் மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள் என்று அன்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.
விருதுநகர் சகோ.ஆலன்பால் என்பவர் இவரும் அடிக்கடி நரகத்துக்குபோய் வருபவர். 19 கோடியில் சென்னையில் மிகப்பெரிய ஆலயம் கட்ட ஆம்பித்திருக்கிறார். டிவியில் தன் சொந்த சேனலான ஆசீர்வாதம்டியியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
இப்படி தனி ஊழியம் செய்யும் ஊழியர்கள் எல்லாரும் தங்களை சிஎஸ்ஐ என்றும், லூத்தரன் சபையை சார்ந்தவன் என்றும் கூறி அந்நியபாஷை பேசி மறைமுக பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தில் வாழ்ந்து ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி பல ஊழியர்கள் மக்களை ஏமாற்றுவதை குறித்து ஏமார்ந்த மக்கள் பக்கம்பக்கமாக கடிதங்கள் எனக்கு எழுதுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பொய் பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் அப்படிப்பட்ட சபைகளிடமும் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மக்களை ஏமாற்றி அகப்பட்ட ஏராளமான புறமத சாமியார்களின் சன்யாசிகள் ஏராளமானவர்கள் போலீஸில் அகப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். இவர்களோடு சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், ஸ்டார் ஊழியர்களும், அற்புதம் அடையாளம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றும் சில ஊழியர்களும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் பல போலி ஊழியர்கள் பலர் இன்னும் வெளியே உலா வருகிறார்கள்.
இந்திய நாட்டில் பல ஏமாற்று தொழில்கள் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக இடம் பெறுவதுசிட்பண்ட் தொழிலாகும். இந்த தொழில் நடத்துபவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். 1000 கொடுத்தால் 2000. 2000 கொடுத்தால் 4000 அதுவும் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் என்று அறிவிக்கும் இப்படிப்பட்ட கவர்ச்சி விளம்பரத்தை மக்கள் நம்பிவிடுவார்கள்.
முன்பெல்லாம் இப்படி ஏமாறுபவர்கள் பாமர மக்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்றுதான் நாம் நினைத்தோம். இப்போது பெரிய பெரிய பட்டதாரிகள், பெரும் பணக்காரர்கள்கூட இப்படிப்பட்ட பொய் விளம்பர இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இவர்களிடம் கொடுத்து ஏமாற்றப்பட்டு பல கோடிகள் இழந்து பாதிக்கப்பட்ட இவர்கள் இப்போது போலீசுக்கு புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்ற அந்த கம்பெனியும் இப்போது அங்கு இல்லை - அந்த சிட்டு கம்பெனி நடத்திய ஆட்களும் தலைமறைவாகிபோனதால் போலீஸ் அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளில் தினந்தோறும் இவைகளை வாசிக்கிறோம். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் பணம் கொடுத்து பணம் திரும்ப பெறமுடியாமல் ஏராளமானவர்கள் கண்ணீர்விட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் காட்சியை தினம் டிவியிலும் பார்க்கிறோம்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை - ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக பெருகிக்கொண்டே போவார்கள் என்பது எத்தனை உண்மை!.
இன்றைக்கு கிறிஸ்தவ உலகிலும், கிறிஸ்தவ சபைகளிலும் கவர்ச்சி வசனங்களைக்கூறி கிறிஸ்வர்களின் காணிக்கையை பிடுங்கும் ஏமாற்றும் ஊழியர்கள் பெருவிட்டனர். கர்த்தர் சொன்னார் என்று கூறியும், தசமபாகம் என்ற பெயரிலும் பணம் சேர்க்கும் ஏமாற்று பிரசங்கங்கள் ஏராளமாக பெருகிவிட்டன. அப்படி அவர்கள் ஆராதனையில் செய்த பொய் பிரசங்கங்களை பெந்தேகோஸ்தே சபைகளில் அங்கத்தினர்களாக உள்ள விசுவாசிகள் தங்கள் மொபைல்களில் ரிகார்ட் செய்து அப்படிப்பட்ட பிரசங்கங்களை எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பொய் சொல்லும் இவர்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுப்பாரா? என்று கேட்கிறார்கள் அல்லது நம்நீதிமன்றங்களாவது இவர்களை தண்டிக்க அல்லது இவர்களின் ஏமாற்றை தடுக்க இயலுமா? என்று கேட்டு பெந்தேகோஸ்தே சபை வாசகர்கள் பல வருடங்களாக எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்து நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் வந்த செய்தியை வாசித்த ஜாமக்காரன் வாசகர்களும் இரட்சிக்கப்பட்ட வக்கீல் தொழில் செய்பவர்களில் பலரும் இவைகளை நீதிமன்றம் நிச்சயமாக விசாரிக்க முடியும் என்றார்கள்.
இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை நீதிமன்றம் விசாரிக்கவும், இவர்கள் செயல்களை தடைசெய்யவும் முடியும் என்று கூறி சட்டம் எண் 420 போல இன்னும் சில சட்ட எண்களை இவர்கள் குறிப்பிட்டு எனக்கு எழுதியுள்ளார்கள். இப்படி பலவிதமாக சபை விசுவாசிகளை ஏமாற்றும் பாஸ்டர்களை தண்டிக்கவும் முடியும் என்றார்கள்.
இப்போது டிவியிலும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும், சில ஊழியர்கள் தாங்கள் கட்டும்கட்டிடத்துக்கு அல்லது கட்டபோகும் கட்டிடத்துக்கு ஒருவன் பணம் கொடுத்தவுடன் கடவுள்தாமதமில்லாமல் அந்த நபரின் கதவைத்தட்டி கொடுத்த காணிக்கையைப்போல் 10 மடங்கு பணமாக கர்த்தர் முன்பின்தெரியாத யார் மூலமாகவோ அந்த பெரும் தொகையை கொடுத்து அனுப்பினார் என்றுதுணிகரமான பொய்யுடன்கூடிய புகைப்படத்தோடு பொய் சாட்சிகளை உருவாக்கி அதை டிவியிலும், பத்திரிக்கையிலும் வெளியிட்டு ஜனங்களை காணிக்கை போடும்படி தூண்டி வஞ்சிக்கிறார்கள் தெரியுமா?.
சென்னையில் பிரபல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் காணிக்கை வேளையில் தன் கையில் உள்ள வாட்ச்சை (கைக்கடிகாரத்தை) கழற்றி முதல் காணிக்கையாக நான் போடுகிறேன் ஆவியானவரால் ஏவப்படுகிறவர்கள் அவரவர்களிடம் உள்ள ஆபரணங்களை காணிக்கை பையில் போடலாம். இன்று காணிக்கை பையில் பணம் போடக்கூடாது கையில் என்ன ஆபரணம் உண்டோ அதை போடலாம். கர்த்தர் இரட்டிப்பாக அதை உங்களுக்கு திருப்பி சீக்கிரமாகவே கொடுப்பதாக இன்று காலை ஜெபத்தில் என்னிடம் அறிவித்தார் என்றார். ஏமார்ந்த ஜென்மங்கள் பெண்கள்தானே!. மேலும் ஆண்களைவிட ஆபரணம் அணிவது பெண்கள்தானே? ஆனால் பலர் தயங்கினார்கள். ஆனால் பெண்களில் ஒருவர் மோதிரத்தை மட்டும் கழற்றிபோட்டார், மற்ற பெண் கழுத்தில் உள்ள மூன்று மாலையில் மெல்லிய மாலையை கையில் வருட்டி தேடி கண்டுபிடித்து அதை கழற்றிபோட்டுவிட்டார். காணிக்கை வாங்குபவர் அவள் கழற்றும்வரை பொறுமையோடு அந்த சகோதரியை பார்த்துக்கொண்டு நிற்கிறார். வரிசையில் நின்றுக்கொண்டிருந்த அடுத்த பெண்கள் அதை கவனித்துக்கொண்டே திகைத்து நின்றுவிட்டார்கள். ஒரு சகோதரி தன் கழுத்தில் இருந்தவடகயிறு போல் மொத்தமாக இருந்த செயினை கழற்றிபோட்டுவிட்டு அல்லேலுயா என்று சத்தமிட்டு கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். அது சந்தோஷ அழுகை அல்ல என்று அன்று மதியமே அறிய முடிந்தது. அந்த சகோதரி மதியம் வீட்டுக்கு சென்றதும் சபையில் நடந்த ஆபரண காணிக்கைப்பற்றியும் ஆலயம் கட்ட பழைய ஏற்பாடு காலத்தில் நகைகளை இஸ்ரவேல் ஜனங்கள் கொடுத்ததுப்போல இன்று ஆலயத்தில் நடத்தப்பட்டது. ஆகவே நம் ஆலயம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் அல்லேலுயா என்றார். புருஷன் தன் மனைவி கழுத்தை பார்த்து தாலி செயினையா கழற்றி போட்டாய்? ஆம். இன்று மற்ற மெல்லிய செயின்களை போடாமல் போய்விட்டேன். ஆகவே வேறு வழியில்லாமல் இருந்த அந்த ஒரே செயினை ஆலய கட்டுமான பணிக்காக போட்டுவிட்டேன். உடனே கணவன் பளார் என்று ஒரு அறை அறைந்து நான் கட்டியதாலி செயினை கழற்றிபோட உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? போ - மதிய சாப்பாடு நானே போட்டு சாப்பிட்டுகொள்கிறேன். திருடர்களாகிய அந்த பாஸ்டர்கள் அதை அழித்து பணமாக்கும் முன் அந்த செயினை திரும்ப வாங்கி வா? என்றார். வேண்டாங்க, தெய்வ குத்தம் உண்டாகிவிடும் என்று அழுதாள். அந்த செயினை கொண்டு வராமல் வீட்டு வாசல்படி ஏறாதே என்று தயவுதாட்சண்யம் பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தினார்.
அந்த சகோதரி ஆட்டோ பிடித்து அந்த பெந்தேகோஸ்தே சபைக்கு போனார். பாஸ்டர் அம்மாவிடம் விவரம் கூறியவுடன் பாஸ்டர் வெளியே போய்விட்டார். அவர் வந்தால்தான் காணிக்கை பை தொட முடியும் என்றார். மாலை 5 மணி ஆகும்போதுதான் அந்த பாஸ்டர் வந்தார். விவரம் அறிவித்தபோது காணிக்கை போட்டது திருப்ப எடுக்ககூடாது என்று பாஸ்டர் கூறினார். ஆனால் அந்த சகோதரி பாஸ்டர் ஐயா, என் கணவர் உங்கள் பேரில் போலீஸ் புகார் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். என் கணவரும் இந்த சபையில் பல வருடமாக வருகிறவர். தசமபாகம் தவறாமல் கொடுப்பவர். ஆனால் தாலி செயினை போட்டதால்தான் உங்கள்மேல் மிகவும் கோபமாக இருக்கிறார். தயவுசெய்து கொடுத்துவிடுங்கள். அதன்பின் அந்த பாஸ்டர்வேறுவழியில்லாமல் உதவி பாஸ்டர்களை அழைத்து அந்த இரும்பு பெட்டியை திறந்து அந்த சகோதரியின் ஜெயினை அவளைக்கொண்டே கண்டுபிடித்து எடுத்து கொடுத்துவிட்டு ஒரு பேப்பரில் எழுதி வாங்கி அனுப்பி விடுங்கள் என்றார். எப்படியோ தாலி செயின் திரும்ப கிடைத்தது. இப்போது அந்த குடும்பம் பாஸ்டர்.வாசுஅவர்களின் சபைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.
இது குரங்கும் - தொப்பி வியாபாரியும் என்ற கதை மாதிரி இல்லை!. மறுவாரம் இந்த சகோதரியின் புருஷன் கோபம் தனியாமல் வேறுசில கிறிஸ்தவ வியாபாரிகளைகூட கூட்டிக்கொண்டு பாஸ்டரை அடிக்க கிளம்பினார். மனைவி காலை பிடித்து கெஞ்சி அழுததால் அந்த பாஸ்டர் அன்று அடி வாங்காமல் தப்பினார்.
நான் 15 வருடமாக ஆராதனைக்கு போய்வரும் என் சபை பாஸ்டர் தசமபாகத்தில் பொய் சொன்னவர்கள் எல்லாரும் கர்த்தரிடம் இப்போது மன்னிப்பு கேட்கலாம் என்று 10 நிமிடம் ஜெபிக்க நேரம் கொடுத்துவிட்டு இப்போது தீர்மானம் எடுங்கள். தசமபாகத்தில் இதுவரை மறைத்த பணத்தை எத்தனை தவணைகளில் செலுத்தபோகிறீர்கள் என்பதை ஆவியானவரிடம் சொல்லிவிடுங்கள். ஏன் என்றால்அனனியா-சப்பிராளுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் உண்டாகக் கூடாது. உங்கள் பிள்ளைகள்அனாதைகளாகிவிடுவார்கள். இப்படி பயமுறுத்தி பேசுகிறார். அன்று இரவு எங்களுக்கு தூக்கமே வராமல் எங்கள் குடும்பமே பயத்தில் படுத்துகிடந்தோம். அந்த பாஸ்டர் எப்பேர்ப்பட்ட தசமபாக கள்ளனாகஇருக்கிறார் பாருங்கள். ஒரு குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்துவிட்டாரே!.
தனக்குரிய எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் சொல்லுகிறது. உன்னுடைய பி.எப் (பிராவிடன்ட் ஃபண்ட்) எவ்வளவு, உன் மகளுக்கு திருமணம் செய்தபோது கொடுத்த டவுரி பணத்தில் நீ தசமபாகம் கொடுக்கவில்லை. தனக்குறிய எல்லாவற்றிலுமிருந்து தசமபாகம் கொடுத்தான் என்று வேதம் நமக்கு போதிக்கிறதை கவனியுங்கள். உன் சம்பளத்திலிருந்து மட்டுமல்ல,வியாபாரிகள் உங்கள் வருமானங்களிலிருந்து மட்டுமல்ல, மகள் திருமணத்துக்கு நீ கொடுத்த நகைகள், ரொக்கம் (டவுரி) ஆகிய எல்லாவற்றிலும் தேவனுக்கு பங்கு இருக்கிறது. உன் வீட்டில் இரண்டு கல்யாணம்கடந்த வருடம் நடந்தது. உன் பிள்ளைகளின் திருமணத்தை நீ வேறு சபையில் வைத்து நீங்கள் நடத்தினாலும் அந்த திருமண செலவின் தசமபாகம் உன் மேய்ப்பனாகிய நான் ஊழியம் செய்யும் இந்த சபைக்கு உரியது ஆகும். அதை நீ கொடுத்து தீர்க்கும்வரை நீ கர்த்தருக்கு கடன்காரனாக இருக்கிறாய் என்பதை உணரவேண்டும். அதனால் உங்களை மறுபடியும் எச்சரிக்கிறேன். நீங்கள் எதை மறைத்தாலும்கர்த்தருக்கு கோபம் வராது. ஆனால் தசமபாகத்தில் சபையை ஏமாற்றினால் தெரியுமல்லவா? அனனியா-சப்பிராள் தம்பதியினருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அடிக்கடி எங்களை பயப்படுத்தி எங்கள் பாஸ்டர் பிரசங்கத்தில் பேசுகிறார். சிலமுறை பாஸ்டர் சாபமிடுகிறார். நாங்கள் என்ன செய்ய? என்று எழுதினார்கள். நான் எழுதினேன். இது ஒருவகை பிளாக் மெயில் ஆகும். உன் பாஸ்டர் உங்களை பயமுத்துகிறார் என்பது மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் அப்படிப்பட்ட திருட்டு பாஸ்டர் நடத்தும் ஆராதனையில் எப்படி நீங்கள் எல்லாம் தொடர்ந்து கலந்துக்கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சியாவது பாஸ்டர் பேசுவது பொய் என்று உணர்த்தவில்லையா? இவர்கள் எல்லாம் ஆவியின் வல்லமை பெற்றவர்கள், அந்நியபாஷை சரளமாக பேசுகிறவர்கள். இவர்கள் இந்த அளவு முட்டாளாகவா இருப்பார்கள். இதை எழுதும்போது எனக்கே கோபம் வருகிறது. கர்த்தருக்கு எவ்வளவு கோபம் வரும்.
செங்கல் அற்புதம்
2012 ஜனவரி மாதம் கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஐக்கிய சங்கத்தின் உதவி செயலாளராகவும், கோயமுத்தூரில் (சர்ச் ஆப் குளோரி) மகிமையின் ஆலயம் என்ற பெயரில் பெரிய சபையை நடத்தும் பாஸ்டர்.இஸ்ரவேல் பொன்னப்பா என்பவர் தன் சபையில் திடீரென்று ஒரு அறிவிப்பை அறிவித்தார். தேவன் தனக்கு அளித்த அபிஷேகத்தின்படி ஒரு செங்கல்லை சபை மக்களிடம் காண்பித்து இது சாதாரண செங்கல் அல்ல, ஜெபித்து அபிஷேகிக்கப்பட்ட செங்கல் ஆகும். இது கட்டிடம் கட்டுவதற்காக அல்ல. இந்த செங்கல் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் உள்ள அனைத்து விக்கிரகங்களும் நீங்கிபோகும். அசுத்த ஆவிகள் வீட்டுக்குள் வராது. இதற்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அன்று யாக்கோபு தன் பிராயணத்தின் இடையே ஒரு கல்லை தலையில் வைத்து படுத்துக்கொண்டபோது இரவில் பரலோக தரிசனம் கண்டான். தூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்ததை கண்டான் என்று எழுதியிருக்கிறது. அதுபோல இந்த செங்கல் எந்த வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அந்த வீட்டுக்கு ஆசீர்வாதம் உண்டாகும் தூதர்களை காண்பீர்கள். ஆவியானவர்சொல்ல சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்த செங்கலை விலை கொடுத்து நீங்கள் வாங்கினால் அந்த பணம் இந்த ஆலய பணிக்கு பயன்படும். ஆகவே இந்த ஆசீர்வாத திட்டத்தில் பங்குகொள்ள விரும்புவர்கள் ஒரு செங்கலை 10,000 - பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றார். இந்த கல்லை உங்கள் படுக்கையில் வைத்து தலையணையாக அதன்மீது வைத்து படுத்தால் பரலோக தரிசனங்களையும் காணலாம் என்றார். முதல் கல்லை சபை மக்கள் முன்வைத்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து அபிஷேகத்தை அதில் இறக்கி ஜெபிக்கிறேன் என்று கூறிஅந்நியபாஷையும் பேசி முடித்தார். உடனே சபை விசுவாசிகள் எனக்கு-உனக்கு என்று போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள். அரை லாரி லோடு உடனே விற்று தீர்ந்தது. அரை லோடு என்பது 1500 செங்கல்கள். கணக்குபோட்டு பாருங்கள். ஒரு செங்கல் 10000 ரூபாய் 1500 செங்கல்களுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய்கள் சுளையாக அந்த பாஸ்டருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட வியாபாரத்தை செங்கல் சூளை வைத்தவர்கள்கூட செய்து இருக்கமாட்டார்.
இப்போது வாசகர்கள் சிந்தித்துப்பாருங்கள். முதலில் செங்கல் விற்ற அந்த பாஸ்டரைப்பற்றி யோசிக்கவேண்டாம். அந்த செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கின அந்த அபிஷேகம் பெற்றவர்கள், அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைந்தவர்கள், தரிசனம் காண்பவர்கள் ஆகிய அந்த சபை விசுவாசிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த சபை விசுவாசிகளில் ஒருவராவது இப்படி ஒரு செங்கல் வியாபாரத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா? செங்கலில் அபிஷேகம் இறங்குமா? வல்லமை இறங்குமா?கல்லை வைத்து படுத்தால் பரலோகம் தெரியுமா? கொஞ்சமாவது யோசிக்ககூடாது.
சகோ.மோகன் சி.லாசரஸ் கம்பெனியின் போர்டு மெம்பராக மெத்தபடித்த டாக்டர் ஒருவர் உண்டு. அந்த டாக்டர் எயிட்ஸ் வியாதி சுகமானது என்று மோகன் சி.லாசரஸ் அறிவித்ததற்கு சாட்சியாக நின்றதுபோல, இந்த சபையிலும் ஒரு டாக்டர் செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்று கேள்விபடும்போது பெந்தேகோஸ்தே சபை எங்கு போகிறது? என்று புரிகிறதா?.
அடுத்து அந்த அனுபவம் உள்ள பாஸ்டருக்கு செங்கலை அபிஷேகம் செய்து நாம் விற்றால் நம் சபை விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகள் முட்டாள்கள் நிச்சயம் ஏமார்ந்து செங்கலை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அந்த பாஸ்டரின் விசுவாசம் பிரம்மிக்க வைக்கிறது. அவர் சபை மக்களை அந்த அளவு வசனத்தில் வளரவிடாமல், யோசிக்கவிடாமல் சபையை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கள்ள நோட்டு வியாபாரிகள் ரூபாய் கட்டுகளில் மேலே நல்ல நோட்டுகளை வைத்து உள்ளே வெள்ளை பேப்பர்களை கட்டுகட்டாக வைத்து பெரியபெரிய பணக்காரர்களை ஏமாற்றியிருக்கிறார்களோ. அதுபோலதானே? இதுவும் மிகப் பெரிய (சீட்டிங்ஸ்) ஏமாற்றுதனமாயிற்றே! அந்த கள்ளநோட்டு வியாபாரியாவது ஒரு கட்டில் 10 நல்ல ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றினார். ஆனால் இந்தபெந்கோகேஸ்தே சபை பாஸ்டரோ முழு செங்கல்களை மூடாமல் மறைக்காமல் அப்படியே சுளையாக 10000 ரூபாய்ககு ஒரு கல்லை அனாவசியமாக விற்றிருக்கிறார்.
ஒருவர் கேட்டார் சகோ.பால்தினகரன் மீது ஒருவர் பொதுநல வழக்கு போட்டாராமே அப்படி செங்கலை வைத்து அபிஷேகம் இறக்கும் இப்படிப்பட்ட பாஸ்டர்கள்மேலே ஏன் பொது நல வழக்கு போடக்கூடாது என்று கேட்டார்.
CSI சபையில் ஜீவன் இல்லை - செத்த சபை, வல்லமை இல்லை. அதனால் CSI சபை மக்களோ ஆராதனை முடிந்த கையோடு இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளுக்கு ஓடும் விசுவாசிகள் இனியாவது எச்சரியக்கையாக இருப்பீர்களாக.
இப்படி ஏமாற்றுகிற பாஸ்டர்களை நம் நீதிமன்றம் தண்டிக்காதா? என்று ஏராளமானவர்கள் கேட்கிறார்கள்.
D.G.S - மகனின் ஏமாற்று 420 - CHEATING இயேசு அழைக்கிறார் (ஆகஸ்ட் 2009: பக்கம் 8)
சகோ.DGS.தினகரன் அடிக்கடி பரலோகம் போய்வருவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரை பின்பற்றிதான் ஏஞ்சல் டிவி.சாதுசந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்குமார், ஆலன் பால் ஆகியோர் தாங்களும் தினகரனுக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் தினம்இரண்டுவேளை பரலோகம் போய் வருகிறோம் என்று போட்டியிட்டு பரலோகம் போய் வருவது செய்தியாக நாம் கேட்டிருக்கிறோம்.
சகோ.தினகரன் அவர்களைவிட மகன்.பால்தினகரன்அதிகம் கற்பனை தரிசனம் பார்ப்பதை அவர் எழுதிய செய்தியில் நீங்கள் அறியலாம்.
என் தந்தை.தினகரன் ஒருமுறை பரலோகத்திற்குசென்றபோது இயேசு என் தந்தையை வரவேற்றார். இயேசுவுக்கு முன் இருந்த ஒரு மேஜையின் மீது ஒருதங்கத்தால் ஆன அழகிய தங்க கை கடிகாரத்தைவைத்திருந்தார்.
அதன் பக்கத்தில் ஒரு தங்க கோப்பை, தங்க மை(Ink), முன்னோர்கள் அந்த காலத்தில் எழுத உபயோகிக்கும் தங்க இறகுமிருந்தது.
அப்போது ஆண்டவர் என் தந்தையைப்பார்த்து என் மகனே என் ஊழியத்தை செய்ய நீ வருவாயா? என்றார்.
அதைக்கேட்டபோது என் அப்பா.தினகரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவர் State Bank of India என்ற வங்கியில் நிம்மதியாக ஒரு குறையும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார். அதனால் இயேசுவை நோக்கி என் அப்பா சொன்னார். ஆண்டவரே, என் பேங்க் வேலையில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். கூடவே ஊழியமும் செய்துவருகிறேன். எனக்கு அதுபோதும் என்னை விட்டுவிடும் என்றார். ஆனால் ஆண்டவர் சொன்னார், என் மகனே நீ வேலையை விட்டுவிட்டால் உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் என்று, இப்படி நான் வாக்குகொடுத்தால் என் ஊழியத்துக்கு வருவாயா? என்று இயேசு கேட்டார். அதற்குமேல் என் அப்பாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சகோ.தினகரன் சொன்னார்: ஆண்டவரே நான் எங்கெங்கு போகிறேனோ நீரும் என்னோடு வருவீரானால் அப்போதுதான் நான் உம் ஊழியத்துக்கு வருவேன். ஆண்டவர் சொன்னார். நான் நிச்சயமாக உன்னோடு வருவேன். நான் உன்னை அழைத்திருப்பதை உன் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளின் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்துவேன். நீ என் ஊழியத்தை செய்வாயாக என்றார். உடனே என் தந்தை ஊழியத்துக்கு வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
அதன்பின் இயேசு தங்க மையினால் (இங்க்) எழுதி அதன்கீழே இயேசுகிறிஸ்து என்றுகையெழுத்திட்டு ஒரு உடன்படிக்கையை பண்ணிக்கொண்டார். இந்த உடன்படிக்கை கடிதத்தை என் தந்தையிடம் கொடுத்து(நான் மட்டும் கையெழுத்திட்டால் போதாது) நீயும் உன் கையெழுத்தை போடு என்றார். அந்த நாள் 1967ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி ஆகும். அந்த குறிப்பிட்ட வருடத்திலிருந்து என் தந்தை தினகரன் அவர்கள் எப்போதெல்லாம் பரலோகம் போகிறாரோ அப்போதெல்லாம் இயேசு கையெழுத்துபோட்ட அந்த உடன்படிக்கை கடிதத்தை இயேசுவிடம் காண்பிப்பார்.
ஒவ்வொருமுறை பரலோகம் போகும்போதும் ஒவ்வொரு திட்டத்தை இயேசு கூறுவார். மகனே, இந்த வருடத்தில் உன் ஊழியத்தில் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று அவர் சொல்வார். என் தந்தையும் அவர் சொல்வதை கேட்டு ஆமென் என்று கூறி ஆமோதிப்பார். இப்படித்தான் என் தந்தையின் ஊழியம் வெற்றிகரமாக நடந்தது.
நாம் இதுவரை புளு இங்க், கருப்பு, சிவப்பு இங்க் இப்படி பல கலரில் பார்த்திருப்போம். ஆனால் சகோ.தினகரனின் பரலோகத்தில் இந்த கலர் இங்க் எல்லாம் கிடைக்காது. எல்லாம் தங்க இங்க், தங்கபோனா, தங்க கோப்பை, தங்க மேஜை இதை எழுதும் தங்க ஊழியரான தம்பி.பால்தினகரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தினர் எல்லாம் உபயோகிப்பது, அணிவது எல்லாம் தங்கம்தான் என்பதை நாம் டிவியிலும் மேடையிலும் காண்பித்து நிரூபித்திருக்கிறோரே?.
தங்க இங்க், தங்க கோப்பை, தங்க பேனா, தங்கத்தில் இயேசுவின் கையெழுத்து தினம் பரலோக விசிட் இவைகளைக்குறித்து யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படிப்பட்ட அம்புலிமாமா கதைகளை கேட்டு கிறிஸ்தவ மக்கள், பிஷப்மார், மாடரேட்டர் எல்லாரும் கேள்வி எழுப்பாமல் ரசித்து கொண்டிருக்கிறார்களே தவிர கேள்விகேட்க யாருக்கும் தைரியம் இல்லை.
ஒருவர் இயேசு அழைக்கிறார் குடும்பம் சேர்க்கும் கோடிகள், சொல்லும் பொய் கதைகள், பொய்யானஅற்புத சாட்சி, கோபுரங்கள் பணிவது மக்களிடம் பொய்யான காரணங்களைக்கூறி காணிக்கை பெறுவது, ஒரு குழந்தைக்கு 2000 ரூபாய் வாங்கி ஜெபிக்க கர்த்தர் சொன்னார். அதற்கு இளம் பங்காளர் திட்டம்என்று பெயர் வைத்து கோடிகோடியாக பணம் சேகரிக்கப்பட்டது. ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரிகட்ட சொன்னார் என்று கூறி ஒவ்வொரு மாணவனிடம் லட்சக்கணக்கில் கேப்பிடல் பீஸ்வாங்கப்பட்டதையெல்லாம் குறிப்பிட்டு சிலர் பொதுநல வழக்கு போட்டதாக செய்திதாளில் செய்திகள் வந்தது. பாறையோடு பானை மோதியதுபோல அந்த கேஸ் தொடர்ந்து நடத்தமுடியாமல் வழக்கு பாதியிலேயே நின்றுப்போனது. கிறிஸ்தவ ஊழியர்கள் மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள் என்று அன்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.
விருதுநகர் சகோ.ஆலன்பால் என்பவர் இவரும் அடிக்கடி நரகத்துக்குபோய் வருபவர். 19 கோடியில் சென்னையில் மிகப்பெரிய ஆலயம் கட்ட ஆம்பித்திருக்கிறார். டிவியில் தன் சொந்த சேனலான ஆசீர்வாதம்டியியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
இப்படி தனி ஊழியம் செய்யும் ஊழியர்கள் எல்லாரும் தங்களை சிஎஸ்ஐ என்றும், லூத்தரன் சபையை சார்ந்தவன் என்றும் கூறி அந்நியபாஷை பேசி மறைமுக பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தில் வாழ்ந்து ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி பல ஊழியர்கள் மக்களை ஏமாற்றுவதை குறித்து ஏமார்ந்த மக்கள் பக்கம்பக்கமாக கடிதங்கள் எனக்கு எழுதுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பொய் பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் அப்படிப்பட்ட சபைகளிடமும் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மக்களை ஏமாற்றி அகப்பட்ட ஏராளமான புறமத சாமியார்களின் சன்யாசிகள் ஏராளமானவர்கள் போலீஸில் அகப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். இவர்களோடு சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், ஸ்டார் ஊழியர்களும், அற்புதம் அடையாளம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றும் சில ஊழியர்களும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் பல போலி ஊழியர்கள் பலர் இன்னும் வெளியே உலா வருகிறார்கள்.
“ஏற்கனவே நான் எச்சரித்தது போல, இந்தியாவுக்கான ஆபத்து கேதார்நாத்தில் துவங்கி விட்டதாக’ சொல்லிக்கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி யான உமாசங்கர்.
இது தொடர்பில் உமாசங்கள் மேலும் தெரிவிக்கையில்,,’’”"தமது பிள்ளைகளை இயேசு உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ள வருவதற்கு முன்னர் இதுபோன்ற அழிவுகள் நடக்கும் என்று பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்க தரிசனமாக எழுதப்பட்டுள்ளது.
பைபிளின் ஆகாய் 2:6 வசனத்தில் கர்த்தர், “கொஞ்ச காலத்துக்குள்ளே இன்னும் ஒரு தரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப் பண்ணுவேன்’ என சொல்லியிருக்கிறார். மேலும், செப்பானியா 1:3 அதிகாரத் தில், “மனுஷரையும் மிருக ஜீவன்களையும் வாரிக் கொள்வேன். ஆகாயத்துப் பறவைகளையும் சமுத்திர மச்சங்களையும் வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரை சங்காரம் பண்ணுவேன்’ என சொல்லியுள்ளார் கர்த்தர். இதன் அழிவுகள் எப்படி இருக்கு மெனில், எரேமியா 25:33-ல் “அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவங்கி மறுமுனை மட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள். அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப் படாமலும் பூமியின் மேல் எரு வாவார்கள்’ என எச்சரிக்கிறார்.
இந்த விஷயங்களை, கடந்த 2012-ஆம் வருடம் , உலகம் பேரழி வை சந்திக் கும் என் பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதனை நிரூப்பிப்பது போலவே, இன்றைக்கு கேதார்நாத்தில், பல ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கப்படவில்லை. பலரின் உடல்கள் கண்டுபிடிக்க முடியாததால் அடக்கம் செய்யப்படாமலே பூமி மேல் கிடக்கிறது. அந்த உடல்கள் மக்கி எருவாக மாறிப்போயிருக்கிறது.
2011 மார்ச் 8-ந் தேதி தமது தீர்க்கதரிசி மூலம் எனக்கு ஒரு தகவலை அனுப்புகிறார் இயேசு. அப்போது, “யாத்திராகமத்தில் 7 முதல் 12 வரையுள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்டிருப்பது போல, எகிப்தின் தேவர்களை (கடவுள்கள்) எப்படி தண்டித் தாரோ அதேபோல இந்திய கடவுள்களையும் தண்டிப்பேன் எனவும், எகிப்தின் தேவர்கள் எல்லாம் எப்படி பொய்க்கடவுள்கள் என்று நிரூபித்தாரோ அதேபோல இந்திய தேவர்கள் அனைவரும் பொய் என நிரூபிப்பேன்’ எனவும் தெரிவித்தார். அந்த தீர்க்கதரிசனம்தான் இப்போது நிறைவேறத் துவங்கியுள்ளது” என்கிறார் சீரியஸாக உமாசங்கர்.
“”இந்தியாவுக்கு வரக்கூடிய ஆபத்துகளை தீர்க்கதரிசி மூலம் உங்களுக்கு இயேசு தகவல்களை அனுப்பியதாக சொல்கிறீர்கள். அந்த ஆபத்துகளை நீங்கள் ஏன் தடுத்திருக்கக்கூடாது?” என்று கேட்டபோது,’”"என்னுடைய பிரசங்கத்தில் பல முறை இதனை தெரிவித்திருக்கிறேன். அப்போது “தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த அரசாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பயன் தராது. இயேசுவிடம் சரணடைவது மட்டுமே தப்பிக்க ஒரே வழி’ என்பதையும் சொல்லியிருக்கிறேன். அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த அழிவுகளிலிருந்து மனித ஜீவன்கள் தப்பித்திருக்கலாம்”’என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “”பூமியின் பெரும் அழிவுக்கான நிமிடங்கள் துவங்கி விட்டன. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்குத் தண்டனை அதிகம் உண்டு. காரணம் இந்தியாவில் தான் உருவ வழிபாடுகள் அதிக அளவில் இருக்கிறது. தேவனாகிய இயேசு, “உருவ வழிபாடுகள் கூடாது என்பதோடு அதை மீறுபவர்கள் எனது எதிரிகள்’ என்கிறார்” என்றவரிடம், “”கிறிஸ்தவர்களும் இயேசுவின் உருவத்தை வைத்து வழிபாடு நடத்துபவர்கள்தானே?” என்று கேட்டபோது,’’”"கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டு உருவ வழிபாடு செய்பவர்களும் இயேசுவின் கட்டளையை மீறுபவர்கள்தான். வேளாங்கண்ணியில் உருவ வழிபாடு நடப்பதால் அங்கு நிகழ்வது கிறிஸ்தவ பிரசங்கமே அல்ல. அதனால் கர்த்தரின் தண்டனையிலிருந்து இவர்களும் தப்பிக்க முடியாது. தற்போது மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் தொடங்கியுள்ள இந்த அழிவுகள் உச்சக்கட்டத்தை அடையும். வேதாகமத்தில் இது குறித்து விலாவாரியாக தீர்க்க தரிசனமாக சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் உமாசங்கர்.
“”அழிவுகள் உச்சக்கட்டத்தை அடையுமென்கிறீர்கள். அது எப்படி இருக்கும்? எப்போது நடக்கும்?” என கேட்டபோது…’’”"இந்த அழிவின் உச்சக்கட்டம் ஒரே நாளில் உலகம் முழுவதும் பல கோடி உயிர்களை பலிகொள்ளும். மகா பூமியதிர்ச்சிகள், சுனாமிகள், நில நடுக்கங்கள் போன்றவற்றால் இதனைச் செய்வேன் என சொல்லியிருக்கிறார் கர்த்தர். ஏசாயா 13:13 வசனத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பேரழிவுகள் இந்த மாதம், இந்த வருடம்தான் நடக்கும் என சொல்ல இயலாது. அழிவிற்கான முதல் கட்டம் துவங்கிவிட்டதால் இனி பேரழிவிற்கான காலகட்டம்தான். தர்க்கங்கள் செய்வதால் பலன் ஒன்றுமில்லை” என்கிறார் உமாசங்கர்.
உமாசங்கரை ஒரு காலத்தில் அவரது நேர்மைக்காக பாராட்டியதுண்டு. சுடுகாட்டுக் கூரை ஊழலை தைரியமாக அம்பலப்படுத்தியதற்காக வியந்ததுண்டு. திரூவாரூர் மாவட்ட ஆட்சியராக தகவல் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியபோதும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையோடு இருந்தபோதும் பிரமித்ததுண்டு. திமுகவினரால் ஒரு சமயம் பழிவாங்கப் பட்டபோது அவருக்கு நியாயம் கேட்டு குரல் கொடுத்ததும் உண்டு.
ஆனால் இப்போது அவர் உதிர்த்துள்ள முத்தாகிய
“உத்தர்கண்டிற்கு வெள்ளத்தை அனுப்பி இந்துக்களை தண்டிக்கப் போவதாய் இயேசு என்னிடம் முன்னமே கூறினார்“
என்பதைப் படிக்கிறபோது மத வெறி அவர் நாடி, நரம்பு, புத்தி எல்லாவற்றிலும் ஊறிப் போய் மனநிலை பாதிக்கப்பட்டவராய் மாறி விட்டார் என்றுதான் தோன்றுகின்றது.
மதச்சார்பற்ற ஒரு நாட்டின் அதிகாரியாய் இருக்கும் அருகதையை அவர் இழந்து விட்டார். அவர் உடனடியாக பதவி விலகி சாதாரண மனிதனாய் என்ன இழவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அப்படி அவர் பதவி விலகாவிட்டால் அரசு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஆத்தூர் : ""இன்னும் மூன்று மாதங்களில் உலகம் அழியும்,'' என, தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கிறிஸ்தவ போதகர்கள் சார்பில், "2012ம் ஆண்டு வரப்போகும் அழிவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்பது குறித்து, கிறிஸ்தவ மத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி அழிவை சந்திக்க உள்ளது. சுனாமி, சூரிய புயல், விண்கற்கள் விழுதல் போன்ற இடர்ப்பாடுகளில், ஏராளமானோர் இறந்து விடுவர். நிலத்தின் ஒரு பகுதி கடலாக மாறி விடும், கடற்கரை நகரங்கள், 15 கி.மீ., வரை அழிவை சந்திக்கும்.அவ்வாறு, ஆண்டவர் வரும் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். கிறிஸ்தவர்கள், வீட்டில் வைத்துள்ள ஜாதகங்களை, தீயிட்டு கொளுத்துங்கள், குப்பையில் வீசியெறியுங்கள். ராகு காலம், எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களைக் கூட எரித்து விடுங்கள். ஜாதகங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு உமாசங்கர் பேசினார்.பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""கிறிஸ்தவர்களிடம் மட்டும், கிறிஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுகிறேன். அரசு பணியை தொய்வு இல்லாமல் செய்கிறேன். பா.ஜ.,வினர், அரசியல் சாசனச் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர். என் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தாலும், கற்களை வீசினாலும் தாங்கிக் கொள்வேன்,'' என்றார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கூறுகையில், ""ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது, சட்ட விரோதமானது. அவர் மீது, விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவரது கிறிஸ்தவ மதப் பிரசாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, புகார் செய்துள்ளோம்,'' என்றார்.
திருநெல்வேலி:சங்கரன்கோவில் தாலுகா, சேர்ந்தமங்கலம் சர்வேஸ்வரன் கோயில் மற்றும் நிலங்களை மீட்க 30கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என நெல்லையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன் தெரிவித்தார்.இது குறித்து நெல்லையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, சேர்ந்த மங்கலம் கிராமத்தில் உள்ள சர்வேஸ்வரன் கோயில் 11ம் நூற்றாண்டை சார்ந்ததாகும். இந்த கோயிலுக்கு 50 ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி தேர்திருவிழா பிரமாண்டமாக நடப்பது வழக்கம்.இதற்கிடையே கடந்த 1887ம் ஆண்டு கோயில் கருவறைக்கு முன் பகுதியில் அமைந்த கல் மண்டபத்தை ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் உதவியுடன் இந்துமக்கள் எதிர்ப்பை மீறி சர்ச் கட்டினர். சர்வேஸ்வரன் கோயில் கருவரையின் கல்மண்டபம் அப்படியே உள்ளது. கருவறையின் முன் பகுதி வாசலின் பெரிய கதவை சமீபத்தில் சர்ச் நிர்வாகத்தினர் உடைத்து தெரிந்தனர். தற்போது சர்வேஸ்வரன் கருவறை பொருட்கள் வைக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. கோயிலுக்கு பாத்தியப்பட்ட சொத்து 1894ம் ஆண்டு பாளை. மறை மாவட்டம் என்ற பெயரில் சங்கரன்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசு ஆவணங்களில் சர்வேஸ்வரன் கோயில் என்ற பெயரிலேயே உள்ளது. தற்போது இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்தின் மதிப்பு 100கோடி ரூபாயாகும். இந்த கோயில் தற்போது கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா ஆபீசில் நடந்த சமாதான கூட்டத்தில் சர்வேஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சம்பந்தமான கோர்ட் அல்லது இந்து சமய அறநிலையத்துறை மூலமாக கோயில் வழிபாட்டுக்கான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேர்ந்தமங்கலம் சர்வேஸ்வரன் கோயிலையும், அதற்கு சொந்தமான நிலத்தையும் மீட்டு தினசரி பூஜைகளை நடத்த வேண்டி விஷ்வஹிந்து பரிஷத் சுற்றுப்பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் துறவிகள், சாதுக்கள், சிவனடியார்கள் போன்றோரை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளோம். இவ்வாறு விஷ்வ ஹிந்து பரிஷத் நாகராஜன் தெரிவித்தார்.பேட்டியின் போது துறவிகள் பேரவை மாநில செயலாளர் சுவாமி ராகவானந்தா, வி.எச்.பி.,மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், பாஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கிறிஸ்தவ மதபோதகர் கைது
By வாசு, சென்னை
First Published : 10 July 2013 08:57 PM IST
அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகசென்னை பெரவள்ளூரில் கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
பெரவள்ளூர் வி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் சுடர்மணி. இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த மதபோதகர் அலயன்பால் (40) என்பவர் தனக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் நெருக்கம் என்றும், அவர் மூலம் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார். அவர் பேச்சை நம்பிய சுடர்மணி, தனக்கும், தனது சகோதரருக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். உடனே பால், அமைச்சருக்கு லஞ்சமாக கொடுக்க பணம் வேண்டும் எனக் கேட்டாராம். இதையடுத்து சுடர்மணி ரூ. 1.60 லட்சமும், 6 பவுன் தங்கநகையும் பாலிடம் கொடுத்தாராம்.
இதேபோல அப் பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சகணக்கில் பால் பணம் வாங்கினாராம். பணத்தை பெற்றுக் கொண்ட பால், யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள், தங்களது பணத்தையாவது திருப்பித் தரும்படி பாலிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் பொதுமக்கள், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அலயன்பாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை 16.12.2012 இரவு சத்தியம் டிவியில் காண நேர்ந்தது. அது வாலிப பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி. அதில் காட்டப்பட்ட சின்னத்திரையில் சினிமாவில் காட்டப்பட்டது. கல்லூரியில் படிக்க டொனேஷன் வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ் முதலாளியைப் பற்றிய கதை ஆகும். ஒரு ஏழை தகப்பன் தன் மகளுக்காக டொனேஷன் கொடுக்க வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கியதால் இந்த கல்லூரியில் படிக்கும் அந்த ஏழை சிறுமி கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத மனவேதனையை அந்த சினிமாவில் காட்டினார்கள். இந்த விவரம் அந்த அந்த கல்லூரி முதலாளி மகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு அந்த முதலாளி மனந்திரும்பி டொனேஷன் பணத்தை திரும்ப கொடுத்து அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சந்தோஷத்தில் பங்குக்கொண்ட சம்பவமும் அந்த சினிமாவில் நல்ல விதத்தில் சித்தரித்திருந்தது.
அதன்பின் பிரசங்கம் செய்த மோகன் சி.லாசரஸ் அவர்கள் சிறு வாலிப பிள்ளைகளை தங்கள் பெற்றோரின் வருமான விவரத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க சொல்கிறார். அவரவர்களின் பெற்றோர் நியாயமான முறையில் பணம் சம்பாதிக்கிறார்களா? அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது? லஞ்சம் மூலமாகவா? என்பதையெல்லாம் விசாரித்து பெற்றோரை பிள்ளைகளை திருத்தும்படி கேட்டுக்கொள்கிறார். அந்த சின்னதிரைகதை கூறும் நற்போதனையும், சகோதரன் மோகன் சி.லாசரஸ் கூறிய நியாயமான அப்படிப்பட்ட ஆலோசனை அந்த டிவியில் பிரயோஜனமுள்ளதாக கண்டேன். அப்படியே, ஏழைகளுக்கென்றுகர்த்தர் காருண்யா கல்லூரியை கட்ட சொன்னார் என்று பொய் சொல்லி லட்சக்கணக்கான டொனேஷன்ஏழைகளிடத்திலிருந்து வாங்கி கல்லூரி நடத்தும் தொழிலதிபர் சகோ.பால்தினகரன் அவர்களையும் இந்த டிவி சினிமா கல்லூரி முதலாளியுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.
பொய் செய்தி: இயேசுவை கேட்டேன்:
16.12.2012 சகோ.ஆனந்தஸ்ரா டிவி செய்தியை பார்த்தேன். அவர் பேசியதாவது: இயேசு பிறப்பின்போது சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரத்தைக்குறித்து உலகில் பலர் பலவாராக கூறுகிறார்கள். பலர் வால் நட்சத்திரம் என்கிறார்கள்!. உண்மை என்ன என்று அறிய நானே இயேசுவிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: அது வால் நட்சத்திரம் அல்ல. அது ஒரு புதுமையான விசேஷ நட்சத்திரம் என்றார். இதன்மூலம் அவர் அன்று செய்த பிரசங்கத்தில் மக்களுக்கு கூற விரும்பவதென்னவென்றால் எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மிக நெருக்கம் அதிகம்-சாதாரண விஷயமானால்கூட அவரிடம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார் என்பதாகும். நட்சத்திரம் விஷயம் அத்தனை முக்கியமான ஆவிக்குரிய விஷயமா? வேதமே அது வால் நட்சத்திரம் என்று கூறவில்லையே!. இவர் ஏன் இத்தனை பாடுபட்டு அதை இயேசுகிறிஸ்துவிடம் விசாரிக்கிறார்.
ஒரு மனுஷன் சர்வசாதாரணமாக ஒருவனிடம் டைம் என்ன ஆச்சு என்று கேட்பதுபோல், இவர்களுக்கு இயேசுகிறிஸ்து அவ்வளவு மதிப்பு குறைந்த தெருவில் போகும் சாதாரண மனுஷனாக இயேசுவை மாற்றிவிட்டார்கள்.
மிகைப்படுத்திய சாட்சி - இமயம் டிவியில் 4.5.2013 காலை
சகோ.மோகன் சி.லாசரஸ் செய்தியில் சகோ.ஜாஷ்வா என்பவரின் (ஆஸ்ட்ரேலியா) சாட்சி: எனக்கு தேவையான தொகை 2000$ டாலர் அன்று காலை எனக்கு வந்த தபாலில் ஆழு மணிஆர்டர் மூலமாக கிடைத்தது. யார் அனுப்பினார்கள், என்னை எப்படி தெரியும், எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தேவன் அற்புதம் செய்தார். கேள்வி என்ன? ஒருவர் மணிஆர்டர் அனுப்பினால் அனுப்பியவரின் பெயர் விலாசம் குறிப்பிடாமல் உலகில் எங்கும் யாரும் அனுப்ப முடியாது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அற்புதத்தில் சாட்சி கூறியவர் யார் அனுப்பியது, எங்கிருந்து வந்தது என்பது அதியசயமாக இருந்தது. நம்பமுடிகிறதா?. இவர்கள் ஆண்டவருக்கு தங்கள் சாட்சிமூலம் உதவுபவர்கள்.
ஆண்டவர்தான் நமக்கு உதவவேண்டும். நம் உதவி ஆண்டவருக்கு தேவை இல்லை.
கேள்வி:எங்கள் சென்னை CSI டையோசிஸ்ஸில் எங்கள் சபைகளில் உள்ள ஆயர் ஞாயிறு ஆராதனையில் பொது ஜெபத்தில் CSI மாடரேட்டருக்காக ஜெபம் ஏறெடுப்பதில்லை. நாங்கள் அதை விசாரித்தோம். ஆனால் அதை அவர் அலட்சியம் செய்துவிட்டார்.
பதில்:CSI ஐக்கியத்தில் இணைந்துவிட்ட ஒரு சபை, ஐக்கியத்தில் இணைந்துள்ள எல்லா சபை தலைவர்களுக்காகவும், பிஷப்மார்களுக்காகவும், மாடரேட்டருக்காகவும் அதோடு மாத்திரமல்ல,மார்தோமா சபையின் பிரதான பிஷப்.மெத்தராபோலித்தா அவர்களுக்காகவும் வேண்டுதல் ஜெபம் ஏறெடுப்பது CSI சினாட் சட்டத்தில் அமைந்த ஆராதனை கிரமத்தில் உண்டு. அனைத்து மாநிலங்களிலும் உள்ள எல்லா CSI சபைகளிலும் அந்த பொது ஜெபத்தை ஏறெடுக்கிறார்கள். சில சமயங்களில் ஆராதனைநேரம் அதிகமாகிவிட்டால் எந்த பிஷப்புக்காகவும் ஜெபிக்காமலும் விட்டுவிடுகிறார்கள்.
ஆனால் சென்னை பேராயத்தில் பிஷப்.தேவகடாட்சம் அவர்களின் ஆதரவாளர்கள் நிறைய பேர்கள் உண்டு. அவர்களுக்கு இப்போதுள்ள மாடரேட்டர் அவர்களை பிடிக்காது. ஆகவே அவர்கள் யாரும் சபை ஆராதனையில் மாடரேட்டர் அவர்களுக்காக ஜெபிப்பதில்லை. நீங்கள் எழுதியதை பார்த்தால் Wesley English Churh-லும் பிஷப் ஆதரவாளர் ஆயராக இருக்கிறார் என்று விளங்குகிறது. ஆனால் இதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. கோர்ட்டுக்கு போனாலும் பிரயோஜனமில்லை.
உண்மையான ஆவிக்குரிய ஆயராக இருந்தால் விருப்பு-வெறுப்பு இல்லாமல் 1 தீமோ 2:1-5 வசனத்தின்படி எல்லா அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும் ஸ்தோத்திரதோடுள்ள ஜெபம் ஏறெடுக்க வேண்டும் என்ற வசனத்துக்கு கீழ்ப்படியவாவது ஜெபித்திருக்கவேண்டும். ஆயர் ஜெபிக்காமல் போனால் அதை பிரச்சனையாக்காதீர்கள். சபை மக்கள் வசனத்தின்படி அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக அவரவர்கள் தங்களுக்குள்ளே ஜெபித்துக்கொள்ளுங்கள்.
வாசகர் கடிதம் 1: தலைக்கு டை அடிப்பது
ஜாமக்காரன் 2013 ஏப்ரல் மாத பத்திரிக்கையில் தலைக்கு டை அடிப்பது பற்றி உங்கள் பதில் மற்றவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும். உங்கள் பதில் உங்களை நியாயப்படுத்த உதவும். வெளிப்புற அலங்காரத்தால் ஸ்திரீகளை அலங்கரிக்கவேண்டாம் என்று பவுல் சொல்லியிருக்கும்போது (1 தீமோ 2:9) ஆண்கள் டை அடித்துக்கொள்வது சரியா?
முதிர் வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை ஆகும் நீதி 20:29 என்பதை மறந்துபோக வேண்டாம்.
வாசகர் கடிதம் 2: தசமபாகம்
தசமபாகம் ஒரு நீதிமன்ற வழக்கு என்ற பகுதி என்னை கவர்ந்தது. வேத வசன உண்மையை இன்றைக்கு வயிற்று ஊழியர்கள் போதிப்பதே இல்லை. அவர்கள் பொய்மையே பேசுகிறார்கள்.
வாசகர் கடிதம் 3:
தலைக்கு டை அடிப்பதை குறித்த கேள்விக்கான - பதில் தேவையற்றது. இளமை உணர்வு உண்டாகிறது என்ற உங்கள் வாதம் ஏற்புடையதல்ல. அது Self Deceptive feeling - அதாவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு உணர்வு. வாசகர்களின் டை அடிக்கும் சபலத்திற்கு திசை திருப்புவதாக இருக்கிறது. ஆகவே உங்கள் டை கருத்து என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இந்திய நாட்டில் பல ஏமாற்று தொழில்கள் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக இடம் பெறுவதுசிட்பண்ட் தொழிலாகும். இந்த தொழில் நடத்துபவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். 1000 கொடுத்தால் 2000. 2000 கொடுத்தால் 4000 அதுவும் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் என்று அறிவிக்கும் இப்படிப்பட்ட கவர்ச்சி விளம்பரத்தை மக்கள் நம்பிவிடுவார்கள்.
முன்பெல்லாம் இப்படி ஏமாறுபவர்கள் பாமர மக்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்றுதான் நாம் நினைத்தோம். இப்போது பெரிய பெரிய பட்டதாரிகள், பெரும் பணக்காரர்கள்கூட இப்படிப்பட்ட பொய் விளம்பர இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இவர்களிடம் கொடுத்து ஏமாற்றப்பட்டு பல கோடிகள் இழந்து பாதிக்கப்பட்ட இவர்கள் இப்போது போலீசுக்கு புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்ற அந்த கம்பெனியும் இப்போது அங்கு இல்லை - அந்த சிட்டு கம்பெனி நடத்திய ஆட்களும் தலைமறைவாகிபோனதால் போலீஸ் அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளில் தினந்தோறும் இவைகளை வாசிக்கிறோம். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் பணம் கொடுத்து பணம் திரும்ப பெறமுடியாமல் ஏராளமானவர்கள் கண்ணீர்விட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் காட்சியை தினம் டிவியிலும் பார்க்கிறோம்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை - ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக பெருகிக்கொண்டே போவார்கள் என்பது எத்தனை உண்மை!.
இன்றைக்கு கிறிஸ்தவ உலகிலும், கிறிஸ்தவ சபைகளிலும் கவர்ச்சி வசனங்களைக்கூறி கிறிஸ்வர்களின் காணிக்கையை பிடுங்கும் ஏமாற்றும் ஊழியர்கள் பெருவிட்டனர். கர்த்தர் சொன்னார் என்று கூறியும், தசமபாகம் என்ற பெயரிலும் பணம் சேர்க்கும் ஏமாற்று பிரசங்கங்கள் ஏராளமாக பெருகிவிட்டன. அப்படி அவர்கள் ஆராதனையில் செய்த பொய் பிரசங்கங்களை பெந்தேகோஸ்தே சபைகளில் அங்கத்தினர்களாக உள்ள விசுவாசிகள் தங்கள் மொபைல்களில் ரிகார்ட் செய்து அப்படிப்பட்ட பிரசங்கங்களை எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பொய் சொல்லும் இவர்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுப்பாரா? என்று கேட்கிறார்கள் அல்லது நம்நீதிமன்றங்களாவது இவர்களை தண்டிக்க அல்லது இவர்களின் ஏமாற்றை தடுக்க இயலுமா? என்று கேட்டு பெந்தேகோஸ்தே சபை வாசகர்கள் பல வருடங்களாக எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்து நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் வந்த செய்தியை வாசித்த ஜாமக்காரன் வாசகர்களும் இரட்சிக்கப்பட்ட வக்கீல் தொழில் செய்பவர்களில் பலரும் இவைகளை நீதிமன்றம் நிச்சயமாக விசாரிக்க முடியும் என்றார்கள்.
இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை நீதிமன்றம் விசாரிக்கவும், இவர்கள் செயல்களை தடைசெய்யவும் முடியும் என்று கூறி சட்டம் எண் 420 போல இன்னும் சில சட்ட எண்களை இவர்கள் குறிப்பிட்டு எனக்கு எழுதியுள்ளார்கள். இப்படி பலவிதமாக சபை விசுவாசிகளை ஏமாற்றும் பாஸ்டர்களை தண்டிக்கவும் முடியும் என்றார்கள்.
இப்போது டிவியிலும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும், சில ஊழியர்கள் தாங்கள் கட்டும்கட்டிடத்துக்கு அல்லது கட்டபோகும் கட்டிடத்துக்கு ஒருவன் பணம் கொடுத்தவுடன் கடவுள்தாமதமில்லாமல் அந்த நபரின் கதவைத்தட்டி கொடுத்த காணிக்கையைப்போல் 10 மடங்கு பணமாக கர்த்தர் முன்பின்தெரியாத யார் மூலமாகவோ அந்த பெரும் தொகையை கொடுத்து அனுப்பினார் என்றுதுணிகரமான பொய்யுடன்கூடிய புகைப்படத்தோடு பொய் சாட்சிகளை உருவாக்கி அதை டிவியிலும், பத்திரிக்கையிலும் வெளியிட்டு ஜனங்களை காணிக்கை போடும்படி தூண்டி வஞ்சிக்கிறார்கள் தெரியுமா?.
சென்னையில் பிரபல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் காணிக்கை வேளையில் தன் கையில் உள்ள வாட்ச்சை (கைக்கடிகாரத்தை) கழற்றி முதல் காணிக்கையாக நான் போடுகிறேன் ஆவியானவரால் ஏவப்படுகிறவர்கள் அவரவர்களிடம் உள்ள ஆபரணங்களை காணிக்கை பையில் போடலாம். இன்று காணிக்கை பையில் பணம் போடக்கூடாது கையில் என்ன ஆபரணம் உண்டோ அதை போடலாம். கர்த்தர் இரட்டிப்பாக அதை உங்களுக்கு திருப்பி சீக்கிரமாகவே கொடுப்பதாக இன்று காலை ஜெபத்தில் என்னிடம் அறிவித்தார் என்றார். ஏமார்ந்த ஜென்மங்கள் பெண்கள்தானே!. மேலும் ஆண்களைவிட ஆபரணம் அணிவது பெண்கள்தானே? ஆனால் பலர் தயங்கினார்கள். ஆனால் பெண்களில் ஒருவர் மோதிரத்தை மட்டும் கழற்றிபோட்டார், மற்ற பெண் கழுத்தில் உள்ள மூன்று மாலையில் மெல்லிய மாலையை கையில் வருட்டி தேடி கண்டுபிடித்து அதை கழற்றிபோட்டுவிட்டார். காணிக்கை வாங்குபவர் அவள் கழற்றும்வரை பொறுமையோடு அந்த சகோதரியை பார்த்துக்கொண்டு நிற்கிறார். வரிசையில் நின்றுக்கொண்டிருந்த அடுத்த பெண்கள் அதை கவனித்துக்கொண்டே திகைத்து நின்றுவிட்டார்கள். ஒரு சகோதரி தன் கழுத்தில் இருந்தவடகயிறு போல் மொத்தமாக இருந்த செயினை கழற்றிபோட்டுவிட்டு அல்லேலுயா என்று சத்தமிட்டு கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். அது சந்தோஷ அழுகை அல்ல என்று அன்று மதியமே அறிய முடிந்தது. அந்த சகோதரி மதியம் வீட்டுக்கு சென்றதும் சபையில் நடந்த ஆபரண காணிக்கைப்பற்றியும் ஆலயம் கட்ட பழைய ஏற்பாடு காலத்தில் நகைகளை இஸ்ரவேல் ஜனங்கள் கொடுத்ததுப்போல இன்று ஆலயத்தில் நடத்தப்பட்டது. ஆகவே நம் ஆலயம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் அல்லேலுயா என்றார். புருஷன் தன் மனைவி கழுத்தை பார்த்து தாலி செயினையா கழற்றி போட்டாய்? ஆம். இன்று மற்ற மெல்லிய செயின்களை போடாமல் போய்விட்டேன். ஆகவே வேறு வழியில்லாமல் இருந்த அந்த ஒரே செயினை ஆலய கட்டுமான பணிக்காக போட்டுவிட்டேன். உடனே கணவன் பளார் என்று ஒரு அறை அறைந்து நான் கட்டியதாலி செயினை கழற்றிபோட உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? போ - மதிய சாப்பாடு நானே போட்டு சாப்பிட்டுகொள்கிறேன். திருடர்களாகிய அந்த பாஸ்டர்கள் அதை அழித்து பணமாக்கும் முன் அந்த செயினை திரும்ப வாங்கி வா? என்றார். வேண்டாங்க, தெய்வ குத்தம் உண்டாகிவிடும் என்று அழுதாள். அந்த செயினை கொண்டு வராமல் வீட்டு வாசல்படி ஏறாதே என்று தயவுதாட்சண்யம் பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தினார்.
