கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்!
மர்மமான மரணம்: மண்டையுடைப்பு / மாரடைப்பு: திருச்சி செயின்ட் ஜோஸப் பாதிரி, புளோரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார்[1]. கைது செய்யக் கூட போலீஸார் காலம் தாழ்த்தினர்[2]. பிறகு, நிபந்தைகள் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்[3]. மற்ற பாதிரிகளோ, நிபந்தைகள் இல்லாமல் ஜாமீனில் வந்தனர்[4]. தினமும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போட்டு வந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் மறைக்கப் பட்டன[5]. வீருகொண்டு எழுந்த சில இயக்கங்களும் காணாமல் போய்விட்டன[6]. ஊடகங்கள் வழக்கம் போல அமைதியயகி விட்டன. இந்நிலையில், பாதிரியார்கள் மறுபடியும், இந்த வழக்கை மூடி மறைக்க வேலைசெய்து வருவது தெரிய வந்துள்ளது. இன்னொரு பாதிரி சூசை மர்மமான முறையில் இறந்துள்ளார். சூசையின் உதவியாளர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். ஆனால், கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார்”, என்றுள்ளது!
திருச்சிசெயின்ட்ஜோசப்கல்லூரிஅதிபர்சூசைமர்மமரணம்[7]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சாமியார் P. சூசை மர்மமான முறையில் 19-12-2010 அன்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரிகள் நீக்கம் பற்றிய ஆணையை பிறப்பித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[8]. கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: “நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார்.இதைப் பற்றி, விவரங்களை மறைத்து, மாரடைப்பினால் இறந்தார் என்று, உடலை புதைத்துவிட்டனர்.
திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு (07-02-2011): திருச்சி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், புனித ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் குற்றப்பத்திரிகையை போலீசார் திரும்பப்பெற்றனர். இதனையடுத்து குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள பெயர்களில் அரசியல்வாதிகள் நெருக்கடியாலும், போலீஸ் கமிஷனர் நெருக்கடியால் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்[9].இதுகுறித்து அறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பிப்.,7ம் தேதி, தன் வக்கீல் இருதயசாமியுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்தார். அதில், “போலீஸ் உயரதிகாரிகளும், ஜே.எம்., 1மாஜிஸ்திரேட்டும் சேர்ந்து, குற்றப்பத்திரிகையில் உள்ள சில குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்‘ என்று கூறியிருந்தார்
போலீஸ் கமிஷனரிடம் புகார் (10-02-2011):.கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி 10-02-2011 மதியம் ஒரு மணியளவில் திடீரென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் புகார் மனு அளித்தார். அதில், “குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்க கோட்டை போலீசார் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்‘ என்று கூறியுள்ளார்[10]. பின்னர் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி நிருபர்களிடம் கூறியதாவது: “குற்றப்பத்திரிகையில் உள்ள இரண்டு பெயர்களை நீக்கவும்,ஆவணங்களை அழிக்கவும் கோட்டை போலீசார் முயற்சித்து வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்தேன். குற்றவாளிகளுக்கு அரசியல் பலம், பணபலம், போலீஸ் உயரதிகாரிகள், நீதித்துறையில் உள்ளவர்கள் என பலரும் ஆதரவாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. கடந்த 7ம் தேதி, போலீஸ் கமிஷனரும், மாஜிஸ்திரேட்டும் இணைந்து தான், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்று கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்[12]. ஆனால், அவர் குற்றஞ்சாட்டிய, போலீஸ் கமிஷனரிடமே, ப்ளாரன்ஸ் மேரி நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்[13]: ஜனவரி 8,9,1.2011 ஆகிய 2 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் பாதிரியார் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினம் தரப்பில் நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணை 15.2.2011-ந்தேதி வருகிறது. இதற்கிடையே வழக்கு தொடரப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் கோட்டை மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிளாரன்சு மேரி வழக்கில் சாட்சியங்கள் சந்தர்பங்களை திரட்டி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இறுதியில் பாதிரியார் ராஜரத்தினம் மீது சுமார் 110 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை திருச்சி மாஜிஸ்திரேட்டு நடுவர் எண்.1ல் மாஜிஸ்திரேட்டு ஆபிரகாம் லிங்கனிடம் தாக்கல் செய்தனர். இதில் பாதிரியார் பிளான்சுமேரியை மிரட்டிய, பாதிரியார்கள் மற்றும் பிளாரன்சுமேரிக்கு கருகலைப்பு செய்த தென்னூர் ஆஸ்பத்திரி டாக்டர் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்து உள்ளது. மேலும் இவ்வழக்கில் சாட்சிகளாக பிளாரன்சுமேரி அவரது அக்காமேரி, உள்பட 28 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதிரியார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து விரைவில் விசாரணை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு சூடுபிடித்து உள்ளது
பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்: இது பாதிரியார்களின் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் எனலாம் போலிருக்கிறது. எப்படி கோடிகள் வளர்ந்தனவோ, இதிலும் கற்பழிப்பு கன்னியாஸ்திரிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தது[14]. கன்னியாஸ்திரிகளின் புகார்களும் பெருகின[15]. அந்நேரத்தில் தமிழகத்திற்கு வந்த கந்தர்புரி பிஷப் கூட நொந்து விட்டார்[16]. ஆனால், எல்லாவற்றையும் மறைத்துவிட்டனர். எப்படி ஊழலில் கூட நம் நாட்டில் பாரபட்சம் பார்க்கின்றனரோ, அதே போல, செக்ஸ் குற்றங்களில் கூட, பாரபட்சமமகவே, ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் அதிககரிகள், நிறுவனங்கள் எல்லாமே அவ்வாறுதான் நடந்து கொள்கின்றன.
வேதபிரகாஷ்
11-02-2011
[1] http://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-video/
[2] http://christianityindia.wordpress.com/2010/10/28/rape-accused-catholic-priest-yet-to-be-arrested/
http://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/
[3] வேதபிரகாஷ், செயின்ட்ஜோசப்கல்லூரிமாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும்தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,http://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/
[4] வேதபிரகாஷ்,கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!
, http://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/
[5] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது,வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!,http://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/
[7] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603
[9] தினமலர், திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு, பிப்ரவரி 07, 2011,,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182677
[10] தினமலர், குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களை நீக்க முயற்சிப்பதை தடுக்க கோரிக்கை:கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2011,00:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 11,2011,02:00 IST
[12] தினமலர், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி: கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு, பிப்ரவரி 07,2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=182795
[13] மாலைமலர்,கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: திருச்சி பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ,http://www.maalaimalar.com/2011/02/04152351/wimple-case-charge-sheet-appl.html
[14] வேதபிரகாஷ்,, கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!,http://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/