New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுப.வீ - வைரமுத்து காசுக்காக எதையும் எழுதுகிற கயமையை இனிமேலாவது நிறுத்துங்கள்.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சுப.வீ - வைரமுத்து காசுக்காக எதையும் எழுதுகிற கயமையை இனிமேலாவது நிறுத்துங்கள்.
Permalink  
 


ஆபாச எழுத்தாளர் வைரமுத்துக்கு சுப.வீ, மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழி எச்சரிக்கை.....

சுப.வீரபாண்டியன் பேசியது இது :

காசுக்காக எதையும் எழுதுகிற கயமையை இனிமேலாவது நிறுத்துங்கள். எச்சரிக்கை இது. நிறுத்தாவிட்டால் நிறுத்திவைக்கவேண்டிய கட்டாயம் எங்களுக்கு நேரும்.

அருள்மொழி பேசியது இது :

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் விடுத்த அந்த எச்சரிக்கையை நான் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன். ’நடப்பதே வேறு’ என்று நீங்கள் சொன்னதை நாங்கள் சொல்லும்படி வைத்துவிடாதீர்கள்.

இது இப்போது ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதால் சுபவீ, அருள்மொழி எச்சரிக்கைவிட வில்லை.

பாமரன் என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். வாலி + வைரமுத்து = ஆபாசம். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் (4-8-96) சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி ஆகியோர் வாலிக்கும், வைரமுத்துவுக்கும் விட்ட மிரட்டல் இது.

பாஜக தேசியத் தலைவர் எச். ராஜா அவர்கள் வைரமுத்துவை மிரட்டினார் என்று இப்போது குதிக்கும் முற்போக்குவாதிகளே, இயக்குநர்களே ! அப்போது எங்கே போயிருந்தீர்கள்? வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard