New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாக்ஸ்முல்லர் மர்மம்!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மாக்ஸ்முல்லர் மர்மம்!
Permalink  
 


மாக்ஸ்முல்லர் மர்மம்! – 1 (Post No.4222)

8be3e-_max_mueller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

Date: 18 September 2017

 

Time uploaded in London- 6-08 am

 

Post No. 4222

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்; அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி என்ற ச.சுவாமிநாதனின் கட்டுரையை- 16-9-17இல் வெளியான கட்டுரை எண் 4217- ஐப் படிக்குமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.

நண்பரா, கைக்கூலியா!

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 1

 

ச.நாகராஜன்

1

 

மாக்ஸ்முல்லர்!

வேதங்களை மொழி பெயர்த்தவர்; ஹிந்து மதத்தின் பால், – ஹிந்து நாகரிகத்தின் பால், பெரு மதிப்புக் கொண்டிருந்தவர் என்ற புகழுரைகள் ஒரு புறம்!

ஹிந்து மதத்திற்கு எதிராக சதி வேலை செய்தவர், பிரிட்டிஷாரின் கைக்கூலி; கிறிஸ்தவ பாதிரிகளின் கைப்பாவை – என்று இப்படி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னொரு புறம்!

சாயனரே மறு அவதாரம் எடுத்து வந்திருப்பதாகக் கருதுகிறேன். எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறார்; அவருக்கு ஹிந்து மதத்தின் மீது தான் எவ்வளவு அன்பு என்று ஸ்வாமி விவேகானந்தரின் புகழுரைகள் இன்னொரு புறம்!

எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது தோன்றிய நாடு என்று என் கை சுட்டிக் காட்டுவது இந்தியாவைத் தான் என்று அடித்துச் சொல்லி (எழுதி) இந்தியாவை புகழேணியில் உச்சியில் ஏற்றும் மாக்ஸ்முல்லரின் எழுத்துக்கள் (அச்சிலே வந்து விட்டன நூலகள்) இன்னொரு புறம்.

மலைக்கிறோம்.

திகைக்கிறோம்.

அவரது அன்னைக்கு எழுதிய கடிதத்தில் வேதம் பற்றிய அவரது கருத்தைக் கண்டு மயங்குகிறோம்.

India – what it can teach us என்ற நூலில் அவர் இந்தியா பற்றி எழுதிய புகழாரம் கண்டு மகிழ்கிறோம்.

அவர் என்ன முரண்பாடுகளின் மூட்டையா?

அல்லது முதலில் ஹிந்து மதத்திற்கு எதிராகச் சதி செய்த சதிகாரப் பாதிரிகளுக்கு கைக் கூலியாக இருந்து மனம் மாறிய மனிதரா?

அவரது ஆராய்ச்சியில் அர்த்தம் உண்டா?

அல்லது ரஷியர் ஒருவர் கூறியது போல அவை அனைத்துமே பிழையானவை என்று சொல்லி விடலாமா?

 

e0b27-maxmuller1.jpg?w=600

அரைகுறை ஆராய்ச்சியாளரா, அல்லது ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்தாரா?

பல ஆண்டுகளாக இந்தக் குழப்பம் எனக்கு இருக்கிறது.

இதே குழப்பம் ஆயிரக்கணக்கானோருக்கும் இருப்பதிலும் வியப்பில்லை.

மாறுபட்ட கருத்துக்கள் அதற்குரிய ஆதாரங்களுட்ன வரும் போது குழப்பம் வருவது இயற்கை தான்!

அனைத்தையும் ஒரு அலசு அலசினால் உணமை வராதா என்ன?

முயன்று பார்ப்போம்!

 

2

முதலில் அவர் கூறிய் ஒரு புகழுரை.

 

“If I were asked under what sky the human mind has most fully developed some of its choicest gifts, has most deeply pondered over the greatest problems of life, and has found solutions of some of them which well deserve the attention even of those who have studied Plato and Kant, I should point to India. And if I were to ask myself from what literature we who have been nurtured almost exclusively on the thoughts of Greeks and Romans, and of the Semitic race, the Jewish, may draw the corrective which is most wanted in order to make our inner life more perfect, more comprehensive, more universal, in fact more truly human a life… again I should point to India.”
― 
Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

உலகம் வியக்கும் உயர்ந்த வேத சிந்தனைகள் என்ற எனது கட்டுரையில் (சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)  எனது மொழிபெயர்ப்பு இது:

“வானத்தின் கீழ, எந்த மனிதர்களின் மனம், தமக்கு அரிதாகக் கொடுக்கப்பட்ட கொடைகளை முழுவதுமாக வளர்ச்சியுறச் செய்திருக்கிறது; வாழ்வின் பெரிய பிரச்சினைகளை ஆய்ந்திருக்கிறது; அது மட்டுமின்றி,பிளேடோ, காண்ட் போன்றோரை – நன்கு பயின்றவர்களைக் கூடக் கவரும் வகையில் அந்தப் பிரச்சினைகளில் சிலவற்றிற்குத் தீர்வைக் கண்டிருக்கிறது என்று என்னைக் கேட்டால் இந்தியாவையே நான் சுட்டிக் காட்டுவேன். இங்கே ஐரோப்பாவில் கிரேக்க, ரோமானிய மற்றும் செமிடிக் இனமான யூத இனத்தின்  சிந்தனைகளை மட்டும் பிரத்யேகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அப்படிப்பட்ட நாம் நமது அக வாழ்விற்கு பரிபூரணமான, மிகப் பரந்த, பிரபஞ்சம் அளாவிய, இன்னும் சொல்லப்ப்போனால் நிஜமாகவே மனிதாபிமானமுள்ள ஒரு வாழ்க்கைக்காக – இந்த பூமியில் வாழும் வாழ்க்கை மட்டுமல்லாமல் இதற்கு அப்பால் என்றும் நிலைத்து வாழும் வாழ்க்கைக்குமாக – எந்த இலக்கியத்திலிருந்து வேண்டிய திருத்தங்களைப் பெற முடியும் என்று என்னைக் கேட்டால் மீண்டும் நான் இந்தியாவையே சுட்டிக் காட்டுவேன்.”

தனது திடமான உள்ளார்ந்த நம்பிக்கையை இப்படி அழுத்தம் திருத்தமாக கம்பீரமான சொற்களினால் மாக்ஸ்முல்லர் சொல்வதை “India, What it can teach us” நூலில் காண முடிகிறது.

* ஆய்வைத் தொடர்வோம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2 (Post No..4227)

3c546-max_muller_and_his_contemp.jpg?w=6

Written by S.NAGARAJAN

 

Date: 20 September 2017

 

Time uploaded in London- 6-30 am

 

Post No. 4227

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2

 

ச.நாகராஜன்

3

 

மாக்ஸ்முல்லரைப் பற்றிய் இந்த ஆய்வைத் தொடர்வதற்கு முன்னர் சில முக்கியமான கால வரிசை அட்டவணையைத் தெரிந்து கொள்ளுவது இன்றியமையாதது.

மாக்ஸ்முல்லர் பிறந்த தேதி : 6-12-1823

மறைந்த  தேதி   28-10-1900

வயது 76

விவேகானந்தர் பிறந்த தேதி 12-1-1863

மறைந்த தேதி         4-7-1902

வயது 39

 

விவேகானந்தர் சிகாகோ கலைக் கழகத்தில் சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11ஆம் நாள் மாலையில் பேசி பெருத்த வரவேற்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 30.

 

விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்த தேதி 28-5-1896

அப்போது மாக்ஸ்முல்லருக்கு வயது 72

விவேகானந்தருக்கு வயது 33

 

மாக்ஸ்முல்லர் கேம்பிரிட்ஜில் 1883 ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதுவே India What It can Teach Us  – என்ற உரைத் தொகுப்பு  நூலாகப் பின்னர் வெளி வந்தது.

இந்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றும் போது அவருக்கு வயது 60. இதில் தான் அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 

.2 பிராங்கிற்கு சாக்லட் வாங்கினேன். இனி ஒரு போதும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்தேன். –

தன் கையில் பணமே இல்லை என்று இப்படி வருத்தப்பட்டு எழுதிய டயரி குறிப்பின் தேதி 10-4-1845 வயது 22.

 

தனது தாய்க்கு தான் எழுதும் ஒவ்வொரு பேப்பருக்கும் தான் 4 ஸ்டர்லிங் பவுண்ட் கேட்டிருப்பதாகக் கடிதம் எழுதிய தேதி 15-4-1847. வயது 24.

 

ஆக்ஸ்போர்டில் உள்ள செவாலியர் புன்சென்னுக்கு இந்தியாவை கிறிஸ்தவமயமாக்கத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக எழுதிய கடிதத்தின் தேதி 25-8-1856. வயது 33.

 

மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு தனது வேத மொழிபெயர்ப்பு இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று எழுதிய கடிதத்தின் தேதி 9-12-1867 .அவரது வயது 44.

 

இந்தியா ஒரு முறை ஜெயிக்கப்பட்டது; ஆனால் இன்னொரு முறை ஜெயிக்கப்பட வேண்டும். அது கல்வி மூலமாக. இந்த இரண்டாவ்து வெற்றி மேலை நாட்டுக் கருத்துக்களை அங்கு புகுத்தும் என்று டியூக் ஆஃப் அர்ஜிலுக்குக் கடிதம் எழுதிய தேதி 16-12-1868 வயது 45

 

ஆக கையில் காசே இல்லாமல் தவித்த மாக்ஸ்முல்லரின் இளமைப் பருவமும் இந்தியாவைக் கிறிஸ்தவ மயமாக்கத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக் இருந்த மாக்ஸ்முல்லரின் நடு வயதும் விவேகானந்தரிடம் என்னால் இந்தியாவிற்கு வர முடியாது; ஏனெனில் அங்கிருந்து நான் திரும்ப மாட்டேன். என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும் என்று நெகிழ்ந்து கூறிய மாக்ஸ்முல்லரின் முதுமைப் பருவமும் பல்வேறு உண்மைகளை உணர்த்துகின்றன.

ஆதாரத்துடன் இவை அமைவதால் அனைத்துமே உண்மைகளே!

 

இந்த காலவரிசை அட்டவணைப்படி அவர் வாழ்வையும் வாக்கையும் தொகுத்துப் பார்த்தால் மாக்ஸ்முல்லரின் மர்மம் ஓரளவு தெளிவாகக் கூடும்.

 

அவரை ஆட்டிப் படைத்த கிறிஸ்தவ சக்திகளும், அரசியல் சக்திகளும் அவரை எவ்வளவு தூரம் தம் செல்வாக்கிற்கு உட்படுத்தின என்பதையும் கால வரிசைப்படி உள்ள ஆவணங்கள் மூலம் ஆய்ந்து விடலாம்.