அந்த சகோதரி ஆட்டோ பிடித்து அந்த பெந்தேகோஸ்தே சபைக்கு போனார். பாஸ்டர் அம்மாவிடம் விவரம் கூறியவுடன் பாஸ்டர் வெளியே போய்விட்டார். அவர் வந்தால்தான் காணிக்கை பை தொட முடியும் என்றார். மாலை 5 மணி ஆகும்போதுதான் அந்த பாஸ்டர் வந்தார். விவரம் அறிவித்தபோது காணிக்கை போட்டது திருப்ப எடுக்ககூடாது என்று பாஸ்டர் கூறினார். ஆனால் அந்த சகோதரி பாஸ்டர் ஐயா, என் கணவர் உங்கள் பேரில் போலீஸ் புகார் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். என் கணவரும் இந்த சபையில் பல வருடமாக வருகிறவர். தசமபாகம் தவறாமல் கொடுப்பவர். ஆனால் தாலி செயினை போட்டதால்தான் உங்கள்மேல் மிகவும் கோபமாக இருக்கிறார். தயவுசெய்து கொடுத்துவிடுங்கள். அதன்பின் அந்த பாஸ்டர்வேறுவழியில்லாமல் உதவி பாஸ்டர்களை அழைத்து அந்த இரும்பு பெட்டியை திறந்து அந்த சகோதரியின் ஜெயினை அவளைக்கொண்டே கண்டுபிடித்து எடுத்து கொடுத்துவிட்டு ஒரு பேப்பரில் எழுதி வாங்கி அனுப்பி விடுங்கள் என்றார். எப்படியோ தாலி செயின் திரும்ப கிடைத்தது. இப்போது அந்த குடும்பம் பாஸ்டர்.வாசுஅவர்களின் சபைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.
இது குரங்கும் - தொப்பி வியாபாரியும் என்ற கதை மாதிரி இல்லை!. மறுவாரம் இந்த சகோதரியின் புருஷன் கோபம் தனியாமல் வேறுசில கிறிஸ்தவ வியாபாரிகளைகூட கூட்டிக்கொண்டு பாஸ்டரை அடிக்க கிளம்பினார். மனைவி காலை பிடித்து கெஞ்சி அழுததால் அந்த பாஸ்டர் அன்று அடி வாங்காமல் தப்பினார்.
நான் 15 வருடமாக ஆராதனைக்கு போய்வரும் என் சபை பாஸ்டர் தசமபாகத்தில் பொய் சொன்னவர்கள் எல்லாரும் கர்த்தரிடம் இப்போது மன்னிப்பு கேட்கலாம் என்று 10 நிமிடம் ஜெபிக்க நேரம் கொடுத்துவிட்டு இப்போது தீர்மானம் எடுங்கள். தசமபாகத்தில் இதுவரை மறைத்த பணத்தை எத்தனை தவணைகளில் செலுத்தபோகிறீர்கள் என்பதை ஆவியானவரிடம் சொல்லிவிடுங்கள். ஏன் என்றால்அனனியா-சப்பிராளுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் உண்டாகக் கூடாது. உங்கள் பிள்ளைகள்அனாதைகளாகிவிடுவார்கள். இப்படி பயமுறுத்தி பேசுகிறார். அன்று இரவு எங்களுக்கு தூக்கமே வராமல் எங்கள் குடும்பமே பயத்தில் படுத்துகிடந்தோம். அந்த பாஸ்டர் எப்பேர்ப்பட்ட தசமபாக கள்ளனாகஇருக்கிறார் பாருங்கள். ஒரு குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்துவிட்டாரே!.
தனக்குரிய எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் சொல்லுகிறது. உன்னுடைய பி.எப் (பிராவிடன்ட் ஃபண்ட்) எவ்வளவு, உன் மகளுக்கு திருமணம் செய்தபோது கொடுத்த டவுரி பணத்தில் நீ தசமபாகம் கொடுக்கவில்லை. தனக்குறிய எல்லாவற்றிலுமிருந்து தசமபாகம் கொடுத்தான் என்று வேதம் நமக்கு போதிக்கிறதை கவனியுங்கள். உன் சம்பளத்திலிருந்து மட்டுமல்ல,வியாபாரிகள் உங்கள் வருமானங்களிலிருந்து மட்டுமல்ல, மகள் திருமணத்துக்கு நீ கொடுத்த நகைகள், ரொக்கம் (டவுரி) ஆகிய எல்லாவற்றிலும் தேவனுக்கு பங்கு இருக்கிறது. உன் வீட்டில் இரண்டு கல்யாணம்கடந்த வருடம் நடந்தது. உன் பிள்ளைகளின் திருமணத்தை நீ வேறு சபையில் வைத்து நீங்கள் நடத்தினாலும் அந்த திருமண செலவின் தசமபாகம் உன் மேய்ப்பனாகிய நான் ஊழியம் செய்யும் இந்த சபைக்கு உரியது ஆகும். அதை நீ கொடுத்து தீர்க்கும்வரை நீ கர்த்தருக்கு கடன்காரனாக இருக்கிறாய் என்பதை உணரவேண்டும். அதனால் உங்களை மறுபடியும் எச்சரிக்கிறேன். நீங்கள் எதை மறைத்தாலும்கர்த்தருக்கு கோபம் வராது. ஆனால் தசமபாகத்தில் சபையை ஏமாற்றினால் தெரியுமல்லவா? அனனியா-சப்பிராள் தம்பதியினருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அடிக்கடி எங்களை பயப்படுத்தி எங்கள் பாஸ்டர் பிரசங்கத்தில் பேசுகிறார். சிலமுறை பாஸ்டர் சாபமிடுகிறார். நாங்கள் என்ன செய்ய? என்று எழுதினார்கள். நான் எழுதினேன். இது ஒருவகை பிளாக் மெயில் ஆகும். உன் பாஸ்டர் உங்களை பயமுத்துகிறார் என்பது மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் அப்படிப்பட்ட திருட்டு பாஸ்டர் நடத்தும் ஆராதனையில் எப்படி நீங்கள் எல்லாம் தொடர்ந்து கலந்துக்கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சியாவது பாஸ்டர் பேசுவது பொய் என்று உணர்த்தவில்லையா? இவர்கள் எல்லாம் ஆவியின் வல்லமை பெற்றவர்கள், அந்நியபாஷை சரளமாக பேசுகிறவர்கள். இவர்கள் இந்த அளவு முட்டாளாகவா இருப்பார்கள். இதை எழுதும்போது எனக்கே கோபம் வருகிறது. கர்த்தருக்கு எவ்வளவு கோபம் வரும்.
செங்கல் அற்புதம்
2012 ஜனவரி மாதம் கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஐக்கிய சங்கத்தின் உதவி செயலாளராகவும், கோயமுத்தூரில் (சர்ச் ஆப் குளோரி) மகிமையின் ஆலயம் என்ற பெயரில் பெரிய சபையை நடத்தும் பாஸ்டர்.இஸ்ரவேல் பொன்னப்பா என்பவர் தன் சபையில் திடீரென்று ஒரு அறிவிப்பை அறிவித்தார். தேவன் தனக்கு அளித்த அபிஷேகத்தின்படி ஒரு செங்கல்லை சபை மக்களிடம் காண்பித்து இது சாதாரண செங்கல் அல்ல, ஜெபித்து அபிஷேகிக்கப்பட்ட செங்கல் ஆகும். இது கட்டிடம் கட்டுவதற்காக அல்ல. இந்த செங்கல் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் உள்ள அனைத்து விக்கிரகங்களும் நீங்கிபோகும். அசுத்த ஆவிகள் வீட்டுக்குள் வராது. இதற்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அன்று யாக்கோபு தன் பிராயணத்தின் இடையே ஒரு கல்லை தலையில் வைத்து படுத்துக்கொண்டபோது இரவில் பரலோக தரிசனம் கண்டான். தூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்ததை கண்டான் என்று எழுதியிருக்கிறது. அதுபோல இந்த செங்கல் எந்த வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அந்த வீட்டுக்கு ஆசீர்வாதம் உண்டாகும் தூதர்களை காண்பீர்கள். ஆவியானவர்சொல்ல சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்த செங்கலை விலை கொடுத்து நீங்கள் வாங்கினால் அந்த பணம் இந்த ஆலய பணிக்கு பயன்படும். ஆகவே இந்த ஆசீர்வாத திட்டத்தில் பங்குகொள்ள விரும்புவர்கள் ஒரு செங்கலை 10,000 - பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றார். இந்த கல்லை உங்கள் படுக்கையில் வைத்து தலையணையாக அதன்மீது வைத்து படுத்தால் பரலோக தரிசனங்களையும் காணலாம் என்றார். முதல் கல்லை சபை மக்கள் முன்வைத்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து அபிஷேகத்தை அதில் இறக்கி ஜெபிக்கிறேன் என்று கூறிஅந்நியபாஷையும் பேசி முடித்தார். உடனே சபை விசுவாசிகள் எனக்கு-உனக்கு என்று போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள். அரை லாரி லோடு உடனே விற்று தீர்ந்தது. அரை லோடு என்பது 1500 செங்கல்கள். கணக்குபோட்டு பாருங்கள். ஒரு செங்கல் 10000 ரூபாய் 1500 செங்கல்களுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய்கள் சுளையாக அந்த பாஸ்டருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட வியாபாரத்தை செங்கல் சூளை வைத்தவர்கள்கூட செய்து இருக்கமாட்டார்.
இப்போது வாசகர்கள் சிந்தித்துப்பாருங்கள். முதலில் செங்கல் விற்ற அந்த பாஸ்டரைப்பற்றி யோசிக்கவேண்டாம். அந்த செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கின அந்த அபிஷேகம் பெற்றவர்கள், அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைந்தவர்கள், தரிசனம் காண்பவர்கள் ஆகிய அந்த சபை விசுவாசிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த சபை விசுவாசிகளில் ஒருவராவது இப்படி ஒரு செங்கல் வியாபாரத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா? செங்கலில் அபிஷேகம் இறங்குமா? வல்லமை இறங்குமா?கல்லை வைத்து படுத்தால் பரலோகம் தெரியுமா? கொஞ்சமாவது யோசிக்ககூடாது.
சகோ.மோகன் சி.லாசரஸ் கம்பெனியின் போர்டு மெம்பராக மெத்தபடித்த டாக்டர் ஒருவர் உண்டு. அந்த டாக்டர் எயிட்ஸ் வியாதி சுகமானது என்று மோகன் சி.லாசரஸ் அறிவித்ததற்கு சாட்சியாக நின்றதுபோல, இந்த சபையிலும் ஒரு டாக்டர் செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்று கேள்விபடும்போது பெந்தேகோஸ்தே சபை எங்கு போகிறது? என்று புரிகிறதா?.
அடுத்து அந்த அனுபவம் உள்ள பாஸ்டருக்கு செங்கலை அபிஷேகம் செய்து நாம் விற்றால் நம் சபை விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகள் முட்டாள்கள் நிச்சயம் ஏமார்ந்து செங்கலை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அந்த பாஸ்டரின் விசுவாசம் பிரம்மிக்க வைக்கிறது. அவர் சபை மக்களை அந்த அளவு வசனத்தில் வளரவிடாமல், யோசிக்கவிடாமல் சபையை உருவாக்கி வைத்திருக்கிறார்.
கள்ள நோட்டு வியாபாரிகள் ரூபாய் கட்டுகளில் மேலே நல்ல நோட்டுகளை வைத்து உள்ளே வெள்ளை பேப்பர்களை கட்டுகட்டாக வைத்து பெரியபெரிய பணக்காரர்களை ஏமாற்றியிருக்கிறார்களோ. அதுபோலதானே? இதுவும் மிகப் பெரிய (சீட்டிங்ஸ்) ஏமாற்றுதனமாயிற்றே! அந்த கள்ளநோட்டு வியாபாரியாவது ஒரு கட்டில் 10 நல்ல ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றினார். ஆனால் இந்தபெந்கோகேஸ்தே சபை பாஸ்டரோ முழு செங்கல்களை மூடாமல் மறைக்காமல் அப்படியே சுளையாக 10000 ரூபாய்ககு ஒரு கல்லை அனாவசியமாக விற்றிருக்கிறார்.
ஒருவர் கேட்டார் சகோ.பால்தினகரன் மீது ஒருவர் பொதுநல வழக்கு போட்டாராமே அப்படி செங்கலை வைத்து அபிஷேகம் இறக்கும் இப்படிப்பட்ட பாஸ்டர்கள்மேலே ஏன் பொது நல வழக்கு போடக்கூடாது என்று கேட்டார்.
CSI சபையில் ஜீவன் இல்லை - செத்த சபை, வல்லமை இல்லை. அதனால் CSI சபை மக்களோ ஆராதனை முடிந்த கையோடு இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளுக்கு ஓடும் விசுவாசிகள் இனியாவது எச்சரியக்கையாக இருப்பீர்களாக.
இப்படி ஏமாற்றுகிற பாஸ்டர்களை நம் நீதிமன்றம் தண்டிக்காதா? என்று ஏராளமானவர்கள் கேட்கிறார்கள்.
D.G.S - மகனின் ஏமாற்று 420 - CHEATING இயேசு அழைக்கிறார் (ஆகஸ்ட் 2009: பக்கம் 8)
சகோ.DGS.தினகரன் அடிக்கடி பரலோகம் போய்வருவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரை பின்பற்றிதான் ஏஞ்சல் டிவி.சாதுசந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்குமார், ஆலன் பால் ஆகியோர் தாங்களும் தினகரனுக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் தினம்இரண்டுவேளை பரலோகம் போய் வருகிறோம் என்று போட்டியிட்டு பரலோகம் போய் வருவது செய்தியாக நாம் கேட்டிருக்கிறோம்.
சகோ.தினகரன் அவர்களைவிட மகன்.பால்தினகரன்அதிகம் கற்பனை தரிசனம் பார்ப்பதை அவர் எழுதிய செய்தியில் நீங்கள் அறியலாம்.
என் தந்தை.தினகரன் ஒருமுறை பரலோகத்திற்குசென்றபோது இயேசு என் தந்தையை வரவேற்றார். இயேசுவுக்கு முன் இருந்த ஒரு மேஜையின் மீது ஒருதங்கத்தால் ஆன அழகிய தங்க கை கடிகாரத்தைவைத்திருந்தார்.
அதன் பக்கத்தில் ஒரு தங்க கோப்பை, தங்க மை(Ink), முன்னோர்கள் அந்த காலத்தில் எழுத உபயோகிக்கும் தங்க இறகுமிருந்தது.
அப்போது ஆண்டவர் என் தந்தையைப்பார்த்து என் மகனே என் ஊழியத்தை செய்ய நீ வருவாயா? என்றார்.
அதைக்கேட்டபோது என் அப்பா.தினகரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவர் State Bank of India என்ற வங்கியில் நிம்மதியாக ஒரு குறையும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார். அதனால் இயேசுவை நோக்கி என் அப்பா சொன்னார். ஆண்டவரே, என் பேங்க் வேலையில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். கூடவே ஊழியமும் செய்துவருகிறேன். எனக்கு அதுபோதும் என்னை விட்டுவிடும் என்றார். ஆனால் ஆண்டவர் சொன்னார், என் மகனே நீ வேலையை விட்டுவிட்டால் உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் என்று, இப்படி நான் வாக்குகொடுத்தால் என் ஊழியத்துக்கு வருவாயா? என்று இயேசு கேட்டார். அதற்குமேல் என் அப்பாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சகோ.தினகரன் சொன்னார்: ஆண்டவரே நான் எங்கெங்கு போகிறேனோ நீரும் என்னோடு வருவீரானால் அப்போதுதான் நான் உம் ஊழியத்துக்கு வருவேன். ஆண்டவர் சொன்னார். நான் நிச்சயமாக உன்னோடு வருவேன். நான் உன்னை அழைத்திருப்பதை உன் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளின் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்துவேன். நீ என் ஊழியத்தை செய்வாயாக என்றார். உடனே என் தந்தை ஊழியத்துக்கு வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
அதன்பின் இயேசு தங்க மையினால் (இங்க்) எழுதி அதன்கீழே இயேசுகிறிஸ்து என்றுகையெழுத்திட்டு ஒரு உடன்படிக்கையை பண்ணிக்கொண்டார். இந்த உடன்படிக்கை கடிதத்தை என் தந்தையிடம் கொடுத்து(நான் மட்டும் கையெழுத்திட்டால் போதாது) நீயும் உன் கையெழுத்தை போடு என்றார். அந்த நாள் 1967ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி ஆகும். அந்த குறிப்பிட்ட வருடத்திலிருந்து என் தந்தை தினகரன் அவர்கள் எப்போதெல்லாம் பரலோகம் போகிறாரோ அப்போதெல்லாம் இயேசு கையெழுத்துபோட்ட அந்த உடன்படிக்கை கடிதத்தை இயேசுவிடம் காண்பிப்பார்.
ஒவ்வொருமுறை பரலோகம் போகும்போதும் ஒவ்வொரு திட்டத்தை இயேசு கூறுவார். மகனே, இந்த வருடத்தில் உன் ஊழியத்தில் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று அவர் சொல்வார். என் தந்தையும் அவர் சொல்வதை கேட்டு ஆமென் என்று கூறி ஆமோதிப்பார். இப்படித்தான் என் தந்தையின் ஊழியம் வெற்றிகரமாக நடந்தது.
நாம் இதுவரை புளு இங்க், கருப்பு, சிவப்பு இங்க் இப்படி பல கலரில் பார்த்திருப்போம். ஆனால் சகோ.தினகரனின் பரலோகத்தில் இந்த கலர் இங்க் எல்லாம் கிடைக்காது. எல்லாம் தங்க இங்க், தங்கபோனா, தங்க கோப்பை, தங்க மேஜை இதை எழுதும் தங்க ஊழியரான தம்பி.பால்தினகரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தினர் எல்லாம் உபயோகிப்பது, அணிவது எல்லாம் தங்கம்தான் என்பதை நாம் டிவியிலும் மேடையிலும் காண்பித்து நிரூபித்திருக்கிறோரே?.
தங்க இங்க், தங்க கோப்பை, தங்க பேனா, தங்கத்தில் இயேசுவின் கையெழுத்து தினம் பரலோக விசிட் இவைகளைக்குறித்து யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படிப்பட்ட அம்புலிமாமா கதைகளை கேட்டு கிறிஸ்தவ மக்கள், பிஷப்மார், மாடரேட்டர் எல்லாரும் கேள்வி எழுப்பாமல் ரசித்து கொண்டிருக்கிறார்களே தவிர கேள்விகேட்க யாருக்கும் தைரியம் இல்லை.
ஒருவர் இயேசு அழைக்கிறார் குடும்பம் சேர்க்கும் கோடிகள், சொல்லும் பொய் கதைகள், பொய்யானஅற்புத சாட்சி, கோபுரங்கள் பணிவது மக்களிடம் பொய்யான காரணங்களைக்கூறி காணிக்கை பெறுவது, ஒரு குழந்தைக்கு 2000 ரூபாய் வாங்கி ஜெபிக்க கர்த்தர் சொன்னார். அதற்கு இளம் பங்காளர் திட்டம்என்று பெயர் வைத்து கோடிகோடியாக பணம் சேகரிக்கப்பட்டது. ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரிகட்ட சொன்னார் என்று கூறி ஒவ்வொரு மாணவனிடம் லட்சக்கணக்கில் கேப்பிடல் பீஸ்வாங்கப்பட்டதையெல்லாம் குறிப்பிட்டு சிலர் பொதுநல வழக்கு போட்டதாக செய்திதாளில் செய்திகள் வந்தது. பாறையோடு பானை மோதியதுபோல அந்த கேஸ் தொடர்ந்து நடத்தமுடியாமல் வழக்கு பாதியிலேயே நின்றுப்போனது. கிறிஸ்தவ ஊழியர்கள் மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள் என்று அன்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.
விருதுநகர் சகோ.ஆலன்பால் என்பவர் இவரும் அடிக்கடி நரகத்துக்குபோய் வருபவர். 19 கோடியில் சென்னையில் மிகப்பெரிய ஆலயம் கட்ட ஆம்பித்திருக்கிறார். டிவியில் தன் சொந்த சேனலான ஆசீர்வாதம்டியியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
இப்படி தனி ஊழியம் செய்யும் ஊழியர்கள் எல்லாரும் தங்களை சிஎஸ்ஐ என்றும், லூத்தரன் சபையை சார்ந்தவன் என்றும் கூறி அந்நியபாஷை பேசி மறைமுக பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தில் வாழ்ந்து ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி பல ஊழியர்கள் மக்களை ஏமாற்றுவதை குறித்து ஏமார்ந்த மக்கள் பக்கம்பக்கமாக கடிதங்கள் எனக்கு எழுதுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பொய் பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் அப்படிப்பட்ட சபைகளிடமும் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மக்களை ஏமாற்றி அகப்பட்ட ஏராளமான புறமத சாமியார்களின் சன்யாசிகள் ஏராளமானவர்கள் போலீஸில் அகப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். இவர்களோடு சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், ஸ்டார் ஊழியர்களும், அற்புதம் அடையாளம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றும் சில ஊழியர்களும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் பல போலி ஊழியர்கள் பலர் இன்னும் வெளியே உலா வருகிறார்கள்.
கேரளா AOG சபை கமிட்டி கூடுகையில் பாதுகாப்புக்கு போலீஸ் வந்தது
CSI, லூத்தரன் சபையைவிட AOG சபையில் பதவி ஆசையும், பதவி போட்டியும் - சண்டையும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டேயிருப்பதை நான் எழுதியிருக்கிறேன்.
2013 பிப்ரவரி மாதம் புனாலூரில் கேரள AOG சபை நிர்வாக கூட்டம் நடந்தபோது பாஸ்டர்கள் இடம்மாற்றம் பெற பெரும் போட்டி நடந்தது. அதிக தசமபாகம் வரும் சபைக்கு தாங்கள் பாஸ்டராக பொருப்பெடுக்க கடும்போட்டி AOG சபையில் ஏற்பட்டது. கேரளா AOG சபைகளுக்கு பாஸ்டர்.சாமுவேல்பொதுசெயலாளராக இருக்கிறார். அவருக்கு பிடித்தமானவர்களை பெரிய சபைக்கு பாஸ்டராக நியமிக்கிறார், அவருக்கு பிடிக்காதவரை சாதாரண சபைக்கு மாற்றல் கொடுக்கிறார் என்று கூறி பல பாஸ்டர்கள் பொருமுகிறார்கள்.
இந்தமுறை நிர்வாக கூட்டத்தில் கடும் போட்டி உண்டு. நிச்சயம் அடிதடி உண்டாகலாம் என்று எதிர்பார்த்து பாதுகாப்புக்கு போலீஸ் வரவழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. உள்ளே நடக்கும் பதவி சண்டைகளை புகைப்படம் எடுக்க கிறிஸ்தவ சிந்தா பத்திரிக்கையின் புகைப்படம் எடுக்கும் நிருபர்களை AOG பாஸ்டர்கள் போலீஸில் பிடித்துகொடுத்து கேஸ் பைல் செய்ததாக கூறப்படுகிறது. பதவி சண்டை போடுவதில் செத்த சபை என்று வர்ணிக்கும் CSI, லூத்தரன் சபைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ஒவ்வொருமுறையும் அந்நியபாஷையின் பெலம் AOG சபையில் பெரும் பிரச்சனை உண்டாகும். இந்தமுறை அப்படி ஏதாவது நடக்கலாம் என்று முன்கூட்டியே அறிந்து போலீஸ்ஸை நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் மத்தியிலும் பாஸ்டர் ஜிப்பாவுக்குள்ளே புகுந்த சில ரௌடிகள் உண்டு. அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே பாதுகாப்புக்காக நின்றுக் கொண்டிருப்பதை காணமுடிந்தது என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கூறினார்.
இவர்களின் ஒழுங்கு என்னவென்றால் கூட்டம் ஆரம்பிக்கும்முன் ஜெபித்து கொஞ்சநேரம் அந்நியபாஷை பேசி வல்லமைபெற்று பிறகு சண்டையை ஆரம்பிப்பார்கள். ஒரு பாஸ்டர் சொல்கிறார். இந்த பதவி சண்டை IPC சபையில் மிக அதிகம். AOG பாஸ்டர் இடமாற்றத்துக்கு அல்லது பதவிக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுத்து பதவி பெருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதைவிட பெரும்தொகைகளை IPC பாஸ்டர்கள் பணத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு நிர்வாக கமிட்டியில் உயர்ந்த பதவி வேண்டும் என்று பண விளையாட்டு நடத்துவார்கள். அத்தனையம் மக்களின் தசமபாகமாக செலுத்திய காணிக்கையாகும். ஏறக்குறைய அவர்களைவிட மோசமாக AOG சபையில் இம்முறை பதவி இடமாற்றம் நிர்வாக கமிட்டி கூட்டத்தில் நடக்கும் போல் இருக்கிறது என்று புனாலூர் நிர்வாக கூட்டத்துக்கு வந்த ஒரு பாஸ்டர் மனவேதனையுடன் கூறியதாக கூறப்படுகிறது.
(படத்தில் AOG நிர்வாக கூட்டம் நடக்கும் புனாலூர் மண்டபத்தில் பாதுகாப்பு அரணாக நிற்கும் பாஸ்டர்கள்)
தமிழ்நாடு AOG பாஸ்டர்கள் P.S.ராஜாமணி, J.J.Y.அருள் பற்றிய பழைய வால்போஸ்ட்
AOG யில் இந்த பதவி போட்டியும் சண்டையும் இப்போதுதான் புதிதாக தோன்றியதல்ல. காலாகாலமாக இருக்கிறது.
தமிழ்நாட்டு AOG சபை சண்டையின் உச்சக்கட்டநிலை வால்போஸ்ட் சண்டையாக பழைய வால்போஸ்;டிங் படங்கள் என்னிடம் உள்ள பழைய AOG Fileலில் அன்றைக்கு சேமித்த பேப்பர் கட்டிங்கில் தேடியபோது கிடைத்தது. அதைத்தான் நீங்கள் இடது பக்கத்தில் காண்கிறீர்கள். பொறாமை உள்ளவர்களும், போட்டியில் தோற்றவர்களும், சில உதவி பாஸ்டர்களை பல வருடங்களாக முன்னுக்கு கொண்டுவராததால் தன் பிற்கால நிலையை குறித்து பயந்த அவர்கள் AOG தலைமையிடம் பேசி ஒரு நன்மையும் பெற முடியவில்லை என்று வெளி உலகில் அவி சுவாசிகள் அறிய அரசியல்வாதிகளைப் போல் மற்ற CSI, லூத்தரன் சபை அவிசுவாசிகள் வெளியிடுவதைப்போல வால்போஸ்ட், துண்டுபிரதி, மொட்டை கடிதங்கள் போன்ற முறைகளை AOG சபையினரும் பின்பற்றினார்.
அபிஷேகம் பெற்றேன், அந்நியபாஷைபேசுகிறேன். தரிசனம் பார்க்கிறேன், தீர்க்கதரிசன வரமும் எங்களுக்கு உண்டு என்று கூறுபவர்கள்.அந்நியபாஷை பேசிக் கொண்டே வீதிகளில் ஒட்டிய வால்போஸ்டைத்தான் இங்கு நீங்கள் காண்கிறீர்கள். வாசகர்கள் AOG சபை பாஸ்டர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தங்கள் பதவி சண்டையை நிறுத்திஅந்நியபாஷை ஏதும் பேசாமல் கர்த்தர் தனக்கு எந்த சபைக்கு மேய்ப்பனாக ஊழியம் செய்ய வாய்ப்பளிக்கிறாரோ அந்த இடம் செல்லும் மனபக்குவம் பாஸ்டர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். உதவிபாஸ்டர்கள் பழிவாங்கப்பட்டாலும் இடமாற்றம் வேதசித்தம் என்று ஏற்றுக் கொண்டு ஊழியம் செய்வார்களாக. அப்படி பழிவாங்கப்பட்ட பாஸ்டர்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக, ஒவ்வொரு வாரமும் புதுபுது ஆத்துமாக்களை சபையில் சேர்க்கும் மனபாரம் அவர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். AOG ஒரு நல்ல சபையாகும். ஆனால் பல வருடமாக பாஸ்டர்மார்களுக்குள் சமாதானம் இல்லை. இவர்கள் எப்படி சபை மக்களை இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துவார்கள். ஜெபிப்போம்.
CSI டையோசிஸின் சரித்திரத்தில் கேட்டிராத வேதனையுள்ள செய்தி
CSI சினாட் பொது செயலர் திரு.பிலிப் அவர்கள் தாக்கப்பட்டார்.
CSI உருவாகியது 1947ம் ஆண்டு ஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள் இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு,(இலங்கை) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து CSI சபைகள் அடங்கிய டையோசிஸ்ஸின் தலைமை ஸ்தாபனம் CSI சினாட் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 66 ஆண்டு கால வரலாற்றில் நடந்திராத அவமானகரமான சம்பவம் கடந்த 2013 பிப்ரவரி மாதம் CSI சினாட் கமிட்டியில் நடந்தது.
தமிழ்நாடு தூத்துக்குடி - நாசரேத் டையோசிஸ்ஸின் பிஷப்.Rt.Rev.Dr.ஜெபசந்திரன் அவர்கள் மேல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியது. ஆனால் சினாட் வழக்கம் போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றசாட்டுகளை ஊறப்போட்டது. அதன்பிறகு அவர் மேல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாகவே CSI சினாட் செயற்குழு பிஷப்மீது நடவடிக்கை எடுத்தது.
ஊளுஐ சினாட் செயற்குழு கூட்டத்தில் தர்ணா செய்த பிஷப்.ஜெபசந்திரன் தரையில் அமர்ந்துள்ளார்.
பிஷப்.ஜெபசந்திரன் அவர்களை பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்கிறது என்ற சினாட் நிர்வாக கமிட்டி எடுத்ததீர்மானத்தை மாடரேட்டர்.தேவகடாட்சம் அவர்கள் முன்னிலையிலும மற்றும் சினாட் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பாஷைகள் பேசும் நான்கு மாநில பிஷப்மார்கள், மெம்பர்கள் கூடிய அக்கூட்டத்தில் CSI சினாட் செயலர் திரு.பிலிப் அவர்கள் சஸ்பெண்ட் அறிக்கையை வாசித்தார். உடனே தூத்துக்குடி பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் பிலிப் அவர்களின் சட்டையைப்பிடித்து இழுத்து அவரை தாக்கி, அறிக்கையை படிக்கவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் MLA, MP அரசியல்வாதிகள் கூட்டத்தில் வழக்கமாக நடப்பதைப்போல் மைக்கை பிடித்து எடுத்து எறிந்தார். இந்த சண்டையில் தூத்துக்குடி பிஷப்புக்கு உதவியாக சினாட் செயற்குழு உறுப்பினர் கோயமுத்தூர் டையோசிஸ்ஸை சேர்ந்த திரு.அமிர்தம் அவர்களும் பிஷப் அவர்களுக்கு உதவியாக பிஷப்புடன் சேர்ந்து திரு.பிலிப்பை தாக்கி அவை நாகரீகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து ஏசினார். இவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி பிஷப்புடன் சேர்ந்து பிலிப் அவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்ட சகோ.அமிர்தம் அவர்கள் உடனே அங்கேயே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் சினாட் அவருக்கு உடனே மன்னிப்பு கொடுத்தாக அறிவித்தது. ஆனால் பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எழுத்து மூலமாகவும் மன்னிப்பு கேட்க ஆலோசனை அளிக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. ஆகவே அவர் பிஷப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக சினாட்டில் அறிவிக்கப்பட்டது. பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் சண்டைப்போட்டு கெட்ட வார்த்தைகளை உபயோகித்தது (சினாடில்) இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மாநில பிஷப்மார்கள் முன்னிலையில் நடந்ததால் தமிழ்நாட்டு CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது.
CSI டையோசிஸ்ஸில் நடக்கும் அநியாயங்களின் பட்டியல்:
மிஷனரிமார்கள், ஆயர்மார்கள், உபதேசியார் ஆகியவர்களின் பிராவிடன்ட் ஃபண்ட், பணம், பென்ஷன் பணம் ஆகியவற்றை டையோசிஸ் நிர்வாகம் அரசாங்க வங்கியில் இதுவரை சேர்க்காமலும் டையோசிஸ்சார்பில் இவர்கள் பணத்துடன் சேர்த்து மேலே கூறப்பட்ட ஊழியர்களுக்காக சேர்த்து அடைக்க வேண்டிய பணமும் இதுவரை அரசாங்க வங்கியில் சேர்க்கப்படாமல், பணம் பேங்க்கில் அடைக்காததால் ஆரம்ப காலத்திலிருந்து ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படவேண்டிய வட்டி பணம் பல கோடிகள் ஊழியர்கள் கணக்கில் வங்கியில் இல்லை என்பதாக CSI சினாடுக்கும், பிராவிடன் ஃபண்ட், பென்ஷன் அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் சிலராக புகார் எழுதி அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. இது உண்மையானால் இது பெரும் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு டையோசிஸ் அதிகாரிகள் முதல் பிஷப்மார்வரை ஜெயிலுக்கு போகவேண்டி வரும். இவர்களுக்கு பெரும் ஆபத்தும், அவமானமும் காத்துக்கொண்டிருக்கிறது. இது டையோசிஸ் நிர்வாகிகளும், பிஷப்மாரும் டையோசிஸ் ஊழியர்களுக்கு செய்யும் பெருத்த துரோகம் ஆகும்.
வேலை நியமனத்திலும் ஊழல்:
டையோசிஸ் வேலை நியமனத்தில் குறிப்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரின் வேலை நியமனத்தில் பல வருடமாக வரிசையில் காத்துக்கிடக்கும் எத்தனையோ CSI டையோசிஸ்ஸில் CSI சபை அங்கத்தினரின் பிள்ளைகள், மனைவிமார்கள் வரிசைப்படி காத்துக்கிடக்க வேலை நியமான லிஸ்டில் இல்லாத நபருக்கு பணிநியமனம் கொடுத்த துரோக குற்றச்சாட்டில் டையோசிஸ் நிர்வாகத்தினருடன் பிஷப்அவர்களும் குற்றவாளியாகிறார். இந்தவிதமான அநியாயத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம்போக ஏழைகளுக்கு பண வசதியில்லை. ஆனால் அவர்களின் ஏமாற்றம் கண்ணீராகமாறி தேவசமூகத்தில் சென்றால் கர்த்தரே இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பார் என்பது நிச்சயம். இந்த சம்பவங்களும் சினாட்டில் குற்றச்சாட்டாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நியாயம் தீர்க்கவேண்டிய தலைவரின் டையோசிஸ்ஸிலேயே இதே நியமனம் குறித்த குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அப்படியானால் சினாடின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடிகிறதே!.
எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் தெய்வபயம் ஒழிந்துப்போனது.
இப்போதுதான் CSI சினாட்டுக்கு பிஷப்மார்கள்மீது நடவடிக்கை எடுக்கும் புது தைரியம்உண்டாகியிருக்கிறது அதற்காக பாராட்டுகிறோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய CSIபிஷப்மார்கள் பட்டியல் நீண்டுள்ளது. சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் CSI சபைகள் நல்ல ஒழுங்குக்கு வரும். நடவடிக்கை CSI சினாட் தலைமையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும். ஜெபிப்போம்.
சில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது. சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது. சுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதமமந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது. நீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள். இப்போதுள்ள சினாட் புதிய கமிட்டி சுனாமி நிதி கணக்கை சம்பந்தப்பட்ட பிஷப்மார்களிடத்தில் கேட்டு வாங்குவார்களா?
தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்: தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிப்பதற்காக பிரதம பேராயர் பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த CSI குருவானவர்.ஜேசுசகாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர்.தேவகடாசம் அவர்கள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல குருவானவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சென்னையில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த தென்னிந்திய திருச்சபையின் தலைமை செயலக (சினாடு) நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.