 

அவருக்கு சம்ஸ்கிருதமே தெரியாது; அதை அவருக்குச் சொல்லிக் கொடுத்தது சம்ஸ்கிருத எழுத்துக்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு வயது இந்தியப் பையன் போன்ற திடுக்கிடும் தகவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

பிழைகள் மலிந்த வேத மொழிபெயர்ப்பு என்று விமரிசனம் தந்திருக்கும் The Sacred Books of the Esat Sries – இன் ரஷியப் பதிப்பின் ஆசிரியரான போலாங்கர் (Boulanger) கூறுவதையும் ஆய்வுக்கு எடுத்துக்  கொள்ள வேண்டும்.

 

இவை அனைத்தையும் சரியான நடுநிலைக் கண்ணோட்டத்துட்ன பார்த்தால் மாக்ஸ்முல்லர் கூறியதில் எது தவறு எது உண்மை என்ற முடிவுக்கு வந்து விடலாம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3 (Post No.4248)

8d263-_max_mueller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 4-41 am

 

Post No. 4248

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3

ச.நாகராஜன்

4

 

மாக்ஸ்முல்லரின் முழுப் பெயர் ஃப்ரெடெரிக் மாக்ஸிமில்லன் மாக்ஸ்முல்லர் (Friedrich Maximillan Max Muller)

 

பெரும்பாலானோர் நினைப்பது போல அவர் ஒரு பிரிட்டிஷ்காரர் அல்ல. அவர் ஒரு ஜெர்மானியர். பின்னால் பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றார். 50 தொகுதிகள் அடங்கிய The Sacred Books of the East என்ற நூல் தொகுதியை அவர் பதிப்பித்தார்.

 

அவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கவில்லை. ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது.

ஆகவே அவர் லண்டனில் குடியேற நேர்ந்தது.

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் அவர் எந்த ஒரு தேர்வையும் எழுதவில்லை என்று டாக்டர் ப்ரொதோஷ் ஐச் (Dr Prodosh Aich)  அடித்துக் கூறுகிறார்.

 

Lies with Long Legs என்ற அவரது ஆய்வு நூல் படித்துச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

 

“தன்னை அவரே மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (Master of Arts) என்று சொல்லிக் கொண்டார்.அவரது மனைவி அவரை டாக்டர் ஆஃப் பிலாஸபி என்று கூறிக் கொண்டார். அவரது மனைவி அவரை லெய்ப்ஜிக் பல்கலைக்கழகத்தில் (leipzig University) படித்ததாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரமாக எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை” என்கிறார் ஐச்.

 

அவர் ஒரு பொழுதும் இந்தியா வந்ததில்லை என்பது உண்மை.

ஆகவே அவர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவில் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்பொது அவர் சம்ஸ்கிருதத்தை ஐரோப்பாவில் தான் கற்றிருக்க வேண்டும். அப்படியானால் அவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தது யார்? எந்தப் பண்டிதர்?

எந்தப் பண்டிதருமில்லை.

 

ஒரு 18 வயதுப் பையன் இந்தியாவைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு சம்ஸ்கிருத அகரவரிசை அதாவது 51 எழுத்துக்கள் தெரியும்

 

அவனது பெயர் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் (Alexander Hamilton0. தனக்குத் தெரிந்த எழுத்துக்களை அவன் தான் மாக்ஸ்முல்லருக்குக் கற்றுக் கொடுத்தான்.

 

ஏராளமான பணம் கொடுத்து இந்தியாவில் பல பண்டிதர்களை நியமித்து வேதத்தை மொழி பெயர்த்தார் மாக்ஸ்முல்லர்.

பணம் கிடைத்ததால் தங்களுத் தெரிந்த வரை தெரிந்ததை அவர்கள் மொழி பெயர்த்தனர்.

 

இது தான் வேத மொழிபெயர்ப்பின் உண்மை வரலாறு.

 

5

லார்ட் மெக்காலே இந்திய நாட்டை கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.

 

அவன் போட்ட திட்டப்படி ரிக் வேதத்தை ஹிந்து மதத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார் மாக்ஸ்முல்லர்.

 

மெக்காலே திட்டத்திற்கு இரையானவர்களில் கல்கத்தா சான்ஸ்கிரீட் காலேஜை செற்ந்த சான்ஸ்கிரீட் புரபஸரான பண்டிட் தாராநாத்  முக்கியமானவர்.

அவர் வாசஸ்பத்யம் என்ற ஒரு சம்ஸ்கிருத அகராதியைத் தொகுத்தார்.

 

அதில் வேண்டுமென்றே பல வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. 1863ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்தப் பணி முக்கியமான ஹிந்து மத – வேத மத எதிர்ப்பு அகராதியாக அமைந்தது.

 

லார்ட் மெக்காலேயின் வேத மத ஒழிப்புத் திட்டம் மிக ஆழமான ஒன்று.

 

அவன் எழுதிய வார்த்தைகள் இவை:

 

We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern: a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect.

 

“I have no knowledge of either Sanskrit or Arabic. But I have done what I could to form a correct estimate of their value….. I have never found one among them (Sanskrit or Arabic Scholars) who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia.”

 

லார்ட் மெக்காலேயின் உண்மை முகம் இது தான். ஒரு குருடன் விழி இருக்கும் அனைவரையும் குருடனாக்கத் திட்டமிட்டதைப் போல பழம் பெரும் நாகரிகமான ஹிந்து நாகரிகத்தை அதற்கு அருகில் கூட வர முடியாத கிறிஸ்தவத்தால் அழிக்க அவன் திட்டமிட்டான்.

 

இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆனார் மாக்ஸ்முல்லர்.

அது எப்படி? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4 (Post No.4269)

4cee3-_max_mueller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 6-16 am

 

Post No. 4269

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4

ச.நாகராஜன்

6

 

லார்ட் மெக்காலேயின் முழுப் பெயர் தாமஸ் ஜேம்ஸ் பாபிங்டன் மெக்காலே.

மெக்காலே பிறந்த தேதி 25-10-1800

மாரடைப்பால் இறந்த தேதி 28-12-1859

1834ஆம் ஆண்டு சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் துவக்க உறுப்பினராக அவர் ஆக்கப்பட்டார்.

அடுத்து 1834ஆம் ஆண்டிலிருந்து 1838ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.

இநதியாவில் உள்ளவர்கள் நாகரீகமற்ற ஜடங்கள் என்றும். விக்கிரக ஆராதனை செய்பவர்கள் நிச்சயம் திருத்தப்பட வேண்டிய ஜென்மங்கள் – காட்டுமிராண்டிகள்-  என்றும் அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார்.

இதற்கான ஒரே வழி ஆங்கிலக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தி இந்திய இரத்தமாக இருந்தாலும், கறுப்புக் கலருடன் இருந்தாலும் எண்ணத்தில் சுத்தமான ஆங்கில டேஸ்டையும் அறிவையும், பழக்க வழக்கங்களையும் இந்தியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.

இந்த அறிவீ னமான கொள்கையைத் தான்  மெக்காலே கொள்கை என்கிறோம்.

இதற்குப் பலியாகி இதை ஆமோதித்தோர் பிரிட்டனில் இருந்த ஏராளமானோர்.

மாக்ஸ்முல்லரும் இந்தக் கொள்கையில் விழுந்தவரே!

அனைத்து இந்தியரும் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு எப்படியாவது உடனடியாக இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்கி விட வேண்டும் என்பதே மெக்காலேக்களின் ( மெக்காலே கொள்கையைக் கொண்டோர்) ஒரே எண்ணமாக இருந்தது.

இதற்கான வழி வகைகளை முழு வீ ச்சுடன ஆராய்ந்து அமுல் படுத்தினர் பாதிரிமார்கள்.

இந்த நிலையில் தான் மாக்ஸ்முல்லர் லண்டன் வந்தார்.

7

 

மிஷனரிகளுக்கு பிரமாதமான வேலை இந்தியாவில் காத்திருந்தது.

முப்பது கோடிப் பேர்கள்.

அவர்கள் 56 தேசங்களாகப் பழைய பாரதத்தில் இருந்து இப்போது ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக ஆகி இருக்கின்றனர்.

பல்வேறு  மொழிகள்.

ஆகவே

  • ஐநூறுக்கும் மேற்பட்ட சம்ஸ்தானங்களை மேலும் பிளவு படுத்த வேண்டும்.
  • இருக்கின்ற உள்ளூர் மொழிகளை வைத்து எவ்வளவு பிரச்சினையையும் பிரிவினையையும் உருவாக்க முடியுமோ அவ்வளவையும் உருவாக்க வேண்டும்.
  • அனைவரையும் ஒன்று படுத்தும் ஆதார மொழியான சம்ஸ்கிருத்த்தை அழிக்க வேண்டும்; அது ஒன்றுமில்லாத மொழி என்று திட்டமிட்டு “ஆதாரபூர்வமாக அறிஞர்களின் பின்னணியில் ஆய்ந்து” முடிவை வெளியிட்டு சொந்த மக்களே அதை எள்ளி நகையாட வேண்டும்.
  • ஆரியர்கள் படையெடுத்ததால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.திராவிடர்கள் வேறு இனம். அவர்கள் ஆரியர்களால் தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்று ஓங்கி முழங்கி அதை ஆதரிக்கும் ஒரு கைக்கூலிப் படையை உருவாக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தைப் புகுத்தி அதைப் பேசுவோருக்கு உயர் பதவி அந்தஸ்து தரப்படல் வேண்டும். அவர்கள் ஆங்கில ஜாதி – அதாவது மேம்பட்ட ஜாதி என்ப்தை கணம் தோறும் வாழ்க்கை முறையில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
  • .சொந்த கலாசாரத்தைப் பின்பற்றுவோர் கல் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டிகள்; அவர்களின் இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவை சுத்த புளுகு மூட்டைகள் என்ற பிரச்சாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.
  • வேத மந்திரங்கள் அர்த்தம் இல்லாதவை; சிறுபிள்ளைத்தனமானவை என்று அடிக்கடி திருப்பித் திருப்பி “அறிஞர்களால்” சொல்லப்பட வேண்டும்.
  • ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து சண்டையிடச் செய்ய வேண்டும்.
  • தீண்டாதார் என்று ஒரு கோஷ்டியை இனம் காட்டி ஒட்டு மொத்தமாக அவர்களை ஹிந்து மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்.

10 ) ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தீராத தொடர் பகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி அதை நீடித்து வளரச் செய்ய வேண்டும்.

  • எவ்வளவு விதமாக எத்துணை அளவு நாட்டைப் பிரித்துத் துண்டாட முடியுமோ அத்துணை அளவு அதைச் செய்ய வேண்டும்.
  • இந்த நோக்கங்களுக்கு ஆதரவாக உயர் குடி மக்களையும் படித்தவர்களையும், அறிஞர்களையும் பொன், பெண், பதவி உள்ளிட்ட அனைத்தையும் விலையாகக் கொடுத்து வாங்குதல் வேண்டும். அவர்கள் லண்டனின் மவுத் பீஸாக விளங்கினால் பாமர மக்கள் செய்வதறியாது தானே பின் தொடர்வர். வேலை சுலபமாகும்.
  • மேலை நாட்டு நடை, உடை, பாவனைகளை அதிகமதிகம் பரப்ப வேண்டும். அதை அனைவரும் மதிக்கும் படி செய்ய வேண்டும்.
  • ஓட் போடும் முறை வந்தால் அதை மூலதனமாகக் கொண்டு இன்னும் ஏராளமான பிரிவினைகளைச் செய்யலாம்.
  • இதற்கு ஆகும பணத்தை இந்தியாவிலிருந்து சுரண்டி எடுத்து லண்டனுக்கு அனுப்பி அங்கிருந்து பட்ஜெட் போட்டு மீண்டும் இந்தியாவிற்கு இந்த நோக்கங்களுக்காக அனுப்பல் வேண்டும்.

இதற்காக முழு சேனை மிஷனரிகள் என்ற பெயரில் தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு இதை ஒட்டி எழவே மிஷனரிகள் தயாராயினர்.

மேலே கண்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்திய வரலாற்றைச் சில நிமிடங்கள் ஆராய்ந்து பார்க்கும் அன்பர்கள் இன்று இந்தியத் திருநாட்டில் விளங்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அலங்கோலங்களுக்கும் இவையே காரணம் என்பதை அறிந்து கொள்ள முடியும் – சுலபமாக.

 

இந்தப் பின்னணியில் மாக்ஸ்முல்லருக்கு வருவோம்.

***



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 5 (Post No.4327)

2c421-max-muller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

 

Date: 23 October 2017

 

Time uploaded in London- 8–06 am

 

 

Post No. 4327

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 – இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 5

 

ச.நாகராஜன்

8

1845ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அவரது நாட்குறிப்பில் ஒரு கப் சாக்லட்டிற்கு 2 பிராங்க் செலவழித்ததைக் குறிப்பிட்ட அவர் இனி ஒரு போதும் அதை வாங்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்ததை இப்படிக் குறிப்பிடுகிறார். 1823இல் பிறந்த மாக்ஸ்முல்லருக்கு இந்த கடிதம் எழுதும் போது வயது 22 தான்!

FROM THE DIARY OF MAX MÜLLER. PARIS. April 10, 1845.

“I get up early, have breakfast, i.e. bread and butter, no coffee. I stay at home and work till seven, go out and have dinner, come back in an hour and stay at home and work till I go to bed. I must live most economically and avoid every expense not actually necessary. The free lodging is an immense help, for unless one lives in a perfect hole… I have not been to any theatre, except one evening, when I had to pay 2 francs for a cup of chocolate, I thought ‘Never again’.”

சாக்லட் வாங்கி சாப்பிடக்கூட முடியாத அளவுக்குக் கையில் பணமில்லாத மாக்ஸ்முல்லரின் நிலையை இந்த டயரிக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் தான் அவர் லண்டன் வந்தார்.

 

லண்டன் வந்த மாக்ஸ்முல்லருக்கு ஒரு நல்ல ‘வேலை’ கிடைத்தது. ஜான் வில்லியம் ஆடம்ஸன் எழுதியுள்ள நூலில் உள்ள விவரத்தின் படி ஒரு ஆண் வாத்தியாருக்கு வருடம் ஒன்றுக்கு சம்பளம் 90 பவுண்டுகள். பெண் உபாத்தியாயினிக்கு வருட சம்பளம் 60 பவுண்டுகள். 1999இல் லண்டனில் ஒரு ஆசிரியருக்கு வருட சம்பளம் சுமார் 14000 பவுண்டுகளிலிருநது சுமார் 36000 பவுண்டுகள் வரை அளிக்கப்படுகிறது. அதாவது 1853இலிருந்து 146 வருடங்கள் கழித்து 1999இல் 200 மடங்கு சம்பளம் அதிகரித்துள்ளது. மாக்ஸ்முல்லருக்கு ஒரு தாளுக்கு 4 பவுண்டு ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டது. அதன் 1999ம் ஆண்டு மதிப்பு 800 பவுண்டுகள்! பிரிட்டிஷாருக்குத் தங்கள் வேலையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த நபருக்கு இவ்வளவு பணம் கொடுக்க முன் வந்தனர்! அதாவது மாக்ஸ்முல்லர் எவ்வளவு பணம் கேட்டாலும் தாங்கள் சொன்னபடி செய்தால் அந்த அளவு பணம் தர அவர்கள் முன் வந்தனர்.

 

He was highly paid for this job. According to the statistical information given on page 214 of the “English Education, 1798-1902” by John William Adamson, printed by Cambridge University Press in 1930, the revised scale of a male teacher was £90 per year and for a woman, £60 in 1853. The present salary of a teacher in London is £14,000 to £36,000 per year, which averages a minimum of at least 200 times increase in the last 146 years. Max Müller was paid £4 per sheet of his writing which comes to £800 of today (1999). This is an incredibly high price for only one sheet of writing. But it’s the general law of business, that the price of a commodity increases with its demand. The British were in such an imperative need to get someone to do this job and Max Müller was the right person, so they paid whatever Max Müller asked for.

மாக்ஸ்முல்லர் தனது தாயாருக்கு 1847ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி எழுதிய கடிதம் இந்த உண்மையை விளக்குகிறது. அவர் ஆண்டுக்கு 200 பவுண்டுகளைப் பெற 50 தாள்களை எழுத விழைந்ததை இப்படிக் கூறுகிறார்: (இதை எழுதும் போது அவருக்கு வயது 24!)

 

His enthusiastic letter to his mother dated April 15, 1847 reveals this fact

His letter:

“I can yet hardly believe that I have at last got what I have struggled for so long… I am to hand over to the Company, ready for press, fifty sheets each year; for this I have asked £200 a year, £4 a sheet. They have been considering the matter since December, and it was only yesterday that it was officially settled.”

“…In fact, I spent a delightful time, and when I reached London yesterday I found all settled, and I could say and feel, Thank God! Now I must at once send my thanks, and set to work to earn the first £100.

லண்டனுக்கு வந்த அவர் முதல் நூறு பவுண்டுகளைப் பெற வேலையை இப்படியாக ஆரம்பித்தார்.

மிகுந்த பணத்தேவை கொண்டிருந்த இளைஞரான மாக்ஸ்முல்லர்பிரிட்டிஷார் சொன்ன வேலையைச் செய்ய முன் வந்தார் – தான் கேட்டபணத்தை அவர்கள் கொடுக்க முன் வந்தால்!

***



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6 (Post No.4355)

74c83-king-cobra-flicks-tongue-820x547.j

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-08 am

 

 

Post No. 4355

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4367 – வெளியான தேதி 23-10-2017 ;

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6

 

ச.நாகராஜன்

9

The Life and Letters of Friedrich Max Muller – First Published in 1903 (London and New York; Reprint in USA

1903ஆம் ஆண்டு ‘தி லைஃப் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ஃப்ரெடிரிக் மாக்ஸ் முல்லர் என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படும் கடிதங்களையே இங்கு நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்து அவர் செவாலியர் புன்சென்னுக்கு 1856ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில் புனிதர் பால்  வாழ்ந்த காலத்தில் இருந்த கிரேக்கம் மற்றும் ரோமை விட இந்தியா கிறிஸ்தவ மயமாக நன்கு காலம் கனிந்திருக்கிறது என்று எழுதுகிறார்.

இந்தப் புனித காரியத்திற்காக நான் எனது வாழ்வையே அர்ப்பணிப்பேன் என்று சூளுரை புகல்கிறார். 1856இல் இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவர் வயது 33.

கடிதத்தின் ஒரு பகுதியை கீழே காணலாம்:

TO CHEVALIER BUNSEN 55, ST. JOHN STREET, OXFORD, AUGUST25, 1856.

 “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

இதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் புன்சென் மாக்ஸ் முல்லரை அவரது மத சம்பந்தமான கட்டுரை பற்றி வெகுவாகப் புகழ்கிறார். அவர் ராஜதந்திரியாக சேவை ஆற்ற வேண்டியவர் என்று அவர் கூறுவதன் உள்ளர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கடிதத்தின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:

 On April 17, 1855, Bunsen wrote to thank Max Müller for an article on his
Outlines.

“You have so thoroughly adopted the English disguise that it will not be easy for any one to suspect you of having written this ‘curious article.’ It especially delights me to see how ingeniously you contrive to say what you announce you do not wish to discuss, i.e. the purport of the theology. In short, we are all of opinion that your cousin was right when she said of you in Paris to Neukomm, that you ought to be in the diplomatic service!”

1868, டிசம்பர் 16ஆம் தேதி அவர் ட்யூக் ஆஃப் ஆர்ஜில்-க்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுவது:

இந்தியா ஒரு  முறை ஏற்கனவே ஜெயிக்கப்பட்டது. அது இரண்டாம் முறையாக ஜெயிக்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது வெற்றி கல்வி மூலமாக ஏற்பட வேண்டும். கல்வி பற்றி ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி உதவியானது மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அது போதுமானதாக இருக்கும். … மேலை நாட்டுக் கருத்துக்கல் தோய்ந்த ஆனால் உள்ளூர் மண்வாசமும் குணாதிசயமும் அப்படியே இருக்கும்படியாக உள்ள ஒரு புது தேசீய இலக்கியம் எழும். ஒரு புது தேசீய இலக்கியம் ஒரு புது தேசீய வாழ்க்கையைத் தன்னுடன் கொண்டு வரும். ஒரு புதிய நல்லொழுக்க சக்தியும் வரும். மதம் என்று எடுத்துக் கொண்டால், அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். மிஷனரிகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்ததற்கும் அதிகமாக செய்திருக்கின்றனர்.”

இந்தியாவின் புராதன மதம் அழிந்து விட்டது. இப்போது கிறிஸ்தவம் உள்ளே நுழையா விட்டால் அது யாருடைய தவறு?”

இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவருக்கு வயது 45.

TO THE DUKE OF ARGYLL. OXFORD, December 16, 1868.

“India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.

“The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

இந்தக் கடிதங்களிலிருந்து இளைஞரான மாக்ஸ் முல்லரின் தெளிவான ஒரே நோக்கம் “உயிரைக் கொடுத்தாவது” இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வேண்டும்; ஹிந்து மதம் அழிந்து படும்” என்பது தெளிவாகத் தெரிகிறது. 22 வயதிலிருந்து 45 வயது வரையிலான அவரது நோக்கம், ஆசை, பணி ஆகியவற்றை மேற்கூறிய கடிதங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

12d92-_max_mueller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

 Date: 11 NOVEMBER 2017

 Time uploaded in London- 5-32 am

 Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

  

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்குஎழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாகஇருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும்அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார்அவரை  எனக்கு பாரிஸிலேயேதெரியும்செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில்பணிபுரிந்து வந்தார்இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்குஅருகிலேயே வசித்து வருகின்றனர்உலகின் பல பகுதிகளைச்சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்குஉருவாக்கியுள்ளோம்நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள்காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில்கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாக ‘செட்டில் ஆகிவிட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட்இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்ததுமளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டியகட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத் “தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டுஅதை உள்ளுணர்வு பெற்றவர்களேசரியாக அறிய முடியும்வெறும் கற்றுக் குட்டிகளை வைத்துவார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம்செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார்ஆரியர்கள் வெளியிலிருந்துஇந்தியாவிற்கு வந்தவர்கள்வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர் “அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்துவிட்டதால் ‘செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக்கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாகவிமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8 (Post No.4451)

3686b-max2bmuller.jpg?w=600

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 DECEMBER 2017

 

Time uploaded in London- 7-16 am

 

 

 

Post No. 4451

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8

 

ச.நாகராஜன்

 

b96da-max_muller_and_his_contemp.jpg?w=6

11

மாக்ஸ்முல்லரைப் பற்றிய செய்திகளில் அவர் யூஜின் பர்னாஃப் (Eugene Burnouf – 1801-1852) என்ற சம்ஸ்கிருத பேராசிரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார் என்பதும் ஒரு செய்தி.

யூஜின் பர்னாஃப் பாரிஸில் 20 வருடங்கள் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்தவர். இவரிடம் மாக்ஸ்முல்லர் 1845ஆம் ஆண்டு சென்றார். 1846இல் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதாவது மாக்ஸ்முல்லர் தனது 22ஆம் வயதில் பர்னாஃப்பிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஒரே ஒரு வருடம் கற்றுக் கொண்டு, தனது 23ஆம் வயதில், இங்கிலாந்து சென்று விட்டார்,

 

வளமான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் மொழி நயத்தையும் அவர் ஒரே ஆண்டில் கற்றுக் கொண்டு தேர்ந்த சம்ஸ்கிருத நிபுணராக ஆகி விட்டாரா?

இதை நம்பியா ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவரிடம் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியைத் தந்தது.

 

இந்த சந்தேகம் இயல்பான சந்தேகமே.

 

பற்பல வருடங்கள் ஆழ்ந்து வேதம் கற்ற பாரம்பரியம் மிக்க  வேத குடும்பங்களில் வந்தவர்களே வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்திருப்பதாக மார் தட்டிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நுட்பமான விஷயங்களை வேதம் கொண்டுள்ளது.

 

ஆக 23 வயது வாலிபர் ஒருவர் ஒரு வருடத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்செ பெற்றார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நோக்கம் மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருத புலமை உண்டா இல்லையா என்பதை ஆராய்வதல்ல.

தாங்கள் கூறியபடி விஷக் கருத்துக்களை அவரால் வித்திட முடியுமா, அந்தத் தகுதி அவருக்கு உண்டா, தங்கள் வழிக்கு அவர் வருவாரா என்பது தான்.

 

மாக்ஸ்முல்லர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகள் குளிரும் விதமாகத் தன் பணியை ஆரம்பித்தார்!

 

9fdda-max-muller.jpg?w=600

12

மாக்ஸ்முல்லர் 1849ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டு முடிய – அதாவது சுமார் 25 ஆண்டுகள் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவரது 26ஆம் வயதிலிருந்து 41ஆம் வயது வரை இந்த ப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த 25 வருடங்களில் சம்ஸ்கிருதத்தை அவர் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சொல்லலாமா?

அவரே வேதங்களை மொழி பெயர்க்கவில்லை என்று சொல்கிறது வரலாறு.

 

அமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகை ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்”.

அதில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிட்ட இதழில் மாக்ஸ்முல்லர் இறந்ததை ஒட்டிய இரங்கல் செய்திப் பகுதி வெளியானது.

 

அதில், மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்தை உண்மையில் அவரே மொழி பெயர்க்கவில்லை. அதைப் பெயர் தெரியாத ஒரு ஜெர்மானிய அறிஞரே செய்தார். முல்லர் அந்தப் பணியைப் பணம் கொடுத்து செய்யச் சொன்னார்.” என்று இருக்கிறது.

 

விக்கிபீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Scientific American carried his obituary in the December 8th, 1900 edition of the magazine. It was revealed that Max Muller had in fact usurped the full credit for the translation of the Rig veda which was actually not his work at all, but of another unnamed german scholar whom Muller had paid to translate the text. To quote from his obituary in Scientific American, “What he constantly proclaimed to be his own great work, the edition of the “Rig Veda,” was in reality not his at all. A German scholar did the work, and Muller appropriated the credit for it.”

 

a11d0-_max_mueller.jpg?w=600

13

வேதங்களைப்பற்றிய தவறான கருத்தைக் கொண்டு அந்தப் பணியை ஆரம்பித்த மாக்ஸ்முல்லர் அதனுடைய சிறப்பை உணர்ந்து (தான் செய்ய வேண்டிய டாமேஜை எல்லாம் செய்து முடித்து விட்டு    – செஞ்சோற்றுக் கடன் கழித்த பின்னர் – ) இந்திய பாரம்பரியத்தையும் அதன் ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும் பாராட்ட ஆரம்பித்த போது கிறிஸ்தவ மிஷனரிகளால் அதைத் தாங்க முடியவில்லை.

அவரைக் கிறிஸ்தவ மதத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

ஆடம் லார்ட் கிஃப்போர்ட் (Adam Lord Gifford) என்பவர் ஆண்டு தோறும் இறையியலில் ஒரு தொடர் சொற்பொழிவைச் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கு கிஃப்போர்ட் லெக்சர்ஸ் (Gifford Lectures) என்று பெயர். மிகவும் பிரசித்தமான இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவாளராக 1888ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வருடாவருடம் இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவுகளை மாகஸ்முல்லர் நிகழ்த்தினார்.

இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய போது முல்லர் சொல்லிய கருத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உடன்பாடுடையதாக இல்லை.அதனால் அவரை கிறிஸ்தவ மத எதிரி என்று கூறிக் குற்றம் சாட்டினர்.

இதப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலின் ஆங்கில மூலம் இது:

Anti-Christian

During the course of his Gifford Lectures on the subject of “natural religion” Muller was severely criticized for being anti-Christian. In 1891, at a meeting of the Established Presbytery of Glasgow, Mr. Thomson (Minister of Ladywell) moved a motion that Muller’s teaching was “subversive of the Christian faith, and fitted to spread pantheistic and infidel views amongst the students and others”, and questioned Muller’s appointment as lecturer.

An even stronger attack on Muller was made ny Monsignor Alexander Munro in St Andrew’s Cathedral. Munro, an officer of the Roman Catholic Church in Scotland (and Provost of the Catholic Cathedral of Glasgow from 1884 to 1892), declared that Muller’s lectures “were nothing less than a crusade against Divine revelation, against Jesus Christ, and against Christianity”. The blasphemous lectures were, he continued, “the proclamation of atheism under the guise of pantheism” and “uprooted our idea of God, for it repudiated the idea of personal God”.

14

இப்படியாக எந்த ஒரு பணியை ஆற்றச் சொல்லி கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பணத்தைத் தந்து மாக்ஸ்முல்லரை நியமித்தார்களோ அவரது அந்தப் பணியில் அவர்கள் திருப்தி அடையவில்லை .

மாக்ஸ்முல்லர் ஆரிய இனம் என்ற பிரிவினைக் கொள்கையை ஏற்படுத்தினார். வேத காலத்தை மனம் போன படி மிகவும் குறைத்து மதிப்பிட்டார். வேதத்தின் பொருளை மாற்றினார்.

என்ற போதும் கூட கிறிஸ்தவ மிஷனரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் மாக்ஸ்முல்லர் இந்தியாவைப் புகழத் தொடங்கியது அவர்களைத் திடுக்கிட வைத்தது.

சொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக் கொண்டது போல அவர்கள் தவித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9 (Post No.4501)

 775eb-max2bmuller.jpg?w=600

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-34 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4501

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9

 

ச.நாகராஜன்

15

மாக்ஸ்முல்லர் காலத்தில் அவருக்குச் சாதகமாக இந்தியாவில் நடந்த  ஒரு நிகழ்ச்சி பிரம்ம சமாஜத்தின் தோற்றம்.

இதைத் தோற்றுவித்தவர் ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர். (தோற்றம் 22-5-1771 மறைவு 27-9-1833) பிரம்ம சமாஜத்தை அவர் 20-8-1828 அன்று தோற்றுவித்தார்.

அதனுடைய பிரதான கொள்கைகள்:

எந்த ஒரு புனித நூல் அல்லது சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

அவதாரங்களில் நம்பிக்கை இல்லை.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

ஜாதி பேதத்தில் நம்பிக்கை இல்லை

கர்ம பலன் மற்றும் புனர் ஜென்மத்தை நம்புவோர் நம்பட்டும்; நம்பாதவர் நம்ப வேண்டாம்.

ஏறத்தாழ கிறிஸ்தவ மாதத்தை பாலிஷ் போட்டு பளபளப்பாக்கி இந்தியாவுக்கு அன்பளிப்பாகத் தருவது போல இருக்கிறதல்லவா இது!

இதைத் தான் ராம் மோகனராய் உருவாக்கினார்.

ஆனால் கால வெள்ளத்தில் அது அடிபட்டுப் போயிற்று என்பது வேறு விஷயம்!

அவர் கிறிஸ்தவ மதத்திற்குத் துணை போனது  மாக்ஸ்முல்லருக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று.

ஏற்கனவே நல்ல விதமாக மேலை நாட்டு கல்வி முறையை (கிறிஸ்தவ மத பிரச்சாரக் கல்வி என்று அர்த்தம் கொள்க) இந்தியாவில் புகுத்தினால் கிறிஸ்தவத்திற்கு ஈடான ஒன்று இந்தியாவில் பிறந்து இந்து மதம் ஒழியும் என்று மனப்பால் குடித்தார் அவர்.

அதற்காக சௌகரியமான வழியாக பிரம்ம சமாஜம் இருக்கவே அதை நாடினார்; அத்துடன் தொடர்பு கொண்டார்.

ராம் மோகன ராய் இரண்டாம் அக்பரின் அரசவையில் இடம் பெற்றார். அக்பருக்கு ஒரு பிரச்சினை. அவருக்கு பிரிட்டிஷாரின் கருணைத் தொகை (மானியம்) போதவில்லை.

ஆகவே ராம் மோகன ராயைத் தன் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அவருக்கு 30000 பவுண்டு அளவில் அதை ராம் மோகனராய் பேச்சு வார்த்தை நடத்தி உயர்த்தினார்.

அவருக்கு  இரண்டாம் அக்பர் ராஜா என்ற பட்டத்தையும் அளித்தார்.

ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர் இப்போது ராஜா ராம் மோகன ராய் ஆனார்.

இங்கிலாந்து சென்ற அவர் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் ‘எழுத்துச் சேவை’ பணி புரிய முன் வந்தார்.

பின்னர் வில்லியம் கேரி என்பவரிடம் பணி புரிந்தார். இவர் பணி புரிந்த இடமெல்லாம் மத பிரசாரம் (கிறிஸ்தவத்தைப் பரப்புவது; இந்து மதத்தை ஒழிப்பது) அரசியல் ( இந்தியாவை நிரந்தரமாக பிரிட்டிஷாரின் கொள்ளை அடிக்கும் சொர்க்க பூமியாக வைத்திருப்பது) ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

இறுதியில் அவர் கேரியையே தாக்க ஆரம்பித்தார். கடும் மிஷனரியான கேரிக்கு கோபம் வந்தது நியாயமே.

ராஜா ராம் மோகன ராயே பின்னால் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்துச் செல்லும் தொகை வருஷத்திற்கு 30 லட்சம் பவுண்டுகள் என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார்.

“அவர் சதியை ஒழித்தார்; பெண்ணுக்கு உரிமை கோரினார்.” ஆகிய இவை அவரது சாதனைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.

அவரது வரலாறை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல என்பதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம்.

அவர் பற்றிய விக்கிபீடியா தரும் செய்தியின் ஒரு பகுதி இது: விளக்கம் வேண்டுவோர் முழுமையாக அங்கு படிக்கலாம்.

 

From 1803 till 1815, Ram Mohan served the East India Company’s “Writing Service”, commencing as private clerk “munshi” to Thomas Woodroffe, Registrar of the Appellate Court at Murshidabad (whose distant nephew, John Woodroffe — also a Magistrate — and later lived off the Maha Nirvana Tantra under the pseudonym Arthur Avalon). Roy resigned from Woodroffe’s service and later secured employment with John Digby, a Company collector, and Ram Mohan spent many years at Rangpur and elsewhere with Digby, where he renewed his contacts with Hariharananda. William Carey had by this time settled at Serampore and the old trio renewed their profitable association. William Carey was also aligned now with the English Company, then head-quartered at Fort William, and his religious and political ambitions were increasingly intertwined.

The East India Company was draining money from India at a rate of three million pounds a year in 1838. Ram Mohan Roy was one of the first to try to estimate how much money was being driven out of India and to where it was disappearing. He estimated that around one-half of all total revenue collected in India was sent out to England, leaving India, with a considerably larger population, to use the remaining money to maintain social well-being. Ram Mohan Roy saw this and believed that the unrestricted settlement of Europeans in India governing under free trade would help ease the economic drain crisis.

During the next two decades, Ram Mohan launched his attack against the bastions of Hinduism of Bengal, namely his own Kulin Brahmin priestly clan (then in control of the many temples of Bengal) and their priestly excesses.[The Kulin excesses targeted include sati (the co-cremation of widows), polygamy, idolatry, child marriage and dowry.

From 1819, Rammohun’s battery increasingly turned against William Carey, a Baptist Missionary settled in Serampore, and the Serampore missionaries. With Dwarkanath’s munificence he launched a series of attacks against Baptist “Trinitarian” Christianity and was now considerably assisted in his theological debates by the Unitarian faction of Christianity.”

 

 

ஆக மாக்ஸ்முல்லர் பயன்படுத்த நினைத்த பிரம்ம சமாஜம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான உருவ வழிபாட்டை எதிர்த்தல், பல் தெய்வ வழிபாட்டை ஒழித்தல் போன்றவற்றை ஆதரித்தாலும் மறுஜென்மக் கொள்கை பற்றிய வழவழா என்ற கொள்கையைக் கொண்டிருந்தது, ராம் மோகன் ராய் கிறிஸ்தவ மிஷனரிகளைத் தாக்கி பேச ஆரம்பித்தது ஆகியவற்றால் கலகலத்துப் போனது.

 

ராஜா ராம் மோகன ராய் பிரிஸ்டலில் இறந்தார்.

பிரம்மசமாஜத்தைப் பயன்படுத்தும் மாக்ஸ்முல்லரின் நோக்கம் வெற்றி பெற வில்லை. பிரம்ம சமாஜமே இல்லாமல் போயிற்று. 2001இல் இந்தியாவில் எடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் 177 பேரே பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பது தெரிகிறது.

முப்பது கோடி ஹிந்துக்களை உருத்தெரியாமல் ஆக்கவும் உருவவழிபாட்டை ஒழிக்கவும் ஆரம்பித்த ஒரு  “சீர்திருத்த” சமாஜம் 177இல் முடிந்தது. கிறிஸ்தவம் எடுத்த ஏராளமான உத்திகளில் ஒன்றான கைக்கூலியை ஆதரித்தல் என்ற உத்தி இன்னொரு முறை தோற்றது; இந்து மதம் நிலைத்தது. (இந்த பிரம்ம சமாஜ கூட்டங்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தர் போய் வந்தார் என்பது ஒரு சுவையான செய்தி)

 

மாக்ஸ்முல்லரின் மீது கிறிஸ்தவ மிஷனரிகளின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

 

9e81f-max_muller_and_his_contemp.jpg?w=6

16

இந்த நிலையில் இதன் வெளிப்பாடாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

1860ஆம் ஆண்டு போடன் சம்ஸ்கிருத பேராசிரியர் பணிக்கான தேர்தலில்  நின்ற மாக்ஸ்முல்லர் தோற்றுப் போனார். இந்தப் பணிக்கு அவர் தகுதி படைத்தவர் தான். ஆனால் அவரை விட குறைந்த தகுதி பெற்றவரான மோனியர் வில்லியம்ஸுக்கு அது தரப்பட்டது.

மிகவும் வருத்தமடைந்தார் மாக்ஸ்முல்லர். அவருக்குப் பெருத்த ஏமாற்றம் இது. தேர்தல் முடிந்தது. அவர் தோற்றார். மோனியர் வில்லியம்ஸ் வென்றார். உடனே அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் , “எல்லா சிறந்த மனிதர்களும் எனக்கு வோட்டுப் போட்டனர்.புரபஸர்களில் ஏறத்தாழ அனைவருமே எனக்குத் தான்  வோட்டுப் போட்டனர். ஆனால் பொதுவில் இருந்த கூட்டம் தான் மெஜாரிட்டியை நிர்ணயம் செய்தது.”

இப்படியாக கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிரான போக்கு, அவரது ஜெர்மன் பிறப்பு உள்ளிட்ட பல காரணங்கள் அவரது தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காரணம், அவர் இந்தியாவையே பார்த்ததில்லை என்பது. மோனியர் வில்லியம்ஸ் இந்தியாவில் இருந்திருக்கிறார்.

விக்கி பீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

 

He was defeated in the 1860 election for the Boden Professor of Sanskrit, which was a “keen disappointment” to him.[6] Müller was far better qualified for the post than the other candidate (Monier Monier-Williams), but his broad theological views, his Lutheranism, his German birth and lack of practical first-hand knowledge of India told against him. After the election he wrote to his mother, “all the best people voted for me, the Professors almost unanimously, but the vulgus profanum made the majority”.

38309-_max_mueller.jpg?w=600

17

பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாக்ஸ்முல்லருக்கு, 1868ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் ஒப்பீட்டு மொழியியல் அறிவில் பேராசிரியர் பணி தரப்பட்டது. அப்போது அவருக்கு வயது 45. (1875இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும் கூட, அதை அவர் இறுதி வரை (1900ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் மரணமடைந்தார்) வகித்தார்.

(விக்கிபீடியாவின் வரி இது:

Later in 1868, Müller became Oxford’s first Professor of Comparative Philology, a position founded on his behalf. He held this chair until his death, although he retired from its active duties in 1875.)

மாக்ஸ்முல்லரின் நிதானமான மனமும் அறிவும் இந்தியாவின் புகழோங்கிய வரலாறைப் பற்றிப் புகழ ஆரம்பித்தது.

ஈஸ்ட் இந்தியா கம்பெனியும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நொந்து போக உலகம் வியந்தது – இந்தப் புகழுரைகளால்.

அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!

நன்றி: விக்கிபீடியா (ஆதாரபூர்வ தகவல்களுக்காக விக்கி மேற்கோள்கள் தரப்பட்டன)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10 (Post No.4538)

32a1c-max2bmuller.jpg?w=600

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4538

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10

 

ச.நாகராஜன்

18

மாக்ஸ் முல்லர் இந்தியா பற்றிய தனது பிரமாதமான புகழுரைகளை “India : What it Can Teach Us” நூலில் தெரிவித்துள்ளார்.

மிக அருமையான மேற்கோளான “If I were asked under what sky” என்று ஆரம்பிக்கும் மேற்கோளை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.ஆகவே அதை இங்கு மீண்டும் தரவில்லை.

இது தவிர குறிப்பிடத்தகுந்ததாக இலங்கும் மூன்று  மேற்கோள்கள் கீழே தரப்படுகின்றன:

“The true history of the world must always be the history of the few; and as we measure the Himalaya by the height of Mount Everest, we must take the true measure of India from the poets of the Veda, the sages of the Upanishads, the founders of the Vedanta and Sankhya philosophies, and the authors of the oldest law-books, and not from the millions who are born and die in their villages, and who have never for one moment been roused out of their drowsy dream of life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

*

“Whatever sphere of the human mind you may select for your special study, whether it be language, or religion, or mythology, or philosophy, whether it be laws or customs, primitive art or primitive science, everywhere, you have to go to India, whether you like it or not, because some of the most valuable and most instructive materials in the history of man are treasured up in India, and in India only.”
― Friedrich Max MüllerIndia: What Can it Teach Us? A Course of Lectures Delivered before the University of Cambridge

*

“Now let us look to the ancient inhabitants of India. With them, first of all, religion was not only one interest by the side of many. It was the all-absorbing interest; it embraced not only worship and prayer, but what we call philosophy, morality, law, and government, —all was pervaded by religion. Their whole life was to them a religion—everything else was, as it were, a mere concession made to the ephemeral requirements of this life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

 

*

சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகின் வரலாறையே வேதத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் மாக்ஸ்முல்லர்.

எதை எடுத்துக் கொண்டாலும் சரி, மதம், மொழி, பழைய வரலாறைச் சொல்லும் புராணம், தத்துவம், பழக்க வழக்கங்கள், சட்டம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் இந்தியாவிற்குத் தான் போக வேண்டும். ஏனெனில் இந்தியாவில், இந்தியாவில் மட்டும் தான் அந்த அறிவு பொக்கிஷமாகக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் மதம் என்பது ஒரு அம்சம் மட்டும் என்பதல்ல; அது வழிபாடு, பிரார்த்தனை என்பது மட்டுமல்ல; தத்துவம், நீதி, சட்டம், அரசு ஆகிய அனைத்தும் மதத்தில் பரவி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மதம் தான்.

 

இப்படி இந்தியாவை ஓங்கிப் புகழ்ந்து ஹிந்து மதத்திற்குப் புகழாரம் சூட்டி விட்டார் மாக்ஸ்முல்லர்.

*

அறுபதாவது வயதில் இப்படி இந்தியாவை மாக்ஸ்முல்லர் புகழ்ந்த போது விவேகானந்தருக்கு வயது 20.

அவர் நரேந்திரன் என்ற பழைய பெயரிலிருந்து விவேகானந்தராக மாறி சிகாகோ கலைக் கழகத்தில்  சர்வ மத மகாசபையில் உலகம் வியக்கும் சொற்பொழிவை ஆற்றிய ஆண்டு 1893.

அப்போது விவேகானந்தரின் வயது 30.

மூன்று வருடங்கள் கழித்து 1896ஆம் ஆண்டில் 28-5-1896 அன்று விவேகானந்தரை மாக்ஸ்முல்லர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றியும் மாக்ஸ்முல்லர் பற்றியும் விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்தால் மாக்ஸ்முல்லர் மர்மம் விடுபடும், இல்லையா?!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11 (Post No.4563)

534f6-vivekananda2bcentre.jpg?w=600

Date: 30  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-24 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4563

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11

 

ச.நாகராஜன்

 

6655b-chennai2bviveka2b1.jpg?w=600

19

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.

ஸ்வாமி விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தது பற்றியும், அவரைப் பற்றிய ஸ்வாமிஜியின் அபிப்ராயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதை வெவ்வேறு பகுதிகளிலிருந்து பார்ப்பதை விட அதிகாரபூர்வமான, அழகான, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களின் நூலிலிருந்து பார்ப்பதே சாலச் சிறந்ததாகும்.

இரு பாகங்கள் அடங்கிய இந்த நூல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை – 4 -இன் வெளியீடாகும்.

இதில் முதல் பாகத்தில் 723ஆம் பக்கம் தொடங்கி ஸ்வாமிஜி, மாக்ஸ்முல்லரைச் சந்தித்த விவரம் வருகிறது.

அதை அப்படியே கீழே தருகிறோம்.

20

இங்கிலாந்தில் சுவாமிஜி பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார் சுவாமிஜி. ‘தாம் வேதங்களுக்கு எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயணர் தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று தான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது. இந்த நாட்டில் (இந்தியாவில்) கூட, வேத வேதாந்தங்களில் அவரைப் போல் அவ்வளவு உறுதியான, அவ்வளவு ஊறிப்போன ஒருவரை நீ காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அவருக்கு எவ்வளவு ஆழம் காண முடியாத பக்தி தெரியுமா! ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதார புருஷர் என்பதை அவர் நம்புகிறார். நாம் அவரது விருந்தினராக இருந்த போது எவ்வளவு அற்புதமாக என்னை உபசரித்தார்! .. நான் பிரிந்து வரும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது என்று ஒரு முறை சுவாமிஜி தமது சீடரான சரத் சந்திரரிடம் கூறினார் (ஞானதீபம் 6-57-58)

 

3eff3-abt2bvivekananda.jpg?w=600

அதற்கு சரத் சந்திரர், “சாயணரே மாக்ஸ்முல்லராக பிறந்தார் என்றால் அவர் புனிதமான இந்தப் பாரத நாட்டில் பிறக்காமல் மிலேச்ச நாட்டில் ஏன் பிறந்தார்?” என்று கேட்டார். உணர்ச்சிவசப் பட்டவராக சுவாமிஜி பதிலளித்தார்:

‘அறியாமை காரணமாகவே மனிதன், “நான் ஆரியன், மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்று வேறுபடுத்துகிறான். வேதங்களுக்கே உரை எழுதியவரான,ஞானத்தின் பேரொளிப் பிழம்பான அவரிடம் வருணாசிரமப் பிரிவுகளும், ஜாதிப் பிரிவுகளும் இருக்க முடியுமா?” அவருக்கு இவையெல்லாம் முற்றிலும் பொருளற்றவை. மனித குலத்தின் நன்மைக்காக, தாம் விரும்பும் இடத்தில் பிறக்க அவரால் இயலும். கல்வி, செல்வம் இரண்டுமே உள்ள நாட்டில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கான பொருள் எப்படிக் கிடைக்கும்! ரிக் வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது உனக்குத் தெரியாதா? அது கூடப் போதவில்லை. இந்த நாட்டில் அதற்காக நூற்றுக்கணக்கான அறிஞர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் அறிவுக்காக, ஞானத்திற்காக இந்தியாவில் யாராவது இவ்வளவு பணம் செலவழிப்பதைக் காண முடியுமா? கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்கவே இருபத்தைந்து வருடங்கள் ஆகியதாகத் தமது முன்னுரையில் மாக்ஸ்முல்லர் எழுதியுள்ளார். அச்சிடுவதற்கு, மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தன. தமது வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுக் காலத்தை, ஒரு நூலை வெளியிடுவதற்காகச் சாதாரண மனிதன் யாராவது கழிப்பானா? சற்று சிந்தித்துப் பார்! நான் அவரை சாயணர் என்று சொல்வது வெறும் கற்பனையா என்ன? (ஞானதீபம் 6-57-58)

 

இவ்வளவு தூரம் தாம் மதிப்பு வைத்திருந்த மாக்ஸ்முல்லரை சுவாமிஜி 1896 மே 28-இல் அவரது வீட்டில் சந்தித்தார். ‘என்ன அற்புதமான மனிதர் அவர்! சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஸ்ரீ ராமகிருஷ்ணரை நேசிக்கின்ற யாரையும் சென்று சந்திப்பதை ஒரு தீர்த்த யாத்திரையாகவே நான் கருதுகிறேன்’ என்று பிரம்மவாதின் பத்திரிகைக்கு எழுதினார் சுவாமிஜி.

 

சுவாமிஜி சந்தித்த போது மாக்ஸ்முல்லருக்கு 70 வயது ஆகியிருந்தது. அழகிய தோட்டத்தினுள் அமைந்திருந்தது அவரது சிறிய வீடு. சுற்றிலும் மரங்கள், செடிகொடிகள், பூக்கள் என்று அந்த இடம் எனக்கு பண்டைய முனிவர்களின் தபோவனமாகத் தோன்றியது. அவரும் அவரது மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து வருகின்றனர். பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும், மாபெரும் வானப்ரஸ்தர்களும் வாழ்ந்த வாழ்க்கையையே எனக்கு அவர்கள் நினைவூட்டினர்…. இந்தியாவின் மீதும் வேதாந்தத்திலும் அவர் வைத்துள்ள ஈடுபாட்டில் பாதியாவது எனக்கு இருக்காதா என்று தோன்றுகிறது’ என்று தமது சந்திப்பைப் பற்றிக் கூறினார் சுவாமிஜி.

 

மாக்ஸ்முல்லரிடமிருந்து விடை பெறும்போது சுவாமிஜி அவரிடம், ‘நீங்கள் எப்போது இந்தியாவிற்கு வரப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். முதியவரான அந்த முனிவரின் முகம் மலர்ந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது; மெதுவாகத் தலையை அசைத்தபடி அவர், ‘நான் இந்தியாவிற்கு வந்தால் என்னால் மீண்டும் இங்கே திரும்ப இயலாது. நீங்கள் என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் மாக்ஸ்முல்லர். அவரது வரலாற்றை எழுத வேண்டும், அதற்கு சுவாமிஜி உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிஜியும் ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதி, அவருக்குத் தேவையான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ca3c2-vivekananda2bgold.jpg?w=600

மாக்ஸ்முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் மாக்ஸ்முல்லர் உட்பட மேலை நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும் அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில் இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களைக் கூறியிருந்தார். அதுபற்றி, ‘பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும் இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு கூற்றைச் சேர்த்து விடுகிறார் என்றாலும், நாளடைவில் முழு உண்மையையும் அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலின் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள்; அந்த நூலில் அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம் – மறு பிறவி, மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்கிறார் என்று எழுதிகிறார் அவர். (ஞான தீபம் 10-156)

 

மொழியியலின் துணையுடன் மேலை நாட்டு அறிஞர்கள் வேதங்களின் காலத்தைக் கணித்திருப்பதும் சரியல்ல என்பதும் சுவாமிஜிக்குப் புரிந்திருந்தது. ‘வேதங்களைப் பற்றி மேலை அறிஞர்கள் கூறுகின்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று இன்று கூறுகிறார்கள். நாளையே அதத் தவரென்று தள்ளிவிட்டு, ஓராயிரம் ஆண்டுகள் முன்னால் கொண்டு வருகிறார்கள் என்று எழுதுகிறார் அவர். (ஞான தீபம் 5-427)

கருத்து என்னவாக இருந்தாலும் சுவாமிஜி இறுதி வரை மாக்ஸ்முல்லரிடம் வைத்திருந்த மதிப்பு மாறவில்லை.

 

**

மேலே உள்ளவை சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சுவாமிஜியின் விரிவான வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எல்லா உண்மைகளும் நம்மிடம் இப்போது உள்ளன.

அவற்றை அலசி ஆராய்ந்து மாக்ஸ்முல்லர் மர்மத்தை விடுவிப்போம்.

அதற்கு முன்னர் சுவாமிஜி மாக்ஸ்முல்லரைப் பற்றிக் கூறியவற்றில் சில பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து விடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 12 (Post No.4580)

ce19f-vivekananda2-guwahati.jpg?w=600

Date: 4 JANUARY 2018

 

Time uploaded in London- 6-24 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4580

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17

 

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 12

ச.நாகராஜன்

 

21

சென்ற அத்தியாயத்தில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்வாமிஜியின் கருத்துக்களை ஆங்கில மூலத்தில் கீழே அப்படியே தருகிறோம்.

 

The Complete Works of Swami Vivekananda/Volume 6/Conversations and Dialogues/IX

 

IX

(Translated from Bengali)

(From the Diary of a Disciple)

(The disciple is Sharatchandra Chakravarty, who published his records in a Bengali book, Swami-Shishya-Samvâda, in two parts. The present series of “Conversations and Dialogues” is a revised translation from this book. Five dialogues of this series have already appeared in the Complete Works,Volume 5)

[Place: Calcutta. year: 1897.]

 

 

While our study had proceeded thus for a while, Swamiji raised the topic about Max Müller and continued thus: Well, do you know, my impression is that it is Sayana who is born again as Max Müller to revive his own commentary on the Vedas? I have had this notion for long. It became confirmed in my mind, it seems, after I had seen Max Müller. Even here in this country, you don’t find a scholar so persevering, and so firmly grounded in the Vedas and the Vedanta. Over and above this, what a deep, unfathomable respect for Sari Ramakrishna! Do you know, he believes in his Divine Incarnation! And what great hospitality towards me when I was his guest! Seeing the old man and his lady, it seemed to me that they were living their home-life like another Vasishtha and Arundhati! At the time of parting with me, tears came into the eyes of the old man.

 

Disciple: But, sir, if Sayana himself became Max Müller, then why was he born as a Mlechchha instead of being born in the sacred land of India?

 

Swamiji: The feeling and the distinction that I am an Aryan and the other is a Mlechchha come from ignorance. But what are Varnâshrama and caste divisions to one who is the commentator of the Vedas, the shining embodiment of knowledge? To him they are wholly meaningless, and he can assume human birth wherever he likes for doing good to mankind. Specially, if he did not choose to be born in a land which excelled both in learning and wealth, where would he secure the large expenses for publishing such stupendous volumes? Didn’t you hear that the East India Company paid nine lakhs of rupees in cash to have the Rig-Veda published? Even this money was not enough. Hundreds of Vedic Pundits had to be employed in this country on monthly stipends. Has anybody seen in this age, here in this country, such profound yearning for knowledge, such prodigious investment of money for the sake of light and learning? Max Müller himself has written it in his preface, that for twenty-five years he prepared only the manuscripts. Then the printing took another twenty years! It is not possible for an ordinary man to drudge for fortyfive years of his life with one publication. Just think of it! Is it an idle fancy of mine to say he is Sayana himself?

 

 

****

 

 

COMPLETE WORKS OF SWAMI VIVEKANANDA  VOLUME 4

ON PROFESSOR MAX MÜLLER

(Written for the Brahmâvadin, from London, June 6, 1896.)

 

Do you know that Prof. Max Müller has already written an article on Shri Ramakrishna for the Nineteenth Century, and will be very glad to write a larger and fuller account of his life and teachings if sufficient materials are forthcoming? What an extraordinary man is Prof. Max Müller! I paid a visit to him a few days ago. I should say, that I went to pay my respects to him, for whosoever loves Shri Ramakrishna, whatever be his or her sect, or creed, or nationality, my visit to that person I hold as a pilgrimage. “मद्भक्तानां च ये भक्तास्ते मे भक्ततमा मताः — They who are devoted to those who love Me — they are My best devotees.” Is that not true?

The Professor was first induced to inquire about the power behind, which led to sudden and momentous changes in the life of the late Keshab Chandra Sen, the great Brâhmo leader; and since then, he has been an earnest student and admirer of the life and teachings of Shri Ramakrishna. “Ramakrishna is worshipped by thousands today, Professor”, I said. “To whom else shall worship be accorded, if not to such”, was the answer. The Professor was kindness itself, and asked Mr. Sturdy and myself to lunch with him. He showed us several colleges in Oxford and the Bodleian library. He also accompanied us to the railway station; and all this he did because, as he said, “It is not every day one meets a disciple of Ramakrishna Paramahamsa.”

 

 

The visit was really a revelation to me. That nice little house in its setting of a beautiful garden, the silverheaded sage, with a face calm and benign, and forehead smooth as a child’s in spite of seventy winters, and every line in that face speaking of a deep-seated mine of spirituality somewhere behind; that noble wife, the helpmate of his life through his long and arduous task of exciting interest, overriding opposition and contempt, and at last creating a respect for the thoughts of the sages of ancient India — the trees, the flowers, the calmness, and the clear sky — all these sent me back in imagination to the glorious days of Ancient India, the days of our Brahmarshis and Râjarshis, the days of the great Vânaprasthas, the days of Arundhatis and Vasishthas.

 

 

It was neither the philologist nor the scholar that I saw, but a soul that is every day realising its oneness with the Brahman, a heart that is every moment expanding to reach oneness with the Universal. Where others lose themselves in the desert of dry details, he has struck the well-spring of life. Indeed his heartbeats have caught the rhythm of the Upanishads  “तमेवैकं जानथ आत्मानमन्या वाचो विमुञ्चथ — Know the Atman alone, and leave off all other talk.”

 

 

Although a world-moving scholar and philosopher, his learning and philosophy have only led him higher and higher to the realisation of the Spirit, his अपरा विद्या (lower knowledge) has indeed helped him to reach the परा विद्या (higher knowledge). This is real learning. विद्या ददाति विनयम् — “Knowledge gives humility.” Of what use is knowledge if it does not show us the way to the Highest?

 

 

And what love he bears towards India! I wish I had a hundredth part of that love for my own motherland! Endued with an extraordinary, and at the same time intensely active mind, he has lived and moved in the world of Indian thought for fifty years or more, and watched the sharp interchange of light and shade in the interminable forest of Sanskrit literature with deep interest and heartfelt love, till they have all sunk into his very soul and coloured his whole being.

 

 

Max Müller is a Vedantist of Vedantists. He has, indeed, caught the real soul of the melody of the Vedanta, in the midst of all its settings of harmonies and discords — the one light that lightens the sects and creeds of the world, the Vedanta, the one principle of which all religions are only applications. And what was Ramakrishna Paramahamsa? The practical demonstration of this ancient principle, the embodiment of India that is past, and a foreshadowing of the India that is to be, the bearer of spiritual light unto nations. The jeweller alone can understand the worth of jewels; this is an old proverb. Is it a wonder that this Western sage does study and appreciate every new star in the firmament of Indian thought, before even the Indians themselves realise its magnitude?

 

 

“When are you coming to India? Every heart there would welcome one who has done so much to place the thoughts of their ancestors in the true light”, I said. The face of the aged sage brightened up — there was almost a tear in his eyes, a gentle nodding of the head, and slowly the words came out: “I would not return then; you would have to cremate me there.” Further questions seemed an unwarrantable intrusion into realms wherein are stored the holy secrets of man’s heart. Who knows but that it was what the poet has said—

 

 

तच्चेतसा स्मरति नूनमबोधपूर्वं ।
भावस्थिराणि जननान्तरसौहृदानि ॥

—”He remembers with his mind the friendships of former births, firmly rooted in his heart.”

His life has been a blessing to the world; and may it be many, many years more, before he changes the present plane of his existence!

 

 

மாக்ஸ்முல்லர் பற்றிய இன்னும் பல கருத்துக்களை ஸ்வாமிஜி கூறியுள்ளதை COMPLETE WORKS OF SWAMI VIEVEKANANDA நூலில்

எட்டாம் தொகுதி உள்ளிட்டவற்றில் காணலாம்.

தொடரின் இறுதிப் பகுதிக்கு வருவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13 (Post No.4618)

4e315-max-muller.jpg?w=600

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London- 6–34 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4618

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 12 கட்டுரை எண் 4580 -வெளியான தேதி 4-1-18

 

இதனுடைய தொடர்ச்சியாக இந்தக் கடைசிக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13

 

ச.நாகராஜன்

22

மாக்ஸ்முல்லரைப் பற்றிய பல முக்கிய விவரங்களை இது வரை பார்த்தோம்.

இப்போது மாக்ஸ்முல்லர் மர்மத்தின் பிரதான கேள்விக்கு வந்து அந்தப் புதிரை அவிழ்க்க முயல்வோம்.

மாக்ஸ்முல்லர் இந்தியாவின் நண்பரா அல்லது பிரிட்டிஷாரின் கைக்கூலியா?

மாக்ஸ்முல்லரின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆதரவின்றி, கையில் காசின்றி, ஏதேனும் செய்து சற்று சம்பாதிக்க வேண்டும் என்கின்ற முதல் நிலை.இது அவரது இளமைப் பருவம்.

2 பிராங்க் செலவழிக்கக்கூட ‘வக்கில்லாத ஏழ்மை நிலையில், ஒரு சாக்லட்டை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இனி ஒருபோதும் சாக்லட் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானித்தேன் என்று 10-4-1845 அன்று தன் டயரியில் எழுதியிருந்த அளவுக்கு ஏழ்மை நிலை.

இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவை முற்றிலுமாக, நிரந்தரமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காகே ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம் சீராக, நிரந்தரமாக இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களின் சிலை கும்பிடும் உருவ வழிபாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் ஆங்கிலக் கல்வி வழி மூலம் கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்பதே மெக்காலேயின் திடமான நோக்கமாக இருந்தது.

அவன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இதை வலியுறுத்துகிறான் இப்படி:

In 1836, while serving as chairman of the Education Board in India, he enthusiastically wrote his father:

“Our English schools are flourishing wonderfully. The effect of this education on the Hindus is prodigious. ..It is my belief that if our plans of education are followed up, there will not be a single idolator among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytize, without the smallest interference with religious liberty, by natural operation of knowledge and reflection. I heartily rejoice in the project.”

மாக்ஸ்முல்லர் மெக்காலேயை 1851ஆம் ஆண்டு ஒரு பார்ட்டியில் சந்தித்தார். ஆனால் அது சில நிமிடங்களே நீடித்தது. பின்னர் 1855இல் தான் அவர் மெக்காலேயை மீண்டும் சந்தித்தார். மாக்ஸ்முல்லரை மெக்காலேக்கு முதலில் பிடிக்கவில்லை.

மெக்காலேயின் மதமாற்ற எண்ணத்தைத் தன் எண்ணமாக மாற்றிக் கொண்டார் மாக்ஸ்முல்லர். பின்னர் தான் வழி பிறந்தது.

ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியரை நிரந்தர அடிமைகளாக் ஆக்க முயலும் மெக்காலே ஒரு புறம், எப்படியாவது மதமாற்றம் செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றத் துடிகும் பாதிரியார்கள் இன்னொரு புறம் – அவர்களின் மனப்போக்கை  நன்கு புரிந்து கொண்டார் மாக்ஸ்முல்லர். அதை அனுசரித்தார் அவர்.

 75512-maxmuller2bbook.jpg?w=600

ஒரு வழியாக வேலை கிடைத்தது. என்ன வேலை என்பதும் புரிந்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அந்த வேலை கிடைத்த உற்சாகத்தினால் தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா கிறிஸ்தவ மயமாகப் போகிறது என்று எழுதினார்.

வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்றார்.

வேத காலத்தை தனக்குத் தோன்றிய விதத்தில் “ஆராய்ந்து ஒரு காலத்தை நிர்ணயித்தார்.

பாதிரிகள் குஷியில் குதித்தனர்.

ஆனால் அவரது வாழ்க்கையின் இந்த முதல் பகுதி முடிவுக்கு வந்தது. ஐம்பது வயதுக்குப்  பின்னர் அவர் பார்வை மாறியது.

கண்களில் பாதிரிகளுக்காக மாட்டிக் கொண்ட மஞ்சள் கண்ணாடியை அவ்ர் கழட்டிப் போட்டார். ஒவ்வொரு வண்ணமும் தன் இயல்பான நிறத்தை அவருக்குக் காண்பித்தது.

பற்பல இந்திய அறிஞர்கள் வேதத்தை மொழி பெயர்த்து அவருக்கு அனுப்ப அனுப்ப வேதத்தின் மறுக்க முடியாத மிக உயரிய சிந்தனைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. அதனால் வேத சிந்தனைகள்  உயரியதாக இருப்பதை உலகிற்கு உரிய முறையில் வெளிப்படுத்தினார்.

இந்த தீடீர் மாற்றம் பாதிரிகளைத் திகிலுறச் செய்தது. நோக்கத்தில் பிறழ்ச்சி என்று கண்டவுடன் மாக்ஸ்முல்லரை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்தனர். எதிர்த்தனர். கோபத்துடன் கூவினர். ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தியாவிற்கு உயரிய புகழாரத்தைத் தனது சொற்பொழிவுகளில் சூட்டினார்.

அது அவரது “India What It Can Teach Us –உரைகளாக மலர்ந்தது.

இதனால் அவரது பதவிக்கே வேட்டு வைக்கப் பார்த்தனர்.

 

   ஆனால் அவர் பணத்திற்காக யாரையும் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இப்போது இல்லை. அதாவது மெக்காலே பயம் அவர் இறந்த 1859ஆம் ஆண்டுடன் போனது. (மாக்ஸ்முல்லருக்கு வயது 36)

1883இல் தனது 60வது வயதில் இந்தியாவின் உன்னத நிலையை உள்ளது உள்ளபடி அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலிருந்து அடுத்த நிலையை அவர் அடைந்த போது தான் ஸ்வாமி விவேகானந்தர் அவ்ரை 28-5-1896 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் அவர் நான்கு ஆண்டு காலமே உயிருடன் இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியா பற்றிய மாக்ஸ்முல்லரின் எண்ணம் புகழும் நிலையிலிருந்து பரவசத்துடன் தொழுகின்ற நிலைக்கு மாறியிருந்தது.

அதைத் தான் ஸ்வாமிஜி கண்டு அப்படியே தனது கடிதங்களிலும், உரையாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆக மாக்ஸ்முல்லரை பிரிட்டிஷாரின் கைக்கூலி, ஏஜண்ட் என்று திட்டி அதற்கான ஆதாரங்களைக் காட்டுவோர் கூறுவது சரியே. அது அவரது வாழ்க்கையின் முதல் பகுதி. மோசமான் பகுதி. வேதங்களை இகழ்ந்த பகுதி.

அடுத்த நிலையில் அவர் தனது உரைகளில் மிக பிரமாதமாக இந்தியாவைப் புகழ்ந்ததைப் பரவலாக மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே. அது அவ்ரது வாழ்க்கையின் அடுத்த பகுதி. அதில் அவர் இந்தியாவைக் கண்டு வியக்கும் ஒருவராக – admirerஆக – மாறி இருந்தார்.

 

இறுதியாக ஸ்வாமிஜி அவரைச் சந்தித்த போது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அவர் இருந்தார். ஸ்வாமிஜி அவரைப் பற்றிய தனது கணிப்பைக் கூறியதும் சரியே. அந்த நிலையில் அவர் இந்தியாவை பக்தி பரவசத்துடன் பார்க்கும் நிலையில் இருந்தார்.இந்த நிலையைச் சுட்டிக் காட்டி ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் புகழ்ந்து கூறியதை மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே!

ஆக இந்த மூன்று நிலைகளில் மாக்ஸ்முல்லரைப் பார்க்கும் போது அவர் மாறுப்பட்ட நிலைகளில் இருப்பதை உணரலாம்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைச் சந்தித்த ஸ்வாமிஜி அவர் மறுபிறப்பு உள்ளிட்ட அனைத்து ஹிந்து மதக் கருத்துக்களையும் ஏற்றுக் கோண்டிருப்பதாகக் கூறுகிறார்.

‘இந்தியா வந்தால் அங்கிருந்து திரும்ப மாட்டேன்; அங்கேயே என்னை எரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் மாக்ஸ்முல்லர் இருந்தார் என்றும் ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வியப்பான செய்தி.

இந்தச் செய்தியை நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) பிரபல எழுத்தாளர் மணியன் நடத்திய ஆன்மீக மாத இதழான ஞானபூமியில் படித்தேன்

குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள் அவர்களின் உரையாடல் 1985 பிப்ரவரி இதழில் 28ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் பகுதி இது.

அந்தப் பகுதியை மட்டும் அவருடைய சொற்களிலேயே இங்கு பார்ப்போம்:

“ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த மாக்ஸ்முல்லர் என்ற பேரறிஞர் தனக்கென்று ஓர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில் அவர் “நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்தாக வேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால் என்னை இந்தியாவில் இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும். அதிலும் தென்னிந்தியாவில் வேதம் பயிலும் ஒரு குடும்பத்தில் பிறக்கச் செய்யட்டும்! என்று எழுதி வைத்திருக்கிறார்.

 

இந்த மாக்ஸ்முல்லர் உயில் பற்றி மேலும் அறிய விரும்பி இணையதளத்தில் ஆராய ஆரம்பித்தேன்; இது பற்றி ஏதேனும் புத்தகம் உள்ளதா என்று தேடியும் பார்த்தேன். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி உள்ளபடி உண்மையாக இருந்தால் மாக்ஸ்முல்லரின் இறுதி நிலையை ஊகித்து உணர்வது வெகு சுலபம்.

ஆக மாக்ஸ் முல்லர் பிரிட்டிஷாரின் கைக்கூலியாக இருந்து இந்தியாவின் நண்பராக மாறி கடைசியில் இந்தியாவின் பக்தராக ஆனார் என்ற முடிவுக்கு வரலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இது தான் மாக்ஸ்முல்லர் மர்மம்.

 

c515c-maxmuller1.jpg?w=600

23

இனி அவர் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அது விளைவித்த சேதத்தையும்நினைக்கும் போது அதற்கென்ன பதில்?

மாக்ஸ்முல்லர் விளைவித்த சேதம் பெரிது.அதைக் கையில் ஏந்திக்கொண்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதவாதிகள் வேதங்களைஇழித்தும் பழித்தும் இன்று வரை கூறி வருகின்றனர்.

ஆனால் இதை மறுத்து ஏராளமான அறிஞர்கள் தங்கள மறுப்புக் குரலைஉரிய ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்வெளிப்படுத்திவருகின்றனர்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை இங்கு தரலாம்:

Historical Gleanings from Sankrit Literature  – S.C.Banerji – 1979 (published by Oriental Publishers & Distributors, Daryaganj, New Delhi, India)

மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் பக்கம் 5இல் வரும் ஆராய்ச்சி உரை இது:-

Max Muller propounded the theory that Sanskrit literature had a hibernation during the early centuries of the Christian era. According to him, there was a literary interregnum in this period due mainly to continuous foreign invasions. This theory has been proved to be wrong on literary and epigraphical evidences. Also disproved is the hypothesis of a period of Prakrta literature out of which Sanskrit literature grew up.

இது போல மாக்ஸ்முல்லரின் தவறான பல முடிவுகளை வெளிப்படுத்தும் ஏராளமான அறிஞர்களின் உரைகள் உள்ளன. அதை விரிப்பின் ஒரு தனிப் புத்தகமாக  மலரும்.

24

இறுதியாக ஸ்வாமிஜியின் ஒரு கருத்துடன் இந்த மாக்ஸ்முல்லர்மர்மத்தை முடித்துக் கொள்வோம்.

இந்தியாவைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினாலும் அவ்வப்பொழுது ஒருகுறையையும் மாக்ஸ்முல்லர்  சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றுஸ்வாமிஜி குறிப்பிடுகிறார்ஆக அவருக்கு மாக்ஸ்முல்லரின் இந்தக்குறை தெரிந்தே இருந்திருக்கிறது.

நாளடைவில் அவர் இன்னும் திருந்துவார் என்று அவரது கருணைஉள்ளம் நினைத்தது.

ஆனால் வேத காலம் பற்றி அவர் கூறிய உரையே முத்தாய்ப்பான ஒன்று..

உலகிலேயே மிகப் பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம் தான்இதுஎப்போது தோன்றியது  என்பது ஒருவருக்கும் தெரியாதுஇக்காலஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்இதுஎட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம்  வருடங்களுக்கு முன்புதோன்றியதாக இருக்கலாம்.. ஆனால் அன்று போலவே இன்றும் அவைபுதுமை மாறாமல் இருக்கின்றனஏன்முன்னை விட புதுப் பொலிவுடன்திகழ்வதாகவே கூறலாம்

 (ஞான தீபம் மூன்றாம் தொகுதி பக் 219)

இக்கால ஆராய்ச்சியாளர் என்பதில் மாக்ஸ்முல்லரும் அடங்குகிறார்அவரது வேத காலம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பதை அழுத்தம்திருத்தமாக இப்படி ஸ்வாமிஜியே கூறி விட்டார்.

ஆகவே நமது இறுதி முடிவு இதுவாக இருக்கிறது:

மாக்ஸ்முல்லரில் தள்ளுவனவற்றைத் தள்ளிகொள்வனவற்றைக்கொள்வோம்.

அவரது கைக்கூலி கருத்துக்களைக் கை கழுவி விட்டு விட்டு அவரதுபக்திப் பரவசமான ஹிந்து மதம் பற்றிய கருத்துக்களை ஏற்போம்.

இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் ஆவல் கொண்டு மேலதிகவிவரங்களை அறிய விரும்புவோர் மாக்ஸ்முல்லர் எழுதியவைஅவரைப் பற்றி எழுதியவை,  ஸ்வாமி விவேகானந்தரின் அனைத்துநூல்கள் ஆகியவற்றைப் படிப்பதோடு மெக்காலேராஜா ராம் மோஹன்ராய் உள்ளிட்டவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும்அத்துடன்பாதிரிகளின் மதமாற்றப் பிரச்சாரம் பற்றிய ஏராளமான நூல்களையும்படிக்கலாம்.

இதுகாறும் இந்தத் தொடரைப் படித்து ஊக்குவித்த அன்பர்களுக்கு எனதுநன்றி.

இதை வெளியிட்ட திரு சுவாமிநாதன் – www.tamilandvedads.com – அவர்களுக்கு எனது நன்றி.

                  ச.நாகராஜன் பங்களூரு 10-1-2018



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard